5
வரன்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுவதற்கு நாள் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு 'கபூக்கி' நாடகக் கொட்டகையில் தரகர் இரண்டு 'பாக்ஸ்' களை அமர்த்தினார்; இரண்டு குடும்பங்களும் பக்கத்தில் அமர்ந்து கொள்ள, அன்று விடியற்காலை அழகு நிபுணி பெரிய அலங்காரப் பெட்டியும் கையுமாக வந்தாள். அவள் பெண்ணின் முகத்தைக் கழுவி 'மாலீஸ்' செய்து வர்ணம் ஏற்றினாள். தலை மயிரை தற்கால நாகரிக மோஸ்தரில் நெற்றியிலே சுருள்சுருளாக விழும்படி சீவிப் பணிய வைத்தாள். அடுக்கடுக்காகக் கண் ணைப் பறிக்கும் பட்டு கிமோனோவை அணிவித்து அகலமான 'ஒபி' உத்தரியத்தை வைத்து இறுகக் கட்டினாள். பெண் நாணத்தால் முகம் சிவந்து முழு நேரமும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் உட்கார்ந்திருந்தாள். மோட்டார் காரில் நாடகக் கொட்டகைக்குப் போனார்கள்; 'பாக்ஸுகளுள்' மரியாதையாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். பாய்த்தரையில் போட்ட குஷன் மெத்தைகளில் உட்கார்ந்தார்கள். அப்பொழுதுதான் திரை உயரச் சென்றது. ஆனால் பல வர்ணப் படாடோ ப உடைகளில் தோன்றியவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்கக்கூட சிரத்தை கொள்ளவில் லை. அப்புறம் அந்தக் கோஷ்டியும் வந்தது; ஜப்பானிய சம்பிரதாய உடையில் பெற்றோர்கள்; நாஸுக் வெட்டுகளில் தைக்கப்பட்ட மேற்கத்தி உடையில் அழகான அந்த வாலிபன் வந்தான். தரகர் தம்பதிகளும் அவர்களுடன் வந்து அறிமுகம் செய்து வைத்தார்கள். பெண் நாணத்தால் குனிந்த முகத்தை நிமிரவே இல் லை; சமயா சமயங்களில் புன்சிரிப்புடன் தலை வணங்கினாள். வாலிபனும் அவன் பெற்றோர்களும் அவள் முகத்தைப் பார்த்தார்களோ என்னவோ! மறுநாள் தரகரும் அவர் மனைவியும் வந்தார்கள். ஜாதகத்தையும் பஞ்சாங்கத்தையும் பார்த்தார்கள். சீர்வரிசை பரிமாறிக்கொள்ளும் தினத்தையும் கலியாண நாளையும் நிச்சயித்தனர். முன்னது நவம்பர் மூன்றாந்தேதி என்றும் மற்றது டிசம்பர் பதினைந்தாம் தேதி என்றும் நிச்சயித்தார்கள். 'காயை உருட்டியாகிவிட்டது' என்றார்கள் பெறோர்; பெண் ணை இருளடித்துப் போன விதி என்ற பாதாளத்தில் உருட்டியது மாதிரிக் கருதினார்கள். அவர்கள் முக்கியமாக அவளது தகப்பனார் சோகத்திற்கு ஆட்பட்டார்; பிரமாதமான அசட்டு நம்பிக்கைகள் எல்லாம் அவரைக் கவ்விக் கொண்டன. முதல் நட்சத்திரத்தின் வர்ணம் வெள் ளை (அது மகளின் ஜன்ம நட்சத்திரம்) ரொம்ப அதிர்ஷ்டமுள்ளது; மூன்றாவது நட்சத்திரம் (மாப்பிள் ளையாக வரப்போகிறவரின் நட்சத்திரம்) நீல வர்ணமுடையது; இரண்டிற்கும் ஒரு பொருத்தம் உண்டு என்றது பஞ்சாங்கம். ராசி மண்டல சின்னங்களைப் பொறுத்தவரை மகளுடையது கோழி; வரப்போகும் வரனுடையது புதி - இரண்டின் இணைப்பும் கெடுதல் அல்லவே அல்ல. முதல் வெண் நட்சத்திர ஸ்திரீக்கு நவம்பர் மூன்றாந் தேதி ரொம்ப சுகமான தினம்; டிசம்பர் பதினைந்தாம் தேதியோ அந்த வருஷத்தில் யாவருக்கும் அதிர்ஷ்டம் மிகுந்த தினம். எல்லாம் பொருத்தமாகத்தான் இருந்தது; இருந்தாலும் தகப்பனாருக்கு என்னவோ கவலைதான். சாமான்களைத் தனித்தனி இலாகாவாகப் பிரித்து நிர்வகிக்கும் பெரிய கடை ஒன்றுக்கு அவர்கள் சென்று நிச்சயதார்த்த சீர்வரிசைகளை வாங்கினார்கள். மறுநாள் எல்லா சாமான்களும் சடங்குகளுக்கு உபயோகிக்கக்கூடிய மாதிரியில் வீட்டுக்கு வந்து சேர்ந்தன. பெரிய மரப்பெட்டியில் இங்கிலீஷ் 'செர்ஜ்' கம்பளித்துணி சுருணையாகச் சுருட்டி வைக்கப்பட்டு, நல்ல முரட்டு வெள் ளைக் கடுதாசியில் பொதிந்து ஜரிகை நாடாக்களில் கட்டி 'ஷின்டோ ' மரவையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த இங்கிலீஷ் செர்ஜ் மாப்பிள் ளைக்கு நாஸுக்கான ஸூட் தைக்க; ரொம்பவும் நாகரீகமான சீர். சம்பந்திகளின் வாடாத செழிப்புக்கு அடையாளமாக வெள் ளை சிகப்பு வர்ணங்களில் காகித விசிறிகள். அந்தக் குடும்பத்தில் ஒன்று விட்ட மைத்துனன் வரை எல்லோருடைய பெயரையும் கிரமமாகப் பட்டியல் செய்து சேர்த்து 'வாழ்த்தி' வைக்கப்பட்டது. இவை தரகர் வீட்டில் வைத்து பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்பட்டது. மாப்பிள் ளை வீட்டுக்காரர்கள் பெண்ணுக்கு இடுப்பில் சுற்ற வேண்டிய அகலமான 'ஒபி' உத்தரியத்தை அழகாக வைத்துக் கொடுத்தார்கள். நிச்சயதார்த்த சீர்களை மாற்றிக் கொண்டபின் கலியாண பந்தத்தை யாரும் மீற முடியாது; கூடாது. மாப்பிள் ளை வீட்டுக்காரரும் விவேகிகள், லௌகிகம் தெரிந்தவர்கள்; பெண் கொண்டுவர வேண்டிய சீதனம் முதலியவை பற்றி 'அறுத்துப்' பேசவில் லை. இது பெண்ணின் தகப்பனாருக்கு ரொம்பத் திருப்தியாக இருந்தது; தகப்பனார் லோகம் தெரிந்தவர்; அனுபவசாலி. சீர்களைக் குறைந்த அளவில் வைத்துக்கொண்டு சீதனத் தொகையை அழியாத என் றைக்கும் பணமாக்கக்கூடிய பங்குகள், பத்திரங்களாகக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். பணத்தை ரொக்கமாகக் கொடுத்தால், - தான் மனைவியிடம் அந்தக் காலத்தில் நடந்து கொண்டதை வைத்து நினைத்து 'ஷோக்' சுந்தரிகளுடன் விளையாடி விடுவதற்கு வசதி செய்வதாகும் என நினைத்தார். விலையுயர்ந்த துணி மணிகளில்தான் ஆபத்தில் லை; மேலும் மாப்பிள் ளையின் அண்ணன் மனைவி பெரிய குடும்பத்துப் பெண். அவள் கொண்டு வந்த திருமண ஜவுளி வகைகளை விட இவளுக்கு விலையுயர்ந்ததாக இருந்தால் தான் இவளைத் துச்சமாக நினைத்து அவமதிக்காமல் இருப்பாள்" என்று தாயார் தினசரி இரவும் பகலும் கலியாணச் சாமான்கள் வாங்கப் போகும் பொழுது எல்லாம் சொன்னாள். வெள்ளி, தங்கம் சீல் வைத்த கருங்காலி அலமாரி ஐந்து சொருகு உள்ளது - அது நிறைய கணக்கில்லாமல் பட்டுக் கிமோனோ அங்கி; ஜரிகைப் பின்னல் வேலைகள் செய்த ஒபி உத்தரியங்கள்; அலமாரியைத் திறந்து பார்த்தால் வானவில் லை எல்லாம் மடித்து 'இஸ்திரி' போட்டு பெட்டியில் மடக்கி வைத்த மாதிரி இருக்கும். தலைவாரி சீவி முடித்துக் கொள்ள ஒரு தனி மேஜை; அதிலே முத்துப் பதித்த ஆமையோட்டுக் கொண் டை ஊசிகள். நீலக்கல், பவளராகங்கள். இன்னும் மூன்று பெரிய பெட்டிகள் நிறைய படுக்கை மெத்தை, தலையணை, தேனீர் செட்டுகள், மேற்கத்தி மோஸ்தரில் அமைந்த வீட்டுக்கு வேண்டிய தட்டுமுட்டு சாமான்கள், பாத்திர வகைகள். இதற்கப்புறம் ஒரு பெரிய பெட்டியும் சேர்க்கப்பட்டது. இதில் மணப்பெண் மாப்பிள் ளை வீட்டுக்குச் சென்றவுடன் தன்னுடைய பெற்றோர், உறவினர், பந்துக்கள், சிநேகிதர்கள், ஊழியர்கள் முதலியோருக்குப் பரிசாக வழங்க வேண்டிய பட்டு, ஜரிகைப் பெட்டி, கொண் டை ஊசி, வெண்கலத் தாலங்கள், பொம்மைகள் முதலியன நிறைத்து வைக்கப்பட்டது. எல்லாம் மொத்தம் ஐம்பத்தியைந்து பேருக்குப் பரிசுகள். மணப்பெண் ஜவுளி வகைக்கு மட்டும் இருபத்தி ஐயாயிரம் என செலவாச்சு; "என் அருமந்த மகளுடன் இவ்வளவையும் கொடுக்க வேண்டுமே" என தகப்பனார் பெருமூச்சு விட்டார். இவை எல்லாவற்றையும் மாப்பிள் ளை வீட்டார் எடுத்துக்கொண்டு போகுமுன் பெண்ணின் அத்தை, சித்தி, மைத்துனிமாருக்கெல்லாம் காட்டப்பட்டது. ஒவ்வொரு சாமானும் என்ன விலையாச்சு என்று சுற்றி நின்ற சொந்தக்காரர்களிடம் பெருமையாகச் சொல்லிக் கொண்டார்; அலங்கார உடையணிந்த ஊழியர் தலையிலேற்றி ஊர்வலமாக மாப்பிள் ளை வீட்டுக்குக் கொண்டு போக வேண்டும் என விரும்பினார்; ஆனால் டோ க்கியோவில் அந்தப் பழக்கம் பழசாப் போச்சு; அதனால் கலியாணத்திற்கு இரண்டு நாள் முன்னதாக இரண்டு மோட்டார் லாரிகள் நிறைய ஏற்றி அங்கு கொண்டு போனார்கள்; சம்பிரதாயப்படி சீர்வகைச் சாமான்களை பெண்ணின் தகப்பனார் இனம் இனமாகச் சொல்லிக் கொடுத்துவிட்டு விவரப்பட்டியலையும் சாவிக் கொத்தையும் ஒப்படைத்தார். கலியாணச் சடங்கின்போது பெண்ணுக்கு மேலங்கியைப் போடுவதில் லையென்ற உறுதிமொழியை பெண்ணின் பெற்றோர்கள் மாப்பிள் ளை வீட்டுக்காரரிடமிருந்து பெற்றுக் கொண்டு திரும்பினார்கள். இந்த மேலங்கியை ஒரே தடவைதான் உபயோகிக்க முடியும். அதில் ஜரிகை, பின்னல், சித்திர வேலை எல்லாம் சேர்த்து பல நூறு 'என்னுக்கு' செலவு இழுத்துவிட்டது. மேலும் டோ க்கியோவில் இந்தக் காலத்தில் அதைப் போடும் வழக்கமே போய்விட்டது. மணப்பெண்ணுக்கு, 'கைகள்' தரையில் புரளும் சம்பிரதாயக் கிமோனோ அங்கி அணிவிக்கப்பட்டது. அங்கியின் 'உடல்' கறுப்பு; ஆனால் சவுக்கையின் ஊசி இலைகள், பழங்கொத்துகள், மூங்கில் இலைகள் இவை நிறைத்து பின்னப்பட்டிருந்தன. கற்பு, உறுதி, தன்னடக்கம் மூன்றின் உருவங்கள் அவை மூன்றும். அந்த உடைக்குள் வெள் ளை, சிகப்பு கிமோனோ அங்கிகளைப் போட்டிருந்தார்கள்; சம்பிரதாய 'ஒபி' உத்தரீயம் தங்க - வெள்ளி ஜரிகையில் மின்னியது. கேசம் மணப்பெண்ணுக்குரிய சம்பிரதாயக் கொண் டையிடப்பட்டு ஊசி குத்தப்பட்டிருந்தது. கொண் டையை மறைக்க வெள் ளைச் சல்லாப்பட்டு முக்காடு இட்டார்கள். இந்த முக்காடு பெண்ணின் பணிவைக் குறிக்கிறது. கொண் டை பெண்ணுக்குரிய பொறுமைக் குணத்தைக் காட்டுகிறது. கணவன் பரஸ்திரீ நாட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிந்தாலும், தன் வாழ்வு முழுவதும் அந்தப் பொறாமையை மறைத்துக் கொள்வதாக உறுதி கொடுப்பதற்கு அடையாளம் அந்த முக்காடு. இவ்வளவு கேவலமான அர்த்தம் பொதிந்த முக்காட்டைப் போடுவதில் பெண்ணின் தகப்பனாருக்கு சிறிது அதிருப்தி; 'என்னடா காட்டுமிராண்டிப் பழக்கம்' என வாழையடி வாழையாக வந்த சடங்கைப் பற்றி நினைத்தார்; எப்படியானாலும் எந்த நிலைமையையும் பொறுமையுடன் சகிப்பது தான் பெண்ணுக்கு அழகு. பெண் ணைப் பழைய முறையில் சிங்காரித்து மேற்கத்தி மோஸ்தரில் ஸூட் போட்ட வாலிபன் கையில் பிடித்துக் கொடுப்பது விபரீதமாகப் படவில் லை. மகள் மேல் ஆசை தழுவும் தகப்பனாருக்கு ஏன், அங்கு கூடியிருந்தவர்களில் ஒருவருக்காவது அது விபரீதமாகப் படவில் லை. நாகரிக டோ க்கியோவில் அந்த மாதிரி தான் எல்லா இடத்திலும் கலியாணம் நடக்கிறது.
6
கலியாணச் சடங்கு அமாதராஸு என்ற சூர்ய தேவியின் மகாலயத்தில் நடந்தது. தேவியின் (ஜப்பானில் சூரியன் பெண் தெய்வம். ரசக்குறைவு இல்லாமல் இருக்க சூரியனுக்கு பெண்பாலை உபயோகிப்பதற்குப் பதிலாக சூரியதேவி எனக் குறிப்பிட்டிருக்கிறேன்) சன்னிதானத்தில் ஷின்டோ அர்ச்சகர்கள் தம்பதிகளைப் பரிசுத்தப்படுத்தினார்கள்; உற்றார் உறவினர் சகாகி மரக்கொப்புகளை அவர்கள் தலை மீது வீசினார்கள். பிரதம அர்ச்சகர் தேவியையும் அவள் பரிவாரமான எண்பது லட்சம் தெய்வங்களையும் அழைக்க மூன்று முறை கைகளைத் தட்டினார். பவித்திரமான அரிசி பானத்தை மண் கலசத்தில் அளித்தார்; தம்பதிகள் அதை மூன்று முறை அருந்தினார்கள். சம்பந்தி ஐக்கியத்தைக் காட்ட இருதிறத்து உறவினரும் கலசங்கள் பரிமாறிக் கொண்டனர். 'இட்டிலிகள்', பட்சணங்கள், பழவகைகள், காய்கறிகள் மலைமலையாக சன்னிதானத்தில் குவிக்கப்பட்டன. ஷின்டோ இசை புராதன சுருதிகளைத் தாங்கி எழுந்தன. ஷின்டோ திருமணக் கிரியைக்குப் பிறகு, டோ க்கியோவிலேயே மேற்கத்தி மோஸ்தருக்குப் பேர் பெற்ற இம்பீரியல் ஹோட்டல் விருந்து மண்டபத்தில் மறுவீட்டு விருந்து நடந்தது. சம்பந்திகள் விருந்தினர் யாவரும் ஹோட்டலுக்கு மோட்டாரில் சென்றார்கள். தம்பதிகள் இருவரும் ஒரு காரில் தரகுத் தம்பதிகள் துணைவர தனியாகச் சென்றார்கள். வரவேற்பு மண்டபத்திற்கு வருமுன் சம்பளத்திற்கு அமர்த்தப்பட்ட தோழிகள் திருமண உடையைக் கழற்றி இளம் லவங்கப் பட்டை வர்ணத்தில் உள்ள பூப்போட்ட பட்டாடையை அணிவித்தார்கள். மண்டபத்தின் நடுவே போடப்பட்ட பெரிய மேஜையின் மத்தியில் மாப்பிள் ளைக்கு அருகில் உட்கார வைக்கப்பட்டாள். அவர்களுக்கு இரண்டு பக்கத்திலும் தரகரும் அவர் மனைவியும் உட்கார்ந்து கொண்டார்கள். இருநூறு விருந்தினருக்கு மேல் வந்திருந்தார்கள். ஆண்கள் மேற்கத்தி மோஸ்தர் 'குருவிலால்' சட்டையிலும், கலியாணமான ஸ்திரீகள் கறுப்பு கிமோனோ அங்கியிலும், கலியாணமாகாத பெண்கள் பல வர்ண கிமோனோக்களிலும் வந்திருந்தனர். விருந்து மேற்கத்தி மோஸ்தரில் இருந்தது. இரு சம்பந்தி வீட்டுக்காரர்களும் பழக்கமில்லாத கத்தியும் 'முள்ளும்' உபயோகித்து உணவு வகைகளுடன் போராடினார்கள்; மதுவும் வான்கோழிக் கறியுமானாலும் சாப்பிடும் போது பேசுவது மரியாதைக் குறைவு. சாப்பாடு முடிந்தது. பழங்கள் பரிமாறப்படும் போது தரகுத் தம்பதிகள் எழுந்து நின்றார்கள். மணமகனும் மணப்பெண்ணும் எழுந்து நின்றார்கள். தரகர், தம்பதிகளை விருந்தினருக்கு அறிமுகம் செய்து வைத்து இருவருடைய படிப்பு, திறமை பற்றிய விவரங்களை வாசித்து, விருந்தினர் யாவரும் அநுபவம் இல்லாத இந்த யுவ தம்பதிகளுக்கு வாழ்வில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என புத்தி சொல்ல வேண்டும் என்று பேசி முடித்தார். விருந்தினர் சார்பாகச் சில பெரியவர்கள், எழுந்து ஆசி கூறினார்கள்; ஐஸ்கிரீமும் காப்பியும் பரிமாறப்பட்டது. விருந்து முடிந்ததும் மணப்பெண் மாமியாருடனும் தரகர் மனைவியுடனும் உள்ளே சென்றாள். உள்ளே சென்று குளித்து, முகத்தில் அப்பியிருந்த வெள் ளை வர்ணத்தைத் தேய்த்துக் கழுவினாள். கலியாணக் கொண் டை அவிழ்க்கப்பட்டு மின்சார விசிறியால் உலர்த்திக் கோதப்பட்டு தற்கால மோஸ்தர்படி சுருள் சுருளாகச் சித்தரிக்கப்பட்டது; முந்தியைப் போல் அடியோடு சம்பிரதாயத்தைப் பின்பற்றாமலும் ஆனால் அதைவிட்டு அடியோடு விலகாமலும் உள்ள ஒரு கிமோனோ அங்கியை அணிந்துகொண்டாள். அவள் இப்பொழுது திருமண - யாத்திரைக்குத் தயார். (திருமண யாத்திரை என்பது மேற்கத்தி வழக்கம். கலியாணமானவுடன் தம்பதிகள் பரஸ்பரம் அறிந்துகொள்ள தனியாக யாத்திரை செய்தல் வாழ்வின் தாம்பத்ய யாத்திரைக்கு உருவகம்.) தாயாரும் தகப்பனாரும் கவலையுடன் காத்திருந்தனர். யாத்திரை உடையில் மாமியாருடன் அவள் வருவதைக் கண்டதும் பெற்றோர் இருவருடைய உள்ளத்தில் பொறாமையும் தோல்வியும் ஆழமாகக் குத்தியது. சம்பந்திகளை மரியாதையாக வணங்கினார்கள். "பெண் சிறிசு; அனுபவமில்லாதவள், சம்பந்தியவர்கள் ரெண்டுபேரும் தாட்சண்யமில்லாது கண்டிப்பாக வளர்க்க வேண்டும்" என வேண்டிக் கொண்டார்கள். மோட்டார் தயாராக வாசலில் நின்றது. விருந்தினர்கள் ஹோட்டல் முகப்பில் நின்று வழியனுப்பினார்கள்; தம்பதிகள் டோ க்கியோ ஸ்டேஷனுக்குச் சென்றார்கள். 9-15க்குச் செல்லும் அடாமி பிளாட்பாரத்தில் தயாராக நின்றது. பூமாலைகளில் புதையுண்டு முதல் வகுப்பு வண்டியில் உட்கார்ந்திருந்தார்கள். வருஷம் முழுவதிலும் இதுவே ரொம்ப அதிர்ஷ்டம் வாய்ந்த நாளாகையால் அன்று பல ஜோடிகளுக்குக் கலியாணம் நடந்திருந்தது; அவர்களைப் போல முதல் இரவை மகாஅடாமி ஹோட்டலில் கழிக்க தீர்மானித்து இருந்தார்கள்; ஏனெனால் இது ஜப்பானிய முறையில் அல்லாமல் பெரிய சுவர்கள் வைத்த அறைகளும் சாவியும் தாழ்ப்பாளும் உள்ள கதவுகளும் அமைந்த ஹோட்டல்; ஜப்பானிய ஹோட்டல் என்றால் கடுதாசித் திரைதான் போட்டிருக்கும். மேலும் அந்த ஹோட்டலில் சுகமாக வென்னீரில் ஸ்நானம் செய்ய வசதியுண்டு. மறுநாள் மலைச்சாரல்களிலும் கடற்கரையிலும் கைகோர்த்து உலாவித்திரிய வசதியுண்டு. குதூகலம் நிறைந்த வாலிபர்கள் மேற்கத்தி ஸூட் அணிந்திருந்தனர்; நாணங்கனிவால் சிவந்த புதுமணப் பெண்கள் சிவந்த கிமோனோ அணிந்திருந்தனர்; சிகப்பு மாரிக்கு அடுத்த வர்ணம்; உறவினரிடம் வழியனுப்பிக் கொள்ள ஜன்னல் வழியாகத் தலை நீட்டினர். "ஒரு ஜோடியிலிருந்து மற்றொரு ஜோடியை அடையாளம் கண்டுபிடிப்பது எவ்வளவு கஷ்டம்" என பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டனர். "அவள் புருஷன் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்; ஒரு தடவை தவறிவிட்டால், அப்புறம் அவனை அடையாளம் கண்டு கொள்ளுவாளோ என்னவோ." அவனை ஒரு முறை தானே இதற்கு முன் பார்த்திருக்கிறாள் என்ற கவலை பெற்றோருக்கு. பெண்ணின் முகம் 'தூங்கி' இருந்தது. அவள் உள்ளே தலையை இழுத்தாள்; வண்டியும் புறப்பட்டது. "அவள் போய்விட்டாள்; இனி வேறு ஒரு குடும்பத்திற்குச் சொந்தம்" என வருத்தத்துடன் சொல்லிக் கொண்டு, ஈடு செய்து கொள்ள முடியாத தங்கள் நஷ்டத்தைப் பற்றிச் சிந்தித்தார்கள்.