shabd-logo

வேடிக்கை பார்ப்பவன் -2

15 January 2024

0 பார்த்தது 0

குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்!

ஜென் கவிதை

சனி, ஞாயிறு தவிர்த்து, தினமும் காலையில் இவனும் இவன் மகனும் பள்ளிக்குக் கிளம்புவார்கள். மகன் படிக்கும் பள்ளி யில் அவனை இறக்கி விட்டுவிட்டு, இவன் தன் பள்ளிக்குப் புறப்பட்டுப் போவான். இன்றுவரை மகனது நம்பிக்கையில் இவனும் ஒரு மாணவன்தான். தேர்ட் ஸ்டாண்டர்ட் 'எ' செக்ஷன் படிக்கிறான். அதுவும் பல வருடங்கள் அதே தேர்ட் ஸ்டாண்டர்டில் ஃபெயிலாகி ஃபெயிலாகி 'கே' செக்ஷனில் இருந்து இப்போதுதான் 'எ' செக்ஷன் வந்திருக்கிறான்.

பள்ளிக்குச் செல்லும் வழியில் இவர் களது உரையாடல் இப்படித் தொடங்கும்.

'அப்பா... ஹோம்வொர்க் பண்ணிட் டீங்களா?'

'அய்யோ மறந்திட்டேன் ராஜா!'

'போச்சு. நல்லா மாட்டிக்கிட்டீங்க... உங்க வேணு மிஸ் உங்களை பெண்டு எடுக்கப்போறாங்க!'

'அதுசரி... நீ ஹோம் வொர்க் பண்ணிட்டியா?'

'நான் நேத்தே பண்ணிட்டேம்பா. எங்க பானு மிஸ் வெரி குட் சொல்லுவாங்க.'

'என்னடா பண்ணலாம்? அப்பாவுக்கு பயம்மா இருக்குடா!'

'போற வழியில ஏதாவது பார்க்ல உட்கார்ந்து எழுதிட்டுப் போங்கப்பா. இல்லன்னா ஸ்டாண்ட் அப் ஆன் தி பெஞ்ச்ல ஏத்தி, ஸ்கேலால புட்டாச்சுல அடிப்பாங்க!'

இவன், மகன் பார்க்கும்படி தன் புட்டாச்சைத் தடவிக்கொள்வான்.

வேடிக்கை ர்ப்பவன்

2

AR

'நீ சொல்றதும் கரெக்ட்தான்டா!'

'பார்த்துப்பா... இந்த வருஷமும் ஃபெயிலாயிடப்போறீங்க!'

இதற்குள் மகன் படிக்கும் பள்ளி வந்து, இவனுக்காக ஓர் ஆறுதல் பார்வையை வீசிவிட்டு டாட்டா காட்டியவாறு மகன் உள்ளே செல்வான்.

இப்போது இவன் யோசித்துப்பார்க்கிறான். இந்த பானு மிஸ்ஸும், வேணு மிஸ்ஸும் எப்படி இவன் வாழ்க்கைக்குள் நுழைந்தார்கள்?

இரண்டு வருடங்களுக்கு முன்பு கோடை விடுமுறைக்காக குடும்பத்துடன் பெங்களூரு சென்றிருந்தான். நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தார்கள். பார்க், தீம் பார்க், வாட்டர் தீம் பார்க் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விளையாட்டு. கம்பனின் வார்த்தைகளில் சொல்வதென்றால், 'அலகிலா விளையாட்டு'. இவனது மகனுடன் நண்பரின் குழந்தைகளும் சேர்ந்துவிட, வானர சேனை ஊருக்குள் வந்ததுபோல் இருந்தது. மனிதன் குரங்கிலிருந்துதான்

பிறந்தான் என்ற டார்வின் தியரியின் வெளிச்சத்தை அப்போதுதான் முழுமையாகக் கண்டுகொண்டான். மூத்த குரங்குகளுக்கு வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு என்ன வழி?

விடுமுறை முடிந்து சென்னை வந்து, வீட்டைத் திறக்க சாவியைத் திணிக்கையில், இவன் மகன் இவனை மிரட்சியுடன் பார்த்தான்.

'வேணாம்பா.. நாம திரும்பவும் பெங்களூருக்கே போயிடலாம்!'

'ஏன்டா?'

'நாளைக்கு ஸ்கூல் திறக்குறாங்க. இந்த வருஷம் பானு மிஸ் கிளாஸ் டீச்சரா வரப் போறாங்களாம். போன வருஷம் எனக்கு ஈ.வி.எஸ். எடுத்தவங்க. ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுப்பா. நான் ஸ்கூலுக்குப் போகவே மாட்டேன்' என்றபடி இவன் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டான். அந்தக் கைப்பிடியில் இருந்த அச்சமும் பதட்டமும் இவனை பல வருடங்களுக்கு முன்னே கூட்டிச்சென்று, இவன் தான் படித்த பள்ளியின் வாசலில் தன் தகப்பனின் கைவிரல் பிடித்து அழுதபடி கெஞ்சிய அந்தக் காலத்தில் நிறுத்தியது.

'சரிடா... இனிமே நீ ஸ்கூலுக்குப் போக வேணாம்' என்று சமாதானப்படுத்தி வீட்டுக்குள் கூட்டிச்சென்றான்.

இரவு உணவு முடிந்து படுக்கை அறையில் மகனுக்கு கதை சொல்லும் படலம் தொடங்கியது. பொய்யில் தோய்ந்த ஒரு பேருண்மையை மகனுக்கு இவன் சொல்லத் தொடங்கினான்.

'உன்னை மாதிரிதான்டா அப்பாவும் தினமும் ஸ்கூலுக்குப் போறேன்.'

மகன் ஆச்சர்யத்துடன், 'அப்படியா! உங்க மிஸ் பேரு என்ன?'

'என் மிஸ் பேரு இருக்கட்டும். உங்க மிஸ் பேரு என்ன?'

'பானு மிஸ்.'

'அப்ப எங்க மிஸ் பேரு வேணு மிஸ்.'

'வேணு மிஸ் எப்படி இருப்பாங்க?'

'முதல்ல உங்க பானு மிஸ் எப்படி இருப்பாங்கனு சொல்லு.'

'நல்லா அழகா இருப்பாங்க! கலர் கலரா சேலை கட்டிட்டு வருவாங்க. மழை பேஞ்சா தானே

குடை பிடிப்பாங்க? எங்க பானு மிஸ், மழை இல்லேன்னாலும் டெய்லி குடை பிடிச்சுட்டு

வருவாங்க.'

'நல்ல மிஸ்ஸா இருக்காங்களே...'

10 11 12

'நல்ல மிஸ்தான்ப்பா. ஆனா, டெய்லி டெய்லி படிக்கச் சொல்வாங்க. ஹோம்வொர்க் எழுதச் சொல்வாங்க."

'நல்ல விஷயம்தானப்பா... படிச்சாதான

நீ பெரியாளா ஆக முடியும்?'

'சரிப்பா... உங்க வேணு மிஸ் பத்தி சொல்லுங்க?'

فد... பெருசா கொண்டை போட்டிருப்பாங்க... அதைவிட பெருசா கண்ணாடி போட்டிருப்பாங்க. அதையும்விட பெருசா கைல ஒரு வெச்சிருப்பாங்க. எப்பவுமே கோவமா இருப்பாங்க. சிரிக்கவே மாட்டாங்க!' ஸ்கேல்

'சிரிக்கவே மாட்டாங்களா... செம காமெடிப்பா. வேற என்ன பண்ணுவாங்க?"

'ஹோம்வொர்க் பண்ணலைனா, ஸ்டாண்ட் அப் ஆன் தி பெஞ்சுல ஏத்தி ஸ்கேலால புட்டாச்சுலயே அடிப்பாங்க.'

'புட்டாச்சுல அடிப்பாங்களா? உட்காரும் போது வலிக்குமே... பாவம்பா நீங்க. உங்க வேணு மிஸ்ஸைவிட எங்க பானு மிஸ் ரொம்ப நல்லவங்க. நாளையில இருந்து நான் ஸ்கூலுக்குப் போறேம்ப்பா' என்று சொல்லிவிட்டு இவன் புட்டாச்சியைத் தன் பிஞ்சு விரல்களால் தடவிவிட்டபடி மகன் தூங்கிப்போனான்.

அன்றிலிருந்து தினமும் பானு மிஸ்ஸின் சாதனைகளும், வேணு மிஸ்ஸின் வேதனைகளும் இவன் படுக்கை அறையின் சுவற்றில் ஓவியங்களாக வியாபிக்க ஆரம்பித்தன.

ஓர் ஞாயிறு அதிகாலையில் பாடல் பதிவை முடித்துவிட்டு இவன் வீட்டுக்கு வந்து படுத்தான். உறக்கத்தின் ஆழத்தில் யாரோ எழுப்புவதுபோல் இருந்தது. விருப்பமின்றி கண் இமைகளைப் பிரித்தான். எதிரில் இவன் மகன்.

'அப்பா ஹாலுக்கு வாங்க... யாரு வந்திருக்காங்க பாருங்க?'

'யாருடா?'

'வந்து பாருங்கப்பா' என்று இவன் கையைப் பிடித்து ஹாலுக்கு அழைத்துச் செல்ல, ஹாலில் நாற்பது வயது மதிக்கத் தக்க ஒரு பெண் அமர்ந்திருந்தார்.

'யாரு தெரியுதப்பா?'

தூக்கக் கலக்கத்துடன் 'யாருடா?' என்றான். 'உங்க வேணு மிஸ்ஸுப்பா' என்று மகன் சொல்ல, இவன் தூக்கம் கலைந்தேபோனது. வந்த பெண்ணை உற்றுப்பார்த்தான். பெரிதாக கொண்டை போட்டு, அதைவிடப் பெரிதாக கண்ணாடி போட்டு, அதையும்விடப் பெரிதாக கையில் ஒரு ஸ்கேலைப் பிடித்தபடி, இவன் தன் மகனுக்கு கதையில் சொன்ன அதே வேணு மிஸ்.

'முத்துக்குமரன்... நேத்து ஏன் ஸ்கூலுக்கு வரல? ஸ்டாண்ட் அப் ஆன் தி பெஞ்ச்' என்று வேணு மிஸ் அதட்ட, 'பாரும்மா நேத்து ஸ்கூலுக்குப் போகாம நம்மளை ஏமாத்திட்டு அப்பா எங்கேயோ போயிருக்காரு' என்று மகன் எடுத்துக்கொடுக்க, இவன் மனைவி, வேணு மிஸ்ஸின் கையில் காபி டம்ளரை கொடுத்து கோபத்தைத் திசை மாற்றிக்கொண்டிருந்தாள்.

இது கனவா, நிஜமா என்று கையைக் கிள்ளிப் பார்ப்பதற்குப் பதிலாக, இவன் புட்டாச்சியைத் தடவிக்கொண்டிருந்தான். தன்

'நாளையிலிருந்து ஒழுங்கா ஸ்கூலுக்கு வரணும். ஒ.கே' என்றபடி வேணு மிஸ் விடைபெற. இவன் வேணு மிஸ்ஸுடன் லிஃப்ட்டை go நோக்கி நடந்தான். லிஃப்ட்டுக்காகக் காத்திருந்த இடைவேளையில், 'இங்க பாருங்க மேடம். நீங்க யாருனே எனக்குத் தெரியாது. நான் ஒரு கவிஞன். சினிமாவில நான் எழுதின பாட்டெல்லாம்கூட நீங்க கேட்டிருப்பீங்க. என் பையன் நல்லாப் படிக்கணுங்கிறதுக்காக, வேணு மிஸ்னு சும்மா பொய்யா ஒரு கதை சொன்னேன். அதுக்காக இப்படிக் கிளம்பி வந்துடுறதா?' என்றான் கோபத்துடன்.

லிஃப்ட் வந்து நின்று உள்ளே ஏறியதும், அந்தப் பெண் இவனைப் பார்த்து சொன்னாள். 'இங்க பாரு முத்துக்குமரன், உண்மையிலேயே நான் உன் வேணு மிஸ்தான். நீ கவிஞனா இருக்கலாம். ஆனா, நீ சொல்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் ஓர் உயிர் இருக்கு. நீ சொல்லும்போதே அது கை காலு முளைச்சு வளர ஆரம்பிச்சிடுது. இப்பவும் நீ என் ஸ்டூடன்ட்தான். அதே தேர்ட் ஸ்டாண்டர்ட் 'எ' செக்ஷன்ல படிக்கிற மக்கு ஸ்டூடன்ட். இனிமேலாவது உன் பையனுக்கு இந்த மாதிரி அபத்தமான கதைகளைச் சொல்லாதே. ஏன்னா... கதைகள் பொய்தான். ஆனா, அது சொல்லப்படும் போதும், மத்தவங்களால கேட்கப்படும்போதும், கை-கால் முளைச்சு நிஜமா மாறிடுது' என்றபடி பார்க்கிங்கில் தன் ஸ்கூட்டியைத் தேடி அதில் ஏறி காணாமல் போனாள்.

இவன் அதை அதிர்ச்சியுடன் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான். அந்த ஸ்கூட்டியின் எண் இவன்

தன் மகனுக்கு கதையில் சொன்ன அதே TN 00 E -1111.

இப்போதெல்லாம் இவன் தன் மகனுக்கு கதை சொல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக

இருக்கிறான். காட்டைவிட்டு இவன் வீடு மிகத் தொலைவில் இருந்தாலும் சிங்கம், புலி, யானை,

நரி, கரடி வரும் கதைகளைச் சொல்வதே இல்லை!

நா. முத்துக்குமார் மூலம் மேலும் புத்தகங்கள்

1

வேடிக்கை பார்ப்பவன் -2

15 January 2024
0
0
0

குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்! ஜென் கவிதை சனி, ஞாயிறு தவிர்த்து, தினமும் காலையில் இவனும் இவன் மகனும் பள்ளிக்குக் கிளம்புவார்கள். மகன் படிக்கும் பள்ளி ய

2

வேடிக்கை பார்ப்பவன் -1

15 January 2024
0
0
0

வெந்து தணிந்தது காடு முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானு  ம் இட்ட தீ மூள்க மூள்கவே! - பட்டினத்தார் ஒரு மிகப் பெரிய பொருட்காட்சிசாலையாக இந்தப்

3

வேடிக்கை பார்ப்பவன் - 3

15 January 2024
0
0
0

'என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!' - கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் அம்மா இறந்த பிறகு, இவன் அப

4

வேடிக்கை பார்ப்பவன் - 4

15 January 2024
0
0
0

'அவன், குதிங்காலிட்டு உட்கார்ந்தான்; சப்பணமிட்டு உட்கார்ந்தான்; ஒரு காலை நீட்டி உட்கார்ந்து பார்த்தான்; வயிற்றோடு முழங்காலைச் சேர்த்து ஒட்டி உட்கார்ந்து பார்த்தான். இப்படியும் அப்படியுமாக எப்படி உட்கா

5

வேடிக்கை பார்ப்பவன் - 5

15 January 2024
0
0
0

சமூகம் என்பது நான்கு பேர்.' - ஜெயகாந்தன் 5, 4, 3, 2, 1, 0 என்று தலைகீழாக கவுன்ட் டவுன் சொல்லி, ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புவதைப் போலத்தான் தினமும் இவன் தன் மகனை பள்ளிக்கு அனுப்புவதும். திருவாளர் ம

6

வேடிக்கை பார்ப்பவன் - 6

16 January 2024
0
0
0

வயதென்னும் ரயில் வண்டி 'அந்த மாபெரும் வெற்றிடத்தில் முன்னும் இல்லை, பின்னும் இல்லை பறவையின் பாதை கிழக்கையும் மேற்கையும் அழித்துவிடுகிறது.' ஜென் தத்துவம் பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு 10 நிமிட

7

வேடிக்கை பார்ப்பவன் - 7

16 January 2024
0
0
0

பள்ளித் தலமனைத்தும்... "உண்மையில், பள்ளிக்கூடம் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. திடீரென என் உலகம் மிகவும் பெரிதாகிவிட்டது. வீட்டைவிட்டு தினமும் வெளியே செல்வதற்கு இப்படி ஓர் அற்ப

8

வேடிக்கை பார்ப்பவன்-8

16 January 2024
0
0
0

 எமக்குத் தொழில் கவிதை 'முதலாளிமார்கள் விரல் எல்லாம் மோதிரங்கள் மனசெல்லாம் தந்திரங்கள்!' - கவிஞர் விக்ரமாதித்யன் ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும், இவனுக்குள் கோடீஸ்வரக் கனவு ஒன்று பூக்கத் தொடங்கும்

9

வேடிக்கை பார்ப்பவன்-9

16 January 2024
0
0
0

புன்னகைக்க மறந்த கதை "கண் சிமிட்டும் நேரத்தில் ஓர் உன்னதத் தருணம் புகைப்படம் ஆகிறது. அந்தத் தருணத்துக்கான காத்திருத்தலே, புகைப்படக் கலை. இருளை உணர்ந்தவனே, ஒளியில் வாழக் கற்றுக்கொள்கிறான்!" -பி.சி.ஸ்

10

வேடிக்கை பார்ப்பவன் - 10

16 January 2024
0
0
0

இவன், இவனான கதை! "இப்பொழுதும் அங்குதான் இருக்கிறீர்களா?" என்று கேட்டார். "எப்பொழுதும் அங்குதான் இருப்பேன்" என்றேன். - நகுலன் ('கோட் ஸ்டாண்ட்' கவிதைகள் தொகுப்பிலிருந்து...) போலந்து திரைப்பட இயக்கு

11

வேடிக்கை பார்ப்பவன் - 11

16 January 2024
0
0
0

தீராத விளையாட்டு வாழ்க்கையின் இருக்கலாம். கேள்விகள் ஆனால், எளிமையாகத்தான் இருக்கின்றன!" வேடிக் கடினமாக விடைகள் 211 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் "நா"ன்தான் டாம். நீங்க ஜெர்ரியாம். ஓடிப்போயி ஒளிஞ்சிக்குங்க.

12

வேடிக்கை பார்ப்பவன் - 12

16 January 2024
0
0
0

வீடென்பது யாதெனில்... "எனது புறநகர் குடியிருப்பு வயல்களின் சமாதி என்று நினைவுபடுத்தியவை தவளைகளே!" - சுகுமாரன் - 'பூமியை வாசிக்கும் சிறுமி' கவிதைத் தொகுப்பில் இருந்து... இன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில

13

வேடிக்கை பார்ப்பவன் - 13

16 January 2024
0
0
0

நிலாக் காலம் 'எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ? எந்த அழகை எந்த விழியில் கொண்டுசெல்வோமோ? இந்த நாளை வந்த நாளில் மறந்துபோவோமோ?' -கவியரசு கண்ணதாசன் ('பசுமை நிறைந்த நினைவுகளே...' பாடலில் இருந்து)

14

வேடிக்கை பார்ப்பவன் - 14

17 January 2024
0
0
0

சாலைகளின் பாடல் "நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சினிமா பார்ப்பதைப் போலத்தான். ஆனால், படம் முடிந்த பின் க்ளைமாக்ஸ் என்ன என்பது படம் பார்த்தவருக்குத் தெரியாது!" -ரோமன் பொலன்ஸ்கி, போலந்து திரைப்பட இயக்குந

15

வேடிக்கை பார்ப்பவன் - 15

17 January 2024
0
0
0

கனவின் கைப்பிடியில் "கட்டடங்களின் விரிசல்களுக்கு இடையே வேர் விட்டுப் பூக்கும் ரோஜாச் செடிகளை நீங்கள் பார்த்ததுண்டா? இயற்கை விதிகளைத் தவறாக்கி கால்கள் இல்லாமல் நடக்க அவை கற்றுக்கொடுக்கின்றன; அவை கனவுக

16

வேடிக்கை பார்ப்பவன் - 16

17 January 2024
0
0
0

குறுக்கு வெட்டுத் தோற்றம் தாமிரக் காசை தண்டவாளத்தில் வெச்சி நாம பதுங்க ரயில் நசுக்கும் - ராமையா கால ரயிலோட நாமெல்லாம் காசானோம் வாலிபம் போய் ஆச்சே வயசு! பார்ப்பவன் -வெ.சேஷாசலம் ('ஆகாசம்பட்டு' தொகுப்

17

வேடிக்கை பார்ப்பவன் - 17

17 January 2024
0
0
0

முன்பனிக்காலம் "நீ கிளையைக் கவனமாக வரைய முடியுமானால், உன்னால் காற்றின் ஒலியைக் கேட்க முடியும்!" - ஜென் தத்துவம் (எஸ்.ராமகிருஷ்ணனின் ஜென் கவிதைகள் நூலில் இருந்து) சினிமா, விநோதமான ஒரு ரங்கராட்டினம்.

18

வேடிக்கை பார்ப்பவன் - 18

17 January 2024
0
0
0

பின் பனிக் காலம் "பழத்தைப் பார்த்து பூ கேட்டது, 'இத்தனை நாளாய் எங்கு இருந்தாய்?' பூ சொன்னது, 'உன் இதயத்தில்தான் ஒளிந்திருந்தேன்!"' -தாகூர் (வழி தப்பிய பறவைகள் தொகுப்பில் இருந்து) வேலையற்றவனின் பகலு

19

வேடிக்கை பார்ப்பவன் - 19

17 January 2024
0
0
0

இவன் நானாகும் அத்தியாயம் 'நான் இல்லாமல் போகிறேன் ஆனால் வசந்த காலம் என்னுடைய நினைவுகளுடன் இருந்து கொண்டேதானிருக்கும்!' -இறக்கப்போகிற கடைசி நிமிடத்தில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ அன்புள்ள பாலுமகேந்த

20

வேடிக்கை பார்ப்பவன் - 20

17 January 2024
0
0
0

இளவேனிற் காலம் 220 இதற்கு மேல் உருள முடியாது கல் நதியைவிட்டு கரையேறிற்று. இதற்கு மேல் வழ வழப்பாக்க முடியாது கல்லை ஒதுக்கிவிட்டு நதி ஏகிற்று! கல்யாண்ஜி பத்திரிகையில் வேலை செய்தாலும், இவனது தீராக்கா

21

வேடிக்கை பார்ப்பவன -21

17 January 2024
0
0
0

'பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்' "உனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிந்துகொள்வதுதான் உண்மையான ஞானம்!" - சாக்ரடீஸ் இவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு 'சுதந்திரம்'. நூற்றுக்கும் 5. நூற்று

22

வேடிக்கை பார்ப்பவன் 22

18 January 2024
0
0
0

என்ன நடக்கிறது என்று என்ன நடக்கிறது என்று தெரிய மேஜையில் தேநீர் பதளமாய் கவிஞர் தேவநர்கள் இரண்டு சூரியன்" தொழும்பில் இருந்து கோப்பையைப் வைக்கிறேன் நடனமாய் மாறியபடி ஞாயிற்றுக்கிழமைகளை இவன் எந்த வே

23

வேடிக்கை பார்ப்பவன் - 23

18 January 2024
0
0
0

பசித்த புலியின் வேகம் "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" நகுலன் ('நினைவுப் பாதை' நாவலில் இருந்து...) எழுத்தாளர் சுஜாதா இவன் மேல் திருப்பிவிட்ட

24

வேடிக்கை பார்ப்பவன்-24

18 January 2024
0
0
0

நீங்கள் இயக்கிய 'சைக்கோ' திரைப்படத்தில் இடம்பெற்ற பாத்ரூம் கொலைக் காட்சியைப் பார்த்த பிறகு ஒரு மாதமாக என் மகள் குளிக்கவே இல்லை!" என்று ஒரு நாய் என்னிடம் சொன்னாள். நான் அவளிடம் சொன்னேன். 'தயவுசெய்து உங

25

வேடிக்கை பார்ப்பவன் -25

18 January 2024
0
0
0

குட்டிப் புத்தரின் கேள்வி "வாழ்க்கை, ஒரு மகாநதியைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் கரையில் நின்று, என் கண்ணுக்கு பட்டவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்." - எழுத்தாளர் வண்ணநிலவன் இந்த அத்தியாயத்த

26

வேடிக்கை பார்ப்பவன் - 26

18 January 2024
0
0
0

இவன் அவனாகும் அத்தியாயம் 'கீழைக்காட்டு வேம்பு கசந்தது அம்மாவின் சோகம் கேட்டுத்தான்!' -கவிஞர் த.பழமலய் ('சனங்களின் கதை' தொகுப்பில் இருந்து) அந்தப் பையனைக் காப்பாற்றுங்கள். அவன் ஏன் இப்படி இருக்கிறான

27

வேடிக்கை பார்ப்பவன் - 27

18 January 2024
0
0
0

பட்டாம்பூச்சி விற்ற கதை "ஒரு தேர் சக்கரத்தின் அளவு பூர்ண சந்திரன், இன்று ஒரு வீட்டுக் கூரையின் மேல் உதயமானான். தீப்பிடித்துவிட்டதோ என்று நினைத்தேன்!" தி.க.சிவசங்கரன் ('தி.க.சி-யின் நாட்குறிப்புகள்'

28

வேடிக்கை பார்ப்பவன் - 28

18 January 2024
0
0
0

அவையிடத்து முந்தியிருப்பச் செயல் 'ரத்தமும் சதையும் அல்ல... இதயம்தான் எங்களை தந்தை மகனாக இணைத்தது!' - எழுத்தாளர் ஓரான் பாமுக் எம்.ஏ., முடித்ததும், பச்சையப்பன் கல்லூரியிலேயே இவன் எம்.ஃபில்., சேர்ந்தா

29

வேடிக்கை பாறிப்பலன்-29

18 January 2024
0
0
0

'நிஜம்தாள் தாங்க முடியாத பாரம். அந்தப் பாரத்தை இறக்கியைக்க அல்ல, எவ்வளவு எடை என்று பார்த்துக்கொள்ளத்தான் இதை உல்களுக்கு எழுதுகிறேன். வெயிலில் உலர்த்துவது என் ஆகிவிட்டது. எல்லா இடத்திலும்நாளே வெயில் வி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்