shabd-logo

வேடிக்கை பார்ப்பவன் - 27

18 January 2024

2 பார்த்தது 2

பட்டாம்பூச்சி விற்ற கதை

"ஒரு தேர் சக்கரத்தின் அளவு பூர்ண சந்திரன், இன்று ஒரு வீட்டுக் கூரையின் மேல் உதயமானான். தீப்பிடித்துவிட்டதோ என்று நினைத்தேன்!"

தி.க.சிவசங்கரன்

('தி.க.சி-யின் நாட்குறிப்புகள்' நூலில் இருந்து...)

வீட்டைக் கட்டிப்பார்... கல்யாணம் பண்ணிப்பார்' என்று சொல்வார்கள். அந்தப் பழமொழியில் பின் இணைப்பாக 'கவிதைப் புத்தகம் வெளியிட்டுப் பார்' என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இன்று, இவனுடைய கவிதைப் புத்தகங்களை வெளியிட நிறைய பதிப்பகங்கள் இவனை அணுகுகின்றன. முன்புக்கும் முன்பு இவன் ஏறி இறங்காத பதிப்பகங்கள் இல்லை.

"கவிதைப் புத்தகம் வெளியிடுவதைவிட ரெண்டு கழுதை வாங்கி நிறுத்துனா, புத்தக மூட்டையையாவது சுமக்கும். இதுல எல்லாம் லாபம் இல்ல தம்பி; பேசாம கவிதை எழுதுறதை விட்டுட்டு சமையல் குறிப்பு, ஜோதிடக் குறிப்பு, மருத்துவக் குறிப்புனு எழுதிட்டு வாங்க. தாராளமா நம்ம பதிப்பகத்திலேயே வெளியிடலாம்" என்று ஒரு பதிப்பாளர், முகத்தில் அறைந்ததுபோல் சொன்னார்.

வெந்நீர் தயாரிப்பதைத் தவிர, இவனுக்கு வேறு எந்தச் சமையலும் தெரியாது. இவன் கட்டம் வரைந்தால் அது வட்டமாகவும், வட்டம் வரைந்தால் அது சதுரமாகவும் மாறிவிடுவதால் ஜோதிடக் குறிப்பைத் தவிர்த்து விட்டான். மருத்துவக் குறிப்புகள் என்று தலைப்பிட்டு அடிக்கோடிட்டபோது அறையெங்கும் மருந்து வாசம் கசிவதைக் கண்டு மிரண்டுபோய் புத்தகம் விற்காவிட்டாலும் பரவாயில்லை என்று மீண்டும் கவிதைக்கே திரும்பினான்.

இவன் 10-ம் வகுப்புப் படிக்கும்போது அதுவரை எழுதிய கவிதைகளைத் தொகுத்து 'தூசிகள்' எனும் தலைப்பில் புத்தகமாக வெளியிடும் ஆசை வந்தது. அது ஆசை அல்ல, பேராசை என்று ஒவ்வொரு பதிப்பகமும் இவனுக்கு நிரூபித்தன. ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, பச்சைக்கிளியின் கழுத்து சிமிழுக்குள் இவனுக்கான பணப்பையைப் பதிப்பாளர்கள் தொலைத்துவிட்டிருந்தனர்.

இன்று கவிதைப் புத்தகங்கள் ஓரளவுக்கு விற்கின்றன. கவிதைப் புத்தகங்களை வெளியிட, நிறைய பதிப்பகங்கள் உற்சாகமாக முன்வருகின்றன. 80-களில், பிரபலம் அல்லாதவர் கவிதைத் தொகுப்பை வெளியிடுவது தற்கொலைக்குச் சமம்.

பொண்டாட்டி, பிள்ளைகளின் நகைகளை அடகுவைத்து. ஆடு-மாடுகளை விற்று, வட்டிக்கு வாங்கி... என நிறைய கவிஞர்கள் தங்கள் முதல் தொகுப்பைச் சொந்தமாக வெளியிட்டு, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்தது போக, விற்காத புத்தகங்களை, சுட்டுக்கட்டாக வீட்டில் அடுக்கி வைத்திருப்பதை இவன் அருகில் இருந்து பார்த்திருக்கிறான்.

ஆசை யாரை விட்டது? இவன் அப்பாவிடம் நச்சரிக்கத் தொடங்க, அவர் வட்டிக்குக் கடன் வாங்கி, நகைகளை அடகுவைத்து 'தூசிகள்' என்ற இவன் முதல் கவிதைத் தொகுப்பை அச்சிட்டு, காஞ்சி இலக்கிய வட்டம் மூலமாக வெளியீட்டு விழாவும் நடத்தினான். உண்மையில் அந்தப் புத்தகம்தான் இவனுக்குப் பேர் வாங்கிக் கொடுத்தது.

அப்போது எல்லாம் இவன் 'காஞ்சி. நா.முத்துக்குமரன்' என்ற பெயரில் எழுதுவான். உள்ளங்கை அளவுக்குச் சிறியதாக இருந்த இவன் முதல் புத்தகத்தில், இவ்வளவு நீளமான பெயரை அட்டையில் வைக்க இடம் இல்லை என்று அச்சுக்கோப்பவர் இவன் பெயரை நா.முத்துக்குமார் என்று சுருக்கியிருந்தார். இப்படியாக அந்தப் புத்தகம் இவனுக்குப் பேர் வாங்கிக் கொடுத்துவிட்டு, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அன்பளிப்பாகக் கொடுத்தது போக கட்டுக்கட்டாக வீட்டின் பரண் மேல் கிடந்தது. உண்மையில் தூசிகளின் இருப்பிடம் பரண்கள்தானே!

தன் முயற்சியில் சற்றும் மனம்

விக்கிரமாதித்தனைப் போல

தளராத

பச்சையப்பன்

கல்லூரியில் எம்.ஏ., முடித்த பிறகு, மீண்டும் இவன்

இரண்டாவது கவிதைத் தொகுப்பை வெளியிட

நினைத்தான். எழுத்தாளர் சுஜாதா இவனது 'தூர்'

கவிதையை வாசித்த பிறகு, பரவலாகப் பல

பத்திரிகைகளில் இவனது கவிதைகள் வெளிவந்து

கவனிக்கப்பட்டன.

அவற்றுக்கு

எல்லாம்

'பட்டாம்பூச்சி விற்பவன்' என்ற தலைப்பிட்டு ஒரு சில

பதிப்பங்களை அணுகினான். காலம், அப்போது

முன்னேறியிருந்ததால் கவிதைகளை விட்டுவிட்டு en

'கணிப்பொறி கற்பது எப்படி?' என்று எழுதித் தரச்

சொன்னார்கள்.

எலிப்பொறியின்

தொழில்நுட்பம்கூடத் தெரியாத இவன், 'கணிப்பொறியை எப்படிக் கற்றுத்தரப் போகிறோம்?' என்று மலைத்துப்போனான்.

"கவலைப்படாதே தம்பி, என்னுடைய 'சாரல்' பதிப்பகம் மூலமாக உன் புத்தகத்தை வெளியிடுகிறேன். கொஞ்சம் காத்திரு" என்று அறிவுமதி அண்ணன் ஆறுதல் சொன்னார். அவரது நிதிநிலைமையும் அப்போது மோசமாகத் தான் இருந்தது.

அறிவுமதி அண்ணன் கொஞ்சம் பணம் கொடுக்க, கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான நந்தலாலா, "பேப்பர் வாங்கும் செலவை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று சொல்ல, அறிவுமதி அண்ணன் நண்பரும், இவன் கவிதைகளின் ரசிகருமான, 'பூவுலகின் நண்பர்கள்' தேவநேயன், இவனை தன் பைக்கில் அமரவைத்தது அடகுக் கடைக்கு அழைத்துச் சென்று கழுத்துச் சங்கிலியைக் கழட்டிக் கொடுக்க, கல்லூரி கவியரங்கத் தோழன் தமீம் அன்சாரி தன் சொந்த அச்சகத்தில் கடனுக்கு அச்சடித்துக் கொடுக்க, 'பட்டாம்பூச்சி விற்பவன்' புத்தகம் வெளியானது.

'சமர்ப்பணம், 'புத்தகம் வெளியிட முடியாமல் தவிக்கும் சக கவிஞர்களுக்கு...' என்று அதன் முதல் பதிப்பில் இவன் வலியுடன் குறிப்பிட்டிருந்தான்.

ஒரு பைசா செலவு செய்யாமல், 'பட்டாம்பூச்சி விற்பவன்' வெளியீட்டு விழா வெகு விமரிசையாக நடந்தது. அதற்குக் காரணம், இவனது குரு பாலுமகேந்திரா. "இந்தப் புத்தகத்தை பாரதிராஜா வெளியிட்டால் நன்றாக இருக்கும்" என்று சொல்லி இயக்குநர் இமயம் பாரதிராஜா அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று இவனை அறிமுகப்படுத்த, "பாலு... அன்னைக்கு 'தூர்' கவிதையைப் படிச்சப்போ, 'யார் இந்த முத்துக்குமார்?'னு விசாரிச்சேன். கண்டிப்பா நான் வந்து வெளியிடுறேன். இந்த வெளியீட்டு விழாவுக்கான எல்லா செலவையும் நானே பார்த்துக்கிறேன்" என்று இயக்குநர் பாரதிராஜா இவனை ஆச்சரியங்களுக்குள் தள்ளினார்.

புத்தகத்தை வெளியிட்டு, இவன் கவிதைகளைப் பற்றி, "எங்கள் ஊர்ப் பக்கங்களில் ஓலைச்சுவடியில் நூலை நுழைத்து ஜோதிடம் பார்ப்பார்கள். சிலருக்கு நல்லது வரும்; சிலருக்கு கெட்டது வரும், இந்தப் புத்தகத்தில் கண்ணை மூடிக்கொண்டு எந்தப் பக்கத்தைப் பிரித்தாலும் நல்ல கவிதைகள்தான் வரும். அதிலும் அக்கா-தங்கை உறவைப் பற்றி ஒரு கவிதையில் படிக்கும்போது, எனக்கு எங்க அக்கா ஞாபகம் வந்திருச்சு" என்று கண் கலங்கி அவர் பேசியதை இவனால் மறக்க முடியாது.

புத்தகத்தின் பிரதியைப் பெற, மேடைக்கு வந்த இவன் அம்மாவைப் பெற்ற ஆயா,

பாரதிராஜாவிடம் "எம் பேரன்தாங்க, பத்திரமாப் பார்த்துக்கங்க" என்று சொல்ல, "இந்தக்

கவிஞனின் பாட்டி என்னைக் கண்கலங்க வைத்துவிட்டாள். இதுதான் நம் தமிழ் மண்ணின்

பாசம்" என்று மேலும் உணர்ச்சிவசப்பட்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மேடையிலேயே "எனக்கு 200 புத்தகங்கள் வேணும்" என்று

அதற்கான காசோலையை பாரதிராஜா கொடுத்தபோது. இவன் மேலும் ஆச்சரியப்பட்டான்.

அன்பின் அடைமழையை சின்னஞ்சிறு குடை எப்படித் தாங்கும்? அதற்கு அடுத்த வாரத்துக்குள்

அவரது அலுவலகத்துக்கு வந்த அத்தனை இயக்குநர்களுக்கும் இவன் புத்தகத்தில்

கையெழுத்திட்டு இயக்குநர் பாரதிராஜா கொடுக்க... இவன் கவிதை, திரையுலகில் உலா வரத்

தொடங்கியது.

இன்று வரை விற்பனையில் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் அந்தப் புத்தகத்தின்

ஆணிவேருக்கு இத்தனை கரங்கள் நீர் ஊற்றியிருக்கின்றன.

நா. முத்துக்குமார் மூலம் மேலும் புத்தகங்கள்

1

வேடிக்கை பார்ப்பவன் -2

15 January 2024
0
0
0

குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்! ஜென் கவிதை சனி, ஞாயிறு தவிர்த்து, தினமும் காலையில் இவனும் இவன் மகனும் பள்ளிக்குக் கிளம்புவார்கள். மகன் படிக்கும் பள்ளி ய

2

வேடிக்கை பார்ப்பவன் -1

15 January 2024
0
0
0

வெந்து தணிந்தது காடு முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானு  ம் இட்ட தீ மூள்க மூள்கவே! - பட்டினத்தார் ஒரு மிகப் பெரிய பொருட்காட்சிசாலையாக இந்தப்

3

வேடிக்கை பார்ப்பவன் - 3

15 January 2024
0
0
0

'என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!' - கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் அம்மா இறந்த பிறகு, இவன் அப

4

வேடிக்கை பார்ப்பவன் - 4

15 January 2024
0
0
0

'அவன், குதிங்காலிட்டு உட்கார்ந்தான்; சப்பணமிட்டு உட்கார்ந்தான்; ஒரு காலை நீட்டி உட்கார்ந்து பார்த்தான்; வயிற்றோடு முழங்காலைச் சேர்த்து ஒட்டி உட்கார்ந்து பார்த்தான். இப்படியும் அப்படியுமாக எப்படி உட்கா

5

வேடிக்கை பார்ப்பவன் - 5

15 January 2024
0
0
0

சமூகம் என்பது நான்கு பேர்.' - ஜெயகாந்தன் 5, 4, 3, 2, 1, 0 என்று தலைகீழாக கவுன்ட் டவுன் சொல்லி, ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புவதைப் போலத்தான் தினமும் இவன் தன் மகனை பள்ளிக்கு அனுப்புவதும். திருவாளர் ம

6

வேடிக்கை பார்ப்பவன் - 6

16 January 2024
0
0
0

வயதென்னும் ரயில் வண்டி 'அந்த மாபெரும் வெற்றிடத்தில் முன்னும் இல்லை, பின்னும் இல்லை பறவையின் பாதை கிழக்கையும் மேற்கையும் அழித்துவிடுகிறது.' ஜென் தத்துவம் பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு 10 நிமிட

7

வேடிக்கை பார்ப்பவன் - 7

16 January 2024
0
0
0

பள்ளித் தலமனைத்தும்... "உண்மையில், பள்ளிக்கூடம் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. திடீரென என் உலகம் மிகவும் பெரிதாகிவிட்டது. வீட்டைவிட்டு தினமும் வெளியே செல்வதற்கு இப்படி ஓர் அற்ப

8

வேடிக்கை பார்ப்பவன்-8

16 January 2024
0
0
0

 எமக்குத் தொழில் கவிதை 'முதலாளிமார்கள் விரல் எல்லாம் மோதிரங்கள் மனசெல்லாம் தந்திரங்கள்!' - கவிஞர் விக்ரமாதித்யன் ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும், இவனுக்குள் கோடீஸ்வரக் கனவு ஒன்று பூக்கத் தொடங்கும்

9

வேடிக்கை பார்ப்பவன்-9

16 January 2024
0
0
0

புன்னகைக்க மறந்த கதை "கண் சிமிட்டும் நேரத்தில் ஓர் உன்னதத் தருணம் புகைப்படம் ஆகிறது. அந்தத் தருணத்துக்கான காத்திருத்தலே, புகைப்படக் கலை. இருளை உணர்ந்தவனே, ஒளியில் வாழக் கற்றுக்கொள்கிறான்!" -பி.சி.ஸ்

10

வேடிக்கை பார்ப்பவன் - 10

16 January 2024
0
0
0

இவன், இவனான கதை! "இப்பொழுதும் அங்குதான் இருக்கிறீர்களா?" என்று கேட்டார். "எப்பொழுதும் அங்குதான் இருப்பேன்" என்றேன். - நகுலன் ('கோட் ஸ்டாண்ட்' கவிதைகள் தொகுப்பிலிருந்து...) போலந்து திரைப்பட இயக்கு

11

வேடிக்கை பார்ப்பவன் - 11

16 January 2024
0
0
0

தீராத விளையாட்டு வாழ்க்கையின் இருக்கலாம். கேள்விகள் ஆனால், எளிமையாகத்தான் இருக்கின்றன!" வேடிக் கடினமாக விடைகள் 211 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் "நா"ன்தான் டாம். நீங்க ஜெர்ரியாம். ஓடிப்போயி ஒளிஞ்சிக்குங்க.

12

வேடிக்கை பார்ப்பவன் - 12

16 January 2024
0
0
0

வீடென்பது யாதெனில்... "எனது புறநகர் குடியிருப்பு வயல்களின் சமாதி என்று நினைவுபடுத்தியவை தவளைகளே!" - சுகுமாரன் - 'பூமியை வாசிக்கும் சிறுமி' கவிதைத் தொகுப்பில் இருந்து... இன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில

13

வேடிக்கை பார்ப்பவன் - 13

16 January 2024
0
0
0

நிலாக் காலம் 'எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ? எந்த அழகை எந்த விழியில் கொண்டுசெல்வோமோ? இந்த நாளை வந்த நாளில் மறந்துபோவோமோ?' -கவியரசு கண்ணதாசன் ('பசுமை நிறைந்த நினைவுகளே...' பாடலில் இருந்து)

14

வேடிக்கை பார்ப்பவன் - 14

17 January 2024
0
0
0

சாலைகளின் பாடல் "நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சினிமா பார்ப்பதைப் போலத்தான். ஆனால், படம் முடிந்த பின் க்ளைமாக்ஸ் என்ன என்பது படம் பார்த்தவருக்குத் தெரியாது!" -ரோமன் பொலன்ஸ்கி, போலந்து திரைப்பட இயக்குந

15

வேடிக்கை பார்ப்பவன் - 15

17 January 2024
0
0
0

கனவின் கைப்பிடியில் "கட்டடங்களின் விரிசல்களுக்கு இடையே வேர் விட்டுப் பூக்கும் ரோஜாச் செடிகளை நீங்கள் பார்த்ததுண்டா? இயற்கை விதிகளைத் தவறாக்கி கால்கள் இல்லாமல் நடக்க அவை கற்றுக்கொடுக்கின்றன; அவை கனவுக

16

வேடிக்கை பார்ப்பவன் - 16

17 January 2024
0
0
0

குறுக்கு வெட்டுத் தோற்றம் தாமிரக் காசை தண்டவாளத்தில் வெச்சி நாம பதுங்க ரயில் நசுக்கும் - ராமையா கால ரயிலோட நாமெல்லாம் காசானோம் வாலிபம் போய் ஆச்சே வயசு! பார்ப்பவன் -வெ.சேஷாசலம் ('ஆகாசம்பட்டு' தொகுப்

17

வேடிக்கை பார்ப்பவன் - 17

17 January 2024
0
0
0

முன்பனிக்காலம் "நீ கிளையைக் கவனமாக வரைய முடியுமானால், உன்னால் காற்றின் ஒலியைக் கேட்க முடியும்!" - ஜென் தத்துவம் (எஸ்.ராமகிருஷ்ணனின் ஜென் கவிதைகள் நூலில் இருந்து) சினிமா, விநோதமான ஒரு ரங்கராட்டினம்.

18

வேடிக்கை பார்ப்பவன் - 18

17 January 2024
0
0
0

பின் பனிக் காலம் "பழத்தைப் பார்த்து பூ கேட்டது, 'இத்தனை நாளாய் எங்கு இருந்தாய்?' பூ சொன்னது, 'உன் இதயத்தில்தான் ஒளிந்திருந்தேன்!"' -தாகூர் (வழி தப்பிய பறவைகள் தொகுப்பில் இருந்து) வேலையற்றவனின் பகலு

19

வேடிக்கை பார்ப்பவன் - 19

17 January 2024
0
0
0

இவன் நானாகும் அத்தியாயம் 'நான் இல்லாமல் போகிறேன் ஆனால் வசந்த காலம் என்னுடைய நினைவுகளுடன் இருந்து கொண்டேதானிருக்கும்!' -இறக்கப்போகிற கடைசி நிமிடத்தில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ அன்புள்ள பாலுமகேந்த

20

வேடிக்கை பார்ப்பவன் - 20

17 January 2024
0
0
0

இளவேனிற் காலம் 220 இதற்கு மேல் உருள முடியாது கல் நதியைவிட்டு கரையேறிற்று. இதற்கு மேல் வழ வழப்பாக்க முடியாது கல்லை ஒதுக்கிவிட்டு நதி ஏகிற்று! கல்யாண்ஜி பத்திரிகையில் வேலை செய்தாலும், இவனது தீராக்கா

21

வேடிக்கை பார்ப்பவன -21

17 January 2024
0
0
0

'பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்' "உனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிந்துகொள்வதுதான் உண்மையான ஞானம்!" - சாக்ரடீஸ் இவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு 'சுதந்திரம்'. நூற்றுக்கும் 5. நூற்று

22

வேடிக்கை பார்ப்பவன் 22

18 January 2024
0
0
0

என்ன நடக்கிறது என்று என்ன நடக்கிறது என்று தெரிய மேஜையில் தேநீர் பதளமாய் கவிஞர் தேவநர்கள் இரண்டு சூரியன்" தொழும்பில் இருந்து கோப்பையைப் வைக்கிறேன் நடனமாய் மாறியபடி ஞாயிற்றுக்கிழமைகளை இவன் எந்த வே

23

வேடிக்கை பார்ப்பவன் - 23

18 January 2024
0
0
0

பசித்த புலியின் வேகம் "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" நகுலன் ('நினைவுப் பாதை' நாவலில் இருந்து...) எழுத்தாளர் சுஜாதா இவன் மேல் திருப்பிவிட்ட

24

வேடிக்கை பார்ப்பவன்-24

18 January 2024
0
0
0

நீங்கள் இயக்கிய 'சைக்கோ' திரைப்படத்தில் இடம்பெற்ற பாத்ரூம் கொலைக் காட்சியைப் பார்த்த பிறகு ஒரு மாதமாக என் மகள் குளிக்கவே இல்லை!" என்று ஒரு நாய் என்னிடம் சொன்னாள். நான் அவளிடம் சொன்னேன். 'தயவுசெய்து உங

25

வேடிக்கை பார்ப்பவன் -25

18 January 2024
0
0
0

குட்டிப் புத்தரின் கேள்வி "வாழ்க்கை, ஒரு மகாநதியைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் கரையில் நின்று, என் கண்ணுக்கு பட்டவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்." - எழுத்தாளர் வண்ணநிலவன் இந்த அத்தியாயத்த

26

வேடிக்கை பார்ப்பவன் - 26

18 January 2024
0
0
0

இவன் அவனாகும் அத்தியாயம் 'கீழைக்காட்டு வேம்பு கசந்தது அம்மாவின் சோகம் கேட்டுத்தான்!' -கவிஞர் த.பழமலய் ('சனங்களின் கதை' தொகுப்பில் இருந்து) அந்தப் பையனைக் காப்பாற்றுங்கள். அவன் ஏன் இப்படி இருக்கிறான

27

வேடிக்கை பார்ப்பவன் - 27

18 January 2024
0
0
0

பட்டாம்பூச்சி விற்ற கதை "ஒரு தேர் சக்கரத்தின் அளவு பூர்ண சந்திரன், இன்று ஒரு வீட்டுக் கூரையின் மேல் உதயமானான். தீப்பிடித்துவிட்டதோ என்று நினைத்தேன்!" தி.க.சிவசங்கரன் ('தி.க.சி-யின் நாட்குறிப்புகள்'

28

வேடிக்கை பார்ப்பவன் - 28

18 January 2024
0
0
0

அவையிடத்து முந்தியிருப்பச் செயல் 'ரத்தமும் சதையும் அல்ல... இதயம்தான் எங்களை தந்தை மகனாக இணைத்தது!' - எழுத்தாளர் ஓரான் பாமுக் எம்.ஏ., முடித்ததும், பச்சையப்பன் கல்லூரியிலேயே இவன் எம்.ஃபில்., சேர்ந்தா

29

வேடிக்கை பாறிப்பலன்-29

18 January 2024
0
0
0

'நிஜம்தாள் தாங்க முடியாத பாரம். அந்தப் பாரத்தை இறக்கியைக்க அல்ல, எவ்வளவு எடை என்று பார்த்துக்கொள்ளத்தான் இதை உல்களுக்கு எழுதுகிறேன். வெயிலில் உலர்த்துவது என் ஆகிவிட்டது. எல்லா இடத்திலும்நாளே வெயில் வி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்