shabd-logo

வேடிக்கை பார்ப்பவன் - 13

16 January 2024

0 பார்த்தது 0

நிலாக் காலம்

'எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ? எந்த அழகை எந்த விழியில் கொண்டுசெல்வோமோ? இந்த நாளை வந்த நாளில் மறந்துபோவோமோ?'

-கவியரசு கண்ணதாசன் ('பசுமை நிறைந்த நினைவுகளே...' பாடலில் இருந்து)

எல்லாப் பிள்ளைகளையும் போலவே வளர்ந்து பெரியவன் ஆனதும், டாக்டர் ஆக வேண்டும் என்றோ, இன்ஜினீயர் ஆக வேண்டும் என்றோ சொல்லிக்கொடுத்து இவன் வளர்க்கப்படவில்லை. இவன் இவனாகவே வளர அனுமதித்ததால், படித்து முடித்ததும் என்ன வேலையில் சேரலாம் என்று இவன் நிறையக் கனவுகள் வைத்திருந்தான்.

அந்தந்த வயதுக்கு ஏற்ற எளிய, சிறிய கனவுகள். வெவ்வேறு முகவரிகளையும், வாசல் கோலங்களையும் கடந்தபடி கடிதங்கள் சுமக்கும் 'போஸ்ட்மேன்' ஆக வேண்டும்; குழந்தைகளின் கையாட்டலுக்குத் தலை அசைத்தபடி கூட்ஸ் வண்டியின் கார்டாக கடைசிப் பெட்டியில் நின்று சிவப்புக் கொடி காட்டிச் செல்ல வேண்டும்; இரும்பு யானையைப் போல் கம்பீரத்துடன் அசைந்து வரும் ரோடு ரோலர் டிரைவர் ஆக வேண்டும்; 'மருதமலை மாமணியே முருகய்யா...' என்று ஸ்பீக்கர் கட்டி முதல் ஆட்டத்துக்கு ஊர் மக்களை அழைக்கும் சீதாலட்சுமி டென்ட் டாக்கீஸில் டிக்கெட் கிழித்துக் கொடுக்க வேண்டும்... என எத்தனையோ கனவுகள். கலைத்துக் கலைத்து மீண்டும் அடுக்கப்படும் சீட்டுக் கட்டுகள்தானே கனவுகள்.

வேடிக்கை பார்ப்பவன்

மூன்றாம் வகுப்பு படிக்கும்போது வகுப்பின் முதல் நாள் அன்று திலகவதி மிஸ் இவனிடம் கேட்டார், "படிச்சு முடிச்சதும் என்ன ஆகப் போற?"

இவன் ஆர்வத்துடன் பதில் சொன்னான், "எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற காலேஜ்ல பியூன்

வேலைக்குப் போவேன்."

திலகவதி மிஸ் அதிர்ச்சியாகி, "புரொஃபஸர் ஆவேன்னு சொன்னாப் பரவாயில்ல; பியூன் ஆகப் போறேன்னு சொல்றியே?" என்று கேட்க, இவன் அதே ஆர்வத்துடன், "இல்ல மிஸ் புரொஃபஸர், நாலைஞ்சு கிளாஸுக்குத்தான் போக முடியும். எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற கணபதி அண்ணன் அந்தக் காலேஜ்லதான் பியூனா இருக்காரு. அந்தக் காலேஜ்ல அவரு மட்டும்தான் எல்லா கிளாஸுக்கும் போவாரு தெரியுமா?" என்று பதில் சொன்னான். திலகவதி மிஸ் இவனை முறைத்துப் பார்த்துவிட்டு, அடுத்த பையனை நோக்கி நகர்ந்தார்.

இவன் வீட்டில் இருந்து பார்த்தால், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் கட்டடம் தெரியும். நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம், அந்தக் கல்லூரிக்குச் சொந்தமாக இருந்தது. இவன் வீட்டை ஒட்டியிருந்த சாலையில் இருந்தே அந்த நிலத்தின் பரப்பளவு தொடங்கிவிடும். சிறுவயதில் அந்த நிலத்தில்தான் இவன் விளையாடித் திரிந்தான். அந்த மைதானத்தில் மாணவர்கள் தங்கும் விடுதி, கூழாங்கல் சப்திக்க வளைந்து நெளிந்து ஓடும் வேகவதி ஆறு. ஆற்றில் மேய்ந்துவிட்டு ஈர மண் தரையில் நட்சத்திரக் கால் பதிக்கும் வாத்துக் கூட்டங்கள். கையில் குச்சியுடன் அவற்றை விரட்டும் ஆடு, மாடு மேய்க்கும் சிறுவர்கள்... எனச் சிற்றில் ஆடித்தான் இவன் பாலகாண்டத்தைக் கடந்து வந்தான்.

இன்று வரை புல் மண்டிக்கிடக்கும் கல்லூரிக்குச் சொந்தமான அந்தச் சிறு வனத்தின் பெரும் வெளியில்தான் எத்தனையெத்தனை மரங்கள்? அங்கு இருக்கும் எல்லா மரங்களின் கிளைகளிலும் இவன் கால் ரேகைகள் பதிந்திருக்கின்றன. கண்ணாமூச்சி ஆட்டங்களில் இவன் ஒளிந்துகொள்ளும் முக்கிய இடம், அந்த மரங்களின் உச்சிக் கிளைகள்தான்.

கொடுக்காப்புளி மரத்தின் முள் கிழித்த காயத்துடன், பொன்வண்டுகள் பிடித்து கொட்டாங்கச்சி சிறையில் அடைத்து, அவை இடும் மஞ்சள் முட்டைகளையும் பச்சை நிறக் கழிவுகளையும் பார்த்துப் பரவசப்பட்டதும், கல்லூரிக்குப் பின்பக்கத்தில் படர்ந்திருக்கும் பெரிய பாதாம் மரத்தின் சருகுகளைத் தேடி ஈரம் அப்பிய பாதாம் கொட்டைகளைப் பொறுக்கி, செந்நிற நார் உரித்து பாதாம் பருப்புகளை ருசி பார்த்ததும், நாவல் மரங்களை கல்லால் அடித்து மண் உதிராப்

பழங்களை உப்பிட்டு உண்டதும்... திரும்பி வாராத காலங்கள். அந்த மைதானத்தில்தான் இவன் தென்னை மட்டையில் செதுக்கிய பேட்டுடனும், சைக்கிள் டியூபில் செய்த பந்துடனும், கிரிக்கெட் விளையாடினான். கிரிக்கெட் மட்டுமா? கபடி... கபடி, ஐஸ் பால், கில்லித்தண்டு என நாளெல்லாம் ஆட்டங்கள்; நெஞ்சம் எல்லாம் ஞாபகங்கள். இவன் முதன்முதலில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டது அங்குதான். முதன்முதலில் பீடி குடித்து, முதல்

இருமலைப் பெற்றுக்கொண்டதும் பாம்புகள் திரியும் அந்த இடத்தில்தான்.

பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே அந்தக் கல்லூரியை இவன் அப்படி நேசித்தான். பள்ளி விட்டு வரும் மாலைகளிலும், சனி, ஞாயிறு விடுமுறைகளிலும், மிதிவண்டியில் அந்தக் கட்டடங்களைச் சுற்றிச் சுற்றி வருவான்.

'ப்ளஸ் டூ முடிச்சுட்டு, படிச்சா இந்தக் காலேஜ்லதான் படிக்கணும்' என்று ஏங்குவான். 'அப்படி இந்தக் காலேஜ்ல படிச்சா, எந்த ரூம் நம்ம கிளாஸா இருக்கும்' என்று ஒவ்வோர் அறையாக வெளியில் இருந்தே பார்த்து, ஜன்னலைத் திறந்தால் பாதாம் மரத்துக் கிளைகளும், பின்னணியில் ஓடும் வேகவதி ஆறும் தெரியும் அறையைத் தேர்ந்தெடுப்பான்.

ப்ளஸ் டூ படிக்கையில் இவன் வானியல் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று மீண்டும் ஒரு புதிய கனவை நோக்கி அடியெடுத்துவைத்தான். அதற்குக் காரணம், இவனுக்கு இயற்பியல் வகுப்பு எடுத்த சந்திரசேகர் மாஸ்டரும், ஸ்பெக்ட்ரோ மீட்டருக்குள் புலப்பட்ட ஏழு வண்ணங்களுடன் விரிந்த வானவில் தரிசனமும்தான். சந்திரசேகர் மாஸ்டர் இயற்பியலை அணுஅணுவாக அனுபவித்துச் சொல்லிக்கொடுத்தார். "நான் டியூஷன் எடுக்க மாட்டேன். எது புரியலைனாலும் கிளாஸ் ரூம்லயே கேளுங்க. அப்படியே நேரம் இல்லைன்னா சனி, ஞாயிறு வீட்டுக்கு வாங்க. ஃப்ரீயா சொல்லித்தர்றேன்" என்று இயற்பியல் சூத்திரங்களின் கதவுகளைத் திறந்துவிட்டார்.

ஐசக் நியூட்டனை, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை, டாப்லரை, தாமஸ் ஆல்வா எடிசனை, கார்நாட் தியரியை அப்படிப்பட்ட சனி, ஞாயிறுகளில்தான் இவன் அறிந்துகொண்டான். ப்ளஸ் டூ முடிக்கும்போதே எம்.எஸ்சி., இயற்பியல் படிக்கும் மாணவனைவிட, அதிக ஞானத்தை அவர் இவனுக்கு அளித்தார்.

ப்ளஸ் டூ தேர்வில், இயற்பியலில் இவன் 95 சதவிகிதம் மதிப்பெண்கள் எடுத்து, இவன் ஆசைப்பட்ட அதே பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் வகுப்பில் சேர்ந்தான்.

அந்தக் கல்லூரி, பசுமை நிறைந்த நினைவுகளாக, பாடித் திரிந்த பறவைகளாக இவனை அணைத்துக்கொண்டது. இவன் பாடம் படித்தான். கட்டடித்து, நண்பர்களுடன் படங்கள் பார்த்தான். அவ்வப்போது பெண்கள் கல்லூரிப் பக்கம் ஒதுங்கி, பார்வைகளால் காதலும் செய்தான்!

கல்லூரிப் பருவம் என்பது, காலம் ஒரு மாணவனைக் கூட்டுப்புழுப் பருவத்தில் இருந்து வண்ணத்துப்பூச்சியாக மாற்றி வெளியே பறக்கவிடும் பருவம். இவன் சுதந்திரமாகப் பறந்தான்; பதின் வயதுகளின் பூந்தோட்டங்களில் மிதந்தான்; முள்மரங்களில் சிக்கி, இறகுகள் இறகுகள் கீழ கிழிந்தான், மீண்டும் வண்ணங்களைப் பூசிக்கொண்டு வானம் அளந்தான்; கைப்பிடிக்குத் தப்பிப்போன அந்த வண்ணத்துப்பூச்சியின் வண்ணங்கள், இன்றும் இவன் நெஞ்சுக்குள் கொட்டிக்கிடக்கின்றன.

கல்லூரியின் வகுப்புகளைவிட மரத்தடி நிழல்கள்தான் இவனுக்கு நிறைய நண்பர்களை அறிமுகப்படுத்தின. 'குண்டு' சிவா, 'பேட்டை' சிவா, 'பழைய சீவரம்' சிவா, ஆர்.சிவா... என்று நான்கு சிவாக்கள் இவனுடன் படித்தார்கள். 'குண்டு' சிவாவை ஒரு எம்.எல்.ஏ-வின் உதவியாளனாகவும், 'பேட்டை' சிவாவைப் பேராசிரியராகவும், 'பழைய சீவரம்" சிவாவை ஆஃப்ரிக்காவின் தான்சானியாவில் இன்ஜினீயராகவும், ஆர்.சிவாவை கோழிப் பண்ணையாளனாகவும் அந்தக் கல்லூரிதான் மாற்றியது!

அதிகாலை பூரிக்கு ஆசைப்பட்டு மைதானத்தைச் சுற்றிவந்து மூச்சு இரைத்து பின்னாட்களில்

இவன் கைவிட்ட என்.சி.சி-யில் இவனுடன் பங்கேற்ற தமிழ்வளவனை கார்கிலுக்கு அருகில்

பனிப்பொழிவில் ஏதோவொரு ரெஜிமென்டில் ராணுவ வீரனாக்கியதும், அகஸ்டின்

செல்லபாபுவை டி.என்.பி.எஸ்.சி. எழுதவைத்ததும், வகுப்பின் முதன் மாணவன் சந்திரசேகரை

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ரிசர்ச் அசிஸ்டென்ட் ஆக்கியதும், 'குட்லி' என்று

அழைக்கப்படுகிற சுதர்சனத்தை அமெரிக்காவில் ஐ.டி. தொழில் செய்ய அனுப்பியதும்.

செந்தில்குமாரை விவசாயத்துக்கே திருப்பி அனுப்பியதும், தேவகணேஷை உரக்கடை வைக்கச்

சொன்னதும் அதே கல்லூரிதான்!

ஜி.ஆர்.கே. சாரின் பரபரப்பான வேகத்தையும், ஜி.பி. சாரின் அமைதியான கிண்டல்களையும், ஏ.ஆர்.பி. சாரின் 'இதைப் பாரும்மா...' என்று ஆரம்பிக்கும் தொனியையும், வி.ஜே.ஆர். சாரின் தெலுங்கு கலந்த தமிழையும், கணிதம் எடுத்த எஸ்.ஜி. சாரையும், ஆங்கிலம் எடுத்த சுகத்தி மேடத்தையும், தமிழ் வகுப்பு எடுத்த விநாயகம் மற்றும் எஸ்.குருசாமி ஐயாக்களையும் எப்படி இவனால் மறக்க முடியும்?

அந்தக் காலத்தில் எல்லாப் பத்திரிக்கைகளிலும் இவன் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என பரவலாக எழுதிக்கொண்டிருந்தான். அவற்றுக்கான சன்மானங்கள் மணியார்டரில் வரும். போஸ்ட்மேன் தெய்வசிகாமணி சார் இவன் பக்கத்து ஊர்க்காரர் என்பதால், கல்லூரிக்குக் கடிதங்கள் கொடுக்க வரும்போது, இவன் வகுப்புக்கே வந்து மணியார்டர் பணத்தைக் கொடுப்பார். "எங்களைவிட நீதான் அதிகம் சம்பாதிக்கிற போலிருக்கே?" என்று பேராசிரியர்கள் கிண்டல் செய்வார்கள்.

இவன் வகுப்பில் இவனுடன் டி.எஸ்.ராஜராஜனும் படித்தான். இவனைப் போலவே அவனும் கதை, கவிதை என்று எழுதிக்கொண்டிருந்ததால், கல்லூரி முடிந்து மாவையில் மரத்தடியின் இருவரும் அமர்ந்து கவிதைகள் எழுதுவார்கள். பனித்துளி, மலை அருவி, வரதட்சணை, முதிர்கன்னி, மூன்றாம் பிறை என்று எல்லா அமெச்சூர் சுவிஞர்கள் போலவே ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து ஹைக்கூ கவிதையோ, அதையும் தாண்டி ஆறேழு வரிகளையோ எழுதுவார்கள். அதிகபட்சம் அரை மணி நேரம்தான். அதற்குள் அவரவர் வலைகளில் எத்தனை மீன்கள் விழுந்தாலும் அது லாபம் என்பது கணக்கு. எப்போதாவது சில தருணங்களில் மீன்களுக்கு பதிவ் விண்மீன்களும் விழுவது உண்டு.

'நிலா' என்ற தலைப்புக்கு

'அழுது புரண்டு

நான் அவறிய ராத்திரிகளில், நிலா இருந்தது. கோறும் இருந்தது. ஊட்டந்தான் தாஸில்னள!"

என்று இவனும்...

'ஏழையின் பசிக்கு எட்டாத தோனசாப் தெரிந்தது நிலா!

என்று அவனும்...

பின்பு 'வரதட்சணை' எனும் தலைப்பில்

'மாமியார்க்கெல்லாம் மரபுக் கவினததான் அதிகம் பிடிக்கும் சீர் கொண்டுவருவதால்!"

என்று இவனும்...

'ஜன்னல் கம்பிகளுக்குப் பின் ஆயுள் சிறை முதிர்கன்னிகள்!

என்று அவனும் எழுதி முடித்த பின், அவன் கவிதைகளை இவனும், இவன் கவிதைகளை

அவனும் படித்துப் பார்த்து எதை எந்தப் பத்திரிகைக்கு அனுப்பலாம் என்று தரம் பிரிப்பார்கள்.

நல்ல வரிகளுக்கு பரஸ்பரம் கை குலுக்கிக்கொள்வார்கள். அன்று கை குலுக்கிய

டி.எஸ்.ராஜராஜனின் கைகள்தான் பின்னாட்களில் கோடம்பாக்கத்து சினிமாவை நோக்கி

இவனை அழைத்துவரப் போகின்றன என்று, அன்று இவனுக்குத் தெரியாது!

நா. முத்துக்குமார் மூலம் மேலும் புத்தகங்கள்

1

வேடிக்கை பார்ப்பவன் -2

15 January 2024
0
0
0

குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்! ஜென் கவிதை சனி, ஞாயிறு தவிர்த்து, தினமும் காலையில் இவனும் இவன் மகனும் பள்ளிக்குக் கிளம்புவார்கள். மகன் படிக்கும் பள்ளி ய

2

வேடிக்கை பார்ப்பவன் -1

15 January 2024
0
0
0

வெந்து தணிந்தது காடு முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானு  ம் இட்ட தீ மூள்க மூள்கவே! - பட்டினத்தார் ஒரு மிகப் பெரிய பொருட்காட்சிசாலையாக இந்தப்

3

வேடிக்கை பார்ப்பவன் - 3

15 January 2024
0
0
0

'என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!' - கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் அம்மா இறந்த பிறகு, இவன் அப

4

வேடிக்கை பார்ப்பவன் - 4

15 January 2024
0
0
0

'அவன், குதிங்காலிட்டு உட்கார்ந்தான்; சப்பணமிட்டு உட்கார்ந்தான்; ஒரு காலை நீட்டி உட்கார்ந்து பார்த்தான்; வயிற்றோடு முழங்காலைச் சேர்த்து ஒட்டி உட்கார்ந்து பார்த்தான். இப்படியும் அப்படியுமாக எப்படி உட்கா

5

வேடிக்கை பார்ப்பவன் - 5

15 January 2024
0
0
0

சமூகம் என்பது நான்கு பேர்.' - ஜெயகாந்தன் 5, 4, 3, 2, 1, 0 என்று தலைகீழாக கவுன்ட் டவுன் சொல்லி, ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புவதைப் போலத்தான் தினமும் இவன் தன் மகனை பள்ளிக்கு அனுப்புவதும். திருவாளர் ம

6

வேடிக்கை பார்ப்பவன் - 6

16 January 2024
0
0
0

வயதென்னும் ரயில் வண்டி 'அந்த மாபெரும் வெற்றிடத்தில் முன்னும் இல்லை, பின்னும் இல்லை பறவையின் பாதை கிழக்கையும் மேற்கையும் அழித்துவிடுகிறது.' ஜென் தத்துவம் பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு 10 நிமிட

7

வேடிக்கை பார்ப்பவன் - 7

16 January 2024
0
0
0

பள்ளித் தலமனைத்தும்... "உண்மையில், பள்ளிக்கூடம் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. திடீரென என் உலகம் மிகவும் பெரிதாகிவிட்டது. வீட்டைவிட்டு தினமும் வெளியே செல்வதற்கு இப்படி ஓர் அற்ப

8

வேடிக்கை பார்ப்பவன்-8

16 January 2024
0
0
0

 எமக்குத் தொழில் கவிதை 'முதலாளிமார்கள் விரல் எல்லாம் மோதிரங்கள் மனசெல்லாம் தந்திரங்கள்!' - கவிஞர் விக்ரமாதித்யன் ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும், இவனுக்குள் கோடீஸ்வரக் கனவு ஒன்று பூக்கத் தொடங்கும்

9

வேடிக்கை பார்ப்பவன்-9

16 January 2024
0
0
0

புன்னகைக்க மறந்த கதை "கண் சிமிட்டும் நேரத்தில் ஓர் உன்னதத் தருணம் புகைப்படம் ஆகிறது. அந்தத் தருணத்துக்கான காத்திருத்தலே, புகைப்படக் கலை. இருளை உணர்ந்தவனே, ஒளியில் வாழக் கற்றுக்கொள்கிறான்!" -பி.சி.ஸ்

10

வேடிக்கை பார்ப்பவன் - 10

16 January 2024
0
0
0

இவன், இவனான கதை! "இப்பொழுதும் அங்குதான் இருக்கிறீர்களா?" என்று கேட்டார். "எப்பொழுதும் அங்குதான் இருப்பேன்" என்றேன். - நகுலன் ('கோட் ஸ்டாண்ட்' கவிதைகள் தொகுப்பிலிருந்து...) போலந்து திரைப்பட இயக்கு

11

வேடிக்கை பார்ப்பவன் - 11

16 January 2024
0
0
0

தீராத விளையாட்டு வாழ்க்கையின் இருக்கலாம். கேள்விகள் ஆனால், எளிமையாகத்தான் இருக்கின்றன!" வேடிக் கடினமாக விடைகள் 211 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் "நா"ன்தான் டாம். நீங்க ஜெர்ரியாம். ஓடிப்போயி ஒளிஞ்சிக்குங்க.

12

வேடிக்கை பார்ப்பவன் - 12

16 January 2024
0
0
0

வீடென்பது யாதெனில்... "எனது புறநகர் குடியிருப்பு வயல்களின் சமாதி என்று நினைவுபடுத்தியவை தவளைகளே!" - சுகுமாரன் - 'பூமியை வாசிக்கும் சிறுமி' கவிதைத் தொகுப்பில் இருந்து... இன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில

13

வேடிக்கை பார்ப்பவன் - 13

16 January 2024
0
0
0

நிலாக் காலம் 'எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ? எந்த அழகை எந்த விழியில் கொண்டுசெல்வோமோ? இந்த நாளை வந்த நாளில் மறந்துபோவோமோ?' -கவியரசு கண்ணதாசன் ('பசுமை நிறைந்த நினைவுகளே...' பாடலில் இருந்து)

14

வேடிக்கை பார்ப்பவன் - 14

17 January 2024
0
0
0

சாலைகளின் பாடல் "நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சினிமா பார்ப்பதைப் போலத்தான். ஆனால், படம் முடிந்த பின் க்ளைமாக்ஸ் என்ன என்பது படம் பார்த்தவருக்குத் தெரியாது!" -ரோமன் பொலன்ஸ்கி, போலந்து திரைப்பட இயக்குந

15

வேடிக்கை பார்ப்பவன் - 15

17 January 2024
0
0
0

கனவின் கைப்பிடியில் "கட்டடங்களின் விரிசல்களுக்கு இடையே வேர் விட்டுப் பூக்கும் ரோஜாச் செடிகளை நீங்கள் பார்த்ததுண்டா? இயற்கை விதிகளைத் தவறாக்கி கால்கள் இல்லாமல் நடக்க அவை கற்றுக்கொடுக்கின்றன; அவை கனவுக

16

வேடிக்கை பார்ப்பவன் - 16

17 January 2024
0
0
0

குறுக்கு வெட்டுத் தோற்றம் தாமிரக் காசை தண்டவாளத்தில் வெச்சி நாம பதுங்க ரயில் நசுக்கும் - ராமையா கால ரயிலோட நாமெல்லாம் காசானோம் வாலிபம் போய் ஆச்சே வயசு! பார்ப்பவன் -வெ.சேஷாசலம் ('ஆகாசம்பட்டு' தொகுப்

17

வேடிக்கை பார்ப்பவன் - 17

17 January 2024
0
0
0

முன்பனிக்காலம் "நீ கிளையைக் கவனமாக வரைய முடியுமானால், உன்னால் காற்றின் ஒலியைக் கேட்க முடியும்!" - ஜென் தத்துவம் (எஸ்.ராமகிருஷ்ணனின் ஜென் கவிதைகள் நூலில் இருந்து) சினிமா, விநோதமான ஒரு ரங்கராட்டினம்.

18

வேடிக்கை பார்ப்பவன் - 18

17 January 2024
0
0
0

பின் பனிக் காலம் "பழத்தைப் பார்த்து பூ கேட்டது, 'இத்தனை நாளாய் எங்கு இருந்தாய்?' பூ சொன்னது, 'உன் இதயத்தில்தான் ஒளிந்திருந்தேன்!"' -தாகூர் (வழி தப்பிய பறவைகள் தொகுப்பில் இருந்து) வேலையற்றவனின் பகலு

19

வேடிக்கை பார்ப்பவன் - 19

17 January 2024
0
0
0

இவன் நானாகும் அத்தியாயம் 'நான் இல்லாமல் போகிறேன் ஆனால் வசந்த காலம் என்னுடைய நினைவுகளுடன் இருந்து கொண்டேதானிருக்கும்!' -இறக்கப்போகிற கடைசி நிமிடத்தில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ அன்புள்ள பாலுமகேந்த

20

வேடிக்கை பார்ப்பவன் - 20

17 January 2024
0
0
0

இளவேனிற் காலம் 220 இதற்கு மேல் உருள முடியாது கல் நதியைவிட்டு கரையேறிற்று. இதற்கு மேல் வழ வழப்பாக்க முடியாது கல்லை ஒதுக்கிவிட்டு நதி ஏகிற்று! கல்யாண்ஜி பத்திரிகையில் வேலை செய்தாலும், இவனது தீராக்கா

21

வேடிக்கை பார்ப்பவன -21

17 January 2024
0
0
0

'பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்' "உனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிந்துகொள்வதுதான் உண்மையான ஞானம்!" - சாக்ரடீஸ் இவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு 'சுதந்திரம்'. நூற்றுக்கும் 5. நூற்று

22

வேடிக்கை பார்ப்பவன் 22

18 January 2024
0
0
0

என்ன நடக்கிறது என்று என்ன நடக்கிறது என்று தெரிய மேஜையில் தேநீர் பதளமாய் கவிஞர் தேவநர்கள் இரண்டு சூரியன்" தொழும்பில் இருந்து கோப்பையைப் வைக்கிறேன் நடனமாய் மாறியபடி ஞாயிற்றுக்கிழமைகளை இவன் எந்த வே

23

வேடிக்கை பார்ப்பவன் - 23

18 January 2024
0
0
0

பசித்த புலியின் வேகம் "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" நகுலன் ('நினைவுப் பாதை' நாவலில் இருந்து...) எழுத்தாளர் சுஜாதா இவன் மேல் திருப்பிவிட்ட

24

வேடிக்கை பார்ப்பவன்-24

18 January 2024
0
0
0

நீங்கள் இயக்கிய 'சைக்கோ' திரைப்படத்தில் இடம்பெற்ற பாத்ரூம் கொலைக் காட்சியைப் பார்த்த பிறகு ஒரு மாதமாக என் மகள் குளிக்கவே இல்லை!" என்று ஒரு நாய் என்னிடம் சொன்னாள். நான் அவளிடம் சொன்னேன். 'தயவுசெய்து உங

25

வேடிக்கை பார்ப்பவன் -25

18 January 2024
0
0
0

குட்டிப் புத்தரின் கேள்வி "வாழ்க்கை, ஒரு மகாநதியைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் கரையில் நின்று, என் கண்ணுக்கு பட்டவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்." - எழுத்தாளர் வண்ணநிலவன் இந்த அத்தியாயத்த

26

வேடிக்கை பார்ப்பவன் - 26

18 January 2024
0
0
0

இவன் அவனாகும் அத்தியாயம் 'கீழைக்காட்டு வேம்பு கசந்தது அம்மாவின் சோகம் கேட்டுத்தான்!' -கவிஞர் த.பழமலய் ('சனங்களின் கதை' தொகுப்பில் இருந்து) அந்தப் பையனைக் காப்பாற்றுங்கள். அவன் ஏன் இப்படி இருக்கிறான

27

வேடிக்கை பார்ப்பவன் - 27

18 January 2024
0
0
0

பட்டாம்பூச்சி விற்ற கதை "ஒரு தேர் சக்கரத்தின் அளவு பூர்ண சந்திரன், இன்று ஒரு வீட்டுக் கூரையின் மேல் உதயமானான். தீப்பிடித்துவிட்டதோ என்று நினைத்தேன்!" தி.க.சிவசங்கரன் ('தி.க.சி-யின் நாட்குறிப்புகள்'

28

வேடிக்கை பார்ப்பவன் - 28

18 January 2024
0
0
0

அவையிடத்து முந்தியிருப்பச் செயல் 'ரத்தமும் சதையும் அல்ல... இதயம்தான் எங்களை தந்தை மகனாக இணைத்தது!' - எழுத்தாளர் ஓரான் பாமுக் எம்.ஏ., முடித்ததும், பச்சையப்பன் கல்லூரியிலேயே இவன் எம்.ஃபில்., சேர்ந்தா

29

வேடிக்கை பாறிப்பலன்-29

18 January 2024
0
0
0

'நிஜம்தாள் தாங்க முடியாத பாரம். அந்தப் பாரத்தை இறக்கியைக்க அல்ல, எவ்வளவு எடை என்று பார்த்துக்கொள்ளத்தான் இதை உல்களுக்கு எழுதுகிறேன். வெயிலில் உலர்த்துவது என் ஆகிவிட்டது. எல்லா இடத்திலும்நாளே வெயில் வி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்