ஷேக்ஸ்பியர்
குரலிலே அதிகார தோரணையும் அதனுடன் பயமும் கலந்திருந்தது. கடுங்குளிரிலே, இருட்டின் திரைக்குள்ளே, ஈட்டிபோலப் பாய்ந்தது அக்குரல். 'நீ யார்? முதலில் அதைச் சொல்' என்று பதில் கேள்வி பிறந்தது, திரண்டு நின்ற இருள் பிழம்பிலிருந்து. 'மன்னவர் நீடூழி வாழ்க.' 'என்ன? பெர்னாடோவா?' 'ஆமாம்.' குளிரும் பல் லைக் கிடுக்கிறது; மனமும் ஒரு நிலை கொள்ளவில் லை. 'எப்படியப்பா உன் பாராவிலே எதுவும்..?' 'ஒரு சுண்டெலிகூட அசங்கலே...' 'சரி பின்னே போகிறேன்.' 'வழியிலே மார்ஸெலஸும் ஹொரேஷியோவும் வந்தால் சீக்கிரம் வரச்சொல்லு.' டென்மார்க் ராஜ்யத்தின் தலைநகரின் வெளிமதில் பாராக்காரர்கள் இவர்கள், அதோ மார்ஸெலஸும் ஹொரேஷியோவுமே வந்துவிட்டார்கள். ராஜ்யத்திலே பரிசீலனை செய்து புரிந்து கொள்வதற்குக்கூட அவகாசம் கொடுக்காமல் புதிர்போலப் பல சம்பவங்கள் நடந்து விட்டன. டென்மார்க் அரசனான ஹாம்லெத், ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தவர், திடீரென்று ஒரு நாள் நந்தவனத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர் மாண்டு கிடந்தார். விட்டம்பெர்க் சர்வகலாசாலையில் படித்துக்கொண்டிருந்த இளைய ஹாம்லெத் பட்டத்துக்கு வராமல் அவனுடைய சித்தப்பாவான கிளாடியஸ் முடிசூட்டிக்கொண்டான். அது மட்டுமா, ராணி ஜெர்ட்ரூடையும் கலியாணம் செய்து கொண்டான். மரணத்தின் காரணம் புரியவில் லை. இந்த அவசரப்பட்ட கலியாணம் என்ற கேலிக்கூத்தின் விபரீதமும் புரியவில் லை. ஹொரேஷியோ இளைய ஹாம்லெத்துடன் சேர்ந்து வாசித்தவன், இந்தப் பாராக்காரர்கள் சொல்லும் ஒரு விபரீதத்தை நேரில் பாரக்க வந்திருக்கிறான். மெத்தப் படித்து விவகார ஞானம் பெற்ற அவனுக்கு இது வெறும் கனவு என்றுதான் படுகிறது, தான் கண்ணாரக் கண்னதைப் பெர்னாடோ மறுபடியும் விவரிக்கிறான். 'நேற்று இரவு, அதோ அந்த நட்சத்திரம், இங்கே வரும்போது, இதோ, இப்பொழுது பிரகாசிக்கிறதே அங்கே வரும்போது, நானும் மார்ஸெலஸம்...' அப்பொழுது மணி ஒன்று அடித்தது... 'சூ, பேசாமலிரு...' என்று சுட்டிக்காட்டுகிறான் மார்ஸெலஸ். எதோ சாயாரூபம் மாதிரி ஒன்று தூரத்தில் தென்பட்டது. இறந்த மன்னனுடைய ஆவி, அதே நடை, அதே மிடுக்கு. 'ஹொரேஷியோ, நீ படித்தவனாயிற்றே, அதனுடன் பேசு' என்று தூண்டுகிறான் மார்ஸெலஸ். ஹொரேஷியோ தெய்வத்தின்மீது ஆணையிட்டு அதை வழி மறித்து 'நீ யார்' என்று கேட்கிறான். அது முகத்தில் கோபத்தைக் காட்டி மிடுக்காக அகன்று விடுகிறது. 'போய் விட்டது' என்கிறான் மார்ஸெலஸ். 'இது ஏதோ ராஜ்யத்தின் கெடுதலுக்குத்தான் அறிகுறி. ரோம் சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆண்ட 'ஜூலியஸ் ஸீஸர் விழுந்தபோதும் ரோமாபுரித் தெருக்களில் பிசாசுகள் நடமாடினவாம்; வால்வெள்ளி தோன்றியதாம்; இரத்த மழை பெய்ததாம். அதோ மறுபடியும் வந்துவிட்டது.' அதை மறுபடியும் ஆணையிட்டுத் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கிறான். எங்கோ ஒரு கோழி கூவுகிறது. ஆவி மறைந்து விடுகிறது. மூவரும் வழிமறித்துத் தடுக்கத்தான் முயற்சித்தார்கள். பிடித்துக் கட்டி வைக்க முடியுமா?. இந்த அதிசயத்தை இளைய ஹாம்லெத்திடம் சொல்லுவதென்று தீர்மானமாகிறது.
2
இளைய ஹாம்லெத் உலகக்கலவை இல்லாமல் விட்டம்பர்க் சர்வகலாசாலையில் வாசித்துக்கொண்டிருந்தான். தந்தையின் மரணச் செய்தி வந்தது. மணிமுடியின் பொறுப்பை ஏற்கச் சம்மதமில்லாதபடி திரும்பி வந்தான். வருமுன்னமே சிற்றப்பன் கிளாடியஸ் சிங்காதனமேறிவிட்டான். தாயார் அவனை அலங்கோல அவசரத்தில் கலியாணம் செய்து கொண்டு விட்டாள். ஹாம்லெத்துக்குத் தந்தையின் மரணத்தைப் பற்றிச் சர்வசந்தேகம். கொலைலயா? யார் கொன்றிருப்பார்கள்? கிளாடியஸ் கொலைகாரனானால் தன்னிடம் ஏன் இவ்வளவு பரிவு காட்ட வேண்டும்? துரிதக் கலியாணம் செய்துகொண்டாலும் தாயார் பாசம் குறையவில் லை. ஆனால் அவனுக்கோ சர்வ சந்தேகமாக இருந்து வந்தது. ஒன்றும் புரியவில் லை . புரியாத புதிர்களும் தெரியாத எதிரிகளும் அவன் மனத்தை வாட்டிக் கொண்டிருந்தனர். இந்த ராஜ்யத்துக்குப் பிரதான மந்திரி பொலோனியஸ் என்ற கிழவன். உடல் நைந்தது போல், விவேகமும் நைந்து விட்டது. அடிக்கடி ஞாபகப் பிசகு. தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே என்ன பேசினோம் என்பது மறந்துவிடும். ஆனால் மனத்தில், தன் னை அபார சாணக்கியன் என்று நினைத்துக்கொண்டு, தான் இல்லாவிட்டால் டென்மார்க் ராஜ்யமே அழிந்து போய் விடும் என்று மனப்பால் குடித்துத் தனக்கு வேண்டாத காரியங்களில் எல்லாம் தலையிட்டுக் கொள்ளுபவன். எல்லாவற்றிலும் சர்வ சந்தேகம். இவனுக்கு ஒரு மகனும் மகளும் உண்டு. மகன் பெயர் லேயர்ட்டீஸ். மகள் பெயர் ஒபீலியா. ஒபீலியா, சாதுக் குழந்தை ; உலகம் அறியாதவள்; வெளுத்ததெல்லாம் பால் என நினைப்பவள். ஆனால் லேயர்ட்டீஸ் இதற்கு மாறானவன். விவகாரம் தெரிந்தவன். நினைத்த காரியத்தைச் செய்வதற்குச் சற்றும் தயங்காதவன். எது சரி என்று அவனது புத்திக்குப்பட்டதோ, அதைச் செய்து முடிக்க என்ன விதமான பாஷையானாலும் அதைக் கையாளுபவன். ஒபீலியா மேல் இளைய ஹாம்லெத் காதல் வைத்திருப்பது அவனுக்குப் பிடிக்கவில் லை. பெரிய இடத்துப் பாசம் கெடுலையே விளைவிக்கும் என்றும் ஏமாந்து விடாதே என்றும் தங்கைக்குப் புத்தி சொல்லுகிறான். பிரான்ஸுக்குப் போகவேண்டும் என்று லேயர்ட்டீஸ்க்கு ஆசை. தகப்பனை வற்புறுத்தி அனுமதி பெற்றுக்கொண்டு புறப்பட்டு விடுகிறான். தகப்பனோ, பாரிஸில் போய் எப்படிக் கெட்டலையப் போகிறானோ என்று அவனது நடவடிக்கைகளை வேவு பார்க்க அந்தரங்கமாக வேறு ஒருவனை அனுப்புகிறான்.
3
தகப்பனார் மாண்ட துக்கத்திலிருந்து தெளியாத இளைய ஹாம்வெலத்துக்கு கோட்டை மதிலில் ஆவி நடமாடுவதைப் பற்றி அவனது நண்பர்கள் அந்தரங்கத்தில் வந்து தெரிவிக்கிறார்கள். மனத்தில் ஏற்கனவே பலவிதமாகச் சங்கடப்பட்டுக்கொண்டிருக்கும் ஹாம்வெலத்துக்கு இது புதிரை விளக்க வந்த புதுப் பாஷை போலத் தெரிகிறது. நண்பர்கள் மார்லெஸ், பெர்னாடோ, ஹோரேஷியோ ஆகியோருடன், நடுநிசிக் காவலுக்குச் செல்லுகிறான். பழையபடி அதே நோக்கில், அதே உருவம் தோன்றுகிறது. ஹொம்லெத் தொடருகின்றான். தான் இம்மண்ணுலகில் நடமாடியபோது தனக்கு நிகழ்ந்த கோர முடிவை ஆவி, அவனிடத்தில் வர்ணிக்கிறது. இப்பொழுது மன்னனாக மணிமுடி தரித்திருக்கும் தனது சகோதரனான கிளாடியஸ், உத்தியாவனத்தில் தான் சற்று அயர்ந்திருக்கையில், காதில் விஷத்தை ஊற்றிச் சாகடித்துவிட்டதாகக் கூறுகிறது. ராணி ஜெர்ட்ரூடின் கள்ளக்காதல் வைத்த நீ இந்தக் கொடுமையில் வந்து விடிந்ததாகக் கூறி, பழிவாங்கிவிட வேண்டும் என இளைய ஹாம்லெத்திடம் சத்தியம் வாங்கி விடுகிறது. பேயைக் கண்டு திரும்பிய இளைய ஹாம்வெத்தின் சித்தம் அதிர்ந்து விடுகிறது. பேயிடம் பேசிவிட்டுத் திரும்பிய அவன் நண்பர்களிடம் நடந்ததைச் சொல்ல மறுத்து விடுகிறான். ஆனால் இந்த விவகாரத்தைப் பற்றி ஒரு வார்த்தை மூச்சுவிடக்கூடாது என்று சத்தியம் வாங்கி விடுகிறான். டென்மார்க் ராஜ்யமே தன் னை எதிர்த்து நிற்பதாக மலைக்கிறான் ஹாம்லெத். அவன் எப்பொழுதுமே படிப்பிலும் நினைப்பிலும் பொழுதைக் கழித்தவன். செயலில் இறங்குவது என்பது இரத்த நெடி வீசும் காற்றுப் பாதையில் நடப்பது என்பது, மனத்தைக் கிடுகிடுக்க வைக்கிறது. ஆனால் இந்தக் காரியத்தை நடத்தித்தான் தீர வேண்டும் என்று ஏதோ ஒரு உள் தூண்டுதல் அவனை உத்தித் தள்ளுகிறது. 'இந்த உலகைச் சீர்படுத்த என் னை ஏன் படைத்தாய்' என்று ஏங்குகிறான். கிளாடியஸ்தான் கொலை செய்தவன். ஆனால் அவனும் ஒரு விதத்தில் கோழை. முதலில் ஜெர்ட்ருட் மேலிருந்த அபார மோகம், அதைத் தொடர்ந்து சிங்காதனம் வரை தனது ஆசை விரித்த நடைபாவாடை, பழைய மன்னனை விஷம் வைத்துக் கொல்லும்படி செய்துவிட்டது. கொன்றபிற்பாடு மனத்தில் நிம்மதி கிடையாது. ஜெர்ட்ருட் காட்டும் அன்புதான் மனத் தணலுக்கு ஒரு ஆறுதலாக இருந்து வருகிறது. முதலில் கொலை செய்யும் போது இளைய ஹாம்லெத்தைப் பற்றிப் பிரமாதமாக நினைக்கவில் லை. அவன் துக்கப் போர்வை போர்த்து, கவலைச் சிலுவையைச் சுமந்து வருவது வேஷமோ என்று சந்தேகிக்கிறான். சிறுபோதில் இளைய ஹாம்லெத்தின் பள்ளிக்கூட நண்பர்களும் அரண்மனை வாழ்வின் சீலைப் பேன்களுமான ரோஸன் கிரான்ட்ஸ், கில்டன்ஸ்டர்ன் என்ற இருவரை இளவரசனுடைய நடமாட்டங்களைக் கவனிக்க வேவு அனுப்புகிறான். ஜெர்ட்ரூட் யாரையும் நம்புகிறவள். அவளுடைய வாழ்விலே கள்ளக்காதல்தான் அவள் செய்த தப்பு. மன்னன் ஹாம்லெத்தின் திடீர் மரணம், காதலை ஒளித்துவைத்துக் கஷ்டப்பட்டுக் கொண்டிராமல், உலகம் ஒப்ப மணப்பாதை காட்டியதாகவே கருதுகிறாள். மன்னன் கொலை செய்யப்பட்டதாக அவளுக்குத் தெரியாது. அவ்வாறு சந்தேகிக்கவும் இல் லை; சந்தேகிக்கவும் திறம் கிடையாது. அவசரக் கலியாணத்துக்கு முதலில் தயங்கினாலும், அவளது ஆசையும் கிளாடியஸின் வற்புறுத்தலும் அவளை இணங்க வைத்துவிட்டன. கிளாடியஸின் மீது எவ்வளவு அபாரமோகம் இருக்கிறதோ, அதே மாதிரி ஒரே மகனான இளைய ஹாம்லெத் அவள் கண்ணுக்குக் கண்ணான பிள் ளை. மகன் மேல் அவளுக்குச் சொல்லுக்கு மீறிய வாஞ்சை, இளைய ஹாம்லெத்தின் துக்கத்தைப் போக்கி மனத்தைத் தெளிவிக்க என்னவெல்லாம் செய்யலாமோ, அதை முயலுகிறாள். பேயைக் கண்டுவிட்ட ஹாம்லெத் அந்த அலங்கோலமும், அதிர்ச்சியும் நீங்காமல், தன் காதலியைப் பார்க்க வருகிறான். தனது காரியத்தைச் சாதிக்கக் காதலையும் துறக்கவேண்டும் என்று மனம் சொல்லுகிறது. கடைசி முறையாக அவளைப் பார்த்துவிட்டுப் போக வருகிறான். அதிகமாகப் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று தடுக்கப்பட்ட ஓபீலியாவை இவனது வருகையும் பார்வையும் விழியும் திடுக்கிட வைக்கிறது. தன் தகப்பனாரிடம் ஓடோடியும் வந்து சொல்லுகிறாள். நம் நாட்டில் கைகூடாக் காதலை உலகுக்கு அறிவிக்க மடலேறும் பழக்கம் இருந்தது போல அங்கே அக்காலத்தில், நிராகரிக்கப்பட்ட காதலன், அலங்கோலமாக உடைதரித்துப் பித்துக்குளி மாதிரி, தன் காதலை எடுத்துக் காட்டி, இரங்கும்படி செய்விக்க, காதலி முன் வருவது என்ற ஒரு சம்பிராதயம் இருந்து வந்தது. ஹாம்லெத்துக்குக் காதல் பைத்தியந்தான் ஏற்பட்டுவிட்டது என்று பொலோனியஸ் நிச்சயப்படுத்தி விடுகிறான். மன்னன் சமூகத்துக்குத் தன் மகளுடன் சென்று தான் கண்டுபிடித்ததை அறிவிக்கிறான். இந்த நிலையில் கிளாடியஸின் தூண்டில் முள்களான கில்டன்ஸ்டர்னும், ரோஸன் கிரான்ட்ஸும் இளைய ஹாம்லெத்திடம் பேச்சுக் கொடுத்துப் பார்க்கிறார்கள். அவன் அவர்களைக் கிண்டல் பண்ணுகிறான். அவன் பேச்சில் பைத்தியத்தின் கமறல் அடிக்கிறது. புதிர் போன்ற அவனது வார்த்தைகள், அவர்கள் உள்ளத்தைத் தொளைக்க வேண்டும். ஆனால் மரத்துப்போன மடங்களுக்கு அது புரியவில் லை.ஆனால் இரகசியத்தை மட்டும் சொல்ல மாட்டேன் என்கிறானே என்ற கொதிப்பு. இந்தச் சமயம் பார்த்து தேசாந்திரியான நாடகக் கோஷ்டி, ஒன்று அங்கு வருகிறது. ஹாம்லெத்துக்கு மின் வெட்டுவது மாதிரி ஒரு யோசனை தோன்றுகிறது. தன் தகப்பனாரின் கொலையை நாடகமாகத் தயார் செய்து கிளாடியஸ் முன் ஆடினால்...? நாடகந்தான் சரி, அதுதான் மன்னன் மனச்சாட்சியைப் பிடிக்கச் சரியான தூண்டில். இளைய ஹாம்லெத்துக்குப் பிசாசு சொன்ன வார்த்தைகளின்மேல்கூட அவ்வளவு சந்தேகம். ஒருவேளை தன் னைப் பாழ்படுத்த சாத்தானின் சாபமோ என்று சந்தேகம். அதனால்தான் அவன் மனங்கிடந்து அலை மோதுகிறது. நாடகக்காரர்களின் வருகை, தெய்வமே தனக்கு வந்து காட்டிய வழிபோலத் தோன்றுகிறது. பழி வாங்குவது பற்றி ஊசலாடும் உள்ளத்தானாகிய இளைய ஹாம்லெத் முயன்ற முயற்சி இது ஒன்றுதான். மற்றப்படி, தர்ம தேவதை இரத்த சாந்தியை நோக்கிச் செல்லும் பாதையில் அவன் சிக்கி இழுபடுகிறான். அவ்வளவுதான்.
4
இந்த நிலையில் வேவுகாரர்கள் வந்து, வேலை தங்கள் சக்திக்கு மீறியது என்பதைச் சொல்லுகிறார்கள். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது பொலோனியஸ் வருகிறான். இளைய ஹாம்வெலத்துக்குக் காதல் பைத்தியமா அல்லவா என்பதைப் பரீட்சிக்கச் சமயம் ஏற்றதாக இருக்கிறது என்பதைச் சொல்லுகிறான். ஒபீலியாவைத் தனி இடத்தில் உட்காரவைத்துவிட்டு மன்னனும் மந்திரியும் ஒளிந்து கொள்கிறார்கள். இளைய ஹாம்லெத் அந்தப் பக்கமாக வருகிறான். ஒபீலியா அவனிடம் பேச்சுக் கொடுக்கிறாள். தனது ரகசியத்தைக் கண்டுபிடிக்க இது ஒரு வலை என்பது அவனுக்குத் தெரியும். முரட்டுத்தனமாக அவளிடம் பேசுகிறான். பேச்சில் பித்தம் தெறிப்பதாகவே ஒபீலியா எண்ணுகிறாள். தனக்கு வீசப்பட்ட வலையில், கவர்ச்சிப் பொருளாக, அளவிடமுடியாத மதிப்பு வைத்திருந்த தனது ஆசைக்கு உகந்தவளே இருக்கிறாள் என்பதில் ஹாம்லெத்துக்குக் கோபம். ''உன் தகப்பனை வீட்டுக்குள் போட்டுப் பூட்டிவை; அவன் மடமை வீட்டோடு அடங்கட்டும்'' என்று அவன் சொல்லுவதின் பொருள் அவளுக்குப் புலப்படவில் லை. கிளாடியஸுக்கு, இது காதல் வெறி அல்ல என்பது புரிந்து விட்டது. இளைய ஹாம்லெத்துக்குப் பைத்தியமே கிடையாது; அவன் இரகசியத்தில் ஏதோ சதி செய்கிறான், வேற்றூருக்கு அனுப்பிவிட்டால் நலம் என்று நினைக்கிறான். கொலை அட்டூழியம் பற்றி எதுவும் அறியாத பொலோனியஸுக்கு இது காதல் பைத்தியந்தான் என்று உறுதியான நினைப்பு. தாயாரைக் கொண்டு கண்டிக்கச் சொல்லுவோம்; அதன் மூலம் இரகசியத்தைக் கண்டு பிடிப்போம் என்கிறான்.
5
நாடகம் டென்மார்க்கில் நடந்த கொலைதான். கொன்ஸாலோ என்ற ட்யூக், அவன் மனைவி பெயர் பாப்டி.ஸ்டா. லூஸியானஸ் என்ற உறவினன், ட்யூக் உத்தியானவனத்தில் உறங்கும்போது காதில் விஷம் ஊற்றிக் கொல்லுகிறான். இந்த நாடகத்தை கிளாடியஸ், ராணி, ஹாம்லெத், ஹொரேஷியோ, ஒபீலியா, பொலோனியஸ் யாவருமே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கட்டம் வந்ததும் மன்னனுக்குப் புரிந்து விடுகிறது. 'விளக்கு', 'விளக்கு' என்று சொல்லிக் கொண்டே இடையில் எழுந்து புறப்பட்டுச் சென்றுவிடுகிறான். 'நெருப்பு என்று சொன்னால் உடம்பு பற்றிக்கொண்டு விடுமா' என்று சிரிக்கிறான் ஹாம்லெத். 'அம்புபட்ட மான் எங்கே போய் விழுகிறதோ' என்கிறான் ஹொரேஷியாவைப் பார்த்து. சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு 'நாம் கண்ட பேய் யோக்கியமான பேய்தானப்பா!' என்கிறான். அதற்குள் கில்டன்ஸ்டர்னும் ரோஸன் கிரான்ட்ஸும் வந்து சேருகிறார்கள். 'மகாராஜா மகா கோபமா இருக்கிறார். ராணிக்கு ஆத்திரமும் ஆச்சரியமுமாக இருக்கிறது; ராணியார் உங்களை வரச் சொன்னார்கள்' என்கிறார்கள். கில்டன்ஸ்டர்ன் அவனைத் தொளைத்துத் தொளைத்து இரகசியம் என்ன என்று தெரிந்து கொள்ள முயலுகிறான். ஹாம்லெத்துக்குக் கோபம் வந்து விடுகிறது. அவன் கையில் ஒரு குழலைக் கொடுத்து 'இதை வாசி' என்கிறான். 'சும்மா ஊதிப்பாரு; துவாரங்களில் விரலை வைத்து அழுத்திக்கொண்டு காற்றை ஊத வேண்டியதுதானே' என்கிறான் ஹாம்லெத். 'எனக்குத் தெரியாதே' என்று சொல்லுகிறான் கில்டன்ஸ்டர்ன். 'அது இசையாக இருக்காதே' 'இந்தக் குழலைப் பேச வைக்க முடியாதவனா என் னைப் பேச வைத்துவிடப் போகிறாய். அதைவிட நான் மட்டமானவனா?' என்று அதட்டுகிறான். அந்தச் சமயத்தில் பொலோனியஸ் வந்து தாயார் ஹாம்லெத்தை அழைப்பதாகச் சொல்லிவிட்டுப் போகிறான்.
6
அரசியைச் சந்திப்பதற்கு இளைய ஹாம்லெத் வருகிறான். வழியிலே கிளாடியஸ் தெய்வத்தை நோக்கி அல்லாடும் மனத்துடன் பிரார்த்தனை செய்து கொண்டிருப்பதைப் பார்க்கிறான், கடவுளை நோக்கி நின்று மன்றாடுபவனைக் கொல்லுவதா, கூலிக்குக் கத்தி தூக்குபவன் அல்ல என்று நினைத்துக்கொண்டு, கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுத் தாயார் இருக்கும் இடத்தை நோக்கிச் செல்லுகிறான். மகனிடம் கண்டித்துப் பேசி மனத்தில் உள்ளதை அறிய வேண்டும் என்று யோசனை சொல்லிக் கொண்டிருந்த போலோனியஸ், திரைக்குள் மறைந்து கொள்ள, தாயார் மகனை உள்ளே வரும்படி அழைக்கிறாள். இளைய ஹாம்லெத் பித்துப்பிடித்தவன் மாதிரி வார்த்தைக்கு வார்த்தை ஏறுக்குமாறாகப் பேசுகிறான். திரைக்கு பின் சிறிது சப்தம் கேட்கிறது. ''எலி, எலி' என்று சொல்லிக்கொண்டே கத்தியைச் செருகி விடுகிறான். திரைக்குப்பின் அவன் எதிர்பார்த்தது மன்னன்; ஆனால் மாண்டு கிடந்தது மந்திரி. ஆத்திரம் பொங்கத் தன் தந்தை எப்படி, மன்னன் எப்படி என்பதை வேறுபடுத்தி வர்ணிக்கிறான். ஆவேசம் கொண்ட அவனது மனத்துக்குத் தந்தையின் உருவம் தெரிகிறது. அது அவனிடம் பேசுகிறது. அவனைத் தூண்டுகிறது. ஹாம்லெத்தின் பேச்சு ஜன்னி வேகத்தில் செல்லுகிறது. கிளாடிஸைத் திருடன், கொலைகாரன், மணிமுடியைத் திருடி அடிமடியில் ஒளித்துக்கொண்டவன் என்று வைகிறான். ஆனால் ராணி தன் மகனுக்குப் பைத்தியம்தான் என்று நினைக்கிறாள். ''எனக்குப் பைத்தியம் இல் லை. தந்திரக்காரப் பைத்தியம் என்று வைத்துக்கொள்; உன் மன்னனிடம் வேண்டுமானால் சொல்லு. என்னை வேற்றூருக்கு அனுப்ப யோசனை ஆகியிருக்கிறது. தெரியுமா?" என்று சொல்லிவிட்டுப் பொலோனியஸ் சடலத்தை இழுத்துக் கொண்டுபோகிறான்.
7
பொலோனியஸ் உடம்பை ஹாம்லெத்திடமிருந்து வாங்குவதற்குள் பெரும்பாடாகிவிட்டது. அதை அவசர அவசரமாக இரண்டாம் பேருக்குத் தெரியாமல், புதைக்க ஏற்பாடாகிறது. ஹாம்லெத்தை இங்கிலாந்துக்கு அனுப்பிவிட விரும்பிய மன்னனுக்கு இந்தக் கொலை, பாதையைச் சௌகரியமாக்குகிறது. கில்டன்ஸ்டர்ன், ரோஸன் கிரான்ட்ஸ் இருவருடைய பாதுகாப்பில் ஏதோ ஒரு நொள் ளைச் சாக்கைச் சொல்லி அவனை அனுப்பிவிடுகிறான். கடிதம் கொண்டு வருவோரை விசாரிக்காமல் தீர்த்துவிட வேண்டும் என்பது இங்கிலாந்திலிருப்பவர்களுக்குத் தாக்கீது. ஆனால் கொலைக்காக, ஹாம்லெத்தை நாடு கடத்தியதாக ஜனங்களைச் சாந்தம் செய்ய ஒரு வெளிப்பகட்டு நாடகம். இங்கிலாந்துக்குப் போகும் பாதையில் நார்வே மன்னனுடைய மகன், பயனற்ற மண் ணைப்பிடிக்க போலந்தை நோக்கிப் படை திரட்டிப் போவதைப் பார்க்கிறான். நாலு காசு பெறாத மண். ஆனால் எத்தனை ஆர்ப்பாட்டம்! போலந்துக்காரர்களும் படை திரட்டிக் கொண்டு போகிறார்களாம். வெறும் ஓட்டைப் புகழுக்கு உயிரைவிட அத்தனை பேர்; தகப்பன் கொலைப் பழியைத் தீர்க்க அத்தனை தயக்கம். தன் னையே உறுதிப்படுத்திக் கொள்ளுகிறான் ஹாம்லெத்.
8
தகப்பன் திடீரென்று கொல்லப்பட்டது, அதுவும் தன் னைக் காதலித்தவராலேயே கொல்லப்பட்டது ஓபீலியாவின் மூளையைக் கலக்கிவிடுகிறது. வாழ்வில் தந்தையையும் தமையனையும் உற்ற வளமாக நம்பி வந்தவள். உலகின் கொடூர சாயைகள் விழாமல் காப்பாற்றக்கூடியவர்களில் ஒருவர் மாண்டார். மற்றவனோ பாரிஸிலிருக்கிறான். நிர்க்கதியாகி விட்டதாக நினைந்து வெருண்டுபோன ஒபிலியா, பைத்தியம் பிடித்து அலைகிறாள். எப்பொழுது பார்த்தாலும் தகப்பனைப் பற்றியே ஜெபம், அவன் அந்திமக் கிரியைகளைப் பற்றியே பாட்டு. அதிலே நசுங்கி முறிந்த காதலின் துன்பச் சோபை அடிக்கிறது. லேயர்ட்டீஸ் அந்தரங்கமாக டென்மார்க்குக்கு வந்து விட்டான். தகப்பனாரின் தீய மரணம் அவனுக்கு எட்டி விடுகிறது. கோபாவேசனாக வருகிறான், டென்மார்க் ஜனங்கள் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார்கள். முதலில் பெரிய ஹாம்லெத் மரணம், பிறகு அவசரக் கல்யாணம், அவசரப் பட்டாபிஷேகம், பிறகு பிசாசு நடமாட்டம், இளைய ஹாம்லெத் பைத்தியம், பொலோனியஸ் மரணம், ஹாம்லெத் கடத்தப்படல், ஜனங்களுக்குச் சந்தேகம் பலமாகிறது. எப்போதுமே கிளாடியஸைப் பிடிக்காது. 'லேயர்ட்டீஸே மன்னன்' என்று கோஷித்துக் கொண்டு கும்பல் அவன் பக்கம் சாய்ந்துவிடுகிறது. நாட்டில் புரட்சி ஏற்பட்டுவிடும் போலிருக்கிறது. மணிமுடி தலையுடன் சிதறி விழுந்து விடுமோ விடுமோ என்று பயப்படுகிறான் கிளாடியஸ். கதவு உடைபடுகிறது. கோபாவேசனாக லேயர்ட்டீஸ் தந்தையின் உயிருக்கு உத்தரம் சொல்லும்படியாகக் கொதித்துக்கொண்டு பிரவேசிக்கிறான். அரண்மனையிலுள்ளவர்கள் நடுநடுங்குகிறார்கள். ஆனால் கிளாடியஸ் நிதானத்தை இழக்கவில் லை. லேயர்ட்டீஸ் குணம் அவனுக்கு மனப்பாடம். அவனுடைய கோபத்துக்குப் போக்குக் காட்டி விட்டால் கைப்பொம்மை. கிளாடியஸ் அவனிடம் பேச்சுக்கொடுத்துச் சமாதானம் செய்ய என்ன வழி என்பதை மனதிற்குள் யோசித்துக் கொண்டிருக்கிறான். மறுபடியும் வாசலில் பேரிரைச்சல் கேட்கிறது. சித்தம் கலங்கிய ஒபீலியா பிரவேசிக்கிறாள். லேயர்ட்டீஸ் மனம் கொதிக்கிறது. பசலை, அவளை இக்கதிக்குக் கொண்டு வந்து விட்டார்களே. ஓபீலியா அவனை அடையாளம் கண்டு கொள்ளவில் லை. அவள் ஏதேதோ பிதற்றிக்கொண்டு பாடுகிறாள். நிதான புத்தியுடன் நீசத்தனத்துக்கு லஞ்சம் தீர்க்கும்படி அவள் நின்று தூண்டுவதை விட, அவள் நின்ற நிலையே கோபத்துக்குக் கூர்மை கொடுக்கிறது. ஆனால் கிளாடியஸ் சமயோசிதமாக 'குற்றமுள்ள பக்கத்தில் உன் கோபத்தணல் விழட்டும்' என்று சமாதானப்படுத்தி விடுகிறான்.
9
''என்னை நீ மன்னிக்க வேண்டும். மகாராணி பேரில் நமக்கு மிக்க அன்பு. அவளுக்கோ அசட்டுத்தனமானதொரு புத்திர வாஞ்சை. நான் என்ன செய்யட்டும்? விஷயத்தை முழுவதும் கேள். உன் தகப்பனார் என்றால் என் கண்ணுக்குக் கண்; இருந்தாலும் அவருக்காக, உலகிற்குப் போக்குக் காட்ட, தண்டனையை நாடு கடத்துவதாக மாற்றினேன்..." என்று சமாதானப்படுத்துகிறான் கிளாடியஸ். ''அதனால் நான் என் தகப்பனாரை இழந்தேன். உயிருக்குயிரான தங்கை சித்தம் கலங்கித் திரிகிறாள்'' என்கிறான் லேயர்ட்டீஸ். "அது மட்டுமா? முழுவதும் கேள். யார் அது, என்ன கடிதம்?" வாசிக்கிறான் கிளாடியஸ். மன்னன் முகம் கறுக்கிறது. கடிதம் ஹாம்லெத்திடமிருந்து. ''தன்னந்தனியனாக இங்கு திரும்பி வந்துவிட்டேன். தங்களை நேரில் சந்திக்க வேண்டும். அப்பொழுது தங்களுக்கு நான் திரும்ப வரவேண்டி ஏற்பட்டதை விவரிக்கிறேன்." கடிதத்தை லேயர்ட்டீஸிடம் கொடுத்து வாசிக்கச் சொல்லுகிறான். படிப்படியாக அவனை வசப்படுத்திக் கத்திச் சண் டையில் விஷம் வைத்து கத்தி கொண்டு குத்தி வஞ்சம் தீர்த்துக் கொள்ளும்படி தூண்டுகிறான். அந்தச் சமயத்தில், ஒபீலியா, ஒரு நீரோடையில் தவறி விழுந்து உயிர் துறந்தாள் என்ற தகவல் வருகிறது.
10
துர்மரணத்துக்கு ஆளானவர்களுக்கு அந்திமக்கிரியைகள் ஒரு மாதிரி. கிறிஸ்துவச் சடங்குகள் யாவும் நடைபெறாது. ஒபீலியாவுக்கும் அதே மாதிரிதான் நடக்கிறது. அவளுக்காகச் சமாதிக்குழியைத் தோண்டிக் கொண்டிருக்கும் இடத்தருகில் வந்த பிறகுதான் ஹாம்லெத்துக்கு ஒபீலியாவின் மரணம் தெரிய வருகிறது. ஹாம்லெத்தும் ஹொரேஷியோவும்தான் அங்கே வருகிறார்கள். அல்லலுறும் மனத்தினனான ஹாம்லெத் வேதாந்தம் பேசுகிறான். பிரேத ஊர்வலம் வருகிறது. சவச் சடங்கு நடக்கிறது. தூரத்தில் நின்றிருக்கும் ஹாம்லெத் லேயர்ட்டீஸை அடையாளம் கண்டு கொள்ளுகிறான். இதற்குமேல் துர்மரணத்துக்கு ஆளானவர்களுக்குச் சடங்கு கிடையாது என்று பாதிரி மறுக்கிறார், மனஉளைச்சலுடன் 'இன்னும் ஒரு பிரார்த்தனைக் கீதம்; அவளது ஆத்மா சாந்தியடைய' என்று மன்றாடுகிறான். பிரேதத்தை எடுத்துக் குழிக்குள் கிடத்துகிறார்கள். அப்பொழுதுதான் 'ஒபீலியாவா' என்று திடுக்கிடுகிறான் ஹாம்லெத். 'என் மகனுடன் மணவினையை எதிர்பார்த்தேன், மண் அள்ளிப்போடத்தான் கொடுத்துவைத்திருந்தது' என்று சொல்லி ராணி ஒரு பிடி மண் ணைக் குழிக்குள் தூவுகிறாள். இனிமேல் மண்போட்டு மூடி விடுவார்கள், ஒபீலியாவின் முகம் மண்ணோடு மக்கி மடிந்து விடும். லேயர்ட்டீஸுக்கு, மண்போட்டு மூடுவதைப் பார்க்கச் சகிக்கவில் லை. 'இன்னும் ஒருமுறை முகம் பார்க்கிறேன்' என்று சொல்லிக்கொண்டு குழிக்குள் இறங்கியவன் 'என் மேலும் மண் ணைப் போட்டு மூடிவிடுங்கள்' என்று அலறுகிறான். திடீரென்று நெருங்கி வந்து குழிக்குள் குதிக்கிறான் ஹாம்லெத், என்னுடைய துக்கத்துக்குச் சமம் உனக்குண்டா? ஏன் கத்துகிறாய்? நான்தான் ஹாம்லெத் என்று கத்துகிறான். லேயர்ட்டீஸ் அவன் கழுத்தை எட்டிப்பிடித்து நெருக்குகிறான். இரண்டு பேரும் அடித்துக்கொள்கிறார்கள். இடையிலிருந்தவர்கள் இருவரையும் பிரித்து சமாதானப்படுத்தி வெளியேற்றுகிறார்கள்.
11
இளைய ஹாம்லெத் கப்பலில் இங்கிலாந்துக்குப் போகும்போது, மன்னனுடைய துரோகத்தைப் பார்க்கிறான். எழுதியிருந்த கடிகம் அவனைத் தீர்த்துவிடும்படி இருந்தது. அதை எடுத்துவிட்டு, வருகிற இருவரையும் தீர்த்துவிட வேண்டும் என்று மாற்றுக் கடிதம் எழுதி வைக்கிறான். மறுநாள் கப்பல் கொள் ளைக்காரர்கள் இவன் சென்ற கப்பலைத் தாக்குகிறார்கள். அந்தக் கப்பலில் தொற்றி ஏறிக் கள்ளர்க்கு இணக்கமாக இருந்து டென்மார்க் வந்து சேருகிறான். இதுதான் அவன் திரும்பி வந்த கதை. நண்பன் ஹொரேஷியோவுக்கு இதை வர்ணித்துக் கொண்டிருக்கும் போது கத்திச் சண் டைக்குச் சவால் வருகிறது. ஹாம்லெத்துக்கு அவ்வளவு கத்திச் சண் டை தெரியாது. இருந்தாலும் அங்கீகரிக்கிறான். கிளாடியஸ், ராணி, ஹொரேஷியோ, மத்தியஸ்தர் ஆகியோர் முன்னிலையில் கத்திச் சண் டை ஆரம்பமாகிறது. ஒருவன் கையில் விஷக் கத்தி, மற்றொருவன் கையில் திறமை இன் மை. ''ஒயின் எடுத்துவை" என்று உத்தரவிடுகிறான் கிளாடியஸ். ஹாம்லெத் முதல் வட்டத்திலேயே எதிரியைக் காயப்படுத்திவிடுகிறான். வெற்றி முழக்கப்படுகிறது. "உன் வெற்றிக்கு" என்று மன்னன் குடிக்கிறான். ''நம் மகனுக்கே வெற்றி'' என்கிறாள் ராணி. "மூசு மூசென்று இளைப்பு வாங்குகிறதே, இந்தக் கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொள், இதோ உன் வெற்றிக்காக" என்று ஒரு பாத்திரத்திலிருந்த ஒயினைக் குடிக்கிறாள் ராணி. "போச்சு, விஷத்தைக் குடித்து விட்டாள்" என்று முனங்குகிறான். ''அப்புறம் தாகம் தீர்த்துக்கொள்கிறேன்" என்று சண் டை போடுகிறான். சண் டை சூடுபிடிக்கிறது. கனவேகத்தில் மோதிக்கொண்டு மல்லாட இருவருக்கும் காயம் படுகிறது. அதே சமயத்தில் ராணி கீழே விழுகிறாள். "ரத்தத்தைக் கண்டு மயக்கம்” என்கிறான் கிளாடியஸ். "குடிக்காதே. விஷம் விஷம்” என்று கொண்டே உயிர் துறக்கிறாள். "துரோகம், துரோகம், தாளையடை'' என்று கர்ஜிக்கிறான் ஹாம்லெத். "ஆமாம் துரோகந்தான். மன்னனே துரோகி. அவன் வலையில் சிக்கினேன். என்வினை என் னையே கடித்து விட்டது. நீயும் தப்பமாட்டாய், நானும் தப்பமாட்டேன்; விஷம் வைத்த கத்தி'' என்கிறான் லேயர்ட்டீஸ். "விஷமா? விஷமே, உன் வேலையைச் செய் என்று மன்னனையும் குத்துகிறான் ஹாம்லெத். "மீதியிருக்கும் விஷத்தைக் குடித்து ராணியைத் தொடர்ந்து செல்" என்று கர்ஜிக்கிறான் ஹாம்லெத். மன்னனும் லேயர்ட்டீஸும் மடிகிறார்கள். "என் னையும் காலன் கூப்பிடுகிறான்” என்று சோர்கிறான் ஹாம்லெத். ''நானும் வருகிறேன். இதோ மீதி விஷம் இருக்கிறது'' என்று எடுக்கிறான் ஹொரேஷியோ. "மனிதனைப்போல் நடந்துகொள். உலகிற்கு என் துயரக் கதையைச் சொல்” என்று கூறி ஹாம்லெத் ஆவி பிரிகிறது. அன்று தர்ம தேவதை ஒரு துரும்பை வைத்துப் பழி தீர்த்துக் கெண்டது. போலந்தில் வெற்றிபெற்ற பாண்டிஸ்பிரகாஷ் வருகைக்காக டென்மார்க் சிங்காதனம் காலியாயிற்று. சில்டன்ஸ்டர்னும் ரோஸன் கிரான்ட்ஸும் செத்தார்கள் என்ற ஓலையுடன் தூதனும் வருகிறான். மரணம் பலதிறப்பட்ட மக்களை உண்டு பசி ஆறியது.