shabd-logo

37. ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு

10 January 2024

0 பார்த்தது 0

நதானியேல் ஹாதார்ண் – அமெரிக்கா

 எல்லைப்புறத்தைப் பாதுகாப்பதற்காக 1725-ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்ட படையெடுப்பு சரித்திரத்திலேயே கற்பனைக்கு இடந்தரும் பகுதி. அதை எல்லாரும் சாதாரணமாக 'லவல் சண்டை' என்று கூறுவார்கள். சில விஷயங்களை ஜாக்கிரதையாக மறந்துவிட்டு, கற்பனை, அங்கு மடிந்தவர்களின் வீரத்தைப் புகழ்கிறது. போர் செய்த இரு கட்சியினரும் (அந்நாட்டுப் பூர்வீகக் குடிகளான சிவப்பு இந்தியர்களும் வெள் ளையர்களும்) நாகரிக சமூகம் அக்காலத்தில் வீரம், ஆண்மை என்று போற்றக்கூடிய யுத்த தர்மத்திற்கு ஏற்பவே போர் புரிந்தனர். போரில் படையெடுத்த வெள் ளையர்கள் சிதறினாலும், அப்போர் பூர்வீகக் குடிகளை பல வருஷங்கள் வரை ஒடுக்கிவிட்டது என்று சரித்திரக்காரர்கள் சொல்லுகிறார்கள். லவல் சண்டையில் முறியடிக்கப்பட்டுத் தப்பி ஓடி வந்த வீரர்களின் சரித்திரம் சிறிதும் வழுவில்லாமல் காப்பாற்றப்பட்டு வருவதால், கீழே தரப்படும் கதையின் உண் மைப் பெயர்கள் - அவை கற்பனையால் மறைக்கப்பட்டிருப்பினும் - தெரிந்துவிடும் என்று அஞ்சுகிறேன். காலை நேரம். சூரிய கிரணங்கள் மரக்கிளை உச்சியில் அசைவாடிக் கொண்டிருந்தன. அதன் அடியில் முந்திய இரவு படுகாயத்துடன் சோர்ந்து படுத்திருந்த இருவர் இன்னும் கண் விழிக்கவில் லை. அவர்களுடைய படுக்கை காய்ந்துலர்ந்த சருகுகள்தான். அவர்கள் பக்கத்தில் ஒரு பெரும் கருங்கற்பாறை கல்லறை மீது நிறுத்தப்படும் பிரமாண்டமான குத்துக் கல் லைப்போல் நின்றது. இவ்விருபிரயாணிகளின் சமீபத்தில் சிறுசிறு ஓக் மரக் கன்றுகள் நின்றன. இருவரில் ஒருவன் வயோதிகன்; மற்றவன் வாலிபன். கிழவன் ஏற்ற படுகாயம் அவனை உறங்க விடவில் லை போலும். சூரியோதயமானவுடனேயே அவன் மிகவும் சிரமத்துடன் எழுந்து உட்கார்ந்தான். தலை நரைத்திருந்தது; காயமில்லாவிட்டால் எதையும் தாங்கக்கூடிய தேகவலிமை படைத்தவன்; ஆனால் அவன் முகம் வெளிறி, கோடுகள் விழுந்து, வாழ்க்கையின் முடிவான யாத்திரை ஆரம்பித்து விட்டது என்பதைக் காண்பித்தது. பக்கத்திலிருந்து வாலிபன் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். தூக்கத்திலும் ஒரு கை துப்பாக்கியைப் பிடித்த வண்ணமாக இருந்தது. கனவில் மறுபடியும் போரை நடத்துகிறான் போலும். திடீரென்று கூக்குரல் விட்டுக்கொண்டு எழுந்தான். உடனே கனவுடன் என்ற பிரக்ஞை வந்தது. உடனே தன்னுடன் இருப்பவனின் உடல் நலத்தைப் பற்றி விசாரித்தான். "ரூபன், இதோ இந்தப் பாறைகள் எனது தலைக்கல். இனி என்னால் நடப்பது கஷ்டம். நான் ஏற்ற குண்டு எதிர்பார்த்ததைவிட அதிக சிரமத்தைக் கொடுக்கிறது. இந்த மலையின் அடுத்த பக்கத்தில் நமது வீடு இருந்தாலும் என்னால் இனி ஒரு அடி எடுத்துவைக்க முடியாது" என்றான் அந்தக் கிழவன். "மூன்று நாள் பிரயாணம் உங்களுக்கு மிகுந்த களைப்பைத் தந்துவிட்டது. ஏதாவது காய் கிழங்குகள் இருந்தால் பார்த்து வருகிறேன். அதன் பிறகு என்மேல் சாய்ந்து கொள்ளுங்கள். மெதுவாக நான் உங்களை கைத்தாங்கலாக அழைத்துச் செல்லுகிறேன்." "இன்னும் இரண்டு நாள் கூட நான் பிழைத்திருக்க மாட்டேன். உனக்கோ என் னைவிடப் படுகாயம். நீயாவது உன் னைக் காப்பாற்றிக் கொள். எனக்கோ நம்பிக்கை கிடையாது. நான் இங்கிருந்தே சாகிறேன்." "அப்படியானால் நானும் உம்முடன் இருப்பேன்." "அது வேண்டாம். சாகப்போகிறேன். இந்த ஆசையையாவது நிறைவேற்று. ரூபன்! உன் னை நான் என் மகன் போலப் பாவிக்கிறேன். உன் தந்தையின் உத்தரவை ஏற்று இங்கிருந்து புறப்பட்டுப் போ!" "நீர் என் னை மகன் போல் பாவித்து நடத்தியதற்காக நான் உம்மை இந்தக் காட்டிலே விட்டு விட்டு நடையைக் கட்டிவிட வேண்டுமாக்கும்! நீர் இறப்பது உண் மையானால் கடைசி வரையிலிருந்து உமக்கு வேண்டிய சாமக் கிரியைகளை நடத்திய பின்பே போவேன். எனது பலமும் போனால் நாம் இருவரும் ஒரே குழியில் படுத்துக் கொள்வோம். பின்பு தெய்வம் சக்தியைக் கொடுத்தால் நான் போகிறேன்." "பட்டணங்களிலே உயிருடன் இருப்பவர் பார்க்காமல் இருக்க, இறந்தவர்களைப் புதைக்கிறார்கள். இவ்விடத்திற்கு இன்னும் 100 வருஷங்களுக்குள் யார் வரப் போகிறார்கள்? தெய்வ மணம் கமழும் காற்றில் நான் ஏன் அமைதியை ஏற்கலாகாது? சாகும்பொழுது இந்தப் பாறையில் உன் பெயரை எழுதுவேன். அதன் பின் அமைதிதான். முட்டாள்தனமாகத் தாமதிக்காதே!" இவன் வார்த்தைகள் ரூபன் மனத்தில் ஆழமாகப் பதிந்தன. "போரில் மரணத்தை ஏற்பது கஷ்டமில் லை. வீட்டிலே குடும்பத்தின் மத்தியிலும் அப்படித்தான். ஆனால் தனியாக, தனியாகச் சந்திப்பது..." "ரூபன் போர்ன், அதற்கு நான் அஞ்சவில் லை. நீ வாலிபன், உன் முன்பு வாழ்க்கை காத்திருக்கிறது." "உமது மகள் - அவளை எப்படிச் சந்திப்பேன்? காட்டில் உம்மை மடியும்படியாக விட்டுவிட்டு வந்தேன் என்று அவளிடம் சொல்லவா நான் அங்கு போகவேண்டும்! அவளிடம் அதைச் சொல்லப் போவதைவிட இங்கு உம்முடன் மடிவது நல்லதல்லவா?" என்றான் ரூபன் போர்ன். "எனது கட்டாயத்தின் பேரிலேயே வந்ததாகச் சொல்லு. இருவரையும் நான் ஆசீர்வதித்ததாகச் சொல்லு. நான் இறக்கும்பொழுதாவது இருவரும் வாழ்க்கைப் பாதையில் சுகமாகச் செல்லுவீர்கள் என்ற நினைப்பில் என் உயிர்போகட்டும்." இவ்வாறு பேசும் பொழுது, மிகுந்த ஆவேசத்துடன், தன் ரணத்தின் வலியையும் பொருட்படுத்தாதவன் போல் நிமிர்ந்து உயர்ந்தான் வாலிபன். அவனது ஆவேச முகக் குறியெல்லாம் தன் நன் மைக்காகச் செய்யும் முயற்சி என்றே நினைத்தான். ரோஜர் மால்வின் மறுபடியும் தொடர்ந்து, "நான் அனாவசியமாகப் பயப்படுத்திக் கொள்ளுகிறேன். ஒரு வேளை க்ஷேமமாய்த் திரும்பி வந்து என் னை அழைத்துப் போகலாம். முன் தடவை இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்தது. நானும் எனது நண்பனும் படுகாயப்பட்டோ ம். எனது நண்பன் என் னைப் போகும்படி கட்டாயப்படுத்தி அனுப்பினான். அப்பொழுது உன் னைப் போலவே நான் வேண்டாவெறுப்புடன் மறுத்து, பின்பு போனேன். சிறிது தூரத்திலேயே உதவி கிடைத்தது. இப்பொழுது அந்த நண்பன் இன்னும் உயிரோடிருக்கிறான்" என்றான். "நான் சமயத்தில் வந்து உம்மைக் காப்பாற்ற முடியுமென்று நினைக்கிறீரா?" என்று ரூபன் வயோதிகனைக் கேட்டான். "அன்று நான் அவனைக் காப்பாற்றினேன்" என்றான் வயோதிக ரோஜர் மால்வின். இதைக் கேட்டதும், போனால் சீக்கிரம் உதவி அழைத்துக் கொண்டு வரலாம் என்று ரூபனுக்குப் பட்டது. "என் னை இந்தப் பாறையின் மீது சாய்ந்து உட்கார்ந்திருக்கும்படியாகத் தூக்கி வை. அப்பொழுது நீ நெடுந்தூரம் போகும் வரையில் உன் னைப் பார்த்துக் கொண்டிருக்க முடியும். என் னைத் தூக்கி வைத்து விட்டு நீ சீக்கிரம் புறப்படு!" என்றான் வயோதிகன். ரூபன், கிழவன் இஷ்டப்படியே அவனைப் பாறையில் சாய வைத்துவிட்டு, அவன் உணவுக்காகச் சில கிழங்குகளையும், அவன் படுத்திருப்பதற்காகத் தழைகளையும் சேகரித்து வைத்துவிட்டு, மனம் இருபக்கமும் இழுக்க, ரணம் ஒருபுறம் வருத்த, தள்ளாடித் தள்ளாடி நடந்து சென்றான். ரூபன் புறப்பட்ட நேரம் நல்ல நேரம் இல் லையென்றுதான் சொல்ல வேண்டும். வழியிலே புயலும் சண்டமாருதமாக ஆரம்பித்துத் திசை தெரியாமல் செய்து விட்டது. ரூபன் வழி தவறினான். காடுகளில் வழி தவறினவர்களுக்கு, என்ன கதி தெரியுமா? சித்தப்பிரமை ஏற்படுவது இலகு; ரூபனுக்கும் அந்தக் கதிதான் கிடைத்தது. வயிற்றில் பசி, சிறுகுடல் பெருங்குடலைத் தின்னும் பசி. எதிரே மான்கள் கூட்டம் கூட்டமாக வந்து என்ன பயன்? கையில் இருந்த துப்பாக்கிக்கு மருந்து இல் லை. வழியில் முளைத்த பெயர் தெரியாத செடிகளின் பழங்கள் அவனுடைய உயிரை உடலுடன் ஒட்டவைத்தன. இந்த நிலையில் அவனைக் கண்ட சிலர் காட்டிற்கு மிகவும் அருகில் உள்ள ஒரு ஊருக்கு அழைத்துச் சென்றனர். நல்ல காலம், அது அவனுடைய ஊராக இருந்தது. ரணத்தால் புத்தி கலங்கியவன் என்ன சமாசாரத்தைச் சொல்ல முடியும்? டோ ர்க்காஸ் (அதுதான் அந்த வயோதிக ரோஜர் மால்வினின் மகள் பெயர்) வியாதியஸ்தனான ரூபனை ஏற்று சிகிச்சை செய்து வந்தாள். நெடுநாள் வரை ரூபன் ஜன்னி கண்டு பிதற்றினான். ஆனால், காயம் வரவரக் குணம் அடைந்துகொண்டு வந்தது. ரூபனுக்குப் புத்தியும் தெளிந்தது. ரூபன் குணம் அடைந்தான் என்பதைக் கண்டதும் டோ ர்க்காஸுக்குத் தகப்பனாரைப் பற்றிய விவரங்களை அறிய வேண்டுமென்று பல நாள் ஆவல் கட்டை மீறியது. "ரூபன்! என் தகப்பனார் கதி என்ன?" என்று அவனைக் கேட்டுவிட்டு, முகத்தையே கவனித்தாள். "உன் தகப்பனாருக்கு, சண் டையில் பலத்த காயம்பட்டது. மெதுவாக நான் அவரை அழைத்துக்கொண்டு ஒரு குளக்கரைக்கு வந்தேன். அங்கே தண்ணீர் குடித்துவிட்டு, மெதுவாகக் கைத்தாங்கலாக அவரை அழைத்துக்கொண்டு, காட்டுவழியாக வந்தேன். மூன்று நாள் இப்படிக் காட்டு வழியாக நடந்து வந்தோம். நான் எதிர்பார்த்ததை விட அதிக தூரம் அவரால் நடக்க முடிந்தது. நான்காவது நாள் காலை, அவரால் எழுந்திருக்க முடியவில் லை. உயிர் மெதுவாக..." "பின்பு, இறந்து போனார்!" என்று மெதுவாக முடித்தாள் டோ ர்க்காஸ். ரூபன் பதில் பேசவில் லை. வெட்கத்தாலும் பலவீனத்தாலும் தலையணையில் முகத்தை மறைத்துக் கொண்டான். டோ ர்க்காஸ் இதை நெடுநாளாக எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் அவளுக்கு வருத்தம் சகிக்க முடியவில் லை; கண்ணீர் விட்டாள். "எனது தகப்பனாருக்குக் கடைசிக் கிரியைகளைச் சரிவரச் செய்தாயா?" என்று ஏங்கிக்கொண்டே கேட்டாள். "எனக்கு மிகவும் சோர்வாக இருந்தது. ஆனாலும், என்னால் முடிந்ததைச் செய்தேன். அவர் தலைப்பக்கத்தில் உயர்ந்த தலைக் கல் இருக்கிறது. ஐயோ, அவர் இருக்கும் இடத்தில் நானும் இருக்கக்கூடாதா?" என்றான். இந்தச் செய்தி ஊரில் பரவியது. ஊரார் எல்லோரும் அவனைப் புகழ்ந்தார்கள். நீங்களும் எதிர்பார்க்கிறபடி, டோ ர்க்காஸுக்கும் ரூபனுக்கும் கலியாணம் நடந்தது. ஆனால், என் கதை காதல் கதை அன்று. கலியாணச் சமயத்தில் புதுப் பெண், சந்தோஷத்தில் ஏற்பட்ட நாணத்தால் முகம் சிவந்தாள்; ஆனால், கலியாண மாப்பிள் ளையின் முகம் சவம் போல் வெளுத்திருந்தது. ரூபன் மனத்தில் ஒரே எண்ணம் பேய் போல் நின்று தலை விரித்தாடியது. அவன் தனது கோழைத்தனத்திற்காக எப்பொழுதும் வருந்தினான். ரோஜர் மால்வினை விட்டுவிட்டு வந்ததற்கு ஊரார் சுடுசொல் ஏற்படாவிட்டாலும், உள்ளம் அவனை இடித்து இடித்துக் காண்பித்தது. வருஷங்கள் கழிந்தால் ஞாபகம் மறையும் என்பார்கள். ஆனால், ரூபன் விஷயத்தில், அதற்கு நேர் மாறாக நடந்தது. அவன் காதில் யாரோ ஒருவர், இடைவிடாது, "நீ அவ்விடத்திற்குப் போய் உனது பிரதிக்ஞையை நிறைவேற்று" என்று கூறுவது போல் கேட்டுக் கொண்டே இருந்தது. வருஷங்கள் ஏற ஏற, துன்பம் வளர்ந்ததே ஒழியக் குறைந்தபாடில் லை. ரூபனின் குடும்ப வாழ்க்கையும் அப்படித்தான். டோ ர்க்காஸுக்கு ஏராளமான சொத்து இருந்தது. இருந்தும், ரூபனுக்கு அதைப் பண்படுத்தி வளர்க்கத் தெரியவில் லை. காலப்போக்கில் வறுமையும் வீட்டில் குடியேறியது. இந்தச் சம்பிரமத்தில் டோ ர்க்காஸுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பிள் ளையின் அச்சும் அசலும் தகப்பனாரைப் போல இருந்தன. அதற்கு ஸைரஸ் என்று பெயரிட்டான். குழந்தையைப் பார்க்கும்பொழுதெல்லாம் ரூபனுக்குத் தனது குழந்தைப்பருவ ஞாபகம் வந்தது. தன் னை, சென்று போன தனது வாழ்க்கையை, மீண்டும் ஞாபகப்படுத்தும் குழந்தையின் மீது வெறுப்பு அதிகரித்தது. இப்படியாகப் பதினாறு வருஷங்கள் கழிந்தன. அதற்குள் ரூபனும் காட்டில் போய் மரங்கள் வெட்டி வந்து ஜீவனம் செய்ய வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டான். மே மாதம் ஆரம்பம், ரூபன் காட்டிற்குப் புறப்பட்டான். அங்கெல்லாம் காடுகளுக்குப் போவது என்றால் ஒரு நாளில் திரும்பும் வியாபாரம் அல்ல. குடும்பத்துடனேயே செல்ல வேண்டியிருக்கும். ரூபனும் அவ்வாறு புறப்பட்டான். காடுகள் வழியாகச் செல்வதற்கு, மனத்தில் கவலை இல்லாவிட்டால், அந்தரங்கமான வேறொரு ஆசை இல்லாவிட்டால், சந்தோஷமாக இருக்கும். டோ ர்க்காஸுக்கும் அவளுடைய மகனுக்கும் அப்படித்தான். ஆனால் ரூபன்? ரூபன் சாதாரணமாகப் போகும் பாதைகளை விட்டு வேறு ஒரு திசை நோக்கியே சென்றான். அவன் மகன் இதைக் குறித்துக் கேட்டும் பதில் அளிக்காததினால் அவனும் கேட்பதை விட்டு விட்டான். இப்படியாக நெடுந்தூரம் சென்று, ஒருநாள் சாயங்காலம் ஓர் இடத்தில் தங்கினார்கள். ரூபனுக்கு அந்த இடத்தைப் பார்த்தவுடன் பழைய நினைவு வந்தது. அவர்களை ஒரு மரத்தடியில் தங்கும்படி சொல்லிவிட்டுத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். அப்பொழுது டோ ர்க்காஸ், "இன்று என்ன நாள் என்பது ஞாபகம் இருக்கிறதா?" என்றாள். ரூபன் பதில் பேசாது திரும்பி ஏறிட்டுப் பார்த்தான். சிறிது நேரம் கழித்து, "எனக்கு ஞாபகம் இல்லாமல் இருக்குமா?" என்று சொல்லிக்கொண்டு தலைகுனிந்தபடியே போய்விட்டான். சிறிது நேரம் சென்றபின் அவனுக்கு சுயபிரக்ஞை வந்தது போல் நின்று விழித்துப் பார்த்தான். அதே இடந்தான். தனது பாவத்தைத் தீர்க்க வேண்டிய இடம். இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, சற்று உயர்ந்த இடத்தில் புதருக்குள் சலசலவென்று சப்தம் கேட்டது. உடனே துப்பாக்கி எடுத்துச் சுட்டான். அந்த இடத்திலிருந்து ஏதோ ஒரு ஹீன சுரத்தில் குரல் ஓங்கி மடிந்தது. டோ ர்க்காஸ் வெகு நேரமாக உட்கார்ந்திருந்தாள். பக்கத்தில் இருந்த பையன் தகப்பனார் வருகிறதற்கு நேரம் ஆகிறது என்று தானாவது உணவுக்கு ஏதாவது மிருகம் அடித்துக் கொண்டு வருவதாகச் சொல்லிப் புறப்பட்டான். காட்டில் நன்றாகப் பழகிய மகனை அனுப்புவதற்குத் தாயாருக்கு ஏன் பயம் தோன்றப் போகிறது! இவன் போய் நெடுநேரம் ஆகியும் ஒருவராவது திரும்பவில் லை. தூரத்தில் எங்கோ துப்பாக்கி வெடிச்சப்தம் கேட்டது. டோ ர்க்காஸ் தனது மகன் தான் ஏதோ ஒரு மானைச் சுட்டிவிட்டான் என்று நினைத்து, சப்தம் கேட்ட திசையை நோக்கி, மகன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டு நடந்தாள். அந்த ஒரு சப்தத்தைத் தவிர வேறு கேட்காததினால் உத்தேசமாக அத்திசையையே நோக்கி நடந்தாள். சிறிது தூரம் சென்றதும் எதிரே ஒரு பாறை தென்பட்டது. அதைச் சுற்றிக் கொண்டு, மகன் பெயரைக் கூவி அழைத்துக் கொண்டு நடந்தாள். எதிரில் ரூபனும் வேறு திசையில் அவளை நோக்கி வந்தான். இவர்களுக்கிடையில் ஏதோ ஒரு உருவம் கீழே கிடந்தது. முதலில் டோ ர்க்காஸ் அது ஒரு மான் என்று நினைத்தாள். நெருங்கியதும் ஸைரஸ் தலையைக் கையில் வைத்துப் படுத்துத் தூங்குவது போல் இருந்தது. இங்கே தனியாகத் தூங்குகிறானே என்று, அவன் பெயரை உரக்கச் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டு குனிந்தாள். அவன் எழுந்திராத தூக்கம் தூங்குகிறான் என்று அவளுக்கு எப்படித் தெரியும்? தெய்வம் இரத்தத்திற்கு இரத்தம் ஏற்றுப் பாபத்தைப் போக்கிவிட்டது என்று ரூபன் உணர்ந்தான். மகன் இறந்ததினால் அவனுக்குத் துயரம் ஏற்படவில் லை. ஆனால் இத்தனை வருஷங்களாகத் தன் னை விட்டு நீங்காத சுமை ஒன்று கீழே விழுந்து தன் னைப் பரிசுத்தமாக்கியது என்ற மன நிம்மதி ஏற்பட்டது. உள்ளத்தில், இத்தனை காலம் தெய்வம் என்ற வார்த்தையைக் கூட நினைத்தறியாத உள்ளத்தில், ஒரு பிரார்த்தனை எழுந்தது. அமைதியான குரலில், "இவ்விடத்தில்தான் உன் இரண்டு இரத்தமும் மரணத்தில் சந்திக்கிறது. இந்த இடந்தான் உன் தகப்பனாருக்கும் மகனுக்கும் ஏற்பட்ட ஒரே கல்லறை" என்றான். டோ ர்க்காஸ் மகன் மீது விழுந்து அழுதாள். அன்று முதல் ரூபன் மனதில் சாந்தி பிறந்தது. லவல் சண் டையிலே போர்க்களத்தில் குண்டு பட்டு வீர மரணத்தை ஏற்பது ஒன்று; தர்மசங்கடத்தால், உள்ளத்தின் சுடு சொல்லால், பல வருஷங்கள் ஒரு பெரும் இரத்தச் சுமையைத் தாங்குவது வேறு ஒன்று. இது சரித்திரமில்லாமல் இருக்கலாம். ஆனால் இதுதான் வாழ்க்கையின் சிலுவை.

புதுமைப்பித்தன் மூலம் மேலும் புத்தகங்கள்

72
கட்டுரைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகள்
0.0
புதுமைப்பித்தன் மொத்தம் 108 சிறுகதைகள் எழுதியுள்ளார். அதில் அவர் காலத்தில் 48 மட்டும் பிரசுரமாயின. 1940-ல் புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. புதுமைப்பித்தன் 98 கதைகளை எழுதியுள்ளார். அவர் மணிக்கொடியில் எழுதிய 29 கதைகளைப் புதுமைப்பித்தன் கதைகள் என்ற பெயரில் நவயுகப் பிரசுராலயம் வெளியிட்டுள்ளது. ஆறுகதைகள், நாசகாரக் கும்பல், பக்த குசலோ என்ற அவரது பிற நூல்களையும் அதே நிறுவனம் வெளியிட்டுள்ளது. கலைமகள் பதிப்பகம் காஞ்சனை தொகுதியையும், ஸ்டார் பிரசுரம் ஆண்மை என்ற தொகுதியையும் வெளியிட்டன. ஐந்திணைப் பதிப்பகம் புதுமைப்பித்தனின் மொத்தச் சிறுகதைகளையும் வெளியிட்டது. அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் புதுமைப்பித்தனின் அனைத்துச் சிறுகதைகளையும் வெளியிட்டுள்ளது.
1

1. ஆஷாட பூதி

2 January 2024
0
0
0

மோலியர் (1622-1673) பதினேழாவது நூற்றாண்டில், பிரான்ஸில் நாடகக்காரன் என்றால், மதம் அவனைத் தள்ளிவைத்தது. பிரார்த்தனை - பிரசாதத்தைப் பெறுவது என்றால் விசேஷ சிபாரிசின் பேரில் நடக்க வேண்டிய காரியம். செத்தால

2

2. ஆட்டுக் குட்டிதான்

2 January 2024
0
0
0

ஜேம்ஸ்ஹானலி – இங்கிலாந்து  செக்கச் செவேலென்றிருக்கும் அந்த பஸ், ஏக இரைச்சலுடன் அந்த வளைவைத் திரும்பியது. சூழ்நிலை தாங்கிய அமைதியான வண்ணக் கலவைகளுக்குச் சவால் கொடுப்பது மாதிரி அந்தச் சிகப்பு கண்களை உற

3

3. அம்மா

2 January 2024
0
0
0

கே. பாயில்  பாதை நெடுகலாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், அதற்குச் சின்னக் கிளை ஒன்றும் இருந்தது. இருந்தாலும் மறுபக்கத்தில் ஓடும் சிற்றோடையில் இறங்கி அக்கரைக்குப் போக வேண்டிய அவசியமே இல் லை. மலை வ

4

4. அந்தப் பையன்

3 January 2024
0
0
0

மாக்ஸிம் கார்க்கி  இந்தச் சின்னக் கதையை எப்படிச் சொல்லுவது என்று புரியவில் லை. அவ்வளவு எளிதானது. நான் வாலிபப் பருவத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் தெருக் குழந்தைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு ஊருக்கு வெளியே

5

5. அஷ்டமாசித்தி

3 January 2024
0
0
0

டென்ஷொ வம்சத்தின் ஆதிக்கத்தின்போது, கியாட்டோ என்ற வடக்குப் பிராந்தியத்தில் குவான்ஷின் கோஜி என்ற வயோதிகன் வாழ்த்து வந்தான். நீண்டு நெஞ்சை மறைக்கும் வெள் ளைத் தாடியுடன், ஷிண்டோ குருக்கள்மார் போல உடையணிந

6

6. ஆசிரியர் ஆராய்ச்சி

3 January 2024
0
0
0

ஸின்கிளேர் லூயிஸ்  டாக்டர் ஸ்லீக் பிரம்மச்சாரி; அதிலும், வழுக்கை விழவிருக்கும் வாலிபப் பிரம்மச்சாரி. அவர் இராஸ்மஸ் கலாசாலையில் சரித்திரமும் பொருளாதாரமும் கற்பித்து வந்தார். அதாவது மேடைமீது ஏறி நின்று

7

7. அதிகாலை ( பகுதி 1)

3 January 2024
0
0
0

நிக்கோலாய் டிக்கனோவ்  1918-ம் வருஷம் ஆகஸ்டு மாதத்தில் துருக்கியர் பாக்கூ என்ற இடத்தை முற்றுகை இட்டார்கள். மென்ஷ்விக் நிர்வாகத் தலைமை போர்டின் ஐந்து தலைவர்கள் மூளையும் சுழன்றது. சர்வ குழப்பம்; அது விஷ

8

7.அதிகாலை (பகுதி 2)

3 January 2024
0
0
0

இராத்திரி ஒரு ஊரில் தங்கினதும், ஆலி ஹஸன், டாஷா பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு சளசளவென்று மணிக்கணக்காகப் பேசிக் கொட்டினான். உத்யோகஸ்தரின் விதவை மெய்ஸ் அரிசி ரொட்டியை அசைபோட்டுக் கொண்டிருந்தாள். வி

9

7. அதிகாலை ( பகுதி 3)

3 January 2024
0
0
0

"பொய்யாயிருக்கலாம், ஆனால் சித்திரவதையில், உன் னைக் காட்டிக்கொடுப்பேன்; என் னைக் காட்டிக்கொடுத்துக் கொள்வேன்; எனக்கு ஞாபகத்துக்கு வந்தவர்களையெல்லாம் காட்டிக்கொடுப்பேன். உனக்குச் சித்திரவதை என்றால் எப்ப

10

7. அதிகாலை (பகுதி 4)

3 January 2024
0
0
0

"ஆஹா அப்படியா. பாக்ஷாதான் வயிற்றுக் கடுப்பால் கழிந்து கொண்டிருக்கிறாரே. இன்னும் கொஞ்ச காலத்துக்கு அவரைப் பற்றித் தொந்திரவில் லை. தவிரவும், உன்னுடைய ஆயுதங்களை உன்னிடம் கொடுத்துவிடவேண்டும் என்று உத்திரவ

11

8. பலி

4 January 2024
1
0
0

ஜோஸப் நையரு – ஹங்கேரி  மோல்டேவியா நோக்கி நிற்கும் மலைச் சிகரங்களிலே அந்த வருஷத்தில் மந்தைகளுக்குக் கரடிகளால் வெகு தொல் லை ஏற்பட்டு வந்தது. வில் - பொறி வைத்து எல்லாம் முயன்று பார்த்ததும் ஒன்றும் பயன்ப

12

9. சித்திரவதை

4 January 2024
1
0
0

எர்னஸ்ட் டாலர்  "உனக்கு இன்னும் ஏதாவது விருப்பம் இருக்குமா?" சாகக் கிடக்கும் வாலிபனைப் பார்த்து ஸ்டட்கார்ட் இரகசியப் போலீஸ் உத்தியோகஸ்தர் இவ்வாறு கேட்டார். வாலிபனுடைய 'வெறிச்சோடிய' கண்கள் ஜன்னலின் கம

13

10. டைமன் கண்ட உண்மை

4 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர் (1564-1616)  ஆங்கில நாடகாசிரியர், ஷேக்ஸ்பியரைத் துவிதப் பிரம்மா என்பார்கள். உலகத்தின் சிருஷ்டி தத்துவத்தைப் புரிந்து கொண்டவர் போல் தமது பாத்திரங்களை நடமாட விடுவார். அவர் உலகில் பேய்களும்

14

11. இனி

4 January 2024
1
0
0

இ. எம். டிலாபீல்ட்  இதுவரை நடக்காததைப் பற்றி ஒரு கதை எழுதினால் என்ன?... அந்தக் கதையின் போக்கில் அறிந்து கொள்ள முடியுமானால்... பதினைந்து இருபது வருடங்களுக்கப்புறம்: ஓல்ட் பெய்லியில் (நியாயஸ்தலம்) நடக்

15

12. இந்தப் பல் விவகாரம்

4 January 2024
1
0
0

மைக்கேல் ஜோஷெங்கோ – ருஷ்யா  எங்கள் சகா எகோரிச்சுக்குப் பல், தொந்திரவு கொடுத்து வந்தது. என்ன காரணத்தினாலோ விழ ஆரம்பித்தது. காலம் என்ற ஒன்று இருக்கே, அதற்கும் இந்த விவகாரத்துக்கும் சம்பந்தமிருக்கலாம்.

16

13. இஷ்ட சித்தி ( பகுதி 1)

4 January 2024
1
0
0

ஹான்ஸ் பலாடா – ஜெர்மனி  முதலிலேயே தெரிவித்து விடுகிறேன். அப்புறம் குறை சொல்லாதீர்கள். என் மனைவி பெயர் இட்ஸன் பிளாஸ். உச்சரிப்பதற்குக் கொஞ்சம் சிரமந்தான்; ஆனால் அவள் மீது இருந்த ஆசையில், அதன் சிரமம் எ

17

13. இஷ்ட சித்தி ( பகுதி 2)

4 January 2024
1
0
0

"பின்பு கிரிஸ்மஸ் சமயத்தில் அதை உடைத்து... பிறகு என்னவென்பது உங்களுக்குத்தான் தெரியுமே!" என்றாள்! "உனக்கென்ன பைத்தியமா? இந்த வருஷம் போனஸ் கீனஸ் கிடையாது என்று ஹீபர் சொல்லுகிறான். முதலாளி வருமானம் இல்

18

14. காதல் கதை

5 January 2024
1
0
0

வில்லியம் ஸரோயன்  "இந்தப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுகிறீரா அல்லது அந்தப் பக்கமாக உட்காருகிறீரா?" என்று சிகப்புக் குல்லா* கேட்டான். (* நம்மூர்களில் சிகப்புத் தலைப்பாய் என்றால் போலீஸ்காரன் என்பது

19

15. கலப்பு மணம்

5 January 2024
1
0
0

கிரேஸியா டெலாடா – இத்தாலி  அன்றிரவு சுகமாக இருந்தது. பூலோகத்தைக் கடுங்குளிரினால் சித்திரவதை செய்வதில் சலியாத உறைபனிக் காலத்துக்கும் ஒரு ஓய்வு உண்டு என்பதை அந்த ஏப்ரல் இரவு காட்டியது. இதுவரை பனிக்கட்ட

20

16. கனவு (பகுதி 1)

5 January 2024
1
0
0

ஐவான் டர்ஜனீப் – ருஷியா அந்தக் காலத்தில் நான் என் தாயாருடன் ஒரு சிறு துறைமுகப் பட்டினத்தில் வசித்து வந்தேன். எனக்கு அப்பொழுதுதான் பதினேழு வயது நிரம்பிற்று. தாயாருக்கு முப்பத்தைந்து வயது. சின்ன வயதிலே

21

16. கனவு ( பகுதி 2)

5 January 2024
1
0
0

8 என் தாய் எனக்குக் கூறிய கதை எனதுள்ளத்தை எப்படிச் சிதறடித்தது! முதல் வார்த்தையிலிருந்தே அறிந்து கொண்டேன். அவள் வாயிலிருந்து தவறுதலாக நழுவிய வார்த்தை எனது உத்தேசத்தைத் திடப்படுத்தியது. எனது கனவில் நா

22

17. காரையில் கண்ட முகம்

5 January 2024
1
0
0

இ.வி. லூக்காஸ் – இங்கிலாந்து  நேற்று சாயங்காலம் எனது நண்பன் டாப்னி வீட்டில் நடந்ததை மறக்க முடியவில்லை. அந்த அநுபவம் இன்னும் என் னை உறுத்திக் கொண்டிருக்கிறது. அன்றைய தினம் பேச்சு பூத பைசாசங்களைப் பற்ற

23

18. கிழவி

5 January 2024
1
0
0

ஸெல்மாலேகர்லாப் – ஸ்வீடன்  மலைப்பாதை வழியாக ஒரு கிழவி நடந்து கொண்டிருந்தாள். மெலிந்து குறுகியவள்தான். எனினும் முகத்தின் வண்ணம் வாடவில்லை. சதைக் கோளங்கள் மரத்துத் தொய்ந்து திரித் திரியாகத் தொங்கவில்லை

24

19. லதீபா

6 January 2024
0
0
0

மோஷி ஸ்மிலான் ஸ்கி  "லதீபாவின் கண்களை நீ பார்த்திருக்காவிட்டால், கண்களுக்கு எவ்வளவு அழகு இருக்க முடியும் என்பது உனக்குத் தெரிந்தே இருக்காது." இப்படி நான் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம். ச

25

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்( பகுதி 1)

6 January 2024
0
0
0

1 அவர்களுடைய மூத்த பெண்ணின் படிப்பு அடுத்த மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது. வயசும் 'அப்படி இப்படி' என்று சீக்கிரத்தில் பதினெட்டு ஆகிவிடும். டோ க்கியோவிலேயே நாகரீகத்திற்குப் பெயர் போன இடத்தில் நிலம் வாங

26

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்(பகுதி 2)

6 January 2024
0
0
0

5 வரன்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுவதற்கு நாள் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு 'கபூக்கி' நாடகக் கொட்டகையில் தரகர் இரண்டு 'பாக்ஸ்' களை அமர்த்தினார்; இரண்டு குடும்பங்களும் பக்கத்த

27

21. மணிமந்திரத் தீவு

6 January 2024
0
0
0

ஷேக்ஸ்பியர்  நடுக்கடலிலே நாலைந்து கப்பல்கள் தத்தளித்துத் தடுமாறுகின்றன. கடலலைகள் சினங்கொண்ட கருநாகங்கள் போல ஆயிரமாயிரமாகப் படம் விரித்துத் தலை சுற்றி மோதுகின்றன. உயிரை வாங்கவரும் கால தூதர்களின் கோரச்

28

22. மணியோசை

6 January 2024
0
0
0

ஜப்பான்  "நான் சாவதற்குப் பயப்படவில் லை" என்றாள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மனைவி. "இப்பொழுது என் கவலை எல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நான் போன பிறகு யாரைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?" வேதனை

29

23. மார்க்ஹீம்

6 January 2024
0
0
0

ஆர்.எஸ். ஸ்டீவன்ஸன் – இங்கிலாந்து  "ஆமாம்! எங்கள் வியாபாரத்திலே பலவிதம் உண்டு; வாங்க வருகிறவர்களில் சிலருக்கு ஒன்றுமே தெரியாது; வெறும் 'அப்பாவிகள்'. அப்பொழுது எங்கள் அநுபவத்திற்கு ஏற்ற லாபத்தைப் பெறு

30

24. மிளிஸ்

8 January 2024
0
0
0

பிரட் ஹார்ட் – அமெரிக்கா  ஸிராநிவாடா மலைத் தொடரில் சமவெளிக்குப் பக்கத்தில் இருக்கும் சிவந்த மலைகளில்தான் "ஸ்மித் பாக்கெட்" என்ற இடம் இருக்கிறது. அது ஒரு சுரங்க ஸ்தலம். அதாவது ஒரு காலத்தில் தங்கம் இரு

31

25. முதலும் முடிவும் ( பகுதி 1)

8 January 2024
0
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  மாலை ஆறு மணியிருக்கும். அந்த அறையில் சுமாரான இருட்டு. 'பச்சை ஷேட்' போட்ட மேஜையின் மீதிருந்த ஒற்றை விளக்கு, தரையில் விரித்த துருக்கிக் கம்பளத்திலும், மேஜையின் மீது சிதறிக் கிடந்த,

32

25. முதலும் முடிவும் ( பகுதி 2)

8 January 2024
0
0
0

"பிரேதத்தின் மேலிருந்த எதையும் எடுத்தாயா?" "நாங்கள் சண்டை போட்டுக் கொள்ளும்பொழுது இது அவன் பையிலிருந்து விழுந்தது." அது வெறும் தபால் கவர். தென் அமெரிக்கத் தபால் குறியிட்டு, "பாகட்ரிக் வாலன், ஸைமன் ஓட்

33

26. நாடகக்காரி

8 January 2024
0
0
0

ஆண்டன் ஷெக்காவ் – ருஷியா  அவள் ஒரு நாடகக்காரி. அந்தக் காலத்திலே அவளுக்கு யௌவனக் களை மாறவில் லை. குரல் கணீர் என்று இருக்கும். பலர் வந்து போவார்கள். ஆனால் குறிப்பாக நிக்கோலாய் பெட்ரோவிச் கோல்ப்பக்கோவ்

34

27. நட்சத்திர இளவரசி

8 January 2024
0
0
0

ஒரு ஆசிரியர் - தென் கடல் தீவுகள்  "நம்மிடம் இருப்பதையெல்லாம் சாப்பிட்டு விடுவோம்" என்றான் டபூதி. அவனது சகோதரனான அய்ட்டோ சந்தேகத்துடன் ஏறிட்டுப் பார்த்தான். "அப்படியானால் நமக்கு மிகுந்த பலம் உண்டாகிவி

35

28. ஓம் சாந்தி! சாந்தி!

8 January 2024
1
0
0

எலியா எஹ்ரன் பர்க்  (யுத்தம் மனித சமூகத்தின் 'உடனுறை நோயாகவே' இருந்து வருகிறது. தனது தற்காப்புக்காக மனிதன் சமூகம் என்ற ஒரு ஸ்தாபனத்தை வகுத்தான்; பிறகு அதனைக் காப்பாற்றத் தன் னைப் பலிகொடுக்கத் தயாரானா

36

29. ஒரு கட்டுக்கதை

9 January 2024
0
0
0

பிரான்ஸ் காப்கா – ஆஸ்திரியா  எலி சொல்லுகிறது... "ஐயோ, உலகம் தினம் தினம் எவ்வளவு சின்னதாகிக் கொண்டே வருகிறது! முதலில் ரொம்பப் பெரிதாக, நான் பயப்படும்படியாக, அவ்வளவு பெரிதாக இருந்தது. நான் ஓடிக்கொண்டே

37

30. ஒருவனும் ஒருத்தியும்

9 January 2024
0
0
0

லூயிகய்ல்லூ – பிரான்ஸ்  மச்சுப் படிக்கட்டு முற்றத்தில் இறங்கியது. அங்கே, அதாவது கடைசிப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, அன்று காலை முழுவதும் அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் ரொம்பவும் நெட்டை. ஒற்றை ந

38

31. பைத்தியக்காரி

9 January 2024
0
0
0

மொப்பஸான் – பிரான்ஸ்  "ஆமாம், நீ சொல்வது முன்பு பிரான்சிற்கும் ருஷியாவிற்கும் சண் டை நடந்ததே, அப்பொழுது நடந்த பயங்கரமான சம்பவத்தை என் நினைவிற்குக் கொண்டு வருகிறது" என்று கூறத் தொடங்கினார் முஸே டி' என

39

32. பளிங்குச் சிலை

9 January 2024
0
0
0

வாலரி புருஸ்ஸாப் வாலரி புருஸ்ஸாப் (1875-1924) புரட்சி யுகமான நவீன காலத்து ருஷ்யப் புது எழுத்தாளர் கோஷ்டியைச் சேர்ந்தவர். இந்தக் கதை புரட்சிக்கு முந்திய காலத்தைப் பகைப் புலமாகக் கொண்டு, எழுந்த கற்பனைக

40

33. பால்தஸார் (பகுதி 1)

9 January 2024
0
0
0

அனதோல் பிரான்ஸ் – பிரான்ஸ்  "கிழக்கே அரசர்களுக்கு மந்திர சக்தியுண்டு என்று நினைத்தார்கள்" -தெர்த்தூலியன் அக்காலத்திலே எதியோபியாவை பால்தஸார் ஆண்டு வந்தான். கிரேக்கர் அவனை ஸாரஸின் என்று அழைத்தனர். அவன்

41

33. பால்தஸார்( பகுதி 2)

9 January 2024
0
0
0

ஜனநடமாட்டமில்லாத பாலைப் பிரதேசங்களில் மத்தியானம் வரை நடந்தனர். உச்சியில் சூரியன் வந்ததும், திருடர்கள் கைதிகளை விடுவித்து, பாறையின் நிழலில் உட்காரச் சொல்லி, கெட்டுப்போன ரொட்டித் துண் டைக் கொடுத்தனர். ப

42

34. பொய்

9 January 2024
0
0
0

லியேனீட் ஆன்ட்ரீவ் – ருஷியா  "நீ சொல்வது பொய், அது உனக்குத் தெரியும்!" "அதற்கேன் இப்படிக் கத்தவேண்டும்? பக்கத்திலிருக்கிறவர்களுக்கும் தெரிய வேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது." இப்பொழுதும் பொய் சொன்னாள்

43

35. பூச்சாண்டியின் மகள்

10 January 2024
0
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து  அவள் பெயர் பத்தேமா. அவள் பாக்தாத் நகர் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தாள். அவள் நீலத்தாடிவாலாவின் புதல்வி. கண்டதும் காம வெறியை எழுப்பும் மோகனாங்கி. அவளது மதி முகத்தின் வ

44

36. ராஜ்ய உபாதை( பகுதி 1)

10 January 2024
0
0
0

ஹென்றிக் இப்ஸன் (1828-1906)  ஷேக்ஸ்பியருக்கு நிகராக உலகம் கொண்டாடும் சிறந்த நாடக ஆசிரியர் ஹென்ரிக் இப்ஸன். தர்மத்துக்கு வெற்றி அளித்தார் ஷேக்ஸ்பியர்; தர்மம் ஏன் வெற்றி பெற வேண்டும் என்ற கேள்வியை எழுப

45

ராஜ்ய உபாதை( பகுதி 2)

10 January 2024
0
0
0

"அந்தக் கடிதம்..."  "இரு இரு, விரோதிகளைப் பற்றி நான் ஒரு பட்டியல் கொடுத்தேனே. நீ அதிகாரத்தை விடத் தயாராக இருப்பதுபோல நானும் என் எதிரிகளை மன்னிக்க ஆசைப்படுகிறேன். அந்தப் பட்டியலை இந்த நெருப்பில் போட்ட

46

37. ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு

10 January 2024
0
0
0

நதானியேல் ஹாதார்ண் – அமெரிக்கா  எல்லைப்புறத்தைப் பாதுகாப்பதற்காக 1725-ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்ட படையெடுப்பு சரித்திரத்திலேயே கற்பனைக்கு இடந்தரும் பகுதி. அதை எல்லாரும் சாதாரணமாக 'லவல் சண்டை' என்று கூற

47

38. சாராயப் பீப்பாய்

10 January 2024
0
0
0

எட்கார் அல்லன் போ – அமெரிக்கா  அவன் ஆயிரம் குற்றங்களைச் செய்தான்; ஆனால் என்னால் இயன்றவரை பொறுத்தேன். அவன் என் னைத் திட்டி அவமதித்தான். இனி, பழிக்குப் பழி தீர்க்க வேண்டியதுதான் என்று மன உறுதி கொண்டேன்

48

39. சகோதரர்கள்

10 January 2024
0
0
0

யூஜோ யாம மோட்டோ – ஜப்பான்  'அண்ணா, இது நல்லதுதானே?' 'எங்கே, இப்படிக் கொண்டா பார்ப்போம்' என்று மூத்தவன் தன்னிடம் காட்டப்பட்ட காளானைப் பார்ப்பதற்காகத் திரும்பினான். 'ஊங் ஹும், நல்லதில் லை; நான் பிடுங்க

49

40. சமத்துவம்

10 January 2024
0
0
0

ஒரு ருஷிய ஆசிரியர்  நீலக் கடலின் அடிமட்டத்திலே, பிரமாண்டமான மீன் ஒன்று, இரை தேடிக்கொண்டு, உல்லாசமாக நீந்தி வருகிறது. எதிரே ஒரு சின்ன மீன் - அதன் உணவு. பெரிய மீன் அதை விழுங்குவதற்காக, தன் வாயை அகலத் த

50

41. ஷெஹர்ஜாதி - கதை சொல்லி

11 January 2024
0
0
0

ஹென்றி டிரெக்னியர் – பிரான்ஸ்அன்று இரவு ஷெஹர்ஜாதி நன்றாகத் தூங்கவேயில் லை. பகல் முழுவதும் சுட்டுப் பொசுக்கும் வெய்யில். அதனால் மூச்சுவிடக்கூட முடியாதபடி அவ்வளவு இறுக்கமாக இருந்தது. சிலந்தி வலையையும் த

51

42. சிரித்த முகக்காரன்

11 January 2024
0
0
0

அவன் சோகமாக இருக்கிறான், தனியாக இருக்கிறான் என்று சொல்லிவிடுவது எளிது; ஆனால் அவன் எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்தோடேயே இருக்கிறான். அப்படிச் சொல்லிவிட்டாலும், அவனைப் பாட்டிலில் போட்டு அடைத்து லே

52

43. சூனியக்காரி

11 January 2024
1
0
0

ரோனால்டு ஆக்டன் – இங்கிலாந்து அப்பொழுது இலையுதிர் காலம். நானும் ஜேக் மக்கின்ஸனும் பக்கத்து மிராசுதாருடைய காட்டில் திருட்டுத்தனமாகக் கண்ணி வைத்து வேட்டையாடச் சென்றோம். அவனுக்கு வயது இருபதுக்கு மேல

53

44. சுவரில் வழி

11 January 2024
0
0
0

ஆர். முரே கில்கிரைஸ்– இங்கிலாந்து அன்று முற்பகல் சிறிது உஷ்ணமாகவே இருந்தது. பசும்புல் செழித்து வளர்ந்த மைதான வெளியில், ஆங்காங்கு குத்துக்குத்தாகப் பெயர் தெரியாத புஷ்பங்கள் எல்லாம் கணக்கற்று

54

45. தாயில்லாக் குழந்தைகள்

11 January 2024
0
0
0

பிரான்ஸிஸ் பெல்லர்பி – இங்கிலாந்து வேர்த்து விருவிருக்க, கால்கள் தள்ளாட, இரண்டு குழந்தைகள் நடந்து சென்றன. பையன், பதினொரு வயசிருக்கும். முன்னால் நடந்தான். பெண் எட்டு வயசுபோல இருக்கும். பாதை முன் ம

55

46. தையல் மிஷின்

11 January 2024
0
0
0

இவான் கூம்ஸ் அங்கு மனிதனைத் தூங்காது விழிக்க வைத்திருக்க ஒருவித சந்தடியும் கிடையாது. இருந்தாலும், அந்தச் சிறிய கட்டிலில் சுருண்டு முடங்கிக்கொண்டு, நெடுநேரமாக நிசப்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

56

47. தந்தை மகற்காற்றும் உதவி

11 January 2024
1
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து டான் ஜுவான் தன் மாளிகையில் விருந்து மண்டபத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று தரை வெடித்தது. நரக தூதர்கள் வந்து அவனை இழுத்துக் கொண்டு போய் விட்டார்கள்

57

48. தெய்வம் கொடுத்த வரம்

12 January 2024
1
0
0

பியோர்ண்ஸ்டர்ண் பியோர்ண்ஸன் – ஸ்வீடன்  இந்தக் கதையில் வருகிறவன் தான் அவனுடைய ஊரிலேயே ரொம்பவும் பெரிய பணக்காரன். தவிரவும் அந்த வட்டாரத்திலே அவனுக்குத்தான் ரொம்பவும் சொல் சக்தி உண்டு. அவன் பெயர் தார்ட்

58

49. தேசிய கீதம் (பகுதி 1)

12 January 2024
0
0
0

எல்.ஏ.ஜி. ஸ்டராங் – இங்கிலாந்து  லாரி நிறையத் துருப்புக்கள் கன வேகமாகச் சென்று சில விநாடிகள் கூடக் கழியவில் லை. அது இப்பொழுதுதான் நிகழ்ந்தது. வெடியின் அதிர்ச்சி பரீலியை அப்படியே கலங்க வைத்துவிட்டது.

59

49. தேசிய கீதம் (பகுதி 2)

12 January 2024
0
0
0

ஆம். அமெரிக்காவில் ஓர் பெருத்த வெற்றி. நியூயார்க்கில் இரண்டு ஆட்டம்; பிறகு அமெரிக்கா முழுவதிலும் ஓர் நீண்ட வெற்றி யாத்திரை; முடிவில் ஹாலிவுட்டில் ஒரு பிலிம்; சமாதானம் ஏற்பட்ட இரண்டொரு மாதங்களுக்கப்புற

60

49. தேசிய கீதம் (பகுதி 3)

12 January 2024
0
0
0

இந்தச் சம்பவம் பரீலியின் கோபத்தை அதிகரித்தது; ஆனால் பொதுப்படையாக்கியது. இதுவரை தன் தேசவாசிகளான புரட்சிக்காரர் மீது கோபங்கொண்டிருந்தான். இப்பொழுதோ இந்த இடத்தின் பேரிலேயே கோபம். அவன் நெஞ்சில் ஆழமாகப் பய

61

50. துன்பத்திற்கு மாற்று

12 January 2024
1
0
0

ஸீனர் லூயிஜி பிரான்டல்லோ – இத்தாலி  நமது வாழ்க்கையை, முக்கியமாக அதில் காணும் துன்பங்களை, வான வெளியிலே தேஜோமயமாகச் சுழன்று செல்லும் நட்சத்திர மண்டலங்களுடன் ஒப்பிட்டுப்பாரும், அப்பொழுது அது துச்சமாகத்

62

51. துறவி

12 January 2024
0
0
0

ராபர்ட் நியூமான் – ஜெர்மனி  "நான் முதல் முதலில் ஐரோப்பாவிலிருந்து இந்தக் கீழப் பிரதேசங்களுக்கு வந்தபொழுது அது நடந்தது" என்று அவன் ஆரம்பித்தான். அவன் எங்கள் கப்பலின் காப்டன்; பெயர் வான்டர்லான். ஜாதியி

63

52. உயிர் ஆசை (பகுதி 1)

13 January 2024
1
0
0

ஜாக் லண்டன் – அமெரிக்கா  அவர்கள் இருவரும் நொண்டி, நொண்டி ஆற்றங்கரை வழியாகத் தள்ளாடி நடந்தார்கள். கத்தி போல ஊசியாக, தெத்துக்குத்தாகக் கிடந்த பருக்கைக் கற்கள் காலை வெட்டின. அவர்களிருவரும் சோர்ந்து விட்

64

52. உயிர் ஆசை (பகுதி 2)

13 January 2024
1
0
0

நாட்களும் ஓடின. காட்டு ஜீவராசிகள் ஓடியாடித் திரியும் பள்ளத்தாக்குகளை அடைந்தான். மான் கூட்டம் ஒன்று. இருபது இருக்கும். துப்பாக்கி லெக்குக்கு ரொம்பவும் அருகில் துள்ளி ஓடின. அவற்றை விரட்டிக் கொண்டே ஓடினா

65

52. உயிர் ஆசை (பகுதி 3)

13 January 2024
1
0
0

பாறை மீது படுத்துக் கிடந்தவன் சுயப் பிரக்ஞையுடன் விழித்துக் கொண்டான். சூரியன் காய்ந்து கொண்டிருந்தது. காட்டு மான்குட்டிகளின் சப்தமும் தூரத்தில் கேட்டது. சித்தத்தின் அடிவானத்தில் மழையும் காற்றும் பனியு

66

53. வீடு திரும்பல்

13 January 2024
1
0
0

பீட்டர் எக் – நார்வே  மாலுமி பெடர் ஸோல்பர்க்குடைய மனைவி வசித்த குடிசை, ஜனங்கள் பொதுவாக 'லூக்கள் தெரு' என்று சொல்லுவார்களே, அதற்கெதிரில் இருக்கிறது. குடிசையின் ஜன்னல் நன்றாகத் திறந்திருந்தது. அப்பொழுத

67

54. ஏ படகுக்காரா!

13 January 2024
1
0
0

மிக்கெய்ல் ஷோலொகோவ்  அந்த காஸக் கிராமத்தைச் சூழ்ந்து வளர்ந்து நின்ற சாம்பல் பூத்த பசிய நிறம் படைத்த செடிச் செறிவின்மீது சூரியவொளி தெம்பாக விழவில் லை. அருகே ஒரு பரிசல் துறை இருந்தது. அங்கே படகேறி டான்

68

55. யாத்திரை

13 January 2024
1
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  நான் ஹாமர்ஸ்மித் பஸ்ஸின் மேல்தட்டிலிருந்து பார்க்கும் பொழுது, அவர்கள் ஆல்பர்ட் ஹால் மெமோரியல் எதிரில் இருந்த ஒரு வீட்டு வாசல்படியில் உட்கார்ந்திருந்தனர். அன்று வெகு உஷ்ணம். வாடகை

69

56. எமனை ஏமாற்ற...

13 January 2024
1
0
0

மொங்காக்கு ஷோனின் என்ற மகடனான புத்த பிக்ஷு தான் எழுதியுள்ள கியோ-ஜியோ-ஷிந்ஷோ என்ற கிரந்தத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: "ஜனங்கள் வழிபடும் தெய்வங்களில் பல துர்தேவதைகளாகும். அவலோகிதன், தர்மம், பிக்ஷுக்கள

70

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்

13 January 2024
1
0
0

தாமஸ் வுல்ப் – அமெரிக்கா  ஈவிரக்கமற்றுக் கொதிக்கும் அந்த வருஷம் ஆகஸ்டில் யுத்தம் நின்றது. யுத்த தேவதையின் பவனியின்போது நான்கு கணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஒன்று லாங்லிவியல்; விமான மைதானத்தில் உள்ள குத

71

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்(பகுதி 2)

13 January 2024
1
0
0

தயங்கித் தயங்கி மறியும் உடலொட்டிய இந்த வேட்கை, தங்கள் ஜோலியைச் செய்து இவர்கள் நடாத்தும் வாழ்வினிடையிலும் வெளிக்கு அகோரக் கேலிக் கூத்தாகத் தோன்றினாலும், மேஜைக்கு மேஜை போஷகர் தேடி நடக்கும்போது சர்வ ஜாக்

72

58. தர்ம தேவதையின் துரும்பு

13 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர்  குரலிலே அதிகார தோரணையும் அதனுடன் பயமும் கலந்திருந்தது. கடுங்குளிரிலே, இருட்டின் திரைக்குள்ளே, ஈட்டிபோலப் பாய்ந்தது அக்குரல். 'நீ யார்? முதலில் அதைச் சொல்' என்று பதில் கேள்வி பிறந்தது, தி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்