shabd-logo

வேடிக்கை பார்ப்பவன் - 16

17 January 2024

0 பார்த்தது 0

குறுக்கு வெட்டுத் தோற்றம்

தாமிரக் காசை தண்டவாளத்தில் வெச்சி நாம பதுங்க ரயில் நசுக்கும் - ராமையா கால ரயிலோட நாமெல்லாம் காசானோம் வாலிபம் போய் ஆச்சே வயசு!

பார்ப்பவன்

-வெ.சேஷாசலம் ('ஆகாசம்பட்டு' தொகுப்பில் இருந்து)

காலையில் எழுந்து கண்ணாடியைப் பார்த்ததும் இவன் திடுக்கிட்டுப்போனான். கண்ணாடியில், இவன் உருவத்துக்குப் பதில் குட்டிப் பையன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். கண்களைத் தாழ்த்தி தன்னைத்தானே ஒருமுறை பார்த்துக்கொண்டான். நிஜம்தான். இவன், எட்டு வயதுக் குட்டிப் பையனாக மாறியிருந்தான். எப்படி இது சாத்தியம்? இவனால் நம்ப முடியவில்லை.

மூன்றாம் வகுப்பு படிக்கும்போது தீபாவளிக்கு இவன் மாமா எடுத்துக் கொடுத்த ஆரஞ்சு கலர் பூப்போட்ட சட்டையும், காக்கி கலர் டிரவுசரும் அணிந்தபடி கண்ணாடி முன் நிற்கும் இந்தப் பையன் இவன்தானா? அதே பழைய ஒல்லியான தோற்றமும், சற்றே சப்பையான மூக்கும் இவன்தான் என்பதை இவனுக்கு உணர்த்தியது. இந்தச் சப்பை மூக்கால்தான் இவனுக்கு சக மாணவர்கள் 'ஜப்பான்' என்று பட்டப்பெயர் வைத்தார்கள். "டேய் ஜப்பான்... நீ எப்படிடா மறுபடியும் வந்த?" என்று இவனே இவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டான்.

அடுத்த அறையில் மனைவியும் மகனும் உறங்கிக்கொண்டிருந்தார்கள். மெள்ள மனைவியைத் தொட்டு எழுப்பினான். கண் விழித்து இவனைப் பார்த்தவள், "ஆதவன்... உன் ஃப்ரெண்டு வந்திருக்கான் பாரு" என்று சொல்லிவிட்டு, "தம்பி... எந்த ஃப்ளாட்டுடா நீ?" என்றாள்.

"நான் ஆதவன் ஃப்ரெண்டு இல்லடி. நான்தான் முத்துக்குமார். உன் புருஷன்" என்றான்.

மனைவியும் திடுக்கிட்டு எழுந்து, "என்னங்க இது கூத்து?" என்று அச்சத்துடன் கேட்க, "ஹாலுக்கு வா சொல்றேன்" என்றான்.

ஹாலுக்கு வந்து சொல்லி முடித்ததும், "எப்படிங்க இப்படிச் சின்னப் பையனா மாறினீங்க?"

என்றாள் அதே ஆச்சரியத்துடன்.

"அதான் எனக்கும் தெரியல" என்றான்.

"அய்யோ! இப்ப நான் ரெண்டு புள்ளைங்களை வளர்க்கணுமா? ஏற்கெனவே ஒண்ணு பண்ற

சேட்டையே தாங்க முடியல..." என்று அலுத்துக்கொண்டாள்.

சத்தம் கேட்டு விழித்து எழுந்து ஹாலுக்கு வந்த மகன், யாரோ போல் இவனைப் பார்த்தான். இவன்,"டேய்... நான்தான்டா, அப்பாடா!" என்றான்.

"அப்பாவா? யாருகிட்ட டூப் விடற? எங்கப்பா ஹைட்டா இருப்பாரு. தாடி வெச்சிருப்பாரு" என்றான் மகன்.

"இல்லடா அப்பாதான்டா. திடீர்னு சின்னப் பையனா மாறிட்டேன்" என்று இவன் சொல்ல, "எங்கப்பா சின்ன வயசுல ஹார்லிக்ஸ் பேபி மாதிரி குண்டா இருப்பாராம். அவரே சொல்லியிருக்காரு" என்று மகன், இவன் எப்போதோ சொன்ன பொய்யை நினைவுபடுத்தினான்.

"இல்லடா ராஜா. அது அப்பா சும்மா நீ நல்லாச் சாப்பிடணும்னு பொய் சொன்னேன். உண்மையிலேயே நான் ஒல்லியாத்தான் இருப்பேன். வேணும்னா போட்டோ காட்டுறேன் பாரு" என்று சொல்லிவிட்டு இவன் பழைய ஆல்பத்தை எடுத்து வந்து மகனிடம் காட்டினான்.

"ஆமாப்பா... அப்படியே இருக்கீங்கப்பா! எப்பிடிப்பா சின்னதா ஆனீங்க?" என்று மகன் கேட்சு, "அதான்டா எனக்கும் தெரியல" என்றான்.

இவர்கள் உரையாடிக்கொண்டிருக்கும்போதே இவன் மனைவி, சொந்தக்காரர்களுக்கு எல்லாம் தொலைபேசியில் இந்த அதிசயத்தைச் செய்தியாக்கிக் கொண்டிருந்தாள்.

"இப்பதான் நீங்க குட்டிப் பையனா மாறிட்டீங்களே, வாங்க பார்க்ல போயி சறுக்கு மரம் வெளயாடலாம்" என்று மகன் இவனை வடிவேலாக்கி வேனில் ஏற்ற, இவன் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தான்.

இவனுக்குள் இப்போது நிறையக் கேள்விகள். இனி என்ன செய்வது? மூன்றாம் வகுப்பில் இருந்து படிப்பைத் தொடர்வதா? இவன் படிக்கப்போனால், குடும்பத்தை யார் காப்பாற்றுவது? இதே உருவத்துடன் இவன் மகனுக்கு இவன் எப்படி அப்பாவாக இருப்பது என்று இவன் குழம்பிக்கொண்டிருந்தபோது, அந்தக் குழப்பக் குளத்தில் மனைவி மேலும் ஒரு கல் எறிந்தாள். "சாயங்காலம் ஒரு கல்யாண ரிசப்ஷன் இருக்கே. உங்களை எப்படி வெளிய கூட்டிட்டுப் போறது?"

இவனுக்கு எப்போது மனக்குழப்பம் வந்தாலும், எழுத்தாளர், கலை விமர்சகர் சி.மோகனுக்கு தொலைபேசியின் வழியே ஆலோசனை கேட்பான். அவரைத் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கினான்.

"சமீபத்துல காஃப்காவோட புக் ஏதாச்சும் படிச்சிங்களா?" என்றார்.

"ஆமா சார். அவரோட புக் படிச்சு ரொம்ப நாளேச்சுனு அவரு எழுதின 'உருமாற்றம்' நாவலைப் படிச்சேன்" என்றான்.

"அதான். லிட்ரேச்சரைப் படிக்கும்போது கவனமா இருக்கணும். அது கத்தி மேல நடக்கிற மாதிரி. ஆழ்மனசுல எங்கேயோ போய் சில சமயங்கள்ல அந்தக் கத்தி கிழிச்சுடும். இப்படித்தான் எம்.வி.வெங்கட்ராமோட 'காதுகள்' நாவலைப் படிச்சிட்டு நெறையப் பேரு. அவங்க காதுலயும் பலவிதமான குரல்கள் கேட்கிறதா எங்கிட்ட சொல்லியிருக்காங்க" என்றார். இவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. 'உருமாற்றம்' நாவல், ஒரு மனிதனை திடீரென்று கரப்பான் பூச்சியாக மாறுவது குறித்தது!

"இப்ப என்ன சார் பண்றது?" என்றான் திகைப்புடன்

"ஒண்ணு பண்ணலாம் முத்துக்குமார். நீங்க இப்ப ஃப்ரீயா இருந்தீங்கன்னா, என் ரூமுக்கு வாங்க. சின்ன வயசுல நீங்க எப்படி இருந்தீங்கனு பார்க்க, எனக்கும் ஆசையா இருக்கு" என்றார் சிரித்தபடி.

மகன். பள்ளிக்குக் கிளம்பிச் செல்ல. இவனுக்காக தொலைக்காட்சியில் போகோ சேனலை வைத்துவிட்டு, "பார்த்துட்டு இருங்க. எனக்கு கிச்சன்ல நெறைய வேலை இருக்கு" என்றாள் மனைவி.

"நான் வெளிய போயிட்டு வர்றேன்" என்று மனைவியிடம் சொல்லிவிட்டு, பதிலுக்குக்கூட காத்திராமல் காரைத் தவிர்த்துவிட்டு அரசுப் பேருந்தில் ஏறி, தேனாம்பேட்டை சிக்னலுக்கு டிக்கெட் வாங்கினான்.

சிக்னலுக்குப் பக்கத்தில் இவன் பால்ய வயது நண்பன் சண்முகம்

வேலை பார்க்கும் அலுவலகத்துக்குச் சென்றான். இவனை

சண்முகத்துக்கும் அடையாளம் தெரியவில்லை.

"டேய் நான்தான்டா முத்துக்குமார்" என்றான்.

"எந்த முத்துக்குமார்?" என்று அவன் கேட்க.

"டேய்... ஜப்பான்டா" என்று சொல்லிவிட்டு, இவன் தன்

நிலைமையை மீண்டும் விளக்கினான்.

"நான் சின்ன வயசுல எப்படி இருந்தேன்னு பார்த்தவங்கள்ல

நீயும் ஒருத்தன். அதான் உங்கிட்டப் பேசிட்டுப் போலாம்னு

வந்தேன்" என்றான்.

"நான் சின்ன வயசுல எப்படி இருந்தேன்னே எனக்கு ஞாபசும் இல்லே. இதுல உன்னை எப்படி ஞாபகம் வெச்சுக்கிறது? சரி... சரி... வா கேன்டீனுக்குப் போய்ப் பேசலாம். எதுக்கும் ரெண்டு அடி தள்ளியே நடந்து வா. சின்னப் பசங்ககூட எல்லாம் சகவாசம் வெச்சுக்கிறேன்னு ஆபீஸ்ல கிண்டல் பண்ணப்போறாங்க" என்று சண்முகம் சொல்ல, இவனுக்கு சர்க்கரை அதிகம் இருந்தும் காபி கசந்தது.

திரும்ப பேருந்து ஏறி வீட்டுக்கு வரும்போது செல்போன் ஒலித்தது. இயக்குநர் லிங்குசாமி பேசினார்.

"முத்துக்குமார் நாளைக்கு நைட்டு கம்போஸிங்குக்கு சிங்கப்பூர் போறோம். டிக்கெட் போட்டாச்சு" என்று சொல்ல.

"சார். அதுல ஒரு சிக்கல். நான் நேர்ல வந்து விளக்குறேன்" என்று சொல்லிவிட்டு அவரது அலுவலகம் விரைந்தான்.

லிங்குசாமி அலுவலகம் பரபரப்பாக இருந்தது. துணை நடிகர்கள், உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டுக் காத்திருந்தவர்கள் என பெருங்கூட்டத்தை விலக்கி, இவன் உள்ளே நுழைந்தான்.

"தம்பி... சைல்ட் ஆர்ட்டிஸ்ட்டுக்கு இந்தப் படத்துல ரோல் இல்ல. போட்டோ குடுத்துட்டுப் போங்க. தேவைப்பட்டா கூப்புடுறோம்" என்று புரொடக்ஷன் மேனேஜர் இவனைப் பார்த்து சொல்ல, இவன் பெரும்பாடுபட்டு, தான் யாரென்று அவருக்கு விளக்கி, லிங்குசாமியை அவரது அறையில் சந்தித்தான்.

மீண்டும் பெரும் விளக்கம் முடிந்த பின், லிங்கு சாமி கேட்டார், "இப்ப என்ன பண்றது முத்துக்குமார்? நாளைக்கு இதே உருவத்தோட வந்து நின்னா இமிக்கிரேஷன்ல நம்ப மாட்டாங்களே!"

"ஒரு நாள் டயம் இருக்கு சார். ஏதாவது மேஜிக் நடக்கலாம்" என்று சொல்லிவிட்டு வீடு வந்தான்.

மகன், அவன் வயதுடைய நண்பர்களையெல்லாம் ஃப்ளாட்டில் இருந்து அழைத்து வந்து, "எங்கப்பாடா! எப்படிச் சின்னப் பையனா மாறியிருக்காரு பாரு!" என்று பெருமையடித்துக்கொண்டிருந்தான். டிக்கெட் போட்டு விற்காத குறைதான். போதாக்குறைக்கு மனைவி வேறு இவனுக்குப் பிடிக்காத நூடூல்ஸ் செய்து, "சாப்பிடுங்க டேஸ்ட்டா இருக்கும். சின்னப் பசங்க இதைத்தான் விரும்பிச் சாப்பிடுவாங்க" என்றாள்.

இப்படியே தொடர்ந்தால் இவன் வாழ்க்கை என்ன ஆவது என்ற அச்சம் உருவானது. வங்கிக்

கணக்கில் இருந்து கார் லோன் வரை அடையாள சிக்கல்கள் இவனைத் துரத்தும். இனி இவனது

நண்பர் குழாம் இவனை எப்படி நடத்துவார்கள்? எல்லாவற்றுக்கும் மேல், 'நான்தான் கவிஞர்

முத்துக்குமார்" என்றால், இவன் ரசிகர்கள் இவனை நம்புவார்களா?

மனைவியும் மகனும் உறங்கிய பின்னும் இவன் கண் விழித்து யோசித்துக்கொண்டேயிருந்தான்.

மூன்றாம் வகுப்பு படிக்கையில் இவன் என்ன செய்தான்?

என்னென்னவோ செய்தான்! பொறுப்புகளும், அதனால் வரும் கவலைகளும் இல்லாத ஒரு

பருவம் அது. அந்தப் பருவத்தில்தான் இவன் எல்லாக் குழந்தைகளையும் போலவே கடவுளாக இருந்தான்.

மேகங்களை விலக்கி நீந்தி வந்து நிலா இவனுக்குக் கதை சொன்னது. மழையும் வெயிலும் அதைத் தொடர்ந்து வண்ணங்கள் ஏழையும் விரித்துக் காட்டும் சீன விசிறியைப் போல் வானவில்லும், இவன் வானமெங்கும் நிறைந்திருந்தன. பெற்றவன் கடனை அறியாமல் பெருங்கனவுகளில் மிதந்து அலைந்த காலம் அது.

பென்சிலுக்காக அடித்துக்கொண்டதும், பெண் உடல் புதிரை அவிழ்க்க முயன்றதும், பிரபஞ்சத்தின் முன்னே புள்ளியாக நின்றதும், விடையில்லாக் கேள்விகளால் வாழ்வை அளந்ததும் அந்தப் பருவத்தில் அல்லவா?

சிறகைப் போல் இவன் பொத்திப் பாதுகாத்த அந்த பால்ய காலம், இன்று சிலுவையைப் போல் கனப்பது ஏன்? பதில் தெரியாமல் உறங்கிப்போனான்.

காலையில் எழுந்து கண்ணாடியைப் பார்த்ததும் மீண்டும் ஓர் ஆச்சரியம் இவனுக்குக் காத்திருந்தது. குட்டிப் பையன் வளர்ந்து இவன் இவனாகி நின்றுகொண்டிருந்தான். எப்படி இது சாத்தியம்? இடையில் என்ன நடந்தது? மனதுக்குள் கேள்வி எழும்ப, இவனைப் பார்த்து கண்ணாடி கேட்டது.

"பழைய உருவத்துக்கே வந்துட்ட. இப்ப சந்தோஷமா?"

"ஒண்ணுமே புரியல. நடந்தது எல்லாமே புதிராகவும் மர்மமாகவும் இருக்கு. நான் ஏன் சின்னப் பையன் ஆனேன்?" என்றான்.

கண்ணாடி சொன்னது, "ரெண்டு நாளைக்கு முன்னாடி நீ உன் பொண்டாட்டிட்ட என்ன சொன்ன... ஞாபகம் இருக்கா?"

"இல்லையே!"

"நான் சொல்லவா. வேலை வேலைனு இப்படிப் போட்டி, பொறாமைகளுக்கு நடுவுல ஓடிக்கிட்டு இருக்கிறது டயர்டா இருக்கு. மறுபடியும் ஏழெட்டு வயசுப் பையனா மாறினா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்"

இவன் ஞாபகம் வந்து, "ஆமா... அப்படித்தான் சொன்னேன்" என்றான்.

"இப்ப சந்தோஷமா இருக்கா?" என்றது கண்ணாடி.

"இல்ல. அந்தந்த வயசுக்கு அது அது சந்தோஷம். மேட்டுலயும் பள்ளத்துலயும் ஓடத்தான் நதி

படைக்கப்பட்டிருக்கு. இப்ப எனக்குப் புரிஞ்சிருச்சு" என்றான்.

இவன் இவனானதில், இவனைவிட மனைவியும் மகனும் அதிகம் மகிழ்ச்சியை அடைந்தார்கள்.

லிங்குசாமிக்கு போன் செய்து "இன்னிக்கு நைட்டு கம்போஸிங் கிளம்பிரலாம் சார்" என்றான்!

நா. முத்துக்குமார் மூலம் மேலும் புத்தகங்கள்

1

வேடிக்கை பார்ப்பவன் -2

15 January 2024
0
0
0

குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்! ஜென் கவிதை சனி, ஞாயிறு தவிர்த்து, தினமும் காலையில் இவனும் இவன் மகனும் பள்ளிக்குக் கிளம்புவார்கள். மகன் படிக்கும் பள்ளி ய

2

வேடிக்கை பார்ப்பவன் -1

15 January 2024
0
0
0

வெந்து தணிந்தது காடு முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானு  ம் இட்ட தீ மூள்க மூள்கவே! - பட்டினத்தார் ஒரு மிகப் பெரிய பொருட்காட்சிசாலையாக இந்தப்

3

வேடிக்கை பார்ப்பவன் - 3

15 January 2024
0
0
0

'என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!' - கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் அம்மா இறந்த பிறகு, இவன் அப

4

வேடிக்கை பார்ப்பவன் - 4

15 January 2024
0
0
0

'அவன், குதிங்காலிட்டு உட்கார்ந்தான்; சப்பணமிட்டு உட்கார்ந்தான்; ஒரு காலை நீட்டி உட்கார்ந்து பார்த்தான்; வயிற்றோடு முழங்காலைச் சேர்த்து ஒட்டி உட்கார்ந்து பார்த்தான். இப்படியும் அப்படியுமாக எப்படி உட்கா

5

வேடிக்கை பார்ப்பவன் - 5

15 January 2024
0
0
0

சமூகம் என்பது நான்கு பேர்.' - ஜெயகாந்தன் 5, 4, 3, 2, 1, 0 என்று தலைகீழாக கவுன்ட் டவுன் சொல்லி, ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புவதைப் போலத்தான் தினமும் இவன் தன் மகனை பள்ளிக்கு அனுப்புவதும். திருவாளர் ம

6

வேடிக்கை பார்ப்பவன் - 6

16 January 2024
0
0
0

வயதென்னும் ரயில் வண்டி 'அந்த மாபெரும் வெற்றிடத்தில் முன்னும் இல்லை, பின்னும் இல்லை பறவையின் பாதை கிழக்கையும் மேற்கையும் அழித்துவிடுகிறது.' ஜென் தத்துவம் பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு 10 நிமிட

7

வேடிக்கை பார்ப்பவன் - 7

16 January 2024
0
0
0

பள்ளித் தலமனைத்தும்... "உண்மையில், பள்ளிக்கூடம் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. திடீரென என் உலகம் மிகவும் பெரிதாகிவிட்டது. வீட்டைவிட்டு தினமும் வெளியே செல்வதற்கு இப்படி ஓர் அற்ப

8

வேடிக்கை பார்ப்பவன்-8

16 January 2024
0
0
0

 எமக்குத் தொழில் கவிதை 'முதலாளிமார்கள் விரல் எல்லாம் மோதிரங்கள் மனசெல்லாம் தந்திரங்கள்!' - கவிஞர் விக்ரமாதித்யன் ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும், இவனுக்குள் கோடீஸ்வரக் கனவு ஒன்று பூக்கத் தொடங்கும்

9

வேடிக்கை பார்ப்பவன்-9

16 January 2024
0
0
0

புன்னகைக்க மறந்த கதை "கண் சிமிட்டும் நேரத்தில் ஓர் உன்னதத் தருணம் புகைப்படம் ஆகிறது. அந்தத் தருணத்துக்கான காத்திருத்தலே, புகைப்படக் கலை. இருளை உணர்ந்தவனே, ஒளியில் வாழக் கற்றுக்கொள்கிறான்!" -பி.சி.ஸ்

10

வேடிக்கை பார்ப்பவன் - 10

16 January 2024
0
0
0

இவன், இவனான கதை! "இப்பொழுதும் அங்குதான் இருக்கிறீர்களா?" என்று கேட்டார். "எப்பொழுதும் அங்குதான் இருப்பேன்" என்றேன். - நகுலன் ('கோட் ஸ்டாண்ட்' கவிதைகள் தொகுப்பிலிருந்து...) போலந்து திரைப்பட இயக்கு

11

வேடிக்கை பார்ப்பவன் - 11

16 January 2024
0
0
0

தீராத விளையாட்டு வாழ்க்கையின் இருக்கலாம். கேள்விகள் ஆனால், எளிமையாகத்தான் இருக்கின்றன!" வேடிக் கடினமாக விடைகள் 211 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் "நா"ன்தான் டாம். நீங்க ஜெர்ரியாம். ஓடிப்போயி ஒளிஞ்சிக்குங்க.

12

வேடிக்கை பார்ப்பவன் - 12

16 January 2024
0
0
0

வீடென்பது யாதெனில்... "எனது புறநகர் குடியிருப்பு வயல்களின் சமாதி என்று நினைவுபடுத்தியவை தவளைகளே!" - சுகுமாரன் - 'பூமியை வாசிக்கும் சிறுமி' கவிதைத் தொகுப்பில் இருந்து... இன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில

13

வேடிக்கை பார்ப்பவன் - 13

16 January 2024
0
0
0

நிலாக் காலம் 'எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ? எந்த அழகை எந்த விழியில் கொண்டுசெல்வோமோ? இந்த நாளை வந்த நாளில் மறந்துபோவோமோ?' -கவியரசு கண்ணதாசன் ('பசுமை நிறைந்த நினைவுகளே...' பாடலில் இருந்து)

14

வேடிக்கை பார்ப்பவன் - 14

17 January 2024
0
0
0

சாலைகளின் பாடல் "நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சினிமா பார்ப்பதைப் போலத்தான். ஆனால், படம் முடிந்த பின் க்ளைமாக்ஸ் என்ன என்பது படம் பார்த்தவருக்குத் தெரியாது!" -ரோமன் பொலன்ஸ்கி, போலந்து திரைப்பட இயக்குந

15

வேடிக்கை பார்ப்பவன் - 15

17 January 2024
0
0
0

கனவின் கைப்பிடியில் "கட்டடங்களின் விரிசல்களுக்கு இடையே வேர் விட்டுப் பூக்கும் ரோஜாச் செடிகளை நீங்கள் பார்த்ததுண்டா? இயற்கை விதிகளைத் தவறாக்கி கால்கள் இல்லாமல் நடக்க அவை கற்றுக்கொடுக்கின்றன; அவை கனவுக

16

வேடிக்கை பார்ப்பவன் - 16

17 January 2024
0
0
0

குறுக்கு வெட்டுத் தோற்றம் தாமிரக் காசை தண்டவாளத்தில் வெச்சி நாம பதுங்க ரயில் நசுக்கும் - ராமையா கால ரயிலோட நாமெல்லாம் காசானோம் வாலிபம் போய் ஆச்சே வயசு! பார்ப்பவன் -வெ.சேஷாசலம் ('ஆகாசம்பட்டு' தொகுப்

17

வேடிக்கை பார்ப்பவன் - 17

17 January 2024
0
0
0

முன்பனிக்காலம் "நீ கிளையைக் கவனமாக வரைய முடியுமானால், உன்னால் காற்றின் ஒலியைக் கேட்க முடியும்!" - ஜென் தத்துவம் (எஸ்.ராமகிருஷ்ணனின் ஜென் கவிதைகள் நூலில் இருந்து) சினிமா, விநோதமான ஒரு ரங்கராட்டினம்.

18

வேடிக்கை பார்ப்பவன் - 18

17 January 2024
0
0
0

பின் பனிக் காலம் "பழத்தைப் பார்த்து பூ கேட்டது, 'இத்தனை நாளாய் எங்கு இருந்தாய்?' பூ சொன்னது, 'உன் இதயத்தில்தான் ஒளிந்திருந்தேன்!"' -தாகூர் (வழி தப்பிய பறவைகள் தொகுப்பில் இருந்து) வேலையற்றவனின் பகலு

19

வேடிக்கை பார்ப்பவன் - 19

17 January 2024
0
0
0

இவன் நானாகும் அத்தியாயம் 'நான் இல்லாமல் போகிறேன் ஆனால் வசந்த காலம் என்னுடைய நினைவுகளுடன் இருந்து கொண்டேதானிருக்கும்!' -இறக்கப்போகிற கடைசி நிமிடத்தில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ அன்புள்ள பாலுமகேந்த

20

வேடிக்கை பார்ப்பவன் - 20

17 January 2024
0
0
0

இளவேனிற் காலம் 220 இதற்கு மேல் உருள முடியாது கல் நதியைவிட்டு கரையேறிற்று. இதற்கு மேல் வழ வழப்பாக்க முடியாது கல்லை ஒதுக்கிவிட்டு நதி ஏகிற்று! கல்யாண்ஜி பத்திரிகையில் வேலை செய்தாலும், இவனது தீராக்கா

21

வேடிக்கை பார்ப்பவன -21

17 January 2024
0
0
0

'பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்' "உனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிந்துகொள்வதுதான் உண்மையான ஞானம்!" - சாக்ரடீஸ் இவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு 'சுதந்திரம்'. நூற்றுக்கும் 5. நூற்று

22

வேடிக்கை பார்ப்பவன் 22

18 January 2024
0
0
0

என்ன நடக்கிறது என்று என்ன நடக்கிறது என்று தெரிய மேஜையில் தேநீர் பதளமாய் கவிஞர் தேவநர்கள் இரண்டு சூரியன்" தொழும்பில் இருந்து கோப்பையைப் வைக்கிறேன் நடனமாய் மாறியபடி ஞாயிற்றுக்கிழமைகளை இவன் எந்த வே

23

வேடிக்கை பார்ப்பவன் - 23

18 January 2024
0
0
0

பசித்த புலியின் வேகம் "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" நகுலன் ('நினைவுப் பாதை' நாவலில் இருந்து...) எழுத்தாளர் சுஜாதா இவன் மேல் திருப்பிவிட்ட

24

வேடிக்கை பார்ப்பவன்-24

18 January 2024
0
0
0

நீங்கள் இயக்கிய 'சைக்கோ' திரைப்படத்தில் இடம்பெற்ற பாத்ரூம் கொலைக் காட்சியைப் பார்த்த பிறகு ஒரு மாதமாக என் மகள் குளிக்கவே இல்லை!" என்று ஒரு நாய் என்னிடம் சொன்னாள். நான் அவளிடம் சொன்னேன். 'தயவுசெய்து உங

25

வேடிக்கை பார்ப்பவன் -25

18 January 2024
0
0
0

குட்டிப் புத்தரின் கேள்வி "வாழ்க்கை, ஒரு மகாநதியைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் கரையில் நின்று, என் கண்ணுக்கு பட்டவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்." - எழுத்தாளர் வண்ணநிலவன் இந்த அத்தியாயத்த

26

வேடிக்கை பார்ப்பவன் - 26

18 January 2024
0
0
0

இவன் அவனாகும் அத்தியாயம் 'கீழைக்காட்டு வேம்பு கசந்தது அம்மாவின் சோகம் கேட்டுத்தான்!' -கவிஞர் த.பழமலய் ('சனங்களின் கதை' தொகுப்பில் இருந்து) அந்தப் பையனைக் காப்பாற்றுங்கள். அவன் ஏன் இப்படி இருக்கிறான

27

வேடிக்கை பார்ப்பவன் - 27

18 January 2024
0
0
0

பட்டாம்பூச்சி விற்ற கதை "ஒரு தேர் சக்கரத்தின் அளவு பூர்ண சந்திரன், இன்று ஒரு வீட்டுக் கூரையின் மேல் உதயமானான். தீப்பிடித்துவிட்டதோ என்று நினைத்தேன்!" தி.க.சிவசங்கரன் ('தி.க.சி-யின் நாட்குறிப்புகள்'

28

வேடிக்கை பார்ப்பவன் - 28

18 January 2024
0
0
0

அவையிடத்து முந்தியிருப்பச் செயல் 'ரத்தமும் சதையும் அல்ல... இதயம்தான் எங்களை தந்தை மகனாக இணைத்தது!' - எழுத்தாளர் ஓரான் பாமுக் எம்.ஏ., முடித்ததும், பச்சையப்பன் கல்லூரியிலேயே இவன் எம்.ஃபில்., சேர்ந்தா

29

வேடிக்கை பாறிப்பலன்-29

18 January 2024
0
0
0

'நிஜம்தாள் தாங்க முடியாத பாரம். அந்தப் பாரத்தை இறக்கியைக்க அல்ல, எவ்வளவு எடை என்று பார்த்துக்கொள்ளத்தான் இதை உல்களுக்கு எழுதுகிறேன். வெயிலில் உலர்த்துவது என் ஆகிவிட்டது. எல்லா இடத்திலும்நாளே வெயில் வி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்