கடந்த மாதம் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் சட்டசபை தேர்தலில் அபார வெற்றிபெற்று பா.ஜ.க ஆட்சியை பிடித்துள்ளது. அதேவேளை, தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிது உள்ளது.
மத்தியபிரதேசம்: 230 தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேசத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. மத்திபிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மைக்கு 116 தொகுதிகளை
கைப்பற்ற வேண்டும். அம்மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றிபெற்றுள்ளது.
ராஜஸ்தான்: 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 199 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது
ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மைக்கு 100 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அம்மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 109 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றிபெற்றுள்ளது.
சத்தீஷ்கார்: 90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கார் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 46 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். சத்தீஷ்காரில் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 53 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.
தெலுங்கானா: 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவிற்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க 60 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அம்மாநஅம்மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் 65 இடங்களை வென்று காங்கிரஸ் ஆட்சியை பிடிது உள்ளது.
'மூன்று மாநிலங்களில் பெற்ற வெற்றியை நாட்டு மக்கள் கொண்டாட வேண்டிய தருணம். நாடு யாருடைய கையில் இருந்தால் நல்லது என்று மக்கள் முடிவு செய்துள்ளனர்,'' என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் தெரிவித்தார். இந்த தேர்தலின் முடிவுகளால் பா.ஜா.க பெரும் அளவில் நம்பிக்கை பெற்று இருக்கிறது. அடுத்து வரும் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று நாடாளுமன்றத்தை ஆளும் என்று எதிர்பார்க்கிறது.