shabd-logo

வேடிக்கை பார்ப்பவன் - 11

16 January 2024

0 பார்த்தது 0

தீராத விளையாட்டு

வாழ்க்கையின் இருக்கலாம். கேள்விகள் ஆனால், எளிமையாகத்தான் இருக்கின்றன!"

வேடிக் கடினமாக விடைகள் 211

- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

"நா"ன்தான் டாம். நீங்க ஜெர்ரியாம். ஓடிப்போயி ஒளிஞ்சிக்குங்க. டாம் உங்களைக் கண்டுபுடிக்கும்."

மகன் சொல்ல, இவன் ஒளிந்து கொள்ள இடம் தேடினான். கதவுக்குப் பின்னால், பீரோ மறைவில், திரைச் சீலைகளுக்குப் பின்னால், பாத்ரூம் இருட்டில்... என பல இடங்களில் ஜெர்ரி ஒளிந்து, டாம் கண்டுபிடித்திருக்கிறது. ஆதலால், இவன் புதிய இடத்தை யோசிக்கத் தொடங்கினான்.

38 வயதுக்குப் பின் கூனிக் குறுகி கட்டிலுக்கு அடியில் நுழைவது இவனுக்குச் சிரமமாக இருந்தது. தூசிகளை உடலில் போர்த்திக்கொண்டு கட்டிலுக்கு அடியில் உருண்டு உள்ளே சென்றான்.

உடைந்துபோன பழைய ஏணி, இவன் திருமணத்துக்கு வந்த பரிசுப் பொருள்கள் அடங்கிய அட்டைப் பெட்டிகள், மகன் தவழ்கை யில் வாங்கிக் கொடுத்த நடைவண்டி, என்றுமே உபயோகத்துக்கு வராமல் கோணிப்பைகளுக்குள் பாரம்பரியப் பெருமைகளுடன் முடங்கிக்கிடக்கும் முன்னோர்களின் பித்தளைப்பாத்திரங்கள்... என, கட்டிலுக்கு அடியில் வேறு ஒரு வீட்டைச் சந்தித்தான்.

பாரம்பரிய நெடி தாங்காமல் 'ஹச்' என்று இவன் தும்மியபோது 'உஷ்! சத்தம் போடாதடா. பேரன் கண்டுபிடிச்சுவான்ல?" என்ற குரல் கேட்டு, திடுக்கிட்டு இருட்டுக்குள் இவன் திரும்பிப் பார்த்தான். லுங்கி, பனியனுடன் 35 வயது தோற்றத்தில் இவன் அப்பா, இவன் பக்கத்தில் ஒளிந்துகொண்டிருந்தார்.

இவன் மெள்ள அவரைத் தொட்டுப் பார்த்தான். "என்னடா?" என்றார் மெல்லிய குரலில்."அப்பா, நீங்க செத்துப்போயி ஆறு வருஷம் ஆச்சு. இங்க எப்பிடி வந்தீங்க?" என்றான் ஆச்சர்யத்துடன்.

"மடையா... உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். இந்த உலகத்துல மனுஷங்க யாரும்

சாகறதே இல்ல. காலம்தான் செத்துப்போகுது. நீ இருக்கிற வரைக்கும் நான் உயிரோட தான் இருப்பேன். அப்புறம் நீயும் நானும் உன் பையனா. பேரனா வாழ்ந்திட்டு இருப்போம். ஜனனமும் மரணமும் முடிவே இல்லாத ஒரு தொடர்ச்சிடா... புரியுதா?"

இவன் புரிந்தும் புரியாமலும் "அது சரிப்பா... நீங்க ஏன் இங்க ஒளிஞ்சிட்டு இருக்கீங்க?" என்றான்.

"நாம திருடன்-போலீஸ் வெளயாட்டு வெளயாடிட்டு இருக்கோம். நான்தான் திருடன்; நீ போலீஸ். நீ என்னைத் தேடிட்டு இருக்க!"

"நான்தான் உங்க பக்கத்துலயே இருக்கிறேனே... அப்புறம் எப்படி உங்களைத் தேட முடியும்?"

"நீன்னா இப்ப இருக்கற நீ இல்லடா. பத்து வயசுல இருந்த நீ..." என்று இவன் அப்பா சொல்லிக்கொண்டிருக்கும்போதே கட்டிலுக்கு அடியில் மகனின் முகம் தெரிந்தது.

"ஜெர்ரி மாட்டிக்கிட்டியா?" என்று குதூகலத்துடன் மகன் சொல்ல, "பேசாதேனு அப்பவே சொன்னேன்ல. பேரன் கண்டுபுடிச்சிட்டான் பாரு. வெளியில போயி போலீஸ்கிட்ட சொல்லாத. நானும் மாட்டிப்பேன்" என்றார் அப்பா.

இவன் ஜனனச் சங்கிலியில் இருந்து வெளியே வந்தான்.

இப்போது இவனுக்குள் 10 வயது போலீஸாக மாறி அப்பாவைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், மாட்டிக்கொண்ட ஜெர்ரியாக மகனைப் பின்தொடர்ந்தான்.

எல்லாப் பிள்ளைகளையும் போலவே பத்தே நிமிடங்களில் டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டு போரடித்து, மகன் இவனை செஸ் விளையாடக் கூப்பிட்டான்.

வெள்ளைக் காய்களை மகன் எடுத்துக்கொள்ள, கறுப்புக் காய்களோடு இவன் களம் இறங்கினான். கொஞ்சம் கொஞ்சமாக முன் நகர்ந்த விளையாட்டின் ஒரு கட்டத்தில், மகனின் சிப்பாயை இவன் வெட்ட முற்பட்டபோது இவனுக்கு மட்டும் கேட்கும்படி "டேய் பேராண்டி... தாத்தாவை எந்தப் பேரனாவது வெட்டுவானாடா? இது நியாயமாடா?" என்றது அந்தச் சிப்பாய்.

இவன் அதிர்ச்சியுடன் "தாத்தாவா?" என்றான்.

"ஆமாண்டா ராசா. நீ பிறக்கிறதுக்கு முன்னாடியே செத்துப்போனானே உன் தாத்தா... நான் அவனோட எள்ளுத் தாத்தாவோட எத்தனையோவாவது எள்ளுத் தாத்தா. பல்லவ ராஜாகிட்ட சிப்பாய் படையில இருந்தேன்" என்ற மூதாதையனின் குரல் கேட்டு, இவன் வெட்டாமல் விட்டு வேறு காயை நகர்த்தினான்.

மகன், இவன் மந்திரியை ராணியால் வெட்டி, ராஜாவுக்கு செக் வைத்தான். இப்படியாக இவன் இரண்டாவது முறை மகனிடம் தோற்றான். மகனிடம் தோற்பதைவிட ஒரு தந்தைக்கு வேறு என்ன ஆனந்தம் இருக்க முடியும்?

அடுத்து இவனை மகன் அழைத்தது அப்பா-அம்மா விளையாட்டுக்கு. "நான்தான் அப்பாவாம். நீங்க அம்மாவாம். வாங்க விளையாடலாம்" என்று மகன் சொல்ல, "டேய் நாம ரெண்டு பேரும் பாய்ஸ்டா. கொஞ்ச நேரம் அம்மாகூட போய் விளையாடு" என்று இவன் ஓய்வெடுக்க விரும்பினான்.

"அதெல்லாம் முடியாது. அம்மா எனக்கு பூரி செஞ்சிக்கிட்டு இருக்காங்க. அப்புறம் ஹோம்வொர்க் சொல்லித்தருவாங்க. அதனால நீங்கதான் என்கூட விளையாடணும்" என்று மகன் விரித்த வலையில், இவன் விரும்பிப்போய் விழுந்தான்.

"அது சரிடா. நான் எப்பிடி அம்மாவா நடிக்க முடியும்?" என்று இவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, இவன் தோளில் யாரோ தொடும் உணர்வு ஏற்பட்டு திரும்பிப் பார்க்க, எப்போதோ இறந்துபோன இவன் அம்மா நின்றுகொண்டிருந்தாள். "உன் உடம்புல உங்க அப்பா மட்டுமில்ல. நானும் இருக்கேன். பேரன் கூப்புடுறான்ல. போய் வெளயாடுடா" என்று சொல்லிவிட்டுக் காணாமல்போனாள்.

பிள்ளைக்காகத் தாயாகி, இவன் பாவனையாகச் சமைத்து, பாவனையாக துணி துவைத்து. பாவனையாகக் கண்ணீரும் சிந்தினான்.

பின்பும் ஒரு பரமபத விளையாட்டு தொடங்கியது.

அடுத்தடுத்த பகடை உருட்டல்களில் இவன் நண்பர்கள்

ஏணிகளாக, எதிரிகள் பாம்புகளாக, ஏறியும் வழுக்கியும்

இவன்

பயணம்

சென்றுகொண்டிருந்தான்.

அப்போதும்கூட என் பிள்ளைக்கு, ஏணிகளாகும்

நண்பர்களை மட்டும் கொடு' என்று இவன் மனம்

வேண்டிக்கொண்டிருந்தது.

அடுத்தடுத்து வீட்டுக்குள்ளேயே டென்னிஸ் பால்,

பிளாஸ்டிக் பேட் கிரிக்கெட், ரப்பர் பலூனில் ஃபுட்பால்,

கண்ணாமூச்சி ஆட்டம்... என விளையாட்டுகள்

தொடர்ந்து,

இரவு

உணவு

முடித்து

உறங்கப்போகும்போது வழக்கம் போல் மகன்

கேட்டான். "அப்பா, 'உங்கள் கையில் ஒரு கோடி'

விளையாடலாமா?"

இவன் அன்றைய தினத்தின் அந்த இறுதி

விளையாட்டுக்கு ஆயத்தமானான்.

"வெல்கம் பேக் டு உங்கள் கையில் ஒரு கோடி.

இன்னிக்கு நம்மகூட ரெண்டு பேரு விளையாட

வந்திருக்காங்க. ஒருத்தர் மிஸ்டர் ஆதவன் நாகராஜன். இன்னொருத்தங்க, மிஸஸ்.ஜீவலட்சுமி முத்துக்குமார். வணக்கம் மிஸ்டர் ஆதவன் நாகராஜன்!"

மகன் முன்பு செய்தி வாசித்த நிர்மலா பெரியசாமி போல் 'வ...ண...க்...க...ம்...' என்றான்.

"நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"

"தூங்கிட்டு இருக்கேன்."

"அது இல்லடா... என்ன படிக்கிற?"

"ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் 'கே' செக்ஷன்."

"உங்க அப்பா என்ன பண்றாரு?"

"எனக்கு அப்பாவா இருக்காரு."

"டே லூஸு, வேறென்ன பண்றாரு?"

"ம்... பாட்டு எழுதறாரு. எங்கிட்ட மட்டுமே கேள்வி கேப்பீங்களா? அம்மாகிட்ட கேளுங்கப்பா" என்று மகன் சிடுசிடுக்க, இவன் "வணக்கம் மிஸஸ் ஜீவலட்சுமி. நீங்க என்ன பண்றீங்க?" என்று கேட்க,

"'ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் 'கே' செக்ஷன்' னு சொல்லும்மா" என்று மகன் சொல்ல, இவன் மனைவி "ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் 'கே' செக்ஷன்" என்றாள்.

"பாருங்கப்பா, சின்னப் பசங்கதான ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிப்பாங்க? அம்மாவும் என் கிளாஸ்ல படிக்கிறாங்களாம்" என்று மகன் இவன் மனைவிக்கும் வலை விரித்து உள்ளே இழுத்தான்.

"சரி விடுடா. அது ஃபெயிலாகி ஃபெயிலாகி படிக்குதுபோல. உங்களுக்கான முதல் கேள்வி. விமானத்தைக் கண்டுபிடித்தது யார்?

A.ரைட் சகோதரர்கள் B.ராங் சகோதரர்கள்" மகன், இவன் காதுக்குள் கிசுகிசுப்பாக, "யாருப்பா?" என்றான்.

இவன் அவன் காதுக்குள், "ரைட் சகோதரர்கள்" என்றான்.

மகன் ரகசியமாகப் பேசுவதாக நினைத்து, இவன் மனைவியிடம், "அம்மா, ராங் சகோதரர்கள் தான் கரெக்டான ஆன்சராம்மா. நீ 'ராங் சகோதரர்கள்'னு சொல்லும்மா..." என்று சொல்ல, இவன் மனைவி அப்பாவியைப் போல் நடித்து "ராங் சகோதரர்கள்" என்றாள்.

மகன் பெருமிதத்துடன் "ரைட் சகோதரர்கள்" என்று சொல்லி இவனைப் பார்த்து கண்ணடிக்க,

இவன் "ரைட் சகோதரர்கள் is the right answer. மிஸ்டர் ஆதவன் நாகராஜன், நீங்க ஆயிரம் ரூபாய்

வின் பண்ணிட்டீங்க. சொல்லுங்க இந்தக் காசை வெச்சு என்ன பண்ணப் போறீங்க?" என்று

மகனைப் பார்த்து கண்ணடித்தான்.

"சாக்லேட் வாங்கிச் சாப்பிடுவேன்."

"வெரிகுட். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் குடுப்பியா?"

"செகண்ட் கொஸ்டினைக் கேளுங்கப்பா. அத விட்டுட்டு சாக்லேட்டைக் கேக்குறீங்க?"

"ஓகே.டா... உலகம் அழிஞ்சாலும் அழியாத உயிரினம் எது? (A) கரப்பான் பூச்சி. (B) பட்டாம் பூச்சி"

திருட்டுத்தனமாக இவனே மகனின் காதுக்குள் "கரப்பான் பூச்சி" என்று கிசுகிசுத்தான். இவன் மனைவி மீண்டும் அப்பாவியாகி "பட்டாம் பூச்சி" என்று தவறான விடையை அளித்து, விளை யாட்டுக்கு உற்சாகம் ஊட்டினாள்.

மகன், 5,000 ரூபாய் வென்று, ஐஸ்கிரீம் வாங்கிக்கொண்டான். அதில் பங்கு கேட்டால், ஏடாகூடமான பதில் வரும் என்பதால் இவன் கேட்காமல் விட்டுவிட்டான்.

"உங்களுக்கான மூன்றாவது கேள்வி" என்று கேட்கத் தொடங்கும்போதே "ஏம்ப்பா, கேள்வியே கேட்டுட்டு இருப்பீங்களா? விளம்பர இடைவேளை விடுங்கப்பா. டி.வி-ல அப்படித்தான காட்றாங்க" என்று மகன் செல்லமாகக் கண்டிக்க, இவன் விளம்பர இடைவேளை விடத் தொடங்கினான்.

"ராஜா... கையைக் கழுவிட்டுத்தான சாப்பிடுற?"

"ஆமாம்மா! அல்டாப்பு சோப்லதான் கை கழுவினேன். அல்டாப்பு சோப்பு... ஆரோக்கியத்தின் டாப்பு."

"எம் பொண்ணு சரியாவே சாப்பிட மாட்டேங்கிறா. என்ன பண்ணலாம்? குரங்கு மார்க்கு சேமியா வாங்கிக் குடு. குதூகலமாச் சாப்பிடுவா!"

"நம்ம பையன் நம்மகிட்ட பேசியே பல மாசம் ஆச்சு. என்னங்க பண்ணலாம்?"

"துலாலினோ செல்போன் உபயோகியுங்கள். உங்கள் தலைமுறையே உங்களிடம் பேசும்!"

விளம்பரம் முடிந்து இவன் தொடர்ந்தான். "வெல்கம் பேக் டு உங்கள் கையில் ஒரு கோடி. இந்தக் கேள்விக்கு ஆப்ஷனே இல்ல. நீங்க Phone-a friend லைஃப் லைனை யூஸ் பண்ணலாம். இதோ உங்களுக்கான கேள்வி. நா.முத்துக்குமாரின் தாத்தா பெயர் என்ன?

மகன் உடனே, "Phone-a friend" என்றான்.

"வெரிகுட். யாருக்கு Phone பண்ணப் போறீங்க?"

"உங்களுக்குத்தாம்ப்பா!"

"சரி. யுவர் கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ் நவ்" என்று சொல்ல,

"அப்பா, உங்க தாத்தா பேரு என்னப்பா?" என்று மகன் ஆர்வமாகக் கேட்க, இவன் தூக்கக்

கலக்கத்துடன் "எத்திராஜுடா" என்றான்.

'எத்திராஜுடா' என்ற மகன் பதிலுக்கு 50,000 கிடைத்து, அவன் எத்திராஜ் தாத்தாவுடன்

கம்ப்யூட்டர் வாங்கி வீடியோ கேம்ஸ் விளையாடப் போனான்.

அடுத்தடுத்த கேள்விகளின் நாடகம் முடிந்து, மகனுக்கான ஒரு கோடியை கையில் கொடுத்துவிட்டு இவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, கன்னத்தில் ஓர் ஈர முத்தம். திடுக்கிட்டு இவன் விழித்தெழுந்தபோது இவன் எதிரே ஓர் உருவம் தெரிந்தது.

"யார் சார் நீங்க!" என்றான்.

"என்னைத் தெரியலையா? ஏற்கெனவே நாம டிரெயின்ல மீட் பண்ணிருக்கோமே. நான்தான் கடவுள்" என்றார்.

இவன் பதற்றத்துடன் "அய்யா... சாமி, எதுக்கு வந்திருக்கீங்க?" என்றான்.

"வாழ்க்கைங்கிறது என்ன?" என்று கேட்டார் கடவுள்.

இவன் மீண்டும் பதற்றத்துடன் விழித்துக்கொண்டிருக்க, கடவுள் சொன்னார்: "வாழ்க்கைங்கிறது இந்த மாதிரி அப்பனும் புள்ளையும் விளையாடற தீராத விளையாட்டு!"

நா. முத்துக்குமார் மூலம் மேலும் புத்தகங்கள்

1

வேடிக்கை பார்ப்பவன் -2

15 January 2024
0
0
0

குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்! ஜென் கவிதை சனி, ஞாயிறு தவிர்த்து, தினமும் காலையில் இவனும் இவன் மகனும் பள்ளிக்குக் கிளம்புவார்கள். மகன் படிக்கும் பள்ளி ய

2

வேடிக்கை பார்ப்பவன் -1

15 January 2024
0
0
0

வெந்து தணிந்தது காடு முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானு  ம் இட்ட தீ மூள்க மூள்கவே! - பட்டினத்தார் ஒரு மிகப் பெரிய பொருட்காட்சிசாலையாக இந்தப்

3

வேடிக்கை பார்ப்பவன் - 3

15 January 2024
0
0
0

'என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!' - கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் அம்மா இறந்த பிறகு, இவன் அப

4

வேடிக்கை பார்ப்பவன் - 4

15 January 2024
0
0
0

'அவன், குதிங்காலிட்டு உட்கார்ந்தான்; சப்பணமிட்டு உட்கார்ந்தான்; ஒரு காலை நீட்டி உட்கார்ந்து பார்த்தான்; வயிற்றோடு முழங்காலைச் சேர்த்து ஒட்டி உட்கார்ந்து பார்த்தான். இப்படியும் அப்படியுமாக எப்படி உட்கா

5

வேடிக்கை பார்ப்பவன் - 5

15 January 2024
0
0
0

சமூகம் என்பது நான்கு பேர்.' - ஜெயகாந்தன் 5, 4, 3, 2, 1, 0 என்று தலைகீழாக கவுன்ட் டவுன் சொல்லி, ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புவதைப் போலத்தான் தினமும் இவன் தன் மகனை பள்ளிக்கு அனுப்புவதும். திருவாளர் ம

6

வேடிக்கை பார்ப்பவன் - 6

16 January 2024
0
0
0

வயதென்னும் ரயில் வண்டி 'அந்த மாபெரும் வெற்றிடத்தில் முன்னும் இல்லை, பின்னும் இல்லை பறவையின் பாதை கிழக்கையும் மேற்கையும் அழித்துவிடுகிறது.' ஜென் தத்துவம் பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு 10 நிமிட

7

வேடிக்கை பார்ப்பவன் - 7

16 January 2024
0
0
0

பள்ளித் தலமனைத்தும்... "உண்மையில், பள்ளிக்கூடம் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. திடீரென என் உலகம் மிகவும் பெரிதாகிவிட்டது. வீட்டைவிட்டு தினமும் வெளியே செல்வதற்கு இப்படி ஓர் அற்ப

8

வேடிக்கை பார்ப்பவன்-8

16 January 2024
0
0
0

 எமக்குத் தொழில் கவிதை 'முதலாளிமார்கள் விரல் எல்லாம் மோதிரங்கள் மனசெல்லாம் தந்திரங்கள்!' - கவிஞர் விக்ரமாதித்யன் ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும், இவனுக்குள் கோடீஸ்வரக் கனவு ஒன்று பூக்கத் தொடங்கும்

9

வேடிக்கை பார்ப்பவன்-9

16 January 2024
0
0
0

புன்னகைக்க மறந்த கதை "கண் சிமிட்டும் நேரத்தில் ஓர் உன்னதத் தருணம் புகைப்படம் ஆகிறது. அந்தத் தருணத்துக்கான காத்திருத்தலே, புகைப்படக் கலை. இருளை உணர்ந்தவனே, ஒளியில் வாழக் கற்றுக்கொள்கிறான்!" -பி.சி.ஸ்

10

வேடிக்கை பார்ப்பவன் - 10

16 January 2024
0
0
0

இவன், இவனான கதை! "இப்பொழுதும் அங்குதான் இருக்கிறீர்களா?" என்று கேட்டார். "எப்பொழுதும் அங்குதான் இருப்பேன்" என்றேன். - நகுலன் ('கோட் ஸ்டாண்ட்' கவிதைகள் தொகுப்பிலிருந்து...) போலந்து திரைப்பட இயக்கு

11

வேடிக்கை பார்ப்பவன் - 11

16 January 2024
0
0
0

தீராத விளையாட்டு வாழ்க்கையின் இருக்கலாம். கேள்விகள் ஆனால், எளிமையாகத்தான் இருக்கின்றன!" வேடிக் கடினமாக விடைகள் 211 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் "நா"ன்தான் டாம். நீங்க ஜெர்ரியாம். ஓடிப்போயி ஒளிஞ்சிக்குங்க.

12

வேடிக்கை பார்ப்பவன் - 12

16 January 2024
0
0
0

வீடென்பது யாதெனில்... "எனது புறநகர் குடியிருப்பு வயல்களின் சமாதி என்று நினைவுபடுத்தியவை தவளைகளே!" - சுகுமாரன் - 'பூமியை வாசிக்கும் சிறுமி' கவிதைத் தொகுப்பில் இருந்து... இன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில

13

வேடிக்கை பார்ப்பவன் - 13

16 January 2024
0
0
0

நிலாக் காலம் 'எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ? எந்த அழகை எந்த விழியில் கொண்டுசெல்வோமோ? இந்த நாளை வந்த நாளில் மறந்துபோவோமோ?' -கவியரசு கண்ணதாசன் ('பசுமை நிறைந்த நினைவுகளே...' பாடலில் இருந்து)

14

வேடிக்கை பார்ப்பவன் - 14

17 January 2024
0
0
0

சாலைகளின் பாடல் "நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சினிமா பார்ப்பதைப் போலத்தான். ஆனால், படம் முடிந்த பின் க்ளைமாக்ஸ் என்ன என்பது படம் பார்த்தவருக்குத் தெரியாது!" -ரோமன் பொலன்ஸ்கி, போலந்து திரைப்பட இயக்குந

15

வேடிக்கை பார்ப்பவன் - 15

17 January 2024
0
0
0

கனவின் கைப்பிடியில் "கட்டடங்களின் விரிசல்களுக்கு இடையே வேர் விட்டுப் பூக்கும் ரோஜாச் செடிகளை நீங்கள் பார்த்ததுண்டா? இயற்கை விதிகளைத் தவறாக்கி கால்கள் இல்லாமல் நடக்க அவை கற்றுக்கொடுக்கின்றன; அவை கனவுக

16

வேடிக்கை பார்ப்பவன் - 16

17 January 2024
0
0
0

குறுக்கு வெட்டுத் தோற்றம் தாமிரக் காசை தண்டவாளத்தில் வெச்சி நாம பதுங்க ரயில் நசுக்கும் - ராமையா கால ரயிலோட நாமெல்லாம் காசானோம் வாலிபம் போய் ஆச்சே வயசு! பார்ப்பவன் -வெ.சேஷாசலம் ('ஆகாசம்பட்டு' தொகுப்

17

வேடிக்கை பார்ப்பவன் - 17

17 January 2024
0
0
0

முன்பனிக்காலம் "நீ கிளையைக் கவனமாக வரைய முடியுமானால், உன்னால் காற்றின் ஒலியைக் கேட்க முடியும்!" - ஜென் தத்துவம் (எஸ்.ராமகிருஷ்ணனின் ஜென் கவிதைகள் நூலில் இருந்து) சினிமா, விநோதமான ஒரு ரங்கராட்டினம்.

18

வேடிக்கை பார்ப்பவன் - 18

17 January 2024
0
0
0

பின் பனிக் காலம் "பழத்தைப் பார்த்து பூ கேட்டது, 'இத்தனை நாளாய் எங்கு இருந்தாய்?' பூ சொன்னது, 'உன் இதயத்தில்தான் ஒளிந்திருந்தேன்!"' -தாகூர் (வழி தப்பிய பறவைகள் தொகுப்பில் இருந்து) வேலையற்றவனின் பகலு

19

வேடிக்கை பார்ப்பவன் - 19

17 January 2024
0
0
0

இவன் நானாகும் அத்தியாயம் 'நான் இல்லாமல் போகிறேன் ஆனால் வசந்த காலம் என்னுடைய நினைவுகளுடன் இருந்து கொண்டேதானிருக்கும்!' -இறக்கப்போகிற கடைசி நிமிடத்தில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ அன்புள்ள பாலுமகேந்த

20

வேடிக்கை பார்ப்பவன் - 20

17 January 2024
0
0
0

இளவேனிற் காலம் 220 இதற்கு மேல் உருள முடியாது கல் நதியைவிட்டு கரையேறிற்று. இதற்கு மேல் வழ வழப்பாக்க முடியாது கல்லை ஒதுக்கிவிட்டு நதி ஏகிற்று! கல்யாண்ஜி பத்திரிகையில் வேலை செய்தாலும், இவனது தீராக்கா

21

வேடிக்கை பார்ப்பவன -21

17 January 2024
0
0
0

'பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்' "உனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிந்துகொள்வதுதான் உண்மையான ஞானம்!" - சாக்ரடீஸ் இவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு 'சுதந்திரம்'. நூற்றுக்கும் 5. நூற்று

22

வேடிக்கை பார்ப்பவன் 22

18 January 2024
0
0
0

என்ன நடக்கிறது என்று என்ன நடக்கிறது என்று தெரிய மேஜையில் தேநீர் பதளமாய் கவிஞர் தேவநர்கள் இரண்டு சூரியன்" தொழும்பில் இருந்து கோப்பையைப் வைக்கிறேன் நடனமாய் மாறியபடி ஞாயிற்றுக்கிழமைகளை இவன் எந்த வே

23

வேடிக்கை பார்ப்பவன் - 23

18 January 2024
0
0
0

பசித்த புலியின் வேகம் "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" நகுலன் ('நினைவுப் பாதை' நாவலில் இருந்து...) எழுத்தாளர் சுஜாதா இவன் மேல் திருப்பிவிட்ட

24

வேடிக்கை பார்ப்பவன்-24

18 January 2024
0
0
0

நீங்கள் இயக்கிய 'சைக்கோ' திரைப்படத்தில் இடம்பெற்ற பாத்ரூம் கொலைக் காட்சியைப் பார்த்த பிறகு ஒரு மாதமாக என் மகள் குளிக்கவே இல்லை!" என்று ஒரு நாய் என்னிடம் சொன்னாள். நான் அவளிடம் சொன்னேன். 'தயவுசெய்து உங

25

வேடிக்கை பார்ப்பவன் -25

18 January 2024
0
0
0

குட்டிப் புத்தரின் கேள்வி "வாழ்க்கை, ஒரு மகாநதியைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் கரையில் நின்று, என் கண்ணுக்கு பட்டவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்." - எழுத்தாளர் வண்ணநிலவன் இந்த அத்தியாயத்த

26

வேடிக்கை பார்ப்பவன் - 26

18 January 2024
0
0
0

இவன் அவனாகும் அத்தியாயம் 'கீழைக்காட்டு வேம்பு கசந்தது அம்மாவின் சோகம் கேட்டுத்தான்!' -கவிஞர் த.பழமலய் ('சனங்களின் கதை' தொகுப்பில் இருந்து) அந்தப் பையனைக் காப்பாற்றுங்கள். அவன் ஏன் இப்படி இருக்கிறான

27

வேடிக்கை பார்ப்பவன் - 27

18 January 2024
0
0
0

பட்டாம்பூச்சி விற்ற கதை "ஒரு தேர் சக்கரத்தின் அளவு பூர்ண சந்திரன், இன்று ஒரு வீட்டுக் கூரையின் மேல் உதயமானான். தீப்பிடித்துவிட்டதோ என்று நினைத்தேன்!" தி.க.சிவசங்கரன் ('தி.க.சி-யின் நாட்குறிப்புகள்'

28

வேடிக்கை பார்ப்பவன் - 28

18 January 2024
0
0
0

அவையிடத்து முந்தியிருப்பச் செயல் 'ரத்தமும் சதையும் அல்ல... இதயம்தான் எங்களை தந்தை மகனாக இணைத்தது!' - எழுத்தாளர் ஓரான் பாமுக் எம்.ஏ., முடித்ததும், பச்சையப்பன் கல்லூரியிலேயே இவன் எம்.ஃபில்., சேர்ந்தா

29

வேடிக்கை பாறிப்பலன்-29

18 January 2024
0
0
0

'நிஜம்தாள் தாங்க முடியாத பாரம். அந்தப் பாரத்தை இறக்கியைக்க அல்ல, எவ்வளவு எடை என்று பார்த்துக்கொள்ளத்தான் இதை உல்களுக்கு எழுதுகிறேன். வெயிலில் உலர்த்துவது என் ஆகிவிட்டது. எல்லா இடத்திலும்நாளே வெயில் வி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்