shabd-logo

14. செல்வ முனிவர் தவச்சாலை

21 December 2023

2 பார்த்தது 2


‘அருட்செல்வ முனிவரைக் காணவில்லை’ என்பதால் ஏற்பட்ட திகைப்பும் மலைப்பும் வீரசோழிய வளநாடுடையார் மனத்தில் கலக்கத்தை உண்டாக்கியிருந்தன. அந்தக் கலக்கத்தினால்தான் போகும்போது இளங்குமரனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு போயிருந்த தன் மகள் முல்லை திரும்பி நாளங்காடியிலிருந்து எவர் துணையுமின்றித் தனியே வந்ததைக்கூட அவர் கவனித்துக் கோபம் கொள்ளவில்லை. இல்லாவிட்டால் அவளைத் தனியே அனுப்பி விட்டு எங்கோ போனதற்காக இளங்குமரனைப் பற்றி வாய் ஓய்வடையும் வரை வசைபாடித் தீர்த்திருப்பார் அவர்.

நாளங்காடியிலிருந்து முல்லை திரும்பி வந்து வீட்டுப் படி ஏறியபோது அவருடைய சிந்தனையாற்றல் முழுதும் ‘முனிவர் எதற்காக என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் திடீரென்று இங்கிருந்து கிளம்பிப் போனார்? அதுவும் ஏதோ சிறைப்படுத்தப்பட்டிருந்தவன் தப்பி ஓடிப் போகிறதுபோல் பின்புறத்து வழியாகத் தப்பிப் போக வேண்டிய அவசியமென்ன?’ என்னும் வினாக்களுக்கு விடை காண்பதில் ஈடுபட்டிருந்தது.

அருட்செல்வ முனிவர் தம் இல்லத்திலிருந்து வெளியேறிச் சென்றதற்குக் காரணத்தை அவரால் உறுதியாகத் தீர்மானம் செய்ய முடியவில்லையே தவிர ‘இன்ன காரணமாகத்தான் இருக்கலாம்’ என்று ஒருவாறு அநுமானம் செய்து கொள்ள முடிந்தது. இளங்குமரனுடைய பிறப்பு வளர்ப்பைப் பற்றி ஏதாவது தூண்டிக் கேட்க ஆரம்பித்தாலே அவர் பயப்படுகிறார். அதில் ஏதோ ஒரு பெரிய மர்மமும், இரகசியமும் இருக்கும்போல் தோன்றுகிறது. இன்றைக்கு நான் அவரிடம் இளங்குமரனைப் பற்றிய பேச்சைத் தொடங்கியிராவிட்டால், இப்படி நேர்ந்திருக்காது. அந்தக் கேள்வியைக் கேட்டதும் அவர் முகம்தான் எப்படி, மாறிற்று! ‘சில நிகழ்ச்சிகளை இதயத்துக்குள்ளேயே இரண்டாம் முறையாக நினைத்துப் பார்ப்பதற்குக்கூட அச்சமாக இருக்கிறதே, வெளியே எப்படி வாய்விட்டுக் கூறமுடியும்?’ என்று பதில் கூறும் போது முனிவரின் குரலில்தான் எவ்வளவு பீதி? எவ்வளவு நடுக்கம்?’ என்று நிகழ்ந்தவற்றைக் கோவையாக மீண்டும் சிந்தித்துப் பார்த்தார் வளநாடுடையார். இளங்குமரனைப் பற்றி முனிவரிடம் விசாரிக்க நேர்ந்த போதெல்லாம் பலமுறைகள் இது போன்ற அனுபவங்களையே அடைத்திருக்கிறார் அவர்.

“இப்படியே முனிவரைக் காணவில்லை என்று பேசாமல் உட்கார்ந்து கொண்டிருந்தால் என்ன செய்வது அப்பா? தேடுவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டாமா? இன்னும் சிறிது நேரத்தில் அண்ணனும் முனிவருடைய வளர்ப்புப் பிள்ளையாகிய அவரும் இங்கே வந்துவிடுவார்களே? அவர்களுக்கு என்ன பதில் சொல்வது?” என்று முல்லை கேள்வி கேட்ட போதுதான் வளநாடுடையாருக்கும் ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்ற உணர்வு வந்தது.

முனிவரைப் பற்றி முல்லை தன் மனத்துக்கு மட்டும் தெரிந்த உண்மை ஒன்றைத் தந்தையிடம் சொல்ல விரும்பவில்லை. அதுபோலவே தனிமையில் முனிவரிடம் தாம் கேட்ட கேள்விகளைப் பற்றியும் முனிவர் அங்கிருந்து கிளம்பிச் செல்ல அந்தக் கேள்விகளும் ஓரளவு காரணமாயிருக்கலாம் என்பதைப் பற்றியும்— தந்தை மகளிடம் சொல்லவில்லை. முதல் நாள் நள்ளிரவில் முனிவருக்கும் இளங்குமரனுக்கும் நிகழ்ந்த உருக்கமான உரையாடலையும், அந்த உரையாடலின்போது முனிவர் துயரம் தாங்காமல் அழுததையும் அறிந்திருந்த முல்லை தன் தந்தையாரிடம் அவற்றைக் கூறியிருப்பாளாயின் அவருக்கு அவற்றைக் கொண்டு முனிவர்மேல் இன்னும் சில சந்தேகங்கள் கொள்ள இடம் கிடைத்திருக்கும். அதே போல் முனிவரிடம் தாம் தனிமையில் பேசிய பேச்சுக்களை வளநாடுடையார் தம் மகளிடம் கூறியிருந்தால் அவளுக்கு முனிவர் ஏன் ஓடிப்போனார் என்ற சந்தேகம் தீர்ந்து போயிருக்கும். இரண்டு காரியங்களுமே அப்படி நிகழாததனால் சந்தேகங்களும் குழப்பங்களும் இன்னும் அதிகமாயின.


“நானும் துணைக்கு வருகிறேன், அப்பா! புறப்படுங்கள். முனிவரைத் தேடிப் பார்க்கலாம்” என்று உடன் புறப்படத் தொடங்கிய முல்லையை வரவேண்டாமென மறுத்துவிட்டார் அவர்.

“நீ வேண்டாம் முல்லை! நானே மறுபடியும் போய் நன்றாகத் தேடிவிட்டு வருகிறேன். நம் வீட்டுப் பின்புறம் ஆரம்பமாகிற நெடுமரச் சோலை சம்பாபதி வனம், சக்கரவாளக் கோட்டம் ஆகிய இடங்கள் வரை நெடுந் தொலைவு இடைவெளியின்றிப் பரந்து கிடக்கிறதே; இதில் எங்கேயென்று குறிப்பிட்டு அவரைத் தேடுவது?” என்று கூறிக்கொண்டே திண்ணையில் அடுக்கியிருந்த வேல்களில் ஒன்றை உருவினார் வளநாடுடையார். அந்த வேலை ஊன்றுந் துணையாகக் கொண்டு வீட்டின் பின் பக்கத்துத் தோட்ட வழியாக அவர் புறப்பட்டபோது பிற்பகல் நேரம் முதிரத் தொடங்கியிருந்தது.

முடிந்தவரை எல்லா இடங்களிலும் தேடிவிட்டு இறுதியாகச் சக்கரவாளக் கோட்டத்திலுள்ள அருட்செல்வ முனிவரின் தவச்சாலைக்கும் போய்ப் பார்த்துவிடலாம் என்பது கிழவர் வீரசோழிய வளநாடுடையாரின் எண்ணமாக இருந்தது. இளமையிலும், நடுத்தர வயதிலும் காவல் வீரனாகவும்; காவற்படைத் தலைவனாகவும் அந்தப் பெருவனத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வேலும் கையுமாகச் சுற்றிய நினைவு வந்தது அவருக்கு. அப்போது சுற்றியதற்கும், இப்போது சுற்றுவதற்கும் இடையில்தான் எத்துணை வேறுபாடுகள்! வீரமும், மிடுக்கும், வலிமையும் கொண்டு சுற்றிய அந்தக் காலம் எங்கே, தளர்ந்த உடலோடு வேலை ஊன்றிக் கொண்டு நடக்கும் இந்தக் காலம் எங்கே? முல்லையின் தாயார் காலமாகும் வரையில் அவருக்கு மனத்தளர்ச்சி இருந்ததில்லை. முல்லையின் குழந்தைப் பருவத்தில் ‘அவள்’ காலமான போது அவருக்கு மனமும், தளர்ந்தது. அந்தச் சமயத்தில் கட்டிளம் காளையாக வளர்ந்திருந்த புதல்வன் கதக்கண்ணனைக் காவற் படைவீரனாகச் சோழ சைன்யத்தில் சேர்த்து விட்டுத் தாம் வீட்டோடு இருந்து கொண்டார் அவர். அந்த நாளிலிருந்தே அருட்செல்வ முனிவரை அவருக்கும் அவரை அருட்செல்வ முனிவருக்கும் நன்றாகத் தெரியும். அருட்செல்வ முனிவரின் வளர்ப்புப் பிள்ளையாகிய இளங்குமரனும் வளநாடுடையாரின் மூத்த மகனாகிய கதக்கண்ணனும் போர் முறைகளும் படைக்கலப் பயிற்சிகளும் பெறுகிற இளமையிலேயே சேர்ந்து கற்றவர்கள், சேர்ந்து பயின்றவர்கள். மருவூர்ப் பாக்கத்தில் ‘நீலநாகர் படைக்கலச்சாலை’ என்று ஒன்று இருந்தது. அந்தப் படைக்கலச் சாலையின் தலைவரான நீலநாக மறவர் பூம்புகாரிலேயே பெரிய வீரராகப் போற்றுதல் பெற்றவர். இளங்குமரனும் கதக்கண்ணனும் தங்களுடைய உடல் வலிமையை வளர்த்துக் கொள்வதற்குக் காரணமானவர் அந்த மறவர்தான். அந்த மறவரிடம் இளங்குமரனையும் கதக்கண்ணனையும் கொண்டுபோய்ச் சேர்த்தது வளநாடுடையார்தாம். அருட்செல்வ முனிவரைத் தேடிக் கொண்டு அலைந்தபோது வளநாடுடையாருக்கு இந்தப் பழைய நினைவுகள் எல்லாம் உண்டாயின. கந்திற்பாவை கோட்டம், உலக அறவி, சம்பாபதி கோவில் போன்ற இடங்களில் எல்லாம் தேடி அலைந்துவிட்டு அவற்றைச் சார்ந்திருந்த சக்கரவாளக் கோட்டத்தின் மதிலருகே வந்து நின்றார் வளநாடுடையார். மாலைப்போது நெருங்கிக் கொண்டிருந்தது. சக்கரவாளக் கோட்டத்துக்குள் நுழைவதற்கு நான்கு புறமும் வாயில்கள் உண்டு. செழுங்கொடி வாயில், நலங்கிளர் வாயில், வெற்றிடை வாயில், பூதம் நின்ற வாயில் என்னும் நான்கு மாபெரும் வாயில்கள் சக்கரவாளக் கோட்டத்து நாற்புற மதில்களில் அமைந்திருந்தன. அவற்றுள் பூதம் நின்ற வாயில் வழியாக நுழைந்து போனால் அருட்செல்வ முனிவரின் தவச் சாலையை எளிதாக அடையலாம். பூதம் நின்ற வாயில் என்பது விநோதமான அமைப்பை உடையது. பெரிய பூதம் ஒன்று சிலை வடிவில் தன் இரண்டு கால்களையும் அகற்றி நிற்பதுபோல் அவ்வாயில் கட்டப்பட்டிருந்தது. வானளாவி நிற்கும் அந்தப் பூதச் சிலையின் இரு கால்களுக்கும் இடையேதான் கோட்டத்துக்குள் போவதற்கான சாலை அமைந்திருந்தது. தைரியமில்லாத மனங் கொண்டவர்கள் பூதம் நின்ற வாயிலில் நடந்து உள்ளே போகும்போது கூட அந்தச் சிலை அப்படியே கைகளை நீட்டித் தங்களை அமுக்கிவிடுமோ என்று வீணாகப் பிரமை கொள்ள நேரிடும். அவ்வளவு பிரம்மாண்டமான அமைப்புடையது அந்த வாயில். அதைப் பார்த்துக் கொண்டு நின்றால் கால்களிடையே வழி கொடுத்துக் கொண்டே பூதம் நகர்ந்து வருவது போலவே தொலைவில் தோன்றும். வீரசோழிய வளநாடுடையார் பூதம் நின்ற வாயிலின் வழியே சக்கரவாளக் கோட்டத்துக்குள் நுழைந்தார். அந்த மாலை நேரத்தில் அருட்செல்வ முனிவரின் தவச்சாலையும் அதைச் சூழ்ந்திருந்த மலர் வனமும், ஆளரவமற்ற தனிமை யில் மூழ்கித் தோற்றமளித்தன. ‘அருட்செல்வ முனிவரே’ என்று இரைந்து கூவியழைத்தவாறே தவச்சாலையில் ஒவ்வொரு பகுதியிலும் சுற்றிச்சுற்றி வந்தார் வளநாடுடையார். அவர் உரத்த குரலில் கூப்பிட்ட முனிவரின் பெயர் தான் அந்த வனத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் திரும்பத் திரும்ப எதிரொலித்ததே தவிர, வேறு பதில் இல்லை. தவச்சாலையின் ஒரு பகுதியில் சுவடிகளை விரித்து வைத்து அருகில் தீபமும் ஏற்றி வைக்கப்பட்டிருந்ததால் மாலைப்போது நெருங்குகிற அந்த வேளையில் யாரோ அங்கு வந்திருக்கிறார்களென்பதை வளநாடுடையாரால் புரிந்து கொள்ள முடிந்தது, ‘சுவடிகள் தாமாக விரித்துக் கொண்டு சிடக்கப் போவதில்லை! தீபமும் தானாக ஏற்றிக் கொண்டு ஒளி தரப் போவதில்லை! யாரோ இப்போது இங்கே இருக்கிறார்கள்! ஆனால் என் முன்னால் வரத் தயங்குகிறார்கள்’ என்று சந்தேகங் கொண்டார் வளநாடுடையார். ‘சுவடிகளைப் படிக்க ஏற்ற முறையில் விரித்துத் தீபமும் ஏற்றி வைத்தவர், தாம் அங்கே வந்து நுழைவதைப் பார்த்துவிட்டு வேண்டுமென்றே தமக்காகவே மறைந்திருக்கலாமோ?’ என்று தோன்றியது வளநாடுடையாருக்கு. மறைந்திருக்கும் ஆளை வெளியே வரச் செய்வதற்காக மெல்ல ஒரு தந்திரம் செய்தார் வளநாடுடையார்.

“சரிதான். இங்கு எவரையும் காணவில்லை. நாம் வந்த வழியே திரும்பிப்போக வேண்டியதுதான். முனிவரை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்” என்று சற்று இரைந்த குரலில் தமக்குத் தாமே சொல்லிக் கொள்கிறாற் போல் சொல்லிக் கொண்டு திரும்பி நடந்தார் அவர். நடந்தார் என்பதைவிட வேகமாகத் திரும்பிச் செல்வது போல் போக்குக் காட்டினார் என்பதே பொருந்தும்.

வளநாடுடையார் நினைத்தது நடந்தது. அவர் தவச்சாலையின் வாயில்வரை வேகமாக நடந்து போய்த் திடீரென்று நடையை நிறுத்தி மெல்லத் திரும்பவும் அந்தச் சுவடிக்கும் தீபத்துக்கும் அருகில் யாரோ வந்து உட்காரவும் சரியாக இருந்தது. திரும்பியும் திரும்பாமலும் அரைகுறையாக ஓரக் கண்களால் பார்க்க முயன்ற அந்தப் பார்வையால் வந்து உட்கார்ந்த ஆளை அவரால் நன்றாகக் காண முடியவில்லை.
 

39
கட்டுரைகள்
மணிப்பல்லவம் (பகுதி1)
0.0
மணிப்பல்லவம் உலகின் மிகப் பழமையான இலக்கியப் படைப்புகளில் ஒன்றாகும். நா. பார்த்தசாரதி இந்த நாவலை எழுதினார். இந்த புத்தகம் அவரது சிறந்த படைப்புகளில் ஒன்றாகும். மணிப்பல்லவம் என்பது சோழர்களின் காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு சமூக நாவல். சில சூழ்ச்சிகளும் செயல்களும் இருந்தாலும், அவை அனைத்தும் செல்வம், வீரம், அன்பு மற்றும் வாழ்க்கையின் நோக்கம் மற்றும் பொருளைக் கையாளும் தத்துவ சொற்பொழிவுகளால் மூழ்கடிக்கப்படுகின்றன.
1

1. இந்திர விழா

19 December 2023
0
0
0

பூம்புகார் நகரம் புதுவிழாக்கோலம் பூண்டு எழிலுடன் விளங்கியது. சித்திரை மாதத்தில் சிறப்பு வாய்ந்த சித்திரை நாள். வானத்தின் கீழ் மூலையில் வெண்மதி முழுநிலா விரித்துக்து கொண்டிருந்தது. ‘இந்திர விழாத் தொடங்

2

2. சக்கரவாளக் கோட்டம்

19 December 2023
0
0
0

இராப்போது நடு யாமத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. இந்திரவிழாவின் ஆரவாரங்கள் பூம்புகாரின் புறநகர்ப் பகுதிகளில் அதிகமாக இல்லை. புற நகரில் சக்கரவாளக் கோட்டத்தை அடுத்திருந்த சம்பாபதி வனம் இருண்டு கிடந்தது.

3

3. கதக்கண்ணன் வஞ்சினம்

19 December 2023
0
0
0

உயிர்க்குணங்களுள் ஏதேனும் ஒன்று மிகுந்து தோன்றும்போது மற்றவை அடங்கி நின்றுவிடும் என்று முனிவர் தனக்கு அடிக்கடிக் கூறும் தத்துவ வாக்கியத்தை அந்தப் பயங்கரமான சூழ்நிலையில் பகைவர் கரங்களின் கீழே அமுங்கிக்

4

4. முல்லைக்குப் புரியவில்லை !

19 December 2023
0
0
0

சம்பாபதி வனத்திலிருந்து வெளியேறி அப்பாலுள்ள கோட்டங்களையும் தவச் சாலைகளையும் பலபல சமயுத்தார் வழிபாட்டுக்கு மலர் கொய்யும் மலர் வனங்களையும் கடந்து வந்துவிட்டால் புறவீதி நிலாவொளியில் குளித்துக் கொண்டு நீண

5

5. பூதசதுக்கத்திலே ஒரு புதிர்!

19 December 2023
0
0
0

எழிற்பூம்புகார் நகரத்தில் மீண்டும் காலம் அரும்ப விழ்த்துப் பூத்தது ஒரு நாள் மலர் திருவிழாக் கோலங்கொண்ட பேரூர்க்கு செம்பொன் நிறை * சுடர்க்குடம் எடுத்துச் சோதிக்கதிர் விரித்தாற்போல் கிழக்கு வானத்தில்

6

6. வம்பு வந்தது!

19 December 2023
0
0
0

தன் அருகே வந்து நின்றவனை நன்றாக உற்றுப் பார்த்தான் இளங்குமரன். ஓவியம் எழுதுவதற்குரிய திரைச் சீலை தூரிகைகளும், வண்ணங்களடங்கிய சிறு மரப்பேழையும் அவனிடம் இருந்தன. அவன் இள வயதினன் தான். கலை அறிவுள்ளவர்களி

7

7. வீரசோழிய வளநாடுடையார்

19 December 2023
0
0
0

வாழ்க்கையில் ஒவ்வோருணர்வுக்கும் மறுபுறம் என்பதொன்றுண்டு. சிலருக்குப் பிறர்மேல் ஏற்படுகிற அன்பின் மறுபுறம் வெறுப்பாக இருக்கும். அல்லது வெறுப்பின் மறுபுறத்தைத் திரும்பிப் பார்த்தால் தவிர்க்க முடியாத பேர

8

8. சுரமஞ்சரியின் செருக்கு

19 December 2023
0
0
0

கண்மூடித் திறக்கும் நேரத்தில் அந்த நிகழ்ச்சி நடந்து விட்டது. ஓவியன் மணிமார்பன் பயந்துபோய் ஒதுங்கி நின்றான். முல்லை திடுக்கிட்டு அலறினாள். நாலைந்து முரட்டு யவனர்களும் பூதாகாரமான மல்லன் ஒருவனும் இளங்க

9

9. முறுவல் மறைந்த முகம்

20 December 2023
0
0
0

நாளங்காடி பூத சதுக்கத்தில் இளங்குமரனுக்கும் அவனைத் தாக்க வந்தவர்களுக்கும் போர் நடந்தபோது பெருகிவந்த கூட்டத்தினால் நெருக் குண்டு பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்த முல்லை, கூட்டம் கலைந்ததும் அருகில் வந்து

10

10. பெருமாளிகை நிகழ்ச்சிகள்

21 December 2023
1
0
0

இன்பங்களும், வசதிகளும், கோநகரப் பெருவாழ்வின் சுக்போகங்களும் ஒன்றுகூடி நிறைவு பெற்ற பட்டினப்பாக்கத்து வீதிகளின் வழியே இளங்குமரன் அமர்ந்திருந்த பல்லக்கைச் சுமந்து சென்றார்கள். தரையகன்ற ஆறு போல் வழியகன்ற

11

11. அருட்செல்வர் எங்கே!

21 December 2023
1
0
0

‘கதக்கண்ணன் என்ற பெயருக்குச் சினம் கொண்டு விரைந்து நோக்கும் ஆண்மையழகு பொருந்திய கண்களையுடையவன்’ என்று பொருள். இந்தப் பொருட் பொருத்தத்தையெல்லாம் நினைத்துப் பார்த்துத்தான் வீரசோழிய வளநாடுடையார் தம் புதல

12

12. ஒற்றைக்கண் மனிதன்

21 December 2023
1
0
0

பட்டினப்பாக்கத்து ஏழடுக்கு மாளிகையில், பூம்பொழில் நடுவே அப்படி ஓர் அதிசயத்தைச் சிறிதும் எதிர்பார்த்திராதவனான இளங்குமரன் தன் அருகில் நின்று கொண்டிருந்தவளையும் எதிர்ப்பக்கத்திலிருந்து வந்து கொண்டிருந்தவ

13

13. இது என்ன அந்தரங்கம்?

21 December 2023
1
0
0

கலியிருள் அகலக் காவிரியணைந்த மாபெரும் நகர்க்குப் பொலிகதிர் பரப்பிப் பகல் செய்த கதிரவன் மெல்ல மெல்ல மெல்ல மேற்கே மறைந்து கொண்டிருந்தான். விரிநீல மணித்திரையில் விட்டெறிந்த ஒளி மலர்களென விண்மீன்கள், மி

14

14. செல்வ முனிவர் தவச்சாலை

21 December 2023
1
0
0

‘அருட்செல்வ முனிவரைக் காணவில்லை’ என்பதால் ஏற்பட்ட திகைப்பும் மலைப்பும் வீரசோழிய வளநாடுடையார் மனத்தில் கலக்கத்தை உண்டாக்கியிருந்தன. அந்தக் கலக்கத்தினால்தான் போகும்போது இளங்குமரனைத் துணைக்கு அழைத்துக்

15

15. இளங்குமரன் ஆவேசம்

22 December 2023
1
0
0

பட்டினப்பாக்கத்துப் பெருவீதியின் திருப்பத்தில் இளங்குமரனைக் கண்டதும் கதக்கண்ணனும் மற்ற நண்பர்களும் குதிரைகளை நிறுத்திக் கீழே இறங்கிச் சூழ நின்று கொண்டார்கள். எதிர்பாராத நிலையில் அவர்களை அங்கே வியப்பு

16

16. திரைமறைவில் தெரிந்த பாதங்கள்

22 December 2023
1
0
0

சித்திரச்சாலைக்குள் அந்த எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத தனிமை நிலையில் இளங்குமரனுடைய படத்துக்கு முன்னால் தன் தந்தைக்கும் ஓவியனுக்குமிடையே நிகழும் பேச்சு என்னவாயிருக்கும் என்பதை அறிந்து கொண்டு விடுவத

17

17. வேலியில் முளைத்த வேல்கள்

22 December 2023
1
0
0

கையில் வேலையும் மனத்தில் துணிவையும் உறுதியாகப் பற்றிக் கொண்டு மெல்லப் பின்புறம் திரும்ப முயன்றார் வீரசோழிய வளநாடுடையார். புறநகரில் காவற்படைத் தலைவராகத் திரிந்த காலத்தில் இதைப் போலவும் இதைக் காட்டிலு

18

18. உலகத்துக்கு ஒரு பொய்!

22 December 2023
1
0
0

ஆத்திரமடைந்து துரத்திக் கொண்டு வந்த கூட்டத்தினரிடமிருந்து வீர சோழிய வளநாடுடையார் தப்பி விட்டார். துரத்தி வந்தவர்கள் சிறிது நேரம் காளிகோவில் சுற்றுப் புறங்களில் தேடிப் பார்த்துவிட்டு, அப்பாலுள்ளவை மயான

19

19. நீலநாக மறவர்

22 December 2023
1
0
0

இளங்குமரனும், நண்பர்களும் மருவூர்ப் பாக்கத்தின் ஒரு புறத்தே அமைந்திருந்த நீலநாக மறவரின் படைக்கலச் சாலைக்குள் நுழைந்தபோது அங்கே ஆரவாரமும் சுறுசுறுப்பும் நிறைந்த சூழ்நிலை நிலவியது. பல இளைஞர்கள் தனிதனி

20

20. விளங்காத வேண்டுகோள்

23 December 2023
1
0
0

“அடடா, நீ எப்பொழுது வந்தாய் தம்பீ! நான் உன்னைக் கவனிக்கவேயில்லையே? காலையிலிருந்து உன்னைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நேற்றுப் பின்னிரவில் இந்திர விழாவைக் காண்பதற்காக ஊரெல்லாம் சுற்றிவிட்டு

21

21. மணிமார்பனுக்குப் பதவி

23 December 2023
1
0
0

சுரமஞ்சரியும் வசந்தமாலையும் சில கணங்கள் ஒன்றும் பேசிக்கொள்ளத் தோன்றாமல் அப்படியே திகைத்துப் போய் நின்றார்கள். ஊசி கீழே விழுந்தாலும் ஓசை பெரிதாகக் கேட்கும்படியானதொரு நிசப்தம் அப்போது அந்த அலங்கார மண்டப

22

22. நகைவேழம்பர் நடுக்கம்

23 December 2023
1
0
0

மணிமார்பன் என்னும் அந்த ஓவியனைத் திரும்பிப் போக விடாமல் தன் தந்தையார் மாளிகையிலேயே தேக்கி வைத்துக் கொண்டிருப்பதன் மெய்யான நோக்கம் என்னவாக இருக்கும் என்று சுரமஞ்சரி சிந்தித்தாள். தன்னுடைய சித்திரச்சாலை

23

23. நாளைக்குப் போது விடியட்டும்!

23 December 2023
1
0
0

அந்தப் பின்னிரவு நேரத்தில் பூம்புகாரின் துறைமுகம் ஆரவாரமும் ஆள்பழக்கமும் குறைந்து அமைதியாய்க் காட்சியளித்தது. துறைமுகத்தின் அழகுகள் அமைதியில் தோய்ந்து தோன்றும் காரணத்தினால் பகற்போதில் இருந்ததைக் காட்ட

24

24. வானவல்லி சீறினாள்!

23 December 2023
1
0
0

உணவுக் கூடத்திலிருந்து வெளியேறிய நகைவேழம்பர் ஓவியனையும் இழுத்துக் கொண்டு விரைவாக முன்னால் சென்றுவிட முயன்றபோது சுரமஞ்சரி அவரைத் தடுத்து நிறுத்திக் கேட்ட கேள்வி அவருடைய தோற்றத்தில் பெரும் அதிர்ச்சியை உ

25

25. முரட்டுப் பிள்ளை

23 December 2023
1
0
0

இளங்குமரன் சிந்தித்தான். நீலநாக மறவரின் அந்த வேண்டுகோளுக்குத்தான் எப்படி இணங்கினோம் என்பதை நினைத்துப் பார்த்தபோது அவனுக்கு மிகவும் வருத்தமாயிருந்தது. மறுத்துச் சொல்ல முடியாமல் தன்னை அந்த வேண்டுகோளுக்க

26

26. கொலைத் தழும்பேறிய கைகள்

25 December 2023
1
0
0

பயந்துகொண்டே திரும்பி வந்த ஓவியன் பிரதான வாயிலில் துழையும் போது மாளிகை அமைதியாயிருந்தது. சுரமஞ்சரி முன்னேற்பாடாகச் சொல்லி வைத்திருந்ததனாலோ என்னவோ வாயிற் காவலர்கள் எவரும் அவனைத் தடுக்கவில்லை. அவன் திரு

27

27. தேர் திரும்பி வந்தது!

25 December 2023
0
0
0

பாதாள அறையில் கூண்டினுள் இருந்த புலிகள் பயங்கரமாக உறுமின. நகை வேழம்பர் வளையத்தில் பாதங்களை நுழைத்துத் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தார். ஓவியன் தன் கருத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு சூழ்நிலையும், நேரமு

28

28. வேலும் விழியும்

25 December 2023
1
0
0

ஓவியனின் அந்த வார்த்தைகளை மறுபடி நினைத்தாலும் மனம் கொதித் தது இளங்குமரனுக்கு. ‘எவ்வளவு துணிவு இருந்தால் அவன் என்னிடம் அப்படிக் கூறியிருப்பான்.’ ‘யாரைப் பார்த்து யார் சொல்லுகிற வார்த்தைகள் இவை? மணிமார

29

29. நிழல் மரம் சாய்ந்தது!

25 December 2023
1
0
0

பொழுது விடிந்ததும் நடந்த இந்த நிகழ்ச்சியால் இளங்குமரனின் உள்ளம் சொல்ல முடியாத வேதனையை அடைந்திருந்தது. உடனே பட்டினப்பாக்கத்துக்கு ஓடிச்சென்று சுரமஞ்சரி, அவளுடைய தோழி, மணிமார்பன் மூவரையும் படைக்கலச் சால

30

30. நெஞ்சில் மணக்கும் நினைவுகள்

25 December 2023
1
0
0

தோழி வசந்தமாலை தீபத்தை ஏந்திக் கொண்டு உடன்வர மாடத்துக்குள் நுழைந்த சுரமஞ்சரி அங்கே முன் கூடத்தில் சினத்தோடு வீற்றிருந்த தன் தந்தையாரையும் நகைவேழம்பரையும் கண்டும் காணாதவள் போல் அவர்களைப் புறக்கணிக்கும்

31

31. இருள் மயங்கும் வேளையில்

25 December 2023
1
0
0

காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. மாபெரும் காவிரிப்பூம்பட்டின நகரத்தின் தோற்றத்துக்கே புதிய மகிழ்ச்சியையும் கொண்டாட்டமான ஆரவாரங்களையும் அளித்துக் கொண்டிருந்த இந்திர விழாவின் நாட்களில் இன்னும் ஒன்றே ஒ

32

32. மாறித் தோன்றிய மங்கை

25 December 2023
1
0
0

ஆத்திரத்தோடு திரும்பிச் சுரமஞ்சரியின் தந்தையை உறுத்துப் பார்த்தான் இளங்குமரன், அவனுடைய கையை அழுத்திப் பற்றியிருந்த அவர்பிடி இன்னும் தளரவில்லை. “கையை விடுங்கள் ஐயா!” என்று அவன் கூறிய சொற்களைக் கேட்டு

33

33. பூமழை பொழிந்தது! பூம்புனல் பரந்தது!

25 December 2023
1
0
0

மறுநாள் பொழுது புலவர்வதற்குச் சில நாழிகைகள் இருக்கும்போதே கதக் கண்ணன் படைக்கலச் சாலைக்கு வந்து இளங்குமரனை நீராட்டு விழாவுக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டான். இளங்குமரனுக்கும் அன்று தனியாகப் படைக்கலச் ச

34

34. திருநாங்கூர் அடிகள்

25 December 2023
1
0
0

பூம்புகாரின் ஆரவாரமும், வாழ்க்கை வேகமும் சோழர் பேரரசின் தலைநகரமென்ற பெருமையும் நாங்கூருக்கு இல்லாவிட்டாலும் அமைதியும் அழகுங் கூடியதாயிருந்தது அந்தச் சிறு நகரம். எங்கு நோக்கிலும் பசும் புல்வெளிகளும் வெ

35

35. தெய்வமே துணை!

25 December 2023
1
0
0

நீரில் மூழ்கிவிட்ட அந்தப் பெண் யாராயிருந்தாலும் அவளைக் காப்பாற்ற வேண்டும் என்னும் உறுதியான எண்ணத்துடன், இரு கரையும் நிரம்பிடப் பொங்கிப் பெருகி ஓடும் காவிரிப் புனலில் இளங்குமரன் தன்னுடைய நீண்ட கைகளை வீ

36

36. இன்ப விழிகள் இரண்டு

25 December 2023
1
0
0

ஊழிக் காலமே நெருங்கி வந்து விட்டதோ என அஞ்சினான் இளங்குமரன். கீழே அலை அலையாக நீர்க் கடல், மேலே அலை அலையாக மேகக் கடல். நெடுந்தொலைவுக்கு அப்பால் இருப்பது போல் தெரிந்து இல்லாததாய் முடியும் தொடுவானம் இப்போ

37

37. கருணை பிறந்தது!

27 December 2023
1
0
0

கப்பல் கரப்புத் தீவு இருளில் மூழ்கி விட்டது. மழையும் காற்றும் முன்பிருந்த கடுமை குறைந்திருந்தன. பகைவர்களைப் போல் ஒன்றும் பேசிக் கொள்ளாமல் இருளில் எதிரெதிரே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் சுரமஞ்சரியும்

38

38. உள்ளத்தில் ஒரு கேள்வி

27 December 2023
1
0
0

பரிவும், ஏக்கமும், பசியும், குளிருமாகக் கழிந்த அந்த நீண்ட இரவுக்குபின் கப்பல் கரப்புத் தீவில் பொழுது புலர்ந்தபோது மங்கல நீராடி எழுந்த கன்னிகைபோல் தீவு முழுவதும் புத்தழகு பூத்திருந்தது. மழை இரவுக்குப்

39

39. மனம் மலர்கிறது!

27 December 2023
1
0
0

உலக அறிவியில் பௌத்த சமயத் துறவியிடம் தோற்று அங்கே கூடியிருந்தவர்களின் ஏளனத்தையும் இகழ்ச்சியையும் ஏற்க நேர்ந்தபின், நடைப்பிணம் போல் தளர்ந்து படைக்கலச் சாலைக்குப் புறப்பட்டிருந்தான் இளங்குமரன். மனமும் ந

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்