shabd-logo

வேடிக்கை பார்ப்பவன் - 23

18 January 2024

8 பார்த்தது 8

பசித்த புலியின் வேகம்

"மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!"

நகுலன்

('நினைவுப் பாதை' நாவலில் இருந்து...)

எழுத்தாளர் சுஜாதா இவன் மேல் திருப்பிவிட்டிருந்த புகழின் வெளிச்சம் தாங்காமல் இவன் திக்குமுக்காடினான்.

பச்சையப்பன் கல்லூரிக்குள் நுழையும்போதே, தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் இவனைச் சூழ்ந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள். தத்துவத்துறைப் பேராசிரியர் பெரியார்தாசன், இவன் வகுப்புக்கே தேடி வந்து வாழ்த்து சொன்னபோது இவன் அவரிடம், "சார்... உங்க பையன் வளவனும் நானும் ஒண்ணா கவிதைப் போட்டியில் கலந்துப்போம்" என்றான்.

"அப்படியா! அவன் கவிதையெல்லாம் எழுதுவானா?!" என்று ஆச்சரியப்பட்டார்.

இந்தக் காலகட்டங்களில் இவன் காற்றில் மிதக்கும் பறவையின் இறகைப்போல திரிந்துகொண்டே இருந்தான். அப்படி இவன் இறகு, சென்னை தி.நகரில் இருந்த

73, அபிபுல்லா சாலையில் தரையிறங்கியது. அது. அண்ணன் அறிவுமதியின் அலுவலகம். அப்போது அவர்'உள்ளேன் ஐயா' என்ற படத்தைத் தொடங்கிவிட்டு, கலைப்புலி எஸ்.தாணுவின் 'சிறைச்சாலை' படத்துக்கு வசனமும் பாடல் களும் எழுதிக்கொண்டிருந்தார். ஏற்கெனவே அவர், இவனுக்கு காஞ்சிபுரம் இலக்கிய வட்டம் மூலம் அறிமுகமாகி இருந்ததால், அண்ணனின் அரவணைப்புக்குள் அடைக்கலமானான்.

அறிவுமதி அண்ணன், இவனுக்கு ஆண் தாயானார். 73, அபிபுல்லா சாலை, இவனுக்கு பல்வேறு முகவரிகளைத் திறந்துவைத்தது. அந்த ராஜபாட்டையில் அறிவுமதி அண்ணனின் கைபிடித்து நடந்துபோனான்.

"நீ இயல்பாவே நல்ல கவிஞன். பாடல்கள் எழுதப் பயிற்சி எடுத்துக்கோ. அது உனக்குச் சுலபமா கை வரும்" என்று அறிவுமதி அண்ணன் ஆசை காட்ட, இவன் விளையாட்டாக எழுத ஆரம்பித்து, புலி வாலைப் பிடித்த கதையாக இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கிறான். பசித்த புலி ஒன்றின்

வேகத்தோடு இவன் திரிந்த காலங்கள் அவை.

அறிவுமதி அண்ணனின் அலுவலகத்திலேயே 'உள்ளேன் ஐயா' படத்தின் இசையமைப்பாளர் சாந்தகுமாரும் தங்கியிருந்தார். தினமும் ஐந்து, ஆறு மெட்டுகளை அவர் போட்டுவைத்திருக்க, கல்லூரி முடிந்து மாலை வேளைகளில் இவன் மெட்டுகளுக்குப் பாடல் அவரது எழுதிக் கொடுப்பான். மெலடி மெட்டுகளுக்கு எத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும், துள்ளிசை மெட்டுகளுக்கு எப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். மரபுக்கவிதைக்கும் திரையிசைப் பாடல்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன... என்று சாந்தகுமார் அண்ணனும், அறிவுமதி அண்ணனும் இவனுக்குப் புரியவைத்தார்கள். இப்படி முதல் பாடல் எழுதி திரையில் வெளிவருவதற்கு முன்பாகவே, இவன் 3,000- க்கும் மேற்பட்ட அவரது மெட்டுகளுக்கு பாடல்கள் எழுதிப் பயிற்சி பெற்றான்.

அறிவுமதி அண்ணனின் அலுவலகம், கவிதைப் பறவைகளின் வேடந்தாங்கல். அங்குதான் இவன் நேசித்த பல கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் சந்தித்தான். அவர்களில் முக்கியமானவர், கவிஞர், கலை இலக்கிய விமர்சகர் இந்திரன்.

கவிஞர் இந்திரன் கோடம்பாக்கத்தில் குடியிருந்தார். வங்கிப் பணி முடிந்து அவர் மாலை வீட்டுக்கு வருகையில், இவன் அன்று எழுதிய புத்தம்புதுக் கவிதையுடன் வாசலில் காத்திருப்பான். அவரும் ஆர்வத்துடன் இவன் கவிதையைப் படித்துவிட்டு, அந்தக் கவிதை தமிழ்க் கவிதை வரலாற்றில் ஏன் புதியதாக இருக்கிறது அல்லது ஏன் பழையதாக இருக்கிறது என்று தர்க்கரீதியாக தன் விளக்கத்தை முன்வைப்பார்.

அறிவுமதி அண்ணன் இவனை கவியரங்கங்களுக்கு அறிமுகப்படுத்தினார். கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் மு.மேத்தா, கவிஞர் இன்குலாப், கவிஞர் தணிகைச் செல்வன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிஞர் சுரதா... என பல்வேறு கவிஞர்களின் தலைமையில் இவன் கவிதை படித்தான்.

ஒவ்வொரு கவிஞரிடம் இருந்தும் இவன் வெவ்வேறு வித்தைகளைக் கற்றான். கவிக்கோ அப்துல்

ரகுமான், கஜல் கவிதைகளில் வித்தகர். 50 வருடங்களுக்கு முன்பு எழுதிய கவிதைகளைக்கூட

பத்திரப்படுத்தி வைத்திருப்பார். கவிஞர் மு.மேத்தா எளிமையான அங்கதத்துடன் வரிகள்

படைத்து கைதட்டல்களை பாக்கெட்டில் அடைத்துக் கொள்வார். கவிஞர் இன்குலாபும்

தணிகைச் செல்வனும் இருக்கும் மேடைகளில் அனல் பறக்கும். ஈரோடு தமிழன்பனின்

உச்சரிப்பும் உவமைகளும் ஒன்றுடன் ஒன்று போட்டி போடும். உவமைக் கவிஞர் சுரதாவை

இவன் சந்தித்தது ஒரு பேருந்து பயணத்தில். அப்போது அவர் சென்னையில் இருந்த ஒவ்வொரு

சிலைக்கும் கவியரங்கம் நடத்திக்கொண்டிருந்தார். அவருடன் இணைந்து இவன் ஒவ்வொரு

சிலையின் வரலாற்றையும் அறிந்துகொண்டு கவிதை படைத்தான்.

அப்போது சென்னை தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியில் 'வனம்' என்றோர் அமைப்பு, பேராசிரியர் பாலுச்சாமி என்கிற பாரதிபுத்திரன் தலைமையில் இயங்கிவருவது இவன் கவனத்துக்கு வந்தது. வெள்ளிக்கிழமைதோறும் மாலை 4 மணிக்கு பேராசிரியர் பாரதிபுத்திரன் தலைமையில், கிறிஸ்துவக் கல்லூரியில் படிக்கும் கவிதை எழுதும் மாணவர்களும், பேராசிரியர் களும், வெளியில் இருந்து வரும் கவிதை ஆர்வ லர்களும், கிறிஸ்துவக் கல்லூரியின் மரங்கள் அடர்ந்த வனத்தில் வட்டமாக அமர்ந்து, தாங்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கும் நிகழ்வு அது.

'வனம்', இவன் கவிதைப் பார்வையை மேலும் விரிவுபடுத்தியது. வாரம் தவறாமல், வெள்ளியன்று பச்சையப்பன் கல்லூரியில் இருந்து புறப்பட்டு வனத்தில் கலந்துகொள்வான். இவன் எழுதிய கவிதையை உரத்தக் குரலில் படித்துக்காட்டியதும், "முத்து... இப்படி ஒரு கவிதையைப் படிச்சிருக்காரு. இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?" என்று பாரதிபுத்திரன் விமர்சனத்தை ஆரம்பித்துவைக்க, ஒவ்வொருவரும் தங்கள் கருத்தைச் சொல்வார்கள்.

அப்படி ஒரு வனத்தின் சந்திப்பில் இவன் ஒரு கவிதையைப் படித்தான். எல்லோரும் சிறப்பாக இருக்கிறது என்று கருத்துத் தெரிவிக்க, தாடி வைத்த ஓர் இளைஞன் மட்டும், "இந்தக் கவிதை எனக்குப் புடிக்கல" என்று அதற்கான காரணங்களை விளக்கிக்கொண்டிருந்தான். அந்த இளைஞன் கிறிஸ்துவக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவன் என்று இவன் பின்னர் அறிந்துகொண்டான்.

அடுத்த வார 'வனம்' சந்திப்பில், இவன் மீண்டும் ஒரு கவிதையைப் படித்தான்.

'நான் ஏன் நல்லவனில்லை

என்பதற்கான

மூன்று குறிப்புகள்,

ஒன்று

நான் கவிதை எழுதுகிறேன்

இரண்டு

அதைக் கிழிக்காமல் இருக்கிறேன்

மூன்று

உங்களிடம் படிக்கக் கொடுக்கிறேன்!'

என்று படித்து முடித்ததும், எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். ஒருசிலர் ""இந்தக் கவிதை என்ன சொல்கிறது?' என்று புரிய வில்லை" என்றார்கள்.

அப்போது இவன் சென்ற வாரம் பார்த்த தாடி வைத்த இளைஞன் பேசத் தொடங்கினான்."இந்தக் கவிதை தமிழில் எழுதப்பட்ட ஆகச் சிறந்த கவிதைகளில் ஒன்று" என்று அதற்கான விளக்கத்தை அவன் விளக்கிக்கொண்டிருந்தான்.

'வனம்' முடிந்ததும், இவன் அவனிடம் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டான். அந்த நண்பன்,

இவனை தன் விடுதி அறைக்கு அழைத்துச் சென்றான். இவனைப் போலவே அவனது அறையும்

புத்தகங்களால் நிரம்பியிருப்பது கண்டு, இவனுக்கு அவன் மேல் மதிப்பு கூடியது.

அடுத்தடுத்த வனத்தின் சந்திப்புகளில், அந்த நட்பு வலுப்பெற்றது. வெள்ளி மாலை 'வனம்' முடிந்து, சனி... ஞாயிறு என அவன் அறையிலேயே இவன் தங்கத் தொடங்கினான். கவிதைகளும் ரஷ்ய இலக்கியமுமாகக் கழிந்த பொழுதுகள் அவை.

அவன் பின்னாட்களில் தங்கர் பச்சானிடமும், இந்தி இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷியிடமும், பாலு மகேந்திராவிடமும் பணியாற்றி, 'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்' என்று இரண்டு படைப்பு களை உலக சினிமாவுக்கு தமிழ் சினிமாவின் பங்களிப்பாக அளித்தான்.

அந்த நண்பன் 'ராமசுப்பு' என்று இவன் அன்போடு அழைக்கிற இயக்குநர் ராம்!

நா. முத்துக்குமார் மூலம் மேலும் புத்தகங்கள்

1

வேடிக்கை பார்ப்பவன் -2

15 January 2024
0
0
0

குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்! ஜென் கவிதை சனி, ஞாயிறு தவிர்த்து, தினமும் காலையில் இவனும் இவன் மகனும் பள்ளிக்குக் கிளம்புவார்கள். மகன் படிக்கும் பள்ளி ய

2

வேடிக்கை பார்ப்பவன் -1

15 January 2024
0
0
0

வெந்து தணிந்தது காடு முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானு  ம் இட்ட தீ மூள்க மூள்கவே! - பட்டினத்தார் ஒரு மிகப் பெரிய பொருட்காட்சிசாலையாக இந்தப்

3

வேடிக்கை பார்ப்பவன் - 3

15 January 2024
0
0
0

'என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!' - கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் அம்மா இறந்த பிறகு, இவன் அப

4

வேடிக்கை பார்ப்பவன் - 4

15 January 2024
0
0
0

'அவன், குதிங்காலிட்டு உட்கார்ந்தான்; சப்பணமிட்டு உட்கார்ந்தான்; ஒரு காலை நீட்டி உட்கார்ந்து பார்த்தான்; வயிற்றோடு முழங்காலைச் சேர்த்து ஒட்டி உட்கார்ந்து பார்த்தான். இப்படியும் அப்படியுமாக எப்படி உட்கா

5

வேடிக்கை பார்ப்பவன் - 5

15 January 2024
0
0
0

சமூகம் என்பது நான்கு பேர்.' - ஜெயகாந்தன் 5, 4, 3, 2, 1, 0 என்று தலைகீழாக கவுன்ட் டவுன் சொல்லி, ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புவதைப் போலத்தான் தினமும் இவன் தன் மகனை பள்ளிக்கு அனுப்புவதும். திருவாளர் ம

6

வேடிக்கை பார்ப்பவன் - 6

16 January 2024
0
0
0

வயதென்னும் ரயில் வண்டி 'அந்த மாபெரும் வெற்றிடத்தில் முன்னும் இல்லை, பின்னும் இல்லை பறவையின் பாதை கிழக்கையும் மேற்கையும் அழித்துவிடுகிறது.' ஜென் தத்துவம் பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு 10 நிமிட

7

வேடிக்கை பார்ப்பவன் - 7

16 January 2024
0
0
0

பள்ளித் தலமனைத்தும்... "உண்மையில், பள்ளிக்கூடம் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. திடீரென என் உலகம் மிகவும் பெரிதாகிவிட்டது. வீட்டைவிட்டு தினமும் வெளியே செல்வதற்கு இப்படி ஓர் அற்ப

8

வேடிக்கை பார்ப்பவன்-8

16 January 2024
0
0
0

 எமக்குத் தொழில் கவிதை 'முதலாளிமார்கள் விரல் எல்லாம் மோதிரங்கள் மனசெல்லாம் தந்திரங்கள்!' - கவிஞர் விக்ரமாதித்யன் ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும், இவனுக்குள் கோடீஸ்வரக் கனவு ஒன்று பூக்கத் தொடங்கும்

9

வேடிக்கை பார்ப்பவன்-9

16 January 2024
0
0
0

புன்னகைக்க மறந்த கதை "கண் சிமிட்டும் நேரத்தில் ஓர் உன்னதத் தருணம் புகைப்படம் ஆகிறது. அந்தத் தருணத்துக்கான காத்திருத்தலே, புகைப்படக் கலை. இருளை உணர்ந்தவனே, ஒளியில் வாழக் கற்றுக்கொள்கிறான்!" -பி.சி.ஸ்

10

வேடிக்கை பார்ப்பவன் - 10

16 January 2024
0
0
0

இவன், இவனான கதை! "இப்பொழுதும் அங்குதான் இருக்கிறீர்களா?" என்று கேட்டார். "எப்பொழுதும் அங்குதான் இருப்பேன்" என்றேன். - நகுலன் ('கோட் ஸ்டாண்ட்' கவிதைகள் தொகுப்பிலிருந்து...) போலந்து திரைப்பட இயக்கு

11

வேடிக்கை பார்ப்பவன் - 11

16 January 2024
0
0
0

தீராத விளையாட்டு வாழ்க்கையின் இருக்கலாம். கேள்விகள் ஆனால், எளிமையாகத்தான் இருக்கின்றன!" வேடிக் கடினமாக விடைகள் 211 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் "நா"ன்தான் டாம். நீங்க ஜெர்ரியாம். ஓடிப்போயி ஒளிஞ்சிக்குங்க.

12

வேடிக்கை பார்ப்பவன் - 12

16 January 2024
0
0
0

வீடென்பது யாதெனில்... "எனது புறநகர் குடியிருப்பு வயல்களின் சமாதி என்று நினைவுபடுத்தியவை தவளைகளே!" - சுகுமாரன் - 'பூமியை வாசிக்கும் சிறுமி' கவிதைத் தொகுப்பில் இருந்து... இன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில

13

வேடிக்கை பார்ப்பவன் - 13

16 January 2024
0
0
0

நிலாக் காலம் 'எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ? எந்த அழகை எந்த விழியில் கொண்டுசெல்வோமோ? இந்த நாளை வந்த நாளில் மறந்துபோவோமோ?' -கவியரசு கண்ணதாசன் ('பசுமை நிறைந்த நினைவுகளே...' பாடலில் இருந்து)

14

வேடிக்கை பார்ப்பவன் - 14

17 January 2024
0
0
0

சாலைகளின் பாடல் "நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சினிமா பார்ப்பதைப் போலத்தான். ஆனால், படம் முடிந்த பின் க்ளைமாக்ஸ் என்ன என்பது படம் பார்த்தவருக்குத் தெரியாது!" -ரோமன் பொலன்ஸ்கி, போலந்து திரைப்பட இயக்குந

15

வேடிக்கை பார்ப்பவன் - 15

17 January 2024
0
0
0

கனவின் கைப்பிடியில் "கட்டடங்களின் விரிசல்களுக்கு இடையே வேர் விட்டுப் பூக்கும் ரோஜாச் செடிகளை நீங்கள் பார்த்ததுண்டா? இயற்கை விதிகளைத் தவறாக்கி கால்கள் இல்லாமல் நடக்க அவை கற்றுக்கொடுக்கின்றன; அவை கனவுக

16

வேடிக்கை பார்ப்பவன் - 16

17 January 2024
0
0
0

குறுக்கு வெட்டுத் தோற்றம் தாமிரக் காசை தண்டவாளத்தில் வெச்சி நாம பதுங்க ரயில் நசுக்கும் - ராமையா கால ரயிலோட நாமெல்லாம் காசானோம் வாலிபம் போய் ஆச்சே வயசு! பார்ப்பவன் -வெ.சேஷாசலம் ('ஆகாசம்பட்டு' தொகுப்

17

வேடிக்கை பார்ப்பவன் - 17

17 January 2024
0
0
0

முன்பனிக்காலம் "நீ கிளையைக் கவனமாக வரைய முடியுமானால், உன்னால் காற்றின் ஒலியைக் கேட்க முடியும்!" - ஜென் தத்துவம் (எஸ்.ராமகிருஷ்ணனின் ஜென் கவிதைகள் நூலில் இருந்து) சினிமா, விநோதமான ஒரு ரங்கராட்டினம்.

18

வேடிக்கை பார்ப்பவன் - 18

17 January 2024
0
0
0

பின் பனிக் காலம் "பழத்தைப் பார்த்து பூ கேட்டது, 'இத்தனை நாளாய் எங்கு இருந்தாய்?' பூ சொன்னது, 'உன் இதயத்தில்தான் ஒளிந்திருந்தேன்!"' -தாகூர் (வழி தப்பிய பறவைகள் தொகுப்பில் இருந்து) வேலையற்றவனின் பகலு

19

வேடிக்கை பார்ப்பவன் - 19

17 January 2024
0
0
0

இவன் நானாகும் அத்தியாயம் 'நான் இல்லாமல் போகிறேன் ஆனால் வசந்த காலம் என்னுடைய நினைவுகளுடன் இருந்து கொண்டேதானிருக்கும்!' -இறக்கப்போகிற கடைசி நிமிடத்தில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ அன்புள்ள பாலுமகேந்த

20

வேடிக்கை பார்ப்பவன் - 20

17 January 2024
0
0
0

இளவேனிற் காலம் 220 இதற்கு மேல் உருள முடியாது கல் நதியைவிட்டு கரையேறிற்று. இதற்கு மேல் வழ வழப்பாக்க முடியாது கல்லை ஒதுக்கிவிட்டு நதி ஏகிற்று! கல்யாண்ஜி பத்திரிகையில் வேலை செய்தாலும், இவனது தீராக்கா

21

வேடிக்கை பார்ப்பவன -21

17 January 2024
0
0
0

'பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்' "உனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிந்துகொள்வதுதான் உண்மையான ஞானம்!" - சாக்ரடீஸ் இவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு 'சுதந்திரம்'. நூற்றுக்கும் 5. நூற்று

22

வேடிக்கை பார்ப்பவன் 22

18 January 2024
0
0
0

என்ன நடக்கிறது என்று என்ன நடக்கிறது என்று தெரிய மேஜையில் தேநீர் பதளமாய் கவிஞர் தேவநர்கள் இரண்டு சூரியன்" தொழும்பில் இருந்து கோப்பையைப் வைக்கிறேன் நடனமாய் மாறியபடி ஞாயிற்றுக்கிழமைகளை இவன் எந்த வே

23

வேடிக்கை பார்ப்பவன் - 23

18 January 2024
0
0
0

பசித்த புலியின் வேகம் "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" நகுலன் ('நினைவுப் பாதை' நாவலில் இருந்து...) எழுத்தாளர் சுஜாதா இவன் மேல் திருப்பிவிட்ட

24

வேடிக்கை பார்ப்பவன்-24

18 January 2024
0
0
0

நீங்கள் இயக்கிய 'சைக்கோ' திரைப்படத்தில் இடம்பெற்ற பாத்ரூம் கொலைக் காட்சியைப் பார்த்த பிறகு ஒரு மாதமாக என் மகள் குளிக்கவே இல்லை!" என்று ஒரு நாய் என்னிடம் சொன்னாள். நான் அவளிடம் சொன்னேன். 'தயவுசெய்து உங

25

வேடிக்கை பார்ப்பவன் -25

18 January 2024
0
0
0

குட்டிப் புத்தரின் கேள்வி "வாழ்க்கை, ஒரு மகாநதியைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் கரையில் நின்று, என் கண்ணுக்கு பட்டவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்." - எழுத்தாளர் வண்ணநிலவன் இந்த அத்தியாயத்த

26

வேடிக்கை பார்ப்பவன் - 26

18 January 2024
0
0
0

இவன் அவனாகும் அத்தியாயம் 'கீழைக்காட்டு வேம்பு கசந்தது அம்மாவின் சோகம் கேட்டுத்தான்!' -கவிஞர் த.பழமலய் ('சனங்களின் கதை' தொகுப்பில் இருந்து) அந்தப் பையனைக் காப்பாற்றுங்கள். அவன் ஏன் இப்படி இருக்கிறான

27

வேடிக்கை பார்ப்பவன் - 27

18 January 2024
0
0
0

பட்டாம்பூச்சி விற்ற கதை "ஒரு தேர் சக்கரத்தின் அளவு பூர்ண சந்திரன், இன்று ஒரு வீட்டுக் கூரையின் மேல் உதயமானான். தீப்பிடித்துவிட்டதோ என்று நினைத்தேன்!" தி.க.சிவசங்கரன் ('தி.க.சி-யின் நாட்குறிப்புகள்'

28

வேடிக்கை பார்ப்பவன் - 28

18 January 2024
0
0
0

அவையிடத்து முந்தியிருப்பச் செயல் 'ரத்தமும் சதையும் அல்ல... இதயம்தான் எங்களை தந்தை மகனாக இணைத்தது!' - எழுத்தாளர் ஓரான் பாமுக் எம்.ஏ., முடித்ததும், பச்சையப்பன் கல்லூரியிலேயே இவன் எம்.ஃபில்., சேர்ந்தா

29

வேடிக்கை பாறிப்பலன்-29

18 January 2024
0
0
0

'நிஜம்தாள் தாங்க முடியாத பாரம். அந்தப் பாரத்தை இறக்கியைக்க அல்ல, எவ்வளவு எடை என்று பார்த்துக்கொள்ளத்தான் இதை உல்களுக்கு எழுதுகிறேன். வெயிலில் உலர்த்துவது என் ஆகிவிட்டது. எல்லா இடத்திலும்நாளே வெயில் வி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்