shabd-logo

10. பறந்த கிளி! தொடர்ந்த துன்பம்!

16 January 2024

2 பார்த்தது 2

மலை அரசியின் சொற்களோ உத்தரவுகளோ மந்திராலோசனை சபையில் இருந்தவர்களுக்குக் கட்டோடு பிடிக்காதிருந்தாலும் அவள் சொன்னதற்கு எல்லாம் ஜோடா தலையை ஆட்டியதால், அவள் கட்டளைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் எல்லோருமே முனைந்தார்கள்.
மறுநாள் இளவரசருக்கு மகுடாபிஷேகம் என்று மண்டோர் மக்களுக்கு அன்று பிற்பகலிலேயே தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டதன் விளைவாக மண்டோர் வெகு சீக்கிரம் விழாக்கோலம் பூண்டது. அன்று மாலைக்குள் தலை நகரின் பல இடங்களில் தோரணங்கள் தோன்றலாயின. மங்கள வாத்தியங்களும் பிரதான கோட்டை வாசல் தூரிகைகளும் பலமாக முழங்கத் தொடங்கின. முக்காடு அணிந்து ராஜபுத்திர பெண்கள் குடங்களில் நீர் ஏந்தி வெளிவந்து வாசல்களில் நீர் தெளித்துக் கோலமிட்டு செம்மண் பூசினர். வீரர்கள் பத்துப் பத்துப் பேராக அணிவகுத்து வீதிகளில் வலம் வந்து ஜெயகோஷங்களைக் கிளப்பினார்கள். மார்வாரின் பெரும் கொடி கோட்டை வாசல் மீது ஏற்றப்பட்டது. நகரம் எங்கிலும் பாடல்களும் மகிழ்ச்சிக் கூச்சல்களும் எழுந்த வண்ணம் இருந்தன. மாலை அணுகியதும் எங்கும் விளக்குகள் பிரகாசமாக எரியத் தொடங்கின.
இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் மலை அரசி அரண்மனை உப்பரிகையில் இருந்தே கவனித்துக் கொண்டிருந்தாள். அரண்மனையில் மட்டும் பெரிய மகா ராஜா காலமாகி நாட்கள் பத்து கூட ஆகாததாலும், மகாராணியின் துக்க காலமும் கோலமும் நீங்கவில்லை என்ற காரணத்தாலும் மங்கள அலங்காரங்கள் ஏதும் நடக்கவில்லை. அதைக்கண்ட மலை அரசி பணிப்பெண்களில் ஒருத்தியை அழைத்து, “இளைய ராஜா மகாராஜா ஆவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?” என்று வினவினாள் சிறிது சினத்துடன்.
“அப்படி ஏதுமில்லையே அம்மணி” என்றாள் பணிப்பெண் திகிலுடன்.
“அரண்மனை ஏன் மகுடாபிஷோகத்துக்கு அலங்கரிக்கப்படவில்லை?” என்று வினவினாள் மலை அரசி.
“மகாராஜா இறந்து பத்து நாள் ஆகவில்லை” என்றாள் பணிப்பெண்.
“அதனால் பாதகம் இல்லை. அரண்மனையை அலங்காரம் செய்யுங்கள்” என்று மலை அரசி உத்தர்விட்டாள்.
“மகாராணி இதற்கு ஒப்பமாட்டார்கள்” என்று பணிப்பெண் சுட்டிக் காட்டினாள்.
“நான் சொல்லிக் கொள்கிறேன் மகாராணியிடம். அலங்காரத்தைத் தொடங்குங்கள்” என்ற மலை அரசியின் உத்தரவு திட்டமாயிருந்தது.
இந்த உத்தரவை நிறைவேற்றுவதில் கஷ்டமிருந்ததால் பெரிய மகாராணியிடம் விஷயத்தை பணிப்பெண்கள் சொன்னார்கள். பெரிய மகாராணி முதல் அமைச்சரை வரவழைத்து, “இந்தக் காட்டுப்பெண் முறைகெட்ட உத்தரவுகளை எல்லாம் இடுகிறாளே, என்ன செய்வது?” என்று விசாரித்தாள்.
முதலமைச்சர் சிறிது சங்கடத்தில் ஆழ்ந்தார். “அப்படி என்ன உத்தரவு இட்டாள்?” என்று வினவினார்.
பெரிய மகாராணி பெருமூச்செறிந்தாள். “அரண்மனையை அலங்காரம் செய்யச் சொல்லுகிறாள். மகாராஜா இறந்து இன்னும் பத்து நாள் ஆகவில்லை” என்று பெருமூச்சுக்கு இடையே துன்பம் மிகுந்த குரலில் சொன்னாள் பெரிய மகாராணி. “இது எந்த நியாயத்தில் சேரும்?” என்றும் கேட்டாள்.
“அரச நியாயத்தில், தர்மத்தில் சேரும்” என்ற மலை அரசியின் குரல் அவர்களைத் திகைக்க வைக்கவே இருவரும் திரும்பி அறை வாயிற்படியில் நின்ற அவளை நோக்கினார்கள்.
இருவருக்கும் அவள் வரவு சிறிது திகிலை அளித்தாலும் முதலமைச்சர் துணிவை வரவழைத்துக்கொண்டு, “அம்மணி! நீங்கள் இன்னும் மகாராணி ஆகவில்லை” என்று சிறிது கோபத்துடன் சுட்டிக் காட்டினார்.
“இந்த உண்மையைக் கண்டுபிடிக்க ஒரு முதலமைச்சர் தேவையில்லை. இந்த அரண்மனையின் சாதாரணப் பணிப்பெண்ணுக்கும் அது தெரியும்” என்ற மலை அரசி, “அமைச்சரே! மகாராஜா அடைந்திருப்பது வீரமரணம். மேவார் தலைநகரில் வாள்கூட இல்லாமல் நிராயுதபாணியாயிருந்த அவரை பத்து வீரர்கள் வளைத்துக் கொண்டார்கள். தனியாக அங்கிருந்த கேடயத்தை மட்டும் தாங்கி அதைக் கொண்டே ஆறுபேர் உயிரை மாய்த்தார் மகாராஜா. அத்தகைய மகாவீரர்கள் சொர்க்கத்துக்குப் போகிறார்கள். அது துக்கப்படும் சம்பவம் அல்ல பெருமைப்படும் சம்பவம். தவிர, மற்றவர்களுக்குள்ள நியதி க்ஷத்திரியர்களுக்குக் கிடையாது. மரணத்துக்குப் பின் மகுடாபிஷேகம் நடப்பதும் மங்களம் தொடருவதும் ராஜபுத்திர வம்சங்களின் இயல்பு” என்று விளக்கினாள்.
இதைக் கேட்ட மகாராணி மட்டுமன்றி முதல் அமைச்சரும் வியப்பின் எல்லையை அடையவே முதல் அமைச்சர் கேட்டார், “காட்டில் இருக்கிற உங்களுக்கு நாட்டுப் பழக்கம் எப்படித் தெரியும்?” என்று.
மலை அரசி நகைத்தாள், “தூரத்தில் உள்ள மேவார் தலைநகரில் நடந்தது காட்டில் இருந்த எனக்கு எப்படித் தெரிந்தது?” என்று பதில் கேள்வியை வீசினாள்.
“இளவரசர் சொல்லியிருக்கலாம்” என்றார் முதலமைச்சர்.
சிரித்தாள் மலை அரசி சிறிது வாய்விட்டு, “இளவரசருக்கே நாங்கள்தான் காட்டினோம் சித்தூர் நிகழ்ச்சிகளை, வரப்போகும் சம்பவங்களை” என்று சொன்ன மலை அரசி, “உங்கள் இளவரசர் நான் சொல்வதை எல்லாம் ஏன் ஏற்க வேண்டும்?” என்றும் வினவினாள்.
முதலமைச்சர் தமது நகைச்சுவையைக் காட்டினார். “மயக்கம்” என்று ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னார்.
“என்னிடம் மயங்கிவிட்டாரா?” மலை அரசியின் கேள்வியில் கேலி இருந்தது.
“ஆம்.”
“உங்கள் இளவரசரைப் பற்றி உங்கள் மதிப்பு அவ்வளவுதான்!”
“அவரைப்பற்றி நான் ஏதும் சொல்லவில்லை.”
“அவர் சபலபுத்தியைப் பற்றிச் சொல்கிறீர்கள்? எந்த பெண்ணைப் பார்த்தாலும் பல் இளிக்கும் புத்தி அவருக்கு இருக்கிறதாக்கும்?”
சம்பாஷணை விபரீத வழியில் இறங்குவதைப் பார்த்த முதலமைச்சர், “நான் ஏதும் சொல்லவில்லை” என்று பின் வாங்கினார்.
மலை அரசி அவரை விடவில்லை, “வேறு யார் சொல்கிறார்கள்?” என்று கேட்டாள்.
“மக்கள்” என்ற முதலமைச்சர் “ஒரு காட்டுப் பெண்ணை மரவுரி தரித்தவளை, புரவியில் அமர்த்தி கடிவாளம் பிடித்து சேவகனைப்போல் நடக்கும் இளவரசரை நகர மக்கள் நேரிடையாகப் பார்த்துவிட்டார்கள்” என்றும் கூறினார்.
“அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் எப்படி அறிந்தீர்கள்?” என்று கேட்டாள் மலை அரசி.
இதற்கு சரியாகப் பதில் சொல்லத் தெரியாததால் விழித்தார் முதலமைச்சர்.
மலை அரசியே பேச்சைத் தொடர்ந்தாள். “அமைச்சரே! ஏதோ சூசகமாகப் பேசுகிறீர்களே தவிர, எதையும் ஆராய நீங்கள் முற்படவில்லை. ஜோடா போன்ற ஒரு மகாவீரன் புரவியில் அமர்ந்து ஒரு பெண்ணை நடக்கச் சொல்ல முடியாது. அது அவர் கண்ணியத்துக்கோ, வீரத்துக்கோ, பண்பாட்டுக்கோ அடையாளமாகாது. ஆகையால் இளவரசர் செய்கையை மண்டோர் மக்கள் பாராட்டவே செய்கிறார்கள். அவர்கள் நகரை அலங்கரிக்கும் உற்சாகத்தைப் பாருங்கள். உமது சம்பிரதாயத்தை மூட்டை கட்டிவையும் அமைச்சரே! நாளை நடக்கப்போவதை கவனியும். ஜோடா தனது மூதாதைகள் சிம்மாசனத்தில் அமரும்போது, இந்த அரண்மனை அமங்களமாயிருக்கக்கூடாது அமங்களத்தை மங்களமாகத் திருப்புவதைத் தான் சாஸ்திரம் அனுமதிக்கிறது” என்று உலக நீதியைச் சொன்னாள் மலை அரசி. அத்துடன் கேட்டாள் “முதலமைச்சரே! நீர் அந்தணர்தானே?” என்று.
“ஆம்” என்றார் முதலமைச்சர்.
“தாய் தந்தையருக்கு சிரார்த்தம் செய்கிறீரா?”
“செய்கிறேன்,”
“அக்கினி மூட்டி?”
“ஆம்.”
“அகில் அக்கினி குண்டத்தை நகர்த்தும் போது என்ன சொல்கிறீர்?”
முதலமைச்சர் பிரமையில் ஆழ்ந்ததால் பதில் ஏதும் சொல்லவில்லை. ஆகையால் மலை அரசி சொன்னாள். “சேசமாய் புனராகமனாச, அதாவது திரும்பி சுபகாரியத்துக்கு வா என்று சொல்கிறீர். அமங்களத்தை அமங்களமாகவே வைக்கக்கூடாது என்பது சாஸ்திரம். மங்களத்தை அழைப்பதும், அமைப்பதும் சாஸ்திரத்தின் நோக்கம். ஆகவே சொல்வதைக் கேளும். அரண்மனையும் மங்களமாகத் திகழட்டும். அதற்கான ஏற்பாடுகள் உடனடியாக நடக்கட்டும்” என்று உத்தரவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
முதலமைச்சர் அப்பொழுதும் அவள் வார்த்தையைக் கேட்கவில்லை. அரண்மனையில் மட்டும் அலங்காரத்தை அனுமதிக்கவில்லை. மறுநாள் மகுடாபிஷேகம் மங்கள தீபங்கள் அற்ற அரண்மனையிலேயே நடந்தது. மகுடாபிஷேக மண்டபத்தில் திரளாக வீரர்கள் வந்திருந்தார்கள். ஆனால், மலை அரசி மட்டும் வரவில்லை. இருமுறை ஜோடா சொல்லியனுப்பியும் அவள் தனது அறையை விட்டு வர மறுத்தாள். ஆகவே மகுடாபிஷேகம் முடிந்து, அரச முடியும் மாலையும் தரித்தவனாய் ராவ் ஜோடாவே மந்திரிப்பிரதானிகளுடனும், பிரதான படைத்தலைவனுடனும் அவள் அறையை அடைந்தான்.
அவன் வந்ததும் மலை அரசி அறை வாயிலில் தோன்றினாள். “மகாராஜா! நீங்கள் மகுடாபிஷேகம் கொண்டது நல்லது. ஆனால் அரண்மனை அதில் பங்கு கொள்ளவில்லை அந்த அமங்களம் எப்படியும் உங்களை பாதிக்கும்” என்று கூறிவிட்டு அவன் நெற்றியில் இடது கையிலிருந்த குங்குமத்தை எடுத்து திலகமாகத் தீட்டினாள்.
ராவ்ஜோடா அவள் முன்பு தலைவணங்கி நின்றான். “மலை அரசி! வருந்தாதே முதலமைச்சர் சகலத்தையும் சொன்னார். சம்பிரதாயங்களை உடைக்க முடியவில்லை அவரால்” என்றும் சொன்னான் அவளுக்கு ஆறுதலாக.
மலை அரசியின் முகத்தில் துன்பம் பரவி நின்றது “சாஸ்திர சம்மதமற்ற சம்பிரதாயம் உடைக்கத் தகுந்தது. அதை இனி நினைத்துப் பயனில்லை. சம்பிரதாயத்தை உடைக்கவில்லை முதலமைச்சர். ஆனால் நாட்டை உடைத்துவிட்டார். இந்த மாரூஸ்தலியில் இன்னும் ரத்தம் அதிகமாக ஓடும்” என்று சொன்னாள். அவள் கண்களில் கனவு படர்ந்தது. “இன்னும் ஒரே நாள்! மீண்டும் ஓடப் போகிறோம்” என்ற மலை அரசி, மன்னன் செல்ல விடை கொடுத்தாள். அறைக் கதவையும் சாத்திக்கொண்டாள்.
மறுநாள் மலை அரசி மண்டோரில் காணப்படவில்லை. அவளைப் பார்க்கச் சென்ற ராவ்ஜோடா அவள் பஞ்சணை மீது புது உடைகள் வைக்கப்பட்டு இருப்பதையும் அவளது புலித்தோலும் மரவுரியும் காணாததையும் கவனித்தான்.
ஜோடாவைத் தொடர்ந்து வந்த ஜகத்சிம்மன் கேட்டான், “மகாராஜா! அந்தப் பெண் எங்கே?” என்று.
“காட்டுக் கிளி பறந்துவிட்டது” என்ற ஜோடாவின் குரலில் துன்பம் மிதமிஞ்சி ஒலித்தது.
அந்தச் சமயத்தில் பஞ்சணையை நோக்கிய ஜகத்சிம்மன் “மகாராஜா! அதோ ஓர் ஓலை இருக்கிறது” என்று சுட்டிக் காட்டினான்.
ஓலையை எடுத்துப் பார்த்தான் ஜோடா. அதில் இருந்தது ஒரே வார்த்தை “சுத்த விரதம்” என்ற சொல்லை இரைந்து படித்தான் மார்வாரின் புது மன்னன், திரும்பிப் படைத் தலைவனைப் பார்த்து “நான் மார்வாரை விட்டுச் செல்ல காலம் வந்துவிட்டது. போக வேண்டியதற்கான ஏற்பாடுகளைச் செய்” என்று உத்தரவிட்டான்.
“இன்றைக்குத்தானே முடிசூடினீர்கள் மகாராஜா?” என்று முதலமைச்சர் கேட்டார்.
“ஆம் முதலமைச்சரே! இது நிலையற்ற அரசு என்று மலை அரசி மந்திராலோசனையில் சொல்லவில்லையா?” என்றான் ஜோடா.
“சொன்னாள்” என்றார் முதலமைச்சர்.
“தெரியாமல் அவள் சொல்லவில்லை. நமக்குப் புரியாதது அவளுக்கு முன்னோக்கிப் புரிகிறது” என்ற ஜோடா, விடுவிடு என்று அரண்மனையின் அந்தப்புரப் படிகளில் இறங்கிச் சென்றான், புரவிச்சாலையை நோக்கி. “அவளை எப்படியும் பிடித்துவிடுகிறேன்” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, தனது புரவியை அவிழ்த்து அதன் மீது தாவி ஏறினான்.
அதே சமயத்தில் மண்டோரின் வாயிற்கதவுகள் பெரிய சத்தத்துடன் சாத்தப்பட்டன. போர் முரசு பலமாக ஒலித்தது. புரவியில் தாவி ஏறிய ஜோடா புரவியை நகர்த்தவில்லை, அப்படியே மலைத்து நின்றான், கையிலேந்திய கடி வாளத்துடன்.

சாண்டில்யன் மூலம் மேலும் புத்தகங்கள்

40
கட்டுரைகள்
மலை அரசி
0.0
மாலை அரசி தமிழ் மொழியில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான வரலாற்று நாவல். பிரபல தமிழ் எழுத்தாளர் சாண்டில்யன் இந்த மனதை மயக்கும் புத்தகத்தை எழுதியுள்ளார். சாண்டில்யன் வரலாற்றுப் புனைகதைகளுக்காகப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார், மேலும் அவர் தனது வரலாற்று, காதல் மற்றும் சாகச நாவல்களுக்காக நன்கு அறியப்பட்டவர், இது பெரும்பாலும் சோழ மற்றும் பாண்டிய பேரரசுகளின் காலங்களில் அமைக்கப்பட்டது.
1

1. சுடர்க்கொடி

15 January 2024
0
0
0

சரித்திரம், பூமி, வாழ்க்கையின் கர்ம பலன்கள் ஆகிய சகலத்திலும் ஒரு சுழற்சியும் தொடர்ச்சியும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுவதில் எத்தனை உண்மையிருக்கிறதென்பதை, சுற்றிலும் தன்னை எரித்துக்கொண்டிருந்த மணற்பரப்

2

2. விளக்கில் விரிந்த கதை

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் மலைக்குகை வாயிலில், மரங்கள் அடர்த்தியாயிருந்ததால் இருள் கடுமையாக இருந்த அந்தப் பிராந்தியத்தில், பந்தத்தை கையில் ஏந்தி அதன் சுடர் முகத்தில் வீச சுடர்க்கொடியென்ற காரணப் பெயருக்கு முற

3

3. துணைவன்!

15 January 2024
0
0
0

விரிந்து படர்ந்து எரிந்த விளக்கின் சுடரை விந்தைக் கண்களுடன் நோக்கிய ராவ்ஜோடா. அதில் விரிந்த கதையைக் கண்டதும் மெய்சிலிர்த்துப் போனான். முதலில் அந்தச் சுடரில் ஏதும் தெரியாததால் புரியாமல் விழித்த மார்வ

4

4. இரு விந்தைகள்

15 January 2024
0
0
0

மலை அரசியின் மதுர இதழ்களில் இருந்து உதிர்ந்த அந்தக் கொடுமையான சொற்களைக் கேட்டதும், வியப்பும் அச்சமும் கலந்த உணர்ச்சிகள் ராவ்ஜோடாவின் இதயத்தை மளடுருவிச் சென்றன. அப்படி அவன் நடுங்கியதை பக்கத்தில் உட்கார

5

5. நான் வருவேன்

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் குகையைவிட்டு வெளியேறிய மலை அரசி, வேகமாக மலையின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடந்து சென்றதும், விளைவித்த இரண்டு விந்தைகளும் மகாவீரனான மார்வார் இளவரசனை திகில் கொள்ளச் செய்தன என்றால்,

6

6. பெண் துணை!

15 January 2024
0
0
0

பெண்ணின் லாவண்யத்தால் ஆண்மகன் அறிவு அழிந்துவிடுகிறது. கவர்ச்சியான கன்னியின் முன்பாக எந்த ஆண்மகனும் சுயபுத்தியை இழந்துவிடுகிறான். இந்தப் பழைய நிகழ்ச்சிகளுக்கு அத்தாட்சியாக நின்றான் ராவ்ஜோடா. “உனது வீ

7

7. சாகுந்தலம்

16 January 2024
1
0
0

பந்தத்தையும் அணைத்துவிட்டு இருண்ட குகைக்குள் தன்னை வா வா என்று அழைத்த அந்த பருவப் பாவையின் துணிவை நினைத்து ஜோடா திகிலுக்கு இலக்காகி நின்ற நேரத்தில், மலைஅரசியே குகை வாயிலைவிட்டு அவனை அணுகி, அவன் கையைப்

8

8. காட்டு மலர்

16 January 2024
1
0
0

பாவின் வாலிப முரட்டு முகம் அவள் வழவழத்த கழுத்தில் திடீரென அழுந்திப் புரண்டபோது, மலை அரசியின் இதயமும் அந்த வாலிபன் உள்ளத்தைப்போலவே உணர்ச்சி அலைகளில் உருண்டது. அத்தனை உணர்ச்சி எழுச்சியிலும் அரசகுமாரன்

9

9. நிலையற்ற அரசு

16 January 2024
1
0
0

மலை அரசியை “காட்டு மலர்” என்று குறிப்பிட்டதோடு தனது பேச்சை ஜோடா நிறுத்திக்கொண்டு இருந்தால் ஜகத்சிம்மனின் கோபம் தலைக்கு ஏறியிருக்காது. “இவள் மார்வார் ராணி” என்றும் சொல்லவே ஜகத்சிம்மனுக்கு கோபத்துடன் தி

10

10. பறந்த கிளி! தொடர்ந்த துன்பம்!

16 January 2024
1
0
0

மலை அரசியின் சொற்களோ உத்தரவுகளோ மந்திராலோசனை சபையில் இருந்தவர்களுக்குக் கட்டோடு பிடிக்காதிருந்தாலும் அவள் சொன்னதற்கு எல்லாம் ஜோடா தலையை ஆட்டியதால், அவள் கட்டளைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் எல்லோருமே முன

11

11. மண்டோர் ரணகளம்

16 January 2024
1
0
0

மண்டோரின் பெரும் கதவுகள் சாத்தப்பட்டதாலும் போர்முரசு பலமாக ஒலித்ததாலும் வருவது என்னவென்பதை அறிந்த புது மகாராஜாவான ராவ்ஜோடா, புரவியின் கடிவாளத்தை பிடித்த நிலையிலேயே திகைத்து அமர்ந்துவிட்ட சமயத்தில் மலை

12

12. குகையில்...!

16 January 2024
1
0
0

பெற்றோர் புரிந்த பாவம் சிலரைப் பிடித்து வாட்டுகிறது. உற்றார் செய்த பாவமும் சிலரை விடுவதில்லை. பெற்றோரும் உற்றாரும் விளைவித்த பாவங்களுக்கு எப்பாவமும் அறியாத ஜோடா இலக்கானான். பேரனான மோகுல சிம்மனை சீராட்

13

13. அவள் கனவு!

16 January 2024
1
0
0

மலை அரசியைப் பார்த்து மார்வார் இளவரசனாயிருந்து அரசனாகி, நாட்டையும் பறிகொடுத்த ராவ்ஜோடா, அத்தகைய ஒரு கேள்வியைக் கேட்டான் என்றால், அதற்கு மூலகாரணம் அவளுடைய விபரீதமான பதில்தான். “நாம் தனித்திருப்பது உனக்

14

14. தண்டனை!

17 January 2024
1
0
0

மலை அரசியை தரையில் கிடத்திவிட்டு குகையின் வாயிலுக்கு வந்த ராவ்ஜோடாவின் செவிகளில் ஜகத்சிம்மனும் மற்ற வீரர்களும் ஏறிவந்த புரவியின் குளம்படி ஒலிகள் கூடக் கேட்கவில்லை. குகைக்கு உள்ளே மலை அரசியின் அருகாமைய

15

15. ஹர்பா சங்க்லா!

17 January 2024
0
0
0

மலை அரசியால் மன்னிக்கப்பட்டு ஜோடாகிருக்குச் செல்லும்படி பணிக்கப்பட்ட ஜகத்சிம்மன் உடனடியாகத் திரும்பவில்லை தனது புரவியை நோக்கி நின்ற இடத்திலேயே அசைவற்று நின்றான் பல விநாடிகள். பிறகு சட்டென்று வேகமாக நட

16

16. அந்தி வானம்

17 January 2024
0
0
0

அதிர்ஷ்டம் என்பது ஒரு மனிதனைப் பிடித்துக்கொண்டால் அவனை அது லேசில் விடுவது இல்லை. கூடியவரையில் விடாமல் தொடர்கிறது. துரதிர்ஷ்டக்காரனுக்கு புத்தி பேதலிக்கிறது. காலம் கைகொடுப்பது இல்லை. எதையும் காலங்கடந்த

17

17. வாளின் கதை!

17 January 2024
0
0
0

ஜோடாவைப்பற்றி விசாரித்ததும் மலை அரசியின் மதிமுகம் அந்திவானம் போல் சிவந்துவிட்டதைக் கண்டதுமே நைஷ்டிக பிருமச்சாரியும், எந்தப் பெண்ணையும் கண்ணெடுத்துப் பார்க்காதவரும், பிருமச்சாரி விரதம் கெடக்கூடாது என்ப

18

18. தேடி வந்த அதிர்ஷ்டம்!

17 January 2024
0
0
0

மார்வார் மன்னனையும் மலைக்க வைத்த அந்த விசித்திரக் கதையைச் சொல்லுமுன்பு பிருமச்சாரி அந்தச் சிறு வீட்டின் முற்றத்தை வளைத்திருந்த சுற்றுக் கட்டடத்தின்மீது உட்கார்ந்து கீழ் இருந்த முற்றத்தில் தமது கால்களை

19

19. பாலைவனக் கூடாரம்

17 January 2024
0
0
0

இரவு தந்த இருளில், மலைக்காடு வீசிய இதமான காற்றில், சாளரத்துக்கு அருகில் இருந்த மகிழ மரம் பரவவிட்ட சுகந்தத்தின் சூழ்நிலையில், மலை அரசியை சூழ்ந்து நெருக்கிய ஜோடாவின் கரங்கள் நெருக்கியதோடு நில்லாமல் இன்ப

20

20. கரிய புரவி! கழுத்தில் ஈட்டி!

18 January 2024
0
0
0

ஜோடாவின் பரம விரோதியான சந்தசிம்மனின் மூத்த மகன் காந்தாஜி தன் வாளை உருவிக்கொண்டு ராவ் ஜோடாவை அணுகுவதற்கு முன்பே ஜோடா பிருமச்சாரியளித்த தனது பெரிய வாளை உருவி எதிரியைத் தடுத்தான். அவனைச் சேர்ந்த பத்து பத

21

21. மலைச்சாரல் ஓசை

18 January 2024
0
0
0

கழுத்தில் பதித்திருந்த ஈட்டி சற்றும் அசையாமல் இருந்தாலும் அதில் ஒரு திடமும், ஈட்டியைப் பிடித்திருந்தவன் கையில் ஈவு இரக்கமற்ற ஓர் உறுதியும் இருந்ததைக் கவனித்த ராவ்ஜோடா, தான் சிறிது அசைந்தாலும் அந்த ஈட்

22

22. பரீட்சை

18 January 2024
0
0
0

பாபுஜியின் நூறு புரவிகள் ஏதோ பெரும் புயலைப் போல் மலைச்சரிவில் வந்ததாலும், அவை கண்ணிமைக்கும் நேரத்தில் தனது புரவியில் இருந்து தன்னை வீழ்த்திவிட்டதாலும் மலைப்பாறையில் புரண்ட ஜோடா வெகு துரிதமாகப் பாறையில

23

23. அடவியில் ஒரு காட்சி!

18 January 2024
0
0
0

நீண்டநாள் பிரிந்த மகனை ஆர்வத்துடன் தழுவும் தந்தை போல ஜோடாவை பல விநாடி தழுவி நின்ற பாபுஜி, கடைசியில் அவனுக்குத் தமது கைகளில் இருந்து விடுதலை அளித்தபோது அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் இரண்டு தே

24

24. காதல் பாபமா?

18 January 2024
0
0
0

அடர்ந்த அந்த அடவிக்குள் நாலைந்து பங்கஜங்களை நீர்மட்டத்துக்குமேல் காட்டிக்கொண்டிருந்த சிறு வாவியின் கரையில் மலை அரசியும் ஜோடாவும் உட்கார்ந்திருந்த நிலையைக் கண்டதும் இரண்டு பிருமச்சாரிகளும் தங்கள் பிரும

25

25. ஜோடாவின் துணிவு!

18 January 2024
0
0
0

பாபுஜியும், பிருமச்சாரியும் விழிப்பதைப் பார்த்த ஜோடா, “உங்கள் இருவருக்கும் வரவர சுயநம்பிக்கை போய்விட்டது” என்று ஓர் அம்பை வீசினான். அதுவரை தாங்கள் கண்ட காட்சியால் குழப்பத்தில் இருந்த இரு பிருமச்சாரி

26

26. சாவுகாரைப் பிடித்த சனியன்!

18 January 2024
0
0
0

மண்டோர் அரசின் முதலமைச்சராயிருந்து, சந்தசிம்மன் ஆக்கிரமிப்புக்குப் பின்பு அந்தப் பதவியில் இருந்து விலகி, அரண்மனையில் தமக்கு முன்னாள் மன்னனால் அளிக்கப்பட்டு இருந்த இடத்தையும் சந்தசிம்மனிடம் ஒப்புடைத்து

27

27. அடைத்த கதவு!

18 January 2024
0
0
0

காந்தோஜியின் குறுவாள் அழுந்தியதாலும், எச்சரிக்கையாலும், அவன் பின்னால் நின்றிருந்த மஞ்சாஜியின் உதடுகளில் துளிர்த்திருந்த குரூரப் புன்முறுவலாலும், சாவுகார் அஞ்சி நடுநடுங்கிவிடுவார் என்றோ, முன்னே நடந்துவ

28

28. வேடர் குடிசை மர்மம்!

18 January 2024
0
0
0

கோட்டைக் காவலன் சொன்ன செய்தியால் மலைத்த இருவரில் சாவுகாரே முதலில் திகைப்பை உதறிக்கொண்ட தன்றி சமயாசந்தர்ப்பம் தெரியாமல் கோப்தையும் காட்டினார். “காவலனே! வணிகர்களைத் தடை செய்யும் வழக்கம் மார்வாரில் கிடைய

29

29. உள்ளே ஒரு பெண் குரல்!

18 January 2024
0
0
0

அன்று பகல் முழுவதும் மார்வார் படைத்தலைவனான ஜகத்சிம்மனுக்கும் மண்டோர் கோட்டை காவலனுக்கும் உணவு முதலிய விஷயங்களில் ராஜோபசாரம் நடந்தாலும், அவ்விருவரும் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் எந்த வேடனும் நேரடியாக ப

30

30. ஜோடாவின் துன்மார்க்கம்!

19 January 2024
1
0
0

மூன்று குணங்களை மனிதன் தவிர்ப்பது நல்லது. தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் அக்கறை காட்டுவது, ஒன்று. ஒட்டுக் கேட்பது, இரண்டு. காலதாமதம் செய்வது, மூன்று. இந்த மூன்றில் ஏதாவது ஒரு குணமே யாரையும் இக்கட்ட

31

31. மணக்கோலம்!

19 January 2024
1
0
0

வீரனாகப் படைகளை இயக்கி, இழந்த அரசை மீட்பதில் சித்தத்தை செலுத்த வேண்டிய மார்வார் மன்னன், கேவலம், பெண் மோகம் கொண்டவனாகக் குடிசையில் மறைந்து கொண்டு காலத்தை ஓட்டுவதை நினைத்த ஜகத்சிம்மன் வேடவர் குடிசைக் கூ

32

32. சந்திர முகம்

19 January 2024
1
0
0

மண்டோர் படைத்தலைவனான ஜகத்சிம்மன் தனது மன்னனின் திருமணத்தையே நிறுத்த முயன்றதும், அதற்காகக் கூச்சலிட்டதும் பலருக்கு கோபத்தையும் சிலருக்கு வியப்பையும் உண்டாக்கினாலும், பிருமச்சாரி ஹர்பாசங்க்லாவோ, திருமணப

33

33. இழந்த சொர்க்கம்

19 January 2024
1
0
0

ராவ்ஜோடாவின் அணைப்பில் இருந்த அழகியின் சந்திர வதனத்தைக் கண்டதும் ஜகத்சிம்மன் திகைப்பும் அதிர்ச்சியும் ஒருங்கே அடைந்தான் என்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. அந்த முகம் மலை அரசியின் முகம்! முகத்

34

34. பதவி இறக்கம்!

19 January 2024
1
0
0

மலை அரசியின் மறுபிம்பம் போன்ற மின்னிடையாளுடன், ஜோடா கலந்து விளையாட இருந்த சமயத்தில் பிருமச்சாரி ஹர்பாசங்கலா அங்கு தோன்றியதும் கதவைத் தட்டியதும் பரமானந்தமாயிருந்தது, மண்டோர் படைத்தலைவன் ஜகத்சிம்மனுக்கு

35

35. மீண்டும் வந்தாள்!

19 January 2024
1
0
0

மண்டோரின் படைத்தலைவனாக இருந்த தன்னை திடீரென உபதளபதியாக்கிவிட்ட மன்னன் செயலைக் கண்டு மனம் துடித்த ஜகத்சிம்மன் அந்த அவமானத்தில் இருந்து எப்படி மீளலாம் என்று சிந்தித்தான். அது தவிர இந்த திடீர் பதவி இறக்க

36

36. மண்டோர் சமர்

19 January 2024
1
0
0

கேவலம், ஒரு பெண், புரவியில் இருந்து இறங்க, அவள் காலுக்குப் படியாக தனது இரு கைகளையும் கோத்து நீட்டிய பிருமச்சாரியிடம் பெரிதும் வெறுப்புக் கொண்டான், ஜகத்சிம்மன். பிருமச்சாரி உண்மையில் பெரும் போலி பிருமச

37

37. மணலில் தோய்ந்த ரத்தம்

19 January 2024
1
0
0

மண்டோர் போரில் மாவீரர்களான சந்தசிம்மன் புதல்வர்கள் அடைந்த தோல்விக்குக் காரணம் தாங்கள் போரிடும் எதிரிகளின் திறனை அவர்கள் தவறாக எடைபோட்டதுதான் என்று கர்னல் ஜேம்ஸ்டாட் தமது ராஜபுதன வரலாற்று நூலில் தெளிவா

38

38. துரோகி!

19 January 2024
1
0
0

மலை அரசி தனது வளையல் கரங்களை நீட்டி தன்னைக் கைது செய்யும்படிக் கேட்டுக்கொண்டதும் காந்தோஜி தனது தம்பியின் மரணத்தையும் மறந்து வியப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே அடைந்தான். அப்பொழுதும் மலை அரசி வேட்டுவர

39

39. வேகம்! தாகம்!

19 January 2024
1
0
0

மேவாரின் தலைநகரான சித்தூரில் இருந்து தப்பி ஓடிவந்து லூனி ஆற்றின் உப்பு நீரில் தந்தையின் மரணத்துக்கு நீராடிய அதே துறையில், கிட்டத்தட்ட அதே இடத்தில் தங்கள் வம்ச துர்ப்பாக்கியத்துக்கும் அவப் பெயருக்கும்

40

40. அரசி ஆன, மலை அரசி!

19 January 2024
1
0
0

மலை அடிவாரப் புதரில் மலை அரசி மல்லாந்து கிடந்த கோலம் மண்டோர் மன்னனின் வெறியைக் கிளறிவிடவே, அவன் உலகத்தையே மறந்து, அதுவரை நேர்ந்த நிகழ்ச்சிகளால் மனம் ஏற்படுத்திய கட்டுப்பாடுகளையும் தடைகளையும் உதறி அவள்

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்