shabd-logo

25. முதலும் முடிவும் ( பகுதி 2)

8 January 2024

0 பார்த்தது 0

"பிரேதத்தின் மேலிருந்த எதையும் எடுத்தாயா?" "நாங்கள் சண்டை போட்டுக் கொள்ளும்பொழுது இது அவன் பையிலிருந்து விழுந்தது." அது வெறும் தபால் கவர். தென் அமெரிக்கத் தபால் குறியிட்டு, "பாகட்ரிக் வாலன், ஸைமன் ஓட்டல், பாரியர் தெரு, லண்டன்" என்ற விலாசமிடப்பட்டிருந்தது. "அதைத் தீயில் போடு" என்றான் கீத். அப்படிச் சொல்லும் பொழுது அவனது மனம் சுருக்கென்று தைத்தது. அதைத் தீயிலிருந்து எடுக்க கீத் முயன்றான். இந்த உத்தரவினால், தீயிலிட வேண்டுமென்று கூறியதினால், இந்த - இந்த... த்துடன் கலந்து கொண்டான். மறுபடியும் அதை எடுக்க முயற்சிக்கவில் லை. கடிதம் கருத்து, சுருண்டு சாம்பலாயிற்று. "ஏனடா அதை என்னிடம் வந்து சொன்னாய்?" என்று மறுபடியும் கேட்டான் கீத். "உனக்குத் தான் இந்த விஷயங்களைப் பற்றித் தெரியும். அவனைக் கொல்லவேண்டுமென்றா நினைத்தேன்! நான் அந்தப் பெண் ணைக் காதலிக்கிறேன் கீத். நான் என்ன செய்யட்டும்?" என்ன சிறுபிள் ளைத்தனம்! என்ன செய்யவேண்டும் என்று கேட்கிறான்! லாரியின் புத்திக்கு என்ன சொல்வது. "உன் னை ஒருவரும் பார்க்கவில் லை என்று நீ நினைக்கிறாயா?" "அந்தத் தெருவே இருண்ட தெரு, வெளியில் யாருமில் லை!" "இரண்டாந்தரம் அவளை விட்டு எப்பொழுது சென்றாய்?" "ஏழு மணி இருக்கும்" "எங்கே போனாய்?" "நேராக என் ரூமிற்கு." "பிட்ஜ்ராய் தெருவிலிருப்பதா?" "ஆமாம்!" "நீ வருகிறதை யாரும் பார்த்தார்களா?" "இல் லை" "அதற்கப்புறம் என்ன செய்தாய்?" "உட்கார்ந்திருந்தேன்" "வெளியே போகவில் லையா?" "இல் லை" "அந்தப் பெண் ணைப் பார்க்கவில் லையா?" "இல் லை" "அதற்கப்புறம் அவள் என்ன செய்தாள் என்று உனக்குத் தெரியாதா?" "தெரியாது" "அவள் உன் னைக் காட்டிக் கொடுப்பாளா?" "ஒரு காலமும் இல் லை!" "பயத்தில் உளறிக் கொட்டிவிடுவாளா?" "மாட்டாள்" "நீ அவளுடன் சம்பந்தம் வைத்திருக்கிறாய் என்று யாருக்காவது தெரியுமா?" "ஒருவருக்கும் தெரியாது." "ஒருவருக்கும்?" "யாருக்குத் தெரியும் என்று எனக்கு எப்படித் தெரியும்?" "நீ முதலில் அவள் வீட்டின் உள்ளே போகும்போது யாராவது பார்த்தார்களா?" "இல் லை. அவள் கீழே வசிக்கிறாள். சாவி என்னிடம் இருக்கிறது." "அவற்றை என்னிடம் கொடு. அவளை உன்னுடன் சம்பந்தப்படுத்தக்கூடிய வேறு பொருள்கள் ஏதாவது வைத்திருக்கிறாயா?" "வேறு ஒன்றும் கிடையாது." "உன்னுடைய அறையில்...?" "கிடையாது." "புகைப்படம், கடிதங்கள்?" "கிடையாது." "நினைத்துப் பார்த்துச் சொல்." "இல் லை." "இரண்டாவது தடவை சென்றபொழுதும் உன் னை ஒருவரும் பார்க்கவில் லையே?" "இல் லை." "காலையில் அங்கிருந்து வரும்பொழுதும் ஒருவரும் கவனிக்கவில் லையே?" "இல் லை" "அதுவும் உன் அதிர்ஷ்டந்தான். இப்படி உட்கார். நான் சிறிது யோசிக்க வேண்டும்." யோசிக்க வேண்டும்! கை கடந்த இந்த விபரீதத்தைப் பற்றி யோசிப்பு என்ன இருக்கிறது! அவனால் யோசிக்க முடியவில் லை - சிந்தனை கவிய மாட்டேன் என்றது. மறுபடியும் கேள்வி போட ஆரம்பித்தான். "மறுபடியும் அவன் வந்தது அந்தத் தடவைதானா?" "ஆமாம்." "அவள் அப்படி உனக்குச் சொன்னாளா?" "ஆமாம்." "அவள் அங்கிருக்கிறாளென்று அவன் எப்படிக் கண்டான்?" "எனக்குத் தெரியாது." "எவ்வளவு குடித்திருந்தாய்?" "நான் குடிக்கவில் லை." "எவ்வளவுதான் குடித்திருந்தாய்?" "இரண்டு பாட்டில் கிளாரட் - அது ஒன்றும் பிரமாதம் இல் லை." "அவனைக் கொல்ல வேண்டுமென்ற நினைப்பு உனக்குக் கிடையாது என்று நீ கூறுகிறாய்?" "இல் லை, கடவுள் சத்தியமாக." "அதுவும் நல்லதற்குத்தான். ஏன் பிணத்தைப் போடுவதற்குக் கமான் வளைவை நினைத்தாய்?" "அதுதான் முதலாவதாக என் கண்ணுக்குப் பட்ட நல்ல இருண்ட இடம்." "அவன் முகக்குறி கழுத்து நெரிக்கப்பட்டதுபோலக் காணப்பட்டதா?" "அதைக் கேட்காதே!" "அப்படித்தானா?" "ஆமாம்." "அவன் உடைகளில் அடையாளம் ஏதாவது இருக்கிறதா என்று கவனித்தாயா?" "இல் லை." "ஏன் கவனிக்கவில் லை?" "ஏன் கவனிக்கவில் லை! தெய்வமே இந்த வேலையை நீ செய்திருந்தால்." "அவன் முகம் கோரமாக மாறியிருந்தது என்கிறாயே? பார்த்தால் அடையாளங் கண்டுபிடிக்க முடியுமா?" "எனக்குத் தெரியாது!" "அவனுடன் கடைசியாக அவள் வாழ்ந்தாளே அது எங்கே?" "திட்டமாக எனக்குத் தெரியாது; பிலிம்க்கோ என்று நினைக்கிறேன்." "சோஹோ அல்லவே?" "இல் லை." "சோஹோவிற்கு வந்து எத்தனை காலம் இருக்கும்?" "ஏறக்குறைய ஒரு வருஷம்" "அந்தக் காலம் முழுவதும் அதே வீட்டில்தானா?" "ஆமாம்." "அந்த வீட்டிலோ அல்லது அந்தத் தெருவிலோ அவளை அவனது மனைவி என்று அடையாளம் கண்டு சொல்லக்கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா?" "இல் லை என்று நினைக்கிறேன்." "அவனுக்கு என்ன வேலை?" "வேலையா, ஊர்ப் போக்கிரி." "அப்படியா! ரொம்ப நாள் தண்ணீருக்கு அப்புறம் அயலூரில் கழிப்பான் போல?" "ஆமாம்" "போலீசாருக்கு அவனைத் தெரியுமா?" "அதைப்பற்றி எனக்கொன்றும் தெரியாது." "சரி நான் சொல்வதைக் கேள். இங்கிருந்து நேராகப் போய் உன் அறையிலேயே இரு; நான் நாளைக் காலை உன்னிடம் வரும்வரை எங்கும் போகக்கூடாது. ஜாக்கிரதை. சத்தியம் செய்து கொடு." "சத்தியமாக நான் வெளியே போகமாட்டேன்." "இப்பொழுது ஒரு விருந்திற்குப் போகவேண்டும். நான் இதைப்பற்றி யோசனை செய்கிறேன். குடிக்காதே. யாரிடமும் பேசாதே. ஆனால், தைரியமாக இரு." "அண்ணா! எவ்வளவு சீக்கிரம் வரமுடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வா." என்ன வெளிறிய முகம்; என்ன சோகம் தேங்கிய கண்கள்; கைகளில் என்ன நடுக்கம்; வெறுப்பு, கோபம், பயம் எல்லாம் கீத் டரான் டை வாட்டினாலும், அவன் இதயத்தில் சிறிது இரக்கம் தோன்றியது. சகோதரன் தோளில் கையை வைத்து, "தைரியமாக இரு; தைரியந்தான் வேண்டும்" என்றான். உடனே அவன் மனதில் 'தைரியமா, அட தெய்வமே! அது எனக்கு எவ்வளவு வேண்டும்?' என்று தோன்றியது. *****லாரன்ஸ் டரான்ட் சகோதரன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு, முதலில் வேகமாக, பின் மெதுவாக, அப்புறம் வேகமாக வடக்கு நோக்கி நடந்தான். ஏனெனில், சித்த உறுதியினால் ஒரு சமயத்தில் ஒரே காரியத்தை சாதிக்கத் திறமை வாய்ந்தவர்கள் இருப்பதுபோல், அது இல்லாமையால் சிலர் இப்பொழுது ஒன்றும், சிறிது கழித்து மற்றொன்றுமாக அதே தீவிர கதியில் செய்வார்கள், இந்த மாதிரி மனிதர்களுக்கு விபத்து சித்தவுறுதி யின் மையினால் ஏற்பட்டால், இருக்கும் உறுதியையும் இழப்பதற்கு வேறு காரணம் தேவையில் லை. "அதற்கென்ன, நாளைக்கு நாம் சாகத்தான் போகிறோம்" என்ற மனப்பான் மை ஏற்படுகிறது. கீத்திடம் சென்று, காரியத்தைச் சொல்ல வேண்டும் என்ற முயற்சி அவனைக் களைப்பித்து பலத்தை இழப்பித்தது. அந்த மூன்று உணர்ச்சிகளுக்கு ஏற்பவே, அவனது நடையின் கதியும் இருந்தது. சகோதரன் வீட்டைவிட்டுப் புறப்படும்பொழுது, நேரே தன் வீட்டிற்குச் சென்று கீத் டரான்ட் வரும்வரை காத்திருக்க வேண்டும் என்ற நினைப்பிலேயே புறப்பட்டான். சிறிது தூரம் செல்லு முன் ஏற்பட்ட மனச்சோர்வு, தற்கொலை செய்து கொள்ளக்கூடிய மனப்பான் மையை ஏற்படுத்தியது. அந்தப் பெண்ணின் பாசங்கூட இந்தச் சோர்வை எதிர்த்து நிற்கச் சக்தியற்று விட்டது. ஏன் இந்த வியர்த்தமான வாழ்க்கையை நீடிக்க வேண்டும்? ஏன்? லாரன்ஸ் தனது செய்கையின் நிலைக்களமான தெருவின் பக்கம் நெருங்கினான். மனது பழைய நினைவுகளில் சென்று சென்று கவிந்து கடைசியாக அவனது நினைவின் முற்றுப்புள்ளியாக அந்த சமீபத்திய கோர சம்பவத்தில் முடிவடைந்தது. எதிரில் தென்பட்ட மருந்துக்கடை ஆறுதலையளித்தது. விஷமாத்திரையைச் சட்டை ஓரத்தில் மறைத்துக்கொண்டே இனி நடமாட வேண்டும்! என்ன மன நிம்மதியைத் தரும் நினைவு? பயத்தை அவர்களும் அனுபவிக்கட்டும். நாக்கில் நரம்பில்லாது பேசுபவர்களுக்கு அப்பொழுது தெரியும்! களைப்பை நீக்க, மருந்து குடிக்கக் கடையில் ஏறினான். "நன்றாகத் தூக்கம் இல் லையோ?" என்று கேட்டுக் கொண்டு மருந்தைக் கொடுத்தான் கடைக்காரன். "இல் லை" மருந்துக் கடைக்காரன் வாழ்க்கையே விசித்திரமானது. இந்த மனித யந்திரமும் ஒடிந்து விழாதபடி, நாள் முழுவதும் மாத்திரையும் பஸ்பமும் விற்பதுதானே! நல்ல வேடிக்கையான வியாபாரம்! அங்கிருந்த கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்தான்! கொலை செய்தவனுக்கு அவ்வளவு அழகான முகம் அவசியமில் லைதான். மனச்சோர்வு கொஞ்சம் குறைந்தது. வெளியே இறங்கி வேகமாக நடந்தான். மனதிலே ஏதோ அமுக்குவதுபோல கனமும் அதே சமயத்தில் ஒரு கலகலப்பும் இருந்தது. இந்தப் பெண்ணும் கீத்தும் அவன் மனதில் ஒருவித பயத்தை உண்டாக்கினர். அந்தப் பிரேதத்தைப் போட்ட பழைய இடத்திற்குப் போய்ப் பார்க்கவேண்டுமென்ற ஒரு பேய் ஆசை அவனை உந்தித் தள்ளியது. பரோ தெருவைத் தாண்டி அந்தச் சந்தில் திரும்பினான். அங்கு ஒரே ஆள்தான் தென்பட்டான். கூனிக் குறுகிய மனிதன் ஒருவன் அந்த மங்கிய வெளிச்சத்தில் அவனை நோக்கி வந்தான். வறுமையின் கோலமாக பார்ப்பதற்கு பயங்கரமான, ஆனால் பரிதாபகரமான நொண்டி. "என்ன அண்ணா! உமக்குப் 'போறாத' காலம்போல் இருக்கிறது!" என்றான் லாரன்ஸ். அவனது சிரிப்பு, வயல்களில் பட்சி விரட்ட வைத்த துணிப் பதுமையின் சிரிப்பு மாதிரியிருந்தது. "அதிர்ஷ்டமும் செழிப்பும் என் பாதையில் எதிர்ப்படவில் லை. நான் வாழ்க்கையின் தோல்வி. எப்பொழுதுமே தோல்விதான். நான் ஒரு காலத்தில் பாதிரியாக இருந்தேன் என்றால் நம்புவாயா?" என்றான் அந்த நொண்டி. லாரன்ஸ் ஒரு ஷில்லிங்கை எடுத்து நீட்டினான். அந்த அன்னியன் வேண்டாம் என்பது போலத் தலையை அசைத்து விட்டு, "நீயே வைத்துக்கொள். உன்னிடம் இருப்பதைவிட என்னிடம் ஜாஸ்தி இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் என் மீது இவ்வளவு சிரத்தை காண்பித்ததற்காக வந்தனம். கீழே விழுந்து போனவனுக்கு, பணத்தை விட இது எவ்வளவோ ஜாஸ்தி." "சொல்லுவது நிஜந்தான்." "ஆமாம், வெறுமனே நாளை நீடிப்பதைவிட இப்பொழுதே சாகத் தயார். எனது மதிப்பை இழந்தேன். ஒருவன் தன் மதிப்பை இழக்காமல் எத்தனை நாள் பட்டினி இருக்கமுடியும் என்று ஆச்சரியப்படுவேன். ரொம்பக்காலமல்ல! என் வார்த்தையை நீ நம்பு. ரொம்பக் காலமல்ல" என்றான். மேலும் அதே குரலில், "நீ அந்தக் கொலையைப் பற்றிப் பேப்பரில் படித்தாயா? இங்குதான் நடந்தது. இப்பொழுதுதான் அந்த இடத்தைப் பார்த்தேன்." "நானும் படித்தேன்" என்று லாரன்ஸ் வாயிலிருந்து வெளிவர இருந்தது. அவன் பயத்தினால் அதை அடக்கினான். "இனியாவது நல்ல அதிர்ஷ்டம் வரட்டும். போய் வருகிறேன்" என்று சொல்லி வேகமாக அவ்விடத்தை விட்டு அகன்றான். தொண் டையில் ஒரு பேய்ச் சிரிப்புக் கிடந்து விம்மியது. இந்தத் துணிப் பதுமைகள் கூட என் கொலையைப் பற்றியே பேசுகின்றன! *****சிலருடைய மனவுறுதி விசித்திரமானது. பத்து மணிக்குத் தூக்குமேடையில் தொங்க வேண்டியதாகத் தண்டிக்கப்பட்டாலும் எட்டு மணி வரை சித்தம் கலையாமல் நிதானமாகச் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருப்பார்கள். இந்த மாதிரி மனிதர்கள்தான் உலகத்தில் முன்னேறி வருகிறவர்கள். இவர்கள்தான் பாதிரிகளாகவும் பத்திரிகாசிரியர்களாகவும், நீதிபதிகளாகவும், பிரதம மந்திரிகளாகவும், பெரிய தளகர்த்தர்களாகவும், பணம் லேவாதேவி செய்பவர்களாகவும், நல்ல சேவை செய்யக் கூடியவர்களாகவும் வருவர். அவர்கள் கற்பனையை நினைத்த மாத்திரத்தில் அகற்றி உணர்ச்சியை அறிவிற்கு அடிமைப்படுத்தி வேலை செய்யக் கூடியவர்கள். அஸ்தமன வேளையில் அழகு லாகிரியிலே தலையசைக்கும் வயல்புறங்களில் நிற்கும்பொழுது, யாரும் மேற்படி ஆசாமிகளைப் பற்றி நினைப்பதில் லை. அன்று டெசானில் விருந்து சாப்பிட்டு வெளிவரும் வரை, கீத் டரான்ட், மேற்படி வர்க்கத்தில் ஒருவராக இருக்க வேண்டிய அவசியமிருந்தது. அங்கிருந்து புறப்பட்டதும் கீத் மனது ஒரு வழியாகச் சாவதானமாகப் பாயவில் லை. அன்று கேட்ட விபரச் சுழலில் இறங்கியது. ஒருபுறம் சகோதரன்; மற்றொருபுறம் சமூகப் பாதுகாப்பின் சின்னமான நியாயம். நீதி ஒருபுறம், மற்றொருபுறம் இரத்த பந்தத்தின் பாசம் என்ற சுய பாதுகாப்பு. அவனுக்கு ஆலோசனை சொல்லுமுன்... என்ன நடந்தது என்று எல்லா விஷயத்தையும் சுயமாக ஆராய வேண்டும். குளோவ் சந்தையையும் அந்தக் கமான் வளைவையும் பார்க்க வேண்டும். கீத் டரான்டின் கால்கள் பரோ தெருவில் திரும்பியது. நேராக ஒரு முறை அந்தக் கோடி வரை நடந்து சென்று திரும்பினான். 42-ம் நம்பர் வீடு சிறியதுதான். சுவரிலே வியாபார விளம்பரங்கள். அடைத்த ஜன்னல்கள். இதிலிருந்து எந்தப் பக்கம் லாரி பிரேதத்தைத் தூக்கிச் சென்றான்? 50 அடிகளுக்கப்புறம் அப்பா என்ன இருட்டு, சந்து இருப்பதாகவே தெரியவில் லையே! இதுதானா குளோவ் சந்து! சந்து என்று கூடச் சொல்லமுடியாது. தெருவில் சிறிய இடைவெளி. அந்தக் கமான் வளைவுப் பக்கத்திலேயே வந்துவிட்டான். "இங்கேதான் சாமி; இந்த இடத்தில்தான்" என்றது ஒரு சிறு குரல். திடுக்கிட்டுக் குளறாமல் சாவதானமாக அவனைத் திரும்பி ஏறிட்டுப் பார்க்க, தனது மனோசக்தியின் திறமைகளை எல்லாம் ஒருங்கே துணை கொள்ள வேண்டியிருந்தது. "இங்கேதான் சவத்தைக் கண்டு பிடித்தார்கள். இந்தா - இதோ இருக்கே இந்த இடம்தான். அவனை இன்னம் பிடிக்கலே! ரொம்பக் கெட்டிக்காரன் சாமி!" இருளில் பார்த்துப் பழகிய பின் தான், அதைச் சொன்னவன் சிறு பையன் - பத்திரிகை விற்பவன் - அந்த இடத்திலேயே நின்று வியாபாரம் நடத்துகிறவன் என்று கீத் கண்டான். அவனிடமிருந்து ஒரு பத்திரிகை வாங்கித் தெரு மூலையிலிருந்த மங்கிய விளக்கில் படித்தான். கொலை செய்யப்பட்டவனைப் பற்றி அடையாளம் ஒன்றும் தெரியவில் லை என்று கண்டிருந்தது. இந்தத் தெருவிலும் ஒரு போலீஸ்காரன் எதிரே வருவதைக் கீத் கண்டான். அவனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, மறுபடியும் பரோ தெருவிற்குத் திரும்பி நடந்தான். 42-ம் நெம்பர் வீடும் சமீபித்தது. அவளை ஏன் பார்க்கலாகாது? நேராகச் சென்று கதவைத் தட்டினான். பதில் இல் லை. கையிலிருந்த சாவியை வைத்துக் கதவைத் திறந்து, உள்ளே சென்றான். உள்ளே கும்மிருட்டு. "நீயா லாரன்ஸ்?" என்றது ஒரு பெண் குரல். கீத், பதிலளிக்காது மின்சார விளக்கு உத்தேசமாக இருக்கும் இடத்தில் கையை வைத்துத் தடவினான். "ஏன் கதவைத் தட்டினாய்? நான் பயந்தே போனேன். விளக்கைப் போடேன்! ஏன் தயங்குகிறாய்?" என்றது அக்குரல் மறுபடியும். திடீரென்று தன் னை யாரோ தழுவுவது போல் கீத் உணர்ந்தான். "ஐயோ! இதாரது?" பயந்தலறியது அக்குரல். நல்ல காலம்! மின்சாரப் பொத்தான் கையில் தென்பட்டது. அமுக்கினான். வெளிச்சம் வந்தது; சின்ன அறை. சிறிது தூரத்தில் ஒரு திரை. பின்புறம் படுக்கை போலும். வறுமையிலே அழகுணர்ச்சியைச் சாந்தி செய்ய முயலும் பரிதாபகரமான முயற்சி. அவள் முகமோ வெளிறி பயத்தில் கண்கள் விறைத்துப் போனது போல் திறந்தபடி நின்றன. அவள் உருவமோ, துன்பத்தால், பலவீனத்தால் பாதுகாப்பை எதிர்பார்த்து மடியும் மலரின் சோகவிலாஸம் நிறைந்த உருவம். உணர்ச்சி என்ற விஷயத்தை அறவே மடிய வைத்த, கீத் டரான்ட் மனதிலும் சிறிது இரக்கம் தளிர்த்தது. "பயப்படாதே. உனக்குக் கெடுதி செய்ய வரவில் லை. உட்கார்ந்து பேசட்டுமா? லாரன்ஸ் என் னை நம்பாவிட்டால் இதைக் கொடுப்பானா?" என்று சாவிக் கொத்தைக் காண்பித்தான். அவள் அசையவில் லை. பதில் பேசவில் லை. "ஏன் உட்கார். பயப்படுத்தி விட்டேனா?" என்றான் கீத் மறுபடியும். அதற்கும் அவள் அசையவில் லை; ஆனால் மெதுவாக "நீங்கள் யார்?" என்றாள். அந்தப் பயத்தை உணர்ந்த கீத் முன் ஜாக்கிரதையையும் இழந்து, "நான் லாரன்ஸ் உடைய சகோதரன்" என்றான். பயம் அகன்றது போல ஒரு பெருமூச்சு வந்தது. சிறிது நேரம் கழித்து "உனக்கென்ன வயது?" என்றான். "எனக்கு இருபதாகிறது." "என் சகோதரன் மீது உனக்கு மிகுந்த பற்றுதலோ?" "அவருக்காக உயிரையும் கொடுப்பேன்." அவளது குரலைச் சந்தேகிக்க முடியாது. சித்தத்திலிருந்து வெளிப்பட்ட உறுதியான சொல். கீத் அவளைப் பற்றிய விபரங்களைக் கேட்டான்; சம்பவத்தைப் பற்றிக் கேட்டான். அவள் குழந்தைபோல மறைக்காமல் பதிலளித்து வந்தாள். அவளது பேச்சில் இலைமறை காய்போல், ஆனால் பிணிப்புவிடாத பொற் சரடு போன்ற, லாரன்ஸ் மீது அவளுக்கிருந்த ஒருவித பக்தி, பாசம், அவனைக் காப்பாற்ற உயிரையும் கொடுக்க முன்வரும் மனவுறுதி எல்லாம் வெளிப்பட்டன. அவளைப் பொறுத்தவரை கவலையில் லை; அவளைப் பற்றிப் பயப்பட வேண்டிய அவசியமே இல் லை. *****மறுநாட்காலை கீத் பத்திரிகையை வாசிக்கும்பொழுது திடுக்கிட்டான். பத்திரிகையில் ஒருவன் கைது செய்யப்பட்டதாகக் கண்டிருந்தது. சரி, எதிர்பார்த்த இடி விழுந்து விட்டது. எதற்கும் சகோதரன் வசிக்கும் இடத்திற்குச் சென்று விஷயத்தை அறியவேண்டுமென்று வேகமாகச் சென்றான். லாரன்ஸின் வேலைக்காரன் அறிவித்த செய்தி அவன் மனதில் பாலை வார்த்தது. வேறு யாரையோ கைது செய்து விட்டார்கள்! உள்ளே சென்றதும், கீத் தனது சகோதரன் படுக்கையின் மீது உட்கார்ந்து புகை பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். "நீ நாளைக்கு அர்ஜன் டைனாவிற்குப் புறப்பட வேண்டும். தயாராகு. நல்ல காலம். வேறு யாரையோ கைது செய்திருக்கின்றனர்!" என்றான் கீத். "என்ன?" மறுபடியும் லாரன்ஸ் "என்ன?" என்று உரத்துக் கேட்டான். இந்த முட்டாளிடம் இதையேன் சொன்னேன் என்று நினைத்துக் கொண்டான் கீத். "அவன் நிரபராதி. அவனுக்கு அபாயமில் லை; போலீசார் எப்பொழுதும் இப்படித்தான்; அது என் அதிர்ஷ்டம்" என்றான் கீத். சகோதரனைச் சமாதானப்படுத்திவிட்டு, கீத் பாங்கியில் 400 பவுன் எடுத்தான். நோட்டுகள் ஒரு வேளை காட்டிக்கொடுத்து விடுமோ? அன்று மாலை சிறிது நிம்மதி ஏற்பட்டது. அன்று கோர்ட்டில் கீத் நன்றாக விவாதித்தான். மாலையில் கீத் அவனைப் பார்க்க வரும்வரை லாரன்ஸ் மனம் ஒரு நிலைப்படவில் லை. தனக்காக ஒரு நிரபராதி அகப்பட்டுக் கொண்டான்... கீத் நேரே உள்ளே வந்து புறப்படுவதற்குப் பணத்தைக் கொடுத்தான். "நான் இருந்து பார்த்துவிட்டுத்தான் போகப் போகிறேன்." கீத் எவ்வளவோ முயன்றும் ஒன்றும் பலிக்கவில் லை. "கீத் என் னை மன்னித்துக்கொள்! எனக்கு ஒன்றும் தெரியவில் லை. மன்னித்துக்கொள்" என்றான். கீத் ஒன்றும் பதிலளிக்கவில் லை. வெளியே அகன்றான். கடைசியாகத் தீர்ப்பும் கூறப்பட்டது. கைது செய்யப்பட்டவனைத் தண்டித்து விட்டார்கள். என்ன அநியாயம்! கீத் சகோதரனைத் தேடி அப்பெண் இருக்கும் இடத்திற்குச் சென்றான். அவள்தான் வந்து கதவைத் திறந்தாள். சகோதரன் மனப்போக்கை ஒருவாறு அறிந்த கீத் அவளிடம் லாரன் ஸை நன்றாகக் கவனித்துக் கொள்ளும்படி எச்சரிக்கை செய்தான். அவள் மனசிலும் அந்தச் சிறைத் தண்டனை பெற்றவன் மீது இரக்கம் இருப்பதை அறிந்தான். பேசி முடியவில் லை, லாரன்ஸே வந்துவிட்டான். இருவரும் பேசவில் லை. இருவருக்கும் தீர்ப்பைப் பற்றியே மனதில் வாதித்தது. "நாளை வரை ஒன்றும் செய்வதில் லை என்று சத்தியம் செய்து கொடு" என்றான் கீத். "சத்தியம் செய்" என்றான் கீத் மறுபடியும். "சத்தியம்" என்றான் லாரன்ஸ்! *****அன்று இரவு லாரன்ஸும் அவளும் நெடுநேரம் குடித்துச் சந்தோஷமாக இருந்தனர். பத்து மணி இருக்கும், அவள் படுக்கைக்குச் சென்றாள். பின்பு லாரன்ஸ் விளக்கடியில் உட்கார்ந்துகொண்டு என்னவோ எழுதிக் கொண்டிருந்தான். அதுவும் முடிந்தது. இப்பொழுது விளக்கு புஷ்பம், ஒளி... ஆனால் இனி? திரையின் பக்கத்திலிருந்து அந்தப் பெண் கவனித்திருந்தாள்... *****கீத் கிளப்பிலிருந்து திரும்பும்பொழுது என்னவோ தோன்றியது. மனதிலே தீர்ப்பின் அநீதி உறுத்திக் கொண்டிருந்தது. பையினுள் கையை விட்டுகொண்டு நடந்தான். என்னமோ கையில் சில்லென்று பட்டது. பழைய சாவி! லாரன்ஸ் கொடுத்தது. பரோ தெருவிற்குப் போக வேண்டுமென்று நேரே அங்கு திரும்பி நடந்தான். வெளிக்கதவு அடைத்துக் கிடந்தது. உள்ளே விளக்கு வெளிச்சம். தட்டினால் பதில் இல் லை. கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். விளக்கு எரிந்தபடி இருக்கிறது. புஷ்பங்கள், பாட்டில்கள், கோலாகலம்! குடிவெறியா? இருவரும் படுத்திருந்தனர். "லாரன்ஸ்! லாரன்ஸ்!" என்று கூப்பிட்டான். பதில் இல் லை. சந்தேகம் உதித்தது. மேலே கையை வைத்தான். சில்லென்று விறைத்துப் போயிருந்தனர். பக்கத்தில் ஒரு கடிதம் மெத்தையின் மீது குத்தப்பட்டிருந்தது. அதுதான், குற்றத்தை ஒப்புக்கொள்ளும் பத்திரம். கீத் அவ்வளவையும் வாசித்தான்! கைகளிலிருந்து அந்தத் தாள்கள் விழுந்தன. அவன் மனக்கண் முன்பு தனது வாழ்க்கையின் குலைவு படமாக விரிந்தது. சடக்கென்று குனிந்து அந்தப் பத்திரத்தைத் தீயில் போட்டு எரித்துச் சாம்பலாக்கினான்.

புதுமைப்பித்தன் மூலம் மேலும் புத்தகங்கள்

72
கட்டுரைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகள்
0.0
புதுமைப்பித்தன் மொத்தம் 108 சிறுகதைகள் எழுதியுள்ளார். அதில் அவர் காலத்தில் 48 மட்டும் பிரசுரமாயின. 1940-ல் புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. புதுமைப்பித்தன் 98 கதைகளை எழுதியுள்ளார். அவர் மணிக்கொடியில் எழுதிய 29 கதைகளைப் புதுமைப்பித்தன் கதைகள் என்ற பெயரில் நவயுகப் பிரசுராலயம் வெளியிட்டுள்ளது. ஆறுகதைகள், நாசகாரக் கும்பல், பக்த குசலோ என்ற அவரது பிற நூல்களையும் அதே நிறுவனம் வெளியிட்டுள்ளது. கலைமகள் பதிப்பகம் காஞ்சனை தொகுதியையும், ஸ்டார் பிரசுரம் ஆண்மை என்ற தொகுதியையும் வெளியிட்டன. ஐந்திணைப் பதிப்பகம் புதுமைப்பித்தனின் மொத்தச் சிறுகதைகளையும் வெளியிட்டது. அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் புதுமைப்பித்தனின் அனைத்துச் சிறுகதைகளையும் வெளியிட்டுள்ளது.
1

1. ஆஷாட பூதி

2 January 2024
0
0
0

மோலியர் (1622-1673) பதினேழாவது நூற்றாண்டில், பிரான்ஸில் நாடகக்காரன் என்றால், மதம் அவனைத் தள்ளிவைத்தது. பிரார்த்தனை - பிரசாதத்தைப் பெறுவது என்றால் விசேஷ சிபாரிசின் பேரில் நடக்க வேண்டிய காரியம். செத்தால

2

2. ஆட்டுக் குட்டிதான்

2 January 2024
0
0
0

ஜேம்ஸ்ஹானலி – இங்கிலாந்து  செக்கச் செவேலென்றிருக்கும் அந்த பஸ், ஏக இரைச்சலுடன் அந்த வளைவைத் திரும்பியது. சூழ்நிலை தாங்கிய அமைதியான வண்ணக் கலவைகளுக்குச் சவால் கொடுப்பது மாதிரி அந்தச் சிகப்பு கண்களை உற

3

3. அம்மா

2 January 2024
0
0
0

கே. பாயில்  பாதை நெடுகலாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், அதற்குச் சின்னக் கிளை ஒன்றும் இருந்தது. இருந்தாலும் மறுபக்கத்தில் ஓடும் சிற்றோடையில் இறங்கி அக்கரைக்குப் போக வேண்டிய அவசியமே இல் லை. மலை வ

4

4. அந்தப் பையன்

3 January 2024
0
0
0

மாக்ஸிம் கார்க்கி  இந்தச் சின்னக் கதையை எப்படிச் சொல்லுவது என்று புரியவில் லை. அவ்வளவு எளிதானது. நான் வாலிபப் பருவத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் தெருக் குழந்தைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு ஊருக்கு வெளியே

5

5. அஷ்டமாசித்தி

3 January 2024
0
0
0

டென்ஷொ வம்சத்தின் ஆதிக்கத்தின்போது, கியாட்டோ என்ற வடக்குப் பிராந்தியத்தில் குவான்ஷின் கோஜி என்ற வயோதிகன் வாழ்த்து வந்தான். நீண்டு நெஞ்சை மறைக்கும் வெள் ளைத் தாடியுடன், ஷிண்டோ குருக்கள்மார் போல உடையணிந

6

6. ஆசிரியர் ஆராய்ச்சி

3 January 2024
0
0
0

ஸின்கிளேர் லூயிஸ்  டாக்டர் ஸ்லீக் பிரம்மச்சாரி; அதிலும், வழுக்கை விழவிருக்கும் வாலிபப் பிரம்மச்சாரி. அவர் இராஸ்மஸ் கலாசாலையில் சரித்திரமும் பொருளாதாரமும் கற்பித்து வந்தார். அதாவது மேடைமீது ஏறி நின்று

7

7. அதிகாலை ( பகுதி 1)

3 January 2024
0
0
0

நிக்கோலாய் டிக்கனோவ்  1918-ம் வருஷம் ஆகஸ்டு மாதத்தில் துருக்கியர் பாக்கூ என்ற இடத்தை முற்றுகை இட்டார்கள். மென்ஷ்விக் நிர்வாகத் தலைமை போர்டின் ஐந்து தலைவர்கள் மூளையும் சுழன்றது. சர்வ குழப்பம்; அது விஷ

8

7.அதிகாலை (பகுதி 2)

3 January 2024
0
0
0

இராத்திரி ஒரு ஊரில் தங்கினதும், ஆலி ஹஸன், டாஷா பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு சளசளவென்று மணிக்கணக்காகப் பேசிக் கொட்டினான். உத்யோகஸ்தரின் விதவை மெய்ஸ் அரிசி ரொட்டியை அசைபோட்டுக் கொண்டிருந்தாள். வி

9

7. அதிகாலை ( பகுதி 3)

3 January 2024
0
0
0

"பொய்யாயிருக்கலாம், ஆனால் சித்திரவதையில், உன் னைக் காட்டிக்கொடுப்பேன்; என் னைக் காட்டிக்கொடுத்துக் கொள்வேன்; எனக்கு ஞாபகத்துக்கு வந்தவர்களையெல்லாம் காட்டிக்கொடுப்பேன். உனக்குச் சித்திரவதை என்றால் எப்ப

10

7. அதிகாலை (பகுதி 4)

3 January 2024
0
0
0

"ஆஹா அப்படியா. பாக்ஷாதான் வயிற்றுக் கடுப்பால் கழிந்து கொண்டிருக்கிறாரே. இன்னும் கொஞ்ச காலத்துக்கு அவரைப் பற்றித் தொந்திரவில் லை. தவிரவும், உன்னுடைய ஆயுதங்களை உன்னிடம் கொடுத்துவிடவேண்டும் என்று உத்திரவ

11

8. பலி

4 January 2024
1
0
0

ஜோஸப் நையரு – ஹங்கேரி  மோல்டேவியா நோக்கி நிற்கும் மலைச் சிகரங்களிலே அந்த வருஷத்தில் மந்தைகளுக்குக் கரடிகளால் வெகு தொல் லை ஏற்பட்டு வந்தது. வில் - பொறி வைத்து எல்லாம் முயன்று பார்த்ததும் ஒன்றும் பயன்ப

12

9. சித்திரவதை

4 January 2024
1
0
0

எர்னஸ்ட் டாலர்  "உனக்கு இன்னும் ஏதாவது விருப்பம் இருக்குமா?" சாகக் கிடக்கும் வாலிபனைப் பார்த்து ஸ்டட்கார்ட் இரகசியப் போலீஸ் உத்தியோகஸ்தர் இவ்வாறு கேட்டார். வாலிபனுடைய 'வெறிச்சோடிய' கண்கள் ஜன்னலின் கம

13

10. டைமன் கண்ட உண்மை

4 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர் (1564-1616)  ஆங்கில நாடகாசிரியர், ஷேக்ஸ்பியரைத் துவிதப் பிரம்மா என்பார்கள். உலகத்தின் சிருஷ்டி தத்துவத்தைப் புரிந்து கொண்டவர் போல் தமது பாத்திரங்களை நடமாட விடுவார். அவர் உலகில் பேய்களும்

14

11. இனி

4 January 2024
1
0
0

இ. எம். டிலாபீல்ட்  இதுவரை நடக்காததைப் பற்றி ஒரு கதை எழுதினால் என்ன?... அந்தக் கதையின் போக்கில் அறிந்து கொள்ள முடியுமானால்... பதினைந்து இருபது வருடங்களுக்கப்புறம்: ஓல்ட் பெய்லியில் (நியாயஸ்தலம்) நடக்

15

12. இந்தப் பல் விவகாரம்

4 January 2024
1
0
0

மைக்கேல் ஜோஷெங்கோ – ருஷ்யா  எங்கள் சகா எகோரிச்சுக்குப் பல், தொந்திரவு கொடுத்து வந்தது. என்ன காரணத்தினாலோ விழ ஆரம்பித்தது. காலம் என்ற ஒன்று இருக்கே, அதற்கும் இந்த விவகாரத்துக்கும் சம்பந்தமிருக்கலாம்.

16

13. இஷ்ட சித்தி ( பகுதி 1)

4 January 2024
1
0
0

ஹான்ஸ் பலாடா – ஜெர்மனி  முதலிலேயே தெரிவித்து விடுகிறேன். அப்புறம் குறை சொல்லாதீர்கள். என் மனைவி பெயர் இட்ஸன் பிளாஸ். உச்சரிப்பதற்குக் கொஞ்சம் சிரமந்தான்; ஆனால் அவள் மீது இருந்த ஆசையில், அதன் சிரமம் எ

17

13. இஷ்ட சித்தி ( பகுதி 2)

4 January 2024
1
0
0

"பின்பு கிரிஸ்மஸ் சமயத்தில் அதை உடைத்து... பிறகு என்னவென்பது உங்களுக்குத்தான் தெரியுமே!" என்றாள்! "உனக்கென்ன பைத்தியமா? இந்த வருஷம் போனஸ் கீனஸ் கிடையாது என்று ஹீபர் சொல்லுகிறான். முதலாளி வருமானம் இல்

18

14. காதல் கதை

5 January 2024
1
0
0

வில்லியம் ஸரோயன்  "இந்தப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுகிறீரா அல்லது அந்தப் பக்கமாக உட்காருகிறீரா?" என்று சிகப்புக் குல்லா* கேட்டான். (* நம்மூர்களில் சிகப்புத் தலைப்பாய் என்றால் போலீஸ்காரன் என்பது

19

15. கலப்பு மணம்

5 January 2024
1
0
0

கிரேஸியா டெலாடா – இத்தாலி  அன்றிரவு சுகமாக இருந்தது. பூலோகத்தைக் கடுங்குளிரினால் சித்திரவதை செய்வதில் சலியாத உறைபனிக் காலத்துக்கும் ஒரு ஓய்வு உண்டு என்பதை அந்த ஏப்ரல் இரவு காட்டியது. இதுவரை பனிக்கட்ட

20

16. கனவு (பகுதி 1)

5 January 2024
1
0
0

ஐவான் டர்ஜனீப் – ருஷியா அந்தக் காலத்தில் நான் என் தாயாருடன் ஒரு சிறு துறைமுகப் பட்டினத்தில் வசித்து வந்தேன். எனக்கு அப்பொழுதுதான் பதினேழு வயது நிரம்பிற்று. தாயாருக்கு முப்பத்தைந்து வயது. சின்ன வயதிலே

21

16. கனவு ( பகுதி 2)

5 January 2024
1
0
0

8 என் தாய் எனக்குக் கூறிய கதை எனதுள்ளத்தை எப்படிச் சிதறடித்தது! முதல் வார்த்தையிலிருந்தே அறிந்து கொண்டேன். அவள் வாயிலிருந்து தவறுதலாக நழுவிய வார்த்தை எனது உத்தேசத்தைத் திடப்படுத்தியது. எனது கனவில் நா

22

17. காரையில் கண்ட முகம்

5 January 2024
1
0
0

இ.வி. லூக்காஸ் – இங்கிலாந்து  நேற்று சாயங்காலம் எனது நண்பன் டாப்னி வீட்டில் நடந்ததை மறக்க முடியவில்லை. அந்த அநுபவம் இன்னும் என் னை உறுத்திக் கொண்டிருக்கிறது. அன்றைய தினம் பேச்சு பூத பைசாசங்களைப் பற்ற

23

18. கிழவி

5 January 2024
1
0
0

ஸெல்மாலேகர்லாப் – ஸ்வீடன்  மலைப்பாதை வழியாக ஒரு கிழவி நடந்து கொண்டிருந்தாள். மெலிந்து குறுகியவள்தான். எனினும் முகத்தின் வண்ணம் வாடவில்லை. சதைக் கோளங்கள் மரத்துத் தொய்ந்து திரித் திரியாகத் தொங்கவில்லை

24

19. லதீபா

6 January 2024
0
0
0

மோஷி ஸ்மிலான் ஸ்கி  "லதீபாவின் கண்களை நீ பார்த்திருக்காவிட்டால், கண்களுக்கு எவ்வளவு அழகு இருக்க முடியும் என்பது உனக்குத் தெரிந்தே இருக்காது." இப்படி நான் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம். ச

25

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்( பகுதி 1)

6 January 2024
0
0
0

1 அவர்களுடைய மூத்த பெண்ணின் படிப்பு அடுத்த மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது. வயசும் 'அப்படி இப்படி' என்று சீக்கிரத்தில் பதினெட்டு ஆகிவிடும். டோ க்கியோவிலேயே நாகரீகத்திற்குப் பெயர் போன இடத்தில் நிலம் வாங

26

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்(பகுதி 2)

6 January 2024
0
0
0

5 வரன்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுவதற்கு நாள் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு 'கபூக்கி' நாடகக் கொட்டகையில் தரகர் இரண்டு 'பாக்ஸ்' களை அமர்த்தினார்; இரண்டு குடும்பங்களும் பக்கத்த

27

21. மணிமந்திரத் தீவு

6 January 2024
0
0
0

ஷேக்ஸ்பியர்  நடுக்கடலிலே நாலைந்து கப்பல்கள் தத்தளித்துத் தடுமாறுகின்றன. கடலலைகள் சினங்கொண்ட கருநாகங்கள் போல ஆயிரமாயிரமாகப் படம் விரித்துத் தலை சுற்றி மோதுகின்றன. உயிரை வாங்கவரும் கால தூதர்களின் கோரச்

28

22. மணியோசை

6 January 2024
0
0
0

ஜப்பான்  "நான் சாவதற்குப் பயப்படவில் லை" என்றாள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மனைவி. "இப்பொழுது என் கவலை எல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நான் போன பிறகு யாரைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?" வேதனை

29

23. மார்க்ஹீம்

6 January 2024
0
0
0

ஆர்.எஸ். ஸ்டீவன்ஸன் – இங்கிலாந்து  "ஆமாம்! எங்கள் வியாபாரத்திலே பலவிதம் உண்டு; வாங்க வருகிறவர்களில் சிலருக்கு ஒன்றுமே தெரியாது; வெறும் 'அப்பாவிகள்'. அப்பொழுது எங்கள் அநுபவத்திற்கு ஏற்ற லாபத்தைப் பெறு

30

24. மிளிஸ்

8 January 2024
0
0
0

பிரட் ஹார்ட் – அமெரிக்கா  ஸிராநிவாடா மலைத் தொடரில் சமவெளிக்குப் பக்கத்தில் இருக்கும் சிவந்த மலைகளில்தான் "ஸ்மித் பாக்கெட்" என்ற இடம் இருக்கிறது. அது ஒரு சுரங்க ஸ்தலம். அதாவது ஒரு காலத்தில் தங்கம் இரு

31

25. முதலும் முடிவும் ( பகுதி 1)

8 January 2024
0
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  மாலை ஆறு மணியிருக்கும். அந்த அறையில் சுமாரான இருட்டு. 'பச்சை ஷேட்' போட்ட மேஜையின் மீதிருந்த ஒற்றை விளக்கு, தரையில் விரித்த துருக்கிக் கம்பளத்திலும், மேஜையின் மீது சிதறிக் கிடந்த,

32

25. முதலும் முடிவும் ( பகுதி 2)

8 January 2024
0
0
0

"பிரேதத்தின் மேலிருந்த எதையும் எடுத்தாயா?" "நாங்கள் சண்டை போட்டுக் கொள்ளும்பொழுது இது அவன் பையிலிருந்து விழுந்தது." அது வெறும் தபால் கவர். தென் அமெரிக்கத் தபால் குறியிட்டு, "பாகட்ரிக் வாலன், ஸைமன் ஓட்

33

26. நாடகக்காரி

8 January 2024
0
0
0

ஆண்டன் ஷெக்காவ் – ருஷியா  அவள் ஒரு நாடகக்காரி. அந்தக் காலத்திலே அவளுக்கு யௌவனக் களை மாறவில் லை. குரல் கணீர் என்று இருக்கும். பலர் வந்து போவார்கள். ஆனால் குறிப்பாக நிக்கோலாய் பெட்ரோவிச் கோல்ப்பக்கோவ்

34

27. நட்சத்திர இளவரசி

8 January 2024
0
0
0

ஒரு ஆசிரியர் - தென் கடல் தீவுகள்  "நம்மிடம் இருப்பதையெல்லாம் சாப்பிட்டு விடுவோம்" என்றான் டபூதி. அவனது சகோதரனான அய்ட்டோ சந்தேகத்துடன் ஏறிட்டுப் பார்த்தான். "அப்படியானால் நமக்கு மிகுந்த பலம் உண்டாகிவி

35

28. ஓம் சாந்தி! சாந்தி!

8 January 2024
1
0
0

எலியா எஹ்ரன் பர்க்  (யுத்தம் மனித சமூகத்தின் 'உடனுறை நோயாகவே' இருந்து வருகிறது. தனது தற்காப்புக்காக மனிதன் சமூகம் என்ற ஒரு ஸ்தாபனத்தை வகுத்தான்; பிறகு அதனைக் காப்பாற்றத் தன் னைப் பலிகொடுக்கத் தயாரானா

36

29. ஒரு கட்டுக்கதை

9 January 2024
0
0
0

பிரான்ஸ் காப்கா – ஆஸ்திரியா  எலி சொல்லுகிறது... "ஐயோ, உலகம் தினம் தினம் எவ்வளவு சின்னதாகிக் கொண்டே வருகிறது! முதலில் ரொம்பப் பெரிதாக, நான் பயப்படும்படியாக, அவ்வளவு பெரிதாக இருந்தது. நான் ஓடிக்கொண்டே

37

30. ஒருவனும் ஒருத்தியும்

9 January 2024
0
0
0

லூயிகய்ல்லூ – பிரான்ஸ்  மச்சுப் படிக்கட்டு முற்றத்தில் இறங்கியது. அங்கே, அதாவது கடைசிப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, அன்று காலை முழுவதும் அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் ரொம்பவும் நெட்டை. ஒற்றை ந

38

31. பைத்தியக்காரி

9 January 2024
0
0
0

மொப்பஸான் – பிரான்ஸ்  "ஆமாம், நீ சொல்வது முன்பு பிரான்சிற்கும் ருஷியாவிற்கும் சண் டை நடந்ததே, அப்பொழுது நடந்த பயங்கரமான சம்பவத்தை என் நினைவிற்குக் கொண்டு வருகிறது" என்று கூறத் தொடங்கினார் முஸே டி' என

39

32. பளிங்குச் சிலை

9 January 2024
0
0
0

வாலரி புருஸ்ஸாப் வாலரி புருஸ்ஸாப் (1875-1924) புரட்சி யுகமான நவீன காலத்து ருஷ்யப் புது எழுத்தாளர் கோஷ்டியைச் சேர்ந்தவர். இந்தக் கதை புரட்சிக்கு முந்திய காலத்தைப் பகைப் புலமாகக் கொண்டு, எழுந்த கற்பனைக

40

33. பால்தஸார் (பகுதி 1)

9 January 2024
0
0
0

அனதோல் பிரான்ஸ் – பிரான்ஸ்  "கிழக்கே அரசர்களுக்கு மந்திர சக்தியுண்டு என்று நினைத்தார்கள்" -தெர்த்தூலியன் அக்காலத்திலே எதியோபியாவை பால்தஸார் ஆண்டு வந்தான். கிரேக்கர் அவனை ஸாரஸின் என்று அழைத்தனர். அவன்

41

33. பால்தஸார்( பகுதி 2)

9 January 2024
0
0
0

ஜனநடமாட்டமில்லாத பாலைப் பிரதேசங்களில் மத்தியானம் வரை நடந்தனர். உச்சியில் சூரியன் வந்ததும், திருடர்கள் கைதிகளை விடுவித்து, பாறையின் நிழலில் உட்காரச் சொல்லி, கெட்டுப்போன ரொட்டித் துண் டைக் கொடுத்தனர். ப

42

34. பொய்

9 January 2024
0
0
0

லியேனீட் ஆன்ட்ரீவ் – ருஷியா  "நீ சொல்வது பொய், அது உனக்குத் தெரியும்!" "அதற்கேன் இப்படிக் கத்தவேண்டும்? பக்கத்திலிருக்கிறவர்களுக்கும் தெரிய வேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது." இப்பொழுதும் பொய் சொன்னாள்

43

35. பூச்சாண்டியின் மகள்

10 January 2024
0
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து  அவள் பெயர் பத்தேமா. அவள் பாக்தாத் நகர் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தாள். அவள் நீலத்தாடிவாலாவின் புதல்வி. கண்டதும் காம வெறியை எழுப்பும் மோகனாங்கி. அவளது மதி முகத்தின் வ

44

36. ராஜ்ய உபாதை( பகுதி 1)

10 January 2024
0
0
0

ஹென்றிக் இப்ஸன் (1828-1906)  ஷேக்ஸ்பியருக்கு நிகராக உலகம் கொண்டாடும் சிறந்த நாடக ஆசிரியர் ஹென்ரிக் இப்ஸன். தர்மத்துக்கு வெற்றி அளித்தார் ஷேக்ஸ்பியர்; தர்மம் ஏன் வெற்றி பெற வேண்டும் என்ற கேள்வியை எழுப

45

ராஜ்ய உபாதை( பகுதி 2)

10 January 2024
0
0
0

"அந்தக் கடிதம்..."  "இரு இரு, விரோதிகளைப் பற்றி நான் ஒரு பட்டியல் கொடுத்தேனே. நீ அதிகாரத்தை விடத் தயாராக இருப்பதுபோல நானும் என் எதிரிகளை மன்னிக்க ஆசைப்படுகிறேன். அந்தப் பட்டியலை இந்த நெருப்பில் போட்ட

46

37. ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு

10 January 2024
0
0
0

நதானியேல் ஹாதார்ண் – அமெரிக்கா  எல்லைப்புறத்தைப் பாதுகாப்பதற்காக 1725-ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்ட படையெடுப்பு சரித்திரத்திலேயே கற்பனைக்கு இடந்தரும் பகுதி. அதை எல்லாரும் சாதாரணமாக 'லவல் சண்டை' என்று கூற

47

38. சாராயப் பீப்பாய்

10 January 2024
0
0
0

எட்கார் அல்லன் போ – அமெரிக்கா  அவன் ஆயிரம் குற்றங்களைச் செய்தான்; ஆனால் என்னால் இயன்றவரை பொறுத்தேன். அவன் என் னைத் திட்டி அவமதித்தான். இனி, பழிக்குப் பழி தீர்க்க வேண்டியதுதான் என்று மன உறுதி கொண்டேன்

48

39. சகோதரர்கள்

10 January 2024
0
0
0

யூஜோ யாம மோட்டோ – ஜப்பான்  'அண்ணா, இது நல்லதுதானே?' 'எங்கே, இப்படிக் கொண்டா பார்ப்போம்' என்று மூத்தவன் தன்னிடம் காட்டப்பட்ட காளானைப் பார்ப்பதற்காகத் திரும்பினான். 'ஊங் ஹும், நல்லதில் லை; நான் பிடுங்க

49

40. சமத்துவம்

10 January 2024
0
0
0

ஒரு ருஷிய ஆசிரியர்  நீலக் கடலின் அடிமட்டத்திலே, பிரமாண்டமான மீன் ஒன்று, இரை தேடிக்கொண்டு, உல்லாசமாக நீந்தி வருகிறது. எதிரே ஒரு சின்ன மீன் - அதன் உணவு. பெரிய மீன் அதை விழுங்குவதற்காக, தன் வாயை அகலத் த

50

41. ஷெஹர்ஜாதி - கதை சொல்லி

11 January 2024
0
0
0

ஹென்றி டிரெக்னியர் – பிரான்ஸ்அன்று இரவு ஷெஹர்ஜாதி நன்றாகத் தூங்கவேயில் லை. பகல் முழுவதும் சுட்டுப் பொசுக்கும் வெய்யில். அதனால் மூச்சுவிடக்கூட முடியாதபடி அவ்வளவு இறுக்கமாக இருந்தது. சிலந்தி வலையையும் த

51

42. சிரித்த முகக்காரன்

11 January 2024
0
0
0

அவன் சோகமாக இருக்கிறான், தனியாக இருக்கிறான் என்று சொல்லிவிடுவது எளிது; ஆனால் அவன் எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்தோடேயே இருக்கிறான். அப்படிச் சொல்லிவிட்டாலும், அவனைப் பாட்டிலில் போட்டு அடைத்து லே

52

43. சூனியக்காரி

11 January 2024
1
0
0

ரோனால்டு ஆக்டன் – இங்கிலாந்து அப்பொழுது இலையுதிர் காலம். நானும் ஜேக் மக்கின்ஸனும் பக்கத்து மிராசுதாருடைய காட்டில் திருட்டுத்தனமாகக் கண்ணி வைத்து வேட்டையாடச் சென்றோம். அவனுக்கு வயது இருபதுக்கு மேல

53

44. சுவரில் வழி

11 January 2024
0
0
0

ஆர். முரே கில்கிரைஸ்– இங்கிலாந்து அன்று முற்பகல் சிறிது உஷ்ணமாகவே இருந்தது. பசும்புல் செழித்து வளர்ந்த மைதான வெளியில், ஆங்காங்கு குத்துக்குத்தாகப் பெயர் தெரியாத புஷ்பங்கள் எல்லாம் கணக்கற்று

54

45. தாயில்லாக் குழந்தைகள்

11 January 2024
0
0
0

பிரான்ஸிஸ் பெல்லர்பி – இங்கிலாந்து வேர்த்து விருவிருக்க, கால்கள் தள்ளாட, இரண்டு குழந்தைகள் நடந்து சென்றன. பையன், பதினொரு வயசிருக்கும். முன்னால் நடந்தான். பெண் எட்டு வயசுபோல இருக்கும். பாதை முன் ம

55

46. தையல் மிஷின்

11 January 2024
0
0
0

இவான் கூம்ஸ் அங்கு மனிதனைத் தூங்காது விழிக்க வைத்திருக்க ஒருவித சந்தடியும் கிடையாது. இருந்தாலும், அந்தச் சிறிய கட்டிலில் சுருண்டு முடங்கிக்கொண்டு, நெடுநேரமாக நிசப்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

56

47. தந்தை மகற்காற்றும் உதவி

11 January 2024
1
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து டான் ஜுவான் தன் மாளிகையில் விருந்து மண்டபத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று தரை வெடித்தது. நரக தூதர்கள் வந்து அவனை இழுத்துக் கொண்டு போய் விட்டார்கள்

57

48. தெய்வம் கொடுத்த வரம்

12 January 2024
1
0
0

பியோர்ண்ஸ்டர்ண் பியோர்ண்ஸன் – ஸ்வீடன்  இந்தக் கதையில் வருகிறவன் தான் அவனுடைய ஊரிலேயே ரொம்பவும் பெரிய பணக்காரன். தவிரவும் அந்த வட்டாரத்திலே அவனுக்குத்தான் ரொம்பவும் சொல் சக்தி உண்டு. அவன் பெயர் தார்ட்

58

49. தேசிய கீதம் (பகுதி 1)

12 January 2024
0
0
0

எல்.ஏ.ஜி. ஸ்டராங் – இங்கிலாந்து  லாரி நிறையத் துருப்புக்கள் கன வேகமாகச் சென்று சில விநாடிகள் கூடக் கழியவில் லை. அது இப்பொழுதுதான் நிகழ்ந்தது. வெடியின் அதிர்ச்சி பரீலியை அப்படியே கலங்க வைத்துவிட்டது.

59

49. தேசிய கீதம் (பகுதி 2)

12 January 2024
0
0
0

ஆம். அமெரிக்காவில் ஓர் பெருத்த வெற்றி. நியூயார்க்கில் இரண்டு ஆட்டம்; பிறகு அமெரிக்கா முழுவதிலும் ஓர் நீண்ட வெற்றி யாத்திரை; முடிவில் ஹாலிவுட்டில் ஒரு பிலிம்; சமாதானம் ஏற்பட்ட இரண்டொரு மாதங்களுக்கப்புற

60

49. தேசிய கீதம் (பகுதி 3)

12 January 2024
0
0
0

இந்தச் சம்பவம் பரீலியின் கோபத்தை அதிகரித்தது; ஆனால் பொதுப்படையாக்கியது. இதுவரை தன் தேசவாசிகளான புரட்சிக்காரர் மீது கோபங்கொண்டிருந்தான். இப்பொழுதோ இந்த இடத்தின் பேரிலேயே கோபம். அவன் நெஞ்சில் ஆழமாகப் பய

61

50. துன்பத்திற்கு மாற்று

12 January 2024
1
0
0

ஸீனர் லூயிஜி பிரான்டல்லோ – இத்தாலி  நமது வாழ்க்கையை, முக்கியமாக அதில் காணும் துன்பங்களை, வான வெளியிலே தேஜோமயமாகச் சுழன்று செல்லும் நட்சத்திர மண்டலங்களுடன் ஒப்பிட்டுப்பாரும், அப்பொழுது அது துச்சமாகத்

62

51. துறவி

12 January 2024
0
0
0

ராபர்ட் நியூமான் – ஜெர்மனி  "நான் முதல் முதலில் ஐரோப்பாவிலிருந்து இந்தக் கீழப் பிரதேசங்களுக்கு வந்தபொழுது அது நடந்தது" என்று அவன் ஆரம்பித்தான். அவன் எங்கள் கப்பலின் காப்டன்; பெயர் வான்டர்லான். ஜாதியி

63

52. உயிர் ஆசை (பகுதி 1)

13 January 2024
1
0
0

ஜாக் லண்டன் – அமெரிக்கா  அவர்கள் இருவரும் நொண்டி, நொண்டி ஆற்றங்கரை வழியாகத் தள்ளாடி நடந்தார்கள். கத்தி போல ஊசியாக, தெத்துக்குத்தாகக் கிடந்த பருக்கைக் கற்கள் காலை வெட்டின. அவர்களிருவரும் சோர்ந்து விட்

64

52. உயிர் ஆசை (பகுதி 2)

13 January 2024
1
0
0

நாட்களும் ஓடின. காட்டு ஜீவராசிகள் ஓடியாடித் திரியும் பள்ளத்தாக்குகளை அடைந்தான். மான் கூட்டம் ஒன்று. இருபது இருக்கும். துப்பாக்கி லெக்குக்கு ரொம்பவும் அருகில் துள்ளி ஓடின. அவற்றை விரட்டிக் கொண்டே ஓடினா

65

52. உயிர் ஆசை (பகுதி 3)

13 January 2024
1
0
0

பாறை மீது படுத்துக் கிடந்தவன் சுயப் பிரக்ஞையுடன் விழித்துக் கொண்டான். சூரியன் காய்ந்து கொண்டிருந்தது. காட்டு மான்குட்டிகளின் சப்தமும் தூரத்தில் கேட்டது. சித்தத்தின் அடிவானத்தில் மழையும் காற்றும் பனியு

66

53. வீடு திரும்பல்

13 January 2024
1
0
0

பீட்டர் எக் – நார்வே  மாலுமி பெடர் ஸோல்பர்க்குடைய மனைவி வசித்த குடிசை, ஜனங்கள் பொதுவாக 'லூக்கள் தெரு' என்று சொல்லுவார்களே, அதற்கெதிரில் இருக்கிறது. குடிசையின் ஜன்னல் நன்றாகத் திறந்திருந்தது. அப்பொழுத

67

54. ஏ படகுக்காரா!

13 January 2024
1
0
0

மிக்கெய்ல் ஷோலொகோவ்  அந்த காஸக் கிராமத்தைச் சூழ்ந்து வளர்ந்து நின்ற சாம்பல் பூத்த பசிய நிறம் படைத்த செடிச் செறிவின்மீது சூரியவொளி தெம்பாக விழவில் லை. அருகே ஒரு பரிசல் துறை இருந்தது. அங்கே படகேறி டான்

68

55. யாத்திரை

13 January 2024
1
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  நான் ஹாமர்ஸ்மித் பஸ்ஸின் மேல்தட்டிலிருந்து பார்க்கும் பொழுது, அவர்கள் ஆல்பர்ட் ஹால் மெமோரியல் எதிரில் இருந்த ஒரு வீட்டு வாசல்படியில் உட்கார்ந்திருந்தனர். அன்று வெகு உஷ்ணம். வாடகை

69

56. எமனை ஏமாற்ற...

13 January 2024
1
0
0

மொங்காக்கு ஷோனின் என்ற மகடனான புத்த பிக்ஷு தான் எழுதியுள்ள கியோ-ஜியோ-ஷிந்ஷோ என்ற கிரந்தத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: "ஜனங்கள் வழிபடும் தெய்வங்களில் பல துர்தேவதைகளாகும். அவலோகிதன், தர்மம், பிக்ஷுக்கள

70

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்

13 January 2024
1
0
0

தாமஸ் வுல்ப் – அமெரிக்கா  ஈவிரக்கமற்றுக் கொதிக்கும் அந்த வருஷம் ஆகஸ்டில் யுத்தம் நின்றது. யுத்த தேவதையின் பவனியின்போது நான்கு கணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஒன்று லாங்லிவியல்; விமான மைதானத்தில் உள்ள குத

71

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்(பகுதி 2)

13 January 2024
1
0
0

தயங்கித் தயங்கி மறியும் உடலொட்டிய இந்த வேட்கை, தங்கள் ஜோலியைச் செய்து இவர்கள் நடாத்தும் வாழ்வினிடையிலும் வெளிக்கு அகோரக் கேலிக் கூத்தாகத் தோன்றினாலும், மேஜைக்கு மேஜை போஷகர் தேடி நடக்கும்போது சர்வ ஜாக்

72

58. தர்ம தேவதையின் துரும்பு

13 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர்  குரலிலே அதிகார தோரணையும் அதனுடன் பயமும் கலந்திருந்தது. கடுங்குளிரிலே, இருட்டின் திரைக்குள்ளே, ஈட்டிபோலப் பாய்ந்தது அக்குரல். 'நீ யார்? முதலில் அதைச் சொல்' என்று பதில் கேள்வி பிறந்தது, தி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்