shabd-logo

வேடிக்கை பார்ப்பவன் - 7

16 January 2024

3 பார்த்தது 3

பள்ளித் தலமனைத்தும்...

"உண்மையில், பள்ளிக்கூடம் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. திடீரென என் உலகம் மிகவும் பெரிதாகிவிட்டது. வீட்டைவிட்டு தினமும் வெளியே செல்வதற்கு இப்படி ஓர் அற்புதமான உபாயம் இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. ஒவ்வொரு நாளும் அடுத்த நாள் பள்ளிக்குச் செல்வதை நினைத்துக்கொண்டே தூங்கப் போவேன்!"

- மனுஷ்ய புத்திரன்

ஐந்தாம் வகுப்பு முடித்து காஞ்சிபுரத்தில் அந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் இவன் ஆறாம் வகுப்பு சேர்ந்தான். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியைக் கட்டிய ஆண்டர்சன் என்கிற வெள்ளைக்காரர், 1837-ம் ஆண்டு கட்டிய கிறிஸ்துவ மிஷினரி பள்ளி அது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில், கல்வித் துறை இயக்குநராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலு படித்த பள்ளி. களிமண்ணாக உள்ளே நுழைந்த இவனை கவிஞனாக வனைந்து வெளியே அனுப்பியதில் அந்தப் பள்ளிக்கும் பெரும் பங்கு உண்டு.

பள்ளி தொடங்கிய முதல் நாளன்று அப்பாவுடன் சைக்கிளில் சென்ற பயணம், நேற்று நடந்ததுபோல் இப்போதும் இவன் நினைவில் நிற்கிறது. காக்கி டவுசர், வெள்ளைச் சட்டை, சிவப்பு டை அணிந்து, ஷூ மாட்டி சைக்கிளின் பின் இருக்கையில் அமரும் வரை குதூகலமாகத்தான் இருந்தான்.

இவன் கிராமத்தைத் தாண்டியதும், அப்பா, 'நானும் இந்த ஸ்கூல்லதான்டா படிச்சேன். எங்க காலத்துல ரொம்ப ஸ்டிரிக்ட்டா இருந்திச்சு. இங்கிலீஷ்ல கேள்வி கேப்பாங்க. சமாளிச்சிடுவியா?' என்று கேட்டார்.

வேடிச்சை பார்ப்பவன்

இவன் மனதுக்குள் 'ஏ'-வில் இருந்து 'இஸட்' வரை, ஆங்கில எழுத்துகளைச் சொல்லிப் பார்த்துக்கொண்டான். 'என்ன கேள்வி கேட்டாலும் இந்த 26 எழுத்துக்குள்ளதான கேப்பாங்க' என்று நினைத்தபடி, தலையாட்டினான். ஆனால், வடக்கு மாடவீதி, செட்டித் தெரு, ரங்கசாமி குளம், தேரடி வீதி, மூங்கில் மண்டபம் என்று ஒவ்வோர் இடத்தையும் சைக்கிள் கடந்துகொண்டிருந்தபோது முன்பு படித்த கிராமத்துப் பள்ளியைப் பிரிந்த ஏக்கமும், புதிதாகச் சேரப்போகும் பள்ளியின் சூழல் குறித்த அச்சமும், இவனை பொன்வண்டாக்கி, கழுத்தில் நூல் கட்டி, அடிவயிற்றுப் பயத்துடன் அந்தரத்தில் பறக்கவிட்டுக்கொண்டிருந்தது.

இவன் பள்ளி இருந்த தாலுகா அலுவலக வளாகத்துக்குள், அப்பாவின் சைக்கிள் நுழைந்தது. இந்தப் பக்கம் வட்டாட்சியர் அலுவலகம். அதற்குப் பக்கத்தில் காவல் நிலையம். காவல் நிலையத்துக்கு முன்பாக, விபத்துக்குள்ளான நசுங்கிய கார்கள் மழையில் துருப்பிடித்துக்கிடந்தன. கூடவே மோட்டார் சைக்கிள்களும் மிதி வண்டிகளும். அந்த இரும்புக் குவியலில் நசுங்கிக்கிடந்த ஒரு காரில், பலூன் போன்ற ஹாரனை இவனைப் போலவே யூனிஃபார்ம் அணிந்த ஒரு வளர்ந்த பையன் 'பீம்... பாம்' என்று அடித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து, இன்டர்வெல் கேப்பில் விளையாடுவதற்கு நல்ல ஓர் இடம் கிடைத்தது என்று இவன் சந்தோஷப்பட்டான்.

காவல் நிலையத்துக்கு அருகில் இருந்த நீதிமன்ற வாசலில் இரு கைகளில் விலங்குடன் லுங்கி கட்டிய ஒரு கைதி குத்துக்காலிட்டு அமர்ந்திருக்க, அந்தக் கைதியின் வாயில் பீடி ஒன்றைச் செருகி, கான்ஸ்டபிள் ஒருவர் பற்ற வைத்துக்கொண்டிருந்தார். அந்தக் கைதி இரண்டு இழுப்பு, இவர் இரண்டு இழுப்பு என்று சாவகாசமாகப் பேசியபடி பீடி குடிப்பதைப் பார்க்கையில் இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இவன் கிராமத்தில் நண்பர்களுடன் விளையாடும் திருடன் போலீஸ் ஆட்டத்தில், திருடன் எப்போதுமே போலீஸுக்கு எதிரி. 'இப்படியும் நடக்குமா?!' என்று இவன்

மீண்டும் ஆச்சர்யப்பட்டான்.

நீதிமன்றத்துக்கு இடது பக்கம் தீயணைப்பு நிலையம். பக்கத்தில் கருவூலம். இவற்றுக்கு மத்தியில்

இவன் பள்ளி இருந்தது. வாசலில் இறக்கி விட்டுவிட்டு அப்பா சொன்னார். 'பத்திரமாப்

போயிட்டு வா. சாயங்காலம் கேட்ல வெயிட் பண்றேன்!'

மிகப் பெரிய இரும்பு கேட்டைக் கடந்து இவன் உள்ளே நுழைந்தான். எதிரில் தெரிந்த

கட்டடத்தின் சுவற்றில் பாதி அளவுக்கு தாடி வைத்திருந்த நந்த ஒருவரின் ஒவியத்தை

வரைந்திருந்தார்கள். அதற்கு கீழே இருந்த வாசகத்தை இவன் எழுத்துக் கூட்டிப் படித்தான்.

'வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடத்தில் வாருங்கள். இளைப்பாறுதல் தருவேன்'.

இவனுக்கு அந்த வாசகம் பிடித்திருந்தது. இவனை அறியாமல் முதுகில் மாட்டியிருந்த புத்தகப்

பையை ஒருமுறை தொட்டுப் பார்த்துக்கொண்டான்.

அந்த ஓவியத்தில் வரைந்திருந்த நபரின் முகத்தில் ஒரு பெண் சாயல் இருந்தது. தீட்சண்யமான

கண்களுடன் அந்த முகத்தில் தெரிந்த ஏதோ ஒரு கனிவு, இவனுக்கு இவன் தாய் முகத்தை

ஞாபகப்படுத்தியது. அவர்தான் 'யேசு' என்றும், 'கிறிஸ்துவர்களின் கடவுள்' என்றும்

பின்னாட்களில் இவன் அறிந்துகொண்டான். அந்த ஓவியத்துக்குக் கீழே ஒரு பலகையில், 'இது

என் பள்ளி. என் பள்ளி என்னால் பெருமை அடைய வேண்டும்' என்று எழுதியிருந்தது. இவன்

கர்த்தரின் கரங்களைப் பிடித்தபடி உள்ளே நடந்துபோனான்.

பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை கப்பல்களில் கொண்டுவந்து சுண்ணம் அரைப்போரும்,

சுண்ணாம்பு இடிப்போரும் இரவு பகல் உழைக்க, ஆண்டர்சன் துரை என்கிற வெள்ளைக்காரன்

கட்டிய கட்டடம் இவன் முன் விரிந்தது. ஆங்கிலேயன் கட்டிய பள்ளி என்பதால், ஆங்கிலம்

இவனுக்கு விரோதியாக இருந்தது. அச்சமும் பயமும் இவன் பாடங்களாக இருந்தன.

பள்ளிக்கூடத்தைப் பற்றி நினைக்கையில் வகுப்பறைகளைவிட, வெளியே இருக்கிற மரங்களும்

மைதானமும்தான் இவன் நினைவுக்கு வருகின்றன. இவன் பள்ளி மைதானத்தில் நட்டுவைத்த

குடைகள் போல அசோக மரங்கள் வரிசையாக நின்றிருக்கும். அசோக மரத்து பழங்களுக்கும்

நாவல் பழங்களுக்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கச் சொன்னால், ஆண்டவனால் கூட

கண்டுபிடிக்க முடியாது. இரண்டின் நிறமும் வடிவமும் ஒரே கிளையில் கருவானவையோ என வியக்கவைப்பவை. மீசை வைத்து பென்னாம்பெரிய மிதி வண்டியில் வரும் பெரிய வகுப்பு மாணவர்கள், முதல் நாள் பள்ளியில் நுழைந்த அன்று நாவல் பழம் என்று ஏமாற்றி, அசோக பழங்களைக் கொடுத்து இவனிடம் இருந்து காசு பறித்தார்கள். முதல்முறையாக வகுப்பறை சொல்லித்தராத வணிகவியல் இவனுக்கு அறிமுகமானது.

ஒருமுறை, கள்ளச்சாராய கேன்களைக் கையகப்படுத்தி காவல் நிலையத்தின் வாசலில் வைத்து தீ ஊற்றி எரித்தார்கள். அந்தக் காற்றின் வாசம் வேதியியலை இவனுக்கு அறிமுகப்படுத்தியது.

இப்படி இப்படி, ஐந்து பைசாவுக்கு பத்து கடலைகள் கொடுக்கும் பாட்டிக் கடை கணிதத்தையும், உடைந்த அரச மரக் கிளைப் பொந்திலிருந்து அவ்வப்போது பகலில் எட்டிப் பார்த்து, திரும்பவும் பொந்துக்குள் நுழையும் ஆந்தை விலங்கியலை யும், ஆசிரியர்களிடம் நல்ல பெயர் எடுக்க, கிராமத்து மாணவர்கள் கிளிப் பச்சை நிறத்துடன் ஒடித்து வந்து நீட்டும் மூங்கில் கழிகள் தாவரவியலையும், படம் வரைந்து பாகம் குறித்த கழிவறைகள் உயிரியலையும், மேற்கூரைக் கண்ணாடிச் சட்டகத்தில் இருந்து உள் நுழைந்து, கரும்பலகையில் எழுதிக்கொண்டிருக்கும் சந்திரசேகர் மாஸ்டரின் முதுகில் விழுந்து, c=3X108 m/sec வேகத்தில் பயணிக்கும் சூரிய வெளிச்சம் இயற்பியலையும், பள்ளிக்குப் பின்புறம் பாலித்தீன் கவர்கள் மிதந்தோடும் செங்கழு நீரோடையின் பின்னணியில் ஒன்றில் இருந்து ஒன்று கிளை பிரியும் ஒற்றையடிப் பாதைகள் புவியியலை யும், முன்புக்கும் முன்பு பத்தாம் வகுப்புத் தேர்வில் ஃபெயிலானதால் தூக்குப் போட்டு இறந்த பழைய மாணவன் ஒருவனைப் பற்றிய வதந்திகள் வரலாற்றையும், As I am suffering from fever' என்று தொடங்கி எழுத்துப் பிழைகளோடு எழுதப்படும் விடுமுறைக் கடிதங்கள் ஆங்கிலத்தையும் அறிமுகப்படுத்தின.

எல்லோருக்கும் போலவே இவனுக்கும் இவன் பள்ளி, வகுப்பறைக்கு வெளியேதான் பாடங்களைக் கற்றுத்தந்தது. ஆயினும் என்ன? கற்றுத்தர மட்டுமா பள்ளிகள்? பள்ளியைப் பற்றி நினைக்கையில், ப்ளஸ் டூ படிக்கையில் இதே ஆனந்த விகடனில் இவன் எழுதிய கவிதைதான் இவனுக்கு ஞாபகம் வருகிறது. 'பள்ளி' என்ற தலைப்பிலான அந்தக் கவிதை,

'தண்டவாளத் துண்டு காற்றில் ஒலி எழுப்ப ஆரம்பம் அதன் இயக்கம்.

நீராருங் கடலுடுத்த பாடத் துவங்குகையில் டியூஷன் எடுத்த களைப்பில் கொட்டாவி விடும் ஆசிரியர்கள்.

மா பெஞ்சில் பெயர் செதுக்கி முத்திரை பதிக்கும் மாணவர்கள். இன்ஸ்பெஷனுக்காய் வாங்கிய கட்டுரை நோட்டு அட்டையுடன் காத்திருக்க பாடத்தில் இல்லாத பாலியல் கல்வி பாத்ரூமில் யாரும் மெனக்கெடாமலே வருடந்தோறும் உருவாகிறார்கள் சில அறிவாளிகளும் முட்டாள்களும்'

இவன் அறிவாளியா... முட்டாளா என்று இவனுக்குத் தெரியாது. சில வருடங்களுக்கு முன்பு, இவன் பள்ளியில் நடந்த தமிழ் மன்றத் தொடக்க விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக இவனை அழைத்திருந்தார்கள். துருப்பிடித்த பள்ளியின் இரும்புக் கிராதிக் கேட்டினைத் திறந்து இவனை வரவேற்றார்கள். முன்பு ஒவ்வொரு முறை அதைக் கடந்து உள்ளே நுழையும்போதும் அடிவயிற்றில் இருந்து மேலெழும் ஒரு பயம் தன் பழைய பாசத்துடன் மேலே வந்தது. பரிசுத்த ஆவியின் பெயரால் இவன் பள்ளிக்குள் நுழைந்தான். காலை பிரார்த்தனை நேரத்தில் 'ஜபம் செய்வோம்' என்ற குரல் கேட்டு எத்தனை முறை மண் தரையில் முட்டிப் போட்டிருப்பான். அந்த மண் துகள்கள் இன்று எங்கு போய் உதிர்ந்தன?

'இதோ 10-ம், 12-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதப்போகும் மாணவர்களை உமது பாதங்களில் ஒப்படைக்கிறோம் எமது ராஜ்ஜா... அவர்கள் படித்தது மனதில் பசுமரத்தில் அடித்த ஆணிபோல் பதியவும், அவர்களால் நமது பள்ளி மென்மேலும் உயரவும் ஆசீர்வதியும் எம் ராஜ்ஜா...' என்கிற பால்பாண்டி மாஸ்டரின் குரலும், அதை தொடர்ந்து ஒலிக்கிற 'ஆத்துமமே என் முழு உள்ளமே...' என்ற பாடலும் காற்றின் அலைகளில் கரையாமல் ஒலிக்கின்றன.

பள்ளியின் அப்போதைய தலைமை ஆசிரியரும், சிறந்த சிறுகதை எழுத்தாளருமான அ.எக்பர்ட் சச்சிதானந்தம், நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க, இவன் தமிழ் ஆசிரியர்களான புலவர் வே.கணேசன், சாலமன் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்க விழா முடிந்தது.

மாணவர்கள் விடைபெற்றுப் போன பின் மாலையில், இவன் படித்த ஒவ்வொரு வகுப்பிலும் மீண்டும் நுழைகிறான். ஆதிக் கருவறையின் இருளும் ஒளியும் கலந்த அறைகள். 8-ம் வகுப்பு 'அ' பிரிவில் நுழையும்போது மட்டும், இவனை அறியாமல் தேகம் சில்லிடுகிறது. அதோ இவன் அமர்ந்து எழுதிய பர்மா தேக்கு மேஜை. மீண்டும் இவன் பால்ய வயதுக்குள் சென்று, காக்கி கால் சட்டையும், வெள்ளைச் சட்டையும் அணிந்து அமர்கிறான். பிரில் இங்க் கரை படிந்த பழைய மேஜையில் இவன் எப்போதோ உணவு இடைவேளையின்போது, காம்பஸ் முனைகளால் கிறுக்கிய N.M.K. என்ற எழுத்துகள் இன்னும் அழியாமல் இருக்கின்றன. ஒரு கணம் இனம்புரியாத உணர்வுக்குள் மூழ்கித் திரும்புகிறது மனது. இதோ இவன் தொலைத்த பால்யத்தின் மிச்சம். பதின் வயதுகளின் ஒரு துண்டு. இவன் கடவுளாக இருந்தபோது இவனுக்குள் இருந்த

சாத்தான் உரித்த பாம்புச் சட்டை.

எல்லோரும் வழியனுப்ப, பள்ளியைவிட்டு வருகையில் தாலுகா ஆபீஸ் மைதானத்தில் அதே

பழைய காசியண்ணன், கொஞ்சம் முதிர்ந்த தோற்றத்துடன் ஐஸ் விற்றுக்கொண்டிருந்தார்.

எத்தனையோ முறை அவரிடம் கடன் சொல்லி குச்சி ஐஸும் சேமியா ஐஸும் வாங்கிச்

சாப்பிட்டிருக்கிறான்.

காரை விட்டு இறங்கி இவனை அறிமுகப்படுத்திக்கொண்டான். அவர் முன் நிழலாடிய பல பிஞ்சு

முகங்களில் இவன் முகமும் பெயரும் ஞாபகத்துக்கு வரும் என்று எப்படி இவன் எதிர்பார்க்க

முடியும்?

'அண்ணே ஒரு சேமியா ஐஸ் குடுங்கண்ணே' என்றான்.

'அதெல்லாம் இப்ப யாரு தம்பி கேக்கிறாங்க? மேங்கோ, ஆரஞ்சு ரெண்டுதான் இருக்கு. உனக்கு என்ன வேணும்?" என்றார்.

'ஒரு மேங்கோ குடுங்கண்ணே...' என்று கூறி 100 ரூபாயை நீட்டினான்.

கொடுத்த ரூபாயைத் திருப்பித் தந்துவிட்டு, 'சினிமாவுல பாட்டெல்லாம் எழுதறனு சொல்ற. அண்ணன மறக்காம வந்து ஐஸ் கேட்ட பாரு. அது ஒண்ணே போதும் தம்பி. காசு பணமெல்லாம் வேணாம்' என்று சொல்லிவிட்டு தன் முன் இருந்த ஐஸ் பெட்டிக்குள் குனிந்தார். அதில், 'காலம்' கட்டிக் கட்டியாக உறைந்து கிடந்தது!

நா. முத்துக்குமார் மூலம் மேலும் புத்தகங்கள்

1

வேடிக்கை பார்ப்பவன் -2

15 January 2024
0
0
0

குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்! ஜென் கவிதை சனி, ஞாயிறு தவிர்த்து, தினமும் காலையில் இவனும் இவன் மகனும் பள்ளிக்குக் கிளம்புவார்கள். மகன் படிக்கும் பள்ளி ய

2

வேடிக்கை பார்ப்பவன் -1

15 January 2024
0
0
0

வெந்து தணிந்தது காடு முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானு  ம் இட்ட தீ மூள்க மூள்கவே! - பட்டினத்தார் ஒரு மிகப் பெரிய பொருட்காட்சிசாலையாக இந்தப்

3

வேடிக்கை பார்ப்பவன் - 3

15 January 2024
0
0
0

'என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!' - கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் அம்மா இறந்த பிறகு, இவன் அப

4

வேடிக்கை பார்ப்பவன் - 4

15 January 2024
0
0
0

'அவன், குதிங்காலிட்டு உட்கார்ந்தான்; சப்பணமிட்டு உட்கார்ந்தான்; ஒரு காலை நீட்டி உட்கார்ந்து பார்த்தான்; வயிற்றோடு முழங்காலைச் சேர்த்து ஒட்டி உட்கார்ந்து பார்த்தான். இப்படியும் அப்படியுமாக எப்படி உட்கா

5

வேடிக்கை பார்ப்பவன் - 5

15 January 2024
0
0
0

சமூகம் என்பது நான்கு பேர்.' - ஜெயகாந்தன் 5, 4, 3, 2, 1, 0 என்று தலைகீழாக கவுன்ட் டவுன் சொல்லி, ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புவதைப் போலத்தான் தினமும் இவன் தன் மகனை பள்ளிக்கு அனுப்புவதும். திருவாளர் ம

6

வேடிக்கை பார்ப்பவன் - 6

16 January 2024
0
0
0

வயதென்னும் ரயில் வண்டி 'அந்த மாபெரும் வெற்றிடத்தில் முன்னும் இல்லை, பின்னும் இல்லை பறவையின் பாதை கிழக்கையும் மேற்கையும் அழித்துவிடுகிறது.' ஜென் தத்துவம் பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு 10 நிமிட

7

வேடிக்கை பார்ப்பவன் - 7

16 January 2024
0
0
0

பள்ளித் தலமனைத்தும்... "உண்மையில், பள்ளிக்கூடம் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. திடீரென என் உலகம் மிகவும் பெரிதாகிவிட்டது. வீட்டைவிட்டு தினமும் வெளியே செல்வதற்கு இப்படி ஓர் அற்ப

8

வேடிக்கை பார்ப்பவன்-8

16 January 2024
0
0
0

 எமக்குத் தொழில் கவிதை 'முதலாளிமார்கள் விரல் எல்லாம் மோதிரங்கள் மனசெல்லாம் தந்திரங்கள்!' - கவிஞர் விக்ரமாதித்யன் ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும், இவனுக்குள் கோடீஸ்வரக் கனவு ஒன்று பூக்கத் தொடங்கும்

9

வேடிக்கை பார்ப்பவன்-9

16 January 2024
0
0
0

புன்னகைக்க மறந்த கதை "கண் சிமிட்டும் நேரத்தில் ஓர் உன்னதத் தருணம் புகைப்படம் ஆகிறது. அந்தத் தருணத்துக்கான காத்திருத்தலே, புகைப்படக் கலை. இருளை உணர்ந்தவனே, ஒளியில் வாழக் கற்றுக்கொள்கிறான்!" -பி.சி.ஸ்

10

வேடிக்கை பார்ப்பவன் - 10

16 January 2024
0
0
0

இவன், இவனான கதை! "இப்பொழுதும் அங்குதான் இருக்கிறீர்களா?" என்று கேட்டார். "எப்பொழுதும் அங்குதான் இருப்பேன்" என்றேன். - நகுலன் ('கோட் ஸ்டாண்ட்' கவிதைகள் தொகுப்பிலிருந்து...) போலந்து திரைப்பட இயக்கு

11

வேடிக்கை பார்ப்பவன் - 11

16 January 2024
0
0
0

தீராத விளையாட்டு வாழ்க்கையின் இருக்கலாம். கேள்விகள் ஆனால், எளிமையாகத்தான் இருக்கின்றன!" வேடிக் கடினமாக விடைகள் 211 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் "நா"ன்தான் டாம். நீங்க ஜெர்ரியாம். ஓடிப்போயி ஒளிஞ்சிக்குங்க.

12

வேடிக்கை பார்ப்பவன் - 12

16 January 2024
0
0
0

வீடென்பது யாதெனில்... "எனது புறநகர் குடியிருப்பு வயல்களின் சமாதி என்று நினைவுபடுத்தியவை தவளைகளே!" - சுகுமாரன் - 'பூமியை வாசிக்கும் சிறுமி' கவிதைத் தொகுப்பில் இருந்து... இன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில

13

வேடிக்கை பார்ப்பவன் - 13

16 January 2024
0
0
0

நிலாக் காலம் 'எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ? எந்த அழகை எந்த விழியில் கொண்டுசெல்வோமோ? இந்த நாளை வந்த நாளில் மறந்துபோவோமோ?' -கவியரசு கண்ணதாசன் ('பசுமை நிறைந்த நினைவுகளே...' பாடலில் இருந்து)

14

வேடிக்கை பார்ப்பவன் - 14

17 January 2024
0
0
0

சாலைகளின் பாடல் "நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சினிமா பார்ப்பதைப் போலத்தான். ஆனால், படம் முடிந்த பின் க்ளைமாக்ஸ் என்ன என்பது படம் பார்த்தவருக்குத் தெரியாது!" -ரோமன் பொலன்ஸ்கி, போலந்து திரைப்பட இயக்குந

15

வேடிக்கை பார்ப்பவன் - 15

17 January 2024
0
0
0

கனவின் கைப்பிடியில் "கட்டடங்களின் விரிசல்களுக்கு இடையே வேர் விட்டுப் பூக்கும் ரோஜாச் செடிகளை நீங்கள் பார்த்ததுண்டா? இயற்கை விதிகளைத் தவறாக்கி கால்கள் இல்லாமல் நடக்க அவை கற்றுக்கொடுக்கின்றன; அவை கனவுக

16

வேடிக்கை பார்ப்பவன் - 16

17 January 2024
0
0
0

குறுக்கு வெட்டுத் தோற்றம் தாமிரக் காசை தண்டவாளத்தில் வெச்சி நாம பதுங்க ரயில் நசுக்கும் - ராமையா கால ரயிலோட நாமெல்லாம் காசானோம் வாலிபம் போய் ஆச்சே வயசு! பார்ப்பவன் -வெ.சேஷாசலம் ('ஆகாசம்பட்டு' தொகுப்

17

வேடிக்கை பார்ப்பவன் - 17

17 January 2024
0
0
0

முன்பனிக்காலம் "நீ கிளையைக் கவனமாக வரைய முடியுமானால், உன்னால் காற்றின் ஒலியைக் கேட்க முடியும்!" - ஜென் தத்துவம் (எஸ்.ராமகிருஷ்ணனின் ஜென் கவிதைகள் நூலில் இருந்து) சினிமா, விநோதமான ஒரு ரங்கராட்டினம்.

18

வேடிக்கை பார்ப்பவன் - 18

17 January 2024
0
0
0

பின் பனிக் காலம் "பழத்தைப் பார்த்து பூ கேட்டது, 'இத்தனை நாளாய் எங்கு இருந்தாய்?' பூ சொன்னது, 'உன் இதயத்தில்தான் ஒளிந்திருந்தேன்!"' -தாகூர் (வழி தப்பிய பறவைகள் தொகுப்பில் இருந்து) வேலையற்றவனின் பகலு

19

வேடிக்கை பார்ப்பவன் - 19

17 January 2024
0
0
0

இவன் நானாகும் அத்தியாயம் 'நான் இல்லாமல் போகிறேன் ஆனால் வசந்த காலம் என்னுடைய நினைவுகளுடன் இருந்து கொண்டேதானிருக்கும்!' -இறக்கப்போகிற கடைசி நிமிடத்தில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ அன்புள்ள பாலுமகேந்த

20

வேடிக்கை பார்ப்பவன் - 20

17 January 2024
0
0
0

இளவேனிற் காலம் 220 இதற்கு மேல் உருள முடியாது கல் நதியைவிட்டு கரையேறிற்று. இதற்கு மேல் வழ வழப்பாக்க முடியாது கல்லை ஒதுக்கிவிட்டு நதி ஏகிற்று! கல்யாண்ஜி பத்திரிகையில் வேலை செய்தாலும், இவனது தீராக்கா

21

வேடிக்கை பார்ப்பவன -21

17 January 2024
0
0
0

'பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்' "உனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிந்துகொள்வதுதான் உண்மையான ஞானம்!" - சாக்ரடீஸ் இவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு 'சுதந்திரம்'. நூற்றுக்கும் 5. நூற்று

22

வேடிக்கை பார்ப்பவன் 22

18 January 2024
0
0
0

என்ன நடக்கிறது என்று என்ன நடக்கிறது என்று தெரிய மேஜையில் தேநீர் பதளமாய் கவிஞர் தேவநர்கள் இரண்டு சூரியன்" தொழும்பில் இருந்து கோப்பையைப் வைக்கிறேன் நடனமாய் மாறியபடி ஞாயிற்றுக்கிழமைகளை இவன் எந்த வே

23

வேடிக்கை பார்ப்பவன் - 23

18 January 2024
0
0
0

பசித்த புலியின் வேகம் "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" நகுலன் ('நினைவுப் பாதை' நாவலில் இருந்து...) எழுத்தாளர் சுஜாதா இவன் மேல் திருப்பிவிட்ட

24

வேடிக்கை பார்ப்பவன்-24

18 January 2024
0
0
0

நீங்கள் இயக்கிய 'சைக்கோ' திரைப்படத்தில் இடம்பெற்ற பாத்ரூம் கொலைக் காட்சியைப் பார்த்த பிறகு ஒரு மாதமாக என் மகள் குளிக்கவே இல்லை!" என்று ஒரு நாய் என்னிடம் சொன்னாள். நான் அவளிடம் சொன்னேன். 'தயவுசெய்து உங

25

வேடிக்கை பார்ப்பவன் -25

18 January 2024
0
0
0

குட்டிப் புத்தரின் கேள்வி "வாழ்க்கை, ஒரு மகாநதியைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் கரையில் நின்று, என் கண்ணுக்கு பட்டவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்." - எழுத்தாளர் வண்ணநிலவன் இந்த அத்தியாயத்த

26

வேடிக்கை பார்ப்பவன் - 26

18 January 2024
0
0
0

இவன் அவனாகும் அத்தியாயம் 'கீழைக்காட்டு வேம்பு கசந்தது அம்மாவின் சோகம் கேட்டுத்தான்!' -கவிஞர் த.பழமலய் ('சனங்களின் கதை' தொகுப்பில் இருந்து) அந்தப் பையனைக் காப்பாற்றுங்கள். அவன் ஏன் இப்படி இருக்கிறான

27

வேடிக்கை பார்ப்பவன் - 27

18 January 2024
0
0
0

பட்டாம்பூச்சி விற்ற கதை "ஒரு தேர் சக்கரத்தின் அளவு பூர்ண சந்திரன், இன்று ஒரு வீட்டுக் கூரையின் மேல் உதயமானான். தீப்பிடித்துவிட்டதோ என்று நினைத்தேன்!" தி.க.சிவசங்கரன் ('தி.க.சி-யின் நாட்குறிப்புகள்'

28

வேடிக்கை பார்ப்பவன் - 28

18 January 2024
0
0
0

அவையிடத்து முந்தியிருப்பச் செயல் 'ரத்தமும் சதையும் அல்ல... இதயம்தான் எங்களை தந்தை மகனாக இணைத்தது!' - எழுத்தாளர் ஓரான் பாமுக் எம்.ஏ., முடித்ததும், பச்சையப்பன் கல்லூரியிலேயே இவன் எம்.ஃபில்., சேர்ந்தா

29

வேடிக்கை பாறிப்பலன்-29

18 January 2024
0
0
0

'நிஜம்தாள் தாங்க முடியாத பாரம். அந்தப் பாரத்தை இறக்கியைக்க அல்ல, எவ்வளவு எடை என்று பார்த்துக்கொள்ளத்தான் இதை உல்களுக்கு எழுதுகிறேன். வெயிலில் உலர்த்துவது என் ஆகிவிட்டது. எல்லா இடத்திலும்நாளே வெயில் வி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்