shabd-logo

24. காதல் பாபமா?

18 January 2024

1 பார்த்தது 1

அடர்ந்த அந்த அடவிக்குள் நாலைந்து பங்கஜங்களை நீர்மட்டத்துக்குமேல் காட்டிக்கொண்டிருந்த சிறு வாவியின் கரையில் மலை அரசியும் ஜோடாவும் உட்கார்ந்திருந்த நிலையைக் கண்டதும் இரண்டு பிருமச்சாரிகளும் தங்கள் பிருமச்சாரியத்துக்கு பெரும் ஆபத்து நேர்ந்துவிட்டதை நினைத்து ஒருவரை ஒருவர் திகிலுடன் பார்த்துக் கொண்டார்கள்.
வாவிக் கரையில் உட்கார்ந்திருந்த இருவரும் பரஸ்பர பிணைப்பில் இருந்தார்கள்.
அந்த நிலையிலும் ஜோடா மட்டும் தனது தலையை சிறிது விலக்கி, மலை அரசியின் மலர் வதனத்தையும் செங்கமல கன்னங்களையும் சங்குக் கழுத்தையும் தனது உதடுகளால் திரும்பத் திரும்பத் தடவினான். தனது நாசியால் அவள் கமல முகத்தை முகரவும் செய்தான். அவள் கன்னம், கழுத்து, இவற்றின் சுகந்தத்தை அனுபவித்த ஜோடா, “மலை அரசி!” என்று மெதுவாக அழைத்தான்.
“என்ன!” என்று அவள் மிக இரகசியமாக வினவினாள்.
“பெண்களின் உடலில் இத்தனை நறுமணம் இருக்கும் என்று இத்தனை நாள் வரை எனக்குத் தெரியாது” என்று சொல்லிவிட்டு அவள் கழுத்தில், முகம் பூராவையும் புதைத்துக்கொண்டு, இடையை இறுக்கிய இடக்கையால் அதற்குமேல் எதையோ தேடினான்.
மலை அரசியின் உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருந்தன. “உம்!” என்று அதட்டினாள்.
“என்ன மலை அரசி!” கழுத்தில் இருந்த உதடுகள் திறந்து சொற்களை உதிர்த்ததால் அவள் இன்ப இம்சை அதிகமாயிற்று.
“உங்கள் கை...” என்று தடுமாறினாள் மலை அரசி.
“அதற்கென்ன?”
“என்ன தேடுகிறது?”
“எனக்குத் தெரியாது.”
“உங்கள் கைதானே அது?”
“எது என் கை, என்ன செய்கிறது என்று எனக்கே தெரியவில்லை.”
இதைக் கேட்ட மலை அரசி அவன் முகத்தில் தன் கழுத்தை நன்றாக அழுத்தி “தெரியாது, தெரியாது. எப்படித் தெரியும்?” என்று முனகினாள்.
அந்த முனகல் அவனுக்குச் சங்கீதமாயிருந்தது. அவன் எதுவுமே பேசவில்லை. தலையை கழுத்திலிருந்து அகற்றி அவள் கண்களைச் சந்திக்க முயன்றான். அந்தக் கண்கள் திறக்கவில்லை. அந்தி வேளை பங்கஜங்கள் போல் மூடிக் கிடந்தன. முகம் பூராவிலும் ஏதோ ஒரு சாந்தியும் வேட்கையும் கலந்த சாயை படர்ந்து கிடந்தது. ஜோடா அவளை நன்றாகத் தன்னை நோக்கித் திருப்பி அவள் கழுத்துக்குச் சிறிது கீழே முகத்தை வேகமாகப் பதித்தான். அவள் உடல் நடுங்கியது. ஆனால், அவள் கவர்ச்சிப் பிரதேசங்களின் உச்சி அவன் முகத்தை நோக்கி அழுந்தவே செய்தது.
அந்த அழுத்தம் அவனுக்குத் துணிவை அளித்திருக்க வேண்டும். ஜோடாவின் வலது கை ஆராய்ச்சியில் இறங்கியது. அவன் இடது கைவிரல்களும் வலது கைவிரல்களும் இணைந்து அவளை இறுக்கிச் சிறை செய்தன. சிறையிலும் இன்பம் உண்டு என்பதை மலை அரசி புரிந்து கொண்டாள்.
அன்றுவரை அவளுக்கு இருந்த திடசித்தம் எங்கோ பறந்து பலவீனத்துக்கு இடங்கொடுத்தது. ஜோடாவின் கையில் தான் ஈரக்களி மண் என்பதை அவள் உணர்ந்தாள். அவன் தன்னை எப்படி வேண்டுமானாலும் உருட்டலாம் துவைக்கலாம் என்பது அவளுக்கு சந்தேகமறத் தெரிந்தது. அவன் கைகளை அவள் வேகமாக ஒதுக்கினாள். தலையைக்கூட தனது மார்பகத்தைவிட்டுப் பலவந்தமாகப் பிடித்துத் தள்ளினாள். பிறகு தரையில் மெல்ல மல்லாந்து படுத்தாள். வாவிக்கரையில் தழைத்துக் கிடந்த ஒரு முல்லைக் கொடியின் மலர்கள் அவள் மீது விழுந்தன.
ஜோடா அவளை நோக்கிக் குனிந்தான். அவள் மீது கிடந்த முல்லை மலர்களைப் பொறுக்கி முகர்ந்தான். “மலை அரசி! இந்த மலர்கள் உன் மீது விழுந்ததால் அதிகமாக நறுமணத்தைக் கொடுக்கின்றன” என்றான்.
அவள் பதில் கூறவில்லை. கண்களையும் திறக்கவில்லை. ஜோடா அவள் கன்னங்களை வருடினான். அவளை லேசாக ஒருக்களிக்கும்படிப் புரட்டினான். இடைக்குக் கீழிருந்த திண்ணிய எழுச்சியில் இடதுகையை ஊன்றி, வலதுகையை அவள் உடலுக்குக் குறுக்கே போட்டு அவளை நோக்கிக் குனிந்து “மலை அரசி!” என்று அவள் காதுக்கருகில் மெதுவாக அழைத்தான்.
“உம்” என்று உம் கொட்டினாள் மலை அரசி.
“நீ படுத்திருக்கிற நிலை...” என்றான் ஜோடா.
“அதற்கென்ன?”
“சகுந்தலைமாதிரி இருக்கிறது.”
“நீங்கள்தான் சகுந்தலை ஆக்கினீர்கள்.”
“நானா?”
“ஆம். என்னைப் புரட்டி ஒருக்களிக்க வைத்திருக்கிறீர்கள்.”
ஜோடா புன்முறுவல் கொண்டான். “நாடகத்தை மாற்றுகிறாய் மலை அரசி. துஷ்யந்தன் திருப்பவில்லை சகுந்தலையை. அவளே திரும்பிப் படுத்திருந்தாள், தாமரை இலையில் ஓலை தீட்ட. அந்தச் சந்தர்ப்பமே வேறு” என்று காளிதாசன் நாடகத்தை அவிழ்த்தான் ஜோடா.
“இருக்கலாம்” என்று மலை அரசி நகைத்தாள். முகத்தை லேசாகத் திருப்பி அவனைப் பார்த்தாள்.
அவள் உதடுகளின் ஈரம், அந்த உதடுகளை நீரோட்ட முள்ள சிவப்பு கற்கள் போல் அடித்திருந்தன. அவள் திரும்பித் தரையில் படுத்திருந்ததால் ஒரு கன்னத்தில் ஒரு சிறு கல் லேசாகப் பதிந்து அந்த இடத்தை மட்டும் சிவக்க அடித்திருந்தது. அதைக் கண்ட ஜோடா பதறினான்.
“மலை அரசி! இது என்ன?” என்று அந்த இடத்தைத் தொட்டான்.
“ஒன்றுமில்லை, சிறு கல் குத்தியது” என்றாள் மலை அரசி.
“வேறு எங்காவது குத்தியிருக்கிறதா, பார்க்கட்டுமா?” என்று அவள் விலாப்புறத்திலும் கீழேயும் வலது கையால் தடவினான்.
“எங்கும் எதுவும் குத்தவில்லை. சும்மா இருங்கள். உங்கள் திருட்டுத்தனம் எனக்குத் தெரியும்” என்ற மலை அரசி சற்று திரும்பி சட்டென்று எழுந்திருக்க முயன்றாள்.
அவளை எழுந்திருக்க விடாமல் பிடித்துப் படுக்க வைத்த ஜோடா “என்ன அவசரம் இதற்குள் மலை அரசி?” என்று கேட்டான்.
“உங்களுக்கு என்ன அவசரம் இதற்குள்?” என்று மலை அரசி கேட்டாள்.
“எதைக் கேட்கிறாய்?”
“உங்கள் மனதைக் கேளுங்கள் தெரியும்”
மனதைக் கேட்க அவசியமே இல்லை ஜோடாவுக்கு. இருவருக்குமே தங்கள் நிலைகளின் காரணம் தெரிந்திருந்தது. அப்பொழுது திடீரென ஒரு சந்தேகம் வரவே ஜோடா அவளைக் கேட்டான், “மலை அரசி, எனக்கு ஒரு சந்தேகம்” என்று.
“என்ன சந்தேகம்?” என்று கேட்டாள் அவள்.
“இத்தனை நாள் நீ என்னை ஜோடா என்று பெயர் சொல்லி அழைத்தாய். நீ, போ என்று ஏக வசனத்தில் கூப்பிட்டுக் கொண்டிருந்தாய்” என்று அவன் சொன்னான்.
“ஆமாம்” என்றாள் அவள், இதழ்களில் முறுவல் கொட்டி.
“இப்பொழுது நீங்கள், போங்கள், என்று மரியாதையில் திரும்பிவிட்டாயே.”
“அதை கவனிக்கவில்லை நான்.”
“ஒன்று சொன்னால் கேட்பாயா மலை அரசி?”
“சொல்லுங்கள்.”
“இனிமேல் பழையபடி அழைக்கவேண்டும்.”
“முடியாது.”
“ஏன் முடியாது?”
“நாலுபேர் பார்த்தால் என்ன நினைப்பார்கள்?”
“இதற்கு முன்பு என்ன நினைத்தார்கள்?”
மலை அரசி நகைத்தாள், “அப்பொழுது நிலை வேறு” என்றாள்.
“எந்த நிலை?”
“நமது பரஸ்பர உறவு.”
“இப்பொழுது மாறிவிட்டதா என்ன?”
“மாறாமலா இத்தனை நேரம்....” மலை அரசி சொற்களை முடிக்கவில்லை. ஜோடா எழுந்தான் உட்கார்ந்த நிலைவிட்டு. அவளை அப்படியே இரு கைகளாலும் தூக்கினான்.
மலை அரசிக்கு பழைய முரட்டுத்தனம், இயற்கைக் குணம் எங்கிருந்தோ திரும்பிவிட்டது. “ஜோடா! விடு என்னை” என்று கூவினாள்.
“விடாவிட்டால் என்ன செய்வாயாம்?” என்று கேட்டான் ஜோடா.
“கத்துவேன்” என்றாள் மலை அரசி.
“கத்து” என்றான் ஜோடா.
“கிருஷ்ணா, கிருஷ்ணா” என்று கூவினாள் மலை அரசி.
“நான் என்ன துச்சாதனனா? நீ என்ன திரௌபதியா? எந்த கிருஷ்ணனும் இங்கு வரமாட்டான்” என்று கூறிக்கொண்டே நடக்க முயன்றான் ஜோடா.
அடுத்த விநாடி அவன் அதிர்ச்சியடைந்து நின்றான். கிருஷ்ணன் தன் பெரிய பற்களைக் காட்டிக்கொண்டு சற்று எட்ட நின்றிருந்தது. பெரிதாக ஒரு கனைப்பு கனைத்துக்கொண்டு கால்களை நிலத்தில் கீறிவிட்டு அவனை நோக்கி சீற்றத்துடன் நடந்து வந்தது. அருகில் வந்ததும் அவன் முகத்தை நோக்கி வாயை உயர்த்தியது. அடுத்த விநாடி ஜோடாவின் முகச்சதைகள் பிய்ந்து இருக்கும். மலை அரசி இடைபுகுந்து “வேண்டாம் கிருஷ்ணா! அவரை ஒன்றும் செய்யாதே” என்று கதறினாள்.
கிருஷ்ணன் திறந்த வாயை மூடாது முகத்தை மலை அரசியின் முகத்தை நோக்கித் திருப்பி அதை முகர்ந்தது செல்லமாக.
“ஜோடா! பார்த்தாயா?” என்று கேட்டாள் மலை அரசி.
“மிருகம் உன் முகத்தை முகர்கிறது” என்று அலுத்துக் கொண்டான் ஜோடா.
“நீயுந்தான் சற்றுமுன் முகர்ந்தாய். நீயும் மிருகந்தானே!” என்று மலை அரசி மதுரமாக நகைத்தாள்.
அவளைக் கோபத்தால் கீழே போட்டான் ஜோடா. அவள் கால்களை ஊன்றி நின்றாள்.
“கிருஷ்ணா, வா!” என்று அழைத்து அந்தக் கரிய புரவியின் மீது ஏறிக்கொண்டாள்.
அதை அவள் நகர்த்த முற்பட்ட சமயத்தில் இரு பிருமச்சாரிகளும் மறைவிடத்தில் இருந்து வெளியில் வந்தார்கள். அவர்களை நோக்கிப் புன்முறுவல் செய்தாள் மலை அரசி.
“மன்னிக்கவேண்டும்” என்று கூறிக்கொண்டே ஜோடா அவர்களை நோக்கி வந்தான்.
“ஜோடா!” என்று கடிந்த குரலில் அழைத்தார் ஹர்பா சங்க்லா.
“மலை அரசி!” என்று அதைவிடக் கடுமையான குரலில் அழைத்தார் பாபுஜி.
“ஏன் பாபுஜி?” மலை அரசியின் குரல் மதுரமாக இருந்தது.
“இங்கு நடந்ததை எல்லாம் பார்த்தோம்” என்று சீறினார் பாபுஜி.
“ஜோடா! உன் நிலையை நீ புரிந்துகொள்ளவில்லை,” என்று கண்டித்தார் பிருமசாரி.
“நான் எந்தத் தவறும் செய்யவில்லையே!” என்று மன்றாடினான் ஜோடா.
“மீண்டும் பாவத்தைத் தேடிக்கொண்டாய். மலை அரசியை சுல்கமாக வைத்திருக்கிறார் ஜோகி. சாம்ராஜ்ஜியத்தை நிறுவுபவனைத் தவிர அவளை வேறு யாரும் தொட முடியாது” என்று சுட்டிக் காட்டினார் சங்க்லா.
“நான்தான் சாம்ராஜ்ஜியத்தை நிறுவப்போகிறேனே!” என்றான் ஜோடா.
“அதற்கு முன்பு மலை அரசியை ஏன் தொட்டாய்?” என்று சீறினார் பிருமச்சாரி.
“அவள் ஏன் உடன்பட்டாள்?” என்று கேட்டார் பாபுஜி.
மலை அரசி தலையைக் கவிழ்த்துக்கொண்டு நகைத்தாள்.
“பிருமச்சாரிகள் இருவரையும் இங்கு யார் வரச்சொன்னது?” என்று சொல்லிவிட்டு புரவியைப் பறக்கவிட்டாள் மலை அரசி.
இரண்டு பிருமச்சாரிகளுக்கு இடையில் ஜோடா அகப்பட்டுக் கொண்டான்.
“கிருஷ்ணன் அவள் சொல்படி கேட்கிறதே!” என்று வியந்தார் பாபுஜி.
“கிருஷ்ணன் என்ன, எந்த கோவிந்தனும் அவள் சொல்படி கேட்கும். மிருகங்களிடமும் பட்சிகளிடமும் அவளுக்கு அசாத்திய பிடிப்பு. இதை நான் மறந்துவிட்டேன்” என்றார் சங்க்லா.
“இதை ஏன் முன்பே சொல்லவில்லை?” என்று பாபுஜி கேட்டார்.
“சொல்லியிருந்தால் என்ன செய்துவிடுவீராம்?” என்று சங்க்லா வினவினார்.
“இங்கு வந்தே இருக்க வேண்டாமே!” என்றார் பாபுஜி.
இதைக் கேட்ட ஜோடா பெரிதாக நகைத்தான். அவ்விருவரும் அவன் இரு கைகளையும் பிடித்துக் கொண்டார்கள் பலமாக.
“வா! இந்தப் பாவத்துக்கு பரிகாரம் செய்ய வேண்டும்” என்றார் சங்க்லா.
“காதலிப்பது பாவமா?” என்று கேட்டான் ஜோடா உஷ்ணத்துடன்.
“தகாத சமயத்தில் பாவந்தான்” என்றார் பிருமச்சாரி.
“உண்மை” என்றார் பாபுஜி.
ஜோடாவின் பொறுமை எல்லை கடந்தது. “காதலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?” என்று கேட்டான் மிகுந்த உஷ்ணத்துடன்.
இரண்டு பிருமச்சாரிகளும் பரஸ்பரம் பார்த்து விழித்துக் கொண்டார்கள்.

சாண்டில்யன் மூலம் மேலும் புத்தகங்கள்

40
கட்டுரைகள்
மலை அரசி
0.0
மாலை அரசி தமிழ் மொழியில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான வரலாற்று நாவல். பிரபல தமிழ் எழுத்தாளர் சாண்டில்யன் இந்த மனதை மயக்கும் புத்தகத்தை எழுதியுள்ளார். சாண்டில்யன் வரலாற்றுப் புனைகதைகளுக்காகப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார், மேலும் அவர் தனது வரலாற்று, காதல் மற்றும் சாகச நாவல்களுக்காக நன்கு அறியப்பட்டவர், இது பெரும்பாலும் சோழ மற்றும் பாண்டிய பேரரசுகளின் காலங்களில் அமைக்கப்பட்டது.
1

1. சுடர்க்கொடி

15 January 2024
0
0
0

சரித்திரம், பூமி, வாழ்க்கையின் கர்ம பலன்கள் ஆகிய சகலத்திலும் ஒரு சுழற்சியும் தொடர்ச்சியும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுவதில் எத்தனை உண்மையிருக்கிறதென்பதை, சுற்றிலும் தன்னை எரித்துக்கொண்டிருந்த மணற்பரப்

2

2. விளக்கில் விரிந்த கதை

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் மலைக்குகை வாயிலில், மரங்கள் அடர்த்தியாயிருந்ததால் இருள் கடுமையாக இருந்த அந்தப் பிராந்தியத்தில், பந்தத்தை கையில் ஏந்தி அதன் சுடர் முகத்தில் வீச சுடர்க்கொடியென்ற காரணப் பெயருக்கு முற

3

3. துணைவன்!

15 January 2024
0
0
0

விரிந்து படர்ந்து எரிந்த விளக்கின் சுடரை விந்தைக் கண்களுடன் நோக்கிய ராவ்ஜோடா. அதில் விரிந்த கதையைக் கண்டதும் மெய்சிலிர்த்துப் போனான். முதலில் அந்தச் சுடரில் ஏதும் தெரியாததால் புரியாமல் விழித்த மார்வ

4

4. இரு விந்தைகள்

15 January 2024
0
0
0

மலை அரசியின் மதுர இதழ்களில் இருந்து உதிர்ந்த அந்தக் கொடுமையான சொற்களைக் கேட்டதும், வியப்பும் அச்சமும் கலந்த உணர்ச்சிகள் ராவ்ஜோடாவின் இதயத்தை மளடுருவிச் சென்றன. அப்படி அவன் நடுங்கியதை பக்கத்தில் உட்கார

5

5. நான் வருவேன்

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் குகையைவிட்டு வெளியேறிய மலை அரசி, வேகமாக மலையின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடந்து சென்றதும், விளைவித்த இரண்டு விந்தைகளும் மகாவீரனான மார்வார் இளவரசனை திகில் கொள்ளச் செய்தன என்றால்,

6

6. பெண் துணை!

15 January 2024
0
0
0

பெண்ணின் லாவண்யத்தால் ஆண்மகன் அறிவு அழிந்துவிடுகிறது. கவர்ச்சியான கன்னியின் முன்பாக எந்த ஆண்மகனும் சுயபுத்தியை இழந்துவிடுகிறான். இந்தப் பழைய நிகழ்ச்சிகளுக்கு அத்தாட்சியாக நின்றான் ராவ்ஜோடா. “உனது வீ

7

7. சாகுந்தலம்

16 January 2024
1
0
0

பந்தத்தையும் அணைத்துவிட்டு இருண்ட குகைக்குள் தன்னை வா வா என்று அழைத்த அந்த பருவப் பாவையின் துணிவை நினைத்து ஜோடா திகிலுக்கு இலக்காகி நின்ற நேரத்தில், மலைஅரசியே குகை வாயிலைவிட்டு அவனை அணுகி, அவன் கையைப்

8

8. காட்டு மலர்

16 January 2024
1
0
0

பாவின் வாலிப முரட்டு முகம் அவள் வழவழத்த கழுத்தில் திடீரென அழுந்திப் புரண்டபோது, மலை அரசியின் இதயமும் அந்த வாலிபன் உள்ளத்தைப்போலவே உணர்ச்சி அலைகளில் உருண்டது. அத்தனை உணர்ச்சி எழுச்சியிலும் அரசகுமாரன்

9

9. நிலையற்ற அரசு

16 January 2024
1
0
0

மலை அரசியை “காட்டு மலர்” என்று குறிப்பிட்டதோடு தனது பேச்சை ஜோடா நிறுத்திக்கொண்டு இருந்தால் ஜகத்சிம்மனின் கோபம் தலைக்கு ஏறியிருக்காது. “இவள் மார்வார் ராணி” என்றும் சொல்லவே ஜகத்சிம்மனுக்கு கோபத்துடன் தி

10

10. பறந்த கிளி! தொடர்ந்த துன்பம்!

16 January 2024
1
0
0

மலை அரசியின் சொற்களோ உத்தரவுகளோ மந்திராலோசனை சபையில் இருந்தவர்களுக்குக் கட்டோடு பிடிக்காதிருந்தாலும் அவள் சொன்னதற்கு எல்லாம் ஜோடா தலையை ஆட்டியதால், அவள் கட்டளைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் எல்லோருமே முன

11

11. மண்டோர் ரணகளம்

16 January 2024
1
0
0

மண்டோரின் பெரும் கதவுகள் சாத்தப்பட்டதாலும் போர்முரசு பலமாக ஒலித்ததாலும் வருவது என்னவென்பதை அறிந்த புது மகாராஜாவான ராவ்ஜோடா, புரவியின் கடிவாளத்தை பிடித்த நிலையிலேயே திகைத்து அமர்ந்துவிட்ட சமயத்தில் மலை

12

12. குகையில்...!

16 January 2024
1
0
0

பெற்றோர் புரிந்த பாவம் சிலரைப் பிடித்து வாட்டுகிறது. உற்றார் செய்த பாவமும் சிலரை விடுவதில்லை. பெற்றோரும் உற்றாரும் விளைவித்த பாவங்களுக்கு எப்பாவமும் அறியாத ஜோடா இலக்கானான். பேரனான மோகுல சிம்மனை சீராட்

13

13. அவள் கனவு!

16 January 2024
1
0
0

மலை அரசியைப் பார்த்து மார்வார் இளவரசனாயிருந்து அரசனாகி, நாட்டையும் பறிகொடுத்த ராவ்ஜோடா, அத்தகைய ஒரு கேள்வியைக் கேட்டான் என்றால், அதற்கு மூலகாரணம் அவளுடைய விபரீதமான பதில்தான். “நாம் தனித்திருப்பது உனக்

14

14. தண்டனை!

17 January 2024
1
0
0

மலை அரசியை தரையில் கிடத்திவிட்டு குகையின் வாயிலுக்கு வந்த ராவ்ஜோடாவின் செவிகளில் ஜகத்சிம்மனும் மற்ற வீரர்களும் ஏறிவந்த புரவியின் குளம்படி ஒலிகள் கூடக் கேட்கவில்லை. குகைக்கு உள்ளே மலை அரசியின் அருகாமைய

15

15. ஹர்பா சங்க்லா!

17 January 2024
0
0
0

மலை அரசியால் மன்னிக்கப்பட்டு ஜோடாகிருக்குச் செல்லும்படி பணிக்கப்பட்ட ஜகத்சிம்மன் உடனடியாகத் திரும்பவில்லை தனது புரவியை நோக்கி நின்ற இடத்திலேயே அசைவற்று நின்றான் பல விநாடிகள். பிறகு சட்டென்று வேகமாக நட

16

16. அந்தி வானம்

17 January 2024
0
0
0

அதிர்ஷ்டம் என்பது ஒரு மனிதனைப் பிடித்துக்கொண்டால் அவனை அது லேசில் விடுவது இல்லை. கூடியவரையில் விடாமல் தொடர்கிறது. துரதிர்ஷ்டக்காரனுக்கு புத்தி பேதலிக்கிறது. காலம் கைகொடுப்பது இல்லை. எதையும் காலங்கடந்த

17

17. வாளின் கதை!

17 January 2024
0
0
0

ஜோடாவைப்பற்றி விசாரித்ததும் மலை அரசியின் மதிமுகம் அந்திவானம் போல் சிவந்துவிட்டதைக் கண்டதுமே நைஷ்டிக பிருமச்சாரியும், எந்தப் பெண்ணையும் கண்ணெடுத்துப் பார்க்காதவரும், பிருமச்சாரி விரதம் கெடக்கூடாது என்ப

18

18. தேடி வந்த அதிர்ஷ்டம்!

17 January 2024
0
0
0

மார்வார் மன்னனையும் மலைக்க வைத்த அந்த விசித்திரக் கதையைச் சொல்லுமுன்பு பிருமச்சாரி அந்தச் சிறு வீட்டின் முற்றத்தை வளைத்திருந்த சுற்றுக் கட்டடத்தின்மீது உட்கார்ந்து கீழ் இருந்த முற்றத்தில் தமது கால்களை

19

19. பாலைவனக் கூடாரம்

17 January 2024
0
0
0

இரவு தந்த இருளில், மலைக்காடு வீசிய இதமான காற்றில், சாளரத்துக்கு அருகில் இருந்த மகிழ மரம் பரவவிட்ட சுகந்தத்தின் சூழ்நிலையில், மலை அரசியை சூழ்ந்து நெருக்கிய ஜோடாவின் கரங்கள் நெருக்கியதோடு நில்லாமல் இன்ப

20

20. கரிய புரவி! கழுத்தில் ஈட்டி!

18 January 2024
0
0
0

ஜோடாவின் பரம விரோதியான சந்தசிம்மனின் மூத்த மகன் காந்தாஜி தன் வாளை உருவிக்கொண்டு ராவ் ஜோடாவை அணுகுவதற்கு முன்பே ஜோடா பிருமச்சாரியளித்த தனது பெரிய வாளை உருவி எதிரியைத் தடுத்தான். அவனைச் சேர்ந்த பத்து பத

21

21. மலைச்சாரல் ஓசை

18 January 2024
0
0
0

கழுத்தில் பதித்திருந்த ஈட்டி சற்றும் அசையாமல் இருந்தாலும் அதில் ஒரு திடமும், ஈட்டியைப் பிடித்திருந்தவன் கையில் ஈவு இரக்கமற்ற ஓர் உறுதியும் இருந்ததைக் கவனித்த ராவ்ஜோடா, தான் சிறிது அசைந்தாலும் அந்த ஈட்

22

22. பரீட்சை

18 January 2024
0
0
0

பாபுஜியின் நூறு புரவிகள் ஏதோ பெரும் புயலைப் போல் மலைச்சரிவில் வந்ததாலும், அவை கண்ணிமைக்கும் நேரத்தில் தனது புரவியில் இருந்து தன்னை வீழ்த்திவிட்டதாலும் மலைப்பாறையில் புரண்ட ஜோடா வெகு துரிதமாகப் பாறையில

23

23. அடவியில் ஒரு காட்சி!

18 January 2024
0
0
0

நீண்டநாள் பிரிந்த மகனை ஆர்வத்துடன் தழுவும் தந்தை போல ஜோடாவை பல விநாடி தழுவி நின்ற பாபுஜி, கடைசியில் அவனுக்குத் தமது கைகளில் இருந்து விடுதலை அளித்தபோது அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் இரண்டு தே

24

24. காதல் பாபமா?

18 January 2024
0
0
0

அடர்ந்த அந்த அடவிக்குள் நாலைந்து பங்கஜங்களை நீர்மட்டத்துக்குமேல் காட்டிக்கொண்டிருந்த சிறு வாவியின் கரையில் மலை அரசியும் ஜோடாவும் உட்கார்ந்திருந்த நிலையைக் கண்டதும் இரண்டு பிருமச்சாரிகளும் தங்கள் பிரும

25

25. ஜோடாவின் துணிவு!

18 January 2024
0
0
0

பாபுஜியும், பிருமச்சாரியும் விழிப்பதைப் பார்த்த ஜோடா, “உங்கள் இருவருக்கும் வரவர சுயநம்பிக்கை போய்விட்டது” என்று ஓர் அம்பை வீசினான். அதுவரை தாங்கள் கண்ட காட்சியால் குழப்பத்தில் இருந்த இரு பிருமச்சாரி

26

26. சாவுகாரைப் பிடித்த சனியன்!

18 January 2024
0
0
0

மண்டோர் அரசின் முதலமைச்சராயிருந்து, சந்தசிம்மன் ஆக்கிரமிப்புக்குப் பின்பு அந்தப் பதவியில் இருந்து விலகி, அரண்மனையில் தமக்கு முன்னாள் மன்னனால் அளிக்கப்பட்டு இருந்த இடத்தையும் சந்தசிம்மனிடம் ஒப்புடைத்து

27

27. அடைத்த கதவு!

18 January 2024
0
0
0

காந்தோஜியின் குறுவாள் அழுந்தியதாலும், எச்சரிக்கையாலும், அவன் பின்னால் நின்றிருந்த மஞ்சாஜியின் உதடுகளில் துளிர்த்திருந்த குரூரப் புன்முறுவலாலும், சாவுகார் அஞ்சி நடுநடுங்கிவிடுவார் என்றோ, முன்னே நடந்துவ

28

28. வேடர் குடிசை மர்மம்!

18 January 2024
0
0
0

கோட்டைக் காவலன் சொன்ன செய்தியால் மலைத்த இருவரில் சாவுகாரே முதலில் திகைப்பை உதறிக்கொண்ட தன்றி சமயாசந்தர்ப்பம் தெரியாமல் கோப்தையும் காட்டினார். “காவலனே! வணிகர்களைத் தடை செய்யும் வழக்கம் மார்வாரில் கிடைய

29

29. உள்ளே ஒரு பெண் குரல்!

18 January 2024
0
0
0

அன்று பகல் முழுவதும் மார்வார் படைத்தலைவனான ஜகத்சிம்மனுக்கும் மண்டோர் கோட்டை காவலனுக்கும் உணவு முதலிய விஷயங்களில் ராஜோபசாரம் நடந்தாலும், அவ்விருவரும் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் எந்த வேடனும் நேரடியாக ப

30

30. ஜோடாவின் துன்மார்க்கம்!

19 January 2024
1
0
0

மூன்று குணங்களை மனிதன் தவிர்ப்பது நல்லது. தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் அக்கறை காட்டுவது, ஒன்று. ஒட்டுக் கேட்பது, இரண்டு. காலதாமதம் செய்வது, மூன்று. இந்த மூன்றில் ஏதாவது ஒரு குணமே யாரையும் இக்கட்ட

31

31. மணக்கோலம்!

19 January 2024
1
0
0

வீரனாகப் படைகளை இயக்கி, இழந்த அரசை மீட்பதில் சித்தத்தை செலுத்த வேண்டிய மார்வார் மன்னன், கேவலம், பெண் மோகம் கொண்டவனாகக் குடிசையில் மறைந்து கொண்டு காலத்தை ஓட்டுவதை நினைத்த ஜகத்சிம்மன் வேடவர் குடிசைக் கூ

32

32. சந்திர முகம்

19 January 2024
1
0
0

மண்டோர் படைத்தலைவனான ஜகத்சிம்மன் தனது மன்னனின் திருமணத்தையே நிறுத்த முயன்றதும், அதற்காகக் கூச்சலிட்டதும் பலருக்கு கோபத்தையும் சிலருக்கு வியப்பையும் உண்டாக்கினாலும், பிருமச்சாரி ஹர்பாசங்க்லாவோ, திருமணப

33

33. இழந்த சொர்க்கம்

19 January 2024
1
0
0

ராவ்ஜோடாவின் அணைப்பில் இருந்த அழகியின் சந்திர வதனத்தைக் கண்டதும் ஜகத்சிம்மன் திகைப்பும் அதிர்ச்சியும் ஒருங்கே அடைந்தான் என்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. அந்த முகம் மலை அரசியின் முகம்! முகத்

34

34. பதவி இறக்கம்!

19 January 2024
1
0
0

மலை அரசியின் மறுபிம்பம் போன்ற மின்னிடையாளுடன், ஜோடா கலந்து விளையாட இருந்த சமயத்தில் பிருமச்சாரி ஹர்பாசங்கலா அங்கு தோன்றியதும் கதவைத் தட்டியதும் பரமானந்தமாயிருந்தது, மண்டோர் படைத்தலைவன் ஜகத்சிம்மனுக்கு

35

35. மீண்டும் வந்தாள்!

19 January 2024
1
0
0

மண்டோரின் படைத்தலைவனாக இருந்த தன்னை திடீரென உபதளபதியாக்கிவிட்ட மன்னன் செயலைக் கண்டு மனம் துடித்த ஜகத்சிம்மன் அந்த அவமானத்தில் இருந்து எப்படி மீளலாம் என்று சிந்தித்தான். அது தவிர இந்த திடீர் பதவி இறக்க

36

36. மண்டோர் சமர்

19 January 2024
1
0
0

கேவலம், ஒரு பெண், புரவியில் இருந்து இறங்க, அவள் காலுக்குப் படியாக தனது இரு கைகளையும் கோத்து நீட்டிய பிருமச்சாரியிடம் பெரிதும் வெறுப்புக் கொண்டான், ஜகத்சிம்மன். பிருமச்சாரி உண்மையில் பெரும் போலி பிருமச

37

37. மணலில் தோய்ந்த ரத்தம்

19 January 2024
1
0
0

மண்டோர் போரில் மாவீரர்களான சந்தசிம்மன் புதல்வர்கள் அடைந்த தோல்விக்குக் காரணம் தாங்கள் போரிடும் எதிரிகளின் திறனை அவர்கள் தவறாக எடைபோட்டதுதான் என்று கர்னல் ஜேம்ஸ்டாட் தமது ராஜபுதன வரலாற்று நூலில் தெளிவா

38

38. துரோகி!

19 January 2024
1
0
0

மலை அரசி தனது வளையல் கரங்களை நீட்டி தன்னைக் கைது செய்யும்படிக் கேட்டுக்கொண்டதும் காந்தோஜி தனது தம்பியின் மரணத்தையும் மறந்து வியப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே அடைந்தான். அப்பொழுதும் மலை அரசி வேட்டுவர

39

39. வேகம்! தாகம்!

19 January 2024
1
0
0

மேவாரின் தலைநகரான சித்தூரில் இருந்து தப்பி ஓடிவந்து லூனி ஆற்றின் உப்பு நீரில் தந்தையின் மரணத்துக்கு நீராடிய அதே துறையில், கிட்டத்தட்ட அதே இடத்தில் தங்கள் வம்ச துர்ப்பாக்கியத்துக்கும் அவப் பெயருக்கும்

40

40. அரசி ஆன, மலை அரசி!

19 January 2024
1
0
0

மலை அடிவாரப் புதரில் மலை அரசி மல்லாந்து கிடந்த கோலம் மண்டோர் மன்னனின் வெறியைக் கிளறிவிடவே, அவன் உலகத்தையே மறந்து, அதுவரை நேர்ந்த நிகழ்ச்சிகளால் மனம் ஏற்படுத்திய கட்டுப்பாடுகளையும் தடைகளையும் உதறி அவள்

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்