shabd-logo

34. பொய்

9 January 2024

1 பார்த்தது 1

லியேனீட் ஆன்ட்ரீவ் – ருஷியா

 "நீ சொல்வது பொய், அது உனக்குத் தெரியும்!" "அதற்கேன் இப்படிக் கத்தவேண்டும்? பக்கத்திலிருக்கிறவர்களுக்கும் தெரிய வேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது." இப்பொழுதும் பொய் சொன்னாள். உண்மையில் நான் கூச்சல் போடவில்லை. மெதுவாகத்தான் சொன்னேன். அவளதுகைகள் என் கைக்குள்ளிருந்தன. ஆனால் அந்தப் 'பொய்' என்ற வார்த்தை நாக சர்ப்பத்தின் சீறல் மாதிரி என் உதட்டை விட்டுப் புறப்பட்டது. "நான் உன்னைக் காதலிக்கிறேன். நீ என்னை நம்பத்தான் வேண்டும். இப்பொழுதாவது..." என்று எனக்கு ஒரு முத்தம் கொடுத்தாள். நான் அவளை மார்புறத் தழுவுவதற்காகக் கைகளை எடுக்குமுன் சென்று விட்டாள். நாங்கள் நின்று கொண்டிருந்த இடம் பாதி இருள். நான் அவள் பின்னாக, விருந்தினர்கள் கூடியிருந்த அறைக்குள் சென்றேன். விருந்து முடிவாகி எல்லோரும் புறப்பட வேண்டிய நேரம். இந்த விருந்து இங்கு நடக்கிறதென்று எனக்கெப்படித் தெரியும்? "நீயும் அங்கு வரலாம்" என்றாள். அங்கு நடந்த நர்த்தனத்தைச் சென்று பார்த்துக் கொண்டிருந்தேன். என்னிடம் யாரும் நெருங்கவில்லை. என்னிடம் யாரும் பேசவில்லை. அங்கிருந்தவர்களுக்கு என்னைத் தெரியாது. நான் வாத்தியக்காரர்கள் பக்கத்திலிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்தேன். எனக்கு நேராக அந்தப் பித்தளைக் குழல்காரன் உட்கார்ந்துகொண்டு வாசித்தான். அவனது குழல் ஒவ்வொரு நிமிஷமும் "ஹோ", "ஹோ", "ஹோ" என்று என் காதில் சப்த அலைகளால் இடித்துக் கொண்டே இருந்தது. சிற்சில சமயம் என் பக்கத்தில் சுகந்த வாசனை தவழ்ந்தது. அருகில் அவள்தான். மற்றவர்கள் அறியாது என்னிடம் வருவதற்கு என்ன சாமர்த்தியம் செய்தாளோ! ஒரு நிமிஷம், ஒரு வினாடி, அவளது கரங்கள் எனது உடலைத் தழுவும், அவளது தோள் எனது தோளில் சற்று அழுத்தும், ஒரு வினாடி குனிந்து எனது கண்களால் வெள்ளுடையிலிருந்து எழும் வெண் மையான மாசு மருவற்ற கழுத்தை நோக்குவேன்; சற்று நிமிர்ந்து அவளது முகத்தை - வெண் மையான, மாசுமருவற்ற, சத்தியத்திற்கு இருப்பிடம் போன்ற முகத்தை - நோக்குவேன். அவள் முகம், கல்லறைகளின் மீது செதுக்கப்பட்டிருக்குமே, அந்தத் தெய்வப் பெண்கள், அவர்களுடைய முகத்தை என் நினைவிற்குக் கொண்டு வந்தது. அவள் கண்களில் நோக்கினேன். அவள் கருவிழிகள் நான் பார்க்கும் பொழுதெல்லாம், இன்னும் அதிகக் கருமையாக, எனது புலனுக்கு, அர்த்தத்திற்கு, எட்டாதபடி நோக்கின. ஒருவேளை, நான் சிறிது போதுதான் அவற்றுள் பார்த்திருக்கலாம் போலும்! ஆதலால்தான் எனது ஹிருதயம் அதில் சிறிதாவது தனது ஆசையைப் பதிய வையாது போயிருக்கலாம். ஆனால் எல் லையற்ற அன்பு, உணர்ச்சி என்பவற்றின் அர்த்தத்தை, அவற்றின் சக்தியை, அவற்றின் வேகத்தை, அவற்றின் பயங்கர உண் மையை அப்பொழுதுதான் அறிந்தேன். அவள் கண்களினின்றும் பாய்ந்த ஒளி ரேகையிலே எனது உயிரானது அவளிடம் மெதுவாக இழுக்கப்படுவதாக எனக்குப் பட்டது. அதிலே, அந்த சுகத்திலே, ஒரு பயம், ஒரு வலி; என்னையே எனக்கு அந்நியனாக்கியது; என்னைத் தமியனாக்கியது; என்னை உயிரற்ற சவம் போலாக்கிவிட்டது. பிறகு என் னை விட்டுத் தனியாகப் போய்விடுகிறாள். அதுவும் என்னுடைய உயிருடன், அந்த நெட்டையான அந்நியனுடன் நர்த்தனம் செய்ய. அவனுடைய நடையுடை பாவனைகளைக் கவனித்தேன். அவனுடைய பூட்ஸின் வளைவுகளை, அவனுடைய நாட்டியத் திறமையை, தொங்கி ஆட்டத்தில் அலையும் அவனது சிகையை, கவனிக்கக் கவனிக்க, என்னை எனது உணர்ச்சிகள் சுவரோடு சுவராக ஒண்ட வைத்து, அந்தச் சுவரைப் போல, என் னையும் உயிரற்றவனாக்கி விட்டது. நெடு நேரமாகிவிட்டது. விளக்குகளை ஒவ்வொன்றாக அணைக்கவாரம்பித்தனர். உடனே நான் அவளிடம் சென்று, "போவதற்கு நேரமாகவில் லையா? போகும் பொழுது நான் உன்னுடன் வருகிறேன்" என்றேன். அவள் ஆச்சரியமடைந்தவள் போல் புருவத்தைச் சற்று உயர்த்தினாள். "நான் அவருடன் தான் போகிறேன்," என்று அந்த அந்நியனைச் சுட்டிக் காண்பித்தாள். அவன் எங்களைக் கவனிக்கவில் லை. யாருமற்ற ஒரு தனியறைக்கு அழைத்துச் சென்று என் னை முத்தமிட்டாள். "நீ பொய் சொல்லுகிறாய்!" என்று மெதுவாகக் கூறினேன். "நாளைக்கு நாம் சந்திப்போம். நீ அவசியம் வரவேண்டும்" என்பதுதான் அவள் பதில். நான் வீட்டிற்கு வண்டியில் செல்லும்போது விடியற்காலமாகி விட்டது. சற்றுப் பச்சைப் பசேலென்ற வெளிச்சம் வீட்டுக் கூரைகளின் மேல் பரந்தது. எங்கு பார்த்தாலும் உறைந்த பனிக்கட்டி அந்தத் தெரு முழுவதிலும், என் னையும் அந்த ஸ்லெட்ஜ் (ருஷியாவில் மாரிக் காலத்தில் ஜலம் உறைந்து விடுவதால் சக்கரமற்ற வண்டியை உபயோகப்படுத்துவார்கள். அதற்கு ஸ்லெட்ஜ் என்று பெயர்) வண்டிக்காரனையும் தவிர வேறு ஒரு மனிதப் பிராணியும் கிடையாது. அவன் முகம்வரை மூடிக்கொண்டு வண்டியின் முன்பு குனிந்து உட்கார்ந்திருந்தான். நானும் அவனுக்குப் பின் நன்றாகப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். வண்டிக்காரன் மனத்தில் என்ன நினைவுகள் ஓடினவோ! ஆனால், என் மனத்தில்! இந்தத் தெரு வரிசையிலுள்ள வீடுகளுக்குள் எத்தனையாயிரம் மக்கள் கனவுகளுடன், எண்ணங்களுடன் உறங்கிக் கொண்டிருப்பார்கள்; அவளை நினைத்தேன். அவள் எப்படி பொய் சொன்னாள் என்பதையும் மரணத்தைப் பற்றியும் நினைத்தேன். ஆமாம் அந்தச் சுவர்கள், மங்கிய ஒளியில் ரெட்டை நெடுகலாக நிற்கும் சுவர்கள், அவைகள் என் மரணத்தைப் பற்றி ஒரு முடிவிற்கு வந்து விட்டன போலும். அதனால் தான் அப்படி நிற்கின்றன. அந்த ஸ்லெட்ஜ் வண்டிக்காரனின் நினைவுகள் என்னவென்று எனக்குத் தெரியுமா? பிறகு அந்தச் சுவரின் கனவுகளை நான் எப்படியறிய முடியும்? ஆமாம். அவர்களுக்கு எனது எண்ணங்களை, எனது ஓடிக் குவியும் நினைவுகளைப் பற்றி என்ன தெரியும்? வண்டியும் இந்த முடிவற்று நீளும் தெருக்களின் வழியாகச் சென்றது. உதயமும் கூரையின் மீது வெள் ளை வெளிச்சத்துடன் பரந்தது; பார்த்தவிடமெல்லாம் அசைவற்ற வெண் மை; கவிந்து தவழும் மஞ்சு என் னைச் சுற்றியது. எனது காதினுள், "ஹோ!" "ஹோ!" வென நகைத்தது.

 2

அவள் சொன்னது பொய். அவள் வரவேயில் லை. வீணாக அவளுக்காக காத்திருந்தேன். எங்கும் ஒன்று போல இருள் ஒளியற்ற வானத்தினின்றும் உலகைக் கவ்வியது. எப்பொழுது சாயங்காலம், அந்தி மாலையாகி இரவாக மாறியது என்ற உணர்ச்சியே அற்று இருந்தேன். எனக்கு அவ்வளவும் ஒரே இரவாகத்தான் இருந்தது. முன்னும் பின்னுமாக அளவு எடுத்து வைப்பது போல் நடந்து கொண்டே இருந்தேன். நம்பிக்கையும் நடையைப் போல் முன்னும் பின்னுமாகச் சென்றுகொண்டேயிருந்தது. அந்தப் பெரிய வீட்டண் டையில் நான் நெருங்கவில் லை. அதில்தான் அவள் வசிக்கிறாள். அந்த இரும்புக் கேட்டுக்குப் பின் உள்ளேயிருக்கும் மஞ்சள் வெளிச்சத்தைக் காண்பிக்கிறதே அந்தக் கண்ணாடிக்கதவு, அதன் பக்கம் செல்லவில் லை. அந்தத் தெருவின் எதிர்ப் பாரிசத்தில், முன்னும் பின்னுமாக நடந்து கொண்டேயிருந்தேன். வீட்டை நோக்கி முன் செல்லும்பொழுது, அந்தக் கண்ணாடிக் கதவில் வைத்த கண் ணை மாற்றவில் லை. திரும்பி வரும்பொழுது நின்ற பின்பக்கம் பார்த்துக் கொண்டே சென்றேன். உறைபனி ஊசி முனைபோல் முகத்தில் குத்தியது. அந்த உறைந்த பனி நீர் உள்ளத்திலேயே சென்று குத்தியது. துக்கமும் கோபமும் ஹிருதயத்தைச் சல்லடைக் கண்களாகத் துளைத்தன. வீணாகக் காத்திருந்தேன். என்ன பயன்? வாடைக்காற்று, ஒளியுள்ள வடக்கிலிருந்து இருள்கவ்விய தெற்கு நோக்கி அடித்தது; பனி உறைந்த கூரைகளில் 'உஸ்' என்ற சப்தத்துடன் விளையாடியது. உறைந்த பஞ்சு போன்ற பனிநீர் முகத்தில் குத்தியது. அர்த்தமற்ற விளக்குகளைத் தழுவியது. தீபம் குளிரில் வளைந்து அசைந்தாடியது. இரவில் மட்டும் உயிர் பெறும் அந்தத் தீபத்தைக் காண எனக்கு வேதனையாக இருந்தது. நான் சென்றவுடன் இந்தத் தெருவில் உயிர் முடிவடைந்து விடும். வெறும் பாழ் வெளியில்தான் இந்தப் பனிப் பஞ்சு விழும் என்று நினைத்தேன்; ஆனால் அந்தத் தீபம் மட்டிலும் குளிரில் வளைந்து நடுங்கும். அவளுக்காகக் காத்திருந்தேன். அவள் வரவில் லை. அந்தத் துணையற்ற தீபமும் நானும் ஒன்றுதான் என்று எனக்குப் பட்டது. ஆனால், எனது உள்ளமாகிய தீபம் ஒன்றுமற்ற பாழ் அன்று. நான் அளவு போட்டு நடக்கும் அந்த ஆள் நடமாட்டமற்ற பாழில் சமயா சமயம் மனிதரும் காணப்பட்டனர். நான் பாராத சமயத்தில் எனக்குப் பின் இருண்ட சாயை போல் அவர்கள் முளைத்தார்கள். அருவங்கள் போல் மூலையைத் திரும்பி மறைந்தார்கள். மறுபடியும் அந்த மூலையிலிருந்து வந்தார்கள். என் பக்கத்தில் சென்றார்கள். பிறகு படிப்படியாகத் தூரத்திலே விழும் பனிக்கட்டியில் மறைந்தார்கள். அடையாளம் தெரிய முடியாதபடி மூடிச் சென்றதினால் அவர்கள் எல்லோரும் என்னைப் போல் முன்னும் பின்னுமாக நடந்து, என் னைப் போல் காத்து, என்னைப் போல் குளிரில் நடுநடுங்கி என்னைப் போலவே விடையற்ற புதிர் போன்ற எண்ணங்களை நினைத்திருப்பது போல் தோன்றியது. அவளுக்காகக் காத்திருந்தேன். அவள் வரவில் லை. துக்கத்தினால், அதன் உளைச்சலினால், வலியினால், ஏன் நான் அழவில்லை, கூச்சல் போடவில் லை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் ஏன் சிரித்தேன் என்று, ஏன் சந்தோஷமாக இருந்தேன் என்று, ஏன் என் கை விரல்களை மிருகத்தின் நகங்களைப் போல் வளைத்து, கையில் ஒரு சர்ப்பத்தைப் பிடித்திருப்பது போல் மடக்கினேனென்று புரியவில்லை. அந்தப் பொய்... அது கையை விட்டு நழுவி எனது ஹிருதயத்தில் கடித்தது. அந்த விஷத்தில் எனது தலை சுற்றியது. எல்லாம் பொய். வருங்காலத்திற்கும் இப்பொழுதிற்கும் இடையேயிருக்கும் எல் லைக்கோடு, இப்பொழுதிற்கும் சென்ற காலத்திற்கும் இடையில் இருக்கும் எல் லைக்கோடு... எல்லாம் மறைந்தன. நான் பிறப்பதற்கு முன், நான் பிறந்த பின், என்ற கால எல் லை மறைந்தது. நான் எப்பொழுதும் இருந்திருக்க வேண்டும்; அல்லது எப்பொழுதும் இல்லாமலிருந்திருக்க வேண்டும் என்று பட்டது. நான் இங்கு உயிருடனிருக்கு முன்னும், உயிருடன் வந்த பின்னும், எப்பொழுதும் அவள் மீது ஆட்சி கொண்டிருக்க வேண்டும். அவளுக்கு ஒரு பெயர், ஒரு உடல், அவளுடைய ஜீவியத்திற்கு ஒரு ஆரம்பம், ஒரு முடிவு - எல்லாம் அதிசயமாகத்தான் இருக்கிறது! அவளுக்குப் பெயரே கிடையாது. அவள் பெயர் எப்பொழுதும் பொய் சொல்லுகிறவள், எப்பொழுதும் காத்திருக்க வைப்பவள்; ஆனால் ஒரு காலத்திலும் வராதவள் என்பதே. எனக்குக் காரணம் தெரியாது. ஆனால் நான் சிரித்தேன். என் ஹிருதயத்தில் கூர்மையான ஊசிகள் குத்தின. என் காதினுள் நான் காணாமல் யார் யாரோ "ஹோ ஹோ ஹோ!" என்று நகைத்தார்கள். கண்களை விரியத் திறந்து, தீபம் பிரகாசித்த மாளிகை ஜன்னல்களைப் பார்த்தேன். அவை, சாந்தமாகக் கண்சிமிட்டும் நீலச் சிவப்பு ஒளி வார்த்தைகளில், "அவள் உன் னை ஏமாற்றி விட்டாள்! நீ காத்துக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்திலே அவள் ஒய்யாரமாக, நளினமாக, உன் னை வஞ்சித்து, உன் னை வெறுக்கும் அந்த ஒய்யார நெட்டையனின் காதல் மொழிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள். கட்டுப்பாட்டை மீறி உள்ளே சென்று அவளைக் கொல்வதினால் நீ ஒரு நன் மையைச் செய்யலாம்; ஏனென்றால் நீ பொய்யைக் கொன்று விடுவாய்" என்று கூறியது. கையிலிருந்த கத்தியை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். "சரி, அவளைக் கொன்று விடுகிறேன்!" என்று சிரித்தேன். அந்த ஜன்னல்கள், என் னைப் பரிதாபகரமாகப் பார்த்து "உன்னால் அவளைக் கொல்ல முடியாது; உன் கையிலிருக்கும் கத்தியும் அவள் கொடுத்த முத்தத்தைப் போல் ஒரு பொய்" என்று கூறின. என்னைப் போல் காத்திருந்த சாயைகள் மறைந்து வெகு நேரமாயிற்று. நிர்க்கதியாக நாவைப் போல் சுழலும் தீபவொளிகள், குளிராலும் ஏக்கத்தாலும் நடுங்கின. மாதா கோவில் கடிகாரம் மணியடிக்க ஆரம்பித்தது. அதன் ஹிருதயமற்ற உலோகத் தொனியும், கீழே விழுந்து மறையும் உறைபனி மாதிரி, நடுங்கி ஏக்கமிட்டு அழுது, வான வெளியிலே மறைந்தது. நானும் மணியை எண்ண ஆரம்பித்தேன். கூக்குரலிட்டுச் சிரித்தேன். அது 15 மணியடித்தது! மணிக் கூண்டும் கடிகாரத்தைப் போல வயது சென்ற கிழம்; கடிகாரம் மணியைச் சரியாகக் காண்பித்தாலும், கோயில் மணி அடிப்பவன் ஏறி நிறுத்தும்படி தாறு மாறாக அடிக்க ஆரம்பித்து விடும். இந்தக் குளிர்ந்த இரவைத் தழுவி, துயரம் நிறைந்து ஒடுங்கும் அந்த மணியொலி யாருக்காகப் பொய் சொல்ல வேண்டும்? இந்த பொய்யினால் என்ன பிரயோஜனம்? அதைக் கேட்கப் பரிதாபமாக இருந்தது. அந்தப் பொய் நிறைந்த மணிச் சப்தம் நின்றும் நிற்காமலும் இருக்கும் பொழுது, மாளிகையின் கதவைத் திறந்து கொண்டு, அந்த நெட்டையன் படிகளில் இறங்கி வந்தான். எனக்கு அவன் முதுகுத்தான் தெரிந்தது. ஆனால் நான் நேற்றுப் பார்த்த அந்தப் பயல்தான் என்று தெரிந்து கொண்டேன். அந்தப் பெருமையும், மற்றவரை மதிக்காத நடையும் நேற்றுப் பார்க்கவில் லையா? அதே நடைதான் இன்றும். ஆனால் இன்று அவன் நடையிலே ஒரு நம்பிக்கையின் பாவனை, எப்பொழுதையும் விட, முக்கியமாக சாயங்காலம் இருந்ததை விட, அதிகமாக இருந்தது. பெண்ணின் பொய் முத்தம் பெற்ற ஒருவனின் நடைபோல் இருந்தது. 

3

நான் அவளைப் பயமுறுத்தினேன், கெஞ்சினேன், பற்களை நெறநெறவென்று கடித்துக் கொண்டு, "உண் மையைச் சொல்" என்றேன். அவள் முகம் அந்த உறைந்த பனி போல் இருந்தது. புருவத்தின் கீழ், சலித்த கண்கள், அர்த்தம் புரியாத, ஆழம் அறியக் கூடாத கண்கள், சற்று ஆச்சரியத்தால் நோக்கின. ஆர்வமற்ற, அர்த்தம் புரியாத குரலில், "நான் உங்களிடம் பொய் சொல்லவில்லை," என்று சொன்னாள். அவள் கூறுவது பொய் என்று என்னால் நிரூபிக்க முடியாதென்று அவளுக்குத் தெரியும். என்னுள்ளத்தில் குமுறிக் கொண்டிருக்கும் எண்ணக் கோட்டைகள் எல்லாம், அவள் கூறும் ஒரு வார்த்தையில், ஒரு பொய் வார்த்தையில் தகர்ந்துவிடும் என்று எனக்குத் தெரியும். அதனால் உண் மைபோல், அவள் அதரத்திலிருந்து, அந்தப் பாழ் இருட்டான உள்ளத்தின் ஆழத்திலிருந்து வந்தன. "உங்களைக் காதலிக்கிறேன் - நான் தங்களுடையவளல்லாவா?" நாங்கள் இருந்த இடம் ஊருக்குச் சற்று வெளியே தள்ளி இருந்தது. ஜன்னல் வழியாகப் பார்த்தால் உறைந்த பனி; பரந்த பாழ் வெளி; எங்கு பார்த்தாலும் இருள்; உறைந்த பனியின் மீது, அதைச் சுற்றித் தொடும் வான வளையத்தின் மீது இருள். அந்த இருளிலே, பனி உறைந்த பாழ் வெளி, சவத்தின் முகம் போல், வெளிறிக் கிடந்தது. நாங்கள் இருந்த அறையினுள் ஒரே ஒரு மெழுகுவத்தியின் வெளிச்சம் அறைக்குள்ளே ஏகமான உஷ்ணம். மெழுகு திரி அசைந்து அசைந்து எரிவது, உருகித் துடித்து உயிரை விடுவது போல் இருந்தது. "உண் மை என்ன துக்கத்தைக் கொடுத்தாலும், எனக்கு அது அவசியம் தெரிய வேண்டும். தெரிந்தால் ஒரு வேளை நான் இறந்து போகலாம். மரணம் இதை விட எவ்வளவோ மேலானது. உனது முத்தத்திலே, உனது ஆலிங்கனத்திலே பொய்யை ஸ்பரிசிக்கிறேன். உனது கண்களின் பிரகாசத்திலே அதைப் பார்க்கிறேன். உண் மையைச் சொல்லிவிடு. இனி உன் னைத் தொந்தரவு செய்யாமல் உன் னை விட்டே போய் விடுகிறேன்" என்றேன். அதற்கு அவள் மௌனமாக இருந்தாள். அவளது முகத்திலுள்ள பார்வை உறைந்த பனிக்கட்டி மாதிரி உள்ளத்தில் பாய்ந்தது. எனது ஆவியையே துருவுவது போல் இருந்தது. "சொல், இல்லாவிட்டால் உன் னைக் கொன்று விடுவேன்!" என்று இரைந்தேன். "அப்படியே செய்து விடுங்கள்; சில சமயங்களில் இந்த வாழ்க்கையே எவ்வளவு சோர்வாக இருக்கிறது! ஆனால் உண் மையைப் பயமுறுத்திப் பறிக்க முடியுமா?" என்று மிகவும் சாந்தமாகக் கேட்டாள். பிறகு அவள் காலடியில் வீழ்ந்தேன். அவள் கரங்களைப் பற்றிக் கொண்டு கெஞ்சினேன், அழுதேன், இரக்கப்பட்டு உண் மையைக் கூறும்படி அழுதேன். அவள் கரங்களால் எனது தலையை மார்புடன் அணைத்தாள். "ஐயோ! ஐயோ! பாவம்!" என்றாள். "என் மீது இரங்கு; எனக்குக் கட்டாயமாக உண் மை தெரிய வேண்டும்" என்றேன். அந்த நெற்றியின் பின்பக்கம், மண் டையோட்டின் பின்னால் இருக்கும் உண் மை. உண் மையை உடைத்துப் பார்க்க வேண்டுமென்ற வெறி பிடித்தது. அவளது மார்பை, மாசுமருவற்ற கொங்கைகளைக் கிழித்து உள்ளிருக்கும் ஹிருதயத்தை எனது நகங்களால் பிய்த்து எடுக்க ஆசைப்பட்டேன். சிகரம் போன்ற தீபவொளி மஞ்சளாக எரிந்தது. சுவர்ப்பக்கம் எல்லாம் இருண்டது. அது தூரமாக விலகிச் செல்வது போல் தெரிந்தது. துக்ககரமாக, தனிமையாக, பயங்கரமாக இருந்தது. "ஐயோ பாவம்! ஐயோ! பாவம்!" என்றாள். அந்த மஞ்சள் தீபம் நடுங்கியது, உள்ளடங்கியது, நீல நிறமாயிற்று. பிறகு, அணைந்து போயிற்று. இருள் எங்களை மூடியது. அவள் முகத்தைப் பார்க்க முடியவில் லை; அவள் கண்களைப் பார்க்க முடியவில் லை. அவள் கரங்கள் எனது தலையைத் தழுவின. கண்களை மூடினேன். எண்ணமும் நின்றது. வாழ்க்கையும் நின்றது. அவள் கரங்களின் ஸ்பரிசம் தான் ஜீவித்தது. அது உண் மை போல் தோன்றியது. அந்த இருளில் மெதுவாகப் பேசினாள்; குரலில் பயம் தொனித்தது. "என்னைத் தழுவிக் கொள்ளுங்கள். எனக்குப் பயமாக இருக்கிறது!" மறுபடியும் மௌனம். மறுபடியும் மெதுவாகக் கூறினாள். குரலில் பயம் தொனித்தது. "நீங்கள் உண் மையைக் கேட்கிறீர்கள், அது எனக்குத் தெரியுமென்று நினைக்கிறீர்கள். ஐயோ! எனக்குத் தெரிந்திருக்கக்கூடாதா என்று இருக்கிறதே! என் னை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள். ஐயோ பயமாக இருக்கிறதே!" நான் கண்களைத் திறந்தேன். இருள், ஜன்னலருகிலிருந்த வெளிறிய இருள், அறையின் மூலைகளில் திரண்டு ஒளிந்தது. ஆனால், அந்த ஜன்னலின் வழியாக, ஏதோ ஒன்று பூதாகரமாகச் சவம்போல் வெளிறிப்போய் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. இறந்தவனுடைய கருவிழியற்ற வெள் ளைக் கண்கள் எங்களைத் தேடுவது மாதிரி, எங்கள் இருவரையும் அதன் உறைபனி போன்ற பார்வையில் கட்டிப் பிடிப்பது மாதிரி இருந்தது. நாங்கள் இருவரும் இறுகத் தழுவிக் கொண்டோ ம். "ஐயோ பயமாக இருக்கிறதே!" என்று மெதுவாகச் சொன்னாள்.

 4

நான் அவளைக் கொன்றேன். நானே அவளைக் கொன்றேன். அவள் உயிரற்று ஜன்னல் பக்கத்தில் கீழே கிடக்கும்பொழுது, அந்த ஜன்னலின் வெளியே, உயிரற்ற வெள்ளைப் பாழ் வெளி. அவள் சவத்தின் மீது காலை வைத்து மிதித்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தேன். அது வெறியனின் நகைப்பல்ல. இல்லை, இல்லை, நான் நகைக்கும் பொழுது எனது நெஞ்சு பைத்தியக்காரனுடையது மாதிரி, படபடவென்று அடித்துக் கொள்ளவில் லை. எனது உள்ளத்திலே குதூகலம், சாந்தம். என் ஹிருதயத்தைக் கடித்துத் தின்ற புழு விழுந்துவிட்டது. குனிந்து அவளது உயிரற்ற கண்களை நோக்கினேன். விரிந்து, வெளிச்சத்திற்காகத் தேடிப் பேராசைப்படுவது போல், திறந்தபடியிருந்தன. பீங்கான் பொம்மையின் கண்கள் மாதிரி இருந்தன. அவற்றை என் விரல்களால் தொட்டேன்; என் இஷ்டப்படி மூடினேன், திறந்தேன். எனக்கு அவற்றைப் பற்றி பயமில் லை. அந்தக் கருவிழிகளில், அர்த்தம் புரியாத கருவிழிகளில், எனது இரத்தத்தை உறிஞ்சிய பொய் என்ற பேய் ஜீவித்திருக்கவில் லை. அவர்கள் என் னைக் கைது செய்தபொழுது நான் சிரித்தேன். அவர்களுக்கு அது பயங்கரமாகவும், காட்டுத் தனமாகவும் இருந்தது. சிலர் என் னைப் பார்க்காமல் வெறுப்புற்று விலகிக் கொண்டார்கள். சிலர் என்னைப் பயமுறுத்திக் கொண்டு, திட்டிக்கொண்டு, நெருங்கினார்கள். குதூகலத்துடன் நோக்கும் என் கண்களைப் பார்த்தவுடன் அப்படியே மரம் போல் நின்றார்கள். "பைத்தியம்!" என்றார்கள். அந்த வார்த்தை அவர்களுக்கு ஒரு சமாதானத்தையளித்தது போலும்! பிறகு காதலித்தவளைக் கொன்று விட்டு எப்படிச் சிரித்துக்கொண்டிருக்க முடியும்? அவர்களில் ஒருவன் கூறிய வார்த்தைகள் தான் எனது கண்களிலிருந்து களிப்பைப் போக்கியது. "ஐயோ பாவம்!" என்றான். அவன் குரலில் கோபமே இல் லை அவன் இரட்டை நாடி சரீரமுடையவன்; களிப்புத் தவழும் முகம். "ஐயோ பாவம்!" "என் னை அப்படிச் சொல்லாதே!" என்று கத்தினேன். ஏனென்று தெரியவில் லை! அவன் மீது பாய்ந்தேன். அவனைக் கொல்லவேண்டுமென்று அசைப்படவில் லை. அவனைத் தொடக்கூடப் பிரியமில்லை. பயந்து நின்றிருந்தவர்கள், பைத்தியம் பிடித்த கொலைக்காரப் பாவி என்று எண்ணி இன்னும் அதிகமாகப் பயந்து நடுங்கினார்கள். அவர்களைப் பார்ப்பதற்கு எனக்கு வேடிக்கையாக இருந்தது. அந்தப் பிணம் இருந்த அறையைவிட்டு என் னை அவர்கள் கூட்டிக்கொண்டு போகையில், அந்தத் தடித்த மனிதனைப் பார்த்துக் கொண்டே, "நான் சந்தோஷமாகவே இருக்கிறேன்; சந்தோஷமாகவே இருக்கிறேன்" என்று திருப்பித் திருப்பிச் சத்தம் போட்டுச் சொன்னேன். அதுதான் நிஜம். நான் சிறு பிள் ளையாக இருக்கும்பொழுது ஒரு சர்க்கஸ் கூண்டில் புலி ஒன் றைப் பார்த்தேன். அது எனது நினைவை விட்டு அகலவே இல் லை. அது மற்ற மிருகங்களைப் போல், கண்ணை மூடித் தூங்கிக் கொண்டோ , அல்லது பார்க்க வருபவர்களைப் பார்த்துக் கொண்டோ இருக்கவில்லை. கூண்டில் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்குக் கோடு கிழித்த மாதிரி, அது ஒரே பாதையில் நடந்துவந்து, கணக்குப் பார்த்ததுபோல், குறித்த ஓரிடத்தில் திரும்பி, கூண்டுக் கம்பியைத் தனது விலாவினால் உராய்ந்து கொண்டே நடந்தது. அதன் கூர்மையான பேய்ப்பசி தேங்கும் தலை குனிந்து, கண்கள் நேராக நோக்கியபடி இருந்தன. நாள் பூராவாகவும், இரைச்சல் போடும் கூட்டம் அதன் பக்கமாகப் போய்க் கொண்டே இருந்தது. ஆனால், அது கவனியாமல் நடந்து கொண்டேயிருந்தது. ஒரு தடவையாவது திரும்பிப் பார்க்கவில் லை. பார்க்க வந்தவர்கள் சிலர் சிரித்தார்கள். ஆனால் கூட்டத்தில் முக்கால்வாசிப் பேர் அதைப் பார்த்துச் சிரிக்கவில் லை. துக்கப்பட்டார்கள். நம்பிக்கையற்ற பிரயோஜனமற்ற, நினைவு குவிந்த அதன் நடையைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுச் சென்றார்கள். போகும் பொழுது மறுபடியும் திரும்பிப் பார்த்தார்கள். பெருமூச்சு விட்டார்கள். அவர்கள் சுதந்திரமாக இருந்தாலும் அதன் நிலைமைக்கும் அவர்கள் நிலைமைக்கும் ஒற்றுமை இருப்பதுபோலப் பெருமூச்சுவிட்டார்கள். நான் பெரியவனாக வளர்ந்த பிறகு, மனிதர்களும், புத்தகாசிரியர்களும், எல் லையற்ற காலத்தைப் பற்றி, நித்தியத்துவத்தைப் பற்றி, எனக்குச் சொன்னார்கள். அப்பொழுதுதான், அந்தப் புலியைப் பற்றிய நினைவு வந்தது. காலமற்ற காலத்தைப் பற்றியும், அதன் கஷ்டங்களைப் பற்றியும் எனக்குத் தெரிந்ததுபோல் இருந்தது. எனது கல் கூண்டில் நானும் அந்தப் புலி மாதிரியானேன். நடந்தேன். நினைத்தேன். ஒரே கோட்டில் நடந்தேன். கூண்டின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு நடந்தேன். ஒரே பாதை வழியாகத்தான் எனது எண்ணங்கள் சென்றன. அவைகளின் கனம், கடைசியில், தலைக்குப் பதிலாக நான் ஒரு உலகத்தையே சுமக்கிற மாதிரி அழுத்தியது. அது ஒரே வார்த்தை. எவ்வளவு பெரியது! எவ்வளவு பயங்கரமானது! "பொய்!" அதுதான் அந்த வார்த்தை. அது மறுபடியும் பாம்பு மாதிரிச் சீறிக்கொண்டு எனது ஆவியைப் பின்னியது. ஆனால் இப்பொழுது அது சிறிய பாம்பாக இராமல் கிருஷ்ண சர்ப்பம்போல் மாறியது. அது என் னைக் கடித்தது. அது தனது இரும்பு போன்ற உடல் சுருணையில் என் னை அமுக்கியது. வலி பொறுக்க மாட்டாமல் கூவியழுதேன். எனது நெஞ்சினுள் பாம்புகள் கூட்டம் கூட்டமாக நெளிந்தன; என்னால் அந்த ஒரு வார்த்தையைத்தான் கூற முடிந்தது. "பொய்!" நான் நடக்கும் பொழுதும், எண்ணும் பொழுதும், கருங்கல் தளவரிசை ஆழங்காண முடியாத பாதாளம் போல் தோன்றியது. எனது பாதம் தரையைத் தொடுவதாக உணர்ச்சியில் லை. மூடுபனிக்கு மஞ்சிற்கும் மேல் எங்கோ உயரப் போவது போல் தோன்றியது. எனது உள்ளம் 'உஸ்' ஸென்று குமுறியது. கீழிருந்த மேகப்படலம் மெதுவாக எதிரொலித்தது. ஆயிரம் வருஷங்களுக்கப்புறம் இருந்து வருவது போல் மெதுவாகக் காதில் வந்து தொனித்தது. சில சமயம் முடுபனி விலகியது. சப்தம் சிறிது குறைந்தது. ஆனால் கீழே, காற்று மரங்களுக்கிடையில் இரைந்து கொண்டிருப்பது எனக்குத் தெரியும். மெதுவாக அந்த வார்த்தைகள் காதுக்கெட்டின. "பொய்" இந்த அசட்டுத்தனமான மெல்லிய குரல் எனக்குக் கோபமூட்டியது. தரையைக் காலால் உதைத்துக் கொண்டு கத்தினேன். "பொய்யே கிடையாது - பொய்யைக் கொன்று விட்டேன்!" எனக்குத் தெரியும். அதற்காகவே தலையைத் திரும்பிக் கொண்டேன். அது பதில் சொல்லும் என்று எனக்குத் தெரியும். பதிலும் அடியற்ற பாதாளத்திலிருந்து வந்தது. "பொய்!" நீங்கள் இதற்குள் அறிந்து கொண்டிருப்பீர்கள். உண் மை என்னவென்றால், நான் ஒரு தவறு செய்து விட்டேன். பெண் ணைக் கொன்று, பொய்யை நித்திய வஸ்துவாக்கி விட்டேன். 'மன்றாடியும், தீயில் போட்டும், சித்திரவதை செய்தும், உண் மையை அறிகிறவரை, அவள் உள்ளத்திலிருந்து பிடுங்குகிறவரை, நீ எதையும் கொல்லாதே!' இப்படி நினைத்தவண்ணம் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு நடந்து கொண்டிருந்தேன். அவள் உண் மையையும், பொய்யையும் கொண்டு சென்ற இடம் பயங்கரமானது. அந்தகாரம் நிறைந்தது. நானும் இங்கேதான் போகிறேன். சாத்தானின் சிங்காதனத்தின் முன்பு அவளை எட்டிப்பிடித்து அவள் காலில் விழுந்து, "உண் மையைச் சொல்லு!" என்று அழுவேன். ஐயோ கடவுளே! இதுவும் ஒரு பொய்தானே! அங்கே... அங்கே அந்தகாரம், அங்கே யுகத்தின் பாழ்வெளி. அங்கே எல் லையற்ற அகண்டம்... அங்கே அவள் இல் லை. அவள் ஒரு இடத்திலும் இல் லை. ஆனால் பொய் இருக்கிறது. நித்திய வஸ்துவாக இருக்கிறது. காற்றின் ஒவ்வொரு அணுவிலும் அதை உணருகிறேன். நான் மூச்சை இழுக்கும் பொழுது எனது நெஞ்சில் 'உஸ்' ஸென்ற சப்தத்துடன் செல்லுகிறது. பிறகு நெஞ்சைக் கிழிக்கிறது - ஆமாம், கிழிக்கிறது. ஐயோ! என்ன பைத்தியக்காரத்தனம் - மனிதனாக இருந்து கொண்டு பிறகு சத்தியத்தைத் தேடுவது! என்ன கஷ்டம்! என்ன பைத்தியம் இது!

புதுமைப்பித்தன் மூலம் மேலும் புத்தகங்கள்

72
கட்டுரைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகள்
0.0
புதுமைப்பித்தன் மொத்தம் 108 சிறுகதைகள் எழுதியுள்ளார். அதில் அவர் காலத்தில் 48 மட்டும் பிரசுரமாயின. 1940-ல் புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. புதுமைப்பித்தன் 98 கதைகளை எழுதியுள்ளார். அவர் மணிக்கொடியில் எழுதிய 29 கதைகளைப் புதுமைப்பித்தன் கதைகள் என்ற பெயரில் நவயுகப் பிரசுராலயம் வெளியிட்டுள்ளது. ஆறுகதைகள், நாசகாரக் கும்பல், பக்த குசலோ என்ற அவரது பிற நூல்களையும் அதே நிறுவனம் வெளியிட்டுள்ளது. கலைமகள் பதிப்பகம் காஞ்சனை தொகுதியையும், ஸ்டார் பிரசுரம் ஆண்மை என்ற தொகுதியையும் வெளியிட்டன. ஐந்திணைப் பதிப்பகம் புதுமைப்பித்தனின் மொத்தச் சிறுகதைகளையும் வெளியிட்டது. அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் புதுமைப்பித்தனின் அனைத்துச் சிறுகதைகளையும் வெளியிட்டுள்ளது.
1

1. ஆஷாட பூதி

2 January 2024
0
0
0

மோலியர் (1622-1673) பதினேழாவது நூற்றாண்டில், பிரான்ஸில் நாடகக்காரன் என்றால், மதம் அவனைத் தள்ளிவைத்தது. பிரார்த்தனை - பிரசாதத்தைப் பெறுவது என்றால் விசேஷ சிபாரிசின் பேரில் நடக்க வேண்டிய காரியம். செத்தால

2

2. ஆட்டுக் குட்டிதான்

2 January 2024
0
0
0

ஜேம்ஸ்ஹானலி – இங்கிலாந்து  செக்கச் செவேலென்றிருக்கும் அந்த பஸ், ஏக இரைச்சலுடன் அந்த வளைவைத் திரும்பியது. சூழ்நிலை தாங்கிய அமைதியான வண்ணக் கலவைகளுக்குச் சவால் கொடுப்பது மாதிரி அந்தச் சிகப்பு கண்களை உற

3

3. அம்மா

2 January 2024
0
0
0

கே. பாயில்  பாதை நெடுகலாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், அதற்குச் சின்னக் கிளை ஒன்றும் இருந்தது. இருந்தாலும் மறுபக்கத்தில் ஓடும் சிற்றோடையில் இறங்கி அக்கரைக்குப் போக வேண்டிய அவசியமே இல் லை. மலை வ

4

4. அந்தப் பையன்

3 January 2024
0
0
0

மாக்ஸிம் கார்க்கி  இந்தச் சின்னக் கதையை எப்படிச் சொல்லுவது என்று புரியவில் லை. அவ்வளவு எளிதானது. நான் வாலிபப் பருவத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் தெருக் குழந்தைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு ஊருக்கு வெளியே

5

5. அஷ்டமாசித்தி

3 January 2024
0
0
0

டென்ஷொ வம்சத்தின் ஆதிக்கத்தின்போது, கியாட்டோ என்ற வடக்குப் பிராந்தியத்தில் குவான்ஷின் கோஜி என்ற வயோதிகன் வாழ்த்து வந்தான். நீண்டு நெஞ்சை மறைக்கும் வெள் ளைத் தாடியுடன், ஷிண்டோ குருக்கள்மார் போல உடையணிந

6

6. ஆசிரியர் ஆராய்ச்சி

3 January 2024
0
0
0

ஸின்கிளேர் லூயிஸ்  டாக்டர் ஸ்லீக் பிரம்மச்சாரி; அதிலும், வழுக்கை விழவிருக்கும் வாலிபப் பிரம்மச்சாரி. அவர் இராஸ்மஸ் கலாசாலையில் சரித்திரமும் பொருளாதாரமும் கற்பித்து வந்தார். அதாவது மேடைமீது ஏறி நின்று

7

7. அதிகாலை ( பகுதி 1)

3 January 2024
0
0
0

நிக்கோலாய் டிக்கனோவ்  1918-ம் வருஷம் ஆகஸ்டு மாதத்தில் துருக்கியர் பாக்கூ என்ற இடத்தை முற்றுகை இட்டார்கள். மென்ஷ்விக் நிர்வாகத் தலைமை போர்டின் ஐந்து தலைவர்கள் மூளையும் சுழன்றது. சர்வ குழப்பம்; அது விஷ

8

7.அதிகாலை (பகுதி 2)

3 January 2024
0
0
0

இராத்திரி ஒரு ஊரில் தங்கினதும், ஆலி ஹஸன், டாஷா பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு சளசளவென்று மணிக்கணக்காகப் பேசிக் கொட்டினான். உத்யோகஸ்தரின் விதவை மெய்ஸ் அரிசி ரொட்டியை அசைபோட்டுக் கொண்டிருந்தாள். வி

9

7. அதிகாலை ( பகுதி 3)

3 January 2024
0
0
0

"பொய்யாயிருக்கலாம், ஆனால் சித்திரவதையில், உன் னைக் காட்டிக்கொடுப்பேன்; என் னைக் காட்டிக்கொடுத்துக் கொள்வேன்; எனக்கு ஞாபகத்துக்கு வந்தவர்களையெல்லாம் காட்டிக்கொடுப்பேன். உனக்குச் சித்திரவதை என்றால் எப்ப

10

7. அதிகாலை (பகுதி 4)

3 January 2024
0
0
0

"ஆஹா அப்படியா. பாக்ஷாதான் வயிற்றுக் கடுப்பால் கழிந்து கொண்டிருக்கிறாரே. இன்னும் கொஞ்ச காலத்துக்கு அவரைப் பற்றித் தொந்திரவில் லை. தவிரவும், உன்னுடைய ஆயுதங்களை உன்னிடம் கொடுத்துவிடவேண்டும் என்று உத்திரவ

11

8. பலி

4 January 2024
1
0
0

ஜோஸப் நையரு – ஹங்கேரி  மோல்டேவியா நோக்கி நிற்கும் மலைச் சிகரங்களிலே அந்த வருஷத்தில் மந்தைகளுக்குக் கரடிகளால் வெகு தொல் லை ஏற்பட்டு வந்தது. வில் - பொறி வைத்து எல்லாம் முயன்று பார்த்ததும் ஒன்றும் பயன்ப

12

9. சித்திரவதை

4 January 2024
1
0
0

எர்னஸ்ட் டாலர்  "உனக்கு இன்னும் ஏதாவது விருப்பம் இருக்குமா?" சாகக் கிடக்கும் வாலிபனைப் பார்த்து ஸ்டட்கார்ட் இரகசியப் போலீஸ் உத்தியோகஸ்தர் இவ்வாறு கேட்டார். வாலிபனுடைய 'வெறிச்சோடிய' கண்கள் ஜன்னலின் கம

13

10. டைமன் கண்ட உண்மை

4 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர் (1564-1616)  ஆங்கில நாடகாசிரியர், ஷேக்ஸ்பியரைத் துவிதப் பிரம்மா என்பார்கள். உலகத்தின் சிருஷ்டி தத்துவத்தைப் புரிந்து கொண்டவர் போல் தமது பாத்திரங்களை நடமாட விடுவார். அவர் உலகில் பேய்களும்

14

11. இனி

4 January 2024
1
0
0

இ. எம். டிலாபீல்ட்  இதுவரை நடக்காததைப் பற்றி ஒரு கதை எழுதினால் என்ன?... அந்தக் கதையின் போக்கில் அறிந்து கொள்ள முடியுமானால்... பதினைந்து இருபது வருடங்களுக்கப்புறம்: ஓல்ட் பெய்லியில் (நியாயஸ்தலம்) நடக்

15

12. இந்தப் பல் விவகாரம்

4 January 2024
1
0
0

மைக்கேல் ஜோஷெங்கோ – ருஷ்யா  எங்கள் சகா எகோரிச்சுக்குப் பல், தொந்திரவு கொடுத்து வந்தது. என்ன காரணத்தினாலோ விழ ஆரம்பித்தது. காலம் என்ற ஒன்று இருக்கே, அதற்கும் இந்த விவகாரத்துக்கும் சம்பந்தமிருக்கலாம்.

16

13. இஷ்ட சித்தி ( பகுதி 1)

4 January 2024
1
0
0

ஹான்ஸ் பலாடா – ஜெர்மனி  முதலிலேயே தெரிவித்து விடுகிறேன். அப்புறம் குறை சொல்லாதீர்கள். என் மனைவி பெயர் இட்ஸன் பிளாஸ். உச்சரிப்பதற்குக் கொஞ்சம் சிரமந்தான்; ஆனால் அவள் மீது இருந்த ஆசையில், அதன் சிரமம் எ

17

13. இஷ்ட சித்தி ( பகுதி 2)

4 January 2024
1
0
0

"பின்பு கிரிஸ்மஸ் சமயத்தில் அதை உடைத்து... பிறகு என்னவென்பது உங்களுக்குத்தான் தெரியுமே!" என்றாள்! "உனக்கென்ன பைத்தியமா? இந்த வருஷம் போனஸ் கீனஸ் கிடையாது என்று ஹீபர் சொல்லுகிறான். முதலாளி வருமானம் இல்

18

14. காதல் கதை

5 January 2024
1
0
0

வில்லியம் ஸரோயன்  "இந்தப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுகிறீரா அல்லது அந்தப் பக்கமாக உட்காருகிறீரா?" என்று சிகப்புக் குல்லா* கேட்டான். (* நம்மூர்களில் சிகப்புத் தலைப்பாய் என்றால் போலீஸ்காரன் என்பது

19

15. கலப்பு மணம்

5 January 2024
1
0
0

கிரேஸியா டெலாடா – இத்தாலி  அன்றிரவு சுகமாக இருந்தது. பூலோகத்தைக் கடுங்குளிரினால் சித்திரவதை செய்வதில் சலியாத உறைபனிக் காலத்துக்கும் ஒரு ஓய்வு உண்டு என்பதை அந்த ஏப்ரல் இரவு காட்டியது. இதுவரை பனிக்கட்ட

20

16. கனவு (பகுதி 1)

5 January 2024
1
0
0

ஐவான் டர்ஜனீப் – ருஷியா அந்தக் காலத்தில் நான் என் தாயாருடன் ஒரு சிறு துறைமுகப் பட்டினத்தில் வசித்து வந்தேன். எனக்கு அப்பொழுதுதான் பதினேழு வயது நிரம்பிற்று. தாயாருக்கு முப்பத்தைந்து வயது. சின்ன வயதிலே

21

16. கனவு ( பகுதி 2)

5 January 2024
1
0
0

8 என் தாய் எனக்குக் கூறிய கதை எனதுள்ளத்தை எப்படிச் சிதறடித்தது! முதல் வார்த்தையிலிருந்தே அறிந்து கொண்டேன். அவள் வாயிலிருந்து தவறுதலாக நழுவிய வார்த்தை எனது உத்தேசத்தைத் திடப்படுத்தியது. எனது கனவில் நா

22

17. காரையில் கண்ட முகம்

5 January 2024
1
0
0

இ.வி. லூக்காஸ் – இங்கிலாந்து  நேற்று சாயங்காலம் எனது நண்பன் டாப்னி வீட்டில் நடந்ததை மறக்க முடியவில்லை. அந்த அநுபவம் இன்னும் என் னை உறுத்திக் கொண்டிருக்கிறது. அன்றைய தினம் பேச்சு பூத பைசாசங்களைப் பற்ற

23

18. கிழவி

5 January 2024
1
0
0

ஸெல்மாலேகர்லாப் – ஸ்வீடன்  மலைப்பாதை வழியாக ஒரு கிழவி நடந்து கொண்டிருந்தாள். மெலிந்து குறுகியவள்தான். எனினும் முகத்தின் வண்ணம் வாடவில்லை. சதைக் கோளங்கள் மரத்துத் தொய்ந்து திரித் திரியாகத் தொங்கவில்லை

24

19. லதீபா

6 January 2024
0
0
0

மோஷி ஸ்மிலான் ஸ்கி  "லதீபாவின் கண்களை நீ பார்த்திருக்காவிட்டால், கண்களுக்கு எவ்வளவு அழகு இருக்க முடியும் என்பது உனக்குத் தெரிந்தே இருக்காது." இப்படி நான் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம். ச

25

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்( பகுதி 1)

6 January 2024
0
0
0

1 அவர்களுடைய மூத்த பெண்ணின் படிப்பு அடுத்த மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது. வயசும் 'அப்படி இப்படி' என்று சீக்கிரத்தில் பதினெட்டு ஆகிவிடும். டோ க்கியோவிலேயே நாகரீகத்திற்குப் பெயர் போன இடத்தில் நிலம் வாங

26

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்(பகுதி 2)

6 January 2024
0
0
0

5 வரன்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுவதற்கு நாள் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு 'கபூக்கி' நாடகக் கொட்டகையில் தரகர் இரண்டு 'பாக்ஸ்' களை அமர்த்தினார்; இரண்டு குடும்பங்களும் பக்கத்த

27

21. மணிமந்திரத் தீவு

6 January 2024
0
0
0

ஷேக்ஸ்பியர்  நடுக்கடலிலே நாலைந்து கப்பல்கள் தத்தளித்துத் தடுமாறுகின்றன. கடலலைகள் சினங்கொண்ட கருநாகங்கள் போல ஆயிரமாயிரமாகப் படம் விரித்துத் தலை சுற்றி மோதுகின்றன. உயிரை வாங்கவரும் கால தூதர்களின் கோரச்

28

22. மணியோசை

6 January 2024
0
0
0

ஜப்பான்  "நான் சாவதற்குப் பயப்படவில் லை" என்றாள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மனைவி. "இப்பொழுது என் கவலை எல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நான் போன பிறகு யாரைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?" வேதனை

29

23. மார்க்ஹீம்

6 January 2024
0
0
0

ஆர்.எஸ். ஸ்டீவன்ஸன் – இங்கிலாந்து  "ஆமாம்! எங்கள் வியாபாரத்திலே பலவிதம் உண்டு; வாங்க வருகிறவர்களில் சிலருக்கு ஒன்றுமே தெரியாது; வெறும் 'அப்பாவிகள்'. அப்பொழுது எங்கள் அநுபவத்திற்கு ஏற்ற லாபத்தைப் பெறு

30

24. மிளிஸ்

8 January 2024
0
0
0

பிரட் ஹார்ட் – அமெரிக்கா  ஸிராநிவாடா மலைத் தொடரில் சமவெளிக்குப் பக்கத்தில் இருக்கும் சிவந்த மலைகளில்தான் "ஸ்மித் பாக்கெட்" என்ற இடம் இருக்கிறது. அது ஒரு சுரங்க ஸ்தலம். அதாவது ஒரு காலத்தில் தங்கம் இரு

31

25. முதலும் முடிவும் ( பகுதி 1)

8 January 2024
0
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  மாலை ஆறு மணியிருக்கும். அந்த அறையில் சுமாரான இருட்டு. 'பச்சை ஷேட்' போட்ட மேஜையின் மீதிருந்த ஒற்றை விளக்கு, தரையில் விரித்த துருக்கிக் கம்பளத்திலும், மேஜையின் மீது சிதறிக் கிடந்த,

32

25. முதலும் முடிவும் ( பகுதி 2)

8 January 2024
0
0
0

"பிரேதத்தின் மேலிருந்த எதையும் எடுத்தாயா?" "நாங்கள் சண்டை போட்டுக் கொள்ளும்பொழுது இது அவன் பையிலிருந்து விழுந்தது." அது வெறும் தபால் கவர். தென் அமெரிக்கத் தபால் குறியிட்டு, "பாகட்ரிக் வாலன், ஸைமன் ஓட்

33

26. நாடகக்காரி

8 January 2024
0
0
0

ஆண்டன் ஷெக்காவ் – ருஷியா  அவள் ஒரு நாடகக்காரி. அந்தக் காலத்திலே அவளுக்கு யௌவனக் களை மாறவில் லை. குரல் கணீர் என்று இருக்கும். பலர் வந்து போவார்கள். ஆனால் குறிப்பாக நிக்கோலாய் பெட்ரோவிச் கோல்ப்பக்கோவ்

34

27. நட்சத்திர இளவரசி

8 January 2024
0
0
0

ஒரு ஆசிரியர் - தென் கடல் தீவுகள்  "நம்மிடம் இருப்பதையெல்லாம் சாப்பிட்டு விடுவோம்" என்றான் டபூதி. அவனது சகோதரனான அய்ட்டோ சந்தேகத்துடன் ஏறிட்டுப் பார்த்தான். "அப்படியானால் நமக்கு மிகுந்த பலம் உண்டாகிவி

35

28. ஓம் சாந்தி! சாந்தி!

8 January 2024
1
0
0

எலியா எஹ்ரன் பர்க்  (யுத்தம் மனித சமூகத்தின் 'உடனுறை நோயாகவே' இருந்து வருகிறது. தனது தற்காப்புக்காக மனிதன் சமூகம் என்ற ஒரு ஸ்தாபனத்தை வகுத்தான்; பிறகு அதனைக் காப்பாற்றத் தன் னைப் பலிகொடுக்கத் தயாரானா

36

29. ஒரு கட்டுக்கதை

9 January 2024
0
0
0

பிரான்ஸ் காப்கா – ஆஸ்திரியா  எலி சொல்லுகிறது... "ஐயோ, உலகம் தினம் தினம் எவ்வளவு சின்னதாகிக் கொண்டே வருகிறது! முதலில் ரொம்பப் பெரிதாக, நான் பயப்படும்படியாக, அவ்வளவு பெரிதாக இருந்தது. நான் ஓடிக்கொண்டே

37

30. ஒருவனும் ஒருத்தியும்

9 January 2024
0
0
0

லூயிகய்ல்லூ – பிரான்ஸ்  மச்சுப் படிக்கட்டு முற்றத்தில் இறங்கியது. அங்கே, அதாவது கடைசிப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, அன்று காலை முழுவதும் அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் ரொம்பவும் நெட்டை. ஒற்றை ந

38

31. பைத்தியக்காரி

9 January 2024
0
0
0

மொப்பஸான் – பிரான்ஸ்  "ஆமாம், நீ சொல்வது முன்பு பிரான்சிற்கும் ருஷியாவிற்கும் சண் டை நடந்ததே, அப்பொழுது நடந்த பயங்கரமான சம்பவத்தை என் நினைவிற்குக் கொண்டு வருகிறது" என்று கூறத் தொடங்கினார் முஸே டி' என

39

32. பளிங்குச் சிலை

9 January 2024
0
0
0

வாலரி புருஸ்ஸாப் வாலரி புருஸ்ஸாப் (1875-1924) புரட்சி யுகமான நவீன காலத்து ருஷ்யப் புது எழுத்தாளர் கோஷ்டியைச் சேர்ந்தவர். இந்தக் கதை புரட்சிக்கு முந்திய காலத்தைப் பகைப் புலமாகக் கொண்டு, எழுந்த கற்பனைக

40

33. பால்தஸார் (பகுதி 1)

9 January 2024
0
0
0

அனதோல் பிரான்ஸ் – பிரான்ஸ்  "கிழக்கே அரசர்களுக்கு மந்திர சக்தியுண்டு என்று நினைத்தார்கள்" -தெர்த்தூலியன் அக்காலத்திலே எதியோபியாவை பால்தஸார் ஆண்டு வந்தான். கிரேக்கர் அவனை ஸாரஸின் என்று அழைத்தனர். அவன்

41

33. பால்தஸார்( பகுதி 2)

9 January 2024
0
0
0

ஜனநடமாட்டமில்லாத பாலைப் பிரதேசங்களில் மத்தியானம் வரை நடந்தனர். உச்சியில் சூரியன் வந்ததும், திருடர்கள் கைதிகளை விடுவித்து, பாறையின் நிழலில் உட்காரச் சொல்லி, கெட்டுப்போன ரொட்டித் துண் டைக் கொடுத்தனர். ப

42

34. பொய்

9 January 2024
0
0
0

லியேனீட் ஆன்ட்ரீவ் – ருஷியா  "நீ சொல்வது பொய், அது உனக்குத் தெரியும்!" "அதற்கேன் இப்படிக் கத்தவேண்டும்? பக்கத்திலிருக்கிறவர்களுக்கும் தெரிய வேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது." இப்பொழுதும் பொய் சொன்னாள்

43

35. பூச்சாண்டியின் மகள்

10 January 2024
0
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து  அவள் பெயர் பத்தேமா. அவள் பாக்தாத் நகர் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தாள். அவள் நீலத்தாடிவாலாவின் புதல்வி. கண்டதும் காம வெறியை எழுப்பும் மோகனாங்கி. அவளது மதி முகத்தின் வ

44

36. ராஜ்ய உபாதை( பகுதி 1)

10 January 2024
0
0
0

ஹென்றிக் இப்ஸன் (1828-1906)  ஷேக்ஸ்பியருக்கு நிகராக உலகம் கொண்டாடும் சிறந்த நாடக ஆசிரியர் ஹென்ரிக் இப்ஸன். தர்மத்துக்கு வெற்றி அளித்தார் ஷேக்ஸ்பியர்; தர்மம் ஏன் வெற்றி பெற வேண்டும் என்ற கேள்வியை எழுப

45

ராஜ்ய உபாதை( பகுதி 2)

10 January 2024
0
0
0

"அந்தக் கடிதம்..."  "இரு இரு, விரோதிகளைப் பற்றி நான் ஒரு பட்டியல் கொடுத்தேனே. நீ அதிகாரத்தை விடத் தயாராக இருப்பதுபோல நானும் என் எதிரிகளை மன்னிக்க ஆசைப்படுகிறேன். அந்தப் பட்டியலை இந்த நெருப்பில் போட்ட

46

37. ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு

10 January 2024
0
0
0

நதானியேல் ஹாதார்ண் – அமெரிக்கா  எல்லைப்புறத்தைப் பாதுகாப்பதற்காக 1725-ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்ட படையெடுப்பு சரித்திரத்திலேயே கற்பனைக்கு இடந்தரும் பகுதி. அதை எல்லாரும் சாதாரணமாக 'லவல் சண்டை' என்று கூற

47

38. சாராயப் பீப்பாய்

10 January 2024
0
0
0

எட்கார் அல்லன் போ – அமெரிக்கா  அவன் ஆயிரம் குற்றங்களைச் செய்தான்; ஆனால் என்னால் இயன்றவரை பொறுத்தேன். அவன் என் னைத் திட்டி அவமதித்தான். இனி, பழிக்குப் பழி தீர்க்க வேண்டியதுதான் என்று மன உறுதி கொண்டேன்

48

39. சகோதரர்கள்

10 January 2024
0
0
0

யூஜோ யாம மோட்டோ – ஜப்பான்  'அண்ணா, இது நல்லதுதானே?' 'எங்கே, இப்படிக் கொண்டா பார்ப்போம்' என்று மூத்தவன் தன்னிடம் காட்டப்பட்ட காளானைப் பார்ப்பதற்காகத் திரும்பினான். 'ஊங் ஹும், நல்லதில் லை; நான் பிடுங்க

49

40. சமத்துவம்

10 January 2024
0
0
0

ஒரு ருஷிய ஆசிரியர்  நீலக் கடலின் அடிமட்டத்திலே, பிரமாண்டமான மீன் ஒன்று, இரை தேடிக்கொண்டு, உல்லாசமாக நீந்தி வருகிறது. எதிரே ஒரு சின்ன மீன் - அதன் உணவு. பெரிய மீன் அதை விழுங்குவதற்காக, தன் வாயை அகலத் த

50

41. ஷெஹர்ஜாதி - கதை சொல்லி

11 January 2024
0
0
0

ஹென்றி டிரெக்னியர் – பிரான்ஸ்அன்று இரவு ஷெஹர்ஜாதி நன்றாகத் தூங்கவேயில் லை. பகல் முழுவதும் சுட்டுப் பொசுக்கும் வெய்யில். அதனால் மூச்சுவிடக்கூட முடியாதபடி அவ்வளவு இறுக்கமாக இருந்தது. சிலந்தி வலையையும் த

51

42. சிரித்த முகக்காரன்

11 January 2024
0
0
0

அவன் சோகமாக இருக்கிறான், தனியாக இருக்கிறான் என்று சொல்லிவிடுவது எளிது; ஆனால் அவன் எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்தோடேயே இருக்கிறான். அப்படிச் சொல்லிவிட்டாலும், அவனைப் பாட்டிலில் போட்டு அடைத்து லே

52

43. சூனியக்காரி

11 January 2024
1
0
0

ரோனால்டு ஆக்டன் – இங்கிலாந்து அப்பொழுது இலையுதிர் காலம். நானும் ஜேக் மக்கின்ஸனும் பக்கத்து மிராசுதாருடைய காட்டில் திருட்டுத்தனமாகக் கண்ணி வைத்து வேட்டையாடச் சென்றோம். அவனுக்கு வயது இருபதுக்கு மேல

53

44. சுவரில் வழி

11 January 2024
0
0
0

ஆர். முரே கில்கிரைஸ்– இங்கிலாந்து அன்று முற்பகல் சிறிது உஷ்ணமாகவே இருந்தது. பசும்புல் செழித்து வளர்ந்த மைதான வெளியில், ஆங்காங்கு குத்துக்குத்தாகப் பெயர் தெரியாத புஷ்பங்கள் எல்லாம் கணக்கற்று

54

45. தாயில்லாக் குழந்தைகள்

11 January 2024
0
0
0

பிரான்ஸிஸ் பெல்லர்பி – இங்கிலாந்து வேர்த்து விருவிருக்க, கால்கள் தள்ளாட, இரண்டு குழந்தைகள் நடந்து சென்றன. பையன், பதினொரு வயசிருக்கும். முன்னால் நடந்தான். பெண் எட்டு வயசுபோல இருக்கும். பாதை முன் ம

55

46. தையல் மிஷின்

11 January 2024
0
0
0

இவான் கூம்ஸ் அங்கு மனிதனைத் தூங்காது விழிக்க வைத்திருக்க ஒருவித சந்தடியும் கிடையாது. இருந்தாலும், அந்தச் சிறிய கட்டிலில் சுருண்டு முடங்கிக்கொண்டு, நெடுநேரமாக நிசப்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

56

47. தந்தை மகற்காற்றும் உதவி

11 January 2024
1
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து டான் ஜுவான் தன் மாளிகையில் விருந்து மண்டபத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று தரை வெடித்தது. நரக தூதர்கள் வந்து அவனை இழுத்துக் கொண்டு போய் விட்டார்கள்

57

48. தெய்வம் கொடுத்த வரம்

12 January 2024
1
0
0

பியோர்ண்ஸ்டர்ண் பியோர்ண்ஸன் – ஸ்வீடன்  இந்தக் கதையில் வருகிறவன் தான் அவனுடைய ஊரிலேயே ரொம்பவும் பெரிய பணக்காரன். தவிரவும் அந்த வட்டாரத்திலே அவனுக்குத்தான் ரொம்பவும் சொல் சக்தி உண்டு. அவன் பெயர் தார்ட்

58

49. தேசிய கீதம் (பகுதி 1)

12 January 2024
0
0
0

எல்.ஏ.ஜி. ஸ்டராங் – இங்கிலாந்து  லாரி நிறையத் துருப்புக்கள் கன வேகமாகச் சென்று சில விநாடிகள் கூடக் கழியவில் லை. அது இப்பொழுதுதான் நிகழ்ந்தது. வெடியின் அதிர்ச்சி பரீலியை அப்படியே கலங்க வைத்துவிட்டது.

59

49. தேசிய கீதம் (பகுதி 2)

12 January 2024
0
0
0

ஆம். அமெரிக்காவில் ஓர் பெருத்த வெற்றி. நியூயார்க்கில் இரண்டு ஆட்டம்; பிறகு அமெரிக்கா முழுவதிலும் ஓர் நீண்ட வெற்றி யாத்திரை; முடிவில் ஹாலிவுட்டில் ஒரு பிலிம்; சமாதானம் ஏற்பட்ட இரண்டொரு மாதங்களுக்கப்புற

60

49. தேசிய கீதம் (பகுதி 3)

12 January 2024
0
0
0

இந்தச் சம்பவம் பரீலியின் கோபத்தை அதிகரித்தது; ஆனால் பொதுப்படையாக்கியது. இதுவரை தன் தேசவாசிகளான புரட்சிக்காரர் மீது கோபங்கொண்டிருந்தான். இப்பொழுதோ இந்த இடத்தின் பேரிலேயே கோபம். அவன் நெஞ்சில் ஆழமாகப் பய

61

50. துன்பத்திற்கு மாற்று

12 January 2024
1
0
0

ஸீனர் லூயிஜி பிரான்டல்லோ – இத்தாலி  நமது வாழ்க்கையை, முக்கியமாக அதில் காணும் துன்பங்களை, வான வெளியிலே தேஜோமயமாகச் சுழன்று செல்லும் நட்சத்திர மண்டலங்களுடன் ஒப்பிட்டுப்பாரும், அப்பொழுது அது துச்சமாகத்

62

51. துறவி

12 January 2024
0
0
0

ராபர்ட் நியூமான் – ஜெர்மனி  "நான் முதல் முதலில் ஐரோப்பாவிலிருந்து இந்தக் கீழப் பிரதேசங்களுக்கு வந்தபொழுது அது நடந்தது" என்று அவன் ஆரம்பித்தான். அவன் எங்கள் கப்பலின் காப்டன்; பெயர் வான்டர்லான். ஜாதியி

63

52. உயிர் ஆசை (பகுதி 1)

13 January 2024
1
0
0

ஜாக் லண்டன் – அமெரிக்கா  அவர்கள் இருவரும் நொண்டி, நொண்டி ஆற்றங்கரை வழியாகத் தள்ளாடி நடந்தார்கள். கத்தி போல ஊசியாக, தெத்துக்குத்தாகக் கிடந்த பருக்கைக் கற்கள் காலை வெட்டின. அவர்களிருவரும் சோர்ந்து விட்

64

52. உயிர் ஆசை (பகுதி 2)

13 January 2024
1
0
0

நாட்களும் ஓடின. காட்டு ஜீவராசிகள் ஓடியாடித் திரியும் பள்ளத்தாக்குகளை அடைந்தான். மான் கூட்டம் ஒன்று. இருபது இருக்கும். துப்பாக்கி லெக்குக்கு ரொம்பவும் அருகில் துள்ளி ஓடின. அவற்றை விரட்டிக் கொண்டே ஓடினா

65

52. உயிர் ஆசை (பகுதி 3)

13 January 2024
1
0
0

பாறை மீது படுத்துக் கிடந்தவன் சுயப் பிரக்ஞையுடன் விழித்துக் கொண்டான். சூரியன் காய்ந்து கொண்டிருந்தது. காட்டு மான்குட்டிகளின் சப்தமும் தூரத்தில் கேட்டது. சித்தத்தின் அடிவானத்தில் மழையும் காற்றும் பனியு

66

53. வீடு திரும்பல்

13 January 2024
1
0
0

பீட்டர் எக் – நார்வே  மாலுமி பெடர் ஸோல்பர்க்குடைய மனைவி வசித்த குடிசை, ஜனங்கள் பொதுவாக 'லூக்கள் தெரு' என்று சொல்லுவார்களே, அதற்கெதிரில் இருக்கிறது. குடிசையின் ஜன்னல் நன்றாகத் திறந்திருந்தது. அப்பொழுத

67

54. ஏ படகுக்காரா!

13 January 2024
1
0
0

மிக்கெய்ல் ஷோலொகோவ்  அந்த காஸக் கிராமத்தைச் சூழ்ந்து வளர்ந்து நின்ற சாம்பல் பூத்த பசிய நிறம் படைத்த செடிச் செறிவின்மீது சூரியவொளி தெம்பாக விழவில் லை. அருகே ஒரு பரிசல் துறை இருந்தது. அங்கே படகேறி டான்

68

55. யாத்திரை

13 January 2024
1
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  நான் ஹாமர்ஸ்மித் பஸ்ஸின் மேல்தட்டிலிருந்து பார்க்கும் பொழுது, அவர்கள் ஆல்பர்ட் ஹால் மெமோரியல் எதிரில் இருந்த ஒரு வீட்டு வாசல்படியில் உட்கார்ந்திருந்தனர். அன்று வெகு உஷ்ணம். வாடகை

69

56. எமனை ஏமாற்ற...

13 January 2024
1
0
0

மொங்காக்கு ஷோனின் என்ற மகடனான புத்த பிக்ஷு தான் எழுதியுள்ள கியோ-ஜியோ-ஷிந்ஷோ என்ற கிரந்தத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: "ஜனங்கள் வழிபடும் தெய்வங்களில் பல துர்தேவதைகளாகும். அவலோகிதன், தர்மம், பிக்ஷுக்கள

70

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்

13 January 2024
1
0
0

தாமஸ் வுல்ப் – அமெரிக்கா  ஈவிரக்கமற்றுக் கொதிக்கும் அந்த வருஷம் ஆகஸ்டில் யுத்தம் நின்றது. யுத்த தேவதையின் பவனியின்போது நான்கு கணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஒன்று லாங்லிவியல்; விமான மைதானத்தில் உள்ள குத

71

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்(பகுதி 2)

13 January 2024
1
0
0

தயங்கித் தயங்கி மறியும் உடலொட்டிய இந்த வேட்கை, தங்கள் ஜோலியைச் செய்து இவர்கள் நடாத்தும் வாழ்வினிடையிலும் வெளிக்கு அகோரக் கேலிக் கூத்தாகத் தோன்றினாலும், மேஜைக்கு மேஜை போஷகர் தேடி நடக்கும்போது சர்வ ஜாக்

72

58. தர்ம தேவதையின் துரும்பு

13 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர்  குரலிலே அதிகார தோரணையும் அதனுடன் பயமும் கலந்திருந்தது. கடுங்குளிரிலே, இருட்டின் திரைக்குள்ளே, ஈட்டிபோலப் பாய்ந்தது அக்குரல். 'நீ யார்? முதலில் அதைச் சொல்' என்று பதில் கேள்வி பிறந்தது, தி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்