shabd-logo

22. பரீட்சை

18 January 2024

0 பார்த்தது 0

பாபுஜியின் நூறு புரவிகள் ஏதோ பெரும் புயலைப் போல் மலைச்சரிவில் வந்ததாலும், அவை கண்ணிமைக்கும் நேரத்தில் தனது புரவியில் இருந்து தன்னை வீழ்த்திவிட்டதாலும் மலைப்பாறையில் புரண்ட ஜோடா வெகு துரிதமாகப் பாறையில் உருண்டான். தன்னைத் துவைக்க இருந்த நான்கு குளம்புகளுக்குமேல் கைக்கு அகப்பட்ட இரு கால்களைப் பிடித்து வளைத்துத் திருகித் தள்ளிவிட்டு எழுந்து கும்பலாகவும் ஏதோ ராணுவத்திற்காகப் பழக்கப்பட்டவை போல் வரிசை தவறாமலும் வந்த புரவித் தொடரில் இருந்த ஒரு புரவியின்மேல் தாவி உட்கார்ந்தும் விட்டான். அதன் வயிற்றைத் தனது இரு கால்களாலும் பக்கவாட்டில் உதைத்துக் கழுத்தை வளைத்துத் திருப்பி தன்னுடைய புரவிக்கு அருகில் வந்து அதன்மீது தாவி அதன் கடிவாளத்தைப் பிடித்து அதை சற்று நகர்த்தியும் நிறுத்திக் கொண்டான். அந்தச் சமயத்தில் பாபுஜி “ஹோ” என்று ஏதோ சத்தம் கொடுக்கவே அந்த ராட்சதப் புரவிகள் மந்திரத்தால் இயக்கப்பட்டவைபோல் சட்டென்று நின்றன. பாபுஜியைச் சுற்றிக்கொண்டு, அவர் கால்கள் மீது முகங்களால் உராய்ந்தன.
பாபுஜி அப்படி வந்த சில புரவிகளைத் தடவிக் கொடுத்தார் தமது கைகளால். அந்தப் புரவிகள் சிலவற்றை ஈட்டியால் முதுகில் தட்டினார். கடைசியாக ஈட்டியை உயரத் தூக்கி “சலோ” என்று கூவினார். வந்த புரவிகள் வந்த முறையில் வரிசையாக, ஆனால் அடக்கமாக மலைச்சரிவில் ஏறிச் சென்றன. ஓரிரண்டு மட்டும் தலைகளைத் திருப்பி பாபுஜி வருகிறாரா இல்லையா என்று தங்கள் பெரிய கண்களை விழித்துக் கேள்வி கேட்டன.
பாபுஜி அந்த குதிரைகளையே வெறிபிடித்தவர் போல் பார்த்துக் கொண்டிருந்தார். நிலத்தில் உருண்டு மாள இருந்து மீண்டும் எழுந்த ஜோடாவைப்பற்றி அவர் எந்த அக்கறையும் காட்டவில்லை. பிருமச்சாரியைக்கூட கவனித்தார் இல்லை. கடைசியாகக் கவனித்தபோது சொன்னார். “பிருமச்சாரி! இனியும் நாம் போகாதிருந்தால் குழந்தைகள் பொறுக்கமாட்டார்கள். வாருங்கள் போவோம்” என்று கூறிவிட்டு, தமது கரிய புரவியை மலைச்சரிவில் ஏறவிட்டார். பிருமச்சாரி அவருக்கு ஏதும் பதில் சொல்லவில்லை. பாபுஜியின் போக்கிலும் அவருக்கு ஏதோ கசப்பு இருந்திருக்க வேண்டும். ஆகையால் மௌனமாகவே தமது புரவியை நடக்கவிட்டார். புரவியைத் தூண்டுமுன்பு ஜோடாவை ஒருமுறை கவனித்து உடன் வரும்படி தலையால் சைகை செய்தார். ஜோடா தனது புரவியைத் தட்டிவிட்டான்.
இரண்டரை நாழிகை நேரம் பயணம் செய்த பின்பு ஒரு சமவெளிக்கு வந்தார்கள். நான்கு மலைச்சரிவுகளுக்கு இடையில் இருந்த அந்த சமவெளியின் பசும்புல் தரை மிக ரமணியமாயிருந்தது. பல குடிசைகளும், மண் கட்டடங்களும்கூட அந்த வட்டத் தட்டில் தெரிந்தன. அவற்றின் கூரைமீது சுற்றிலும் மரங்கள் நானாவித வண்ண மலர்களை உதிர்த்திருந்தன. அந்த வீடுகளைத் தள்ளி சிறிது தூரத்தில் அவற்றுக்கு எல்லாம் நடுநாயகமாய் தனிவீடு ஒன்று பெரிதாகத் தெரிந்தது. அந்த வீட்டை அணுகியதும் அதன் முன்பு இறங்கிய பாபுஜி, பின்னால் வந்த இருவருக்கும் முகமன் கூற முற்பட்டு “இதுதான் இந்த ஏழையின் குடிசை, உள்ளே வர வேண்டும்” என்றார்.
பிருமச்சாரி இறங்கவில்லை. அந்த வீட்டைச் சுற்றிலும் நடந்தும், அடக்கமாக மேய்ந்தும் கொண்டிருந்த அந்த நூறு அசுரப் புரவிகள் மீது கண்களை ஓட்டினார். இந்தப் புரவிகளை இஷ்டப்படி நடத்த பாபுஜியிடம் என்ன மந்திரம் இருக்கும் என்று எண்ணிப் பார்த்தார். ஏதும் விளங்காததால் அதைப்பற்றிய சிந்தனையை விட்டு முடிவில் தமது புரவியில் இருந்து இறங்கினார். ஜோடாவும் இறங்கினான் தனது புரவியில் இருந்து. அதன் கடிவாளத்தை அதன் முதுகிலேயே போட்டுவிட்டு, பாபுஜியின் வீட்டு முகப்பில் இருந்த பெரிய திண்ணையில் உட்கார்ந்துகொண்டான்.
பிருமச்சாரி உட்காரவில்லை. பாபுஜியை நோக்கி “அடுத்து என்ன வித்தை காட்டப் போகிறீர்கள்?” என்று சற்று சூடாகக் கேட்டார்.
தமது கரிய புரவியில் இருந்து குதித்து உடனே உள்ளே செல்லாமல் கீழே உட்கார்ந்து அதன் கால்களை உருவிவிட்டுக் கொண்டிருந்த பாபுஜி, சற்றே தலையை நிமிர்த்தி “இதுவரை என்ன வித்தை காட்டிவிட்டேன்?” என்று கேட்டார்.
“இந்தப் புரவிகளை ஏதோ வித்தைக்குப் பழக்கியிருப்பதுபோல் பழக்கியிருப்பதைக் காட்டினீர். வேறு ஏதாவது உண்டா?” என்று வினவினார் பிருமச்சாரி. அவர் குரலில் வெறுப்பு இருந்தது.
பாபுஜி தமது புரவியின் கால்களை உருவிக்கொண்டே சொன்னார், “இங்கு யாரும் வித்தை காட்டவில்லை. நல்ல சாதிப் புரவிகள் மனிதனைப் புரிந்துகொள்கின்றன” என்று. “இவற்றைக் குழந்தைகளாக வளர்க்கிறேன். எனக்கு வேறு குழந்தைகள் இல்லை. மனிதக் குழந்தைகளாக இருந்தால் ஏற்படும் தொல்லை இவற்றால் இல்லை. அன்புக்குக் கட்டுப்படும். மண்ணாசை, பொன்னாசை கிடையாது. சொத்தில் பாகம் கேட்கமாட்டா. அவை இருப்பது என்னைக் காக்க, எனக்குச் சேவை செய்ய. எனக்கு மட்டுமல்ல, எனது நண்பர்களுக்கும் உதவும் நான் சொன்னால்” என்றும் தொடர்ந்து சொன்னார் பாபுஜி.
இப்படிப் பேசிக்கொண்டே கரிய புரவியின் கால்களை உருவிவிட்டு, முதுகையும் உருவி அதைத் தட்டி, “கிருஷ்ணா, போ” என்று சொல்ல, அந்தப் புரவி தாவிச் சென்று மற்ற புரவிகளுடன் கலந்துகொண்டது. மெள்ள மெள்ள அந்தக் காட்டில் பொழுதும் புலரத் தொடங்கியது. பிருமச்சாரி பாபுஜியைப் பார்த்து “நானும் ஜோடாவும் காலைக் கடனை முடித்து வருகிறோம்” என்று கூறிவிட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த ஜோடாவை அழைத்துக்கொண்டு சென்றார்.
பாபுஜியின் வீட்டில் இருந்து கூப்பிடு தூரத்தில் இருந்த ஒரு மலை அருவிக்கு வந்ததும் பிருமச்சாரி, ராவ்ஜோடாவை நோக்கி “பாபுஜியைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று வினவினார்.
“சாதி குதிரைகளைப் பழக்கி வைத்திருக்கிறார்” என்றான் ஜோடா.
“இந்தப் புரவிகளை ஒருமுறை பார்த்திருக்கிறேன். ஆனால், இன்று மாதிரி விந்தையைப் பார்த்ததில்லை. இவர் புரவிகளை நடத்தி வருகிறார் என்றால் ராஜபுதனத்தில் பலருக்குக் குலை நடுக்கம். போர்க்களத்தில் இவை மனிதர்களை விடத் திறமையாக இயங்கும் என்று கேள்வி” என்றார் பிருமச்சாரி.
“அப்படி இயங்குமானால் பாபுஜியின் புரவிப்படையை அழிப்பது பிரும்மப் பிரயத்தனம்” என்று ஒப்புக்கொண்ட ஜோடா, “இன்று ஏதோ எனக்குப் பரீட்சை வைக்கப் போவதாகச் சொன்னாரே, அது என்ன?” என்று கேட்டான்.
“நாம் நீராடிச் சென்றதும் அது தெரியும்” என்ற பிருமச்சாரி, தமக்குப் பின்னால் வந்து நின்ற தமது புரவியைக் குளிப்பாட்டிவிட்டு நீராடினார். அருவியின் கீழ்ப்புறத்தில் சற்று தள்ளியிருந்த இடத்தில் தனது புரவியையும் குளிப்பாட்டிவிட்டுத் தானும் நீராடினான் ஜோடா.
இருவரும் திரும்பி வந்தபோது பாபுஜி வீட்டின் வெளியில் இருந்த சமதரையில் வேலும் வாளும் தாங்கிய நூறு வீரர்கள் ஒவ்வொரு புரவிக்கு அருகிலும் நின்று இருந்தார்கள். அந்த முரட்டுப் புரவிகள் எல்லாமே சேணமிட்டு நின்றன. வீட்டின் முகப்பில் நின்ற பாபுஜி “மேவார் சமஸ்தான வீரர்களே! இதோ போரில் இணையற்ற பிருமச்சாரி ஹர்பாசங்கலா. இதோ ராவ்ஜோடா, மார்வார் வம்சத் தலைவன், மண்டோர் அரசன், இவர்களுக்கு நமது உதவியை அளிக்கப் போகிறோம். அதற்கு முன்பு மார்வார் மன்னன் நமது கிருஷ்ணன் மீது ஏறி அதைத் தமது பக்கம் சேர்த்துக்கொள்வார்” என்று கூறினார்.
வீரர்கள் கரகோஷம் செய்தார்கள் ஒருமுறை, ஏதோ சம்பிரதாயத்தை அனுஷ்டிப்பவர்கள் போல. பாபுஜி தமது பெரிய ஈட்டியுடன் வீட்டின் முகப்பில் அசையாமல் நின்றிருந்தார். அவருக்கு நேர் எதிரில் பத்தடி தள்ளி, தலை குனிந்த வண்ணம் நின்றிருந்தது ‘கிருஷ்ணன்’. ராவ் ஜோடா பாபுஜியின் அறிவிப்பைக் கேட்டதும் பிருமச்சாரியை வணங்கிவிட்டு அந்தப் புரவியிடம் சென்றான். அசுவ லட்சணங்களை முற்றும் அறிந்திருந்த ஜோடா அந்தப் புரவியை வலம் வந்தான் ஒருமுறை. அதன் உடல் அமைப்பைக் கவனித்தான். பிறகு திரும்பி தனது கூரிய கண்களால் பாபுஜியை நோக்கினான். “பாபுஜி! நான் இந்தப் புரவி மீது ஏறுகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை” என்றான்.
“என்ன?” என்று கேட்டார் பாபுஜி.
“இதை எனக்குக் கொடுத்துவிட வேண்டும்” என்றான் ஜோடா.
“அதைவிட என் ராஜ்ஜியத்தைக் கேள்” என்றார் பாபுஜி சினத்துடன்.
“எனக்கு வேண்டியது இந்தப் புரவி” என்று பிடிவாதமாகச் சொன்னான் ஜோடா.
“நீ வந்த வழியைப் பார்த்துக்கொண்டு போகலாம்” என்றார் பாபுஜி உஷ்ணத்துடன்.
“நான் இந்த இடத்தைவிட்டு நகரும்போது இந்தப் புரவியின் மீதுதான் நகருவேன்” என்றான் ஜோடா.
இதைக் கேட்ட பாபுஜியின் கண்கள் தீயைக் கக்கின. “பிருமச்சாரி! உமது சீடனுக்கு ஏதும் மூளைக்கோளாறு இல்லையே?” என்று வினவினார்.
“இருப்பதாகத்தான் தெரிகிறது” என்றார் பிருமச்சாரி.
“பிருமச்சாரி!” என்று அழைத்தான், கிருஷ்ணன் பக்கத்தில் நின்ற ஜோடா.
“ஏன்?”
“எனக்கு மூளைக்கோளாறு இல்லை.”
“நல்ல புத்தியுடன் இருந்தால் அந்தப் புரவியின்மீது ஏறத் துணியமாட்டாய்.”
இதைக் கேட்டதும் ஜோடா நகைத்தான். “பிருமச்சாரி! நான் சித்தூரில் இருந்து ஓடியிருக்கலாம். மண்போரில் இருந்து ஓடியிருக்கலாம். ஆனால், எந்தப் புரவியிடம் இருந்தும் ஓடியது இல்லை” என்று கூறிக்கொண்டே அந்தக் கரிய புரவியின் முகத்துக்கு எதிரே நின்றுகொண்டு அதன் கண்களை உற்று நோக்கினான். பிறகு, அதன் வாயை இறுக்கிப் பிடித்தான், ஒரு கையால். அந்த ராட்சதப் புரவி தலையை ஒருமுறை ஆட்டியது. பிறகு அவன் கையை உதறியது. வாயைத் திறந்து தனது பெரிய பற்களால் அவனைக் கடிக்க வந்தது. ஜோடா அதன் வாயை மீண்டும் பிடித்தான், இறுக்க. புரவி திணறியது, திமிறியது. ஆனால், ஜோடாவின் இரும்புப் பிடியை அகற்ற முடியவில்லை. தானாகவே அதன் வாயை விட்ட ஜோடா, பக்கவாட்டில் வந்து திடீரென அதன் முதுகின் மீது தாவி கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டான்.
அடுத்த விநாடி கரிய புரவி ஆகாசத்தில் எழுந்தது, உடலை உதறியது, கடுவேகத்துடன் கனைத்தது பயங்கரமாக. திடீரெனக் கீழே விழவும் முயன்றது ஒரு புறமாக. அதன் நோக்கத்தைப் புரிந்து கொண்ட ஜோடா, கடிவாளத்தை இறுகப் பிடித்துத் தனது கால்களை அதன் வயிற்றில் இறுக்கினான். பலமாக இறுக்கப்பட்ட கடிவாளத்தால் புரவியின் தலை நிமிர்ந்தது.
அடுத்து தொடர்ந்தது அந்தப் புரவியின் பேயாட்டம். திடீரெனக் குதித்தது, சுழன்றது. முன்னும் பின்னும் நகர்ந்தது, பாய்ந்தது பக்கவாட்டில். இப்படிப் பலபடியாக ஜோடாவைத் தள்ள முயன்றும் முடியாமல் தவித்தது.
ஜோடா அதன்மீது பதுமைபோல் உட்கார்ந்திருந்தான். அவன் கைகள் கடிவாளத்தை ஏதோ யந்திரங்கள் போல் இயக்கின. கால்கள் வயிற்றில் இருந்து விலாப்பக்கம் உதைத்தன. ‘கிருஷ்ணன்’ அந்த உதையினால் எதிரேயிருந்த மரங்கள் இடையே பாய்ந்து சென்றது.
அரை நாழிகை, புரவி மனிதன் இருவரையும் காணோம்.
பாபுஜி வீட்டின் சதுக்கத்தின் எதிரில் பயங்கர அமைதி நிலவியிருந்தது. முதன் முதலாக பாபுஜியின் முகத்தில் பயத்தின் சாயை விரிந்தது.
“அந்த வாலிபன் என்ன ஆகியிருப்பானோ?” என்று கேட்டார் பிருமச்சாரியை நோக்கி.
பிருமச்சாரி முகத்தில் கவலை லவலேசமில்லை. “சீக்கிரம் திரும்புவான். கவலை வேண்டாம்” என்று கூறினார் சங்க்லா.
அவர் இதைச் சொல்வதற்கும் ராவ்ஜோடா அந்தக் கரிய புரவியின்மீது திரும்புவதற்கும் சமயம் சரியாயிருந்தது. புரவி வெகு அடக்கமாக வந்தது. ராவ்ஜோடா அரச தோரணையில் அதன்மீது அமர்ந்திருந்தான். பாபுஜிக்கும் பிரும்மச்சாரிக்கும் எதிரே வந்து இறங்கினான்.
பாபுஜி ஆறுதல் பெருமூச்சு விட்டார். “ராஜபுதனத்தின் இணையற்ற வீரனே! பரீட்சையில் தேறிவிட்டாய். இனி பாபுஜி உன் நண்பன். என்ன வேண்டும். கேள்” என்றார்.
ஜோடா ஏதும் கேட்கவில்லை. “அடுத்த பௌர்ணமி உங்களை இருநூறு வீரர்களுடன் மண்டோர் கோட்டை வாசலின் முன்பு எதிர்பார்க்கிறேன்” என்றார் பிருமச்சாரி.
“அப்படியே” என்று தலைவணங்கினார் பாபுஜி.

சாண்டில்யன் மூலம் மேலும் புத்தகங்கள்

40
கட்டுரைகள்
மலை அரசி
0.0
மாலை அரசி தமிழ் மொழியில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான வரலாற்று நாவல். பிரபல தமிழ் எழுத்தாளர் சாண்டில்யன் இந்த மனதை மயக்கும் புத்தகத்தை எழுதியுள்ளார். சாண்டில்யன் வரலாற்றுப் புனைகதைகளுக்காகப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார், மேலும் அவர் தனது வரலாற்று, காதல் மற்றும் சாகச நாவல்களுக்காக நன்கு அறியப்பட்டவர், இது பெரும்பாலும் சோழ மற்றும் பாண்டிய பேரரசுகளின் காலங்களில் அமைக்கப்பட்டது.
1

1. சுடர்க்கொடி

15 January 2024
0
0
0

சரித்திரம், பூமி, வாழ்க்கையின் கர்ம பலன்கள் ஆகிய சகலத்திலும் ஒரு சுழற்சியும் தொடர்ச்சியும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுவதில் எத்தனை உண்மையிருக்கிறதென்பதை, சுற்றிலும் தன்னை எரித்துக்கொண்டிருந்த மணற்பரப்

2

2. விளக்கில் விரிந்த கதை

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் மலைக்குகை வாயிலில், மரங்கள் அடர்த்தியாயிருந்ததால் இருள் கடுமையாக இருந்த அந்தப் பிராந்தியத்தில், பந்தத்தை கையில் ஏந்தி அதன் சுடர் முகத்தில் வீச சுடர்க்கொடியென்ற காரணப் பெயருக்கு முற

3

3. துணைவன்!

15 January 2024
0
0
0

விரிந்து படர்ந்து எரிந்த விளக்கின் சுடரை விந்தைக் கண்களுடன் நோக்கிய ராவ்ஜோடா. அதில் விரிந்த கதையைக் கண்டதும் மெய்சிலிர்த்துப் போனான். முதலில் அந்தச் சுடரில் ஏதும் தெரியாததால் புரியாமல் விழித்த மார்வ

4

4. இரு விந்தைகள்

15 January 2024
0
0
0

மலை அரசியின் மதுர இதழ்களில் இருந்து உதிர்ந்த அந்தக் கொடுமையான சொற்களைக் கேட்டதும், வியப்பும் அச்சமும் கலந்த உணர்ச்சிகள் ராவ்ஜோடாவின் இதயத்தை மளடுருவிச் சென்றன. அப்படி அவன் நடுங்கியதை பக்கத்தில் உட்கார

5

5. நான் வருவேன்

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் குகையைவிட்டு வெளியேறிய மலை அரசி, வேகமாக மலையின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடந்து சென்றதும், விளைவித்த இரண்டு விந்தைகளும் மகாவீரனான மார்வார் இளவரசனை திகில் கொள்ளச் செய்தன என்றால்,

6

6. பெண் துணை!

15 January 2024
0
0
0

பெண்ணின் லாவண்யத்தால் ஆண்மகன் அறிவு அழிந்துவிடுகிறது. கவர்ச்சியான கன்னியின் முன்பாக எந்த ஆண்மகனும் சுயபுத்தியை இழந்துவிடுகிறான். இந்தப் பழைய நிகழ்ச்சிகளுக்கு அத்தாட்சியாக நின்றான் ராவ்ஜோடா. “உனது வீ

7

7. சாகுந்தலம்

16 January 2024
1
0
0

பந்தத்தையும் அணைத்துவிட்டு இருண்ட குகைக்குள் தன்னை வா வா என்று அழைத்த அந்த பருவப் பாவையின் துணிவை நினைத்து ஜோடா திகிலுக்கு இலக்காகி நின்ற நேரத்தில், மலைஅரசியே குகை வாயிலைவிட்டு அவனை அணுகி, அவன் கையைப்

8

8. காட்டு மலர்

16 January 2024
1
0
0

பாவின் வாலிப முரட்டு முகம் அவள் வழவழத்த கழுத்தில் திடீரென அழுந்திப் புரண்டபோது, மலை அரசியின் இதயமும் அந்த வாலிபன் உள்ளத்தைப்போலவே உணர்ச்சி அலைகளில் உருண்டது. அத்தனை உணர்ச்சி எழுச்சியிலும் அரசகுமாரன்

9

9. நிலையற்ற அரசு

16 January 2024
1
0
0

மலை அரசியை “காட்டு மலர்” என்று குறிப்பிட்டதோடு தனது பேச்சை ஜோடா நிறுத்திக்கொண்டு இருந்தால் ஜகத்சிம்மனின் கோபம் தலைக்கு ஏறியிருக்காது. “இவள் மார்வார் ராணி” என்றும் சொல்லவே ஜகத்சிம்மனுக்கு கோபத்துடன் தி

10

10. பறந்த கிளி! தொடர்ந்த துன்பம்!

16 January 2024
1
0
0

மலை அரசியின் சொற்களோ உத்தரவுகளோ மந்திராலோசனை சபையில் இருந்தவர்களுக்குக் கட்டோடு பிடிக்காதிருந்தாலும் அவள் சொன்னதற்கு எல்லாம் ஜோடா தலையை ஆட்டியதால், அவள் கட்டளைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் எல்லோருமே முன

11

11. மண்டோர் ரணகளம்

16 January 2024
1
0
0

மண்டோரின் பெரும் கதவுகள் சாத்தப்பட்டதாலும் போர்முரசு பலமாக ஒலித்ததாலும் வருவது என்னவென்பதை அறிந்த புது மகாராஜாவான ராவ்ஜோடா, புரவியின் கடிவாளத்தை பிடித்த நிலையிலேயே திகைத்து அமர்ந்துவிட்ட சமயத்தில் மலை

12

12. குகையில்...!

16 January 2024
1
0
0

பெற்றோர் புரிந்த பாவம் சிலரைப் பிடித்து வாட்டுகிறது. உற்றார் செய்த பாவமும் சிலரை விடுவதில்லை. பெற்றோரும் உற்றாரும் விளைவித்த பாவங்களுக்கு எப்பாவமும் அறியாத ஜோடா இலக்கானான். பேரனான மோகுல சிம்மனை சீராட்

13

13. அவள் கனவு!

16 January 2024
1
0
0

மலை அரசியைப் பார்த்து மார்வார் இளவரசனாயிருந்து அரசனாகி, நாட்டையும் பறிகொடுத்த ராவ்ஜோடா, அத்தகைய ஒரு கேள்வியைக் கேட்டான் என்றால், அதற்கு மூலகாரணம் அவளுடைய விபரீதமான பதில்தான். “நாம் தனித்திருப்பது உனக்

14

14. தண்டனை!

17 January 2024
1
0
0

மலை அரசியை தரையில் கிடத்திவிட்டு குகையின் வாயிலுக்கு வந்த ராவ்ஜோடாவின் செவிகளில் ஜகத்சிம்மனும் மற்ற வீரர்களும் ஏறிவந்த புரவியின் குளம்படி ஒலிகள் கூடக் கேட்கவில்லை. குகைக்கு உள்ளே மலை அரசியின் அருகாமைய

15

15. ஹர்பா சங்க்லா!

17 January 2024
0
0
0

மலை அரசியால் மன்னிக்கப்பட்டு ஜோடாகிருக்குச் செல்லும்படி பணிக்கப்பட்ட ஜகத்சிம்மன் உடனடியாகத் திரும்பவில்லை தனது புரவியை நோக்கி நின்ற இடத்திலேயே அசைவற்று நின்றான் பல விநாடிகள். பிறகு சட்டென்று வேகமாக நட

16

16. அந்தி வானம்

17 January 2024
0
0
0

அதிர்ஷ்டம் என்பது ஒரு மனிதனைப் பிடித்துக்கொண்டால் அவனை அது லேசில் விடுவது இல்லை. கூடியவரையில் விடாமல் தொடர்கிறது. துரதிர்ஷ்டக்காரனுக்கு புத்தி பேதலிக்கிறது. காலம் கைகொடுப்பது இல்லை. எதையும் காலங்கடந்த

17

17. வாளின் கதை!

17 January 2024
0
0
0

ஜோடாவைப்பற்றி விசாரித்ததும் மலை அரசியின் மதிமுகம் அந்திவானம் போல் சிவந்துவிட்டதைக் கண்டதுமே நைஷ்டிக பிருமச்சாரியும், எந்தப் பெண்ணையும் கண்ணெடுத்துப் பார்க்காதவரும், பிருமச்சாரி விரதம் கெடக்கூடாது என்ப

18

18. தேடி வந்த அதிர்ஷ்டம்!

17 January 2024
0
0
0

மார்வார் மன்னனையும் மலைக்க வைத்த அந்த விசித்திரக் கதையைச் சொல்லுமுன்பு பிருமச்சாரி அந்தச் சிறு வீட்டின் முற்றத்தை வளைத்திருந்த சுற்றுக் கட்டடத்தின்மீது உட்கார்ந்து கீழ் இருந்த முற்றத்தில் தமது கால்களை

19

19. பாலைவனக் கூடாரம்

17 January 2024
0
0
0

இரவு தந்த இருளில், மலைக்காடு வீசிய இதமான காற்றில், சாளரத்துக்கு அருகில் இருந்த மகிழ மரம் பரவவிட்ட சுகந்தத்தின் சூழ்நிலையில், மலை அரசியை சூழ்ந்து நெருக்கிய ஜோடாவின் கரங்கள் நெருக்கியதோடு நில்லாமல் இன்ப

20

20. கரிய புரவி! கழுத்தில் ஈட்டி!

18 January 2024
0
0
0

ஜோடாவின் பரம விரோதியான சந்தசிம்மனின் மூத்த மகன் காந்தாஜி தன் வாளை உருவிக்கொண்டு ராவ் ஜோடாவை அணுகுவதற்கு முன்பே ஜோடா பிருமச்சாரியளித்த தனது பெரிய வாளை உருவி எதிரியைத் தடுத்தான். அவனைச் சேர்ந்த பத்து பத

21

21. மலைச்சாரல் ஓசை

18 January 2024
0
0
0

கழுத்தில் பதித்திருந்த ஈட்டி சற்றும் அசையாமல் இருந்தாலும் அதில் ஒரு திடமும், ஈட்டியைப் பிடித்திருந்தவன் கையில் ஈவு இரக்கமற்ற ஓர் உறுதியும் இருந்ததைக் கவனித்த ராவ்ஜோடா, தான் சிறிது அசைந்தாலும் அந்த ஈட்

22

22. பரீட்சை

18 January 2024
0
0
0

பாபுஜியின் நூறு புரவிகள் ஏதோ பெரும் புயலைப் போல் மலைச்சரிவில் வந்ததாலும், அவை கண்ணிமைக்கும் நேரத்தில் தனது புரவியில் இருந்து தன்னை வீழ்த்திவிட்டதாலும் மலைப்பாறையில் புரண்ட ஜோடா வெகு துரிதமாகப் பாறையில

23

23. அடவியில் ஒரு காட்சி!

18 January 2024
0
0
0

நீண்டநாள் பிரிந்த மகனை ஆர்வத்துடன் தழுவும் தந்தை போல ஜோடாவை பல விநாடி தழுவி நின்ற பாபுஜி, கடைசியில் அவனுக்குத் தமது கைகளில் இருந்து விடுதலை அளித்தபோது அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் இரண்டு தே

24

24. காதல் பாபமா?

18 January 2024
0
0
0

அடர்ந்த அந்த அடவிக்குள் நாலைந்து பங்கஜங்களை நீர்மட்டத்துக்குமேல் காட்டிக்கொண்டிருந்த சிறு வாவியின் கரையில் மலை அரசியும் ஜோடாவும் உட்கார்ந்திருந்த நிலையைக் கண்டதும் இரண்டு பிருமச்சாரிகளும் தங்கள் பிரும

25

25. ஜோடாவின் துணிவு!

18 January 2024
0
0
0

பாபுஜியும், பிருமச்சாரியும் விழிப்பதைப் பார்த்த ஜோடா, “உங்கள் இருவருக்கும் வரவர சுயநம்பிக்கை போய்விட்டது” என்று ஓர் அம்பை வீசினான். அதுவரை தாங்கள் கண்ட காட்சியால் குழப்பத்தில் இருந்த இரு பிருமச்சாரி

26

26. சாவுகாரைப் பிடித்த சனியன்!

18 January 2024
0
0
0

மண்டோர் அரசின் முதலமைச்சராயிருந்து, சந்தசிம்மன் ஆக்கிரமிப்புக்குப் பின்பு அந்தப் பதவியில் இருந்து விலகி, அரண்மனையில் தமக்கு முன்னாள் மன்னனால் அளிக்கப்பட்டு இருந்த இடத்தையும் சந்தசிம்மனிடம் ஒப்புடைத்து

27

27. அடைத்த கதவு!

18 January 2024
0
0
0

காந்தோஜியின் குறுவாள் அழுந்தியதாலும், எச்சரிக்கையாலும், அவன் பின்னால் நின்றிருந்த மஞ்சாஜியின் உதடுகளில் துளிர்த்திருந்த குரூரப் புன்முறுவலாலும், சாவுகார் அஞ்சி நடுநடுங்கிவிடுவார் என்றோ, முன்னே நடந்துவ

28

28. வேடர் குடிசை மர்மம்!

18 January 2024
0
0
0

கோட்டைக் காவலன் சொன்ன செய்தியால் மலைத்த இருவரில் சாவுகாரே முதலில் திகைப்பை உதறிக்கொண்ட தன்றி சமயாசந்தர்ப்பம் தெரியாமல் கோப்தையும் காட்டினார். “காவலனே! வணிகர்களைத் தடை செய்யும் வழக்கம் மார்வாரில் கிடைய

29

29. உள்ளே ஒரு பெண் குரல்!

18 January 2024
0
0
0

அன்று பகல் முழுவதும் மார்வார் படைத்தலைவனான ஜகத்சிம்மனுக்கும் மண்டோர் கோட்டை காவலனுக்கும் உணவு முதலிய விஷயங்களில் ராஜோபசாரம் நடந்தாலும், அவ்விருவரும் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் எந்த வேடனும் நேரடியாக ப

30

30. ஜோடாவின் துன்மார்க்கம்!

19 January 2024
1
0
0

மூன்று குணங்களை மனிதன் தவிர்ப்பது நல்லது. தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் அக்கறை காட்டுவது, ஒன்று. ஒட்டுக் கேட்பது, இரண்டு. காலதாமதம் செய்வது, மூன்று. இந்த மூன்றில் ஏதாவது ஒரு குணமே யாரையும் இக்கட்ட

31

31. மணக்கோலம்!

19 January 2024
1
0
0

வீரனாகப் படைகளை இயக்கி, இழந்த அரசை மீட்பதில் சித்தத்தை செலுத்த வேண்டிய மார்வார் மன்னன், கேவலம், பெண் மோகம் கொண்டவனாகக் குடிசையில் மறைந்து கொண்டு காலத்தை ஓட்டுவதை நினைத்த ஜகத்சிம்மன் வேடவர் குடிசைக் கூ

32

32. சந்திர முகம்

19 January 2024
1
0
0

மண்டோர் படைத்தலைவனான ஜகத்சிம்மன் தனது மன்னனின் திருமணத்தையே நிறுத்த முயன்றதும், அதற்காகக் கூச்சலிட்டதும் பலருக்கு கோபத்தையும் சிலருக்கு வியப்பையும் உண்டாக்கினாலும், பிருமச்சாரி ஹர்பாசங்க்லாவோ, திருமணப

33

33. இழந்த சொர்க்கம்

19 January 2024
1
0
0

ராவ்ஜோடாவின் அணைப்பில் இருந்த அழகியின் சந்திர வதனத்தைக் கண்டதும் ஜகத்சிம்மன் திகைப்பும் அதிர்ச்சியும் ஒருங்கே அடைந்தான் என்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. அந்த முகம் மலை அரசியின் முகம்! முகத்

34

34. பதவி இறக்கம்!

19 January 2024
1
0
0

மலை அரசியின் மறுபிம்பம் போன்ற மின்னிடையாளுடன், ஜோடா கலந்து விளையாட இருந்த சமயத்தில் பிருமச்சாரி ஹர்பாசங்கலா அங்கு தோன்றியதும் கதவைத் தட்டியதும் பரமானந்தமாயிருந்தது, மண்டோர் படைத்தலைவன் ஜகத்சிம்மனுக்கு

35

35. மீண்டும் வந்தாள்!

19 January 2024
1
0
0

மண்டோரின் படைத்தலைவனாக இருந்த தன்னை திடீரென உபதளபதியாக்கிவிட்ட மன்னன் செயலைக் கண்டு மனம் துடித்த ஜகத்சிம்மன் அந்த அவமானத்தில் இருந்து எப்படி மீளலாம் என்று சிந்தித்தான். அது தவிர இந்த திடீர் பதவி இறக்க

36

36. மண்டோர் சமர்

19 January 2024
1
0
0

கேவலம், ஒரு பெண், புரவியில் இருந்து இறங்க, அவள் காலுக்குப் படியாக தனது இரு கைகளையும் கோத்து நீட்டிய பிருமச்சாரியிடம் பெரிதும் வெறுப்புக் கொண்டான், ஜகத்சிம்மன். பிருமச்சாரி உண்மையில் பெரும் போலி பிருமச

37

37. மணலில் தோய்ந்த ரத்தம்

19 January 2024
1
0
0

மண்டோர் போரில் மாவீரர்களான சந்தசிம்மன் புதல்வர்கள் அடைந்த தோல்விக்குக் காரணம் தாங்கள் போரிடும் எதிரிகளின் திறனை அவர்கள் தவறாக எடைபோட்டதுதான் என்று கர்னல் ஜேம்ஸ்டாட் தமது ராஜபுதன வரலாற்று நூலில் தெளிவா

38

38. துரோகி!

19 January 2024
1
0
0

மலை அரசி தனது வளையல் கரங்களை நீட்டி தன்னைக் கைது செய்யும்படிக் கேட்டுக்கொண்டதும் காந்தோஜி தனது தம்பியின் மரணத்தையும் மறந்து வியப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே அடைந்தான். அப்பொழுதும் மலை அரசி வேட்டுவர

39

39. வேகம்! தாகம்!

19 January 2024
1
0
0

மேவாரின் தலைநகரான சித்தூரில் இருந்து தப்பி ஓடிவந்து லூனி ஆற்றின் உப்பு நீரில் தந்தையின் மரணத்துக்கு நீராடிய அதே துறையில், கிட்டத்தட்ட அதே இடத்தில் தங்கள் வம்ச துர்ப்பாக்கியத்துக்கும் அவப் பெயருக்கும்

40

40. அரசி ஆன, மலை அரசி!

19 January 2024
1
0
0

மலை அடிவாரப் புதரில் மலை அரசி மல்லாந்து கிடந்த கோலம் மண்டோர் மன்னனின் வெறியைக் கிளறிவிடவே, அவன் உலகத்தையே மறந்து, அதுவரை நேர்ந்த நிகழ்ச்சிகளால் மனம் ஏற்படுத்திய கட்டுப்பாடுகளையும் தடைகளையும் உதறி அவள்

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்