shabd-logo

வேடிக்கை பார்ப்பவன் - 28

18 January 2024

2 பார்த்தது 2

அவையிடத்து முந்தியிருப்பச் செயல்

'ரத்தமும் சதையும் அல்ல... இதயம்தான் எங்களை தந்தை மகனாக இணைத்தது!'

- எழுத்தாளர் ஓரான் பாமுக்

எம்.ஏ., முடித்ததும், பச்சையப்பன் கல்லூரியிலேயே இவன் எம்.ஃபில்., சேர்ந்தான். சேர்ந்த ஒரு மாதத்திலேயே இவன் எப்போதோ எழுதியிருந்த தேர்வுக்கான முடிவு வந்திருந்தது. 'யுனிவர்சிட்டி கிரான்ட்ஸ் கமிஷன்' எனப்படும் யு.ஜி.சி. தேர்வில் இவன் ஃபெல்லோஷிப்புடன் தேர்வு பெற்றிருந்தான். இவன் பி.ஹெச்டி., ஆய்வு செய்வதற்கு, ஐந்து வருடங்களுக்கு யு.ஜி.சி. ஸ்காலர்ஷிப் கொடுத்திருந்தது.

முதல் மூன்று வருடங்களுக்கு ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்பாக மாதம் 5,400 ரூபாய், கடைசி இரண்டு வருடங்களுக்கு சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்பாக மாதம் 6,000 ரூபாய் என இவனுக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. சென்னையில் கால் ஊன்றவும், கனவுகளின் கரம் பிடிக்கவும் இவன் கற்ற கல்வி மீண்டும் இவனுக்குக் கை கொடுத்தது.

வேடிக்கை பார்ப்பவன்

பச்சையப்பன் கல்லூரியில் பி.ஹெச்டி., செய்வதைவிட, பல்கலைக்கழகத்தில் சென்னைப் செய்தால் ஸ்காலர்ஷிப் கிடைப்பது இன்னும் சுலபமாக இருக்கும் என்று தமிழ்த் துறைத் தலைவர் தெ.ஞானசுந்தரம் இவனை வழிநடத்தினார். மேலும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறைத் தலைவர் டாக்டர் வ.ஜெயதேவன் தரச்சொல்லி, ஒன்றையும் வைத்தார். அவர்களிடம் சிபாரிசு கடிதம் கொடுத்து அனுப்பி

இவனுடைய கவிதைத் தொகுப்புகளை வாசித்துப் பார்த்த வ.ஜெயதேவன், அவரது மேற்பார்வை யிலேயே இவனை பி.ஹெச்டி.. செய்யச் சொன்னார். ஆய்வுக்கான புத்தகங்கள் தொடங்கி குண்டூசி வாங்குவது வரை யு.ஜி.சி. இவனுக்கு நிதி உதவி அளித்தது.

'தமிழ்த் திரைப்படப் பாடல்கள் ஓர் ஆய்வு' என்ற தலைப்பைப் பதிவுசெய்து, ஆய்வு செய்யத்

தொடங்கினான். பேசும்படம் காலம் தொடங்கி, 2000 ஆண்டு வரையிலான பாடல்களை

ஆய்வுக்கு எடுத்துக்கொண்டான். ஊர் ஊராகச் சென்று பழைய பாடல் புத்தகங்களைச் சேகரிக்கத்

தொடங்கினான். மூட்டை மூட்டையாக இவன் அறையில் பாட்டுப் புத்தகங்கள் குவிந்தன.

தமிழின் முதல் பாடலாசிரியர் மதுரகவி பாஸ்கரதாஸ் தொடங்கி கவிஞர் பழநிபாரதி வரை இவன் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட காலகட்டத்தில் பாடல்கள் எழுதியிருந்தனர்.

தேசபக்திக் காலகட்டம், புராணப் படங்கள் மிகுந்த தெய்வபக்திக் காலகட்டம், சமூகப் படங்கள் காலகட்டம்... என ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுதப்பட்ட பாடல்களையும் பாடலாசிரியர்களையும் அவதானிக்கத் தொடங்கினான். எத்தனை எத்தனை கவிஞர்கள்! அவர்களின் பாடல் வரிகளில்தான் எத்தனை எத்தனை வண்ணங்கள்! குடும்பம், இயற்கை, தத்துவம், காதல்... என பல்வேறு சூழல்களில், 'பாடல்' எனும் பேராறு இவனைக் கை நீட்டி அழைத்தது. இவன் அதனுள்ளே குதித்து மூழ்கிப்போனான்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித் துறை கட்டடம் கடற்கரையைப் பார்த்தபடி இருக்கும். அதுவரையில் மாலையில் மட்டுமே பார்த்து ரசித்துக்கொண்டிருந்த கடலை. பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பிறகு காலையிலும் இவன் தரிசிக்கத் தொடங்கினான்.

கடலுக்குத்தான், எத்தனை முகங்கள்; எத்தனை வடிவங்கள்! காலையில் பொன் அள்ளி இறைப்பதும், நண்பகலில் கானல் நீரில் தகிப்பதும், பிற்பகலில் மௌனங்களை இறைச்சலாக மொழிபெயர்ப்பதுமாக கடலை, அருகில் இருந்து அறிந்து கொண்ட காலங்கள் அவை.

தமிழ் மொழித் துறைத் தலைவரும், இவனது ஆய்வு வழிகாட்டியுமான வ.ஜெயதேவன். தமிழகத்தின் மிகச் சிறந்த தமிழ் அறிஞர்களுள் ஒருவர். அகராதி இயல் துறையில் பெரும் புலமைகொண்டவர். சென்னைப் பல்கலைக்கழகத்துக்காக நிறைய அகராதிகளைப் புதுப்பித்திருக்கிறார். அவர், இவன் ஆய்வுக்கு மட்டுமல்ல; இவன் ஆளுமைக்கும் வழிகாட்டியாக இருந்தார்.

இவன் இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்டவன். சிறு

வயதில் இருந்தே தாய் இல்லாமல் தனியே வளர்ந்ததால் தயங்கித் தயங்கித்தான் பேசுவான். பல்கலைக்கழகத்தில் சேர்ந்த முதல் நாளே, இவனது தயக்கத்தை தெரிந்துகொண்ட வ.ஜெயதேவன், இவனைத் தனியாக அழைத்து, "தம்பி. நாளையில இருந்து எம்.ஏ., முதலாம் ஆண்டு தமிழ் மாணவர்களுக்கு, நீங்கள் 'படைப்புக் கலை' பற்றி வகுப்பு எடுக்கிறீங்க. வகுப்பறையில் மாணவர்க ளோட பேசப் பேச உங்க கூச்சம் காணாமல் போயிடும். உங்களால் குறைந்தபட்சம் 10 மாணவர்கள் கவிஞர்களா மாறினா, அது பல்கலைக் கழகத்துக்குப் பெருமைதானே!" என்று உற்சாகப்படுத்தினார்.

10 மாணவர்கள் இல்லை... இவன் அங்கு வகுப்பு எடுத்த

ஐந்து ஆண்டுகளில் 60 மாணவர்கள், கவிஞர்கள்

ஆனார்கள். முதலில் புதுக்கவிதையின் தோற்றமும்

வளர்ச்சியும் பற்றி வகுப்பு எடுத்தான். எழுத்துக்

காலகட்டம், வானம்பாடி காலகட்டம், கவியரங்கு

காலகட்டம் 57687 ஒவ்வொரு காலகட்டத்தையும்

உதாரணங்களோடு விளக்கினான்.

ரியலிசம், நியோ-ரியலிசம், ஸ்ட்ரெக்சரலிசம், சர்ரியலிசம்,

போஸ்ட்மார்டனிசம், மேஜிக்கல் ரியலிசம்...

ஒவ்வொரு இசங்களையும் வகுப்பில் விளக்கினான்.

அதற்கான உதாரணக் கவிதைகளை வாசித்துக்காட்ட மாணவர்கள் உற்சாகமானார்கள். ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு கவிஞர் என எடுத்துக்கொண்டு, அந்தக் கவிஞர் பற்றிய குறிப்புகளைச் சொல்லி, அவர் எழுதிய அத்தனை கவிதைகளையும் வாசித்துக் காட்டுவாள். இப்படி நிறைய நவீனக் கவிஞர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறாள்.

வாரத்தில் ஒரு நாள் கவிதை நேரம். இவன் ஒரு தலைப்பு கொடுப்பான். அந்தத் தலைப்பில் மாணவர்கள் கவிதை எழுத வேண்டும். அப்படி ஒருநாள் 'கயினு' என்று தலைப்புக் கொடுத்ததும், ஒரு மாணவன் எழுதிய கவிதையை இவனால் மறக்க முடியாது. அந்தக் கவிதை...

'பின்னேறுவதால் முன்னேறுகிறார்கள் கயிறு திரிப்பவர்கள்!"

ஒருநாள் இவன் தமிழ்த் துறையில் இருந்து வகுப்பு எடுக்கக் கிளம்பிக்கொண்டிருந்தபோது எதிரே இவன் அப்பா வந்துகொண்டிருந்தார், "இங்க என்னப்பா பண்றீங்க?" என்றான் இவன். "சும்மா ஒரு மீட்டிங் விஷயமா மெட்ராஸ் வந்தேன். நீ கிளாஸ் எடுக்கிறேன்னு கேள்விப்பட்டேன். எப்படி நடத்துறேனு பார்க்க வேண்டாமா?" என்று அவர் சிரித்தபடி சொல்ல, இவன் கை-கால்கள் நடுங்க ஆரம்பித்தன. அதைக் கவனித்த இவன் தந்தை, "சும்மா சொன்னேன்டா. பயப்படாத, நீ கிளாஸ் முடிச்சிட்டு வா நான் லைப்ரரியில் வெயிட் பண்றேன்" என்று சிரித்தபடி கடந்து போனார்.

காலச்சக்கரம் பின்னோக்கி சுழல, இவன் மீண்டும் சிறுவனானான். மூன்றாம் வகுப்புப் படிக்கையில் டைஃபாய்டு காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு ஒரு வாரம் லீவு போட்டுவிட்டு இவன் வீட்டில் இருந்த காலம். காய்ச்சல்விட்டு உடல் ஓரளவுக்குத் தேறிக்கொண்டிருந்தது. ஆசிரியரான இவனது தந்தை அவரது பள்ளிக்கூடத்துக்குக் கிளம்ப, "இன்னிக்கு நானும் உங்ககூட உங்க ஸ்கூலுக்கு வரப் போறேன்" என்று அடம்பிடித்து சைக்கிளில் ஏறி அமர்ந்தான்.

அப்பாவின் பள்ளிக்கூடம். இவன் பள்ளிக்கூடத்தைவிடச் சிறியது. வாசலில் நின்றிருந்த செங்கொன்றை மரத்தில் இருந்து உதிர்ந்துகிடந்த பூக்களும், பள்ளியின் பின்பக்கம் விரிந்துகிடந்த பனைமரக் காடுகளுமாக அப்பாவின் பள்ளிக்கூடம் அப்பாவைப் போலவே அழகாகவும் நெருக்கமாகவும் இருந்தது.

'தமிழ் ஐயாவோட பையன்டா!' என்று மாணவர்கள் இவனைச் சூழ்ந்துகொண்டார்கள். அப்பா எல்லோரையும் அதட்டிவிட்டு, வகுப்பு எடுக்கத் தொடங்கினார் முன் பெஞ்சில் அமர்ந்து அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள். விரல்களிலும், மூக்கிள் நுளியிலும், காகோரத்து முடிகளிலும் சாக்பீஸ் துகள் படிந்த அப்பா, இன்னும் இவனுக்கு நெருக்கமானார்.

காலச்சக்கரம் முன்னோக்கி சுழல, இவன் பல்கலைக்கழகத்து வகுப்பறைக்குள் நுழைந்தாள். அப்பா, நூலகத்தில் காத்துக்கொண்டிருக்கிறார் என்ற பதற்றத்து னே அன்றைய வகுப்பு முடிந்தது.

நூலகத்தில் இருந்த அப்பாவை, கேன்டீனுக்கு அழைத்துச் சென்று தேநீர் வாங்கிக் கொடுத்தான். "வாடா, கொஞ்சம் காலாற கடற்கரை வரைக்கும் நடந்துட்டு வரலாம்" என்றார் அப்பா. மதிய நேரத்துக் கடல் மதிய நேரத்து கடல் போலவே இருந்தது.

'எப்போது கடற்கரைக்குச் சென்றாலும் குறிப்பிட்ட தூரத்துக்கு மேல்

சென்றதே இல்லை.

அலைகளிடம் பயம் இல்லை

பயம் அப்பாவிடம்தான்!"

என்று சிறு வயதில் இவன் எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது. இருவரும் முடிவிலா அலைகளில் நின்றார்கள். அப்பா வழக்கம் போல் இவள் கைகளைப் பிடித்துக்கொண்டார்.

திரும்பி வந்து பேருந்துக்காகக் காத்திருக்கையில், நல்லாதான்டகிளாஸ் எடுக்கிற என்றார் அப்பா.

'நீங்க லைப்ரரியிலதானே இருந்தீங்க, நான் கிளாஸ் எடுத்ததை எப்ப பார்த்தீங்க?" என்றாள் ஆச்சரியத்துடன்

"நான் எங்கடா லைப்ரரிக்குப் போனேன், நான் வந்தா நீ டென்ஷன் ஆயிடுவேனு உன் கிளாஸ் ஜன்னலுக்குப் பின்னாடி மறைஞ்சு நின்னு பார்த்திட்டு இருந்தேன்" என்றார் அப்பா.

கை விரல்களிலும், மூக்கின் நுனியிலும், காதோரத்து முடிகளிலும் சாக்பீஸ் துகள் படிந்த இவன், அப்பாவுக்கு இன்னும் நெருக்கமாகி இருப்பான் என்று தோன்றியது!

நா. முத்துக்குமார் மூலம் மேலும் புத்தகங்கள்

1

வேடிக்கை பார்ப்பவன் -2

15 January 2024
0
0
0

குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்! ஜென் கவிதை சனி, ஞாயிறு தவிர்த்து, தினமும் காலையில் இவனும் இவன் மகனும் பள்ளிக்குக் கிளம்புவார்கள். மகன் படிக்கும் பள்ளி ய

2

வேடிக்கை பார்ப்பவன் -1

15 January 2024
0
0
0

வெந்து தணிந்தது காடு முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானு  ம் இட்ட தீ மூள்க மூள்கவே! - பட்டினத்தார் ஒரு மிகப் பெரிய பொருட்காட்சிசாலையாக இந்தப்

3

வேடிக்கை பார்ப்பவன் - 3

15 January 2024
0
0
0

'என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!' - கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் அம்மா இறந்த பிறகு, இவன் அப

4

வேடிக்கை பார்ப்பவன் - 4

15 January 2024
0
0
0

'அவன், குதிங்காலிட்டு உட்கார்ந்தான்; சப்பணமிட்டு உட்கார்ந்தான்; ஒரு காலை நீட்டி உட்கார்ந்து பார்த்தான்; வயிற்றோடு முழங்காலைச் சேர்த்து ஒட்டி உட்கார்ந்து பார்த்தான். இப்படியும் அப்படியுமாக எப்படி உட்கா

5

வேடிக்கை பார்ப்பவன் - 5

15 January 2024
0
0
0

சமூகம் என்பது நான்கு பேர்.' - ஜெயகாந்தன் 5, 4, 3, 2, 1, 0 என்று தலைகீழாக கவுன்ட் டவுன் சொல்லி, ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புவதைப் போலத்தான் தினமும் இவன் தன் மகனை பள்ளிக்கு அனுப்புவதும். திருவாளர் ம

6

வேடிக்கை பார்ப்பவன் - 6

16 January 2024
0
0
0

வயதென்னும் ரயில் வண்டி 'அந்த மாபெரும் வெற்றிடத்தில் முன்னும் இல்லை, பின்னும் இல்லை பறவையின் பாதை கிழக்கையும் மேற்கையும் அழித்துவிடுகிறது.' ஜென் தத்துவம் பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு 10 நிமிட

7

வேடிக்கை பார்ப்பவன் - 7

16 January 2024
0
0
0

பள்ளித் தலமனைத்தும்... "உண்மையில், பள்ளிக்கூடம் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. திடீரென என் உலகம் மிகவும் பெரிதாகிவிட்டது. வீட்டைவிட்டு தினமும் வெளியே செல்வதற்கு இப்படி ஓர் அற்ப

8

வேடிக்கை பார்ப்பவன்-8

16 January 2024
0
0
0

 எமக்குத் தொழில் கவிதை 'முதலாளிமார்கள் விரல் எல்லாம் மோதிரங்கள் மனசெல்லாம் தந்திரங்கள்!' - கவிஞர் விக்ரமாதித்யன் ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும், இவனுக்குள் கோடீஸ்வரக் கனவு ஒன்று பூக்கத் தொடங்கும்

9

வேடிக்கை பார்ப்பவன்-9

16 January 2024
0
0
0

புன்னகைக்க மறந்த கதை "கண் சிமிட்டும் நேரத்தில் ஓர் உன்னதத் தருணம் புகைப்படம் ஆகிறது. அந்தத் தருணத்துக்கான காத்திருத்தலே, புகைப்படக் கலை. இருளை உணர்ந்தவனே, ஒளியில் வாழக் கற்றுக்கொள்கிறான்!" -பி.சி.ஸ்

10

வேடிக்கை பார்ப்பவன் - 10

16 January 2024
0
0
0

இவன், இவனான கதை! "இப்பொழுதும் அங்குதான் இருக்கிறீர்களா?" என்று கேட்டார். "எப்பொழுதும் அங்குதான் இருப்பேன்" என்றேன். - நகுலன் ('கோட் ஸ்டாண்ட்' கவிதைகள் தொகுப்பிலிருந்து...) போலந்து திரைப்பட இயக்கு

11

வேடிக்கை பார்ப்பவன் - 11

16 January 2024
0
0
0

தீராத விளையாட்டு வாழ்க்கையின் இருக்கலாம். கேள்விகள் ஆனால், எளிமையாகத்தான் இருக்கின்றன!" வேடிக் கடினமாக விடைகள் 211 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் "நா"ன்தான் டாம். நீங்க ஜெர்ரியாம். ஓடிப்போயி ஒளிஞ்சிக்குங்க.

12

வேடிக்கை பார்ப்பவன் - 12

16 January 2024
0
0
0

வீடென்பது யாதெனில்... "எனது புறநகர் குடியிருப்பு வயல்களின் சமாதி என்று நினைவுபடுத்தியவை தவளைகளே!" - சுகுமாரன் - 'பூமியை வாசிக்கும் சிறுமி' கவிதைத் தொகுப்பில் இருந்து... இன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில

13

வேடிக்கை பார்ப்பவன் - 13

16 January 2024
0
0
0

நிலாக் காலம் 'எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ? எந்த அழகை எந்த விழியில் கொண்டுசெல்வோமோ? இந்த நாளை வந்த நாளில் மறந்துபோவோமோ?' -கவியரசு கண்ணதாசன் ('பசுமை நிறைந்த நினைவுகளே...' பாடலில் இருந்து)

14

வேடிக்கை பார்ப்பவன் - 14

17 January 2024
0
0
0

சாலைகளின் பாடல் "நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சினிமா பார்ப்பதைப் போலத்தான். ஆனால், படம் முடிந்த பின் க்ளைமாக்ஸ் என்ன என்பது படம் பார்த்தவருக்குத் தெரியாது!" -ரோமன் பொலன்ஸ்கி, போலந்து திரைப்பட இயக்குந

15

வேடிக்கை பார்ப்பவன் - 15

17 January 2024
0
0
0

கனவின் கைப்பிடியில் "கட்டடங்களின் விரிசல்களுக்கு இடையே வேர் விட்டுப் பூக்கும் ரோஜாச் செடிகளை நீங்கள் பார்த்ததுண்டா? இயற்கை விதிகளைத் தவறாக்கி கால்கள் இல்லாமல் நடக்க அவை கற்றுக்கொடுக்கின்றன; அவை கனவுக

16

வேடிக்கை பார்ப்பவன் - 16

17 January 2024
0
0
0

குறுக்கு வெட்டுத் தோற்றம் தாமிரக் காசை தண்டவாளத்தில் வெச்சி நாம பதுங்க ரயில் நசுக்கும் - ராமையா கால ரயிலோட நாமெல்லாம் காசானோம் வாலிபம் போய் ஆச்சே வயசு! பார்ப்பவன் -வெ.சேஷாசலம் ('ஆகாசம்பட்டு' தொகுப்

17

வேடிக்கை பார்ப்பவன் - 17

17 January 2024
0
0
0

முன்பனிக்காலம் "நீ கிளையைக் கவனமாக வரைய முடியுமானால், உன்னால் காற்றின் ஒலியைக் கேட்க முடியும்!" - ஜென் தத்துவம் (எஸ்.ராமகிருஷ்ணனின் ஜென் கவிதைகள் நூலில் இருந்து) சினிமா, விநோதமான ஒரு ரங்கராட்டினம்.

18

வேடிக்கை பார்ப்பவன் - 18

17 January 2024
0
0
0

பின் பனிக் காலம் "பழத்தைப் பார்த்து பூ கேட்டது, 'இத்தனை நாளாய் எங்கு இருந்தாய்?' பூ சொன்னது, 'உன் இதயத்தில்தான் ஒளிந்திருந்தேன்!"' -தாகூர் (வழி தப்பிய பறவைகள் தொகுப்பில் இருந்து) வேலையற்றவனின் பகலு

19

வேடிக்கை பார்ப்பவன் - 19

17 January 2024
0
0
0

இவன் நானாகும் அத்தியாயம் 'நான் இல்லாமல் போகிறேன் ஆனால் வசந்த காலம் என்னுடைய நினைவுகளுடன் இருந்து கொண்டேதானிருக்கும்!' -இறக்கப்போகிற கடைசி நிமிடத்தில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ அன்புள்ள பாலுமகேந்த

20

வேடிக்கை பார்ப்பவன் - 20

17 January 2024
0
0
0

இளவேனிற் காலம் 220 இதற்கு மேல் உருள முடியாது கல் நதியைவிட்டு கரையேறிற்று. இதற்கு மேல் வழ வழப்பாக்க முடியாது கல்லை ஒதுக்கிவிட்டு நதி ஏகிற்று! கல்யாண்ஜி பத்திரிகையில் வேலை செய்தாலும், இவனது தீராக்கா

21

வேடிக்கை பார்ப்பவன -21

17 January 2024
0
0
0

'பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்' "உனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிந்துகொள்வதுதான் உண்மையான ஞானம்!" - சாக்ரடீஸ் இவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு 'சுதந்திரம்'. நூற்றுக்கும் 5. நூற்று

22

வேடிக்கை பார்ப்பவன் 22

18 January 2024
0
0
0

என்ன நடக்கிறது என்று என்ன நடக்கிறது என்று தெரிய மேஜையில் தேநீர் பதளமாய் கவிஞர் தேவநர்கள் இரண்டு சூரியன்" தொழும்பில் இருந்து கோப்பையைப் வைக்கிறேன் நடனமாய் மாறியபடி ஞாயிற்றுக்கிழமைகளை இவன் எந்த வே

23

வேடிக்கை பார்ப்பவன் - 23

18 January 2024
0
0
0

பசித்த புலியின் வேகம் "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" நகுலன் ('நினைவுப் பாதை' நாவலில் இருந்து...) எழுத்தாளர் சுஜாதா இவன் மேல் திருப்பிவிட்ட

24

வேடிக்கை பார்ப்பவன்-24

18 January 2024
0
0
0

நீங்கள் இயக்கிய 'சைக்கோ' திரைப்படத்தில் இடம்பெற்ற பாத்ரூம் கொலைக் காட்சியைப் பார்த்த பிறகு ஒரு மாதமாக என் மகள் குளிக்கவே இல்லை!" என்று ஒரு நாய் என்னிடம் சொன்னாள். நான் அவளிடம் சொன்னேன். 'தயவுசெய்து உங

25

வேடிக்கை பார்ப்பவன் -25

18 January 2024
0
0
0

குட்டிப் புத்தரின் கேள்வி "வாழ்க்கை, ஒரு மகாநதியைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் கரையில் நின்று, என் கண்ணுக்கு பட்டவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்." - எழுத்தாளர் வண்ணநிலவன் இந்த அத்தியாயத்த

26

வேடிக்கை பார்ப்பவன் - 26

18 January 2024
0
0
0

இவன் அவனாகும் அத்தியாயம் 'கீழைக்காட்டு வேம்பு கசந்தது அம்மாவின் சோகம் கேட்டுத்தான்!' -கவிஞர் த.பழமலய் ('சனங்களின் கதை' தொகுப்பில் இருந்து) அந்தப் பையனைக் காப்பாற்றுங்கள். அவன் ஏன் இப்படி இருக்கிறான

27

வேடிக்கை பார்ப்பவன் - 27

18 January 2024
0
0
0

பட்டாம்பூச்சி விற்ற கதை "ஒரு தேர் சக்கரத்தின் அளவு பூர்ண சந்திரன், இன்று ஒரு வீட்டுக் கூரையின் மேல் உதயமானான். தீப்பிடித்துவிட்டதோ என்று நினைத்தேன்!" தி.க.சிவசங்கரன் ('தி.க.சி-யின் நாட்குறிப்புகள்'

28

வேடிக்கை பார்ப்பவன் - 28

18 January 2024
0
0
0

அவையிடத்து முந்தியிருப்பச் செயல் 'ரத்தமும் சதையும் அல்ல... இதயம்தான் எங்களை தந்தை மகனாக இணைத்தது!' - எழுத்தாளர் ஓரான் பாமுக் எம்.ஏ., முடித்ததும், பச்சையப்பன் கல்லூரியிலேயே இவன் எம்.ஃபில்., சேர்ந்தா

29

வேடிக்கை பாறிப்பலன்-29

18 January 2024
0
0
0

'நிஜம்தாள் தாங்க முடியாத பாரம். அந்தப் பாரத்தை இறக்கியைக்க அல்ல, எவ்வளவு எடை என்று பார்த்துக்கொள்ளத்தான் இதை உல்களுக்கு எழுதுகிறேன். வெயிலில் உலர்த்துவது என் ஆகிவிட்டது. எல்லா இடத்திலும்நாளே வெயில் வி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்