shabd-logo

3. அம்மா

2 January 2024

0 பார்த்தது 0

கே. பாயில் 

பாதை நெடுகலாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், அதற்குச் சின்னக் கிளை ஒன்றும் இருந்தது. இருந்தாலும் மறுபக்கத்தில் ஓடும் சிற்றோடையில் இறங்கி அக்கரைக்குப் போக வேண்டிய அவசியமே இல் லை. மலை வழியாகச் செல்லும் மாட்டடித் தடத்தைத் தொடர்ந்து செல்ல வேண்டும் என்று நினைப்பதும் அதிசயந்தான். ஆனால் பள்ளிக்கூடம் போய்விட்டுத் திரும்ப வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் அந்தச் சின்னப் பையன், ஒரு நாள் டுரூரி சந்தியில் நின்று கொண்டு, "இடது பக்கமாகப் போகும் கிளை வழியாகச் சென்றால் ஷென்டனுக்குத் தான் போக முடியும்" என்று நிர்ப்பந்தமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் வழிகாட்டிக் கம்பத்தை ஏறிட்டுப் பார்த்தான். அவன் எதிரே செல்லும் வேறு ஒரு பாதை, வேறு எங்கேயோ போகிறதாம். ஆனால் அது எங்கே போகிறது என்பதை அந்த வழிகாட்டிக் கம்பம் சொல்லவில் லை என்ற விஷயம் அவன் மனதில் தட்டியது. தூரத்திலே தெரியும் அந்த மலையை ஆற அமரப் பார்ப்பதற்காக அந்தச் சின்னப் பையன் வாட்ட சாட்டமாக உட்கார்ந்து கொண்டான். வாய்க்காலுக்கு அந்தப் பக்கத்தில் பச்சைப் பசேலென மெத்து மெத்தென்ற புல் நிறைய வளர்ந்து கிடந்தது. அதற்கும் அந்தப் பக்கத்தில் கொம்புங் கிளையுமாக மரங்கள் வளர்ந்து நின்றன. அவை காற்றில் எந்தப் பக்கமாகத் தலை சாய்த்து ஆடுகிறது என்பதுகூட அவனுக்குத் தெரிந்த மாதிரி இருந்தது. ஓடைக்கரையிலே இரண்டொரு வில்லோச் செடிகள் (ஒரு விதமான குளிர்ப்பிரதேச அரளி) ஈரச் சிகையைக் காற்றோட்டத்தில் கோதி ஆற்றிக் கொண்டிருப்பது போல் நின்றன. அந்தப் பாதை ஒரே செங்குத்தாக மலையுச்சிலே இங்கும் அங்குமாகத் தலையசைத்து நிற்கும் மரங்களை நோக்கி உயர்ந்து செல்லவில் லை. அந்த இடத்தையடையுமுன் அந்தப் பாதை, தன் நிர்க்கதியை அறிவிக்க கைகளை விரிப்பதுபோல் இரண்டு கிளைகளைக் காட்டியது. அந்தக் கிளைகளும் திசை தெரியாது, தலையசைத்தாடிக் கொண்டிருக்கும் குத்துச் செடிகளினூடே மறைந்தன. அந்தச் சின்னப் பையன் தனக்கு எதிரே கிடப்பன எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த வேலியைத் தாண்டி, அப்புறம் அந்த ஓடையைத் தாண்டி, அப்புறம் அந்த மலைக்குப் போவதற்காக தன் மனதுக்குத் தைரியம் வருவித்துக் கொண்டிருந்தான். மலைச்சாரல் நெடுகிலும் சாணிக் குவியல்கள் அம்பாரம் அம்பாரமாகக் குவிந்து மலைக்கு உடம்பெல்லாம் பொட்டுப் போட்டன. மனதில் வந்த தைரியம் மலையிலிருந்து இறங்கி வரும் பசு மாட்டைக் கண்டதும் பறந்தோடிவிட்டது. தண்ணீர் குடிக்க வருகிறதாக்கும் என்று நினைத்தான். அவனை அது கண்டுவிட்டதும் அசையாமல் நின்று அமைதியாகப் பார்த்தது. வேலிக்கு இந்தப் பக்கமாக நின்று கொண்டு இவனும் கண்களை உருட்டி விழித்தான். பிறகு கன்றுக் குட்டி ஏதாவது தொடருகிறதா எனக் கூர்ந்து கவனித்தான். அதன் கழுத்துத் தசையும் அலகும் அசைபோடுவதைப் பார்த்துக்கொண்டே இருந்தான். கொஞ்சம் பொறுத்து எலும்பெடுத்த பசுவொன்று அங்கு வந்தது. பையன் எழுந்து நின்று விலகி ஓடுவதற்கு முன்னால் எட்டுப் பசு மாடுகள் கரடுமுரடான பாதையில் நடமாடிக்கொண்டு இறங்கின. அவன் பாதையில் நின்றுகொண்டு, அவை தலைகுனிந்து தண்ணீர் குடிப்பதைப் பார்த்தான். அவை தலையை நிமிர்த்தினபோது தாடி மயிரில் தண்ணீர் முத்துக் கோத்தது. வாயோரத்திலிருந்து இழைவிட்டமாதிரி செள் ஒழுகிற்று. அவை மூக்கை விரியத் திறந்து கொண்டு தண்ணீர் பருகிய போதெல்லாம் மொடமொடவென்று குமிழிகள் தண்ணீர் மட்டத்தில் குதித்துத் தெறித்தன. வேலிக்கு இந்தப் புறத்தில் நின்று கொண்டு பார்ப்பதில் பெருமை ஒன்றும் இல் லை என்பது அவனுக்குத் தெரியும். மனிதர்கள், வீரம் என்ற வார்த்தைகள் அவனுக்கு அன்னியமானாலும் அந்தப் பெரிய மிருகங்களைக் கண்டதும் படக்குப் படக்கென்று நெஞ்சுக்குள் இருந்துகொண்டு பறையடித்துக் கொண்டிருக்கும் வஸ்து சின்னப் பொட்டைக் குட்டிக்குத்தான் அணிகலன் என்பதை அவன் அறிவான். அப்பா செத்து எட்டு வருஷங்கள் ஆகிறது. அவர் எப்படியிருப்பார் என்பதுகூட அவனுக்குத் தெரியாது. அவனுடைய அம்மாவைப் பற்றி நினைத்திருந்தது வேறு ஒரு தினுசு. எத்தனை காலமாகத்தான் அவள் 'செத்துப் போயிருக்கா' என்ற விஷயம் அவனுக்குத் தெரியவே தெரியாது. திரும்பி ரோடில் ஏறி நடந்து போன போது அவன் அவளைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தான். நடக்கும்போது சோர்வால் அவனுடைய கால்கள் தரையில் இழுபட்டன. அவை இடையிடையே திடீர் திடீரென்று புழுதியை எழுப்பின. பாதம் மரத்துக் குழைந்தது. அவளிடம் திரும்பிச் செல்ல வழி கண்டுபிடிக்க முடியுமோ முடியாதோ என்பதில் கூட அவனுடைய மனம் அசதி காட்டிக் கொண்டது. 'அத்தையம்மா' பீட்டுஸ்கீடு என்று நினைத்தான். பசுமாடுகள் வாலை முறுக்கித் தத்தம் முதுகுகளில் பலமாக அடித்து ஈ விரட்டின. அத்தையம்மா பீட்டுஸ்கீடு. அத்தையம்மாள் வீட்டு வெளிமுற்றத்தில் நின்ற புஷ்பச் செடிகள் முன்னால் உட்கார்ந்துகொண்டு புஷ்பங்களை நோண்டிக் கொண்டிருந்தாள். அவனை ஏறிட்டுப் பார்த்து விட்டு நெற்றியை மறைத்த வைக்கோல் பனெட்டை புறங்கையால் உயரத் தள்ளிக் கொண்டான். பையன் விசையாட்டமாக வெளிக்கேட்டில் ஒற்றைக் காலை வைத்து ஊசலாடி உள்ளே வந்தான். "டுரூரி சந்தியிலிருந்து தெரிகிறதே, இந்த மலைக்கு எப்பவாவது போயிருக்கிறாயா?" என்று கேட்டான். கேட்டதைக் காதிலேற்காமல் தலையை அசைத்தாள். "நீயுந்தான் வந்தாச்சே; இந்தத் தகரத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்துக்கொண்டு வாயேன்" என்றாள். அந்தச் சின்னப் பையன் புத்தகங்களைக் கீழே வைத்தான். "பொஸ்தகங்களைக் கண்ட கண்ட எடத்திலே போடாதே. வீட்டுக்குள்ளே வரப்போ எல்லாம் கேட்டில் ஊஞ்சலாடிக்கிட்டுத்தான் வரணுமோ" என்றாள். "டுரூரி சந்திப் பக்கத்திலிருந்து தெரியுதே, அந்த மலைக்கி நீ போயிருக்கிறாயா?" என்றான் அந்தச் சின்னப் பையன். "எனக்குத் தண்ணி எடுத்தாரப் போறியா இல் லையா?" என்றாள் அத்தையம்மாள் பீட்டு. பையன் தகரத்தை எடுத்துக்கொண்டு நடந்தான். அவன் எங்கும் சுற்றிப் பார்த்துக்கொண்டு நடந்தான். உயரக் குருவி கத்திற்று. மரம் தலையைத் தலையை ஆட்டிற்று. வீட்டுமேலே கொடி சரம் சரமாப் படர்ந்திருக்கு... இம்மாதிரி நானா காரியங்களைப் பரிசீலனை செய்துகொண்டு நடந்ததினால் ஒரு முளைக்கொம்பு தடுக்கிக் கீழே விழுந்தான். "எழுந்திரு" என்றான் ரெய்னால்ட்ஸ். அந்தச் சின்னப் பையன் முழங்காலைத் தடவிக் கொண்டு எழுந்து உட்கார்ந்து ரெய்னால்ட்ஸ் பூட்ஸ் நுனியைக் கசப்போடு பார்த்தான். அவனுக்கு ரொம்பவும் நன்றாகத் தெரிந்த மனிதன் ரெய்னால்ட்ஸ் ஒருவன் தான். அவன் வேஸ்ட்கோட் போட்டிருந்தான். மஞ்சளும் கருப்பும் கலந்த வேஸ்ட்கோட். அத்தையம்மாள் வீட்டுத் தோட்டத்திலே புல் கடாக வளர்ந்துவிட்டால், வீட்டுக் குதிரைகளை தை தையென்று ஓட்டிக் கொண்டு அவ்வளவு புல் லையும் அறுத்து எறிகிறவன் ரெய்னால்ட்ஸ். பூனைக்குட்டிகளைத் தண்ணீருக்குள் முக்கிக் கொன்று விடுவதில் கெட்டிக்காரன். முசலுக்கு அவன் ஒரு அறை வைத்தால் போதும்; காலி. இதுவுமில்லாமல் அவனுக்கு நீந்தத் தெரியும். அவன் தண்ணீரில் நீந்தும்போது நெஞ்சுச்சதை முண்டு முண்டாக உருண்டு நெளியும். பந்தாடும் புல் தரிசில் அவன் நின்று கொண்டிருந்தான். அவன் காலடியில் அந்தச் சின்னப் பையன் உட்கார்ந்து கொண்டிருந்தான். அப்போது ரெய்னால்ட்ஸுக்கு மூஞ்சி கோபத்தால் சிவந்திருந்தது. கையில் குதிரைச் சவுக்கு வைத்திருந்தான். இன்னொரு கையால் வேறு ஒரு பயலைப் பிடித்திருந்தான். "இந்தப் பயலைப் பாரு" என்று அத்தையம்மாளைக் கூட மதிக்காமல் சத்தம் போட்டுச் சொன்னான். "இந்தப் பயல் இங்கே பழத்தைத் திருட வந்தான்." பயத்தால் முகம் சிவந்துகொண்டு வாய் கோணி எச்சிலைச் சொட்டிய அந்த வாண்டுப்பயல் மீது சூரிய வெளிச்சம் துலாம்பரமாக விழுந்தது. அதைப் பார்த்ததுமே அந்தச் சின்னப் பையன் விம்மி விம்மி அழ ஆரம்பித்தான். தன் கண்களிலிருந்து வழியும் கண்ணீரைத் துடைக்கக் கைகளை முகத்தில் சேர்த்தினான். அவன் கை கிடுகிடுவென்று கோழைத்தனம் ஏந்தி நடுங்கியது. "அந்தப் பயலை என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டான். பீதியால் குரலோசை இரகசியம் பேசியது. "வெளுக்கப் போகிறேன். அவங்க அப்பங்காரன் அவனுக்குக் குடுக்க வேண்டியதை நான் குடுக்கப் போறேன். நான் விடப்போறதில் லை. செம்மையாகக் குடுக்கப் போறேன் அத்தையம்மா" என்று எஜமானியம்மாளைப் பார்த்துத் திரும்பிச் சொன்னான். அந்தப் பயலை நன்றாக இறுகப் பிடித்துக்கொண்டு வெயிலில் நின்றான். "இங்கே வச்சு அடிக்காதே. அந்தக் கழுதைகள் வீச்சு வீச்சென்று கத்தும்" என்றாள் அத்தையம்மாள். பெகோனியாச் செடியில் அடர்ந்து வளர்ந்து கொண்டிருந்த இலைகளை சர்வ ஜாக்கிரதையாக வெட்டிவிட்டுக் கொண்டிருந்தாள். அவள் உதடு இறுக மூடியிருந்தது. இளகவில் லை. "லாயத்துக்குக் கூட்டிக்கொண்டு போய்விடு. இந்தப் புளுகுணிகள் நேத்து ராத்திரி அவ்வளவு ஸ்ட்ராபெரியையும் அடித்துக்கொண்டு போய்விட்டதுகள். சாப்பாட்டுக்கு வைக்க மருந்துக்கு ஒரு பழம் இல்லெடா ரெய்னால்ட்ஸ்." "அத்தையம்மா, அவனை அடிக்கவேண்டாம்னு சொல்லுங்க" என்றான் அந்தச் சின்னப் பையன். பூக்கள் மீதுதான் வைத்த பார்வையை அவள் மாற்றினாள். அந்தச் சின்னப் பையன் அவன் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். "வேண்டாமே, வேண்டாமே, ஆஹா அத்தையம்மா தயவு செய்து வேண்டாமே!" பையன் அமைதியாகத்தான் பேசினான். "ஆஹா" என்று அவன் வயதிக்கு மீறின வார்த்தையை உபயோகித்தது அவளை நிலைதடுமாற வைத்தது. அது சர்ச்சின் வார்த்தை, காவியத்தின் குரல். "ஆ! அவன் திருட்டுப்பயல் இல்லியா... திருடறபசங்களை..." அந்தச் சின்னப் பையனின் பார்வை அவன் தன்னுடைய சிறு முஷ்டியை அவள் முகத்தெதிரே காட்டுவது மாதிரி இருந்தது. "அத்தையம்மா, அத்தையம்மா, தயவு செய்து ஆஹா தயவுசெய்து அடிக்கவாண்டாம்னு சொல்லுங்க" என்றான் அந்தச் சின்னப் பையன். நாள் முழுவதும் கரையாமல் கன்னத்தில் ஒதுக்கிக் கொள்ளக்கூடிய முட்டாசி மாதிரி தோட்டமும் வெளியும் மெதுவாக இளம் பாகமாக இருந்தது. அத்தையம்மாள் அவனுக்கு இட்ட செல்லப் பெயர் ஸ்கீடு. செல்லப் பெயரைச் சொல்லித்தான் அழைத்தாள். ஆனால் அவள் குரலில் காகம் கரைந்தது. "டேய் நீ போய் உன் வேலையைப் பாருடா. ரெய்னால்ட்ஸ் அவன் வேலையைப் பார்க்கட்டும். தண்ணி எடுத்துக்கொண்டு வா என்று உனக்கு நான் எத்தனை தடவைதான் சொல்லுகிறது" என்றாள். அந்தச் சின்னப் பையன் அவள் காலடியில் விழுந்து விட்டான். மன்றாடிக் கெஞ்சினான். அத்தையம்மாள் முகம் கருத்தது. அவன் கெஞ்சம் அவள் வாயிலிருந்து வசவை வாரி இறைத்ததுதான் மிச்சம். தோட்டமே நாற்றமெடுக்கும்படி கொட்டித் தீர்த்து விட்டாள். ரெய்னால்ட்ஸ் திருட்டுப் பயலைப் பிடித்து இழுத்துக்கொண்டு அந்தப் பக்கமாகப் போய் விட்டான். அந்தச் சின்ன பையன் அவள் காலடியில் கிடந்து செயலற்ற கோபத்தால் பல் லைக் கடித்துக் கரும்பிக் கொண்டிருந்தான். அவன் கோபம் அப்பாவிப் புல்லின்மேல் பாய்ந்தது. "டேய் இதைக் கேட்டுக்கோ" என்று அவனுடைய தோளைப் பிடித்துக் குலுக்கினாள். "இன்னிக்கு உங்க சித்தப்பா வரப்போறார். வீட்டிலே நீ இப்படிக் கத்திக் கொண்டு கிடந்தால் அவர் என்ன நினைப்பார்? அவர் யார் தெரியுமா... சோல்ஜர். ஆம்பிளெப் பையன் இப்படி அழறதானா அவமானமா இல்லே? அவருக்கும் இதைப் பார்த்தா சகிக்காது." அந்தச் சின்னப் பையன் அசையாது கிடந்தான். "சித்தப்பான்னா?" "அப்பாவோட தம்பி" என்றாள் அத்தையம்மாள். "நீளமா மீசை வச்சிருப்பார். நீளமாப் பட்டாக் கத்தி வச்சிருப்பார்." பொழுதும் மங்க ஆரம்பித்தது. அந்தச் சின்னப்பையன் பாதைக்கு வந்து நடக்க ஆரம்பித்துவிட்டான். அப்பா கூடப் பிறந்த சித்தப்பா வருகிறார் என்பது மட்டுந்தான் அவன் நினைப்பிலிருந்தது. ஒவ்வொரு மரமும் ஒரு பெரிய எதிரியாகத் தோன்றும்படி அதையே நினைத்துக் கொண்டு நடந்தான். காலில் மாட்டியிருந்த ஷூலேஸ் அவிழ்த்துக் கொண்டு அவன் கணுக்காலைச் சுருண்டு கவ்வ, இருளில் வெருண்டு தள்ளாடினான். டுரூரி சந்திக்கு வந்ததும் தைரியமாக வேலிக்கிடையில் பாம்பு மாதிரி நெளிந்து கொடுத்துக் கொண்டு நுழைந்துவிட்டான். ஓடையைத் தாண்டிக் குதித்தான். இச்சத்தம் அவன் காதில் கற்றுண்ட வீணை மாதிரி ஜிவ்வென்று ஒலித்தது. அவன் பயப்படவேயில் லை. அவன் ஓடின வேகத்தில் நாலைந்து ஜீவன்கள் வெருண்டு ஓடின. அவை புல்லுக்கிடையில் ஓடி மறைவதைப் பார்த்துக் கொண்டு நின்றான். கீழே ஓடையில் ஜலம் கண்ணாடி மாதிரி பளபளத்தது. வில்லோச் செடிகளும் ஓடையில் ஏற்றுண்ட மென் மையான காற்று போலிருந்தது. பால் காய்ச்சிச் செடியின் காய்கள் அவள் முழங்காலில் உராய்ந்தன. ஒரு விட்டில் அவனுடைய கன்னத்தை வருடிக் கொண்டு பறந்தது. வீட்டுக்குள் விட்டில் ஒன் றைப் பார்த்ததுமே அவன் முதுகுக்குள் பயம் ஈட்டி கொண்டு பாய்ச்சும். ஆனால் இங்கே இந்த இருட்டிலே அது அவனுக்குப் பயமூட்டவில் லை. அவன் புல் தரையின் மேல் உட்கார்ந்து கொண்டான். வீட்டில் அனல் அடுப்பு முன்னால் அடைவாக உட்கார்ந்திருப்பது போல இருந்தது அவனுக்கு. அந்தத் திறந்த வெளியில் மூச்சுப்போல் பிறந்த காற்று வீட்டில் அவன் கழுத்தில் குளிருக்காக சுற்றிக் கட்டப்படும் கம்பளி மயிர்ப் பட்டி மாதிரி வெதுவெதுப்பாக இருந்தது. அவன் அங்கேயே கிடந்து உறங்கிவிட்டானா அல்லது அத்தனை நேரமும் முழித்துக்கொண்டு கிடந்தானா என்பது அவனுக்கே தெரியாது. ஆனால் அவன் உட்கார்ந்த சிறிது நேரத்தில் அந்தப் பசுமாடுகள் எல்லாம் இருட்டுக்குள் இருந்து பிறந்து ஓடையை நோக்கி நடப்பதைக் கண்டான். அவை மெதுவாக நடந்து சென்றன. அவைகளின் தலைகள் முன்னங்கால் முன்பாகக் கட்டப்பட்ட வெண்கலமணி போல் தொங்கிக் கிடந்தன. அவை ஓயாமல் அசைபோட்டுக் கொண்டே நடந்தன. அவை வாய் ஓய்வதெல்லாம், மெதுவாகத் தலையை நிமிர்த்தி அம்மா என்று திரண்டு வந்து இருளூடே கத்துவதற்கே. அவை அடித்தொண் டையினின்றும் அப்படிக் கத்துவது அந்தச் சின்னப் பையனுக்கு அழகாக இருந்தது. அவனும் அப்படிக் குரல் எடுத்துப் பார்த்தான். மாடு மாதிரி தலையை ஏந்தி நிமிர்த்த முயன்றான். மூக்கைப் பசுவின் சிவந்த நாசிகள் போல அகலமாக்கிக்கொள்ள முயன்றான். அவை அறுவடைக் காலத்துச் சிவப்புச் சந்திரன் போலிருந்தன. மலையை விட்டு இறங்குகையில் அவை அவசரங் காட்டவில் லை. இரவு கொழிக்கும் இருளில் நடமாடித் திரிவதில் அவை ஆவல் காட்டின. அவை குதிரைகளாக இருந்திருந்தால், தன் நடமாட்டத்தில் சொற்ப சப்தத்தைக் கேட்டிருந்தால் பயந்துகொண்டு ஓடிவிட்டிருக்கும் என்று அந்தச் சின்னப் பையன் நினைத்தான். ஆனால் அந்தப் பசுமாடுகள் அவன் காலடியின் அருகில் புல் லைக் கறும்பிக்கொண்டு நடந்தன. அவனிருக்கும் மோப்பத்தை அவை பொருட்படுத்தவில் லை எனவிருந்தது. அவன் எப்படி அசைந்தாலும் அவை வெருளவில் லை. மாடுகளுக்கு அவன் இப்படியும் அப்படியும் திரும்புவதெல்லாம் சர்வ சாதாரணம் போலும். அவனுக்கு அருகில் நின்ற பசுமாட்டின் முன்னங்கால்களை அவன் தடவிக் கொடுத்தான். அதைக் கண்டு அவை வெருளவில் லை. அதற்குப் பதிலாக அவன் கழுத்தை முகர்ந்து கொடுத்தது. மாட்டின் மூச்சு அவன் முகத்தில் வீசியதும் அவன் உள்ளம் கிளுகிளுத்தது. அந்தச் சமயத்தில்தான் அவன் தடவிக் கொடுத்த பசு முழங்கால்களை உடம்படியில் முடக்கிக் கொண்டு தரையில் படுத்தது. இருட்டில் அதன் உருவம் முழுவதும் அவனுக்குத் தெரியவில் லை. அது அசை போடுகிற மாதிரியிலும் மூச்சு விடும் தோரணையிலுமிருந்து அது படுத்துக்கொண்டு விட்டதென்று நினைத்தான். அதனண் டையில் இன்னும் சற்று நெருங்கினான். அது கண்டுகொண்டது மாதிரி காட்டிக் கொள்ளவில் லை. அதன் கழுத்தைத் தடவிக்கொடுத்த போதும் அது அசையவில் லை. விரைத்துக்கொண்டு நன்றாக வளைந்து சுருண்டிருக்கும் அதன் காதுகளை உள்ளங்கை கொண்டு தடவினான். அது இதமாகக் காதுகளைத் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருந்தது. அந்தச் சின்னப் பையன் அதன் மேல் சாய்ந்து படுத்துக் கொண்டான். தன்னுடைய ஒல்லியான முதுகை அதன் எலும்பில் சாத்திக்கொண்டான். அது அசை போட்டு அசை போட்டு மடக்கு மடக்கென்று உள்ளே தள்ளுவதை அவனுடைய தேகம் ஸ்பரிசித்தது. அலை புரள்வது போல சுருண்டோ டும் அசைவு அதன் சதைக் கோளங்களில் புரண்டு சென்றது. அந்தச் சின்னப்பையன் பசுமாட்டின் கழுத்தில் தன் முகத்தை வைத்துக்கொண்டான். பசு போடும் அசை அவன் காதில் இன்பகரமாக ஒலித்தது. மனதில் குளுமை கண்டது. வாயிலிருந்து செல்லும் உணவை எதிரேற்கும் வயிற்றில் பிறக்கும் நாதம் அவன் காதுக்கும் கேட்டது. தழையிலே அது உண்ணக்கூடிய வயலட், குளோவர் செடிகள் அதன் முன்னாலே படர்ந்து கிடப்பதைக் கைகளால் தொட்டுப் பார்த்து அறிந்தான். அதன் மடியில் படுத்துக் கிடக்கும்போது, அதன் மடியில் நிறைந்துள்ள பாலை நினைத்தான். இந்த வயல் வெளியில் அந்தப் பசுமாட்டின் பேரில் சாய்ந்து கொண்டிருப்பது எவ்வளவு சுகமாக இருக்கிறது என நினைத்தான். இவன் இவ்வாறு நினைத்துச் சோர்ந்து கிடக்கும்போது திடீரென்று தலையை உலுப்பி அவன் விலாவில் பலமான அடி கொடுத்தது. அவனுடைய குழம்பிய மனம் நிதானப்பட்டபோது ஈ எதுவும் அதைத் தொந்தரவுபடுத்தி இருக்கவேண்டும், இல்லாவிட்டால் அப்படிப் பலமாக அடிக்கக் காரணமில் லை என்று நினைத்தான். அது தனது முகத்தைத் திருப்பி அவனுடைய கைமீது உராய்ந்து கொடுத்துக் கொண்டபோது இந்த நினைப்புத்தான் அவன் மனதிலிருந்தது. தாய்ப் பூனை குட்டிகளை மோந்து கொடுக்கிற மாதிரி அதன் மூச்சு அவன் மேல் தாக்கியது. அந்தக் காற்றே அவனைத் தூக்கிக்கொண்டுபோய் வயலுக்கு அப்பால் தள்ளிவிடும் என்று நினைத்தான். மோப்பம் பிடித்துத் திருப்தியடைந்த ஒவ்வொன் றையும் சுரசுரப்பான நாவால் குளோவர் தண்டுகளை நக்குவது போல நக்கிக் கொடுத்தது. அது முடிந்ததும் அவன் சட்டையை நக்கிக் கொடுத்தது. பிறகு கழுத்து காது, தலை, தலையிலுள்ள மயிர் எல்லாவற்றையும் நக்கிக் கொடுத்தது. வேறு யாராவது இந்த மாதிரிச் செய்திருந்தால் அந்தச் சின்னப் பையனுக்குத் தோலே உரிந்து போயிருக்கும். அவ்வளவு பரிவுடன் நக்கிக் கொடுத்தது. அப்போதுதான் அரித்த சந்திரன் மரங்களுக்கு மேலே வந்தது. 'அம்மாப் பசு' சமிக்ஞை எதுவும் இல்லாமலே திடீரென்று எழுந்து நின்றது. காலை நிமிர்த்திக் கொடுத்துக் கொண்டது. எல் லையற்ற ஏக்கம் அந்தச் சின்னப் பையன் உள்ளத்தில் பாய்ந்தது. அந்தப் பசு மெதுவாக வாலை ஆட்டிக்கொண்டு சென்றுவிட்டது. பையனும் மனதில்லாமல் மலையிலிருந்து இறங்கிவர ஆரம்பித்தான். சந்திரனொளியில் உலகம் முழுவதுமே மறுபடியும் திரும்பி வர ஆரம்பித்தது. மரங்கள் இருட்டிலிருந்து வெளி வந்தன. கடல் போல் புல் அலையாடியது. தண்ணீர்க்கரையை அடைந்ததும் அந்தச் சின்னப்பையன் சற்று நின்றான். ஓடையின் மத்தியில் உடைபட்ட சந்திரன் அசைவாடிக் கொண்டிருந்தான். அதன் ஓரத்தருகில் கை கொடுத்து அதை அப்படியே தண்ணீரிலிருந்து தூக்கிவிடக் குனிந்து முயன்றான். சில நிமிஷங்கள் கழித்து பழையபடியும் அந்தச் சின்னச் சந்திரன் அசைவாடிக் கொண்டிருந்தான். அந்தச் சின்னப் பையனுடைய கைகள் ஈரம்பட்டுக் குளிரெடுத்தது. அந்தச் சின்னப் பையன் வேலியைத் தாண்டிப் புழுதி படிந்த பாதை வழியாக நடந்தான். அந்த விபரீத வெளிச்சத்தில் பழைய பாதைத் தடங்கள் தெரிந்தன. வீட்டின் வெளிக்கேட் அருகில் வந்தபோது ஏதோ ஒரு விதமான மனிதப் பிராயத்துப் பீதி அவனைக் கவ்வியது. அவன் கதவைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே புகுந்து நடந்தான். முன் மேடையில் யாரோ ஒரு மனிதன் புகைக்குழாய் பிடித்தபடி உலாத்திக் கொண்டிருந்தான். அந்த மனிதனும் தோட்டத்தைப் பார்த்துவிட்டுத் தன்னுடைய நடமாட்டத்தை நிறுத்திக் கொண்டான். "ஹல்லோ?" என்றான். அவனுக்கு மீசையில் லை. "நீதான் சித்தப்பாவா?" என்றான் அந்தச் சின்னப் பையன். "சரியாகக் கண்டுபிடிச்சிட்டியே!" என்றார் சித்தப்பா. "என் னை அடிக்கமாட்டியே" என்றான், சின்னப்பையன். "சித்தப்பான்னா அப்படித்தான் செய்யணுமா?" என்றார் அவர். "நான் ஓடியே போனேன்; எங்கப்பா இருந்தா என் னை இப்ப அடிப்பார்" என்றான் அந்தச் சின்ன பையன். "என்னடா ரொம்பப் பெரிய மனுஷனாட்டமா" என்றார் சித்தப்பா. அந்தச் சின்னப் பையன் அவரையே பார்த்துக் கொண்டு மௌனமாக நின்றான். சித்தப்பா தலையைத் திருப்பிப் பின்புறமாகப் பார்த்தார். "கொஞ்ச தூரம் இந்த ரோட்டில் நடந்துவிட்டு வரலாம் வாரியா?" என்று கீழ்த் தொண் டையில் கேட்டார் சித்தப்பா.

புதுமைப்பித்தன் மூலம் மேலும் புத்தகங்கள்

72
கட்டுரைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகள்
0.0
புதுமைப்பித்தன் மொத்தம் 108 சிறுகதைகள் எழுதியுள்ளார். அதில் அவர் காலத்தில் 48 மட்டும் பிரசுரமாயின. 1940-ல் புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. புதுமைப்பித்தன் 98 கதைகளை எழுதியுள்ளார். அவர் மணிக்கொடியில் எழுதிய 29 கதைகளைப் புதுமைப்பித்தன் கதைகள் என்ற பெயரில் நவயுகப் பிரசுராலயம் வெளியிட்டுள்ளது. ஆறுகதைகள், நாசகாரக் கும்பல், பக்த குசலோ என்ற அவரது பிற நூல்களையும் அதே நிறுவனம் வெளியிட்டுள்ளது. கலைமகள் பதிப்பகம் காஞ்சனை தொகுதியையும், ஸ்டார் பிரசுரம் ஆண்மை என்ற தொகுதியையும் வெளியிட்டன. ஐந்திணைப் பதிப்பகம் புதுமைப்பித்தனின் மொத்தச் சிறுகதைகளையும் வெளியிட்டது. அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் புதுமைப்பித்தனின் அனைத்துச் சிறுகதைகளையும் வெளியிட்டுள்ளது.
1

1. ஆஷாட பூதி

2 January 2024
0
0
0

மோலியர் (1622-1673) பதினேழாவது நூற்றாண்டில், பிரான்ஸில் நாடகக்காரன் என்றால், மதம் அவனைத் தள்ளிவைத்தது. பிரார்த்தனை - பிரசாதத்தைப் பெறுவது என்றால் விசேஷ சிபாரிசின் பேரில் நடக்க வேண்டிய காரியம். செத்தால

2

2. ஆட்டுக் குட்டிதான்

2 January 2024
0
0
0

ஜேம்ஸ்ஹானலி – இங்கிலாந்து  செக்கச் செவேலென்றிருக்கும் அந்த பஸ், ஏக இரைச்சலுடன் அந்த வளைவைத் திரும்பியது. சூழ்நிலை தாங்கிய அமைதியான வண்ணக் கலவைகளுக்குச் சவால் கொடுப்பது மாதிரி அந்தச் சிகப்பு கண்களை உற

3

3. அம்மா

2 January 2024
0
0
0

கே. பாயில்  பாதை நெடுகலாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், அதற்குச் சின்னக் கிளை ஒன்றும் இருந்தது. இருந்தாலும் மறுபக்கத்தில் ஓடும் சிற்றோடையில் இறங்கி அக்கரைக்குப் போக வேண்டிய அவசியமே இல் லை. மலை வ

4

4. அந்தப் பையன்

3 January 2024
0
0
0

மாக்ஸிம் கார்க்கி  இந்தச் சின்னக் கதையை எப்படிச் சொல்லுவது என்று புரியவில் லை. அவ்வளவு எளிதானது. நான் வாலிபப் பருவத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் தெருக் குழந்தைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு ஊருக்கு வெளியே

5

5. அஷ்டமாசித்தி

3 January 2024
0
0
0

டென்ஷொ வம்சத்தின் ஆதிக்கத்தின்போது, கியாட்டோ என்ற வடக்குப் பிராந்தியத்தில் குவான்ஷின் கோஜி என்ற வயோதிகன் வாழ்த்து வந்தான். நீண்டு நெஞ்சை மறைக்கும் வெள் ளைத் தாடியுடன், ஷிண்டோ குருக்கள்மார் போல உடையணிந

6

6. ஆசிரியர் ஆராய்ச்சி

3 January 2024
0
0
0

ஸின்கிளேர் லூயிஸ்  டாக்டர் ஸ்லீக் பிரம்மச்சாரி; அதிலும், வழுக்கை விழவிருக்கும் வாலிபப் பிரம்மச்சாரி. அவர் இராஸ்மஸ் கலாசாலையில் சரித்திரமும் பொருளாதாரமும் கற்பித்து வந்தார். அதாவது மேடைமீது ஏறி நின்று

7

7. அதிகாலை ( பகுதி 1)

3 January 2024
0
0
0

நிக்கோலாய் டிக்கனோவ்  1918-ம் வருஷம் ஆகஸ்டு மாதத்தில் துருக்கியர் பாக்கூ என்ற இடத்தை முற்றுகை இட்டார்கள். மென்ஷ்விக் நிர்வாகத் தலைமை போர்டின் ஐந்து தலைவர்கள் மூளையும் சுழன்றது. சர்வ குழப்பம்; அது விஷ

8

7.அதிகாலை (பகுதி 2)

3 January 2024
0
0
0

இராத்திரி ஒரு ஊரில் தங்கினதும், ஆலி ஹஸன், டாஷா பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு சளசளவென்று மணிக்கணக்காகப் பேசிக் கொட்டினான். உத்யோகஸ்தரின் விதவை மெய்ஸ் அரிசி ரொட்டியை அசைபோட்டுக் கொண்டிருந்தாள். வி

9

7. அதிகாலை ( பகுதி 3)

3 January 2024
0
0
0

"பொய்யாயிருக்கலாம், ஆனால் சித்திரவதையில், உன் னைக் காட்டிக்கொடுப்பேன்; என் னைக் காட்டிக்கொடுத்துக் கொள்வேன்; எனக்கு ஞாபகத்துக்கு வந்தவர்களையெல்லாம் காட்டிக்கொடுப்பேன். உனக்குச் சித்திரவதை என்றால் எப்ப

10

7. அதிகாலை (பகுதி 4)

3 January 2024
0
0
0

"ஆஹா அப்படியா. பாக்ஷாதான் வயிற்றுக் கடுப்பால் கழிந்து கொண்டிருக்கிறாரே. இன்னும் கொஞ்ச காலத்துக்கு அவரைப் பற்றித் தொந்திரவில் லை. தவிரவும், உன்னுடைய ஆயுதங்களை உன்னிடம் கொடுத்துவிடவேண்டும் என்று உத்திரவ

11

8. பலி

4 January 2024
1
0
0

ஜோஸப் நையரு – ஹங்கேரி  மோல்டேவியா நோக்கி நிற்கும் மலைச் சிகரங்களிலே அந்த வருஷத்தில் மந்தைகளுக்குக் கரடிகளால் வெகு தொல் லை ஏற்பட்டு வந்தது. வில் - பொறி வைத்து எல்லாம் முயன்று பார்த்ததும் ஒன்றும் பயன்ப

12

9. சித்திரவதை

4 January 2024
1
0
0

எர்னஸ்ட் டாலர்  "உனக்கு இன்னும் ஏதாவது விருப்பம் இருக்குமா?" சாகக் கிடக்கும் வாலிபனைப் பார்த்து ஸ்டட்கார்ட் இரகசியப் போலீஸ் உத்தியோகஸ்தர் இவ்வாறு கேட்டார். வாலிபனுடைய 'வெறிச்சோடிய' கண்கள் ஜன்னலின் கம

13

10. டைமன் கண்ட உண்மை

4 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர் (1564-1616)  ஆங்கில நாடகாசிரியர், ஷேக்ஸ்பியரைத் துவிதப் பிரம்மா என்பார்கள். உலகத்தின் சிருஷ்டி தத்துவத்தைப் புரிந்து கொண்டவர் போல் தமது பாத்திரங்களை நடமாட விடுவார். அவர் உலகில் பேய்களும்

14

11. இனி

4 January 2024
1
0
0

இ. எம். டிலாபீல்ட்  இதுவரை நடக்காததைப் பற்றி ஒரு கதை எழுதினால் என்ன?... அந்தக் கதையின் போக்கில் அறிந்து கொள்ள முடியுமானால்... பதினைந்து இருபது வருடங்களுக்கப்புறம்: ஓல்ட் பெய்லியில் (நியாயஸ்தலம்) நடக்

15

12. இந்தப் பல் விவகாரம்

4 January 2024
1
0
0

மைக்கேல் ஜோஷெங்கோ – ருஷ்யா  எங்கள் சகா எகோரிச்சுக்குப் பல், தொந்திரவு கொடுத்து வந்தது. என்ன காரணத்தினாலோ விழ ஆரம்பித்தது. காலம் என்ற ஒன்று இருக்கே, அதற்கும் இந்த விவகாரத்துக்கும் சம்பந்தமிருக்கலாம்.

16

13. இஷ்ட சித்தி ( பகுதி 1)

4 January 2024
1
0
0

ஹான்ஸ் பலாடா – ஜெர்மனி  முதலிலேயே தெரிவித்து விடுகிறேன். அப்புறம் குறை சொல்லாதீர்கள். என் மனைவி பெயர் இட்ஸன் பிளாஸ். உச்சரிப்பதற்குக் கொஞ்சம் சிரமந்தான்; ஆனால் அவள் மீது இருந்த ஆசையில், அதன் சிரமம் எ

17

13. இஷ்ட சித்தி ( பகுதி 2)

4 January 2024
1
0
0

"பின்பு கிரிஸ்மஸ் சமயத்தில் அதை உடைத்து... பிறகு என்னவென்பது உங்களுக்குத்தான் தெரியுமே!" என்றாள்! "உனக்கென்ன பைத்தியமா? இந்த வருஷம் போனஸ் கீனஸ் கிடையாது என்று ஹீபர் சொல்லுகிறான். முதலாளி வருமானம் இல்

18

14. காதல் கதை

5 January 2024
1
0
0

வில்லியம் ஸரோயன்  "இந்தப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுகிறீரா அல்லது அந்தப் பக்கமாக உட்காருகிறீரா?" என்று சிகப்புக் குல்லா* கேட்டான். (* நம்மூர்களில் சிகப்புத் தலைப்பாய் என்றால் போலீஸ்காரன் என்பது

19

15. கலப்பு மணம்

5 January 2024
1
0
0

கிரேஸியா டெலாடா – இத்தாலி  அன்றிரவு சுகமாக இருந்தது. பூலோகத்தைக் கடுங்குளிரினால் சித்திரவதை செய்வதில் சலியாத உறைபனிக் காலத்துக்கும் ஒரு ஓய்வு உண்டு என்பதை அந்த ஏப்ரல் இரவு காட்டியது. இதுவரை பனிக்கட்ட

20

16. கனவு (பகுதி 1)

5 January 2024
1
0
0

ஐவான் டர்ஜனீப் – ருஷியா அந்தக் காலத்தில் நான் என் தாயாருடன் ஒரு சிறு துறைமுகப் பட்டினத்தில் வசித்து வந்தேன். எனக்கு அப்பொழுதுதான் பதினேழு வயது நிரம்பிற்று. தாயாருக்கு முப்பத்தைந்து வயது. சின்ன வயதிலே

21

16. கனவு ( பகுதி 2)

5 January 2024
1
0
0

8 என் தாய் எனக்குக் கூறிய கதை எனதுள்ளத்தை எப்படிச் சிதறடித்தது! முதல் வார்த்தையிலிருந்தே அறிந்து கொண்டேன். அவள் வாயிலிருந்து தவறுதலாக நழுவிய வார்த்தை எனது உத்தேசத்தைத் திடப்படுத்தியது. எனது கனவில் நா

22

17. காரையில் கண்ட முகம்

5 January 2024
1
0
0

இ.வி. லூக்காஸ் – இங்கிலாந்து  நேற்று சாயங்காலம் எனது நண்பன் டாப்னி வீட்டில் நடந்ததை மறக்க முடியவில்லை. அந்த அநுபவம் இன்னும் என் னை உறுத்திக் கொண்டிருக்கிறது. அன்றைய தினம் பேச்சு பூத பைசாசங்களைப் பற்ற

23

18. கிழவி

5 January 2024
1
0
0

ஸெல்மாலேகர்லாப் – ஸ்வீடன்  மலைப்பாதை வழியாக ஒரு கிழவி நடந்து கொண்டிருந்தாள். மெலிந்து குறுகியவள்தான். எனினும் முகத்தின் வண்ணம் வாடவில்லை. சதைக் கோளங்கள் மரத்துத் தொய்ந்து திரித் திரியாகத் தொங்கவில்லை

24

19. லதீபா

6 January 2024
0
0
0

மோஷி ஸ்மிலான் ஸ்கி  "லதீபாவின் கண்களை நீ பார்த்திருக்காவிட்டால், கண்களுக்கு எவ்வளவு அழகு இருக்க முடியும் என்பது உனக்குத் தெரிந்தே இருக்காது." இப்படி நான் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம். ச

25

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்( பகுதி 1)

6 January 2024
0
0
0

1 அவர்களுடைய மூத்த பெண்ணின் படிப்பு அடுத்த மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது. வயசும் 'அப்படி இப்படி' என்று சீக்கிரத்தில் பதினெட்டு ஆகிவிடும். டோ க்கியோவிலேயே நாகரீகத்திற்குப் பெயர் போன இடத்தில் நிலம் வாங

26

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்(பகுதி 2)

6 January 2024
0
0
0

5 வரன்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுவதற்கு நாள் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு 'கபூக்கி' நாடகக் கொட்டகையில் தரகர் இரண்டு 'பாக்ஸ்' களை அமர்த்தினார்; இரண்டு குடும்பங்களும் பக்கத்த

27

21. மணிமந்திரத் தீவு

6 January 2024
0
0
0

ஷேக்ஸ்பியர்  நடுக்கடலிலே நாலைந்து கப்பல்கள் தத்தளித்துத் தடுமாறுகின்றன. கடலலைகள் சினங்கொண்ட கருநாகங்கள் போல ஆயிரமாயிரமாகப் படம் விரித்துத் தலை சுற்றி மோதுகின்றன. உயிரை வாங்கவரும் கால தூதர்களின் கோரச்

28

22. மணியோசை

6 January 2024
0
0
0

ஜப்பான்  "நான் சாவதற்குப் பயப்படவில் லை" என்றாள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மனைவி. "இப்பொழுது என் கவலை எல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நான் போன பிறகு யாரைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?" வேதனை

29

23. மார்க்ஹீம்

6 January 2024
0
0
0

ஆர்.எஸ். ஸ்டீவன்ஸன் – இங்கிலாந்து  "ஆமாம்! எங்கள் வியாபாரத்திலே பலவிதம் உண்டு; வாங்க வருகிறவர்களில் சிலருக்கு ஒன்றுமே தெரியாது; வெறும் 'அப்பாவிகள்'. அப்பொழுது எங்கள் அநுபவத்திற்கு ஏற்ற லாபத்தைப் பெறு

30

24. மிளிஸ்

8 January 2024
0
0
0

பிரட் ஹார்ட் – அமெரிக்கா  ஸிராநிவாடா மலைத் தொடரில் சமவெளிக்குப் பக்கத்தில் இருக்கும் சிவந்த மலைகளில்தான் "ஸ்மித் பாக்கெட்" என்ற இடம் இருக்கிறது. அது ஒரு சுரங்க ஸ்தலம். அதாவது ஒரு காலத்தில் தங்கம் இரு

31

25. முதலும் முடிவும் ( பகுதி 1)

8 January 2024
0
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  மாலை ஆறு மணியிருக்கும். அந்த அறையில் சுமாரான இருட்டு. 'பச்சை ஷேட்' போட்ட மேஜையின் மீதிருந்த ஒற்றை விளக்கு, தரையில் விரித்த துருக்கிக் கம்பளத்திலும், மேஜையின் மீது சிதறிக் கிடந்த,

32

25. முதலும் முடிவும் ( பகுதி 2)

8 January 2024
0
0
0

"பிரேதத்தின் மேலிருந்த எதையும் எடுத்தாயா?" "நாங்கள் சண்டை போட்டுக் கொள்ளும்பொழுது இது அவன் பையிலிருந்து விழுந்தது." அது வெறும் தபால் கவர். தென் அமெரிக்கத் தபால் குறியிட்டு, "பாகட்ரிக் வாலன், ஸைமன் ஓட்

33

26. நாடகக்காரி

8 January 2024
0
0
0

ஆண்டன் ஷெக்காவ் – ருஷியா  அவள் ஒரு நாடகக்காரி. அந்தக் காலத்திலே அவளுக்கு யௌவனக் களை மாறவில் லை. குரல் கணீர் என்று இருக்கும். பலர் வந்து போவார்கள். ஆனால் குறிப்பாக நிக்கோலாய் பெட்ரோவிச் கோல்ப்பக்கோவ்

34

27. நட்சத்திர இளவரசி

8 January 2024
0
0
0

ஒரு ஆசிரியர் - தென் கடல் தீவுகள்  "நம்மிடம் இருப்பதையெல்லாம் சாப்பிட்டு விடுவோம்" என்றான் டபூதி. அவனது சகோதரனான அய்ட்டோ சந்தேகத்துடன் ஏறிட்டுப் பார்த்தான். "அப்படியானால் நமக்கு மிகுந்த பலம் உண்டாகிவி

35

28. ஓம் சாந்தி! சாந்தி!

8 January 2024
1
0
0

எலியா எஹ்ரன் பர்க்  (யுத்தம் மனித சமூகத்தின் 'உடனுறை நோயாகவே' இருந்து வருகிறது. தனது தற்காப்புக்காக மனிதன் சமூகம் என்ற ஒரு ஸ்தாபனத்தை வகுத்தான்; பிறகு அதனைக் காப்பாற்றத் தன் னைப் பலிகொடுக்கத் தயாரானா

36

29. ஒரு கட்டுக்கதை

9 January 2024
0
0
0

பிரான்ஸ் காப்கா – ஆஸ்திரியா  எலி சொல்லுகிறது... "ஐயோ, உலகம் தினம் தினம் எவ்வளவு சின்னதாகிக் கொண்டே வருகிறது! முதலில் ரொம்பப் பெரிதாக, நான் பயப்படும்படியாக, அவ்வளவு பெரிதாக இருந்தது. நான் ஓடிக்கொண்டே

37

30. ஒருவனும் ஒருத்தியும்

9 January 2024
0
0
0

லூயிகய்ல்லூ – பிரான்ஸ்  மச்சுப் படிக்கட்டு முற்றத்தில் இறங்கியது. அங்கே, அதாவது கடைசிப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, அன்று காலை முழுவதும் அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் ரொம்பவும் நெட்டை. ஒற்றை ந

38

31. பைத்தியக்காரி

9 January 2024
0
0
0

மொப்பஸான் – பிரான்ஸ்  "ஆமாம், நீ சொல்வது முன்பு பிரான்சிற்கும் ருஷியாவிற்கும் சண் டை நடந்ததே, அப்பொழுது நடந்த பயங்கரமான சம்பவத்தை என் நினைவிற்குக் கொண்டு வருகிறது" என்று கூறத் தொடங்கினார் முஸே டி' என

39

32. பளிங்குச் சிலை

9 January 2024
0
0
0

வாலரி புருஸ்ஸாப் வாலரி புருஸ்ஸாப் (1875-1924) புரட்சி யுகமான நவீன காலத்து ருஷ்யப் புது எழுத்தாளர் கோஷ்டியைச் சேர்ந்தவர். இந்தக் கதை புரட்சிக்கு முந்திய காலத்தைப் பகைப் புலமாகக் கொண்டு, எழுந்த கற்பனைக

40

33. பால்தஸார் (பகுதி 1)

9 January 2024
0
0
0

அனதோல் பிரான்ஸ் – பிரான்ஸ்  "கிழக்கே அரசர்களுக்கு மந்திர சக்தியுண்டு என்று நினைத்தார்கள்" -தெர்த்தூலியன் அக்காலத்திலே எதியோபியாவை பால்தஸார் ஆண்டு வந்தான். கிரேக்கர் அவனை ஸாரஸின் என்று அழைத்தனர். அவன்

41

33. பால்தஸார்( பகுதி 2)

9 January 2024
0
0
0

ஜனநடமாட்டமில்லாத பாலைப் பிரதேசங்களில் மத்தியானம் வரை நடந்தனர். உச்சியில் சூரியன் வந்ததும், திருடர்கள் கைதிகளை விடுவித்து, பாறையின் நிழலில் உட்காரச் சொல்லி, கெட்டுப்போன ரொட்டித் துண் டைக் கொடுத்தனர். ப

42

34. பொய்

9 January 2024
0
0
0

லியேனீட் ஆன்ட்ரீவ் – ருஷியா  "நீ சொல்வது பொய், அது உனக்குத் தெரியும்!" "அதற்கேன் இப்படிக் கத்தவேண்டும்? பக்கத்திலிருக்கிறவர்களுக்கும் தெரிய வேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது." இப்பொழுதும் பொய் சொன்னாள்

43

35. பூச்சாண்டியின் மகள்

10 January 2024
0
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து  அவள் பெயர் பத்தேமா. அவள் பாக்தாத் நகர் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தாள். அவள் நீலத்தாடிவாலாவின் புதல்வி. கண்டதும் காம வெறியை எழுப்பும் மோகனாங்கி. அவளது மதி முகத்தின் வ

44

36. ராஜ்ய உபாதை( பகுதி 1)

10 January 2024
0
0
0

ஹென்றிக் இப்ஸன் (1828-1906)  ஷேக்ஸ்பியருக்கு நிகராக உலகம் கொண்டாடும் சிறந்த நாடக ஆசிரியர் ஹென்ரிக் இப்ஸன். தர்மத்துக்கு வெற்றி அளித்தார் ஷேக்ஸ்பியர்; தர்மம் ஏன் வெற்றி பெற வேண்டும் என்ற கேள்வியை எழுப

45

ராஜ்ய உபாதை( பகுதி 2)

10 January 2024
0
0
0

"அந்தக் கடிதம்..."  "இரு இரு, விரோதிகளைப் பற்றி நான் ஒரு பட்டியல் கொடுத்தேனே. நீ அதிகாரத்தை விடத் தயாராக இருப்பதுபோல நானும் என் எதிரிகளை மன்னிக்க ஆசைப்படுகிறேன். அந்தப் பட்டியலை இந்த நெருப்பில் போட்ட

46

37. ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு

10 January 2024
0
0
0

நதானியேல் ஹாதார்ண் – அமெரிக்கா  எல்லைப்புறத்தைப் பாதுகாப்பதற்காக 1725-ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்ட படையெடுப்பு சரித்திரத்திலேயே கற்பனைக்கு இடந்தரும் பகுதி. அதை எல்லாரும் சாதாரணமாக 'லவல் சண்டை' என்று கூற

47

38. சாராயப் பீப்பாய்

10 January 2024
0
0
0

எட்கார் அல்லன் போ – அமெரிக்கா  அவன் ஆயிரம் குற்றங்களைச் செய்தான்; ஆனால் என்னால் இயன்றவரை பொறுத்தேன். அவன் என் னைத் திட்டி அவமதித்தான். இனி, பழிக்குப் பழி தீர்க்க வேண்டியதுதான் என்று மன உறுதி கொண்டேன்

48

39. சகோதரர்கள்

10 January 2024
0
0
0

யூஜோ யாம மோட்டோ – ஜப்பான்  'அண்ணா, இது நல்லதுதானே?' 'எங்கே, இப்படிக் கொண்டா பார்ப்போம்' என்று மூத்தவன் தன்னிடம் காட்டப்பட்ட காளானைப் பார்ப்பதற்காகத் திரும்பினான். 'ஊங் ஹும், நல்லதில் லை; நான் பிடுங்க

49

40. சமத்துவம்

10 January 2024
0
0
0

ஒரு ருஷிய ஆசிரியர்  நீலக் கடலின் அடிமட்டத்திலே, பிரமாண்டமான மீன் ஒன்று, இரை தேடிக்கொண்டு, உல்லாசமாக நீந்தி வருகிறது. எதிரே ஒரு சின்ன மீன் - அதன் உணவு. பெரிய மீன் அதை விழுங்குவதற்காக, தன் வாயை அகலத் த

50

41. ஷெஹர்ஜாதி - கதை சொல்லி

11 January 2024
0
0
0

ஹென்றி டிரெக்னியர் – பிரான்ஸ்அன்று இரவு ஷெஹர்ஜாதி நன்றாகத் தூங்கவேயில் லை. பகல் முழுவதும் சுட்டுப் பொசுக்கும் வெய்யில். அதனால் மூச்சுவிடக்கூட முடியாதபடி அவ்வளவு இறுக்கமாக இருந்தது. சிலந்தி வலையையும் த

51

42. சிரித்த முகக்காரன்

11 January 2024
0
0
0

அவன் சோகமாக இருக்கிறான், தனியாக இருக்கிறான் என்று சொல்லிவிடுவது எளிது; ஆனால் அவன் எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்தோடேயே இருக்கிறான். அப்படிச் சொல்லிவிட்டாலும், அவனைப் பாட்டிலில் போட்டு அடைத்து லே

52

43. சூனியக்காரி

11 January 2024
1
0
0

ரோனால்டு ஆக்டன் – இங்கிலாந்து அப்பொழுது இலையுதிர் காலம். நானும் ஜேக் மக்கின்ஸனும் பக்கத்து மிராசுதாருடைய காட்டில் திருட்டுத்தனமாகக் கண்ணி வைத்து வேட்டையாடச் சென்றோம். அவனுக்கு வயது இருபதுக்கு மேல

53

44. சுவரில் வழி

11 January 2024
0
0
0

ஆர். முரே கில்கிரைஸ்– இங்கிலாந்து அன்று முற்பகல் சிறிது உஷ்ணமாகவே இருந்தது. பசும்புல் செழித்து வளர்ந்த மைதான வெளியில், ஆங்காங்கு குத்துக்குத்தாகப் பெயர் தெரியாத புஷ்பங்கள் எல்லாம் கணக்கற்று

54

45. தாயில்லாக் குழந்தைகள்

11 January 2024
0
0
0

பிரான்ஸிஸ் பெல்லர்பி – இங்கிலாந்து வேர்த்து விருவிருக்க, கால்கள் தள்ளாட, இரண்டு குழந்தைகள் நடந்து சென்றன. பையன், பதினொரு வயசிருக்கும். முன்னால் நடந்தான். பெண் எட்டு வயசுபோல இருக்கும். பாதை முன் ம

55

46. தையல் மிஷின்

11 January 2024
0
0
0

இவான் கூம்ஸ் அங்கு மனிதனைத் தூங்காது விழிக்க வைத்திருக்க ஒருவித சந்தடியும் கிடையாது. இருந்தாலும், அந்தச் சிறிய கட்டிலில் சுருண்டு முடங்கிக்கொண்டு, நெடுநேரமாக நிசப்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

56

47. தந்தை மகற்காற்றும் உதவி

11 January 2024
1
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து டான் ஜுவான் தன் மாளிகையில் விருந்து மண்டபத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று தரை வெடித்தது. நரக தூதர்கள் வந்து அவனை இழுத்துக் கொண்டு போய் விட்டார்கள்

57

48. தெய்வம் கொடுத்த வரம்

12 January 2024
1
0
0

பியோர்ண்ஸ்டர்ண் பியோர்ண்ஸன் – ஸ்வீடன்  இந்தக் கதையில் வருகிறவன் தான் அவனுடைய ஊரிலேயே ரொம்பவும் பெரிய பணக்காரன். தவிரவும் அந்த வட்டாரத்திலே அவனுக்குத்தான் ரொம்பவும் சொல் சக்தி உண்டு. அவன் பெயர் தார்ட்

58

49. தேசிய கீதம் (பகுதி 1)

12 January 2024
0
0
0

எல்.ஏ.ஜி. ஸ்டராங் – இங்கிலாந்து  லாரி நிறையத் துருப்புக்கள் கன வேகமாகச் சென்று சில விநாடிகள் கூடக் கழியவில் லை. அது இப்பொழுதுதான் நிகழ்ந்தது. வெடியின் அதிர்ச்சி பரீலியை அப்படியே கலங்க வைத்துவிட்டது.

59

49. தேசிய கீதம் (பகுதி 2)

12 January 2024
0
0
0

ஆம். அமெரிக்காவில் ஓர் பெருத்த வெற்றி. நியூயார்க்கில் இரண்டு ஆட்டம்; பிறகு அமெரிக்கா முழுவதிலும் ஓர் நீண்ட வெற்றி யாத்திரை; முடிவில் ஹாலிவுட்டில் ஒரு பிலிம்; சமாதானம் ஏற்பட்ட இரண்டொரு மாதங்களுக்கப்புற

60

49. தேசிய கீதம் (பகுதி 3)

12 January 2024
0
0
0

இந்தச் சம்பவம் பரீலியின் கோபத்தை அதிகரித்தது; ஆனால் பொதுப்படையாக்கியது. இதுவரை தன் தேசவாசிகளான புரட்சிக்காரர் மீது கோபங்கொண்டிருந்தான். இப்பொழுதோ இந்த இடத்தின் பேரிலேயே கோபம். அவன் நெஞ்சில் ஆழமாகப் பய

61

50. துன்பத்திற்கு மாற்று

12 January 2024
1
0
0

ஸீனர் லூயிஜி பிரான்டல்லோ – இத்தாலி  நமது வாழ்க்கையை, முக்கியமாக அதில் காணும் துன்பங்களை, வான வெளியிலே தேஜோமயமாகச் சுழன்று செல்லும் நட்சத்திர மண்டலங்களுடன் ஒப்பிட்டுப்பாரும், அப்பொழுது அது துச்சமாகத்

62

51. துறவி

12 January 2024
0
0
0

ராபர்ட் நியூமான் – ஜெர்மனி  "நான் முதல் முதலில் ஐரோப்பாவிலிருந்து இந்தக் கீழப் பிரதேசங்களுக்கு வந்தபொழுது அது நடந்தது" என்று அவன் ஆரம்பித்தான். அவன் எங்கள் கப்பலின் காப்டன்; பெயர் வான்டர்லான். ஜாதியி

63

52. உயிர் ஆசை (பகுதி 1)

13 January 2024
1
0
0

ஜாக் லண்டன் – அமெரிக்கா  அவர்கள் இருவரும் நொண்டி, நொண்டி ஆற்றங்கரை வழியாகத் தள்ளாடி நடந்தார்கள். கத்தி போல ஊசியாக, தெத்துக்குத்தாகக் கிடந்த பருக்கைக் கற்கள் காலை வெட்டின. அவர்களிருவரும் சோர்ந்து விட்

64

52. உயிர் ஆசை (பகுதி 2)

13 January 2024
1
0
0

நாட்களும் ஓடின. காட்டு ஜீவராசிகள் ஓடியாடித் திரியும் பள்ளத்தாக்குகளை அடைந்தான். மான் கூட்டம் ஒன்று. இருபது இருக்கும். துப்பாக்கி லெக்குக்கு ரொம்பவும் அருகில் துள்ளி ஓடின. அவற்றை விரட்டிக் கொண்டே ஓடினா

65

52. உயிர் ஆசை (பகுதி 3)

13 January 2024
1
0
0

பாறை மீது படுத்துக் கிடந்தவன் சுயப் பிரக்ஞையுடன் விழித்துக் கொண்டான். சூரியன் காய்ந்து கொண்டிருந்தது. காட்டு மான்குட்டிகளின் சப்தமும் தூரத்தில் கேட்டது. சித்தத்தின் அடிவானத்தில் மழையும் காற்றும் பனியு

66

53. வீடு திரும்பல்

13 January 2024
1
0
0

பீட்டர் எக் – நார்வே  மாலுமி பெடர் ஸோல்பர்க்குடைய மனைவி வசித்த குடிசை, ஜனங்கள் பொதுவாக 'லூக்கள் தெரு' என்று சொல்லுவார்களே, அதற்கெதிரில் இருக்கிறது. குடிசையின் ஜன்னல் நன்றாகத் திறந்திருந்தது. அப்பொழுத

67

54. ஏ படகுக்காரா!

13 January 2024
1
0
0

மிக்கெய்ல் ஷோலொகோவ்  அந்த காஸக் கிராமத்தைச் சூழ்ந்து வளர்ந்து நின்ற சாம்பல் பூத்த பசிய நிறம் படைத்த செடிச் செறிவின்மீது சூரியவொளி தெம்பாக விழவில் லை. அருகே ஒரு பரிசல் துறை இருந்தது. அங்கே படகேறி டான்

68

55. யாத்திரை

13 January 2024
1
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  நான் ஹாமர்ஸ்மித் பஸ்ஸின் மேல்தட்டிலிருந்து பார்க்கும் பொழுது, அவர்கள் ஆல்பர்ட் ஹால் மெமோரியல் எதிரில் இருந்த ஒரு வீட்டு வாசல்படியில் உட்கார்ந்திருந்தனர். அன்று வெகு உஷ்ணம். வாடகை

69

56. எமனை ஏமாற்ற...

13 January 2024
1
0
0

மொங்காக்கு ஷோனின் என்ற மகடனான புத்த பிக்ஷு தான் எழுதியுள்ள கியோ-ஜியோ-ஷிந்ஷோ என்ற கிரந்தத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: "ஜனங்கள் வழிபடும் தெய்வங்களில் பல துர்தேவதைகளாகும். அவலோகிதன், தர்மம், பிக்ஷுக்கள

70

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்

13 January 2024
1
0
0

தாமஸ் வுல்ப் – அமெரிக்கா  ஈவிரக்கமற்றுக் கொதிக்கும் அந்த வருஷம் ஆகஸ்டில் யுத்தம் நின்றது. யுத்த தேவதையின் பவனியின்போது நான்கு கணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஒன்று லாங்லிவியல்; விமான மைதானத்தில் உள்ள குத

71

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்(பகுதி 2)

13 January 2024
1
0
0

தயங்கித் தயங்கி மறியும் உடலொட்டிய இந்த வேட்கை, தங்கள் ஜோலியைச் செய்து இவர்கள் நடாத்தும் வாழ்வினிடையிலும் வெளிக்கு அகோரக் கேலிக் கூத்தாகத் தோன்றினாலும், மேஜைக்கு மேஜை போஷகர் தேடி நடக்கும்போது சர்வ ஜாக்

72

58. தர்ம தேவதையின் துரும்பு

13 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர்  குரலிலே அதிகார தோரணையும் அதனுடன் பயமும் கலந்திருந்தது. கடுங்குளிரிலே, இருட்டின் திரைக்குள்ளே, ஈட்டிபோலப் பாய்ந்தது அக்குரல். 'நீ யார்? முதலில் அதைச் சொல்' என்று பதில் கேள்வி பிறந்தது, தி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்