shabd-logo

வேடிக்கை பார்ப்பவன் - 18

17 January 2024

0 பார்த்தது 0

பின் பனிக் காலம்

"பழத்தைப் பார்த்து பூ கேட்டது, 'இத்தனை நாளாய் எங்கு இருந்தாய்?' பூ சொன்னது, 'உன் இதயத்தில்தான் ஒளிந்திருந்தேன்!"'

-தாகூர் (வழி தப்பிய பறவைகள் தொகுப்பில் இருந்து)

வேலையற்றவனின் பகலும், நோயாளியின் இரவும் நீளமானவை என்பதை இவன் உணர்ந்த காலம் அது. தூரத்தில் இருந்து பார்க்கையில் தங்க நிலவாகத் தெரிந்த சினிமாவின் மறு பக்கம் வேறுவிதமாக இருந்தது. மஞ்சள் வண்ணத்தில் தகதகத்த அந்த நிலவின் உள்பக்கம், ஆக்சிஜனற்று, தண்ணீரற்று, பள்ளம் பள்ளமாக இவன் முன் விரிந்தது. இவன் கனவின் கைகளைப் பிடித்துக்கொண்டு அந்தரத்தில் மிதந்தபடி தேடிக்கொண்டிருந்தான். வாய்ப்புகளைத்

இவன் உதவி இயக்குநராக வேலை செய்ய ஆசைப்பட்ட இயக்குநர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, அவர்களது அலுவலகங்களைத் தேடிப் போனான். ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, கிளியின் கழுத்தில் இருக்கும் இளவரசியின் உயிரைப் போல அவர்களைப் பார்ப்பது அவ்வளவு சிரமமாக இருந்தது. வாயிற்காப்போர்களே வந்தவர்களை வடிகட்டி அனுப்பிக்கொண்டிருந்தார்கள். இப்போது போல் கைபேசி வசதி அன்று இல்லை. ஆதலால், அவர்கள் அடைய முடியாத தூரத்தில் இருந்தார்கள்.

சினிமாவில் இந்த மாதிரி வாய்ப்பு தேடுகிறவர்களுக்கு எழுதப்படாத விதி ஒன்று இருக்கிறது. பிரபலங்களின் வீட்டு முகவரியைக் கண்டுபிடித்து அதிகாலையில் அங்கு போய் தினமும் நின்று, காரில் வெளியே கிளம்பும்போது அவர்கள் பார்வையில் படும்படி வணக்கம் வைத்தால் என்றாவது ஒருநாள், 'யாருப்பா நீ?' என்று கேட்டு மின்னல் தரிசனம் தருவார்கள். அந்த ஒற்றை விநாடியில் நம் வாழ்க்கைக் குறிப்பை ஒப்பித்துவிட வேண்டும்.

இவன் பார்க்க நினைத்த இயக்குநர்கள், ஒன்று படப்பிடிப்பில் இருந்தார்கள், அல்லது இவன் பார்வைக்குப் படாமல் ரகசிய வழியில் வெளியேறிக்கொண்டிருந்தார்கள். வேலை இல்லாதவனின் பகலைச் சுட்டெரிக்கும் வெயில், இவன் வானத்தில் தினமும் எரிந்து கொண்டேயிருந்தது. புத்தகங்களின் நிழலில் ஒதுங்குவது மட்டுமே இவனுக்கு ஆறுதலை அளித்தது.

கதை, கவிதை, கட்டுரை என்று இவன் எண்ணங்களை எல்லாம் பெரும் பத்திரிகை, சிறு பத்திரிகை என்று பார்க்காமல் எழுதித் தள்ளிக்கொண்டே இருந்தான். பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல, அதற்கான சன்மானங்கள் வந்துகொண்டிருந்தாலும், அந்தப் பூக்களின் வாசம்தான் அடுத்த நாளை நோக்கி இவனை நகர்த்திக்கொண்டிருந்தன.

நக்கீரன் குழுமத்தில் இருந்து அப்போது சிறுகதைகளுக்காகவே 'சிறுகதைக் கதிர்' என்று ஓர் இதழ் தொடங்கியிருந்தார்கள். அதில் துணை ஆசிரியராக சேரும் வாய்ப்பு கிடைத்தது இவனுக்கு. சிறுகதைக் கதிர், இவனுக்கான வானத்தையும் சுதந்திரத்தையும் கொடுத்தது. இவன் சிறகை விரித்துப் பறந்தான். அப்போது அதன் அலுவலகம், ராயப்பேட்டை மணிக்கூண்டின் அருகில் அமீர் மகாலுக்கு அடுத்து மீர் பக்ஷி அலி தெருவில் இருந்தது. கீழ்த் தளத்தில் ராட்சஸ பிரின்டிங் மெஷின்கள், சரம்சரமாக அவை வெளியேற்றும் அச்சடிக்கப்பட்ட காகிதங்கள், கடைசி நேர நெருக்கடிகள் ভাড়া பத்திரிகை உலகின் பரபரப்புகளுக்கு இவன் பழகிக்கொண்டான். சிறுகதைக் கதிர் மாத இதழ் என்பதால், மாதத்தின் கடைசி நான்கு நாட்கள் அலுவலகத்திலேயே தங்க வேண்டி வரும்.

இவனைப் போலவே எல்லோரும் தேநீரும் சிகரெட்டுமாக இரவை, செய்திகளாக நிரப்பிக்கொண்டிருப்பார்கள். அலுவலகம் வெளியே பூட்டப்பட்டு, இவர்கள் வந்து போக வேறு ஒரு வாசல் இருந்தது.

அப்படிப்பட்ட ஓர் இரவில் நக்கீரனில் வெளிவந்த செய்தியினால் கோபமடைந்த ரௌடிக் கும்பல் ஒன்று, டாடோ சுமோக்களில் வந்து இறங்கி, பூட்டப்பட்டிருந்த அலுவலகத்தைப் பார்த்து மேலும் கொதிப்படைந்து, திரும்பிப் போனதை இவன் மொட்டைமாடி இருட்டில் இருந்து வேடிக்கை பார்த்திருக்கிறான்.

புலனாய்வுப் பத்திரிகையில் பணியாற்றும் அனுபவத்தின் பின்விளைவுகளை இவன் அறிந்த

நாட்கள் அவை. எழுத்தாளர், பத்திரிகையாளர் மாலன் எழுதிய 'ஆயுதம்' என்ற சிறுகதைதான்

இவன் ஞாபகத்துக்கு வந்தது. ஒவ்வொரு பத்திரிகையாளனும் படிக்கவேண்டிய கதை அது.

பத்திரிகையாளன் என்பவன் காலத்தின் மனசாட்சி, ஜனநாயகத்தின் நான்கு தூண்களை தாங்கிப்

பிடிப்பவன், விருப்பு வெறுப்பற்று நடுநிலையாக உண்மை சொல்பவன். முதுகுக்குப் பின்னால் இரண்டு கண்கள் முளைத்திருப்பதும், அந்தக் கண்கள் வழியே மக்கள் காணாத உண்மையை வெளிக்கொணர்வதும்தான் பத்திரிகையாளனின் பணி. பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்களை இவன் பேட்டி எடுத்தான்.

சிறுகதைக் கதிரில் அப்போது 'முதன்முதலாக' என்று ஒரு புதிய பகுதியைத் தொடங்கியிருந்தார்கள். பல்வேறு துறைகள் சார்ந்த பிரபலங்களிடம் அவர்கள் முதன்முதலாக இயக்கிய காட்சி, பேசிய வசனம், எழுதிய கவிதை... என்று பேட்டி எடுக்க வேண்டும். இவன் திரைத்துறை சார்ந்த பிரபலங்களைப் பேட்டியெடுத்தான்.

அப்படித்தான் அந்த இயக்குநரை இவன் சந்தித்தான். அவரது முதல் படம் மிகப் பெரிய ஹிட்டாகி, இரண்டாவது படத்துக்கான கதை விவாதத்தில் இருந்து கொண்டிருந்த காலம். எழுதப்படாத சினிமாவின் விதியைப் பின்பற்றி தி.நகரில் இருந்த அவரது ஃப்ளாட்டின் வாசலில் அதிகாலை காத்திருந்தான். ஆறரை மணிக்கு அவரது அம்மா வெளியே வந்து இவனைப் பற்றி விசாரித்ததும், வந்த நோக்கத்தைச் சொன்னான். "தம்பி தூங்கிட்டு இருக்கு. எழுந்ததும் சொல்றேன்" என்று அன்பாகப் பேசியதைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனான். எந்த ரகசிய வழியிலும் அந்த இயக்குநர் வெளியேறாமல் ஏழேகாலுக்கு இவனை உள்ளே அழைத்தார். இவனது ஒல்லியான தோற்றத்தைப் பார்த்து வயதைக் கேட்ட பின், "நான் பேட்டி குடுக்கற மனநிலையில் இல்லை. ஆனா, இவ்வளவு சின்னப் பையனா ஆர்வத்தோட கேட்கும்போது தவிர்க்க முடியல. கேளுங்க தம்பி" என்றார்.

இவன், "தாங்கள் முதன்முதலாக இயக்கிய காட்சி எது?" என்றான். அவர் "நகைக்கடையில் கதாநாயகன் கொள்ளையடித்த காட்சி" என்றார். "ரொம்ப நன்றி சார். நான் கிளம்பறேன்" என்றான்.

"அவ்வளவுதானா? பேட்டி முடிஞ்சிருச்சா?" என்றார் ஆச்சரியத்துடன். "ஆமா சார்... இந்தத் தகவல் மட்டும் போதும் சார்" என்று சொல்லிவிட்டு இவன் கிளம்ப எத்தனிக்கையில், "உட்காருங்க தம்பி. டீ சாப்பிட்டுப் போலாம். எந்த ஊரு... என்ன படிச்சிருக்கீங்க?" என்று அவர் கேட்க, இவன் தன்னைப் பற்றி சொல்லத் தொடங்கினான்.

அந்த நேர்காணல் வந்த இதழை அவரிடம் கொடுக்க மீண்டும் சந்தித்தபோது, படித்துப்

பார்த்துவிட்டு, "ஷார்ட் அண்ட் ஸ்வீட்" என்று அவர் சொன்னது, இவனை மேகத்தில்

மிதக்கவிட்டது. தரை இறங்குவதற்கு முன்பாகவே, "சார் உங்ககிட்ட அசிஸ்டென்டா வேலை

செய்ய ஆசைப்படுறேன்" என்றான். "இந்தப் படத்தில் ஏற்கெனவே நிறையப் பேர் இருக்காங்க.

அடுத்த படம் ஆரம்பிக்கும்போது வந்து பாருங்க. அது வரைக்கும் ஒரு நண்பனா எப்ப

வேணாலும் என்னைச் சந்திக்கலாம்" என்று அவர் சொல்ல, மீண்டும் இவன் தலைக்கு மேல்

மேகங்கள் மிதந்தன. இவனுக்கு இருந்த இயல்பான கூச்சத்தால் அவரைச் சந்திப்பதை இவன்

தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தான்.

அதற்குப் பின் அவரை இவன் சந்தித்தது, அவர் தயாரித்த படத்துக்கு பாடல் எழுதுவதற்காக.

அந்தப் படம் ஹிட்டாகி, அடுத்தடுத்து அவர் தயாரித்த படங்களிலும், இயக்கிய படங்களிலும்,

இவன் பாடல்கள் எழுதினாலும், இன்று வரை, அன்று அவர் தேநீர் கொடுத்துப் பேட்டியளித்த,

அந்த மீசை முளைக்காத இளைஞன்தான் இவனென்று அவருக்குத் தெரியாது. அந்த இயக்குநர்

இந்திய சினிமாவின் பிரமாண்டத்தை உலக சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர்.

அவர்... இயக்குநர் ஷங்கர்!

நா. முத்துக்குமார் மூலம் மேலும் புத்தகங்கள்

1

வேடிக்கை பார்ப்பவன் -2

15 January 2024
0
0
0

குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்! ஜென் கவிதை சனி, ஞாயிறு தவிர்த்து, தினமும் காலையில் இவனும் இவன் மகனும் பள்ளிக்குக் கிளம்புவார்கள். மகன் படிக்கும் பள்ளி ய

2

வேடிக்கை பார்ப்பவன் -1

15 January 2024
0
0
0

வெந்து தணிந்தது காடு முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானு  ம் இட்ட தீ மூள்க மூள்கவே! - பட்டினத்தார் ஒரு மிகப் பெரிய பொருட்காட்சிசாலையாக இந்தப்

3

வேடிக்கை பார்ப்பவன் - 3

15 January 2024
0
0
0

'என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!' - கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் அம்மா இறந்த பிறகு, இவன் அப

4

வேடிக்கை பார்ப்பவன் - 4

15 January 2024
0
0
0

'அவன், குதிங்காலிட்டு உட்கார்ந்தான்; சப்பணமிட்டு உட்கார்ந்தான்; ஒரு காலை நீட்டி உட்கார்ந்து பார்த்தான்; வயிற்றோடு முழங்காலைச் சேர்த்து ஒட்டி உட்கார்ந்து பார்த்தான். இப்படியும் அப்படியுமாக எப்படி உட்கா

5

வேடிக்கை பார்ப்பவன் - 5

15 January 2024
0
0
0

சமூகம் என்பது நான்கு பேர்.' - ஜெயகாந்தன் 5, 4, 3, 2, 1, 0 என்று தலைகீழாக கவுன்ட் டவுன் சொல்லி, ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புவதைப் போலத்தான் தினமும் இவன் தன் மகனை பள்ளிக்கு அனுப்புவதும். திருவாளர் ம

6

வேடிக்கை பார்ப்பவன் - 6

16 January 2024
0
0
0

வயதென்னும் ரயில் வண்டி 'அந்த மாபெரும் வெற்றிடத்தில் முன்னும் இல்லை, பின்னும் இல்லை பறவையின் பாதை கிழக்கையும் மேற்கையும் அழித்துவிடுகிறது.' ஜென் தத்துவம் பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு 10 நிமிட

7

வேடிக்கை பார்ப்பவன் - 7

16 January 2024
0
0
0

பள்ளித் தலமனைத்தும்... "உண்மையில், பள்ளிக்கூடம் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. திடீரென என் உலகம் மிகவும் பெரிதாகிவிட்டது. வீட்டைவிட்டு தினமும் வெளியே செல்வதற்கு இப்படி ஓர் அற்ப

8

வேடிக்கை பார்ப்பவன்-8

16 January 2024
0
0
0

 எமக்குத் தொழில் கவிதை 'முதலாளிமார்கள் விரல் எல்லாம் மோதிரங்கள் மனசெல்லாம் தந்திரங்கள்!' - கவிஞர் விக்ரமாதித்யன் ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும், இவனுக்குள் கோடீஸ்வரக் கனவு ஒன்று பூக்கத் தொடங்கும்

9

வேடிக்கை பார்ப்பவன்-9

16 January 2024
0
0
0

புன்னகைக்க மறந்த கதை "கண் சிமிட்டும் நேரத்தில் ஓர் உன்னதத் தருணம் புகைப்படம் ஆகிறது. அந்தத் தருணத்துக்கான காத்திருத்தலே, புகைப்படக் கலை. இருளை உணர்ந்தவனே, ஒளியில் வாழக் கற்றுக்கொள்கிறான்!" -பி.சி.ஸ்

10

வேடிக்கை பார்ப்பவன் - 10

16 January 2024
0
0
0

இவன், இவனான கதை! "இப்பொழுதும் அங்குதான் இருக்கிறீர்களா?" என்று கேட்டார். "எப்பொழுதும் அங்குதான் இருப்பேன்" என்றேன். - நகுலன் ('கோட் ஸ்டாண்ட்' கவிதைகள் தொகுப்பிலிருந்து...) போலந்து திரைப்பட இயக்கு

11

வேடிக்கை பார்ப்பவன் - 11

16 January 2024
0
0
0

தீராத விளையாட்டு வாழ்க்கையின் இருக்கலாம். கேள்விகள் ஆனால், எளிமையாகத்தான் இருக்கின்றன!" வேடிக் கடினமாக விடைகள் 211 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் "நா"ன்தான் டாம். நீங்க ஜெர்ரியாம். ஓடிப்போயி ஒளிஞ்சிக்குங்க.

12

வேடிக்கை பார்ப்பவன் - 12

16 January 2024
0
0
0

வீடென்பது யாதெனில்... "எனது புறநகர் குடியிருப்பு வயல்களின் சமாதி என்று நினைவுபடுத்தியவை தவளைகளே!" - சுகுமாரன் - 'பூமியை வாசிக்கும் சிறுமி' கவிதைத் தொகுப்பில் இருந்து... இன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில

13

வேடிக்கை பார்ப்பவன் - 13

16 January 2024
0
0
0

நிலாக் காலம் 'எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ? எந்த அழகை எந்த விழியில் கொண்டுசெல்வோமோ? இந்த நாளை வந்த நாளில் மறந்துபோவோமோ?' -கவியரசு கண்ணதாசன் ('பசுமை நிறைந்த நினைவுகளே...' பாடலில் இருந்து)

14

வேடிக்கை பார்ப்பவன் - 14

17 January 2024
0
0
0

சாலைகளின் பாடல் "நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சினிமா பார்ப்பதைப் போலத்தான். ஆனால், படம் முடிந்த பின் க்ளைமாக்ஸ் என்ன என்பது படம் பார்த்தவருக்குத் தெரியாது!" -ரோமன் பொலன்ஸ்கி, போலந்து திரைப்பட இயக்குந

15

வேடிக்கை பார்ப்பவன் - 15

17 January 2024
0
0
0

கனவின் கைப்பிடியில் "கட்டடங்களின் விரிசல்களுக்கு இடையே வேர் விட்டுப் பூக்கும் ரோஜாச் செடிகளை நீங்கள் பார்த்ததுண்டா? இயற்கை விதிகளைத் தவறாக்கி கால்கள் இல்லாமல் நடக்க அவை கற்றுக்கொடுக்கின்றன; அவை கனவுக

16

வேடிக்கை பார்ப்பவன் - 16

17 January 2024
0
0
0

குறுக்கு வெட்டுத் தோற்றம் தாமிரக் காசை தண்டவாளத்தில் வெச்சி நாம பதுங்க ரயில் நசுக்கும் - ராமையா கால ரயிலோட நாமெல்லாம் காசானோம் வாலிபம் போய் ஆச்சே வயசு! பார்ப்பவன் -வெ.சேஷாசலம் ('ஆகாசம்பட்டு' தொகுப்

17

வேடிக்கை பார்ப்பவன் - 17

17 January 2024
0
0
0

முன்பனிக்காலம் "நீ கிளையைக் கவனமாக வரைய முடியுமானால், உன்னால் காற்றின் ஒலியைக் கேட்க முடியும்!" - ஜென் தத்துவம் (எஸ்.ராமகிருஷ்ணனின் ஜென் கவிதைகள் நூலில் இருந்து) சினிமா, விநோதமான ஒரு ரங்கராட்டினம்.

18

வேடிக்கை பார்ப்பவன் - 18

17 January 2024
0
0
0

பின் பனிக் காலம் "பழத்தைப் பார்த்து பூ கேட்டது, 'இத்தனை நாளாய் எங்கு இருந்தாய்?' பூ சொன்னது, 'உன் இதயத்தில்தான் ஒளிந்திருந்தேன்!"' -தாகூர் (வழி தப்பிய பறவைகள் தொகுப்பில் இருந்து) வேலையற்றவனின் பகலு

19

வேடிக்கை பார்ப்பவன் - 19

17 January 2024
0
0
0

இவன் நானாகும் அத்தியாயம் 'நான் இல்லாமல் போகிறேன் ஆனால் வசந்த காலம் என்னுடைய நினைவுகளுடன் இருந்து கொண்டேதானிருக்கும்!' -இறக்கப்போகிற கடைசி நிமிடத்தில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ அன்புள்ள பாலுமகேந்த

20

வேடிக்கை பார்ப்பவன் - 20

17 January 2024
0
0
0

இளவேனிற் காலம் 220 இதற்கு மேல் உருள முடியாது கல் நதியைவிட்டு கரையேறிற்று. இதற்கு மேல் வழ வழப்பாக்க முடியாது கல்லை ஒதுக்கிவிட்டு நதி ஏகிற்று! கல்யாண்ஜி பத்திரிகையில் வேலை செய்தாலும், இவனது தீராக்கா

21

வேடிக்கை பார்ப்பவன -21

17 January 2024
0
0
0

'பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்' "உனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிந்துகொள்வதுதான் உண்மையான ஞானம்!" - சாக்ரடீஸ் இவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு 'சுதந்திரம்'. நூற்றுக்கும் 5. நூற்று

22

வேடிக்கை பார்ப்பவன் 22

18 January 2024
0
0
0

என்ன நடக்கிறது என்று என்ன நடக்கிறது என்று தெரிய மேஜையில் தேநீர் பதளமாய் கவிஞர் தேவநர்கள் இரண்டு சூரியன்" தொழும்பில் இருந்து கோப்பையைப் வைக்கிறேன் நடனமாய் மாறியபடி ஞாயிற்றுக்கிழமைகளை இவன் எந்த வே

23

வேடிக்கை பார்ப்பவன் - 23

18 January 2024
0
0
0

பசித்த புலியின் வேகம் "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" நகுலன் ('நினைவுப் பாதை' நாவலில் இருந்து...) எழுத்தாளர் சுஜாதா இவன் மேல் திருப்பிவிட்ட

24

வேடிக்கை பார்ப்பவன்-24

18 January 2024
0
0
0

நீங்கள் இயக்கிய 'சைக்கோ' திரைப்படத்தில் இடம்பெற்ற பாத்ரூம் கொலைக் காட்சியைப் பார்த்த பிறகு ஒரு மாதமாக என் மகள் குளிக்கவே இல்லை!" என்று ஒரு நாய் என்னிடம் சொன்னாள். நான் அவளிடம் சொன்னேன். 'தயவுசெய்து உங

25

வேடிக்கை பார்ப்பவன் -25

18 January 2024
0
0
0

குட்டிப் புத்தரின் கேள்வி "வாழ்க்கை, ஒரு மகாநதியைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் கரையில் நின்று, என் கண்ணுக்கு பட்டவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்." - எழுத்தாளர் வண்ணநிலவன் இந்த அத்தியாயத்த

26

வேடிக்கை பார்ப்பவன் - 26

18 January 2024
0
0
0

இவன் அவனாகும் அத்தியாயம் 'கீழைக்காட்டு வேம்பு கசந்தது அம்மாவின் சோகம் கேட்டுத்தான்!' -கவிஞர் த.பழமலய் ('சனங்களின் கதை' தொகுப்பில் இருந்து) அந்தப் பையனைக் காப்பாற்றுங்கள். அவன் ஏன் இப்படி இருக்கிறான

27

வேடிக்கை பார்ப்பவன் - 27

18 January 2024
0
0
0

பட்டாம்பூச்சி விற்ற கதை "ஒரு தேர் சக்கரத்தின் அளவு பூர்ண சந்திரன், இன்று ஒரு வீட்டுக் கூரையின் மேல் உதயமானான். தீப்பிடித்துவிட்டதோ என்று நினைத்தேன்!" தி.க.சிவசங்கரன் ('தி.க.சி-யின் நாட்குறிப்புகள்'

28

வேடிக்கை பார்ப்பவன் - 28

18 January 2024
0
0
0

அவையிடத்து முந்தியிருப்பச் செயல் 'ரத்தமும் சதையும் அல்ல... இதயம்தான் எங்களை தந்தை மகனாக இணைத்தது!' - எழுத்தாளர் ஓரான் பாமுக் எம்.ஏ., முடித்ததும், பச்சையப்பன் கல்லூரியிலேயே இவன் எம்.ஃபில்., சேர்ந்தா

29

வேடிக்கை பாறிப்பலன்-29

18 January 2024
0
0
0

'நிஜம்தாள் தாங்க முடியாத பாரம். அந்தப் பாரத்தை இறக்கியைக்க அல்ல, எவ்வளவு எடை என்று பார்த்துக்கொள்ளத்தான் இதை உல்களுக்கு எழுதுகிறேன். வெயிலில் உலர்த்துவது என் ஆகிவிட்டது. எல்லா இடத்திலும்நாளே வெயில் வி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்