"ஆஹா அப்படியா. பாக்ஷாதான் வயிற்றுக் கடுப்பால் கழிந்து கொண்டிருக்கிறாரே. இன்னும் கொஞ்ச காலத்துக்கு அவரைப் பற்றித் தொந்திரவில் லை. தவிரவும், உன்னுடைய ஆயுதங்களை உன்னிடம் கொடுத்துவிடவேண்டும் என்று உத்திரவு வேறு போட்டுவிட்டார்."
"அந்த ஆயுதங்களை வேண்டுமானால் அவரே வைத்துக் கொள்ளட்டும்" என்றான் குருட்டிக்காவ். பாக்ஷாவுக்கு வியாதி என்று கேட்டதும் அவன் மனத்துக்குச் சங்கடமாக இருந்தது. "திடீரென்று எப்படி வியாதி வந்துவிட்டது? அவர்தான் புஸ்தகம் மாதிரிகைரேகைகளைப் படித்துவிடுவாரே. தன்கையை ஏன் அவர் பார்த்துக் கொள்ளக்கூடாது?" இந்தச் சமயத்தில் ஸ்டர்னருடைய வேலைக்காரன் வந்து அவனுடைய காதுக்குள் ஏதோ ஓதினான். ஜெர்மானியன் மறுபடியும் கிளாஸ்களை நிறைத்துவிட்டு அதிசயமான குரலில், "இப்போ உம்ம மனைவியை நினைத்து அருந்துவோம்" என்றான்.
"சரி, இவனும் அவள் மேல் கண் வைத்துவிட்டான்" என்று உள்ளுக்குள் நடுங்க ஆரம்பித்தான் குருட்டிக்காவ். "இந்தப் பயல்தான் அவள் வலையில் தலைகுப்புற விழுந்து சிக்கிக்கொண்டிருக்கிறான். என் கதி அதோ கதிதான்." கிளாஸை ஏந்திய கை நடுங்கியது. டாஷா வாசல் சன்னலில் நின்று கொண்டு பாடிக்கொண்டிருந்தாள். "உன் னை என்னிடமிருந்து பிரித்து விடுவார்கள். அப்புறம் நீ யாரோ நான் யாரோ" என்பது அந்தப் பாட்டின் அர்த்தம். அவன் உள்ளே நுழைந்ததும் பாடுவதை நிறுத்திக் கொண்டாள். தள்ளாடிக் கொண்டே வந்து கீழே விரித்திருந்த ஜமுக்காளத்தின் பேரில் உட்கார்ந்து கொண்டான் குருட்டிக்காவ். அமிதமான போதையால் முகம் நீலம் பாரித்திருந்தது. அவளிடம் சென்றான். முதுகில் இரண்டு அறை கொடுத்தாள். "ஏன் இப்படிக் குடித்துவிட்டு வந்தாய்? நம்ம கலியாணத் தேதி என்னவென்று ஸ்டர்னர் ஏன் ஒரு துருக்கிப் பயலை ஏவிக் கேட்டுவிட்டான்? இஷ்டமிருந்தால் சொல்லு?" என்றாள் டாஷா. குருட்டிக்காவ் மூஞ்சி நீலத்திலிருந்து பீதி பிடிக்கும் பச்சை பூத்தது. "ஸ்டர்னர் சொல்லிவிட்டானா? சரிதான் நம்ம கதி அதோ கதிதான்." "எப்பப் பார்த்தாலும் அதோ கதியாகப் போனதாக ஊளையிடத்தான் உனக்குத் தெரியும். நீ இப்படிப் பேசும்போதெல்லாம் எனக்குத் தும்மணும்போல வருது" என்றாள் டாஷா. குருட்டிக்காவ் பரிதாபகரமாகக் கை விரித்தான். "கொஞ்சம் பொறுத்துக்கோ. எத்தனையோ வருஷத்துக்கு முந்தி கணக்குத்தான் என் னைக் கொல்லும் என்று சொன்னார்கள். அப்போ நான் பாங்கியிலே வேலை செய்து கொண்டிருக்கும்போது, தப்பாய் பதிந்து வேலைக்குக் கத்தி வைத்துக்கொள்வேன் என்று நினைத்தேன். ஆனால் இப்பொத்தான் எனக்குப் புரிஞ்சுது. ஒரே ஒரு எண், ஒரு சின்ன எண் நிலைமையை அடியோடு மாற்றிவிட்டது. இப்பத்தான் நானும் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். நம்ம கல்யாணத்தேதி என்ன? கேட்டுத் தெரிந்துகொண்டு அப்புறம் நிம்மதியாக இருந்து தொலைக்கிறேன்" என்றான் குருட்டிக்காவ். "செப்டம்பர் ஒன்பதாம் தேதி என்று நான் அவனிடம் சொல்லி வைத்தேன்" என்றாள் டாஷா. "என்ன!" என்று ஆச்சரியத்தால் கத்திக்கொண்டு காலும் கையும் கொப்பும் கிளையுமாக உயர நிற்க ஜமுக்காளத்தில் உதறியடித்துக் கொண்டு சரிந்தான். "என்ன? இந்த காலத்திலேயும் அதிசயங்கள் நடக்குதா?" என்றான் மீண்டும். "என்ன உளறிக் கொட்டுகிறாய். புத்தியாய்ப் பேசு. செத்த தவக்களை மாதிரி காலையும் கையையும் விரித்துக் கொண்டு கிடக்காதே" என்று கூறினாள் டாஷா. "டாஷா, தீரச் செயல்கள், வீரச்செயல்கள் செய்ய வேண்டும் என்று அவைகளைத் தேடிக்கொண்டு அலைபவனல்ல நான். எனக்கு அதிலே கொஞ்சங்கூட பிரியமில் லை. ஆனால் என்ன நடந்திருக்கிறது தெரியுமா? நானோ சாதாரணப் பிரஜை. ஆயிரத்தில் ஒன்று. நானோ வாதம் பண்ணுகிறதில் லை. சர்ச்சை பண்ணுகிறதில் லை. எல்லாம் அந்தக் காலத்திலேயே நடந்த மாதிரி நடக்கட்டும் என்று சொல்கிறதில் லை. ஆனாக்க எல்லாம் நடக்கட்டும் என்றுதான் சொல்லுவேன். டாஷா, உனக்கு ஞாபகமிருக்கா. அப்போது ஒரு சண் டையில யாரோ ஒருத்தன் கொய்த தலை ஒன் றை என் காலடியில் கொண்டு வந்து போட்டானே, அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது? அதை உச்சி மயிரநப் பிடித்துத் தூக்கி வேலி ஓரத்தில் கொண்டுபோய் வைத்தேன். யாருக்கு ஆசையோ அவர்கள் அதை எடுத்துக்கொள்ளட்டும். ஆனால் இப்பொ, இப்பொ என்ன செய்யறதென்றே புரியல்லே" என்றான் குருட்டிக்காவ். "சரிதான் உனக்கு இது தெரியாதா? உன் பெண்டாட்டியை உன்னிடமிருந்து தட்டிக்கொண்டு ஓட, அவளைக் கெடுத்துவிட, குடித்துக் குடித்து சீ என்று போகும்படி அவளைச் சாயாக் குடிக்க வைக்கிறார்கள். என்ன செய்வது? என்று தெரியவில் லை என்று நீ சொல்லிக் கொண்டிருக்கிறாய்." "எனக்குக் களேபரம் எதுவுமில்லாமல் சாகத் தெரியும். வேறு என்ன எனக்குத் தெரியும்?" என்றான் குருட்டிக்காவ். "மறுபடியும் பழைய கதையை ஆரம்பித்துவிட்டாயே. என் னைக் காப்பாற்று என்று நான் ஒரு ஆண்பிள் ளையிடம் கேட்டால், எனக்குச் சாகத்தான் தெரியும் என்று சொல்லுகிறவனிடம் என்னத்தைச் சொல்கிறது? அப்படியானால் செத்துத் தொலை. எக்கேடும் கெட்டு நாசமாய்ப்போ. இத்தனை பலம் கொண்ட உனக்கு ஒரு பெண் ணைக் காப்பாற்றத் தெம்பில் லையா?" என்று சொல்லிவிட்டு வீட்டைவிட்டு வெளியே ஓடிப்போனாள். அவன் ஜமுக்காளத்தில் "செத்த தவளை" மாதிரி கிடந்தான். தலையைப் பிடித்துக்கொண்டு யோசனை செய்தான். பகல் கழிந்தது. நன்றாக இருட்டின பிற்பாடு முற்றத்தில் காலடிச் சப்தம் கேட்டது. எழுந்து ஜன்னலண் டை போனான். முற்றத்தில் அவனுடைய மனைவியும் ஸ்டர்னரும் நின்றுகொண்டிருந்தார்கள். வெளிவாசலில் குதிரைத் தலைகள் தெரிந்தன. "அவர்கள் ஓடிப்போகிறார்களாக்கும். சரிதான் ஓடிப்போகட்டுமே. வேறு எதையாவது யோசிப்போம்" என்று சொல்லிக்கொண்டே இறங்கி முற்றத்திற்கு வந்தான். ஸ்டர்னர் உதட்டில் விரல் வைத்து மௌனமாக இருக்கும்படி சமிக்ஞை செய்தான். "சரி, நீ நினைத்ததை முடித்தாயா?" என்று சொல்லிக்கொண்டு டாஷா அவன் கைகளை முத்தமிட்டாள். அவன் அவளைப் பலமாக இழுத்துத் தழுவ பற்கள் இடிபட்டன. ஸ்டர்னர் ஒரு குதிரையைக் குருட்டிக்காவ் முன்னால் கொண்டு நிறுத்தி, "உங்கள் ரெண்டு பேரையும் நகரத்துக்கு வெளியே அழைத்துக் கொண்டு போய் விட்டுவிடுவார்கள்" என்றான். டாஷாவும் குருட்டிக்காவும் மௌனமாகக் குதிரை மேல் ஏறிக்கொண்டார்கள். ஸ்டர்னருடைய வேலைக்காரன் குதிரையின் லகானைப் பிடித்து அழைத்துச் சென்றான். ஜனநடமாட்டமில்லாத சந்துபொந்துகள் வழியாக அவர்கள் நகரத்தைவிட்டு வெளியேறினார்கள். ஊருக்கு வெளியே வந்து சேர்ந்ததும் இரண்டு குதிரைகளையும் ஒன்றுக்குப் பக்கத்தில் ஒன்றாக ஒரு வரிசையில் நிறுத்திவிட்டு மறைந்தான். "இதற்கு என்ன அர்த்தம்" என்றான் குருட்டிக்காவ். குதிரைமேல் சற்று நகர்ந்து உட்காரவும் பயப்பட்டான் அவன். அங்கு படி காலிலிருந்து நழுவியது. கட்டை விரல் இருளில் நுழைந்து துழாவி வெகு சிரமப்பட்டான் குருட்டிக்காவ். "அர்த்தமா? அட முட்டாளே, உபயோகமில்லாத கந்தல் களுக்காணி மூட்டை, அட வடிகட்டின அசடே, கட்டித் தங்கமே, அதோ தெரியுது பார் வெளிச்சம், அந்தக் கிராமத்துக்கு நாம் விடியறதுக்கு முன்னாலே போய்ச் சேரணும்... புரிஞ்சுதா? குதிரையை ஜாக்கிரதையாக நடத்திக்கொண்டு போ." "சரி" என்றான். குதிரைகள் நடந்தன. வீட்டுக்குள் அந்தத் தொலைக் கண்ணாடிகளை வைத்துவிட்டு வந்துவிட்டோ மென்று திடீரென்று ஞாபகத்திற்கு வந்தது. நினைக்க நினைக்க வெட்கமாக இருந்தது. இந்த உணர்ச்சி படிப்படியாக வளர ஆரம்பித்தது. சுமார் ஒரு மணி தேசாலத்திற்கு அப்புறம் அவனையே ஆட்படுத்தியது. குதிரைகள் நாலு பாதைச் சந்தியை எட்டின. "இப்பொழுது பேசுவதற்கு எனக்கு அவகாசம் உண்டு..." என்று ஆவேசம் கொண்டவனைப்போல் ஆரம்பித்தான் குருட்டிக்காவ். "நான் ஒன்று சொல்லித்தான் தீர வேண்டும். நான் ஒரு பெண்ணுக்காகச் சண் டை போட்டுப் பார்த்தேன். அது ஒண்ணுமில்லாமல் போச்சு. ஒருத்தனுக்கு விஷம் கொடுக்கணும்னு ப்ளான் போட்டேன். அவன் காலை ஒடித்துக் கொண்டான். இன்னொரு போட்டிக்காரனைக் கண்டு மிரண்டேன். அந்த அப்பாவிப் பயலைக் கொன்று போட்டார்கள். நாலாவது நபரைக் கத்தியால் குத்த நினைத்தேன். அவனுக்கு வயிற்றுக் கடுப்புக் கண்டது. ஐந்தாவது நபரை நம்பவே இல் லை. அவன் பூரண யோக்யனாக இருந்தான். ஈ, கொசு ஆடாத இந்தக் கிராமத்திலே ஆறாவது ஏழாவது எட்டாவது நபர்களைச் சந்திக்கத்தான் போகிறேன். என்ன நேருமோ எனக்கே தெரியவில் லை. இனி மேற்கொண்டும் இப்படிச் சுமந்துகொண்டு போக எனக்குப் பலம் இல் லை. நான் கதாநாயகனாகப் பிறக்கவில் லை. என் குடும்பத்திலேயே பரம்பரையாகக் காசநோய் உண்டு. இனிமேல் என்னால் தாங்க முடியாது" என்று சொல்லிக் கண்ணீர் விட்டான். கண்ணீர் குதிரையின் கழுத்தில் உதிர்ந்தது. திடீரென்று ஒற்றைக்கொரு துளியாக மழை பெய்வதைக்கண்டு ஆச்சரியத்தால் தலையை நிமிர்த்தியது. பிறகு அந்த ஸ்திரி தன் குதிரையைப் பக்கத்தில் கொண்டு நெருங்க அது அவன் காலில் இடிபட்டது. டாஷா கைகளை நீட்டி அவனுடைய குதிரையின் லகானைப் பற்றிக்கொண்டாள். விசேட உரை சாம்பல் பூத்த ஆட்டு மந்தை டிப்ஸில் என்ற இடத்தில் உள்ள ஷோட்டா ரஸ்டா வேலி குடியேற்றத்தின் வழியாகப் போய்க் கொண்டிருந்தது. மந்தையின் இடுக்குகளில் கிடாக்களின் தாடி தரையைப் பெருக்கியது. துணிச்சலான குட்டி டிராம் லயன்கிட்டே நெருங்கிவிட்டால், செம்பட்டை படிந்த மந்தைக் காவல் நாய்கள் அங்குமிங்கும் ஓடிக் குரைத்து அவற்றை வழிக்குக் கொண்டுவந்தன. தாங்க முடியாத புழுதிப் பொம்மலில் தும்மிக்கொண்டு குருட்டிக்காவிடம் இது என்ன என்று கேட்டேன். "இந்த மந்தைகள் மேய்ச்சலுக்காக ஆட்டிடையர்களுடன் இடத்துக்கிடம் போகும் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே. இப்பொழுது பட்டணத்துக்குள் வந்துவிட்டன. வெகு சீக்கிரமாகப் பட்டணத்தைக் கடந்து ஆகவேண்டும். அதற்காகத்தான் பட்டணத்துக்கு உள்ளே குறுக்காக விழுந்து ஓடுகின்றன. நாடகக் கொட்டகையைத் தாண்டிக்கொண்டு கடைசி ஆடு போகும்போது பொழுது சாய்ந்து இருட்டிவிட்டது. "நேரமாகிவிட்டது. சாயங்காலம் பார்க்கவேண்டிய கடமைகளைக் கவனிக்கப் பாங்கிக்குப் போக வேண்டும். நான் உழைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் சீட்டுக் கொடுத்து விடுவார்கள்..." என்றான் குருட்டிக்காவ். சிறிது தொலைவிலே, ஒரு சின்ன வேலிக்கு மறுபுறத்தில் ஆபீஸ் 'அமர்த்தலுடன்' ஒரு சர்ச் நின்றது. பைஜாந்திய மனையடி சாஸ்திரத்தைக் காப்பி அடித்த தினுசில் கட்டப்பட்ட புராதனக் கட்டுக்கோப்பு. கருங்கல் அடுக்கு வரிசைகள் மங்கலாகப் பளபளக்கும் கலசங்களாகப் பூத்தன. கட்டடத்தின்மேல் சன்னலில் வெளிச்சம் தெரிந்தது. நிர்க்கதியானது போல் மௌனமேறிய கருங்கல் முன் மண்டபத்தின் வழியாக உள்ளே சென்றோம். சமய சம்பிரதாயத்திற்கும் அந்தஸ்துடன் கூடிய கிறீச்சலுடன் செப்புத் தகடு பதித்த செதுக்குளிச் சிற்பம் மலிந்த கதவு உட்புறம் நோக்கித் திறக்க நாங்களும் உள்ளே நுழைந்தோம். அவசர அவசரமாக வந்த சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியவில் லை. வெறிச்சோடிக் கிடக்கும் சர்ச்சின் மத்தியில், சாப்பாட்டுக்கடை மாதிரி மேஜைகள் வரிசையாகப் போடப்பட்டிருந்தன. வாலிப கம்யூனிஸ்டுகள். மேஜையருகில் கும்பல் கும்பலாக உட்கார்ந்து சதுரங்கம் முதலிய விளையாட்டுகள் ஆடிக்கொண்டிருந்தார்கள். அகண்டாகாரமான வயல்வெளியின் நிசப்தம் அங்கு குடியேறியிருந்தது. சுவரில் அகழ்ந்திருந்த மாடல்கள் இரண்டில் ஸாக்ரடீஸ் சிலையும் கோகோல் சிலையும் எனக்கு அடையாளம் கண்டுபிடிக்க முடிந்தது. சர்ச் விதானத்தில் பொருளாதார சூத்திரங்கள் தீட்டப்பட்டிருந்தன. சுவர்களில் புகைப்படங்களும் விளம்பரங்களும் ஒட்டப்பட்டிருந்தன. மையக் கலசத்தின் குடைவுக்குள் நீளமான தாடியுடைய ஒரு கிழவன் படம் தீட்டப்பட்டிருந்தது. அவனுடைய தாடிச்சிக்கலில் இரண்டு புறாக்கள் அகப்பட்டுத் தத்தளித்தன. அவன் அந்தக் காலத்தில் கடவுளாக இருந்தான். "சாம்பிராணி வாசனையிலே சதுரங்கம் விளையாட நான் அடிக்கடி வருவது வழக்கம். பொதுவாகப் பார்க்கப்போனால், என் வாழ்வு அப்படிக்கு ஒன்றும் மோசமில் லை. சுமாராக சுகமாகத்தான் இருக்கிறது. சமயம் கிடைத்தபோது நீயும் இங்கே வா என்று சொல்லி வைக்க விரும்புகிறேன். இங்கே நல்ல ஆட்டக்காரர் பலர் உண்டு. கலசத்தில் தொங்குகிற கிழவனைத்தான் கூப்பிட்டுக்கொள்ள அவர்களுக்கு முடியவில் லை. அவன் அவர்களுக்கு எட்டாத தொலைவில் இருக்கிறான்" என்று குருட்டிக்காவ் பிரமாத ரகசியம் எதையோ ஓதுவதுபோலக் காதுக்குள் குசுகுசுவென்றான். "ஏன் இப்படிக் குசுகுசு என்கிறாய்?" என்று நான் குரல் கொடுத்தேன். "ஏன் இப்படிக் குசுகுசு என்கிறாய்?" எனக் கலசத்திலிருந்து கிழவன் கத்தினான். "ஏன் குசுகுசு என்கிறாய்?" ஸாக்ரடீஸும், கோகோலும் போட்டி போட்டுக்கொண்டு தத்தம் மாடங்களிலிருந்து கத்தினார்கள். "நல்ல அபூர்வமான வேலைப்பாடு! சப்தத்தை அபூர்வ கோணங்களிலிருந்து திருப்பிவிட கணக்குப் போட்டுக் கட்டியிருக்கிறார்கள்" என்றேன். "இந்தச் சர்ச்சில் இருந்த சப்தத்தை இப்படித் தெறிக்கவிடாமல் அமுக்கி, வந்த சிலைகளும் விரிப்பும் அகற்றப்பட்டபோது எதிரொலியைக் காதுகொடுத்துக் கேட்க முடியல்லே" என்று சொல்லிக்கொண்டு குருட்டிக்காவ் என் னைப் பலிபீடத்தினருகில் அழைத்துச் சென்றான். "இந்த இடத்தில் நாடகம் போட முடியாது. ஆனால் மௌன பிலிம் காட்சி நடத்த சௌகரியமாக இருக்கும்" என்றான். பலி மேடையில் மூன்று மேஜைகள் போடப்பட்டிருந்தன. மூன்றின் பேரிலும் விலாசமிட்டிருந்தது. காம்ரேட் யாஸ்ட்ரெப் மேஜை, காம்ரேட் பிரான் டாஷ்விலி மேஜை, காம்ரேட் கிரான்ட்ஸ் மேஜை. அவைகளை எல்லாம் பார்த்துவிட்டு வெளியேறி நடந்தோம். மாலையிருட்டு மயங்கி வந்து கொண்டிருந்தது. பூக்கடை ஒன்றில் வெள் ளை மஸ்லின் உடுத்திய ஒருத்தி எங்களுக்காகக் காத்திருந்தாள். "என் மனைவி காம்ரேட் டாஷா" என்று குருட்டிக்காவ் அறிமுகம் செய்துவைத்தான். "உம்முடைய மனைவி கலகலப்பாக உழைப்பவள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்" என்றேன். "கலகலப்பு இருக்கலாம். உழைப்பைப்பற்றி அவ்வளவாகச் சொல்வதற்கில் லை. ஒரு தடவை ஒருவன் ஏறியிருந்த குதிரையின் லகானைப் பிடித்து அதை வேறு திசையில் திருப்பினதென்னவோ உண் மை" என்றாள். "லகான் இல் லை, சேணத்தைப் பிடித்துக்கொண்டு" என்று திருத்தினான் குருட்டிக்காவ். "கடிவாளமோ" என்றேன் நான். "அது என்னமோ எனக்குப் பெயர் எல்லாம் தெரியாது. தொழிலாளர் தேகப்பயிற்சிக் கூடத்திற்குப் போகிறேன். உங்களுக்கு வேறு ஒரு வேலையும் இல் லை என்றால் என் னை அங்கே அழைத்துச் செல்லலாம்" என்றாள்.