எல்.ஏ.ஜி. ஸ்டராங் – இங்கிலாந்து
லாரி நிறையத் துருப்புக்கள் கன வேகமாகச் சென்று சில விநாடிகள் கூடக் கழியவில் லை. அது இப்பொழுதுதான் நிகழ்ந்தது. வெடியின் அதிர்ச்சி பரீலியை அப்படியே கலங்க வைத்துவிட்டது. ஒரு வினாடி நடைபாதை அதிர்ந்தது. வீட்டுக் கூரைகள் அமுங்கி நிமிர்ந்தன. தெரு முழுவதும் நாசமாகிவிடும்போல் இருந்தது. அடுத்த நிமிஷம் யாவும் முன்போல் உறைந்துவிட்டன. பரீலியின் முழங்கால்கள்தான் வளைந்தன; அவனுடைய சுவாசம் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது மாதிரி இருந்தது. அவன் கீழே விழுமுன், அல்லது அவன் கீழே விழாது சமாளித்துக் கொள்ளுமுன், எங்கிருந்தோ, மின் வெட்டு மாதிரி ஒரு கை பாய்ந்து அவனது கரத்தைப் பிடித்து அவனைப் பக்கவாட்டில் இழுத்தது. முன்பு அத்தெருவில் ஈஸ்டர் புரட்சியின் போது ஏற்பட்ட சேதம் இன்னும் பழுது பார்க்கப்படவில் லை. அத்தெருவில் வானத்தைத் தொடும் கூரை வளையம் 'தெத்துக் கொத்தாக' முளைத்த பல் மாதிரி இருந்தது. பல கூறைகளில் உள்ள ஓட்டைகள் மரப் பலகை வைத்து மூடப்பட்டிருந்தன. நல்லகாலம் வரும், நிரந்தரமாகப் பழுது பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை போலும்! அதிர்ச்சியால் ஏற்பட்ட அரை மயக்கம் இன்னும் தெளியவில் லை. ஏதோ லோகமே பிளான் போட்டுத் தன் னை எதிர்ப்பதாக நினைத்துத் தட்டுத் தடுமாறிக் குளறினான். அவனைத் தாக்கியவன், கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கினான். "மேலே காயம் கீயம் பட்டதா?" என்று கொச்சை ஆங்கிலத்தில் திரும்பத் திரும்பக் கூறி கொண்டு, அவன் உடலைத் தடவி ஆராய்ந்தான். "நல்ல காலம்! உனக்கொன்றுமில் லை." கையிலிருப்பதைக் களவாட இதுவும் நூதன விதமான முறையோ என்று பரீலி தன் னை விடுவித்துக் கொள்ளத் திமிறி, பின்பக்கம் கிடக்கும் காரைக் கட்டிகளில் கால் வைத்தான். "கொஞ்சம் மெதுவாக ஸார், உங்களுக்கு ஒன்றுமில் லை; இங்கே உட்காருங்கள். தெருவைப் போல இங்கே ஆபத்தில் லை. இங்கே இரண்டு பேருக்கு இடம் இருக்கிறது." அந்த அந்நியன் தன் மீது நம்பிக்கை ஏற்படும்படியாகப் பல் லைக் காட்டினான். பரீலிக்கு சுய உணர்வு வந்தது. பயப்பட வேண்டிய அவசியம் இல் லை என்று கண்டு கொண்டான். உடனிருந்தவன் க்ஷவரம் செய்துகொண்டு எத்தனையோ காலம் கழிந்திருக்க வேண்டும். அவன் மேல் படிந்திருந்த அழுக்கின் எல் லையைத் தெய்வந்தான் வரையிட வேண்டும். ஆனால் அவனுடைய முகத்தில் ஜொலித்தது சிநேகபாவம் என்பதில் சந்தேகமில் லை என்பதை பரீலி கண்டு கொண்டான். பரீலி தன் உலர்ந்த உதடுகளைச் சிறிது உள் மடித்து நனைத்துக் கொண்டான். ஆனால் வாயிலிருந்து சப்தம் 'எழமாட்டேன்' என்றது. சிறிது கனைத்துக் கொண்டான். "வந்தனம் நீ உதவியதற்கு. திடீரென்று ஏற்பட்டது. நான் எங்கிருக்கிறேன் என்றே எனக்குத் தெரியவில் லை" என்றான் மேல் நாட்டு மோஸ்தரில். "அது உங்க குத்தமா? இந்தக் காலத்துலே யாருக்குத் தான் நாம் எங்கே இருக்கோம் என்று தெரியுது?" என்றான் அந்த அழுக்குடை அந்நியன். இயற்கை நிலையடையவே, பரீலிக்குக் கோபம் பொங்கிப் பொங்கி எழுந்தது. "நான் இங்கே முப்பது வருஷத்துக்கப்புறம் வருகிறேன். நான் இந்த மாதிரி எதிர்பார்க்க - " எங்கோ 'பிஸ்' 'பிஸ்' என்று இருமுறை வெடிச் சப்தம் கேட்டது. மறுபடியும் அந்தத் துப்பாக்கிச் சப்தம். சாட்டையைச் சொடக்குவது போல் இச்சப்தம் சந்தில் எதிரொலிப்பதைப் பரீலி கேட்டான். அந்த ஏழை அந்நியன் தோள்களைக் குலுக்கிக் குவித்துக் கொண்டான். "அதோ போகிறார்கள் பாரும். எப்பொழுதும் லேட்தான்; எப்பொழுதும் வேட்டை முடிந்த பின் தான்..." என்றான் அவன். அவனும் பரீலியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அவனுக்கு நாடோடியின் முகக்களை; பற்களும் கண்களும் விரியத் திறந்து, ஏதோ தப்பிதம் செய்துவிட்டு மன்னிப்பைப் பெற முயற்சிக்கும் ஒரு சிரிப்பை உண்டாக்கும்... பரிதாபகரமான முகக்களை. பரீலிக்கும் தன் னை அறியாமல் சிரிப்பு வந்தது; ஆனால் அவன் மனம் எதைப் பார்த்துச் சிரிக்க வேண்டும் என்று கோபித்துக் கொண்டது. அந்த நாடோடி, ஒரு நிமிஷம் மௌனமாக இருந்து இருவரையும் மறைத்திருக்கும் வரிசையிலிருந்து ஒரு பலகையை எடுத்துவிட்டு சர்வஜாக்கிரதையுடன் தலையை நீட்டினான். "ஜாக்கிரதையாகப் பார்!" என்றான் பரீலி. "ஹு!" என்றான் அந்த நாடோடி. அவன் குரலில் கேவல உணர்ச்சி தொனித்தது. "சுடுகிறது; ஓடுகிறது! எப்பொழுதும் இதுதான்! சுடு, ஓடு! இதுதான் அவர்கள் வேதவாக்கு!" சில விநாடிகள், அப்புறமும் இப்புறமும் தலையைத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் மெதுவாக எழுந்து பலகையை அப்புறப்படுத்திவிட்டு வெளியேறி நின்றான். மறுபடியும் தெருவை ஆராய்ந்துவிட்டு, பரீலியைப் பார்த்துக் கூப்பிட்டான். "இப்போ ஒன்றுமில் லை. நீங்கள் போகலாம்." பரீலி சிறிது ஏக்கத்துடன் வெளியில் வரும்பொழுது, "அவுங்க தாராளமாகத்தான் வெடிகுண்டெ உபயோகிச்சிருக்கானுங்க; கொஞ்சம் ரொம்பத் தாராளந்தான்!" என்றான் அந்த நாடோடி. பரீலி சிறிது அசட்டுத்தனமாகப் பையில் கைவிட்டுத் துழாவிக் கொண்டு நின்றான். "ரொம்ப வந்தனம் - இந்த..." "அதுக்கென்ன பரவயில் லைங்க" என்றான் அந்த நாடோடி. அவனுடைய பல் பளிச்சென்று பிரகாசித்தது. எதிர்த் திசை திரும்பி வேகமாக ஆடி ஆடி நடந்து சென்றான். பரீலி நின்று தயங்கினான். ஒரு அரைக் கிரவுனைக் (கிரவுன்: ஐந்து ஷில்லிங் மதிப்புள்ள ஒரு நாணயம்) கையில் எடுத்துக்கொண்டு அவனைக் கூப்பிட முயற்சித்தான். என்ன நினைத்தானோ, வாயைச் சூழ் கொட்டிக்கொண்டு, தியேட்டர் இருக்கும் திசையை நோக்கி நடந்தான். தெரு ஒரே காலி. அடுத்த தெருவும் அப்படித்தான். தனியாக நடந்து செல்லுவது ஏதோ ஒரு கோபுரம் விளக்கைத் தூக்கிக்கொண்டு நடப்பது போலிருந்தது. ஒவ்வொரு ஜன்னலிலும் என்ன அபாயம் ஒளிந்து கிடக்கிறதோ! எந்த வாசற்படியிலிருந்து வெடிகுண்டு விழும் என்று யார் கண்டது! ஓடாமல், மெதுவாக, சாதாரணமாக நடப்பதற்குத்தான் அவனது மனவுறுதி முழுவதையும் உபயோகித்தான். பிறகு, திடீரென்று, ஜன நெருக்கமும் சந்தடியும் அதிகமுள்ள தெரு வந்தது. தானாக மெதுவாக நடக்க முடிந்தது. மூச்சும் தட்டுத் தடுமாறாமல் எப்பொழுதும் போல வந்தது. ஜனங்கள் எப்பொழுதும் போலத் தங்கள் காரியமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள்; ஆனால் அவர்களைச் சிறிது கூர்ந்து கவனித்தால், எதையோ அமுக்கி மறைத்து வைத்திருப்பது போலப் புலப்படும். சிலர் பார்வை எதற்கோ தாழ்ந்து பணிவதைக் காண்பித்தது. சிலர் விழிகளில் கள்ளக் குறுகுறுப்பு மின்னியது. வேறு சிலர் தங்களுக்கு ஏதும் தெரியாது என்பதைக் காட்டிக்கொள்ள இயற்கையாக இருப்பதுபோல் பாவனை செய்து நடந்தனர். அவர்கள் குரலின் தொனி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அவர்கள் சிரிப்பும் பேச்சும் எதையோ கேட்க விரும்பாது, அதற்கு இடங் கொடுக்காதிருக்க உபயோகப் படுத்தப்படும் ஒரு கருவி போலத் தோன்றின. ஒரு வாலிபன் - பார்த்தால் மாணவன் போலத் தெரிகிறது - எதிரில் வரும் இரு பெண்களைச் சந்தித்தான். இருவரும் இயற்கைக்கு மாறான உற்சாகத்துடன் வரவேற்றுச் சிறிது தயங்கி நின்று பேசினர். கூர்ந்து கவனித்தால், வேகமாகச் செல்ல வேண்டும் என்று மனம் துடித்தும் அதைக் கட்டுப்படுத்தி நின்று பேசுவது போலத் தெரிந்தது. பரீலியின் கண்களில் இது படாமல் இருக்கவில் லை. மறுபடியும் அவன் உள்ளத்தில் கோபம் நாகம் போலப் படம் விரித்தது. தன் எதிரில் வருகிறவர்களையெல்லாம் குற்றவாளிகள் என்று நினைத்தான் அவன். "இந்த அசட்டுத்தனத்தின் கருத்தென்ன? என் னை, பால் பரீலியை, பிறந்த ஊருக்கு வரும்படியாகப் பிரத்தியேகமாக அழைத்துவிட்டு, இம்மாதிரி முரட்டுத்தனமாக நடந்து கொள்ளுவதாவது!" தியேட்டர் வாசலையடையுமுன் அவன் மனம் கோபத்தணலால் புழுங்கியது. வாசலில் காவற்காரன் வரவேற்புக்குத் தலையைக் கூட அசைக்கவில் லை. "கடுதாசி ஒன்றும் வரவில் லை" என்றான் காவற்காரன், அவனது சமிக்ஞைக் கேள்விக்கு. "இந்த நாசமாய்ப் போன ஊருக்குக் கடுதாசி எப்படி வரும்?" என்று நினைத்த வண்ணம், மங்கிய ஒளியுள்ள பாதை வழியாக உட்சென்றான். பாயின் என்ற மற்றொரு நடிகன், உள்ளே கண்ணாடி முன் உட்கார்ந்து முகத்தில் வர்ணத்தைத் தடவிக் கொண்டிருந்தான். தன் முன்பிருந்த கண்ணாடியில் பரீலியின் முகம் தெரிந்தது. அதைப் பார்த்தவன் அவனைத் திரும்பி நோக்கினான். "ஹல்லோ. பரீலி, என்ன விசேஷம்?" என்றான். "விசேஷமா? ஒன்றுமில் லை; விசேஷம் எதற்கு இருக்க வேண்டும்?" பாயின் தன் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு, "முகம் என்னமோ மாதிரி இருக்கிறது; அதனால் தான் கேட்டேன்" என்றான். பரீலி பதில் சொல்லவில் லை. மேல் கோட்டையும், ஹாட்டையும் மாட்டிவிட்டு வந்து உட்கார்ந்தான். அவனுடைய சொந்த ஊரே அவனைத் தொந்தரவுக்குட்படுத்தியதுடன், பயப்படும்படியும் செய்து விட்டது. தலைகுனிய வைப்பவர்களை அவன் இலகுவில் மன்னித்துவிட மாட்டான். பால் பரீலி தன் ஏழாவது வயதில் தன் பெற்றோருடன் டப்ளினை விட்டு வெளியேறினான். அந்த நகரத்தைப் பற்றிய நினைவு மங்கி, உணர்ச்சி என்ற அந்தி மயக்கத்தில் முழுகியது. பரீலிகள், அதாவது அவனது பெற்றோர்கள், லண்டனில் பல வருஷங்கள் வசித்தனர். அங்கு சென்ற கொஞ்ச நாட்களில் பால் ஒரு பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்பட்டான். அவன், பச்சோந்தியைப் போல், சுற்றிலும் உள்ள சகபாடிகள் தன் மையைக் கற்றுக் கொண்டான். அடங்காப்பிடாரியான 'ஐரிஷ்கார'னாக இருப்பதால் லாபமில் லை. பழக்கமுள்ள உச்சரிப்புக்களை, தன் னைச் சகபாடிகள் துன்புறுத்தாமலிருப்பதற்காக, மறைக்கவும் கற்றுக் கொண்டான். எல்லாம் அவன் பார்வையில் விழும். ஒருமுறை கேட்டதை அப்படியே தொனி கூடப் பிறழாமல் மறுபடியும் சொல்ல அவனுக்குத் திறமை இருந்தது. மற்ற பையன்களைச் சிரிக்க வைக்கும் இத்திறமையால் அவர்களின் சேஷ்டைகளிலிருந்து தப்பினான். பள்ளிக்கூடம் வந்து கொஞ்ச நாட்கள் ஆகுமுன் அந்த ஸ்தாபனத்தின் 'ஆஸ்தான விதூஷகன்' ஆனான். ஒரு நாள் உபத்தியாயரைப் போல் நடித்துக் கொண்டிருக்கும்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு உதை வாங்கினான். அதிலிருந்து அவனது விதூஷகத் தன் மை குன்றின் மேல் கட்டிய கோட்டையாயிற்று. அவனுக்கு வயதும் பதினாறு ஆயிற்று. அவனை ஏதாவதொரு வேலையில் வைக்கலாம் என்று ஏதோ ஒரு விதமாகச் சுற்றும் முற்றும் கவனித்து வந்தனர். அப்பொழுது அவன் தகப்பனார் திடீரென்று இறந்து போனார். தகப்பனார் கொஞ்சம் செலவாளி; அதிலும் சிரமமில்லாமல் காலம் கழிக்க விரும்பியவர். அதனால் சாகும்பொழுது ஆஸ்தி என்று வைக்க ஒன்றுமில் லை என்பதில் ஆச்சரியம் இல் லை. எப்படியும் பாலுக்கு ஒரு வேலை பார்த்தாக வேண்டும், அதுவும் உடனே. அப்பொழுது பள்ளிக்கூடத்தில் பரீட்சை வரும் காலம். வருஷக் கடைசியில் போடும் நாடகம் ஒன்றில் அவன் நடிப்பதாக இருந்தது. தகப்பனார் இறந்து போனார் என்ற காரணத்துக்காக, ஆசிரியர்கள் அவனை நடிக்க வேண்டாம் என்று சொன்னார்கள். அவன் மிகவும் மன்றாடிக் கெஞ்சிக் கூத்தாடினான். அவனுடைய மனவுறுதியைக் கண்டு - அவனது வாழ்க்கையில் முன்பும் பின்பும் அந்தக் குணம் லவலேசமும் கிடையாது - அதிகாரிகள் இரங்கினர். பின்பு அவனுடைய உடும்புப் பிடியான அந்த மன்றாட்டம் சரியானது என்பது வெளியாயிற்று. நாடகத்தைப் பார்க்க வந்தவருள் ஒருவன், அந்தத் தொழிலில் இருப்பவன், பையனின் அசாதாரணத் திறமையைக் கண்டு, அவனுக்கு ஒரு வேலை கொடுத்தான். அதன் பிறகு ஸ்ரீமதி பரீலியை இணங்க வைப்பது பெரும் பாடாகி விட்டது. நீண்ட விவாதங்களுக்குப் பிறகு அவளும் முடிவாக இணங்கினாள். இப்பொழுது பால் பரீலிக்கு முப்பத்தேழு வயசு. அட்லாண்டிக் மகா சமுத்திரத்தின் இருகரையிலும் இப்பொழுது அவனுக்குப் பெயரும் புகழும் ஏற்பட்டது. அதாவது, இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் அவன் பிரபலமடைந்து விட்டான். ஆரம்பத்தில் பலவிதமான பாத்திரங்களையெல்லாம் நடித்துப் பரீட்சித்து விட்டு, கடைசியாக ஐரிஷ்கரனின் குண விஸ்தாரத்தை நடிப்பதில் தனிப் பெருமை பெற்றான். வெளிநாட்டுக்குச் செல்லும் ஐரிஷ்காரனுக்கு மற்றவர்களைத் தமாஷ்படுத்தும் குணம் உண்டு என்பது வெகுஜன வாக்கு. அது அவன் விஷயத்தில் உயர்வு நவிச்சியற்ற சாதாரண உண் மையாகியது. அந்நியர் தன்னிடம் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதை உணர்ந்து கொண்டான்; அதைத் தாராளமாக அளித்தான். அவனுடைய குண விஸ்தார நடிப்புக்களை உண் மைக்கு மாறானவை என்று கூறிவிட முடியாது. அவன் நல்ல திறமைசாலியான ஒரு கலை நிபுணன்; பார்த்ததும் கண்ணில் எது படும் என்பதைத் தெரிந்து கொண்டவன். அவனுடைய ஐரிஸ்கார வேஷங்கள் யாவும் குற்றம் கூறமுடியாதபடி 'பதிப்பிக்க'ப் பட்டவை. இங்கிலீஷ்காரனும் அமெரிக்க நாட்டானும் எவ்வளவு ரஸிப்பார்களோ அந்த அளவில் ஐரிஷ்காரனைப் பற்றி ஹாஸ்யமாக நடித்துக் காண்பித்தான். தேசத்தின் அடிப்படையான குண பாவத்தில் எவையெல்லாம் சுருதி லயமின் மையாகப் படுகின்றனவோ அவற்றையெல்லாம் ஒதுக்கி ஒதுக்கி நடித்ததால், தனது 'மனோபாவ ஐரிஷ்கார'னுக்குச் சிறிதளவு வித்தியாசம் எங்கு தென்பட்டாலும், அதை வெறுக்கும் குணமும் அவனுக்கு ஏற்பட்டுவிட்டது. அயர்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இருந்து வந்த சச்சரவுகளைத் தனக்கு ஏற்பட்ட அவமானமாக அவன் கருதினான். அதாவது, தான் தழைத்து வளரச் செய்த சிநேகப்பான் மை என்ற ஓர் கற்றமைப்பின் தன் மையைக் குலைக்கும் முயற்சி என்பதற்காக அவற்றை வெறுத்தான். இடையில் ஸின்பீன் இயக்கம் அயர்லாந்தில் பிறந்துவிட்டது. நாலு பேர் விருந்தினர் வந்திருக்கும்பொழுது தன் பிடிவாதத்தினால் பெற்றோரைக் கேவலப்படுத்தும் குழந்தையைப் போலப் பாவித்தான் அயர்லாந்தை. இங்கிலீஷ்காரர்களுக்கு ஒரு நல்லெண்ணம் ஏற்படுவதற்காகப் பால் பரீலி சிரமப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கும்பொழுது - அதாவது தன் நடிப்பின் மூலம் ஐரீஷ்காரனும் சிநேகப் பான் மைக்கு உரியவன் என்று இங்கிலீஷ்காரர் மனத்தில் உதிக்கும்படி செய்ய முயன்று கொண்டிருக்கும் பொழுது - அயர்லாந்து இப்படியா நடந்து கொள்ளுவது? உலகயுத்தம் என்ற ஜெர்மன் சண் டையும் வந்து பிரச்சனையைச் சிக்கலாக்கியது. நல்ல காலமாக ராணுவ உத்தியோகஸ்தர்கள், அவனுக்கு ஏதோ வியாதியிருக்கிறது என்ற காரணத்திற்காக யுத்த முனைக்கனுப்பப்படும் தளத்தில் சேர்த்துக்கொள்ள மறுத்து விட்டனர். ஆனால், பிரிட்டிஷ் பொதுமக்களும், ஐரிஷ் ஹாஸ்ய குணபாவ நடிப்புக்களில் காண்பித்த ரஸிப்பைத் திடீரென்று இழந்துவிட்டனர். இதுவும் நல்ல விடுதலைதான் என்று பரீலி அமெரிக்காவிற்குப் பிரயாணமானான். அங்கே துறைமுகத்தில் இறங்கியதுதான் தாமதம்; புரட்சிக் கீதம் பாடிக் கொண்டு வார்த்தை மூலம் இங்கிலாந்தை மரணக் குழிக்கு அனுப்பி, போதை மயக்கச் சதிகள் வகுக்கும் பழுத்த ஒரு தேசீயக் கூட்டத்திற்குக் கனவேகமாக அழைத்துச் செல்லப்பட்டான். இவர்களுடைய பேச்சுக்களையெல்லாம் பரீலி பிரமித்திருந்து கேட்டான். அவனும் குடித்தான். கட்டு மீறிய போதை மயக்கத்தில் ஹான் - வான் ஹோஷ்ட், பூலாவோக் முதலிய தேசீய கீதங்களை அவர்களுடைய 'ஏ - ஒன்' (முதல் தர) தேசீயவாதி போலப் பாடினான். மறுநாட்காலை குடியின் போதை தெளிந்தது. இந்தத் 'தேச பக்தி' வழிகளால் பைஸா கூட லாபம் இல் லை என்பதைச் சீக்கிரத்தில் உணர்ந்து கொண்டான். இங்கிலீஷ்காரன் மனப் போக்கையுடைய, அல்லது ஏறக்குறைய அப்படிப்பட்ட, பொது ஜனங்களைப் பொறுத்ததுதான் அவனது புகழும் வெற்றியும். ஆகையால் தேசீயவாதிகளின் பேச்சுக்களுக்குச் செவியை இறுக மூடிக் கொண்டான். பிறகு இலகுவில் அவர்களை மறந்து விட்டான். சில மாதங்கள் கழித்து அவனைக் கண்டபடி திட்டி எழுதப்பட்ட ஒரு 'அநாமதேயக் கடிதம் கிடைத்ததும் ஆச்சரியமாய்த் திடுக்கிட்டான். யாரோ எழுதப் படிக்கத் தெரியாதவன் எழுதியது. அதை எடுத்துக் கொண்டு போலீஸாரிடம் ஓடினான். அதை அவர்கள் பிரமாதப்படுத்தாதது கண்டு சிறிது கோபம்; அத்துடன் சிறிது மன நிம்மதியும் கூட.