shabd-logo

27. நட்சத்திர இளவரசி

8 January 2024

0 பார்த்தது 0

ஒரு ஆசிரியர் - தென் கடல் தீவுகள் 

"நம்மிடம் இருப்பதையெல்லாம் சாப்பிட்டு விடுவோம்" என்றான் டபூதி. அவனது சகோதரனான அய்ட்டோ சந்தேகத்துடன் ஏறிட்டுப் பார்த்தான். "அப்படியானால் நமக்கு மிகுந்த பலம் உண்டாகிவிடும்; நம்மை எதிர்க்க ஒருவருக்கும் தைரியம் வராது; அல்லது அப்படித் தைரியமாக நம்மை எதிர்த்தாலும், அவர்களைத் தோற்கடித்துப் புகழும், ஏராளமான செல்வமும் பெறலாம்" என்றான் டபூதி. "அவர்கள் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு நம்மை எதிர்த்தால் நமது கதி என்ன?" என்றான் அய்ட்டோ. "நம்மிடம் அதற்கேற்ற தைரியம் இருந்தால் அவர்களை வெல்வோம், வா! நாமிருவரும் இத்தீவு முழுவதையும் சுற்றி இருக்கும் தலைவர்களையும் தைரியசாலிகளையும் வென்று, மங்கரேவா முழுவதிலுமே மிகுந்த வீரர்கள் நாம்தான் என்று புகழ் சூடிக் கொள்வோம்" என்றான். அய்ட்டோ அரைமனத்துடன் சம்மதித்தான். பின்பு இருவரும் தம் தீவிலிருந்த தேங்காய்களையும், வேறு கனிகளையும் சேகரித்தனர். இரண்டு பன்றிகளைக் கொன்று அவற்றை அப்படியே முழுசாகச் சுடுகற்கள் மீது வைத்து வாட்டினார்கள். மாலையில் தங்கள் குடிசை முன்பு இருந்த புல்தரையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். அய்ட்டோ விற்கு வரவரப் பசி குறைய ஆரம்பித்தது. மெதுவாகச் சுவைத்துச் சாப்பிட்டுக் கடைசியில் உண்ண மறுத்து விட்டான். "இதென்ன? நீ இப்படிச் சாப்பிடாவிட்டால் நாம் சண் டையில் வெற்றி பெறுவது எப்படி?" என்றான் டபூதி. முதலில் கெஞ்சினான், பின் பயமுறுத்தினான். ஒன்றிலும் பயனில் லை. அய்ட்டோ வேண்டாமெனத் தலையை அசைத்தான். "அவசியமானால், நீ தனியாகவே வேண்டுமானாலும் புறப்பட்டுப் போ; ஆனால் இனி என்னால் சாப்பிட முடியாது" என்றுவிட்டான் அய்ட்டோ. மனத் திருப்தியில்லாது டபூதி தன் பங்கைச் சாப்பிட்டான்; பின்பு அய்ட்டோ மீதி வைத்ததையும் உண்டான். அன்றிரவு உறங்கிவிட்டு, விடியற்காலம், உதயசூரியன் முதுகில் எரிக்க, கடற்கரை மார்க்கமாக நடந்தார்கள். சிறிது நேரம் கழித்து ஒரு கிராமத்தையடைந்தார்கள். அதன் நடுவில் பிரவேசித்து, டபூதி ஊரிலுள்ள தைரியசாலிகளைப் போருக்கு அழைத்தான். அவ்வூர்த் தலைவன் அதற்குப் பதில் சவால் கூறினான். ஊரில் தைரியசாலிகள் என்று கருதப்படும் மூவர் தங்கள் ஈட்டிகளை எடுத்து வந்தனர். தலைவனும் அம்மூவரும், ஈட்டிகளைச் சரித்துப் பதி வைத்து சகோதரர் இருவர் மீதும் பாய்ந்து வந்தார்கள். டபூதி கோஷித்துக் கொண்டு அவர்கள் மீது பாய்ந்தான். அய்ட்டோ வும் பின்னால் பாய்ந்தான். சிறிது நேரத்தில் நான்கு வீரர்கள் பிணமாகச் சரிந்தனர். அய்ட்டோ , கிராமத்திலுள்ள மிகவும் வயோதிகப் பருவமடைந்த கிழவனிடம் சென்று, "நாங்கள் திரும்பி வரும்பொழுது அந்தத் தலைவனின் சொத்துக்களையும் மனைவி மக்களையும் கப்பமாக எடுத்துக் கொண்டு போவோம்" என்று சொன்னான். *****இம்மாதிரி சகோதரர் இருவரும் கிராமம் கிராமமாகச் சென்று வெற்றி பெற்ற வண்ணம் பிரயாணம் செய்யலாயினர். அவர்கள் புகழ் தீவெங்கும் பரவியது. ஒருநாள், ஒரு கிராமத்தையடைந்தனர். அதற்கு ஒரு ஸ்திரீ தலைமை வகித்தாள். அவள் தீய பழக்கமுள்ளவள் என்பது பிரசித்தம். அவள் பெண்ணாகையால் இருவரும் போர் தொடுக்கவில் லை. அவள், அவர்கள் இருவரையும் வரவேற்று, உணவருந்திக் களைப்பாற்றிக் கொள்ளும்படி கேட்டாள். முதலில் டபூதி மறுத்தான். அவள் கட்டாயப்படுத்தி வேண்டிக் கொண்டதினால் ஒப்புக்கொண்டனர். சாப்பிட்டு முடிந்ததும் அவள் அவ்விருவரையும் இந்தப் போர்த் தொழிலை விட்டுத் தன்னுடன் சிறிது நாள் வசிக்கும்படி சொன்னாள். "கொஞ்ச காலம் தங்கலாமே" என்று அய்ட்டோ வும் அவள் அபிப்பிராயத்தை ஆமோதித்தான். குளிர் காய்வதற்காக எரிந்து கொண்டிருந்த தீயினுள் பார்த்துக் கொண்டிருந்த டபூதி, "முடியாது, முடியாது! இத்தீவிலேயே நாங்கள்தான் பலிஷ்டர்கள் என்று சொல்லப்படும்வரை ஓரிடத்திலும் தங்குவதில் லை என்று சபதம் எடுத்திருக்கிறோம்" என்றான். மறுநாள் காலை இருவரும் புறப்பட்டுக் கடற்கரையை விட்டுச் செங்குத்தான மலைமீது ஏற ஆரம்பித்தார்கள். பகல் முழுவதும் உயரச் சென்றுகொண்டே யிருந்தனர். மாலையானதும் அய்ட்டோ விற்குக் களைத்துவிட்டது. "சிறிது சிரமபரிகாரம் செய்து கொள்ளுவோம்" என்று வேண்டினான். டபூதி தங்குவதற்கு மறுத்து, சகோதரனைப் பலமில்லாதவன் என்று கேலி செய்தான். இருவரும் சிரமப்பட்டுக்கொண்டு நடந்தார்கள். அய்ட்டோ சோர்ந்து விழுந்து விட்டான். டபூதிக்குக் கோபம் வந்துவிட்டது. அவன் இரவிற்குள் தூரத்தில் தெரியும் கணவாயை அடைந்து விட வேண்டும் என்று நினைத்திருந்தான். "இதுவரை பலமில்லாதவனையா அழைத்து வந்தேன்! இவ்வளவிற்கும் காரணம் நீ உன் பங்கைச் சாப்பிடாததுதான். உன்னால் தொடர்ந்து வர முடியாவிட்டால் நான் தனியாகவே போகப் போகிறேன்" என்று சொன்னான். அய்ட்டோ எழுந்திருக்க மறுத்துவிட்டான்; பாதையின் ஓரத்தில் களைத்துச் சாய்ந்தான். கோபாவேசனாக, டபூதி, மலைக் கணவாய் தெரியும் திசையில், சிரமத்தையும் பொருட்படுத்தாது நடந்து சென்றான். அதற்கப்புறம் டபூதி தனது சகோதரனை இவ்வுலகில் பார்க்கவேயில் லை. ஏனெனில், அன்றிரவை யாருடன் கழித்தார்களோ அந்த ஸ்திரீ இவர்களைத் தொடர்ந்துகொண்டே வந்திருந்தாள். டபூதியின் தலை மறைந்ததும் பாதையில் சோர்ந்து கிடக்கும் அய்ட்டோ வின் மார்பில் கத்தியைப் பாய்ச்சிவிட்டாள். டபூதி நெடுந்தூரம் அலைந்து கணவாய் வழியாக ஒரு அழகான பள்ளத்தாக்கை அடைந்தான். அங்கு கண்ணில் பட்டவிடமெல்லாம் வனத்தின் எழில் கொழித்தது. முல் லைக் கொடிகள் படர்ந்த ஒரு பாதை அவனைக் கடற்கரை அருகிலுள்ள கிராமத்திற்குக் கொண்டு விட்டது. அந்தப் பாதை வழியாகச் சென்று, ஊரின் மத்தியிலுள்ள பசும்புல் செழித்து வளர்ந்த மைதானத்தை அடைந்தான். சுற்றிலும் மரங்களின் அடியில் குடிசைகள். கிராமவாசிகள், இலட்சிய உலகத்தில் வசிப்பவர்கள் போலச் சிரித்து உல்லாசமாக விளையாடியும் தத்தம் வேலையைச் செய்தும் காலத்தைப் போக்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் மைதானத்தில் புஷ்பச் செண்டுகளை வீசி எறிந்து நடனங்கள் பயின்று கொண்டு தம்மை மறந்திருந்தனர். சற்றுத் தூரத்திலேயே பாறைகளில் மோதி உடையும் சமுத்திர அலைகளில் ஹூங்கார சப்தம் கேட்டது. அங்கிருந்து செம்படவர்கள், அப்பொழுதுதான் பிடித்த மீன்களை அவற்றின் அடிவயிறு சூரிய ஒளியைப் பிரதிபலிக்கத் தூக்கிக் கொண்டு சிரித்துப் பேசிய வண்ணம், கிராமத்தின் பக்கமாக வந்து கொண்டிருந்தனர். மீன்கள்தான் என்னென்ன வர்ணங்கள்! அவை காட்டுப் புஷ்பங்களின் சோபையைத் தோற்கடித்தன. டபூதி மைதானத்தின் நடு மத்தியில் சென்று நின்று, உரத்த குரலில் திறமை உள்ளவர்களைத் தன்னிடம் சண் டைக்கு வந்து பார்க்கும்படி கொக்கரித்தான். உடனே, இருந்த சிரிப்பும் பேச்சும் சட்டென்று நின்றன. எல்லோரும் ஆச்சரியப்பட்டு நின்றனர். காதில் விழுந்ததை நம்பாதவர் போல் அவனைப் பார்த்தனர். டபூதி மறுபடியும் அறைகூவினான். கடைசியாக அவ்வூர்த் தலைவன், அவன் பெரிய பராக்கிரமசாலி என்று பெயர் பெற்றவன் - டபூதியிடம் வந்து, "இங்கு பல வருஷங்கள் வரை யாரும் சண் டை போட்டுக் கொள்ளவில் லை என்றாலும், உன்னுடன் போர் செய்கிறேன் வா!" என்று கூறினான். இருவரும் புல் தரையில் நின்று ஒருவரையொருவர் தாக்கிப் போர் புரிந்தார்கள். நெடுநேரம் வரை இருவரும் சளைக்காமல் தாக்கிக் கொண்டார்கள். ஆனால் வர வரத் தலைவனுக்குப் பலம் குறைந்து கொண்டே வந்தது. கடைசியாக டபூதி அவன் நெஞ்சில் ஈட்டியைச் சொருகி அவனைத் தரையில் பிணமாகக் கிடத்தி விட்டான். உடனே கிராமம் முழுமையும் அழுகையும் கூக்குரலும் ஏகமாக எழுந்தது. ஏனெனில் ஜனங்கள் யாவரும் அத்தலைவனை நேசித்தார்கள். டபூதி இறந்தவன் கையில் கிடந்த ஈட்டியை எடுத்துக் கொண்டு அவன் வீட்டுக்குள் சென்றான். அங்கு இறந்தவனின் மனைவி மக்கள் நடு நடுங்கி மூலையில் ஒண்டிக் கிடந்தார்கள். தலைவாசலண் டையிலேயே சென்றதும் அவன் நின்று விட்டான். தன் முன்னிலையில் இதுவரை பார்த்தேயிராத ஒரு ரூபவதியைக் கண்டான். அவள், மாண்ட அரசனின் புத்திரிகளில் ஒருத்தி. அவன் அந்த அரசன் வீட்டில், இளவரசியின் முன்பு உட்கார்ந்திருந்தான். "இவ்வளவு அழகாக, குற்றமே இல்லாத ஒன்று உலகத்திலே பிறக்க முடியுமா?" என்று ஆச்சரியப்பட்டான். அவள், அவன் முன்பு ஒரு காலை மற்றொரு கால் மீது போட்டு உட்கார்ந்து கொண்டு, கட்டை விரலால் நிலத்தைக் கீறிக் கொண்டிருந்தாள். கறுத்தடர்ந்த கூந்தல், ஆசையை அடிமைப்படுத்தும் அதரங்கள், உலகத்தின் கற்பனையை அடக்கும் கண்கள், இவற்றைப் பார்த்த வண்ணமே இருந்துவிட்டான் டபூதி. வீட்டிலிருந்த யாவரும் வேலை காரணமாகச் சென்று விட்டார்கள். இருவரும் எதிரெதிரே உட்கார்ந்த வண்ணம் நெடுநேரம் வரை பேசாதிருந்தனர். கடைசியாக டபூதி மௌனத்தைக் கலைத்து, "பேதியா, உன் னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்றான். அவள் கண்களில் சிறிது பயம் தோன்றியது போல் இருந்தது. ஆனால், கோபமாக, "என் தகப்பனாரைக் கொன்றதுமல்லாது, என் னையும் வலிந்து கொள்ளப் பார்க்கிறாயா?" என்றாள். பராக்கிரமசாலியான டபூதி சிறிது வெட்கினான். அவளைப் பார்க்காது தலையை வேறுபுறம் திருப்பிக் கொண்டான். "தோற்றவனது மகளை அடிமையாகவோ அல்லது மனைவியாகவோ எடுத்துக் கொள்ள எனக்கு உரிமையுண்டு. இப்பொழுது என் னைத் தூண்டுவது அந்த முரட்டு ஆசையன்று. ஒரு குழந்தையானது சூரியாஸ்தமனத்தை அடிக்கடி பார்த்திருந்தாலும், திடீரென்று ஒரு நாள் தான் அதன் அழகு அதற்குத் தெரிகிறது. அப்பொழுது அழகில் சொக்கிய அக்குழந்தைக்கு மூச்சுத் திணறுகிறது. அதன் மனத்தில் பெரிய பெரிய சிந்தனைகள், கற்பனைகள் வந்து குவிகின்றன. உன் னை அன் றைய தினம் முதல்முதலாகப் பார்த்த பொழுது, எனக்கு அப்படியிருந்தது. எனது பாவ ஜன்மம் உன் தந்தையைக் கொன்று, பாவமூட்டையை மும்மடங்கு அதிகரித்துக் கொண்டது. அதற்கு மாற்று இருந்தால் உடனே இயற்றுவேன். இந்த உலகத்தில் அது ஏது? பேதியா! நான் இன்று முதல் வேறு மனிதன். என் னைக் கலியாணம் செய்து கொள்" என்றான். இளவரசி, மெதுவாகத் தலையை உயர்த்தி, "உனக்காக நான் பரிதாபப்படலாம். இப்பொழுது சொன்னது உண் மையானால், நீ இவ்விடத்தைவிட்டுப் போய்விடுவாய்" என்றாள். டபூதி தலையை அசைத்தான். "அதைத்தான் நான் செய்யவே மாட்டேன். உன் னைப் பார்த்த பிறகு அன்பின் அழகையும் சக்தியையும் உணர்ந்து கொண்டேன். உன் னை விடமாட்டேன். உன் னை என் மனைவியாக்கிக் கொள்ளுவேன்." "அது உன்னால் முடியாது" என்றாள் பேதியா. டபூதி முன்னுக்குச் சரிந்து, "பேதியா! தயவு செய்து இரங்கு. புத்திசாலித்தனமாக நடந்து கொள். எனக்கு உன்மேல் அன்பு இருக்கிறது; உனக்கும் என் மேல் அன்பு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் உன் னை விட்டுச் சிறிதும் பிரியமாட்டேன்" என்றான். "இந்த ஜன்மத்தில் நான் உன் னைக் கலியாணம் செய்து கொள்ள மாட்டேன். இது நிச்சயம். என் பெயருக்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா?" "தெரியாது. ஆனால், ஒன்று தெரியும். பேதியா என்றால் இசையில் ஒரு ஸ்தானம்; அதன் அர்த்தம் நீதான்." இளவரசி, புன்சிரிப்புடன், "எங்கள் பாஷையில் நட்சத்திரம் என்று அர்த்தம். என் னை 'நட்சத்திர இளவரசி' என்று கூப்பிடுகிறார்கள்." "சரியான பெயர்தான் வைத்திருக்கிறார்கள். உனது கண்கள் நட்சத்திரம் போலப் பிரகாசிக்கின்றன." "காரணம் அதுவன்று. ஒரு கதை சொல்லுகிறேன் கேள்: பல காலமாக என் தகப்பனார் இந்த ஜனங்களுக்குத் தலைவராக இருந்தார். எல்லோரும் அவரை நேசித்தார்கள். அவர் ஆட்சியில் அமைதி இருந்தது. சண் டை வந்தபொழுது தைரியமாகப் படையின் முன் அணியில் சென்றார். ஆனால் எங்களுக்கு மலை அரண் இருப்பதால் சண் டை ஏற்படுவதே இல் லை. ஆனால் அவருக்கு ஒரு குறை இருந்தது. தன் பெயரை வகிக்க ஒரு குழந்தையும் இல் லையே என்று வெகுவாக வருந்தினார். மாலை நேரங்களில் உட்கார்ந்து குனிந்த வண்ணம் துயரத்தில் ஆழ்ந்து விடுவார். அவரைத் தேற்ற ஒருவராலும் முடியாது. ஒரு நாளிரவு, இதே அறையில் உட்கார்ந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது, ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். வானத்திலிருந்து தங்க மயமான ஒரு நட்சத்திரம் கீழ் நோக்கி விழுந்து கொண்டிருந்தது. அது வீட்டை நெருங்குவது போல் இருந்தது. கிட்ட வரவரப் பார்க்க முடியாதபடி கண் கூசியது. கண் ணை மூடினார். திறந்து பார்த்த பொழுது நட்சத்திரம் ஒன்றும் காணப்படவில் லை; வானம் பழையபடி எப்பொழுதும் போல இருந்தது; இது என்ன புதுமை என்று எண்ணியிருக்கும்போது, அடுத்த அறையில் ஒரு குழந்தையின் அழுகை கேட்டது. அவர் உள்ளே ஓடினார். என் தாயாரின் பக்கம் ஒரு சிறு பெண் குழந்தை இருந்தது. அதற்குப் பேதியா என்று பெயரிட்டார்கள். பேதியா என்றால் ஒரு நட்சத்திரம்." டபூதி அவள் சொன்ன கதையின் அர்த்தத்தைப் பற்றி யோசனை செய்து கொண்டே தலையைக் குனிந்திருந்தான். இளவரசி, மெதுவாக எழுந்து, ஜன்னலண் டை நின்று வானத்தைப் பார்த்துக்கொண்டு நின்றாள். மெதுவாக டபூதி தலையை நிமிர்த்திப் பார்க்கும்பொழுது அவள் நின்ற இடத்தைப் பார்த்தான். பேதியாவைக் காணோம். வானத்தில் தங்கமயமான நட்சத்திரந்தான் தெரிந்தது. அதை அவன் அதற்குமுன் பார்த்ததே இல் லை. *****அவன் முன்னால் பாதை வளைந்து வளைந்து புதர்களுக்குள் மறைந்து சென்று பாறைகளை அடைந்தது. டபூதி பாறையில் சாய்ந்து தூரத்தில் தெரியும் சமுத்திரத்தைப் பார்த்தான். அவன் உள்ளத்திலும் உடலிலும் சோர்வு தட்டியது. ஏழு வருஷங்களாக இளவரசியைத் தேடி அலைந்தான். ஏழு வருஷங்களின் சம்பவங்களும் கண்முன் படம் போல் விரிந்து ஓடின. தீவு முழுவதும் தேடியாகிவிட்டது. அந்தத் தங்க மயமான நட்சத்திரம் தான் அவன் நினைவில் இருந்தது. அது தன் னை அவளிடம் சேர்ப்பிக்கும் என்று நம்பினான். அந்த நட்சத்திரம் தன் னை அவளுடன் இறுகப் பிணிப்பதாக நினைத்தான். ஏழு வருஷங்களின் அலைச்சல், அவசியம் அவன் பாவத்தைப் போக்கியிருக்க வேண்டும். அவள் நினைவு வரவர வளர்ந்து பக்திக் காதலாக மாறியது. இராத்திரி இராத்திரியாக நட்சத்திரம் வழிகாட்ட, தீவு தீவாக அலைந்தான். என்ன பயங்கர மனித ஜாதிகள், தலையைக் கொய்து திரியும் தலை வேட்டையாடிகள், தீயில் நடக்கும் மாந்திரீகர்கள், ஐமியோத் தீவில் பாறைகளில் வசிக்கும் ஓணான் மனிதர்கள், மனிதச் சிலைகள் பிரமாண்டமாக நிற்கும் தீவுகள்! எப்பொழுதும் நட்சத்திரம் அகலவே, எட்டவே இருந்தது. பல தடவை மரணத்தைச் சந்தித்தான். தங்கள் தெய்வத்திற்குப் பலி கொடுப்பதற்காக இவனை உயிருடன் பிடிக்கப் பதிவைத்துத் தாக்கிய போர்வீரர்களுடன் போராடி, ஒவ்வொரு அடியையும் திறமையால் தப்பி, படகின் பக்கம் வந்ததும், சுறாமீன் பற்களை அவர்கள் முன்பு வீசித் தப்பித்துக் கொண்டதும் நினைவுக்கு வந்தன. அடுத்த தடவை ரெஹுரெஹு தீவின் தலைவனுடைய மகள் அவனைத் தன்னுடன் இருக்கும்படி மன்றாடியதும், அவன் ஏறக்குறைய இசைந்ததும், அவர்கள் இருவரும் கடற்கரையில் உலாவும் பொழுது நட்சத்திர மீன் அவன் கண்ணில் பட்டதும், அன்றிரவே தோணியில் யாத்திரையை ஆரம்பித்ததும் ஞாபகத்திற்கு வந்தன. உயரே சிகரத்தில் ஏறிக்கொண்டே போனால் நட்சத்திரத்தை அடைய முடியும் என்று காலா காலத்தில் ஒரு யோசனை தோன்றியது. தென் சமுத்திரத் தீவுகளிலேயே மிகவும் உயர்ந்த மலையை ஏறியாகிவிட்டது. இங்கும், அவனது ஆசைக்கும் அவனுக்கும் பழைய தூரமே இருந்தது. பெருமூச்செறிந்து மலையின் உச்சியைப் பார்த்து நடந்தான். வழியும் மெதுவாக உயர்ந்து சென்று செடிகொடியடங்கிய புதருக்குள் மறைந்தது. கை அரிவாளால் வழி செய்து கொண்டு புதர் வழியாக நடந்தான். சில சமயம் மக்கிப்போன மரத்துண்டுகள் சடக்கென்று ஒடிபட்டுக் கீழே விழும். புதரும் தாண்டியாய் விட்டது. எதிரே செங்குத்தான பாறை உயர்ந்து நிமிர்ந்தது. சளைக்காமல் ஏறினான். சூரிய உஷ்ணம் பொசுக்கியது. நாவரண்டது. கடைசியாக பாறையின் உச்சியை அடைந்தான். தென் உலகத்தின் முகட்டின் மேல் நின்றான். அவன் காலடியில், பாதாள லோகம் போல், தீவு கிடந்தது. தூரத்திலே கடலும் வானும் கலந்தன. சூரியன் பொன்மயமான துகிலுடுத்திச் சமுத்திரத்தில் மறைந்தான். உட்கார்ந்து மூச்சுவாங்கினான் டபூதி. அந்தி மாலை இரவாக மயங்கியது. உயரத்திலே, உச்சிக்கு மேல் தங்கமயமான நட்சத்திரம் பிரகாசித்தது - முன்போல்தான் - பழைய தூரந்தான். தலையைக் கைகளில் தாழ்த்தி விம்மி விம்மியழுதான். இரவு முழுதும் பாறையிடுக்கில் ஏமாற்றத்தால் விறைத்துக் கிடந்தான். மறுநாள் சிகரத்திலிருந்து இறங்கினான். இரண்டு நாட்கள் கழித்துக் கடற்கரையை அடைந்தான். அவன் கடற்கரையை அடைந்த பொழுது இருட்டி விட்டது. ஜலத்தின் ஓரத்தில் இருந்த பாறை மீது ஏறி, சந்திரனொளியில் மின்னும் கடல் அலைகளைக் கவனித்தான். நேராகக் குனிந்து தண்ணீரடியில் பார்க்கும்பொழுது, ஜலத்தினடியில் நட்சத்திரம் பிரகாசிப்பதைக் கண்டான். உள்ளத்தில் புது எண்ணம் உதயமாயிற்று. எழுந்தான். மூச்செடுத்து அடக்கி, நட்சத்திரத்தை நோக்கிக் கடலுக்குள் தலை குப்புறப் பாய்ந்தான். சொல்லமுடியாத ஆழம், பவளக் கொடிகளும், இருண்ட ஜல மட்டத்தின் கீழுள்ள குகைகளும் சந்திர ஒளியைப் பிரதிபலித்தன. பிரகாசமான மீன்கள் ஒளித் துண்டங்கள் போல் வளைந்து மின்னி மறைந்தன. ஆழக் குகைக்குள் சென்றான். எங்கும் பவளக் கொடிகள். பிரகாசம் அதிகமாவது போல் தெரிந்தது. பிரம்மாண்டமான மீன்கள் அவன்மீது உராய்ந்து சென்றன. பவளக்கொடிகள் வளைந்து உருமாறி மங்கி வளர்ந்தன. தீ ஒளி வரவரப் பிரகாசமடைந்தது. வெறும் புள்ளியாக இருந்த நட்சத்திரம் பிரம்மாண்டமான ஜோதியாக மாறியது. பூமியை விட, சூரியனை விட, இப்பிரபஞ்சத்தை விட, பிரம்மாண்டமாக வளர்ந்தது. பின் ஒளி மாறியது. அதன் மத்தியிலே பேதியா நட்சத்திர இளவரசி இரு கைகளையும் விரித்து நின்று இவனை வரவேற்றாள்.

புதுமைப்பித்தன் மூலம் மேலும் புத்தகங்கள்

72
கட்டுரைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகள்
0.0
புதுமைப்பித்தன் மொத்தம் 108 சிறுகதைகள் எழுதியுள்ளார். அதில் அவர் காலத்தில் 48 மட்டும் பிரசுரமாயின. 1940-ல் புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. புதுமைப்பித்தன் 98 கதைகளை எழுதியுள்ளார். அவர் மணிக்கொடியில் எழுதிய 29 கதைகளைப் புதுமைப்பித்தன் கதைகள் என்ற பெயரில் நவயுகப் பிரசுராலயம் வெளியிட்டுள்ளது. ஆறுகதைகள், நாசகாரக் கும்பல், பக்த குசலோ என்ற அவரது பிற நூல்களையும் அதே நிறுவனம் வெளியிட்டுள்ளது. கலைமகள் பதிப்பகம் காஞ்சனை தொகுதியையும், ஸ்டார் பிரசுரம் ஆண்மை என்ற தொகுதியையும் வெளியிட்டன. ஐந்திணைப் பதிப்பகம் புதுமைப்பித்தனின் மொத்தச் சிறுகதைகளையும் வெளியிட்டது. அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் புதுமைப்பித்தனின் அனைத்துச் சிறுகதைகளையும் வெளியிட்டுள்ளது.
1

1. ஆஷாட பூதி

2 January 2024
0
0
0

மோலியர் (1622-1673) பதினேழாவது நூற்றாண்டில், பிரான்ஸில் நாடகக்காரன் என்றால், மதம் அவனைத் தள்ளிவைத்தது. பிரார்த்தனை - பிரசாதத்தைப் பெறுவது என்றால் விசேஷ சிபாரிசின் பேரில் நடக்க வேண்டிய காரியம். செத்தால

2

2. ஆட்டுக் குட்டிதான்

2 January 2024
0
0
0

ஜேம்ஸ்ஹானலி – இங்கிலாந்து  செக்கச் செவேலென்றிருக்கும் அந்த பஸ், ஏக இரைச்சலுடன் அந்த வளைவைத் திரும்பியது. சூழ்நிலை தாங்கிய அமைதியான வண்ணக் கலவைகளுக்குச் சவால் கொடுப்பது மாதிரி அந்தச் சிகப்பு கண்களை உற

3

3. அம்மா

2 January 2024
0
0
0

கே. பாயில்  பாதை நெடுகலாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், அதற்குச் சின்னக் கிளை ஒன்றும் இருந்தது. இருந்தாலும் மறுபக்கத்தில் ஓடும் சிற்றோடையில் இறங்கி அக்கரைக்குப் போக வேண்டிய அவசியமே இல் லை. மலை வ

4

4. அந்தப் பையன்

3 January 2024
0
0
0

மாக்ஸிம் கார்க்கி  இந்தச் சின்னக் கதையை எப்படிச் சொல்லுவது என்று புரியவில் லை. அவ்வளவு எளிதானது. நான் வாலிபப் பருவத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் தெருக் குழந்தைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு ஊருக்கு வெளியே

5

5. அஷ்டமாசித்தி

3 January 2024
0
0
0

டென்ஷொ வம்சத்தின் ஆதிக்கத்தின்போது, கியாட்டோ என்ற வடக்குப் பிராந்தியத்தில் குவான்ஷின் கோஜி என்ற வயோதிகன் வாழ்த்து வந்தான். நீண்டு நெஞ்சை மறைக்கும் வெள் ளைத் தாடியுடன், ஷிண்டோ குருக்கள்மார் போல உடையணிந

6

6. ஆசிரியர் ஆராய்ச்சி

3 January 2024
0
0
0

ஸின்கிளேர் லூயிஸ்  டாக்டர் ஸ்லீக் பிரம்மச்சாரி; அதிலும், வழுக்கை விழவிருக்கும் வாலிபப் பிரம்மச்சாரி. அவர் இராஸ்மஸ் கலாசாலையில் சரித்திரமும் பொருளாதாரமும் கற்பித்து வந்தார். அதாவது மேடைமீது ஏறி நின்று

7

7. அதிகாலை ( பகுதி 1)

3 January 2024
0
0
0

நிக்கோலாய் டிக்கனோவ்  1918-ம் வருஷம் ஆகஸ்டு மாதத்தில் துருக்கியர் பாக்கூ என்ற இடத்தை முற்றுகை இட்டார்கள். மென்ஷ்விக் நிர்வாகத் தலைமை போர்டின் ஐந்து தலைவர்கள் மூளையும் சுழன்றது. சர்வ குழப்பம்; அது விஷ

8

7.அதிகாலை (பகுதி 2)

3 January 2024
0
0
0

இராத்திரி ஒரு ஊரில் தங்கினதும், ஆலி ஹஸன், டாஷா பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு சளசளவென்று மணிக்கணக்காகப் பேசிக் கொட்டினான். உத்யோகஸ்தரின் விதவை மெய்ஸ் அரிசி ரொட்டியை அசைபோட்டுக் கொண்டிருந்தாள். வி

9

7. அதிகாலை ( பகுதி 3)

3 January 2024
0
0
0

"பொய்யாயிருக்கலாம், ஆனால் சித்திரவதையில், உன் னைக் காட்டிக்கொடுப்பேன்; என் னைக் காட்டிக்கொடுத்துக் கொள்வேன்; எனக்கு ஞாபகத்துக்கு வந்தவர்களையெல்லாம் காட்டிக்கொடுப்பேன். உனக்குச் சித்திரவதை என்றால் எப்ப

10

7. அதிகாலை (பகுதி 4)

3 January 2024
0
0
0

"ஆஹா அப்படியா. பாக்ஷாதான் வயிற்றுக் கடுப்பால் கழிந்து கொண்டிருக்கிறாரே. இன்னும் கொஞ்ச காலத்துக்கு அவரைப் பற்றித் தொந்திரவில் லை. தவிரவும், உன்னுடைய ஆயுதங்களை உன்னிடம் கொடுத்துவிடவேண்டும் என்று உத்திரவ

11

8. பலி

4 January 2024
1
0
0

ஜோஸப் நையரு – ஹங்கேரி  மோல்டேவியா நோக்கி நிற்கும் மலைச் சிகரங்களிலே அந்த வருஷத்தில் மந்தைகளுக்குக் கரடிகளால் வெகு தொல் லை ஏற்பட்டு வந்தது. வில் - பொறி வைத்து எல்லாம் முயன்று பார்த்ததும் ஒன்றும் பயன்ப

12

9. சித்திரவதை

4 January 2024
1
0
0

எர்னஸ்ட் டாலர்  "உனக்கு இன்னும் ஏதாவது விருப்பம் இருக்குமா?" சாகக் கிடக்கும் வாலிபனைப் பார்த்து ஸ்டட்கார்ட் இரகசியப் போலீஸ் உத்தியோகஸ்தர் இவ்வாறு கேட்டார். வாலிபனுடைய 'வெறிச்சோடிய' கண்கள் ஜன்னலின் கம

13

10. டைமன் கண்ட உண்மை

4 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர் (1564-1616)  ஆங்கில நாடகாசிரியர், ஷேக்ஸ்பியரைத் துவிதப் பிரம்மா என்பார்கள். உலகத்தின் சிருஷ்டி தத்துவத்தைப் புரிந்து கொண்டவர் போல் தமது பாத்திரங்களை நடமாட விடுவார். அவர் உலகில் பேய்களும்

14

11. இனி

4 January 2024
1
0
0

இ. எம். டிலாபீல்ட்  இதுவரை நடக்காததைப் பற்றி ஒரு கதை எழுதினால் என்ன?... அந்தக் கதையின் போக்கில் அறிந்து கொள்ள முடியுமானால்... பதினைந்து இருபது வருடங்களுக்கப்புறம்: ஓல்ட் பெய்லியில் (நியாயஸ்தலம்) நடக்

15

12. இந்தப் பல் விவகாரம்

4 January 2024
1
0
0

மைக்கேல் ஜோஷெங்கோ – ருஷ்யா  எங்கள் சகா எகோரிச்சுக்குப் பல், தொந்திரவு கொடுத்து வந்தது. என்ன காரணத்தினாலோ விழ ஆரம்பித்தது. காலம் என்ற ஒன்று இருக்கே, அதற்கும் இந்த விவகாரத்துக்கும் சம்பந்தமிருக்கலாம்.

16

13. இஷ்ட சித்தி ( பகுதி 1)

4 January 2024
1
0
0

ஹான்ஸ் பலாடா – ஜெர்மனி  முதலிலேயே தெரிவித்து விடுகிறேன். அப்புறம் குறை சொல்லாதீர்கள். என் மனைவி பெயர் இட்ஸன் பிளாஸ். உச்சரிப்பதற்குக் கொஞ்சம் சிரமந்தான்; ஆனால் அவள் மீது இருந்த ஆசையில், அதன் சிரமம் எ

17

13. இஷ்ட சித்தி ( பகுதி 2)

4 January 2024
1
0
0

"பின்பு கிரிஸ்மஸ் சமயத்தில் அதை உடைத்து... பிறகு என்னவென்பது உங்களுக்குத்தான் தெரியுமே!" என்றாள்! "உனக்கென்ன பைத்தியமா? இந்த வருஷம் போனஸ் கீனஸ் கிடையாது என்று ஹீபர் சொல்லுகிறான். முதலாளி வருமானம் இல்

18

14. காதல் கதை

5 January 2024
1
0
0

வில்லியம் ஸரோயன்  "இந்தப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுகிறீரா அல்லது அந்தப் பக்கமாக உட்காருகிறீரா?" என்று சிகப்புக் குல்லா* கேட்டான். (* நம்மூர்களில் சிகப்புத் தலைப்பாய் என்றால் போலீஸ்காரன் என்பது

19

15. கலப்பு மணம்

5 January 2024
1
0
0

கிரேஸியா டெலாடா – இத்தாலி  அன்றிரவு சுகமாக இருந்தது. பூலோகத்தைக் கடுங்குளிரினால் சித்திரவதை செய்வதில் சலியாத உறைபனிக் காலத்துக்கும் ஒரு ஓய்வு உண்டு என்பதை அந்த ஏப்ரல் இரவு காட்டியது. இதுவரை பனிக்கட்ட

20

16. கனவு (பகுதி 1)

5 January 2024
1
0
0

ஐவான் டர்ஜனீப் – ருஷியா அந்தக் காலத்தில் நான் என் தாயாருடன் ஒரு சிறு துறைமுகப் பட்டினத்தில் வசித்து வந்தேன். எனக்கு அப்பொழுதுதான் பதினேழு வயது நிரம்பிற்று. தாயாருக்கு முப்பத்தைந்து வயது. சின்ன வயதிலே

21

16. கனவு ( பகுதி 2)

5 January 2024
1
0
0

8 என் தாய் எனக்குக் கூறிய கதை எனதுள்ளத்தை எப்படிச் சிதறடித்தது! முதல் வார்த்தையிலிருந்தே அறிந்து கொண்டேன். அவள் வாயிலிருந்து தவறுதலாக நழுவிய வார்த்தை எனது உத்தேசத்தைத் திடப்படுத்தியது. எனது கனவில் நா

22

17. காரையில் கண்ட முகம்

5 January 2024
1
0
0

இ.வி. லூக்காஸ் – இங்கிலாந்து  நேற்று சாயங்காலம் எனது நண்பன் டாப்னி வீட்டில் நடந்ததை மறக்க முடியவில்லை. அந்த அநுபவம் இன்னும் என் னை உறுத்திக் கொண்டிருக்கிறது. அன்றைய தினம் பேச்சு பூத பைசாசங்களைப் பற்ற

23

18. கிழவி

5 January 2024
1
0
0

ஸெல்மாலேகர்லாப் – ஸ்வீடன்  மலைப்பாதை வழியாக ஒரு கிழவி நடந்து கொண்டிருந்தாள். மெலிந்து குறுகியவள்தான். எனினும் முகத்தின் வண்ணம் வாடவில்லை. சதைக் கோளங்கள் மரத்துத் தொய்ந்து திரித் திரியாகத் தொங்கவில்லை

24

19. லதீபா

6 January 2024
0
0
0

மோஷி ஸ்மிலான் ஸ்கி  "லதீபாவின் கண்களை நீ பார்த்திருக்காவிட்டால், கண்களுக்கு எவ்வளவு அழகு இருக்க முடியும் என்பது உனக்குத் தெரிந்தே இருக்காது." இப்படி நான் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம். ச

25

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்( பகுதி 1)

6 January 2024
0
0
0

1 அவர்களுடைய மூத்த பெண்ணின் படிப்பு அடுத்த மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது. வயசும் 'அப்படி இப்படி' என்று சீக்கிரத்தில் பதினெட்டு ஆகிவிடும். டோ க்கியோவிலேயே நாகரீகத்திற்குப் பெயர் போன இடத்தில் நிலம் வாங

26

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்(பகுதி 2)

6 January 2024
0
0
0

5 வரன்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுவதற்கு நாள் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு 'கபூக்கி' நாடகக் கொட்டகையில் தரகர் இரண்டு 'பாக்ஸ்' களை அமர்த்தினார்; இரண்டு குடும்பங்களும் பக்கத்த

27

21. மணிமந்திரத் தீவு

6 January 2024
0
0
0

ஷேக்ஸ்பியர்  நடுக்கடலிலே நாலைந்து கப்பல்கள் தத்தளித்துத் தடுமாறுகின்றன. கடலலைகள் சினங்கொண்ட கருநாகங்கள் போல ஆயிரமாயிரமாகப் படம் விரித்துத் தலை சுற்றி மோதுகின்றன. உயிரை வாங்கவரும் கால தூதர்களின் கோரச்

28

22. மணியோசை

6 January 2024
0
0
0

ஜப்பான்  "நான் சாவதற்குப் பயப்படவில் லை" என்றாள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மனைவி. "இப்பொழுது என் கவலை எல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நான் போன பிறகு யாரைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?" வேதனை

29

23. மார்க்ஹீம்

6 January 2024
0
0
0

ஆர்.எஸ். ஸ்டீவன்ஸன் – இங்கிலாந்து  "ஆமாம்! எங்கள் வியாபாரத்திலே பலவிதம் உண்டு; வாங்க வருகிறவர்களில் சிலருக்கு ஒன்றுமே தெரியாது; வெறும் 'அப்பாவிகள்'. அப்பொழுது எங்கள் அநுபவத்திற்கு ஏற்ற லாபத்தைப் பெறு

30

24. மிளிஸ்

8 January 2024
0
0
0

பிரட் ஹார்ட் – அமெரிக்கா  ஸிராநிவாடா மலைத் தொடரில் சமவெளிக்குப் பக்கத்தில் இருக்கும் சிவந்த மலைகளில்தான் "ஸ்மித் பாக்கெட்" என்ற இடம் இருக்கிறது. அது ஒரு சுரங்க ஸ்தலம். அதாவது ஒரு காலத்தில் தங்கம் இரு

31

25. முதலும் முடிவும் ( பகுதி 1)

8 January 2024
0
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  மாலை ஆறு மணியிருக்கும். அந்த அறையில் சுமாரான இருட்டு. 'பச்சை ஷேட்' போட்ட மேஜையின் மீதிருந்த ஒற்றை விளக்கு, தரையில் விரித்த துருக்கிக் கம்பளத்திலும், மேஜையின் மீது சிதறிக் கிடந்த,

32

25. முதலும் முடிவும் ( பகுதி 2)

8 January 2024
0
0
0

"பிரேதத்தின் மேலிருந்த எதையும் எடுத்தாயா?" "நாங்கள் சண்டை போட்டுக் கொள்ளும்பொழுது இது அவன் பையிலிருந்து விழுந்தது." அது வெறும் தபால் கவர். தென் அமெரிக்கத் தபால் குறியிட்டு, "பாகட்ரிக் வாலன், ஸைமன் ஓட்

33

26. நாடகக்காரி

8 January 2024
0
0
0

ஆண்டன் ஷெக்காவ் – ருஷியா  அவள் ஒரு நாடகக்காரி. அந்தக் காலத்திலே அவளுக்கு யௌவனக் களை மாறவில் லை. குரல் கணீர் என்று இருக்கும். பலர் வந்து போவார்கள். ஆனால் குறிப்பாக நிக்கோலாய் பெட்ரோவிச் கோல்ப்பக்கோவ்

34

27. நட்சத்திர இளவரசி

8 January 2024
0
0
0

ஒரு ஆசிரியர் - தென் கடல் தீவுகள்  "நம்மிடம் இருப்பதையெல்லாம் சாப்பிட்டு விடுவோம்" என்றான் டபூதி. அவனது சகோதரனான அய்ட்டோ சந்தேகத்துடன் ஏறிட்டுப் பார்த்தான். "அப்படியானால் நமக்கு மிகுந்த பலம் உண்டாகிவி

35

28. ஓம் சாந்தி! சாந்தி!

8 January 2024
1
0
0

எலியா எஹ்ரன் பர்க்  (யுத்தம் மனித சமூகத்தின் 'உடனுறை நோயாகவே' இருந்து வருகிறது. தனது தற்காப்புக்காக மனிதன் சமூகம் என்ற ஒரு ஸ்தாபனத்தை வகுத்தான்; பிறகு அதனைக் காப்பாற்றத் தன் னைப் பலிகொடுக்கத் தயாரானா

36

29. ஒரு கட்டுக்கதை

9 January 2024
0
0
0

பிரான்ஸ் காப்கா – ஆஸ்திரியா  எலி சொல்லுகிறது... "ஐயோ, உலகம் தினம் தினம் எவ்வளவு சின்னதாகிக் கொண்டே வருகிறது! முதலில் ரொம்பப் பெரிதாக, நான் பயப்படும்படியாக, அவ்வளவு பெரிதாக இருந்தது. நான் ஓடிக்கொண்டே

37

30. ஒருவனும் ஒருத்தியும்

9 January 2024
0
0
0

லூயிகய்ல்லூ – பிரான்ஸ்  மச்சுப் படிக்கட்டு முற்றத்தில் இறங்கியது. அங்கே, அதாவது கடைசிப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, அன்று காலை முழுவதும் அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் ரொம்பவும் நெட்டை. ஒற்றை ந

38

31. பைத்தியக்காரி

9 January 2024
0
0
0

மொப்பஸான் – பிரான்ஸ்  "ஆமாம், நீ சொல்வது முன்பு பிரான்சிற்கும் ருஷியாவிற்கும் சண் டை நடந்ததே, அப்பொழுது நடந்த பயங்கரமான சம்பவத்தை என் நினைவிற்குக் கொண்டு வருகிறது" என்று கூறத் தொடங்கினார் முஸே டி' என

39

32. பளிங்குச் சிலை

9 January 2024
0
0
0

வாலரி புருஸ்ஸாப் வாலரி புருஸ்ஸாப் (1875-1924) புரட்சி யுகமான நவீன காலத்து ருஷ்யப் புது எழுத்தாளர் கோஷ்டியைச் சேர்ந்தவர். இந்தக் கதை புரட்சிக்கு முந்திய காலத்தைப் பகைப் புலமாகக் கொண்டு, எழுந்த கற்பனைக

40

33. பால்தஸார் (பகுதி 1)

9 January 2024
0
0
0

அனதோல் பிரான்ஸ் – பிரான்ஸ்  "கிழக்கே அரசர்களுக்கு மந்திர சக்தியுண்டு என்று நினைத்தார்கள்" -தெர்த்தூலியன் அக்காலத்திலே எதியோபியாவை பால்தஸார் ஆண்டு வந்தான். கிரேக்கர் அவனை ஸாரஸின் என்று அழைத்தனர். அவன்

41

33. பால்தஸார்( பகுதி 2)

9 January 2024
0
0
0

ஜனநடமாட்டமில்லாத பாலைப் பிரதேசங்களில் மத்தியானம் வரை நடந்தனர். உச்சியில் சூரியன் வந்ததும், திருடர்கள் கைதிகளை விடுவித்து, பாறையின் நிழலில் உட்காரச் சொல்லி, கெட்டுப்போன ரொட்டித் துண் டைக் கொடுத்தனர். ப

42

34. பொய்

9 January 2024
0
0
0

லியேனீட் ஆன்ட்ரீவ் – ருஷியா  "நீ சொல்வது பொய், அது உனக்குத் தெரியும்!" "அதற்கேன் இப்படிக் கத்தவேண்டும்? பக்கத்திலிருக்கிறவர்களுக்கும் தெரிய வேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது." இப்பொழுதும் பொய் சொன்னாள்

43

35. பூச்சாண்டியின் மகள்

10 January 2024
0
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து  அவள் பெயர் பத்தேமா. அவள் பாக்தாத் நகர் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தாள். அவள் நீலத்தாடிவாலாவின் புதல்வி. கண்டதும் காம வெறியை எழுப்பும் மோகனாங்கி. அவளது மதி முகத்தின் வ

44

36. ராஜ்ய உபாதை( பகுதி 1)

10 January 2024
0
0
0

ஹென்றிக் இப்ஸன் (1828-1906)  ஷேக்ஸ்பியருக்கு நிகராக உலகம் கொண்டாடும் சிறந்த நாடக ஆசிரியர் ஹென்ரிக் இப்ஸன். தர்மத்துக்கு வெற்றி அளித்தார் ஷேக்ஸ்பியர்; தர்மம் ஏன் வெற்றி பெற வேண்டும் என்ற கேள்வியை எழுப

45

ராஜ்ய உபாதை( பகுதி 2)

10 January 2024
0
0
0

"அந்தக் கடிதம்..."  "இரு இரு, விரோதிகளைப் பற்றி நான் ஒரு பட்டியல் கொடுத்தேனே. நீ அதிகாரத்தை விடத் தயாராக இருப்பதுபோல நானும் என் எதிரிகளை மன்னிக்க ஆசைப்படுகிறேன். அந்தப் பட்டியலை இந்த நெருப்பில் போட்ட

46

37. ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு

10 January 2024
0
0
0

நதானியேல் ஹாதார்ண் – அமெரிக்கா  எல்லைப்புறத்தைப் பாதுகாப்பதற்காக 1725-ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்ட படையெடுப்பு சரித்திரத்திலேயே கற்பனைக்கு இடந்தரும் பகுதி. அதை எல்லாரும் சாதாரணமாக 'லவல் சண்டை' என்று கூற

47

38. சாராயப் பீப்பாய்

10 January 2024
0
0
0

எட்கார் அல்லன் போ – அமெரிக்கா  அவன் ஆயிரம் குற்றங்களைச் செய்தான்; ஆனால் என்னால் இயன்றவரை பொறுத்தேன். அவன் என் னைத் திட்டி அவமதித்தான். இனி, பழிக்குப் பழி தீர்க்க வேண்டியதுதான் என்று மன உறுதி கொண்டேன்

48

39. சகோதரர்கள்

10 January 2024
0
0
0

யூஜோ யாம மோட்டோ – ஜப்பான்  'அண்ணா, இது நல்லதுதானே?' 'எங்கே, இப்படிக் கொண்டா பார்ப்போம்' என்று மூத்தவன் தன்னிடம் காட்டப்பட்ட காளானைப் பார்ப்பதற்காகத் திரும்பினான். 'ஊங் ஹும், நல்லதில் லை; நான் பிடுங்க

49

40. சமத்துவம்

10 January 2024
0
0
0

ஒரு ருஷிய ஆசிரியர்  நீலக் கடலின் அடிமட்டத்திலே, பிரமாண்டமான மீன் ஒன்று, இரை தேடிக்கொண்டு, உல்லாசமாக நீந்தி வருகிறது. எதிரே ஒரு சின்ன மீன் - அதன் உணவு. பெரிய மீன் அதை விழுங்குவதற்காக, தன் வாயை அகலத் த

50

41. ஷெஹர்ஜாதி - கதை சொல்லி

11 January 2024
0
0
0

ஹென்றி டிரெக்னியர் – பிரான்ஸ்அன்று இரவு ஷெஹர்ஜாதி நன்றாகத் தூங்கவேயில் லை. பகல் முழுவதும் சுட்டுப் பொசுக்கும் வெய்யில். அதனால் மூச்சுவிடக்கூட முடியாதபடி அவ்வளவு இறுக்கமாக இருந்தது. சிலந்தி வலையையும் த

51

42. சிரித்த முகக்காரன்

11 January 2024
0
0
0

அவன் சோகமாக இருக்கிறான், தனியாக இருக்கிறான் என்று சொல்லிவிடுவது எளிது; ஆனால் அவன் எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்தோடேயே இருக்கிறான். அப்படிச் சொல்லிவிட்டாலும், அவனைப் பாட்டிலில் போட்டு அடைத்து லே

52

43. சூனியக்காரி

11 January 2024
1
0
0

ரோனால்டு ஆக்டன் – இங்கிலாந்து அப்பொழுது இலையுதிர் காலம். நானும் ஜேக் மக்கின்ஸனும் பக்கத்து மிராசுதாருடைய காட்டில் திருட்டுத்தனமாகக் கண்ணி வைத்து வேட்டையாடச் சென்றோம். அவனுக்கு வயது இருபதுக்கு மேல

53

44. சுவரில் வழி

11 January 2024
0
0
0

ஆர். முரே கில்கிரைஸ்– இங்கிலாந்து அன்று முற்பகல் சிறிது உஷ்ணமாகவே இருந்தது. பசும்புல் செழித்து வளர்ந்த மைதான வெளியில், ஆங்காங்கு குத்துக்குத்தாகப் பெயர் தெரியாத புஷ்பங்கள் எல்லாம் கணக்கற்று

54

45. தாயில்லாக் குழந்தைகள்

11 January 2024
0
0
0

பிரான்ஸிஸ் பெல்லர்பி – இங்கிலாந்து வேர்த்து விருவிருக்க, கால்கள் தள்ளாட, இரண்டு குழந்தைகள் நடந்து சென்றன. பையன், பதினொரு வயசிருக்கும். முன்னால் நடந்தான். பெண் எட்டு வயசுபோல இருக்கும். பாதை முன் ம

55

46. தையல் மிஷின்

11 January 2024
0
0
0

இவான் கூம்ஸ் அங்கு மனிதனைத் தூங்காது விழிக்க வைத்திருக்க ஒருவித சந்தடியும் கிடையாது. இருந்தாலும், அந்தச் சிறிய கட்டிலில் சுருண்டு முடங்கிக்கொண்டு, நெடுநேரமாக நிசப்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

56

47. தந்தை மகற்காற்றும் உதவி

11 January 2024
1
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து டான் ஜுவான் தன் மாளிகையில் விருந்து மண்டபத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று தரை வெடித்தது. நரக தூதர்கள் வந்து அவனை இழுத்துக் கொண்டு போய் விட்டார்கள்

57

48. தெய்வம் கொடுத்த வரம்

12 January 2024
1
0
0

பியோர்ண்ஸ்டர்ண் பியோர்ண்ஸன் – ஸ்வீடன்  இந்தக் கதையில் வருகிறவன் தான் அவனுடைய ஊரிலேயே ரொம்பவும் பெரிய பணக்காரன். தவிரவும் அந்த வட்டாரத்திலே அவனுக்குத்தான் ரொம்பவும் சொல் சக்தி உண்டு. அவன் பெயர் தார்ட்

58

49. தேசிய கீதம் (பகுதி 1)

12 January 2024
0
0
0

எல்.ஏ.ஜி. ஸ்டராங் – இங்கிலாந்து  லாரி நிறையத் துருப்புக்கள் கன வேகமாகச் சென்று சில விநாடிகள் கூடக் கழியவில் லை. அது இப்பொழுதுதான் நிகழ்ந்தது. வெடியின் அதிர்ச்சி பரீலியை அப்படியே கலங்க வைத்துவிட்டது.

59

49. தேசிய கீதம் (பகுதி 2)

12 January 2024
0
0
0

ஆம். அமெரிக்காவில் ஓர் பெருத்த வெற்றி. நியூயார்க்கில் இரண்டு ஆட்டம்; பிறகு அமெரிக்கா முழுவதிலும் ஓர் நீண்ட வெற்றி யாத்திரை; முடிவில் ஹாலிவுட்டில் ஒரு பிலிம்; சமாதானம் ஏற்பட்ட இரண்டொரு மாதங்களுக்கப்புற

60

49. தேசிய கீதம் (பகுதி 3)

12 January 2024
0
0
0

இந்தச் சம்பவம் பரீலியின் கோபத்தை அதிகரித்தது; ஆனால் பொதுப்படையாக்கியது. இதுவரை தன் தேசவாசிகளான புரட்சிக்காரர் மீது கோபங்கொண்டிருந்தான். இப்பொழுதோ இந்த இடத்தின் பேரிலேயே கோபம். அவன் நெஞ்சில் ஆழமாகப் பய

61

50. துன்பத்திற்கு மாற்று

12 January 2024
1
0
0

ஸீனர் லூயிஜி பிரான்டல்லோ – இத்தாலி  நமது வாழ்க்கையை, முக்கியமாக அதில் காணும் துன்பங்களை, வான வெளியிலே தேஜோமயமாகச் சுழன்று செல்லும் நட்சத்திர மண்டலங்களுடன் ஒப்பிட்டுப்பாரும், அப்பொழுது அது துச்சமாகத்

62

51. துறவி

12 January 2024
0
0
0

ராபர்ட் நியூமான் – ஜெர்மனி  "நான் முதல் முதலில் ஐரோப்பாவிலிருந்து இந்தக் கீழப் பிரதேசங்களுக்கு வந்தபொழுது அது நடந்தது" என்று அவன் ஆரம்பித்தான். அவன் எங்கள் கப்பலின் காப்டன்; பெயர் வான்டர்லான். ஜாதியி

63

52. உயிர் ஆசை (பகுதி 1)

13 January 2024
1
0
0

ஜாக் லண்டன் – அமெரிக்கா  அவர்கள் இருவரும் நொண்டி, நொண்டி ஆற்றங்கரை வழியாகத் தள்ளாடி நடந்தார்கள். கத்தி போல ஊசியாக, தெத்துக்குத்தாகக் கிடந்த பருக்கைக் கற்கள் காலை வெட்டின. அவர்களிருவரும் சோர்ந்து விட்

64

52. உயிர் ஆசை (பகுதி 2)

13 January 2024
1
0
0

நாட்களும் ஓடின. காட்டு ஜீவராசிகள் ஓடியாடித் திரியும் பள்ளத்தாக்குகளை அடைந்தான். மான் கூட்டம் ஒன்று. இருபது இருக்கும். துப்பாக்கி லெக்குக்கு ரொம்பவும் அருகில் துள்ளி ஓடின. அவற்றை விரட்டிக் கொண்டே ஓடினா

65

52. உயிர் ஆசை (பகுதி 3)

13 January 2024
1
0
0

பாறை மீது படுத்துக் கிடந்தவன் சுயப் பிரக்ஞையுடன் விழித்துக் கொண்டான். சூரியன் காய்ந்து கொண்டிருந்தது. காட்டு மான்குட்டிகளின் சப்தமும் தூரத்தில் கேட்டது. சித்தத்தின் அடிவானத்தில் மழையும் காற்றும் பனியு

66

53. வீடு திரும்பல்

13 January 2024
1
0
0

பீட்டர் எக் – நார்வே  மாலுமி பெடர் ஸோல்பர்க்குடைய மனைவி வசித்த குடிசை, ஜனங்கள் பொதுவாக 'லூக்கள் தெரு' என்று சொல்லுவார்களே, அதற்கெதிரில் இருக்கிறது. குடிசையின் ஜன்னல் நன்றாகத் திறந்திருந்தது. அப்பொழுத

67

54. ஏ படகுக்காரா!

13 January 2024
1
0
0

மிக்கெய்ல் ஷோலொகோவ்  அந்த காஸக் கிராமத்தைச் சூழ்ந்து வளர்ந்து நின்ற சாம்பல் பூத்த பசிய நிறம் படைத்த செடிச் செறிவின்மீது சூரியவொளி தெம்பாக விழவில் லை. அருகே ஒரு பரிசல் துறை இருந்தது. அங்கே படகேறி டான்

68

55. யாத்திரை

13 January 2024
1
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  நான் ஹாமர்ஸ்மித் பஸ்ஸின் மேல்தட்டிலிருந்து பார்க்கும் பொழுது, அவர்கள் ஆல்பர்ட் ஹால் மெமோரியல் எதிரில் இருந்த ஒரு வீட்டு வாசல்படியில் உட்கார்ந்திருந்தனர். அன்று வெகு உஷ்ணம். வாடகை

69

56. எமனை ஏமாற்ற...

13 January 2024
1
0
0

மொங்காக்கு ஷோனின் என்ற மகடனான புத்த பிக்ஷு தான் எழுதியுள்ள கியோ-ஜியோ-ஷிந்ஷோ என்ற கிரந்தத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: "ஜனங்கள் வழிபடும் தெய்வங்களில் பல துர்தேவதைகளாகும். அவலோகிதன், தர்மம், பிக்ஷுக்கள

70

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்

13 January 2024
1
0
0

தாமஸ் வுல்ப் – அமெரிக்கா  ஈவிரக்கமற்றுக் கொதிக்கும் அந்த வருஷம் ஆகஸ்டில் யுத்தம் நின்றது. யுத்த தேவதையின் பவனியின்போது நான்கு கணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஒன்று லாங்லிவியல்; விமான மைதானத்தில் உள்ள குத

71

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்(பகுதி 2)

13 January 2024
1
0
0

தயங்கித் தயங்கி மறியும் உடலொட்டிய இந்த வேட்கை, தங்கள் ஜோலியைச் செய்து இவர்கள் நடாத்தும் வாழ்வினிடையிலும் வெளிக்கு அகோரக் கேலிக் கூத்தாகத் தோன்றினாலும், மேஜைக்கு மேஜை போஷகர் தேடி நடக்கும்போது சர்வ ஜாக்

72

58. தர்ம தேவதையின் துரும்பு

13 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர்  குரலிலே அதிகார தோரணையும் அதனுடன் பயமும் கலந்திருந்தது. கடுங்குளிரிலே, இருட்டின் திரைக்குள்ளே, ஈட்டிபோலப் பாய்ந்தது அக்குரல். 'நீ யார்? முதலில் அதைச் சொல்' என்று பதில் கேள்வி பிறந்தது, தி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்