shabd-logo

3. துணைவன்!

15 January 2024

0 பார்த்தது 0

விரிந்து படர்ந்து எரிந்த விளக்கின் சுடரை விந்தைக் கண்களுடன் நோக்கிய ராவ்ஜோடா. அதில் விரிந்த கதையைக் கண்டதும் மெய்சிலிர்த்துப் போனான்.
முதலில் அந்தச் சுடரில் ஏதும் தெரியாததால் புரியாமல் விழித்த மார்வார் இளவரசனை நோக்கிய ஜோகி, “விளக்கை நன்றாக உற்றுப்பார். கவனத்தை வேறு எங்கும் திருப்பாதே” என்று நிதானமாகக் கூறினார். “மலைஅரசி! பந்தத்தை அணைத்துவிடு” என்று அந்தப் பெண்ணுக்கும் உத்தரவிட்டார். அடுத்த விநாடி அவள் பந்தத்தை பக்கத்துப் பாறையில் தீய்த்து அணைத்துவிடவே, தீபத்தின் ஜோதி ஒன்றே குகையின் உட்புறத்தை ஆட்கொண்டது. “மார்வார் ராஜபுத்திரனே! இப்பொழுது பார் ஜோதியை” என்றார் ஜோகி சாந்தமான குரலில்.
ராவ்ஜோடா அகல்விளக்கின் ஆடாமல் நின்ற சுடரை நோக்கினான் அதன் உள்ளே வேகத்தில் விர்ந்தன காட்சிகள். “அதோ வருகிறார்கள்! அதோ வருகிறார்கள்!” என்று மெதுவாகக் கூறினான், மார்வார் இளவரசன்.
“எத்தனை பேர்?” அந்தப் பெண் கேட்டாள்.
“ஆயிரம் பேர் இருக்கும்” என்றான், ஜோடா.
“அத்தனை பேரும் சிதோதயர்கள். அவர்களுக்குத் தலைமை வகித்து வருகிறான் அவன். அவன்தான் சந்தசிம்மன். இந்த இடத்தை நோக்கித்தான் வருகிறான். இல்லை. திரும்பி விட்டான். இல்லை, திரும்பவில்லை. மீண்டும் இந்த வழி வருகிறான். என்னைக் கொல்ல வருகிறான். சித்தூரிலிருந்து நான் தப்பியது தெரிந்துவிட்டது அவர்களுக்கு. மார்வார் வம்சம் என்னுடன் ஒழிந்துவிட்டது, ஒழிந்தேவிட்டது” என்று பதட்டத்துடன் கூவினான்.
கூவினான். “ஒழிந்துவிட்டது, ஒழிந்துவிட்டது” என்ற அவன் குரலை குகையின் பாறைச் சுவர்கள் பயங்கரமாக எதிரொலி செய்தன. ராவ்ஜோடாவின் மூளை பெரும் அதிர்ச்சியுற்றதால், அவன் விளக்கின் முன்பு தலையை சாய்த்துக்கொண்டு மவுனமாகிவிட்டான்.
“மறுபடியும் பார்! அதைரியம் மனிதனின் முதல் எதிரி” என்றார் ஜோகி.
மீண்டும் சுடரை நோக்கிய ராவ்ஜோடா ஆசுவாசப் பெருமூச்சு விட்டான். “சந்தசிம்மன் திரும்பிவிட்டான். நல்ல வேளை தப்பினேன். ஐயோ அதோ, இன்னொரு புரவி வீரர் பட்டம் வருகிறதே, அது யார்? இந்த இடம் நோக்கி வருகிறது. அதன் தலைவன் இந்த மலைப்பக்கம் கையைக் காட்டுகிறான். யார் அவன்? அவன் என் உபதளபதி. நேராக இங்கு வா. வனப்பிரஸ்த ஜோகி மகான் முன்பு நான் இருக்கிறேன்” என்று இரைந்து கூறினான் மார்வார் ராஜாபுத்திரன்.
அந்த சமயத்தில் பந்தத்தைக் கொளுத்தினாள் அந்தப் பெண். “மலை அரசி! இவனுக்கு உணவு ஏதாவது கொடு, மிகவும் களைத்திருக்கிறான்” என்றார் ஜோகி, அனுதாபத்துடன்.
“இவளை ஏதோ பெயர் சொல்லி அழைத்தீர்களே” என்றான், ஜோடா.
“மலை அரசி” என்றார், ஜோகி.
“புதுப் பெயராக இருக்கிறதே.”
“தமிழ்ப் பெயர்.”
“தாங்கள்-?”
“ஜோகி சுற்றாத இடம் இல்லை, அறியாத மொழி இல்லை.” இதைச் சொன்ன ஜோகி, “சரி, முதலில் உணவு கொள்” என்றார்.
“உணவு தேவையில்லை” என்றான், மார்வார் ராஜபுத்திரன்.
“வேறு என்ன வேண்டும்?”
“தங்கள் அருள்.”
“ஆண்டவன் அருளைக் கேள். உனக்கு இப்பொழுது நிரம்பவும் தேவை” என்றார் ஜோகி.
அதே சமயத்தில் புரவியொன்று வரும் சத்தம் கேட்டது.
ஜோகி பார்த்தார், மார்வார் இளவரசனை. “உனக்குத் துணை வந்துவிட்டது” என்றார்.
அந்தத் துணை உடனடியாக உள்ளே வரவில்லை. “வனப்பிரஸ்த ஜோகி” என்று வெளியில் இருந்து வந்தது, இடி போன்ற குரல்.
“வரலாம்” என்றார் ஜோகி.
அந்த உத்தரவை அடுத்து உள்ளே பெரும் காலடிச்சத்தம், ஏதோ பாறையை இரும்பு நசுக்குவது போன்ற ஒலி கேட்டது. அப்படி வந்த ராட்சஸனை வியப்புடன் நேராக நோக்கினான், மார்வார் இளவரசன்.
“அப்படியானால், நீ தப்பிவிட்டாய்?” என்று அந்த ராட்சஸன் ராவ்ஜோபாவை நோக்கி வினாவினான். மார்வார் ராஜபுத்திரன் தப்பியது பெரும் பிழை எனக் குறிப்பிடுவது போல் அமைந்திருந்தது, அந்தப் புதுமனிதன் குரல்.
ராவ்ஜோடாவின் முகத்தில் லேசாகச் சினத்தின் சாயை படர்ந்தது. “நான் தப்பியதில் தங்களுக்கு மகிழ்ச்சியில்லை போலிருக்கிறது?” என்று வினாவினான், ஜோடா அந்த ராட்சஸனை நோக்கி.
அந்த ராட்சஸன் வனப்பிரஸ்த ஜோகியை நோக்கினான். “ஜோகி! உயிருக்குப் பயந்து ஓடுபவனைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான் அடக்கத்துடன். கேட்டதன்றி, ஜோகிக்கு வணக்கமும் செய்துவிட்டுத் தரையில் உட்கார்ந்தான், ஜோடாவுக்கு அருகில்.
அப்படி உட்கார்ந்தபோது அந்த ராட்சஸன் தொடையொன்று ஜோடாவின் தொடைமீது அழுந்தி, ஏதோ கனமான பாறை ஒன்று தன் தொடையை நசுக்குவது போன்ற இம்சையைக் கொடுக்கவே மார்வார் ராஜபுத்திரன் முகத்தை லேசாகச் களித்தான்.
அதை கடைக்கண்ணால் கவனித்துவிட்ட ராட்சஸன் நகைத்தான்
“இவன் உள்ளத்தைப் போலத்தான் இருக்கிறது உடலும். உறுதியற்றது. சிறு கஷ்டத்தையும் தாங்க மறுக்கிறது” என்றான் ராட்சஸன் ஜோகியை நோக்கி.
அதுவரையில் அந்த ராட்சஸனின் அலட்சியத்தையும் இகழ்ச்சிச் சொற்களையும் தாங்கிக்கொண்டு இருந்த ராவ் ஜோடா, “இது வனப்பிரஸ்த ஜோகியின் சந்நிதானம். பூசல்களுக்கு இது இடம் இல்லை” என்றான்.
“வேறு இடம் இருக்கிறது வெளியில்” என்று சுட்டிக் காட்டினான், அந்த ராட்சஸன்.
அதுவரை எதும் பேசாமல் மவுனமாயிருந்த ஜோகி, குகையின் பாறையில் நின்ற பெண்ணை நோக்கி, “குழந்தாய்! இதுவரை இந்த மலையில் அமைதி நிலவியிருந்தது. பறவைகளின் சரணாலயமாயிருந்தது” என்றார். சிறிது பெருமூச்சும் விட்டார்.
சுகதுக்கங்களை சமமாகப் பாவிப்பவரான வனப்பிரஸ்த ஜோகி துன்பப் பெருமூச்சு விட்டதும் அந்தப் பெண் மட்டுமின்றி குகையில் இருந்த அனைவரும் பேசும் சக்தியை இழந்தனர். சில விநாடிக்குப் பிறகு ராவ்ஜோடா மட்டும் கேட்டான், “ஜோகி! இப்பொழுது என்ன மாற்றம் ஏற்பட்டுவிட்டது?” என்று.
ஜோகி மிக மெதுவான குரலில், “இனி இது பறவைகளின் சரணாலயம் அல்ல. இனிமேல் அவற்றின் கிலகிலா சத்தத்தையும், இனிய கூவல்களையும் நாம் கேட்க முடியாது” என்றார்.
அதுவரை அடங்கிக் கிடந்த ராட்சஸன் “ஏன் ஜோகி? ஏன்?” என்று வினவினான், பணிவிலும் கடுமையுடன் ஒலித்த குரலில்.
“இனி இது ஜோடா கிர்” (போர் மலை) என்றார் ஜோகி. “மனிதன் காலடி எடுத்து வைக்கும் எந்த இடமும் பாழாகிறது. சண்டைக்கு இடமாகிறது” என்றும் கூறினார்.
மார்வார் இளவரசன் மனம் நொந்தான். “ஜோகி! நான் வந்ததைச் சொல்கிறீர்களா? என் பெயர் ஜோடா! என்பதற்காக, அந்தப் பெயரைக் கொண்டு இந்த மலைக்கும் அவப் பெயரை அளிக்கிறீர்களா?” என்று கேட்டான், துன்பம் துளிர்ந்த குரலில்.
எலும்புக்கூடாகக் கூனிக் குறுகியிருந்த ஜோகி சற்று நிமிரிந்து பின்னால் இருந்த பாறையில் சாய்ந்தார். “இல்லை ஜோடா, இல்லை. நீ வருமுன்பே இதெல்லாம் தீர்மானமாய் இருக்கிறது. நான் உன்னையும் நோகவில்லை, ஹர்பா சங்க்லாவையும் நோகவில்லை. நம்மையும் மீறிய சக்தி நம்மை ஆட்டுகிறது” என்றார், ஏதோ கனவில் பேசுவதைப் போல், அவர் குரல் தீனமாயிருந்தாலும், அதன் பலவீனத்திலும் ஓர் ஒளி ஊடுருவிச் சென்றதை மற்றவர்கள் உணர்ந்தார்கள்.
அந்த உணர்ச்சியுடன் ராவ்ஜோடாவின் உடலில் வேறொரு பயங்கர உணர்ச்சியும் ஊடுருவிச் சென்றது. ஹர்பா சங்க்லா என்ற பெயரைக் கேட்டதும் மயிர்க்கூச்செறிந்தது மார்வார் ராஜ்புத்திரனுக்கு. ராஜஸ்தானத்திலேயே இணையற்ற வீரன் என்று பெயர் பெற்றவரும், நைஷ்டிக பிரம்மச்சாரியும், நல்ல காரியம் எதற்கும் யாரும் வேண்டாமலே கைகொடுப் பவருமான ஹர்பாசங்க்லாதான் தன் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ராட்சஸன் என்பதை உணர்ந்ததால் சற்றே சங்கடத்தாலும் அச்சத்தாலும் அசைந்த ராவ்ஜோடாவை நோக்கிய மலை அரசியின் இதழ்களில் புன்முறுவல் அரும்பியது.
அவள் சொன்னாள், “ஆம். மார்வார் ராஜபுத்திரனே! இவர்தான் ஹர்பா சங்க்லா. இவரைத்தான் உனக்குத் துணையாக நியமித்திருக்கிறார் ஜோகி” என்று.
அவளைத் திரும்பிப் பார்த்தார் பிரம்மச்சாரி. “இவனுக்கு நான் துணையா?” என்று வியப்பு குரலில் மண்ட வினவினார்.
“சற்று முன்பு ஜோகியின் வாயிலிருந்து வந்த வார்த்தை அதுதான்” என்றாள் மலை அரசி வரண்ட குரலில்.
“இந்த பாவிக்கா நான் உதவ வேண்டும்?” என்று கேட்டார் பிரம்மச்சாரி.
“பாவம் இவன் செய்யவில்லை. தந்தை செய்தது. அந்த வினை இவன் தலையில் இருக்கிறது” என்றார் ஜோகி. அத்துடன் சொன்னார். “பாவம் யார்தான் செய்யவில்லை? நீ கூட இப்பொழுது மார்வார் இளவரசனை சண்டைக்கு இழுத்தாய்- பாகுர்ச்சிரா (பட்சிகள் சரணாலயம்) ஜோடகிர் (போர் மலை) ஆகிவிட்டது. அதற்கு நீயும் ஒரு காரணம் ஹர்பா சங்க்லா! சரண் அடைந்தவர்களை நீ கைவிட்டதில்லை. இவனையும் கைவிடதே. இவனால் மார்வார் வம்சம் தழைக்கப் போகிறது” என்றார் ஜோகி.
ஹர்பா சங்க்லா ஜோகிக்குத் தலை வணங்கினான். “அப்படியானால் இப்பொழுது இவன் தனது தலை நகரத்துக்குப் போகட்டும். சுத்த விரதத்தன்று என் இருப்பிடம் வரட்டும்” என்றான், பிரம்மச்சாரியான ஹர்பா சங்க்லா...
“தலைநகரத்துக்கா?” என்று கேட்ட அந்தப் பெண் நகைத்தாள். ஜோகியும் புன்னகை பூத்தார்.
இருவர் நகைப்பிலும் ஏதோ மர்மம் இருந்ததைப் புரிந்து கொண்டான் ராவ்ஜோடா. அந்த விபரீத மர்மத்தை மலை அரசியே விளக்கனாள்.
“நீ தலைநகரத்துக்குள் புகுந்த நான்காவது நாள் அதை விட்டு வெளியேற நேரிடும்” என்றாள் மலை அரசி.

சாண்டில்யன் மூலம் மேலும் புத்தகங்கள்

40
கட்டுரைகள்
மலை அரசி
0.0
மாலை அரசி தமிழ் மொழியில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான வரலாற்று நாவல். பிரபல தமிழ் எழுத்தாளர் சாண்டில்யன் இந்த மனதை மயக்கும் புத்தகத்தை எழுதியுள்ளார். சாண்டில்யன் வரலாற்றுப் புனைகதைகளுக்காகப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார், மேலும் அவர் தனது வரலாற்று, காதல் மற்றும் சாகச நாவல்களுக்காக நன்கு அறியப்பட்டவர், இது பெரும்பாலும் சோழ மற்றும் பாண்டிய பேரரசுகளின் காலங்களில் அமைக்கப்பட்டது.
1

1. சுடர்க்கொடி

15 January 2024
0
0
0

சரித்திரம், பூமி, வாழ்க்கையின் கர்ம பலன்கள் ஆகிய சகலத்திலும் ஒரு சுழற்சியும் தொடர்ச்சியும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுவதில் எத்தனை உண்மையிருக்கிறதென்பதை, சுற்றிலும் தன்னை எரித்துக்கொண்டிருந்த மணற்பரப்

2

2. விளக்கில் விரிந்த கதை

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் மலைக்குகை வாயிலில், மரங்கள் அடர்த்தியாயிருந்ததால் இருள் கடுமையாக இருந்த அந்தப் பிராந்தியத்தில், பந்தத்தை கையில் ஏந்தி அதன் சுடர் முகத்தில் வீச சுடர்க்கொடியென்ற காரணப் பெயருக்கு முற

3

3. துணைவன்!

15 January 2024
0
0
0

விரிந்து படர்ந்து எரிந்த விளக்கின் சுடரை விந்தைக் கண்களுடன் நோக்கிய ராவ்ஜோடா. அதில் விரிந்த கதையைக் கண்டதும் மெய்சிலிர்த்துப் போனான். முதலில் அந்தச் சுடரில் ஏதும் தெரியாததால் புரியாமல் விழித்த மார்வ

4

4. இரு விந்தைகள்

15 January 2024
0
0
0

மலை அரசியின் மதுர இதழ்களில் இருந்து உதிர்ந்த அந்தக் கொடுமையான சொற்களைக் கேட்டதும், வியப்பும் அச்சமும் கலந்த உணர்ச்சிகள் ராவ்ஜோடாவின் இதயத்தை மளடுருவிச் சென்றன. அப்படி அவன் நடுங்கியதை பக்கத்தில் உட்கார

5

5. நான் வருவேன்

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் குகையைவிட்டு வெளியேறிய மலை அரசி, வேகமாக மலையின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடந்து சென்றதும், விளைவித்த இரண்டு விந்தைகளும் மகாவீரனான மார்வார் இளவரசனை திகில் கொள்ளச் செய்தன என்றால்,

6

6. பெண் துணை!

15 January 2024
0
0
0

பெண்ணின் லாவண்யத்தால் ஆண்மகன் அறிவு அழிந்துவிடுகிறது. கவர்ச்சியான கன்னியின் முன்பாக எந்த ஆண்மகனும் சுயபுத்தியை இழந்துவிடுகிறான். இந்தப் பழைய நிகழ்ச்சிகளுக்கு அத்தாட்சியாக நின்றான் ராவ்ஜோடா. “உனது வீ

7

7. சாகுந்தலம்

16 January 2024
1
0
0

பந்தத்தையும் அணைத்துவிட்டு இருண்ட குகைக்குள் தன்னை வா வா என்று அழைத்த அந்த பருவப் பாவையின் துணிவை நினைத்து ஜோடா திகிலுக்கு இலக்காகி நின்ற நேரத்தில், மலைஅரசியே குகை வாயிலைவிட்டு அவனை அணுகி, அவன் கையைப்

8

8. காட்டு மலர்

16 January 2024
1
0
0

பாவின் வாலிப முரட்டு முகம் அவள் வழவழத்த கழுத்தில் திடீரென அழுந்திப் புரண்டபோது, மலை அரசியின் இதயமும் அந்த வாலிபன் உள்ளத்தைப்போலவே உணர்ச்சி அலைகளில் உருண்டது. அத்தனை உணர்ச்சி எழுச்சியிலும் அரசகுமாரன்

9

9. நிலையற்ற அரசு

16 January 2024
1
0
0

மலை அரசியை “காட்டு மலர்” என்று குறிப்பிட்டதோடு தனது பேச்சை ஜோடா நிறுத்திக்கொண்டு இருந்தால் ஜகத்சிம்மனின் கோபம் தலைக்கு ஏறியிருக்காது. “இவள் மார்வார் ராணி” என்றும் சொல்லவே ஜகத்சிம்மனுக்கு கோபத்துடன் தி

10

10. பறந்த கிளி! தொடர்ந்த துன்பம்!

16 January 2024
1
0
0

மலை அரசியின் சொற்களோ உத்தரவுகளோ மந்திராலோசனை சபையில் இருந்தவர்களுக்குக் கட்டோடு பிடிக்காதிருந்தாலும் அவள் சொன்னதற்கு எல்லாம் ஜோடா தலையை ஆட்டியதால், அவள் கட்டளைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் எல்லோருமே முன

11

11. மண்டோர் ரணகளம்

16 January 2024
1
0
0

மண்டோரின் பெரும் கதவுகள் சாத்தப்பட்டதாலும் போர்முரசு பலமாக ஒலித்ததாலும் வருவது என்னவென்பதை அறிந்த புது மகாராஜாவான ராவ்ஜோடா, புரவியின் கடிவாளத்தை பிடித்த நிலையிலேயே திகைத்து அமர்ந்துவிட்ட சமயத்தில் மலை

12

12. குகையில்...!

16 January 2024
1
0
0

பெற்றோர் புரிந்த பாவம் சிலரைப் பிடித்து வாட்டுகிறது. உற்றார் செய்த பாவமும் சிலரை விடுவதில்லை. பெற்றோரும் உற்றாரும் விளைவித்த பாவங்களுக்கு எப்பாவமும் அறியாத ஜோடா இலக்கானான். பேரனான மோகுல சிம்மனை சீராட்

13

13. அவள் கனவு!

16 January 2024
1
0
0

மலை அரசியைப் பார்த்து மார்வார் இளவரசனாயிருந்து அரசனாகி, நாட்டையும் பறிகொடுத்த ராவ்ஜோடா, அத்தகைய ஒரு கேள்வியைக் கேட்டான் என்றால், அதற்கு மூலகாரணம் அவளுடைய விபரீதமான பதில்தான். “நாம் தனித்திருப்பது உனக்

14

14. தண்டனை!

17 January 2024
1
0
0

மலை அரசியை தரையில் கிடத்திவிட்டு குகையின் வாயிலுக்கு வந்த ராவ்ஜோடாவின் செவிகளில் ஜகத்சிம்மனும் மற்ற வீரர்களும் ஏறிவந்த புரவியின் குளம்படி ஒலிகள் கூடக் கேட்கவில்லை. குகைக்கு உள்ளே மலை அரசியின் அருகாமைய

15

15. ஹர்பா சங்க்லா!

17 January 2024
0
0
0

மலை அரசியால் மன்னிக்கப்பட்டு ஜோடாகிருக்குச் செல்லும்படி பணிக்கப்பட்ட ஜகத்சிம்மன் உடனடியாகத் திரும்பவில்லை தனது புரவியை நோக்கி நின்ற இடத்திலேயே அசைவற்று நின்றான் பல விநாடிகள். பிறகு சட்டென்று வேகமாக நட

16

16. அந்தி வானம்

17 January 2024
0
0
0

அதிர்ஷ்டம் என்பது ஒரு மனிதனைப் பிடித்துக்கொண்டால் அவனை அது லேசில் விடுவது இல்லை. கூடியவரையில் விடாமல் தொடர்கிறது. துரதிர்ஷ்டக்காரனுக்கு புத்தி பேதலிக்கிறது. காலம் கைகொடுப்பது இல்லை. எதையும் காலங்கடந்த

17

17. வாளின் கதை!

17 January 2024
0
0
0

ஜோடாவைப்பற்றி விசாரித்ததும் மலை அரசியின் மதிமுகம் அந்திவானம் போல் சிவந்துவிட்டதைக் கண்டதுமே நைஷ்டிக பிருமச்சாரியும், எந்தப் பெண்ணையும் கண்ணெடுத்துப் பார்க்காதவரும், பிருமச்சாரி விரதம் கெடக்கூடாது என்ப

18

18. தேடி வந்த அதிர்ஷ்டம்!

17 January 2024
0
0
0

மார்வார் மன்னனையும் மலைக்க வைத்த அந்த விசித்திரக் கதையைச் சொல்லுமுன்பு பிருமச்சாரி அந்தச் சிறு வீட்டின் முற்றத்தை வளைத்திருந்த சுற்றுக் கட்டடத்தின்மீது உட்கார்ந்து கீழ் இருந்த முற்றத்தில் தமது கால்களை

19

19. பாலைவனக் கூடாரம்

17 January 2024
0
0
0

இரவு தந்த இருளில், மலைக்காடு வீசிய இதமான காற்றில், சாளரத்துக்கு அருகில் இருந்த மகிழ மரம் பரவவிட்ட சுகந்தத்தின் சூழ்நிலையில், மலை அரசியை சூழ்ந்து நெருக்கிய ஜோடாவின் கரங்கள் நெருக்கியதோடு நில்லாமல் இன்ப

20

20. கரிய புரவி! கழுத்தில் ஈட்டி!

18 January 2024
0
0
0

ஜோடாவின் பரம விரோதியான சந்தசிம்மனின் மூத்த மகன் காந்தாஜி தன் வாளை உருவிக்கொண்டு ராவ் ஜோடாவை அணுகுவதற்கு முன்பே ஜோடா பிருமச்சாரியளித்த தனது பெரிய வாளை உருவி எதிரியைத் தடுத்தான். அவனைச் சேர்ந்த பத்து பத

21

21. மலைச்சாரல் ஓசை

18 January 2024
0
0
0

கழுத்தில் பதித்திருந்த ஈட்டி சற்றும் அசையாமல் இருந்தாலும் அதில் ஒரு திடமும், ஈட்டியைப் பிடித்திருந்தவன் கையில் ஈவு இரக்கமற்ற ஓர் உறுதியும் இருந்ததைக் கவனித்த ராவ்ஜோடா, தான் சிறிது அசைந்தாலும் அந்த ஈட்

22

22. பரீட்சை

18 January 2024
0
0
0

பாபுஜியின் நூறு புரவிகள் ஏதோ பெரும் புயலைப் போல் மலைச்சரிவில் வந்ததாலும், அவை கண்ணிமைக்கும் நேரத்தில் தனது புரவியில் இருந்து தன்னை வீழ்த்திவிட்டதாலும் மலைப்பாறையில் புரண்ட ஜோடா வெகு துரிதமாகப் பாறையில

23

23. அடவியில் ஒரு காட்சி!

18 January 2024
0
0
0

நீண்டநாள் பிரிந்த மகனை ஆர்வத்துடன் தழுவும் தந்தை போல ஜோடாவை பல விநாடி தழுவி நின்ற பாபுஜி, கடைசியில் அவனுக்குத் தமது கைகளில் இருந்து விடுதலை அளித்தபோது அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் இரண்டு தே

24

24. காதல் பாபமா?

18 January 2024
0
0
0

அடர்ந்த அந்த அடவிக்குள் நாலைந்து பங்கஜங்களை நீர்மட்டத்துக்குமேல் காட்டிக்கொண்டிருந்த சிறு வாவியின் கரையில் மலை அரசியும் ஜோடாவும் உட்கார்ந்திருந்த நிலையைக் கண்டதும் இரண்டு பிருமச்சாரிகளும் தங்கள் பிரும

25

25. ஜோடாவின் துணிவு!

18 January 2024
0
0
0

பாபுஜியும், பிருமச்சாரியும் விழிப்பதைப் பார்த்த ஜோடா, “உங்கள் இருவருக்கும் வரவர சுயநம்பிக்கை போய்விட்டது” என்று ஓர் அம்பை வீசினான். அதுவரை தாங்கள் கண்ட காட்சியால் குழப்பத்தில் இருந்த இரு பிருமச்சாரி

26

26. சாவுகாரைப் பிடித்த சனியன்!

18 January 2024
0
0
0

மண்டோர் அரசின் முதலமைச்சராயிருந்து, சந்தசிம்மன் ஆக்கிரமிப்புக்குப் பின்பு அந்தப் பதவியில் இருந்து விலகி, அரண்மனையில் தமக்கு முன்னாள் மன்னனால் அளிக்கப்பட்டு இருந்த இடத்தையும் சந்தசிம்மனிடம் ஒப்புடைத்து

27

27. அடைத்த கதவு!

18 January 2024
0
0
0

காந்தோஜியின் குறுவாள் அழுந்தியதாலும், எச்சரிக்கையாலும், அவன் பின்னால் நின்றிருந்த மஞ்சாஜியின் உதடுகளில் துளிர்த்திருந்த குரூரப் புன்முறுவலாலும், சாவுகார் அஞ்சி நடுநடுங்கிவிடுவார் என்றோ, முன்னே நடந்துவ

28

28. வேடர் குடிசை மர்மம்!

18 January 2024
0
0
0

கோட்டைக் காவலன் சொன்ன செய்தியால் மலைத்த இருவரில் சாவுகாரே முதலில் திகைப்பை உதறிக்கொண்ட தன்றி சமயாசந்தர்ப்பம் தெரியாமல் கோப்தையும் காட்டினார். “காவலனே! வணிகர்களைத் தடை செய்யும் வழக்கம் மார்வாரில் கிடைய

29

29. உள்ளே ஒரு பெண் குரல்!

18 January 2024
0
0
0

அன்று பகல் முழுவதும் மார்வார் படைத்தலைவனான ஜகத்சிம்மனுக்கும் மண்டோர் கோட்டை காவலனுக்கும் உணவு முதலிய விஷயங்களில் ராஜோபசாரம் நடந்தாலும், அவ்விருவரும் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் எந்த வேடனும் நேரடியாக ப

30

30. ஜோடாவின் துன்மார்க்கம்!

19 January 2024
1
0
0

மூன்று குணங்களை மனிதன் தவிர்ப்பது நல்லது. தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் அக்கறை காட்டுவது, ஒன்று. ஒட்டுக் கேட்பது, இரண்டு. காலதாமதம் செய்வது, மூன்று. இந்த மூன்றில் ஏதாவது ஒரு குணமே யாரையும் இக்கட்ட

31

31. மணக்கோலம்!

19 January 2024
1
0
0

வீரனாகப் படைகளை இயக்கி, இழந்த அரசை மீட்பதில் சித்தத்தை செலுத்த வேண்டிய மார்வார் மன்னன், கேவலம், பெண் மோகம் கொண்டவனாகக் குடிசையில் மறைந்து கொண்டு காலத்தை ஓட்டுவதை நினைத்த ஜகத்சிம்மன் வேடவர் குடிசைக் கூ

32

32. சந்திர முகம்

19 January 2024
1
0
0

மண்டோர் படைத்தலைவனான ஜகத்சிம்மன் தனது மன்னனின் திருமணத்தையே நிறுத்த முயன்றதும், அதற்காகக் கூச்சலிட்டதும் பலருக்கு கோபத்தையும் சிலருக்கு வியப்பையும் உண்டாக்கினாலும், பிருமச்சாரி ஹர்பாசங்க்லாவோ, திருமணப

33

33. இழந்த சொர்க்கம்

19 January 2024
1
0
0

ராவ்ஜோடாவின் அணைப்பில் இருந்த அழகியின் சந்திர வதனத்தைக் கண்டதும் ஜகத்சிம்மன் திகைப்பும் அதிர்ச்சியும் ஒருங்கே அடைந்தான் என்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. அந்த முகம் மலை அரசியின் முகம்! முகத்

34

34. பதவி இறக்கம்!

19 January 2024
1
0
0

மலை அரசியின் மறுபிம்பம் போன்ற மின்னிடையாளுடன், ஜோடா கலந்து விளையாட இருந்த சமயத்தில் பிருமச்சாரி ஹர்பாசங்கலா அங்கு தோன்றியதும் கதவைத் தட்டியதும் பரமானந்தமாயிருந்தது, மண்டோர் படைத்தலைவன் ஜகத்சிம்மனுக்கு

35

35. மீண்டும் வந்தாள்!

19 January 2024
1
0
0

மண்டோரின் படைத்தலைவனாக இருந்த தன்னை திடீரென உபதளபதியாக்கிவிட்ட மன்னன் செயலைக் கண்டு மனம் துடித்த ஜகத்சிம்மன் அந்த அவமானத்தில் இருந்து எப்படி மீளலாம் என்று சிந்தித்தான். அது தவிர இந்த திடீர் பதவி இறக்க

36

36. மண்டோர் சமர்

19 January 2024
1
0
0

கேவலம், ஒரு பெண், புரவியில் இருந்து இறங்க, அவள் காலுக்குப் படியாக தனது இரு கைகளையும் கோத்து நீட்டிய பிருமச்சாரியிடம் பெரிதும் வெறுப்புக் கொண்டான், ஜகத்சிம்மன். பிருமச்சாரி உண்மையில் பெரும் போலி பிருமச

37

37. மணலில் தோய்ந்த ரத்தம்

19 January 2024
1
0
0

மண்டோர் போரில் மாவீரர்களான சந்தசிம்மன் புதல்வர்கள் அடைந்த தோல்விக்குக் காரணம் தாங்கள் போரிடும் எதிரிகளின் திறனை அவர்கள் தவறாக எடைபோட்டதுதான் என்று கர்னல் ஜேம்ஸ்டாட் தமது ராஜபுதன வரலாற்று நூலில் தெளிவா

38

38. துரோகி!

19 January 2024
1
0
0

மலை அரசி தனது வளையல் கரங்களை நீட்டி தன்னைக் கைது செய்யும்படிக் கேட்டுக்கொண்டதும் காந்தோஜி தனது தம்பியின் மரணத்தையும் மறந்து வியப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே அடைந்தான். அப்பொழுதும் மலை அரசி வேட்டுவர

39

39. வேகம்! தாகம்!

19 January 2024
1
0
0

மேவாரின் தலைநகரான சித்தூரில் இருந்து தப்பி ஓடிவந்து லூனி ஆற்றின் உப்பு நீரில் தந்தையின் மரணத்துக்கு நீராடிய அதே துறையில், கிட்டத்தட்ட அதே இடத்தில் தங்கள் வம்ச துர்ப்பாக்கியத்துக்கும் அவப் பெயருக்கும்

40

40. அரசி ஆன, மலை அரசி!

19 January 2024
1
0
0

மலை அடிவாரப் புதரில் மலை அரசி மல்லாந்து கிடந்த கோலம் மண்டோர் மன்னனின் வெறியைக் கிளறிவிடவே, அவன் உலகத்தையே மறந்து, அதுவரை நேர்ந்த நிகழ்ச்சிகளால் மனம் ஏற்படுத்திய கட்டுப்பாடுகளையும் தடைகளையும் உதறி அவள்

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்