ஜாக் லண்டன் – அமெரிக்கா
அவர்கள் இருவரும் நொண்டி, நொண்டி ஆற்றங்கரை வழியாகத் தள்ளாடி நடந்தார்கள். கத்தி போல ஊசியாக, தெத்துக்குத்தாகக் கிடந்த பருக்கைக் கற்கள் காலை வெட்டின. அவர்களிருவரும் சோர்ந்து விட்டார்கள்; உடம்பு வலுவிழந்துவிட்டது. நெடிய துன்பம் முகத்திலே, விதியற்ற பொறுமையைக் காட்டியது. அவர்களது முதுகில் தோளோடு சேர்த்து இறுகக் கட்டிய கம்பளி மூட்டை அமுக்கியது. முதுகுச் சுமைக்கு அண் டை கொடுத்து; நெற்றியைச் சுற்றி மண் டைக்கட்டு; ஒவ்வொருவனும் கையில் துப்பாக்கியை ஊன்றி நடந்தான். தலையும் தோளும் முன்னே சாய, கண்களைத் தரையில் ஊன்றியபடி நடந்தனர். "அந்தக் குடிசையிலிருக்கும் இரண்டும் தோட்டாக்களும் நம் கையிலிருந்தால் தேவலை" என்றான் பின்னால் வந்தவன். குரலிலே நயப்பு அற்றிருந்தது. உற்சாகமற்றுப் பேசினான். பாறைகளின் மீது நுரைத்துக் கொண்டு ஓடும் ஆற்றுப் படுகையில் நொண்டிச் சென்றவன் பதிலே சொல்லவில் லை. பின்னவன் அவனது சுவட்டைத் தொடர்ந்து வந்தான். இருவரும் காலில் போட்டிருந்த ஜோடுகளைக் கழற்றவில் லை. தண்ணீர் உறைபனி மாதிரி காலை வெட்டியது. அதனால் அவர்களது கணுக்கால் வலித்தது; பாதம் மரத்துப் போயிற்று. சில சமயம் தண்ணீர் முழங்கால் வரை நனைத்தது. எதிர்பாராத ஆழம் அவர்களைத் தள்ளாட வைத்தது. பாறை வழுக்க பின்னால் வந்தவன் விழுந்து விட்டான். ஆனால் திக்குமுக்காடித் தடுமாறி காலை ஊன்றிக் கொண்டான். அதே சமயத்தில் வலி பொறுக்க மாட்டாமல் கத்தினான். தலை கிறங்கியது. விழாமல் நிற்பதற்குப் பற்றுக்கோடு தேடுவதுபோல காற்றில் துழாவினான். கடைசியாக ஊன்றி நின்று, பிறகு மேலே கால் எட்டிவைக்க, தள்ளாடி முன்னால் விழப்போனான். பிறகு நிலையாக நின்று மற்றவனை நோக்கினான். அவன் தலையைத் திரும்பிக்கூடப் பார்க்கவில் லை. தனக்குள் ஆலோசிப்பதுபோல ஒரு நிமிஷம் நின்றான். பிறகு வாய்விட்டு முன்னவனுக்குக் குரல் கொடுத்து, "ஏடோ ய், என் கணுக்கால் மொழி புரண்டுவிட்டது" என்றான். முன்னவன் நுரைத்துக்கொண்டு பாயும் ஆற்றில் தள்ளாடித் தள்ளாடி நடந்தான். பின்புறம் திரும்பிப் பார்க்கவே இல் லை. பின்னவன் கண்கள் அவனையே தொடர்ந்தன. கண்ணிலே களையில் லை; அம்பு பட்ட மானின் வேதனை அவன் கண்களில் தேங்கியது. முன்னவன் எதிர்க்கரைக்கு தள்ளாடித் தள்ளாடி நேராக நடந்தான். திரும்பிப் பார்க்கவே இல் லை. பின்னவன் உதடு சற்று நடுநடுங்கியது. அதனால் அவன் முகத்தை மறைத்த மயிர் அசைந்து குலுங்கியது. நாக்கு கூட சற்று எட்டிப் பார்த்து உதட்டைத் துழாவி நனைத்தது. முன்னவனைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டான். உடல் வலு மிக்கவன் நொடிந்து இற்றுப்போய் கூவி அழைக்கும் ஓலம் அது. முன்னவன் போவதைப் பார்த்துக் கொண்டே இருந்தான். முன் நோக்கி குனிந்துகொண்டு தள்ளாடி சரிவின் மேலேறி தூரத்தில் வானத்தைக் கோடிட்டுக் காட்டும் மலைச் சரிவை நோக்கினான். தூரத்து மேட்டில் தாண்டி அந்தப்புறமாக இறங்கி மறைந்துவிட்டான்; - முன்னவன் போயே போய்விட்டான். இனி என்ன, தன் னையும் தனிமையையும் சூழ்ந்த உலகைச் சுற்றி நோக்கினான். தூரத்திலே சூரியன் மங்கலாகத் தெரிந்தது. மஞ்சும் பனியும் அதே மறைத்துத் திரையிட்டு, அது இருந்த இடத்தை வெள் ளை வெளிச்சத்தால் காட்டியது. ஒற்றைக் காலில் பலத்தை ஊன்றி நின்றுகொண்டு கடிகாரத்தை எடுத்துப் பார்த்தான். மணி நாலு. மாசம் ஜூலையோ ஆகஸ்டோ என அவனுக்கு நிச்சயமாகத் தெரியவில் லை. தேதி விட்டுப் போய்விட்டது. சூரியன் உத்தேசமாக வடமேற்கைத்தான் காட்டுகிறது என்பது அவனுக்குத் தெரியும். அவன் தென்திசை நோக்கினான். தென்படும் குளிர் மலைகளைத் தாண்டி எங்கோ தூரத்தில் கிரேட் பேர் ஏரி இருக்கிறது என்பது அவனுக்குத் தெரியும். அந்தத் திசையில்தான் ஆர்க்டிக் வட்டம் கனடா பனிப் பாலைவனத்தை ஊடுருவுகிறது என்பது அவனுக்குத் தெரியும். இவன் நிற்கும் சிற்றாறு தாமிரச் சுரங்க நதிக்கு ஒரு உபநதி, தாமிரச் சுரங்க நதி வடதிசை நோக்கி ஓடி காரனேஷன் வளைகுடாவில் சங்கமமாகிறது. அவன் அங்கு சென்றதில் லை. ஆனால் ஹட்ஸன் பே கம்பெனியின் பூமிப் படத்தில் அதைப் பார்த்ததுண்டு. மறுபடியும் தன் னைச் சூழ நோக்கினான். நெஞ்சில் நம்பிக்கை வளர்க்கும் காட்சியல்ல அது. சுற்றிலும் அஷ்ட திசையிலும் வானவளையம் அவனைச் சிறையிட்டது. மலைகள் உயரமற்றவை. மரமோ, செடியோ, புல்லோ எதுவும் கிடையாது. எங்கு பார்த்தாலும் அத்துவானமாகக் கிடந்தது. பயம் கண்ணுக்குள் உதயமாயிற்று. முன்னவனைப் பெயரிட்டழைத்து மெல்லிய குரலில் இரண்டொரு தடவை கூப்பிட்டான். சுக்காம் பாறைத் தண்ணீரில் வெடவெட என்று நடுங்கினான். எல் லையற்ற பெரு வெளியும் தனிமையும் அவனை மூச்சுத் திணற அமுக்குவது போலிருந்தது. நிர்த்தாட்சண்யமாக மனசில் சற்றும் கசிவு இல்லாமல் அவை அப்படியே அமுக்கிக் கொன்றுவிடும் போன்றிருந்தது. காக்கை வலிப்புப்போல அவனது கைகள் வெடவெடவென்று நடுங்கின. பிடித்திருந்த துப்பாக்கி தண்ணீருக்குள், 'சளப்' பென்ற சப்தத்துடன் விழுந்தது. இந்தச் சத்தம் மீண்டும் அவனுக்கு சுதாரிப்பு கொடுத்தது. பயத்தோடு போராடினான். நீரில் துழாவி, துப்பாக்கியை எடுத்துக் கொண்டான். முதுகுச் சுமையைச் சற்று மேலே இழுத்துக் கொண்டான்; புரண்டு போன கணுக்காலில் பளுவைக் குறைக்க முயன்றான். மெதுவாக, ஜாக்கிரதையாக, வலி ரம்பம் போட்டு அறுக்க கரைக்கு வந்தான். அங்கு அவன் நிற்கவில் லை. வலியையும் மதியாது வெறி பிடித்த வேகத்துடன் தன் சகா மறைந்து போன மேட்டின் மேல் ஏறினான். முன்னவனைவிட நெளிந்து நெளிந்து தள்ளாடி நடக்கவேண்டியிருந்தது. மேட்டில் நின்று பார்த்தான். எதிரே பள்ளத்தாக்கு; உயிர்ச் சலனமற்ற பள்ளத்தாக்கு. பள்ளத்திலே தண்ணீர் தேங்கிக் கிடந்தது. அதனடியில் பஞ்சு போல பாசி படிந்து கிடந்தது. அவன் காலை ஊன்றி நடக்கும் போது, 'ஈச்' 'ஈச்' என்று உறிஞ்சி காலைக் கவ்வியது. பாசிப் படர்மேல் முன்னவன் காலடித் தடத்தைத் தொடர்ந்தான். பாசிக்கிடையே பாறைக் குவியல்கள் தீவுக்கூட்டங்கள் போலத் தலைதூக்கி நின்றன. அவன் தனித்துப் போனான் என்றாலும் திசை தப்பிவிடவில் லை. இப்படியே நடந்து சென்றால் குறுகிக் குட்டையாக வளர்ந்துள்ள ஸ்புரூஸ், பர் மரங்கள் நிறைந்த பிராந்தியத்துக்குப் போகலாம் என்பது அவனுக்குத் தெரியும். அங்கே ஒரு ஏரி உண்டு; ஏரிக்கு ஒரு சுற்றாறு உண்டு. அங்கே தண்ணீர், பால்போல சுக்காம் பாறைத் தண்ணீராக இராது. ஆற்றுப்படுகையிலே கோரை வளர்ந்திருக்கும். அது அவனுக்கு நினைவிருந்தது. அங்கே உத்தரத்துக்கேற்ற பெரிய மரமில் லை. அந்த நதியை ஒட்டியே சென்றால் அதுவும் குறுகிக் குறுகி, நீர்க்கோலமாகச் சிறுத்துவிடும். அங்கே அதைக் கடந்து மற்றொரு சிற்றாறு. அது மேற்கு நோக்கி ஓடுகிறது. அது கடைசியில் டியூஸ் நதியில் கலக்கிறது. அங்கே, கவிழ்த்துப்போட்ட படகு குடிசையாக இருக்கிறது. அதிலே தோட்டா இருக்கிறது. மீன் பிடிக்கத் தூண்டில் உண்டு. சின்ன வலை உண்டு; உணவைப் பிடித்துத் தின்ன வகையுண்டு. அதுமட்டுமா; மாவு இருக்கிறது. பன்றிக்கறி இருக்கிறது. பயறு வகையும் கொஞ்சம் உண்டு. முன்னே நடந்து விட்டவனும் அங்கே அவனுடைய வருகைக்காகக் காத்திருப்பான்; பிறகு இரண்டு பேருமாக டியூஸ் நதியில் படகேறித் தண்டு வலித்து கிரேட்பேர் ஏரிக்குச் சென்று, அங்கிருந்து ஏரியில் குறுக்கே தெற்கு நோக்கி மக்கன்ஸி வரை செல்ல முடியும். வட திசையிலிருந்து விரட்டி வரும் உறைபனிக்காலத்தை முந்திக்கொள்ள இவர்கள் மேலும் மேலும் தென் திசை நோக்கி ஓடினாலும், ஜலத்தில் உறைபனிக் கட்டிகள் மிதந்து சுழித்து ஓடத்தான் செய்யும். இப்படியாக இவர்கள் தெற்கு நோக்கி படகில் சென்றுகொண்டே இருந்தால் வானளாவிய விருட்சங்கள் அடர்ந்த பகுதியில் ஹட்ஸன் பே கம்பெனிக் கிடங்கு ஏதாவது ஒன்றுக்குச் செல்லுவது நிச்சயம். அங்கே போனால் சாப்பாட்டுக்குக் கவலை இல் லை. பின்னவன் முக்கி முனகி நடந்து கொண்டிருக்குபோது அவன் மனதில் ஊசலாடிய எண்ணங்கள் இவைதான். முன்னேறி நடக்க தன் னை அவன் நிர்ப்பந்தப்படுத்தி ஈடுபடுத்தினான்; அதே மாதிரி; முன்னே சென்றவன் தன் னை இடைவழியில் விட்டுவிட்டு ஓடிப் போய்விடவில் லை என்றும், குடிசையில் தனக்காகக் காத்திருப்பான் எனவும் நம்பும்படி மனசைப் பலவந்தப்படுத்தினான். இம்மாதிரி நினைக்கும் நிர்ப்பந்தம் அவனுக்கு ஏற்பட்டது. இல்லாவிட்டால் நடப்பதற்கு முயற்சி செய்வதில் பலனே கிடையாது. வழியிலே கிடந்து செத்து மடிந்திருக்க வேண்டியதுதான். மங்கி மங்கித் தெரியும் சூரிய வட்டமும் வடமேற்கில் மூழ்கி மறைந்தது. இதற்கு முன் இதே மாதிரி பலதடவை தொடர்ந்து எட்டிப்பிடிக்க ஓடிவரும் பருவத்தைத் தப்பி ஓடுவதற்கு தன் சகாவுடன் ஓடியதை எல்லாம் ஒவ்வொரு அடிவைக்கும் போதும் நினைத்தான். மறுபடியும் குடிசையில் இருக்கிற உணவு, ஹட்ஸன் பே கம்பெனி கிடங்கில் உள்ள உணவு அத்தனையையும் நினைத்தான். அவன் இரண்டு நாட்களாகச் சாப்பிடவில் லை. வெகுநாளாகவே எதுவும் சாப்பிடவே வேண்டியிருக்கவில் லை. வழியிலே காய்ந்துக் கிடந்த காட்டுக் காய்களைப் பறித்து வாயில் போட்டான். காட்டுக்காயில் பொட்டுத் தண்ணீரும், கசக்கும் வித்தும்தான் உண்டு. கடித்துச் சுவைத்தான். இந்தக் காயைத் தின்றால் பசி ஆறாது என்பது தெரியும். ஆனால் அனுபவத்தையும் அறிவையும் மீறியதொரு நம்பிக்கை அவனைத் தின்ன வைத்தது. இரவு ஒன்பது மணி இருக்கும். குத்துக்கல்லில் கட்டை விரல் மோத, சோர்வும் பலவீனமும் அவனை மேற்கொண்டது. அவன் விழுந்தான். இப்படியும் அப்படியும் அசையாமல் கிடந்தான். முதுகுச் சுமைக் கயிற்றைத் தளர்த்தித் தழுவவிட்டு உட்கார்ந்தான். வடதிசைப் பிராந்தியமாகையால் இன்னும் நன்றாக இருட்டவில் லை. பாறையில் தடவித் தடவி காய்ந்துலர்ந்த பாசியைச் சேகரித்தான். அதைக் குவித்து வைத்து நெருப்பு மூட்டினான். நெருப்பு நின்று எரியவில் லை, புகைந்து குமைந்தது. தகரப் போணியில் தண்ணீர் சுட வைத்தான். மூட்டையை அவிழ்த்தவுடன் முதல் வேலையாகக் கையிலிருந்த தீக்குச்சிகளை எண்ணினான். மொத்தம் அறுபத்தி ஏழு தீக்குச்சிகள் இருந்தன. நிச்சயப்படுத்திக் கொள்ள மூன்று தடவை திருப்பித் திருப்பி எண்ணினான். அவற்றைச் சில கூறுகளாகப் பிரித்து, ஒவ்வொன் றையும், ஈரம் கசியாத வெண் ணைக் கடுதாசியில் சுருட்டி ஒன் றை சுங்கான் புகையிலைப் பையிலும், மற்றொன் றை தொப்பியின் சுற்றுப்பட்டியிலும் இன்னொன் றை உள் சட்டைக்குள் மாரிலும் சொருகிக் கொண்டான். திடீரென்று பயம் உந்தித் தள்ள மறுபடியும் எல்லாவற்றையும் எடுத்து நன்றாக எண்ணிப் பார்த்தான். அறுபத்தியேழுதான் அப்போதும் இருந்தது. ஜோடுகளை நெருப்பருகில் வைத்துக் காய வைத்தான். காலைச் சுற்றுவதற்கிருந்த மொக்காஸின் தோல் தொப்பலாக நனைந்து திரிதிரியாகக் கிழிந்து போயிருந்தது. கம்பளி மேஜோடு ஓட்டை விழுந்துவிட்டது. பாதம் புண்ணாகி ரத்தம் கசிந்தது. கணுக்காலில் வலி தெறித்தது. சற்றுத் தடவிப் பார்த்தான். முழங்கால் பருமனுக்கு வீங்கிவிட்டது. கம்பளிப் போர்வையில் ஒரு துண் டை எடுத்துக் கிழித்து கணுவை இறுக வரிந்து கட்டினான். பாதத்தைக் குளிரிலிருந்து பாதுகாக்க இன்னும் இரண்டு துண்டுகளைக் கிழித்து பாதங்களையும் கட்டிக் கொண்டான். பிறகு வென்னீரைக் குடித்தான். போர்வைக்கடியில் சுருண்டான். பிரேதம் மாதிரி தூங்கிக் கிடந்தான். சூரியன் வடகிழக்கில் உதயமாயிற்று. மேகம் சூரியனை மறைத்தது. காலை ஆறு மணிக்கு விழித்தான். மல்லாந்தபடி படுத்துக் கிடந்தான். சாம்பல் பூத்த வானத்தைப் பார்த்தே கிடந்தான். வயிறு பசிக்கிறது என்பது தெரியும். ஒருக்களித்துச் சரிந்து படுக்கும்போது, ஒரு முக்காரச் சத்தம் கேட்டது. ஒரு காட்டுமான் இவனையே பார்த்துக்கொண்டு நின்றது. மிருகம் ஐம்பது அடி தூரத்தில்தான் நின்றது. மனிதனுக்கு உடனே காட்டு மான் கறி நெருப்பில் தளதளவென்று பொறிவதுதான் மனக்கண்ணில் தெரிந்தது. பக்கத்திலிருந்த துப்பாக்கியை எடுத்து, தெய்வத்தைக் கும்பிட்டு, குதிரையை இழுத்தான். மிருகம் துப்பாக்கியைக் கண்டதும் குதிபோட்டுக் கொண்டு ஓடிப்போயிற்று. வாயிலே வந்தபடி திட்டிக்கொண்டு துப்பாக்கியை எறிந்தான். எழுந்து நிற்பதற்கு வலி பொறுக்க மாட்டாமல் அலறினான். நடப்பது பகீரத பிரயத்தனமாகி விட்டது. கால்களை இழுத்து இழுத்துப்போட்டு மெதுவாக நடந்தான். துருப்பிடித்துப் போனதுமாதிரி கால்கள் மடங்க மறுத்தன. மனசை இழுத்துப் பிடித்து பலவந்தமாக வலியைப் பொருட்படுத்தாமல் காலை மடக்கி நீட்ட வேண்டி இருந்தது. கடைசியாக எழுந்து நின்றான். இம்முயற்சியில் இவனது தெம்பு முழுவதும் இற்று விட்டது. சற்று மேடான இடத்தில் சென்று சுற்றுமுற்றும் பார்த்தான். நாலா திசையிலும் மரமோ குத்துச் செடியோ பெயர் சொல்லக்கூடக் கிடையாது. பாசியும் பாறையும், குட்டையும் சிற்றோடையுந்தானே தென்பட்டது. வானம் சாம்பல் பூத்திருந்தது. தரையும் தண்ணீரும் சாம்பல் பூத்துக் கிடந்தது. வானத்தில் சூரியனோ, சூரியன் இருப்பதாக அறிகுறியோ தென்படவில் லை. வடக்கு எங்கிருக்கிறது என்பது தெரியவில் லை. நேற்றிரவு இந்த இடத்துக்கு வந்த தடம் மறந்து போயிற்று. ஆனால் வழிதப்பி விடவில் லை. அவனுக்கு அது தெரியும். நிச்சயமாக, சீக்கிரத்தில் குத்துச் செடிகள் செழித்து வளரும் பிரதேசத்துக்குப் போவான். அது இடது பக்கமாக, எங்கோ, வெகு அருகிலேயே, ஒரு வேளை அதோ தெரியும் அந்த மலையைத் தாண்டியதும் இருப்பதாக அவன் நினைத்தான். திரும்பிப் போய் மூட்டையைக் கட்டினான். மூன்று பொட்டணங்கலாக மடித்து வைத்த தீக்குச்சிகள் வைத்த இடத்திலேயே இருக்கிறதா என்று நிச்சயப்படுத்திக்கொண்டான். ஆனால், அவன் அதை மறுபடியும் எண்ண உட்காரவில் லை. ஆனால் சற்றுத் தயங்கினான். எதிரில் ஒரு மூட்டை, தோற்பை மூட்டையைப் பார்த்துத் தயங்கினான். அதை வெடுக்கென்று எடுத்தான். வெறிச்சோடிக் கிடந்த பனி வனாந்தரம் அதையும் அவனிடமிருந்து பிடுங்கிக்கொள்ள முயன்றது போலப் பட்டது. அதன் எடை பதினைந்து பவுண்டுகள். மறுபடியும் அவன் பகலுக்குள் தள்ளாடி நுழையும்போது, அதுவும் அவன் மூட்டைக்குள் நுழைந்தது. இடது பக்கமாக நடந்தான். காட்டுக் காய்களைப் பறித்துத் தின்னுவதற்காக மட்டும் இடையிடையே நின்றான். கணுக்கால் மடங்க மறுத்தது. நொண்டுதல் ஜாஸ்தியாயிற்று. ஆனால் வயிற்றில் உண்டான வலியைவிட இந்த வலி பெரிதாகத் தென்படவில் லை. பசி குடலைப் பின்னி முறுக்கியது; பிய்த்துப் பிய்த்துத் தின்றது. குத்துச்செடி முளைத்துக் கிடக்கும் பிரதேசத்தை அடைவதற்கு தடம்பிடித்துச் செல்லுவதற்கு வேண்டிய சிரத்தையைக்கூடக் குலைத்தது அந்தப் பசி. காட்டுக் காய் பசியை ஆற்றவில் லை. நாக்கையும் அண்ணாக்கையும் நமைச்சலால் துன்புறுத்தியது. கடைசியாக ஒரு பள்ளத்தாக்கில் வந்திறங்கினான். பாறையில் முட்டையிட்டு வாழும் காட்டுப் பட்சி, கிர் கிர் என்ற கூச்சலிட்டு சிறகையும் படபடவென்றடித்துப் பறந்தது. கல்லெடுத்து வீசினான். கல் அதன்மீது விழவில் லை. மூட்டையைக் கீழே இறக்கிவிட்டு, பூனை குருவியை பிடிக்கப் பதி வைப்பதுபோல் அவற்றைத் தொடர்ந்தான். கூர்மையான பாறையின் முனை கால்சட்டையைக் கிழித்து, முழங்காலையும் தேய்த்து வழி நெடுக ரத்தம் கசிவுகொண்டு தடக்கோலமிட்டது. பசியின் வலியிலே இந்த வலி அஸ்தமித்தது. பாசியிலே புழுப்போல நெளிந்து ஊர்ந்தான். சட்டை தொப்பலாயிற்று. உடம்பும் நனைந்தது. அது அவனுக்குப் படவில் லை. பசியின் வேகம் ஜன்னிமாதிரி இருந்தது. எப்போதோ பட்சிகள் சிறகெடுத்துப் பறந்துவிட்டன. அவற்றின் கிர் - கிர் என்ற சப்தம் அவனைக் கேலி செய்வது போல இருந்தது. அவற்றைக் கற்பித்தான். அவற்றின் குரல் காட்டி அவற்றைக் கேலி செய்தான். ஒன்று தூங்கிக் கொண்டிருக்கையில் அதனிடம் நெருங்கி விட்டான் போலும். பாறைக் குடுவையிலிருந்து அவன் முகத்தில் மோதிக்கொண்டு பறந்தது. சடக்கென்று எட்டிப் பிடித்தான். பட்சியைப்போல அவனுக்கும் அது எதிர்பாராத நிகழ்ச்சி. கையில் அகப்பட்டது மூன்று இறகுகள். அது பறந்து செல்லுவதைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அதனிடம் அவனுக்கு வந்த கோபம் சொல்லி மாளாது. அது ஏதோ மன்னிக்க முடியாத ஒரு தப்பிதத்தைச் செய்துவிட்டது போலிருந்தது அவனுக்கு.