shabd-logo

வேடிக்கை பார்ப்பவன் -1

15 January 2024

2 பார்த்தது 2

வெந்து தணிந்தது காடு

முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானு  ம் இட்ட தீ மூள்க மூள்கவே!

- பட்டினத்தார்

ஒரு மிகப் பெரிய பொருட்காட்சிசாலையாக இந்தப் பிரபஞ்சத்தையும், அதை வேடிக்கை பார்த்தபடி வழி தப்பிய சிறுவனாக தன்னையும், இவன் அடிக்கடி கற்பனை செய்துகொள்வான்.

இவன் எதை வேடிக்கை பார்க்க வந்திருக்கிறான்? சின்னஞ்சிறிய இந்தக் கண்களைக்கொண்டு எதைத்தான் முழுமையாகப் பார்த்துவிட முடியும்! பார்வை என்பது கண் சார்ந்தது மட்டுமா என்ன?

ஜன்னல் கம்பிகள் வழியாக வேடிக்கை பார்க்கும் சிறுவனுக்கு வாசலில் கடந்துபோகும் கோயில் யானையின் பிரமாண்டம் ஒரே பார்வையில் வசப்படுமா? மலையின் அழகை அளந்துவிடத் துடிக்கும் சிட்டுக்குருவியின் சிறகுகள்தானோ இவன்?

உறக்கம் தொலைந்த அகாலங்களில், இவன மொட்டைமாடிக்கு வந்து நடசத்திரங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பான். இவனுக்கு அதன் மொழி தெரியாது. இருந்தாலும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

தோட்டத்தில் முளைத்த புல்லை, புல்லின் நுனியில் தேங்கும் பனித்துளியை, பனித்துளியில் பிரதிபலிக்கும் பரந்த மேகங்களை வேடிக்கை பார்த்தபடி வாழ்ந்து கொண்டிருப்பவன் இவன். இயற்கையை மட்டுமா? இவனையே இவன் தள்ளி நின்றுதான் வேடிக்கை பார்த்துக்கொண்டி ருக்கிறான்.

இவனுக்கு கதைகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். கருவில் இருந்தபோதே கதை கேட்டு வளர்ந்தவன். சந்தனமாக மேடிட்டிருந்த தன் வயிற்றைத் தடவியபடி இவன் அம்மா இவனுக்கு கதைகள் சொல்வாள். கர்ப்பக்கிரகத்தில் ஒருக்களித்துச் சுருண்டபடி மொழிகள் ஏதுமற்ற அந்த அமானுஷ்ய இருட்டின் கதகதப்பில் தொப்புள்கொடி வழியாக அந்தக் கதைகள் இவனுக்குள் விரியும்.

ஒருநாள் இவன் அம்மா இவனுக்கொரு கதை சொன்னாள். உலகம் பிறந்த கதை. பிரபஞ்சம் பெரிதாக வெடித்து, ஒரு நெருப்புப் பந்து உலகமாக விழுந்ததாம்.விழுந்தது, எரிந்ததாம். பின்பு, அணைந்ததாம். அப்புறம்தான் உயிர்கள் பிறந்ததாம். இவன் தொப்புள்கொடியை இறுகப் பற்றிக்கொண்டான். இந்த உலகமெனும் நெருப்புப் பந்துக்குள்ளா நான் பிறக்கப்போகிறேன்? பிரசவத்துக்கு மருத்துவர்கள் சொன்ன தேதி தள்ளிப்போன பின்னும் இவன் வெளியே வராமல் உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கினான்.

மீண்டும் அம்மா ஒரு கதை சொன்னாள். சொல்லும்போதே அவளுக்கு மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. 'என்ன சத்தம் இது?' என்று இவன் மொழியில் கேட்டான். 'மூச்சுத் திணறுகிறது. நாம் உயிர் வாழ காற்று அவசியம்' என்றாள். 'காற்று என்றால் என்ன?' என்றான். 'இந்த உலகத்தில் நெருப்பைப் போலவே காற்றும் ஒன்று. அதுதான் நம் உயிர்வாழ்வின் சுவாசம்' என்று அம்மா சொல்ல, இவன் உள்ளிருப்புப் போராட்டத்தை நிறுத்தி தன் தாய்க்கு சுவாசம் அளித்தான். அப்போதும் எல்லாக் குழந்தைகளையும் போலவே தலை வழியாக வெளியே வராமல், தன் இரு கால்களை நீட்டி இந்தப் பூமியை எட்டி உதைத்தான்.

இப்படித்தான் நண்பர்களே... நெருப்பும் காற்றும் நிலமும் இவனுக்கு அறிமுகமானது. தண்ணீர்

இவனுக்கு அறிமுகமானது தனிக் கதை.

இவன் அம்மா, இவன் பெண்ணாகப் பிறப்பான் என்று நினைத்தாள். பெண்ணாகப்

பிறந்திருந்தால் இவன் இன்னமும் சந்தோஷப்பட்டிருப்பான். ஆணாகப் பிறந்து தொலைத்தான்.

பெண் பிள்ளைகள் இல்லாத வீட்டில், சுருட்டை முடியுடன் பிறந்த ஆண் குழந்தைகளுக்குக்

குடுமி போட்டு, ரிப்பன் கட்டி, பூக்கள் சூட்டி அலங்கரித்து அழகு பார்ப்பதில்லையா!

அப்படித்தான் இவன் அம்மாவும் இவனை அலங்கரித்தாள். தன் தலைக்கு மேல்

கட்டப்பட்டிருந்த அந்த சிவப்பு ரிப்பனை கண்ணாடியில் பார்த்து ரசித்துவிட்டு, இவன் தன்

நகர்வலத்தைத் தொடங்கினான்.

நகர்வலம் என்றால் நீங்கள் நினைக்கும் நகரத்தைச் சுற்றிவரும் வலம் அல்ல; இது நகரும் வலம். ஏன் என்றால், இவன் வசித்தது ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் குட்டைகள், ஏரிகள், நதிகள் என்று தண்ணீர் தன் வெவ்வேறு வடிவங்களில் வாழ்ந்துகொண்டிருந்தது. அருகில் இருந்த குட்டையின் நீருடன் அறிமுகமாக விரும்பி, இவன் அதனுடன் உரையாடத் தொடங்கினான்.

'இன்னும் ஆழமாகப் பேசலாமே!' என்றது அது.

இவன் உள்ளே இறங்கினான். பிள்ளையைக் காணோமென இவன் அம்மா தேட, உறவுகள் தேட, ஊரும் தேடியது. ஏதோ ஓர் உள்ளுணர்வில், வீட்டுக்கு அருகிலிருந்த குட்டையைத் தேடி வந்த இவன் அம்மா, தண்ணீரில் சிவப்பு ரிப்பன் மிதப்பதைப் பார்த்து உள்ளே குதித்து, இவனை வெளியே தூக்கினாள். வயிற்றை அமுக்கி, குடித்த நீரையெல்லாம் வெளியே துப்பவைத்தபோது, இவன் ஆகாயத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். வானத்தில் அசைந்தபடியே ஒரு மேகம் சொன்னது, என் செல்லமே! பஞ்சபூதங்கள் உனக்காகப் டக்கப்பட்டிருக்கின்றன. நீ செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. அவ்வளவு சீக்கிரமாக சாக மாட்டாய்.'

இவனுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அன்று காலை, அம்மா இவனை எழுப்பினாள். பல் தேய்த்துவிட்டாள். குளிப்பாட்டினாள். உணவூட்டினாள். இவனைப் பள்ளிக்கு அழைத்துச்செல்லும் மாட்டுவண்டியில் ஏற்றி அமரவைத்துக் கையாட்டினாள். மதிய உணவு இடைவேளையில், இவனுக்குப் பிடிக்காத கீரை சாதத்தைத் திறந்து பார்த்து பசியோடு அந்த டிபன் பாக்ஸை இவன் மூடிய நேரத்தில் செத்தும்போனாள்.

'உங்க அம்மா செத்துட்டாங்க.. உன்னைக் கூட்டிட்டுப் போக ஆள் வந்திருக்கு' - ஸ்கூல் ஆயா வந்து சொன்னபோது, இவனுக்கு சந்தோஷமாக இருந்தது. மேத்ஸ் ஹோம்வொர்க்கை இவன் செய்யவில்லை. அடுத்த பீரியடின் அடியில் இருந்து இவன் தப்பித்துக்கொண்டதாக நினைத்தான்.

இவனைவிட்டு தள்ளி நின்று, இவன் வாழ்க்கை இவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை இவன் அறியவில்லை.

வீட்டை நெருங்குகையில் இவன் பால்ய சிநேகிதன் இவனிடம் ஒடிவந்து, 'உங்க வீட்டுல பாம்பு பூந்துருச்சு. அதான் கூட்டமா இருக்கு!" என்று சொல்ல, 'இல்லடா, அவங்கம்மா செத்துட்டாங்க. அதான் எல்லாரும் வந்திருக்காங்க!' என்று இன்னொரு நண்பன் சொல்ல, பாம்பையும் மரணத்தையும் நினைத்து இவன் குழம்பி நின்றான்.

ஏனென்று புரியாமல் எல்லோருடனும் அழுது

முடித்து, சாவுக்கு வந்திருந்த சொந்தக்காரக்

குழந்தைகளுடன்

விளையாடிக்கொண்டிருந்தான்.

இவனும்

ஆற்றங்கரை

மணலைச் சேர்த்து அந்தப் பிஞ்சுக் கைவிரல்கள்

வடித்த கோபுரம் அழகாக இருந்தது. ஒரே ஒரு

குறை, அதை வண்ணங்களால் அலங்கரிக்க

வேண்டும். சட்டென்று இவனுக்கொரு யோசனை தோன்றியது. இவன் தந்தை ஓர் ஆசிரியர்.

வீட்டில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக வகுப்பு எடுப்பார். அதனால் இவன் வீட்டில் கலர்கலராக சாக்பீஸ்கள் இருக்கும். வேகமாக வீட்டுக்கு ஓடினான். பலகையில் இறந்துகிடந்த அம்மாவையும், அழுதுகொண்டிருந்த உறவினர்களையும் தாண்டி, அம்மா சீதனமாகக்கொண்டு வந்த தேக்குமரப் பீரோவைத் திறந்து, வண்ண வண்ண சாக்பீஸ்களை கால்சட்டையில் நிரப்பிக்கொண்டு ஆற்றங்கரையை அடைந்தான்.

இப்போது கோபுரம் முழுமை பெற்றுவிட்டது. அதன் அழகை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கையில், யாரோ ஓர் உறவினர் இவனைத் தேடிவந்து அழைக்க, இவன் தலை மொட்டையடிக்கப்பட்டு எங்கேயோ கூட்டிச் செல்லப்பட்டான்.

அது சுடுகாடு என்றும்; அன்று இவன் தீ வைத்தது இவன் தாயின் தலை மீது என்றும் இவன் அறிந்தானில்லை. அதன் பிறகு பல நாட்கள் தன் பால்ய வயது தோழர்களிடம் இவன் பெருமையாகச் சொல்லிக்கொள்வான். 'எங்க அம்மா தலைல நான்தான் நெருப்பு வெச்சன். எப்படி எரிஞ்சுச்சி தெரியுமா!'

இப்போது யோசித்துப் பார்க்கையில், இவனுக்கு ஒன்று புரிகிறது. 'நெருப்பு' என்றால், நெருப்பு மட்டுமல்ல; நெருப்புக்குள்ளும் நீர் இருக்கிறது. அந்த நீர்... கண்ணீர்!

நா. முத்துக்குமார் மூலம் மேலும் புத்தகங்கள்

1

வேடிக்கை பார்ப்பவன் -2

15 January 2024
0
0
0

குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்! ஜென் கவிதை சனி, ஞாயிறு தவிர்த்து, தினமும் காலையில் இவனும் இவன் மகனும் பள்ளிக்குக் கிளம்புவார்கள். மகன் படிக்கும் பள்ளி ய

2

வேடிக்கை பார்ப்பவன் -1

15 January 2024
0
0
0

வெந்து தணிந்தது காடு முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானு  ம் இட்ட தீ மூள்க மூள்கவே! - பட்டினத்தார் ஒரு மிகப் பெரிய பொருட்காட்சிசாலையாக இந்தப்

3

வேடிக்கை பார்ப்பவன் - 3

15 January 2024
0
0
0

'என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!' - கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் அம்மா இறந்த பிறகு, இவன் அப

4

வேடிக்கை பார்ப்பவன் - 4

15 January 2024
0
0
0

'அவன், குதிங்காலிட்டு உட்கார்ந்தான்; சப்பணமிட்டு உட்கார்ந்தான்; ஒரு காலை நீட்டி உட்கார்ந்து பார்த்தான்; வயிற்றோடு முழங்காலைச் சேர்த்து ஒட்டி உட்கார்ந்து பார்த்தான். இப்படியும் அப்படியுமாக எப்படி உட்கா

5

வேடிக்கை பார்ப்பவன் - 5

15 January 2024
0
0
0

சமூகம் என்பது நான்கு பேர்.' - ஜெயகாந்தன் 5, 4, 3, 2, 1, 0 என்று தலைகீழாக கவுன்ட் டவுன் சொல்லி, ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புவதைப் போலத்தான் தினமும் இவன் தன் மகனை பள்ளிக்கு அனுப்புவதும். திருவாளர் ம

6

வேடிக்கை பார்ப்பவன் - 6

16 January 2024
0
0
0

வயதென்னும் ரயில் வண்டி 'அந்த மாபெரும் வெற்றிடத்தில் முன்னும் இல்லை, பின்னும் இல்லை பறவையின் பாதை கிழக்கையும் மேற்கையும் அழித்துவிடுகிறது.' ஜென் தத்துவம் பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு 10 நிமிட

7

வேடிக்கை பார்ப்பவன் - 7

16 January 2024
0
0
0

பள்ளித் தலமனைத்தும்... "உண்மையில், பள்ளிக்கூடம் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. திடீரென என் உலகம் மிகவும் பெரிதாகிவிட்டது. வீட்டைவிட்டு தினமும் வெளியே செல்வதற்கு இப்படி ஓர் அற்ப

8

வேடிக்கை பார்ப்பவன்-8

16 January 2024
0
0
0

 எமக்குத் தொழில் கவிதை 'முதலாளிமார்கள் விரல் எல்லாம் மோதிரங்கள் மனசெல்லாம் தந்திரங்கள்!' - கவிஞர் விக்ரமாதித்யன் ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும், இவனுக்குள் கோடீஸ்வரக் கனவு ஒன்று பூக்கத் தொடங்கும்

9

வேடிக்கை பார்ப்பவன்-9

16 January 2024
0
0
0

புன்னகைக்க மறந்த கதை "கண் சிமிட்டும் நேரத்தில் ஓர் உன்னதத் தருணம் புகைப்படம் ஆகிறது. அந்தத் தருணத்துக்கான காத்திருத்தலே, புகைப்படக் கலை. இருளை உணர்ந்தவனே, ஒளியில் வாழக் கற்றுக்கொள்கிறான்!" -பி.சி.ஸ்

10

வேடிக்கை பார்ப்பவன் - 10

16 January 2024
0
0
0

இவன், இவனான கதை! "இப்பொழுதும் அங்குதான் இருக்கிறீர்களா?" என்று கேட்டார். "எப்பொழுதும் அங்குதான் இருப்பேன்" என்றேன். - நகுலன் ('கோட் ஸ்டாண்ட்' கவிதைகள் தொகுப்பிலிருந்து...) போலந்து திரைப்பட இயக்கு

11

வேடிக்கை பார்ப்பவன் - 11

16 January 2024
0
0
0

தீராத விளையாட்டு வாழ்க்கையின் இருக்கலாம். கேள்விகள் ஆனால், எளிமையாகத்தான் இருக்கின்றன!" வேடிக் கடினமாக விடைகள் 211 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் "நா"ன்தான் டாம். நீங்க ஜெர்ரியாம். ஓடிப்போயி ஒளிஞ்சிக்குங்க.

12

வேடிக்கை பார்ப்பவன் - 12

16 January 2024
0
0
0

வீடென்பது யாதெனில்... "எனது புறநகர் குடியிருப்பு வயல்களின் சமாதி என்று நினைவுபடுத்தியவை தவளைகளே!" - சுகுமாரன் - 'பூமியை வாசிக்கும் சிறுமி' கவிதைத் தொகுப்பில் இருந்து... இன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில

13

வேடிக்கை பார்ப்பவன் - 13

16 January 2024
0
0
0

நிலாக் காலம் 'எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ? எந்த அழகை எந்த விழியில் கொண்டுசெல்வோமோ? இந்த நாளை வந்த நாளில் மறந்துபோவோமோ?' -கவியரசு கண்ணதாசன் ('பசுமை நிறைந்த நினைவுகளே...' பாடலில் இருந்து)

14

வேடிக்கை பார்ப்பவன் - 14

17 January 2024
0
0
0

சாலைகளின் பாடல் "நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சினிமா பார்ப்பதைப் போலத்தான். ஆனால், படம் முடிந்த பின் க்ளைமாக்ஸ் என்ன என்பது படம் பார்த்தவருக்குத் தெரியாது!" -ரோமன் பொலன்ஸ்கி, போலந்து திரைப்பட இயக்குந

15

வேடிக்கை பார்ப்பவன் - 15

17 January 2024
0
0
0

கனவின் கைப்பிடியில் "கட்டடங்களின் விரிசல்களுக்கு இடையே வேர் விட்டுப் பூக்கும் ரோஜாச் செடிகளை நீங்கள் பார்த்ததுண்டா? இயற்கை விதிகளைத் தவறாக்கி கால்கள் இல்லாமல் நடக்க அவை கற்றுக்கொடுக்கின்றன; அவை கனவுக

16

வேடிக்கை பார்ப்பவன் - 16

17 January 2024
0
0
0

குறுக்கு வெட்டுத் தோற்றம் தாமிரக் காசை தண்டவாளத்தில் வெச்சி நாம பதுங்க ரயில் நசுக்கும் - ராமையா கால ரயிலோட நாமெல்லாம் காசானோம் வாலிபம் போய் ஆச்சே வயசு! பார்ப்பவன் -வெ.சேஷாசலம் ('ஆகாசம்பட்டு' தொகுப்

17

வேடிக்கை பார்ப்பவன் - 17

17 January 2024
0
0
0

முன்பனிக்காலம் "நீ கிளையைக் கவனமாக வரைய முடியுமானால், உன்னால் காற்றின் ஒலியைக் கேட்க முடியும்!" - ஜென் தத்துவம் (எஸ்.ராமகிருஷ்ணனின் ஜென் கவிதைகள் நூலில் இருந்து) சினிமா, விநோதமான ஒரு ரங்கராட்டினம்.

18

வேடிக்கை பார்ப்பவன் - 18

17 January 2024
0
0
0

பின் பனிக் காலம் "பழத்தைப் பார்த்து பூ கேட்டது, 'இத்தனை நாளாய் எங்கு இருந்தாய்?' பூ சொன்னது, 'உன் இதயத்தில்தான் ஒளிந்திருந்தேன்!"' -தாகூர் (வழி தப்பிய பறவைகள் தொகுப்பில் இருந்து) வேலையற்றவனின் பகலு

19

வேடிக்கை பார்ப்பவன் - 19

17 January 2024
0
0
0

இவன் நானாகும் அத்தியாயம் 'நான் இல்லாமல் போகிறேன் ஆனால் வசந்த காலம் என்னுடைய நினைவுகளுடன் இருந்து கொண்டேதானிருக்கும்!' -இறக்கப்போகிற கடைசி நிமிடத்தில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ அன்புள்ள பாலுமகேந்த

20

வேடிக்கை பார்ப்பவன் - 20

17 January 2024
0
0
0

இளவேனிற் காலம் 220 இதற்கு மேல் உருள முடியாது கல் நதியைவிட்டு கரையேறிற்று. இதற்கு மேல் வழ வழப்பாக்க முடியாது கல்லை ஒதுக்கிவிட்டு நதி ஏகிற்று! கல்யாண்ஜி பத்திரிகையில் வேலை செய்தாலும், இவனது தீராக்கா

21

வேடிக்கை பார்ப்பவன -21

17 January 2024
0
0
0

'பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்' "உனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிந்துகொள்வதுதான் உண்மையான ஞானம்!" - சாக்ரடீஸ் இவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு 'சுதந்திரம்'. நூற்றுக்கும் 5. நூற்று

22

வேடிக்கை பார்ப்பவன் 22

18 January 2024
0
0
0

என்ன நடக்கிறது என்று என்ன நடக்கிறது என்று தெரிய மேஜையில் தேநீர் பதளமாய் கவிஞர் தேவநர்கள் இரண்டு சூரியன்" தொழும்பில் இருந்து கோப்பையைப் வைக்கிறேன் நடனமாய் மாறியபடி ஞாயிற்றுக்கிழமைகளை இவன் எந்த வே

23

வேடிக்கை பார்ப்பவன் - 23

18 January 2024
0
0
0

பசித்த புலியின் வேகம் "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" நகுலன் ('நினைவுப் பாதை' நாவலில் இருந்து...) எழுத்தாளர் சுஜாதா இவன் மேல் திருப்பிவிட்ட

24

வேடிக்கை பார்ப்பவன்-24

18 January 2024
0
0
0

நீங்கள் இயக்கிய 'சைக்கோ' திரைப்படத்தில் இடம்பெற்ற பாத்ரூம் கொலைக் காட்சியைப் பார்த்த பிறகு ஒரு மாதமாக என் மகள் குளிக்கவே இல்லை!" என்று ஒரு நாய் என்னிடம் சொன்னாள். நான் அவளிடம் சொன்னேன். 'தயவுசெய்து உங

25

வேடிக்கை பார்ப்பவன் -25

18 January 2024
0
0
0

குட்டிப் புத்தரின் கேள்வி "வாழ்க்கை, ஒரு மகாநதியைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் கரையில் நின்று, என் கண்ணுக்கு பட்டவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்." - எழுத்தாளர் வண்ணநிலவன் இந்த அத்தியாயத்த

26

வேடிக்கை பார்ப்பவன் - 26

18 January 2024
0
0
0

இவன் அவனாகும் அத்தியாயம் 'கீழைக்காட்டு வேம்பு கசந்தது அம்மாவின் சோகம் கேட்டுத்தான்!' -கவிஞர் த.பழமலய் ('சனங்களின் கதை' தொகுப்பில் இருந்து) அந்தப் பையனைக் காப்பாற்றுங்கள். அவன் ஏன் இப்படி இருக்கிறான

27

வேடிக்கை பார்ப்பவன் - 27

18 January 2024
0
0
0

பட்டாம்பூச்சி விற்ற கதை "ஒரு தேர் சக்கரத்தின் அளவு பூர்ண சந்திரன், இன்று ஒரு வீட்டுக் கூரையின் மேல் உதயமானான். தீப்பிடித்துவிட்டதோ என்று நினைத்தேன்!" தி.க.சிவசங்கரன் ('தி.க.சி-யின் நாட்குறிப்புகள்'

28

வேடிக்கை பார்ப்பவன் - 28

18 January 2024
0
0
0

அவையிடத்து முந்தியிருப்பச் செயல் 'ரத்தமும் சதையும் அல்ல... இதயம்தான் எங்களை தந்தை மகனாக இணைத்தது!' - எழுத்தாளர் ஓரான் பாமுக் எம்.ஏ., முடித்ததும், பச்சையப்பன் கல்லூரியிலேயே இவன் எம்.ஃபில்., சேர்ந்தா

29

வேடிக்கை பாறிப்பலன்-29

18 January 2024
0
0
0

'நிஜம்தாள் தாங்க முடியாத பாரம். அந்தப் பாரத்தை இறக்கியைக்க அல்ல, எவ்வளவு எடை என்று பார்த்துக்கொள்ளத்தான் இதை உல்களுக்கு எழுதுகிறேன். வெயிலில் உலர்த்துவது என் ஆகிவிட்டது. எல்லா இடத்திலும்நாளே வெயில் வி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்