shabd-logo

33. பால்தஸார் (பகுதி 1)

9 January 2024

0 பார்த்தது 0

அனதோல் பிரான்ஸ் – பிரான்ஸ் 

"கிழக்கே அரசர்களுக்கு மந்திர சக்தியுண்டு என்று நினைத்தார்கள்" -தெர்த்தூலியன் அக்காலத்திலே எதியோபியாவை பால்தஸார் ஆண்டு வந்தான். கிரேக்கர் அவனை ஸாரஸின் என்று அழைத்தனர். அவன் கறுப்பாக இருந்தாலும் அழகன்; களங்கமற்றவன்; தாராளமான உள்ளமுடையவன். அவன் சிம்மாசனமேறிய மூன்றாவது வருஷத்தில், அதாவது அவனது இருபத்திரண்டாவது வயதில், தன் நாட்டைவிட்டு ஷெபா தேசத்து அரசியான பால்கிஸ் அரசியைக் காணச் சென்றான். அவன் தன்னுடன் செம்போடிஸ் என்ற மதகுருவையும், மென்கரா என்ற பணியாளனையும் துணையாகக் கொண்டு சென்றான். அவன் பரிவாரங்கள் எழுபத்தைந்து ஒட்டகச் சுமை வாசனைத் திரவியங்களும், யானைத் தந்தங்களும், தங்கமும் சுமந்து சென்றன. இவ்வாறு அவர்கள் பிரயாணம் செய்யும்பொழுது, செம்போடிஸ், அரசனுக்கு வான சாஸ்திரத்தையும், நவரத்தினங்களைப் பற்றிய இரகசியத்தையும் கற்பித்தான். மென்கரா என்ற அடிமை, பக்திப் பாடல்களைப் பாடி அரசனை மகிழ்விக்க முயன்றான். ஆனால், பால்தஸார், இவர்களுடைய முயற்சியைச் சட்டை செய்யாது, பாலைவனத்தின் ஓரத்தில் காதுகளை நெரித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் ஓநாய்களைப் பார்த்து பொழுது போக்கிக்கொண்டு சென்றான். பனிரண்டு நாள் பிரயாணத்தின் பிறகு, பால்தஸார் ரோஜா புஷ்பங்களின் வாசனை, காற்றுடன் கலந்து வருவதை உணர்ந்தான். சிறிது நேரத்தில் அவர்கள் ஷெபா நகரத்தின் சுற்றுப்புறத்திலுள்ள நந்தவனங்களை அணுகினார்கள். போகும் வழியெல்லாம் நன்றாக மலர்ந்த மாதுளை மரத்தடியில் கூத்திட்டு விளையாடும் யுவதிகளைப் பார்த்துக்கொண்டே சென்றனர். "தெய்வத்தை நோக்கிச் செய்யும் பிரார்த்தனைதான் நடனம்" என்றான் செம்போடிஸ். "இந்த யுவதிகளை விற்றால் நல்ல பணம் வரும்" என்றான் அடிமை மென்கரா. இவர்கள் நகரத்தினுள் சென்றதும், அங்குள்ள பெரிய பெரிய வியாபார ஸ்தலங்களையும், குவிக்கப்பட்டிருக்கும் பொருள்களையும் கண்டு ஆச்சரியப்பட்டனர். ரதங்களும், கூலிகளும், பொதி கழுதைகளும் நிறைந்த வீதிகளின் வழியாக நெடுந்தூரம் சென்று, பளிங்குச் சுவர்களும், தங்கக் கலசங்கள் ஏற்றிய சிவந்த கோபுர வாயிலும் உடைய பால்கிஸ் அரசியின் அரண்மனை முன்பு வந்தனர். ஷெபா அரசி, வாசனை பரிமளித்து, முத்துப்போல் உதிரும் செயற்கையூற்றுக்கள் நிறைந்த நிலா முற்றத்தில் நின்று, அவர்களை வரவேற்றாள். அரசி, புன்சிரிப்புடன், சர்வாபரண பூஷிதையாய், அவர்கள் முன்பு வந்து நின்றாள். அவளைப் பார்த்ததும் பால்தஸாரின் மனம் கலங்கியது. கனவுக்கும் ஆசைக்கும் மீறிய அழகுடன், தேஜஸுடன், அவள் அவன் முன் தோன்றினாள். "அரசே! நல்ல வியாபார ஒப்பந்தம் ஒன்று அரசியிடம் செய்துகொள்ள வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்" என்று செம்போடிஸ் இரகசியமாகக் கூறினான். "ஆண்மகனின் காதலைப் பெறுவதற்கு மந்திர சக்தியை உபயோக்கிறாள் என்று கூறுகிறார்கள், அரசே! ஜாக்கிரதையாக இருங்கள்" என்றான் அடிமை மென்கரா. பிறகு அரசியைச் சாஷ்டாங்கமாக வணங்கிவிட்டு, குருவும் அடிமையும் அவ்விடத்தை விட்டு அகன்றார்கள். பால்கிஸுடன் தனியாக விடப்பட்ட பால்தஸார் பேச வாயெடுத்தான். வார்த்தை வரவில் லை; "எனது மௌனத்தினால் அரசிக்கு கோபம் வந்துவிடும்" என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். ஆனால், அரசி கோபப்படாது, புன்சிரிப்புடனேயே இருந்தாள். அவளே முதலில் பேசினாள். அவள் குரல் கானத்தினும் இனிமையாக இருந்தது. "வாருங்கள்! என் பக்கத்தில் வந்து உட்காருங்கள்!" என்று வெண் மையான, மெல்லிய ஒளிரேகை போன்ற சிறு விரல்களால், தன் பக்கத்தில் தரையிலிருந்த சிவந்த மெத்தையைச் சுட்டிக் காட்டினாள். பால்தஸார் பெருமூச்சுடன், அதில் அமர்ந்து, மெத்தையை இரு கையாலும் இறுக்கிப் பிடித்துக்கொண்டு, "இவ்விரண்டு மெத்தைகளும் ராக்ஷஸ பலமுள்ள உனது எதிரிகளாக இருந்திருந்தால், அவர்கள் கழுத்தைத் திருகிவிடுவேன்" என்றான். அவன் இப்படிக் கூறும்பொழுது மெத்தைகளைப் பிடித்த பிடிப்பினால், அவை கிழிந்து உள்ளிருந்த பஞ்சிறகுகள் வெண்பனி மேகம்போல் சிதறி எழுந்தன. அவற்றில் ஒன்று அந்தரத்தில் சற்று மிதந்து மெதுவாக அரசியின் மார்பில் வந்து தங்கியது. "அரசே! உங்களுக்கு ராக்ஷஸர் மீது அவ்வளவு கோபம் என்ன?" என்றாள் பால்கிஸ் அரசி. "நான் உன் னைக் காதலிக்கிறேன்" என்றான் பால்தஸார். "உங்கள் தலைநகரிலுள்ள கிணற்று ஜலம் நன்றாயிருக்குமா?" என்றாள் அரசி. "ஆமாம்" என்றான் பால்தஸார், சிறிது ஆச்சரியப்பட்டு. "எதியோபியாவில் பழ வற்றல்களைச் சேமித்துவைக்க என்ன செய்கிறார்கள் என்று அறிய எனக்கு ஆசையாக இருக்கிறது" என்றாள் அரசி மீண்டும். அரசனுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியவில் லை. "சொல்லுங்கள், தயவு செய்து சொல்லுங்கள்" என்று கெஞ்சினாள் அரசி. அரசன், வெகு கஷ்டப்பட்டு ஆலோசனை செய்து, எப்படி எதியோபியப் பரிசாரகர்கள் தேனில் பழ வற்றல்களைப் பதனம் செய்கிறார்கள் என்பதை விஸ்தரிக்க முயன்றான். அரசி அதைக் கவனிக்கவில் லை. திடீரென்று இடைமறித்து, "அரசே! தாங்கள் கான்டஸ் அரசியைக் காதலிப்பதாகக் கூறுகிறார்களே! அவள் என் னைவிட மிகுந்த அழகா? ஏமாற்றாதீர்கள்!" என்றாள். "உன் னைவிட மிகுந்த அழகா!" என்று சொல்லிக் கொண்டே, அவள் காலடியில் விழுந்து, "அது எப்படி இருக்க முடியும்?" என்றான் பால்தஸார். "பிறகு அவள் கண்கள், அவள் கரங்கள், அவள் நிறம், அவள் கழுத்து?" என்றாள் மீண்டும். பால்தஸார் அவளை நோக்கிக் கையை விரித்துக் கொண்டு, "உனது மார்பில் தங்கி நிற்கும் பஞ்சு இறகை எனக்கு அளித்தால், எனது ராஜ்யத்தில் பாதியையும், செம்போடிஸையும் மென்கராவையும் உனக்கு அளித்து விடுவேன்" என்று ஆவேசத்துடன் கூறினான். ஆனால், அவள் எழுந்து கலகலத்த சிரிப்புடன் ஓடிச் சென்று விட்டாள். குருவும் அடிமையும் திரும்பி வந்த பொழுது, தங்கள் எஜமானன் தனது குணத்திற்கு மாறாக ஆழ்ந்த யோசனையிலிருப்பதைக் கண்டனர். "அரசே! வியாபார ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டீர்களா?" என்றார் குரு. அன்று பால்தஸார் ஷெபா அரசியுடன் விருந்துண்டு, அந்த நாட்டின் பேரீச்ச மதுவை யருந்தினான். "பிறகு, கான்டஸ் அரசி என் னைப் போல் அழகியல்ல என்பது உண் மைதானா?" என்று அரசி, இருவரும் புசித்துக் கொண்டிருக்கும்பொழுது, கேட்டாள். "கான்டஸ் அரசி கறுப்பி" என்று பதில் சொன்னான் பால்தஸார். "கறுப்பாக இருந்தால் அழகில்லாமலா போய்விடும்?" "பால்கிஸ்!" என்றான் பால்தஸார். அவன் மேற்கொண்டு வேறு ஒன்றும் சொல்லவில் லை; அவளைத் தன் கரங்களுக்குள் இழுத்தான்; அவனுடைய முத்தத்தின் வேகத்தில் அவளது தலை அண்ணாந்தது. ஆனால் அவள் கண்களில் நீர் பெருகுவதைக் கண்டுவிட்டான். பிறகு மெதுவாக, கொஞ்சுதலாக, குழந்தையைத் தேற்றுவது போல் அவளைத் தேற்றினான். அவளைத் தனது மலர் என்றும், சிறு நட்சத்திரம் என்றும் கொஞ்சினான். "ஏன் அழுகிறாய்? உனது கண்ணீர் அகல நான் என்ன செய்ய வேண்டும்? உனது ஆசையைச் சொல், உடனே நிறைவேற்றி வைக்கிறேன்" என்றான் பால்தஸார். அவள் அழுகையை நிறுத்திச் சிறிது யோசனையில் ஆழ்ந்தான். அவளது ஆசையைத் தெரிவிக்கும்படி வெகு நேரம் கெஞ்சினான். கடைசியாக அவள் பதிலளித்தாள். "எனக்குப் பயம் என்பது என்னவென்று தெரிய வேண்டும்!" முதலில் பால்தஸாருக்கு என்னவென்று அர்த்தமாகவில் லை. அவள் பிறகு மெதுவாக, என்னவென்று அறிய முடியாத அபாயத்தைத் தான் அநுபவிக்க ஆசைப்படுவதாகவும், ஆனால் ஷெபாவின் தெய்வங்களும், வீரர்களும் தனக்கு இதை அறிந்து கொள்ள முடியாதபடி தன் னைக் காப்பாற்றி வருவதாகவும் கூறினாள். "ஆனால், இரவில் பயத்தின் குளிர்ந்த சாயை படவேண்டும் என்றும், தலைமயிர், தறிகெட்ட மிரட்சியால், அலங்கோலமாக நிமிர்ந்து குச்சலெடுத்து நிற்கவேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன். அப்பா! பயத்தை அநுபவிப்பதில் என்ன சுகம் இருக்கிறது!" என்று பெருமூச்செறிந்தாள். சாமள வர்ணனான பால்தஸாரின் கழுத்தில், தன் மெல்லிய கரங்களை வளைத்து, குழந்தைகளின் குதலை மொழியில், "இரவாகி விட்டதே, மாறுவேஷம் போட்டுக் கொண்டு நாம் நகரத்தைச் சுற்றி வருவோமா? நீங்கள் வருகிறீர்களா?" என்றாள். அவன் ஒப்புக் கொண்டான். அவள் ஜன்னலண் டையில் ஓடி வெளியே எட்டிப் பார்த்தாள். "ஒரு பிச்சைக்காரன் அரண்மனைச் சுவரில் சாய்ந்தபடி தூங்கிக் கிடக்கிறான்; அவனிடம் உங்களுடைய உடைகளை மாற்றிக் கொள்ளுங்கள், சீக்கிரம், நானும் உடையை மாற்றிக் கொண்டு தயாராகிறேன்" என்றாள். அவள் விருந்து மண்டபத்தை விட்டுக் குழந்தையைப் போல் உற்சாகத்துடன் கைகளைக் கொட்டிக் கொண்டு வெளியே ஓடினாள். பால்தஸார், பிச்சைக்காரனுடன் தன்னுடைய உடையை மாற்றிக்கொண்டு, தயாராகக் காத்திருந்தான். அரசி சாதாரணப் பணிப்பெண்ணின் உடையில் அவனைச் சந்தித்தாள். "வாருங்கள்" என்று அவனைப் பல கதவுகள் வழியாக அரண்மனைப் புறத்திலிருந்த வயலுக்கு அழைத்துச் சென்றாள். *****அன்றிரவு இருள் அதிகமாக இருந்தது. இருட்டில் பால்கிஸ் பார்வைக்கு உயரத்தில் குறுகியவளாகக் காணப்பட்டாள். அவள் அவனை ஊர் காலாடிகளும் வேசைகளும் வந்து சேரும் ஒரு கள்ளுக் கடைக்கு அழைத்துச் சென்றாள். இருவரும் ஒரு மேஜையின் அருகில் உட்கார்ந்து, அலங்கோலமாகக் கிடக்கும் நாற்றம் பிடித்த மனிதக் கூட்டத்தைப் பார்த்தனர். கடைக்காரன், ஒரு சாக்கின் மீது சாய்ந்து கொண்டு குடிவெறியர்களை ஒற்றைக் கண்ணினால் கவனித்து வந்தான். பால்கிஸ், கூரையிலிருந்து சரம்போலக் கோத்துத் தொங்கும் உப்பில் ஊறவைத்த மீன்களைப் பார்த்து, "அவற்றை வெங்காயத் துகையலுடன் சாப்பிடவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது" என்று சுட்டிக் காட்டினாள். பால்தஸார் கட்டளையிட்டான். ஆனால் அவள் சாப்பிட்டபிறகுதான் பணம் கொண்டு வரவில் லை என்ற ஞாபகம் அவனுக்கு வந்தது. ஆனால் அவன் கவலை கொள்ளவில் லை. ஒருவருக்கும் தெரியாமல் நழுவி விடலாம் என்று நினைத்தான். ஆனால், கடைக்காரன் வழியை மறித்துக்கொண்டு, அடிமைப் பயல் என்றும், காசுக்குதவாத பெட்டைக் கழுதை என்றும் இருவரையும் வைதான். பால்தஸார் ஒரு குத்துக் குத்தி அவனைக் கீழே வீழ்த்தி விட்டான். உடனே பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சிலர், கையிலிருந்த கத்தியை உருவி அவர்கள் மீது வீசி எறிந்தனர். ஆனால் சாமள வர்ணமுள்ள எகிப்திய அரசன், வெங்காயம் அரைக்கும் கல் லை எடுத்து எதிரிகளின் மீது வீசி, இருவரையும் கீழே வீழ்த்தி, மற்றவர்களைப் புறங்காட்டச் செய்தான். இவ்வளவு சண் டையிலும் பால்கிஸ் அரசியின் தேகத்தின் ஸ்பரிசம் அவனுக்கு ராக்ஷஸ பலத்தையளித்தது. கடைக்காரனது நண்பர்கள் அருகில் வரப் பயப்பட்டு அங்கிருந்தே பாத்திரங்களையும் கைக்ககப்பட்ட ஒவ்வொன் றையும் அவன் மீது எறிந்தனர். அவர்கள் எறிந்த பெரிய பாத்திரம் ஒன்று பால்தஸார் மண் டையில் தாக்கியுடைந்து காயப்படுத்தியது. ஒரு நிமிஷம் சித்தப்பிரமை பிடித்தவன் போல் நின்றான். அவ்வளவுதான்! மறுநிமிஷம் அந்தப் பாத்திரம் இன்னும் பன்மடங்கு வேகத்துடன் எதிரிகளை நோக்கிச் சென்றது. இந்தப் பாத்திரம் விழுந்த களேபரத்தில் பால்கிஸைத் தன் கையில் தூக்கிக்கொண்டு வெளியில் ஓடினான். இருண்ட சந்துகளில் ஒருவரும் இல் லை. இரவின் அமைதி பூமியைச் சூழ்ந்தது. துரத்தி வந்தவர்களின் குரல்கள் தூரத்தில் மடிந்தன. சிறிது நேரத்தில் ஒரு சப்தமும் இல் லை. பால்தஸாரின் நெற்றியில் இருந்து வடிந்த ரத்தத்துளி ஒன்று, பால்கிஸின் மார்பில் சொட்டென்று விழுந்தது. "அரசே! உங்களைக் காதலிக்கிறேன்" என்றாள் பால்கிஸ். மேகப் படலத்திலிருந்து விடுபட்ட சந்திரனொளியில், அவளது பாதி மூடிய கண்களின் அமிர்தமயமான பிரதிபலிப்பைக் கண்டான். இருவரும் ஜலம் வற்றிய ஓடையில் இறங்கினர். பால்தஸாரின் கால் தடுக்கியது. இருவரும் இறுகப் பிடித்த வண்ணம் ஓடையில் மெத்தென்றிருந்த பாசிப் படலத்தில் விழுந்தனர். அவர்கள் எல் லையற்ற இன்பத்தில் மிதந்தனர். வாழ்க்கையின் போக்கு நின்றது. இம்மாதிரி நிலையற்ற நிலையில் இருக்கும்பொழுது, மான்கூட்டம் தண்ணீர் குடிக்க வந்து, அவர்களது மௌனத் தழுவலைக் கலைத்தது. அச்சமயம் அவ்வழியாகச் சென்ற கள்ளர் கூட்டமொன்று இருவரையும் பார்த்துவிட்டது. "இருவரும் ஏழைகளானாலும், அழகாக இருக்கிறார்கள், நல்ல விலைக்கு விற்கலாம்" என்று கழுதையின் பின் கட்டியிழுத்துச் சென்றனர். கட்டப்பட்ட கறுப்பு நிறமுள்ள அரசன், திருடர்களைக் கொன்று விடுவதாகப் பயமுறுத்தினான். ஆனால், குளிரில் நடுங்கும் பால்கிஸ், பார்க்க முடியாத ஏதோ ஒன் றைப் பார்த்தவள் போல், புன்சிரிப்புடன் பின் தொடர்ந்தாள்.

புதுமைப்பித்தன் மூலம் மேலும் புத்தகங்கள்

72
கட்டுரைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகள்
0.0
புதுமைப்பித்தன் மொத்தம் 108 சிறுகதைகள் எழுதியுள்ளார். அதில் அவர் காலத்தில் 48 மட்டும் பிரசுரமாயின. 1940-ல் புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. புதுமைப்பித்தன் 98 கதைகளை எழுதியுள்ளார். அவர் மணிக்கொடியில் எழுதிய 29 கதைகளைப் புதுமைப்பித்தன் கதைகள் என்ற பெயரில் நவயுகப் பிரசுராலயம் வெளியிட்டுள்ளது. ஆறுகதைகள், நாசகாரக் கும்பல், பக்த குசலோ என்ற அவரது பிற நூல்களையும் அதே நிறுவனம் வெளியிட்டுள்ளது. கலைமகள் பதிப்பகம் காஞ்சனை தொகுதியையும், ஸ்டார் பிரசுரம் ஆண்மை என்ற தொகுதியையும் வெளியிட்டன. ஐந்திணைப் பதிப்பகம் புதுமைப்பித்தனின் மொத்தச் சிறுகதைகளையும் வெளியிட்டது. அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் புதுமைப்பித்தனின் அனைத்துச் சிறுகதைகளையும் வெளியிட்டுள்ளது.
1

1. ஆஷாட பூதி

2 January 2024
0
0
0

மோலியர் (1622-1673) பதினேழாவது நூற்றாண்டில், பிரான்ஸில் நாடகக்காரன் என்றால், மதம் அவனைத் தள்ளிவைத்தது. பிரார்த்தனை - பிரசாதத்தைப் பெறுவது என்றால் விசேஷ சிபாரிசின் பேரில் நடக்க வேண்டிய காரியம். செத்தால

2

2. ஆட்டுக் குட்டிதான்

2 January 2024
0
0
0

ஜேம்ஸ்ஹானலி – இங்கிலாந்து  செக்கச் செவேலென்றிருக்கும் அந்த பஸ், ஏக இரைச்சலுடன் அந்த வளைவைத் திரும்பியது. சூழ்நிலை தாங்கிய அமைதியான வண்ணக் கலவைகளுக்குச் சவால் கொடுப்பது மாதிரி அந்தச் சிகப்பு கண்களை உற

3

3. அம்மா

2 January 2024
0
0
0

கே. பாயில்  பாதை நெடுகலாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், அதற்குச் சின்னக் கிளை ஒன்றும் இருந்தது. இருந்தாலும் மறுபக்கத்தில் ஓடும் சிற்றோடையில் இறங்கி அக்கரைக்குப் போக வேண்டிய அவசியமே இல் லை. மலை வ

4

4. அந்தப் பையன்

3 January 2024
0
0
0

மாக்ஸிம் கார்க்கி  இந்தச் சின்னக் கதையை எப்படிச் சொல்லுவது என்று புரியவில் லை. அவ்வளவு எளிதானது. நான் வாலிபப் பருவத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் தெருக் குழந்தைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு ஊருக்கு வெளியே

5

5. அஷ்டமாசித்தி

3 January 2024
0
0
0

டென்ஷொ வம்சத்தின் ஆதிக்கத்தின்போது, கியாட்டோ என்ற வடக்குப் பிராந்தியத்தில் குவான்ஷின் கோஜி என்ற வயோதிகன் வாழ்த்து வந்தான். நீண்டு நெஞ்சை மறைக்கும் வெள் ளைத் தாடியுடன், ஷிண்டோ குருக்கள்மார் போல உடையணிந

6

6. ஆசிரியர் ஆராய்ச்சி

3 January 2024
0
0
0

ஸின்கிளேர் லூயிஸ்  டாக்டர் ஸ்லீக் பிரம்மச்சாரி; அதிலும், வழுக்கை விழவிருக்கும் வாலிபப் பிரம்மச்சாரி. அவர் இராஸ்மஸ் கலாசாலையில் சரித்திரமும் பொருளாதாரமும் கற்பித்து வந்தார். அதாவது மேடைமீது ஏறி நின்று

7

7. அதிகாலை ( பகுதி 1)

3 January 2024
0
0
0

நிக்கோலாய் டிக்கனோவ்  1918-ம் வருஷம் ஆகஸ்டு மாதத்தில் துருக்கியர் பாக்கூ என்ற இடத்தை முற்றுகை இட்டார்கள். மென்ஷ்விக் நிர்வாகத் தலைமை போர்டின் ஐந்து தலைவர்கள் மூளையும் சுழன்றது. சர்வ குழப்பம்; அது விஷ

8

7.அதிகாலை (பகுதி 2)

3 January 2024
0
0
0

இராத்திரி ஒரு ஊரில் தங்கினதும், ஆலி ஹஸன், டாஷா பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு சளசளவென்று மணிக்கணக்காகப் பேசிக் கொட்டினான். உத்யோகஸ்தரின் விதவை மெய்ஸ் அரிசி ரொட்டியை அசைபோட்டுக் கொண்டிருந்தாள். வி

9

7. அதிகாலை ( பகுதி 3)

3 January 2024
0
0
0

"பொய்யாயிருக்கலாம், ஆனால் சித்திரவதையில், உன் னைக் காட்டிக்கொடுப்பேன்; என் னைக் காட்டிக்கொடுத்துக் கொள்வேன்; எனக்கு ஞாபகத்துக்கு வந்தவர்களையெல்லாம் காட்டிக்கொடுப்பேன். உனக்குச் சித்திரவதை என்றால் எப்ப

10

7. அதிகாலை (பகுதி 4)

3 January 2024
0
0
0

"ஆஹா அப்படியா. பாக்ஷாதான் வயிற்றுக் கடுப்பால் கழிந்து கொண்டிருக்கிறாரே. இன்னும் கொஞ்ச காலத்துக்கு அவரைப் பற்றித் தொந்திரவில் லை. தவிரவும், உன்னுடைய ஆயுதங்களை உன்னிடம் கொடுத்துவிடவேண்டும் என்று உத்திரவ

11

8. பலி

4 January 2024
1
0
0

ஜோஸப் நையரு – ஹங்கேரி  மோல்டேவியா நோக்கி நிற்கும் மலைச் சிகரங்களிலே அந்த வருஷத்தில் மந்தைகளுக்குக் கரடிகளால் வெகு தொல் லை ஏற்பட்டு வந்தது. வில் - பொறி வைத்து எல்லாம் முயன்று பார்த்ததும் ஒன்றும் பயன்ப

12

9. சித்திரவதை

4 January 2024
1
0
0

எர்னஸ்ட் டாலர்  "உனக்கு இன்னும் ஏதாவது விருப்பம் இருக்குமா?" சாகக் கிடக்கும் வாலிபனைப் பார்த்து ஸ்டட்கார்ட் இரகசியப் போலீஸ் உத்தியோகஸ்தர் இவ்வாறு கேட்டார். வாலிபனுடைய 'வெறிச்சோடிய' கண்கள் ஜன்னலின் கம

13

10. டைமன் கண்ட உண்மை

4 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர் (1564-1616)  ஆங்கில நாடகாசிரியர், ஷேக்ஸ்பியரைத் துவிதப் பிரம்மா என்பார்கள். உலகத்தின் சிருஷ்டி தத்துவத்தைப் புரிந்து கொண்டவர் போல் தமது பாத்திரங்களை நடமாட விடுவார். அவர் உலகில் பேய்களும்

14

11. இனி

4 January 2024
1
0
0

இ. எம். டிலாபீல்ட்  இதுவரை நடக்காததைப் பற்றி ஒரு கதை எழுதினால் என்ன?... அந்தக் கதையின் போக்கில் அறிந்து கொள்ள முடியுமானால்... பதினைந்து இருபது வருடங்களுக்கப்புறம்: ஓல்ட் பெய்லியில் (நியாயஸ்தலம்) நடக்

15

12. இந்தப் பல் விவகாரம்

4 January 2024
1
0
0

மைக்கேல் ஜோஷெங்கோ – ருஷ்யா  எங்கள் சகா எகோரிச்சுக்குப் பல், தொந்திரவு கொடுத்து வந்தது. என்ன காரணத்தினாலோ விழ ஆரம்பித்தது. காலம் என்ற ஒன்று இருக்கே, அதற்கும் இந்த விவகாரத்துக்கும் சம்பந்தமிருக்கலாம்.

16

13. இஷ்ட சித்தி ( பகுதி 1)

4 January 2024
1
0
0

ஹான்ஸ் பலாடா – ஜெர்மனி  முதலிலேயே தெரிவித்து விடுகிறேன். அப்புறம் குறை சொல்லாதீர்கள். என் மனைவி பெயர் இட்ஸன் பிளாஸ். உச்சரிப்பதற்குக் கொஞ்சம் சிரமந்தான்; ஆனால் அவள் மீது இருந்த ஆசையில், அதன் சிரமம் எ

17

13. இஷ்ட சித்தி ( பகுதி 2)

4 January 2024
1
0
0

"பின்பு கிரிஸ்மஸ் சமயத்தில் அதை உடைத்து... பிறகு என்னவென்பது உங்களுக்குத்தான் தெரியுமே!" என்றாள்! "உனக்கென்ன பைத்தியமா? இந்த வருஷம் போனஸ் கீனஸ் கிடையாது என்று ஹீபர் சொல்லுகிறான். முதலாளி வருமானம் இல்

18

14. காதல் கதை

5 January 2024
1
0
0

வில்லியம் ஸரோயன்  "இந்தப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுகிறீரா அல்லது அந்தப் பக்கமாக உட்காருகிறீரா?" என்று சிகப்புக் குல்லா* கேட்டான். (* நம்மூர்களில் சிகப்புத் தலைப்பாய் என்றால் போலீஸ்காரன் என்பது

19

15. கலப்பு மணம்

5 January 2024
1
0
0

கிரேஸியா டெலாடா – இத்தாலி  அன்றிரவு சுகமாக இருந்தது. பூலோகத்தைக் கடுங்குளிரினால் சித்திரவதை செய்வதில் சலியாத உறைபனிக் காலத்துக்கும் ஒரு ஓய்வு உண்டு என்பதை அந்த ஏப்ரல் இரவு காட்டியது. இதுவரை பனிக்கட்ட

20

16. கனவு (பகுதி 1)

5 January 2024
1
0
0

ஐவான் டர்ஜனீப் – ருஷியா அந்தக் காலத்தில் நான் என் தாயாருடன் ஒரு சிறு துறைமுகப் பட்டினத்தில் வசித்து வந்தேன். எனக்கு அப்பொழுதுதான் பதினேழு வயது நிரம்பிற்று. தாயாருக்கு முப்பத்தைந்து வயது. சின்ன வயதிலே

21

16. கனவு ( பகுதி 2)

5 January 2024
1
0
0

8 என் தாய் எனக்குக் கூறிய கதை எனதுள்ளத்தை எப்படிச் சிதறடித்தது! முதல் வார்த்தையிலிருந்தே அறிந்து கொண்டேன். அவள் வாயிலிருந்து தவறுதலாக நழுவிய வார்த்தை எனது உத்தேசத்தைத் திடப்படுத்தியது. எனது கனவில் நா

22

17. காரையில் கண்ட முகம்

5 January 2024
1
0
0

இ.வி. லூக்காஸ் – இங்கிலாந்து  நேற்று சாயங்காலம் எனது நண்பன் டாப்னி வீட்டில் நடந்ததை மறக்க முடியவில்லை. அந்த அநுபவம் இன்னும் என் னை உறுத்திக் கொண்டிருக்கிறது. அன்றைய தினம் பேச்சு பூத பைசாசங்களைப் பற்ற

23

18. கிழவி

5 January 2024
1
0
0

ஸெல்மாலேகர்லாப் – ஸ்வீடன்  மலைப்பாதை வழியாக ஒரு கிழவி நடந்து கொண்டிருந்தாள். மெலிந்து குறுகியவள்தான். எனினும் முகத்தின் வண்ணம் வாடவில்லை. சதைக் கோளங்கள் மரத்துத் தொய்ந்து திரித் திரியாகத் தொங்கவில்லை

24

19. லதீபா

6 January 2024
0
0
0

மோஷி ஸ்மிலான் ஸ்கி  "லதீபாவின் கண்களை நீ பார்த்திருக்காவிட்டால், கண்களுக்கு எவ்வளவு அழகு இருக்க முடியும் என்பது உனக்குத் தெரிந்தே இருக்காது." இப்படி நான் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம். ச

25

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்( பகுதி 1)

6 January 2024
0
0
0

1 அவர்களுடைய மூத்த பெண்ணின் படிப்பு அடுத்த மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது. வயசும் 'அப்படி இப்படி' என்று சீக்கிரத்தில் பதினெட்டு ஆகிவிடும். டோ க்கியோவிலேயே நாகரீகத்திற்குப் பெயர் போன இடத்தில் நிலம் வாங

26

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்(பகுதி 2)

6 January 2024
0
0
0

5 வரன்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுவதற்கு நாள் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு 'கபூக்கி' நாடகக் கொட்டகையில் தரகர் இரண்டு 'பாக்ஸ்' களை அமர்த்தினார்; இரண்டு குடும்பங்களும் பக்கத்த

27

21. மணிமந்திரத் தீவு

6 January 2024
0
0
0

ஷேக்ஸ்பியர்  நடுக்கடலிலே நாலைந்து கப்பல்கள் தத்தளித்துத் தடுமாறுகின்றன. கடலலைகள் சினங்கொண்ட கருநாகங்கள் போல ஆயிரமாயிரமாகப் படம் விரித்துத் தலை சுற்றி மோதுகின்றன. உயிரை வாங்கவரும் கால தூதர்களின் கோரச்

28

22. மணியோசை

6 January 2024
0
0
0

ஜப்பான்  "நான் சாவதற்குப் பயப்படவில் லை" என்றாள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மனைவி. "இப்பொழுது என் கவலை எல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நான் போன பிறகு யாரைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?" வேதனை

29

23. மார்க்ஹீம்

6 January 2024
0
0
0

ஆர்.எஸ். ஸ்டீவன்ஸன் – இங்கிலாந்து  "ஆமாம்! எங்கள் வியாபாரத்திலே பலவிதம் உண்டு; வாங்க வருகிறவர்களில் சிலருக்கு ஒன்றுமே தெரியாது; வெறும் 'அப்பாவிகள்'. அப்பொழுது எங்கள் அநுபவத்திற்கு ஏற்ற லாபத்தைப் பெறு

30

24. மிளிஸ்

8 January 2024
0
0
0

பிரட் ஹார்ட் – அமெரிக்கா  ஸிராநிவாடா மலைத் தொடரில் சமவெளிக்குப் பக்கத்தில் இருக்கும் சிவந்த மலைகளில்தான் "ஸ்மித் பாக்கெட்" என்ற இடம் இருக்கிறது. அது ஒரு சுரங்க ஸ்தலம். அதாவது ஒரு காலத்தில் தங்கம் இரு

31

25. முதலும் முடிவும் ( பகுதி 1)

8 January 2024
0
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  மாலை ஆறு மணியிருக்கும். அந்த அறையில் சுமாரான இருட்டு. 'பச்சை ஷேட்' போட்ட மேஜையின் மீதிருந்த ஒற்றை விளக்கு, தரையில் விரித்த துருக்கிக் கம்பளத்திலும், மேஜையின் மீது சிதறிக் கிடந்த,

32

25. முதலும் முடிவும் ( பகுதி 2)

8 January 2024
0
0
0

"பிரேதத்தின் மேலிருந்த எதையும் எடுத்தாயா?" "நாங்கள் சண்டை போட்டுக் கொள்ளும்பொழுது இது அவன் பையிலிருந்து விழுந்தது." அது வெறும் தபால் கவர். தென் அமெரிக்கத் தபால் குறியிட்டு, "பாகட்ரிக் வாலன், ஸைமன் ஓட்

33

26. நாடகக்காரி

8 January 2024
0
0
0

ஆண்டன் ஷெக்காவ் – ருஷியா  அவள் ஒரு நாடகக்காரி. அந்தக் காலத்திலே அவளுக்கு யௌவனக் களை மாறவில் லை. குரல் கணீர் என்று இருக்கும். பலர் வந்து போவார்கள். ஆனால் குறிப்பாக நிக்கோலாய் பெட்ரோவிச் கோல்ப்பக்கோவ்

34

27. நட்சத்திர இளவரசி

8 January 2024
0
0
0

ஒரு ஆசிரியர் - தென் கடல் தீவுகள்  "நம்மிடம் இருப்பதையெல்லாம் சாப்பிட்டு விடுவோம்" என்றான் டபூதி. அவனது சகோதரனான அய்ட்டோ சந்தேகத்துடன் ஏறிட்டுப் பார்த்தான். "அப்படியானால் நமக்கு மிகுந்த பலம் உண்டாகிவி

35

28. ஓம் சாந்தி! சாந்தி!

8 January 2024
1
0
0

எலியா எஹ்ரன் பர்க்  (யுத்தம் மனித சமூகத்தின் 'உடனுறை நோயாகவே' இருந்து வருகிறது. தனது தற்காப்புக்காக மனிதன் சமூகம் என்ற ஒரு ஸ்தாபனத்தை வகுத்தான்; பிறகு அதனைக் காப்பாற்றத் தன் னைப் பலிகொடுக்கத் தயாரானா

36

29. ஒரு கட்டுக்கதை

9 January 2024
0
0
0

பிரான்ஸ் காப்கா – ஆஸ்திரியா  எலி சொல்லுகிறது... "ஐயோ, உலகம் தினம் தினம் எவ்வளவு சின்னதாகிக் கொண்டே வருகிறது! முதலில் ரொம்பப் பெரிதாக, நான் பயப்படும்படியாக, அவ்வளவு பெரிதாக இருந்தது. நான் ஓடிக்கொண்டே

37

30. ஒருவனும் ஒருத்தியும்

9 January 2024
0
0
0

லூயிகய்ல்லூ – பிரான்ஸ்  மச்சுப் படிக்கட்டு முற்றத்தில் இறங்கியது. அங்கே, அதாவது கடைசிப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, அன்று காலை முழுவதும் அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் ரொம்பவும் நெட்டை. ஒற்றை ந

38

31. பைத்தியக்காரி

9 January 2024
0
0
0

மொப்பஸான் – பிரான்ஸ்  "ஆமாம், நீ சொல்வது முன்பு பிரான்சிற்கும் ருஷியாவிற்கும் சண் டை நடந்ததே, அப்பொழுது நடந்த பயங்கரமான சம்பவத்தை என் நினைவிற்குக் கொண்டு வருகிறது" என்று கூறத் தொடங்கினார் முஸே டி' என

39

32. பளிங்குச் சிலை

9 January 2024
0
0
0

வாலரி புருஸ்ஸாப் வாலரி புருஸ்ஸாப் (1875-1924) புரட்சி யுகமான நவீன காலத்து ருஷ்யப் புது எழுத்தாளர் கோஷ்டியைச் சேர்ந்தவர். இந்தக் கதை புரட்சிக்கு முந்திய காலத்தைப் பகைப் புலமாகக் கொண்டு, எழுந்த கற்பனைக

40

33. பால்தஸார் (பகுதி 1)

9 January 2024
0
0
0

அனதோல் பிரான்ஸ் – பிரான்ஸ்  "கிழக்கே அரசர்களுக்கு மந்திர சக்தியுண்டு என்று நினைத்தார்கள்" -தெர்த்தூலியன் அக்காலத்திலே எதியோபியாவை பால்தஸார் ஆண்டு வந்தான். கிரேக்கர் அவனை ஸாரஸின் என்று அழைத்தனர். அவன்

41

33. பால்தஸார்( பகுதி 2)

9 January 2024
0
0
0

ஜனநடமாட்டமில்லாத பாலைப் பிரதேசங்களில் மத்தியானம் வரை நடந்தனர். உச்சியில் சூரியன் வந்ததும், திருடர்கள் கைதிகளை விடுவித்து, பாறையின் நிழலில் உட்காரச் சொல்லி, கெட்டுப்போன ரொட்டித் துண் டைக் கொடுத்தனர். ப

42

34. பொய்

9 January 2024
0
0
0

லியேனீட் ஆன்ட்ரீவ் – ருஷியா  "நீ சொல்வது பொய், அது உனக்குத் தெரியும்!" "அதற்கேன் இப்படிக் கத்தவேண்டும்? பக்கத்திலிருக்கிறவர்களுக்கும் தெரிய வேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது." இப்பொழுதும் பொய் சொன்னாள்

43

35. பூச்சாண்டியின் மகள்

10 January 2024
0
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து  அவள் பெயர் பத்தேமா. அவள் பாக்தாத் நகர் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தாள். அவள் நீலத்தாடிவாலாவின் புதல்வி. கண்டதும் காம வெறியை எழுப்பும் மோகனாங்கி. அவளது மதி முகத்தின் வ

44

36. ராஜ்ய உபாதை( பகுதி 1)

10 January 2024
0
0
0

ஹென்றிக் இப்ஸன் (1828-1906)  ஷேக்ஸ்பியருக்கு நிகராக உலகம் கொண்டாடும் சிறந்த நாடக ஆசிரியர் ஹென்ரிக் இப்ஸன். தர்மத்துக்கு வெற்றி அளித்தார் ஷேக்ஸ்பியர்; தர்மம் ஏன் வெற்றி பெற வேண்டும் என்ற கேள்வியை எழுப

45

ராஜ்ய உபாதை( பகுதி 2)

10 January 2024
0
0
0

"அந்தக் கடிதம்..."  "இரு இரு, விரோதிகளைப் பற்றி நான் ஒரு பட்டியல் கொடுத்தேனே. நீ அதிகாரத்தை விடத் தயாராக இருப்பதுபோல நானும் என் எதிரிகளை மன்னிக்க ஆசைப்படுகிறேன். அந்தப் பட்டியலை இந்த நெருப்பில் போட்ட

46

37. ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு

10 January 2024
0
0
0

நதானியேல் ஹாதார்ண் – அமெரிக்கா  எல்லைப்புறத்தைப் பாதுகாப்பதற்காக 1725-ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்ட படையெடுப்பு சரித்திரத்திலேயே கற்பனைக்கு இடந்தரும் பகுதி. அதை எல்லாரும் சாதாரணமாக 'லவல் சண்டை' என்று கூற

47

38. சாராயப் பீப்பாய்

10 January 2024
0
0
0

எட்கார் அல்லன் போ – அமெரிக்கா  அவன் ஆயிரம் குற்றங்களைச் செய்தான்; ஆனால் என்னால் இயன்றவரை பொறுத்தேன். அவன் என் னைத் திட்டி அவமதித்தான். இனி, பழிக்குப் பழி தீர்க்க வேண்டியதுதான் என்று மன உறுதி கொண்டேன்

48

39. சகோதரர்கள்

10 January 2024
0
0
0

யூஜோ யாம மோட்டோ – ஜப்பான்  'அண்ணா, இது நல்லதுதானே?' 'எங்கே, இப்படிக் கொண்டா பார்ப்போம்' என்று மூத்தவன் தன்னிடம் காட்டப்பட்ட காளானைப் பார்ப்பதற்காகத் திரும்பினான். 'ஊங் ஹும், நல்லதில் லை; நான் பிடுங்க

49

40. சமத்துவம்

10 January 2024
0
0
0

ஒரு ருஷிய ஆசிரியர்  நீலக் கடலின் அடிமட்டத்திலே, பிரமாண்டமான மீன் ஒன்று, இரை தேடிக்கொண்டு, உல்லாசமாக நீந்தி வருகிறது. எதிரே ஒரு சின்ன மீன் - அதன் உணவு. பெரிய மீன் அதை விழுங்குவதற்காக, தன் வாயை அகலத் த

50

41. ஷெஹர்ஜாதி - கதை சொல்லி

11 January 2024
0
0
0

ஹென்றி டிரெக்னியர் – பிரான்ஸ்அன்று இரவு ஷெஹர்ஜாதி நன்றாகத் தூங்கவேயில் லை. பகல் முழுவதும் சுட்டுப் பொசுக்கும் வெய்யில். அதனால் மூச்சுவிடக்கூட முடியாதபடி அவ்வளவு இறுக்கமாக இருந்தது. சிலந்தி வலையையும் த

51

42. சிரித்த முகக்காரன்

11 January 2024
0
0
0

அவன் சோகமாக இருக்கிறான், தனியாக இருக்கிறான் என்று சொல்லிவிடுவது எளிது; ஆனால் அவன் எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்தோடேயே இருக்கிறான். அப்படிச் சொல்லிவிட்டாலும், அவனைப் பாட்டிலில் போட்டு அடைத்து லே

52

43. சூனியக்காரி

11 January 2024
1
0
0

ரோனால்டு ஆக்டன் – இங்கிலாந்து அப்பொழுது இலையுதிர் காலம். நானும் ஜேக் மக்கின்ஸனும் பக்கத்து மிராசுதாருடைய காட்டில் திருட்டுத்தனமாகக் கண்ணி வைத்து வேட்டையாடச் சென்றோம். அவனுக்கு வயது இருபதுக்கு மேல

53

44. சுவரில் வழி

11 January 2024
0
0
0

ஆர். முரே கில்கிரைஸ்– இங்கிலாந்து அன்று முற்பகல் சிறிது உஷ்ணமாகவே இருந்தது. பசும்புல் செழித்து வளர்ந்த மைதான வெளியில், ஆங்காங்கு குத்துக்குத்தாகப் பெயர் தெரியாத புஷ்பங்கள் எல்லாம் கணக்கற்று

54

45. தாயில்லாக் குழந்தைகள்

11 January 2024
0
0
0

பிரான்ஸிஸ் பெல்லர்பி – இங்கிலாந்து வேர்த்து விருவிருக்க, கால்கள் தள்ளாட, இரண்டு குழந்தைகள் நடந்து சென்றன. பையன், பதினொரு வயசிருக்கும். முன்னால் நடந்தான். பெண் எட்டு வயசுபோல இருக்கும். பாதை முன் ம

55

46. தையல் மிஷின்

11 January 2024
0
0
0

இவான் கூம்ஸ் அங்கு மனிதனைத் தூங்காது விழிக்க வைத்திருக்க ஒருவித சந்தடியும் கிடையாது. இருந்தாலும், அந்தச் சிறிய கட்டிலில் சுருண்டு முடங்கிக்கொண்டு, நெடுநேரமாக நிசப்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

56

47. தந்தை மகற்காற்றும் உதவி

11 January 2024
1
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து டான் ஜுவான் தன் மாளிகையில் விருந்து மண்டபத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று தரை வெடித்தது. நரக தூதர்கள் வந்து அவனை இழுத்துக் கொண்டு போய் விட்டார்கள்

57

48. தெய்வம் கொடுத்த வரம்

12 January 2024
1
0
0

பியோர்ண்ஸ்டர்ண் பியோர்ண்ஸன் – ஸ்வீடன்  இந்தக் கதையில் வருகிறவன் தான் அவனுடைய ஊரிலேயே ரொம்பவும் பெரிய பணக்காரன். தவிரவும் அந்த வட்டாரத்திலே அவனுக்குத்தான் ரொம்பவும் சொல் சக்தி உண்டு. அவன் பெயர் தார்ட்

58

49. தேசிய கீதம் (பகுதி 1)

12 January 2024
0
0
0

எல்.ஏ.ஜி. ஸ்டராங் – இங்கிலாந்து  லாரி நிறையத் துருப்புக்கள் கன வேகமாகச் சென்று சில விநாடிகள் கூடக் கழியவில் லை. அது இப்பொழுதுதான் நிகழ்ந்தது. வெடியின் அதிர்ச்சி பரீலியை அப்படியே கலங்க வைத்துவிட்டது.

59

49. தேசிய கீதம் (பகுதி 2)

12 January 2024
0
0
0

ஆம். அமெரிக்காவில் ஓர் பெருத்த வெற்றி. நியூயார்க்கில் இரண்டு ஆட்டம்; பிறகு அமெரிக்கா முழுவதிலும் ஓர் நீண்ட வெற்றி யாத்திரை; முடிவில் ஹாலிவுட்டில் ஒரு பிலிம்; சமாதானம் ஏற்பட்ட இரண்டொரு மாதங்களுக்கப்புற

60

49. தேசிய கீதம் (பகுதி 3)

12 January 2024
0
0
0

இந்தச் சம்பவம் பரீலியின் கோபத்தை அதிகரித்தது; ஆனால் பொதுப்படையாக்கியது. இதுவரை தன் தேசவாசிகளான புரட்சிக்காரர் மீது கோபங்கொண்டிருந்தான். இப்பொழுதோ இந்த இடத்தின் பேரிலேயே கோபம். அவன் நெஞ்சில் ஆழமாகப் பய

61

50. துன்பத்திற்கு மாற்று

12 January 2024
1
0
0

ஸீனர் லூயிஜி பிரான்டல்லோ – இத்தாலி  நமது வாழ்க்கையை, முக்கியமாக அதில் காணும் துன்பங்களை, வான வெளியிலே தேஜோமயமாகச் சுழன்று செல்லும் நட்சத்திர மண்டலங்களுடன் ஒப்பிட்டுப்பாரும், அப்பொழுது அது துச்சமாகத்

62

51. துறவி

12 January 2024
0
0
0

ராபர்ட் நியூமான் – ஜெர்மனி  "நான் முதல் முதலில் ஐரோப்பாவிலிருந்து இந்தக் கீழப் பிரதேசங்களுக்கு வந்தபொழுது அது நடந்தது" என்று அவன் ஆரம்பித்தான். அவன் எங்கள் கப்பலின் காப்டன்; பெயர் வான்டர்லான். ஜாதியி

63

52. உயிர் ஆசை (பகுதி 1)

13 January 2024
1
0
0

ஜாக் லண்டன் – அமெரிக்கா  அவர்கள் இருவரும் நொண்டி, நொண்டி ஆற்றங்கரை வழியாகத் தள்ளாடி நடந்தார்கள். கத்தி போல ஊசியாக, தெத்துக்குத்தாகக் கிடந்த பருக்கைக் கற்கள் காலை வெட்டின. அவர்களிருவரும் சோர்ந்து விட்

64

52. உயிர் ஆசை (பகுதி 2)

13 January 2024
1
0
0

நாட்களும் ஓடின. காட்டு ஜீவராசிகள் ஓடியாடித் திரியும் பள்ளத்தாக்குகளை அடைந்தான். மான் கூட்டம் ஒன்று. இருபது இருக்கும். துப்பாக்கி லெக்குக்கு ரொம்பவும் அருகில் துள்ளி ஓடின. அவற்றை விரட்டிக் கொண்டே ஓடினா

65

52. உயிர் ஆசை (பகுதி 3)

13 January 2024
1
0
0

பாறை மீது படுத்துக் கிடந்தவன் சுயப் பிரக்ஞையுடன் விழித்துக் கொண்டான். சூரியன் காய்ந்து கொண்டிருந்தது. காட்டு மான்குட்டிகளின் சப்தமும் தூரத்தில் கேட்டது. சித்தத்தின் அடிவானத்தில் மழையும் காற்றும் பனியு

66

53. வீடு திரும்பல்

13 January 2024
1
0
0

பீட்டர் எக் – நார்வே  மாலுமி பெடர் ஸோல்பர்க்குடைய மனைவி வசித்த குடிசை, ஜனங்கள் பொதுவாக 'லூக்கள் தெரு' என்று சொல்லுவார்களே, அதற்கெதிரில் இருக்கிறது. குடிசையின் ஜன்னல் நன்றாகத் திறந்திருந்தது. அப்பொழுத

67

54. ஏ படகுக்காரா!

13 January 2024
1
0
0

மிக்கெய்ல் ஷோலொகோவ்  அந்த காஸக் கிராமத்தைச் சூழ்ந்து வளர்ந்து நின்ற சாம்பல் பூத்த பசிய நிறம் படைத்த செடிச் செறிவின்மீது சூரியவொளி தெம்பாக விழவில் லை. அருகே ஒரு பரிசல் துறை இருந்தது. அங்கே படகேறி டான்

68

55. யாத்திரை

13 January 2024
1
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  நான் ஹாமர்ஸ்மித் பஸ்ஸின் மேல்தட்டிலிருந்து பார்க்கும் பொழுது, அவர்கள் ஆல்பர்ட் ஹால் மெமோரியல் எதிரில் இருந்த ஒரு வீட்டு வாசல்படியில் உட்கார்ந்திருந்தனர். அன்று வெகு உஷ்ணம். வாடகை

69

56. எமனை ஏமாற்ற...

13 January 2024
1
0
0

மொங்காக்கு ஷோனின் என்ற மகடனான புத்த பிக்ஷு தான் எழுதியுள்ள கியோ-ஜியோ-ஷிந்ஷோ என்ற கிரந்தத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: "ஜனங்கள் வழிபடும் தெய்வங்களில் பல துர்தேவதைகளாகும். அவலோகிதன், தர்மம், பிக்ஷுக்கள

70

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்

13 January 2024
1
0
0

தாமஸ் வுல்ப் – அமெரிக்கா  ஈவிரக்கமற்றுக் கொதிக்கும் அந்த வருஷம் ஆகஸ்டில் யுத்தம் நின்றது. யுத்த தேவதையின் பவனியின்போது நான்கு கணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஒன்று லாங்லிவியல்; விமான மைதானத்தில் உள்ள குத

71

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்(பகுதி 2)

13 January 2024
1
0
0

தயங்கித் தயங்கி மறியும் உடலொட்டிய இந்த வேட்கை, தங்கள் ஜோலியைச் செய்து இவர்கள் நடாத்தும் வாழ்வினிடையிலும் வெளிக்கு அகோரக் கேலிக் கூத்தாகத் தோன்றினாலும், மேஜைக்கு மேஜை போஷகர் தேடி நடக்கும்போது சர்வ ஜாக்

72

58. தர்ம தேவதையின் துரும்பு

13 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர்  குரலிலே அதிகார தோரணையும் அதனுடன் பயமும் கலந்திருந்தது. கடுங்குளிரிலே, இருட்டின் திரைக்குள்ளே, ஈட்டிபோலப் பாய்ந்தது அக்குரல். 'நீ யார்? முதலில் அதைச் சொல்' என்று பதில் கேள்வி பிறந்தது, தி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்