shabd-logo

வேடிக்கை பார்ப்பவன் - 20

17 January 2024

0 பார்த்தது 0

இளவேனிற் காலம்

220

இதற்கு மேல் உருள முடியாது கல் நதியைவிட்டு கரையேறிற்று. இதற்கு மேல் வழ வழப்பாக்க முடியாது கல்லை ஒதுக்கிவிட்டு நதி ஏகிற்று!

கல்யாண்ஜி

பத்திரிகையில் வேலை செய்தாலும், இவனது தீராக்காதல் சினிமா மீதே இருந்தது. ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளின் மேல் சவாரி செய்வது தேசிங்குராஜனாலும் முடியாத ஒன்று என்று இவன் கண்டுகொண்ட காலம் அது.

'குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுபவன்' என்றொரு பழமொழி உண்டு. 'ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டு இருப்பவன்' என்று அதற்கு பொருள் சொல்வார்கள். இவனும் அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தான். இவன் மூன்றாம் வகுப்புப் படிக்கும்போது, தன் நண்பன் ஒருவனைப் பற்றி குறிப்பிட இந்தப் பழமொழியை, அப்பாவிடம் சொன்னான். அவர் இவனிடம் தெளிவுபடுத்தினார், "அதன் அர்த்தம் அப்படியல்ல... குன்று செடியில் குதிரை ஓட்டுபவன் என்பதுதான் அந்தப் பழமொழிக்குப் பொருள். குன்றின் மீதே குதிரை ஓட்டும் திறமைக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்ட இந்தப் பழமொழி, திறமையின்மைக்கு உதாரணமாக மருவி வழங்கப்படுகிறது!" என்று இவன் தந்தை சொல்ல, அதற்குப் பின்தான், இவன் அறிந்தான், இதைப் போல மருவிப் பொருள்கொண்ட 20,000 பழமொழிகளை சேகரித்துவைத்திருக்கிறார் என்று. அவர்

குன்றில் ஏறி குதிரை ஓட்டுவது போலத்தான் இவன் சினிமாக் கனவுகள் இருந்தன. இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரி செய்யும் சாகசத்தைத் தவிர்த்துவிட்டு, இவன் சினிமா எனும் கனவுக் குதிரையில் தாவிக் குதித்தான். ஆயினும், அந்தக் குதிரை இவன் வசப்பட பத்திரிகைகளே அந்தக் காலத்தில் துணையாக இருந்தன. 'சிறுகதைக் கதிர்', 'இனிய உதயம்', 'தமிழரசி', 'புதிய பார்வை', 'சுபமங்களா', 'ராஜரிஷி'... எனப் பல்வேறு பத்திரிகைகளில் ஃப்ரீலேன்ஸ்

பத்திரிகையாளனாகப் பணியாற்றிக்கொண்டே சினிமாக் குதிரையைத் துரத்திக்கொண்டிருந்தான்.

சம்பளம் கம்மி என்றபோதிலும், முழுநேரப் பத்திரிகையாளனைவிட, ஃப்ரீலேன்ஸ்

பத்திரிகையாளனுக்கு சுதந்திரம் அதிகம். வாரத்தில் ஒரு நாள் வேலை செய்தால் போதும். மீதி

ஆறு நாட்களை எப்படிக் கழிப்பது? இவன் தகப்பன், பள்ளியில் தமிழ் வகுப்பு எடுக்கும்

ஆசிரியன். தன் பிள்ளை ஒரு நாளாவது, ஏதோவொரு கல்லூரியில், வகுப்பு எடுக்க வேண்டும்

என்பது அவனது தீராத கனவு. தன் கனவையும், தகப்பனின் கனவையும் இவன் நிறைவேற்றத்

தலைப்பட்டான்.

இப்படித்தான் நண்பர்களே... இவன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில், எம்.ஏ., தமிழ்

இலக்கியப் பாடப் பிரிவுக்கு விண்ணப்பித்தான். 'பச்சையப்பன் படிக்கட்டும் பைந்தமிழ் பாடும்'

என்பார்கள். 'முதலில் பச்சையப்பன் படிக்கட்டும்... அப்புறம் பைந்தமிழ் பாடட்டும்...' என்று

அதன் தொனியை மாற்றிச் சொன்ன அந்தக் கல்லூரியின் தத்துவத் துறை பேராசிரியர் பெரியார்தாசனை, இவன் பின்னாட்களில் அறிந்துகொண்டான். அவரது நாத்திகப் பேச்சுகளைக் கேட்பதற்காகவே இவன் தகப்பன் இவனை சைக்கிளில் அமரவைத்து, பனிகொட்டும் இரவுகளில் அழைத்துச்சென்றது இப்போது நினைவுக்கு வருகிறது.

பச்சையப்பன் கல்லூரியில், இவன் படிக்க விரும்பியதன் காரணம், அது பேரறிஞர் அண்ணா படித்த கல்லூரி. அண்ணா மட்டுமா? அரசியல், இலக்கியம், விஞ்ஞானம்... என எந்தத் துறையை எடுத்தாலும் பச்சையப்பன் கல்லூரியில் படித்த மாணவர்கள் அங்கு இருப்பார்கள். ஆர்ம்ஸ்ட்ராங் செல்வதற்கு முன்பே, நிலவில் வடை சுட்ட பாட்டியின் முதல் வடையை வாங்கியவன், பச்சையப்பாஸ் ஸ்டூடன்ட்தான் என்ற கர்வம், பச்சையப்பன் மாணவர்களுக்கு உண்டு. அந்தக் கர்வத்தில் இவன் கலந்துகொள்ள விரும்பினான்.

பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த் துறையில் காலை நேர வகுப்பு, மாலை நேர வகுப்பு இரண்டுக்கும் சேர்த்து 50-க்கும் கீழான சீட்டுகளே இருந்தன. அந்த வருடம் 400-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்திருந்தன. இவன் காலை நேர வகுப்பில் படிக்க விரும்பினான். அதற்கு, கடும் போட்டி. அதே கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்த மாணவர்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை இவன் அறிந்திருந்தான். தவிர, இவன் இளங்கலையில் இயற்பியல் படித்திருந்ததால், வேறு பாடப்பிரிவு என்று நிராகரிக்கப்படும் சாத்தியங்களும் இருந்தன.

அதுவரையில் பத்திரிகையில் இவன் எழுதி வெளிவந்த 500-க்கும் மேற்பட்ட படைப்புகள் அடங்கிய ஃபைலையும், இவனது முதல் கவிதைத் தொகுப்பையும் எடுத்துக்கொண்டு தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் தெ.ஞானசுந்தரம் அவர்களைச் சந்தித்தான். காஞ்சி பச்சையப்பனில் இவனுக்குத் தமிழ் வகுப்பு எடுத்த பேராசிரியர் எஸ்.குருசாமி இவனை அவரிடம் அறிமுகப்படுத்திவைத்தார். "இவன் நல்லாக் கவிதை எழுதுவான் சார். சயின்ஸ்ல 90 பெர்சன்ட் மார்க் எடுத்துட்டு, தமிழ் படிக்கணும்னு வந்திருக்கான். நிச்சயம் இவனுக்கு நீங்க சீட் கொடுக்கணும்" என்று குருசாமி சார் சொல்ல, முனைவர் தெ.ஞா., இவனை மேலும் கீழுமாகப் பார்த்தார். "தம்பி... மதியம் ரெண்டு மணிக்கு என்னைத் தனியா வந்து பாருங்க" என்று சொல்லிவிட்டு, வகுப்பு எடுக்கப் போனார்.

இவன் கல்லூரியின் கட்டடங்களையும், மரங்கள் அடர்ந்த மைதானத்தையும் சுற்றி வந்தான். பேரறிஞர் அண்ணா, கணிதமேதை ராமானுஜன் என்று எத்தனை எத்தனை மேதைகள் படித்த கல்லூரி இது. எப்படியாவது இங்கு இடம் கிடைக்க வேண்டும் என்று மனது துடித்துக்கொண்டிருந்தது.

சரியாக 2 மணிக்கு முனைவர் தெ. ஞா., முன்பு நின்றான். "தம்பி உங்களை என் பையனா நெனச்சுச் சொல்றேன், பிசிக்ஸ்ல இவ்ளோ மார்க் எடுத்திருக்கீங்க. எதுக்கு தமிழ் படிச்சுக் கஷ்டப்படப்போறீங்க! பேசாம அறிவியல்லயே மேற்படிப்பு தொடருங்க" என்று அவர் சொல்ல, "இல்ல சார், எனக்கு பி.டெக் சீட் கெடைச்சது. அது வேணாம்னு ஒதுக்கிட்டு தமிழ் படிக்கலாம்னு வந்திருக்கேன். சீட் கொடுப்பீங்களா... மாட்டீங்களா?" என்று தீர்மானமாகக் கேட்டான்.

அவர், இவன் கண்களை ஒருசில விநாடிகள் உற்றுப் பார்த்துவிட்டு, இவன் விண்ணப்பத்தைத் தேடி எடுத்து பச்சை இங்க்கில் ஏதோ எழுதி "பிரின்ஸிபாலைப் போய்ப் பார்த்துட்டு ஆபீஸ்ல ஃபீஸ் கட்டிடுங்க. அடுத்த வாரம் வகுப்பு ஆரம்பம்" என்றார்.

இவன் நன்றி சொல்லிவிட்டுத் திரும்பும்போது, "ஒரு நிமிஷம் தம்பி" என்று மீண்டும் அருகில் அழைத்தார். இவன், "சொல்லுங்க சார்" என்றான். "சும்மா உங்க உறுதியைச் சோதிக்கத்தான் அப்படிச் சொன்னேன். ஒழுங்காப் படிச்சா தமிழ் எவனையும் தெருவுல நிக்கவெக்காது. ஓய்வா இருக்கும்போது வாங்க. நான் ரசிச்ச நூற்றுக்கணக்கான பாடல்களைக் குறிச்சுக் கொடுக்கிறேன். அதைப் புரிஞ்சுக்கிட்டு மனப்பாடம் பண்ணா மட்டும் போதும். வாழ்ற வரைக்கும் நீங்க பேசியே பொழச்சிக்கலாம்" என்றார். இவன் சட்டென்று அவர் பாதங்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான். இவனைத் தூக்கி எழுப்பிய அவர் கண்கள் ஏனோ கலங்கி இருந்தன.

முதல் நாள் கல்லூரிக்குள் நுழைந்தபோது, வள்ளுவனும் கம்பனும் வானத்தில் இருந்து இவன் மேல் பூக்களைத் தூவினார்கள். இவன் தொன்ம பாட்டன் தொல்காப்பியன் தொடுவானத்தின் தொலைதூரத்துக்கு அப்பால் இருந்து. இவனுக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பியிருந்தான். கபிலரும் பரணரும் காற்றில் அரூபமாக மிதந்துவந்து இவனை வகுப்பறையில் அமரவைத்தார்கள்.

இவனைப் போல பாக்கியம் செய்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. தேர்ந்த ஆசான்களிடம் இவன் தமிழ் தமிழ் கற்றான். பேராசிரியரும் கவிஞருமான குருவிக்கரம்பை சண்முகம், பேராசிரியரும் இயக்குநருமான ஏ.எஸ்.பிரகாசம், பேராசிரியர்கவிஞர் மு.பி.பாலசுப்பிரமணியம், பேராசிரியர் விமர்சகர் ராம.குருநாதன், பேராசிரியர் ரா.தட்சிணாமூர்த்தி, பேராசிரியர் ஜெயப்பிரகாசம்... எனப் பல துரோணாச்சாரியார்கள் இவனுக்குச் சொல் வித்தையைக் கற்றுக்கொடுத்தார்கள்.

அவர்கள் கைப்பிடித்து இவன் தொல்காப்பியனின் மரபியல் அறிந்தான்; வள்ளுவனின் வாழ்வியல் உணர்ந்தான்; கம்பனின் விருத்தத்திலும், கபிலனின் குறிஞ்சியிலும், அப்பரின் ஆன்மிகத்திலும், திருஞானசம்பந்தனின் மெய்சிலிர்ப்பிலும், இளங்கோவடிகளின் அறச்சீற்றத்திலும், கலிங்கத்துப்பரணியின் களியாட்டத்திலும், குற்றாலக்குறவஞ்சியின் குரங்காட்டத்திலும், அருணகிரிநாதரின் சந்தத்திலும், சித்தர் பாடல்களின் கோபத்திலும், இவன் முங்கி முக்குளித்தான்.

காஞ்சி இலக்கிய வட்டம் மூலமாகவும், இவன் தந்தை மூலமாகவும் ஏற்கெனவே நவீன

இலக்கிய எழுத்துகள் இவனுக்குப் பரிச்சயம் ஆகியிருந்தன. இப்போது சங்க இலக்கிய நதியிலும்

நீந்தத் தொடங்கினான். இப்படித்தான் இந்த மரம் தன் ஆழத்து வேர்களையும், ஆகாயத்தை உரசும்

கிளைகளையும் அறிந்துகொண்டு பூப்பூக்கத் தொடங்கியது.

ஒரு மாணவன் வேதியியல் படித்தால். அந்தப் பாடப்புத்தகம் வேதியியலை மட்டும்தான் கற்றுத்

தரும். இப்படித்தான் கணிதமும். இயற்பியலும், கணிப்பொறியும், பொறியியலும், மருத்துவமும் அந்தந்தத் துறையைச் சார்ந்த அறிவை மட்டுமே வளர்க்கும். ஆனால், இலக்கியம் மட்டுமே வாழ்க்கையைச் சொல்லிக்கொடுக்கும். சகமனிதர்கள் மீதான மனித நேயத்தை, தோல்விகளைத் துரத்தும் தன்னம்பிக்கையை, புல் நுனியில் தூங்கும் பனித்துளியின் அழகியலை வேறு எந்தப் பாடம் சொல்லிக்கொடுக்கும்? இவன் கண்ணீர் மல்கி கசிந்துருகிக் காதலித்து தமிழ் கற்றான்.

பச்சையப்பன் கல்லூரியைப் பற்றி நினைக்கும்போது அதன் நூலகம் இவன் கண் முன் வருகிறது. அந்துப் பூச்சிகளுக்கு விடுதலை அளித்து இவன் நூற்றுக்கணக்கான புத்தகங்களை அங்கு தேடித் தேடிப் படித்தான். இவன் கல்லூரியில் சேர்ந்த அடுத்த மாதம் நாவலர் போட்டிக்கான அறிவிப்பு, நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டது. அப்போது சென்னையில் அனைத்துக் கல்லூரிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி... எனப் பல்வேறு கல்லூரிகளில் போட்டிகள் நடக்கும். ஒரு கல்லூரியில் இருந்து இரண்டு மாணவர்கள் மட்டுமே அதில் பங்கேற்க முடியும். அந்த இரண்டு பேரைத் தேர்ந்தெடுப்பதற்காக பச்சையப்பன் கல்லூரியில் 'நாவலர் போட்டி' என்று ஒன்றை நடத்துவார்கள். போட்டிக்கு அரை மணி நேரம் முன்பு ஏதோவொரு தலைப்பு கொடுத்து கவிதையோ, பேச்சோ, ஓவியமோ, அந்தந்தத் துறையில் இரண்டு பேரைத் தேர்ந்தெடுப்பார்கள். இவன் கவிதைப் போட்டிக்குத் தன் பெயரைப் பதிவுசெய்துவிட்டு 'என்ன தலைப்பு கொடுப்பார்கள்?' என்ற பதற்றத்துடன் காத்திருக்கத் தொடங்கினான்.

நா. முத்துக்குமார் மூலம் மேலும் புத்தகங்கள்

1

வேடிக்கை பார்ப்பவன் -2

15 January 2024
0
0
0

குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்! ஜென் கவிதை சனி, ஞாயிறு தவிர்த்து, தினமும் காலையில் இவனும் இவன் மகனும் பள்ளிக்குக் கிளம்புவார்கள். மகன் படிக்கும் பள்ளி ய

2

வேடிக்கை பார்ப்பவன் -1

15 January 2024
0
0
0

வெந்து தணிந்தது காடு முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானு  ம் இட்ட தீ மூள்க மூள்கவே! - பட்டினத்தார் ஒரு மிகப் பெரிய பொருட்காட்சிசாலையாக இந்தப்

3

வேடிக்கை பார்ப்பவன் - 3

15 January 2024
0
0
0

'என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!' - கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் அம்மா இறந்த பிறகு, இவன் அப

4

வேடிக்கை பார்ப்பவன் - 4

15 January 2024
0
0
0

'அவன், குதிங்காலிட்டு உட்கார்ந்தான்; சப்பணமிட்டு உட்கார்ந்தான்; ஒரு காலை நீட்டி உட்கார்ந்து பார்த்தான்; வயிற்றோடு முழங்காலைச் சேர்த்து ஒட்டி உட்கார்ந்து பார்த்தான். இப்படியும் அப்படியுமாக எப்படி உட்கா

5

வேடிக்கை பார்ப்பவன் - 5

15 January 2024
0
0
0

சமூகம் என்பது நான்கு பேர்.' - ஜெயகாந்தன் 5, 4, 3, 2, 1, 0 என்று தலைகீழாக கவுன்ட் டவுன் சொல்லி, ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புவதைப் போலத்தான் தினமும் இவன் தன் மகனை பள்ளிக்கு அனுப்புவதும். திருவாளர் ம

6

வேடிக்கை பார்ப்பவன் - 6

16 January 2024
0
0
0

வயதென்னும் ரயில் வண்டி 'அந்த மாபெரும் வெற்றிடத்தில் முன்னும் இல்லை, பின்னும் இல்லை பறவையின் பாதை கிழக்கையும் மேற்கையும் அழித்துவிடுகிறது.' ஜென் தத்துவம் பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு 10 நிமிட

7

வேடிக்கை பார்ப்பவன் - 7

16 January 2024
0
0
0

பள்ளித் தலமனைத்தும்... "உண்மையில், பள்ளிக்கூடம் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. திடீரென என் உலகம் மிகவும் பெரிதாகிவிட்டது. வீட்டைவிட்டு தினமும் வெளியே செல்வதற்கு இப்படி ஓர் அற்ப

8

வேடிக்கை பார்ப்பவன்-8

16 January 2024
0
0
0

 எமக்குத் தொழில் கவிதை 'முதலாளிமார்கள் விரல் எல்லாம் மோதிரங்கள் மனசெல்லாம் தந்திரங்கள்!' - கவிஞர் விக்ரமாதித்யன் ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும், இவனுக்குள் கோடீஸ்வரக் கனவு ஒன்று பூக்கத் தொடங்கும்

9

வேடிக்கை பார்ப்பவன்-9

16 January 2024
0
0
0

புன்னகைக்க மறந்த கதை "கண் சிமிட்டும் நேரத்தில் ஓர் உன்னதத் தருணம் புகைப்படம் ஆகிறது. அந்தத் தருணத்துக்கான காத்திருத்தலே, புகைப்படக் கலை. இருளை உணர்ந்தவனே, ஒளியில் வாழக் கற்றுக்கொள்கிறான்!" -பி.சி.ஸ்

10

வேடிக்கை பார்ப்பவன் - 10

16 January 2024
0
0
0

இவன், இவனான கதை! "இப்பொழுதும் அங்குதான் இருக்கிறீர்களா?" என்று கேட்டார். "எப்பொழுதும் அங்குதான் இருப்பேன்" என்றேன். - நகுலன் ('கோட் ஸ்டாண்ட்' கவிதைகள் தொகுப்பிலிருந்து...) போலந்து திரைப்பட இயக்கு

11

வேடிக்கை பார்ப்பவன் - 11

16 January 2024
0
0
0

தீராத விளையாட்டு வாழ்க்கையின் இருக்கலாம். கேள்விகள் ஆனால், எளிமையாகத்தான் இருக்கின்றன!" வேடிக் கடினமாக விடைகள் 211 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் "நா"ன்தான் டாம். நீங்க ஜெர்ரியாம். ஓடிப்போயி ஒளிஞ்சிக்குங்க.

12

வேடிக்கை பார்ப்பவன் - 12

16 January 2024
0
0
0

வீடென்பது யாதெனில்... "எனது புறநகர் குடியிருப்பு வயல்களின் சமாதி என்று நினைவுபடுத்தியவை தவளைகளே!" - சுகுமாரன் - 'பூமியை வாசிக்கும் சிறுமி' கவிதைத் தொகுப்பில் இருந்து... இன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில

13

வேடிக்கை பார்ப்பவன் - 13

16 January 2024
0
0
0

நிலாக் காலம் 'எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ? எந்த அழகை எந்த விழியில் கொண்டுசெல்வோமோ? இந்த நாளை வந்த நாளில் மறந்துபோவோமோ?' -கவியரசு கண்ணதாசன் ('பசுமை நிறைந்த நினைவுகளே...' பாடலில் இருந்து)

14

வேடிக்கை பார்ப்பவன் - 14

17 January 2024
0
0
0

சாலைகளின் பாடல் "நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சினிமா பார்ப்பதைப் போலத்தான். ஆனால், படம் முடிந்த பின் க்ளைமாக்ஸ் என்ன என்பது படம் பார்த்தவருக்குத் தெரியாது!" -ரோமன் பொலன்ஸ்கி, போலந்து திரைப்பட இயக்குந

15

வேடிக்கை பார்ப்பவன் - 15

17 January 2024
0
0
0

கனவின் கைப்பிடியில் "கட்டடங்களின் விரிசல்களுக்கு இடையே வேர் விட்டுப் பூக்கும் ரோஜாச் செடிகளை நீங்கள் பார்த்ததுண்டா? இயற்கை விதிகளைத் தவறாக்கி கால்கள் இல்லாமல் நடக்க அவை கற்றுக்கொடுக்கின்றன; அவை கனவுக

16

வேடிக்கை பார்ப்பவன் - 16

17 January 2024
0
0
0

குறுக்கு வெட்டுத் தோற்றம் தாமிரக் காசை தண்டவாளத்தில் வெச்சி நாம பதுங்க ரயில் நசுக்கும் - ராமையா கால ரயிலோட நாமெல்லாம் காசானோம் வாலிபம் போய் ஆச்சே வயசு! பார்ப்பவன் -வெ.சேஷாசலம் ('ஆகாசம்பட்டு' தொகுப்

17

வேடிக்கை பார்ப்பவன் - 17

17 January 2024
0
0
0

முன்பனிக்காலம் "நீ கிளையைக் கவனமாக வரைய முடியுமானால், உன்னால் காற்றின் ஒலியைக் கேட்க முடியும்!" - ஜென் தத்துவம் (எஸ்.ராமகிருஷ்ணனின் ஜென் கவிதைகள் நூலில் இருந்து) சினிமா, விநோதமான ஒரு ரங்கராட்டினம்.

18

வேடிக்கை பார்ப்பவன் - 18

17 January 2024
0
0
0

பின் பனிக் காலம் "பழத்தைப் பார்த்து பூ கேட்டது, 'இத்தனை நாளாய் எங்கு இருந்தாய்?' பூ சொன்னது, 'உன் இதயத்தில்தான் ஒளிந்திருந்தேன்!"' -தாகூர் (வழி தப்பிய பறவைகள் தொகுப்பில் இருந்து) வேலையற்றவனின் பகலு

19

வேடிக்கை பார்ப்பவன் - 19

17 January 2024
0
0
0

இவன் நானாகும் அத்தியாயம் 'நான் இல்லாமல் போகிறேன் ஆனால் வசந்த காலம் என்னுடைய நினைவுகளுடன் இருந்து கொண்டேதானிருக்கும்!' -இறக்கப்போகிற கடைசி நிமிடத்தில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ அன்புள்ள பாலுமகேந்த

20

வேடிக்கை பார்ப்பவன் - 20

17 January 2024
0
0
0

இளவேனிற் காலம் 220 இதற்கு மேல் உருள முடியாது கல் நதியைவிட்டு கரையேறிற்று. இதற்கு மேல் வழ வழப்பாக்க முடியாது கல்லை ஒதுக்கிவிட்டு நதி ஏகிற்று! கல்யாண்ஜி பத்திரிகையில் வேலை செய்தாலும், இவனது தீராக்கா

21

வேடிக்கை பார்ப்பவன -21

17 January 2024
0
0
0

'பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்' "உனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிந்துகொள்வதுதான் உண்மையான ஞானம்!" - சாக்ரடீஸ் இவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு 'சுதந்திரம்'. நூற்றுக்கும் 5. நூற்று

22

வேடிக்கை பார்ப்பவன் 22

18 January 2024
0
0
0

என்ன நடக்கிறது என்று என்ன நடக்கிறது என்று தெரிய மேஜையில் தேநீர் பதளமாய் கவிஞர் தேவநர்கள் இரண்டு சூரியன்" தொழும்பில் இருந்து கோப்பையைப் வைக்கிறேன் நடனமாய் மாறியபடி ஞாயிற்றுக்கிழமைகளை இவன் எந்த வே

23

வேடிக்கை பார்ப்பவன் - 23

18 January 2024
0
0
0

பசித்த புலியின் வேகம் "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" நகுலன் ('நினைவுப் பாதை' நாவலில் இருந்து...) எழுத்தாளர் சுஜாதா இவன் மேல் திருப்பிவிட்ட

24

வேடிக்கை பார்ப்பவன்-24

18 January 2024
0
0
0

நீங்கள் இயக்கிய 'சைக்கோ' திரைப்படத்தில் இடம்பெற்ற பாத்ரூம் கொலைக் காட்சியைப் பார்த்த பிறகு ஒரு மாதமாக என் மகள் குளிக்கவே இல்லை!" என்று ஒரு நாய் என்னிடம் சொன்னாள். நான் அவளிடம் சொன்னேன். 'தயவுசெய்து உங

25

வேடிக்கை பார்ப்பவன் -25

18 January 2024
0
0
0

குட்டிப் புத்தரின் கேள்வி "வாழ்க்கை, ஒரு மகாநதியைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் கரையில் நின்று, என் கண்ணுக்கு பட்டவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்." - எழுத்தாளர் வண்ணநிலவன் இந்த அத்தியாயத்த

26

வேடிக்கை பார்ப்பவன் - 26

18 January 2024
0
0
0

இவன் அவனாகும் அத்தியாயம் 'கீழைக்காட்டு வேம்பு கசந்தது அம்மாவின் சோகம் கேட்டுத்தான்!' -கவிஞர் த.பழமலய் ('சனங்களின் கதை' தொகுப்பில் இருந்து) அந்தப் பையனைக் காப்பாற்றுங்கள். அவன் ஏன் இப்படி இருக்கிறான

27

வேடிக்கை பார்ப்பவன் - 27

18 January 2024
0
0
0

பட்டாம்பூச்சி விற்ற கதை "ஒரு தேர் சக்கரத்தின் அளவு பூர்ண சந்திரன், இன்று ஒரு வீட்டுக் கூரையின் மேல் உதயமானான். தீப்பிடித்துவிட்டதோ என்று நினைத்தேன்!" தி.க.சிவசங்கரன் ('தி.க.சி-யின் நாட்குறிப்புகள்'

28

வேடிக்கை பார்ப்பவன் - 28

18 January 2024
0
0
0

அவையிடத்து முந்தியிருப்பச் செயல் 'ரத்தமும் சதையும் அல்ல... இதயம்தான் எங்களை தந்தை மகனாக இணைத்தது!' - எழுத்தாளர் ஓரான் பாமுக் எம்.ஏ., முடித்ததும், பச்சையப்பன் கல்லூரியிலேயே இவன் எம்.ஃபில்., சேர்ந்தா

29

வேடிக்கை பாறிப்பலன்-29

18 January 2024
0
0
0

'நிஜம்தாள் தாங்க முடியாத பாரம். அந்தப் பாரத்தை இறக்கியைக்க அல்ல, எவ்வளவு எடை என்று பார்த்துக்கொள்ளத்தான் இதை உல்களுக்கு எழுதுகிறேன். வெயிலில் உலர்த்துவது என் ஆகிவிட்டது. எல்லா இடத்திலும்நாளே வெயில் வி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்