shabd-logo

16. கனவு (பகுதி 1)

5 January 2024

2 பார்த்தது 2

ஐவான் டர்ஜனீப் – ருஷியா

அந்தக் காலத்தில் நான் என் தாயாருடன் ஒரு சிறு துறைமுகப் பட்டினத்தில் வசித்து வந்தேன். எனக்கு அப்பொழுதுதான் பதினேழு வயது நிரம்பிற்று. தாயாருக்கு முப்பத்தைந்து வயது. சின்ன வயதிலேயே அவளுக்குக் கலியாணமாகியிருந்தது. எனது தகப்பனார் இறந்தது எனக்கு நன்றாக ஞாபகத்திலிருக்கிறது. அப்பொழுது எனக்கு ஏழு வயதிருக்கும். என் தாயார் நல்ல அழகிதான்; ஆனால், முகத்தில் எப்பொழுதும் சோகக்களை தட்டியிருக்கும். அவளைச் சிறு வயதிலேயே எல்லாரும் ரொம்ப அழகி என்று சொல்லிக் கொள்வார்களாம். ஆனால் அவளது கண்களில் மிதக்கும் சோக விலாசத்தைப் போல் நான் வேறு எங்குமே கண்டதில் லை. எனக்கு அவள் மீது அத்யந்தப் பற்றுதல்... அவளும் என் னைப் பிரியமாக நடத்தினாள்... ஆனால் வாழ்க்கை சந்தோஷகரமானதாக இல் லை. ஏதோ அந்தரங்கமான பெருவியாதி போன்ற துயரம் அவளைத் தின்று கொண்டிருந்தது. அது எனது தந்தையின் மரணத்தால் மட்டிலும் ஏற்பட்டது என்று கூறிவிடமுடியாது. என் தந்தையின் நினைவும் அவள் மனத்தில் வெகு ஆழமாகப் பதிந்திருந்தது. அது மட்டிலும் இல் லை, அதைவிட வேறு ஏதோ ஒன்று அவளை வாட்டிக் கொண்டிருந்தது என்று எனக்குப் பட்டது. என் தாய் என் மீது பாசமாக இருந்தாள் என்று கூறினேன். ஆனால், சில சமயம் என் னை வெறுத்தாற்போல் நடந்துகொண்டாள். என் னை ஒரு சுமையாகப் பாவித்து உதறித் தள்ளினாள். சில சமயங்களில் அவளாலேயே தடுக்க முடியாத வெறுப்பு அவளைக் கவ்வியது. பிறகு அதற்காக மிகவும் வருந்துவாள். கண்ணீருடன் என் னைக் கட்டித் தழுவிப் பொறுமுவாள். இதற்கெல்லாம் அவளது உடைந்து போன தேக ஸ்திதியும், எனது நடத்தைகளுமே காரணம் என்று எண்ணினேன். ஆனால், அவளுடைய வெறுப்புக்கள், நான் மோசமாக - போக்கிரித்தனமாக - நடந்துகொண்ட சமயத்தில் எழவில் லை. எனது தாய் எப்பொழுதும் துஷ்டிக்கு அறிகுறியாகிய கறுப்பு உடையே அணிந்து வந்தாள். நாங்கள் தாராளமாகச் செலவு செய்து சௌகரியமாகத்தான் வாழ்ந்து வந்தோம். ஆனால் நாங்கள் ஒருவருடனும் பழகாது தனியாகவே வசித்து வந்தோம். 

2

எனது தாயின் நினைவுகள், கவலைகள் - எல்லாம் எனது வளர்ப்பில் கவிந்தன. அவள் எனக்காகவே வாழ்ந்தாள் என்று சொல்லிவிடலாம். அப்படியிருந்தது அவள் பராமரிப்பு. இம்மாதிரியாகப் பெற்றோரின் கவலையெல்லாம் கவிழ்வது குழந்தைகளுக்கு நல்லதன்று; கெடுதலை விளைவிப்பதும் சகஜம். ஒற்றைக்கொரு பிள்ளை என்றால், கண்டபடி வளரும். தங்களைப் போல் பிள்ளைகளும் இருக்க வேண்டுமே என்று பெற்றோர்கள் நினைப்பதில் லை. ஆனால் நான் சீர்கெட்டுப் போகவில் லை. எனக்குப் பிடிவாதமும் கிடையாது. ஆனால் எனது நரம்புகள் மிகவும் தளர்ச்சியடைந்துவிட்டன. அதிலும் நான் மிகவும் பலவீனப்பட்ட பிள்ளை. என்னைப் பார்த்தால் என் தாயைப் பார்க்க வேண்டாம். அவ்வளவு முக ஜாடை ஒத்திருக்கும். என் வயதிற்கேற்ற சிநேகிதர்கள் கிடையாது. யாருடனும் பேசுவதற்குச் சங்கோஜம். என் தாயாருடன் கூட அதிகமாகப் பேசமாட்டேன். எனக்குப் புஸ்தகம் என்றால் பெரிய பைத்தியம். வெறுங்கனவு கண்டுகொண்டு, தனியாகத் திரிவதில் எனக்கு இச்சை. என்ன கனவுகள் என்று சொல்லுவது கஷ்டம். ஏதோ ஒரு கனவு. கதவு பாதி திறந்திருக்கிறது. அதற்குப் பின்புறம் ஏதோ மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆசை சொக்கும்படி அதன் முன்பு நான் நின்று காத்துக்கொண்டே இருப்பேன். வாசற்படியைத் தாண்டுவதில் லை. அதற்கப்பால் என்ன இருக்கிறது என்று யோசித்துக் கொண்டே, ஆசை உந்தித்தள்ள வாசற்படியில் நின்றுகொண்டே சில சமயம் அப்படியே தூங்கிப் போவதும் உண்டு. கவிதையுள்ளம் படைத்திருந்தால் பாட்டெழுதத் தொடங்கியிருப்பேன்; மதப்பற்று இருந்தால் சன்னியாசம் பெற்றிருப்பேன்; இரண்டும் என்னிடம் கிடையாததினால் கனவு கண்டுகொண்டே காத்திருந்தேன். 

3

விபரமற்ற எண்ணங்கள், சிந்தனைகளுடன், சில சமயங்களில் தூங்கிவிடுவேன். முக்கால்வாசி எனது வாழ்க்கையே தூக்கந்தான். ஒவ்வொரு நாளும் கனவுகள் கண்டேன். இவற்றை நான் மறப்பதில் லை. அவற்றிற்குக் காரணம் கற்பித்து, எந்த இரகசியத்தை அறிவிக்கத் தோன்றியிருக்கின்றன எனக் கண்டுபிடிக்க முயற்சித்தேன். சில கனவுகள் ஒரே மாதிரியாகத் திரும்பத் திரும்ப வந்தன. அவை இப்படி வருவது ஆச்சரியமாக, விபரீதமாக, எனக்குத் தென்பட்டது. முக்கியமாக ஒரு கனவு என் னை அலட்டியது. ஒரு கரடுமுரடான குண்டும் குழியும் நிறைந்த சிறிய தெரு; பட்டணமும் பழைய காலத்து மோஸ்தர். ஊசிக் கூரையுள்ள பல மச்சுக்களடங்கிய கட்டிடங்கள்; வழிநெடுக நான் அந்தத் தெரு வழியாக என் தகப்பனாரைத் தேடிக்கொண்டு போகிறேன். எந்தக் காரணத்தாலோ அவர் எங்களை விட்டு ஒளிந்து கொண்டிருக்கிறார். அந்தத் தெருவிலேதான் ஏதோ ஒரு வீட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறார். நான் ஒரு சிறு வாசல் வழியாக நுழைந்து, கட்டையும் பலகையும் நிறைந்து கிடக்கும் முற்றத்தையும் கடந்து, இரண்டு வட்டமான ஜன்னல்கள் உள்ள சிறு அறைக்குள் செல்லுகிறேன். அந்த அறையின் மத்தியில் ஒரு நீண்ட அங்கியைப் போட்டுக்கொண்டு என் தகப்பனார் நிற்கிறார். அவர் வாயில் ஒரு சுங்கான் இருக்கிறது. ஆனால், அவரைப் பார்த்தால் என்னுடைய நிஜத் தகப்பனார் மாதிரியே இல்லை. நெட்டையாக, ஒல்லியாக, வளைந்த கிளி மூக்கும், கறுத்து இருண்ட கண்களும் உள்ளவர். அவரை நான் கண்டுபிடித்தது அவருக்குச் சிறிதும் பிடிக்கவில் லை. எனக்கும் அப்படித்தான். தயங்கித் தயங்கி நிற்கிறேன். அவர் வேறு பக்கம் திரும்பி, என்னவோ முனகிக் கொண்டு, இப்படியும் அப்படியுமாக நடக்கிறார். முனகிக்கொண்டே, என் னைப் பார்த்தவண்ணமாகத் தூரச் செல்லுகிறார். அறையும் வளர்ந்துகொண்டே அவர் நடப்பதற்கு இடம் கொடுக்கிறது. பிறகு மூடுபனியில் மறைந்துவிடுகிறார். நான் தகப்பனாரை இழந்துவிட்டேன் என்று பயந்து, அவரைப் பின்பற்றி வேகமாக ஓடுகிறேன். அவரைக் காணவில் லை. அவருடைய கோபமான உறுமல்தான் கேட்கிறது. நான் திடீரென்று விழித்துக் கொள்ளுகிறேன். பிறகு, தூக்கம் வரவில்லை. மறுநாள் முழுவதும் இது என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். பயனில்லை. 

4

ஜூன் மாதம் வந்தது. நாங்கள் வசித்த பட்டினத்தில் அந்தக் காலந்தான் இறக்குமதிக் காலம்; கப்பல்கள் ஏராளமாகத் துறைமுகத்தில் வந்து சரக்குகளை இறக்கும். தெருவிலே புதுப்புது ஆட்களின் நடமாட்டமும் அப்பொழுதுதான் அதிகம். அந்தச் சமயத்தில் துறைமுகப் பக்கத்தில் சுற்றுவதற்கு எனக்கு மிகவும் பிரியம். ஒருநாள் காப்பிக்கடைப் பக்கமாகச் சென்று கொண்டிருக்கும் பொழுது, அங்கு ஒரு மனிதன் தென்பட்டான். மேலே நீளமான கறுப்புச் சட்டை; தலையிலே வைக்கோல் தொப்பி; கைகளை இறுக மார்பில் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். நீண்ட கறுத்த முடி நெற்றியிலிருந்து மூக்கு வரை தொங்கிக் கொண்டிருந்தது. வாயில் ஒரு சுங்கான். அந்த மனிதனை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. எங்கே? மனத்தில் இவ்வளவு ஆழமாகப் பதிந்த முகம் யாருடையது? என் நினைவு என் னைத் தூக்கிவாரிப் போட்டது. நான் கனவில் தேடிக்கொண்டிருக்கும் எனது கனவுத் தந்தைதான். சந்தேகமில் லை; பட்டப் பகலின் சுயப் பிரக்ஞையுடன் நுழைந்து, ஒரு கிண்ணம் பீரும், ஒரு பத்திரிகையும் கொண்டு வரும்படி கட்டளையிட்டுவிட்டு, காலியாகக் கிடந்த மேஜையின் பக்கத்தில் உட்கார்ந்தேன். பத்திரிகையினால் நன்றாக முகத்தை மறைத்துக்கொண்டு, அதன் விளிம்புகளின் மேலாக எனது கனவுத் தந்தையின் முகத்தைப் பார்க்கிறேன். அவர் யாருக்காகவோ காத்திருப்பதாக எனக்குப் பட்டது. அவர் தமது குனிந்த தலையை நிமிரவே இல் லை. சில சமயங்களில், 'இந்த முக ஜாடையெல்லாம் நானாகக் கற்பனை செய்து கொண்டது. உண் மையில் நான் இரவில் காண்பவருக்கும் என் முன்பு உட்கார்ந்திருப்பவருக்கும் சம்பந்தமே கிடையாது' என்று பட்டது. அந்தச் சமயத்தில் அவர் என் பக்கமாக முகத்தைச் சிறிது நிமிர்த்தினார். என் வாயிலிருந்து சிறு சப்தம் கூட வெளிப்பட்டது. அவரே தான் என்பதில் சந்தேகமே இல் லை. கொஞ்ச நேரத்தில் அவர் நான் அடிக்கடி அவரைப் பார்ப்பதைக் கண்டு கொண்டார். முதலில் அவர் முகத்தில் கோபம் ஜொலித்தது; எழுந்திருக்க முயன்று மேஜையில் சாத்தியிருந்த பிரம்பைத் தள்ளிவிட்டார். நான் உடனே அதை எடுத்து அவரிடம் கொடுத்தேன். சிறிது வேண்டா வெறுப்புடன், புன்சிரிப்புத் தவழ, எனக்கு வந்தனமளித்துவிட்டு, எதையோ கண்டவர்போல் புருவத்தை நெரித்து, என் னையே நோக்கினார். "நீ மரியாதையான பையன் போலிருக்கிறது. இந்தக் காலத்தில் அதேது? வீட்டில் உன் னை நன்றாக வளர்த்திருக்கிறார்கள்?" என்று திடீரென்று என்னிடம் சொன்னார். நான் என்ன பதில் சொன்னேன் என்று ஞாபகம் இல்லை. அப்படித்தான் பேச்சு வளர்ந்தது. அவரும் நம் தேசத்தினராம்; சமீபத்தில்தான் அமெரிக்காவிலிருந்து திரும்பினாராம். அங்குதான் ரொம்ப காலம் தங்கியிருந்தாராம். அவர் யாரென்று கேட்டதற்கு ஏதோ ஒரு பெயரைச் சொன்னார். எனது கனவுத் தந்தை மாதிரி உறுமலுடனேயே அவர் பேச்சை முடித்தார். என் பெயரைக் கேட்டதும், அவர் முகத்தில் ஆச்சரியக் குறி தோன்றியது. அந்த ஊரில்தான் நான் ரொம்பக் காலம் இருந்தேனோ என்றும், யாருடன் வசிக்கிறேன் என்றும் கேட்டார். நான் "தாயுடன் வசிக்கிறேன்" என்றேன். "அப்படியானால் உன் தகப்பனார்?" "அவர் இறந்து ரொம்பக் காலமாகிறது." என் தாயார் பெயரைக் கேட்டார். நான் சொன்னதும் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு, தாம் ஒரு விபரீதப் பிராணி என்று சொல்லிக் கொண்டார். நாங்கள் எங்கே வசிப்பது என்று கேட்டார். எங்கள் இடத்தைச் சொன்னேன்.

 5

சம்பாஷணை ஆரம்பித்த பொழுது இருந்த பயம் பின்னர் தெளிந்தது. ஆனால் அவர் சிரிப்பும் கேள்விகளும் எனக்குப் பிடிக்கவில் லை. அவருடைய கண்களில் தோன்றிய குறிகளும், அவை என் னைக் குத்துவன போலிருந்தன. அவற்றில் ஒரு பேய் - ஆசை, ஒரு பெருமிதம், எனக்குப் பயத்தை அளித்தது. எனது கனவில் இந்தக் கண்கள் இல்லை. அவர் முகத்தில் காணப்பட்ட வெட்டுக்காயம் இல்லை. முகம் களைத்திருந்தாலும், அந்தக் கனவில் வாலிபக்களை யிருந்தது. எனது கனவுத் தந்தைக்கு இவர் முகத்தில் இருக்கும் வெட்டுக்காய வடு கிடையாது. நான் எனது விபரத்தைச் சொல்லும்போது, ஒரு நீக்ரோவன் உள்ளே வந்து அவரை அழைத்தான். "அப்பா எவ்வளவு நேரம்?" என்று சொல்லிக்கொண்டே, உள்ளே அவனுடன் எழுந்து சென்றுவிட்டார். வெகு நேரம் கழித்து உள்ளெல்லாம் சென்று தேடினேன். அவர்கள் பின்புறமாகச் சென்று விட்டார்கள் போலிருக்கிறது. என் தலை வலிக்க ஆரம்பித்தது. கடற்கரையில் சிறிது சுற்றிவிட்டு வீடு திரும்பினேன். 

6

வெளி வாசலில் எங்கள் வேலைக்காரி என் னை எதிர் நோக்கி ஓடி வந்தாள். என்னமோ விபரீதம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று விரைந்து சென்றேன். வேலைக்காரி, அரைமணி நேரத்திற்கு முன்பு எனது தாயாரின் படுக்கையறையிலிருந்து ஒரு பயத்தினால் வீறிட்டெழும் கூக்குரலைக் கேட்டு, அங்கு ஓடிப் பார்க்க, எனது தாயார் மயங்கிக் கிடந்தாளாம். சிறிது நேரத்தில் பிரக்ஞையைப் பெற்றாலும், படுக்கையிலேயே கிடக்க வேண்டியதாயிற்று. என்ன கேட்டாலும் ஒன்றும் பதில் சொல்லாது பயந்து நடுங்கிக்கொண்டு மிரள மிரள விழித்தாளாம். வேலைக்காரி வைத்தியருக்கு ஆள் அனுப்ப, அவர் மருந்து கொடுத்த பிறகும், காரணம் கூற மறுத்து விட்டாளாம். தோட்டக்காரன், சப்தம் கேட்ட சமயத்தில் பூந்தொட்டிகளைத் தள்ளிக்கொண்டு யாரோ காம்பௌண்டு கேட்டிற்கு ஓடியதைக் கண்டதாகச் சொன்னான். அவன் சொன்ன அடையாளம் நான் சிறிது முன்பு சந்தித்த ஆசாமியினுடையது போல இருந்தது. நான் என் தாயாரிடம் சென்று, "இங்கு யாராவது வந்தார்களா?" என்று கேட்டேன். "யாரும் வரவில் லை" என்று படபடவென்று சொல்லிவிட்டு, "ஏதோ ஒரு சொப்பனம் கண்ட மாதிரித் தோன்றியது," என்று முகத்தை மூடிக்கொண்டாள். "பகலிலா?" என்றேன். "இப்பொழுது என் னைத் தொந்தரவு செய்யாதே. ஒரு காலத்தில் உனக்குச் சொல்லுகிறேன்" என்று என் னை அனுப்பிவிட்டாள். அன்றிரவு வரை எழுந்திருக்கவேயில் லை. எல்லோருக்கும் அதிசயமாக இருந்தது. ஒன்றும் புரியவில்லை.

 7

இரவில் நான் அவளிடம் சென்றேன். பக்கத்தில் உட்கார வைத்து, "நான் சொல்வதைக் கேள்" என்று ஆரம்பித்தாள். "நீ இன்னும் சிறுவனல்ல. உனக்கும் தெரிய வேண்டியதுதான். எனக்கு அந்தக் காலத்தில் ஒரு சிநேகிதை உண்டு. அவள், தான் காதாலித்த புருஷனைத்தான் மணந்தாள். சிறிது நாள் கழித்து பட்டணத்திற்கு குஷாலாக இருக்கச் சென்றார்கள். நாடகமென்ன, சங்கீதக் கச்சேரியென்ன, கேட்கவேண்டுமா பணம் இருந்தால்? எனது சிநேகிதையும் அடக்கஒடுக்கமானவள் அல்ல, படாடோ பக்காரி. ஆனால் மனசில் கல்மிஷமில்லாதவள். வாலிபர்கள் அவள் மீது கண் வைத்தார்கள். அவர்களிலே முக்கியமான ஒரு ராணுவ அதிகாரி எப்பொழுது பார்த்தாலும் அவளையே இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பான். "ஆனால் அவளிடம் சிநேகம் பண்ணிக்கொள்ளவில் லை; பேசியதுகூடக் கிடையாது. எப்பொழுது பார்த்தாலும் முரட்டுத்தனமாக அவளையே விழித்துப் பார்த்துக் கொண்டிருப்பான். அதனால் அவளுக்குப் பட்டணவாசத்தின் சுகம் கூட விஷமாயிற்று. புருஷனை ஊருக்குப் புறப்படும்படி அவசரப்படுத்தினாள். ஒருநாள் அவள் புருஷன் அந்த ராணுவ உத்தியோகஸ்தனுடைய சிநேகிதர்கள் கிளப்பிற்குச் சீட்டு விளையாடச் சென்றான். முதல் முதலாக, அவள் அன்று தான் அங்கு தனியாக இருந்தது. வெகு நேரமாகப் புருஷன் வரவில் லை. அவள் மனத்தில் பயம் தட்டியது. வேலைக்காரியை அனுப்பிவிட்டுப் படுக்கச் சென்றாள். சுவரில் யாரோ தட்டுவது மாதிரிக் கேட்டது. பயம் அவள் உடம்பையெல்லாம் நடுக்கியது. சுவரையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு மூலையில் விடி விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. சுவரில் ஒரு பக்கம் திறந்தது. அதிலிருந்து அந்தக் கறுப்புக் கண்களுடைய முரடன் வெளிப்பட்டான். பயம் அவள் வாயை அடைத்தது. அவள் பக்கமாக நெருங்கினான். மிருகம் மாதிரி அவள் தலையில் எதையோ போட்டு மூடினான். "அதற்கப்புறம் என்ன நடந்தது என்று எனக்கு ஞாபகமில் லை! சுத்தமாக ஞாபகமேயில் லை. மரணவேதனையாக, கொலை மாதிரி... மூடுபனி விலகியது. நான்... எனது சிநேகிதைக்குப் புத்தி தெளிந்தது. "பிறகு சத்தமிடப் பலம் வந்தது. "பிறகு அவள் கணவன் வெகு நேரம் கழித்து வந்து அவளைப் பார்த்தான். அவள் முகம் அடையாளம் தெரியாதபடி பயங்கரமாக மாறியது. அவளைப் பல கேள்விகள் கேட்டான். அவள் பதில் சொல்லவில் லை. திரைக்குப் பின் கள்ளக் கதவு இருந்தது. அவளுடைய கையிலிருந்த திருமணக் கணையாழியும் அத்துடன் காணாமற் போய்விட்டது. அது சாதாரணமானதல்ல. அதில் ஏழு தங்க நட்சத்திரங்களும், ஏழு வெள்ளி நட்சத்திரங்களும் செதுக்கப்பட்டிருந்தன. அது குடும்பச் சொத்து. அவள் அதைப் போக்கடித்து விட்டாள் என்று பிரமாதமாக நினைத்தான். அவனும் கவலையில் ஆழ்ந்தான். என் சிநேகிதைக்கு உடம்பு குணப்பட்டதும் ஊருக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் புறப்படும் தினத்தில் குப்பைத் தொட்டியில் ஒருவனுடைய பிரேதம் கிடந்தது. மண் டையில் பலத்த காயம். அந்த முரட்டு அதிகாரிதான் சீட்டாட்டத்தில் கொல்லப்பட்டான். "எனது சிநேகிதையும் ஊருக்குப் போனாள். சிறிது காலத்தில் அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அவளுடைய புருஷனுக்கு 'அது' தெரியாது. அவளால் எப்படிச் சொல்ல முடியும்? அவளுக்கே திட்டமாகத் தெரியாது. ஆனால் பழைய சந்தோஷம் மறைந்தது. அதன் பிறகு வந்த மன இருள் அகலவில் லை. அதற்கு முன்னும் பின்னும் அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்கவில் லை... அந்த ஒரு பையன் தான்..." என் தாயாரின் உடல் முழுவதும் நடுங்கியது. அவள் தனது முகத்தை மூடிக்கொண்டாள். "அவள் குற்றமென்று நீ சொல்லுவயா? அவளுக்குக் கிடைத்த இந்தத் தண்டனை அநியாயமானது என்று கடவுள் முன்பு கூறவும் அவளுக்கு உரிமை இல் லையா? இத்தனை காலம் கழித்து மறுபடியும் வந்து துன்பத்தால் செல்லரிக்கப்பட்ட இருதயத்தை ஏன் தாக்கவேண்டும்? கொலைகாரனுக்குப் பேய்க் கனவு தோன்றுவதில் அதிசயமில் லை... ஆனால் எனக்கு..." அவள் பிரக்ஞையிழந்து ஜன்னியில் பிதற்ற ஆரம்பித்து விட்டாள்.

புதுமைப்பித்தன் மூலம் மேலும் புத்தகங்கள்

72
கட்டுரைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகள்
0.0
புதுமைப்பித்தன் மொத்தம் 108 சிறுகதைகள் எழுதியுள்ளார். அதில் அவர் காலத்தில் 48 மட்டும் பிரசுரமாயின. 1940-ல் புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. புதுமைப்பித்தன் 98 கதைகளை எழுதியுள்ளார். அவர் மணிக்கொடியில் எழுதிய 29 கதைகளைப் புதுமைப்பித்தன் கதைகள் என்ற பெயரில் நவயுகப் பிரசுராலயம் வெளியிட்டுள்ளது. ஆறுகதைகள், நாசகாரக் கும்பல், பக்த குசலோ என்ற அவரது பிற நூல்களையும் அதே நிறுவனம் வெளியிட்டுள்ளது. கலைமகள் பதிப்பகம் காஞ்சனை தொகுதியையும், ஸ்டார் பிரசுரம் ஆண்மை என்ற தொகுதியையும் வெளியிட்டன. ஐந்திணைப் பதிப்பகம் புதுமைப்பித்தனின் மொத்தச் சிறுகதைகளையும் வெளியிட்டது. அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் புதுமைப்பித்தனின் அனைத்துச் சிறுகதைகளையும் வெளியிட்டுள்ளது.
1

1. ஆஷாட பூதி

2 January 2024
0
0
0

மோலியர் (1622-1673) பதினேழாவது நூற்றாண்டில், பிரான்ஸில் நாடகக்காரன் என்றால், மதம் அவனைத் தள்ளிவைத்தது. பிரார்த்தனை - பிரசாதத்தைப் பெறுவது என்றால் விசேஷ சிபாரிசின் பேரில் நடக்க வேண்டிய காரியம். செத்தால

2

2. ஆட்டுக் குட்டிதான்

2 January 2024
0
0
0

ஜேம்ஸ்ஹானலி – இங்கிலாந்து  செக்கச் செவேலென்றிருக்கும் அந்த பஸ், ஏக இரைச்சலுடன் அந்த வளைவைத் திரும்பியது. சூழ்நிலை தாங்கிய அமைதியான வண்ணக் கலவைகளுக்குச் சவால் கொடுப்பது மாதிரி அந்தச் சிகப்பு கண்களை உற

3

3. அம்மா

2 January 2024
0
0
0

கே. பாயில்  பாதை நெடுகலாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், அதற்குச் சின்னக் கிளை ஒன்றும் இருந்தது. இருந்தாலும் மறுபக்கத்தில் ஓடும் சிற்றோடையில் இறங்கி அக்கரைக்குப் போக வேண்டிய அவசியமே இல் லை. மலை வ

4

4. அந்தப் பையன்

3 January 2024
0
0
0

மாக்ஸிம் கார்க்கி  இந்தச் சின்னக் கதையை எப்படிச் சொல்லுவது என்று புரியவில் லை. அவ்வளவு எளிதானது. நான் வாலிபப் பருவத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் தெருக் குழந்தைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு ஊருக்கு வெளியே

5

5. அஷ்டமாசித்தி

3 January 2024
0
0
0

டென்ஷொ வம்சத்தின் ஆதிக்கத்தின்போது, கியாட்டோ என்ற வடக்குப் பிராந்தியத்தில் குவான்ஷின் கோஜி என்ற வயோதிகன் வாழ்த்து வந்தான். நீண்டு நெஞ்சை மறைக்கும் வெள் ளைத் தாடியுடன், ஷிண்டோ குருக்கள்மார் போல உடையணிந

6

6. ஆசிரியர் ஆராய்ச்சி

3 January 2024
0
0
0

ஸின்கிளேர் லூயிஸ்  டாக்டர் ஸ்லீக் பிரம்மச்சாரி; அதிலும், வழுக்கை விழவிருக்கும் வாலிபப் பிரம்மச்சாரி. அவர் இராஸ்மஸ் கலாசாலையில் சரித்திரமும் பொருளாதாரமும் கற்பித்து வந்தார். அதாவது மேடைமீது ஏறி நின்று

7

7. அதிகாலை ( பகுதி 1)

3 January 2024
0
0
0

நிக்கோலாய் டிக்கனோவ்  1918-ம் வருஷம் ஆகஸ்டு மாதத்தில் துருக்கியர் பாக்கூ என்ற இடத்தை முற்றுகை இட்டார்கள். மென்ஷ்விக் நிர்வாகத் தலைமை போர்டின் ஐந்து தலைவர்கள் மூளையும் சுழன்றது. சர்வ குழப்பம்; அது விஷ

8

7.அதிகாலை (பகுதி 2)

3 January 2024
0
0
0

இராத்திரி ஒரு ஊரில் தங்கினதும், ஆலி ஹஸன், டாஷா பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு சளசளவென்று மணிக்கணக்காகப் பேசிக் கொட்டினான். உத்யோகஸ்தரின் விதவை மெய்ஸ் அரிசி ரொட்டியை அசைபோட்டுக் கொண்டிருந்தாள். வி

9

7. அதிகாலை ( பகுதி 3)

3 January 2024
0
0
0

"பொய்யாயிருக்கலாம், ஆனால் சித்திரவதையில், உன் னைக் காட்டிக்கொடுப்பேன்; என் னைக் காட்டிக்கொடுத்துக் கொள்வேன்; எனக்கு ஞாபகத்துக்கு வந்தவர்களையெல்லாம் காட்டிக்கொடுப்பேன். உனக்குச் சித்திரவதை என்றால் எப்ப

10

7. அதிகாலை (பகுதி 4)

3 January 2024
0
0
0

"ஆஹா அப்படியா. பாக்ஷாதான் வயிற்றுக் கடுப்பால் கழிந்து கொண்டிருக்கிறாரே. இன்னும் கொஞ்ச காலத்துக்கு அவரைப் பற்றித் தொந்திரவில் லை. தவிரவும், உன்னுடைய ஆயுதங்களை உன்னிடம் கொடுத்துவிடவேண்டும் என்று உத்திரவ

11

8. பலி

4 January 2024
1
0
0

ஜோஸப் நையரு – ஹங்கேரி  மோல்டேவியா நோக்கி நிற்கும் மலைச் சிகரங்களிலே அந்த வருஷத்தில் மந்தைகளுக்குக் கரடிகளால் வெகு தொல் லை ஏற்பட்டு வந்தது. வில் - பொறி வைத்து எல்லாம் முயன்று பார்த்ததும் ஒன்றும் பயன்ப

12

9. சித்திரவதை

4 January 2024
1
0
0

எர்னஸ்ட் டாலர்  "உனக்கு இன்னும் ஏதாவது விருப்பம் இருக்குமா?" சாகக் கிடக்கும் வாலிபனைப் பார்த்து ஸ்டட்கார்ட் இரகசியப் போலீஸ் உத்தியோகஸ்தர் இவ்வாறு கேட்டார். வாலிபனுடைய 'வெறிச்சோடிய' கண்கள் ஜன்னலின் கம

13

10. டைமன் கண்ட உண்மை

4 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர் (1564-1616)  ஆங்கில நாடகாசிரியர், ஷேக்ஸ்பியரைத் துவிதப் பிரம்மா என்பார்கள். உலகத்தின் சிருஷ்டி தத்துவத்தைப் புரிந்து கொண்டவர் போல் தமது பாத்திரங்களை நடமாட விடுவார். அவர் உலகில் பேய்களும்

14

11. இனி

4 January 2024
1
0
0

இ. எம். டிலாபீல்ட்  இதுவரை நடக்காததைப் பற்றி ஒரு கதை எழுதினால் என்ன?... அந்தக் கதையின் போக்கில் அறிந்து கொள்ள முடியுமானால்... பதினைந்து இருபது வருடங்களுக்கப்புறம்: ஓல்ட் பெய்லியில் (நியாயஸ்தலம்) நடக்

15

12. இந்தப் பல் விவகாரம்

4 January 2024
1
0
0

மைக்கேல் ஜோஷெங்கோ – ருஷ்யா  எங்கள் சகா எகோரிச்சுக்குப் பல், தொந்திரவு கொடுத்து வந்தது. என்ன காரணத்தினாலோ விழ ஆரம்பித்தது. காலம் என்ற ஒன்று இருக்கே, அதற்கும் இந்த விவகாரத்துக்கும் சம்பந்தமிருக்கலாம்.

16

13. இஷ்ட சித்தி ( பகுதி 1)

4 January 2024
1
0
0

ஹான்ஸ் பலாடா – ஜெர்மனி  முதலிலேயே தெரிவித்து விடுகிறேன். அப்புறம் குறை சொல்லாதீர்கள். என் மனைவி பெயர் இட்ஸன் பிளாஸ். உச்சரிப்பதற்குக் கொஞ்சம் சிரமந்தான்; ஆனால் அவள் மீது இருந்த ஆசையில், அதன் சிரமம் எ

17

13. இஷ்ட சித்தி ( பகுதி 2)

4 January 2024
1
0
0

"பின்பு கிரிஸ்மஸ் சமயத்தில் அதை உடைத்து... பிறகு என்னவென்பது உங்களுக்குத்தான் தெரியுமே!" என்றாள்! "உனக்கென்ன பைத்தியமா? இந்த வருஷம் போனஸ் கீனஸ் கிடையாது என்று ஹீபர் சொல்லுகிறான். முதலாளி வருமானம் இல்

18

14. காதல் கதை

5 January 2024
1
0
0

வில்லியம் ஸரோயன்  "இந்தப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுகிறீரா அல்லது அந்தப் பக்கமாக உட்காருகிறீரா?" என்று சிகப்புக் குல்லா* கேட்டான். (* நம்மூர்களில் சிகப்புத் தலைப்பாய் என்றால் போலீஸ்காரன் என்பது

19

15. கலப்பு மணம்

5 January 2024
1
0
0

கிரேஸியா டெலாடா – இத்தாலி  அன்றிரவு சுகமாக இருந்தது. பூலோகத்தைக் கடுங்குளிரினால் சித்திரவதை செய்வதில் சலியாத உறைபனிக் காலத்துக்கும் ஒரு ஓய்வு உண்டு என்பதை அந்த ஏப்ரல் இரவு காட்டியது. இதுவரை பனிக்கட்ட

20

16. கனவு (பகுதி 1)

5 January 2024
1
0
0

ஐவான் டர்ஜனீப் – ருஷியா அந்தக் காலத்தில் நான் என் தாயாருடன் ஒரு சிறு துறைமுகப் பட்டினத்தில் வசித்து வந்தேன். எனக்கு அப்பொழுதுதான் பதினேழு வயது நிரம்பிற்று. தாயாருக்கு முப்பத்தைந்து வயது. சின்ன வயதிலே

21

16. கனவு ( பகுதி 2)

5 January 2024
1
0
0

8 என் தாய் எனக்குக் கூறிய கதை எனதுள்ளத்தை எப்படிச் சிதறடித்தது! முதல் வார்த்தையிலிருந்தே அறிந்து கொண்டேன். அவள் வாயிலிருந்து தவறுதலாக நழுவிய வார்த்தை எனது உத்தேசத்தைத் திடப்படுத்தியது. எனது கனவில் நா

22

17. காரையில் கண்ட முகம்

5 January 2024
1
0
0

இ.வி. லூக்காஸ் – இங்கிலாந்து  நேற்று சாயங்காலம் எனது நண்பன் டாப்னி வீட்டில் நடந்ததை மறக்க முடியவில்லை. அந்த அநுபவம் இன்னும் என் னை உறுத்திக் கொண்டிருக்கிறது. அன்றைய தினம் பேச்சு பூத பைசாசங்களைப் பற்ற

23

18. கிழவி

5 January 2024
1
0
0

ஸெல்மாலேகர்லாப் – ஸ்வீடன்  மலைப்பாதை வழியாக ஒரு கிழவி நடந்து கொண்டிருந்தாள். மெலிந்து குறுகியவள்தான். எனினும் முகத்தின் வண்ணம் வாடவில்லை. சதைக் கோளங்கள் மரத்துத் தொய்ந்து திரித் திரியாகத் தொங்கவில்லை

24

19. லதீபா

6 January 2024
0
0
0

மோஷி ஸ்மிலான் ஸ்கி  "லதீபாவின் கண்களை நீ பார்த்திருக்காவிட்டால், கண்களுக்கு எவ்வளவு அழகு இருக்க முடியும் என்பது உனக்குத் தெரிந்தே இருக்காது." இப்படி நான் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம். ச

25

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்( பகுதி 1)

6 January 2024
0
0
0

1 அவர்களுடைய மூத்த பெண்ணின் படிப்பு அடுத்த மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது. வயசும் 'அப்படி இப்படி' என்று சீக்கிரத்தில் பதினெட்டு ஆகிவிடும். டோ க்கியோவிலேயே நாகரீகத்திற்குப் பெயர் போன இடத்தில் நிலம் வாங

26

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்(பகுதி 2)

6 January 2024
0
0
0

5 வரன்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுவதற்கு நாள் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு 'கபூக்கி' நாடகக் கொட்டகையில் தரகர் இரண்டு 'பாக்ஸ்' களை அமர்த்தினார்; இரண்டு குடும்பங்களும் பக்கத்த

27

21. மணிமந்திரத் தீவு

6 January 2024
0
0
0

ஷேக்ஸ்பியர்  நடுக்கடலிலே நாலைந்து கப்பல்கள் தத்தளித்துத் தடுமாறுகின்றன. கடலலைகள் சினங்கொண்ட கருநாகங்கள் போல ஆயிரமாயிரமாகப் படம் விரித்துத் தலை சுற்றி மோதுகின்றன. உயிரை வாங்கவரும் கால தூதர்களின் கோரச்

28

22. மணியோசை

6 January 2024
0
0
0

ஜப்பான்  "நான் சாவதற்குப் பயப்படவில் லை" என்றாள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மனைவி. "இப்பொழுது என் கவலை எல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நான் போன பிறகு யாரைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?" வேதனை

29

23. மார்க்ஹீம்

6 January 2024
0
0
0

ஆர்.எஸ். ஸ்டீவன்ஸன் – இங்கிலாந்து  "ஆமாம்! எங்கள் வியாபாரத்திலே பலவிதம் உண்டு; வாங்க வருகிறவர்களில் சிலருக்கு ஒன்றுமே தெரியாது; வெறும் 'அப்பாவிகள்'. அப்பொழுது எங்கள் அநுபவத்திற்கு ஏற்ற லாபத்தைப் பெறு

30

24. மிளிஸ்

8 January 2024
0
0
0

பிரட் ஹார்ட் – அமெரிக்கா  ஸிராநிவாடா மலைத் தொடரில் சமவெளிக்குப் பக்கத்தில் இருக்கும் சிவந்த மலைகளில்தான் "ஸ்மித் பாக்கெட்" என்ற இடம் இருக்கிறது. அது ஒரு சுரங்க ஸ்தலம். அதாவது ஒரு காலத்தில் தங்கம் இரு

31

25. முதலும் முடிவும் ( பகுதி 1)

8 January 2024
0
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  மாலை ஆறு மணியிருக்கும். அந்த அறையில் சுமாரான இருட்டு. 'பச்சை ஷேட்' போட்ட மேஜையின் மீதிருந்த ஒற்றை விளக்கு, தரையில் விரித்த துருக்கிக் கம்பளத்திலும், மேஜையின் மீது சிதறிக் கிடந்த,

32

25. முதலும் முடிவும் ( பகுதி 2)

8 January 2024
0
0
0

"பிரேதத்தின் மேலிருந்த எதையும் எடுத்தாயா?" "நாங்கள் சண்டை போட்டுக் கொள்ளும்பொழுது இது அவன் பையிலிருந்து விழுந்தது." அது வெறும் தபால் கவர். தென் அமெரிக்கத் தபால் குறியிட்டு, "பாகட்ரிக் வாலன், ஸைமன் ஓட்

33

26. நாடகக்காரி

8 January 2024
0
0
0

ஆண்டன் ஷெக்காவ் – ருஷியா  அவள் ஒரு நாடகக்காரி. அந்தக் காலத்திலே அவளுக்கு யௌவனக் களை மாறவில் லை. குரல் கணீர் என்று இருக்கும். பலர் வந்து போவார்கள். ஆனால் குறிப்பாக நிக்கோலாய் பெட்ரோவிச் கோல்ப்பக்கோவ்

34

27. நட்சத்திர இளவரசி

8 January 2024
0
0
0

ஒரு ஆசிரியர் - தென் கடல் தீவுகள்  "நம்மிடம் இருப்பதையெல்லாம் சாப்பிட்டு விடுவோம்" என்றான் டபூதி. அவனது சகோதரனான அய்ட்டோ சந்தேகத்துடன் ஏறிட்டுப் பார்த்தான். "அப்படியானால் நமக்கு மிகுந்த பலம் உண்டாகிவி

35

28. ஓம் சாந்தி! சாந்தி!

8 January 2024
1
0
0

எலியா எஹ்ரன் பர்க்  (யுத்தம் மனித சமூகத்தின் 'உடனுறை நோயாகவே' இருந்து வருகிறது. தனது தற்காப்புக்காக மனிதன் சமூகம் என்ற ஒரு ஸ்தாபனத்தை வகுத்தான்; பிறகு அதனைக் காப்பாற்றத் தன் னைப் பலிகொடுக்கத் தயாரானா

36

29. ஒரு கட்டுக்கதை

9 January 2024
0
0
0

பிரான்ஸ் காப்கா – ஆஸ்திரியா  எலி சொல்லுகிறது... "ஐயோ, உலகம் தினம் தினம் எவ்வளவு சின்னதாகிக் கொண்டே வருகிறது! முதலில் ரொம்பப் பெரிதாக, நான் பயப்படும்படியாக, அவ்வளவு பெரிதாக இருந்தது. நான் ஓடிக்கொண்டே

37

30. ஒருவனும் ஒருத்தியும்

9 January 2024
0
0
0

லூயிகய்ல்லூ – பிரான்ஸ்  மச்சுப் படிக்கட்டு முற்றத்தில் இறங்கியது. அங்கே, அதாவது கடைசிப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, அன்று காலை முழுவதும் அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் ரொம்பவும் நெட்டை. ஒற்றை ந

38

31. பைத்தியக்காரி

9 January 2024
0
0
0

மொப்பஸான் – பிரான்ஸ்  "ஆமாம், நீ சொல்வது முன்பு பிரான்சிற்கும் ருஷியாவிற்கும் சண் டை நடந்ததே, அப்பொழுது நடந்த பயங்கரமான சம்பவத்தை என் நினைவிற்குக் கொண்டு வருகிறது" என்று கூறத் தொடங்கினார் முஸே டி' என

39

32. பளிங்குச் சிலை

9 January 2024
0
0
0

வாலரி புருஸ்ஸாப் வாலரி புருஸ்ஸாப் (1875-1924) புரட்சி யுகமான நவீன காலத்து ருஷ்யப் புது எழுத்தாளர் கோஷ்டியைச் சேர்ந்தவர். இந்தக் கதை புரட்சிக்கு முந்திய காலத்தைப் பகைப் புலமாகக் கொண்டு, எழுந்த கற்பனைக

40

33. பால்தஸார் (பகுதி 1)

9 January 2024
0
0
0

அனதோல் பிரான்ஸ் – பிரான்ஸ்  "கிழக்கே அரசர்களுக்கு மந்திர சக்தியுண்டு என்று நினைத்தார்கள்" -தெர்த்தூலியன் அக்காலத்திலே எதியோபியாவை பால்தஸார் ஆண்டு வந்தான். கிரேக்கர் அவனை ஸாரஸின் என்று அழைத்தனர். அவன்

41

33. பால்தஸார்( பகுதி 2)

9 January 2024
0
0
0

ஜனநடமாட்டமில்லாத பாலைப் பிரதேசங்களில் மத்தியானம் வரை நடந்தனர். உச்சியில் சூரியன் வந்ததும், திருடர்கள் கைதிகளை விடுவித்து, பாறையின் நிழலில் உட்காரச் சொல்லி, கெட்டுப்போன ரொட்டித் துண் டைக் கொடுத்தனர். ப

42

34. பொய்

9 January 2024
0
0
0

லியேனீட் ஆன்ட்ரீவ் – ருஷியா  "நீ சொல்வது பொய், அது உனக்குத் தெரியும்!" "அதற்கேன் இப்படிக் கத்தவேண்டும்? பக்கத்திலிருக்கிறவர்களுக்கும் தெரிய வேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது." இப்பொழுதும் பொய் சொன்னாள்

43

35. பூச்சாண்டியின் மகள்

10 January 2024
0
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து  அவள் பெயர் பத்தேமா. அவள் பாக்தாத் நகர் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தாள். அவள் நீலத்தாடிவாலாவின் புதல்வி. கண்டதும் காம வெறியை எழுப்பும் மோகனாங்கி. அவளது மதி முகத்தின் வ

44

36. ராஜ்ய உபாதை( பகுதி 1)

10 January 2024
0
0
0

ஹென்றிக் இப்ஸன் (1828-1906)  ஷேக்ஸ்பியருக்கு நிகராக உலகம் கொண்டாடும் சிறந்த நாடக ஆசிரியர் ஹென்ரிக் இப்ஸன். தர்மத்துக்கு வெற்றி அளித்தார் ஷேக்ஸ்பியர்; தர்மம் ஏன் வெற்றி பெற வேண்டும் என்ற கேள்வியை எழுப

45

ராஜ்ய உபாதை( பகுதி 2)

10 January 2024
0
0
0

"அந்தக் கடிதம்..."  "இரு இரு, விரோதிகளைப் பற்றி நான் ஒரு பட்டியல் கொடுத்தேனே. நீ அதிகாரத்தை விடத் தயாராக இருப்பதுபோல நானும் என் எதிரிகளை மன்னிக்க ஆசைப்படுகிறேன். அந்தப் பட்டியலை இந்த நெருப்பில் போட்ட

46

37. ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு

10 January 2024
0
0
0

நதானியேல் ஹாதார்ண் – அமெரிக்கா  எல்லைப்புறத்தைப் பாதுகாப்பதற்காக 1725-ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்ட படையெடுப்பு சரித்திரத்திலேயே கற்பனைக்கு இடந்தரும் பகுதி. அதை எல்லாரும் சாதாரணமாக 'லவல் சண்டை' என்று கூற

47

38. சாராயப் பீப்பாய்

10 January 2024
0
0
0

எட்கார் அல்லன் போ – அமெரிக்கா  அவன் ஆயிரம் குற்றங்களைச் செய்தான்; ஆனால் என்னால் இயன்றவரை பொறுத்தேன். அவன் என் னைத் திட்டி அவமதித்தான். இனி, பழிக்குப் பழி தீர்க்க வேண்டியதுதான் என்று மன உறுதி கொண்டேன்

48

39. சகோதரர்கள்

10 January 2024
0
0
0

யூஜோ யாம மோட்டோ – ஜப்பான்  'அண்ணா, இது நல்லதுதானே?' 'எங்கே, இப்படிக் கொண்டா பார்ப்போம்' என்று மூத்தவன் தன்னிடம் காட்டப்பட்ட காளானைப் பார்ப்பதற்காகத் திரும்பினான். 'ஊங் ஹும், நல்லதில் லை; நான் பிடுங்க

49

40. சமத்துவம்

10 January 2024
0
0
0

ஒரு ருஷிய ஆசிரியர்  நீலக் கடலின் அடிமட்டத்திலே, பிரமாண்டமான மீன் ஒன்று, இரை தேடிக்கொண்டு, உல்லாசமாக நீந்தி வருகிறது. எதிரே ஒரு சின்ன மீன் - அதன் உணவு. பெரிய மீன் அதை விழுங்குவதற்காக, தன் வாயை அகலத் த

50

41. ஷெஹர்ஜாதி - கதை சொல்லி

11 January 2024
0
0
0

ஹென்றி டிரெக்னியர் – பிரான்ஸ்அன்று இரவு ஷெஹர்ஜாதி நன்றாகத் தூங்கவேயில் லை. பகல் முழுவதும் சுட்டுப் பொசுக்கும் வெய்யில். அதனால் மூச்சுவிடக்கூட முடியாதபடி அவ்வளவு இறுக்கமாக இருந்தது. சிலந்தி வலையையும் த

51

42. சிரித்த முகக்காரன்

11 January 2024
0
0
0

அவன் சோகமாக இருக்கிறான், தனியாக இருக்கிறான் என்று சொல்லிவிடுவது எளிது; ஆனால் அவன் எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்தோடேயே இருக்கிறான். அப்படிச் சொல்லிவிட்டாலும், அவனைப் பாட்டிலில் போட்டு அடைத்து லே

52

43. சூனியக்காரி

11 January 2024
1
0
0

ரோனால்டு ஆக்டன் – இங்கிலாந்து அப்பொழுது இலையுதிர் காலம். நானும் ஜேக் மக்கின்ஸனும் பக்கத்து மிராசுதாருடைய காட்டில் திருட்டுத்தனமாகக் கண்ணி வைத்து வேட்டையாடச் சென்றோம். அவனுக்கு வயது இருபதுக்கு மேல

53

44. சுவரில் வழி

11 January 2024
0
0
0

ஆர். முரே கில்கிரைஸ்– இங்கிலாந்து அன்று முற்பகல் சிறிது உஷ்ணமாகவே இருந்தது. பசும்புல் செழித்து வளர்ந்த மைதான வெளியில், ஆங்காங்கு குத்துக்குத்தாகப் பெயர் தெரியாத புஷ்பங்கள் எல்லாம் கணக்கற்று

54

45. தாயில்லாக் குழந்தைகள்

11 January 2024
0
0
0

பிரான்ஸிஸ் பெல்லர்பி – இங்கிலாந்து வேர்த்து விருவிருக்க, கால்கள் தள்ளாட, இரண்டு குழந்தைகள் நடந்து சென்றன. பையன், பதினொரு வயசிருக்கும். முன்னால் நடந்தான். பெண் எட்டு வயசுபோல இருக்கும். பாதை முன் ம

55

46. தையல் மிஷின்

11 January 2024
0
0
0

இவான் கூம்ஸ் அங்கு மனிதனைத் தூங்காது விழிக்க வைத்திருக்க ஒருவித சந்தடியும் கிடையாது. இருந்தாலும், அந்தச் சிறிய கட்டிலில் சுருண்டு முடங்கிக்கொண்டு, நெடுநேரமாக நிசப்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

56

47. தந்தை மகற்காற்றும் உதவி

11 January 2024
1
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து டான் ஜுவான் தன் மாளிகையில் விருந்து மண்டபத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று தரை வெடித்தது. நரக தூதர்கள் வந்து அவனை இழுத்துக் கொண்டு போய் விட்டார்கள்

57

48. தெய்வம் கொடுத்த வரம்

12 January 2024
1
0
0

பியோர்ண்ஸ்டர்ண் பியோர்ண்ஸன் – ஸ்வீடன்  இந்தக் கதையில் வருகிறவன் தான் அவனுடைய ஊரிலேயே ரொம்பவும் பெரிய பணக்காரன். தவிரவும் அந்த வட்டாரத்திலே அவனுக்குத்தான் ரொம்பவும் சொல் சக்தி உண்டு. அவன் பெயர் தார்ட்

58

49. தேசிய கீதம் (பகுதி 1)

12 January 2024
0
0
0

எல்.ஏ.ஜி. ஸ்டராங் – இங்கிலாந்து  லாரி நிறையத் துருப்புக்கள் கன வேகமாகச் சென்று சில விநாடிகள் கூடக் கழியவில் லை. அது இப்பொழுதுதான் நிகழ்ந்தது. வெடியின் அதிர்ச்சி பரீலியை அப்படியே கலங்க வைத்துவிட்டது.

59

49. தேசிய கீதம் (பகுதி 2)

12 January 2024
0
0
0

ஆம். அமெரிக்காவில் ஓர் பெருத்த வெற்றி. நியூயார்க்கில் இரண்டு ஆட்டம்; பிறகு அமெரிக்கா முழுவதிலும் ஓர் நீண்ட வெற்றி யாத்திரை; முடிவில் ஹாலிவுட்டில் ஒரு பிலிம்; சமாதானம் ஏற்பட்ட இரண்டொரு மாதங்களுக்கப்புற

60

49. தேசிய கீதம் (பகுதி 3)

12 January 2024
0
0
0

இந்தச் சம்பவம் பரீலியின் கோபத்தை அதிகரித்தது; ஆனால் பொதுப்படையாக்கியது. இதுவரை தன் தேசவாசிகளான புரட்சிக்காரர் மீது கோபங்கொண்டிருந்தான். இப்பொழுதோ இந்த இடத்தின் பேரிலேயே கோபம். அவன் நெஞ்சில் ஆழமாகப் பய

61

50. துன்பத்திற்கு மாற்று

12 January 2024
1
0
0

ஸீனர் லூயிஜி பிரான்டல்லோ – இத்தாலி  நமது வாழ்க்கையை, முக்கியமாக அதில் காணும் துன்பங்களை, வான வெளியிலே தேஜோமயமாகச் சுழன்று செல்லும் நட்சத்திர மண்டலங்களுடன் ஒப்பிட்டுப்பாரும், அப்பொழுது அது துச்சமாகத்

62

51. துறவி

12 January 2024
0
0
0

ராபர்ட் நியூமான் – ஜெர்மனி  "நான் முதல் முதலில் ஐரோப்பாவிலிருந்து இந்தக் கீழப் பிரதேசங்களுக்கு வந்தபொழுது அது நடந்தது" என்று அவன் ஆரம்பித்தான். அவன் எங்கள் கப்பலின் காப்டன்; பெயர் வான்டர்லான். ஜாதியி

63

52. உயிர் ஆசை (பகுதி 1)

13 January 2024
1
0
0

ஜாக் லண்டன் – அமெரிக்கா  அவர்கள் இருவரும் நொண்டி, நொண்டி ஆற்றங்கரை வழியாகத் தள்ளாடி நடந்தார்கள். கத்தி போல ஊசியாக, தெத்துக்குத்தாகக் கிடந்த பருக்கைக் கற்கள் காலை வெட்டின. அவர்களிருவரும் சோர்ந்து விட்

64

52. உயிர் ஆசை (பகுதி 2)

13 January 2024
1
0
0

நாட்களும் ஓடின. காட்டு ஜீவராசிகள் ஓடியாடித் திரியும் பள்ளத்தாக்குகளை அடைந்தான். மான் கூட்டம் ஒன்று. இருபது இருக்கும். துப்பாக்கி லெக்குக்கு ரொம்பவும் அருகில் துள்ளி ஓடின. அவற்றை விரட்டிக் கொண்டே ஓடினா

65

52. உயிர் ஆசை (பகுதி 3)

13 January 2024
1
0
0

பாறை மீது படுத்துக் கிடந்தவன் சுயப் பிரக்ஞையுடன் விழித்துக் கொண்டான். சூரியன் காய்ந்து கொண்டிருந்தது. காட்டு மான்குட்டிகளின் சப்தமும் தூரத்தில் கேட்டது. சித்தத்தின் அடிவானத்தில் மழையும் காற்றும் பனியு

66

53. வீடு திரும்பல்

13 January 2024
1
0
0

பீட்டர் எக் – நார்வே  மாலுமி பெடர் ஸோல்பர்க்குடைய மனைவி வசித்த குடிசை, ஜனங்கள் பொதுவாக 'லூக்கள் தெரு' என்று சொல்லுவார்களே, அதற்கெதிரில் இருக்கிறது. குடிசையின் ஜன்னல் நன்றாகத் திறந்திருந்தது. அப்பொழுத

67

54. ஏ படகுக்காரா!

13 January 2024
1
0
0

மிக்கெய்ல் ஷோலொகோவ்  அந்த காஸக் கிராமத்தைச் சூழ்ந்து வளர்ந்து நின்ற சாம்பல் பூத்த பசிய நிறம் படைத்த செடிச் செறிவின்மீது சூரியவொளி தெம்பாக விழவில் லை. அருகே ஒரு பரிசல் துறை இருந்தது. அங்கே படகேறி டான்

68

55. யாத்திரை

13 January 2024
1
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  நான் ஹாமர்ஸ்மித் பஸ்ஸின் மேல்தட்டிலிருந்து பார்க்கும் பொழுது, அவர்கள் ஆல்பர்ட் ஹால் மெமோரியல் எதிரில் இருந்த ஒரு வீட்டு வாசல்படியில் உட்கார்ந்திருந்தனர். அன்று வெகு உஷ்ணம். வாடகை

69

56. எமனை ஏமாற்ற...

13 January 2024
1
0
0

மொங்காக்கு ஷோனின் என்ற மகடனான புத்த பிக்ஷு தான் எழுதியுள்ள கியோ-ஜியோ-ஷிந்ஷோ என்ற கிரந்தத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: "ஜனங்கள் வழிபடும் தெய்வங்களில் பல துர்தேவதைகளாகும். அவலோகிதன், தர்மம், பிக்ஷுக்கள

70

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்

13 January 2024
1
0
0

தாமஸ் வுல்ப் – அமெரிக்கா  ஈவிரக்கமற்றுக் கொதிக்கும் அந்த வருஷம் ஆகஸ்டில் யுத்தம் நின்றது. யுத்த தேவதையின் பவனியின்போது நான்கு கணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஒன்று லாங்லிவியல்; விமான மைதானத்தில் உள்ள குத

71

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்(பகுதி 2)

13 January 2024
1
0
0

தயங்கித் தயங்கி மறியும் உடலொட்டிய இந்த வேட்கை, தங்கள் ஜோலியைச் செய்து இவர்கள் நடாத்தும் வாழ்வினிடையிலும் வெளிக்கு அகோரக் கேலிக் கூத்தாகத் தோன்றினாலும், மேஜைக்கு மேஜை போஷகர் தேடி நடக்கும்போது சர்வ ஜாக்

72

58. தர்ம தேவதையின் துரும்பு

13 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர்  குரலிலே அதிகார தோரணையும் அதனுடன் பயமும் கலந்திருந்தது. கடுங்குளிரிலே, இருட்டின் திரைக்குள்ளே, ஈட்டிபோலப் பாய்ந்தது அக்குரல். 'நீ யார்? முதலில் அதைச் சொல்' என்று பதில் கேள்வி பிறந்தது, தி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்