shabd-logo

வேடிக்கை பார்ப்பவன் 22

18 January 2024

2 பார்த்தது 2

என்ன நடக்கிறது என்று என்ன நடக்கிறது என்று தெரிய

மேஜையில் தேநீர்

பதளமாய்

கவிஞர் தேவநர்கள் இரண்டு சூரியன்" தொழும்பில் இருந்து

கோப்பையைப் வைக்கிறேன்

நடனமாய் மாறியபடி

ஞாயிற்றுக்கிழமைகளை இவன் எந்த வேலை இருந்தாலும் மகக்காக ஒதுக்கிவிடுவாள். அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மகளிடம் இவன் சொன்னான், "நான்தான் பில்கட் பாய்"

மகன் கேட்டான். "ஏம்பா நீங்க பிஸ்கட் பாப்?"

"ஏன்னா... நாள் வாசனையா இருப்பேன்."

"அப்ப நான் யாகுப்பா?"

"...anக்லேட் பால்"

"சூப்பர்ப்பட்"

"எங்கப்பா வந்து டைகர் பாம்"

"எதுக்குப்பா தாத்தா மட்டும் டைகர் பாய்?"

"என்னா. அவரு வீரமா இருப்பாரு."

"அது உங்க அம்மா ந்த கே சொல்லவே இல்லியே."

"அதுவா அவங்க வந்து ஃப்ரூட்டி கே ட்டாப் போவாங்க"

"அப்ப எங்கம்மா?" என்று மகள் கேட்ட இவன் மனைவியை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, "உங்கம்மாவா? ம்... உங்கம்மா வந்து சில்லி கேள்" என்றான்.

*சில்லி கேர்ள்னா என்னப்பா?" என்று மகன் கேட்"சில்லி கேர்ள்னா எப்பவுமே கோபமா. இருப்பாங்க" என்று இவன் பதில் சொன்னான்.

"உங்கம்மல மட்டும் ஃப்ரூட்டி கேர்ஸ், எங்கம்மா மட்டும் சில்லி கேர்ளா?" என்று மகள் தாவி வந்து கழுத்தைப் பிடித்துக் கேட்கவும், இவன் மூச்சுத் திணறியபடி "இல்லடராஜா தெரியாம சொல்லிட்டேன்" என்றாள்.

அப்ப எங்கம்மாவை ஐஸ்கிரில் கேர்ன்னு சொல்லுங்க. அப்பத்தான் கைய எடுப்பேன்" என்று மகன் மிரட்டவும். "சரிடா உங்கம்மா என்று ஒப்புக்கொண்டாள். பின்பு கணிப்பொறியில் விடியோ கேம்ஸ் விளையாடிவிட்டு, "அப்பா..

ஏதாவது விடுகதை சொல்லுப்பா" என்று திரும்பி

"எங்க விட்டும் கிணத்துல வெள்ளிக் கிண்ணம்

மிதக்குது! அது என்ன?" என்று இவன் கேட்டதும்,

"என்னப்பா அது?" என்றாள் மகள்.

"நிலாடா" என்றான்.

"அது எப்பிடிப்பா சிணத்துல மிதக்கும்?என்று மகன் ஆச்சரியப்பட

"அடுத்த வாரம் காஞ்சிபுரம் போகும்போது நேர்ல காட்டுறேன்" என்று அப்போதைக்கு

சமாதானப்படுத்தினான். கிணறே இல்லாத மாநகரத்தில் நிலவின் பிம்பத்துக்கு இவள் எங்கே போவா?

அடுத்த வாரம் மகன் ஞாபகப்படுத்தி மீண்டும் கேட்க, இவன் காஞ்சிபுரத்தின் கிராமத்து வீட்டுக்கு அழைத்துச்சென்றான். பூர்வீக வீட்டின் கிணற்றடியில் நிலா மேலே வந்து தண்ணீரில் மிதக்கும் வரை அப்பனும் பிள்ளையும் காத்திருந்தார்கள். நிலா வந்ததும் கிணற்றில் மிதக்கும் வெள்ளிக்கிண்ணத்தை மகனுக்குக் காட்டினான். மகனை உறங்கவைத்துவிட்டு மீண்டும் கிணற்றடிக்கு வந்து, நிலவின் பிம்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இவன் மகனும் இவனும் நிலவின் பிம்பத்தை எட்டிப்பார்த்த அதே கிணற்றை, இவன் தகப்பனும் இவனும் 30 வருடங்களுக்கு முன்பு எட்டிப் பார்த்திருக்கிறார்கள்.

வருடத்துக்கு ஒருமுறை அந்தக் கிணற்றில் தூர் வாருவதற்காகப் படிக்கட்டுகளில் கால் வைத்து, இவன் அப்பா உள்ளே குதித்து பெரும் பெரும் ஆச்சரியங்களை கயிற்றில் தொங்கும் வாளியின் மூலமாக இவனுக்குச் சேற்று சகதியுடன் வெளியே அனுப்பிவைப்பார். கிராமத்தில் மட்டுமல்ல, இன்னும் நகரத்தில் அந்நிய ஆள் வீட்டுக்குள் வந்தால், பெண்கள் கதவுக்குப் பின்னிருந்தே பேசுவதை இவன் கவனித்து இருக்கிறான். இரண்டையும் இணைத்து 'தூர்' என்றொரு கவிதை எழுதினான்.

அந்தக் கவிதை...

தூர்

'வேப்பம் பூ மிதக்கும் எங்கள் வீட்டு கிணற்றில் தூர் வாரும் உற்சவம் வருடத்துக்கு ஒரு முறை விசேஷமாக நடக்கும்

ஆழ் நீருக்குள் அப்பா முங்க முங்க அதிசயங்கள் மேலே வரும். கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி துருப்பிடித்தக் கட்டையோடு உள் விழுந்த ராட்டினம், வேலைக்காரி திருடியதாய் சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர், சேற்றுக்குள் கிளறி எடுப்போம் நிறையவே! 'சேறுடா சேறுடா' வென அம்மா அதட்டுவாள் என்றாலும் சந்தோஷம் கலைக்க யாருக்கு மனம் வரும்? படை வென்ற வீரனாய் தலைநீர் சொட்டச் சொட்ட அப்பா மேலே வருவார்.

இன்று வரை அம்மா

கதவுக்குப் பின்னிருந்துதான்

அப்பாவோடு பேசுகிறாள்.

கடைசி வரை அப்பாவும்

மறந்தேபோனார்

மனசுக்குள் தூர் எடுக்க'

மேற்கண்ட கவிதையைக் பச்சையப்பன் கல்லூரி நாட்களில் கணையாழி பத்திரிகைக்கு அனுப்பிவிட்டு வகுப்புக்குச் சென்றிருந்தான். அடுத்த மாத கணையாழி இதழில் அந்தக் கவிதை வெளிவந்திருந்தது. அது கணையாழியின் 33-வது ஆண்டு மலர். 'கணையாழி தசரா அறக்கட்டளை' என்ற அமைப்பிடம் கைமாறிய இதழ் அது. முனைவர் மா.ராஜேந்திரன் ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருந்தார். அந்த ஆண்டு மலரை, சென்னை ராணி சீதை மன்றத்தில் ஒரு விழா எடுத்து வெளியிட தீர்மானித்து இருந்தார்கள். அதற்கான அழைப்பிதழ் இவன் முகவரிக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

அன்று காலையில் இருந்தே இவனுக்குக் காய்ச்சல் கொதித்துக்கொண்டிருந்தது. ஆனாலும் கணையாழி விழாவுக்குப் போக ஆசைப்பட்டான். தட்டுத்தடுமாறி எழுந்து, விழாவுக்குச் சென்று. எட்டாவது வரிசையில் ஏதோ ஓர் இருக்கையில் அமர்ந்தான். எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கி.கஸ்தூரிரங்கன், சுஜாதா, இன்குலாப், பாரதி கிருஷ்ணகுமார், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொள்ள விழா தொடங்கியது.

விழாவில் எழுத்தாளர் சுஜாதா பேசும்போது "கணையாழி இதழ்ல வர்ற கவிதைகளை, கடந்த 10 வருஷமா நான்தான் தேர்ந்தெடுத்துட்டு வர்றேன். இதை ஒரு சுகமான சுமையா ஏத்துக்கிட்டு செய்யறேன். தமிழ்க் கவிதைகளின் அடுத்தடுத்தக்கட்ட வளர்ச்சிகளைத் தெரிஞ்சுக்க இது எனக்கு உதவியா இருக்கு. இந்தக் கணையாழி இதழ்லகூட ஒரு கவிதை வந்திருக்கு. தமிழில் வெளிவந்த ஆகச்சிறந்த 25 கவிதைகளைப் பட்டியலிடச் சொன்னால், நிச்சயம் இந்தக் கவிதையை அதில் நான் சேர்ப்பேன்!" என்று சொல்லத் தொடங்க, இவன் யாரோ ஒருவரின் கவிதையைப் படிக்கப்போகிறார் என்று காய்ச்சலின் சோர்வுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

"அந்தக் கவிதையைக் கணையாழி வாசகர்களுக்குப் படித்துக்காட்ட விரும்புகிறேன்" என்று சுஜாதா தொடர்ந்ததும், இவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். அந்த நொடியில்தான் இவன் வாழ்க்கையை மாற்றிப்போட்ட சம்பவம் நிகழ்ந்தது. சுஜாதா இவனது 'தூர்' கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். வாசித்து முடித்ததும் அரங்கம் கை தட்டல்களால் அதிர்ந்தது. சுஜாதா மேலும் உற்சாகமாகி "கணையாழி, யார் எழுதுறாங்க? எந்த ஊரு... அப்படியெல்லாம் பார்த்து கவிதைகளைத் தேர்ந்தெடுப்பது இல்லை. பிரபலம், அறிமுக எழுத்தாளர் என்ற வேறுபாடு கணையாழிக்குக் கிடையாது. படைப்பின் தரம்தான் முக்கியம். இந்தக் கவிதையை முத்துக்குமார்னு ஒரு கவிஞர் எழுதியிருக்காரு. இவரு யாரு எங்க இருக்காருனுகூட எனக்குத் தெரியாது" என்று சொல்ல, விழா முடிந்ததும் அவரைத் தனியே சந்தித்து 'அந்தக் கவிதையை எழுதினது நான்தான்' என்று அறிமுகப்படுத்திக்கொள்ள விரும்பிய இவன், பார்வையாளர் வரிசையில் இருந்து கையை உயர்த்தினான். அதைக் கவனித்த சுஜாதா, "நீங்களா இந்தக் கவிதையை எழுதினது?" என்றார். இவன் 'ஆமாம்' என்றபடி தலையாட்டினான். சுஜாதா மேலும் பரவசமாகி "கை தட்டுங்கள் இந்தக் கவிஞனுக்கு!" என்று குதூகலித்தார். அரங்கம் மீண்டும் அதிர்ந்தது. அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

முன் வரிசையில் அமர்ந்திருந்த கோட் சூட் போட்டிருந்த ஒருவர், மேடைக்குச் சென்று

சுஜாதாவின் காதுகளில் ஏதோ கிசுகிசுக்க, சுஜாதா உணர்ச்சிவசப்பட்டு, "இந்தக் கவிதை எழுதிய

முத்துக்குமாருக்கு இவர் 1,000 ரூபாய் கொடுக்கிறார். வாங்க முத்துக்குமார்! வந்து வாங்கிக்கங்க!"

என்று இவனை அழைக்க, இவன் மேடை ஏறினான். பெயர் தெரியாத அந்த அன்பர், இவன்

கையில் 50 ரூபாய் நோட்டுகள் 20 கொடுத்தார். இவன் அந்த நோட்டுகளை எண்ண

ஆரம்பித்தான்.

'அன்பளிப்பாகக் கொடுத்தப் பணத்தை எண்ணுகிறானே!' என்று அரங்கம் அதிர்ச்சியானது.

அதிலிருந்து தனியே 500 ரூபாயைப் பிரித்தெடுத்து, மைக் முன் சென்று "நான் கணையாழி

பத்திரிகையோட வாசகன். கணையாழியோட வளர்ச்சி நிதிக்காக இந்த 500 ரூபாயை நன்கொடையாகக் கொடுக்கிறேன்" என்று அறிவித்தபோது, பார்வையாளர்கள் எழுந்து நின்று கை தட்டினார்கள். இவன் எழுத்தாளர் சுஜாதாவை நன்றியுடன் பார்த்தான். அவர், இவனை ஆரத் தழுவிக்கொண்டார்!

நா. முத்துக்குமார் மூலம் மேலும் புத்தகங்கள்

1

வேடிக்கை பார்ப்பவன் -2

15 January 2024
0
0
0

குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்! ஜென் கவிதை சனி, ஞாயிறு தவிர்த்து, தினமும் காலையில் இவனும் இவன் மகனும் பள்ளிக்குக் கிளம்புவார்கள். மகன் படிக்கும் பள்ளி ய

2

வேடிக்கை பார்ப்பவன் -1

15 January 2024
0
0
0

வெந்து தணிந்தது காடு முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானு  ம் இட்ட தீ மூள்க மூள்கவே! - பட்டினத்தார் ஒரு மிகப் பெரிய பொருட்காட்சிசாலையாக இந்தப்

3

வேடிக்கை பார்ப்பவன் - 3

15 January 2024
0
0
0

'என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!' - கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் அம்மா இறந்த பிறகு, இவன் அப

4

வேடிக்கை பார்ப்பவன் - 4

15 January 2024
0
0
0

'அவன், குதிங்காலிட்டு உட்கார்ந்தான்; சப்பணமிட்டு உட்கார்ந்தான்; ஒரு காலை நீட்டி உட்கார்ந்து பார்த்தான்; வயிற்றோடு முழங்காலைச் சேர்த்து ஒட்டி உட்கார்ந்து பார்த்தான். இப்படியும் அப்படியுமாக எப்படி உட்கா

5

வேடிக்கை பார்ப்பவன் - 5

15 January 2024
0
0
0

சமூகம் என்பது நான்கு பேர்.' - ஜெயகாந்தன் 5, 4, 3, 2, 1, 0 என்று தலைகீழாக கவுன்ட் டவுன் சொல்லி, ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புவதைப் போலத்தான் தினமும் இவன் தன் மகனை பள்ளிக்கு அனுப்புவதும். திருவாளர் ம

6

வேடிக்கை பார்ப்பவன் - 6

16 January 2024
0
0
0

வயதென்னும் ரயில் வண்டி 'அந்த மாபெரும் வெற்றிடத்தில் முன்னும் இல்லை, பின்னும் இல்லை பறவையின் பாதை கிழக்கையும் மேற்கையும் அழித்துவிடுகிறது.' ஜென் தத்துவம் பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு 10 நிமிட

7

வேடிக்கை பார்ப்பவன் - 7

16 January 2024
0
0
0

பள்ளித் தலமனைத்தும்... "உண்மையில், பள்ளிக்கூடம் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. திடீரென என் உலகம் மிகவும் பெரிதாகிவிட்டது. வீட்டைவிட்டு தினமும் வெளியே செல்வதற்கு இப்படி ஓர் அற்ப

8

வேடிக்கை பார்ப்பவன்-8

16 January 2024
0
0
0

 எமக்குத் தொழில் கவிதை 'முதலாளிமார்கள் விரல் எல்லாம் மோதிரங்கள் மனசெல்லாம் தந்திரங்கள்!' - கவிஞர் விக்ரமாதித்யன் ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும், இவனுக்குள் கோடீஸ்வரக் கனவு ஒன்று பூக்கத் தொடங்கும்

9

வேடிக்கை பார்ப்பவன்-9

16 January 2024
0
0
0

புன்னகைக்க மறந்த கதை "கண் சிமிட்டும் நேரத்தில் ஓர் உன்னதத் தருணம் புகைப்படம் ஆகிறது. அந்தத் தருணத்துக்கான காத்திருத்தலே, புகைப்படக் கலை. இருளை உணர்ந்தவனே, ஒளியில் வாழக் கற்றுக்கொள்கிறான்!" -பி.சி.ஸ்

10

வேடிக்கை பார்ப்பவன் - 10

16 January 2024
0
0
0

இவன், இவனான கதை! "இப்பொழுதும் அங்குதான் இருக்கிறீர்களா?" என்று கேட்டார். "எப்பொழுதும் அங்குதான் இருப்பேன்" என்றேன். - நகுலன் ('கோட் ஸ்டாண்ட்' கவிதைகள் தொகுப்பிலிருந்து...) போலந்து திரைப்பட இயக்கு

11

வேடிக்கை பார்ப்பவன் - 11

16 January 2024
0
0
0

தீராத விளையாட்டு வாழ்க்கையின் இருக்கலாம். கேள்விகள் ஆனால், எளிமையாகத்தான் இருக்கின்றன!" வேடிக் கடினமாக விடைகள் 211 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் "நா"ன்தான் டாம். நீங்க ஜெர்ரியாம். ஓடிப்போயி ஒளிஞ்சிக்குங்க.

12

வேடிக்கை பார்ப்பவன் - 12

16 January 2024
0
0
0

வீடென்பது யாதெனில்... "எனது புறநகர் குடியிருப்பு வயல்களின் சமாதி என்று நினைவுபடுத்தியவை தவளைகளே!" - சுகுமாரன் - 'பூமியை வாசிக்கும் சிறுமி' கவிதைத் தொகுப்பில் இருந்து... இன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில

13

வேடிக்கை பார்ப்பவன் - 13

16 January 2024
0
0
0

நிலாக் காலம் 'எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ? எந்த அழகை எந்த விழியில் கொண்டுசெல்வோமோ? இந்த நாளை வந்த நாளில் மறந்துபோவோமோ?' -கவியரசு கண்ணதாசன் ('பசுமை நிறைந்த நினைவுகளே...' பாடலில் இருந்து)

14

வேடிக்கை பார்ப்பவன் - 14

17 January 2024
0
0
0

சாலைகளின் பாடல் "நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சினிமா பார்ப்பதைப் போலத்தான். ஆனால், படம் முடிந்த பின் க்ளைமாக்ஸ் என்ன என்பது படம் பார்த்தவருக்குத் தெரியாது!" -ரோமன் பொலன்ஸ்கி, போலந்து திரைப்பட இயக்குந

15

வேடிக்கை பார்ப்பவன் - 15

17 January 2024
0
0
0

கனவின் கைப்பிடியில் "கட்டடங்களின் விரிசல்களுக்கு இடையே வேர் விட்டுப் பூக்கும் ரோஜாச் செடிகளை நீங்கள் பார்த்ததுண்டா? இயற்கை விதிகளைத் தவறாக்கி கால்கள் இல்லாமல் நடக்க அவை கற்றுக்கொடுக்கின்றன; அவை கனவுக

16

வேடிக்கை பார்ப்பவன் - 16

17 January 2024
0
0
0

குறுக்கு வெட்டுத் தோற்றம் தாமிரக் காசை தண்டவாளத்தில் வெச்சி நாம பதுங்க ரயில் நசுக்கும் - ராமையா கால ரயிலோட நாமெல்லாம் காசானோம் வாலிபம் போய் ஆச்சே வயசு! பார்ப்பவன் -வெ.சேஷாசலம் ('ஆகாசம்பட்டு' தொகுப்

17

வேடிக்கை பார்ப்பவன் - 17

17 January 2024
0
0
0

முன்பனிக்காலம் "நீ கிளையைக் கவனமாக வரைய முடியுமானால், உன்னால் காற்றின் ஒலியைக் கேட்க முடியும்!" - ஜென் தத்துவம் (எஸ்.ராமகிருஷ்ணனின் ஜென் கவிதைகள் நூலில் இருந்து) சினிமா, விநோதமான ஒரு ரங்கராட்டினம்.

18

வேடிக்கை பார்ப்பவன் - 18

17 January 2024
0
0
0

பின் பனிக் காலம் "பழத்தைப் பார்த்து பூ கேட்டது, 'இத்தனை நாளாய் எங்கு இருந்தாய்?' பூ சொன்னது, 'உன் இதயத்தில்தான் ஒளிந்திருந்தேன்!"' -தாகூர் (வழி தப்பிய பறவைகள் தொகுப்பில் இருந்து) வேலையற்றவனின் பகலு

19

வேடிக்கை பார்ப்பவன் - 19

17 January 2024
0
0
0

இவன் நானாகும் அத்தியாயம் 'நான் இல்லாமல் போகிறேன் ஆனால் வசந்த காலம் என்னுடைய நினைவுகளுடன் இருந்து கொண்டேதானிருக்கும்!' -இறக்கப்போகிற கடைசி நிமிடத்தில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ அன்புள்ள பாலுமகேந்த

20

வேடிக்கை பார்ப்பவன் - 20

17 January 2024
0
0
0

இளவேனிற் காலம் 220 இதற்கு மேல் உருள முடியாது கல் நதியைவிட்டு கரையேறிற்று. இதற்கு மேல் வழ வழப்பாக்க முடியாது கல்லை ஒதுக்கிவிட்டு நதி ஏகிற்று! கல்யாண்ஜி பத்திரிகையில் வேலை செய்தாலும், இவனது தீராக்கா

21

வேடிக்கை பார்ப்பவன -21

17 January 2024
0
0
0

'பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்' "உனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிந்துகொள்வதுதான் உண்மையான ஞானம்!" - சாக்ரடீஸ் இவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு 'சுதந்திரம்'. நூற்றுக்கும் 5. நூற்று

22

வேடிக்கை பார்ப்பவன் 22

18 January 2024
0
0
0

என்ன நடக்கிறது என்று என்ன நடக்கிறது என்று தெரிய மேஜையில் தேநீர் பதளமாய் கவிஞர் தேவநர்கள் இரண்டு சூரியன்" தொழும்பில் இருந்து கோப்பையைப் வைக்கிறேன் நடனமாய் மாறியபடி ஞாயிற்றுக்கிழமைகளை இவன் எந்த வே

23

வேடிக்கை பார்ப்பவன் - 23

18 January 2024
0
0
0

பசித்த புலியின் வேகம் "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" நகுலன் ('நினைவுப் பாதை' நாவலில் இருந்து...) எழுத்தாளர் சுஜாதா இவன் மேல் திருப்பிவிட்ட

24

வேடிக்கை பார்ப்பவன்-24

18 January 2024
0
0
0

நீங்கள் இயக்கிய 'சைக்கோ' திரைப்படத்தில் இடம்பெற்ற பாத்ரூம் கொலைக் காட்சியைப் பார்த்த பிறகு ஒரு மாதமாக என் மகள் குளிக்கவே இல்லை!" என்று ஒரு நாய் என்னிடம் சொன்னாள். நான் அவளிடம் சொன்னேன். 'தயவுசெய்து உங

25

வேடிக்கை பார்ப்பவன் -25

18 January 2024
0
0
0

குட்டிப் புத்தரின் கேள்வி "வாழ்க்கை, ஒரு மகாநதியைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் கரையில் நின்று, என் கண்ணுக்கு பட்டவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்." - எழுத்தாளர் வண்ணநிலவன் இந்த அத்தியாயத்த

26

வேடிக்கை பார்ப்பவன் - 26

18 January 2024
0
0
0

இவன் அவனாகும் அத்தியாயம் 'கீழைக்காட்டு வேம்பு கசந்தது அம்மாவின் சோகம் கேட்டுத்தான்!' -கவிஞர் த.பழமலய் ('சனங்களின் கதை' தொகுப்பில் இருந்து) அந்தப் பையனைக் காப்பாற்றுங்கள். அவன் ஏன் இப்படி இருக்கிறான

27

வேடிக்கை பார்ப்பவன் - 27

18 January 2024
0
0
0

பட்டாம்பூச்சி விற்ற கதை "ஒரு தேர் சக்கரத்தின் அளவு பூர்ண சந்திரன், இன்று ஒரு வீட்டுக் கூரையின் மேல் உதயமானான். தீப்பிடித்துவிட்டதோ என்று நினைத்தேன்!" தி.க.சிவசங்கரன் ('தி.க.சி-யின் நாட்குறிப்புகள்'

28

வேடிக்கை பார்ப்பவன் - 28

18 January 2024
0
0
0

அவையிடத்து முந்தியிருப்பச் செயல் 'ரத்தமும் சதையும் அல்ல... இதயம்தான் எங்களை தந்தை மகனாக இணைத்தது!' - எழுத்தாளர் ஓரான் பாமுக் எம்.ஏ., முடித்ததும், பச்சையப்பன் கல்லூரியிலேயே இவன் எம்.ஃபில்., சேர்ந்தா

29

வேடிக்கை பாறிப்பலன்-29

18 January 2024
0
0
0

'நிஜம்தாள் தாங்க முடியாத பாரம். அந்தப் பாரத்தை இறக்கியைக்க அல்ல, எவ்வளவு எடை என்று பார்த்துக்கொள்ளத்தான் இதை உல்களுக்கு எழுதுகிறேன். வெயிலில் உலர்த்துவது என் ஆகிவிட்டது. எல்லா இடத்திலும்நாளே வெயில் வி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்