shabd-logo

21. மணிமந்திரத் தீவு

6 January 2024

0 பார்த்தது 0

ஷேக்ஸ்பியர்

நடுக்கடலிலே நாலைந்து கப்பல்கள் தத்தளித்துத் தடுமாறுகின்றன. கடலலைகள் சினங்கொண்ட கருநாகங்கள் போல ஆயிரமாயிரமாகப் படம் விரித்துத் தலை சுற்றி மோதுகின்றன. உயிரை வாங்கவரும் கால தூதர்களின் கோரச் சிரிப்புப் போல் அலைவிளிம்புகள் நுரைகக்கிச் சுழிக்கின்றன. காற்றோ உன்மத்தம் கொண்ட பேய்க் கூட்டம் போலக் குதியாட்டம் போடுகிறது. வெட்டு மின்னலும் பேரிடியும் வானத்திருட்டை எல்லாம் கம்பியிட்டுப் பிழிகின்றன. இயற்கையின் இப்பெருஞ் சீற்றத்துக்கு எதிராகத் திரையிட்ட மரக்கட்டையும் சீலைப்பாயும் என்ன செய்ய முடியும்? மாலுமி தீரன் தான்; அனுபவஸ்தன் தான்; கைத்த மனத்துடன், உப்புத் தண்ணீர் கப்பலின் மேல்தட்டில் புரண்டோ டிக் கப்பலையே ஆழத்தில் அமுக்க முயலுவதைப் பலமுறை கண்டவன் தான். ஆனால் இப்பொழுது தன் சாகசத்துக்கு எல் லை வந்துவிட்டது என்பதைக் கண்டு கொண்டான். "தெய்வத்தின்மேல் பாரத்தைப் போட்டு எல்லோரையும் பிரார்த்தனை செய்யச் சொல்லு" என்று கீழ்த் தட்டில் உயிரை மடியில் கட்டிக் கொண்டிருக்கிறவர்களுக்குச் சொல்லியனுப்பிவிடுகிறான். அதே நிமிஷத்தில் கப்பல் பாறையில் மோதுகிறது. அத்தனை ஜீவன்களும் அதனதன் உயிருக்காக ரௌத்ராகாரமான கடலுடன் மல்லாடுகின்றன. இப்படியாக ஒரு கோஷ்டி மக்களை ஒரு தீவில் நாடகாசிரியன் எடுத்துக்காட்டுகிறான். மனுஷ குண விகற்பங்கள் எத்தனை உண்டோ அத்தனையும் அதில் உண்டு. நேப்பிள்ஸ் தேசத்து மன்னனான அலான்ஸோ; அவனுடைய சகோதரனான ஸெபாஸ்டியன்; அண்ணனை விரட்டிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட மிலான் நகரத்து ட்யூக் - அவன் பெயர் அஸ்டோ னினோ; நேப்பிள்ஸ் அரசனின் மந்திரியான கொன்ஸாலோ; அலன்ஸோவின் மகன் ஆணழகன் பெர்டினான்ட்; குடிகார ஸ்டிபானோ; விதூஷகன் டிரன்குலோ; மற்றும் மாலுமிகள், மந்திரிகள் அத்தனை பேரும் கரையில் தொற்றி ஏறுகிறார்கள். "இன்றுதான் என் கிரகங்கள் உச்சத்தில் நிற்கின்றன. காலதாமதம் ஏற்பட்டால் காரியம் கெட்டுப் போகும். ஏவின வேலையைச் சரிவரச் செய்தாயா?" அந்த நிர்மானுஷ்யமான தீவிலே முடிசூடாத மன்னனாக ஆட்சி புரிந்துவரும் மந்திரவாதியான பிராஸ்பிரோ கேட்கிறான். அவன் உடம்பிலே யந்திரமும் சக்கரமும் பொறித்த ஒரு மந்திர அங்கி கிடக்கிறது. கையிலே மாத்திரைக் கோல். "ஆமாம்; எஜமானே, அத்தனை பேரையும், ஒரு சிறு காயம் கூட இல்லாமல் கரை சேர்த்துவிட்டேன். பயங்கரமான புயலை உண்டு பண்ணினேன். கப்பலைக் கரை அருகே கொண்டுவந்தேன். இப்பொழுது எல்லோரும் தீவின் நாலா கரைகளிலும் ஏறிவிட்டார்கள். இனி எனக்கு விடுதலை எப்போது?" என்று கெஞ்சுகிறது அவன் முன் நின்ற யக்ஷணிக் குழந்தை. அதன் பெயர் ஏரியல். மெல்லிய காற்றைப் போல் அவ்வளவு பசலை. "உனக்கு அதற்குள் அத்தனை அவசரமா? வேலை எல்லாம் குறைவற முடியட்டும்; அந்தச் சூனியக்காரி ஸிக்கோராக்ஸ் உன் னை மரத்தில் ஆணியடித்து விடவில் லையா, அதை மறந்துவிட்டாயா? நான் தானே உன் னை மீட்டு வளர்த்தேன். சொன்ன வேலையைச் செய். அப்புறம் கேள்" என்கிறான் பிராஸ்பிரோ. இந்த மந்திரவாதி தனது கையில் சிசுவையும் மந்திரத்தையும் ஏந்தி இந்தத் தீவுக்குள் குடியேறுவதற்கு முன் ஸிக்கோராக்ஸ் என்ற சூனியக்காரி இதைத் தனது கொடுமையால் அளந்தாள். அவள் பிறந்தவூர் ஆல்ஜியர்ஸ். அவளது அட்டூழியங்களைச் சகிக்க முடியாமல் கப்பலேற்றி விடுகிறார்கள். அப்பொழுது அந்தச் சூனியக்காரி கர்ப்பிணி. இங்கே வந்த பிறகு ஒரு குழந்தை பிறக்கிறது. அது மனிதனுமல்ல; மிருகமுமல்ல. மனித உருக்கொண்ட மிருகம். பன்னிரண்டு வருஷங்கள் இந்தத் தீவிலே உள்ள தேவதைகளையெல்லாம் ஆட்டி வைத்துவிட்டுச் செத்து மடிகிறாள். மனித மிருகமான அல்லது மிருக மனிதனான அக்குழந்தை அனாதையாகிறது. இந்த நிலையில்தான் மந்திரவாதி பிராஸ்பிரோ கையிலே பெண் குழந்தையும் மந்திர சாஸ்திரமும் தாங்கி இந்தத் தீவில் தஞ்சம் புகுகின்றான். பிராஸ்பிரோ பிழைப்புக்காக மந்திரவித்தை கற்றவனல்ல. மிலான் நகரத்து ட்யூக் அவன். நிர்வாகத்திலே கவலை செலுத்தி அரசியல் களரில் காலை விட்டுக்கொண்டு உழலாமல், சகபாடிகளான மனித வர்க்கத்தைச் சட்டத்தையும் வாளையும் காட்டி வதக்கி நடத்த ஆசைப்படாமல், புத்தகத்திலே கவனம் செலுத்தித் தேவதைகள்மீது ஆட்சி செலுத்துவதில் மோகம் கொண்டதுதான் அவன் குற்றம். இவனுடைய சகோதரனான அன்டானினோ 'சமயமிது, சமயமிது' என்று ஆட்சியைத் தன்வசப் படுத்திக் கொண்டான். முதுமையும் கருணையும் கொண்ட கொன்ஸாலோவின் உதவியால், பிராஸ்பிரோ காதல் வைத்த மந்திரப் புத்தகங்கள் அவன் வசம் சிக்கிவிட்டன. சகோதர வைரியான அன்டானினோ பிராஸ்பிரோவையும் குழந்தையையும், இனி எக்காலத்திலும் உயிருடனோ அல்லது செத்து மடிந்தோ தனக்கு வைரிகளாகிவிடக்கூடாதபடி ஒரு படகில் ஏற்றிக் கடலுக்கும் காற்றுக்கும் அர்ப்பணம் செய்து விடுகிறான். நாகரிக மக்கள் மீது ஆட்சி செலுத்துவதில் ஆசையற்ற பிராஸ்பிரோவை அவன் நாட்டங்கொண்ட வனதேவதைகள் மீதே ஆட்சி செலுத்தும்படி அப்படகு இந்தக் கண்ணற்ற தீவில் கொணர்ந்து தள்ளி விடுகிறது. கரையேறிய பிராஸ்பிரோ ஏரியலை மீட்கிறான்; அனாதையாகக் கிடந்த மிருகக் குழந்தையை மடிந்து போகாமல் காப்பாற்றி காலிபன் என்று பெயரிட்டு வளர்க்கிறான். பிராஸ்பிரோவின் நெஞ்சில் பாசம் வரண்டு விடாதபடி மூன்று குழந்தைகள் வளர்கின்றன. ஒன்று காற்றில் மாயாவியாக அலைந்து அவன் ஏவிய பணியைச் செய்யும் ஏரியல். தாமசகுணமும் க்ஷாத்திரமும் கொண்ட காலிபன், அடிமையாக வீட்டுக்கு வேண்டிய தேவைப் பொருள்களைத் தேடிக் கொடுக்கும் வேலை செய்து வருகிறான்; தனக்குத்தான் தீவை ஆள உரிமை உண்டு; மந்திரவாதி தன் னை ஏமாற்றி அதைப் பிடுங்கிக்கொண்டான் என்ற கோபம் மடியவில் லை. பிராஸ்பிரோவுடன் காற்றையும் கடலையும் தாண்டிவந்த சிசு, அவன் மனதில் வாஞ்சைக் கொழுந்து படர வளர்கிறது. அவளுக்கு மிராண்டா என்று பெயர். இப்படியாகப் பன்னிரெண்டு வருஷங்கள் கழிந்தன. மிலான் சம்பவம் எப்போதோ நடந்த கதையாகி எல்லோரும் பிராஸ்பிரோவை மறந்துவிட்டார்கள். நேப்பிள்ஸ் அரசனான அலான்ஸோ தன் மகளை ட்யூனிஸ் ராஜ்யத்து இளவரசனுக்குக் கலியாணம் செய்து கொடுத்தான். மணவினைக்காகச் சென்றிருந்த கோஷ்டிதான் இது; ஏரியலின் சக்தியால் எற்றுண்டு மணிமந்திரத் தீவில் கரையேறியது. "இப்படிப்பட்ட செழிப்பான தீவு ஒன்றுக்கு நான் அரசனாக இருந்தால்..." பழுத்து முதிர்ந்த கிழவனான கொன்ஸாலோ ஆரம்பிக்கிறான். கடலுக்குத் தப்பிய ஒரு கோஷ்டி உட்கார்ந்திருக்கிறது. பட்டத்து இளவரசனும் தன் பாசத்துக்குக் கொழுகொம்புமான பெர்டினான்ட் மாண்டு மடிந்துவிட்டான் என்று அலான்ஸோ மனம் வேகிறது. ஆழக் கடலுக்குள் மகன் மூழ்கி மூச்சடைத்து மாண்டு போனான்; இனி என்ன வாழ்வு என்று மனங் கைத்துச் சோர்ந்துவிட்ட அரசனுடைய மனத்தை வேறு திசையில் திருப்பக் கிழவன் முயற்சிக்கிறான். அந்தக் கோஷ்டியில் உள்ள மற்றவர்கள் கிழவனின் கனவை நையாண்டி செய்கிறார்கள். கொன்ஸாலோ மேலும் விவரிக்கிறான்: "இந்த ராஜ்யம் அங்குள்ள யாவருக்கும் பொதுச்சொத்து. அங்கே பேரமும் பித்தலாட்டமும் இருக்காது. நீதி கண்டு சொல்ல ஒருவனும் இருக்கமாட்டான். அதிகாரம் கிடையாது, செல்வமோ வறுமையோ இருக்காது. கொத்தடிமைச் சேவகம் கிடையாது. பந்தகம், வாரிசு, எல் லை, வேலி எதுவும் இருக்காது. வரி இருக்காது. மதுவனம் இருக்காது. நாகரிகத்தின் பலன்களான உலோகம், தான்யம், மது, எண்ணெய் எதுவும் இருக்காது. அங்குள்ள யாவரும் உழைக்க வேண்டாம். ஆண்கள் சும்மா இருப்பார்கள். பெண்களும் அப்படித்தான்; களங்கமற்று, குணம் குறையாது இருப்பார்கள். அங்கே ராஜ்யாதிகாரமும் இருக்காது..." "ஆனால் நீ அதற்கு ராஜா" என்று சிரிக்கிறான் ஸெபாஸ்டியன். "கிழவனார் பொதுச் சொத்தின் பின்பாதி. முன் கதை மறக்கிறதையா" என்கிறான் அன்டோனினோ. கொன்ஸாலோ அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில் லை. "அங்கே இயற்கை கொடுப்பது யாவருக்கும் பொது; வியர்வையோ உழைப்போ சிந்த வேண்டிய அவசியம் கிடையாது. துரோகம், அயோக்கியத்தனம், வாள், வல்லீட்டி, துப்பாக்கி, யந்திரம் எதையும் நான் அனுமதிக்க மாட்டேன். இயற்கை தனக்குள்ள செழிப்பிலே, வளத்திலே, கல்வியிலே கைநிறையக் கொடுப்பது எனது மக்களைப் போஷிக்கும்..." "பெரியார் பிரஜைகளிடை கலியாணம் கிடையாதோ" என்று கிண்டல் பண்ணுகிறான் ஸெபாஸ்டியன். "எல்லாம் சும்மா அப்பா, அயோக்கியர்களும் அவிசாரிகளுந்தான்" என்றான் அன்டோனினோ. கிழவன் இவர்கள் பேச்சைச் சட்டை செய்யவில் லை. "இம்மி பிசகாது என் ஆட்சியில்; அதற்கு எதிரே கிருதயுகம் கூட ஈடாக நிற்கமுடியாது..." "மன்னர் நீடூழி வாழ்வாராக." "கொன்ஸாலோ நீடூழி வாழ்வாராக." "நான் சொன்னதைக் கவனித்தீர்களா?" என்று அலான்ஸோவைக் கேட்கிறான் கொன்ஸாலோ. "பேசாமலிரு; அது என் காதில் விழாது இப்பொழுது" என்கிறான் அரசன். அந்த நிலையில் ஏரியல் மாயாவியாக வந்து கண் ணைச் சொருகும் இசை ஒன் றை எழுப்புகிறான். புத்திரசோகத்தில் ஆழ்ந்த அலான்ஸோவுக்கும் கண்ணுறக்கம் வந்து விடுகிறது. மிஞ்சியவர்கல் அன்டோ னினோவும், மன்னனுடைய சகோதரனான ஸெபாஸ்டியனுமே. இந்திர போகத்தில் அமர்ந்தாலும் இயற்கைக்குணம் போய்விடுமா என்ன? ராஜ்ய லக்ஷியத்தைப் பற்றிய கொன்ஸாலோவின் கனவு விழித்துக் காவல் நிற்பவர்கள் மனத்தில் ராஜ்ய மோகத்தைக் கிளப்புகிறது. அயோக்கியத்தனத்தால் நல்ல பலனும், அதைச் செய்து முடிக்க வசதியும் கிடைத்தால், யாருக்குத்தான் அயோக்கியனாக விருப்பமிராது? அண்ணனை விரட்டி ஆட்சியை எளிதில் கைப்பற்றிக் கொண்ட அன்டோ னினோ, ஸெபாஸ்டியன் மனத்தில் ஆசை வித்தை விதைக்கிறான். ஆதி கொலைகாரனான கெய்ன் ஆரம்பித்து வைத்த சகோதரத் துரோகம் மனித உடம்பின் நாடியோடு நாடியாக ஒன்றி, சமயம் ஏற்பட்ட போதெல்லாம் உச்சத்தில் ஓடுகிறது என்று சொல்லுகிறது விவிலிய வேதம். அலான்ஸோவைத் தீர்த்து விட்டால், வாரிசு யார்? மகள் ட்யூனிலிருந்து கடலைத் தாண்டிக் கொண்டு உரிமை கொண்டாடி அமர்வதைத் தவிர அதனால் வேறு என்ன செய்ய முடியும்? அன்டோ னினோ சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சொல்லி ஸெபாஸ்டியன் மனதைக் கெடுத்து விடுகிறான். கிழவனை ஒருவனும் மன்னனை ஒருவனும் தீர்த்து விடுவது என்று சதித்திட்டம் போடுகிறார்கள். யக்ஷணிக் குஞ்சான ஏரியல், தன் எஜமான் ஏவல்படி இவர்களுடைய உயிருக்கு ஆபத்து வராமல் காத்து நிற்க வேண்டியவன். கொன்ஸாலோ காதில், "குறட்டை போடாதே. அருகே கொலைக் கும்பல் கும்மாளம் போடும் பார்" என்று ஓதுகிறான். கொன்ஸாலோவும் மன்னனும் திடுக்கிட்டு விழித்து விடுகிறார்கள். ஏதோ சத்தத்தைக் கேட்டுக் கத்தியை ஓங்கியதாகச் சொல்லிச் சதிகாரர்கள் தப்பித்துக் கொள்ளுகிறார்கள். இந்தக் கோஷ்டி பட்டத்து இளவரசன் பெர்டினான்ட் கதியென்ன என்று தேடிச் செல்லுகிறது.

*****

ஸ்டிபானோ ஒரு பட்லர். புட்டியிலே சொர்க்கத்தைத் தரிசித்தவன். கப்பல் போய்விடும் என்று நிச்சயமாகத் தெரிந்தவுடன் கடலில் குதிக்கத் துணிந்துவிட்டான். ஆனால் ஒரு பிப்பாய் சாராயத்தை உருட்டிக்கொண்டு வந்து ஒரு மிதப்புக் கட்டையாக உபயோகித்து பீப்பாயும் தானுமாகக் கரை சேருகிறான். கரைக்கு வந்தவுடன் முதல் வேலையாகப் பீப்பாயைப் பத்திரமான இடத்தில் பதுக்கி வைத்துவிட்டு, புட்டி நிறையச் சாராயத்தை ஊற்றி எடுத்துக்கொண்டு தீவைச் சுற்றிப் பார்க்கப் புறப்படுகிறான். புட்டி தான் அவனுக்குப் பயத்தைத் தெளிவிக்கிறது. பேச்சுக் கொடுக்கும் தோழனாக, பசி போக்கும் மாமருந்தாக இருக்கிறது. போதை ஜன்னியில் தன் ஞாபகத்துக்கு வந்த பாட்டுக்களையெல்லாம் பாடிக்கொண்டு வருகிறான். விதூஷகனான டிரின்குலோ வேறு ஒரு பக்கத்தில் கரையேறித் திசைகெட்டு நடந்து வந்து கொண்டிருக்கையில், வேலை செய்வதற்கு மனமில்லாமல் சோம்பிப் படுத்துக் கிடக்கும் காலிபனைக் கண்டுவிடுகிறான். அவனுடைய ஆராய்ச்சிக்குக் காலிபன் ஒரு காட்டு மனுஷனாகத் தோன்றுகிறது; மறுபடியும் இடிச் சப்தம் கேட்டு காலிபனுடைய அங்கிக்குள் நுழைந்து விடுகிறான். போதையில் தன் னை மறந்து பாடிக்கொண்டு வரும் ஸ்டிபானோவும் அந்த இடத்துக்கு வந்து சேருகிறான். அவன் கண்ணிலும் காலிபன் தென்படுகிறான். அவனை மெதுவாகப் பிடித்துக்கொண்டு, ஊருக்குக் கொண்டு போய் விட்டால், பணங்காய்ச்சி மரத்தை கொல் லையில் நட்டு விட்ட மாதிரி என்று தோன்றுகிறது. மிருகத்தினிடம் நெருங்குகிறான்; அது மனுஷ பாஷை பேசுகிறது. இன்னும் அந்த மிருகத்துக்கு நாலு கால், இரண்டு குரல். இதென்ன விபரீதம்; மிருகம் இரண்டாகப் பிரிந்து அதிலிருந்து விதூஷகன் பிரசன்னமாகிறான். பிசாசு அல்ல, பழைய நண்பன் டிரின்குலோதான் என்று நிச்சயமான பிறகு, காலிபனிடம் பேச்சுக் கொடுத்துப் பார்க்கிறார்கள். பேச்சுக்கு மசியாத பிசாசு, புட்டிக்கு மசிந்து விடுகிறது. உள்ளே என்றுமில்லாத சுறுசுறுப்புத் தட்டவும், காலிபனுக்குத் தன் னைக் கைதூக்க வந்த கடவுளாகவே ஸ்டிபானோ தென்படுகிறான். இவனுக்கு அடிமையாகிவிட்டால், விறகு சுமக்கும் சள் ளை கிடையாது. புட்டிப் பொருளுக்காகத் தனக்குச் சொந்தமாகி இருந்திருக்க வேண்டிய ராஜ்யத்தையே இவன் காலடியில் வைத்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கெஞ்சுகிறான். புட்டி கொடுத்த புதிய புத்தித் தெளிவிலே ஸ்டிபானோவுக்குப் பட்டாபிஷேகம் க்ஷண காரியமாக நடந்து விடுகிறது. அவனுடைய பிரதான மந்திரி டிரின்குலோ; முதல் குடி மிருகப் பிராயம் நீங்காத காலிபன். "இந்தத் தீவு எனக்குத்தான் உரியது, எங்கம்மா கொடுத்தது. இதைப் பிராஸ்பிரோ என்கிற ஒருவன் என்னிடமிருந்து ஏமாற்றிப் பிடுங்கிக் கொண்டு என் னை அடிமையாக்கி விட்டான். இந்தத் தீவிலே பசித்திருக்க வேண்டாம்; வகை வகையாய்ப் பழங்களுண்டு; கண் ணை மூடிப் படுத்துவிட்டால், அங்கே இனிய பாட்டுக் கேட்டுக் கொண்டேயிருக்கும்; எழுந்திருக்கவே ஆசை எழாது. அவ்வளவு சுகம். இந்தத் தீவு உனக்கே உனக்கு. உன் அடிமை நான்" என்று ஸ்டிபானோ காலடியில் வைத்து விட்டான். "அந்தக் கொடுங்கோலன் மத்தியானத்தில் கொஞ்ச நேரம் தூங்குவான். அவனைக் கொன்றுவிடு; அப்புறம் நமக்குக் கவலையே கிடையாது" இதுவே காலிபன் முறையீடு. "அகோ வாராய் மதிமந்திரி; புறப்படு புரட்சி செய்வோம்" என்று பிறக்கிறது சுக்ரீவ ஆக்ஞை. இந்த நிலையில் ஏரியல் மாயாவியாக வந்து அவர்களை மோகன இசையொன்றில் மதிமயங்க வைத்து, குரல் செல்லும் திசையில் கோவேறு கழுதைகள் போலத் தொடரும்படி கல்லிலும் முள்ளிலுமாக இழுத்துச் செல்லுகிறான். *****பெர்டினான்ட் மடியவில் லை. நீந்திக் கரையேறி ஏரியலின் மோகனப் பாட்டைப் பின் தொடர்ந்து பிராஸ்பிரோ மகளைக் கண்டு விடுகிறான். கண்டவுடன் காதல். காட்டுக் கொடி போலும், வனதேவதை போலும் கண்முன் நின்ற மிரண்டாவுக்காக எந்த ராஜ்யத்தை வேண்டுமானாலும் தியாகம் செய்யவும் தயாராகி விட்டான். தகப்பனைத் தவிர மனித வர்க்கத்தையே பார்க்காமல் வளர்ந்த மிரண்டாவுக்கு அவன் இந்த உலகத்தவன் அல்லவென்றே படுகிறது. அப்படி இருவரும் காதல் பித்தேறி விடுகிறார்கள். பிராஸ்பிரோவுக்கு இவர்கள் மனநிலை புரிந்து விடுகிறது. இவர்களது பாசம் நிலைத்ததுதானா என்று பரீட்சிக்க, பெர்டினான்ட்டை விறகு வெட்டச் சொல்லிப் பணியாள் நிலைக்கு ஆக்கி விடுகிறான். மிரண்டா நடமாடும் உலகில் விறகு வெட்டியாகக் காலம் கழித்தாலும் போதும், அதுவே பரமபதம் என்று கருதுகிறான். பெர்டினான்ட் - மிரண்டா இருவருடைய காதல்வழி அவ்வளவு கரடுமுரடாக இல் லை. பிராஸ்பிரோ மன்னித்து, மணவினைக்கு ஆசியளித்துக் காத்திருக்கக் கட்டளையிடுகிறான். தன்னுடைய திறமையால் இந்திர ஜால வித்தை நடத்துகிறான். மாத்திரைக் கோல் சுழற்றியதும், கவியின் உள்ளத்தில் குதித்தெழும் கற்பனைகள் போல வனதேவதைகள் அவர்கள் முன் தோன்றிப் பாட்டுப்பாடி மகிழ்விக்கிறார்கள். காதல் வானம்பாடி நடனம்புரிய நதித் தேவதைகளும் அறுவடைக்காரர்களும் வந்து ஆடுகிறார்கள். இந்த நிலையில் குடிகார ராஜாவின் சதிக்கும்பல் தனது இருப்பிடத்தை நோக்கித் தேடி வருவது நினைவுக்கு வருகிறது. சட்டென்று வனதேவதைகளை அனுப்பி விட்டுப் புறப்பட்டு விடுகிறான். மகனைத் தேடி வரும் மன்னன் கோஷ்டி, சமயத்தை எதிர்பார்க்கும் உள்ளுறை நோய் போன்ற கொலைக் கும்பலுடன் தீவுக்குள் வெகுதூரம் வந்துவிட்டது. கிழவன் கொன்ஸாலோ, இனி ஒரு அடி கூட எடுத்து வைப்பதற்குச் சக்தியில் லை என்று உட்கார்ந்து விடுகிறான். மன்னனுக்கும் தளர்வு தட்டுகிறது. யாவருக்கும் பசி காதை அடைக்கிறது. இந்தச் சமயத்தில் ஏரியல் அசரீரியாக வந்து மறுபடியும் தனது மோகனப் பாட்டைப் பாடுகிறான். யாவரும் பிரமித்து நிற்கையிலே, தேவதைகள் கோஷ்டி ஒன்று அவர்கள் முன்னிலையிலே விருந்து படைக்கிறது. பசி கழுத்தைப் பிடித்து நெட்ட மன்னனும் மற்றோரும் நெருங்குகிறார்கள்; ஆனால் ஏரியல் பயங்கரமானதொரு கூளியாகத் தோன்றி உணவுகளைச் சிறகில் தட்டிக் கொண்டு மறைகிறான். ஆசைக்கும் நுகர்ச்சிக்கும் இடையில் எதிர்பாராத இந்த மதில் எழுந்து விட்டது. "ஆயிரம் பேய்களானாலும் சரி, ஒவ்வொன்றாய் வந்து பார்க்கட்டும்" என்று கர்ஜிக்கிறான் ஸெபாஸ்டியன். சோர்ந்த கோஷ்டி பட்டினியுடன் தோழமை கொள்ளுகிறது. ஸ்டிபானோ புரட்சிக் கும்பல், பாட்டில் சொக்கி, கல்லிலும் முள்ளிலும் இழுபட்டுக் கடைசியில், சகதிக் குட்டை ஒன்றில் விழுந்து புட்டியையும் பறிகொடுத்து பிராஸ்பிரோ குகையை அணுகுகிறது. "வந்து விட்டோ ம்; வீரா, உன் வினைத்திறமையைக் காண்பி" என்று காலிபன் அவசரப்படுகிறான். பட்டங்கட்டினாலும் பழமை வாசனை போகவில் லை. கொடியில் உலர்த்தப்பட்டிருந்த பட்டும் பட்டாடையும் கண்டு அதைத் தட்டில் கொண்டு போவதுதான் தன் ராஜ காரியத்தின் முதல் கடமை என்று நினைக்கிறான் ஸ்டிபானோ. ராஜாவே இப்படி என்றால் மந்திரியைக் கேட்க வேண்டுமா? 'எனக்கிது, இது' என்று கொண்டே துணிமணிகளை மூட்டைக்கட்டிக் காலிபன் முதுகில் ஏற்றுகிறார்கள். கதி மோட்சம் நாடிய காலிபன் பொதி கழுதையானான். காலிபன் அங்கலாய்க்கிறான். அவசரப்படுகிறான். முதலில் திருடுவோம்; அப்புறம் புரட்சி என்பது ஸ்டிபானோ வாதம். இந்தச் சமயத்தில் வேட்டை நாய்களின் ஹூங்காரம் கேட்கிறது. பிராஸ்பிரோவும் ஏரியலும் பயங்கரமான நாய்களை ஏவி முயல் வேட்டையாடி வருகிறார்கள்; முயல் வேட்டை மனுஷ வேட்டையாகிறது. புரட்சிக்கும்பல் பிளிறிக்கொண்டு ஓட்டமெடுக்கிறது. "இவர்களை விரட்டிக் கொண்டு போ; உடம்பெல்லாம் குத்தும் குடைச்சலும் உண்டாக்கக் குட்டிச் சாத்தான்களை ஏவி விடு" என்று உத்தரவு போட்டு விட்டு வேறு திசை செல்லுகிறான் பிராஸ்பிரோ. மன்னன் கோஷ்டி, பிராஸ்பிரோ மந்திரம் ஜபித்து மாயவட்டம் கீறிய பிரதேசத்துக்குள் பிரவேசித்துத் திகைப்பூண்டு மிதித்தவர்கள் போல அடியெடுத்துவைக்க முடியாமல் சிக்கிக் கொள்ளுகிறார்கள். மந்திரச் சட்டையணிந்து, மாத்திரைக் கோல் ஏந்தி, பிராஸ்பிரோ அவர்கள் முன் தோன்றுகிறான். "எனது மந்திர சக்தியின் வலிமையால், சூரியனை இருட்டாக்கி, புயலை எழுப்பி உங்கள் எல்லோரையும் என் கைக்குள் சிக்கவைத்தேன். நான் மந்திரவாதி. தீவின் தலைவன்; மிலான் ஆட்சி இழந்த பிராஸ்பிரோ. இப்பொழுது சிறுமை மனிதர்கள் செயல்கள் மீதுள்ள என் சினம் அடங்கி விட்டது. அரசே வருக. குணசம்பன்னான கொன்ஸாலோவே வருக. சகோதரத்துரோகிகளே, உங்கள் வரவு நல்வரவாகட்டும். நீங்கள் என் அதிதிகள்" என்கிறான் பிராஸ்பிரோ. புத்திர சோகம் தீரவில் லை அலான்ஸோவுக்கு. நானும் உம்மைப் போலவே ஒரு மகளை இழந்து விட்டேன். இதோ பாருங்கள் என்று மாத்திரைக்கோலைத் தூக்குகிறான் பிராஸ்பிரோ. மிரண்டாவும் பெர்டினான்ட்டும் குகையில் சதுரங்கம் ஆடும் காட்சி தெரிகிறது. "உமது மகன் என் மகளைக் கவர்ந்துவிட்டான்" என்கிறான் பிராஸ்பிரோ. ஏரியல் விரட்ட, திருடிய துணி மூட்டைகளுடன் ஸ்டிபானோ - காலிபன் கோஷ்டி வருகிறது. வேறு திசையிலிருந்து மாலுமிகளும் மற்றுள்ளோரும் வருகிறார்கள். நேப்பிள்ஸில் கலியாணம் முடிந்த பின் மிலானில் படித்துப் பொழுதுபோக்க இடம் கிடைத்தால் போதும்; இதுதான் பிராஸ்பிரோ ஆசை. "எங்களை நலமுற நேப்பிள்ஸ் சேர்த்த பின் நீ உன் விருப்பம் போலக் காற்றில் ஓடியாடித் திரிந்து மகிழ்" என்று ஏரியலுக்கு விடை கொடுக்கிறான். யக்ஷணிக் குழந்தையானாலும் பிராஸ்பிரோவுக்குப் பிரிய மனமில் லை. அதன் மேல் அவ்வளவு ஆசை படர்ந்துவிட்டது. இருந்தாலும் அதன் ஆசை இருக்கிறதே! தான் வழிபட்ட தெய்வம், போதை மயக்கம் தெளிவாத பரிசாரகன் என்பதில் காலிபனுக்கு மகா வெட்கம். காலிபன் காதிலே வனதேவதைகளின் இசை நிரம்ப, எழுந்திருக்க மனமில்லாதவனாக, கண்மூடிக் கிடந்து, ஏகச் சக்ராதிபதியாக ஆளுகிறான். தீவும் தனிமை கண்டது.

புதுமைப்பித்தன் மூலம் மேலும் புத்தகங்கள்

72
கட்டுரைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகள்
0.0
புதுமைப்பித்தன் மொத்தம் 108 சிறுகதைகள் எழுதியுள்ளார். அதில் அவர் காலத்தில் 48 மட்டும் பிரசுரமாயின. 1940-ல் புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. புதுமைப்பித்தன் 98 கதைகளை எழுதியுள்ளார். அவர் மணிக்கொடியில் எழுதிய 29 கதைகளைப் புதுமைப்பித்தன் கதைகள் என்ற பெயரில் நவயுகப் பிரசுராலயம் வெளியிட்டுள்ளது. ஆறுகதைகள், நாசகாரக் கும்பல், பக்த குசலோ என்ற அவரது பிற நூல்களையும் அதே நிறுவனம் வெளியிட்டுள்ளது. கலைமகள் பதிப்பகம் காஞ்சனை தொகுதியையும், ஸ்டார் பிரசுரம் ஆண்மை என்ற தொகுதியையும் வெளியிட்டன. ஐந்திணைப் பதிப்பகம் புதுமைப்பித்தனின் மொத்தச் சிறுகதைகளையும் வெளியிட்டது. அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் புதுமைப்பித்தனின் அனைத்துச் சிறுகதைகளையும் வெளியிட்டுள்ளது.
1

1. ஆஷாட பூதி

2 January 2024
0
0
0

மோலியர் (1622-1673) பதினேழாவது நூற்றாண்டில், பிரான்ஸில் நாடகக்காரன் என்றால், மதம் அவனைத் தள்ளிவைத்தது. பிரார்த்தனை - பிரசாதத்தைப் பெறுவது என்றால் விசேஷ சிபாரிசின் பேரில் நடக்க வேண்டிய காரியம். செத்தால

2

2. ஆட்டுக் குட்டிதான்

2 January 2024
0
0
0

ஜேம்ஸ்ஹானலி – இங்கிலாந்து  செக்கச் செவேலென்றிருக்கும் அந்த பஸ், ஏக இரைச்சலுடன் அந்த வளைவைத் திரும்பியது. சூழ்நிலை தாங்கிய அமைதியான வண்ணக் கலவைகளுக்குச் சவால் கொடுப்பது மாதிரி அந்தச் சிகப்பு கண்களை உற

3

3. அம்மா

2 January 2024
0
0
0

கே. பாயில்  பாதை நெடுகலாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், அதற்குச் சின்னக் கிளை ஒன்றும் இருந்தது. இருந்தாலும் மறுபக்கத்தில் ஓடும் சிற்றோடையில் இறங்கி அக்கரைக்குப் போக வேண்டிய அவசியமே இல் லை. மலை வ

4

4. அந்தப் பையன்

3 January 2024
0
0
0

மாக்ஸிம் கார்க்கி  இந்தச் சின்னக் கதையை எப்படிச் சொல்லுவது என்று புரியவில் லை. அவ்வளவு எளிதானது. நான் வாலிபப் பருவத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் தெருக் குழந்தைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு ஊருக்கு வெளியே

5

5. அஷ்டமாசித்தி

3 January 2024
0
0
0

டென்ஷொ வம்சத்தின் ஆதிக்கத்தின்போது, கியாட்டோ என்ற வடக்குப் பிராந்தியத்தில் குவான்ஷின் கோஜி என்ற வயோதிகன் வாழ்த்து வந்தான். நீண்டு நெஞ்சை மறைக்கும் வெள் ளைத் தாடியுடன், ஷிண்டோ குருக்கள்மார் போல உடையணிந

6

6. ஆசிரியர் ஆராய்ச்சி

3 January 2024
0
0
0

ஸின்கிளேர் லூயிஸ்  டாக்டர் ஸ்லீக் பிரம்மச்சாரி; அதிலும், வழுக்கை விழவிருக்கும் வாலிபப் பிரம்மச்சாரி. அவர் இராஸ்மஸ் கலாசாலையில் சரித்திரமும் பொருளாதாரமும் கற்பித்து வந்தார். அதாவது மேடைமீது ஏறி நின்று

7

7. அதிகாலை ( பகுதி 1)

3 January 2024
0
0
0

நிக்கோலாய் டிக்கனோவ்  1918-ம் வருஷம் ஆகஸ்டு மாதத்தில் துருக்கியர் பாக்கூ என்ற இடத்தை முற்றுகை இட்டார்கள். மென்ஷ்விக் நிர்வாகத் தலைமை போர்டின் ஐந்து தலைவர்கள் மூளையும் சுழன்றது. சர்வ குழப்பம்; அது விஷ

8

7.அதிகாலை (பகுதி 2)

3 January 2024
0
0
0

இராத்திரி ஒரு ஊரில் தங்கினதும், ஆலி ஹஸன், டாஷா பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு சளசளவென்று மணிக்கணக்காகப் பேசிக் கொட்டினான். உத்யோகஸ்தரின் விதவை மெய்ஸ் அரிசி ரொட்டியை அசைபோட்டுக் கொண்டிருந்தாள். வி

9

7. அதிகாலை ( பகுதி 3)

3 January 2024
0
0
0

"பொய்யாயிருக்கலாம், ஆனால் சித்திரவதையில், உன் னைக் காட்டிக்கொடுப்பேன்; என் னைக் காட்டிக்கொடுத்துக் கொள்வேன்; எனக்கு ஞாபகத்துக்கு வந்தவர்களையெல்லாம் காட்டிக்கொடுப்பேன். உனக்குச் சித்திரவதை என்றால் எப்ப

10

7. அதிகாலை (பகுதி 4)

3 January 2024
0
0
0

"ஆஹா அப்படியா. பாக்ஷாதான் வயிற்றுக் கடுப்பால் கழிந்து கொண்டிருக்கிறாரே. இன்னும் கொஞ்ச காலத்துக்கு அவரைப் பற்றித் தொந்திரவில் லை. தவிரவும், உன்னுடைய ஆயுதங்களை உன்னிடம் கொடுத்துவிடவேண்டும் என்று உத்திரவ

11

8. பலி

4 January 2024
1
0
0

ஜோஸப் நையரு – ஹங்கேரி  மோல்டேவியா நோக்கி நிற்கும் மலைச் சிகரங்களிலே அந்த வருஷத்தில் மந்தைகளுக்குக் கரடிகளால் வெகு தொல் லை ஏற்பட்டு வந்தது. வில் - பொறி வைத்து எல்லாம் முயன்று பார்த்ததும் ஒன்றும் பயன்ப

12

9. சித்திரவதை

4 January 2024
1
0
0

எர்னஸ்ட் டாலர்  "உனக்கு இன்னும் ஏதாவது விருப்பம் இருக்குமா?" சாகக் கிடக்கும் வாலிபனைப் பார்த்து ஸ்டட்கார்ட் இரகசியப் போலீஸ் உத்தியோகஸ்தர் இவ்வாறு கேட்டார். வாலிபனுடைய 'வெறிச்சோடிய' கண்கள் ஜன்னலின் கம

13

10. டைமன் கண்ட உண்மை

4 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர் (1564-1616)  ஆங்கில நாடகாசிரியர், ஷேக்ஸ்பியரைத் துவிதப் பிரம்மா என்பார்கள். உலகத்தின் சிருஷ்டி தத்துவத்தைப் புரிந்து கொண்டவர் போல் தமது பாத்திரங்களை நடமாட விடுவார். அவர் உலகில் பேய்களும்

14

11. இனி

4 January 2024
1
0
0

இ. எம். டிலாபீல்ட்  இதுவரை நடக்காததைப் பற்றி ஒரு கதை எழுதினால் என்ன?... அந்தக் கதையின் போக்கில் அறிந்து கொள்ள முடியுமானால்... பதினைந்து இருபது வருடங்களுக்கப்புறம்: ஓல்ட் பெய்லியில் (நியாயஸ்தலம்) நடக்

15

12. இந்தப் பல் விவகாரம்

4 January 2024
1
0
0

மைக்கேல் ஜோஷெங்கோ – ருஷ்யா  எங்கள் சகா எகோரிச்சுக்குப் பல், தொந்திரவு கொடுத்து வந்தது. என்ன காரணத்தினாலோ விழ ஆரம்பித்தது. காலம் என்ற ஒன்று இருக்கே, அதற்கும் இந்த விவகாரத்துக்கும் சம்பந்தமிருக்கலாம்.

16

13. இஷ்ட சித்தி ( பகுதி 1)

4 January 2024
1
0
0

ஹான்ஸ் பலாடா – ஜெர்மனி  முதலிலேயே தெரிவித்து விடுகிறேன். அப்புறம் குறை சொல்லாதீர்கள். என் மனைவி பெயர் இட்ஸன் பிளாஸ். உச்சரிப்பதற்குக் கொஞ்சம் சிரமந்தான்; ஆனால் அவள் மீது இருந்த ஆசையில், அதன் சிரமம் எ

17

13. இஷ்ட சித்தி ( பகுதி 2)

4 January 2024
1
0
0

"பின்பு கிரிஸ்மஸ் சமயத்தில் அதை உடைத்து... பிறகு என்னவென்பது உங்களுக்குத்தான் தெரியுமே!" என்றாள்! "உனக்கென்ன பைத்தியமா? இந்த வருஷம் போனஸ் கீனஸ் கிடையாது என்று ஹீபர் சொல்லுகிறான். முதலாளி வருமானம் இல்

18

14. காதல் கதை

5 January 2024
1
0
0

வில்லியம் ஸரோயன்  "இந்தப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுகிறீரா அல்லது அந்தப் பக்கமாக உட்காருகிறீரா?" என்று சிகப்புக் குல்லா* கேட்டான். (* நம்மூர்களில் சிகப்புத் தலைப்பாய் என்றால் போலீஸ்காரன் என்பது

19

15. கலப்பு மணம்

5 January 2024
1
0
0

கிரேஸியா டெலாடா – இத்தாலி  அன்றிரவு சுகமாக இருந்தது. பூலோகத்தைக் கடுங்குளிரினால் சித்திரவதை செய்வதில் சலியாத உறைபனிக் காலத்துக்கும் ஒரு ஓய்வு உண்டு என்பதை அந்த ஏப்ரல் இரவு காட்டியது. இதுவரை பனிக்கட்ட

20

16. கனவு (பகுதி 1)

5 January 2024
1
0
0

ஐவான் டர்ஜனீப் – ருஷியா அந்தக் காலத்தில் நான் என் தாயாருடன் ஒரு சிறு துறைமுகப் பட்டினத்தில் வசித்து வந்தேன். எனக்கு அப்பொழுதுதான் பதினேழு வயது நிரம்பிற்று. தாயாருக்கு முப்பத்தைந்து வயது. சின்ன வயதிலே

21

16. கனவு ( பகுதி 2)

5 January 2024
1
0
0

8 என் தாய் எனக்குக் கூறிய கதை எனதுள்ளத்தை எப்படிச் சிதறடித்தது! முதல் வார்த்தையிலிருந்தே அறிந்து கொண்டேன். அவள் வாயிலிருந்து தவறுதலாக நழுவிய வார்த்தை எனது உத்தேசத்தைத் திடப்படுத்தியது. எனது கனவில் நா

22

17. காரையில் கண்ட முகம்

5 January 2024
1
0
0

இ.வி. லூக்காஸ் – இங்கிலாந்து  நேற்று சாயங்காலம் எனது நண்பன் டாப்னி வீட்டில் நடந்ததை மறக்க முடியவில்லை. அந்த அநுபவம் இன்னும் என் னை உறுத்திக் கொண்டிருக்கிறது. அன்றைய தினம் பேச்சு பூத பைசாசங்களைப் பற்ற

23

18. கிழவி

5 January 2024
1
0
0

ஸெல்மாலேகர்லாப் – ஸ்வீடன்  மலைப்பாதை வழியாக ஒரு கிழவி நடந்து கொண்டிருந்தாள். மெலிந்து குறுகியவள்தான். எனினும் முகத்தின் வண்ணம் வாடவில்லை. சதைக் கோளங்கள் மரத்துத் தொய்ந்து திரித் திரியாகத் தொங்கவில்லை

24

19. லதீபா

6 January 2024
0
0
0

மோஷி ஸ்மிலான் ஸ்கி  "லதீபாவின் கண்களை நீ பார்த்திருக்காவிட்டால், கண்களுக்கு எவ்வளவு அழகு இருக்க முடியும் என்பது உனக்குத் தெரிந்தே இருக்காது." இப்படி நான் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம். ச

25

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்( பகுதி 1)

6 January 2024
0
0
0

1 அவர்களுடைய மூத்த பெண்ணின் படிப்பு அடுத்த மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது. வயசும் 'அப்படி இப்படி' என்று சீக்கிரத்தில் பதினெட்டு ஆகிவிடும். டோ க்கியோவிலேயே நாகரீகத்திற்குப் பெயர் போன இடத்தில் நிலம் வாங

26

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்(பகுதி 2)

6 January 2024
0
0
0

5 வரன்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுவதற்கு நாள் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு 'கபூக்கி' நாடகக் கொட்டகையில் தரகர் இரண்டு 'பாக்ஸ்' களை அமர்த்தினார்; இரண்டு குடும்பங்களும் பக்கத்த

27

21. மணிமந்திரத் தீவு

6 January 2024
0
0
0

ஷேக்ஸ்பியர்  நடுக்கடலிலே நாலைந்து கப்பல்கள் தத்தளித்துத் தடுமாறுகின்றன. கடலலைகள் சினங்கொண்ட கருநாகங்கள் போல ஆயிரமாயிரமாகப் படம் விரித்துத் தலை சுற்றி மோதுகின்றன. உயிரை வாங்கவரும் கால தூதர்களின் கோரச்

28

22. மணியோசை

6 January 2024
0
0
0

ஜப்பான்  "நான் சாவதற்குப் பயப்படவில் லை" என்றாள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மனைவி. "இப்பொழுது என் கவலை எல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நான் போன பிறகு யாரைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?" வேதனை

29

23. மார்க்ஹீம்

6 January 2024
0
0
0

ஆர்.எஸ். ஸ்டீவன்ஸன் – இங்கிலாந்து  "ஆமாம்! எங்கள் வியாபாரத்திலே பலவிதம் உண்டு; வாங்க வருகிறவர்களில் சிலருக்கு ஒன்றுமே தெரியாது; வெறும் 'அப்பாவிகள்'. அப்பொழுது எங்கள் அநுபவத்திற்கு ஏற்ற லாபத்தைப் பெறு

30

24. மிளிஸ்

8 January 2024
0
0
0

பிரட் ஹார்ட் – அமெரிக்கா  ஸிராநிவாடா மலைத் தொடரில் சமவெளிக்குப் பக்கத்தில் இருக்கும் சிவந்த மலைகளில்தான் "ஸ்மித் பாக்கெட்" என்ற இடம் இருக்கிறது. அது ஒரு சுரங்க ஸ்தலம். அதாவது ஒரு காலத்தில் தங்கம் இரு

31

25. முதலும் முடிவும் ( பகுதி 1)

8 January 2024
0
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  மாலை ஆறு மணியிருக்கும். அந்த அறையில் சுமாரான இருட்டு. 'பச்சை ஷேட்' போட்ட மேஜையின் மீதிருந்த ஒற்றை விளக்கு, தரையில் விரித்த துருக்கிக் கம்பளத்திலும், மேஜையின் மீது சிதறிக் கிடந்த,

32

25. முதலும் முடிவும் ( பகுதி 2)

8 January 2024
0
0
0

"பிரேதத்தின் மேலிருந்த எதையும் எடுத்தாயா?" "நாங்கள் சண்டை போட்டுக் கொள்ளும்பொழுது இது அவன் பையிலிருந்து விழுந்தது." அது வெறும் தபால் கவர். தென் அமெரிக்கத் தபால் குறியிட்டு, "பாகட்ரிக் வாலன், ஸைமன் ஓட்

33

26. நாடகக்காரி

8 January 2024
0
0
0

ஆண்டன் ஷெக்காவ் – ருஷியா  அவள் ஒரு நாடகக்காரி. அந்தக் காலத்திலே அவளுக்கு யௌவனக் களை மாறவில் லை. குரல் கணீர் என்று இருக்கும். பலர் வந்து போவார்கள். ஆனால் குறிப்பாக நிக்கோலாய் பெட்ரோவிச் கோல்ப்பக்கோவ்

34

27. நட்சத்திர இளவரசி

8 January 2024
0
0
0

ஒரு ஆசிரியர் - தென் கடல் தீவுகள்  "நம்மிடம் இருப்பதையெல்லாம் சாப்பிட்டு விடுவோம்" என்றான் டபூதி. அவனது சகோதரனான அய்ட்டோ சந்தேகத்துடன் ஏறிட்டுப் பார்த்தான். "அப்படியானால் நமக்கு மிகுந்த பலம் உண்டாகிவி

35

28. ஓம் சாந்தி! சாந்தி!

8 January 2024
1
0
0

எலியா எஹ்ரன் பர்க்  (யுத்தம் மனித சமூகத்தின் 'உடனுறை நோயாகவே' இருந்து வருகிறது. தனது தற்காப்புக்காக மனிதன் சமூகம் என்ற ஒரு ஸ்தாபனத்தை வகுத்தான்; பிறகு அதனைக் காப்பாற்றத் தன் னைப் பலிகொடுக்கத் தயாரானா

36

29. ஒரு கட்டுக்கதை

9 January 2024
0
0
0

பிரான்ஸ் காப்கா – ஆஸ்திரியா  எலி சொல்லுகிறது... "ஐயோ, உலகம் தினம் தினம் எவ்வளவு சின்னதாகிக் கொண்டே வருகிறது! முதலில் ரொம்பப் பெரிதாக, நான் பயப்படும்படியாக, அவ்வளவு பெரிதாக இருந்தது. நான் ஓடிக்கொண்டே

37

30. ஒருவனும் ஒருத்தியும்

9 January 2024
0
0
0

லூயிகய்ல்லூ – பிரான்ஸ்  மச்சுப் படிக்கட்டு முற்றத்தில் இறங்கியது. அங்கே, அதாவது கடைசிப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, அன்று காலை முழுவதும் அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் ரொம்பவும் நெட்டை. ஒற்றை ந

38

31. பைத்தியக்காரி

9 January 2024
0
0
0

மொப்பஸான் – பிரான்ஸ்  "ஆமாம், நீ சொல்வது முன்பு பிரான்சிற்கும் ருஷியாவிற்கும் சண் டை நடந்ததே, அப்பொழுது நடந்த பயங்கரமான சம்பவத்தை என் நினைவிற்குக் கொண்டு வருகிறது" என்று கூறத் தொடங்கினார் முஸே டி' என

39

32. பளிங்குச் சிலை

9 January 2024
0
0
0

வாலரி புருஸ்ஸாப் வாலரி புருஸ்ஸாப் (1875-1924) புரட்சி யுகமான நவீன காலத்து ருஷ்யப் புது எழுத்தாளர் கோஷ்டியைச் சேர்ந்தவர். இந்தக் கதை புரட்சிக்கு முந்திய காலத்தைப் பகைப் புலமாகக் கொண்டு, எழுந்த கற்பனைக

40

33. பால்தஸார் (பகுதி 1)

9 January 2024
0
0
0

அனதோல் பிரான்ஸ் – பிரான்ஸ்  "கிழக்கே அரசர்களுக்கு மந்திர சக்தியுண்டு என்று நினைத்தார்கள்" -தெர்த்தூலியன் அக்காலத்திலே எதியோபியாவை பால்தஸார் ஆண்டு வந்தான். கிரேக்கர் அவனை ஸாரஸின் என்று அழைத்தனர். அவன்

41

33. பால்தஸார்( பகுதி 2)

9 January 2024
0
0
0

ஜனநடமாட்டமில்லாத பாலைப் பிரதேசங்களில் மத்தியானம் வரை நடந்தனர். உச்சியில் சூரியன் வந்ததும், திருடர்கள் கைதிகளை விடுவித்து, பாறையின் நிழலில் உட்காரச் சொல்லி, கெட்டுப்போன ரொட்டித் துண் டைக் கொடுத்தனர். ப

42

34. பொய்

9 January 2024
0
0
0

லியேனீட் ஆன்ட்ரீவ் – ருஷியா  "நீ சொல்வது பொய், அது உனக்குத் தெரியும்!" "அதற்கேன் இப்படிக் கத்தவேண்டும்? பக்கத்திலிருக்கிறவர்களுக்கும் தெரிய வேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது." இப்பொழுதும் பொய் சொன்னாள்

43

35. பூச்சாண்டியின் மகள்

10 January 2024
0
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து  அவள் பெயர் பத்தேமா. அவள் பாக்தாத் நகர் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தாள். அவள் நீலத்தாடிவாலாவின் புதல்வி. கண்டதும் காம வெறியை எழுப்பும் மோகனாங்கி. அவளது மதி முகத்தின் வ

44

36. ராஜ்ய உபாதை( பகுதி 1)

10 January 2024
0
0
0

ஹென்றிக் இப்ஸன் (1828-1906)  ஷேக்ஸ்பியருக்கு நிகராக உலகம் கொண்டாடும் சிறந்த நாடக ஆசிரியர் ஹென்ரிக் இப்ஸன். தர்மத்துக்கு வெற்றி அளித்தார் ஷேக்ஸ்பியர்; தர்மம் ஏன் வெற்றி பெற வேண்டும் என்ற கேள்வியை எழுப

45

ராஜ்ய உபாதை( பகுதி 2)

10 January 2024
0
0
0

"அந்தக் கடிதம்..."  "இரு இரு, விரோதிகளைப் பற்றி நான் ஒரு பட்டியல் கொடுத்தேனே. நீ அதிகாரத்தை விடத் தயாராக இருப்பதுபோல நானும் என் எதிரிகளை மன்னிக்க ஆசைப்படுகிறேன். அந்தப் பட்டியலை இந்த நெருப்பில் போட்ட

46

37. ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு

10 January 2024
0
0
0

நதானியேல் ஹாதார்ண் – அமெரிக்கா  எல்லைப்புறத்தைப் பாதுகாப்பதற்காக 1725-ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்ட படையெடுப்பு சரித்திரத்திலேயே கற்பனைக்கு இடந்தரும் பகுதி. அதை எல்லாரும் சாதாரணமாக 'லவல் சண்டை' என்று கூற

47

38. சாராயப் பீப்பாய்

10 January 2024
0
0
0

எட்கார் அல்லன் போ – அமெரிக்கா  அவன் ஆயிரம் குற்றங்களைச் செய்தான்; ஆனால் என்னால் இயன்றவரை பொறுத்தேன். அவன் என் னைத் திட்டி அவமதித்தான். இனி, பழிக்குப் பழி தீர்க்க வேண்டியதுதான் என்று மன உறுதி கொண்டேன்

48

39. சகோதரர்கள்

10 January 2024
0
0
0

யூஜோ யாம மோட்டோ – ஜப்பான்  'அண்ணா, இது நல்லதுதானே?' 'எங்கே, இப்படிக் கொண்டா பார்ப்போம்' என்று மூத்தவன் தன்னிடம் காட்டப்பட்ட காளானைப் பார்ப்பதற்காகத் திரும்பினான். 'ஊங் ஹும், நல்லதில் லை; நான் பிடுங்க

49

40. சமத்துவம்

10 January 2024
0
0
0

ஒரு ருஷிய ஆசிரியர்  நீலக் கடலின் அடிமட்டத்திலே, பிரமாண்டமான மீன் ஒன்று, இரை தேடிக்கொண்டு, உல்லாசமாக நீந்தி வருகிறது. எதிரே ஒரு சின்ன மீன் - அதன் உணவு. பெரிய மீன் அதை விழுங்குவதற்காக, தன் வாயை அகலத் த

50

41. ஷெஹர்ஜாதி - கதை சொல்லி

11 January 2024
0
0
0

ஹென்றி டிரெக்னியர் – பிரான்ஸ்அன்று இரவு ஷெஹர்ஜாதி நன்றாகத் தூங்கவேயில் லை. பகல் முழுவதும் சுட்டுப் பொசுக்கும் வெய்யில். அதனால் மூச்சுவிடக்கூட முடியாதபடி அவ்வளவு இறுக்கமாக இருந்தது. சிலந்தி வலையையும் த

51

42. சிரித்த முகக்காரன்

11 January 2024
0
0
0

அவன் சோகமாக இருக்கிறான், தனியாக இருக்கிறான் என்று சொல்லிவிடுவது எளிது; ஆனால் அவன் எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்தோடேயே இருக்கிறான். அப்படிச் சொல்லிவிட்டாலும், அவனைப் பாட்டிலில் போட்டு அடைத்து லே

52

43. சூனியக்காரி

11 January 2024
1
0
0

ரோனால்டு ஆக்டன் – இங்கிலாந்து அப்பொழுது இலையுதிர் காலம். நானும் ஜேக் மக்கின்ஸனும் பக்கத்து மிராசுதாருடைய காட்டில் திருட்டுத்தனமாகக் கண்ணி வைத்து வேட்டையாடச் சென்றோம். அவனுக்கு வயது இருபதுக்கு மேல

53

44. சுவரில் வழி

11 January 2024
0
0
0

ஆர். முரே கில்கிரைஸ்– இங்கிலாந்து அன்று முற்பகல் சிறிது உஷ்ணமாகவே இருந்தது. பசும்புல் செழித்து வளர்ந்த மைதான வெளியில், ஆங்காங்கு குத்துக்குத்தாகப் பெயர் தெரியாத புஷ்பங்கள் எல்லாம் கணக்கற்று

54

45. தாயில்லாக் குழந்தைகள்

11 January 2024
0
0
0

பிரான்ஸிஸ் பெல்லர்பி – இங்கிலாந்து வேர்த்து விருவிருக்க, கால்கள் தள்ளாட, இரண்டு குழந்தைகள் நடந்து சென்றன. பையன், பதினொரு வயசிருக்கும். முன்னால் நடந்தான். பெண் எட்டு வயசுபோல இருக்கும். பாதை முன் ம

55

46. தையல் மிஷின்

11 January 2024
0
0
0

இவான் கூம்ஸ் அங்கு மனிதனைத் தூங்காது விழிக்க வைத்திருக்க ஒருவித சந்தடியும் கிடையாது. இருந்தாலும், அந்தச் சிறிய கட்டிலில் சுருண்டு முடங்கிக்கொண்டு, நெடுநேரமாக நிசப்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

56

47. தந்தை மகற்காற்றும் உதவி

11 January 2024
1
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து டான் ஜுவான் தன் மாளிகையில் விருந்து மண்டபத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று தரை வெடித்தது. நரக தூதர்கள் வந்து அவனை இழுத்துக் கொண்டு போய் விட்டார்கள்

57

48. தெய்வம் கொடுத்த வரம்

12 January 2024
1
0
0

பியோர்ண்ஸ்டர்ண் பியோர்ண்ஸன் – ஸ்வீடன்  இந்தக் கதையில் வருகிறவன் தான் அவனுடைய ஊரிலேயே ரொம்பவும் பெரிய பணக்காரன். தவிரவும் அந்த வட்டாரத்திலே அவனுக்குத்தான் ரொம்பவும் சொல் சக்தி உண்டு. அவன் பெயர் தார்ட்

58

49. தேசிய கீதம் (பகுதி 1)

12 January 2024
0
0
0

எல்.ஏ.ஜி. ஸ்டராங் – இங்கிலாந்து  லாரி நிறையத் துருப்புக்கள் கன வேகமாகச் சென்று சில விநாடிகள் கூடக் கழியவில் லை. அது இப்பொழுதுதான் நிகழ்ந்தது. வெடியின் அதிர்ச்சி பரீலியை அப்படியே கலங்க வைத்துவிட்டது.

59

49. தேசிய கீதம் (பகுதி 2)

12 January 2024
0
0
0

ஆம். அமெரிக்காவில் ஓர் பெருத்த வெற்றி. நியூயார்க்கில் இரண்டு ஆட்டம்; பிறகு அமெரிக்கா முழுவதிலும் ஓர் நீண்ட வெற்றி யாத்திரை; முடிவில் ஹாலிவுட்டில் ஒரு பிலிம்; சமாதானம் ஏற்பட்ட இரண்டொரு மாதங்களுக்கப்புற

60

49. தேசிய கீதம் (பகுதி 3)

12 January 2024
0
0
0

இந்தச் சம்பவம் பரீலியின் கோபத்தை அதிகரித்தது; ஆனால் பொதுப்படையாக்கியது. இதுவரை தன் தேசவாசிகளான புரட்சிக்காரர் மீது கோபங்கொண்டிருந்தான். இப்பொழுதோ இந்த இடத்தின் பேரிலேயே கோபம். அவன் நெஞ்சில் ஆழமாகப் பய

61

50. துன்பத்திற்கு மாற்று

12 January 2024
1
0
0

ஸீனர் லூயிஜி பிரான்டல்லோ – இத்தாலி  நமது வாழ்க்கையை, முக்கியமாக அதில் காணும் துன்பங்களை, வான வெளியிலே தேஜோமயமாகச் சுழன்று செல்லும் நட்சத்திர மண்டலங்களுடன் ஒப்பிட்டுப்பாரும், அப்பொழுது அது துச்சமாகத்

62

51. துறவி

12 January 2024
0
0
0

ராபர்ட் நியூமான் – ஜெர்மனி  "நான் முதல் முதலில் ஐரோப்பாவிலிருந்து இந்தக் கீழப் பிரதேசங்களுக்கு வந்தபொழுது அது நடந்தது" என்று அவன் ஆரம்பித்தான். அவன் எங்கள் கப்பலின் காப்டன்; பெயர் வான்டர்லான். ஜாதியி

63

52. உயிர் ஆசை (பகுதி 1)

13 January 2024
1
0
0

ஜாக் லண்டன் – அமெரிக்கா  அவர்கள் இருவரும் நொண்டி, நொண்டி ஆற்றங்கரை வழியாகத் தள்ளாடி நடந்தார்கள். கத்தி போல ஊசியாக, தெத்துக்குத்தாகக் கிடந்த பருக்கைக் கற்கள் காலை வெட்டின. அவர்களிருவரும் சோர்ந்து விட்

64

52. உயிர் ஆசை (பகுதி 2)

13 January 2024
1
0
0

நாட்களும் ஓடின. காட்டு ஜீவராசிகள் ஓடியாடித் திரியும் பள்ளத்தாக்குகளை அடைந்தான். மான் கூட்டம் ஒன்று. இருபது இருக்கும். துப்பாக்கி லெக்குக்கு ரொம்பவும் அருகில் துள்ளி ஓடின. அவற்றை விரட்டிக் கொண்டே ஓடினா

65

52. உயிர் ஆசை (பகுதி 3)

13 January 2024
1
0
0

பாறை மீது படுத்துக் கிடந்தவன் சுயப் பிரக்ஞையுடன் விழித்துக் கொண்டான். சூரியன் காய்ந்து கொண்டிருந்தது. காட்டு மான்குட்டிகளின் சப்தமும் தூரத்தில் கேட்டது. சித்தத்தின் அடிவானத்தில் மழையும் காற்றும் பனியு

66

53. வீடு திரும்பல்

13 January 2024
1
0
0

பீட்டர் எக் – நார்வே  மாலுமி பெடர் ஸோல்பர்க்குடைய மனைவி வசித்த குடிசை, ஜனங்கள் பொதுவாக 'லூக்கள் தெரு' என்று சொல்லுவார்களே, அதற்கெதிரில் இருக்கிறது. குடிசையின் ஜன்னல் நன்றாகத் திறந்திருந்தது. அப்பொழுத

67

54. ஏ படகுக்காரா!

13 January 2024
1
0
0

மிக்கெய்ல் ஷோலொகோவ்  அந்த காஸக் கிராமத்தைச் சூழ்ந்து வளர்ந்து நின்ற சாம்பல் பூத்த பசிய நிறம் படைத்த செடிச் செறிவின்மீது சூரியவொளி தெம்பாக விழவில் லை. அருகே ஒரு பரிசல் துறை இருந்தது. அங்கே படகேறி டான்

68

55. யாத்திரை

13 January 2024
1
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  நான் ஹாமர்ஸ்மித் பஸ்ஸின் மேல்தட்டிலிருந்து பார்க்கும் பொழுது, அவர்கள் ஆல்பர்ட் ஹால் மெமோரியல் எதிரில் இருந்த ஒரு வீட்டு வாசல்படியில் உட்கார்ந்திருந்தனர். அன்று வெகு உஷ்ணம். வாடகை

69

56. எமனை ஏமாற்ற...

13 January 2024
1
0
0

மொங்காக்கு ஷோனின் என்ற மகடனான புத்த பிக்ஷு தான் எழுதியுள்ள கியோ-ஜியோ-ஷிந்ஷோ என்ற கிரந்தத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: "ஜனங்கள் வழிபடும் தெய்வங்களில் பல துர்தேவதைகளாகும். அவலோகிதன், தர்மம், பிக்ஷுக்கள

70

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்

13 January 2024
1
0
0

தாமஸ் வுல்ப் – அமெரிக்கா  ஈவிரக்கமற்றுக் கொதிக்கும் அந்த வருஷம் ஆகஸ்டில் யுத்தம் நின்றது. யுத்த தேவதையின் பவனியின்போது நான்கு கணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஒன்று லாங்லிவியல்; விமான மைதானத்தில் உள்ள குத

71

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்(பகுதி 2)

13 January 2024
1
0
0

தயங்கித் தயங்கி மறியும் உடலொட்டிய இந்த வேட்கை, தங்கள் ஜோலியைச் செய்து இவர்கள் நடாத்தும் வாழ்வினிடையிலும் வெளிக்கு அகோரக் கேலிக் கூத்தாகத் தோன்றினாலும், மேஜைக்கு மேஜை போஷகர் தேடி நடக்கும்போது சர்வ ஜாக்

72

58. தர்ம தேவதையின் துரும்பு

13 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர்  குரலிலே அதிகார தோரணையும் அதனுடன் பயமும் கலந்திருந்தது. கடுங்குளிரிலே, இருட்டின் திரைக்குள்ளே, ஈட்டிபோலப் பாய்ந்தது அக்குரல். 'நீ யார்? முதலில் அதைச் சொல்' என்று பதில் கேள்வி பிறந்தது, தி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்