shabd-logo

23. மார்க்ஹீம்

6 January 2024

0 பார்த்தது 0

ஆர்.எஸ். ஸ்டீவன்ஸன் – இங்கிலாந்து

 "ஆமாம்! எங்கள் வியாபாரத்திலே பலவிதம் உண்டு; வாங்க வருகிறவர்களில் சிலருக்கு ஒன்றுமே தெரியாது; வெறும் 'அப்பாவிகள்'. அப்பொழுது எங்கள் அநுபவத்திற்கு ஏற்ற லாபத்தைப் பெறுவோம். சில மோசமான பேர்வழிகளும் நம்மிடம் வந்து சேருவார்கள். அப்பொழுது எங்கள் ஒழுக்கத்தால் லாபத்தைப் பெறுவோம்" என்றான் அந்த வியாபாரி. மார்க்ஹீம் அப்பொழுதுதான் கண்கூசும் வெளியிலிலிருந்து கடைக்குள் நுழைந்தான். கண் கூச்சம் கடையில் இருட்டுத் திரள்களை எழுப்பிப் பார்வையை மறைத்தது. அந்த வார்த்தைகள் அவனை முகத்தைத் திருப்பிக்கொள்ளச் செய்தன. மேலும் கடைக்காரக் கிழவன் கையில் பிடித்திருந்த தீபத்தை அவன் முகத்திற்கு நேராகப் பிடித்தான். கடைக்காரன் 'களுக்'கென்று சிரித்தான். "இன் றைக்கு கிரிஸ்மஸ். நான் தனியாகக் கடையை அடைக்கப் போகும் சமயத்தையும், நான் வியாபாரம் செய்ய விரும்பாத சமயத்தையும் தெரிந்து கொண்டு வந்திருக்கிறாய். சரி, அதற்கும் கணக்குப் போடுவேன் என்று தெரிந்துகொள். இந்தச் சமயத்தில் தினசரிக் கணக்கை முடித்து விடுவேன். அந்த நேரம் நஷ்டமாகிவிட்டது. அதற்கும் நீ சேர்த்துக் கொடுக்க வேண்டும். மேலும் இன் றைக்கு நீ மரியாதையில்லாமலே என்னுடன் நடந்துகொள்கிறாய். அதையும் உன் கணக்கில் சேர்த்துக் கொள். என்னிடம் முகத்தை ஏறிட்டுப் பார்த்து விற்பனை செய்ய விரும்பாதவனிடம் எப்பொழுதும் நான் தட்டுக்கெட்ட கேள்விகளைப் போட்டுத் தொந்தரவு செய்வதில் லை!" என்று சொல்லி, அந்த வியாபாரி மறுபடியும் 'களுக்'கென்று சிரித்துக்கொண்டான். பிறகு குரலை மாற்றி, கொஞ்சம் நம்பிக்கையற்ற கேவலம் தொனிக்க, "நீ கொண்டு வந்திருக்கும் சாமான் உன்னிடம் எப்படி வந்தது என்று நீ எப்பொழுதும் சொல்லுகிற மாதிரி சொல்லு பார்க்கலாம்? இன்னும் காலியாகவில் லையா? உனது சித்தப்பா பெட்டியும் அவரும் அதிசயமானவர்கள்தான்!" என்றான் அந்தக் கடைக்காரன். கடைக்காரன் சிறிது குட்டையானவன். கண்களில் மூக்குக் கண்ணாடி. தோள் பட்டைகள் சிறிது அகன்றவை. அவன் தனது கால் சட்டை விரல்களின் மீது உன்னி நின்று கொண்டு, மார்க்ஹீம் சொல்லுவதை எல்லாம் நம்பாதவன் போலத் தலையை அசைத்து, 'ஆமாம்' போட்டுக் கொண்டிருந்தான். மார்க்ஹீமுக்கு அவனைப் பார்க்கச் சகிக்கவில் லை. பரிதாபத்துடனும் சிறிது பயத்துடனும் முகத்தைத் திருப்பிக் கொண்டான். "இந்தவிசை உமது யூகம் தவறு. இன்று விற்க வரவில் லை; வாங்குவதற்கு வந்திருக்கிறேன். இன்று என்னிடம் விற்பதற்கு ஒன்றுமில் லை. என் சித்தப்பா பெட்டியும் காலியாகிவிட்டது. அதில் இன்னும் சாமான்கள் இருந்தாலும் நான் விற்பதற்குத் தயாரில் லை. எனக்கு பாங்கி லேவாதேவியில் நல்ல வருமானம் இப்பொழுது வந்து கொண்டிருக்கிறது. இன் றைக்கு எனது வேலை மிகவும் சுருக்கமானது. எனது ஸ்திரீ நண்பர் ஒருவருக்கு ஏற்ற கிரிஸ்மஸ் வெகுமதி ஒன்று வாங்க வந்திருக்கிறேன்." பேசுவதில் சிறிது உற்சாகமடைந்தவன் போல் மார்க்ஹீம் இன்னும் அதிகமாக விஸ்தரிக்க ஆரம்பித்தான்: "ஆமாம், இந்த நேரத்திலே உம்மை வந்து தொந்தரவு செய்வதற்கு எனக்கு வருத்தந்தான். நான் நேற்றே வரவேண்டும் என்று நினைத்தேன். என்னமோ நேரமில்லாது போய்விட்டது. இன் றைக்கு நடக்கும் விருந்தில் நான் அதைக் கொண்டு போகவேண்டும். நல்ல பணம் வரக்கூடிய இடத்தில் கலியாணம் செய்து கொள்ளப் போகும்பொழுது இந்தக் கவலையீனம் அதைத் தடை செய்துவிடக் கூடாதல்லவா?" இருவரும் சிறிது மௌனமாக இருந்தனர். கடைக்காரன் இவனுடைய வார்த்தைகளை நம்பாதவன் போல் விழித்தான். அந்த அறையிலே எந்த இருட்டு மூலையிலிருந்தோ 'டக், டக்' என்ற கடிகாரச் சப்தமும், வெளியே போகும் வண்டிகளின் சப்தமுமே அறையின் மௌனத்தின் கனத்தை அதிகமாகக் காண்பித்தன. "சரிதான் ஐயா, நீ சொல்லுகிறபடியே இருக்கட்டும். நீயும் பழைய வாடிக்கைக்காரன். உனக்கு நல்ல சம்பந்தம் ஏற்படும்பொழுது நானா அதைத் தடை செய்ய வேண்டும்? இதோ இருக்கிறதே இந்த முகம் பார்க்கும் கண்ணாடி, இது உன் ஸ்திரீ நண்பருக்கு ஏற்ற பரிசு தான். 15-வது நூற்றாண்டுச் சாமான். அதில் சந்தேகம் கிடையாது. ஆனால் அதை விற்றவரின் பெயரை மட்டிலும் கூற முடியாது. அந்த மனிதனும், உன் னைப்போல், ஒரு சித்தப்பாவின் ஒரே வாரிசு!" கடைக்காரக் கிழவன் தனது கரடுமுரடான தொனியில் பேசிக் கொண்டே, அந்தக் கண்ணாடியை எடுக்கக் குனிந்தான். அவன் குனிந்ததுதான் தாமதம், மார்க்ஹீமின் உடல் உச்சி முதல் உள்ளங்கால் வரை பதறித் துடித்தது. அவனது உள்ளத்தின் கோபத்தின் பேய்க்கூத்து, கட்டுக் கடங்காது, முகத்தில் பிரதிபலித்தது. அதுவும் ஒரு கணந்தான் - கோடை இடிபோல் வந்து மறைந்தது. அவன் முகக் கண்ணாடியை வாங்கும் பொழுது கைகள் மட்டிலும் சிறிது நடுங்கின. "கண்ணாடி?" என்றான் கம்மிய குரலில்; "கண்ணாடியா கிரிஸ்மஸுக்குக் கொடுப்பது! ஏன் கொடுக்கலாகாது?" என்று கேட்டுக் கொண்டான் மீண்டும். "ஏன் கொடுக்கலாகாது? கண்ணாடி கொடுத்தால் என்ன?" என்றான் அந்தக் கடைக்காரன். மார்க்ஹீம் அவனை ஒரு விபரீதப் பார்வையுடன் பார்த்தான். "ஏனென்றா என் னைக் கேட்கிறீர்? ஏன் - நீர் தான் பாருமே! நீரே பாருமே! உமக்கு அதைப் பார்க்கப் பிடித்திருக்கிறதா? யாருக்குத்தான் அதைப் பார்க்கப் பிடிக்கும்?" என்றான் மார்க்ஹீம். மார்க்ஹீம் கண்ணாடியை அவன் முகத்திற்கு நேராகத் தூக்கிப் பிடித்தபொழுது திடுக்கிட்டுப் பின்னடைந்தான்; ஆனால் மார்க்ஹீம் கையில் கண்ணாடியைத் தவிர வேறு ஒன்றுமில் லை என்று கண்டபின் சிரித்துக்கொண்டு, "உனக்குக் கிடைக்கும் மணப்பெண் மனத்தைத் திருப்தி செய்வது லேசான காரியமல்ல போலிருக்கிறதே!" என்றான். "நான் உம்மிடம் ஒரு கிரிஸ்மஸ் வெகுமதிக்கு ஏற்ற பொருள் கேட்டால், இதை - பல நூற்றாண்டுகளின் பாபங்களை, அசட்டுத்தனங்களை - என்னிடம் கொடுக்கிறீர்! இது என்ன அர்த்தம்! உமது மண் டையில் மூளையிருக்கிறதா, சொல்லும். உம்மைப்பற்றி எனக்குச் சொல்லும்! நீர் தர்மசிந்தையுள்ளவரா?" கடைக்காரன் அவனைக் கூர்ந்து கவனித்தான். மார்க்ஹீம் இதைச் சொல்லிவிட்டுச் சிரிக்காமல் இருந்தது அவனுக்கு அதிசயமாக இருந்தது. வேடிக்கைச் சிரிப்பிற்குப் பதிலாக, ஏதோ ஓர் நம்பிக்கையின் ஆசை எட்டிப் பார்ப்பது போல் இருந்தது கடைக்காரனுக்கு. "உன் எண்ணம் என்ன?" என்றான் கடைக்காரன். "தர்ம சிந்தையில் லையா?" என்றான் மற்றவன், சோர்ந்த மனத்துடன். "தர்ம சிந்தையில் லை, பக்தியில் லை, தாட்சண்யம், ஒழுங்கு ஒன்றுமில் லை; பணத்தைப் பெருக்கக் கையிருக்கிறது, அதை மூடிவைக்க இரும்புப் பெட்டியிருக்கிறது! அவ்வளவுதானா! ஹே, தெய்வமே! அட மனிதனே! இவ்வளவுதானா!" சிறிது கோபப்பட்டவன்போல் ஆரம்பித்த கடைக்காரன், சிரித்துக்கொண்டு, "உனக்குக் காதலால் பாட்டில் கொஞ்சம் ஜாஸ்தியாகிவிட்டது!" என்றான். "அப்படியா!" என்று தலையை ஆட்டிக்கொண்டு, "நீர் எப்பொழுதாவது யாரையாவது காதலித்திருக்கிறீரா? அதையாவது சொல்லும், பார்ப்போம்!" என்றான் மார்க்ஹீம். "நானா! இந்த அசட்டுத்தனத்திற்கு எனக்கு நேரமும் கிடையாது. பிரியமும் கிடையாது! வெறும் பேச்சிற்கு நேரமில் லை. இந்தக் கண்ணாடியை எடுத்துக்கொள்ளுகிறாயா, என்ன?" என்றான் கடைக்காரன். "அதற்குள் என்ன அவசரம்! இப்படி நின்று பேசிக்கொண்டு நிற்கப் பிரியமில் லையா! வாழ்க்கையில் ஆபத்துக்கள் அதிகம். அதனால் கிடைக்கும் சந்தோஷங்களை விட்டு நான் ஓடுவது கிடையாது. ஆமாம் இந்த மாதிரி ரொம்பச் சாதாரணமான இன்பத்திலிருந்தும் கூட ஓடிவிடப் பிரியம் கிடையாது. நாம் எல்லோரும், கிடைக்கும் இன்பங்களை, மரத்தில் தொங்கும் மனிதனைப் போல், விடாப் பிடியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிமிஷமும் பிடித்துத் தொங்கும் கிளை. கிளைக்கும் தரைக்கும் நெடுந்தூரம். கீழே விழுந்தால் பிறகு மனிதன் என்ற பெயர் கிடையாது. அதனால்தான் பேச்சில் இன்பமிருக்கிறது. இரண்டு பேரும் பேசுவோமே! ஏன் ஒருவரையொருவர் திரைபோட்டு மறைத்துக்கொள்ள வேண்டும்? நமது ரகசியங்களைச் சொல்லிக் கொள்ளுவோம். யார் கண்டார்கள்? ஒருவேளந நமக்குள் சிநேகம் கூட ஏற்பட்டு விடலாம்!" "ஒரு வார்த்தை சொல்லுகிறேன், கேள்! சாமான் வாங்க வேண்டுமானால் வாங்கு, அல்லது கடையைவிட்டு இறங்கு!" "ஆமாம்! ஆமாம்! அசட்டுத்தனம் போதும்! ஜோலியைப் பார்ப்போம்! வேறு ஏதாவதொன் றைக் காண்பி." கடைக்காரன் கையிலிருந்த கண்ணாடியை வைப்பதற்குக் குனிந்தான். சிறிது மயிர் கண்ணில் வந்து விழுந்து மறைந்தது. மார்க்ஹீம் சட்டைப் பையில் கையை விட்டுக்கொண்டு அவன் பக்கத்தில் நகர்ந்தான். மூச்செடுத்து நிமிர்ந்தான். அச்சமயத்தில், அவன் முகத்தில் பயம், மனவுறுதி, மனக்கவர்ச்சி, வெறுப்பு - எல்லாம் அலைமேல் அலையாகப் பிரதிபலித்து மறைந்தன. மேல் உதடு சிறிது உயர்ந்தது. இறுகிய பல் வெளியே தெரிந்தது. "இது உனக்குப் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே கடைக்காரன் நிமிர்ந்தான். மார்க்ஹீம் பின்புறமிருந்து அவன் மீது பாய்ந்தான். மெல்லிய கட்டாரி பளிச்சென்று மின்னி மறைந்தது. கடைக்காரன் கோழிக் குஞ்சு போல் தத்தளித்தான். அவனது கபாலம் இரும்புப் பெட்டியில் இடித்தது. பிடிப்பு விடப்பட்ட சக்கைப்போல் தரையில் அப்படியே குனிந்து சாய்ந்தான். காலத்தின் கதியைச் சிறு சிறு சப்தங்கள் அறிவித்தன. வெளியிலிருந்து வரும் சப்தங்கள் பலவிதமாகக் குழம்பிக் கேட்டன. கடிகாரத்தின் 'டக் டக்' என்ற இடையறாத சப்தம் இந்தக் குழம்பிவரும் சப்த அலைகளின் முடிவற்ற முற்றுப்புள்ளிகள் போலச் சிதறின வெளியே தடதடவென்று ஓடும் ஒரு இளஞைனின் காலடிச் சப்தம்; மார்க்ஹீமைத் தனது சுற்று நிலைமைகளைக் கவனிக்கும்படி செய்து, அவனுடைய திக்பிரமை ஏற்ற உள் மனத்தை விழிக்க வைத்தது. மூலையில் நின்று அசைந்து எரியும் மெழுகுத்திரியின் ஒளி அறையில் சப்தமற்ற சலனத்தை உண்டு பண்ணியது. அகண்டாகாரமான கடலின் அலை இயக்கங்கள் போல, அறையில் குவிந்து கிடக்கும் சாமான்களின் சாயைகளும், இருட்டுப் படலங்களும், உச்சுவாச நிச்சுவாசத்தால் சுருங்கி விடுவதுபோல், விளக்கொளியின் அசைவினால் இயங்கிக்கொண்டிருந்தன. சீனத் தெய்வங்களும், படங்களும், அலைமீது தோன்றியசையும் பிரதிபிம்பங்கள் போல, நர்த்தனம் செய்து கொண்டிருந்தன. உட்கதவு திறந்து, உள்ளே ஒளிந்திருந்த இருள் திரட்சிகளின் வழியாக வெளியிலிருந்து எட்டிப் பார்க்கும் ஆட்காட்டி விரல் போன்ற, வெளிச்சக் கோட்டைக் காண்பித்தது. மார்க்ஹீமின் கண்கள் இந்தப் பயப் பிராந்திகளிலிருந்து திரும்பி, தனது செய்கையின் விளைவின் மீது விழுந்தது. அந்த உடலம் குவிந்து கை கால்களைப் பரப்பிக் கிடந்த வண்ணம், அது உயிருடன் இருக்கும்பொழுது எவ்வளவு கேவலமாக வாழ்ந்ததோ அதைவிடப் பன்மடங்கு கேவலமாக, கூம்பிச் சாம்பிக் கிடந்தது. கருமித்தனத்தின் எல் லையை விளக்கும் உடைகளில், கோரமாகக் கை கால்களை விரித்தபடி உமி மூட்டை மாதிரி கிடந்தான் அந்தக் கடைக்காரன். மார்க்ஹீம் அதைப் பார்ப்பதற்கு அஞ்சினான்! இருந்தாலும் அதில் என்ன இருக்கிறது பயப்படுவதற்கு? அவன், விழித்த கண் விழித்தபடி, அந்தக் கேவலமான உடல் பொதிந்த துணி மூட்டையை நோக்கிக் கொண்டிருக்கும்பொழுது, சிறிது சிறிதாகத் தேங்கும் இரத்தக் குளம், உணர்ச்சி ஏற்பட்ட குரல்களாக மாறிற்று. அது இங்குதான் கிடக்கவேண்டும். அதற்குச் சூட்சுமமான சலனங்கள் கிடையாது. அது கண்டுபிடிக்கும்வரை இங்குதான் கிடக்கவேண்டும். கண்டுபிடிக்கப்பட்டால் - பிறகு? இந்த உயிரற்ற சதை இங்கிலாந்து முழுவதிலும் எதிரொலித்து, ஒரு பெருங் கூக்குரலை எழுப்புமல்லவா? 'பிடி, பிடி' என்ற கூக்குரல்! இறந்தாலும், இறக்காவிட்டாலும் அது இன்னும் எதிரிதான். "மூளை அகன்றாலும் காலம் அதுதான்" என்று நினைத்தான். இவ்வார்த்தைகள் மனத்தில் ஆழமாகப் பதிந்தன. இச்செய்கை நிறைவேறிய காலம்; எதிரிக்கு முற்றுப்புள்ளி போடப்பட்ட காலம்; அது கொலைகாரனுக்குப் பிரதானமான வினாடியாகிவிட்டது! இவ்வெண்ணம் மனத்தைவிட்டு அகலவில் லை. வெளியிலிருந்து மெதுவாக எட்டும் விதவிதமான சப்தங்கள் மணிக்கூண்டின் கணீரென்ற ஒலியில் அமுங்கின. கோவில் மணிக்கூண்டு மத்தியானம் மணி மூன்று என்பதை உலோகத் தொனியில் ஆகாசத்தில் பரப்பியது. ஆயிரம் நாவுகள் அந்த நிசப்தமான அறையில் ஒலிப்பது அவனைத் தடுமாறச் செய்தது. மனக்குறளியைக் கட்டுப்படுத்தி, ஒருவாறு எழுந்து, மெழுகுதிரி விளக்கை எடுத்துக்கொண்டு, அங்குமிங்குமாக நடந்தான். அவன் பின்புறத்தில் சாயைத் திரள்கள் முற்றுகையிட்டன. தற்செயலாகக் கண்ணில்படும் பிரதிபிம்பங்கள் அவன் உள்ளத்தையே தூக்கிவாரிப் போட்டன. சுற்றிலும் இருந்த பலவிதமான நிலைக் கண்ணாடிகளில் அவனுடைய பிரதிபிம்பங்கள், ஆயிரம் ஆயிரம் ஒற்றர்கள் போல், அவனைக் கவனித்தன. அவன் கண்களே அவர்கள் இருப்பதைக் கண்டுபிடித்தன. மெதுவாகத் தரையில் படும் அவன் காலடிகள் அறையின் நிசப்தத்தில் பன்மடங்காகப் பெருகி ஒலி செய்தன. இருந்தாலும் அங்கிருந்த சாமான்களை எடுத்துத் தனது ஜேபிகளை நிறைக்க ஆரம்பித்தான். ஆனால் அவனது உள்மனம் அவன் செய்யும் காரியங்களில் ஆயிரம் குற்றங்களை இடித்திடித்துக் கண்பித்தது. வரும் சமயம் இதைவிடச் சிறிது அமைதியான காலமாக இருந்திருக்க வேண்டும்; வேறிடத்தில் இருந்ததாக நிரூபிக்கச் சாட்சியம் முன்பே தயாரித்திருக்க வேண்டும்; கட்டாரியை உபயோகித்தது தவறு; ஆனால் முன் ஜாக்கிரதையாக அந்தக் கடைக்கரனைக் கையநயும், காலையும் கட்டி, வாயில் துணியைத் திணித்திருந்தால் போதும் - இந்தக் கொலை அனாவசியம். இல் லை! தைரியமாக அவனது வேலைக்காரனையும் சேர்த்துக் கொலை செய்திருக்க வேண்டும். மொத்தமாக இப்பொழுது செய்ததற்கு மாறாக எல்லாவற்றையும் நடத்தியிருக்க வேண்டும். தவறு செய்தது செய்தாகி விட்டது. அதற்காக உயிரைக் கொடுத்து உள்ளத்தைத் தின்னும் கவலைப்பேய்க்கு இடம் கொடுக்கவேண்டிய அவசியம் இல் லை; சென்ற காலத்தை மாற்றியமைக்க யாருக்கு முடியும்? இச்சமயத்தில் இவ்வளவு தீவிரமான மனஓட்டத்தின் முன்பு, மோட்டு வளைகளில் சரசரவென்று ஓடும் எலியின் சப்தம், சித்த உலகத்தின் திசை மூலைகளில் தறி கெட்ட மிருக பயத்தை எழுப்பியது. போலீஸ்காரனின் கைகள் அவன் தோள்களின் மீது இரும்புக் கவசம் மாதிரி விழும். தூண்டிலில் அகப்பட்ட மீன் போல அவனது நரம்புகள் துள்ளித் துடிக்கும்; அவன் கண் முன்பு, ஒன்றின் பின் ஒன்றாகத் துக்காந்தகாரமான பல விஷயங்கள் ஊர்வலமாகத் தாவிச் செல்லுகின்றன. அவற்றில் நீதிஸ்தலம், சிறைச்சாலை, தூக்குமேடை, கறுப்பு சவப்பெட்டி - எல்லாம் தெரிந்தன. முற்றுகையிடும் எதிரிக் கணங்கள் போல் தெருவில் நடமாடும் மனிதர்களின் மீதிருந்த பயம் அவன் சித்தத்தை அமுக்கியது. இங்கு ஏற்பட்ட சண் டையின் சப்தம் சிறிதாவது அவர்கள் காதில் எட்டியிருக்க வேண்டும். உள்ளே என்ன நடக்கிறதென்ற ஆவல்தான். பின்னர் அவர்களைக் கதவைச் சுற்றி மொய்க்கும்படி செய்துவிடுமே! ஆமாம்! பக்கத்து வீடுகளில், கிரிஸ்மஸ் பண்டிகையைத் தன்னந்தனியாகக் கொண்டாட வேண்டிய தலைவிதியிருக்கிறவர்கள், பழைய நினைவுகளிலே பண்டிகையின் குதூகலத்தைத் திருப்தி செய்து கொள்ள வேண்டியவர்கள், இச்சிறு சப்தத்தைக் கேட்டுக் கேட்டு கூர்ந்து கவனித்துச் செவி சாய்த்துக் கொண்டுதான் உட்கார்ந்திருப்பார்கள். கூட்டம் நிறைந்த குடும்பமானால்தான் என்ன! தாயார் விரலைத் தூக்கிச் சைகை செய்தால் எல்லாரும் மௌனமாயிருந்து கேட்கத்தான் செய்வார்கள்! இவர்களுடைய இச்செய்கைகளால்தான் இவனது கழுத்துக்கயிறு பின்னப் படுகிறது. சில சமயம் தன்னால் வேகமாக நடக்க முடியாது என்று நினைத்தான். கையிலிருந்த விலையுயர்ந்த சாமான்கள் நடக்கும்பொழுது கணகணவென்று மணிபோல் ஒலித்தன. கடிகாரச் சப்தம் கூட அவனுக்கு அச்சத்தை அதிகரித்தது. அதை நிறுத்திவிடலாம் என்று நினைத்தான். அவனுடைய பயம் வேறு எல் லைக்குத் தாவியது. கடிகார ஒலி நின்றதும் அந்த அறையின் நிசப்தம் அவனுடைய பயப் பிராந்தியை அதிகப்படுத்தியது; தன் வீட்டில் பயமில்லாது இயற்கையாக நடப்பவன் போல் பாவனை செய்யவேண்டும் என்றும், பயந்து பதுங்கக் கூடாது என்றும், அவனுக்குப் பட்டது. அவன் மனம் பல பக்கங்களில் பயத்தால் உந்தப்பட்டது. சித்தத்தின் ஒரு பகுதி தைரியத்தையும் தந்திரத்தையும் விடாது கொண்டிருந்தது; மற்றொரு பகுதி அச்சத்தின் ஜுரத்தால் மூளைக் கோளாற்றின் எல் லைக் கோட்டில் அசைந்தாடிக் கொண்டிருந்தது. அவன் மனத்தில் ஒரு பிரமை ஆழமாக வேரூன்றியது. வெளியிலே ஆட்கள் நின்று உள்ளே என்ன நடக்கிறது என்று காரைச் சுவர்களைக் கடந்து இரகசியத்தை அறிய முயலுகிறார்கள் என்று அவன் மனம் நம்பிப் பயந்தது. ஆனால் வீட்டினுள் இவன் தனியாகவா இருக்கிறான்! தான் தனியாக இருப்பதாக அவனுக்குத் தெரியும். வேலைக்காரி வெளியே செல்லுவதை அவனே கண்ணால் பார்த்தான். அந்தக் கடையில் தனியாக இருப்பதில் சந்தேகம் இல் லை. ஆனால் அவனது கற்பனைக்கு அந்தக் கட்டிடத்தில் யாரோ மெதுவாக நடப்பது போல் பட்டது. சுற்றும் முற்றும் பார்த்துத் திக்பிரமை அடைந்தவன் போல விழித்துக்கொண்டு நின்றான். கடையிருந்த அறையில் வெளிச்சம் அதிகமில் லை; ஆனால் மங்கலான ஒளிப் பிழம்பின் மத்தியில், சாயை போல ஒன்று தோன்றவில் லையா? திடீரென்று தெருப் பக்கத்தில் யாரோ வெளிக்கதவைத் தடதடவென்று தட்டிக்கொண்டு கடைக்காரன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது கேட்டது. வெளியில் நின்ற ஆசாமி கொஞ்சம் குஷிப் பேர்வழி போலும்! கேலியாகவும் வேடிக்கையாகவும் கடைக்காரன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டு கதவைத் தட்டிக் கொண்டிருந்தான். மார்க்ஹீம் பயத்தால் பனிக்கட்டியாகச் சமைந்தான். அவன் கூக்குரலின் எல் லையைக் கடந்து நிசப்தக் கடலில் மறைந்தான். இந்தப் புயற் சப்தத்திலும் கேட்கக்கூடிய அவனது பெயர் வெறும் சப்த கோளமாக அர்த்தமற்று மறைந்தது. வெளியில் கதவைத் தட்டிய மனிதனும் நம்பிக்கையை யிழந்து அகன்றான். இந்தக் குற்றத்தைச் சுட்டிக் காட்டும் எல் லையிலிருந்து சீக்கிரத்தில் அகலவேண்டும். லண்டனின் எண்ணத்தொலையாத தொகுதியில் மறைந்து நாளின் மற்றொரு எல் லையில் கலங்கமற்ற துறைமுகமான படுக்கைக்குச் சென்றால்தான் பாதுகாப்பு உண்டு. இப்பொழுது ஒருவன் வந்தான். இதைவிட விடாக்கண்டனான மற்றொருவனும் வரக்கூடுமல்லவா? காரியத்தைச் செய்து அதன் பயனை அநுபவிக்காது போனால், முயற்சியும் சகிக்க முடியாத தோல்விதானே. மார்க்ஹீமுக்குப் பணம் அவசியம்; அதை எடுப்பதற்கு வழி சாவிதான். திறந்த கதவு வழியாக எட்டிப் பார்த்தான். அங்கு இன்னும் சாயைகள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. மனத்தில் சிறிதும் வெறுப்புத் தோன்றாது, (ஆனால் அவனது வயிறு சிறிது குமட்டல் எடுத்தது) தனது கை வேலையின் விளைவினிடம் நெருங்கினான். அதில் மனிதக் களை அகன்று விட்டது. அந்தப் பிரேதம் உமி மூட்டை மாதிரி மடிந்து தரையில் கிடந்தது. இருந்தாலும் அவன் மனது அதனிடம் நெருங்க ஒப்பவில் லை. அதைத் தொடுவதென்றாலோ அரோசிகமாக இருந்தது. சவத்தைத் தோளைப் பிடித்து உயர்த்தி மலத்திக் கிடத்தினான். பிரேதம், தொடுவதற்கு இலேசாக, கொளகொளவென்று நழுவி விழுந்தது. முகத்திலே களையே இல் லை. மெழுகுப் பதுமை மாதிரி யிருந்தது. ஒரு புறக் கபோலத்தில் இரத்தக் கறை படர்ந்திருந்தது. மார்க்ஹீமுக்கு அந்தக் கறை ஒன்றுதான் வெறுப்பைத் தந்தது. அந்தக் கறை அவனது மனத்தைக் குழந்தைப் பருவத்தில் பதிந்த நினைவுக் களஞ்சியத்திற்குச் செலுத்திச் சென்றது. அன்று ஒரு பொம்மலாட்டக்காரன், கொட்டு மேளத்துடன், கொலைகாரப் பதுமைகளைக் காண்பித்துப் பணம் பறித்துக் கொண்டிருந்தான். அவன் காட்டிய அந்தப் பதுமைச் சவங்களைப்போல் கிடந்தான் இந்தக் கடைக்காரனும். அன்று கேட்ட பாட்டின் மெட்டு அவன் மனத்தில் உதித்தது; முதன் முதலாக அவனது நெஞ்சத்தில் உதைப்புத் தட்டியது. மன வெறுப்பின் குமட்டலும், காலில் பலவீனமும் அவனைத் தாக்கின. இவற்றை அகற்றி, மனத்தை உடனே திடப்படுத்த வேண்டும். இந்த நினைவுகளினின்று மிரண்டு விலகுவதைவிட நேர் நின்று மனத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு எதிர்ப்பதே நல்லது என்று புலப்பட்டது. சற்று நேரத்திற்கு முன்பு பேசி, வாதாடி, ஆசைகளின் நிலைக்களமாக இருந்த முகம், வெளிறி, ஒன்றுமற்ற வெறுமையின் பகைப்புலமாக இருந்தது. கடிகாரத்தின் பெண்டுலத்தில் விரலை வைத்து அதன் ஓட்டத்தைத் தடை செய்வது போல், இந்த ஜீவ துண்டத்தின் போக்கும் தடை செய்யப்பட்டது. எவ்வளவு தான் துருவி ஆராய்ந்தாலும் அவன் உள்ளத்தில் தன் குரூர செய்கையின் இடிப்புத் தோன்றாதிருப்பதின் காரணம் அவனுக்குப் புலப்படவில் லை. உலகத்தை இன்பமயமாக்கக் கூடிய வசதிகள் எத்தனையோ இருந்தும், இத்தனை காலமும் வாழாத, ஆனால் இப்பொழுது உயிரற்றுக் கிடக்கும், அந்தக் கடைக்காரன் பேரில் சிறிது இரக்கம் தோன்றியது. மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு கையில் சாவிக் கொத்தை எடுத்த வண்ணம். கடையின் திறந்த உட்கதவின் பக்கம் சென்றான். வெளியே மழை சிறு தூறலாக ஆரம்பித்துப் பிறகு தடதடவென்று பொழிய ஆரம்பித்தது. நீர் கொட்டும் அந்தகாரக் குகையில், சாயையின் திரட்சிகளும், வெளி மழையின் எதிரொலிப்புக்களும் உள்ளத்தைத் திணற வைக்கும் நிசப்தத்தைப் போக்கின. மார்க்ஹீம் கதவண் டை சென்றவுடன் யாரோ ஒருவர் பின்வாங்குவது போலும், ஒரு சாயை அகலுவது போலும் அவனுக்குப் பட்டது. எங்கு பார்த்தாலும் யாரோ ஒருவர் நடமாடுவது போலும், தனது செய்கைகளைக் கவனிப்பது போலும், மார்க்ஹீம் மனத்தில் ஒரு பிரமையை உண்டாக்கியது. கதவைத் தாண்டி மேல் மெத்தைக்குச் சென்றான். அங்கு சிறிது வெளிச்சம் அதிகமாக இருந்தது. வெளிக் குரல்கள் மழைச் சப்தத்துடன் கலந்து சிறிது அதிகமாகக் கேட்டன. ஆனால் அவனைத் தொடர்ந்து கவனிக்கும் அந்தச் சூட்சுமப் பேர்வழியின் ஓசை அகன்றபாடில் லை. சுவர்களும், கூரையும் கொலைக்களத்திலேயே தன் னைச் சிறை செய்வதாக மார்க்ஹீம் நினைத்தான். இவ்விடத்தை விட்டு ஓடிச்சென்று தனது படுக்கையில் ஒளிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு பயப்பிராந்தி அவனை உந்தித் தள்ளியது. இயற்கையின் தடை செய்ய முடியாத நியதிகளுக்குப் பயந்தான். ஒரு வேளை அவை தனது குற்றத்தின் சாட்சிகளை வெளிப்படுத்துவதற்காகவே காப்பாற்றி வைத்திருந்தால், மனித ஜீவியத் தொடர்பின் பிணிப்புச் சங்கிலி அற்று விடுமோ என்ற அமானுஷ்ய பயம். அவனை உந்தியது. இந்தக் கோரமான சதுரங்க விளையாட்டை இயற்கையுடன் மிகவும் திறமையாகவே விளையாடினான். தோற்கடிக்கப்பட்ட கொடுங்கோலன், தனது வீழ்ச்சியில் மற்றவர்களையும் சேர்த்து இழுப்பது போல, நியதிகளின் நிலைக்களமான இயற்கை, சதுரங்கப் பலகையைக் கவிழ்த்து, தொடர்பின் பிணிப்பை வெட்டினால்? நெப்போலியன் போன்ற பெரிய வீரர்களும் இந்த இயற்கையின் விபரீதமான சதிக்கு ஆளானார்கள். மார்க்ஹீமுக்கும் அந்தக் கதி ஏற்பட்டு, இப்பொழுது அவனது குற்றத்தைப் பொதிந்து வைக்கும் இருளும் சுவரும், தம் இயற்கைக் குணங்களை விட்டுவிட்டு, அவனுக்குச் சதி செய்தாலும் செய்யும். இவற்றிற்கே மார்க்ஹீம் பயந்தான். கடவுளைப் பற்றி அவன் அவ்வளவாகப் பயப்படவில் லை. மனித நாற்றமே இல்லாத அங்கு தனக்கு நியாயம் கிடைக்கும் என்று நினைத்தான். கதவைச் சாத்திவிட்டு, அந்த அறையில் தாறுமாறாகக் கிடக்கும் சாமான்களிடையில், தான் தேடிவந்த வஸ்துவைத் துருவி ஆராய்ந்தான். ஆனால் அவனது கடைக்கண் சாத்தப்பட்ட கதவின் மீது இருந்து கொண்டே இருந்தது. இப்படித் தேடுவதிலேயே ஒரு சோர்வு. அந்த வேலை வியர்த்தம் என்ற நினைப்பு ஏற்பட்டது. மார்க்ஹீமுக்கு மழையின் ஒரே விதமான சளசளப்பு மனத்தில் சிறிது மகிழ்ச்சியை உண்டாக்கியது. திடீரென்று எங்கிருந்தோ ஒரு பியானோவின் இன்னிசை பிரார்த்தனைக் கீதமாக எழுந்தது. அதைத் தொடர்ந்து களங்கமற்ற குழந்தைக் குரல்கள் பிரார்த்தனைக் கீதங்கள் பாடின. புன்சிரிப்புடன் அதைக் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டே சாவிகளை ஆராய்ந்தான். அவனுடைய உள்ளம் அவனது குழந்தைப் பருவத்தின் நினைவுகளில் ஓடித்திளைத்தது. ஆமாம், அது எவ்வளவு சுகமான இன்பமான காலம்! என்ன விளையாட்டுக்கள், ஆட்டங்கள் - மோட்ச லோகந்தான் அது! மார்க்ஹீம் உள்ளம் இவ்வாறு சென்ற காலத்திலும் தற்சமயச் செய்கையிலும் திளைத்துக் கொண்டிருக்கும்பொழுது, இறுகிய பனிக்கட்டியும், உருகிய இரும்புக் குழம்பும் ரத்தக் குழாய்களில் தொடர்ந்து செலுத்தப்பட்டது போல துள்ளிப் பதறித் துடித்துக் கல்லாயச் சமைந்து நின்றான். அவன் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. பயம் என்ற கிட்டி அவனை இறுக்கியது. என்ன? இறந்தவன் நடந்து வருகிறானா, அல்லது அரசாங்க அதிகாரிகள் அவனைத் தூக்கு மேடைக்கு இழுத்துச் செல்ல வந்துவிட்டனரா? கதவு திறந்தது. ஒரு முகம், அவனை ஏறிட்டுப் பார்த்து, வெகு நாள் பழக்கம்போல் புன்சிரிப்புடன் தலையை அசைத்தது. பின்னர் கதவு சாத்திக் கொண்டது. பயம் கட்டை மீறியது. மார்க்ஹீம் ஊளையிட்டான். இந்தச் சப்தத்தைக் கேட்டு அந்த ஆசாமி திரும்பி வந்து, "என் னைக் கூப்பிட்டாயா?" என்றான். விழித்த கண் விழித்தபடியே, மார்க்ஹீம் அந்த அந்நியன் முகத்தை நோக்கினான். கண்களில் மேகப் படலம் போல் என்னவோ மறைத்தது. அந்த அந்நியனது உருவமும், சுற்றி நிற்கும் பதுமைகள் போல், விளக்கொளியில் அசைந்தாடியது. சமயாசமயத்தில் அந்த அந்நியன் தன் னைப் போல இருப்பதாக நினைத்தான். ஆனால் அவனுடைய உள்ளத்திலுள்ள பயத்தின் பிண்டம் போல, எதிரிலிருப்பவன் மனிதனல்லன், தெய்வமும் அல்லன் என்ற எண்ணம் தோன்றி அமுங்கியது. "பணத்தைத் தேடுகிறாயா?" என்றது அவ்வுருவம்! குரலும் பேச்சும் சாதாரண மரியாதையை வழங்கின. மார்க்ஹீம் பதிலளிக்கவில் லை. "வேலைக்காரி சீக்கிரத்தில் வந்துவிடுவாள். மார்க்ஹீமை அவள் இங்கு கண்டால் பின் என்ன நடக்கும் என்று நான் சொல்ல வேண்டுவதில் லை!" என்றது அவ்வுருவம். "என் னைத் தெரியுமா?" என்றான் கொலைகாரன். "உன்பேரில் வெகுகாலமாக எனக்குப் பிரியம்; உனக்கு உதவி செய்யவேண்டும் என்று உன் னைப் பல நாளாகத் தேடி வருகிறேன்." "நீ யார்? பைசாசமா?" என்றான் மார்க்ஹீம். "நான் யாராக இருந்தால் என்ன? அதனால் நான் உனக்குச் செய்யப்போகும் உதவி தடுக்கப்படப் போகிறதா?" என்றது அவ்வுருவம். "நீ யார் என்று தெரிந்தால்தான் உனது உதவிக்குப் பயன் உண்டு. உனக்கு இன்னும் என் னைத் தெரியாது. நல்ல காலமாக உனக்கு என் னைத் தெரியாது!" என்றான் மார்க்ஹீம். "உன் னை எனக்குத் தெரியும்; உனது ஆத்மாவை எனக்குத் தெரியும்" என்றது அவ்வுருவம். "தெரியுமா? அவதூற்றின் விபரீதந்தான் எனது வாழ்க்கை. இயற்கையின் ஓர் பெரும் பொய்யாக நான் ஜீவித்தேன். எல்லோரும் அப்படித்தான்; உண் மையில் எல்லோரையும் அமுக்க முயலும் இப்பொய் வேடத்தை விட நல்லவர்கள்தான். தம்மைக் கட்டுப்படுத்தும் திடம் மட்டிலும் இருந்தால் எல்லோரும் வீரர்கள்தான்; அடியார்கள்தான். நான் எல்லோரையும் விடக் கீழ்த்தரமானவன். காரணம் எனக்கும் என் கடவுளுக்கும் தெரியும். அவகாசம் இருந்தால் எனது அந்தரங்கத்தை வெளியிடுவேன்." "எனக்கா?" என்றது அவ்வுருவம். "உனக்கும், எல்லாருக்கும். நான் ராக்ஷச ராஜ்யத்தில் பிறந்து வளர்ந்தேன். சந்தர்ப்பம் என்ற அரக்கன் என் னை என் தாயின் கர்ப்பத்திலிருந்து பிய்த்து எறிந்தான். எனது செய்கையைப் பார்த்து நியாயம் பேசுகிறாய். சிறிது எனது உள்ளத்தைப் பார்க்கலாகாதா? இவ்விதமான பாவச் செயல்கள் எனக்கு எவ்வளவு வெறுப்பு அளிக்கின்றன! உனக்குத் தெரியவில் லையா? கோணல் வாதம் எனது மனத்தைக் குழப்பிக் கெடுக்கவில் லை என்று உனக்குத் தெரியவில் லை? நான் விருப்பில்லாது இக்காரியங்களைச் செய்யும் பாபிஷ்டன் என்று உனக்குத் தெரியவில் லையா?" என்றான் மார்க்ஹீம். "நீ சொல்லுவதெல்லாம் மிகவும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. இவற்றைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில் லை. காலமாகிறது. வேலைக்காரி வேகமாக வந்து கொண்டிருக்கிறாள். அவள் வருவது தூக்குமேடையே உன் னை எதிர் நோக்கி வருவது என்று உணர்ந்து கொள். உனக்கு நான் உதவி செய்யட்டுமா? பணம் எங்கிருக்கிறது என்று உனக்குச் சொல்லட்டுமா?" "அதற்குப் பதிலாக நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டான் மார்க்ஹீம். "உனக்கு எனது உதவி ஒரு கிரிஸ்மஸ் வெகுமதி." "உன் கையிலிருந்து நான் ஒன் றையும் ஏற்க மாட்டேன். தாகத்தால் மடிவதானாலும் உன் கையிலிருந்து ஒரு சிரங்கை தண்ணீர்கூட வேண்டாம்." "நீ வேண்டுமானால் சாகும்பொழுது பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்; அதற்கு நான் தடை செய்யவில் லை" என்றது அவ்வுருவம். "நீ அதன் சக்தியை நம்பவில் லை போலும்!' என்றான் மார்க்ஹீம். "நான் அப்படி ஒன்றும் சொல்லவில் லை. எனது பார்வை வேறு. இத்தனை நாள் எனது சேவையைச் செய்துவிட்டு, நான் கடைசியாக உதவியளிக்க வரும்பொழுது அதையும் ஏற்றுக்கொண்டு, கடைசியில் பாவ மன்னிப்புடன் இறப்பதே சரி. இது உன் பின்னால் நிற்கும் பலவீனர்களுக்கு ஊக்கமளிக்கும். எனது உதவியை ஏற்றுக் கொள். நான் வரும்பொழுதும் அப்படிப்பட்ட ஒரு இடத்திலிருந்துதான் வருகிறேன். அது மிகவும் இலகு," என்றது அவ்வுருவம். "நீ என்ன நினைக்கிறாய்? பாவம்! பாவம்! பாவம்! இதைச் செய்வதைத் தவிர எனக்கு வேறு ஆசையில் லையா? மனிதர்களைப்பற்றி உன் அநுபவம் இதுதானா? கொலைக் குற்றம் மனத்தின் ஈரத்தை ஒரேயடியாக வற்ற அடித்து விடும் என்பது உன் நினைப்பா?" என்று பதறினான் மார்க்ஹீம். "எனக்குக் கொலை என்பது பிரத்தியேகப் பகுதியில் லை; எல்லாப் பாவங்களும் கொலைதான். வாழ்க்கை என்பதே ஒரு போர் என்று உனக்குத் தெரியாதா? உன் வம்சம் - அதுதான் இந்த மனித வர்க்கம் - முழுகும் கப்பலில் ஒன் றையொன்று பிய்த்துத் தின்னும் எலிக் கூட்டங்கள்தானே! பாவங்களை நான் செய்கையாகக் கவனிப்பதில் லை. பிந்திய வாழ்க்கையை அவற்றின் தொடர்ச்சியாகப் பின்பற்றுகிறேன். தாயை எதிர்க்கும் மகளின் செய்கைக்கும் உனது கொலைச் செய்கைக்கும் என்னிடம் வித்தியாசம் கிடையாது. நான் ஒரு மனிதனுடைய பாவங்களை மட்டிலுமா தொடர்ந்து கவனிக்கிறேன் என்று நினைக்கிறாய்? புண்ணியத்தையும் கவனிக்கத்தான் செய்கிறேன். இவை இரண்டும் சங்கார தெய்வத்தின் பட்டயத்தின் இரு முனைகள். பாவம் செய்கையில் இல் லை; குணத்தில் தான். பாவிகள் என் அன்பர்கள்; அவர்களுடைய செய்கையின் விளைவுகள்தான் காலத்தின் நீர்வீழ்ச்சியில் மிகுந்த பலனை யளிப்பவை; நீ கடைக்காரனைக் கொன்றதினாலும், நீ மார்க்ஹீம் ஆனதினாலும் உனக்கு உதவி செய்யப்போகிறேன்" என்றது அவ்வுருவம். "நான் என் உள்ளத்தைத் திறந்து காண்பிக்கிறேன். இச் செய்கை எனது கடைசிக் குற்றம். எத்தனையோ விஷயங்களை உணர்ந்தேன். இதுதான் எனது மகத்தான அநுபவம். இன்று இச்செய்கையிலிருந்து புதிய மனவுறுதியும் சக்தியும் பெற்றிருக்கிறேன். இனி எனக்கு விடுதலைதான். என் செய்கைகளுக்குத் தளை கிடையாது. அதோ இருக்கிறது எனது பழைய வாழ்வு; இனி என் விதியின் நரகத்தை நோக்கிச் செல்வேன்" என்றான் மார்க்ஹீம். அந்த அந்நிய உருவம் தனது முழு பலத்தையும் உபயோகித்து அவனைத் தூண்டியது; மார்க்ஹீம் தனது கடைசிச் சக்திவரை போராடினான். கடைசியாக, "என் கடமை என்னவென்று எனக்குத் தெரிகிறது; என் கண்கள் திறந்துவிட்டன," என்றான் மார்க்ஹீம். அச்சமயம் வெளிக்கதவு தடதடவென்று ஒலித்தது. "அதோடு வேலைக்காரி வந்துவிட்டாள்; கீழே சென்று எஜமானனுக்கு உடலுக்கு குணமில் லை என்று சொல்லி அவளையும் உள்ளேயழைத்து உன் கை வேலையைக் காண்பி! சீக்கிரம்!" என்றது அவ்வுருவம். "இனியுமா? துன்பம் இழைக்காவிட்டால் சும்மா இருப்பதற்கு எனக்குத் திறமையிருக்கிறது. எனது நல்ல நோக்கங்கள் எல்லாம் பசையற்ற பாலைவனமாயின. ஆனால் எனக்கு இன்னும் சக்தியும் மனவுறுதியும் இருக்கிறது. பார்!" என்றான் மார்க்ஹீம். எதிரிலிருந்தவன் முகத்தில் ஒரு தெய்வீகக் களை, அன்பு கனிந்த பார்வை ஏற்பட்டது. இந்த மாறுதல்களைக் கவனியாது கீழே இறங்கினான். இப்பொழுது வாழ்க்கை அவனை ஆசையுடன் இழுக்கவில் லை. மங்கிய ஒளியில் பிரேதத்தைக் கவனித்தான். கடைக்காரனைப் பற்றிய நினைவுகள் மனத்தில் குவிந்தன. வெளியே தடதடவென்ற தட்டல் மறுபடியும் கேட்டது. புன்சிரிப்புடன் கதவைத் திறந்து, எதிரிலிருந்த வேலைக்காரியைப் பார்த்து, "எஜமானரைக் கொன்றுவிட்டேன்; போய்ப் போலீஸாரை அழைத்து வா!" என்றான் மார்க்ஹீம்.

புதுமைப்பித்தன் மூலம் மேலும் புத்தகங்கள்

72
கட்டுரைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகள்
0.0
புதுமைப்பித்தன் மொத்தம் 108 சிறுகதைகள் எழுதியுள்ளார். அதில் அவர் காலத்தில் 48 மட்டும் பிரசுரமாயின. 1940-ல் புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. புதுமைப்பித்தன் 98 கதைகளை எழுதியுள்ளார். அவர் மணிக்கொடியில் எழுதிய 29 கதைகளைப் புதுமைப்பித்தன் கதைகள் என்ற பெயரில் நவயுகப் பிரசுராலயம் வெளியிட்டுள்ளது. ஆறுகதைகள், நாசகாரக் கும்பல், பக்த குசலோ என்ற அவரது பிற நூல்களையும் அதே நிறுவனம் வெளியிட்டுள்ளது. கலைமகள் பதிப்பகம் காஞ்சனை தொகுதியையும், ஸ்டார் பிரசுரம் ஆண்மை என்ற தொகுதியையும் வெளியிட்டன. ஐந்திணைப் பதிப்பகம் புதுமைப்பித்தனின் மொத்தச் சிறுகதைகளையும் வெளியிட்டது. அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் புதுமைப்பித்தனின் அனைத்துச் சிறுகதைகளையும் வெளியிட்டுள்ளது.
1

1. ஆஷாட பூதி

2 January 2024
0
0
0

மோலியர் (1622-1673) பதினேழாவது நூற்றாண்டில், பிரான்ஸில் நாடகக்காரன் என்றால், மதம் அவனைத் தள்ளிவைத்தது. பிரார்த்தனை - பிரசாதத்தைப் பெறுவது என்றால் விசேஷ சிபாரிசின் பேரில் நடக்க வேண்டிய காரியம். செத்தால

2

2. ஆட்டுக் குட்டிதான்

2 January 2024
0
0
0

ஜேம்ஸ்ஹானலி – இங்கிலாந்து  செக்கச் செவேலென்றிருக்கும் அந்த பஸ், ஏக இரைச்சலுடன் அந்த வளைவைத் திரும்பியது. சூழ்நிலை தாங்கிய அமைதியான வண்ணக் கலவைகளுக்குச் சவால் கொடுப்பது மாதிரி அந்தச் சிகப்பு கண்களை உற

3

3. அம்மா

2 January 2024
0
0
0

கே. பாயில்  பாதை நெடுகலாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், அதற்குச் சின்னக் கிளை ஒன்றும் இருந்தது. இருந்தாலும் மறுபக்கத்தில் ஓடும் சிற்றோடையில் இறங்கி அக்கரைக்குப் போக வேண்டிய அவசியமே இல் லை. மலை வ

4

4. அந்தப் பையன்

3 January 2024
0
0
0

மாக்ஸிம் கார்க்கி  இந்தச் சின்னக் கதையை எப்படிச் சொல்லுவது என்று புரியவில் லை. அவ்வளவு எளிதானது. நான் வாலிபப் பருவத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் தெருக் குழந்தைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு ஊருக்கு வெளியே

5

5. அஷ்டமாசித்தி

3 January 2024
0
0
0

டென்ஷொ வம்சத்தின் ஆதிக்கத்தின்போது, கியாட்டோ என்ற வடக்குப் பிராந்தியத்தில் குவான்ஷின் கோஜி என்ற வயோதிகன் வாழ்த்து வந்தான். நீண்டு நெஞ்சை மறைக்கும் வெள் ளைத் தாடியுடன், ஷிண்டோ குருக்கள்மார் போல உடையணிந

6

6. ஆசிரியர் ஆராய்ச்சி

3 January 2024
0
0
0

ஸின்கிளேர் லூயிஸ்  டாக்டர் ஸ்லீக் பிரம்மச்சாரி; அதிலும், வழுக்கை விழவிருக்கும் வாலிபப் பிரம்மச்சாரி. அவர் இராஸ்மஸ் கலாசாலையில் சரித்திரமும் பொருளாதாரமும் கற்பித்து வந்தார். அதாவது மேடைமீது ஏறி நின்று

7

7. அதிகாலை ( பகுதி 1)

3 January 2024
0
0
0

நிக்கோலாய் டிக்கனோவ்  1918-ம் வருஷம் ஆகஸ்டு மாதத்தில் துருக்கியர் பாக்கூ என்ற இடத்தை முற்றுகை இட்டார்கள். மென்ஷ்விக் நிர்வாகத் தலைமை போர்டின் ஐந்து தலைவர்கள் மூளையும் சுழன்றது. சர்வ குழப்பம்; அது விஷ

8

7.அதிகாலை (பகுதி 2)

3 January 2024
0
0
0

இராத்திரி ஒரு ஊரில் தங்கினதும், ஆலி ஹஸன், டாஷா பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு சளசளவென்று மணிக்கணக்காகப் பேசிக் கொட்டினான். உத்யோகஸ்தரின் விதவை மெய்ஸ் அரிசி ரொட்டியை அசைபோட்டுக் கொண்டிருந்தாள். வி

9

7. அதிகாலை ( பகுதி 3)

3 January 2024
0
0
0

"பொய்யாயிருக்கலாம், ஆனால் சித்திரவதையில், உன் னைக் காட்டிக்கொடுப்பேன்; என் னைக் காட்டிக்கொடுத்துக் கொள்வேன்; எனக்கு ஞாபகத்துக்கு வந்தவர்களையெல்லாம் காட்டிக்கொடுப்பேன். உனக்குச் சித்திரவதை என்றால் எப்ப

10

7. அதிகாலை (பகுதி 4)

3 January 2024
0
0
0

"ஆஹா அப்படியா. பாக்ஷாதான் வயிற்றுக் கடுப்பால் கழிந்து கொண்டிருக்கிறாரே. இன்னும் கொஞ்ச காலத்துக்கு அவரைப் பற்றித் தொந்திரவில் லை. தவிரவும், உன்னுடைய ஆயுதங்களை உன்னிடம் கொடுத்துவிடவேண்டும் என்று உத்திரவ

11

8. பலி

4 January 2024
1
0
0

ஜோஸப் நையரு – ஹங்கேரி  மோல்டேவியா நோக்கி நிற்கும் மலைச் சிகரங்களிலே அந்த வருஷத்தில் மந்தைகளுக்குக் கரடிகளால் வெகு தொல் லை ஏற்பட்டு வந்தது. வில் - பொறி வைத்து எல்லாம் முயன்று பார்த்ததும் ஒன்றும் பயன்ப

12

9. சித்திரவதை

4 January 2024
1
0
0

எர்னஸ்ட் டாலர்  "உனக்கு இன்னும் ஏதாவது விருப்பம் இருக்குமா?" சாகக் கிடக்கும் வாலிபனைப் பார்த்து ஸ்டட்கார்ட் இரகசியப் போலீஸ் உத்தியோகஸ்தர் இவ்வாறு கேட்டார். வாலிபனுடைய 'வெறிச்சோடிய' கண்கள் ஜன்னலின் கம

13

10. டைமன் கண்ட உண்மை

4 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர் (1564-1616)  ஆங்கில நாடகாசிரியர், ஷேக்ஸ்பியரைத் துவிதப் பிரம்மா என்பார்கள். உலகத்தின் சிருஷ்டி தத்துவத்தைப் புரிந்து கொண்டவர் போல் தமது பாத்திரங்களை நடமாட விடுவார். அவர் உலகில் பேய்களும்

14

11. இனி

4 January 2024
1
0
0

இ. எம். டிலாபீல்ட்  இதுவரை நடக்காததைப் பற்றி ஒரு கதை எழுதினால் என்ன?... அந்தக் கதையின் போக்கில் அறிந்து கொள்ள முடியுமானால்... பதினைந்து இருபது வருடங்களுக்கப்புறம்: ஓல்ட் பெய்லியில் (நியாயஸ்தலம்) நடக்

15

12. இந்தப் பல் விவகாரம்

4 January 2024
1
0
0

மைக்கேல் ஜோஷெங்கோ – ருஷ்யா  எங்கள் சகா எகோரிச்சுக்குப் பல், தொந்திரவு கொடுத்து வந்தது. என்ன காரணத்தினாலோ விழ ஆரம்பித்தது. காலம் என்ற ஒன்று இருக்கே, அதற்கும் இந்த விவகாரத்துக்கும் சம்பந்தமிருக்கலாம்.

16

13. இஷ்ட சித்தி ( பகுதி 1)

4 January 2024
1
0
0

ஹான்ஸ் பலாடா – ஜெர்மனி  முதலிலேயே தெரிவித்து விடுகிறேன். அப்புறம் குறை சொல்லாதீர்கள். என் மனைவி பெயர் இட்ஸன் பிளாஸ். உச்சரிப்பதற்குக் கொஞ்சம் சிரமந்தான்; ஆனால் அவள் மீது இருந்த ஆசையில், அதன் சிரமம் எ

17

13. இஷ்ட சித்தி ( பகுதி 2)

4 January 2024
1
0
0

"பின்பு கிரிஸ்மஸ் சமயத்தில் அதை உடைத்து... பிறகு என்னவென்பது உங்களுக்குத்தான் தெரியுமே!" என்றாள்! "உனக்கென்ன பைத்தியமா? இந்த வருஷம் போனஸ் கீனஸ் கிடையாது என்று ஹீபர் சொல்லுகிறான். முதலாளி வருமானம் இல்

18

14. காதல் கதை

5 January 2024
1
0
0

வில்லியம் ஸரோயன்  "இந்தப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுகிறீரா அல்லது அந்தப் பக்கமாக உட்காருகிறீரா?" என்று சிகப்புக் குல்லா* கேட்டான். (* நம்மூர்களில் சிகப்புத் தலைப்பாய் என்றால் போலீஸ்காரன் என்பது

19

15. கலப்பு மணம்

5 January 2024
1
0
0

கிரேஸியா டெலாடா – இத்தாலி  அன்றிரவு சுகமாக இருந்தது. பூலோகத்தைக் கடுங்குளிரினால் சித்திரவதை செய்வதில் சலியாத உறைபனிக் காலத்துக்கும் ஒரு ஓய்வு உண்டு என்பதை அந்த ஏப்ரல் இரவு காட்டியது. இதுவரை பனிக்கட்ட

20

16. கனவு (பகுதி 1)

5 January 2024
1
0
0

ஐவான் டர்ஜனீப் – ருஷியா அந்தக் காலத்தில் நான் என் தாயாருடன் ஒரு சிறு துறைமுகப் பட்டினத்தில் வசித்து வந்தேன். எனக்கு அப்பொழுதுதான் பதினேழு வயது நிரம்பிற்று. தாயாருக்கு முப்பத்தைந்து வயது. சின்ன வயதிலே

21

16. கனவு ( பகுதி 2)

5 January 2024
1
0
0

8 என் தாய் எனக்குக் கூறிய கதை எனதுள்ளத்தை எப்படிச் சிதறடித்தது! முதல் வார்த்தையிலிருந்தே அறிந்து கொண்டேன். அவள் வாயிலிருந்து தவறுதலாக நழுவிய வார்த்தை எனது உத்தேசத்தைத் திடப்படுத்தியது. எனது கனவில் நா

22

17. காரையில் கண்ட முகம்

5 January 2024
1
0
0

இ.வி. லூக்காஸ் – இங்கிலாந்து  நேற்று சாயங்காலம் எனது நண்பன் டாப்னி வீட்டில் நடந்ததை மறக்க முடியவில்லை. அந்த அநுபவம் இன்னும் என் னை உறுத்திக் கொண்டிருக்கிறது. அன்றைய தினம் பேச்சு பூத பைசாசங்களைப் பற்ற

23

18. கிழவி

5 January 2024
1
0
0

ஸெல்மாலேகர்லாப் – ஸ்வீடன்  மலைப்பாதை வழியாக ஒரு கிழவி நடந்து கொண்டிருந்தாள். மெலிந்து குறுகியவள்தான். எனினும் முகத்தின் வண்ணம் வாடவில்லை. சதைக் கோளங்கள் மரத்துத் தொய்ந்து திரித் திரியாகத் தொங்கவில்லை

24

19. லதீபா

6 January 2024
0
0
0

மோஷி ஸ்மிலான் ஸ்கி  "லதீபாவின் கண்களை நீ பார்த்திருக்காவிட்டால், கண்களுக்கு எவ்வளவு அழகு இருக்க முடியும் என்பது உனக்குத் தெரிந்தே இருக்காது." இப்படி நான் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம். ச

25

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்( பகுதி 1)

6 January 2024
0
0
0

1 அவர்களுடைய மூத்த பெண்ணின் படிப்பு அடுத்த மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது. வயசும் 'அப்படி இப்படி' என்று சீக்கிரத்தில் பதினெட்டு ஆகிவிடும். டோ க்கியோவிலேயே நாகரீகத்திற்குப் பெயர் போன இடத்தில் நிலம் வாங

26

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்(பகுதி 2)

6 January 2024
0
0
0

5 வரன்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுவதற்கு நாள் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு 'கபூக்கி' நாடகக் கொட்டகையில் தரகர் இரண்டு 'பாக்ஸ்' களை அமர்த்தினார்; இரண்டு குடும்பங்களும் பக்கத்த

27

21. மணிமந்திரத் தீவு

6 January 2024
0
0
0

ஷேக்ஸ்பியர்  நடுக்கடலிலே நாலைந்து கப்பல்கள் தத்தளித்துத் தடுமாறுகின்றன. கடலலைகள் சினங்கொண்ட கருநாகங்கள் போல ஆயிரமாயிரமாகப் படம் விரித்துத் தலை சுற்றி மோதுகின்றன. உயிரை வாங்கவரும் கால தூதர்களின் கோரச்

28

22. மணியோசை

6 January 2024
0
0
0

ஜப்பான்  "நான் சாவதற்குப் பயப்படவில் லை" என்றாள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மனைவி. "இப்பொழுது என் கவலை எல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நான் போன பிறகு யாரைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?" வேதனை

29

23. மார்க்ஹீம்

6 January 2024
0
0
0

ஆர்.எஸ். ஸ்டீவன்ஸன் – இங்கிலாந்து  "ஆமாம்! எங்கள் வியாபாரத்திலே பலவிதம் உண்டு; வாங்க வருகிறவர்களில் சிலருக்கு ஒன்றுமே தெரியாது; வெறும் 'அப்பாவிகள்'. அப்பொழுது எங்கள் அநுபவத்திற்கு ஏற்ற லாபத்தைப் பெறு

30

24. மிளிஸ்

8 January 2024
0
0
0

பிரட் ஹார்ட் – அமெரிக்கா  ஸிராநிவாடா மலைத் தொடரில் சமவெளிக்குப் பக்கத்தில் இருக்கும் சிவந்த மலைகளில்தான் "ஸ்மித் பாக்கெட்" என்ற இடம் இருக்கிறது. அது ஒரு சுரங்க ஸ்தலம். அதாவது ஒரு காலத்தில் தங்கம் இரு

31

25. முதலும் முடிவும் ( பகுதி 1)

8 January 2024
0
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  மாலை ஆறு மணியிருக்கும். அந்த அறையில் சுமாரான இருட்டு. 'பச்சை ஷேட்' போட்ட மேஜையின் மீதிருந்த ஒற்றை விளக்கு, தரையில் விரித்த துருக்கிக் கம்பளத்திலும், மேஜையின் மீது சிதறிக் கிடந்த,

32

25. முதலும் முடிவும் ( பகுதி 2)

8 January 2024
0
0
0

"பிரேதத்தின் மேலிருந்த எதையும் எடுத்தாயா?" "நாங்கள் சண்டை போட்டுக் கொள்ளும்பொழுது இது அவன் பையிலிருந்து விழுந்தது." அது வெறும் தபால் கவர். தென் அமெரிக்கத் தபால் குறியிட்டு, "பாகட்ரிக் வாலன், ஸைமன் ஓட்

33

26. நாடகக்காரி

8 January 2024
0
0
0

ஆண்டன் ஷெக்காவ் – ருஷியா  அவள் ஒரு நாடகக்காரி. அந்தக் காலத்திலே அவளுக்கு யௌவனக் களை மாறவில் லை. குரல் கணீர் என்று இருக்கும். பலர் வந்து போவார்கள். ஆனால் குறிப்பாக நிக்கோலாய் பெட்ரோவிச் கோல்ப்பக்கோவ்

34

27. நட்சத்திர இளவரசி

8 January 2024
0
0
0

ஒரு ஆசிரியர் - தென் கடல் தீவுகள்  "நம்மிடம் இருப்பதையெல்லாம் சாப்பிட்டு விடுவோம்" என்றான் டபூதி. அவனது சகோதரனான அய்ட்டோ சந்தேகத்துடன் ஏறிட்டுப் பார்த்தான். "அப்படியானால் நமக்கு மிகுந்த பலம் உண்டாகிவி

35

28. ஓம் சாந்தி! சாந்தி!

8 January 2024
1
0
0

எலியா எஹ்ரன் பர்க்  (யுத்தம் மனித சமூகத்தின் 'உடனுறை நோயாகவே' இருந்து வருகிறது. தனது தற்காப்புக்காக மனிதன் சமூகம் என்ற ஒரு ஸ்தாபனத்தை வகுத்தான்; பிறகு அதனைக் காப்பாற்றத் தன் னைப் பலிகொடுக்கத் தயாரானா

36

29. ஒரு கட்டுக்கதை

9 January 2024
0
0
0

பிரான்ஸ் காப்கா – ஆஸ்திரியா  எலி சொல்லுகிறது... "ஐயோ, உலகம் தினம் தினம் எவ்வளவு சின்னதாகிக் கொண்டே வருகிறது! முதலில் ரொம்பப் பெரிதாக, நான் பயப்படும்படியாக, அவ்வளவு பெரிதாக இருந்தது. நான் ஓடிக்கொண்டே

37

30. ஒருவனும் ஒருத்தியும்

9 January 2024
0
0
0

லூயிகய்ல்லூ – பிரான்ஸ்  மச்சுப் படிக்கட்டு முற்றத்தில் இறங்கியது. அங்கே, அதாவது கடைசிப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, அன்று காலை முழுவதும் அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் ரொம்பவும் நெட்டை. ஒற்றை ந

38

31. பைத்தியக்காரி

9 January 2024
0
0
0

மொப்பஸான் – பிரான்ஸ்  "ஆமாம், நீ சொல்வது முன்பு பிரான்சிற்கும் ருஷியாவிற்கும் சண் டை நடந்ததே, அப்பொழுது நடந்த பயங்கரமான சம்பவத்தை என் நினைவிற்குக் கொண்டு வருகிறது" என்று கூறத் தொடங்கினார் முஸே டி' என

39

32. பளிங்குச் சிலை

9 January 2024
0
0
0

வாலரி புருஸ்ஸாப் வாலரி புருஸ்ஸாப் (1875-1924) புரட்சி யுகமான நவீன காலத்து ருஷ்யப் புது எழுத்தாளர் கோஷ்டியைச் சேர்ந்தவர். இந்தக் கதை புரட்சிக்கு முந்திய காலத்தைப் பகைப் புலமாகக் கொண்டு, எழுந்த கற்பனைக

40

33. பால்தஸார் (பகுதி 1)

9 January 2024
0
0
0

அனதோல் பிரான்ஸ் – பிரான்ஸ்  "கிழக்கே அரசர்களுக்கு மந்திர சக்தியுண்டு என்று நினைத்தார்கள்" -தெர்த்தூலியன் அக்காலத்திலே எதியோபியாவை பால்தஸார் ஆண்டு வந்தான். கிரேக்கர் அவனை ஸாரஸின் என்று அழைத்தனர். அவன்

41

33. பால்தஸார்( பகுதி 2)

9 January 2024
0
0
0

ஜனநடமாட்டமில்லாத பாலைப் பிரதேசங்களில் மத்தியானம் வரை நடந்தனர். உச்சியில் சூரியன் வந்ததும், திருடர்கள் கைதிகளை விடுவித்து, பாறையின் நிழலில் உட்காரச் சொல்லி, கெட்டுப்போன ரொட்டித் துண் டைக் கொடுத்தனர். ப

42

34. பொய்

9 January 2024
0
0
0

லியேனீட் ஆன்ட்ரீவ் – ருஷியா  "நீ சொல்வது பொய், அது உனக்குத் தெரியும்!" "அதற்கேன் இப்படிக் கத்தவேண்டும்? பக்கத்திலிருக்கிறவர்களுக்கும் தெரிய வேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது." இப்பொழுதும் பொய் சொன்னாள்

43

35. பூச்சாண்டியின் மகள்

10 January 2024
0
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து  அவள் பெயர் பத்தேமா. அவள் பாக்தாத் நகர் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தாள். அவள் நீலத்தாடிவாலாவின் புதல்வி. கண்டதும் காம வெறியை எழுப்பும் மோகனாங்கி. அவளது மதி முகத்தின் வ

44

36. ராஜ்ய உபாதை( பகுதி 1)

10 January 2024
0
0
0

ஹென்றிக் இப்ஸன் (1828-1906)  ஷேக்ஸ்பியருக்கு நிகராக உலகம் கொண்டாடும் சிறந்த நாடக ஆசிரியர் ஹென்ரிக் இப்ஸன். தர்மத்துக்கு வெற்றி அளித்தார் ஷேக்ஸ்பியர்; தர்மம் ஏன் வெற்றி பெற வேண்டும் என்ற கேள்வியை எழுப

45

ராஜ்ய உபாதை( பகுதி 2)

10 January 2024
0
0
0

"அந்தக் கடிதம்..."  "இரு இரு, விரோதிகளைப் பற்றி நான் ஒரு பட்டியல் கொடுத்தேனே. நீ அதிகாரத்தை விடத் தயாராக இருப்பதுபோல நானும் என் எதிரிகளை மன்னிக்க ஆசைப்படுகிறேன். அந்தப் பட்டியலை இந்த நெருப்பில் போட்ட

46

37. ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு

10 January 2024
0
0
0

நதானியேல் ஹாதார்ண் – அமெரிக்கா  எல்லைப்புறத்தைப் பாதுகாப்பதற்காக 1725-ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்ட படையெடுப்பு சரித்திரத்திலேயே கற்பனைக்கு இடந்தரும் பகுதி. அதை எல்லாரும் சாதாரணமாக 'லவல் சண்டை' என்று கூற

47

38. சாராயப் பீப்பாய்

10 January 2024
0
0
0

எட்கார் அல்லன் போ – அமெரிக்கா  அவன் ஆயிரம் குற்றங்களைச் செய்தான்; ஆனால் என்னால் இயன்றவரை பொறுத்தேன். அவன் என் னைத் திட்டி அவமதித்தான். இனி, பழிக்குப் பழி தீர்க்க வேண்டியதுதான் என்று மன உறுதி கொண்டேன்

48

39. சகோதரர்கள்

10 January 2024
0
0
0

யூஜோ யாம மோட்டோ – ஜப்பான்  'அண்ணா, இது நல்லதுதானே?' 'எங்கே, இப்படிக் கொண்டா பார்ப்போம்' என்று மூத்தவன் தன்னிடம் காட்டப்பட்ட காளானைப் பார்ப்பதற்காகத் திரும்பினான். 'ஊங் ஹும், நல்லதில் லை; நான் பிடுங்க

49

40. சமத்துவம்

10 January 2024
0
0
0

ஒரு ருஷிய ஆசிரியர்  நீலக் கடலின் அடிமட்டத்திலே, பிரமாண்டமான மீன் ஒன்று, இரை தேடிக்கொண்டு, உல்லாசமாக நீந்தி வருகிறது. எதிரே ஒரு சின்ன மீன் - அதன் உணவு. பெரிய மீன் அதை விழுங்குவதற்காக, தன் வாயை அகலத் த

50

41. ஷெஹர்ஜாதி - கதை சொல்லி

11 January 2024
0
0
0

ஹென்றி டிரெக்னியர் – பிரான்ஸ்அன்று இரவு ஷெஹர்ஜாதி நன்றாகத் தூங்கவேயில் லை. பகல் முழுவதும் சுட்டுப் பொசுக்கும் வெய்யில். அதனால் மூச்சுவிடக்கூட முடியாதபடி அவ்வளவு இறுக்கமாக இருந்தது. சிலந்தி வலையையும் த

51

42. சிரித்த முகக்காரன்

11 January 2024
0
0
0

அவன் சோகமாக இருக்கிறான், தனியாக இருக்கிறான் என்று சொல்லிவிடுவது எளிது; ஆனால் அவன் எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்தோடேயே இருக்கிறான். அப்படிச் சொல்லிவிட்டாலும், அவனைப் பாட்டிலில் போட்டு அடைத்து லே

52

43. சூனியக்காரி

11 January 2024
1
0
0

ரோனால்டு ஆக்டன் – இங்கிலாந்து அப்பொழுது இலையுதிர் காலம். நானும் ஜேக் மக்கின்ஸனும் பக்கத்து மிராசுதாருடைய காட்டில் திருட்டுத்தனமாகக் கண்ணி வைத்து வேட்டையாடச் சென்றோம். அவனுக்கு வயது இருபதுக்கு மேல

53

44. சுவரில் வழி

11 January 2024
0
0
0

ஆர். முரே கில்கிரைஸ்– இங்கிலாந்து அன்று முற்பகல் சிறிது உஷ்ணமாகவே இருந்தது. பசும்புல் செழித்து வளர்ந்த மைதான வெளியில், ஆங்காங்கு குத்துக்குத்தாகப் பெயர் தெரியாத புஷ்பங்கள் எல்லாம் கணக்கற்று

54

45. தாயில்லாக் குழந்தைகள்

11 January 2024
0
0
0

பிரான்ஸிஸ் பெல்லர்பி – இங்கிலாந்து வேர்த்து விருவிருக்க, கால்கள் தள்ளாட, இரண்டு குழந்தைகள் நடந்து சென்றன. பையன், பதினொரு வயசிருக்கும். முன்னால் நடந்தான். பெண் எட்டு வயசுபோல இருக்கும். பாதை முன் ம

55

46. தையல் மிஷின்

11 January 2024
0
0
0

இவான் கூம்ஸ் அங்கு மனிதனைத் தூங்காது விழிக்க வைத்திருக்க ஒருவித சந்தடியும் கிடையாது. இருந்தாலும், அந்தச் சிறிய கட்டிலில் சுருண்டு முடங்கிக்கொண்டு, நெடுநேரமாக நிசப்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

56

47. தந்தை மகற்காற்றும் உதவி

11 January 2024
1
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து டான் ஜுவான் தன் மாளிகையில் விருந்து மண்டபத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று தரை வெடித்தது. நரக தூதர்கள் வந்து அவனை இழுத்துக் கொண்டு போய் விட்டார்கள்

57

48. தெய்வம் கொடுத்த வரம்

12 January 2024
1
0
0

பியோர்ண்ஸ்டர்ண் பியோர்ண்ஸன் – ஸ்வீடன்  இந்தக் கதையில் வருகிறவன் தான் அவனுடைய ஊரிலேயே ரொம்பவும் பெரிய பணக்காரன். தவிரவும் அந்த வட்டாரத்திலே அவனுக்குத்தான் ரொம்பவும் சொல் சக்தி உண்டு. அவன் பெயர் தார்ட்

58

49. தேசிய கீதம் (பகுதி 1)

12 January 2024
0
0
0

எல்.ஏ.ஜி. ஸ்டராங் – இங்கிலாந்து  லாரி நிறையத் துருப்புக்கள் கன வேகமாகச் சென்று சில விநாடிகள் கூடக் கழியவில் லை. அது இப்பொழுதுதான் நிகழ்ந்தது. வெடியின் அதிர்ச்சி பரீலியை அப்படியே கலங்க வைத்துவிட்டது.

59

49. தேசிய கீதம் (பகுதி 2)

12 January 2024
0
0
0

ஆம். அமெரிக்காவில் ஓர் பெருத்த வெற்றி. நியூயார்க்கில் இரண்டு ஆட்டம்; பிறகு அமெரிக்கா முழுவதிலும் ஓர் நீண்ட வெற்றி யாத்திரை; முடிவில் ஹாலிவுட்டில் ஒரு பிலிம்; சமாதானம் ஏற்பட்ட இரண்டொரு மாதங்களுக்கப்புற

60

49. தேசிய கீதம் (பகுதி 3)

12 January 2024
0
0
0

இந்தச் சம்பவம் பரீலியின் கோபத்தை அதிகரித்தது; ஆனால் பொதுப்படையாக்கியது. இதுவரை தன் தேசவாசிகளான புரட்சிக்காரர் மீது கோபங்கொண்டிருந்தான். இப்பொழுதோ இந்த இடத்தின் பேரிலேயே கோபம். அவன் நெஞ்சில் ஆழமாகப் பய

61

50. துன்பத்திற்கு மாற்று

12 January 2024
1
0
0

ஸீனர் லூயிஜி பிரான்டல்லோ – இத்தாலி  நமது வாழ்க்கையை, முக்கியமாக அதில் காணும் துன்பங்களை, வான வெளியிலே தேஜோமயமாகச் சுழன்று செல்லும் நட்சத்திர மண்டலங்களுடன் ஒப்பிட்டுப்பாரும், அப்பொழுது அது துச்சமாகத்

62

51. துறவி

12 January 2024
0
0
0

ராபர்ட் நியூமான் – ஜெர்மனி  "நான் முதல் முதலில் ஐரோப்பாவிலிருந்து இந்தக் கீழப் பிரதேசங்களுக்கு வந்தபொழுது அது நடந்தது" என்று அவன் ஆரம்பித்தான். அவன் எங்கள் கப்பலின் காப்டன்; பெயர் வான்டர்லான். ஜாதியி

63

52. உயிர் ஆசை (பகுதி 1)

13 January 2024
1
0
0

ஜாக் லண்டன் – அமெரிக்கா  அவர்கள் இருவரும் நொண்டி, நொண்டி ஆற்றங்கரை வழியாகத் தள்ளாடி நடந்தார்கள். கத்தி போல ஊசியாக, தெத்துக்குத்தாகக் கிடந்த பருக்கைக் கற்கள் காலை வெட்டின. அவர்களிருவரும் சோர்ந்து விட்

64

52. உயிர் ஆசை (பகுதி 2)

13 January 2024
1
0
0

நாட்களும் ஓடின. காட்டு ஜீவராசிகள் ஓடியாடித் திரியும் பள்ளத்தாக்குகளை அடைந்தான். மான் கூட்டம் ஒன்று. இருபது இருக்கும். துப்பாக்கி லெக்குக்கு ரொம்பவும் அருகில் துள்ளி ஓடின. அவற்றை விரட்டிக் கொண்டே ஓடினா

65

52. உயிர் ஆசை (பகுதி 3)

13 January 2024
1
0
0

பாறை மீது படுத்துக் கிடந்தவன் சுயப் பிரக்ஞையுடன் விழித்துக் கொண்டான். சூரியன் காய்ந்து கொண்டிருந்தது. காட்டு மான்குட்டிகளின் சப்தமும் தூரத்தில் கேட்டது. சித்தத்தின் அடிவானத்தில் மழையும் காற்றும் பனியு

66

53. வீடு திரும்பல்

13 January 2024
1
0
0

பீட்டர் எக் – நார்வே  மாலுமி பெடர் ஸோல்பர்க்குடைய மனைவி வசித்த குடிசை, ஜனங்கள் பொதுவாக 'லூக்கள் தெரு' என்று சொல்லுவார்களே, அதற்கெதிரில் இருக்கிறது. குடிசையின் ஜன்னல் நன்றாகத் திறந்திருந்தது. அப்பொழுத

67

54. ஏ படகுக்காரா!

13 January 2024
1
0
0

மிக்கெய்ல் ஷோலொகோவ்  அந்த காஸக் கிராமத்தைச் சூழ்ந்து வளர்ந்து நின்ற சாம்பல் பூத்த பசிய நிறம் படைத்த செடிச் செறிவின்மீது சூரியவொளி தெம்பாக விழவில் லை. அருகே ஒரு பரிசல் துறை இருந்தது. அங்கே படகேறி டான்

68

55. யாத்திரை

13 January 2024
1
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  நான் ஹாமர்ஸ்மித் பஸ்ஸின் மேல்தட்டிலிருந்து பார்க்கும் பொழுது, அவர்கள் ஆல்பர்ட் ஹால் மெமோரியல் எதிரில் இருந்த ஒரு வீட்டு வாசல்படியில் உட்கார்ந்திருந்தனர். அன்று வெகு உஷ்ணம். வாடகை

69

56. எமனை ஏமாற்ற...

13 January 2024
1
0
0

மொங்காக்கு ஷோனின் என்ற மகடனான புத்த பிக்ஷு தான் எழுதியுள்ள கியோ-ஜியோ-ஷிந்ஷோ என்ற கிரந்தத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: "ஜனங்கள் வழிபடும் தெய்வங்களில் பல துர்தேவதைகளாகும். அவலோகிதன், தர்மம், பிக்ஷுக்கள

70

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்

13 January 2024
1
0
0

தாமஸ் வுல்ப் – அமெரிக்கா  ஈவிரக்கமற்றுக் கொதிக்கும் அந்த வருஷம் ஆகஸ்டில் யுத்தம் நின்றது. யுத்த தேவதையின் பவனியின்போது நான்கு கணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஒன்று லாங்லிவியல்; விமான மைதானத்தில் உள்ள குத

71

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்(பகுதி 2)

13 January 2024
1
0
0

தயங்கித் தயங்கி மறியும் உடலொட்டிய இந்த வேட்கை, தங்கள் ஜோலியைச் செய்து இவர்கள் நடாத்தும் வாழ்வினிடையிலும் வெளிக்கு அகோரக் கேலிக் கூத்தாகத் தோன்றினாலும், மேஜைக்கு மேஜை போஷகர் தேடி நடக்கும்போது சர்வ ஜாக்

72

58. தர்ம தேவதையின் துரும்பு

13 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர்  குரலிலே அதிகார தோரணையும் அதனுடன் பயமும் கலந்திருந்தது. கடுங்குளிரிலே, இருட்டின் திரைக்குள்ளே, ஈட்டிபோலப் பாய்ந்தது அக்குரல். 'நீ யார்? முதலில் அதைச் சொல்' என்று பதில் கேள்வி பிறந்தது, தி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்