shabd-logo

30. ஒருவனும் ஒருத்தியும்

9 January 2024

0 பார்த்தது 0

லூயிகய்ல்லூ – பிரான்ஸ் 

மச்சுப் படிக்கட்டு முற்றத்தில் இறங்கியது. அங்கே, அதாவது கடைசிப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, அன்று காலை முழுவதும் அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் ரொம்பவும் நெட்டை. ஒற்றை நாடி; முப்பத்தி ஐந்து அல்லது நாற்பது வயது இருக்கும். நீண்டு தொங்கும் குதிரை மூஞ்சி; அவள் தேகமே கோளாறு பிடித்த உடம்பாகத் தென்பட்டது. அவள் வாய்விட்டுத் தேம்பித் தேம்பி அழுதாள்; மனத்துக்குள்ளாகவே முனகினாள். சுற்றிலுமுள்ளவர்களை வைகிற மாதிரி. அண் டை வீட்டுக்காரர்கள் பல தடவை அவள் பக்கம் போய்ப் புத்தி சொல்லிப் பார்த்தார்கள். "வீட்டுக்குள்ளே போ; இப்படி அமக்களம் பண்ணாதே; இல்லாட்டா... இப்படி அழுது கொண்டிருந்தால், உனக்குத் தலைவலி வரும்; அதனாலே என்ன ஆகப்போகிறது?" இந்த வார்த்தைகள் எல்லாம் அவள் காதில் பட்டதாகத் தெரியவில் லை. இந்தக் கிழட்டு பிணங்களுக்கு வேறு வேலை இல் லை? என் இஷ்டப்படி செய்வேன்; இவர்களுக்கென்ன; எல்லாத்தையும் ஒரேயடியாகத் தொலைச்சு முழுகினாத் தேவலை என்று நினைத்தாள். சில சமயங்களில் தலையைக் கிராதியில் சாய்த்துக் கொண்டாள்; தூக்கம் பிடிக்காத பிரயாணி தூங்க முயலுவது மாதிரி. சில சமயம் முகத்தைக் கை வைத்து மூடிக்கொண்டு மனங்குமுறி அழுதாள்; ஓடைத் தண்ணீர் மாதிரி விரல் வழியாகக் கண்ணீர் பீறிட்டுக் கொண்டு வந்தது. சில சமயம் வாய்விட்டு ஏங்கினாள். சமயா சமயங்களில் மௌனப் பேய் பிடித்த மாதிரி வெகு நேரம் உட்கார்ந்திருந்தாள். பிறகு கன்னத்தை உள்ளங்கையில் ஏந்தி முழங்கையை முழங்காலின் மேல் ஊன்றிப் பிடித்து வைத்த சிலை மாதிரி வெகு நேரம் உட்கார்ந்திருந்தாள். அவர் ஆபீசிலிருந்து வரும்போது அவரைத் திக்பிரமையடிக்க வைக்க இந்த மாதிரி உட்கார்ந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவள் தன் மனதிற்குள் நினைத்து நினைத்துப் பார்த்துக் கொண்ட வஞ்சத்தின் ஒரு அம்சமே இது. சண் டை இந்த மாதிரி திரும்பிய நிமிஷத்திலேயே இந்த நினைப்பு அவளுக்கு உதித்தது. எப்படியானாலும், ஞாபக சக்தியைக் கொஞ்சம் அவள் உபயோகித்தால் போதும். மாடிப்படிக் கட்டில் வந்து உட்கார்ந்து கொள்வதும் இதுதான் முதல் தடவை என்பதல்ல . இது அவளுக்கு வெறியூட்டியது; அதுதான் அவள் விரும்பியதும். எப்படி இருந்தாலும் வேறு மாதிரியாக நடந்துகொள்ள அவளுக்கு வழியில் லை ஆமாம். விட்டுவிட்டு ஓடிப்போய்விடுவதாகப் பயமுறுத்துவார்; நன்றாகப் பிய்த்து வாங்கிவிடுவதாக பயமுறுத்தவும் கூடும். கோபாவேசத்தில் வெளி வரும் பயமுறுத்தல்களின்படியெல்லாம் செய்யமாட்டார் என்பது நிச்சயமாகத் தெரியும். அவர் என்ன செய்தாலும் விட்டுவிட்டு ஓடிப்போகமாட்டார்; அடிக்கவே மாட்டார்; நித்தியம், நித்தியம் இவர்கள் இப்படித்தான்; இதே வழியில்தான் போய்க் கொண்டிருப்பார்கள். ஒருவேளை அதுதான் அவளை இப்படித் தறிகெட்டுக் கொதிக்கும்படி செய்திருக்கலாம். மாடிப்படி வழியாகப் போகிறவர்கள், வருகிறவர்கள் அவள் அருகாமையில் நெருங்குகிறபோது ஆச்சரியத்துடனோ அனுதாபத்துடனோ தோளைக் குலுக்கிக்கொண்டு சென்றார்கள். அவள் அவர்களைப் பார்த்ததாகக்கூடக் காட்டிக் கொள்ளவில் லை. வழிவிட்டு விலகுவது போலப் பாவனை கூடச் செய்யவில் லை. யாராவது அவள் பக்கம் விரைவாக மடமடவென்று சென்றால், போகும்போது கைகளை மிதித்துவிட்டால்; - அப்படியேதான், பிடித்து வைத்த சிலை மாதிரிதான் உட்காந்திருப்பாள். ஒருவேளை, அவர்கள் அப்படி மிதிக்கக் கூடாதா என்று கூட அவள் விரும்பியிருக்கக்கூடும். மீண்டும் யாரோ ஒருவர் 'எத்தினி நேரமாச்சு; மத்தியானமாச்சே; உள்ளே போகக்கூடாதா?' என்றார். அவள் பதில் சொல்லவில் லை. ஏன் பதில் சொல்லவேண்டும்? பதில் சொல்லிக் கொண்டிருக்கவா அவள் அங்கே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். தன் நிலை பற்றி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாளா? அப்படி அல்ல. அவர்களுடைய இரக்கத்தில் அவளுக்குப் பொருளே இல் லை. அவள் அங்கே வந்து உட்கார்ந்த காரணம், எல்லாரும் பார்க்க வேண்டும் என்பதுதான்; அவளை எந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டார் என்று அவர்கள் தெரிந்து கொள்ள; அவளை எவ்வளவு படுத்துகிறார் என்று எல்லோரும் பார்க்க. எல்லோரும் பார்த்துவிட்டார்கள், அவர்களுக்கும் தெரியும் என்பதை அவர் தெரிந்து கொள்ள. அதுதான் அவள் விரும்பியதெல்லாம்; அதாவது அந்த நிமிஷத்தில் விரும்பியதெல்லாம்; அதுதான் அவளுடைய யோசனையில் முதல் அம்சம். அவர்கள் என்ன வார்த்தை சொன்னாலும் - அனுதாபப்பட்டோ இரக்கப்பட்டோ எந்த வார்த்தை சொன்னாலும் அவள் தேம்பித் தேம்பி அழுவாள்; அந்தத் தலையைச் சாய்க்க இன்னும் ஒரு நல்ல இடம் பார்த்தாள்; தலைக்கு என்ன சீவல் வேண்டிக் கிடக்கிறது. சண் டை அதிகாலையில் ஆரம்பமாயிற்று. காலை எட்டு மணி முதலே அவள் அந்தப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அந்த இடத்தை விட்டுப் போக வேண்டும் என்று தூண்ட அவளுக்கு வேறு நினைப்பே எழவில் லை. மணியும் பகல் பன்னிரெண்டு அடித்தது. இன்னும் சில சிமிஷங்களில் அவர் வீட்டுக்குத் திரும்பலாச்சு. என்ன சொல்லுவார்; முந்தி மாதிரி, ஒருவேளை ஏறெடுத்துக் கூடப் பார்க்காமலே மாடிக்குச் செல்வார். ஆனால் வீட்டுக்குள்ளே போய்த் தனியாக எவ்வளவு நேரந்தான் உட்கார்ந்து கொண்டிருப்பார். போன தடவை பதினைந்து நிமிஷம் கூட அவருக்கு அங்கே இருப்புக் கொள்ளவில் லை. அவளைத் தேடிக்கொண்டு வந்தார். இன் றைக்கும் அதே மாதிரிதான் நடக்கப் போகிறது. அவர் கொதித்துக் கொண்டு கதவைப் படால் என்று சாத்திக் கொண்டு, 'இந்த மாதிரிப் பைத்தியக்காரத்தனத்தை இனிமேல் சகிக்க முடியாது. இதுதான் கடைசித் தடவை. கடோ சித் தடவை' என்று கருவிக் கொண்டு போனார். ஆனால் ஆபீசில் கோபம் ஆறியிருக்கும்; நினைத்துப் பார்க்கப் புத்தி தெளிந்திருக்கும். முற்றத்துக் கதவு திறந்தது; அவளுடைய காலடிச் சத்தம் அவர்களுக்குத் தெரிந்தது. சதை கொஞ்சங் கூட ஆடவில் லை. பிடித்து வைத்த சிலை மாதிரி. அவள் உணர்வு முழுவதும் எத்தனையோ முறை கேட்டுப் பழகிய அந்தக் காலடிச் சத்தத்தில் கவிந்து நிலைபெற்றது. தோற்றத்தில் புற உலக விஷயங்களுக்குச் செவிடாகி உணர்வற்றிருப்பது போலத் தென்பட்டாள். சத்தம் நெருங்கியது; சீக்கிரத்தில் அவர் கண்ணில் படுவார். இருந்தாலும் சலனமற்று இருந்தாள். தலை சிறிது கிராதிக் கம்பியில் சாய்ந்தபடி, கண்களை அரை வட்டத்திற்கு மூடிக் காத்திருந்தாள். ஏறக்குறைய அவள் மீது விழுந்து விட்டார்; திடுக்கிட்டு நடுங்கிப் பின்புறமாகப் பாய்ந்தார்; பார்வைக்கு அப்பால் மறைந்தார். எவ்வளவு தெளிவாகத்தான் அவருக்குத் தெரிந்திருந்தாலும் அவருக்கு எதிர்பார்க்கத் தெரியாது. இந்த முறையும் எதிர்பாராத சமயத்தில் அவரைச் சிக்கவைத்தாள். அதிர்ச்சியில் மேல் மூச்சு வாங்கியது. சிறிது நிதானப்பட்டது; க்ஷணம் சிறிது கண்களை மூடினார். அவர் கொஞ்சம் கனத்த சரீரி; நல்ல 'கருக்காக' மீசையும் உண்டு. வயது ஏறக்குறைய ஐம்பது. உடை ஏதோ ஒரு வற்றல் - குமாஸ்தா ரகத்தில். தலையில் பௌலர் தொப்பி அணிந்திருந்தார். "இங்கே என்ன பண்றே?" என்று முணுமுணுத்தார்; குரல் வரட்சிக் கோபத்தைக் காட்டவில் லை. அவள் பதில் சொல்லவில் லை. அவருக்கு அச்சம் பிடித்தாட்டியது; இதயத் துயரத்தை வரள வைத்தது; குடையைப் பிடித்திருந்த கை நடுங்கியது. எல் லை கடந்த தலை குனிவு; அவமானம், தன்மீது ஏற்பட்ட ஒரு துச்சமான நினைவு அவன் மீது படர்ந்து கவிந்தது. அவன் உணர்வில் தயை இடம் பெறவில் லை. அசையாமல் நடையருகில் நின்றான். வெளிப் பக்கமிருந்து வெளிச்சம் விழுந்ததினால், முகத்தின் பாவனை அவளுக்குத் தெரியவில் லை. குடை தூக்கிய கருத்த கனத்த உருவமாகவே அவளுக்குத் தென்பட்டது. அவன் மறுபடியும் மெதுவாகக் கேட்டான். 'என்ன அங்கே பண்றே?' அவன் சொல்வது ஏதோ ஒரு குழந்தையிடம் பேசுவது போல இருந்தது. அவள் ஏறெடுத்துப் பார்த்தாள்; பார்வை பதியவில் லை; பார்வை அவனையும் அவனைத் தாண்டியும் ஊடுருவிப் பாய்ந்தது. அந்த லயிக்காத கண்களின் ஈட்டிக்குத்து அவன் கண்களை மறுபடியும் திருப்பிக் கொண்டு கைகளை உதறிக்கொள்ளச் செய்தது. அவனது கைக்குட்டை ஓட்டை உடசல் இரும்பு மாதிரி லொடபட சத்தத்துடன் கீழே விழுந்துருண்டது. 'இங்கே எத்தினி நேரமாத்தான் உட்கார்ந்திருக்கே? வெகு நேரமாகத்தான் உட்கார்ந்திருக்க வேண்டும். புழுக்கச்சி முண்டெ' என்று மனசில் எண்ணிக் கொண்டான். தோளைக் குலுக்கிக் கொண்டான். அப்படியா ஓய்ச்சல் ஒழிவு கிடையாதா... காலம்பர பூராவும்... அவனும் அன்னிக்குக் காத்தாலே போட்டுண்ட சண்டெயப்பத்தி நெனச்சுதான் பார்த்தான்... தன் மேலும் கொஞ்சம் பழிதான் என்று வருத்தப்பட்டுக் கொண்டான்... ஆனால் அது தீர்ந்து போயிருக்கும்னு அவன்... 'நீ அங்கேயேதான் உட்கார்ந்திருக்கப் போறியா?' இதுக்கும் பதில் இல் லை. குரல், கோபம் அவனை ஆட்படுத்துகிறது என்பதைக் காட்டியது; ஜாக்கிரதையாகத் தன் னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். ஏனென்றால் அந்த ஆவேசம் வந்து சென்றுவிட்டால் அப்புறம் அடித்துப் போட்ட மாதிரி வசதி. 'சரி வா... மேலே போவோம்... என்ன அசட்டுத்தனம்' என்று முணுமுணுத்தான். 'அசடு' என்ற அந்த வார்த்தை மறுபடியும் கண்ணீட்டி கொண்டு குத்தும்படி செய்வித்தது. அவளிடமிருந்து நிசாரமான ஏக்கம் பிறந்தது. 'என்ன பிழைப்பு' 'என்னத்திற்கு இந்தப் பிழைப்பு?' இந்தச் சிக்கலை அடியோடு தீர்த்துக் கட்டிவிட உறுதி கொண்டவள் போல அவனை ஊடுருவிப் பார்த்தாள். 'இந்த அடம் ஆகாது' என்பது போலத் தலையை அசைத்தாள். 'சரி சரி, உனக்கென்னதான் வந்திருக்கு?' இப்படிப் பேசவேண்டும் என்று அவன் நினைக்கவில் லை; ஆனால் நடந்தது நடந்தாச்சு; இனிமேல் உள்ளது இதுவோ எதுவோ. அவன் மச்சுப்படி ஏற ஆரம்பித்தான். உடனே சடக்கென்று திரும்பினான். அவள் திடுக்கிட்டாள். 'குழந்தெ' அவன் குனிந்து கொண்டு கேட்டான். அவன் சுவாசம் அவள் தலையில் அலையாடியது. குழந்தே? அதெப்பத்தி அவ கவலையே படலே. குழந்தையை மறந்துவிட்டு இருப்பதும் அவள் போட்ட 'பிளானில்' ஒரு அம்சம். ஆனா அது மனசை இவ்வளவு படுத்தும் என்று அவள் நினைக்கவில் லை. 'அவளெ என்ன செஞ்சே?' அடிக்கப் போகிறார் என்று நினைத்தாள். ஆசைப்பட்டிருந்தாலும் அவளால் பதில் சொல்ல முடிந்திருக்காது. அந்தக் குழந்தை... அது மனசை இவ்வளவு வேதனை பண்ணும்னு அவ நெனக்கலெ. 'வாயைத் திறந்து பதில் சொல்லப் போறியா இல்லியா?' கோபம் கை மீறியது. உறுதியோடு மறுபடியும் இறங்கி வந்து அவள் முன் நின்று கொண்டான். அவள் தலையைக் கீழே போட்டுக்கொண்டாள். 'நீயோ, ஒம் மூஞ்சியோ...' கையிலிருந்த குடையை சுவரில் சாத்தினான். தொங்கப் போட்டு மறைத்து வைத்துக் கொண்டிருந்த அவளுடைய முகத்தைத் தடவிக் கொடுக்கக் குருட்டுத்தனமாகக் கைகளை நீட்டினான். 'ஏண்டி என் னை இப்படிச் சித்ரவதை செய்து கொல்லறே; இதெ எப்பத்தான் விட்டுத் தொலைக்கப் போறே... அட கர்மமே' என்று மெதுவாக நயந்தான். அவனுக்கு மன உளைச்சல் சொல்ல முடியாதிருந்தது. அன்றொரு நாள் அவள் வீட்டை விட்டு ஓடிப்போன விவகாரம் அவன் ஞாபகத்துக்கு வந்தது. அவளைத் தேடாத இடம் எல்லாம் தேடி அலைந்த அலைச்சல்... ஆற்றிலோ கிணற்றிலோ விழுந்து தொலைத்திருப்பாளோ என்று நினைத்துக்கொண்டு... 'வாயைத் தொறந்து பேசேண்டியம்மா...' அவளுடைய நாடியைத் தாங்கினான். அவள் உதறித் தள்ளாமல் பேசாமலிருந்தாள். அவளுடைய முகவாய்க்கட்டையைத் தாங்கி முகத்தை நிமிர்த்தினான். அவனுக்கு மனசு இளகி வெள்ளப் பிரவாகமாக எடுத்தது. 'ஏன் இப்பிடி இருக்கே?' என்று கேட்டான். அவள் சற்று நிமிர்ந்தாள். உதடுகள் அழுகை முட்டப் படபடவென்று துடித்தன. அவள் சற்று குனிந்தாள். 'எனக்குத் தெரியாது' என்று அவள் சொன்னதாகவா அவன் காதுக்குக் கேட்டது? 'என்ன சொன்னே?' 'ஒண்ணுமில்லே.' திடீரென்று தன் மைகள் யாவும் மாறின. 'ஒன்றுமில் லையா...? நிஜமா? பின் னையேன்? பின் ஏன் இப்படி அழும்பு பண்றே? இன்னிக்குக் காத்தாலே இருந்து என்ன செஞ்சுண்டிருக்கே தெரியுமா? குழந்தையை என்ன பண்ணினே?' கோபாக்கிராந்தனாக அவன் உறுமிக் கொண்டு அவளுடைய தோளைப் பிடித்துக் குலுக்கினான். எதிர்பாராத சமயத்தில் இந்தக் கோபப் பேய் அவனையே இப்படி ஒரு உலுப்பு உலுப்பி விடும். இந்த கர்ஜனைகள், வருத்தங்கள், இரக்கத்திலிருந்து நயத் தன் மை, அதிலிருந்து மிருகத் தன் மை, யாவும் அவர்களுடைய சண் டைகளின் பரிவாரங்கள்; அவை அடித்துப் போட்ட மாதிரி சோர்ந்து கிடக்கப் பண்ணிவிடும். அவளுக்கு வலிக்கப் பண்ணி விட்டான்; அவள் எழுந்து தூர விலகிப் போய் நின்று, 'அட மிருகமே' என்றாள். மாடியில் எங்கோ ஒரு தட்டிலிருந்து குழந்தை தங்களிடம் இருப்பதாக ஒரு குரல் கொடுத்தது. 'குழந்தை எங்களோடு இருக்கிறது. நீங்க கவலைப்படவேண்டாம்; எங்களோடே சாப்பிடும்' என்றது அந்தக் குரல். மனநிம்மதி பிறந்தது அவனுக்கு உடனே பதில் சொல்ல முடியவில் லை. அண் டை வீட்டுக்காரர்கள் எல்லாம் கூட நின்று கேட்கிறார்கள், பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள... 'கேட்டியா?' என்று கத்தினான். 'எனக்குச் செவியடச்சுப் போகல்லே.' அவள் சாத்தியிருந்த குடையை சூத்திரப் பாவை இயங்குவது போலக் கையில் எடுத்துக் கொண்டாள். 'சனியன்கள் எல்லாம் ஒரே முழுக்காகத் தொலைஞ்சாத் தேவலை; சகிக்க முடியலே.' அவள் திரும்பினாள். முகத்தில் அழுகைக் குறி தெரிந்தது. ஆனால் இமையில் பொட்டு ஜலம் இல் லை. 'சகிக்கலே, என்ன சகிக்கலே?' என்றாள் அவள். அவளுடைய மண் டை வெடித்துவிடும் போலிருந்தது. அவனும் மௌன விரதம் பூண்டவன் போலப் பேசாதிருந்தான். 'சொல்றதைச் சொல்லுங்களேன். அப்புறம்?' 'எனக்கு இந்தச் சண் டை போடறது சகிக்கலே.' 'அவ்வளவுதானா?' 'ஆமாம்' 'அப்படியானா சண் டைக்கெல்லாம் நான் தான் காரணமாக்கும்?' என்றாள் அவள். 'இல் லை; அந்தக் கறிகடைக்காரப் பயல்.' அவனுடைய பதில் அவனுக்கே கோமாளித்தனமாக இருந்தது. வாய் விட்டுச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அந்த விருப்பம் உடனே அகன்றது. ஏனென்றால் அவள், 'என் கஷ்டம் உங்களுக்கு எங்கே தெரியப் போறது?' என்றாள். அவள்தான் அப்படியே இல் லையே; அதுதானே அவளுக்குப் பிரமாதமாகத் தெரிந்தது. இருந்தாலும்... 'அதற்குக் காரணமில்லியே?' அவள் ஏங்கினாள். 'தெரியும் தெரியும்' என்று முணுமுணுத்தாள். அவர்களிடையே மௌனம் திரையிட்டது. அமைதி நீடித்தது. நீடித்தது... அவர்கள் மேல் மாடியில் நின்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவள் மறந்து விட்டாள்; தனக்கு ரொம்பப் பசிக்கிறது. அடுப்பில் பூனை படுத்துக் கிடக்கிறது என்பதையும் அவள் மறந்துவிட்டாள். அப்படி இருந்தும் சண் டை என்ற மோகலாகிரி அவளை மடியைப் பிடித்து இழுத்துவிட்டது. அவளும் வலைக்குள் சிக்கினாள். விழுகிறோம் என்று தெரிந்து கொண்டே சிக்கினாள். தன் கஷ்டத்தையும் தன் பாசத்தையும் எடுத்துப் பேச ஆரம்பித்தாள். அவன் மனத்தில் நிச்சயம் ஏற்படுத்த ஆசைப்பட்டாள். 'இதெல்லாம் எவ்வளவு அசட்டுத்தனம்; இத்தினி நேரம் வீணாச்சுன்னு உனக்குத் தெரியலியா. இந்த வைபவம் இல்லாமலேயே வாழ்வு சிக்கிக் கிடக்கலையா?' ஏன் ஏன்? கொஞ்சம் சொல்லேன்?' அவள் தோளில் கையைப் போட்டுத் தன் புறமாக இழுத்தான். 'எல்லாம் ஓஞ்சுதா?' அவள் தன்னுடைய கன்னத்தை அவன் கன்னத்தின் மீது வைத்துக் கொண்டு கண்ணீர் விட்டாள். 'இந்தாபாரு - பாரு அதெல்லாம் ஓஞ்சுதே.' அமைதியாக பாசங்கலந்து இருந்தது அவர்கள் நிலை. இந்த வார்த்தைகளை அவனிடமிருந்து வெல்லுவதுதான் அவளது ஏக நோக்கம் போலிருந்தது. எல்லாம் அடியோடு மறந்தாச்சு. 'ஹென்றி...' அவன் அவளுடைய கன்னத்தைத் தடவிக் கொடுத்தான். 'வா போவோம்; இங்கே குடியிருக்கிறதா?' அவள் அவனைப் பின் தொடர்ந்தாள். 'கொழந்தையைக் கூட்டிண்டு வந்துடட்டா.' 'அவள் அங்கேயே இருக்கறதுதான் நல்லது' என்றாள் அவள். உள்ளே எல்லாம் ஒரே அலங்கோலமாகக் கிடந்தது. விரித்த படுக்கை சுருட்டாமல் கிடந்தது. ஜன்னல் கதவும் சாத்திக் கிடந்தது. கும்மிருட்டின் நாற்றம் குமைந்தது. தொப்பியைக் கழற்றி எங்கு வைப்பது என்று சிறிது தடமாடி, நாற்காலி மீது குடைக்குப் பக்கத்தில் வைத்தான். அந்த அறையில் நடு மத்தியில் வந்து கைகளைப் புடலங்காய் மாதிரி தொங்கப் போட்டுக் கொண்டு நிற்பதைக் கண்டு, 'அப்புறம்?' என்றான். அவள் அழப்போகும் குழந்தை மாதிரி உதட்டைப் பிதுக்கினாள். நெற்றிப் புருவத்தைத் தடவிக் கொண்டாள். இன்னும் ஒரு ஆவர்த்தனமா...? 'உனக்குத் தலை வலிக்கிறதோ?' 'உச்சி வெடிக்கிறாப்பிலே.' கேட்டு அவன் அதிசயப்பட்டு விடவில் லை. இப்படி ஏன் இவள் அழும்பு பண்ணி இதையெல்லாம் இழுத்து விட்டுக் கொள்ள வேண்டும்? 'சரி; அதெல்லாம் மறந்தாச்சா?' 'மறந்தாச்சே' என்று மன நிறைவுடன் சொன்னாள். 'ஏன் இப்படிப் பண்ணினே? ஏன்?' என்று பரிவோடு கேட்டான். 'நீங்கள் ஏன் இப்படிப் பண்ணினியள்?' 'நானா?' 'நாம் ரெண்டு பேரு இருக்கமே? குத்தமெல்லாம் ஒரு பக்கமா...' என்றாள் அவள். 'இதுதான் ரெண்டு பேர் குத்தமுமில்லியே.' 'அதனாலேதான்?' என்றாள் அவள். 'என்ன? - இப்படியிருக்கா?' 'ஒரு வேளை அப்படித்தான் வச்சுக்கோங்களே.' 'எப்படியானாலும் மனசிலே குரோதமில்லியே?' 'ஆமாம் இல்லியே' என்று ஆவலுடன் பதிலளித்தாள் அவள். 'காலம்பர எப்படி ஆரம்பிச்சுதுன்னு ஒனக்கு ஞாபகமிருக்கோ. எனக்கில் லை. என்னமோ வார்த்தை; அதுக்கென்ன இப்போ; எனக்கு இப்ப மறந்தே போச்சு; அது முக்கியமில்லே; இன்னும் நமக்கு எத்தினி கஷ்டம்...' அவனுடைய தர்க்கத் தூணியிலுள்ள அஸ்திரங்களில் அது ஒன்று. 'அதைத்தான் மறந்துடுங்களேன்' என்றாள் அவள். அவர்கள் இருவரும் அணைத்திருந்த கைகளை விலக்கினர். நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். பதில் சொல்ல ஆரம்பித்தான். கோபம் உள்ளிருந்து குமுற ஆரம்பித்தது. 'நல்லாருக்கு நல்லாருக்கு. இண்ணக்கி காலம்பர பேப்பர்லே பாக்கலியோ!' 'இந்தக் கூத்திலே பேப்பர் தான் மனசிலே இருக்குமாக்கும்.' என்ன கேள்வி! 'சரி என்ன? அதுதான். அதைத்தான் சொன்னேன்.' 'தெரியுமே...' அவள் கர்ஜிக்க ஆரம்பித்தாள். 'சரி சரி தெரிந்து கொண்டா; இதெல்லாம் தெரிஞ்சுண்டா இப்படி மாடிப்படியிலே உட்கார்ந்துண்டு அழுது வழிஞ்சு... இன்னும் என்ன அழும்பு பண்ணினியோ? எல்லாப் பயகளும் நம்ம மண் டையைப் போட்டுண்டு உருட்டரப்போ?' 'சும்மாதான் இருங்களேன்.' அவனுக்கே வாயடைத்துப் போச்சு. அதையெல்லாம் பற்றி யோசித்து அவளை ஏறிட்டுப் பார்க்கும்பொழுது அவளை வெட்டிப் போடலாமா என்று வந்தது. பெண்டாட்டியா? கொல்ல வந்த எமனாட்டமா? அப்பா... 'இன்னிக்கி ஆகாரம் கீகாரம் எதுவும் உண்டா?' என்று பையிலிருந்து கடிகாரத்தை உருவினான். தலையை அசைத்துக் கொண்டு 'மணி ஜாமத்துக்கு மேலாச்சு.' 'கொஞ்சம் முட்டையைப் பண்ணி வைக்கிறேன். அது போறுமா?' 'ஏதோ போடு.' அவள் சமையலறைக்குள் மறைந்தாள். அவன் படுக்கையில் உடம்பைக் கிடத்திக்கொண்டு காத்திருந்தான். இத்தினிக்கும்... இவளை இப்படிப் பண்ணி வைக்கக் காலையிலே என்னத்தெச் சொல்லி வைச்சோம்... நினைத்து நினைத்துப் பார்த்தான்; பிடிபடவில் லை. அவள் சமையலறையில் முட்டைகளை அடித்துக் கடையும் சப்தம் கேட்கிறது. 'மர்ஸெலா!' 'என்ன?' அவள் வேலையைச் சிறிது நிறுத்தினாள். 'இன்னிக்கிக் காலம்பர நான் ஒங்கிட்ட என்ன வார்த்தையைச் சொன்னேன்...' அவள் சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டுப் பிறகு... 'ஒண்ணுமில்லெ.' 'என்னமோ சொன்னனே... கொஞ்சம் செல்லேண்டியம்மா.' 'அதனாலெ என்ன ஆகப்போகிறது?' 'தெரிஞ்சாத் தேவலை' என்றான் ஒரு நிமிஷம் கழித்து. 'பிரமாதமாக ஒன்றுமில்லெ.' அவன் அப்புறமும் காத்திருந்தான். அவள் ஏன் சொல்ல விரும்பவில் லை? அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தவிரவும் அவனுக்கும் ஞாபகத்துக்கு வரமாட்டேன் என்கிறது. 'மார்ஸெலா, உனக்கும் ஞாபகமில்லியோடியம்மா?' 'நன்னா ஞாபகமிருக்கு.' 'அப்பொச் சொல்லேன்.' 'ஏனோ; மறுபடியும் பழையபடி தொசம் கட்டவா. ரொம்ப அசட்டுத்தனமாகப் போச்சு.' அவள் சொல்லவே மாட்டாள் என்பதை அவன் புரிந்து கொண்டான். 'சரி உன் இஷ்டம்; இருந்தாலும்' என்று முணுமுணுத்தான். 'ஆமாம்.' இப்படி ஓய்வதுதான் சரி.

புதுமைப்பித்தன் மூலம் மேலும் புத்தகங்கள்

72
கட்டுரைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகள்
0.0
புதுமைப்பித்தன் மொத்தம் 108 சிறுகதைகள் எழுதியுள்ளார். அதில் அவர் காலத்தில் 48 மட்டும் பிரசுரமாயின. 1940-ல் புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. புதுமைப்பித்தன் 98 கதைகளை எழுதியுள்ளார். அவர் மணிக்கொடியில் எழுதிய 29 கதைகளைப் புதுமைப்பித்தன் கதைகள் என்ற பெயரில் நவயுகப் பிரசுராலயம் வெளியிட்டுள்ளது. ஆறுகதைகள், நாசகாரக் கும்பல், பக்த குசலோ என்ற அவரது பிற நூல்களையும் அதே நிறுவனம் வெளியிட்டுள்ளது. கலைமகள் பதிப்பகம் காஞ்சனை தொகுதியையும், ஸ்டார் பிரசுரம் ஆண்மை என்ற தொகுதியையும் வெளியிட்டன. ஐந்திணைப் பதிப்பகம் புதுமைப்பித்தனின் மொத்தச் சிறுகதைகளையும் வெளியிட்டது. அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் புதுமைப்பித்தனின் அனைத்துச் சிறுகதைகளையும் வெளியிட்டுள்ளது.
1

1. ஆஷாட பூதி

2 January 2024
0
0
0

மோலியர் (1622-1673) பதினேழாவது நூற்றாண்டில், பிரான்ஸில் நாடகக்காரன் என்றால், மதம் அவனைத் தள்ளிவைத்தது. பிரார்த்தனை - பிரசாதத்தைப் பெறுவது என்றால் விசேஷ சிபாரிசின் பேரில் நடக்க வேண்டிய காரியம். செத்தால

2

2. ஆட்டுக் குட்டிதான்

2 January 2024
0
0
0

ஜேம்ஸ்ஹானலி – இங்கிலாந்து  செக்கச் செவேலென்றிருக்கும் அந்த பஸ், ஏக இரைச்சலுடன் அந்த வளைவைத் திரும்பியது. சூழ்நிலை தாங்கிய அமைதியான வண்ணக் கலவைகளுக்குச் சவால் கொடுப்பது மாதிரி அந்தச் சிகப்பு கண்களை உற

3

3. அம்மா

2 January 2024
0
0
0

கே. பாயில்  பாதை நெடுகலாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், அதற்குச் சின்னக் கிளை ஒன்றும் இருந்தது. இருந்தாலும் மறுபக்கத்தில் ஓடும் சிற்றோடையில் இறங்கி அக்கரைக்குப் போக வேண்டிய அவசியமே இல் லை. மலை வ

4

4. அந்தப் பையன்

3 January 2024
0
0
0

மாக்ஸிம் கார்க்கி  இந்தச் சின்னக் கதையை எப்படிச் சொல்லுவது என்று புரியவில் லை. அவ்வளவு எளிதானது. நான் வாலிபப் பருவத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் தெருக் குழந்தைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு ஊருக்கு வெளியே

5

5. அஷ்டமாசித்தி

3 January 2024
0
0
0

டென்ஷொ வம்சத்தின் ஆதிக்கத்தின்போது, கியாட்டோ என்ற வடக்குப் பிராந்தியத்தில் குவான்ஷின் கோஜி என்ற வயோதிகன் வாழ்த்து வந்தான். நீண்டு நெஞ்சை மறைக்கும் வெள் ளைத் தாடியுடன், ஷிண்டோ குருக்கள்மார் போல உடையணிந

6

6. ஆசிரியர் ஆராய்ச்சி

3 January 2024
0
0
0

ஸின்கிளேர் லூயிஸ்  டாக்டர் ஸ்லீக் பிரம்மச்சாரி; அதிலும், வழுக்கை விழவிருக்கும் வாலிபப் பிரம்மச்சாரி. அவர் இராஸ்மஸ் கலாசாலையில் சரித்திரமும் பொருளாதாரமும் கற்பித்து வந்தார். அதாவது மேடைமீது ஏறி நின்று

7

7. அதிகாலை ( பகுதி 1)

3 January 2024
0
0
0

நிக்கோலாய் டிக்கனோவ்  1918-ம் வருஷம் ஆகஸ்டு மாதத்தில் துருக்கியர் பாக்கூ என்ற இடத்தை முற்றுகை இட்டார்கள். மென்ஷ்விக் நிர்வாகத் தலைமை போர்டின் ஐந்து தலைவர்கள் மூளையும் சுழன்றது. சர்வ குழப்பம்; அது விஷ

8

7.அதிகாலை (பகுதி 2)

3 January 2024
0
0
0

இராத்திரி ஒரு ஊரில் தங்கினதும், ஆலி ஹஸன், டாஷா பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு சளசளவென்று மணிக்கணக்காகப் பேசிக் கொட்டினான். உத்யோகஸ்தரின் விதவை மெய்ஸ் அரிசி ரொட்டியை அசைபோட்டுக் கொண்டிருந்தாள். வி

9

7. அதிகாலை ( பகுதி 3)

3 January 2024
0
0
0

"பொய்யாயிருக்கலாம், ஆனால் சித்திரவதையில், உன் னைக் காட்டிக்கொடுப்பேன்; என் னைக் காட்டிக்கொடுத்துக் கொள்வேன்; எனக்கு ஞாபகத்துக்கு வந்தவர்களையெல்லாம் காட்டிக்கொடுப்பேன். உனக்குச் சித்திரவதை என்றால் எப்ப

10

7. அதிகாலை (பகுதி 4)

3 January 2024
0
0
0

"ஆஹா அப்படியா. பாக்ஷாதான் வயிற்றுக் கடுப்பால் கழிந்து கொண்டிருக்கிறாரே. இன்னும் கொஞ்ச காலத்துக்கு அவரைப் பற்றித் தொந்திரவில் லை. தவிரவும், உன்னுடைய ஆயுதங்களை உன்னிடம் கொடுத்துவிடவேண்டும் என்று உத்திரவ

11

8. பலி

4 January 2024
1
0
0

ஜோஸப் நையரு – ஹங்கேரி  மோல்டேவியா நோக்கி நிற்கும் மலைச் சிகரங்களிலே அந்த வருஷத்தில் மந்தைகளுக்குக் கரடிகளால் வெகு தொல் லை ஏற்பட்டு வந்தது. வில் - பொறி வைத்து எல்லாம் முயன்று பார்த்ததும் ஒன்றும் பயன்ப

12

9. சித்திரவதை

4 January 2024
1
0
0

எர்னஸ்ட் டாலர்  "உனக்கு இன்னும் ஏதாவது விருப்பம் இருக்குமா?" சாகக் கிடக்கும் வாலிபனைப் பார்த்து ஸ்டட்கார்ட் இரகசியப் போலீஸ் உத்தியோகஸ்தர் இவ்வாறு கேட்டார். வாலிபனுடைய 'வெறிச்சோடிய' கண்கள் ஜன்னலின் கம

13

10. டைமன் கண்ட உண்மை

4 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர் (1564-1616)  ஆங்கில நாடகாசிரியர், ஷேக்ஸ்பியரைத் துவிதப் பிரம்மா என்பார்கள். உலகத்தின் சிருஷ்டி தத்துவத்தைப் புரிந்து கொண்டவர் போல் தமது பாத்திரங்களை நடமாட விடுவார். அவர் உலகில் பேய்களும்

14

11. இனி

4 January 2024
1
0
0

இ. எம். டிலாபீல்ட்  இதுவரை நடக்காததைப் பற்றி ஒரு கதை எழுதினால் என்ன?... அந்தக் கதையின் போக்கில் அறிந்து கொள்ள முடியுமானால்... பதினைந்து இருபது வருடங்களுக்கப்புறம்: ஓல்ட் பெய்லியில் (நியாயஸ்தலம்) நடக்

15

12. இந்தப் பல் விவகாரம்

4 January 2024
1
0
0

மைக்கேல் ஜோஷெங்கோ – ருஷ்யா  எங்கள் சகா எகோரிச்சுக்குப் பல், தொந்திரவு கொடுத்து வந்தது. என்ன காரணத்தினாலோ விழ ஆரம்பித்தது. காலம் என்ற ஒன்று இருக்கே, அதற்கும் இந்த விவகாரத்துக்கும் சம்பந்தமிருக்கலாம்.

16

13. இஷ்ட சித்தி ( பகுதி 1)

4 January 2024
1
0
0

ஹான்ஸ் பலாடா – ஜெர்மனி  முதலிலேயே தெரிவித்து விடுகிறேன். அப்புறம் குறை சொல்லாதீர்கள். என் மனைவி பெயர் இட்ஸன் பிளாஸ். உச்சரிப்பதற்குக் கொஞ்சம் சிரமந்தான்; ஆனால் அவள் மீது இருந்த ஆசையில், அதன் சிரமம் எ

17

13. இஷ்ட சித்தி ( பகுதி 2)

4 January 2024
1
0
0

"பின்பு கிரிஸ்மஸ் சமயத்தில் அதை உடைத்து... பிறகு என்னவென்பது உங்களுக்குத்தான் தெரியுமே!" என்றாள்! "உனக்கென்ன பைத்தியமா? இந்த வருஷம் போனஸ் கீனஸ் கிடையாது என்று ஹீபர் சொல்லுகிறான். முதலாளி வருமானம் இல்

18

14. காதல் கதை

5 January 2024
1
0
0

வில்லியம் ஸரோயன்  "இந்தப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுகிறீரா அல்லது அந்தப் பக்கமாக உட்காருகிறீரா?" என்று சிகப்புக் குல்லா* கேட்டான். (* நம்மூர்களில் சிகப்புத் தலைப்பாய் என்றால் போலீஸ்காரன் என்பது

19

15. கலப்பு மணம்

5 January 2024
1
0
0

கிரேஸியா டெலாடா – இத்தாலி  அன்றிரவு சுகமாக இருந்தது. பூலோகத்தைக் கடுங்குளிரினால் சித்திரவதை செய்வதில் சலியாத உறைபனிக் காலத்துக்கும் ஒரு ஓய்வு உண்டு என்பதை அந்த ஏப்ரல் இரவு காட்டியது. இதுவரை பனிக்கட்ட

20

16. கனவு (பகுதி 1)

5 January 2024
1
0
0

ஐவான் டர்ஜனீப் – ருஷியா அந்தக் காலத்தில் நான் என் தாயாருடன் ஒரு சிறு துறைமுகப் பட்டினத்தில் வசித்து வந்தேன். எனக்கு அப்பொழுதுதான் பதினேழு வயது நிரம்பிற்று. தாயாருக்கு முப்பத்தைந்து வயது. சின்ன வயதிலே

21

16. கனவு ( பகுதி 2)

5 January 2024
1
0
0

8 என் தாய் எனக்குக் கூறிய கதை எனதுள்ளத்தை எப்படிச் சிதறடித்தது! முதல் வார்த்தையிலிருந்தே அறிந்து கொண்டேன். அவள் வாயிலிருந்து தவறுதலாக நழுவிய வார்த்தை எனது உத்தேசத்தைத் திடப்படுத்தியது. எனது கனவில் நா

22

17. காரையில் கண்ட முகம்

5 January 2024
1
0
0

இ.வி. லூக்காஸ் – இங்கிலாந்து  நேற்று சாயங்காலம் எனது நண்பன் டாப்னி வீட்டில் நடந்ததை மறக்க முடியவில்லை. அந்த அநுபவம் இன்னும் என் னை உறுத்திக் கொண்டிருக்கிறது. அன்றைய தினம் பேச்சு பூத பைசாசங்களைப் பற்ற

23

18. கிழவி

5 January 2024
1
0
0

ஸெல்மாலேகர்லாப் – ஸ்வீடன்  மலைப்பாதை வழியாக ஒரு கிழவி நடந்து கொண்டிருந்தாள். மெலிந்து குறுகியவள்தான். எனினும் முகத்தின் வண்ணம் வாடவில்லை. சதைக் கோளங்கள் மரத்துத் தொய்ந்து திரித் திரியாகத் தொங்கவில்லை

24

19. லதீபா

6 January 2024
0
0
0

மோஷி ஸ்மிலான் ஸ்கி  "லதீபாவின் கண்களை நீ பார்த்திருக்காவிட்டால், கண்களுக்கு எவ்வளவு அழகு இருக்க முடியும் என்பது உனக்குத் தெரிந்தே இருக்காது." இப்படி நான் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம். ச

25

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்( பகுதி 1)

6 January 2024
0
0
0

1 அவர்களுடைய மூத்த பெண்ணின் படிப்பு அடுத்த மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது. வயசும் 'அப்படி இப்படி' என்று சீக்கிரத்தில் பதினெட்டு ஆகிவிடும். டோ க்கியோவிலேயே நாகரீகத்திற்குப் பெயர் போன இடத்தில் நிலம் வாங

26

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்(பகுதி 2)

6 January 2024
0
0
0

5 வரன்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுவதற்கு நாள் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு 'கபூக்கி' நாடகக் கொட்டகையில் தரகர் இரண்டு 'பாக்ஸ்' களை அமர்த்தினார்; இரண்டு குடும்பங்களும் பக்கத்த

27

21. மணிமந்திரத் தீவு

6 January 2024
0
0
0

ஷேக்ஸ்பியர்  நடுக்கடலிலே நாலைந்து கப்பல்கள் தத்தளித்துத் தடுமாறுகின்றன. கடலலைகள் சினங்கொண்ட கருநாகங்கள் போல ஆயிரமாயிரமாகப் படம் விரித்துத் தலை சுற்றி மோதுகின்றன. உயிரை வாங்கவரும் கால தூதர்களின் கோரச்

28

22. மணியோசை

6 January 2024
0
0
0

ஜப்பான்  "நான் சாவதற்குப் பயப்படவில் லை" என்றாள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மனைவி. "இப்பொழுது என் கவலை எல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நான் போன பிறகு யாரைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?" வேதனை

29

23. மார்க்ஹீம்

6 January 2024
0
0
0

ஆர்.எஸ். ஸ்டீவன்ஸன் – இங்கிலாந்து  "ஆமாம்! எங்கள் வியாபாரத்திலே பலவிதம் உண்டு; வாங்க வருகிறவர்களில் சிலருக்கு ஒன்றுமே தெரியாது; வெறும் 'அப்பாவிகள்'. அப்பொழுது எங்கள் அநுபவத்திற்கு ஏற்ற லாபத்தைப் பெறு

30

24. மிளிஸ்

8 January 2024
0
0
0

பிரட் ஹார்ட் – அமெரிக்கா  ஸிராநிவாடா மலைத் தொடரில் சமவெளிக்குப் பக்கத்தில் இருக்கும் சிவந்த மலைகளில்தான் "ஸ்மித் பாக்கெட்" என்ற இடம் இருக்கிறது. அது ஒரு சுரங்க ஸ்தலம். அதாவது ஒரு காலத்தில் தங்கம் இரு

31

25. முதலும் முடிவும் ( பகுதி 1)

8 January 2024
0
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  மாலை ஆறு மணியிருக்கும். அந்த அறையில் சுமாரான இருட்டு. 'பச்சை ஷேட்' போட்ட மேஜையின் மீதிருந்த ஒற்றை விளக்கு, தரையில் விரித்த துருக்கிக் கம்பளத்திலும், மேஜையின் மீது சிதறிக் கிடந்த,

32

25. முதலும் முடிவும் ( பகுதி 2)

8 January 2024
0
0
0

"பிரேதத்தின் மேலிருந்த எதையும் எடுத்தாயா?" "நாங்கள் சண்டை போட்டுக் கொள்ளும்பொழுது இது அவன் பையிலிருந்து விழுந்தது." அது வெறும் தபால் கவர். தென் அமெரிக்கத் தபால் குறியிட்டு, "பாகட்ரிக் வாலன், ஸைமன் ஓட்

33

26. நாடகக்காரி

8 January 2024
0
0
0

ஆண்டன் ஷெக்காவ் – ருஷியா  அவள் ஒரு நாடகக்காரி. அந்தக் காலத்திலே அவளுக்கு யௌவனக் களை மாறவில் லை. குரல் கணீர் என்று இருக்கும். பலர் வந்து போவார்கள். ஆனால் குறிப்பாக நிக்கோலாய் பெட்ரோவிச் கோல்ப்பக்கோவ்

34

27. நட்சத்திர இளவரசி

8 January 2024
0
0
0

ஒரு ஆசிரியர் - தென் கடல் தீவுகள்  "நம்மிடம் இருப்பதையெல்லாம் சாப்பிட்டு விடுவோம்" என்றான் டபூதி. அவனது சகோதரனான அய்ட்டோ சந்தேகத்துடன் ஏறிட்டுப் பார்த்தான். "அப்படியானால் நமக்கு மிகுந்த பலம் உண்டாகிவி

35

28. ஓம் சாந்தி! சாந்தி!

8 January 2024
1
0
0

எலியா எஹ்ரன் பர்க்  (யுத்தம் மனித சமூகத்தின் 'உடனுறை நோயாகவே' இருந்து வருகிறது. தனது தற்காப்புக்காக மனிதன் சமூகம் என்ற ஒரு ஸ்தாபனத்தை வகுத்தான்; பிறகு அதனைக் காப்பாற்றத் தன் னைப் பலிகொடுக்கத் தயாரானா

36

29. ஒரு கட்டுக்கதை

9 January 2024
0
0
0

பிரான்ஸ் காப்கா – ஆஸ்திரியா  எலி சொல்லுகிறது... "ஐயோ, உலகம் தினம் தினம் எவ்வளவு சின்னதாகிக் கொண்டே வருகிறது! முதலில் ரொம்பப் பெரிதாக, நான் பயப்படும்படியாக, அவ்வளவு பெரிதாக இருந்தது. நான் ஓடிக்கொண்டே

37

30. ஒருவனும் ஒருத்தியும்

9 January 2024
0
0
0

லூயிகய்ல்லூ – பிரான்ஸ்  மச்சுப் படிக்கட்டு முற்றத்தில் இறங்கியது. அங்கே, அதாவது கடைசிப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, அன்று காலை முழுவதும் அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் ரொம்பவும் நெட்டை. ஒற்றை ந

38

31. பைத்தியக்காரி

9 January 2024
0
0
0

மொப்பஸான் – பிரான்ஸ்  "ஆமாம், நீ சொல்வது முன்பு பிரான்சிற்கும் ருஷியாவிற்கும் சண் டை நடந்ததே, அப்பொழுது நடந்த பயங்கரமான சம்பவத்தை என் நினைவிற்குக் கொண்டு வருகிறது" என்று கூறத் தொடங்கினார் முஸே டி' என

39

32. பளிங்குச் சிலை

9 January 2024
0
0
0

வாலரி புருஸ்ஸாப் வாலரி புருஸ்ஸாப் (1875-1924) புரட்சி யுகமான நவீன காலத்து ருஷ்யப் புது எழுத்தாளர் கோஷ்டியைச் சேர்ந்தவர். இந்தக் கதை புரட்சிக்கு முந்திய காலத்தைப் பகைப் புலமாகக் கொண்டு, எழுந்த கற்பனைக

40

33. பால்தஸார் (பகுதி 1)

9 January 2024
0
0
0

அனதோல் பிரான்ஸ் – பிரான்ஸ்  "கிழக்கே அரசர்களுக்கு மந்திர சக்தியுண்டு என்று நினைத்தார்கள்" -தெர்த்தூலியன் அக்காலத்திலே எதியோபியாவை பால்தஸார் ஆண்டு வந்தான். கிரேக்கர் அவனை ஸாரஸின் என்று அழைத்தனர். அவன்

41

33. பால்தஸார்( பகுதி 2)

9 January 2024
0
0
0

ஜனநடமாட்டமில்லாத பாலைப் பிரதேசங்களில் மத்தியானம் வரை நடந்தனர். உச்சியில் சூரியன் வந்ததும், திருடர்கள் கைதிகளை விடுவித்து, பாறையின் நிழலில் உட்காரச் சொல்லி, கெட்டுப்போன ரொட்டித் துண் டைக் கொடுத்தனர். ப

42

34. பொய்

9 January 2024
0
0
0

லியேனீட் ஆன்ட்ரீவ் – ருஷியா  "நீ சொல்வது பொய், அது உனக்குத் தெரியும்!" "அதற்கேன் இப்படிக் கத்தவேண்டும்? பக்கத்திலிருக்கிறவர்களுக்கும் தெரிய வேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது." இப்பொழுதும் பொய் சொன்னாள்

43

35. பூச்சாண்டியின் மகள்

10 January 2024
0
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து  அவள் பெயர் பத்தேமா. அவள் பாக்தாத் நகர் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தாள். அவள் நீலத்தாடிவாலாவின் புதல்வி. கண்டதும் காம வெறியை எழுப்பும் மோகனாங்கி. அவளது மதி முகத்தின் வ

44

36. ராஜ்ய உபாதை( பகுதி 1)

10 January 2024
0
0
0

ஹென்றிக் இப்ஸன் (1828-1906)  ஷேக்ஸ்பியருக்கு நிகராக உலகம் கொண்டாடும் சிறந்த நாடக ஆசிரியர் ஹென்ரிக் இப்ஸன். தர்மத்துக்கு வெற்றி அளித்தார் ஷேக்ஸ்பியர்; தர்மம் ஏன் வெற்றி பெற வேண்டும் என்ற கேள்வியை எழுப

45

ராஜ்ய உபாதை( பகுதி 2)

10 January 2024
0
0
0

"அந்தக் கடிதம்..."  "இரு இரு, விரோதிகளைப் பற்றி நான் ஒரு பட்டியல் கொடுத்தேனே. நீ அதிகாரத்தை விடத் தயாராக இருப்பதுபோல நானும் என் எதிரிகளை மன்னிக்க ஆசைப்படுகிறேன். அந்தப் பட்டியலை இந்த நெருப்பில் போட்ட

46

37. ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு

10 January 2024
0
0
0

நதானியேல் ஹாதார்ண் – அமெரிக்கா  எல்லைப்புறத்தைப் பாதுகாப்பதற்காக 1725-ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்ட படையெடுப்பு சரித்திரத்திலேயே கற்பனைக்கு இடந்தரும் பகுதி. அதை எல்லாரும் சாதாரணமாக 'லவல் சண்டை' என்று கூற

47

38. சாராயப் பீப்பாய்

10 January 2024
0
0
0

எட்கார் அல்லன் போ – அமெரிக்கா  அவன் ஆயிரம் குற்றங்களைச் செய்தான்; ஆனால் என்னால் இயன்றவரை பொறுத்தேன். அவன் என் னைத் திட்டி அவமதித்தான். இனி, பழிக்குப் பழி தீர்க்க வேண்டியதுதான் என்று மன உறுதி கொண்டேன்

48

39. சகோதரர்கள்

10 January 2024
0
0
0

யூஜோ யாம மோட்டோ – ஜப்பான்  'அண்ணா, இது நல்லதுதானே?' 'எங்கே, இப்படிக் கொண்டா பார்ப்போம்' என்று மூத்தவன் தன்னிடம் காட்டப்பட்ட காளானைப் பார்ப்பதற்காகத் திரும்பினான். 'ஊங் ஹும், நல்லதில் லை; நான் பிடுங்க

49

40. சமத்துவம்

10 January 2024
0
0
0

ஒரு ருஷிய ஆசிரியர்  நீலக் கடலின் அடிமட்டத்திலே, பிரமாண்டமான மீன் ஒன்று, இரை தேடிக்கொண்டு, உல்லாசமாக நீந்தி வருகிறது. எதிரே ஒரு சின்ன மீன் - அதன் உணவு. பெரிய மீன் அதை விழுங்குவதற்காக, தன் வாயை அகலத் த

50

41. ஷெஹர்ஜாதி - கதை சொல்லி

11 January 2024
0
0
0

ஹென்றி டிரெக்னியர் – பிரான்ஸ்அன்று இரவு ஷெஹர்ஜாதி நன்றாகத் தூங்கவேயில் லை. பகல் முழுவதும் சுட்டுப் பொசுக்கும் வெய்யில். அதனால் மூச்சுவிடக்கூட முடியாதபடி அவ்வளவு இறுக்கமாக இருந்தது. சிலந்தி வலையையும் த

51

42. சிரித்த முகக்காரன்

11 January 2024
0
0
0

அவன் சோகமாக இருக்கிறான், தனியாக இருக்கிறான் என்று சொல்லிவிடுவது எளிது; ஆனால் அவன் எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்தோடேயே இருக்கிறான். அப்படிச் சொல்லிவிட்டாலும், அவனைப் பாட்டிலில் போட்டு அடைத்து லே

52

43. சூனியக்காரி

11 January 2024
1
0
0

ரோனால்டு ஆக்டன் – இங்கிலாந்து அப்பொழுது இலையுதிர் காலம். நானும் ஜேக் மக்கின்ஸனும் பக்கத்து மிராசுதாருடைய காட்டில் திருட்டுத்தனமாகக் கண்ணி வைத்து வேட்டையாடச் சென்றோம். அவனுக்கு வயது இருபதுக்கு மேல

53

44. சுவரில் வழி

11 January 2024
0
0
0

ஆர். முரே கில்கிரைஸ்– இங்கிலாந்து அன்று முற்பகல் சிறிது உஷ்ணமாகவே இருந்தது. பசும்புல் செழித்து வளர்ந்த மைதான வெளியில், ஆங்காங்கு குத்துக்குத்தாகப் பெயர் தெரியாத புஷ்பங்கள் எல்லாம் கணக்கற்று

54

45. தாயில்லாக் குழந்தைகள்

11 January 2024
0
0
0

பிரான்ஸிஸ் பெல்லர்பி – இங்கிலாந்து வேர்த்து விருவிருக்க, கால்கள் தள்ளாட, இரண்டு குழந்தைகள் நடந்து சென்றன. பையன், பதினொரு வயசிருக்கும். முன்னால் நடந்தான். பெண் எட்டு வயசுபோல இருக்கும். பாதை முன் ம

55

46. தையல் மிஷின்

11 January 2024
0
0
0

இவான் கூம்ஸ் அங்கு மனிதனைத் தூங்காது விழிக்க வைத்திருக்க ஒருவித சந்தடியும் கிடையாது. இருந்தாலும், அந்தச் சிறிய கட்டிலில் சுருண்டு முடங்கிக்கொண்டு, நெடுநேரமாக நிசப்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

56

47. தந்தை மகற்காற்றும் உதவி

11 January 2024
1
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து டான் ஜுவான் தன் மாளிகையில் விருந்து மண்டபத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று தரை வெடித்தது. நரக தூதர்கள் வந்து அவனை இழுத்துக் கொண்டு போய் விட்டார்கள்

57

48. தெய்வம் கொடுத்த வரம்

12 January 2024
1
0
0

பியோர்ண்ஸ்டர்ண் பியோர்ண்ஸன் – ஸ்வீடன்  இந்தக் கதையில் வருகிறவன் தான் அவனுடைய ஊரிலேயே ரொம்பவும் பெரிய பணக்காரன். தவிரவும் அந்த வட்டாரத்திலே அவனுக்குத்தான் ரொம்பவும் சொல் சக்தி உண்டு. அவன் பெயர் தார்ட்

58

49. தேசிய கீதம் (பகுதி 1)

12 January 2024
0
0
0

எல்.ஏ.ஜி. ஸ்டராங் – இங்கிலாந்து  லாரி நிறையத் துருப்புக்கள் கன வேகமாகச் சென்று சில விநாடிகள் கூடக் கழியவில் லை. அது இப்பொழுதுதான் நிகழ்ந்தது. வெடியின் அதிர்ச்சி பரீலியை அப்படியே கலங்க வைத்துவிட்டது.

59

49. தேசிய கீதம் (பகுதி 2)

12 January 2024
0
0
0

ஆம். அமெரிக்காவில் ஓர் பெருத்த வெற்றி. நியூயார்க்கில் இரண்டு ஆட்டம்; பிறகு அமெரிக்கா முழுவதிலும் ஓர் நீண்ட வெற்றி யாத்திரை; முடிவில் ஹாலிவுட்டில் ஒரு பிலிம்; சமாதானம் ஏற்பட்ட இரண்டொரு மாதங்களுக்கப்புற

60

49. தேசிய கீதம் (பகுதி 3)

12 January 2024
0
0
0

இந்தச் சம்பவம் பரீலியின் கோபத்தை அதிகரித்தது; ஆனால் பொதுப்படையாக்கியது. இதுவரை தன் தேசவாசிகளான புரட்சிக்காரர் மீது கோபங்கொண்டிருந்தான். இப்பொழுதோ இந்த இடத்தின் பேரிலேயே கோபம். அவன் நெஞ்சில் ஆழமாகப் பய

61

50. துன்பத்திற்கு மாற்று

12 January 2024
1
0
0

ஸீனர் லூயிஜி பிரான்டல்லோ – இத்தாலி  நமது வாழ்க்கையை, முக்கியமாக அதில் காணும் துன்பங்களை, வான வெளியிலே தேஜோமயமாகச் சுழன்று செல்லும் நட்சத்திர மண்டலங்களுடன் ஒப்பிட்டுப்பாரும், அப்பொழுது அது துச்சமாகத்

62

51. துறவி

12 January 2024
0
0
0

ராபர்ட் நியூமான் – ஜெர்மனி  "நான் முதல் முதலில் ஐரோப்பாவிலிருந்து இந்தக் கீழப் பிரதேசங்களுக்கு வந்தபொழுது அது நடந்தது" என்று அவன் ஆரம்பித்தான். அவன் எங்கள் கப்பலின் காப்டன்; பெயர் வான்டர்லான். ஜாதியி

63

52. உயிர் ஆசை (பகுதி 1)

13 January 2024
1
0
0

ஜாக் லண்டன் – அமெரிக்கா  அவர்கள் இருவரும் நொண்டி, நொண்டி ஆற்றங்கரை வழியாகத் தள்ளாடி நடந்தார்கள். கத்தி போல ஊசியாக, தெத்துக்குத்தாகக் கிடந்த பருக்கைக் கற்கள் காலை வெட்டின. அவர்களிருவரும் சோர்ந்து விட்

64

52. உயிர் ஆசை (பகுதி 2)

13 January 2024
1
0
0

நாட்களும் ஓடின. காட்டு ஜீவராசிகள் ஓடியாடித் திரியும் பள்ளத்தாக்குகளை அடைந்தான். மான் கூட்டம் ஒன்று. இருபது இருக்கும். துப்பாக்கி லெக்குக்கு ரொம்பவும் அருகில் துள்ளி ஓடின. அவற்றை விரட்டிக் கொண்டே ஓடினா

65

52. உயிர் ஆசை (பகுதி 3)

13 January 2024
1
0
0

பாறை மீது படுத்துக் கிடந்தவன் சுயப் பிரக்ஞையுடன் விழித்துக் கொண்டான். சூரியன் காய்ந்து கொண்டிருந்தது. காட்டு மான்குட்டிகளின் சப்தமும் தூரத்தில் கேட்டது. சித்தத்தின் அடிவானத்தில் மழையும் காற்றும் பனியு

66

53. வீடு திரும்பல்

13 January 2024
1
0
0

பீட்டர் எக் – நார்வே  மாலுமி பெடர் ஸோல்பர்க்குடைய மனைவி வசித்த குடிசை, ஜனங்கள் பொதுவாக 'லூக்கள் தெரு' என்று சொல்லுவார்களே, அதற்கெதிரில் இருக்கிறது. குடிசையின் ஜன்னல் நன்றாகத் திறந்திருந்தது. அப்பொழுத

67

54. ஏ படகுக்காரா!

13 January 2024
1
0
0

மிக்கெய்ல் ஷோலொகோவ்  அந்த காஸக் கிராமத்தைச் சூழ்ந்து வளர்ந்து நின்ற சாம்பல் பூத்த பசிய நிறம் படைத்த செடிச் செறிவின்மீது சூரியவொளி தெம்பாக விழவில் லை. அருகே ஒரு பரிசல் துறை இருந்தது. அங்கே படகேறி டான்

68

55. யாத்திரை

13 January 2024
1
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  நான் ஹாமர்ஸ்மித் பஸ்ஸின் மேல்தட்டிலிருந்து பார்க்கும் பொழுது, அவர்கள் ஆல்பர்ட் ஹால் மெமோரியல் எதிரில் இருந்த ஒரு வீட்டு வாசல்படியில் உட்கார்ந்திருந்தனர். அன்று வெகு உஷ்ணம். வாடகை

69

56. எமனை ஏமாற்ற...

13 January 2024
1
0
0

மொங்காக்கு ஷோனின் என்ற மகடனான புத்த பிக்ஷு தான் எழுதியுள்ள கியோ-ஜியோ-ஷிந்ஷோ என்ற கிரந்தத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: "ஜனங்கள் வழிபடும் தெய்வங்களில் பல துர்தேவதைகளாகும். அவலோகிதன், தர்மம், பிக்ஷுக்கள

70

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்

13 January 2024
1
0
0

தாமஸ் வுல்ப் – அமெரிக்கா  ஈவிரக்கமற்றுக் கொதிக்கும் அந்த வருஷம் ஆகஸ்டில் யுத்தம் நின்றது. யுத்த தேவதையின் பவனியின்போது நான்கு கணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஒன்று லாங்லிவியல்; விமான மைதானத்தில் உள்ள குத

71

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்(பகுதி 2)

13 January 2024
1
0
0

தயங்கித் தயங்கி மறியும் உடலொட்டிய இந்த வேட்கை, தங்கள் ஜோலியைச் செய்து இவர்கள் நடாத்தும் வாழ்வினிடையிலும் வெளிக்கு அகோரக் கேலிக் கூத்தாகத் தோன்றினாலும், மேஜைக்கு மேஜை போஷகர் தேடி நடக்கும்போது சர்வ ஜாக்

72

58. தர்ம தேவதையின் துரும்பு

13 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர்  குரலிலே அதிகார தோரணையும் அதனுடன் பயமும் கலந்திருந்தது. கடுங்குளிரிலே, இருட்டின் திரைக்குள்ளே, ஈட்டிபோலப் பாய்ந்தது அக்குரல். 'நீ யார்? முதலில் அதைச் சொல்' என்று பதில் கேள்வி பிறந்தது, தி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்