shabd-logo

41. ஷெஹர்ஜாதி - கதை சொல்லி

11 January 2024

1 பார்த்தது 1
ஹென்றி டிரெக்னியர் – பிரான்ஸ்

அன்று இரவு ஷெஹர்ஜாதி நன்றாகத் தூங்கவேயில் லை. பகல் முழுவதும் சுட்டுப் பொசுக்கும் வெய்யில். அதனால் மூச்சுவிடக்கூட முடியாதபடி அவ்வளவு இறுக்கமாக இருந்தது. சிலந்தி வலையையும் தோற்கடிக்கும் மஸ்லின் உடையைக்கூட அவளால் தாங்க முடியவில் லை. ஷெஹர்ஜாதி அவ்வளவையும் கழற்றி எறிந்தாள். கழுத்தணிகள், கைவளை, ஏன் - எல்லா ஆபரணங்களையும் கழற்றிப் பக்கத்திலிருந்த தாம்பாளத்தில் வைத்தாள். கதை சொல்லி முடிந்த ஆயிரத்து ஓராவது நாள் சுல்தான் பரிசளித்த முத்திரை மோதிரத்தை - அவளை எந்தக் கஷ்டங்களும் அணுகாமல் காக்கும் அந்த மந்திர மோதிரத்தை - அதையும் கழற்றி வைத்தாள். சிறிதாவது சுகத்தையளிக்கும் என்று நினைத்து, அவள் நந்தவனத்துப் பளிங்கு மண்டபத்தையடைந்தாள். நிர்மலமான பளிங்கின் மீது செயற்கையூற்றின் பனித்துளிகள் தடவிக்கொடுத்தன. நாள் முழுவதையும் அங்கு கழித்தும் பயன் என்ன? சோர்வும் களைப்பும் தீர்ந்தபாடில் லை. தன்னுடைய உயிருக்குயிராகக் கருதி வளர்த்த மாடப்புறாக்களும் அவளுக்குக் குதூகலத்தையளிக்கவில் லை. இவ்வளவு களைத்த ஷெஹர்ஜாதி அன்று சாயங்காலம் என்ன கதை சொல்லுவது என்று ஆலோசியாது இருந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில் லை. பகலைப்போல் இரவும் அவ்வளவு புழுக்கமாக இருந்தது. ஷெஹர்ஜாதி, அன்று உறங்கப் போனபொழுது, குதூகலமாகவோ அல்லது நிம்மதியாகவோ மஞ்சத்திற்குச் செல்லவில் லை. கொஞ்சக் காலமாக சுல்தான் அவளது தினசரிக் கதைகளைச் சிறிது அசட்டையாகவே கேட்டு வந்தான். கதை ஆரம்பித்த உடனேயே சுல்தானுடைய சுவாரஸ்யம் குறைந்தது, துன்பம் கவிந்த சிந்தனையில் ஆழ்ந்தான். நெரித்த புருவமும், ஒவ்வோரிடத்தில் நரையோடிய தாடியில் தேங்கித் தேங்கி உலாவும் விரல்களும், சிற்சில சமயங்களில் இரத்தினமிழைத்த வாளையோ, இடையில் சொருகிய கட்டாரியையோ தன் னையறியாமல் தடவும் கைகளும், சுல்தானின் துன்பச் சாயைகளைத்தான் அவளுக்குத் தோற்றுவித்தன. கதையை எவ்வளவு அற்புதமாகப் பின்னினாலும், கதையின் யக்ஷணியை என்ன நயமாகக் கொண்டு வந்தாலும், சுல்தானின் முகக்குறி மாறுவதேயில் லை. எப்பொழுதும் கதை முடிந்ததும், அவளைக் கதைக்காகப் புகழ்வான். அவளது களைப்பைப் போக்குவதற்காக மலைச் சிகரங்களிலிருந்து தருவித்த உறைபனியைத் தருவான். இவையும் நின்றுவிட்டன. சுல்தான் வேறு விஷயங்களில் தனது கவனங்களைச் செலுத்தி விட்டான் என்பதற்கு இவ்வளவு போதாதா? தன் னைப்போல் கதை சொல்லுகிறவர்கள் இந்தப் பூவுலகத்திலேயே கிடையாது என்று நினைத்திருந்தவளுக்கு, சுல்தானின் நடத்தை சிறிது மனத்தில் உறுத்தியது; அவளது தற்பெருமையின் ஜீவநாடியில் குத்தியது. ஸ்திரீகள் எல்லோரும் ஒருமுகமாக அவளைப் பெண் குலத்தின் வெற்றி என்று புகழவில் லையா? அவள்தான் சுல்தானின் குரூர மனவோட்டங்களைத் தடுத்தவள். தன் உயிருக்கே உலைவைத்த வலையிலிருந்து அவளுடைய தந்திரம் அவளைத் தப்புவித்தது. இதற்குமேல் பெண்ணின் பெருமைக்கு வேறு என்ன வேண்டும்? அவள் தன் பெருமைகளைப் பற்றி உணர்ந்தவள். அன்று சாயங்காலம் சுல்தான் ஷாரியார் நடந்துகொண்ட விதம் அவளது தற்பெருமையைச் சிறிது புண்படுத்தியது. அவன் பிரயோஜனமில் லை. ஷெஹர்ஜாதியின் கதை கேட்கும் பேறு பெற்றவர்கள் ஒரு வார்த்தையைக்கூட விடாது கேட்க வேண்டும். அவன் கதை கேட்கும்பொழுது சிடுசிடுவென்று முசுறுபோல் உட்கார்ந்திருக்கலாமா? சுல்தானின் ஞாபக மறதி அவள் மனத்தில் கோபத்தை எழுப்பியது. கற்பனைத் தேவியின் அருளைப் பெற்றவர்கள் எல்லாம் இந்த விஷயத்தில் லேசில் பொறுமையை இழந்துவிடுவார்கள். இவ்வளவிற்கும் மேலாக, அந்தந்தக் கதாபாத்திரங்களைப் பற்றி அடிக்கடி ஆவலுடன் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கும் ஷாரியார், அன்று பேசாது வாயடைத்துக் கிடந்தான். சுல்தான் அன்று கதையைக் கேட்கப் பிரியமில்லாமல்தான் கேட்டுக்கொண்டு இருந்தான் என்பதில் சந்தேகம் இல் லை. கதை முடிந்தவுடன், ஷெஹர்ஜாதியைக் கவனிக்காது, ஹுக்காவின் புகைமண்டலத்தில் மறைந்தான். பளிங்குத் தடாகத்தில் பிரதிபலிக்கும் தனது சிரித்த முகத்தில் தோன்றி மறையும் புன்சிரிப்பை லயமின்றி நோக்கினான். முதல் மந்திரி கெராந்தர், மாளிகையின் முற்றத்திற்கு வருமட்டும் சுல்தான் மௌனமாகவே இருந்தான். ஷெஹர்ஜாதிக்கு கெராந்தர் என்றால் பிடிக்கவே பிடிக்காது. அவன் தான் அவளுடைய சிறு சிறு ஆசைகளுக்குப் பங்கமாக நின்றவன். சுல்தானிடம் அவனுக்கு மிகுந்த மதிப்பு உண்டு. அவன் வார்த்தைக்கு சுல்தான் எப்பொழுதும் காது கொடுப்பான். கெராந்தர், சில சமயங்களில் அரசாங்கக் காரணங்களுக்காக சுல்தானிடம் கோபித்துக் கொள்ளுவதும் உண்டு. சுல்தான் ஷாரியாரின் வீரப்போர்களின் வெற்றிகளின் கலசம், ஏராளமான ஆள் சேதம், பொருள் நஷ்டம் என்ற அஸ்திவாரத்தின் மீது நிமிர்ந்து நின்றது. ஆனால் அதனால் பொக்கிஷம் காலி; நாட்டின் ஜனத்தொகையிலோ ஏராளமான குறைவு. இவை இரண்டு சுல்தானிடம் பிரஜைகளுக்கு வெறுப்பைத் தூண்டின. சிந்தி இறைப்பவன் என்று தூற்றப்பட்டான். கெராந்தருக்கு இவையெல்லாம் தெரியும். அவன் ஒற்றர் பலரை வைத்து, நாட்டிலும், நகரத்திலும், அரண்மனையிலும் என்ன நடக்கிறது என்பதை அறிந்து வந்தான். ஷெஹர்ஜாதியும் இவனுடைய ஒற்றர்களின் பார்வையிலிருந்து தப்பவில் லை. இதனால் சுல்தானின் பொறாமையையும், ஷெஹர்ஜாதியின் வெறுப்பையும் ஏற்றான் கெராந்தர். இதனால் ஷெஹர்ஜாதி சுல்தானுடைய இல்லறப் புனிதத்திற்குப் பங்கம் விளைவிக்க ஆசைப்பட்டாள் என்று நினைத்து விடக்கூடாது. நிரந்தரமான சந்தேகத்தின் சாயையைத்தான் ஷெஹர்ஜாதி வெறுத்தாள். தன்னிஷ்டத்துடன், தன் பூரண மனத்துடன், சுல்தானுக்கு உண் மையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். பலரும் தன் னை அழகிற்காக மரியாதை செலுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டாள். இவளைச் சூழ்ந்த இந்தச் சந்தேகத்தில் எந்தத் தைரியசாலியும் அவளை ஏறிட்டுப் பார்க்க அஞ்சுவான். அதிலும் கெராந்தர் முன்பு, நடக்காத காரியம். களங்கமற்றுத் தன் அழகிற்குப் பலர் மரியாதை செலுத்துவதை, அழகால் பலரை ஏறிட்டுப் பார்க்க வைப்பதை ஓரோர் சமயங்களில், சுல்தானின் சிடுசிடுத்த முகம் கெடுத்துவிடும். அது, புகையுண்ட ஓவியம் போல், மனத்தின் குதூகலத்தை விரட்டியது. கெராந்தர் சுல்தானுடன் இரகசியம் பேசப் பேச அவனுடைய சிடுசிடுப்பு அதிகரித்தது. தனது இடையில் தொங்கும் வாளின் இரத்தினப் பிடியை அவன் அடிக்கடி இறுக்கினான். கெராந்தர் கூறும் வதந்திகள் பொய்யல்ல. எங்கு பார்த்தாலும் கொந்தளிப்பு, பலர் வரி வசூலிப்பவர்களை எதிர்த்தனர். உழவர்களும் வியாபாரிகளும் தங்கள் லாபங்களைப் பதுக்கினர். பலர் நகரத்தைவிட்டு வெளியேறினர். மாலை நேரம் முழுவதும் வெறும் கதை கேட்பதில் கழித்து, நாட்டைக் கவனிக்காத சுல்தானைப் பற்றிக் குறை கூறுதல் அதிகரித்தது. ஷெஹர்ஜாதி, கெராந்தர் குறிப்பாகச் சொல்லுவதையெல்லாம் அறிந்துகொண்டாள். சுல்தானுக்கு எதிராகச் சதியாலோசனை நடக்கிறது. அரண்மனையைத் தாக்கி சுல்தானைக் கொல்லுவது என்று சிலர் இரகசியமாகச் சபதம் செய்திருக்கின்றனர். சதிக் கூட்டத்தின் தலைவர்கள் வெறியர்கள் என்பதில் சந்தேகம் இல் லை. கெராந்தரின் திறமையான ஒற்றர்கள் இருக்கும் சதிகளை எல்லாம் கண்டு பிடிக்காவிட்டால் பாக்தாத் நகரம் வசிக்க லாயக்கற்ற பேய்க் காடாகிவிடும். கெராந்தர் தன்னுடைய வேலையில் பெருமை பாராட்டிக் கொண்டான். அவனுடைய வேலையில் செலவு பிடிக்கும். கெராந்தருக்குப் பணம் சேகரிக்க வசதி கொடுத்தால், பிறகு அவன் ஜவாப்தாரி. இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த ஷாரியார், தாடியைத் தடவிக்கொண்டே, ஷெஹர்ஜாதியை ஏறிட்டுப் பார்க்காது, கெராந்தருடன் சென்று விட்டான். அவன் திரும்ப மாட்டான் என்று அறிந்த ஷெஹர்ஜாதி, தனது பணிப் பெண்களை அனுப்பிவிட்டு, வாசனையூட்டிய மஞ்சத்தில் சாய்ந்து படுத்தாள். இரவில் சிறிது புழுக்கம் குறைந்தது. சாளரங்களின் வழியாக அப்பொழுதுதான் புஷ்பிக்கும் ரோஜாவின் வாசனை மெதுவாக வீசியது. அஸ்தமன சந்திரன் சாளரங்கள் வழியாக அவளுடைய சயன அறையில் வெள்ளிக் கோணங்கள் கட்டினான். ஓரோர் சமயம் அரண்மனை வாசலை உருவிய கத்தியுடன் காவல் காக்கும் சேவகர்களின் குரல் கேட்கும். கீழே செல்ல வேண்டும் என்று ஷெஹர்ஜாதிக்கு ஓர் எண்ணம் உதிக்கும். இரவில் நந்தவனத்தில் உலாவி, தலையைச் சாய்த்து வெறும் தலையற்ற முண்டங்களைப் போல் உறங்கும் புறாக்களைக் கவனிப்பதில் அவளுக்கு எப்பொழுதும் ஆசையுண்டு. காலில் பாதரட்சையையும் அணியாமல் எழுந்து நடந்தாள். தனது குழந்தைப் பருவத்தில், தகப்பனார் வீட்டில் எப்பொழுதும் சளசளவென்று பேசிக் குதூகலம் விளைவித்துக் கொண்டிருந்த மைனாவின் மீது நினைவு சென்றது. அந்த ஏழைச் சக்கிலியக் குடும்பத்தில் அது ஒரு இன்பவிளக்கு. தகப்பனார் தோலில் செருப்புத் தைக்கும்பொழுது, அது பக்கத்திலிருந்து கீச்சிட்டுப் பாடிக்கொண்டிருக்கும். தகப்பனார் வேலை செய்துகொண்டிருந்த தோல் கிடங்கை அடிக்கடி ஷெஹர்ஜாதி நினைத்துக் கொள்ளுவாள். கிடைக்கும் பீற்றல் பாவாடையைக் கூட நயமாக உடுத்திக் கொண்டு, முலாம் பழத்துண் டைக் கடிக்கும் அந்தக் காலம் அவளுக்கு மனக்கண்ணின் முன்பு நின்று கொண்டேயிருக்கும். அந்தத் தோல் கிடங்கில் பலர் வருவார்கள். பல சமாசாரங்கள் அடிபடும். தகப்பனார் அதிகமாகப் பேசமாட்டார். ஆனால் அவர் வார்த்தைகள் அவருடைய தோல் கத்தி போலக் கூர்மையானவை. அவளுடைய தகப்பனாருடன் இருந்தே அவள் கதைகட்டுவதற்குக் கற்றுக் கொண்டாள். இப்ரஹீம் முதலிய சிலரிடமிருந்து காதல் என்றால் என்ன என்று கற்றுக் கொண்டாள். ஆனால், அவர்கள் இவளுடைய இதயத்தைத் தொடவேயில் லை. அவர்களுக்கு வாலிபமும் அழகும் கிடையாது. ஒருவேளை அவளுடைய ஏழைக் குடும்பத்திற்கும் அவளுடைய குழந்தை ஆசைகளுக்கும் பணம் கொடுக்கக்கூடிய நிலையில் இருந்தார்கள். அக்காலத்தில் ஷெஹர்ஜாதி தனது இன்பங்களை எல்லாம் கற்பனை உலகத்திலேயே பெற்றாள். இப்படிக் காலமும் சென்றது. தூக்கம் வராது கஷ்டப்படும் சுல்தான் ஷாரியாருக்குக் கதை சொல்லி உயிரை யிழக்கும் பெண்மணிகளின் வதந்தியைக் கேட்டாள். முயற்சியில் இருக்கும் அபாயத்தை அறிந்தாள்; ஆனால் அவளது ரகசிய ஆசை அவளைத் தள்ளிச் சென்றது. அவளுடைய முறை வந்தது. ஒரு முறை இருமுறையல்ல; அவளது கதைகள் சுல்தானை மயக்கியது. சுல்தானின் கனத்த மோதிரமணிந்த விரல்கள் அவளைத் தடவின. அவனது கறுத்த தாடி அவளது முகத்தில் கிளுகிளுத்தது. தோல் கிடங்கில் சொன்ன மாதிரி அரசன் சமஸ்தானத்தில் பின்னிய கதைகள் அவளை ஷாரியாரின் காதலியாக்கியது. பாக்தாத் நகரம் முழுவதும் அவள் அதிர்ஷ்டத்தில் பொறாமை கொண்டது. அவளது வாழ்க்கையே பெரிய கதையாக அடிக்கடி சொல்லப்பட்டது. இதையெல்லாம் நினைத்த ஷெஹர்ஜாதிக்கு இமைகள் சொக்கின. கீழ்வானத்தில் உஷையின் வெள் ளைச் சிரிப்பு சாளரத்தி வழியாய் எட்டியது. தான் ஏழைச் சக்கிலியின் மகளானாலும், அரசாங்கக் காரியத்திற்காக உடனே எழுந்திருக்கும் சுல்தானைப் போல அல்லாது, இஷ்டப்படி உறங்கலாம் என்று அவள் உணர்ந்தாள். அன்று அவளுக்கு உறக்கம் கிடையாது. கண் ணை மூடியதும் என்றுமிராத சப்தங்கள் கேட்டன. அரண்மனை முழுவதும் காலடிச் சத்தம். எங்கு பார்த்தாலும் கூப்பாடு. என்ன, பூகம்பமா? அல்லது மாளிகை தீப்பற்றி விட்டதா? கலகமா? தன் கற்பனைதான் இந்த விபரீதக் கோளாறுகளை ஏற்றுக் கூத்தாடுகிறதா? அட! பக்கத்தில் பாகையவிழ்ந்து ஒரு கையை உயரத் தூக்கிய வண்ணம் நிற்கும் அந்த மனிதன் பொய்த் தோற்றமல்ல! அந்த வெளிறிய தோற்றம், கோணல் கண்கள், நீண்ட மூக்கு, - அவன் தான் கெராந்தர்! கண்களில் என்ன மிரட்சி! வாய் அப்படியே திறந்தபடி இருக்கிறது! கையிலும் உடம்பிலும் இரத்தக்கறை! அவன் நடந்துவந்த திக்கிலெல்லாம் இரத்தத் துளிகள். சுல்தானை யாரோ கொன்றுவிட்டார்கள். அவனது காவலாட்கள் வெளியே கழுத்து நெரிக்கப்பட்டுக் கிடந்தனர். காலையில் இதைக் கண்டான் கெராந்தர். அதைக் கண்டுவிட்டு காரியம் மிஞ்சிவிட்டது என்று இவளிடம் அறிவிக்க ஓடி வந்திருக்கிறான். ஷெஹர்ஜாதியின் அழகையும் மேதையையும் பாக்தாத் நன்கறியும்; அவளைப் பாக்தாத் மக்கள் அதிகமாக நேசித்தார்கள். அவளைப் பிரதிநிதி என்று முரசறைவித்தால், தன் கையில் மந்திரிப் பதவி இருக்குமட்டும் கவலை இல் லை என்று கூறினான். அவள் அதற்கு மறுத்தால், நாடு மோஸூல்காரனிடம் சென்றுவிடும். சிறைவாசமோ, மரணமோ சம்பவிப்பதில் சந்தேகமில் லை. தனது அற்புதமான சரித்திரத்தின் சிகரமாக ஏன் ராஜ்யதிகாரம் இருக்கக் கூடாது? இனி தன் இஷ்டம் போல் இருக்கலாம். மனம் சோர்ந்த சமயத்தில் இன்னொருவரின் கட்டாயத்திற்காகக் கதை சொல்ல வேண்டாம். எனவே, அதை ஏற்றுக் கொண்டாள். ஷாரியாரின் மரணச் சடங்கு நடந்தபிறகு, அவளுக்கு ராஜ்யாதிகாரமும், சிம்மாசனமும் வந்தன. வந்த கொஞ்ச காலத்திற்கெல்லாம் கெராந்தர் தூக்கு மேடையில் தொங்கினான். காரணம், அவனே ஷாரியாரைக் கொன்றான் என்ற சந்தேகம். பாக்தாத் நீதிபதிகள், சாட்சிகள் இல்லாவிட்டாலும், ஏகமனதாகத் தீர்ப்புக் கூறினார்கள். ஆமாம், வேறு என்ன செய்வது? சுல்தானின் கொலையாளி யாரோ ஒருவன் தான். அன்று இரவு வந்து ரத்தக் கறை படிந்த கைகளுடன் முன் நின்றதை ஷெஹர்ஜாதி மறக்க முடியவில் லை, மன்னிக்கவும் முடியவில் லை. ஷெஹர்ஜாதியின் அரசாட்சியில் முதல் பாதி தொந்திரவு இல்லாது கழிந்தது; பாக்தாத் மக்கள் பழைய துன்பங்களை அநுபவித்துத்தான் வந்தார்கள்; ஆனால் அவர்கள் ஷாரியாரை வெறுத்தார்கள். ஷெஹர்ஜாதியைப் பிரியப்பட்டார்கள். பொதுமக்கள் நிலைமை எப்பொழுதுமே அப்படித்தான். அவர்களுடைய சுகம் எல்லாம் வெறும் கற்பனை. அவளுடைய அரசாட்சி ஓர் பெரும் பேறு என்று அவர்கள் கூறினார்கள். இவ்வாறு அவர்கள் சொல்லும்பொழுது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் சொன்ன அந்த இன்பங்கள் தனக்குத் தென்படவில் லையே என்று எண்ணினாள். தன் பங்கு என்ன? இவர்களுடையதை விட சொத்தைப் பங்கா? அதிகாரம் தன் கையில் வந்துவிட்டதினால் பொக்கிஷத்தில் இருக்கும் ஆபரணங்களை எல்லாம் அவள் அணிந்து கொள்ள முடிந்தது; வெளிவரும் சமயங்களில் எல்லாம், மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றார்கள். நந்தவனத்தைப் புதுப்பித்தாள். அதில் இருந்த பளிங்கு மண்டபங்களையும், கொடிகள் படர்ந்த நிழல் மேடைகளையும் இடம் மாற்றியமைத்தாள். என்ன செய்தும் சுல்தானின் காலத்தில் அநுபவித்ததை விட இன்பம் ஒரு துளியாவது அதிகரித்ததாக அவளுக்குப் படவில் லை. அவள் கூரிய அறிவு படைத்தவள். ஆகையால் கதை சொல்லும் வேலைதான் முன்பு உற்சாகத்தையளித்து வந்தது என்று உணர்ந்தாள். இப்பொழுது என்ன செய்வது? தனது பரிஜனங்களைக் கூட்டிக் கதை சொல்ல ஆரம்பித்தால் மனமறிந்த பொய்களைப் பிதற்றுவார்கள். இம்மாதிரியான போலிப் புகழுரைகளை ஷெஹர்ஜாதி வெறுத்தாள்; பின்னிய கதைகளை எல்லாம் எழுதலாம்; ஆனால் குரலின் பேதம், முகநொடிப்பின் நயம் எல்லாவற்றையும் இழந்து, வெறும் மொட்டையாக, அவளது அபூர்வப் புன்சிரிப்பின் தேசுபடாது இருக்கும். அதனால் தனது பெயருக்குக்கூடப் பங்கம் வந்துவிடும் என்று பயந்தாள். பகலும் மணிச் சங்கிலிகளாக நீண்டது; ஆனால் இராத்திரியின் வரவு அவளை அஞ்சுவித்தது. பொழுதைப் போக்குவதற்கு மௌனமான - ஆனால், இன்பகரமான விளையாட்டுக்கள் இருக்கின்றன. இந்திரிய போகங்களை அநுபவிக்கச் சக்கிலியப் பெண்ணுக்கிருக்கும் உரிமைதான் ராஜப்பிரதிநிதிக்கும் உண்டு என்று உணர்ந்தாள். யாரை எல்லோரும் மதித்து, மரியாதை செய்து, புகழ்ந்து, அஞ்சுகிறார்களோ, அவர் காதலை ஒரு இடத்திலாவது எதிர்பார்க்க முடியாது. பழைய நந்தவனத்தில் இடம் மாறாது இருந்த பழைய பளிங்கு மண்டபத்திலிருந்து அவள் இவ்வாறு எண்ணமிடலானால். நீரோடைகளின் சலசலப்பு அவளுக்கு நிம்மதியளித்தது. அவற்றின் இனிய குரல்கள் ஏதோ அற்புதமான இன்பக் கதையைக் கூறுவது போல் எண்ணினாள். ஆனால் நீரோடையின் சலசலப்பு மனித உள்ளத்தின் குரலாகுமா? உடனே ஒரு எண்ணம் தோன்றியது. கதைப் பரீட்சைகள் ஏற்படுத்தி, அவளை இன்பப்படுத்தாதவர்களின் காதை அறுத்துத் தண்டித்தால் என்ன?... அதை நகரத்தில் முரசறைவிக்க வேண்டும். இவளுடைய கதையைச் சொல்லிச் சொல்லிப் பழக்கப்பட்ட பலர், நகரம் முழுவதும் இருந்தனர். அதைச் சொல்லுவதே இலக்கியப் பயிற்சியாயிற்று. அதில் எத்தனை கட்சிகள்! ஒவ்வொருவரும் வந்து காதைப் பறிகொடுத்ததுதான் மிச்சம். மார்தூக் கதை சொல்லுவதில் யாரையும் மயக்கி விட முடியும் என்பதில் தற்பெருமை கொண்டவன். ஆனால் அவனுக்கும் மன்மத ரூபத்திற்கும் வெகுதூரம். அரண்மனைக்குள் பெருமிதமாக வந்தான். போகும்போது... ஆமாம் போகும் போது... பாகை கலைந்து, காதைக் கையில் ஏந்திக் கொண்டு மறைந்தான். ஆனால், ஆசை யாரைவிட்டது, மார்தூக்கின் விதி மற்றவர்களை வந்து காதுகளை இழக்கத்தான் தூண்டியது. ஷெஹர்ஜாதிக்கு அசட்டுக் கதைகளைக் கேட்டுக் கேட்டுக் காது புளித்துவிட்டது. அரண்மனை உப்பரிகையில் நின்று வானத்தைத் தழுவும் திசை மூலையை நோக்கினாள். யாத்திரை செய்ய வேண்டும் என்ற வேட்கை யிருந்தது; வானத்தில் ஒய்யாரமாக வட்டமிடும் கறுப்புப் புள்ளிகள் போன்ற பருந்துகளைப் போல் உயரப் பறந்து நின்று உலகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மிகுந்தது. அன்று ஒரு புதிய ஒட்டகைக் கூட்டத்துடன், எங்கிருந்தோ ஒரு அரச குமாரன் கதை சொல்ல வந்திருக்கிறானாம். என்ன தைரியம்! அவன் அசட்டுத் தைரியத்திற்குக் காதுகளைக் குருத்துடன் வெட்டியனுப்ப வேண்டும். அன்றிரவு சிறிது உஷ்ணமாகவே இருந்தது. ஷாரியார் கொலை செய்யப்பட்ட அன்றுபோல் வானக் கம்பளத்தில் இருட்டுத் தேவன் நட்சத்திரங்களை வாரி இறைத்து வேலை செய்தான். ஷெஹர்ஜாதி வாசனை பரிமளிக்கும் மஞ்சத்தில் சயனித்து அவன் வரவை எதிர்பார்த்திருந்தாள். தேகமாத்யந்தமும் கொதித்தது. பளிங்குத் தடாகத்தில், பிறந்த கோலத்தில் முங்கிக் குளித்து நீந்த வேண்டும் என்று தேகம் கட்டுக்கடங்காது தவித்தது. முதலில் அந்தக் கதை - சொல்லியைக் கேட்டு விட்டு... அவனும் வந்தான். அவன் கம்பீரமாக உயர்ந்து வளர்ந்த ஆண் சிங்கம். முகத்தையும் தேகத்தையும் அடையாளம் தெரியாதபடி மூடியிருந்தாலும், அழகை மறைக்க முடியவில் லை. அவள் முன் வந்து அவன் நமஸ்கரிக்கவில் லை. ஷெஹர்ஜாதிக்குத் திடீரென்று அவன் மீது ஒரு பிரேமை ஏற்பட்டது. உடனே மஞ்சமும் நிலவும் என்றுமில்லாதபடி ரம்மியமாகத் தேகத்தில் ஓர் விவரிக்க முடியாத உணர்ச்சியைப் பாய்ச்சின. ஓர் அன்றில் பேடு குரலெடுப்பியது; ஷெஹர்ஜாதி மௌனமாகத் தலை குனிந்தாள், அவள் இதயம் படபடத்தது. வந்தவன், முகத் திரையைக் களைந்து விட்டு இமை கொட்டாமல் அவளை நோக்கினான். அவன் அழகன். பஞ்ச பூதத்தின் அழகு அவனைப் போல்தான் இருக்க வேண்டும். அவன் பேசவில் லை. ஆனால் ஷெஹர்ஜாதி அன்றுதான், அந்த மௌனத்தில், மரணத்தின், வாழ்க்கையின் அற்புதமான கதையைக் கேட்டாள்; - அதுதான் காதல்.

புதுமைப்பித்தன் மூலம் மேலும் புத்தகங்கள்

72
கட்டுரைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகள்
0.0
புதுமைப்பித்தன் மொத்தம் 108 சிறுகதைகள் எழுதியுள்ளார். அதில் அவர் காலத்தில் 48 மட்டும் பிரசுரமாயின. 1940-ல் புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. புதுமைப்பித்தன் 98 கதைகளை எழுதியுள்ளார். அவர் மணிக்கொடியில் எழுதிய 29 கதைகளைப் புதுமைப்பித்தன் கதைகள் என்ற பெயரில் நவயுகப் பிரசுராலயம் வெளியிட்டுள்ளது. ஆறுகதைகள், நாசகாரக் கும்பல், பக்த குசலோ என்ற அவரது பிற நூல்களையும் அதே நிறுவனம் வெளியிட்டுள்ளது. கலைமகள் பதிப்பகம் காஞ்சனை தொகுதியையும், ஸ்டார் பிரசுரம் ஆண்மை என்ற தொகுதியையும் வெளியிட்டன. ஐந்திணைப் பதிப்பகம் புதுமைப்பித்தனின் மொத்தச் சிறுகதைகளையும் வெளியிட்டது. அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் புதுமைப்பித்தனின் அனைத்துச் சிறுகதைகளையும் வெளியிட்டுள்ளது.
1

1. ஆஷாட பூதி

2 January 2024
0
0
0

மோலியர் (1622-1673) பதினேழாவது நூற்றாண்டில், பிரான்ஸில் நாடகக்காரன் என்றால், மதம் அவனைத் தள்ளிவைத்தது. பிரார்த்தனை - பிரசாதத்தைப் பெறுவது என்றால் விசேஷ சிபாரிசின் பேரில் நடக்க வேண்டிய காரியம். செத்தால

2

2. ஆட்டுக் குட்டிதான்

2 January 2024
0
0
0

ஜேம்ஸ்ஹானலி – இங்கிலாந்து  செக்கச் செவேலென்றிருக்கும் அந்த பஸ், ஏக இரைச்சலுடன் அந்த வளைவைத் திரும்பியது. சூழ்நிலை தாங்கிய அமைதியான வண்ணக் கலவைகளுக்குச் சவால் கொடுப்பது மாதிரி அந்தச் சிகப்பு கண்களை உற

3

3. அம்மா

2 January 2024
0
0
0

கே. பாயில்  பாதை நெடுகலாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், அதற்குச் சின்னக் கிளை ஒன்றும் இருந்தது. இருந்தாலும் மறுபக்கத்தில் ஓடும் சிற்றோடையில் இறங்கி அக்கரைக்குப் போக வேண்டிய அவசியமே இல் லை. மலை வ

4

4. அந்தப் பையன்

3 January 2024
0
0
0

மாக்ஸிம் கார்க்கி  இந்தச் சின்னக் கதையை எப்படிச் சொல்லுவது என்று புரியவில் லை. அவ்வளவு எளிதானது. நான் வாலிபப் பருவத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் தெருக் குழந்தைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு ஊருக்கு வெளியே

5

5. அஷ்டமாசித்தி

3 January 2024
0
0
0

டென்ஷொ வம்சத்தின் ஆதிக்கத்தின்போது, கியாட்டோ என்ற வடக்குப் பிராந்தியத்தில் குவான்ஷின் கோஜி என்ற வயோதிகன் வாழ்த்து வந்தான். நீண்டு நெஞ்சை மறைக்கும் வெள் ளைத் தாடியுடன், ஷிண்டோ குருக்கள்மார் போல உடையணிந

6

6. ஆசிரியர் ஆராய்ச்சி

3 January 2024
0
0
0

ஸின்கிளேர் லூயிஸ்  டாக்டர் ஸ்லீக் பிரம்மச்சாரி; அதிலும், வழுக்கை விழவிருக்கும் வாலிபப் பிரம்மச்சாரி. அவர் இராஸ்மஸ் கலாசாலையில் சரித்திரமும் பொருளாதாரமும் கற்பித்து வந்தார். அதாவது மேடைமீது ஏறி நின்று

7

7. அதிகாலை ( பகுதி 1)

3 January 2024
0
0
0

நிக்கோலாய் டிக்கனோவ்  1918-ம் வருஷம் ஆகஸ்டு மாதத்தில் துருக்கியர் பாக்கூ என்ற இடத்தை முற்றுகை இட்டார்கள். மென்ஷ்விக் நிர்வாகத் தலைமை போர்டின் ஐந்து தலைவர்கள் மூளையும் சுழன்றது. சர்வ குழப்பம்; அது விஷ

8

7.அதிகாலை (பகுதி 2)

3 January 2024
0
0
0

இராத்திரி ஒரு ஊரில் தங்கினதும், ஆலி ஹஸன், டாஷா பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு சளசளவென்று மணிக்கணக்காகப் பேசிக் கொட்டினான். உத்யோகஸ்தரின் விதவை மெய்ஸ் அரிசி ரொட்டியை அசைபோட்டுக் கொண்டிருந்தாள். வி

9

7. அதிகாலை ( பகுதி 3)

3 January 2024
0
0
0

"பொய்யாயிருக்கலாம், ஆனால் சித்திரவதையில், உன் னைக் காட்டிக்கொடுப்பேன்; என் னைக் காட்டிக்கொடுத்துக் கொள்வேன்; எனக்கு ஞாபகத்துக்கு வந்தவர்களையெல்லாம் காட்டிக்கொடுப்பேன். உனக்குச் சித்திரவதை என்றால் எப்ப

10

7. அதிகாலை (பகுதி 4)

3 January 2024
0
0
0

"ஆஹா அப்படியா. பாக்ஷாதான் வயிற்றுக் கடுப்பால் கழிந்து கொண்டிருக்கிறாரே. இன்னும் கொஞ்ச காலத்துக்கு அவரைப் பற்றித் தொந்திரவில் லை. தவிரவும், உன்னுடைய ஆயுதங்களை உன்னிடம் கொடுத்துவிடவேண்டும் என்று உத்திரவ

11

8. பலி

4 January 2024
1
0
0

ஜோஸப் நையரு – ஹங்கேரி  மோல்டேவியா நோக்கி நிற்கும் மலைச் சிகரங்களிலே அந்த வருஷத்தில் மந்தைகளுக்குக் கரடிகளால் வெகு தொல் லை ஏற்பட்டு வந்தது. வில் - பொறி வைத்து எல்லாம் முயன்று பார்த்ததும் ஒன்றும் பயன்ப

12

9. சித்திரவதை

4 January 2024
1
0
0

எர்னஸ்ட் டாலர்  "உனக்கு இன்னும் ஏதாவது விருப்பம் இருக்குமா?" சாகக் கிடக்கும் வாலிபனைப் பார்த்து ஸ்டட்கார்ட் இரகசியப் போலீஸ் உத்தியோகஸ்தர் இவ்வாறு கேட்டார். வாலிபனுடைய 'வெறிச்சோடிய' கண்கள் ஜன்னலின் கம

13

10. டைமன் கண்ட உண்மை

4 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர் (1564-1616)  ஆங்கில நாடகாசிரியர், ஷேக்ஸ்பியரைத் துவிதப் பிரம்மா என்பார்கள். உலகத்தின் சிருஷ்டி தத்துவத்தைப் புரிந்து கொண்டவர் போல் தமது பாத்திரங்களை நடமாட விடுவார். அவர் உலகில் பேய்களும்

14

11. இனி

4 January 2024
1
0
0

இ. எம். டிலாபீல்ட்  இதுவரை நடக்காததைப் பற்றி ஒரு கதை எழுதினால் என்ன?... அந்தக் கதையின் போக்கில் அறிந்து கொள்ள முடியுமானால்... பதினைந்து இருபது வருடங்களுக்கப்புறம்: ஓல்ட் பெய்லியில் (நியாயஸ்தலம்) நடக்

15

12. இந்தப் பல் விவகாரம்

4 January 2024
1
0
0

மைக்கேல் ஜோஷெங்கோ – ருஷ்யா  எங்கள் சகா எகோரிச்சுக்குப் பல், தொந்திரவு கொடுத்து வந்தது. என்ன காரணத்தினாலோ விழ ஆரம்பித்தது. காலம் என்ற ஒன்று இருக்கே, அதற்கும் இந்த விவகாரத்துக்கும் சம்பந்தமிருக்கலாம்.

16

13. இஷ்ட சித்தி ( பகுதி 1)

4 January 2024
1
0
0

ஹான்ஸ் பலாடா – ஜெர்மனி  முதலிலேயே தெரிவித்து விடுகிறேன். அப்புறம் குறை சொல்லாதீர்கள். என் மனைவி பெயர் இட்ஸன் பிளாஸ். உச்சரிப்பதற்குக் கொஞ்சம் சிரமந்தான்; ஆனால் அவள் மீது இருந்த ஆசையில், அதன் சிரமம் எ

17

13. இஷ்ட சித்தி ( பகுதி 2)

4 January 2024
1
0
0

"பின்பு கிரிஸ்மஸ் சமயத்தில் அதை உடைத்து... பிறகு என்னவென்பது உங்களுக்குத்தான் தெரியுமே!" என்றாள்! "உனக்கென்ன பைத்தியமா? இந்த வருஷம் போனஸ் கீனஸ் கிடையாது என்று ஹீபர் சொல்லுகிறான். முதலாளி வருமானம் இல்

18

14. காதல் கதை

5 January 2024
1
0
0

வில்லியம் ஸரோயன்  "இந்தப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுகிறீரா அல்லது அந்தப் பக்கமாக உட்காருகிறீரா?" என்று சிகப்புக் குல்லா* கேட்டான். (* நம்மூர்களில் சிகப்புத் தலைப்பாய் என்றால் போலீஸ்காரன் என்பது

19

15. கலப்பு மணம்

5 January 2024
1
0
0

கிரேஸியா டெலாடா – இத்தாலி  அன்றிரவு சுகமாக இருந்தது. பூலோகத்தைக் கடுங்குளிரினால் சித்திரவதை செய்வதில் சலியாத உறைபனிக் காலத்துக்கும் ஒரு ஓய்வு உண்டு என்பதை அந்த ஏப்ரல் இரவு காட்டியது. இதுவரை பனிக்கட்ட

20

16. கனவு (பகுதி 1)

5 January 2024
1
0
0

ஐவான் டர்ஜனீப் – ருஷியா அந்தக் காலத்தில் நான் என் தாயாருடன் ஒரு சிறு துறைமுகப் பட்டினத்தில் வசித்து வந்தேன். எனக்கு அப்பொழுதுதான் பதினேழு வயது நிரம்பிற்று. தாயாருக்கு முப்பத்தைந்து வயது. சின்ன வயதிலே

21

16. கனவு ( பகுதி 2)

5 January 2024
1
0
0

8 என் தாய் எனக்குக் கூறிய கதை எனதுள்ளத்தை எப்படிச் சிதறடித்தது! முதல் வார்த்தையிலிருந்தே அறிந்து கொண்டேன். அவள் வாயிலிருந்து தவறுதலாக நழுவிய வார்த்தை எனது உத்தேசத்தைத் திடப்படுத்தியது. எனது கனவில் நா

22

17. காரையில் கண்ட முகம்

5 January 2024
1
0
0

இ.வி. லூக்காஸ் – இங்கிலாந்து  நேற்று சாயங்காலம் எனது நண்பன் டாப்னி வீட்டில் நடந்ததை மறக்க முடியவில்லை. அந்த அநுபவம் இன்னும் என் னை உறுத்திக் கொண்டிருக்கிறது. அன்றைய தினம் பேச்சு பூத பைசாசங்களைப் பற்ற

23

18. கிழவி

5 January 2024
1
0
0

ஸெல்மாலேகர்லாப் – ஸ்வீடன்  மலைப்பாதை வழியாக ஒரு கிழவி நடந்து கொண்டிருந்தாள். மெலிந்து குறுகியவள்தான். எனினும் முகத்தின் வண்ணம் வாடவில்லை. சதைக் கோளங்கள் மரத்துத் தொய்ந்து திரித் திரியாகத் தொங்கவில்லை

24

19. லதீபா

6 January 2024
0
0
0

மோஷி ஸ்மிலான் ஸ்கி  "லதீபாவின் கண்களை நீ பார்த்திருக்காவிட்டால், கண்களுக்கு எவ்வளவு அழகு இருக்க முடியும் என்பது உனக்குத் தெரிந்தே இருக்காது." இப்படி நான் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம். ச

25

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்( பகுதி 1)

6 January 2024
0
0
0

1 அவர்களுடைய மூத்த பெண்ணின் படிப்பு அடுத்த மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது. வயசும் 'அப்படி இப்படி' என்று சீக்கிரத்தில் பதினெட்டு ஆகிவிடும். டோ க்கியோவிலேயே நாகரீகத்திற்குப் பெயர் போன இடத்தில் நிலம் வாங

26

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்(பகுதி 2)

6 January 2024
0
0
0

5 வரன்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுவதற்கு நாள் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு 'கபூக்கி' நாடகக் கொட்டகையில் தரகர் இரண்டு 'பாக்ஸ்' களை அமர்த்தினார்; இரண்டு குடும்பங்களும் பக்கத்த

27

21. மணிமந்திரத் தீவு

6 January 2024
0
0
0

ஷேக்ஸ்பியர்  நடுக்கடலிலே நாலைந்து கப்பல்கள் தத்தளித்துத் தடுமாறுகின்றன. கடலலைகள் சினங்கொண்ட கருநாகங்கள் போல ஆயிரமாயிரமாகப் படம் விரித்துத் தலை சுற்றி மோதுகின்றன. உயிரை வாங்கவரும் கால தூதர்களின் கோரச்

28

22. மணியோசை

6 January 2024
0
0
0

ஜப்பான்  "நான் சாவதற்குப் பயப்படவில் லை" என்றாள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மனைவி. "இப்பொழுது என் கவலை எல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நான் போன பிறகு யாரைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?" வேதனை

29

23. மார்க்ஹீம்

6 January 2024
0
0
0

ஆர்.எஸ். ஸ்டீவன்ஸன் – இங்கிலாந்து  "ஆமாம்! எங்கள் வியாபாரத்திலே பலவிதம் உண்டு; வாங்க வருகிறவர்களில் சிலருக்கு ஒன்றுமே தெரியாது; வெறும் 'அப்பாவிகள்'. அப்பொழுது எங்கள் அநுபவத்திற்கு ஏற்ற லாபத்தைப் பெறு

30

24. மிளிஸ்

8 January 2024
0
0
0

பிரட் ஹார்ட் – அமெரிக்கா  ஸிராநிவாடா மலைத் தொடரில் சமவெளிக்குப் பக்கத்தில் இருக்கும் சிவந்த மலைகளில்தான் "ஸ்மித் பாக்கெட்" என்ற இடம் இருக்கிறது. அது ஒரு சுரங்க ஸ்தலம். அதாவது ஒரு காலத்தில் தங்கம் இரு

31

25. முதலும் முடிவும் ( பகுதி 1)

8 January 2024
0
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  மாலை ஆறு மணியிருக்கும். அந்த அறையில் சுமாரான இருட்டு. 'பச்சை ஷேட்' போட்ட மேஜையின் மீதிருந்த ஒற்றை விளக்கு, தரையில் விரித்த துருக்கிக் கம்பளத்திலும், மேஜையின் மீது சிதறிக் கிடந்த,

32

25. முதலும் முடிவும் ( பகுதி 2)

8 January 2024
0
0
0

"பிரேதத்தின் மேலிருந்த எதையும் எடுத்தாயா?" "நாங்கள் சண்டை போட்டுக் கொள்ளும்பொழுது இது அவன் பையிலிருந்து விழுந்தது." அது வெறும் தபால் கவர். தென் அமெரிக்கத் தபால் குறியிட்டு, "பாகட்ரிக் வாலன், ஸைமன் ஓட்

33

26. நாடகக்காரி

8 January 2024
0
0
0

ஆண்டன் ஷெக்காவ் – ருஷியா  அவள் ஒரு நாடகக்காரி. அந்தக் காலத்திலே அவளுக்கு யௌவனக் களை மாறவில் லை. குரல் கணீர் என்று இருக்கும். பலர் வந்து போவார்கள். ஆனால் குறிப்பாக நிக்கோலாய் பெட்ரோவிச் கோல்ப்பக்கோவ்

34

27. நட்சத்திர இளவரசி

8 January 2024
0
0
0

ஒரு ஆசிரியர் - தென் கடல் தீவுகள்  "நம்மிடம் இருப்பதையெல்லாம் சாப்பிட்டு விடுவோம்" என்றான் டபூதி. அவனது சகோதரனான அய்ட்டோ சந்தேகத்துடன் ஏறிட்டுப் பார்த்தான். "அப்படியானால் நமக்கு மிகுந்த பலம் உண்டாகிவி

35

28. ஓம் சாந்தி! சாந்தி!

8 January 2024
1
0
0

எலியா எஹ்ரன் பர்க்  (யுத்தம் மனித சமூகத்தின் 'உடனுறை நோயாகவே' இருந்து வருகிறது. தனது தற்காப்புக்காக மனிதன் சமூகம் என்ற ஒரு ஸ்தாபனத்தை வகுத்தான்; பிறகு அதனைக் காப்பாற்றத் தன் னைப் பலிகொடுக்கத் தயாரானா

36

29. ஒரு கட்டுக்கதை

9 January 2024
0
0
0

பிரான்ஸ் காப்கா – ஆஸ்திரியா  எலி சொல்லுகிறது... "ஐயோ, உலகம் தினம் தினம் எவ்வளவு சின்னதாகிக் கொண்டே வருகிறது! முதலில் ரொம்பப் பெரிதாக, நான் பயப்படும்படியாக, அவ்வளவு பெரிதாக இருந்தது. நான் ஓடிக்கொண்டே

37

30. ஒருவனும் ஒருத்தியும்

9 January 2024
0
0
0

லூயிகய்ல்லூ – பிரான்ஸ்  மச்சுப் படிக்கட்டு முற்றத்தில் இறங்கியது. அங்கே, அதாவது கடைசிப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, அன்று காலை முழுவதும் அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் ரொம்பவும் நெட்டை. ஒற்றை ந

38

31. பைத்தியக்காரி

9 January 2024
0
0
0

மொப்பஸான் – பிரான்ஸ்  "ஆமாம், நீ சொல்வது முன்பு பிரான்சிற்கும் ருஷியாவிற்கும் சண் டை நடந்ததே, அப்பொழுது நடந்த பயங்கரமான சம்பவத்தை என் நினைவிற்குக் கொண்டு வருகிறது" என்று கூறத் தொடங்கினார் முஸே டி' என

39

32. பளிங்குச் சிலை

9 January 2024
0
0
0

வாலரி புருஸ்ஸாப் வாலரி புருஸ்ஸாப் (1875-1924) புரட்சி யுகமான நவீன காலத்து ருஷ்யப் புது எழுத்தாளர் கோஷ்டியைச் சேர்ந்தவர். இந்தக் கதை புரட்சிக்கு முந்திய காலத்தைப் பகைப் புலமாகக் கொண்டு, எழுந்த கற்பனைக

40

33. பால்தஸார் (பகுதி 1)

9 January 2024
0
0
0

அனதோல் பிரான்ஸ் – பிரான்ஸ்  "கிழக்கே அரசர்களுக்கு மந்திர சக்தியுண்டு என்று நினைத்தார்கள்" -தெர்த்தூலியன் அக்காலத்திலே எதியோபியாவை பால்தஸார் ஆண்டு வந்தான். கிரேக்கர் அவனை ஸாரஸின் என்று அழைத்தனர். அவன்

41

33. பால்தஸார்( பகுதி 2)

9 January 2024
0
0
0

ஜனநடமாட்டமில்லாத பாலைப் பிரதேசங்களில் மத்தியானம் வரை நடந்தனர். உச்சியில் சூரியன் வந்ததும், திருடர்கள் கைதிகளை விடுவித்து, பாறையின் நிழலில் உட்காரச் சொல்லி, கெட்டுப்போன ரொட்டித் துண் டைக் கொடுத்தனர். ப

42

34. பொய்

9 January 2024
0
0
0

லியேனீட் ஆன்ட்ரீவ் – ருஷியா  "நீ சொல்வது பொய், அது உனக்குத் தெரியும்!" "அதற்கேன் இப்படிக் கத்தவேண்டும்? பக்கத்திலிருக்கிறவர்களுக்கும் தெரிய வேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது." இப்பொழுதும் பொய் சொன்னாள்

43

35. பூச்சாண்டியின் மகள்

10 January 2024
0
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து  அவள் பெயர் பத்தேமா. அவள் பாக்தாத் நகர் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தாள். அவள் நீலத்தாடிவாலாவின் புதல்வி. கண்டதும் காம வெறியை எழுப்பும் மோகனாங்கி. அவளது மதி முகத்தின் வ

44

36. ராஜ்ய உபாதை( பகுதி 1)

10 January 2024
0
0
0

ஹென்றிக் இப்ஸன் (1828-1906)  ஷேக்ஸ்பியருக்கு நிகராக உலகம் கொண்டாடும் சிறந்த நாடக ஆசிரியர் ஹென்ரிக் இப்ஸன். தர்மத்துக்கு வெற்றி அளித்தார் ஷேக்ஸ்பியர்; தர்மம் ஏன் வெற்றி பெற வேண்டும் என்ற கேள்வியை எழுப

45

ராஜ்ய உபாதை( பகுதி 2)

10 January 2024
0
0
0

"அந்தக் கடிதம்..."  "இரு இரு, விரோதிகளைப் பற்றி நான் ஒரு பட்டியல் கொடுத்தேனே. நீ அதிகாரத்தை விடத் தயாராக இருப்பதுபோல நானும் என் எதிரிகளை மன்னிக்க ஆசைப்படுகிறேன். அந்தப் பட்டியலை இந்த நெருப்பில் போட்ட

46

37. ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு

10 January 2024
0
0
0

நதானியேல் ஹாதார்ண் – அமெரிக்கா  எல்லைப்புறத்தைப் பாதுகாப்பதற்காக 1725-ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்ட படையெடுப்பு சரித்திரத்திலேயே கற்பனைக்கு இடந்தரும் பகுதி. அதை எல்லாரும் சாதாரணமாக 'லவல் சண்டை' என்று கூற

47

38. சாராயப் பீப்பாய்

10 January 2024
0
0
0

எட்கார் அல்லன் போ – அமெரிக்கா  அவன் ஆயிரம் குற்றங்களைச் செய்தான்; ஆனால் என்னால் இயன்றவரை பொறுத்தேன். அவன் என் னைத் திட்டி அவமதித்தான். இனி, பழிக்குப் பழி தீர்க்க வேண்டியதுதான் என்று மன உறுதி கொண்டேன்

48

39. சகோதரர்கள்

10 January 2024
0
0
0

யூஜோ யாம மோட்டோ – ஜப்பான்  'அண்ணா, இது நல்லதுதானே?' 'எங்கே, இப்படிக் கொண்டா பார்ப்போம்' என்று மூத்தவன் தன்னிடம் காட்டப்பட்ட காளானைப் பார்ப்பதற்காகத் திரும்பினான். 'ஊங் ஹும், நல்லதில் லை; நான் பிடுங்க

49

40. சமத்துவம்

10 January 2024
0
0
0

ஒரு ருஷிய ஆசிரியர்  நீலக் கடலின் அடிமட்டத்திலே, பிரமாண்டமான மீன் ஒன்று, இரை தேடிக்கொண்டு, உல்லாசமாக நீந்தி வருகிறது. எதிரே ஒரு சின்ன மீன் - அதன் உணவு. பெரிய மீன் அதை விழுங்குவதற்காக, தன் வாயை அகலத் த

50

41. ஷெஹர்ஜாதி - கதை சொல்லி

11 January 2024
0
0
0

ஹென்றி டிரெக்னியர் – பிரான்ஸ்அன்று இரவு ஷெஹர்ஜாதி நன்றாகத் தூங்கவேயில் லை. பகல் முழுவதும் சுட்டுப் பொசுக்கும் வெய்யில். அதனால் மூச்சுவிடக்கூட முடியாதபடி அவ்வளவு இறுக்கமாக இருந்தது. சிலந்தி வலையையும் த

51

42. சிரித்த முகக்காரன்

11 January 2024
0
0
0

அவன் சோகமாக இருக்கிறான், தனியாக இருக்கிறான் என்று சொல்லிவிடுவது எளிது; ஆனால் அவன் எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்தோடேயே இருக்கிறான். அப்படிச் சொல்லிவிட்டாலும், அவனைப் பாட்டிலில் போட்டு அடைத்து லே

52

43. சூனியக்காரி

11 January 2024
1
0
0

ரோனால்டு ஆக்டன் – இங்கிலாந்து அப்பொழுது இலையுதிர் காலம். நானும் ஜேக் மக்கின்ஸனும் பக்கத்து மிராசுதாருடைய காட்டில் திருட்டுத்தனமாகக் கண்ணி வைத்து வேட்டையாடச் சென்றோம். அவனுக்கு வயது இருபதுக்கு மேல

53

44. சுவரில் வழி

11 January 2024
0
0
0

ஆர். முரே கில்கிரைஸ்– இங்கிலாந்து அன்று முற்பகல் சிறிது உஷ்ணமாகவே இருந்தது. பசும்புல் செழித்து வளர்ந்த மைதான வெளியில், ஆங்காங்கு குத்துக்குத்தாகப் பெயர் தெரியாத புஷ்பங்கள் எல்லாம் கணக்கற்று

54

45. தாயில்லாக் குழந்தைகள்

11 January 2024
0
0
0

பிரான்ஸிஸ் பெல்லர்பி – இங்கிலாந்து வேர்த்து விருவிருக்க, கால்கள் தள்ளாட, இரண்டு குழந்தைகள் நடந்து சென்றன. பையன், பதினொரு வயசிருக்கும். முன்னால் நடந்தான். பெண் எட்டு வயசுபோல இருக்கும். பாதை முன் ம

55

46. தையல் மிஷின்

11 January 2024
0
0
0

இவான் கூம்ஸ் அங்கு மனிதனைத் தூங்காது விழிக்க வைத்திருக்க ஒருவித சந்தடியும் கிடையாது. இருந்தாலும், அந்தச் சிறிய கட்டிலில் சுருண்டு முடங்கிக்கொண்டு, நெடுநேரமாக நிசப்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

56

47. தந்தை மகற்காற்றும் உதவி

11 January 2024
1
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து டான் ஜுவான் தன் மாளிகையில் விருந்து மண்டபத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று தரை வெடித்தது. நரக தூதர்கள் வந்து அவனை இழுத்துக் கொண்டு போய் விட்டார்கள்

57

48. தெய்வம் கொடுத்த வரம்

12 January 2024
1
0
0

பியோர்ண்ஸ்டர்ண் பியோர்ண்ஸன் – ஸ்வீடன்  இந்தக் கதையில் வருகிறவன் தான் அவனுடைய ஊரிலேயே ரொம்பவும் பெரிய பணக்காரன். தவிரவும் அந்த வட்டாரத்திலே அவனுக்குத்தான் ரொம்பவும் சொல் சக்தி உண்டு. அவன் பெயர் தார்ட்

58

49. தேசிய கீதம் (பகுதி 1)

12 January 2024
0
0
0

எல்.ஏ.ஜி. ஸ்டராங் – இங்கிலாந்து  லாரி நிறையத் துருப்புக்கள் கன வேகமாகச் சென்று சில விநாடிகள் கூடக் கழியவில் லை. அது இப்பொழுதுதான் நிகழ்ந்தது. வெடியின் அதிர்ச்சி பரீலியை அப்படியே கலங்க வைத்துவிட்டது.

59

49. தேசிய கீதம் (பகுதி 2)

12 January 2024
0
0
0

ஆம். அமெரிக்காவில் ஓர் பெருத்த வெற்றி. நியூயார்க்கில் இரண்டு ஆட்டம்; பிறகு அமெரிக்கா முழுவதிலும் ஓர் நீண்ட வெற்றி யாத்திரை; முடிவில் ஹாலிவுட்டில் ஒரு பிலிம்; சமாதானம் ஏற்பட்ட இரண்டொரு மாதங்களுக்கப்புற

60

49. தேசிய கீதம் (பகுதி 3)

12 January 2024
0
0
0

இந்தச் சம்பவம் பரீலியின் கோபத்தை அதிகரித்தது; ஆனால் பொதுப்படையாக்கியது. இதுவரை தன் தேசவாசிகளான புரட்சிக்காரர் மீது கோபங்கொண்டிருந்தான். இப்பொழுதோ இந்த இடத்தின் பேரிலேயே கோபம். அவன் நெஞ்சில் ஆழமாகப் பய

61

50. துன்பத்திற்கு மாற்று

12 January 2024
1
0
0

ஸீனர் லூயிஜி பிரான்டல்லோ – இத்தாலி  நமது வாழ்க்கையை, முக்கியமாக அதில் காணும் துன்பங்களை, வான வெளியிலே தேஜோமயமாகச் சுழன்று செல்லும் நட்சத்திர மண்டலங்களுடன் ஒப்பிட்டுப்பாரும், அப்பொழுது அது துச்சமாகத்

62

51. துறவி

12 January 2024
0
0
0

ராபர்ட் நியூமான் – ஜெர்மனி  "நான் முதல் முதலில் ஐரோப்பாவிலிருந்து இந்தக் கீழப் பிரதேசங்களுக்கு வந்தபொழுது அது நடந்தது" என்று அவன் ஆரம்பித்தான். அவன் எங்கள் கப்பலின் காப்டன்; பெயர் வான்டர்லான். ஜாதியி

63

52. உயிர் ஆசை (பகுதி 1)

13 January 2024
1
0
0

ஜாக் லண்டன் – அமெரிக்கா  அவர்கள் இருவரும் நொண்டி, நொண்டி ஆற்றங்கரை வழியாகத் தள்ளாடி நடந்தார்கள். கத்தி போல ஊசியாக, தெத்துக்குத்தாகக் கிடந்த பருக்கைக் கற்கள் காலை வெட்டின. அவர்களிருவரும் சோர்ந்து விட்

64

52. உயிர் ஆசை (பகுதி 2)

13 January 2024
1
0
0

நாட்களும் ஓடின. காட்டு ஜீவராசிகள் ஓடியாடித் திரியும் பள்ளத்தாக்குகளை அடைந்தான். மான் கூட்டம் ஒன்று. இருபது இருக்கும். துப்பாக்கி லெக்குக்கு ரொம்பவும் அருகில் துள்ளி ஓடின. அவற்றை விரட்டிக் கொண்டே ஓடினா

65

52. உயிர் ஆசை (பகுதி 3)

13 January 2024
1
0
0

பாறை மீது படுத்துக் கிடந்தவன் சுயப் பிரக்ஞையுடன் விழித்துக் கொண்டான். சூரியன் காய்ந்து கொண்டிருந்தது. காட்டு மான்குட்டிகளின் சப்தமும் தூரத்தில் கேட்டது. சித்தத்தின் அடிவானத்தில் மழையும் காற்றும் பனியு

66

53. வீடு திரும்பல்

13 January 2024
1
0
0

பீட்டர் எக் – நார்வே  மாலுமி பெடர் ஸோல்பர்க்குடைய மனைவி வசித்த குடிசை, ஜனங்கள் பொதுவாக 'லூக்கள் தெரு' என்று சொல்லுவார்களே, அதற்கெதிரில் இருக்கிறது. குடிசையின் ஜன்னல் நன்றாகத் திறந்திருந்தது. அப்பொழுத

67

54. ஏ படகுக்காரா!

13 January 2024
1
0
0

மிக்கெய்ல் ஷோலொகோவ்  அந்த காஸக் கிராமத்தைச் சூழ்ந்து வளர்ந்து நின்ற சாம்பல் பூத்த பசிய நிறம் படைத்த செடிச் செறிவின்மீது சூரியவொளி தெம்பாக விழவில் லை. அருகே ஒரு பரிசல் துறை இருந்தது. அங்கே படகேறி டான்

68

55. யாத்திரை

13 January 2024
1
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  நான் ஹாமர்ஸ்மித் பஸ்ஸின் மேல்தட்டிலிருந்து பார்க்கும் பொழுது, அவர்கள் ஆல்பர்ட் ஹால் மெமோரியல் எதிரில் இருந்த ஒரு வீட்டு வாசல்படியில் உட்கார்ந்திருந்தனர். அன்று வெகு உஷ்ணம். வாடகை

69

56. எமனை ஏமாற்ற...

13 January 2024
1
0
0

மொங்காக்கு ஷோனின் என்ற மகடனான புத்த பிக்ஷு தான் எழுதியுள்ள கியோ-ஜியோ-ஷிந்ஷோ என்ற கிரந்தத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: "ஜனங்கள் வழிபடும் தெய்வங்களில் பல துர்தேவதைகளாகும். அவலோகிதன், தர்மம், பிக்ஷுக்கள

70

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்

13 January 2024
1
0
0

தாமஸ் வுல்ப் – அமெரிக்கா  ஈவிரக்கமற்றுக் கொதிக்கும் அந்த வருஷம் ஆகஸ்டில் யுத்தம் நின்றது. யுத்த தேவதையின் பவனியின்போது நான்கு கணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஒன்று லாங்லிவியல்; விமான மைதானத்தில் உள்ள குத

71

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்(பகுதி 2)

13 January 2024
1
0
0

தயங்கித் தயங்கி மறியும் உடலொட்டிய இந்த வேட்கை, தங்கள் ஜோலியைச் செய்து இவர்கள் நடாத்தும் வாழ்வினிடையிலும் வெளிக்கு அகோரக் கேலிக் கூத்தாகத் தோன்றினாலும், மேஜைக்கு மேஜை போஷகர் தேடி நடக்கும்போது சர்வ ஜாக்

72

58. தர்ம தேவதையின் துரும்பு

13 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர்  குரலிலே அதிகார தோரணையும் அதனுடன் பயமும் கலந்திருந்தது. கடுங்குளிரிலே, இருட்டின் திரைக்குள்ளே, ஈட்டிபோலப் பாய்ந்தது அக்குரல். 'நீ யார்? முதலில் அதைச் சொல்' என்று பதில் கேள்வி பிறந்தது, தி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்