shabd-logo

வேடிக்கை பார்ப்பவன் - 14

17 January 2024

0 பார்த்தது 0

சாலைகளின் பாடல்

"நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சினிமா பார்ப்பதைப் போலத்தான். ஆனால், படம் முடிந்த பின் க்ளைமாக்ஸ் என்ன என்பது படம் பார்த்தவருக்குத் தெரியாது!"

-ரோமன் பொலன்ஸ்கி, போலந்து திரைப்பட இயக்குநர்.

கனவுத் தொழிற்சாலையில் இவன் காலடி வைத்ததற்கு நிறைய முன்கதைச் சுருக்கங்கள் இருக்கின்றன.

இவன் எட்டாவதோ ஒன்பதாவதோ படிக்கும்போது இவன் கிராமத் துக்கு ஒரு குழுவினர், தொலைக்காட்சி மற்றும் வீடியோ டெக்குடன் வந்து இறங்கினார்கள்.

பஞ்சாயத்துத் தலைவர் அனுமதி பெற்று அந்தி மாலை, இருளுக்குள் விழுந்துகொண்டிருந்த நேரத்தில் கோயில் மண்டபத்தில் வைத்து ஊர் மக்களுக்கு ஒரு படத்தைப் போட்டுக் காட்டினார்கள். அந்தப் படம், சத்யஜித் ரே இயக்கிய 'பதேர் பாஞ்சாலி',

வீடியோ டெக் அறிமுகமான காலம் அது. துபாயிலோ, சிங்கப்பூரிலோ வேலை செய்பவர்களின் வீடுகளில்தான் அது இருக்கும். இவன் கிராமத்தில் எல்லோரும் தறிக்குழியில் அமர்ந்து வேலை செய்ததால், துபாய்க்குப் போகும் யோகம் இல்லை. ஆகையால், வாடகைக்கு எடுத்த வீடியோ டெக்கை இவன் திருவிழா சமயங்களில்தான் பார்த்திருக்கிறான். அந்தத் திருவிழாக்களிலும் பெரும்பாலும் இவன் பார்த்த படங்கள் 'திருவிளையாடல்', 'சரஸ்வதி சபதம்', 'கர்ணன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'விதி' போன்றவைதான். இப்போது எழுப்பிக் கேட்டாலும், அந்தப் படங்களின் வசனத்தை வரிக்கு வரி ஒப்பிப்பான்.

'பதேர் பாஞ்சாலி'யின் கதைச் சுருக்கத்தையும் சத்யஜித்ரே பற்றியும் தாடி வைத்த ஒருவர் அறிமுகப்படுத்த, படம் தொடங்கியது. 'சாலையின் பாடல்' என்னும் பதேர் பாஞ்சாலி, இவன் கிராமத்தின் சாலையைப் பாடத் தொடங்கியது. அதன் ஒவ்வொரு காட்சிகளும் விரியத் தொடங்க

இவன் அழுதான், சிரித்தான்; நெகிழ்ந்தும்போனான். அவ்வப்போது திரும்பிப் பார்க்கும்போது,

அரை இருட்டில் இவனைப் போலவே, மற்றவர்களும் உருகிக்கொண்டு இருந்தார்கள்.

படம் முடிந்து, தாடி வைத்தவர் "இந்தப் படம் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நெனைக்கிறேன். இதைப் பத்தி உங்க கருத்துகளைப் பகிர்ந்துக்கலாம். அதுக்கு முன்னாடி ஒரு தகவல், வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒன்றரை மணிக்கு இந்த மாதிரிப் படங்களை தூர்தர்ஷனில் ஒளிபரப்புவாங்க. வாய்ப்பு இருந்தா பாருங்க" என்று சொல்ல, அந்த இரவு விடியா இரவானது.

இவன் கிராமத்தில் யார் வீட்டிலும் தொலைக்காட்சி இல்லை என்பதால், பெரியார் நகரில் இருந்த நண்பன் அகஸ்டின் செல்லபாபு வீட்டுக்கு ஒவ்வொரு ஞாயிறு மதியமும் ஆஜராகிவிடுவான். இவன் ஆர்வம் அறிந்து, அவர்களும் இவனுடன் மதியத் தூக்கம் துறந்து, படம் பார்ப்பார்கள், அல்லது பாதியில் எழுந்துபோவார்கள். அப்படித்தான் இவன் சத்யஜித் ரேவை, ரித்விக் கட்டக்கை, மிருணாள் சென்னை, அடூர் கோபாலகிருஷ்ணனை, கோவிந்த நிஹாலினியை அறிந்துகொண்டான்.

ப்ளஸ் டூ படிக்கையில் இவன் வாழ்க்கையில் மிகப் பெரிய ஒரு மாற்றம் நிகழ்ந்தது. காஞ்சிபுரம் அண்ணா அரங்கத்தில் எடிட்டர் B.லெனின், அவர் இயக்கி தேசிய விருது பெற்ற 'நாக் அவுட்' படத்தைத் திரையிட வந்திருந்தார். ஒரு பிணத்தை வைத்து அவர் கதை சொன்ன விதம் இவனுக்குப் பிடித்திருந்தது. அவர்தான் 'உதிரிப்பூக்கள்' படத்தின் எடிட்டர் என்று யாரோ சொல்ல, மேலும் மரியாதை கூடியது. அந்த மரியாதைக்கு மகுடம் சூட்டியது, அவர் இயக்குநர் பீம்சிங்கின் மகன் என்பது.

அன்று அவர் பேசிய பேச்சு, சினிமா பற்றிய இவன் பார்வையை மேலும் செழுமைப்படுத்தியது. மக்களுக்கான சினிமாவைப் பற்றியும், சினிமாவில் என்னென்ன துறைகளில் எளிமை தேவை என்பதைப் பற்றியும் அவர் சொல்லிக்கொண்டே செல்ல, பக்கத்தில் அமர்ந்திருந்தவர் இவன் காதில் "இந்த நிகழ்ச்சிக்குக்கூட பேருந்தில்தான் வந்தார் தோழர். சென்னையில்கூட அடிக்கடி இவரை பேருந்துகளில் பார்த்திருக்கிறேன். அவ்வளவு எளிமை" என்று சொல்ல B. லெனின் தொடர்ந்து "மக்கள்கிட்ட பணம் வாங்கி, மக்களுக்கான படம் எடுக்கப்போறேன். ஏற்கெனவே கேரளாவுல இயக்குநர் ஜான் ஆபிரஹாம் 'ஒடேசா' (Odessa) திரைப்பட இயக்கம் மூலமாக இந்த முயற்சிக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கார். இப்ப நான் துண்டேந்தி உங்ககிட்ட வரப்போறேன். உங்களால முடிஞ்ச உதவியை செய்ங்க" என்று சொல்லிவிட்டு, தோளில் போட்டிருந்த துண்டை விரித்து பார்வையாளர்களிடம் வந்து கையேந்தினார். அவரது துண்டில் 5, 10, 100 ரூபாய் நோட்டுகள் விழுந்துகொண்டிருந்தன.

முன் வரிசையில் இருந்த ஒரு பெண்மணி, தன் கையில் அணிந்திருந்த தங்க வளையல்களைக் கழற்றித் துண்டில் போட்டதும், இவன் திடுக்கிட்டான். B.லெனின் அவரை நன்றியுடன் பார்த்துவிட்டு இவனை நெருங்கிவர, பேருந்துக்குக்கூட காசு எடுக்காமல், பையில் இருந்த மொத்தப் பணத்தையும் துண்டில் போட்டான். நிகழ்ச்சி முடிந்து, எட்டு கிலோமீட்டர் நடந்தே இவன் வீட்டுக்கு வந்தபோது, இவன் காதுகளில் 'பதேர் பாஞ்சாலி'யின் சாலையின் பாடல் கேட்டுக்கொண்டே இருந்தது.

அதற்குப் பின் இவன் திரைப்படங்களை, படங்களாகப் பார்க்கவில்லை; பாடங்களாகப் பார்த்தான். இதற்கு முன் இவன் கண்ட கனவையெல்லாம் அழித்துவிட்டு, திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற புதிய கனவை உரம் போட்டு வளர்க்க ஆரம்பித்தான். வகுப்பு அறைகளைவிட சங்கம், அருணா, பாபு, பாலாஜி, லட்சுமி, நாராயணமூர்த்தி, பாலசுப்ரமணியா தியேட்டர்களில்தான் இவன் அதிகம் தவம் இருந்தான்.

வருட இறுதியில், அந்த வருடத்தில் வந்த படங்களின் பட்டியல் நாளிதழ்களில் வெளியிடப்பட்டிருக்கும். ஒரு பேனாவை எடுத்துக்கொண்டு பார்த்த படங்களை இவன் டிக் செய்வான். டப்பிங் படங்கள் உள்பட எல்லாப் படங்களிலும் அந்த டிக் மார்க் விழுந்திருக்கும். சில படங்களின் ஓரம் 5, 8 என்று எழுதுவான். அத்தனை முறை இவன் அந்தப் படங்களைப் பார்த்திருக்கிறான்.

திரைத் துறைதான் தன் தொழில் என்று முடிவானதும், இவன் தன் அப்பாவிடம் எப்படிச் சொல்வது என்று பல வாரங்களாக யோசித்துக்கொண்டிருந்தான். இவன் உறவுகளில் இருந்து திரைத் துறையில் சாதித்தவர் யாரென்று பட்டியலிட்டான். அந்தப் பட்டியலில் ஒரேயரு பெயர்தான் இருந்தது.

இவன் பிறப்பதற்கு முன்பே இறந்தவிட்ட அவர், திரைத் துறையில் தன் அடுக்குமொழி வசனங்களில் கோலோச்சினார். தமிழ் சினிமாவை திராவிடக் கொள்கைகளின் பின்னால் திசை திருப்பினார். அரசியலிலும் ஆங்கிலப் புலமையிலும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். அவரது இறுதி ஊர்வலத்தின்போது வரலாறு காணாத அளவு மக்கள் திரண்டார்கள். அவர்தான் பேரறிஞர் அண்ணா.

இவன் அம்மா வழியிலும், அப்பா வழியிலும் பேரறிஞர் அண்ணா இவன் உறவினர். சிறு வயதில்

அண்ணாவின் மேற்கோள்களை உதாரணம் காட்டித்தான் இவனை, இவன் தந்தை வளர்த்தார்.

உறவினர்கள் கூடும் சுப நிகழ்ச்சிகளில் இவனை, இவன் தந்தை, அண்ணாவின் மகன்

C.N.A.பரிமளத்திடம் அழைத்துச் சென்று, இவன் அப்போது எழுதிய கவிதையைச் சொல்லச்

சொல்வார். உரத்தக் குரலில் இவன் சொல்லி முடித்ததும், C.N.A.பரிமளம் இவனை அருகில்

அழைத்து மடியில் அமர்த்திக்கொண்டு, "இதை அப்படியே ஒரு காகிதத்துல எழுதிக் குடு. நான்

திரும்பவும் நடத்தற 'காஞ்சி' பத்திரிகைல பிரசுரிக்கிறேன்" என்று உற்சாகப்படுத்துவார்.

அப்போது அவர் காஞ்சியில் தோல் மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அடிக்கடி

அவரை இவன் கவிதைகளுடன் சந்திப்பான். படித்துப் பார்த்து நிறைகுறைகள் சொல்வார். இவன்

ஆளுமையை வளர்த்ததில் அவருக்கும் பெரிய பங்கு உண்டு.

இவனது சினிமா ஆசை தெரியவந்ததும் இவன் வகுப்பில் படித்த நண்பர் T.S.ராஜராஜன், அலட்டிக்கொள்ளாமல் சொன்னான், "எங்க சித்தப்பாவும் அப்பாவும் சேர்ந்து எடுத்த படம்தான்டா, தேசிய விருது பெற்ற ஜெயபாரதி இயக்கிய 'உச்சி வெயில்' திரைப்படம்". இவன் ஆச்சரியப்பட்டுப் போனான். ராஜராஜன் தொடர்ந்தான். "வர்ற சண்டே வீட்டுக்கு வா. அப்பாவை அறிமுகப்படுத்துறேன்."

ராஜராஜனின் அப்பாவைப் பற்றி சொல்வதற்கு முன்பு, அவரது தம்பி T.M.சுந்தரத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். அரக்கோணத்தில் சுந்தரம் லஞ்ச் ஹோம் நடத்தி வருபவர். 'உச்சி வெயில்' படத்தின் தயாரிப்பாளர். இலக்கிய வாசகர். அவரது அண்ணன் ராஜராஜனின் தந்தை T.M. சுப்ரமணியமும் தேர்ந்த வாசகர். கணையாழி, காலச்சுவடு என்று கல்லூரிப் பருவத்தில் படித்த இதழ்களின் கதை, கட்டுரைகளை அவர்களுடன் இவன் விவாதித்தான்.

இவன் இன்று வரை திரும்பத் திரும்ப எடுத்துப் படிப்பது, திரையுலகைப் பற்றி எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவலான அசோகமித்திரன் எழுதிய 'கரைந்த நிழல்கள்'. இந்த நாவலை, அசோகமித்திரனின் அனுமதி பெற்று தூர்தர்ஷனில் தொலைக்காட்சித் தொடராகத் தயாரிக்க அவர்கள் திட்டமிட்டு இருப்பதாகவும், 'ஏர்முனை', 'காணி நிலம்' போன்ற தேசிய விருது பெற்ற படங்களை இயக்கிய அருண்மொழி, அந்தத் தொடரை இயக்கவிருப்பதாகவும், அதில் இவன் உதவி இயக்குநராகப் பணியாற்ற வாய்ப்பு அளிப்பதாகவும் நம்பிக்கையூட்டினார்கள்.

இவன் கனவுகளின் மேகத்தில் மிதந்தான். இளங்கலை இறுதி ஆண்டு கடைசித் தேர்வு எழுதி வெளியே வந்ததும், ராஜராஜன் இவனைத் தனியே அழைத்து. "போன மாசம் அப்பா சொன்னார்ல அசோகமித்திரனோட 'கரைந்த நிழல்கள்' நாவலைத் தொடரா எடுக்கப் போறோம்னு. ரெண்டு நாள் கழிச்சு ஷூட்டிங் ஆரம்பிக்கப்போகுது. வீட்ல போய் அப்பாகிட்ட சொல்லிட்டு, நாலு செட்டு டிரெஸ் எடுத்துக்கிட்டு நாளைக்குக் காலைல எங்க வீட்டுக்கு வா. நீ அசிஸ்டென்ட் டைரக்டர் ஆயிட்ட. வாழ்த்துகள்" என்று கைகுலுக்கினான்.

இரவு உணவு முடிந்ததும் இவன், அப்பாவிடம் தயங்கித் தயங்கி தன் ஆசையைச் சொல்லத்

தொடங்கினான். கொஞ்ச நேரம் மௌனமாக இருந்த அப்பா, "உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிற

எல்லா சுதந்திரமும் உனக்கு இருக்கு. பின்னாட்கள்ல அதற்கான சந்தோஷத்தையும் துக்கத்தையும்

அனுபவிக்கும்போது மட்டும், என்னை நினைச்சுப் பாத்துக்கோ. அதுக்கு முன்னாடி ஒரு புத்தகம்

தர்றேன். அதை முழுசாப் படி. அப்புறம் முடிவு எடு" என்று சொல்லிவிட்டு புத்தக அலமாரிகளில்

தேடித் தேர்ந்தெடுத்து ஒரு புத்தகத்தை இவனிடம் கொடுத்தார்.

அது நடிகர் சிவகுமார் எழுதிய 'இது ராஜபாட்டை அல்ல' என்ற புத்தகம். விடிய விடிய கண்

விழித்து அந்தப் புத்தகத்தைப் படித்தான். அதிகாலையில் அப்பாவை எழுப்பி "நீங்க குடுத்த

புத்தகத்தைப் படிச்சிட்டேன். நான் சினிமாவுல அசிஸ்டென்ட் டைரக்டரா சேரப்போறதுல

உறுதியா இருக்கேன்" என்றான். அப்பா இவனை ஆசீர்வதித்தார்!

நா. முத்துக்குமார் மூலம் மேலும் புத்தகங்கள்

1

வேடிக்கை பார்ப்பவன் -2

15 January 2024
0
0
0

குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்! ஜென் கவிதை சனி, ஞாயிறு தவிர்த்து, தினமும் காலையில் இவனும் இவன் மகனும் பள்ளிக்குக் கிளம்புவார்கள். மகன் படிக்கும் பள்ளி ய

2

வேடிக்கை பார்ப்பவன் -1

15 January 2024
0
0
0

வெந்து தணிந்தது காடு முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானு  ம் இட்ட தீ மூள்க மூள்கவே! - பட்டினத்தார் ஒரு மிகப் பெரிய பொருட்காட்சிசாலையாக இந்தப்

3

வேடிக்கை பார்ப்பவன் - 3

15 January 2024
0
0
0

'என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!' - கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் அம்மா இறந்த பிறகு, இவன் அப

4

வேடிக்கை பார்ப்பவன் - 4

15 January 2024
0
0
0

'அவன், குதிங்காலிட்டு உட்கார்ந்தான்; சப்பணமிட்டு உட்கார்ந்தான்; ஒரு காலை நீட்டி உட்கார்ந்து பார்த்தான்; வயிற்றோடு முழங்காலைச் சேர்த்து ஒட்டி உட்கார்ந்து பார்த்தான். இப்படியும் அப்படியுமாக எப்படி உட்கா

5

வேடிக்கை பார்ப்பவன் - 5

15 January 2024
0
0
0

சமூகம் என்பது நான்கு பேர்.' - ஜெயகாந்தன் 5, 4, 3, 2, 1, 0 என்று தலைகீழாக கவுன்ட் டவுன் சொல்லி, ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புவதைப் போலத்தான் தினமும் இவன் தன் மகனை பள்ளிக்கு அனுப்புவதும். திருவாளர் ம

6

வேடிக்கை பார்ப்பவன் - 6

16 January 2024
0
0
0

வயதென்னும் ரயில் வண்டி 'அந்த மாபெரும் வெற்றிடத்தில் முன்னும் இல்லை, பின்னும் இல்லை பறவையின் பாதை கிழக்கையும் மேற்கையும் அழித்துவிடுகிறது.' ஜென் தத்துவம் பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு 10 நிமிட

7

வேடிக்கை பார்ப்பவன் - 7

16 January 2024
0
0
0

பள்ளித் தலமனைத்தும்... "உண்மையில், பள்ளிக்கூடம் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. திடீரென என் உலகம் மிகவும் பெரிதாகிவிட்டது. வீட்டைவிட்டு தினமும் வெளியே செல்வதற்கு இப்படி ஓர் அற்ப

8

வேடிக்கை பார்ப்பவன்-8

16 January 2024
0
0
0

 எமக்குத் தொழில் கவிதை 'முதலாளிமார்கள் விரல் எல்லாம் மோதிரங்கள் மனசெல்லாம் தந்திரங்கள்!' - கவிஞர் விக்ரமாதித்யன் ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும், இவனுக்குள் கோடீஸ்வரக் கனவு ஒன்று பூக்கத் தொடங்கும்

9

வேடிக்கை பார்ப்பவன்-9

16 January 2024
0
0
0

புன்னகைக்க மறந்த கதை "கண் சிமிட்டும் நேரத்தில் ஓர் உன்னதத் தருணம் புகைப்படம் ஆகிறது. அந்தத் தருணத்துக்கான காத்திருத்தலே, புகைப்படக் கலை. இருளை உணர்ந்தவனே, ஒளியில் வாழக் கற்றுக்கொள்கிறான்!" -பி.சி.ஸ்

10

வேடிக்கை பார்ப்பவன் - 10

16 January 2024
0
0
0

இவன், இவனான கதை! "இப்பொழுதும் அங்குதான் இருக்கிறீர்களா?" என்று கேட்டார். "எப்பொழுதும் அங்குதான் இருப்பேன்" என்றேன். - நகுலன் ('கோட் ஸ்டாண்ட்' கவிதைகள் தொகுப்பிலிருந்து...) போலந்து திரைப்பட இயக்கு

11

வேடிக்கை பார்ப்பவன் - 11

16 January 2024
0
0
0

தீராத விளையாட்டு வாழ்க்கையின் இருக்கலாம். கேள்விகள் ஆனால், எளிமையாகத்தான் இருக்கின்றன!" வேடிக் கடினமாக விடைகள் 211 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் "நா"ன்தான் டாம். நீங்க ஜெர்ரியாம். ஓடிப்போயி ஒளிஞ்சிக்குங்க.

12

வேடிக்கை பார்ப்பவன் - 12

16 January 2024
0
0
0

வீடென்பது யாதெனில்... "எனது புறநகர் குடியிருப்பு வயல்களின் சமாதி என்று நினைவுபடுத்தியவை தவளைகளே!" - சுகுமாரன் - 'பூமியை வாசிக்கும் சிறுமி' கவிதைத் தொகுப்பில் இருந்து... இன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில

13

வேடிக்கை பார்ப்பவன் - 13

16 January 2024
0
0
0

நிலாக் காலம் 'எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ? எந்த அழகை எந்த விழியில் கொண்டுசெல்வோமோ? இந்த நாளை வந்த நாளில் மறந்துபோவோமோ?' -கவியரசு கண்ணதாசன் ('பசுமை நிறைந்த நினைவுகளே...' பாடலில் இருந்து)

14

வேடிக்கை பார்ப்பவன் - 14

17 January 2024
0
0
0

சாலைகளின் பாடல் "நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சினிமா பார்ப்பதைப் போலத்தான். ஆனால், படம் முடிந்த பின் க்ளைமாக்ஸ் என்ன என்பது படம் பார்த்தவருக்குத் தெரியாது!" -ரோமன் பொலன்ஸ்கி, போலந்து திரைப்பட இயக்குந

15

வேடிக்கை பார்ப்பவன் - 15

17 January 2024
0
0
0

கனவின் கைப்பிடியில் "கட்டடங்களின் விரிசல்களுக்கு இடையே வேர் விட்டுப் பூக்கும் ரோஜாச் செடிகளை நீங்கள் பார்த்ததுண்டா? இயற்கை விதிகளைத் தவறாக்கி கால்கள் இல்லாமல் நடக்க அவை கற்றுக்கொடுக்கின்றன; அவை கனவுக

16

வேடிக்கை பார்ப்பவன் - 16

17 January 2024
0
0
0

குறுக்கு வெட்டுத் தோற்றம் தாமிரக் காசை தண்டவாளத்தில் வெச்சி நாம பதுங்க ரயில் நசுக்கும் - ராமையா கால ரயிலோட நாமெல்லாம் காசானோம் வாலிபம் போய் ஆச்சே வயசு! பார்ப்பவன் -வெ.சேஷாசலம் ('ஆகாசம்பட்டு' தொகுப்

17

வேடிக்கை பார்ப்பவன் - 17

17 January 2024
0
0
0

முன்பனிக்காலம் "நீ கிளையைக் கவனமாக வரைய முடியுமானால், உன்னால் காற்றின் ஒலியைக் கேட்க முடியும்!" - ஜென் தத்துவம் (எஸ்.ராமகிருஷ்ணனின் ஜென் கவிதைகள் நூலில் இருந்து) சினிமா, விநோதமான ஒரு ரங்கராட்டினம்.

18

வேடிக்கை பார்ப்பவன் - 18

17 January 2024
0
0
0

பின் பனிக் காலம் "பழத்தைப் பார்த்து பூ கேட்டது, 'இத்தனை நாளாய் எங்கு இருந்தாய்?' பூ சொன்னது, 'உன் இதயத்தில்தான் ஒளிந்திருந்தேன்!"' -தாகூர் (வழி தப்பிய பறவைகள் தொகுப்பில் இருந்து) வேலையற்றவனின் பகலு

19

வேடிக்கை பார்ப்பவன் - 19

17 January 2024
0
0
0

இவன் நானாகும் அத்தியாயம் 'நான் இல்லாமல் போகிறேன் ஆனால் வசந்த காலம் என்னுடைய நினைவுகளுடன் இருந்து கொண்டேதானிருக்கும்!' -இறக்கப்போகிற கடைசி நிமிடத்தில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ அன்புள்ள பாலுமகேந்த

20

வேடிக்கை பார்ப்பவன் - 20

17 January 2024
0
0
0

இளவேனிற் காலம் 220 இதற்கு மேல் உருள முடியாது கல் நதியைவிட்டு கரையேறிற்று. இதற்கு மேல் வழ வழப்பாக்க முடியாது கல்லை ஒதுக்கிவிட்டு நதி ஏகிற்று! கல்யாண்ஜி பத்திரிகையில் வேலை செய்தாலும், இவனது தீராக்கா

21

வேடிக்கை பார்ப்பவன -21

17 January 2024
0
0
0

'பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்' "உனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிந்துகொள்வதுதான் உண்மையான ஞானம்!" - சாக்ரடீஸ் இவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு 'சுதந்திரம்'. நூற்றுக்கும் 5. நூற்று

22

வேடிக்கை பார்ப்பவன் 22

18 January 2024
0
0
0

என்ன நடக்கிறது என்று என்ன நடக்கிறது என்று தெரிய மேஜையில் தேநீர் பதளமாய் கவிஞர் தேவநர்கள் இரண்டு சூரியன்" தொழும்பில் இருந்து கோப்பையைப் வைக்கிறேன் நடனமாய் மாறியபடி ஞாயிற்றுக்கிழமைகளை இவன் எந்த வே

23

வேடிக்கை பார்ப்பவன் - 23

18 January 2024
0
0
0

பசித்த புலியின் வேகம் "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" நகுலன் ('நினைவுப் பாதை' நாவலில் இருந்து...) எழுத்தாளர் சுஜாதா இவன் மேல் திருப்பிவிட்ட

24

வேடிக்கை பார்ப்பவன்-24

18 January 2024
0
0
0

நீங்கள் இயக்கிய 'சைக்கோ' திரைப்படத்தில் இடம்பெற்ற பாத்ரூம் கொலைக் காட்சியைப் பார்த்த பிறகு ஒரு மாதமாக என் மகள் குளிக்கவே இல்லை!" என்று ஒரு நாய் என்னிடம் சொன்னாள். நான் அவளிடம் சொன்னேன். 'தயவுசெய்து உங

25

வேடிக்கை பார்ப்பவன் -25

18 January 2024
0
0
0

குட்டிப் புத்தரின் கேள்வி "வாழ்க்கை, ஒரு மகாநதியைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் கரையில் நின்று, என் கண்ணுக்கு பட்டவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்." - எழுத்தாளர் வண்ணநிலவன் இந்த அத்தியாயத்த

26

வேடிக்கை பார்ப்பவன் - 26

18 January 2024
0
0
0

இவன் அவனாகும் அத்தியாயம் 'கீழைக்காட்டு வேம்பு கசந்தது அம்மாவின் சோகம் கேட்டுத்தான்!' -கவிஞர் த.பழமலய் ('சனங்களின் கதை' தொகுப்பில் இருந்து) அந்தப் பையனைக் காப்பாற்றுங்கள். அவன் ஏன் இப்படி இருக்கிறான

27

வேடிக்கை பார்ப்பவன் - 27

18 January 2024
0
0
0

பட்டாம்பூச்சி விற்ற கதை "ஒரு தேர் சக்கரத்தின் அளவு பூர்ண சந்திரன், இன்று ஒரு வீட்டுக் கூரையின் மேல் உதயமானான். தீப்பிடித்துவிட்டதோ என்று நினைத்தேன்!" தி.க.சிவசங்கரன் ('தி.க.சி-யின் நாட்குறிப்புகள்'

28

வேடிக்கை பார்ப்பவன் - 28

18 January 2024
0
0
0

அவையிடத்து முந்தியிருப்பச் செயல் 'ரத்தமும் சதையும் அல்ல... இதயம்தான் எங்களை தந்தை மகனாக இணைத்தது!' - எழுத்தாளர் ஓரான் பாமுக் எம்.ஏ., முடித்ததும், பச்சையப்பன் கல்லூரியிலேயே இவன் எம்.ஃபில்., சேர்ந்தா

29

வேடிக்கை பாறிப்பலன்-29

18 January 2024
0
0
0

'நிஜம்தாள் தாங்க முடியாத பாரம். அந்தப் பாரத்தை இறக்கியைக்க அல்ல, எவ்வளவு எடை என்று பார்த்துக்கொள்ளத்தான் இதை உல்களுக்கு எழுதுகிறேன். வெயிலில் உலர்த்துவது என் ஆகிவிட்டது. எல்லா இடத்திலும்நாளே வெயில் வி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்