பாறை மீது படுத்துக் கிடந்தவன் சுயப் பிரக்ஞையுடன் விழித்துக் கொண்டான். சூரியன் காய்ந்து கொண்டிருந்தது. காட்டு மான்குட்டிகளின் சப்தமும் தூரத்தில் கேட்டது. சித்தத்தின் அடிவானத்தில் மழையும் காற்றும் பனியும் எங்கோ எப்போதோ அடித்தது. அது இரண்டு நாளோ, இரண்டு வாரமோ அவனறியான். சிறிது நேரம் ஆடாமல் அசையாமல் கிடந்தான். சூரிய வெப்பம் அவனை 'நனைத்து' நொடிந்த உடலுக்கு உயிர் கொடுத்தது. 'சுகமான நாள்' என்று நினைத்தான். இன்று லெக்குத் தெரிந்துகொள்ள முடியும். ரொம்பவும் ஒருக்களித்துப் புரண்டான். அவனடியில் நதி ஒன்று ஓடியது. ஆனால் லெக்கு புரியவில் லை. நதியைத் தொடர்ந்தே, சாவதானமாக, சிரத்தை இல்லாமல் கண்களை ஓட்டினான். தூரத்திலே வானம் தொடும் எல் லையிலே இந்த நதி சமுத்திரத்தில் சங்கமமாயிற்று. அவனுக்கு இன்னும் அதிர்ச்சி. சாத்தியமில் லை, வெறும் சொப்பனம், மனக்குரளி என்று நினைத்தான். தூரத்திலே கப்பல் ஒன்று நங்கூரம் பாய்ச்சி நிற்பது தெரிந்தது. சற்றுநேரம் கண்களை மூடிக்கொண்டிருந்துவிட்டு மறுபடியும் திறந்து பார்த்தான். காலித் துப்பாக்கி ஏமாற்றவில் லையா. கப்பலும் கடலும் தெரிவதா அதிசயம். இன்னும் தெரியத்தான் செய்தது. அருகே யாரோ செருமுவது மாதிரி கேட்டது. உடம்பு மரத்துப்போய் வலுவிழந்துவிட்டதினால், மெதுவாக, ரொம்ப மெதுவாகத் திரும்பினான். அருகே எதுவும் தென்படவில் லை. பொறுமையுடன் காத்திருந்தான். மறுபடியும் கனைப்பு கேட்டது. சற்றுத் தூரத்தில் இரண்டு பாறைகளுக்கு இடுக்கில் சாம்பல் பூத்த நிறத்தில் ஒரு ஓநாயின் தலை தெரிந்தது. அது காதுகளை நெரித்துக் கொண்டு நிற்கவில் லை. கண்களில் அழுக்கு நுரைத்தது. விழிகள் ரத்தம்போலச் சிவந்திருந்தது. தலை தொங்கித் தொங்கி விழுந்தது. வெயிலைப் பார்க்க முடியாமல் அது கண்களை மூடி மூடி விழித்தது. அது நோய்ப் பட்டது போலத் தெரிந்தது. மறுபடியும் செருமியது; பிறகு இருமியது. இதுவாவது நிஜமாக இருக்கும் என்று நினைத்தான். பிறகு மறுபடியும் திரும்பி, சொப்பனம் திரையிட்டு மறைக்க முயன்ற உலகத்தைப் பார்க்க முயன்றான். ஆனால் தூரத்திலே கடலும் அந்தக் கப்பலும் தெரியத்தான் செய்தன. அது நிஜமேதானோ! கண்களை மூடிக்கொண்டு வெகு நேரமாக யோசனை செய்தான். அப்புறம் ஞாபகம் வந்தது. அவன் கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி வந்துவிட்டான். அகன்று கிடக்கும் அந்த ஆறுதான் தாமிரச் சுரங்க நதி. எதிரே இருக்கும் கடல் ஆர்க்டிக் சமுத்திரம். கப்பல் திமிங்கில வேட்டைக் கப்பல். ரொம்பவும் கிழக்கே தள்ளி மக்கன்ஸி நதி முகத்துவாரத்திலிருந்து வந்துவிட்டது. காரனேஷன் வளை குடாவில் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது. ரொம்ப நாட்களுக்கு முன் ஹட்ஸன் பே கம்பெனி படத்தில் பார்த்த இடமே இது. எல்லாம் தெளிவாக மனசில் தெரிந்தது. எழுந்து உட்கார்ந்து ஆகவேண்டிய காரியத்தைக் கவனித்தான். காதில் கட்டியிருந்த கம்பளிப் போர்வைத் துண்டுகள் தேய்ந்து நைந்துவிட்டன. காலும் நைந்து உருவற்ற சதைக் கோளமாக இருந்தது. போர்வையும் எங்கோ போய்விட்டது. கத்தியும் துப்பாக்கியும் விழுந்த இடம் தெரியவில் லை. தொப்பியும் அதில் சொருகி இருந்த தீக்குச்சிப் பொட்டணமும் போய்விட்டது. நெஞ்சருகில் சொருகி வைத்திருந்தது ஜாக்கிரதையாக இருக்கிறது. புகையிலைப் பையில் போட்டு வைத்ததும் அப்படியே. கடிகாரத்தை எடுத்துப் பார்த்தான்; நிற்கவில் லை, பதினொரு மணி காட்டியது. மறக்காமல் எடுத்து சாவி கொடுத்து வந்திருக்கிறான். சாவதானமாக சிந்தனையைச் சிதற விடாமலிருந்தான். உடம்பு ரொம்பவும் சோர்ந்து விட்டது. ஆனால் வலி இல் லை. சாப்பாட்டு நினைப்பு கூட இப்பொழுது அவனுக்கு ருசிக்கவில் லை. கால் சட்டையை முழங்காலுக்குக் கீழ் கிழித்து காலை இறுக்கிக் கட்டினான். எப்படியோ தகரப் போணி மட்டும் தவறிப் போகாமல் கூட வந்து கொண்டிருந்தது. கப்பலுக்கு போவது மகா கஷ்டமான வேலை. அதற்கு முன் சற்று வென்னீர் வைத்துப் பருக விரும்பினான். அவனால் அசைய முடியவில் லை. நடுக்கல் வாதம் போல உடம்பெல்லாம் நடுங்கியது. உலர்ந்த பாசியைச் சேகரிக்க முயன்றான். எழுந்து நிற்க முடியவில் லை. ஊர்ந்து சென்று முயன்றான். ஒரு தடவை நோய்ப்பட்டு நிற்கும் ஓநாய் அருகிலேயே சென்று விட்டான். அது ரொம்பவும் சங்கடத்துடன் பின்னுக்கு வாங்கியது. நாக்கு சதைக்கோளமாகத் தொங்கியது. வளைத்து நக்கக்கூட அதற்கு இயலவில் லை. நாக்கு செக்கச் செவேல் என்றில் லை. மஞ்சள்பூத்து அழுக்குப் படிந்து காய்ந்திருந்தது. ஒரு போணி தண்ணீரைக் குடித்ததும் உடம்புக்கு தெம்பு வந்தது. எழுந்து நிற்கவும் முடியும் என்று கண்டான். நடக்கவும் முயன்றான். நிமிஷத்துக்கு நிமிஷம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டி இருந்தது. அவனும் தடமாடி நடந்தான்; ஓநாயும் தடமாடி நடந்தது. இருட்டு வந்து கடலை மறைத்தது. அன்று நான்கு மைல்தான் வந்திருக்க முடியும் என்று நினைத்தான். இராத்திரி முழுவதும் ஓநாயின் கனைப்பு கேட்டுக்கொண்டே இருந்தது. சமயா சமயத்தில் காட்டுமான் குட்டியின் சத்தமும் கேட்டது. உயிரும் கூடிய ஜந்துக்கள் திரிந்தன. நோயாளியை, நோய் பற்றிய ஓநாய், அவன் முதலில் சாகமாட்டானா என்ற நினைப்பில் தொடர்ந்து வந்தது என்பது அவனுக்குத் தெரியும். விடியற்காலையில் விழித்ததும் அதன் முகத்தில்தான் விழித்தான். செத்துவிட மாட்டானா என்ற ஒரு ஏக்கத்துடன் அது அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தது. வாலை காலுக்கிடையில் சுருட்டிக் கொண்டு நின்றிருந்தது பார்ப்பதற்கே பரிதாபகரமாக இருந்தது. குளிர் காற்றில் நடுங்கியது. மனிதன் ஏதோ அடித்தொண் டையில் பேசியதைக் கேட்டு பல் லை இளித்தது. சூரியன் தேஜோமயமாக உதயமாயிற்று. மனிதன் விழுவதும் எழுவதுமாகக் கடலில் உள்ள கப்பலை நோக்கிச் சென்றான். பருவம் சீராக இருந்தது. வடகோடியிலும் திடீர் திடீரென்று இப்படி சுகமான பருவம் வருவதுண்டு. அது ஒரு வாரம் இருக்கலாம்; அல்லது ஒரு நாளைக்குக் கூட தங்காமல் ஓடிப் போகலாம். அன்று பிற்பகலில் மனிதத் தடம் ஒன்று தென்பட்டது. முன்னவனுடையதுதான். அவன் நடந்து செல்லவில் லை. ஊர்ந்து சென்றான். முன்னே சென்று விட்ட சகபாடியாக இருக்கக்கூடும் என நினைத்தான். நினைப்பில் சிரத்தை லயிக்கவில் லை. அவன் தானா என்று ஊன்றிப் பார்க்கும் கவலை கூட அற்றுவிட்டது. ஸ்பரிசனையும் உணர்ச்சியும் மரத்துப் போயின. வலி அகன்று நெடு நாளாகிவிட்டது. வயிறும் நரம்பும் ஆழ்ந்த தூக்கத்தில் ஒடுங்கிவிட்டன. இருந்தும் உயிரின் வலுதான் அவனை ஊந்தித் தள்ளிச் சென்றது. அவன் சோர்ந்து விட்டான்; ஆனால் சாக மறுத்தான். சாக மறுத்ததினால்தான் காட்டுக் காய்களையும் மீன் குஞ்சையும் தின்று வென்னீரைப் பருகி நோய் பற்றிய ஓநாயைக் கவனித்து வந்தான். ஊர்ந்து சென்றவன் தடத்திலேயே தொடர்ந்து சென்றான். அதுவும் முடிவடைந்தது. நன்றாக சதைப் பற்று இழந்த சில எலும்புகளும், கொஞ்சம் காயந்துலர்ந்த பாசியும் ஓநாய்த் தடங்களும் தென்பட்டன. தான் வைத்திருந்தது போன்ற தோல் பொதியும் அங்கே உட்கார்ந்து கிடப்பதைக் கண்டான். அதுவும் ஓநாயின் பல் பட்டு கிழிந்திருந்தது. அதைக் கையிலெடுத்தான். ஆனால் அதைத் தூக்க அவனது விரல்களில் பலம் இல் லை. முன்னவன் அதை இவ்வளவு தூரம் சுமந்து கொண்டு வந்துவிட்டான். சபாஷ்! இப்போது யார் கெட்டிக்காரர்? தப்பி மீண்டும் கப்பலுக்கு அந்தப் பொதியை நான் தானே கொண்டு போவேன் என்று நினைத்தான். எக் எக் என்ற சிரிப்பு அவனது குரல் வளையை விக்கியது. காகம் கரைவது போலிருந்தது அவன் சிரிப்பு. நோய்ப்பட்ட ஓநாயும் அவனுடன் ஒத்துக் குரல் எடுத்தது. மனிதன் திடீரென்று சிரிப்பதை நிறுத்தினான். கிடப்பவன் சகாவாக இருந்தால், அவனை எப்படித் துரோகிப்பது? அந்த எலும்புகள் - அவைதானே ஒரு காலத்தில் என் சகாவாக இருந்தன. முகத்தை வேறு திசையில் திருப்பிக் கொண்டான். அவன் என் னை நடுவழியில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டான். இருந்தாலும் அவனுடைய தங்கப் பொதியை எடுத்துக் கொள்ளக்கூடாது. நான் செத்து அவன் மிஞ்சி இருந்தால், அவன் எடுத்துக்கொண்டுதான் போயிருப்பான்... இருந்தாலும்... இப்படியே நினைத்துக் கொண்டு தள்ளாடித் தள்ளாடி நடந்தான். வழியிலே சிறு நீர்த்தேக்கமிருந்தது. மீன் எதுவும் இருக்குமா என்பதைக் கவனிக்க குனிந்து பார்த்தான். திடுக்கிட்டு தலையை இழுத்துக் கொண்டான். நீரிலே தென்பட்ட தன் முகத்தின் பிம்பத்தைப் பார்த்தான். அவ்வளவு கோரமாக இருந்தது. அந்தத் திக்பிரமை தீர வெகு நேரம் பிடித்தது. அதிலே முன்று மீன்களிருந்தன. குளத்தை இறைக்க முடியாது. தகரப்போணியில் அவற்றைப் பிடிக்க இரண்டு மூன்று தடவை முயன்று பார்த்து, விட்டுவிட்டான். ரொம்பவும் சோர்வு தட்டி இருப்பதினால் குளத்துக்குள் விழுந்து மடிந்து விடுவோமோ என்ற பயம். இந்தப் பயத்தின் காரணமாகவே கரையில் ஒதுங்கிக் கிடந்த கட்டையை மிதக்கவிட்டு அதில் உட்கார்ந்து கொண்டு செல்லுவதற்கும் பயந்தான். அன்று கப்பலுக்கும் தனக்குமிடையிலிருந்த தூரத்தை மூன்று மைல் குறைவாக்கினான். மறுநாள் இரண்டு மைல் ஏனென்றால் முன்னவனைப் போல இவனும் ஊர்ந்து ஊர்ந்து சென்றான். ஐந்தாவது நாள் வந்தது. கப்பலுக்கும் தனக்கும் இன்னும் ஏழு மைல் தூரம் இருக்கிறது என்று கண்டான். அன்று அவனுக்கு ஒரு மைல் கூடச் செல்ல முடியவில் லை. பருவம் கெட்டுப் பாழ்படவில் லை. ஊர்ந்து சென்றான்; மயங்கினான். நெளிந்து நெளிந்து கொடுத்தான். நோய்ப்பட்ட ஓநாயும் களைத்துக் கொண்டே தொடர்ந்து வந்தது. பாதத்தைப் போல முழங்காலும் தேய்ந்து சதைக் கோளமாயிற்று. முதுகுப் பக்கத்தில் சட்டையைக் கிழித்துக் கட்டிக்கொண்டான். இருந்தாலும் பாசியிலும் பரல் கல்லிலும் ரத்தக் கோலம் அவனைத் தொடர்ந்தது. ஓநாயும் அதை நக்கிக்கொண்டே தொடர்ந்து வந்தது. அந்த ஓநாயைத் தீர்த்துக் கட்டாதவரை தன் கதை எப்படி முடியும் என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டான். அதிலிருந்து பிறந்தது உயிர் வாழ்வுக்காக நடைபெறும் கோரமான போராட்டம். நோயாளி ஊர்ந்து சென்றான். நோய்ப்பட்ட ஓநாய் சாயைபோல நொண்டி நொண்டித் தொடர்ந்தது. உயிர்ப் பசை போக்கும் வனாந்தரத்திலே, செத்து மடிந்துவரும் சடலங்களை இழுத்துக்கொண்டு இரண்டு ஜீவன்கள் ஒன் றையொன்று வேட்டையாடித் தொடர்ந்தன. ஓநாய் ஆரோக்கியமுள்ளதாக இருந்திருக்குமாகில் மனிதன் அவ்வளவு கவலைப்பட்டிருக்கமாட்டான். பார்ப்பதற்கே குமட்டலெடுக்கும், செத்து மடிந்து விட்டது என்று சொல்லத்தக்க மிருகத்தின் பசிக்காளாவது என்ற நினைப்பை மனம் ஒப்பவில் லை. மனசு 'நுறநாட்டியம்' பிடித்த மனசு மீண்டும் அவனது சித்தம் நெறிகெட்டு அலைய ஆரம்பித்தது. நினைப்புச் சொப்பனங்கள் அவனை அலைக்கழிக்க ஆரம்பித்தன. புத்தித் தெளிவும் அரிதாகி வர ஆரம்பித்தது. காதருகே சற்று பனிக்காற்றுடன் மோதும் ஈச்சுச் சத்தம் கேட்க ஒருதடவை புத்தி சற்று தெளிந்தது. ஓநாய் பின்னுக்குப் பாய்ந்தது. பாய்ச்சலில் கால் தவறி விழுந்தது. பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. ஆனால் அவனுக்குச் சிரிப்பு வரவில் லை. அதற்கு உடம்பில் வலு இல் லை. அந்த நிமிஷம் புத்தி தெளிவாக இருந்தது. கிடந்துகொண்டே யோசித்தான். கப்பல் நாலு மைல் தூரத்தில் தானிருந்தது. பூத்துப்போன கண்களைத் துடைத்துக் கொண்டு பார்த்தால் சிறு படகின் வெள் ளைப் பாய்ச்சீலை தெரிந்தது. படகு மினுமினுக்கும் கடலைக் கிழித்து வந்தது. அது அவனுக்குத் தெரிந்தது. அந்த ஞானம் அவனைப் பதற வைக்கவில் லை. இன்னும் அரைமைல் கூட ஊர்ந்து செல்ல முடியாது என்பதை உணர்ந்தான். இருந்தாலும் உயிர் வாழ விரும்பினான். இவ்வளவும் பட்டு அனுபவித்து விட்டு சாவது தப்பு. விதி அவனிடம் சக்திக்கு மீறியதைக் கேட்கிறது. மடிந்து கொண்டிருந்தான்; ஆனால் சாகச் சம்மதிக்கவில் லை. அது வெறும் வெறித்தனம் என்று சொல்லவேண்டும். மரணத்தின் கைக்குள் சிக்கிவிட்டான்; ஆனால் அதை எதிர்த்தான், சாகச் சம்மதிக்கவில் லை. சர்வ ஜாக்கிரதையுடன் கண்களை மூடிக்கொண்டு ஒடுங்கினான். தன் உடம்பின் ஒவ்வொரு அணுவிலிருந்தும் பொங்கி எழும் சோர்வை, அவனையே மூழ்கடித்துவிட முயலும் சோர்வைச் சமாளித்து சித்தத் தெளிவைப் பெற முயன்றான். இந்த மரணச் சாயையான சோர்வு கடலைப் போல பொங்கிப் பொங்கி அவனது பிரக்ஞையைக் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கடித்தது. சில சமயம் அதில் அடியோடு மூழ்கிவிட்டான். தடமாடித் தடமாடி அதில் முக்குளித்து நீச்சலடிக்க முயன்றான். ஜீவன் கற்ற வேதி நூல் அவனுக்கு சமயத்தில் துணை கொடுத்தது. சிதறுண்ட புத்தியை எட்டிப் பிடிப்பான்; சற்றுத் தெம்புடன் மிதப்பான். அசைவே இல்லாமல் மலர்ந்து கிடந்தான். நோய்ப்பட்ட ஓநாய் மூசுமூசென்று இளைத்துக்கொண்டு தன் னை நெருங்குவதை உணர்ந்தான். வரம்பற்ற காலத்தினூடே எத்தனையோ யுக சஞ்சாரங்களுக்குப் பின் அது அவனை நெருங்கிக் கொண்டே வந்தது அவனது காதருகே நெருங்கியது. வரண்டுபோன நாக்கு, பரபரவென்று முகத்தை வருடியது. அவனது கைகள் பாய்ந்தன. அதாவது பாயும்படி அவன் புத்திகொண்டு நினைத்தான். விரல்கள் கூரிய நகங்கள்போல வளைந்திருந்தன. ஆனால் காற்றைத்தான் எட்டிப் பிடித்தது. நிச்சயத்துடன் சடக்கென்று பிடிப்பதற்கு பலம் வேண்டும். அது அவனிடம் இல் லை. ஓநாயின் பொறுமை பயங்கரமாக இருந்தது. மனிதனுடைய பொறுமையும் அதைப்போல பயங்கரமாக இருந்தது. அரை நாள் வரை மயக்கத்தை உதறித்தள்ளி எது தன் னைத் தின்ன விரும்புகிறதோ அதற்காக, எதைத் தின்ன அவன் விரும்புகிறானோ அதற்காகக் காத்திருந்தான். சில சமயங்களில் சோர்வு பொங்கியது. அவன் நெடிய கனவுகளில் மிதந்தான். விழிப்பிலும், கனவிலும், செருமிவரும் அந்த மூச்சுக்கும் நாக்கின் கரகரப்புக்குமாகக் காத்திருந்தான். மூச்சு அவனுக்குக் கேட்கவில் லை. ஏதோ கனவிலிருந்து வழுவி கையில் நாக்கு பட்டதை உணர்ந்தான். காத்திருந்தான். பற்கள் மெதுவாக அழுத்தின. பல் பதிய ஆரம்பித்தது. இத்தனை நாட்களாகக் காத்திருந்த உணவில் பல் லைப் பதிய வைக்க அந்த ஓநாய் தனது பலம் முழுவதையும் உபயோகித்தது. மனிதன் வெகுநேரம் காத்திருந்தான். கிழிபட்ட கை, மிருகத்தின் வாயைப் பற்றியது. ஓநாய் தெம்பிழந்து உதற முயற்சித்தது. கையும் வலுவற்ற நிலையிலும் பற்று விடவில் லை. இந்த நிலையில் மற்றொரு கையும் சேர்ந்து பிடித்துக் கொண்டது. ஐந்து நிமிஷங் கழித்து மனிதனின் முழு கனமும் ஓநாய்மீது விழுந்தது. ஓநாயை மூக்கை அமுக்கிக் கொல்ல கையில் பலம் இல் லை. மனிதனுடைய முகம் ஓநாயின் கழுத்தில் விழுந்து கிடந்தது. அவன் வாயில் அதன் மயிர். அரைமணி நேரம் கழித்துத் தனது தொண் டைக்குள் வெதுவெதுப்பாக ஒழுகிச் செல்வதை உணர்ந்தான். அது ருசிக்கவில் லை. உருக்கிய ஈயத்தை வயிற்றுக்குள் நிர்ப்பந்தமாக செலுத்துவது போல இருந்தது. அவனது சித்தத்தின் உறுதியே அதை உள்ளே செலுத்தியது. பின்னர் அந்த மனிதன் திரும்பி மலர்ந்து படுத்து உறங்கினான். திமிங்கில வேட்டைக் கப்பலான 'பெட்போர்ட்' என்பதில் சில விஞ்ஞான பண்டிதர்கள் இருந்தார்கள். கப்பலின் மேல்தட்டில் நின்று பார்த்தபோது, கரையில் ஏதோ ஒரு புது மாதிரியான பொருள் தெரிந்தது. அது கரையில் தண்ணீரை நோக்கி வந்து கொண்டிருந்தது. என்னதென்று ரகவாரியாக அத்தனை தூரத்திலிருந்து நிர்ணயிக்க முடியவில் லை அவர்களுக்கு. என்னவென்று பார்க்க படகில் ஏறி கரைக்குப் போனார்கள். உயிரோடிருந்தது மனிதன் என்று சொல்ல முடியாது. அது கண்ணிழந்து பிரக்ஞையிழந்து இருந்தது. பெரிய புழுப்போல தரையில் நெளிந்தது. அதன் முயற்சிகள் பயனற்றவை என்றாலும், இடைவிடாது முயற்சித்தது. உருண்டு நெளிந்து மணிக்கு இருபதடி தூரம் சென்றது. மூன்று வாரங்கள் கழித்து பெட்போர்ட் கப்பல் பங்கில் படுத்துக் கிடந்த மனிதன், ஒட்டிப்போன கன்னங்களில் நீர் வழிய, தான் யார் என்று சொன்னான்; தான் பட்டனுபவித்ததைச் சொன்னான். அப்பாவையும் ஊரையும் ஆரஞ்சுத் தோட்டத்தையும் பற்றிப் பிதற்றினான். விஞ்ஞான பண்டிதர்களுடனும், கப்பல் உத்தியோகஸ்தர்களுடனும் உட்கார்ந்து சாப்பிடும் காலமும் வந்தது. சாப்பாட்டைப் பார்ப்பதிலேயே அவனுக்குப் பரம திருப்தி. மற்றவர்கள் வாயினுள் செல்லுவதை வெகு கவலையுடன் கவனித்தான். ஒவ்வொரு கவளமும் வீணாகிறதே என்ற கவலையை அவன் முகம் காட்டியது. அவனுடைய புத்தி தடுமாறி விடவில் லை. இருந்தாலும் சாப்பாட்டு நேரத்தில் அவர்களை அடியோடு வெறுத்தான். உணவற்றுப் போய்விடுமோ என்ற பயம் நெஞ்சில் புரை ஏறி இருந்தது. குசினிக்காரனை, காபின் பையனை, காப்டனை எல்லாம் சாப்பாடு எவ்வளவு இருக்கிறது என்று கேட்டான். நிறைய இருக்கிறது என்று பலதடவை சொல்லி அவன் கவலையைப் போக்க முயன்றார்கள். அவர்களை நம்பாமால் திருட்டுத்தனமாக உக்கிராணத்துக்குள் சென்று தானே பார்த்தான். இந்த மனிதன் வர வர பருத்து வருவது தென்பட்டது. நாளொரு மேனியாகப் பருத்து வந்தான். விஞ்ஞான பண்டிதர்கள் தலையை ஆட்டிக்கொண்டு சித்தாந்தம் பண்ணிப் பார்த்தார்கள். அவனுக்குச் சாப்பாட்டைக் குறைத்தார்கள். அப்படியிருந்தும் அவன் ஷர்ட்டுக்கடியில் எல் லையில்லாமல் பருத்து வந்தான். மாலுமிகள் சிரித்தார்கள். அவர்களுக்குத் தெரியும். விஞ்ஞான பண்டிதர்கள் ஒருவனைக் காவல் போட்டார்கள். அவர்களும் தெரிந்து கொண்டார்கள். காலையில் சாப்பிட்டவுடன் திருட்டுத்தனமாக அவன் கையை நீட்டிப் பிச்சையெடுக்கப் போவதைக் கவனித்தார்கள். அவனது ஏந்திய கையில் மாலுமிகள் ஒரு பிஸ்கோத்துத் துண் டைப் போடுவார்கள். உடனே அவன் அதை ஷர்ட்டுக்கு அடியில் ஒளித்து விடுவான். பணப் பேய் பிடித்தவன் தங்கத்தைக் கண்டதும் தாவிப் பிடிப்பதைப் போல அதை வாங்கிக் கொண்டான். மாலுமிகள் கருமித்தனம் செய்யவில் லை. பண்டிதர்கள் விவேகிகள். அவன் இஷ்டப்படி விட்டுவிட்டார்கள். அவனில்லாதபோது அவனிருந்த அறைக்குச் சென்று பார்த்தார்கள். எங்கு பார்த்தாலும், தலையணை முதல் மெத்தை வரை எங்கும் உணவுப் பொருள்களை ஒளித்து வைத்திருந்தான். இருந்தாலும் அவனுக்குப் பைத்தியமில் லை. மீண்டும் பஞ்சம் ஏற்படாதபடி முன் ஜாக்கிரதையுடன் தடுத்துக் கொள்கிறான். அவ்வளவுதான். அதுவும் தெளிந்துவிடும் என்றார்கள் பண்டிதர்கள். அப்படியே தெளிந்தது. பெட்போர்ட் கப்பல் ஸான்பிரான்ஸிஸ்கோ வளைகுடாவுக்குள் போகுமுன் அவனுக்குப் புத்தி தெளிந்துவிட்டது.