shabd-logo

49. தேசிய கீதம் (பகுதி 1)

12 January 2024

0 பார்த்தது 0

எல்.ஏ.ஜி. ஸ்டராங் – இங்கிலாந்து

 லாரி நிறையத் துருப்புக்கள் கன வேகமாகச் சென்று சில விநாடிகள் கூடக் கழியவில் லை. அது இப்பொழுதுதான் நிகழ்ந்தது. வெடியின் அதிர்ச்சி பரீலியை அப்படியே கலங்க வைத்துவிட்டது. ஒரு வினாடி நடைபாதை அதிர்ந்தது. வீட்டுக் கூரைகள் அமுங்கி நிமிர்ந்தன. தெரு முழுவதும் நாசமாகிவிடும்போல் இருந்தது. அடுத்த நிமிஷம் யாவும் முன்போல் உறைந்துவிட்டன. பரீலியின் முழங்கால்கள்தான் வளைந்தன; அவனுடைய சுவாசம் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது மாதிரி இருந்தது. அவன் கீழே விழுமுன், அல்லது அவன் கீழே விழாது சமாளித்துக் கொள்ளுமுன், எங்கிருந்தோ, மின் வெட்டு மாதிரி ஒரு கை பாய்ந்து அவனது கரத்தைப் பிடித்து அவனைப் பக்கவாட்டில் இழுத்தது. முன்பு அத்தெருவில் ஈஸ்டர் புரட்சியின் போது ஏற்பட்ட சேதம் இன்னும் பழுது பார்க்கப்படவில் லை. அத்தெருவில் வானத்தைத் தொடும் கூரை வளையம் 'தெத்துக் கொத்தாக' முளைத்த பல் மாதிரி இருந்தது. பல கூறைகளில் உள்ள ஓட்டைகள் மரப் பலகை வைத்து மூடப்பட்டிருந்தன. நல்லகாலம் வரும், நிரந்தரமாகப் பழுது பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை போலும்! அதிர்ச்சியால் ஏற்பட்ட அரை மயக்கம் இன்னும் தெளியவில் லை. ஏதோ லோகமே பிளான் போட்டுத் தன் னை எதிர்ப்பதாக நினைத்துத் தட்டுத் தடுமாறிக் குளறினான். அவனைத் தாக்கியவன், கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கினான். "மேலே காயம் கீயம் பட்டதா?" என்று கொச்சை ஆங்கிலத்தில் திரும்பத் திரும்பக் கூறி கொண்டு, அவன் உடலைத் தடவி ஆராய்ந்தான். "நல்ல காலம்! உனக்கொன்றுமில் லை." கையிலிருப்பதைக் களவாட இதுவும் நூதன விதமான முறையோ என்று பரீலி தன் னை விடுவித்துக் கொள்ளத் திமிறி, பின்பக்கம் கிடக்கும் காரைக் கட்டிகளில் கால் வைத்தான். "கொஞ்சம் மெதுவாக ஸார், உங்களுக்கு ஒன்றுமில் லை; இங்கே உட்காருங்கள். தெருவைப் போல இங்கே ஆபத்தில் லை. இங்கே இரண்டு பேருக்கு இடம் இருக்கிறது." அந்த அந்நியன் தன் மீது நம்பிக்கை ஏற்படும்படியாகப் பல் லைக் காட்டினான். பரீலிக்கு சுய உணர்வு வந்தது. பயப்பட வேண்டிய அவசியம் இல் லை என்று கண்டு கொண்டான். உடனிருந்தவன் க்ஷவரம் செய்துகொண்டு எத்தனையோ காலம் கழிந்திருக்க வேண்டும். அவன் மேல் படிந்திருந்த அழுக்கின் எல் லையைத் தெய்வந்தான் வரையிட வேண்டும். ஆனால் அவனுடைய முகத்தில் ஜொலித்தது சிநேகபாவம் என்பதில் சந்தேகமில் லை என்பதை பரீலி கண்டு கொண்டான். பரீலி தன் உலர்ந்த உதடுகளைச் சிறிது உள் மடித்து நனைத்துக் கொண்டான். ஆனால் வாயிலிருந்து சப்தம் 'எழமாட்டேன்' என்றது. சிறிது கனைத்துக் கொண்டான். "வந்தனம் நீ உதவியதற்கு. திடீரென்று ஏற்பட்டது. நான் எங்கிருக்கிறேன் என்றே எனக்குத் தெரியவில் லை" என்றான் மேல் நாட்டு மோஸ்தரில். "அது உங்க குத்தமா? இந்தக் காலத்துலே யாருக்குத் தான் நாம் எங்கே இருக்கோம் என்று தெரியுது?" என்றான் அந்த அழுக்குடை அந்நியன். இயற்கை நிலையடையவே, பரீலிக்குக் கோபம் பொங்கிப் பொங்கி எழுந்தது. "நான் இங்கே முப்பது வருஷத்துக்கப்புறம் வருகிறேன். நான் இந்த மாதிரி எதிர்பார்க்க - " எங்கோ 'பிஸ்' 'பிஸ்' என்று இருமுறை வெடிச் சப்தம் கேட்டது. மறுபடியும் அந்தத் துப்பாக்கிச் சப்தம். சாட்டையைச் சொடக்குவது போல் இச்சப்தம் சந்தில் எதிரொலிப்பதைப் பரீலி கேட்டான். அந்த ஏழை அந்நியன் தோள்களைக் குலுக்கிக் குவித்துக் கொண்டான். "அதோ போகிறார்கள் பாரும். எப்பொழுதும் லேட்தான்; எப்பொழுதும் வேட்டை முடிந்த பின் தான்..." என்றான் அவன். அவனும் பரீலியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அவனுக்கு நாடோடியின் முகக்களை; பற்களும் கண்களும் விரியத் திறந்து, ஏதோ தப்பிதம் செய்துவிட்டு மன்னிப்பைப் பெற முயற்சிக்கும் ஒரு சிரிப்பை உண்டாக்கும்... பரிதாபகரமான முகக்களை. பரீலிக்கும் தன் னை அறியாமல் சிரிப்பு வந்தது; ஆனால் அவன் மனம் எதைப் பார்த்துச் சிரிக்க வேண்டும் என்று கோபித்துக் கொண்டது. அந்த நாடோடி, ஒரு நிமிஷம் மௌனமாக இருந்து இருவரையும் மறைத்திருக்கும் வரிசையிலிருந்து ஒரு பலகையை எடுத்துவிட்டு சர்வஜாக்கிரதையுடன் தலையை நீட்டினான். "ஜாக்கிரதையாகப் பார்!" என்றான் பரீலி. "ஹு!" என்றான் அந்த நாடோடி. அவன் குரலில் கேவல உணர்ச்சி தொனித்தது. "சுடுகிறது; ஓடுகிறது! எப்பொழுதும் இதுதான்! சுடு, ஓடு! இதுதான் அவர்கள் வேதவாக்கு!" சில விநாடிகள், அப்புறமும் இப்புறமும் தலையைத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் மெதுவாக எழுந்து பலகையை அப்புறப்படுத்திவிட்டு வெளியேறி நின்றான். மறுபடியும் தெருவை ஆராய்ந்துவிட்டு, பரீலியைப் பார்த்துக் கூப்பிட்டான். "இப்போ ஒன்றுமில் லை. நீங்கள் போகலாம்." பரீலி சிறிது ஏக்கத்துடன் வெளியில் வரும்பொழுது, "அவுங்க தாராளமாகத்தான் வெடிகுண்டெ உபயோகிச்சிருக்கானுங்க; கொஞ்சம் ரொம்பத் தாராளந்தான்!" என்றான் அந்த நாடோடி. பரீலி சிறிது அசட்டுத்தனமாகப் பையில் கைவிட்டுத் துழாவிக் கொண்டு நின்றான். "ரொம்ப வந்தனம் - இந்த..." "அதுக்கென்ன பரவயில் லைங்க" என்றான் அந்த நாடோடி. அவனுடைய பல் பளிச்சென்று பிரகாசித்தது. எதிர்த் திசை திரும்பி வேகமாக ஆடி ஆடி நடந்து சென்றான். பரீலி நின்று தயங்கினான். ஒரு அரைக் கிரவுனைக் (கிரவுன்: ஐந்து ஷில்லிங் மதிப்புள்ள ஒரு நாணயம்) கையில் எடுத்துக்கொண்டு அவனைக் கூப்பிட முயற்சித்தான். என்ன நினைத்தானோ, வாயைச் சூழ் கொட்டிக்கொண்டு, தியேட்டர் இருக்கும் திசையை நோக்கி நடந்தான். தெரு ஒரே காலி. அடுத்த தெருவும் அப்படித்தான். தனியாக நடந்து செல்லுவது ஏதோ ஒரு கோபுரம் விளக்கைத் தூக்கிக்கொண்டு நடப்பது போலிருந்தது. ஒவ்வொரு ஜன்னலிலும் என்ன அபாயம் ஒளிந்து கிடக்கிறதோ! எந்த வாசற்படியிலிருந்து வெடிகுண்டு விழும் என்று யார் கண்டது! ஓடாமல், மெதுவாக, சாதாரணமாக நடப்பதற்குத்தான் அவனது மனவுறுதி முழுவதையும் உபயோகித்தான். பிறகு, திடீரென்று, ஜன நெருக்கமும் சந்தடியும் அதிகமுள்ள தெரு வந்தது. தானாக மெதுவாக நடக்க முடிந்தது. மூச்சும் தட்டுத் தடுமாறாமல் எப்பொழுதும் போல வந்தது. ஜனங்கள் எப்பொழுதும் போலத் தங்கள் காரியமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள்; ஆனால் அவர்களைச் சிறிது கூர்ந்து கவனித்தால், எதையோ அமுக்கி மறைத்து வைத்திருப்பது போலப் புலப்படும். சிலர் பார்வை எதற்கோ தாழ்ந்து பணிவதைக் காண்பித்தது. சிலர் விழிகளில் கள்ளக் குறுகுறுப்பு மின்னியது. வேறு சிலர் தங்களுக்கு ஏதும் தெரியாது என்பதைக் காட்டிக்கொள்ள இயற்கையாக இருப்பதுபோல் பாவனை செய்து நடந்தனர். அவர்கள் குரலின் தொனி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அவர்கள் சிரிப்பும் பேச்சும் எதையோ கேட்க விரும்பாது, அதற்கு இடங் கொடுக்காதிருக்க உபயோகப் படுத்தப்படும் ஒரு கருவி போலத் தோன்றின. ஒரு வாலிபன் - பார்த்தால் மாணவன் போலத் தெரிகிறது - எதிரில் வரும் இரு பெண்களைச் சந்தித்தான். இருவரும் இயற்கைக்கு மாறான உற்சாகத்துடன் வரவேற்றுச் சிறிது தயங்கி நின்று பேசினர். கூர்ந்து கவனித்தால், வேகமாகச் செல்ல வேண்டும் என்று மனம் துடித்தும் அதைக் கட்டுப்படுத்தி நின்று பேசுவது போலத் தெரிந்தது. பரீலியின் கண்களில் இது படாமல் இருக்கவில் லை. மறுபடியும் அவன் உள்ளத்தில் கோபம் நாகம் போலப் படம் விரித்தது. தன் எதிரில் வருகிறவர்களையெல்லாம் குற்றவாளிகள் என்று நினைத்தான் அவன். "இந்த அசட்டுத்தனத்தின் கருத்தென்ன? என் னை, பால் பரீலியை, பிறந்த ஊருக்கு வரும்படியாகப் பிரத்தியேகமாக அழைத்துவிட்டு, இம்மாதிரி முரட்டுத்தனமாக நடந்து கொள்ளுவதாவது!" தியேட்டர் வாசலையடையுமுன் அவன் மனம் கோபத்தணலால் புழுங்கியது. வாசலில் காவற்காரன் வரவேற்புக்குத் தலையைக் கூட அசைக்கவில் லை. "கடுதாசி ஒன்றும் வரவில் லை" என்றான் காவற்காரன், அவனது சமிக்ஞைக் கேள்விக்கு. "இந்த நாசமாய்ப் போன ஊருக்குக் கடுதாசி எப்படி வரும்?" என்று நினைத்த வண்ணம், மங்கிய ஒளியுள்ள பாதை வழியாக உட்சென்றான். பாயின் என்ற மற்றொரு நடிகன், உள்ளே கண்ணாடி முன் உட்கார்ந்து முகத்தில் வர்ணத்தைத் தடவிக் கொண்டிருந்தான். தன் முன்பிருந்த கண்ணாடியில் பரீலியின் முகம் தெரிந்தது. அதைப் பார்த்தவன் அவனைத் திரும்பி நோக்கினான். "ஹல்லோ. பரீலி, என்ன விசேஷம்?" என்றான். "விசேஷமா? ஒன்றுமில் லை; விசேஷம் எதற்கு இருக்க வேண்டும்?" பாயின் தன் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு, "முகம் என்னமோ மாதிரி இருக்கிறது; அதனால் தான் கேட்டேன்" என்றான். பரீலி பதில் சொல்லவில் லை. மேல் கோட்டையும், ஹாட்டையும் மாட்டிவிட்டு வந்து உட்கார்ந்தான். அவனுடைய சொந்த ஊரே அவனைத் தொந்தரவுக்குட்படுத்தியதுடன், பயப்படும்படியும் செய்து விட்டது. தலைகுனிய வைப்பவர்களை அவன் இலகுவில் மன்னித்துவிட மாட்டான். பால் பரீலி தன் ஏழாவது வயதில் தன் பெற்றோருடன் டப்ளினை விட்டு வெளியேறினான். அந்த நகரத்தைப் பற்றிய நினைவு மங்கி, உணர்ச்சி என்ற அந்தி மயக்கத்தில் முழுகியது. பரீலிகள், அதாவது அவனது பெற்றோர்கள், லண்டனில் பல வருஷங்கள் வசித்தனர். அங்கு சென்ற கொஞ்ச நாட்களில் பால் ஒரு பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்பட்டான். அவன், பச்சோந்தியைப் போல், சுற்றிலும் உள்ள சகபாடிகள் தன் மையைக் கற்றுக் கொண்டான். அடங்காப்பிடாரியான 'ஐரிஷ்கார'னாக இருப்பதால் லாபமில் லை. பழக்கமுள்ள உச்சரிப்புக்களை, தன் னைச் சகபாடிகள் துன்புறுத்தாமலிருப்பதற்காக, மறைக்கவும் கற்றுக் கொண்டான். எல்லாம் அவன் பார்வையில் விழும். ஒருமுறை கேட்டதை அப்படியே தொனி கூடப் பிறழாமல் மறுபடியும் சொல்ல அவனுக்குத் திறமை இருந்தது. மற்ற பையன்களைச் சிரிக்க வைக்கும் இத்திறமையால் அவர்களின் சேஷ்டைகளிலிருந்து தப்பினான். பள்ளிக்கூடம் வந்து கொஞ்ச நாட்கள் ஆகுமுன் அந்த ஸ்தாபனத்தின் 'ஆஸ்தான விதூஷகன்' ஆனான். ஒரு நாள் உபத்தியாயரைப் போல் நடித்துக் கொண்டிருக்கும்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு உதை வாங்கினான். அதிலிருந்து அவனது விதூஷகத் தன் மை குன்றின் மேல் கட்டிய கோட்டையாயிற்று. அவனுக்கு வயதும் பதினாறு ஆயிற்று. அவனை ஏதாவதொரு வேலையில் வைக்கலாம் என்று ஏதோ ஒரு விதமாகச் சுற்றும் முற்றும் கவனித்து வந்தனர். அப்பொழுது அவன் தகப்பனார் திடீரென்று இறந்து போனார். தகப்பனார் கொஞ்சம் செலவாளி; அதிலும் சிரமமில்லாமல் காலம் கழிக்க விரும்பியவர். அதனால் சாகும்பொழுது ஆஸ்தி என்று வைக்க ஒன்றுமில் லை என்பதில் ஆச்சரியம் இல் லை. எப்படியும் பாலுக்கு ஒரு வேலை பார்த்தாக வேண்டும், அதுவும் உடனே. அப்பொழுது பள்ளிக்கூடத்தில் பரீட்சை வரும் காலம். வருஷக் கடைசியில் போடும் நாடகம் ஒன்றில் அவன் நடிப்பதாக இருந்தது. தகப்பனார் இறந்து போனார் என்ற காரணத்துக்காக, ஆசிரியர்கள் அவனை நடிக்க வேண்டாம் என்று சொன்னார்கள். அவன் மிகவும் மன்றாடிக் கெஞ்சிக் கூத்தாடினான். அவனுடைய மனவுறுதியைக் கண்டு - அவனது வாழ்க்கையில் முன்பும் பின்பும் அந்தக் குணம் லவலேசமும் கிடையாது - அதிகாரிகள் இரங்கினர். பின்பு அவனுடைய உடும்புப் பிடியான அந்த மன்றாட்டம் சரியானது என்பது வெளியாயிற்று. நாடகத்தைப் பார்க்க வந்தவருள் ஒருவன், அந்தத் தொழிலில் இருப்பவன், பையனின் அசாதாரணத் திறமையைக் கண்டு, அவனுக்கு ஒரு வேலை கொடுத்தான். அதன் பிறகு ஸ்ரீமதி பரீலியை இணங்க வைப்பது பெரும் பாடாகி விட்டது. நீண்ட விவாதங்களுக்குப் பிறகு அவளும் முடிவாக இணங்கினாள். இப்பொழுது பால் பரீலிக்கு முப்பத்தேழு வயசு. அட்லாண்டிக் மகா சமுத்திரத்தின் இருகரையிலும் இப்பொழுது அவனுக்குப் பெயரும் புகழும் ஏற்பட்டது. அதாவது, இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் அவன் பிரபலமடைந்து விட்டான். ஆரம்பத்தில் பலவிதமான பாத்திரங்களையெல்லாம் நடித்துப் பரீட்சித்து விட்டு, கடைசியாக ஐரிஷ்கரனின் குண விஸ்தாரத்தை நடிப்பதில் தனிப் பெருமை பெற்றான். வெளிநாட்டுக்குச் செல்லும் ஐரிஷ்காரனுக்கு மற்றவர்களைத் தமாஷ்படுத்தும் குணம் உண்டு என்பது வெகுஜன வாக்கு. அது அவன் விஷயத்தில் உயர்வு நவிச்சியற்ற சாதாரண உண் மையாகியது. அந்நியர் தன்னிடம் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதை உணர்ந்து கொண்டான்; அதைத் தாராளமாக அளித்தான். அவனுடைய குண விஸ்தார நடிப்புக்களை உண் மைக்கு மாறானவை என்று கூறிவிட முடியாது. அவன் நல்ல திறமைசாலியான ஒரு கலை நிபுணன்; பார்த்ததும் கண்ணில் எது படும் என்பதைத் தெரிந்து கொண்டவன். அவனுடைய ஐரிஸ்கார வேஷங்கள் யாவும் குற்றம் கூறமுடியாதபடி 'பதிப்பிக்க'ப் பட்டவை. இங்கிலீஷ்காரனும் அமெரிக்க நாட்டானும் எவ்வளவு ரஸிப்பார்களோ அந்த அளவில் ஐரிஷ்காரனைப் பற்றி ஹாஸ்யமாக நடித்துக் காண்பித்தான். தேசத்தின் அடிப்படையான குண பாவத்தில் எவையெல்லாம் சுருதி லயமின் மையாகப் படுகின்றனவோ அவற்றையெல்லாம் ஒதுக்கி ஒதுக்கி நடித்ததால், தனது 'மனோபாவ ஐரிஷ்கார'னுக்குச் சிறிதளவு வித்தியாசம் எங்கு தென்பட்டாலும், அதை வெறுக்கும் குணமும் அவனுக்கு ஏற்பட்டுவிட்டது. அயர்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இருந்து வந்த சச்சரவுகளைத் தனக்கு ஏற்பட்ட அவமானமாக அவன் கருதினான். அதாவது, தான் தழைத்து வளரச் செய்த சிநேகப்பான் மை என்ற ஓர் கற்றமைப்பின் தன் மையைக் குலைக்கும் முயற்சி என்பதற்காக அவற்றை வெறுத்தான். இடையில் ஸின்பீன் இயக்கம் அயர்லாந்தில் பிறந்துவிட்டது. நாலு பேர் விருந்தினர் வந்திருக்கும்பொழுது தன் பிடிவாதத்தினால் பெற்றோரைக் கேவலப்படுத்தும் குழந்தையைப் போலப் பாவித்தான் அயர்லாந்தை. இங்கிலீஷ்காரர்களுக்கு ஒரு நல்லெண்ணம் ஏற்படுவதற்காகப் பால் பரீலி சிரமப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கும்பொழுது - அதாவது தன் நடிப்பின் மூலம் ஐரீஷ்காரனும் சிநேகப் பான் மைக்கு உரியவன் என்று இங்கிலீஷ்காரர் மனத்தில் உதிக்கும்படி செய்ய முயன்று கொண்டிருக்கும் பொழுது - அயர்லாந்து இப்படியா நடந்து கொள்ளுவது? உலகயுத்தம் என்ற ஜெர்மன் சண் டையும் வந்து பிரச்சனையைச் சிக்கலாக்கியது. நல்ல காலமாக ராணுவ உத்தியோகஸ்தர்கள், அவனுக்கு ஏதோ வியாதியிருக்கிறது என்ற காரணத்திற்காக யுத்த முனைக்கனுப்பப்படும் தளத்தில் சேர்த்துக்கொள்ள மறுத்து விட்டனர். ஆனால், பிரிட்டிஷ் பொதுமக்களும், ஐரிஷ் ஹாஸ்ய குணபாவ நடிப்புக்களில் காண்பித்த ரஸிப்பைத் திடீரென்று இழந்துவிட்டனர். இதுவும் நல்ல விடுதலைதான் என்று பரீலி அமெரிக்காவிற்குப் பிரயாணமானான். அங்கே துறைமுகத்தில் இறங்கியதுதான் தாமதம்; புரட்சிக் கீதம் பாடிக் கொண்டு வார்த்தை மூலம் இங்கிலாந்தை மரணக் குழிக்கு அனுப்பி, போதை மயக்கச் சதிகள் வகுக்கும் பழுத்த ஒரு தேசீயக் கூட்டத்திற்குக் கனவேகமாக அழைத்துச் செல்லப்பட்டான். இவர்களுடைய பேச்சுக்களையெல்லாம் பரீலி பிரமித்திருந்து கேட்டான். அவனும் குடித்தான். கட்டு மீறிய போதை மயக்கத்தில் ஹான் - வான் ஹோஷ்ட், பூலாவோக் முதலிய தேசீய கீதங்களை அவர்களுடைய 'ஏ - ஒன்' (முதல் தர) தேசீயவாதி போலப் பாடினான். மறுநாட்காலை குடியின் போதை தெளிந்தது. இந்தத் 'தேச பக்தி' வழிகளால் பைஸா கூட லாபம் இல் லை என்பதைச் சீக்கிரத்தில் உணர்ந்து கொண்டான். இங்கிலீஷ்காரன் மனப் போக்கையுடைய, அல்லது ஏறக்குறைய அப்படிப்பட்ட, பொது ஜனங்களைப் பொறுத்ததுதான் அவனது புகழும் வெற்றியும். ஆகையால் தேசீயவாதிகளின் பேச்சுக்களுக்குச் செவியை இறுக மூடிக் கொண்டான். பிறகு இலகுவில் அவர்களை மறந்து விட்டான். சில மாதங்கள் கழித்து அவனைக் கண்டபடி திட்டி எழுதப்பட்ட ஒரு 'அநாமதேயக் கடிதம் கிடைத்ததும் ஆச்சரியமாய்த் திடுக்கிட்டான். யாரோ எழுதப் படிக்கத் தெரியாதவன் எழுதியது. அதை எடுத்துக் கொண்டு போலீஸாரிடம் ஓடினான். அதை அவர்கள் பிரமாதப்படுத்தாதது கண்டு சிறிது கோபம்; அத்துடன் சிறிது மன நிம்மதியும் கூட.

புதுமைப்பித்தன் மூலம் மேலும் புத்தகங்கள்

72
கட்டுரைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகள்
0.0
புதுமைப்பித்தன் மொத்தம் 108 சிறுகதைகள் எழுதியுள்ளார். அதில் அவர் காலத்தில் 48 மட்டும் பிரசுரமாயின. 1940-ல் புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. புதுமைப்பித்தன் 98 கதைகளை எழுதியுள்ளார். அவர் மணிக்கொடியில் எழுதிய 29 கதைகளைப் புதுமைப்பித்தன் கதைகள் என்ற பெயரில் நவயுகப் பிரசுராலயம் வெளியிட்டுள்ளது. ஆறுகதைகள், நாசகாரக் கும்பல், பக்த குசலோ என்ற அவரது பிற நூல்களையும் அதே நிறுவனம் வெளியிட்டுள்ளது. கலைமகள் பதிப்பகம் காஞ்சனை தொகுதியையும், ஸ்டார் பிரசுரம் ஆண்மை என்ற தொகுதியையும் வெளியிட்டன. ஐந்திணைப் பதிப்பகம் புதுமைப்பித்தனின் மொத்தச் சிறுகதைகளையும் வெளியிட்டது. அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் புதுமைப்பித்தனின் அனைத்துச் சிறுகதைகளையும் வெளியிட்டுள்ளது.
1

1. ஆஷாட பூதி

2 January 2024
0
0
0

மோலியர் (1622-1673) பதினேழாவது நூற்றாண்டில், பிரான்ஸில் நாடகக்காரன் என்றால், மதம் அவனைத் தள்ளிவைத்தது. பிரார்த்தனை - பிரசாதத்தைப் பெறுவது என்றால் விசேஷ சிபாரிசின் பேரில் நடக்க வேண்டிய காரியம். செத்தால

2

2. ஆட்டுக் குட்டிதான்

2 January 2024
0
0
0

ஜேம்ஸ்ஹானலி – இங்கிலாந்து  செக்கச் செவேலென்றிருக்கும் அந்த பஸ், ஏக இரைச்சலுடன் அந்த வளைவைத் திரும்பியது. சூழ்நிலை தாங்கிய அமைதியான வண்ணக் கலவைகளுக்குச் சவால் கொடுப்பது மாதிரி அந்தச் சிகப்பு கண்களை உற

3

3. அம்மா

2 January 2024
0
0
0

கே. பாயில்  பாதை நெடுகலாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், அதற்குச் சின்னக் கிளை ஒன்றும் இருந்தது. இருந்தாலும் மறுபக்கத்தில் ஓடும் சிற்றோடையில் இறங்கி அக்கரைக்குப் போக வேண்டிய அவசியமே இல் லை. மலை வ

4

4. அந்தப் பையன்

3 January 2024
0
0
0

மாக்ஸிம் கார்க்கி  இந்தச் சின்னக் கதையை எப்படிச் சொல்லுவது என்று புரியவில் லை. அவ்வளவு எளிதானது. நான் வாலிபப் பருவத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் தெருக் குழந்தைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு ஊருக்கு வெளியே

5

5. அஷ்டமாசித்தி

3 January 2024
0
0
0

டென்ஷொ வம்சத்தின் ஆதிக்கத்தின்போது, கியாட்டோ என்ற வடக்குப் பிராந்தியத்தில் குவான்ஷின் கோஜி என்ற வயோதிகன் வாழ்த்து வந்தான். நீண்டு நெஞ்சை மறைக்கும் வெள் ளைத் தாடியுடன், ஷிண்டோ குருக்கள்மார் போல உடையணிந

6

6. ஆசிரியர் ஆராய்ச்சி

3 January 2024
0
0
0

ஸின்கிளேர் லூயிஸ்  டாக்டர் ஸ்லீக் பிரம்மச்சாரி; அதிலும், வழுக்கை விழவிருக்கும் வாலிபப் பிரம்மச்சாரி. அவர் இராஸ்மஸ் கலாசாலையில் சரித்திரமும் பொருளாதாரமும் கற்பித்து வந்தார். அதாவது மேடைமீது ஏறி நின்று

7

7. அதிகாலை ( பகுதி 1)

3 January 2024
0
0
0

நிக்கோலாய் டிக்கனோவ்  1918-ம் வருஷம் ஆகஸ்டு மாதத்தில் துருக்கியர் பாக்கூ என்ற இடத்தை முற்றுகை இட்டார்கள். மென்ஷ்விக் நிர்வாகத் தலைமை போர்டின் ஐந்து தலைவர்கள் மூளையும் சுழன்றது. சர்வ குழப்பம்; அது விஷ

8

7.அதிகாலை (பகுதி 2)

3 January 2024
0
0
0

இராத்திரி ஒரு ஊரில் தங்கினதும், ஆலி ஹஸன், டாஷா பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு சளசளவென்று மணிக்கணக்காகப் பேசிக் கொட்டினான். உத்யோகஸ்தரின் விதவை மெய்ஸ் அரிசி ரொட்டியை அசைபோட்டுக் கொண்டிருந்தாள். வி

9

7. அதிகாலை ( பகுதி 3)

3 January 2024
0
0
0

"பொய்யாயிருக்கலாம், ஆனால் சித்திரவதையில், உன் னைக் காட்டிக்கொடுப்பேன்; என் னைக் காட்டிக்கொடுத்துக் கொள்வேன்; எனக்கு ஞாபகத்துக்கு வந்தவர்களையெல்லாம் காட்டிக்கொடுப்பேன். உனக்குச் சித்திரவதை என்றால் எப்ப

10

7. அதிகாலை (பகுதி 4)

3 January 2024
0
0
0

"ஆஹா அப்படியா. பாக்ஷாதான் வயிற்றுக் கடுப்பால் கழிந்து கொண்டிருக்கிறாரே. இன்னும் கொஞ்ச காலத்துக்கு அவரைப் பற்றித் தொந்திரவில் லை. தவிரவும், உன்னுடைய ஆயுதங்களை உன்னிடம் கொடுத்துவிடவேண்டும் என்று உத்திரவ

11

8. பலி

4 January 2024
1
0
0

ஜோஸப் நையரு – ஹங்கேரி  மோல்டேவியா நோக்கி நிற்கும் மலைச் சிகரங்களிலே அந்த வருஷத்தில் மந்தைகளுக்குக் கரடிகளால் வெகு தொல் லை ஏற்பட்டு வந்தது. வில் - பொறி வைத்து எல்லாம் முயன்று பார்த்ததும் ஒன்றும் பயன்ப

12

9. சித்திரவதை

4 January 2024
1
0
0

எர்னஸ்ட் டாலர்  "உனக்கு இன்னும் ஏதாவது விருப்பம் இருக்குமா?" சாகக் கிடக்கும் வாலிபனைப் பார்த்து ஸ்டட்கார்ட் இரகசியப் போலீஸ் உத்தியோகஸ்தர் இவ்வாறு கேட்டார். வாலிபனுடைய 'வெறிச்சோடிய' கண்கள் ஜன்னலின் கம

13

10. டைமன் கண்ட உண்மை

4 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர் (1564-1616)  ஆங்கில நாடகாசிரியர், ஷேக்ஸ்பியரைத் துவிதப் பிரம்மா என்பார்கள். உலகத்தின் சிருஷ்டி தத்துவத்தைப் புரிந்து கொண்டவர் போல் தமது பாத்திரங்களை நடமாட விடுவார். அவர் உலகில் பேய்களும்

14

11. இனி

4 January 2024
1
0
0

இ. எம். டிலாபீல்ட்  இதுவரை நடக்காததைப் பற்றி ஒரு கதை எழுதினால் என்ன?... அந்தக் கதையின் போக்கில் அறிந்து கொள்ள முடியுமானால்... பதினைந்து இருபது வருடங்களுக்கப்புறம்: ஓல்ட் பெய்லியில் (நியாயஸ்தலம்) நடக்

15

12. இந்தப் பல் விவகாரம்

4 January 2024
1
0
0

மைக்கேல் ஜோஷெங்கோ – ருஷ்யா  எங்கள் சகா எகோரிச்சுக்குப் பல், தொந்திரவு கொடுத்து வந்தது. என்ன காரணத்தினாலோ விழ ஆரம்பித்தது. காலம் என்ற ஒன்று இருக்கே, அதற்கும் இந்த விவகாரத்துக்கும் சம்பந்தமிருக்கலாம்.

16

13. இஷ்ட சித்தி ( பகுதி 1)

4 January 2024
1
0
0

ஹான்ஸ் பலாடா – ஜெர்மனி  முதலிலேயே தெரிவித்து விடுகிறேன். அப்புறம் குறை சொல்லாதீர்கள். என் மனைவி பெயர் இட்ஸன் பிளாஸ். உச்சரிப்பதற்குக் கொஞ்சம் சிரமந்தான்; ஆனால் அவள் மீது இருந்த ஆசையில், அதன் சிரமம் எ

17

13. இஷ்ட சித்தி ( பகுதி 2)

4 January 2024
1
0
0

"பின்பு கிரிஸ்மஸ் சமயத்தில் அதை உடைத்து... பிறகு என்னவென்பது உங்களுக்குத்தான் தெரியுமே!" என்றாள்! "உனக்கென்ன பைத்தியமா? இந்த வருஷம் போனஸ் கீனஸ் கிடையாது என்று ஹீபர் சொல்லுகிறான். முதலாளி வருமானம் இல்

18

14. காதல் கதை

5 January 2024
1
0
0

வில்லியம் ஸரோயன்  "இந்தப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுகிறீரா அல்லது அந்தப் பக்கமாக உட்காருகிறீரா?" என்று சிகப்புக் குல்லா* கேட்டான். (* நம்மூர்களில் சிகப்புத் தலைப்பாய் என்றால் போலீஸ்காரன் என்பது

19

15. கலப்பு மணம்

5 January 2024
1
0
0

கிரேஸியா டெலாடா – இத்தாலி  அன்றிரவு சுகமாக இருந்தது. பூலோகத்தைக் கடுங்குளிரினால் சித்திரவதை செய்வதில் சலியாத உறைபனிக் காலத்துக்கும் ஒரு ஓய்வு உண்டு என்பதை அந்த ஏப்ரல் இரவு காட்டியது. இதுவரை பனிக்கட்ட

20

16. கனவு (பகுதி 1)

5 January 2024
1
0
0

ஐவான் டர்ஜனீப் – ருஷியா அந்தக் காலத்தில் நான் என் தாயாருடன் ஒரு சிறு துறைமுகப் பட்டினத்தில் வசித்து வந்தேன். எனக்கு அப்பொழுதுதான் பதினேழு வயது நிரம்பிற்று. தாயாருக்கு முப்பத்தைந்து வயது. சின்ன வயதிலே

21

16. கனவு ( பகுதி 2)

5 January 2024
1
0
0

8 என் தாய் எனக்குக் கூறிய கதை எனதுள்ளத்தை எப்படிச் சிதறடித்தது! முதல் வார்த்தையிலிருந்தே அறிந்து கொண்டேன். அவள் வாயிலிருந்து தவறுதலாக நழுவிய வார்த்தை எனது உத்தேசத்தைத் திடப்படுத்தியது. எனது கனவில் நா

22

17. காரையில் கண்ட முகம்

5 January 2024
1
0
0

இ.வி. லூக்காஸ் – இங்கிலாந்து  நேற்று சாயங்காலம் எனது நண்பன் டாப்னி வீட்டில் நடந்ததை மறக்க முடியவில்லை. அந்த அநுபவம் இன்னும் என் னை உறுத்திக் கொண்டிருக்கிறது. அன்றைய தினம் பேச்சு பூத பைசாசங்களைப் பற்ற

23

18. கிழவி

5 January 2024
1
0
0

ஸெல்மாலேகர்லாப் – ஸ்வீடன்  மலைப்பாதை வழியாக ஒரு கிழவி நடந்து கொண்டிருந்தாள். மெலிந்து குறுகியவள்தான். எனினும் முகத்தின் வண்ணம் வாடவில்லை. சதைக் கோளங்கள் மரத்துத் தொய்ந்து திரித் திரியாகத் தொங்கவில்லை

24

19. லதீபா

6 January 2024
0
0
0

மோஷி ஸ்மிலான் ஸ்கி  "லதீபாவின் கண்களை நீ பார்த்திருக்காவிட்டால், கண்களுக்கு எவ்வளவு அழகு இருக்க முடியும் என்பது உனக்குத் தெரிந்தே இருக்காது." இப்படி நான் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம். ச

25

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்( பகுதி 1)

6 January 2024
0
0
0

1 அவர்களுடைய மூத்த பெண்ணின் படிப்பு அடுத்த மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது. வயசும் 'அப்படி இப்படி' என்று சீக்கிரத்தில் பதினெட்டு ஆகிவிடும். டோ க்கியோவிலேயே நாகரீகத்திற்குப் பெயர் போன இடத்தில் நிலம் வாங

26

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்(பகுதி 2)

6 January 2024
0
0
0

5 வரன்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுவதற்கு நாள் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு 'கபூக்கி' நாடகக் கொட்டகையில் தரகர் இரண்டு 'பாக்ஸ்' களை அமர்த்தினார்; இரண்டு குடும்பங்களும் பக்கத்த

27

21. மணிமந்திரத் தீவு

6 January 2024
0
0
0

ஷேக்ஸ்பியர்  நடுக்கடலிலே நாலைந்து கப்பல்கள் தத்தளித்துத் தடுமாறுகின்றன. கடலலைகள் சினங்கொண்ட கருநாகங்கள் போல ஆயிரமாயிரமாகப் படம் விரித்துத் தலை சுற்றி மோதுகின்றன. உயிரை வாங்கவரும் கால தூதர்களின் கோரச்

28

22. மணியோசை

6 January 2024
0
0
0

ஜப்பான்  "நான் சாவதற்குப் பயப்படவில் லை" என்றாள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மனைவி. "இப்பொழுது என் கவலை எல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நான் போன பிறகு யாரைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?" வேதனை

29

23. மார்க்ஹீம்

6 January 2024
0
0
0

ஆர்.எஸ். ஸ்டீவன்ஸன் – இங்கிலாந்து  "ஆமாம்! எங்கள் வியாபாரத்திலே பலவிதம் உண்டு; வாங்க வருகிறவர்களில் சிலருக்கு ஒன்றுமே தெரியாது; வெறும் 'அப்பாவிகள்'. அப்பொழுது எங்கள் அநுபவத்திற்கு ஏற்ற லாபத்தைப் பெறு

30

24. மிளிஸ்

8 January 2024
0
0
0

பிரட் ஹார்ட் – அமெரிக்கா  ஸிராநிவாடா மலைத் தொடரில் சமவெளிக்குப் பக்கத்தில் இருக்கும் சிவந்த மலைகளில்தான் "ஸ்மித் பாக்கெட்" என்ற இடம் இருக்கிறது. அது ஒரு சுரங்க ஸ்தலம். அதாவது ஒரு காலத்தில் தங்கம் இரு

31

25. முதலும் முடிவும் ( பகுதி 1)

8 January 2024
0
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  மாலை ஆறு மணியிருக்கும். அந்த அறையில் சுமாரான இருட்டு. 'பச்சை ஷேட்' போட்ட மேஜையின் மீதிருந்த ஒற்றை விளக்கு, தரையில் விரித்த துருக்கிக் கம்பளத்திலும், மேஜையின் மீது சிதறிக் கிடந்த,

32

25. முதலும் முடிவும் ( பகுதி 2)

8 January 2024
0
0
0

"பிரேதத்தின் மேலிருந்த எதையும் எடுத்தாயா?" "நாங்கள் சண்டை போட்டுக் கொள்ளும்பொழுது இது அவன் பையிலிருந்து விழுந்தது." அது வெறும் தபால் கவர். தென் அமெரிக்கத் தபால் குறியிட்டு, "பாகட்ரிக் வாலன், ஸைமன் ஓட்

33

26. நாடகக்காரி

8 January 2024
0
0
0

ஆண்டன் ஷெக்காவ் – ருஷியா  அவள் ஒரு நாடகக்காரி. அந்தக் காலத்திலே அவளுக்கு யௌவனக் களை மாறவில் லை. குரல் கணீர் என்று இருக்கும். பலர் வந்து போவார்கள். ஆனால் குறிப்பாக நிக்கோலாய் பெட்ரோவிச் கோல்ப்பக்கோவ்

34

27. நட்சத்திர இளவரசி

8 January 2024
0
0
0

ஒரு ஆசிரியர் - தென் கடல் தீவுகள்  "நம்மிடம் இருப்பதையெல்லாம் சாப்பிட்டு விடுவோம்" என்றான் டபூதி. அவனது சகோதரனான அய்ட்டோ சந்தேகத்துடன் ஏறிட்டுப் பார்த்தான். "அப்படியானால் நமக்கு மிகுந்த பலம் உண்டாகிவி

35

28. ஓம் சாந்தி! சாந்தி!

8 January 2024
1
0
0

எலியா எஹ்ரன் பர்க்  (யுத்தம் மனித சமூகத்தின் 'உடனுறை நோயாகவே' இருந்து வருகிறது. தனது தற்காப்புக்காக மனிதன் சமூகம் என்ற ஒரு ஸ்தாபனத்தை வகுத்தான்; பிறகு அதனைக் காப்பாற்றத் தன் னைப் பலிகொடுக்கத் தயாரானா

36

29. ஒரு கட்டுக்கதை

9 January 2024
0
0
0

பிரான்ஸ் காப்கா – ஆஸ்திரியா  எலி சொல்லுகிறது... "ஐயோ, உலகம் தினம் தினம் எவ்வளவு சின்னதாகிக் கொண்டே வருகிறது! முதலில் ரொம்பப் பெரிதாக, நான் பயப்படும்படியாக, அவ்வளவு பெரிதாக இருந்தது. நான் ஓடிக்கொண்டே

37

30. ஒருவனும் ஒருத்தியும்

9 January 2024
0
0
0

லூயிகய்ல்லூ – பிரான்ஸ்  மச்சுப் படிக்கட்டு முற்றத்தில் இறங்கியது. அங்கே, அதாவது கடைசிப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, அன்று காலை முழுவதும் அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் ரொம்பவும் நெட்டை. ஒற்றை ந

38

31. பைத்தியக்காரி

9 January 2024
0
0
0

மொப்பஸான் – பிரான்ஸ்  "ஆமாம், நீ சொல்வது முன்பு பிரான்சிற்கும் ருஷியாவிற்கும் சண் டை நடந்ததே, அப்பொழுது நடந்த பயங்கரமான சம்பவத்தை என் நினைவிற்குக் கொண்டு வருகிறது" என்று கூறத் தொடங்கினார் முஸே டி' என

39

32. பளிங்குச் சிலை

9 January 2024
0
0
0

வாலரி புருஸ்ஸாப் வாலரி புருஸ்ஸாப் (1875-1924) புரட்சி யுகமான நவீன காலத்து ருஷ்யப் புது எழுத்தாளர் கோஷ்டியைச் சேர்ந்தவர். இந்தக் கதை புரட்சிக்கு முந்திய காலத்தைப் பகைப் புலமாகக் கொண்டு, எழுந்த கற்பனைக

40

33. பால்தஸார் (பகுதி 1)

9 January 2024
0
0
0

அனதோல் பிரான்ஸ் – பிரான்ஸ்  "கிழக்கே அரசர்களுக்கு மந்திர சக்தியுண்டு என்று நினைத்தார்கள்" -தெர்த்தூலியன் அக்காலத்திலே எதியோபியாவை பால்தஸார் ஆண்டு வந்தான். கிரேக்கர் அவனை ஸாரஸின் என்று அழைத்தனர். அவன்

41

33. பால்தஸார்( பகுதி 2)

9 January 2024
0
0
0

ஜனநடமாட்டமில்லாத பாலைப் பிரதேசங்களில் மத்தியானம் வரை நடந்தனர். உச்சியில் சூரியன் வந்ததும், திருடர்கள் கைதிகளை விடுவித்து, பாறையின் நிழலில் உட்காரச் சொல்லி, கெட்டுப்போன ரொட்டித் துண் டைக் கொடுத்தனர். ப

42

34. பொய்

9 January 2024
0
0
0

லியேனீட் ஆன்ட்ரீவ் – ருஷியா  "நீ சொல்வது பொய், அது உனக்குத் தெரியும்!" "அதற்கேன் இப்படிக் கத்தவேண்டும்? பக்கத்திலிருக்கிறவர்களுக்கும் தெரிய வேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது." இப்பொழுதும் பொய் சொன்னாள்

43

35. பூச்சாண்டியின் மகள்

10 January 2024
0
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து  அவள் பெயர் பத்தேமா. அவள் பாக்தாத் நகர் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தாள். அவள் நீலத்தாடிவாலாவின் புதல்வி. கண்டதும் காம வெறியை எழுப்பும் மோகனாங்கி. அவளது மதி முகத்தின் வ

44

36. ராஜ்ய உபாதை( பகுதி 1)

10 January 2024
0
0
0

ஹென்றிக் இப்ஸன் (1828-1906)  ஷேக்ஸ்பியருக்கு நிகராக உலகம் கொண்டாடும் சிறந்த நாடக ஆசிரியர் ஹென்ரிக் இப்ஸன். தர்மத்துக்கு வெற்றி அளித்தார் ஷேக்ஸ்பியர்; தர்மம் ஏன் வெற்றி பெற வேண்டும் என்ற கேள்வியை எழுப

45

ராஜ்ய உபாதை( பகுதி 2)

10 January 2024
0
0
0

"அந்தக் கடிதம்..."  "இரு இரு, விரோதிகளைப் பற்றி நான் ஒரு பட்டியல் கொடுத்தேனே. நீ அதிகாரத்தை விடத் தயாராக இருப்பதுபோல நானும் என் எதிரிகளை மன்னிக்க ஆசைப்படுகிறேன். அந்தப் பட்டியலை இந்த நெருப்பில் போட்ட

46

37. ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு

10 January 2024
0
0
0

நதானியேல் ஹாதார்ண் – அமெரிக்கா  எல்லைப்புறத்தைப் பாதுகாப்பதற்காக 1725-ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்ட படையெடுப்பு சரித்திரத்திலேயே கற்பனைக்கு இடந்தரும் பகுதி. அதை எல்லாரும் சாதாரணமாக 'லவல் சண்டை' என்று கூற

47

38. சாராயப் பீப்பாய்

10 January 2024
0
0
0

எட்கார் அல்லன் போ – அமெரிக்கா  அவன் ஆயிரம் குற்றங்களைச் செய்தான்; ஆனால் என்னால் இயன்றவரை பொறுத்தேன். அவன் என் னைத் திட்டி அவமதித்தான். இனி, பழிக்குப் பழி தீர்க்க வேண்டியதுதான் என்று மன உறுதி கொண்டேன்

48

39. சகோதரர்கள்

10 January 2024
0
0
0

யூஜோ யாம மோட்டோ – ஜப்பான்  'அண்ணா, இது நல்லதுதானே?' 'எங்கே, இப்படிக் கொண்டா பார்ப்போம்' என்று மூத்தவன் தன்னிடம் காட்டப்பட்ட காளானைப் பார்ப்பதற்காகத் திரும்பினான். 'ஊங் ஹும், நல்லதில் லை; நான் பிடுங்க

49

40. சமத்துவம்

10 January 2024
0
0
0

ஒரு ருஷிய ஆசிரியர்  நீலக் கடலின் அடிமட்டத்திலே, பிரமாண்டமான மீன் ஒன்று, இரை தேடிக்கொண்டு, உல்லாசமாக நீந்தி வருகிறது. எதிரே ஒரு சின்ன மீன் - அதன் உணவு. பெரிய மீன் அதை விழுங்குவதற்காக, தன் வாயை அகலத் த

50

41. ஷெஹர்ஜாதி - கதை சொல்லி

11 January 2024
0
0
0

ஹென்றி டிரெக்னியர் – பிரான்ஸ்அன்று இரவு ஷெஹர்ஜாதி நன்றாகத் தூங்கவேயில் லை. பகல் முழுவதும் சுட்டுப் பொசுக்கும் வெய்யில். அதனால் மூச்சுவிடக்கூட முடியாதபடி அவ்வளவு இறுக்கமாக இருந்தது. சிலந்தி வலையையும் த

51

42. சிரித்த முகக்காரன்

11 January 2024
0
0
0

அவன் சோகமாக இருக்கிறான், தனியாக இருக்கிறான் என்று சொல்லிவிடுவது எளிது; ஆனால் அவன் எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்தோடேயே இருக்கிறான். அப்படிச் சொல்லிவிட்டாலும், அவனைப் பாட்டிலில் போட்டு அடைத்து லே

52

43. சூனியக்காரி

11 January 2024
1
0
0

ரோனால்டு ஆக்டன் – இங்கிலாந்து அப்பொழுது இலையுதிர் காலம். நானும் ஜேக் மக்கின்ஸனும் பக்கத்து மிராசுதாருடைய காட்டில் திருட்டுத்தனமாகக் கண்ணி வைத்து வேட்டையாடச் சென்றோம். அவனுக்கு வயது இருபதுக்கு மேல

53

44. சுவரில் வழி

11 January 2024
0
0
0

ஆர். முரே கில்கிரைஸ்– இங்கிலாந்து அன்று முற்பகல் சிறிது உஷ்ணமாகவே இருந்தது. பசும்புல் செழித்து வளர்ந்த மைதான வெளியில், ஆங்காங்கு குத்துக்குத்தாகப் பெயர் தெரியாத புஷ்பங்கள் எல்லாம் கணக்கற்று

54

45. தாயில்லாக் குழந்தைகள்

11 January 2024
0
0
0

பிரான்ஸிஸ் பெல்லர்பி – இங்கிலாந்து வேர்த்து விருவிருக்க, கால்கள் தள்ளாட, இரண்டு குழந்தைகள் நடந்து சென்றன. பையன், பதினொரு வயசிருக்கும். முன்னால் நடந்தான். பெண் எட்டு வயசுபோல இருக்கும். பாதை முன் ம

55

46. தையல் மிஷின்

11 January 2024
0
0
0

இவான் கூம்ஸ் அங்கு மனிதனைத் தூங்காது விழிக்க வைத்திருக்க ஒருவித சந்தடியும் கிடையாது. இருந்தாலும், அந்தச் சிறிய கட்டிலில் சுருண்டு முடங்கிக்கொண்டு, நெடுநேரமாக நிசப்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

56

47. தந்தை மகற்காற்றும் உதவி

11 January 2024
1
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து டான் ஜுவான் தன் மாளிகையில் விருந்து மண்டபத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று தரை வெடித்தது. நரக தூதர்கள் வந்து அவனை இழுத்துக் கொண்டு போய் விட்டார்கள்

57

48. தெய்வம் கொடுத்த வரம்

12 January 2024
1
0
0

பியோர்ண்ஸ்டர்ண் பியோர்ண்ஸன் – ஸ்வீடன்  இந்தக் கதையில் வருகிறவன் தான் அவனுடைய ஊரிலேயே ரொம்பவும் பெரிய பணக்காரன். தவிரவும் அந்த வட்டாரத்திலே அவனுக்குத்தான் ரொம்பவும் சொல் சக்தி உண்டு. அவன் பெயர் தார்ட்

58

49. தேசிய கீதம் (பகுதி 1)

12 January 2024
0
0
0

எல்.ஏ.ஜி. ஸ்டராங் – இங்கிலாந்து  லாரி நிறையத் துருப்புக்கள் கன வேகமாகச் சென்று சில விநாடிகள் கூடக் கழியவில் லை. அது இப்பொழுதுதான் நிகழ்ந்தது. வெடியின் அதிர்ச்சி பரீலியை அப்படியே கலங்க வைத்துவிட்டது.

59

49. தேசிய கீதம் (பகுதி 2)

12 January 2024
0
0
0

ஆம். அமெரிக்காவில் ஓர் பெருத்த வெற்றி. நியூயார்க்கில் இரண்டு ஆட்டம்; பிறகு அமெரிக்கா முழுவதிலும் ஓர் நீண்ட வெற்றி யாத்திரை; முடிவில் ஹாலிவுட்டில் ஒரு பிலிம்; சமாதானம் ஏற்பட்ட இரண்டொரு மாதங்களுக்கப்புற

60

49. தேசிய கீதம் (பகுதி 3)

12 January 2024
0
0
0

இந்தச் சம்பவம் பரீலியின் கோபத்தை அதிகரித்தது; ஆனால் பொதுப்படையாக்கியது. இதுவரை தன் தேசவாசிகளான புரட்சிக்காரர் மீது கோபங்கொண்டிருந்தான். இப்பொழுதோ இந்த இடத்தின் பேரிலேயே கோபம். அவன் நெஞ்சில் ஆழமாகப் பய

61

50. துன்பத்திற்கு மாற்று

12 January 2024
1
0
0

ஸீனர் லூயிஜி பிரான்டல்லோ – இத்தாலி  நமது வாழ்க்கையை, முக்கியமாக அதில் காணும் துன்பங்களை, வான வெளியிலே தேஜோமயமாகச் சுழன்று செல்லும் நட்சத்திர மண்டலங்களுடன் ஒப்பிட்டுப்பாரும், அப்பொழுது அது துச்சமாகத்

62

51. துறவி

12 January 2024
0
0
0

ராபர்ட் நியூமான் – ஜெர்மனி  "நான் முதல் முதலில் ஐரோப்பாவிலிருந்து இந்தக் கீழப் பிரதேசங்களுக்கு வந்தபொழுது அது நடந்தது" என்று அவன் ஆரம்பித்தான். அவன் எங்கள் கப்பலின் காப்டன்; பெயர் வான்டர்லான். ஜாதியி

63

52. உயிர் ஆசை (பகுதி 1)

13 January 2024
1
0
0

ஜாக் லண்டன் – அமெரிக்கா  அவர்கள் இருவரும் நொண்டி, நொண்டி ஆற்றங்கரை வழியாகத் தள்ளாடி நடந்தார்கள். கத்தி போல ஊசியாக, தெத்துக்குத்தாகக் கிடந்த பருக்கைக் கற்கள் காலை வெட்டின. அவர்களிருவரும் சோர்ந்து விட்

64

52. உயிர் ஆசை (பகுதி 2)

13 January 2024
1
0
0

நாட்களும் ஓடின. காட்டு ஜீவராசிகள் ஓடியாடித் திரியும் பள்ளத்தாக்குகளை அடைந்தான். மான் கூட்டம் ஒன்று. இருபது இருக்கும். துப்பாக்கி லெக்குக்கு ரொம்பவும் அருகில் துள்ளி ஓடின. அவற்றை விரட்டிக் கொண்டே ஓடினா

65

52. உயிர் ஆசை (பகுதி 3)

13 January 2024
1
0
0

பாறை மீது படுத்துக் கிடந்தவன் சுயப் பிரக்ஞையுடன் விழித்துக் கொண்டான். சூரியன் காய்ந்து கொண்டிருந்தது. காட்டு மான்குட்டிகளின் சப்தமும் தூரத்தில் கேட்டது. சித்தத்தின் அடிவானத்தில் மழையும் காற்றும் பனியு

66

53. வீடு திரும்பல்

13 January 2024
1
0
0

பீட்டர் எக் – நார்வே  மாலுமி பெடர் ஸோல்பர்க்குடைய மனைவி வசித்த குடிசை, ஜனங்கள் பொதுவாக 'லூக்கள் தெரு' என்று சொல்லுவார்களே, அதற்கெதிரில் இருக்கிறது. குடிசையின் ஜன்னல் நன்றாகத் திறந்திருந்தது. அப்பொழுத

67

54. ஏ படகுக்காரா!

13 January 2024
1
0
0

மிக்கெய்ல் ஷோலொகோவ்  அந்த காஸக் கிராமத்தைச் சூழ்ந்து வளர்ந்து நின்ற சாம்பல் பூத்த பசிய நிறம் படைத்த செடிச் செறிவின்மீது சூரியவொளி தெம்பாக விழவில் லை. அருகே ஒரு பரிசல் துறை இருந்தது. அங்கே படகேறி டான்

68

55. யாத்திரை

13 January 2024
1
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  நான் ஹாமர்ஸ்மித் பஸ்ஸின் மேல்தட்டிலிருந்து பார்க்கும் பொழுது, அவர்கள் ஆல்பர்ட் ஹால் மெமோரியல் எதிரில் இருந்த ஒரு வீட்டு வாசல்படியில் உட்கார்ந்திருந்தனர். அன்று வெகு உஷ்ணம். வாடகை

69

56. எமனை ஏமாற்ற...

13 January 2024
1
0
0

மொங்காக்கு ஷோனின் என்ற மகடனான புத்த பிக்ஷு தான் எழுதியுள்ள கியோ-ஜியோ-ஷிந்ஷோ என்ற கிரந்தத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: "ஜனங்கள் வழிபடும் தெய்வங்களில் பல துர்தேவதைகளாகும். அவலோகிதன், தர்மம், பிக்ஷுக்கள

70

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்

13 January 2024
1
0
0

தாமஸ் வுல்ப் – அமெரிக்கா  ஈவிரக்கமற்றுக் கொதிக்கும் அந்த வருஷம் ஆகஸ்டில் யுத்தம் நின்றது. யுத்த தேவதையின் பவனியின்போது நான்கு கணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஒன்று லாங்லிவியல்; விமான மைதானத்தில் உள்ள குத

71

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்(பகுதி 2)

13 January 2024
1
0
0

தயங்கித் தயங்கி மறியும் உடலொட்டிய இந்த வேட்கை, தங்கள் ஜோலியைச் செய்து இவர்கள் நடாத்தும் வாழ்வினிடையிலும் வெளிக்கு அகோரக் கேலிக் கூத்தாகத் தோன்றினாலும், மேஜைக்கு மேஜை போஷகர் தேடி நடக்கும்போது சர்வ ஜாக்

72

58. தர்ம தேவதையின் துரும்பு

13 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர்  குரலிலே அதிகார தோரணையும் அதனுடன் பயமும் கலந்திருந்தது. கடுங்குளிரிலே, இருட்டின் திரைக்குள்ளே, ஈட்டிபோலப் பாய்ந்தது அக்குரல். 'நீ யார்? முதலில் அதைச் சொல்' என்று பதில் கேள்வி பிறந்தது, தி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்