shabd-logo

வேடிக்கை பார்ப்பவன் - 26

18 January 2024

4 பார்த்தது 4

இவன் அவனாகும் அத்தியாயம்

'கீழைக்காட்டு வேம்பு கசந்தது அம்மாவின் சோகம் கேட்டுத்தான்!'

-கவிஞர் த.பழமலய் ('சனங்களின் கதை' தொகுப்பில் இருந்து)

அந்தப் பையனைக் காப்பாற்றுங்கள். அவன் ஏன் இப்படி இருக்கிறான்? அவன் இன்னும் தன்னைச் சின்னப் பையனாகவே நினைத்துக் கொண்டிருக்கிறானா என்ன? அவனிடம் யாராவது போய், 'நீ சிறுபிள்ளை இல்லை; உனக்கு வயதாகிவிட்டது' என்று தயவுசெய்து சொல்லாதீர்கள். அவனது பால்ய காலத்தைப் படம் வரைந்து காட்டி அந்த மாயக்கோட்டுக்குள் உங்களையும் இழுத்து விடுவான்.

பால்ய கால நினைவுகள் மிகவும் சிக்கலானவை. உண்மையில், கண்ணாடியைப் பார்க்கும்போதெல்லாம் நீங்கள் உங்கள் குழந்தைப் பருவத்தைத்தான் விரும்பிப் பார்க்கிறீர்கள் என்பது உங்களுக்கும் தெரியும். நீங்கள் கண்ணாடியைப் பார்க்கும்போது உங்களை மட்டுமா பார்க்கிறீர்கள்? தயவுசெய்து இதை வாசிப்பதை நிறுத்திவிட்டு அருகில் இருக்கும் கண்ணாடியில் உங்கள் பிம்பத்தை உற்றுப் பாருங்கள்.

பிம்பம் என்பது என்ன? அது நினைவுகளின் நிழற்கூடு. எந்த நினைவுகளும் அற்று உங்கள்

பிம்பத்தை நீங்கள் கண்ணாடியில் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலி. அந்தப்

பையனின் பால்ய வலையில் இருந்து நீங்கள் தப்பித்துவிட்டீர்கள். ஆனால் அப்படி எல்லாம்

நீங்கள் தப்பிக்க முடியாது. ஏனென்றால், நீங்கள் அவனைக் காப்பாற்ற வந்திருக்கிறீர்கள், தப்பித்து

ஓட அல்ல. அவனுக்கு இருக்கும் முதல் பிரச்னையே, அவன் எதற்கெடுத்தாலும் எளிதில்

உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறான். கன்னங்களில் நீர்க்கோடு வந்து விழுகிறது.

அவன் எதற்கு அழுகிறான் என்ற காரணத்தை நீங்கள் அவ்வளவு சுலபமாகக் கண்டுபிடித்துவிட

முடியாது. அதுபோலவே அவன் எதற்குச் சிரிக்கிறான் என்பதையும். முதல்முறையாக அவன் தாய்

இறந்தபோது, அந்த வலி தெரியாமல் அழுதான். அதற்குப் பிறகு அவன் ஸ்கேல், ரப்பர்,

பென்சில், நெல்லிக்காய் சேர்த்து வைத்திருந்த ஜாமென்ட்ரி பாக்ஸ் தொலைந்தபோது தெரிந்து

அழுதான். ஆசையாக வளர்த்த நாய்க்குட்டி இறந்ததற்கு அழுததையும், புத்தகத்தில்

மறைத்துவைத்த மயில் இறகைப் போல் முதல் காதல் தொலைந்ததற்கு அழுததையும், கல்லூரியின் இறுதி நாளில் பிரியத்துக்குரிய நண்பர்களைப் பிரிந்ததற்கு அழுததையும், அவன் அழுகையின் கணக்கில் சேர்க்காதீர்கள். அது எல்லோருக் குமான அழுகை.

வேடிக்கை பார்ப்பவன்

அவன் பிரச்னையே வேறு. பால்கனி ரோஜாச் செடி பட்டுப்போனால் அழுவான். அவன் பிள்ளை, இவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து. 'நீங்கதான்ப்பா இந்த உலகத்திலேயே பெஸ்ட் அப்பா' என்று சொன்னால் அழுவான். இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு மறைந்த இயக்குநர் இராசுமதுரவனின் 'மாயாண்டி குடும்பத்தார்' திரைப்படத்தை ஏதோ ஒரு தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு அவன் அழுதுகொண்டே இருந்தான். 'இந்தப் படத்தைப் பார்க்காதீங்க. அழுவிங்கனு சொன்னேன்ல" என்று மனைவி முறைத்ததும், அவன் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.

இப்படி... பல படங்களைப் பார்த்து அழுவதும், அவன் மனைவி முறைப்பதும் அவர்களுக்கு வாடிக்கை. ஊரின் டென்ட் கொட்டாயில் மணல் குவித்து அமர்ந்து படம் பார்க்கையில் அத்தைகளுடனும், பக்கத்து வீட்டு அக்காக்களுடனும் அழுத அனுபவங்களை அவன் இன்னும் நெஞ்சில் சேர்த்து வைத்திருக்கிறான். அவன் தகப்பன் இறந்தபோது அழுத கதை தனிக் கதை. அது தீராக் கதை.

ஆண் பிள்ளைகள் அழக் கூடாது என்று யாரும் அவனுக்கு அறிவுரை சொல்லிவிடாதீர்கள். ஏனென்றால், எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய அவன் கோபப்படக்கூடியவனாகவும் இருக்கிறான்.

'கண்ணீரில் ஆண்பால், பெண்பால் என்று ஒன்று உண்டா?' என்று கிறுக்குத்தனமாகக் கேட்டு உங்கள் மேல் எரிந்து விழுவான்.

ஆண்கள் அழும் தருணங்களைப் பட்டியலிட்டுச் செல்வான். 'ஆண், பெண் என்று எல்லாக் குழந்தைகளுமே பூமிக்கு வருகிறபோது அழுதுகொண்டேதான் வருகின்றன. அது புரியாத முட்டாள் உலகம், அவர்களைச் சிரித்துக்கொண்டே வரவேற்கிறது' என்று தத்துவம் பேசுவான்.

'ஷாஜகானின் புன்னகையை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஷாஜகாளின் கண்ணீர்த்துளிகள்தான் வரலாற்றில் தாஜ்மகாலானது' என்று கவிதை பேசுவான்.

அவனிடம் கவனமாக இருங்கள். உங்கள் சகோதரியோ, மகளோ, திருமணமாகி உங்களைவிட்டுப் பிரிந்த தருணத்தில், மொட்டைமாடித் தனிமையிலோ, தோட்டத்து மாமரத்தின் அடியிலோ மௌனமாகக் கதறி அழுத உங்கள் கண்ணீர்த்துளிகளை, அவள் கண்ணாடியாக்கி உங்கள் முன் காட்டுவாள்.

இது சம்பந்தமாக அவன் இன்னொரு கவிதை சொல்வான். அதைக் கேட்டால் நீங்கள் மீண்டும் அழுவீர்கள். எழுத்தாளர் அம்பை மொழிபெயர்த்த 'சந்தால்' பழங்குடி இனப்பெண் எழுதிய கவிதை அது. அந்தக் கவிதையில் ஒரு பெண் தனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று தன் தகப்பனிடம் சொல்கிறாள்:

'அப்பா,

உன் ஆடுகளை விற்றுத்தான் நீ என்னைப் பார்க்க வர முடியும் என்ற தொலைதூரத்தில் என்னைக் கட்டிவைக்காதே! மனிதர்கள் வாழாமல் கடவுள்கள் மட்டும் வாழும் இடத்தில் மணம் ஏற்பாடு செய்யாதே! காடுகள் ஆறுகள் மலைகள் இல்லா ஊரில் செய்யாதே என் திருமணத்தை! நிச்சயமாக எண்ணங்களைவிட வேகமாய் கார்கள் பறக்கும் இடத்தில் உயர் கட்டடங்களும் பெரிய கடைகளும் உள்ள இடத்தில் வேண்டாம்! கோழி கூவி பொழுது புலராத முற்றமில்லாத வீட்டில் கொல்லைப்புறத்திலிருந்து சூரியன் மலைகளில் அஸ்தமிப்பதைப் பார்க்க முடியாத வீட்டில் மாப்பிள்ளை பார்க்காதே! இதுவரை ஒரு மரம்கூட நடாத பயிர் ஊன்றாத, மற்றவர்களின் சுமையைத் தூக்காத, 'கை' என்ற வார்த்தையைக்கூட எழுதத் தெரியாதவன் கையில் என்னை ஒப்படைக்காதே! எனக்குத் திருமணம் செய்ய வேண்டுமென்றால் நீ காலையில் வந்து அஸ்தமன நேரத்தில் நடந்தே திரும்பக்கூடிய இடத்தில் செய்து வை! இங்கே நாள் ஆற்றங்கரையில் அழுதால் அக்கரையில் உன் காதில் கேட்டு நீ வர வேண்டும்!"

கவிதையைப் படிக்கையில் கனத்த மௌனம் கண்ணீர்த்துளியாக விழியோரம் திரள்கிறதா?

உண்மையில் ஆண்களின் கண்ணீரும் உயர்வானது. அது பெண்களுக்காகச் சிந்தப்படும் எனில்,

அதி உயர்வானது.

'ஒவ்வொரு அடகுக்கடை கம்மல்களிலும்

உலர்ந்துகொண்டிருக்கிறது

ப்ரியமில்லாமல் கழட்டிக்கொடுத்த

ஒரு பெண்ணின் கண்ணீர்த் துளி'

என்று அவள் எப்போதோ எழுதிய கவிதையைப் போலவே அவனது நெஞ்சிலும் ஏராளமான

கண்ணீர்த்துளிகள் உலர்ந்துகொண்டிருக்கின்றன.

அந்தப் பையனைக் காப்பாற்றுங்கள். அவன் ஏன் இப்படி இருக்கிறான். அவன் இன்றும் தன்னைச்

சின்னப் பையனாகவே நினைத்துக் கொண்டிருக்கிறானா என்ன? அவனிடம் போய் யாராவது 'நீ

சிறு பிள்ளை இல்லை. உனக்கு வயதாகிவிட்டது" என்று தயவுசெய்து சொல்லாதீர்கள். அவனது

பால்ய காலத்தைப் படம் வரைந்து காட்டி அந்த மாயக்கோட்டுக்குள் உங்களையும்

இழுத்துவிடுவான்!

நா. முத்துக்குமார் மூலம் மேலும் புத்தகங்கள்

1

வேடிக்கை பார்ப்பவன் -2

15 January 2024
0
0
0

குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்! ஜென் கவிதை சனி, ஞாயிறு தவிர்த்து, தினமும் காலையில் இவனும் இவன் மகனும் பள்ளிக்குக் கிளம்புவார்கள். மகன் படிக்கும் பள்ளி ய

2

வேடிக்கை பார்ப்பவன் -1

15 January 2024
0
0
0

வெந்து தணிந்தது காடு முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானு  ம் இட்ட தீ மூள்க மூள்கவே! - பட்டினத்தார் ஒரு மிகப் பெரிய பொருட்காட்சிசாலையாக இந்தப்

3

வேடிக்கை பார்ப்பவன் - 3

15 January 2024
0
0
0

'என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!' - கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் அம்மா இறந்த பிறகு, இவன் அப

4

வேடிக்கை பார்ப்பவன் - 4

15 January 2024
0
0
0

'அவன், குதிங்காலிட்டு உட்கார்ந்தான்; சப்பணமிட்டு உட்கார்ந்தான்; ஒரு காலை நீட்டி உட்கார்ந்து பார்த்தான்; வயிற்றோடு முழங்காலைச் சேர்த்து ஒட்டி உட்கார்ந்து பார்த்தான். இப்படியும் அப்படியுமாக எப்படி உட்கா

5

வேடிக்கை பார்ப்பவன் - 5

15 January 2024
0
0
0

சமூகம் என்பது நான்கு பேர்.' - ஜெயகாந்தன் 5, 4, 3, 2, 1, 0 என்று தலைகீழாக கவுன்ட் டவுன் சொல்லி, ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புவதைப் போலத்தான் தினமும் இவன் தன் மகனை பள்ளிக்கு அனுப்புவதும். திருவாளர் ம

6

வேடிக்கை பார்ப்பவன் - 6

16 January 2024
0
0
0

வயதென்னும் ரயில் வண்டி 'அந்த மாபெரும் வெற்றிடத்தில் முன்னும் இல்லை, பின்னும் இல்லை பறவையின் பாதை கிழக்கையும் மேற்கையும் அழித்துவிடுகிறது.' ஜென் தத்துவம் பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு 10 நிமிட

7

வேடிக்கை பார்ப்பவன் - 7

16 January 2024
0
0
0

பள்ளித் தலமனைத்தும்... "உண்மையில், பள்ளிக்கூடம் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. திடீரென என் உலகம் மிகவும் பெரிதாகிவிட்டது. வீட்டைவிட்டு தினமும் வெளியே செல்வதற்கு இப்படி ஓர் அற்ப

8

வேடிக்கை பார்ப்பவன்-8

16 January 2024
0
0
0

 எமக்குத் தொழில் கவிதை 'முதலாளிமார்கள் விரல் எல்லாம் மோதிரங்கள் மனசெல்லாம் தந்திரங்கள்!' - கவிஞர் விக்ரமாதித்யன் ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும், இவனுக்குள் கோடீஸ்வரக் கனவு ஒன்று பூக்கத் தொடங்கும்

9

வேடிக்கை பார்ப்பவன்-9

16 January 2024
0
0
0

புன்னகைக்க மறந்த கதை "கண் சிமிட்டும் நேரத்தில் ஓர் உன்னதத் தருணம் புகைப்படம் ஆகிறது. அந்தத் தருணத்துக்கான காத்திருத்தலே, புகைப்படக் கலை. இருளை உணர்ந்தவனே, ஒளியில் வாழக் கற்றுக்கொள்கிறான்!" -பி.சி.ஸ்

10

வேடிக்கை பார்ப்பவன் - 10

16 January 2024
0
0
0

இவன், இவனான கதை! "இப்பொழுதும் அங்குதான் இருக்கிறீர்களா?" என்று கேட்டார். "எப்பொழுதும் அங்குதான் இருப்பேன்" என்றேன். - நகுலன் ('கோட் ஸ்டாண்ட்' கவிதைகள் தொகுப்பிலிருந்து...) போலந்து திரைப்பட இயக்கு

11

வேடிக்கை பார்ப்பவன் - 11

16 January 2024
0
0
0

தீராத விளையாட்டு வாழ்க்கையின் இருக்கலாம். கேள்விகள் ஆனால், எளிமையாகத்தான் இருக்கின்றன!" வேடிக் கடினமாக விடைகள் 211 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் "நா"ன்தான் டாம். நீங்க ஜெர்ரியாம். ஓடிப்போயி ஒளிஞ்சிக்குங்க.

12

வேடிக்கை பார்ப்பவன் - 12

16 January 2024
0
0
0

வீடென்பது யாதெனில்... "எனது புறநகர் குடியிருப்பு வயல்களின் சமாதி என்று நினைவுபடுத்தியவை தவளைகளே!" - சுகுமாரன் - 'பூமியை வாசிக்கும் சிறுமி' கவிதைத் தொகுப்பில் இருந்து... இன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில

13

வேடிக்கை பார்ப்பவன் - 13

16 January 2024
0
0
0

நிலாக் காலம் 'எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ? எந்த அழகை எந்த விழியில் கொண்டுசெல்வோமோ? இந்த நாளை வந்த நாளில் மறந்துபோவோமோ?' -கவியரசு கண்ணதாசன் ('பசுமை நிறைந்த நினைவுகளே...' பாடலில் இருந்து)

14

வேடிக்கை பார்ப்பவன் - 14

17 January 2024
0
0
0

சாலைகளின் பாடல் "நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சினிமா பார்ப்பதைப் போலத்தான். ஆனால், படம் முடிந்த பின் க்ளைமாக்ஸ் என்ன என்பது படம் பார்த்தவருக்குத் தெரியாது!" -ரோமன் பொலன்ஸ்கி, போலந்து திரைப்பட இயக்குந

15

வேடிக்கை பார்ப்பவன் - 15

17 January 2024
0
0
0

கனவின் கைப்பிடியில் "கட்டடங்களின் விரிசல்களுக்கு இடையே வேர் விட்டுப் பூக்கும் ரோஜாச் செடிகளை நீங்கள் பார்த்ததுண்டா? இயற்கை விதிகளைத் தவறாக்கி கால்கள் இல்லாமல் நடக்க அவை கற்றுக்கொடுக்கின்றன; அவை கனவுக

16

வேடிக்கை பார்ப்பவன் - 16

17 January 2024
0
0
0

குறுக்கு வெட்டுத் தோற்றம் தாமிரக் காசை தண்டவாளத்தில் வெச்சி நாம பதுங்க ரயில் நசுக்கும் - ராமையா கால ரயிலோட நாமெல்லாம் காசானோம் வாலிபம் போய் ஆச்சே வயசு! பார்ப்பவன் -வெ.சேஷாசலம் ('ஆகாசம்பட்டு' தொகுப்

17

வேடிக்கை பார்ப்பவன் - 17

17 January 2024
0
0
0

முன்பனிக்காலம் "நீ கிளையைக் கவனமாக வரைய முடியுமானால், உன்னால் காற்றின் ஒலியைக் கேட்க முடியும்!" - ஜென் தத்துவம் (எஸ்.ராமகிருஷ்ணனின் ஜென் கவிதைகள் நூலில் இருந்து) சினிமா, விநோதமான ஒரு ரங்கராட்டினம்.

18

வேடிக்கை பார்ப்பவன் - 18

17 January 2024
0
0
0

பின் பனிக் காலம் "பழத்தைப் பார்த்து பூ கேட்டது, 'இத்தனை நாளாய் எங்கு இருந்தாய்?' பூ சொன்னது, 'உன் இதயத்தில்தான் ஒளிந்திருந்தேன்!"' -தாகூர் (வழி தப்பிய பறவைகள் தொகுப்பில் இருந்து) வேலையற்றவனின் பகலு

19

வேடிக்கை பார்ப்பவன் - 19

17 January 2024
0
0
0

இவன் நானாகும் அத்தியாயம் 'நான் இல்லாமல் போகிறேன் ஆனால் வசந்த காலம் என்னுடைய நினைவுகளுடன் இருந்து கொண்டேதானிருக்கும்!' -இறக்கப்போகிற கடைசி நிமிடத்தில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ அன்புள்ள பாலுமகேந்த

20

வேடிக்கை பார்ப்பவன் - 20

17 January 2024
0
0
0

இளவேனிற் காலம் 220 இதற்கு மேல் உருள முடியாது கல் நதியைவிட்டு கரையேறிற்று. இதற்கு மேல் வழ வழப்பாக்க முடியாது கல்லை ஒதுக்கிவிட்டு நதி ஏகிற்று! கல்யாண்ஜி பத்திரிகையில் வேலை செய்தாலும், இவனது தீராக்கா

21

வேடிக்கை பார்ப்பவன -21

17 January 2024
0
0
0

'பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்' "உனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிந்துகொள்வதுதான் உண்மையான ஞானம்!" - சாக்ரடீஸ் இவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு 'சுதந்திரம்'. நூற்றுக்கும் 5. நூற்று

22

வேடிக்கை பார்ப்பவன் 22

18 January 2024
0
0
0

என்ன நடக்கிறது என்று என்ன நடக்கிறது என்று தெரிய மேஜையில் தேநீர் பதளமாய் கவிஞர் தேவநர்கள் இரண்டு சூரியன்" தொழும்பில் இருந்து கோப்பையைப் வைக்கிறேன் நடனமாய் மாறியபடி ஞாயிற்றுக்கிழமைகளை இவன் எந்த வே

23

வேடிக்கை பார்ப்பவன் - 23

18 January 2024
0
0
0

பசித்த புலியின் வேகம் "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" நகுலன் ('நினைவுப் பாதை' நாவலில் இருந்து...) எழுத்தாளர் சுஜாதா இவன் மேல் திருப்பிவிட்ட

24

வேடிக்கை பார்ப்பவன்-24

18 January 2024
0
0
0

நீங்கள் இயக்கிய 'சைக்கோ' திரைப்படத்தில் இடம்பெற்ற பாத்ரூம் கொலைக் காட்சியைப் பார்த்த பிறகு ஒரு மாதமாக என் மகள் குளிக்கவே இல்லை!" என்று ஒரு நாய் என்னிடம் சொன்னாள். நான் அவளிடம் சொன்னேன். 'தயவுசெய்து உங

25

வேடிக்கை பார்ப்பவன் -25

18 January 2024
0
0
0

குட்டிப் புத்தரின் கேள்வி "வாழ்க்கை, ஒரு மகாநதியைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் கரையில் நின்று, என் கண்ணுக்கு பட்டவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்." - எழுத்தாளர் வண்ணநிலவன் இந்த அத்தியாயத்த

26

வேடிக்கை பார்ப்பவன் - 26

18 January 2024
0
0
0

இவன் அவனாகும் அத்தியாயம் 'கீழைக்காட்டு வேம்பு கசந்தது அம்மாவின் சோகம் கேட்டுத்தான்!' -கவிஞர் த.பழமலய் ('சனங்களின் கதை' தொகுப்பில் இருந்து) அந்தப் பையனைக் காப்பாற்றுங்கள். அவன் ஏன் இப்படி இருக்கிறான

27

வேடிக்கை பார்ப்பவன் - 27

18 January 2024
0
0
0

பட்டாம்பூச்சி விற்ற கதை "ஒரு தேர் சக்கரத்தின் அளவு பூர்ண சந்திரன், இன்று ஒரு வீட்டுக் கூரையின் மேல் உதயமானான். தீப்பிடித்துவிட்டதோ என்று நினைத்தேன்!" தி.க.சிவசங்கரன் ('தி.க.சி-யின் நாட்குறிப்புகள்'

28

வேடிக்கை பார்ப்பவன் - 28

18 January 2024
0
0
0

அவையிடத்து முந்தியிருப்பச் செயல் 'ரத்தமும் சதையும் அல்ல... இதயம்தான் எங்களை தந்தை மகனாக இணைத்தது!' - எழுத்தாளர் ஓரான் பாமுக் எம்.ஏ., முடித்ததும், பச்சையப்பன் கல்லூரியிலேயே இவன் எம்.ஃபில்., சேர்ந்தா

29

வேடிக்கை பாறிப்பலன்-29

18 January 2024
0
0
0

'நிஜம்தாள் தாங்க முடியாத பாரம். அந்தப் பாரத்தை இறக்கியைக்க அல்ல, எவ்வளவு எடை என்று பார்த்துக்கொள்ளத்தான் இதை உல்களுக்கு எழுதுகிறேன். வெயிலில் உலர்த்துவது என் ஆகிவிட்டது. எல்லா இடத்திலும்நாளே வெயில் வி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்