இந்தச் சம்பவம் பரீலியின் கோபத்தை அதிகரித்தது; ஆனால் பொதுப்படையாக்கியது. இதுவரை தன் தேசவாசிகளான புரட்சிக்காரர் மீது கோபங்கொண்டிருந்தான். இப்பொழுதோ இந்த இடத்தின் பேரிலேயே கோபம். அவன் நெஞ்சில் ஆழமாகப் பயம் தட்டியது. எப்பொழுதும் அவனை விட்டு அகலாத வழக்கமாயுள்ள விவேகம், அபாயத்தின் எல் லைக் கோடுகளை அவன் அணுகிவிட்டான் என்பதைத் தெளிவாக எடுத்து உணர்த்தியது; ஆனால் அதைப் பற்றியே மனத்தைக் குழப்பி அங்கலாய்த்துக் கொண்டிருக்க அவன் வெகுவாக விரும்பவில் லை. தன் தொழிற் பெருமைக்கு ஏற்பட்ட அவமானத்தை எண்ணிப் பிரமாதமாகக் கவலை கொண்டான். அவன் அவமானப் படுத்தப்பட்டான். உயிர் தப்பியது அதிர்ஷ்டவசந்தான். ஆனால் சீர்தூக்கிப் பார்க்கும்பொழுது, அவமானம் அதைவிட எத்தனையோ மடங்கு பிரமாதமாகத் தெரிந்தது அவனுக்கு. அவனை அவமதித்தது இங்கிலீஷ்காரர்கள். இவ்விபரத்தை அவன் மறந்துவிட விரும்பினான். சகிக்கக் கூடாத சம்பவங்கள் டப்ளினில் நடந்து விட்டன; கூடிய சீக்கிரத்தில் அதை விட்டுப் புறப்பட்டால் போதும் என்று ஆகிவிட்டது அவனுக்கு. இனி திரும்பவும் வரவே கூடாது. மறுநாட் காலை தெருக்களில் செல்லும்போதெல்லாம் சர்வ ஜாக்கிரதையாக ஜனநெருக்கடி அதிகமாக உள்ள பாதைகள் வழியாகவே சென்றான். கிராப்டன் தெருவிலுள்ள ஒரு ஹோட்டலில் காப்பி; வழிநெடுக மிகுந்த உற்சாகத்துடன் செல்லும் ஜனக் கூட்டத்தைக் கண்டால் ஒரு வெறுப்புற்ற பார்வை; மத்தியானம் சாப்பிடும்பொழுது அவன் குடியிருந்த வீட்டுக்காரி, முந்திய இரவு நடந்த கலாட்டாவைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். அப்புறம், அதிகாலையிலிருந்து வரப்போவதாகப் பயமுறுத்திக் கொண்டிருந்த மழை. பரீலி எங்கும் போகாமல் வீட்டிலேயே உட்கார்ந்து வாசித்துக் கொண்டும், கடிதங்கள் எழுதியும், பொழுதைக் கழித்தான். விலாசதாரர்களுக்கெல்லாம், சங்கேதமாக, இக்கலகத்தைப்பற்றிக் குறிப்பிட்டான். 'காகிதத்தில் எழுதிவைப்பது அபாயம்; நேரில் விஸ்தாரமாகச் சொல்லுவது நலம்' என்று சூசிப்பித்தான். மாலை ஆறு மணி சுமாருக்கு மழை ஓய்ந்தது. மேகத்திரை சிறிது விலகி, மேகத்தால் கழுவப்பட்ட நிர்மலமான நிலவொளியைச் சிறிது காண்பித்தது. வானத்தில் மேகப்பிளவு அகன்றது; உள்ளே சிவந்தது; நகரத்தின் சிகரங்களில் முட்டிக் கொள்ளுமோ என்ற நிலையில் காணப்பட்ட சூரியன், தன் கடைசிச் சந்தர்ப்பத்தை உபயோகித்து வான வீதியில் தன் ஒளிச் சொத்துக்களை எல்லாம் அப்படியே அள்ளிக் கொட்டினான். பளிச்சென்று சுவரில் விழுந்த ஒளித் துண்டம் பரீலியை எழுப்பியது. ஜன்னல் கதவை விரியத் திறந்து, சல்லாப்புடவை மாதிரி முகத்தில் தழுவும் மந்தமாருதத்தைப் பருகினான். வெளியே உலாவிவிட்டு, தியேட்டர் பக்கத்தில் எங்காவது ஒரு ஹோட்டலில் சாப்பிட்டால் போகிறது என்று தீர்மானித்து, அவசர அவசரமாக ஹாட்டையும் கோட்டையும் எடுத்துக்கொண்டு, படிக்கட்டுகளில் இறங்கியவாறே வீட்டுக்காரியிடம் வெளியே போவதாகச் சொல்லிவிட்டு, கதவைப் படார் என்று அடைத்துக் கொண்டு புறப்பட்டான். வீட்டுக்காரியின் புலம்பல் அவன் காதில் விழவில் லை. ஏதோ ஓர் உணர்ச்சி அவனை ஆற்றங்கரைப் பக்கம் தள்ளிக்கொண்டு சென்றது. நடைபாதையில் கல் பதித்த இறங்கு துறைப் பக்கம் அணுகியதும், வெறும் ஆனந்தத்தால் அவனது சுவாசம் தடைப்பட்டது. மறுபடியும் அதே மஹேந்திர ஜாலம்! வெறும் அழுக்கும் சகதியும் நிறைந்த லிப்பி நதி ஒரே ஒளிப்பாதையாக மாறிக் கிடந்தது. மற்றும் ஓர் அற்புதமும் நிகழ்ந்தது. எங்கிருந்தோ திடீரென்று பல குரல்கள் குழம்பிய கோஷம் வானத்தைப் பிளந்தது; மறுபடியும் வானைப் பிளக்கும் அந்தக் கோஷம்; இப்பொழுது வெற்றி முழக்கமாகி, சூரியனின் கடைசிக் கிரணத்துடன், அது கவிந்து மூடும் மேகப் படலத்தைக் கிழித்துத் துருவும் வெற்றி முயற்சியுடன் லயித்தது. அப்புறம் பக்கத்துத் தெருக்களிலிருந்து மடைதிறந்த வெள்ளம்போல மனிதக் கும்பல்; ஓர் எதிர்க்க முடியாத சக்தியால் உந்தித் தள்ளப்பட்டதுபோல் வந்து இறங்கு துறைத் தளவரிசைகள் மீது பரந்து நிறைந்தது. ஜனங்கள் பக்கத்துத் தெருக்களிலிருந்து விழுந்தடித்து ஓடி வந்தனர்; கும்பலாகவும், தனித்தனியாகவும், தள்ளாடிக் கொண்டும், பின்னிருப்போர் தள்ள முன்னிருந்தவர்கள் தடுமாறவும் ஓடி வந்தனர். ஆனால் துறையில் முன்னேறி ஒழுங்காகக் கால் வைத்து நடந்தனர். சிறிது நேரத்திற்கு முன் குழம்பிய வெறும் ஜனக்கும்பலாக ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு ஓடிவந்த கூட்டம், வெற்றியின் அணிவகுப்பாக மாறியது. அதே உணர்ச்சி அவர்களைத் தூண்ட, அவர்களது லயமற்ற கூச்சல் ஒழுங்குபட்டு ஐக்கியமாக, ஒரு பயங்கரத்துடன் ஓங்கியது. ஆண்களும் பெண்களுமாக ஐந்நூறு பேர், இறங்கு துறைப் பாதையின் வழியாக, தங்கள் எதிர்ப்பின் கீதமான படை வீரன் பாட்டைக் கோஷித்துக் கொண்டு சென்றனர். பாட்டு, சமுத்திர கோஷம்போல உயர்ந்து பக்கத்துச் சுவர்க் கூரைகளைத் தாக்கி, நாதக் கனல்களாகச் சிதறி, ஒலி ஒளி இவற்றின் பேய்க் கனவுகளாக உதிர்ந்தன. பரீலி தன் னையும் மீறி ஓலமிட்டான். பக்கத்துச் சுவரை எட்டிப் பார்த்தான். அவன் உள்ளத்தில் ஏதோ ஒன்று கட்டுக்களை மீறியது. கண்களில் நீர் சுரந்தது. கோஷிக்க முயன்றான்; பாட முயற்சித்தான். கோஷ்டியின் முதல் அணி இவனண் டை வந்தது. ஒரு பெண்; தலை மயிர் குலைந்து ஒரு கண் ணை மறைத்தது. வியர்வையால் மின்னியது. அவன் பாடும்பொழுது இவன் கையை எட்டிப் பிடித்தாள். இவனும் அணிவகுப்பில் கலந்தான். மகிழ்ச்சியின் - புகழின் - ஒரு பகுதியாக இழுத்துச் செல்லப்பட்டான், அவன் இதயம் உயர்ந்தது; இதுவரை நாடக அரங்க வெற்றி அளிக்காத ஓர் குதூகலத்தின் எக்களிப்பின் உச்ச நாடியை எட்டியது. பரீலி அரை மைல் வரை அந்த ஊர்வலத்தோடு இழுத்துச் செல்லப்பட்டான். மாலையில் இருக்கும் வேலை நினைவுக்கு வரவே கையை இழுத்துக்கொண்டு ஒரு பக்கத்துச் சந்தில் நழுவினான். 'எங்கிருக்கிறோம்' என்பதை உணர்ந்து கொள்ள அவனுக்குச் சிறிது நேரமாயிற்று. அவனது உள்ளம் இருந்த நிலையில் அதைப்பற்றி அவன் அவ்வளவு பிரமாதமாகக் கவலை கொள்ளவில் லை. எப்படியானாலும் உத்தேசமாக நதிக்கு நேராக, அது செல்லும் திக்கில் சென்றால் வழி பிடிபட்டுவிடும் என்பது நிச்சயம். சாப்பிடக் கூட முடியவில் லை; அவ்வளவு உணர்ச்சி வேகம். அவசர அவசரமாகச் சாப்பிட்டான். சமீபத்தில் தான் பங்கெடுத்துக்கொண்ட சம்பவங்களை நினைக்க உணர்ச்சித் தீ மூண்டெழுந்தது. அவற்றைப் பற்றி நினைக்கும்பொழுது மூச்சுத் திணறியது; நாடி அதிர்ந்தது. என்ன நடந்தது என்று அவனுக்கே இன்னும் தெரியவில் லை. ஆனால், இதுவரை தான் தன் னைத் தெரிந்து கொள்ளவில் லை என்பதை உணர்ந்தான். அவனுள் ஏதோ விடுதலை பெற்றது - அல்ல - ஏதோ அவனை விடுவித்தது. அவனது உண் மைச் சொரூபம் அன்று வெடித்துக் கொண்டு உருப்பெற்றது. இந்த உணர்ச்சியை அநுபவிக்கும்பொழுதே, இதைப்பற்றித் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் பொழுதே, அவனது இரண்டாவது தன் மை, நாடக அரங்கில் தன் ஒவ்வொரு இயக்கத்தையும் அதீதமாக நின்று கவனிக்கும் தன் னை, அவனது உள்ளத்தில் ஒரு மூலையில் இருந்து அபிப்பிராயம் சொல்ல ஆரம்பித்து விட்டது. அவன் - அதாவது, அத்தன் மை - பால் பரீலி தனது தேசீய உணர்ச்சியையும், தான் பிறந்த நாட்டையும் மறுபடியும் கண்டுபிடிப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தது. பரீலி தன் வாழ்க்கையிலேயே முதன் முதலாக, இந்த 'மெய்க்காப்பாளனை' எதிர்த்து, தன் இதய பூர்வமான உணர்ச்சிக்காகவும், தன் உரிமைக்காகவும், வெறும் தனி மனித ஜீவியத்திற்காகவும் போராடினான். 'இல்லவே இல் லை' என்று சொல்லிக் குனிந்த வண்ணம் முன்னேறி நடந்தான். எதையும் இரக்கமற்ற சிந்தையுடன் மேற்பார்வை செய்யும் தொழிலையே இயற்கையாகக் கொண்ட பால் பரீலியின் நடிகத் தன் மை, அவனது உள்ளத்தில் புதிதாகப் பிறந்த தேச பக்தியைக் கேலி செய்து, இலகுவில் கொன்று விட முடியும். ஆனால், அதை எதிர்த்துப் போராடினான் பால் பரீலி. அவன் உள்ளத்தில் நடைபெற்ற போராட்டம் ஏக்கத்தையே வளர்த்தது. வானத்தை அளாவிய இரவின் குளிர் அவனது உள்ளத்தைக் கவ்வியது. "உன் உணர்ச்சி இதுவரை எதிலும் நிலைத்திருந்ததில் லை, நிலைத்திருக்கவும் செய்யாது; உனக்கு இல்லாத தன் மையை ஏன் இருப்பதாகப் பாவனை செய்கிறாய்? உனது தொழில் நடிப்பு; கடைசி வரை அதோடு இருந்துகொள், போதும்!" என்றது அந்த விகாரப் புத்தி. உள்ளத்தின் உணர்ச்சி வேகத்தைக் குளிரவைக்க முயலும் இந்த விபரீத விவேகத்தை அமுக்கிக் கொல்ல மல்லாடிக்கொண்டு நடக்கும் பரீலி ஒரு மூலையில் திரும்பினான். சோல்ஜர்களும் தனித் தனியாக அங்கொருவர் இங்கொருவராக, ரஸ்தாவின் பாதசாரித் தளங்களில் சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் நிற்கின்றனர் என்ற நினைப்பு எழாமலே, பரீலி, முன் வந்த வழியில் தொடர்ந்து நடந்தான். ஆனால் அவர்கள் இருக்கும் தெருக்களை விலகிச் சென்றான். அடுத்தபடி அவன் செல்ல விரும்பிய பாதை ஒரு சிறு சந்து. வழியில் வெளிச்சம் இல் லை. ஆனால் சந்தின் மறுகோடி நன்றாகக் கண்ணுக்குத் தெரிகிறது. தைரியமாக உள்ளே நுழைந்தான். வீட்டுக் கூரைகள் சந்தின் மேல் கவிந்து அமுக்க முயல்வது போல நின்றன. பாதிவழி சென்றதும், 'ஏண்டா இந்த வழியாக வந்தோம்' என்றாகிவிட்டது பரீலிக்கு! நின்றான். வீடுகள் அவன் உள்ளத்தின் ஓட்டங்களுக்குச் செவி சாய்ப்பது போல் நின்றன. திடீரென்று மறுபடியும் நின்றான். கீழ்த் தொண் டையில் பேசும் மனிதக் குரல்களின் குழம்பிய ஒலி - இரண்டு பேர் - ஆணும்பெண்ணும். சுய திருப்தியைக் காட்டும் மனிதனின் கனத்த குரல். அப்புறம் மூச்சுத் திணறிய பெண் குரல் - அதில் பயம் தொனித்தது. இவ்விருவரும் அவனுக்கு முன்னால், இருவீடுகளுக்கிடையில் ஒரு இடத்தில் நின்றிருந்தனர். "இல் லை ஐயா! அப்படி நான் செய்ததே இல் லை! ஆணைப்படிக்கி..." "ஸ்! சத்தம் போடாதே!" பரீலி பதுங்கிப் பதுங்கி முன்னால் சென்றான். அந்த இருட்டில் என்ன நடக்கிறது என்று கடைசியாக அவன் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தது. ஒரு சோல்ஜர் ஒரு பெண் ணைச் சுவரோடு மடக்கி நிறுத்தியிருந்தான். அவனது ரிவால்வர் அவளது நெஞ்சில் குத்தியது. அவள் பயப்பிராந்தியால் பேச்சற்று, சுவரோடு சுவராக ஒண்டிப்போய் நின்றாள். பரீலியின் ஜாக்கிரதா புத்தி அவனை எச்சரித்தது. "அப்படியா! என்ன நடக்கிறது பார்!" என்று மனத்தில் சொல்லிக்கொண்டான். அந்த சோல்ஜரோ அவளோ பார்க்கு முன், பரீலி சோல்ஜரின் பின் பக்கமாய் பதுங்கிப் பதுங்கி நெருங்கி விட்டான். அந்தத் தடியன் குரல் கனத்தது. அந்தப் பெண்ணின் முகத்தருகில் முகம் வைத்தது போல நெருங்கி நின்று மெதுவாகப் பேசினான். அவனுக்கு இவன் நெருங்குவது காதில் விழவில் லை. அவனது தசைக் கோளங்கள் இறுகி விம்மின. பரீலி அசையாமல் பதிய வைத்து நின்றான். அந்தப் பெண்ணின் ஒரு அசைவு அவன் கண்களில் விழுந்தது. சோல்ஜரும் அதை கவனித்துவிட்டான். அவன் பேச்சு நின்றது. தலையைத் திருப்பப் போகிறான். அந்த க்ஷணத்தில் பரீலி அவன் மீது பாய்ந்தான். சோல்ஜரின் இறுகிய குரல்வளையில் ஓலமொன்று வெளிவந்தது. பின்புறமாகத் தள்ளாடி வளைந்தான்; பரீலியின் கைகளைப் பிடிக்க முயன்றான். பரீலிக்கு ஆவேசமான எக்களிப்பு மிகுந்த கோபத்தைத் தவிர, எதிரியை வீழ்த்திட வேண்டிய பிளான் ஒன்றும் கிடையாது. எலியைப் பிடித்த நாய் அதை உதறுவது போல அவனை உதறினான். வலக்கையைத் தூக்கி சோல்ஜரின் மூஞ்சியில் ஒரு இறுக்கு இறுக்கினான். சோல்ஜரின் குல்லாய் அப்புறம் போய் விழுந்தது. சோல்ஜர் கத்திக் கொண்டு, முன் பக்கம் குனிந்து, பரீலியைத் தலைக்கு மேல் தூக்கி விட முயன்றான். பரீலியின் உள்ளத்தில் பயம் எழுந்தது. சுவரோடு சுவராக ஒண்டிக்கிடந்த பெண்ணின் பக்கம் தலையைத் திருப்பினான். அவனது கண்களின் வேண்டுகோளை அறிந்து கொண்டு அவள் உதவிக்கு வர முயன்றாள். அவளால் முடியவில் லை. சோல்ஜர் தனது வலது கையைப் பரீலி பக்கம் திருப்பி அவனைச் சுட்டு வீழ்த்த முயன்றான். பயம் பரீலிக்கு பலமளித்தது. கடைசி வலிப்பு மாதிரி தன் முழு பலத்தையும் உபயோகித்து, அந்த சோல்ஜரை அப்படியே அலக்காகத் தூக்கிச் சுவர்ப்புறம் தள்ளினான். அப்பெண் விலகிக் குதித்தாள். பிடிப்பை மாற்றி, பரீலி, சோல்ஜர் தலையை, ஒரு முறை, இரண்டு முறை, மூன்று முறை சுவரில் தன் முழு பலத்தோடும் மோதினான். ரிவால்வர் கையை விட்டு வழுக்கியது; தலையைப் பிடித்த வண்ணம் தரையில் விழுந்தான் சோல்ஜர். புத்தி தெளிவற்றவன் போல, பரீலி விழுந்தவனையே ஒரு கணம் பார்த்து நின்றான். மறு நிமிஷம் அந்த பெண் ணைப் பார்த்து, "ஜல்தி! ஓடு!" என்றான். மேல் போர்வையை இழுத்து மூடிய வண்ணம் அவள் துள்ளிச் சந்தின் வழியாக ஓடினாள். பரீலி அவளைப் பற்றிய நினைவேயில்லாமல் மறு திசையை நோக்கி ஓடினான். சந்தை விட்டுப் பெரிய தெருவுக்கு வந்ததும், இரண்டு பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்தான். ஒருவரும் இல் லை! நல்ல காலம் என்று உள்ளத்தில் மகிழ்ச்சி தட்ட வேகமாக நடக்க ஆரம்பித்தான். அவனது வலது விரல் மணிக்கட்டில் வலிக்க ஆரம்பித்தது. குனிந்து பார்த்தான். கை விரல் முழுதும், என்ன ஆச்சரியம், ஒரே ரத்தக்களரி. அங்கு நின்ற லாந்தல் கம்பத்தடியில் நின்று வெளிச்சத்தில் காயத்தைக் கவனிக்க ஆரம்பித்தான். திடீரென விறைத்து நின்றான். பூட்ஸ் சப்தம்; மனிதக் குரல். மற்றொரு சந்திலிருந்து தன்வசம் அகப்பட்டவனின் இரு சகபாடிகள் தன் னை நோக்கி வருவதைக் கண்டான். காயம்பட்ட கையைப் பையில் விட்டு மறைத்துக்கொண்டு, அவர்களை நோக்கி நடந்தான். முதலில் குமட்டலாக எழுந்த பயம், எக்களிப்பின் கூர்மை பெற்றது. "நீ அபாயத்தில் இருக்கிறாய், அபாயம்; - நிஜமான அபாயம்! இது நாடக அரங்கமல்ல; இல் லை. இது உண் மை; கடைசியாக நிஜம்; நிஜமான உணர்ச்சி; அவர்கள் உன் னை நிறுத்தினால், அடிபட்டவன் பிரக்ஞை பெற்று உதவிக்குக் கூக்குரலிட்டால், உனது அடிபட்ட விரல்களைக் கண்டால்..." அவர்கள் இருவரும் அவனைக் கடந்து சென்றுவிட்டனர். ஒரு சந்தேகமான, சண் டைக்காரப் பார்வை; ஆனால் ஒரு வார்த்தைகூடப் பேசவில் லை. அவர்கள் போய்விட்டனர். இனி அபாயமில் லை. வேகமாகச் சென்றுகொண்டே திரும்பிப் பார்த்தான். ஒரு மூலை திரும்பியதும் ஓட ஆரம்பித்தான். பயம் மறுபடியும் அவனைக் கவ்வியது. ஆனால் அவன் கவலை கொள்ளவில் லை. அவன் அதைச் செய்து விட்டான். வேஷம் போடுவதற்காக, மேஜையின் முன் சென்று உட்கார்ந்தான். அவனுடைய வாய் அந்தத் தேசீய கீதத்தை - படைவீரன் பாட்டை - முணுமுணுக்க ஆரம்பித்தது.