நிக்கோலாய் டிக்கனோவ்
1918-ம் வருஷம் ஆகஸ்டு மாதத்தில் துருக்கியர் பாக்கூ என்ற இடத்தை முற்றுகை இட்டார்கள். மென்ஷ்விக் நிர்வாகத் தலைமை போர்டின் ஐந்து தலைவர்கள் மூளையும் சுழன்றது. சர்வ குழப்பம்; அது விஷயத்தைப் புரிந்து கொண்ட பிரமையைத் தோற்றுவிக்கும் ஒருவித வெளிச்சக் குழப்பம்; ஆயுதபாணிகளாகப் பலர் நகரத்துக்கு உள்ளேயும், உள்ளிருந்து வெளியேயும் ஓடிக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் ரணகளத்துக்குப் போகிறார்களோ அல்லது அங்கிருந்துதான் வருகிறார்களா என்பது தெளிவுபடவில் லை. குட்டித்தளம் ஒன்று கூபூஜில்லாவுக்கு அனுப்பப்பட்டது. அதன் உத்தியோகம் ஓடிப்போன முஸல்மான் குடியானவர்களை ஊருக்குத் திரும்பி வந்து வீடும் குடித்தனமுமாகக் குடியிருந்து, ஏற்கனவே காற்றைப் புசித்து ஜீவித்து வரும் பாக்கூ வாசிகளுக்குத் தானியச் சாகுபடி செய்யும்படி தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இந்தத் தளமானது எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் வீதாச்சாரமிட்டது போல அதன் எண்ணிக்கை தேய்ந்துகொண்டு வந்தது. நிர்வாக இலாகா போட்ட உத்தரவைக் காற்றுவாக்கில் விட்டுவிட்டு, தன் தன் காரியத்தைப் பார்த்துக்கொண்டு நடையைக் கட்டி விடுவதிலேயே அதிகக் கவனம் காட்டினார்கள் அந்தத் தளத்தைச் சேர்ந்தவர்கள். மாஜி பாங்கி குமாஸ்தாவும் சோல்ஜருமான குருட்டிக்காவ் என்பவன் தன்னால் முடிந்தவரை அந்தத் தளத்தை நடத்திக்கொண்டு போனான். ஒருநாள் மாலை அந்தத் தளம் மலைச்சரிவின் அருகாமையில் போகும்போது துருக்கியர் அதைச் சூழ்ந்து கொண்டார்கள். திக்காலுக்கொன்றாக இரண்டொரு முறை சுட்ட பிறகு, குருட்டிக்காவ் தளத்துடன் வந்த ஏக ஸ்திரி ஜாதியான டாஷாவைப் பார்த்து தன்னுடைய மொண் ணைக் கத்தியின் முனையில் அவள் வசமிருந்த மிகவும் வெண் மையான கைக்குட்டையைக் கட்டச் சொன்னான். வைதுகொண்டும், சபித்துக்கொண்டும், அவனுடைய சோல்ஜர்கள், துருக்கியத் துருப்புக்களைத் தொடர்ந்து காலையிழுத்துப் போட்டனர்; துருக்கியத் துருப்புகளின் சோர்வுக்கும் குறைவில் லை. துருக்கிய உதவித் தளபதி நீலக்கண்ணாடி அணிந்து ஒற்றன் மாதிரி விளங்கும் செம்பட்டைச் சிகையுள்ள மனிதன். அவன் குருட்டிக்காவையும் அவனுடையை உதவித் தளபதியையும் டாஷாவையும் தணிந்து தஞ்சமான கூறையுடைய வீட்டுக்குள் அழைத்துச் சென்றான். கருக்கல் வெளிச்சம் இயங்கும் ஒரு அறைக்குள் நுழைந்தார்கள். அதன் மத்தியில் உள்ள மேஜைமீது தடியான ரபிவே மெழுகுவர்த்தி குத்தி நிறுத்தப்பட்டு எரிந்து வழிந்தது. வர்த்தி வெளிச்சத்தைச் சூழ இதர கைதிகளும் உட்கார்ந்திருந்தார்கள். இந்தத் தளத்துடன் வந்த விவசாய நிபுணன், ஒரு தபால் உத்தியோகஸ்தர், ஒரு உத்தியோகஸ்தரின் விதவை - இவள் மட்டும் மெய்ஸ் அரிசி வைத்துச் செய்த பெரிய ரொட்டித் துண் டை சர்வ சம்மாரம் செய்துகொண்டிருந்தாள் - எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். "மறுபடியும் சண் டைக் கெடுபிடியைப் பார்க்கிறோம், அன்ட்ரூய்ஷா" என்று டாஷா வெகு உற்சாகமாகச் சொல்லிக்கொண்டு, தன் பைக்குள்ளிருந்த சின்ன முகக் கண்ணாடிக்காகத் துழாவினாள். குருட்டிக்காவின் முழுப் பெயர் அன்ட்ரூய்ஷா குருட்டிக்காவ். கழுத்தைச் சுற்றி அணிந்திருந்த கம்பிபோட்ட கைக்குட்டையை அவிழ்த்தான். ஆனால் கொஞ்ச நேரத்துக்குள் குளிர் உறைக்க ஆரம்பித்ததினால், அதை மறுபடியும் கட்டிக்கொண்டான். காலைத் தூக்கி பூட்ஸில் படிந்திருந்த புழுதியைக் கந்தை ஒன்று கொண்டு துடைத்தான். குருட்டிக்காவ் அறையில் அங்குமிங்குமாக நடைபோட்டுக் கொண்டிருந்தான். இரட்டைக் குழல் தூரதிருஷ்டிக் கண்ணாடி ஒன்று கழுத்தைச் சுற்றிய வாரில் தொங்கி அவனுடைய நெஞ்சில் இடித்துக் கொண்டிருந்தது. அவனிடமிருந்த ஆயுதங்களெல்லாம் பிடுங்கிவிட்டார்கள். "என் இஷ்டப்படி, எனக்கே எனக்கு என்று நான் சொல்லிக்கொள்ளக்கூடிய நிலைமையில் வாழுவதுதான் என் விருப்பம். என் னை ஏன் பாங்கியிலிருந்து இழுத்துப் போட்டார்கள்? நான், - குருட்டிக்காவ் - என்ன சோல்ஜரா? என் னை, என்ன நெப்போலியன் என்று கெரன்ஸ்கி என்று நினைத்துக்கொண்டார்களா? கடைசியாகப் பித்துக்குளித்தனமாக அகப்பட்டுக்கொண்டு முழிக்கிறேன். என்னமோ ஜெர்மன்காரன் பெட்ரோகிராடைப் பிடித்துக்கொண்டார்கள் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். பிடித்துக்கொள்ளட்டுமே, எனக்கென்ன, என் னைச் சும்மா விட்டுவிடுன்னுதானே கேட்கிறேன். சமயத்திலே வெள் ளைக் கொடியைக் காட்டியிருக்காது போனால் என் னைக் கொன்றே போட்டிருப்பார்கள். அது ஒனக்கு எப்படியிருக்கும்? எனக்கென்னமோ பிடிக்கல்லே..." என்று ஆத்திரத்தை உலுப்பி கொட்டிக் கொண்டிருந்தான். "அன்ட்ரூய்ஷா, ஆத்திரப்படாதே. இந்தா ஒரு முத்தம் வேணும்னாலும் வாங்கிக்கோ. இம்மாதிரி அகப்பட்டுக் கொள்கிறது வேடிக்கையாக இல் லை" என்றாள் டாஷா. "வேடிக்கையா வித்தாரமா, நாவல் படிச்சுப் படிச்சு இந்தப் பெண்டுக மூளையைக் கரியடுப்லேதான் போடணும்" என்று குருட்டிக்காவ் கூச்சல் போட்டான். அந்தச் சமயத்தில், இவனைச் சிறைப் பிடித்த துருக்கிய ராணுவ உத்தியோகஸ்தர் உள்ளே நுழைந்தார். "அந்த தூரதிருஷ்டிக் கண்ணாடியைக் கொடுத்து விடு. அது ராணுவ சொத்து"ன்னு ரஷ்ய பாஷையில் முரட்டுத் தனமாகச் சொன்னான். "ஏன்? என் கால்சட்டை எடுத்துக்கோ, என் பூட்ஸை எடுத்துக்கோ, என் தொப்பியை எடுத்துக்கோ, அதுவும் ராணுவச் சொத்துதான்" என்று கத்திக் கொண்டு குருட்டிக்காவ் குதித்தான். "உனக்கு வெட்கமில் லையா? தூரதிருஷ்டிக் கண்ணாடியை வச்சுக்கொண்டு யாரையாவது சுட முடியுமா" என்றாள் டாஷா. துருக்கியன் முகத்தில் அசட்டுக்களை தட்டியது. அவளுக்குப் பதில் சொல்லப்போவது போல, டாஷாவையே விரைத்துப் பார்த்தான். "பாக்ஷா, கூப்பிடுகிறார் வா, நட" என்று உத்தரவு போட்டான். அவனுடைய கண்கள் நீலக் கண்ணாடிக்குப் பின்னால் கொந்தளித்தன. பாக்ஷா பாசறை நடுவில் போடப்பட்ட நெருப்புக்கு எதிரே மடக்கு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவருக்கு எதிரே பிரபல ஷெய்க் ஒருவர் உட்கார்ந்திருந்தார். பிரபல அரபு பண்டிதர், பெயர் நாஷிமுத்தீன் ஹாட்ஸின்ஸ்கி. பாக்ஷாவானவர் நாஷிமுத்தீன் கையைப் பார்த்துக் கொண்டிருந்தார். நாஷிமுத்தீன் சந்தேகத்துடன், தலையசைத்து ஆமோதித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். "ரேகை சாஸ்திரம் வருங்காலக் குழப்பம் பற்றியது" என்று தொடர்ந்து பேசிக்கொண்டு போனார் பாக்ஷா. ஆனால் குருட்டிக்காவ் முகம் சுழிப்பதைக் கண்டு கொண்டார். நீலக் கண்ணாடிகளையும் பார்த்தார். தலையை நிமிர்த்தி நெருப்புக்கு மறுபுறம் பார்வையைச் செலுத்தி மடமடவென்றும் அமைதியாகவும் சில வார்த்தைகளைச் சொன்னார். "பாஷா, உன் வசம் இருக்கும் சம்பளத் தொகையை ஒப்புவித்து விடும்படி உத்தரவு போடுகிறார்" என்று தர்ஜமா செய்தான் நீலக்கண்ணாடிக்காரன். "யாரிடம் ஒப்புக் கொடுக்க? வேண்டுமானால் பாங்கியில் என் ஆபீஸ் அறையில் 20-ந் தேதி வந்து என் னைப் பார். இங்கே நான் யாரிடம் கொடுக்கிறது? அது கிடக்கட்டும் எப்படிக் கொடுப்பது? எனக்கு இரண்டு கட்சியும் ஒன்றுதான். இப்படியிருக்கும்போது என் னை ஏன் இந்தக் கேள்வியைப் போட்டு வதைக்கிறீர்கள்? கேட்கிறதா, இரண்டு கட்சியும் ஒன்றுதான். நான் இரண்டுக்கும் பொது, எனக்கொன்றும் தெரியாது." துருக்கியன் இன்னும் சற்று உரத்த குரலில் உத்தரவை மறுபடியும் சொன்னான். "சண் டை ஆரம்பமாகுமுன் உன்னுடைய தளங்களிடை சம்பளத்தைப் பட்டுவாடா செய்ய உனக்கு அவகாசம் கிடைக்கவில் லை என்பது பாக்ஷாவுக்குத் தெரியும்." "எந்தச் சண் டைக்கு முன்னாலே? என்ன பேத்துகிறாய்? அந்த புளுகெல்லாம் என்கிட்ட விட்டுப் பார்க்காதே. அளந்து கொட்டாதே. சண் டை எதுவும் நடக்கவில் லை." "உன்னுடைய தளத்துக்கு இங்கேயே, இப்போதே சம்பளத்தைப் பட்டுவாடாச் செய்யவேண்டும் என்று பாக்ஷா உத்தரவு போடுகிறார்" என்று அந்தத் துருக்கியன் மறுபடியும் வற்புறுத்துகிறான். "ரொம்பச் சந்தோஷம்" என்று தோளைக் குலுக்கிக் கொண்டான் குருட்டிக்காவ். "இந்த நெருப்பு முன்னாலே இந்த இடத்திலே என்ன உங்கள் பாக்ஷா சம்பளம் பட்டுவாடா பண்ணுவதைப் பார்த்ததே கிடையாதோ? ஆனால் உன்னுடைய சிப்பந்தி கிட்ட அல்லவா சம்பளப் பணம்..." உதவி லெப்டினன்ட் தருவிக்கப்பட்டான். நெருப்பில் இன்னும் சில உலர்ந்த கொப்புகள் போடப்பட்டன. சோல்ஜர்கள் வரிசையாக நின்றார்கள். காசு பெறாத காகிதப் பணத்தை மௌனமாக வாங்கிக் கொண்டார்கள். அதில் கெரன்ஸ்கி ரூபிள்களும் (ரூபிள்: ரஷிய நாணயம்) கலந்திருந்தது. வாங்கி முண்டும் முடிச்சுமான கைக்குள் வைத்துக் கசக்கி அடக்கினார்கள் உதவி லெட்டினன்ட் பட்டியலின் பெயர்களுக்கெதிரே குறிபோட்டுப் பதிவு செய்து கொண்டான். பாக்ஷா சுருட்டுப் பிடித்தபடி, அரைக்கண் போட்டு இந்த நபர்கள் இருளுக்குள் இருந்து வெளிவருவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். குருட்டிக்காவ் திரும்பியபொழுது, டாஷா, அந்த நீலக் கண்ணாடிக்காரனுடன் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்தான். "இதுவும் வேறெயா? நானோ வெளியே போக முடியாது. அந்தப் பயல்கூட என்ன பேச்சோ?" என்று உறுமினான். "கத்தாதே. நீ பேசறதெல்லாம் அவனுக்குப் புரிகிறது. அவன் பேர் ஆலி ஹஸன்." துருக்கியன் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டு வெளியேறினான். உத்தியோகஸ்தனுடைய விதவை வெறும் ஜலபானமாக இருந்த தேயிலைப் பானத்தைப் புட்டியிலிருந்து குடித்துக் கொண்டிருந்தாள். அந்த விவசாய நிபுணர், செக்காவ் கதைகள் படித்துப் பொழுதைக் கழித்தார். உதவி லெப்டினன்டும், தபால் அதிகாரியும் வீட்டில் போட்டு முளைக்க வைத்த புகையிலைத் தழையைத் தமக்குள் ஒருவருக்கொருவர் கொடுத்து உதவிக் கொண்டார்கள். ஆலிஹஸன் மறுபடியும் உள்ளே வந்தான். "பெண்டுகள் வேறு ஆண் பிள் ளைகள் வேறு என்று தனித்தனியாகப் பிரித்து வைக்க வேண்டும் என்று பாக்ஷா உத்தரவு கொடுத்திருக்கிறார்" என்றான். "ஒன் இஷ்டம்" என்று மறு பக்கத்தைப் புரட்டினார் விவசாய நிபுணர். "பெண்டுகள் இன்னும் கொஞ்சம் ஜாஸ்தியா இருந்தாத் தேவலையென்றல்லவா நினைத்தோம்" என்று மூலையிலிருந்து கொண்டு கத்தினான் தபால் உத்தியோகஸ்தன். "உம், நாங்களும் ஒரு காலத்திலே கட்டுமஸ்தா இருந்தவங்கதான்" என்றான் உதவி லெப்டினன்ட். குருட்டிக்காவ் அந்தத் துருக்கியன் எதிரில் போய் நின்று கொண்டு அவன் முகத்தருகில் முஷ்டியைக் குலுக்கினான். "அதோ அங்கே இருக்கே அந்தப் பெண் ஜன்மம் அதை வேண்டுமானால் அப்புறப்படுத்து" என்று சாயா குடித்துக் கொண்டிருக்கும் கிழவியைச் சுட்டிக்காட்டிவிட்டு, "இவளை அகற்ற முயன்றாயோ" டாஷாவைக் கையில் பிடித்துக் கொண்டபடி, "தூரதிருஷ்டிக் கண்ணாடியை வைத்துக்கொண்டு சண் டைபோடுவேன். கண்டித்துப் பத்திரிகைகளுக்குக் கடுதாசி எழுதுவேன். பாக்ஷாகிட்ட, என் கூட வேண்டுமானால் வா, அவருடைய மூஞ்சிக்கு நேரே இதைச் சொல்லுவேன்; சொல்லத்தான் செய்வேன். அவருக்குச் சுருட்டுக் குடிக்கத்தான் தெரியும், உத்தியோகம் பார்க்கத் தெரியவில் லை என்று நிச்சயமாகச் சொல்லுவேன்" என்று கூறினான். "நானும் கூடப் போவேன்" என்றாள் டாஷா. கிழவியையும் கையைப் பிடித்து இழுத்து, "நீயும் போய் பாக்ஷாவிடம் புகார் செய். இந்த அவமானத்தைச் சகித்துக்கொண்டு கிடப்பதா? எழுந்திரு போகலாம்" என்று கூப்பிட்டாள். நெருப்பு இடம் பெயரவில் லை அதே இடத்தில்தான் எரிந்து கொண்டிருந்தது. பாக்ஷா இப்போது தன்னுடைய இடது கையுடன் நாஷிமுத்தீனுடையதை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டு உரத்த குரலில் "ஆள்காட்டி விரலிலிருந்து மை விரலுக்கு மெல்லிய ரேகைகள் ஓடுகின்றன. எபஸ்டி உமக்கு மண் டையில் அடி விழுந்து காயமேற்படும் என்று அதற்கு அர்த்தம்" என்று சொல்லிக் கொண்டிருந்தார். பாக்ஷாவோடு வாதம் பண்ண நாஷிமுத்தீனுக்கு ஆசை கிடையாது. நிலச்சுவான்தாராக இருப்பதோடு மந்திரியாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை. நளினமாக அரபு பிரயோகித்து ஆட்சேபித்துக் கொண்டார். "நான் ஐரோப்பாவிலே ஐந்து வருஷம் இருந்திருக்கிறேன், என் னை நம்பும். அங்கெல்லாம் இந்த ரேகை சாஸ்திரம், பெரியதொரு சித்தாந்தமாகிவிட்டது" என்றார் பாக்ஷா. இந்தச் சமயத்திலே இளமை ததும்பும் டாஷாவின் செக்கக் கனிந்த முகம் நெருப்பிடையே எழும் பீனிக்ஸ் புல்போலத் தோன்றுகிறது. "இந்தப் பெண் யார், என்று பாக்ஷா கேட்கிறார்" என்றான் ஆலி ஹஸன். "அவள் என் பெண்டாட்டி" என்றான் குருட்டிக்காவ் அவசர அவசரமாக. "அங்கே நிற்கிற அவள் யார்... அவளும் உன் பெண்டாட்டிதானா" என்று கிண்டலாகக் கேட்டான் துருக்கியன். "அவள் என் பாட்டியார். துருக்கியப் பட்டாளத்து ஆபீஸரைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள நேராகக் கன்னியாஸ்திரீ மடத்திலிருந்து வந்திருக்கிறாள்?" என்றான் குருட்டிக்காவ். துருக்கியன் மீசையை உறுவி விட்டுக்கொண்டு கைகளை நெறநெறவென்று நெரித்தான். டாஷாவின் அழகை ரசித்தபடி, பாக்ஷா, "இந்தப் பெண்ணுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். "அவளுக்குத் தன் புருஷனைவிட்டுப் பிரிந்து போக வேண்டும் என்று ஆசை. அவன் எப்போதும் மொணமொண என்று கொண்டே இருக்கிறானாம். பேய்போல நடக்கிறானாம்" என்று ஆலி அவசர அவசரமாகத் தர்ஜமாச் செய்தான். "அது சரியான தர்ஜமா அல்ல" என நாஷிமுத்தீன் விடுதலை பெற்ற தன் கையை முழங்காலில் தட்டினான். "அப்படியல்ல, அவள் புருஷனோடேயே இருக்க ஆசைப்படுகிறாள்" பாக்ஷா சுருட்டில் ஒட்டி நின்ற சாம்பலை, நாஷிமுத்தீன் சட்டையில் தட்டிக் கீழே உதறினார். "நான் ரஷ்யாகூடச் சண் டை போடவில் லை என்று அவர்களிடம் சொல்லுங்கள். இன்னும் மோசமான விவகாரங்களிலிருந்து அவர்களைத் தப்புவிக்க என் பாதுகாப்பில் அழைத்துக்கொண்டேன் என்று சொல்லுங்கள் ஆலி ஹஸன். முன்போல இல்லாமல் நாளைக்கு ஏதாவது ஒரு வண்டியை அமர்த்தி இந்த இரு பெண்டுகளையும் அதில் உட்காரவை; அவர்களையும் மற்றக் கைதிகளையும் நாளைக்கு நூஹூவுக்கு அனுப்பப் போகிறேன். கேட்கிறதா? அவர்கள் கைதிகள்தான்; என்றாலும் கௌரவமான கைதிகள். இரவு இவர்களிடம் சொல். முன்போல உன் சொந்தத்திலே தர்ஜமா செய்யாதே. ஜாக்கிரதையாக இருக்கட்டும்" என்றார். டாஷா, பாக்ஷாவுக்குத் தலை வணங்கினாள். ஒரு கையில் தொலைக் கண்ணாடிகளை இறுகப் பிடித்துக் கொண்டபடி குருட்டிக்காவ் ஸல்யூட் செய்தான். ஆனால் டாஷா வீட்டுக்குள் நுழையும் போது ஆலி ஹஸன் அவளுடைய கைகளைப் பற்றிக் கொண்டு, "என் கூட வந்துவிடு, சுகமாக இருக்கலாம்" என்றான். "கையை விடு, இருக்கிற இடத்தில் சௌகரியமாகத்தான் இருக்கிறது" என்று இரகசியமாகக் கைகளை உதறித் தட்டி விட்டாள் டாஷா. அவள் கிள்ளின கிள்ளில் துருக்கியன் உதறியடித்துக் கத்திக்கொண்டு துள்ளினான். வண்டி கனமானது. அதை இழுப்பதற்குப் பூட்டிய இரு குதிரைகளோ சன்னமானவை. சக்கரம் சற்று சுழன்றால் வண்டி பூட்டோ டு குலுங்கியது. அவ்வளவு ஒடசல். அதன் ஆயுசைக் கண்டு ஆலி ஹஸன் ஆத்திரப்பட்டான். வழி ரொம்பவும் குறுகலாக இருந்ததால், வண்டிக்குப் பின்னால் லொங்கு லொங்கு என்று தொடர்ந்தான். ஜாடை காட்டினான், சிரித்தான், விரல்களை முத்தமிட்டுக் காட்டினான், வாய் ஓயாது பேசினான். வண்டி நின்ற இடங்களில் எல்லாம் டாஷாவைக் கைகொடுத்து வண்டியை விட்டு இறக்கி விட்டான். அந்தக் கும்பலில் எஜமான கொட்டம் போட்டான். அவனை அவமானப் படுத்துவதற்காக குருட்டிக்காவ் தொலைக் கண்ணாடியை மாற்றிப் பிடித்துக்கொண்டு அதன் வழியாகப் பார்த்தான். பிம்பம் துருக்கியனைக் கொசுவாக்கியது. அதற்கப்புறம் குருட்டிக்காவ், வழி காட்டிச் செல்லும் பரிவாரக் கோஷ்டித் தலைவனான போடாவி என்பவனுடன் பேச்சுக் கொடுத்து உறவு பண்ணிக்கொண்டான். அந்த நபர் இவனுடைய தளத்தில் இவனுக்குக் கீழே சேவை செய்தான். போடாவியும் உறவு கொண்டாட குர்ட்டிக்காவ் நெஞ்சின் கொதிப்பை எல்லாம் அவனிடம் திறந்து கொட்டினான். வழிகாட்டியாகப் போவதுடன், இராத்திரியில் தங்குமிடம் தேடிக் கொடுக்கும் வேலையும் போடாவிக்கு ஒப்புவிக்கப்பட்டிருந்தது. "நாம் அந்தக் கிராமத்தில் தங்காமல் நெடுகப் போய்விடுவோம். அங்கே போனால் நம் தலையைக் கொய்து போடுவார்கள். அது கலகக்காரக் கிராமம். ரஷ்யர்கள் என்று தெரிந்தால் யாரிடமும் தாட்சண்யம் காட்டமாட்டார்கள்" என்றான் போடாவி.