இராத்திரி ஒரு ஊரில் தங்கினதும், ஆலி ஹஸன், டாஷா பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு சளசளவென்று மணிக்கணக்காகப் பேசிக் கொட்டினான். உத்யோகஸ்தரின் விதவை மெய்ஸ் அரிசி ரொட்டியை அசைபோட்டுக் கொண்டிருந்தாள். விவசாய நிபுணரையும் தபால் உத்யோகஸ்தரையும் பாக்ஷா, கூபூவில் வைத்தே விடுதலை செய்து விட்டார். உதவித் தளபதி 'டிமிக்கி' கொடுத்துவிட்டுக் கம்பி நீட்டினான். மலை ஜாதிப் பையன் ஒருவனிடம் குத்துக்கத்தி ஒன் றை குருட்டிக்காவ் வாங்கி பூட்ஸுக்குள் ஒளித்து வைத்துக்கொண்டான். ஆலி ஹஸன் வெகுமானத்திற்கு மேல் வெகுமானமாக, டாஷாவுக்குக் கொடுத்துக் குவித்துக் கொண்டிருந்தான். பாசிமணி, பழைய அபூர்வ நாணயங்கள், மலர்கள், அபூர்வமான ரத்தினக் கல்லுகள் எல்லாம் கைமாறின. "வாங்கிக் கொள்ளாமல் இருப்பாயா மாட்டாயா" என்று குருட்டிக்காவ் கோபாவேசத்துடன் கத்தினான். "அவனை ஏன் சங்கடப்படுத்த வேண்டும்? அவன் யோக்கியஸ்தன்" என்றாள் டாஷா. "ஆமாம் ரொம்ப யோக்கியஸ்தன்" என்று பதிலுக்கு இரைந்துகொண்டு தொலைக் கண்ணாடியைத் தூக்கிப் பயமுறுத்தினான். "நீ அவன்கூடக் கண்ணடித்துக் கொண்டிருந்தால் நூஹூஹரைப் பார்க்கமாட்டே" என்றான். "நானும் அங்கே போவேன். நீயும் அங்கே என்கூட வரத்தான் போறே" என்றாள் டாஷா. கூட வந்த ரஷ்யர்கள் எங்கோ வாங்கிவந்த மட்டமான வோட்கா சாராயத்தைக் குருட்டிக்காவ் குடித்துவிட்டு போதையுடன் டாஷாவிடம் போனான். "என்கிட்ட வராதே. போ. எங்கிட்ட வராதே. குடிகாரனுக்குப் பொறக்கிற கொழந்தை குடிகாரனாகத்தான் இருக்கும்" என்றாள். "ஆமாம் அதுவும் நெசந்தான்" என்று சொல்லிவிட்டு அகன்று போய் போடாவியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான். இந்த மாதிரியாக இவர்கள் எத்தனையோ கிராமங்களைத் தாண்டிச் சென்றார்கள். வழியிலே எல்லாருக்கும் சளிபிடித்துக் கொள்ளத் தும்மிக் கொண்டும் இருமிக்கொண்டும் நடந்தார்கள். வாய் குழற குருட்டிக்காவ், போடாவியிடம், "அந்தத் துருக்கிப் பயலை எனக்காகத் தொலைத்துப்போடு" என்றான். "அப்படியே தீத்துப்புடவா? அவன் உன் னை என்ன செய்தான்?" "என் பெண்டாட்டியைத் தட்டிக்கொண்டு போகப் பார்க்கிறான்." "ஆஹா, டாஷா" என்று பல்லிளித்தான் போடாவி. "அவனை விரட்டிப்புடு, கொல்ல வேண்டாம்" என்றான் குருட்டிக்காவ். "அவனை வழியில் எங்காவது தங்க வைத்துவிடு. அந்தப் பயல் தொல் லையில்லாமல் நூஹூவுக்குப் போய்ச் சேருவோம்." "இப்பவே செய்கிறேன்" என்றான் போடாவி. போகிற வழிநெடுக அவன் நாள் முழுதும் பாதையில் எதையோ தேடிக்கொண்டு வந்தான். அன்று மாலை காரட் கிழங்கு போன்ற ஒரு வேரைக் குருட்டிக்காவிடம் கொடுத்து, "இதை இடித்துக் காபியில் போட்டுக் கொடுத்துவிடு. அப்புறம் டாஷா நமக்குத்தான்" என்றான். கண் ணை ஒரு சொருகுச் சொருகிச் சுழற்றிவிட்டு வெளியே போனான். குருட்டிக்காவ் நினைவு ரொம்ப ஆழமாகப் பாய்ந்து யோசித்தது. "டாஷா நமக்குத்தான்" என்றானே அதற்கு என்ன அர்த்தம்? டாஷா, ஆலி ஹஸனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். துருக்கியன், குடிசையின் நடுத்தூணில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தான். அவன் பல்லும் கண்ணும் மகிழ்ச்சியைத்தான் கொப்பளித்துக் கொண்டிருந்தன. நீலக் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக் கொண்டான். "காலையிலே எங்ககூடக் காப்பி சாப்பிட வா" என்றாள் டாஷா. "உன் புருஷன் தான் சங்கடப்படுகிறானே" என்றான் துருக்கியன். அவள் திரும்பிக் குருட்டிக்காவ் முகத்தில் பார்வையைப் பதிய வைத்துச் சிரித்தாள். மறுநாள் காலை குருட்டிக்காவ் உட்கார்ந்து காப்பிக் கிண்ணத்துக்குள் பார்வையைச் சொருகிக் கொண்டிருந்தான். அவன் எதிரே காப்பி சுடச்சுட வரிசையாக ஊற்றி வைக்கப்பட்டிருந்தது. டாஷா கண்ணாடி எதிரில் நின்று தலைவாரிக் கொண்டிருந்தாள். வேலைக்காரி, அவளுடைய உடையைத் தொட்டுப் தொட்டுப் பார்த்துச் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். குருட்டிக்காவ் வெளியே ஆளரவம் கேட்டுக் கோப்பைக்குள் பொடித்த வேரைப் போட்டான். நான்கு பேர் மூலை திரும்பி வந்தார்கள். அவர்கள் ஆலி ஹஸனைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். அவன் பல் லை நெறநெறவென்று கடித்துக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தான். "பே கீழே விழுந்து காலை ஒடித்துக்கொண்டார்" என்றான் அந்த நால்வரில் ஒருவன். ஹஸன், டாஷாவைப் பார்த்து, அவள் சார்பாகத் தன் கைகளை முத்தம் கொடுத்துக் கொண்டான். போடாவி ஊருக்குள் போய், ஒரு நாட்டு வைத்தியனை அழைத்து வந்தான். வைத்தியனுக்குத் தலைகால் தெரியவில் லை. இவ்வளவு பெரிய மனிதனுக்கு வைத்தியம் செய்வதா? மகிழ்ச்சியில் திக்குமுக்காடி விட்டது. நோயாளியைத் தன் வீட்டுக்கே தூக்கிக்கொண்டு போய்விடவேண்டும் என்று உத்தரவு போட்டான். ஆலி ஹஸன் தாகத்துக்குக் கேட்டான். குருட்டிக்காவ், பொடி கலந்த காப்பியைத் தன் காலடியில் ஊற்றிவிட்டான். "உன்னுடைய புருஷன் கொடுமைக்காரன்" என்று சொல்லிக்கொண்டே தன் பதவியை உதவி உத்தியோகஸ்தன் வசம் ஒப்புக் கொடுத்தான். ஆலி ஹஸனைப் பின்னால் தங்க வைத்துவிட்டு இவர்கள் புறப்பட்டபின், "டாஷா, உன்கிட்ட ஒரு விஷயம் பேசியாகணும். என் இஷ்டப்படி வாழணும். இந்த மலையும் காடும் எனக்குப் பிடிக்கவே பிடிக்கலை. எனக்கு நன்றாகக் கணக்குப் பதியத் தெரியும். இந்தா எனக்கு இந்த ஜெனரல் உத்தியோகம் பார்க்கத் தெரியாது. நான் நம்பக்கூடிய பெண் எனக்கு வேண்டும். எதிர் வருகிற பயல்களிடம் எல்லாம் பல்லிளித்துக் கொண்டிருக்கிறவள் அல்ல" என்றான். "வாயைப் பொத்திக்கோ அன்ட்ரீய்; லொழ்கோ மொயெவை மறந்து போனியா?" என்று சொல்லிக்கொண்டு கைகளை வைத்து அவன் வாயைப் பொத்தினாள். "அவனைப்பத்தி என்ன இப்போ, மறைத்து மறைத்து என்ன சொல்லுகிறாய்" என்று அவள் கையைத் தட்டிவிட்டுக் கத்தினான் குருட்டிக்காவ். "லொழ்கோ மொயெவ் பத்தி என்னவா? அவன் ரொம்ப சரஸமாப் பேசுவான். சோல்ஜர், துரோகி, துருக்கியர்கூடச் சேர்ந்துகொண்டான்" என்று மீண்டும் இரைந்தான் குருட்டிக்காவ். "அவன் ஒரு காலத்திலே என்னெக் கலியாணம் பண்ணிக்கொள்ள ஆசைப்பட்டான். ஆனால் வேறு ஒரு பொக்கிஷத்தை எனக்கென்று எடுத்துக்கொண்டேன்." இந்தச் சமயம் பார்த்துப் போடாவி வண்டியை ஓட்டிச் செல்லும்படி உத்தரவு போட்டான். வண்டி திரும்பும் ஒவ்வொரு மூலையிலும் எங்கே அந்தத் துருக்கிப்பயல் வந்துவிடப் போகிறானோ என்று சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே இருந்தான். "நீயெல்லாம் இந்த இயற்கையழகைப் பார்த்து ஆனந்தப்பட வேண்டும். அந்த அபூர்வமான தழைகளைப் பாரு" என்றாள் டாஷா. "ஊருக்கு ஊர் மரம் மட்டை ஒவ்வொரு மாதிரியாகத்தான் இருக்கும். உன் மரத்தையும் சோலையையும் பார்த்தாச்சு. அப்புறம் வேறே என்னத்தைப் பார்க்க வேண்டும்?" "அந்த மேகத்தைப் பார்; எவ்வளவு அழகாக இருக்கிறது? கவுத்துவச்ச வாணலிச் சட்டி மாதிரி வட்டமா இருக்கு பாரு." "மேகம் என்றால் நீராவி எல்லாம் சேர்ந்து குவியலாகச் சேர்ந்திருப்பதுதான். அதைத்தவிர அங்கொன்றுமில் லை." "போ, போ, உனக்கு என் பேரில் பிரியமே இல் லை" என்று பெருமூச்சு விட்டாள் டாஷா. அவன் மூஞ்சியைத் தொங்கப் போட்டுக்கொண்டு தன்னுடைய குதிரையை முன்னால் ஓட்டிச் சென்றுவிட்டான். போடாவி அவனுக்குக் கொடுத்தது ஒரு நொண்டிக் குதிரை. அவனுக்குக் குதிரைச் சவாரியில் நல்ல பழக்கமில்லாததினால் அதைப்பற்றி அவன் கவலைப்படவில் லை. ஒவ்வொரு நாளும் அவன் சொப்பனத்தில் எல்லாம் பாங்கியையும் பெட்டியடியையும் கணக்குப் புத்தகத்தையுமே கண்டு ஏங்கினான். "உனக்கு ஒரு பெண்ணின் மேல் ஆசை என்றால் அவளுக்காக நீ சண் டைப் போடத் தயாராக இருக்க வேண்டும்" என்று அவன் முகத்தைத் தடவிக் கொடுத்தாள் டாஷா. "யாருகூடச் சண் டைபோட? என்ன சொல்றே? புரியலியே. நான் தான் உயிரோட இருக்கிறதற்காக மல்லாடினேன். அப்பறம் ரஷ்யாவுக்காக, தாயான ரஷ்யாவுக்காகச் சண் டை போட்டேன். அப்புறம் புரட்சிக்காகச் சண் டைப் போட்டேன். அப்புறந்தான் சிறைபிடித்துக் கொண்டார்கள். அங்கே கூட எனக்கு ஓய்வு கிடையாதா? இனிமே நான் ஒரு பெண்ணுக்காக வேறே சண் டை போட வேண்டும் போலிருக்கிறது. எவளுக்கு?" "எனக்காகத்தான்" என்றாள் டாஷா. "உனக்காகவா? அந்தத் துருக்கிய ஜாதி அமிஞ்சிப் பயல்தான் காலை ஒடித்துக் கொண்டானே?" "அடெ, என்ன முட்டாளாட்டம் பேசுகிறே. நான் அந்தத் துருக்கியனைப் பத்தியே யோசிக்கலே. போடாவி என்ன...?" "போடாவிக்கு என்ன? போடாவிக்கு என்ன இப்போ? அவனும் விளையாட ஆரம்பிச்சுட்டானா? நீயே ஒப்புக் கொள்ளுகிறாயா? அட கர்மமே..." டாஷா அவன் கன்னத்திலறைந்துவிட்டு ஓடிவிட்டாள். "இவள் கூத்தே ஒரு கூத்துத்தான். என் னை இவள் ஒரேடியாக நாசமடிக்கப் போகிறாள். ஏன் இவள் கையில் சிக்கிக் கொண்டேன். கையிலிருப்பதோ குறுங்கத்தி. அப்படி இருந்தாலும் இவளுக்காக நான் சண் டை போட்டு ஆக வேணுமாம். இதுவும் நல்ல கூத்துத்தான்" என்று நினைத்தான் குருட்டிக்காவ். மறுநாள் முழுவதும் வண்டியைச் சுற்றி வட்டமிட்டான் போடாவி. டாஷாவுடன் வாய் ஓயாமல் சளசளவென்று பேசிக்கொண்டிருந்தான். அவளுக்கு மலர்கள், அதிசயமான கல்லுகள், கிராமத்திலிருந்து பால் முதலியவற்றை அடிக்கடி கொண்டுவந்து கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் கீச்சுக் கீச்சு என்று குருவி மாதிரி பேசுவதைக்கண்டு விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே வந்தாள் டாஷா. "இதென்னடா கதையா இருக்கு. குடியும் குடித்தனமுமாக வளர்ந்த பெண் இப்படியும் இருப்பாளோ? இவளுக்கு இதற்கெல்லாம் எங்கேயிருந்து தெம்பு வருகிறது. கண்ட கண்ட பேரையெல்லாம் பார்த்துப் பல் லை இளித்துக் கொண்டுதான் நிற்க வேண்டுமோ? நானோ வாடி வதங்கிப் போகிறேனே. கொஞ்சமேனும் ஏறெடுத்துப் பார்த்தாளா" என்று ஏங்கினான் குருட்டிக்காவ். மந்திரத்தில் கட்டுண்டவன்போல் போடாவி வண்டிக்குப் பின்னால் தொடர்ந்து கொண்டிருந்தான். அவன் வண்டியை ரொம்பவும் நெருங்கிச் சவாரி செய்துகொண்டு வருகிறான் என நினைத்துக் கொண்டால், "டேய் போடாவி" என்று குருட்டிக்காவ் கூப்பிடிவான். "என் னைக் கூப்பிட்டாயா? என்ன?" என்று குதிரையை நிறுத்திக்கொண்டு திரும்புவான் போடாவி. "சரி சரி, இப்போ ஒன்றுமில் லை" என்பான் குருட்டிக்காவ். அடுத்த நிமிஷம் "அடே போடாவி" என்று கூப்பிட்டுவான். இப்படியாக ஒரு வாரகாலம் பிரயாணம் செய்தபின் நூஹூவுக்கு வந்து சேர்ந்தார்கள். கவசம் அடித்துக் கொடுக்கும் பட்டறை ஒன்றிற்கு மேல் உள்ள மாடியறை ஒன்று குருட்டிக்காவுக்கும் டாஷாவுக்கும் ஒழித்து விடப்பட்டது. போடாவி வழி சொல்லிக்கொள்ள அங்கே வந்தான். அவனுக்குப் பாலேடும், தர்பூஸ் பழமும், ரொட்டியும் கொடுத்திருந்தார்கள். யுத்தகளத்துக்குப் போகும்படி அவனுக்கு உத்தரவு. "உன் சின்ன சிங்காரக் கையைக் கொடுத்து அவனுக்குப் போக விடை கொடுத்து வழிஅனுப்பிக்கோ" என்றான் குருட்டிக்காவ். அவன் மனத்தில் பாரம் கொஞ்சம் இறங்கிய மாதிரி இருந்தது. "அவன் வேண்டுமானால் எனக்காகக் கொஞ்சம் சண் டை போடட்டுமே. எப்பொழுதும் நான் தானா சண் டைக்குப் போகவேண்டும்?" குருட்டிக்காவ், கொஞ்சம் காலாற நடந்துவிட்டு வரத் தெருவில் இறங்கினான். வழியிலே கமாண்டரின் உதவி உத்தியோகஸ்தனாக இருந்த ஒரு ஜெர்மன் ஆபீஸரைச் சந்தித்தான். "என் பேர் ஆட்டோ ஸ்டர்னர்" என்று ஞாபகமூட்டிக்கொண்டு கையை நீட்டினான் அந்த ஜெர்மானியன். "யாரு, எனக்குத் தெரியவில் லையே?" என்று கொஞ்சம் சந்தேகத்துடன் பார்த்தான் குருட்டிக்காவ். "எனக்கு ஒரு அட்சரம் ஜெர்மன் பாஷை தெரியாது என்று சொல்லிக் கொள்ள வெட்கமாக இருக்கிறது" என்றான் மீண்டும். "என் பெயர் ஆட்டோ ஸ்டர்னர். உன் னைப் பார்க்கத்தான் வந்து கொண்டிருந்தேன்" என்று சுத்தமான ரஷ்ய பாஷையில் இரைந்தான் அந்த ஜெர்மானியன். "என் பெயர் குருட்டிக்காவ். உனக்கு எப்படி இந்த மாதிரி சுத்தமாக ரஷ்ய பாஷை பேசத் தெரிந்தது. ரொம்ப அதிசயமாக இருக்கே. அரசியல் தோரணையில் உன் னைச் சந்தேகப்பட்டு நான் கேட்கவில் லை. நான் ஒரு பாங்கி குமாஸ்தா. அதுதான் இந்தச் சிரத்தைக்குக் காரணம். எங்க பாங்கிலே நாலைந்து பாஷைகள் பேசக்கூடியவர்கள் இருந்தார்கள்" என்றான். "நீ எப்பொழுதாவது பெட்ரோகிராடில் இருந்ததுண்டா?" என்றான் அந்த ஜெர்மானியன். இருவருமாகத் திரும்பி குருட்டிக்காவ் இருந்த இடத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள். "சண் டைக்கு முன்னாலே கொஞ்ச காலம் அங்கே இருந்ததுண்டு." "ஆர்க்கெட் என்ற இடத்துக்கு எதிராக பாஸேஜ் என்று ஒரு கட்டடம் இருந்ததே ஞாபகம் இருக்கா? பெரிய கண்ணாடிக் கடை." "ஆமாம், ஆமாம். லொட்டு லொஸுக்கு எல்லாம் விற்றுக் கொண்டிருப்பார்களே அந்தக் கடை. தொப்பி முதல் தேக்கரண்டிவரை அங்கே கிடைக்கும்..." "அந்தக் கடைதான்" என்று உற்சாகத்தோடு எதிரொலித்தான் அந்த ஜெர்மானியன். "ஒனக்கு அந்த இடம் நன்றாக ஞாபகத்திலிருக்கிறது போலிருக்கே. பாஸேஜிலிருந்து வெளியே வரும் போது இடது பக்கமாகத் திரும்பினால், முதல் கடை என்னுடையதுதான். எங்கப்பா பெயர் ஸ்டர்னர். எனாமல், செப்புப் பாத்திரங்கள் விற்றுக்கொண்டிருப்பார்." டாஷா பொழுதைக் கழிக்கத் தனியாகச் சீட்டாடிக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததுமே ஜெர்மன்காரன் முகம் மலர்ந்தது. "நீ எப்படி ஜெர்மன் ராணுவத்தில் சிக்கிக் கொண்டாய்? உன் னையும் சிறைப்பிடித்துக் கொண்டார்களா?" என்று கேட்டான் குருட்டிக்காவ். "என் னை ஒருவரும் சிறைப்பிடிக்கவில் லை. நான் பிறந்ததும் வளர்ந்ததும் பீட்டர்ஸ்பர்க்தான். இருந்தாலும் நான் ஜெர்மானியன். அதுக்காக ஜெர்மனிக்குப் போனேன். அப்புறம் பெல்ஜியம், பிரான்ஸ், ஸெர்பியா, போலந்து, ருமேனியா, கிரிமியா, காகஸஸ் எல்லாத்தையும் ஜெயித்தேன். பெர்ஷியாவையும் ஜெயிக்கத்தான் ஆசை. ஆனால் அவ்வளவு தூரம் முடியாது என்றுதான் நினைக்கிறேன்" என்றான் ஆட்டோ ஸ்டர்னர். "நானும் அப்படித்தான் நினைக்கிறேன்" என்றான் குருட்டிக்காவ் கவலையோடு. "உனக்குச் சண் டை போடுவது என்றால் ரொம்பப் பிரியம் போலத் தெரிகிறது" என்றான் தொடர்ந்து. "என் தந்தையார் நாட்டைப் பாதுகாக்கச் சண் டை போடத்தான் செய்வேன். வாழ்விலேயே மகாவஸ்து அழகுதான்" என்று சொல்லிவிட்டு டாஷாவையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்டர்னர். "என்னப்பா என்னமோ சொல்லுகிறாய்? நீ பிறந்தது பெட்ரோகிராடில் இல் லையா, உன் தந்தையர் நாடு..." "அன்ட்ரீய் பேசத் தெரியாமல் பேத்தாதே. நீ சும்மா வாயை மூடிக்கொண்டு கிட, காப்டன் ஸ்டர்னர் எத்தனையோ அழகிகளைப் பார்த்திருப்பார்" என்றாள் டாஷா. "இதோ நாங்க புறப்பட்டாச்சு. தர்பூஸ் பழத்தை அறுக்க ஏதாவதிருந்தால் கொடு" என்று சொன்னான் குருட்டிக்காவ். "சிரமப்பட வேண்டாம். என்னிடம் மடக்குக் கத்தியிருக்கிறது; பெண்களைப் பற்றிக் கதை கதையாகச் சொல்லுகிறேன் கேளு." ராணுவ தர்பார் கோலாகல வெடிச் சத்தங்களுடன் நூஹு நகருக்குள் பாக்ஷாவும் பிரவேசித்தார். வந்து களைப்பாறினார். இன்னும் கொஞ்சம் பீரங்கிவாணம் விட்டார். சிப்பாய்கள் சம்பளத்தை உயர்த்தினார். நிம்மதியாகக் குருட்டிக்காவ் அறையில் பொழுது கழிந்தது. டாஷா இடுப்பில் சுற்றிப் போட்டிருந்த கைகளை அகற்றிவிட்டு, பாக்கூவுக்குப் போனதும் பாங்கியில் வேலை பார்க்கப் போவதாகவும், குருட்டிக்காவ் குஞ்சு கிடக்கும் தொட்டிலை அவள் ஆட்டிக் கொண்டிருப்பாள் என்றும் சொன்னான். ஒருநாள் நல்ல மழை பெய்து கொண்டிருந்தபோது போடாவி திரும்பி வந்தான். வீட்டுக்குள் நுழைந்தபோது தொப்பலாக நனைந்து போயிருந்தான். குருவிக் குஞ்சு மாதிரி வாயைத் திறந்து சிரித்துக்கொண்டு சட்டைப்பையுள் இருந்த கடிதம் ஒன் றை வெளியே எடுத்தான். "லொழ்கோ மோயெவ் என்ற ஒரு உத்தியோகஸ்தர், ஸுல்தானுக்குக் கீழே வேலை பார்க்கிறார். பிறப்பில் ரஷ்யர். அந்த மனிதன் உன் னைப்பற்றி பாக்ஷாவுக்குக் கடிதம் கொடுத்தனுப்பியிருக்கிறார். வாசித்துப்பார்" என்றான் போடாவி. கடுதாசி முத்திரையை உடைத்துப் பார்க்கக் குருட்டிக்காவுக்குக் கை நடுங்கியது, தலை சுழன்றது. டாஷா கடுதாசி உறையைக் கிழித்து அதை எடுத்துக் கீழே விட்டெறிந்தாள். "அதிலே பிரமாதமாக ஒன்றுமில் லை. ராணுவ முகாம் பொக்கிஷத்தைக் கொள் ளையடித்து விட்டாய் என்றும், ஐயாயிரம் தங்கம் உன் பையிலிருக்கிறது என்றும் அதில் எழுதியிருக்கிறது. என் னை மனதில் வைத்துக்கொண்டு இந்தக் கதை கட்டியிருக்கிறான்" என்றாள் டாஷா. "நானா திருடன்! அயோக்கிய ராஸ்கல்" என்று உறுமிக்கொண்டு ஆவேசத்துடன் அறையைச் சுற்றிச் சுற்றி நடக்க ஆரம்பித்தான். "இனிமேல் என்ன செய்வேன். இந்தப் பயல்கள் என் னைச் சுட்டுத் தள்ளிவிடுவார்களே. பாத்தியா. வரவன் போறவனையெல்லாம் பாத்து நீ பல்லிளிக்கப் போய், என் தலையில் வந்து விடிகிறது. நான் அப்பவே சொன்னேன். இப்போ உனக்குத் திருப்திதானே. என் னைச் சுட்டுத் தள்ளுவார்கள்; என் காரியம் முடிஞ்சது" என்றான் குருட்டிக்காவ். டாஷா கண்ணீர் விட்டு அழுதாள். "நான் தான் அந்தக் கடுதாசியைக் கொண்டு வந்து விட்டேனே. அதைக் கிழித்துப் போட்டாச்சே" என்று போடாவி மூஞ்சியைத் தொங்கப் போட்டுக்கொண்டு கடுதாசியைச் சுக்குச் சுக்காகக் கிழித்தெறிந்தான். திக்பிரமை தெளிந்து குருட்டிக்காவ், "அதைக் கிழித்துப் போட்டு விட்டாயே! இனிமேல் அதற்குப் பதில் கொண்டு போக வேண்டாமா? என்ன செய்யப் போகிறாய்?" என்றான். "பதிலா? நான் திரும்பிப் போகும்பொழுது பதில் எதுவும் பார்த்துக்கொள்வேன்" என்றான் போடாவி மூஞ்சியைத் தொங்கப் போட்டுக்கொண்டு. டாஷா அப்படியே அவன்மேல் விழுந்து அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு முகமெல்லாம் முத்தமிட்டாள். "டாஷா, நன்றியைக் காட்டிக்கொள்ள, அது கொஞ்சம் அனாவசியந்தான்" என்றான் குருட்டிக்காவ். ஆவேசத்தில் உடம்பு நடுங்கியது. இருந்தாலும், "போடாவி, நான் உனக்குக் கடமைப்பட்டவன் தான். இந்த மாதிரி அநியாயமாக அந்த அயோக்கியன் குற்றம் சாட்டுவான் என்று யார் நினைத்தார்கள்? அவனே இங்கு வந்துவிட்டானானால்?" என்றான் மீண்டும். "அப்படி வரமாட்டான், எனக்காகக் காத்திருப்பான். அங்கே ஓயாமல் சண் டை நடந்துகொண்டுதான் இருக்கிறது" என்றான் போடாவி. அன்று சாயங்காலம், பாக்ஷாவின் சிப்பந்தி ஒருவன் வந்து சாப்பிடக் குருட்டிக்காவை பாக்ஷா அழைத்திருப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றான். "போச்சு, குடிகெட்டதா? அவர்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும். கிழக்கு நாட்டார் பேமாளங்கள்தான் உனக்குத் தெரியுமே. முதலிலே ஒரு கோப்பை சாயா, அப்புறம் சித்திரவதைதான். பெற்ற தாய்க்கும் அடையாளம் தெரியாதபடி குதறித் தள்ளி விடுவார்கள். எனக்கோ பலமில் லை. அழுது விழுந்து கொண்டு தங்கத்தைக் கொட்டிக் கொடுத்து விடுவேன்" என்று கண்ணீர்விட்டான் குருட்டிக்காவ். "நம்மகிட்ட தங்கம் ஏது? அதெல்லாம் பொய்யில் லை?" என்றாள் டாஷா.