shabd-logo

12. குகையில்...!

16 January 2024

5 பார்த்தது 5

பெற்றோர் புரிந்த பாவம் சிலரைப் பிடித்து வாட்டுகிறது. உற்றார் செய்த பாவமும் சிலரை விடுவதில்லை. பெற்றோரும் உற்றாரும் விளைவித்த பாவங்களுக்கு எப்பாவமும் அறியாத ஜோடா இலக்கானான். பேரனான மோகுல சிம்மனை சீராட்டும் முகாந்திரத்தால் மேவார் அரியணையை தந்தை விழுங்கப் பார்த்ததால் ஜோடா சித்தூரை விட்டு ஓட வேண்டியதாகிவிட்டது. சந்தசிம்மன் உறங்கியிருந்த சமயத்தில் இரவில் திடீரென ஜகத்சிம்மன் தாக்குதலைத் துவக்கியதால் ஜோடா மண்டோரில் இருந்தே ஓட வேண்டியதாயிற்று.
இப்படி மற்றவர் துர்ச்செயலால் தலைநகரையும் பறிகொடுத்து மாரூஸ்தலியின் மண்ணில் மயக்கமாக விழுந்துவிட்ட ஜோடாவின் காயத்தைப் பரிசோதித்த மலை அரசி, அது ஆழ்ந்த காயம் என்பதைப் புரிந்துகொண்டதால், சுற்றும் முற்றும் பார்த்தாள். எங்கும் யாரும் தென்படாததால் ஜோடாவின் அங்கியைக் கிழித்து தற்கால சாந்தியாக அவன் காயத்தை இறுகக் கட்டி இரத்தம் வெளியேறுவதை நிறுத்தினாள். அவன் முகத்தை நீரால் நனைத்தால் சிறிது சுரணை வரும் என்ற காரணத்தால், அவன் தலையை தன் மடியிலிருந்து இறக்கி மணலில் கிடத்திவிட்டு மீண்டும் மலைச்சரிவில் ஏறிச் சென்றாள். அங்கிருந்த ஒரு சிறு ஊற்றில் இருந்து இரு கைகளிலும் நீரை ஏந்தி வந்து அவன் முகத்தில் தெளிக்கவே, மெள்ளக் கண்விழித்த ஜோடா, தன்மீது குனிந்து நோக்கிய முகத்தைக் கண்டு பிரமித்தான். “இது சொப்பனம். மலை அரசி மீண்டும் என்னிடம் வரமாட்டாள்” என்று முணுமுணுத்துக்கொண்டு மறுபடியும் கண்களை மூடிக் கொண்டான்.
அவன் முணுமுணுத்தது அவள் காதில் விழவே செய்தது. அத்தனை துன்பச் சமயத்திலும் லேசாகப் புன்முறுவல் கொண்ட மலை அரசி “ஜோடா, என்னைப் பார். நீ காண்பது கனவல்ல” என்றாள்.
மெள்ளக் கண்விழித்த ஜோடா “மலை அரசி! நீ இங்கு எப்படி வந்தாய்? எதற்காக என்னைவிட்டுப் போனாய்?” என்று முணுமுணுத்தான்.
மலை அரசி மறுபடியும் அவன் தலையை எடுத்துத் தனது மடியில் வைத்துக் கொண்டாள். சிறிதாயிருந்த மரவுரி சிறிது அகன்றுவிட்டதால், வழவழத்த அவள் தொடைகளின் மீது தலை கிடந்தது. பெண்ணின் மடியளித்த இன்பத்தை நினைத்த ஜோடா “சொர்க்கம் என்று சொல்வார்களே, அது மலை அரசியின் மடியாகத்தான் இருக்கும்” என்று சொன்னான் வாய்விட்டு. அத்துடன் அவள் மென்மையும் திண்மையும் கலந்த தொடைகளில் தலையைப் புரட்டினான்.
மலை அரசி பரிதாபத்தால் அவன் கன்னங்களைத் தடவிக் கொடுத்தாள். பிறகு ஆகாயத்தைப் பார்த்தாள். “விடிய அதிக நேரமில்லை. நாம் மறைவிடத்திற்குப் போக வேண்டும். சற்று சமாளித்துக்கொண்டு எழுந்திருக்க முடியுமா?” என்று ஜோடாவை வினவினாள்.
“முடியும்” என்றான் ஜோடா பலவீனமான குரலில்.
“சரி எழுந்திரு. என்னை நன்றாகப் பிடித்துக்கொள்” என்று கூறிய மலை அரசி, அவன் வலது கையைத் தனது கழுத்தைச் சுற்றிப் போட்டுக் கொண்டாள். தனது கைகள் இரண்டாலும் அவனைத் தூக்கினாள் மெதுவாக. முதலில் முக்கி முனகி மண்டியிட்டு அவளைப் பற்றிக்கொண்டு எழுந்து நின்ற ஜோடா, வேல் பாய்ந்த தனது இடையைத் தொட்டுப் பார்த்தான். கிழிந்திருந்த மேலங்கியையும் கவனித்தான். மலை அரசியால் தான் பிழைத்திருப்பதைப் புரிந்து கொண்டு, மெள்ள அவளை நோக்கி, “மலை அரசி! உனக்கு வைத்தியமும் தெரியுமா?” என்று வினவினான்.
“தெரியும். காட்டில் இருப்பவர்களுக்கு முதலில் வைத்தியம் தேவையில்லை. அப்படி இயற்கையையும் மீறி நோய் வந்தால், அதைச் சமாளிக்க இயற்கை எத்தனையோ மூலிகைகளை அளித்திருக்கிறது” என்று பதில் சொன்ன மலை அரசி அவனை மெள்ள புரவியிடம் நடத்திச் சென்றாள்.
ஜோடா சிரமப்பட்டு முக்கி முனகி புரவியில் ஏறிப் படுத்துக் கொண்டான்.
மலை அரசி புரவியின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு அவனைப் பக்கத்து மலைமீது அழைத்துச் சென்றாள். சிறிது தூரம் சென்றதும் மரங்கள் நெருக்கமாயிருந்த பகுதியில் அவனை இறக்கி மரச்சருகுகளைத் திரட்டி படுக்கையாக்கி அவனைப் படுக்க வைத்தாள். பிறகு எங்கோ சென்று சில மூலிகைகளைப் பிடுங்கி வந்து, அருகேயிருந்த மலைச்சுனைக்கு அருகில் உட்கார்ந்து அவற்றை அங்கிருந்த ஒரு கல்லை வைத்து நசுக்கினாள். அடுத்து ஜோடா படுத்திருந்த இடம் வந்து அவனைத் திரும்பச் சொல்லி பழைய கட்டை அவிழ்த்துவிட்டு, காயத்தில் மூலிகைச் சாற்றை இருமுறை கையால் இறுகிப் பிழிந்தாள். கசங்கிய மூலிகை இலைகளை காயத்தில் அடைத்து, மீண்டும் அதைக் கட்டினாள். “நாளைக்கு எழுந்து நடக்க முடியும்” என்று சொன்னாள்.
“நாளைவரை இங்கிருக்க முடியாது. எதிரிகள் தேடி வருவார்கள்” என்றான் ஜோடா.
“இங்கு யாரும் வரமாட்டார்கள்” என்று மலை அரசி திட்டமாகச் சொன்னாள்.
“உனக்கு எப்படித் தெரியும்?”
“மண்டோர் இருக்கும் மலைத் தொடரில்தான் ஜோடா கிரும் இருக்கிறது. இங்கிருந்து தெற்கே சரியாக அரை காதம் ஜோகி இருக்கும் மலை உச்சி. இந்தப் பகுதி முழுவதும் அவரது ஆணைக்கு உட்பட்டது.”
“அதனால்?”
“இங்கு யாரும் பூசல்களில் இறங்க முடியாது. இறங்கினால், ஜோகியின் சாபத்துக்கு இலக்காவார்கள். அவர் சாபம்... நினைக்க பயங்கரம்” என்ற மலை அரசி, “அஞ்சாமல் படுத்திரு ஜோடா. இங்கு ஜோகியின் சட்டதிட்டங்களை மீறி யாராவது வந்தாலும் நான் கவனித்துக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டு எழுந்து போகத் தொடங்கினாள்.
“எங்கு போகிறாய் மலை அரசி?” என்று கேட்டான் ஜோடா.
“நீராடி வருகிறேன். உணவு தயார் செய்ய வேண்டும் அல்லவா?” என்று கூறிவிட்டு சுனையை நோக்கிச் சென்றாள்.
சுனையை நெருங்கியதும் ஒரு மரத்தின் மறைவுக்குச் சென்று மரவுரியையும் மேலே போர்த்தியிருந்த புலித்தோலையும் உதறினாள். இதையெல்லாம் ஒருக்களித்த நிலையில் இருந்து கவனித்த ஜோடா ஏக்கப் பெருமூச்சு விட்டான். இருப்பினும் மரத்தின் மறைவை விட்டு அவள் வெளிவந்துதானே ஆக வேண்டும் என்ற நினைப்பில் இருந்த ஜோடாவுக்குப் பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. மரத்தின் மறைவில் இருந்த மலை அரசி, மின்னல் வேகத்தில் ஆழமான மலைச்சுனையில் பாய்ந்துவிட்டாள். ஏதோ ஒரு நட்சத்திரம் குறுக்கே ஓடியதுபோல் தெரிந்த அவள் சரீரம் நீருக்குள் மறைந்துவிட்டதால், எதையும் காணமுடியாத தனது துரதிருஷ்டத்தை நினைத்துப் பெரிதும் மனம் நொந்தான் மார்வார் மன்னன்.
“எத்தனையோ ராஜபுத்திரர்கள் ராஜபுத்திரப் பெண்களைத் தூக்கிக்கொண்டு போய் ராக்ஷஸ விவாகம் செய்து கொள்கிறார்கள். என் அருகிலேயே இருக்கும் பெண்ணை நான் நெருங்கக்கூட முடியவில்லை. நான்தான் பெண்போல் இருக்கிறேன். அவள் தான் என் காயத்துக்குக் கட்டுப் போடுகிறாள். என்னைக் காப்பாற்றி புரவியில் ஏற்றி மறைவிடம் அழைத்து வருகிறாள். மண்டோர் வீதியில் அவள் புரவியில் அமர்ந்துவர கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு நான் நடந்து சென்றேன். அப்பொழுதே மக்கள் நகைத்தார்கள். அரண்மனையில் கூட சலசலப்பு அதைப்பற்றி. இப்பொழுது கதை தலைகீழாகிவிட்டது. நான் புரவியில் வர அவள் கடிவாளத்தைப் பிடித்து வந்தாள். இப்பொழுது அவள் இஷ்டப்படி நான் ஆடுகிறேன்” என்று உள்ளூர எண்ணினான். இப்படி அவன் சிந்தனையில் இருந்த சமயத்தில் மலை அரசி நீராடி மரவுரி புலித்தோல் தரித்து அவன் முன்பு வந்து நின்றாள். ஈரத்தலையையும் அவிழ்த்து உதறினாள். அதிலிருந்த தண்ணீர்த் திவலைகள் ஜோடாவின் முகத்தின் மீது விழுந்தன. அந்தத் துளிகள் அவனுக்குப் புத்துயிரைத் தந்தன. அவன் இதழ்களில் புன்முறுவல் உதயமாயிற்று.
மலை அரசியும் பதிலுக்குப் புன்முறுவல் செய்தாள். “ஜோடா! எழுந்திரு நாம் அந்த குகைக்குப் போவோம்” என்று எட்ட இருந்த குகையைக் காட்டினாள்.
அப்பொழுது, பொழுது நன்றாகவே புலர்ந்துவிட்டதால் அந்த மலைக்காட்டுப் பிரதேசம் ரம்மியமாயிருந்தது. ஜோடாவை எழுந்திருக்கச் சொன்ன மலை அரசி அவனுக்கு எந்தவித உதவியையும் செய்ய முன்வரவில்லை.
ஜோடா கையை நீட்டினான் அவளை நோக்கி, “அவசியமில்லை ஜோடா. நீயே எழுந்திருக்கலாம். இத்தனை நேரம் பச்சிலை உன் காயத்தின் இரத்தத்தை அடியோடு நிறுத்தியிருக்கும்” என்றாள்.
ஜோடா மெள்ள எழுந்திருந்தான். காயத்தில் வலி தெரியவில்லை. நன்றாகவும் அவனால் நிற்க முடிந்தது. இரண்டடி நடந்து பார்த்தான். எந்தவித வலியும் இல்லை. “இதென்ன பச்சிலை மலை அரசி?” என்று வினவினான் ஜோடா, வியப்புடன்.
“உனக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை. நீ மருத்துவன் அல்ல” என்றாள் மலை அரசி.
“நீ மருத்துவச்சியா?” என்று ஜோடா கேட்டான்.
“இல்லை. ஆனால் மருத்துவம் தெரியும். ஜோகி சில இரகசிய மூலிகை வைத்தியங்களை கற்றுக் கொடுத்திருக்கிறார்.”
“எதற்கு?”
“மலைப் பிராணிகளுக்கு நோய் வருமானால் சிகிச்சை செய்ய.”
“ஆடு மாடுகளுக்காக?”
“புலி சிங்கங்களுக்கும் பட்சிகளுக்குங்கூடத்தான்” என்றாள் மலைஅரசி சர்வசாதாரணமாக. “அதனால்தான் பாகுர்ச்சிராவில் பட்சிகள் சரணடைகின்றன. அந்த மலை ஆரோக்கியமானது. ஜோகி அங்கிருப்பதால் மலையின் மகத்துவம் பன்மடங்காகிறது” என்ற மலை அரசி மேற்கொண்டு ஏதும் பேசாமல் நடந்தாள் குகையை நோக்கி.
ஜோடாவும் புரவியும் அவளைத் தொடர்ந்து சென்றார்கள். குகையை அடைந்ததும் புரவிக்கு கீழேயிருந்த புல்தரையைக் காட்டினாள் மலை அரசி. அவளை உற்று நோக்கிய புரவி தலை குனிந்து புல்லை மேயலாயிற்று. அதன் மீதிருந்த சேணத்தையெல்லாம் கழற்றி அதை சுதந்திரமாகத் திரியவிட்ட மலை அரசி, ஜோடாவை குகைக்குள் அழைத்துச் சென்றாள். “ஜோடா, இங்கேயே படுத்திரு. உணவு கொண்டு வருகிறேன்” என்று கூறிச் சென்றாள்.
மலை அரசி வெயில் நன்றாக ஏறிய பின்பே திரும்பினாள். அவள் கையில் பழவகைகள் நிரம்ப இருந்தன. எங்கிருந்தோ ஒரு குடுவையும் கண்டுபிடித்து அதில் சிறிது பாலும் கொண்டு வந்திருந்தாள். ஜோடாவுக்கு பழங்களையும் பாலையும் அளித்த பிறகு, தானும் சிறிது உண்டு மறுபடியும் வெளியே சென்றாள். திரும்பி அவள் இரவு முற்றிய பின்புதான் வந்தாள். அவள் கைக்குடுவையில் சுடச்சுட பால் இருந்தது. “ஜோடா! இதைக் குடி” என்றாள்.
ஜோடா அதை வாங்கி அருந்தினான். ஏதோ புத்துயிர் பெற்றுவிட்டதாக அவனுக்குத் தோன்றியது. அவன் பலமும் மீண்டது. “மலை அரசி! ஏது பால்?” என்று கேட்டான் ஜோடா.
“சிறிது தூரத்தில் யாதவர் குடிசைகள் இருக்கின்றன. அங்கிருந்து வாங்கி வந்தேன்” என்றாள் மலை அரசி.
“அப்படியானால் நாம் அங்கேயே தங்கலாமே” என்றான் ஜோடா.
“அது சவுகரியப்படாது” என்றாள் மலை அரசி.
“ஏன்?”
“நாம் தனித்திருக்க முடியாது.”
“எதற்காகத் தனித்திருக்க வேண்டும்?”
இதைக்கேட்ட மலை அரசி நகைத்தாள். “ஜோடா! நீ ஒரு முட்டாள்” என்று கூறினாள். அடுத்து வேறொன்றும் சொன்னாள். அதைக் கேட்ட ஜோடா திணறினான். திகைத்தான். “மலை அரசி! உனக்குப் பைத்தியம் இல்லையே” என்றும் குளறினான்.

சாண்டில்யன் மூலம் மேலும் புத்தகங்கள்

40
கட்டுரைகள்
மலை அரசி
0.0
மாலை அரசி தமிழ் மொழியில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான வரலாற்று நாவல். பிரபல தமிழ் எழுத்தாளர் சாண்டில்யன் இந்த மனதை மயக்கும் புத்தகத்தை எழுதியுள்ளார். சாண்டில்யன் வரலாற்றுப் புனைகதைகளுக்காகப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார், மேலும் அவர் தனது வரலாற்று, காதல் மற்றும் சாகச நாவல்களுக்காக நன்கு அறியப்பட்டவர், இது பெரும்பாலும் சோழ மற்றும் பாண்டிய பேரரசுகளின் காலங்களில் அமைக்கப்பட்டது.
1

1. சுடர்க்கொடி

15 January 2024
0
0
0

சரித்திரம், பூமி, வாழ்க்கையின் கர்ம பலன்கள் ஆகிய சகலத்திலும் ஒரு சுழற்சியும் தொடர்ச்சியும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுவதில் எத்தனை உண்மையிருக்கிறதென்பதை, சுற்றிலும் தன்னை எரித்துக்கொண்டிருந்த மணற்பரப்

2

2. விளக்கில் விரிந்த கதை

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் மலைக்குகை வாயிலில், மரங்கள் அடர்த்தியாயிருந்ததால் இருள் கடுமையாக இருந்த அந்தப் பிராந்தியத்தில், பந்தத்தை கையில் ஏந்தி அதன் சுடர் முகத்தில் வீச சுடர்க்கொடியென்ற காரணப் பெயருக்கு முற

3

3. துணைவன்!

15 January 2024
0
0
0

விரிந்து படர்ந்து எரிந்த விளக்கின் சுடரை விந்தைக் கண்களுடன் நோக்கிய ராவ்ஜோடா. அதில் விரிந்த கதையைக் கண்டதும் மெய்சிலிர்த்துப் போனான். முதலில் அந்தச் சுடரில் ஏதும் தெரியாததால் புரியாமல் விழித்த மார்வ

4

4. இரு விந்தைகள்

15 January 2024
0
0
0

மலை அரசியின் மதுர இதழ்களில் இருந்து உதிர்ந்த அந்தக் கொடுமையான சொற்களைக் கேட்டதும், வியப்பும் அச்சமும் கலந்த உணர்ச்சிகள் ராவ்ஜோடாவின் இதயத்தை மளடுருவிச் சென்றன. அப்படி அவன் நடுங்கியதை பக்கத்தில் உட்கார

5

5. நான் வருவேன்

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் குகையைவிட்டு வெளியேறிய மலை அரசி, வேகமாக மலையின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடந்து சென்றதும், விளைவித்த இரண்டு விந்தைகளும் மகாவீரனான மார்வார் இளவரசனை திகில் கொள்ளச் செய்தன என்றால்,

6

6. பெண் துணை!

15 January 2024
0
0
0

பெண்ணின் லாவண்யத்தால் ஆண்மகன் அறிவு அழிந்துவிடுகிறது. கவர்ச்சியான கன்னியின் முன்பாக எந்த ஆண்மகனும் சுயபுத்தியை இழந்துவிடுகிறான். இந்தப் பழைய நிகழ்ச்சிகளுக்கு அத்தாட்சியாக நின்றான் ராவ்ஜோடா. “உனது வீ

7

7. சாகுந்தலம்

16 January 2024
1
0
0

பந்தத்தையும் அணைத்துவிட்டு இருண்ட குகைக்குள் தன்னை வா வா என்று அழைத்த அந்த பருவப் பாவையின் துணிவை நினைத்து ஜோடா திகிலுக்கு இலக்காகி நின்ற நேரத்தில், மலைஅரசியே குகை வாயிலைவிட்டு அவனை அணுகி, அவன் கையைப்

8

8. காட்டு மலர்

16 January 2024
1
0
0

பாவின் வாலிப முரட்டு முகம் அவள் வழவழத்த கழுத்தில் திடீரென அழுந்திப் புரண்டபோது, மலை அரசியின் இதயமும் அந்த வாலிபன் உள்ளத்தைப்போலவே உணர்ச்சி அலைகளில் உருண்டது. அத்தனை உணர்ச்சி எழுச்சியிலும் அரசகுமாரன்

9

9. நிலையற்ற அரசு

16 January 2024
1
0
0

மலை அரசியை “காட்டு மலர்” என்று குறிப்பிட்டதோடு தனது பேச்சை ஜோடா நிறுத்திக்கொண்டு இருந்தால் ஜகத்சிம்மனின் கோபம் தலைக்கு ஏறியிருக்காது. “இவள் மார்வார் ராணி” என்றும் சொல்லவே ஜகத்சிம்மனுக்கு கோபத்துடன் தி

10

10. பறந்த கிளி! தொடர்ந்த துன்பம்!

16 January 2024
1
0
0

மலை அரசியின் சொற்களோ உத்தரவுகளோ மந்திராலோசனை சபையில் இருந்தவர்களுக்குக் கட்டோடு பிடிக்காதிருந்தாலும் அவள் சொன்னதற்கு எல்லாம் ஜோடா தலையை ஆட்டியதால், அவள் கட்டளைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் எல்லோருமே முன

11

11. மண்டோர் ரணகளம்

16 January 2024
1
0
0

மண்டோரின் பெரும் கதவுகள் சாத்தப்பட்டதாலும் போர்முரசு பலமாக ஒலித்ததாலும் வருவது என்னவென்பதை அறிந்த புது மகாராஜாவான ராவ்ஜோடா, புரவியின் கடிவாளத்தை பிடித்த நிலையிலேயே திகைத்து அமர்ந்துவிட்ட சமயத்தில் மலை

12

12. குகையில்...!

16 January 2024
1
0
0

பெற்றோர் புரிந்த பாவம் சிலரைப் பிடித்து வாட்டுகிறது. உற்றார் செய்த பாவமும் சிலரை விடுவதில்லை. பெற்றோரும் உற்றாரும் விளைவித்த பாவங்களுக்கு எப்பாவமும் அறியாத ஜோடா இலக்கானான். பேரனான மோகுல சிம்மனை சீராட்

13

13. அவள் கனவு!

16 January 2024
1
0
0

மலை அரசியைப் பார்த்து மார்வார் இளவரசனாயிருந்து அரசனாகி, நாட்டையும் பறிகொடுத்த ராவ்ஜோடா, அத்தகைய ஒரு கேள்வியைக் கேட்டான் என்றால், அதற்கு மூலகாரணம் அவளுடைய விபரீதமான பதில்தான். “நாம் தனித்திருப்பது உனக்

14

14. தண்டனை!

17 January 2024
1
0
0

மலை அரசியை தரையில் கிடத்திவிட்டு குகையின் வாயிலுக்கு வந்த ராவ்ஜோடாவின் செவிகளில் ஜகத்சிம்மனும் மற்ற வீரர்களும் ஏறிவந்த புரவியின் குளம்படி ஒலிகள் கூடக் கேட்கவில்லை. குகைக்கு உள்ளே மலை அரசியின் அருகாமைய

15

15. ஹர்பா சங்க்லா!

17 January 2024
0
0
0

மலை அரசியால் மன்னிக்கப்பட்டு ஜோடாகிருக்குச் செல்லும்படி பணிக்கப்பட்ட ஜகத்சிம்மன் உடனடியாகத் திரும்பவில்லை தனது புரவியை நோக்கி நின்ற இடத்திலேயே அசைவற்று நின்றான் பல விநாடிகள். பிறகு சட்டென்று வேகமாக நட

16

16. அந்தி வானம்

17 January 2024
0
0
0

அதிர்ஷ்டம் என்பது ஒரு மனிதனைப் பிடித்துக்கொண்டால் அவனை அது லேசில் விடுவது இல்லை. கூடியவரையில் விடாமல் தொடர்கிறது. துரதிர்ஷ்டக்காரனுக்கு புத்தி பேதலிக்கிறது. காலம் கைகொடுப்பது இல்லை. எதையும் காலங்கடந்த

17

17. வாளின் கதை!

17 January 2024
0
0
0

ஜோடாவைப்பற்றி விசாரித்ததும் மலை அரசியின் மதிமுகம் அந்திவானம் போல் சிவந்துவிட்டதைக் கண்டதுமே நைஷ்டிக பிருமச்சாரியும், எந்தப் பெண்ணையும் கண்ணெடுத்துப் பார்க்காதவரும், பிருமச்சாரி விரதம் கெடக்கூடாது என்ப

18

18. தேடி வந்த அதிர்ஷ்டம்!

17 January 2024
0
0
0

மார்வார் மன்னனையும் மலைக்க வைத்த அந்த விசித்திரக் கதையைச் சொல்லுமுன்பு பிருமச்சாரி அந்தச் சிறு வீட்டின் முற்றத்தை வளைத்திருந்த சுற்றுக் கட்டடத்தின்மீது உட்கார்ந்து கீழ் இருந்த முற்றத்தில் தமது கால்களை

19

19. பாலைவனக் கூடாரம்

17 January 2024
0
0
0

இரவு தந்த இருளில், மலைக்காடு வீசிய இதமான காற்றில், சாளரத்துக்கு அருகில் இருந்த மகிழ மரம் பரவவிட்ட சுகந்தத்தின் சூழ்நிலையில், மலை அரசியை சூழ்ந்து நெருக்கிய ஜோடாவின் கரங்கள் நெருக்கியதோடு நில்லாமல் இன்ப

20

20. கரிய புரவி! கழுத்தில் ஈட்டி!

18 January 2024
0
0
0

ஜோடாவின் பரம விரோதியான சந்தசிம்மனின் மூத்த மகன் காந்தாஜி தன் வாளை உருவிக்கொண்டு ராவ் ஜோடாவை அணுகுவதற்கு முன்பே ஜோடா பிருமச்சாரியளித்த தனது பெரிய வாளை உருவி எதிரியைத் தடுத்தான். அவனைச் சேர்ந்த பத்து பத

21

21. மலைச்சாரல் ஓசை

18 January 2024
0
0
0

கழுத்தில் பதித்திருந்த ஈட்டி சற்றும் அசையாமல் இருந்தாலும் அதில் ஒரு திடமும், ஈட்டியைப் பிடித்திருந்தவன் கையில் ஈவு இரக்கமற்ற ஓர் உறுதியும் இருந்ததைக் கவனித்த ராவ்ஜோடா, தான் சிறிது அசைந்தாலும் அந்த ஈட்

22

22. பரீட்சை

18 January 2024
0
0
0

பாபுஜியின் நூறு புரவிகள் ஏதோ பெரும் புயலைப் போல் மலைச்சரிவில் வந்ததாலும், அவை கண்ணிமைக்கும் நேரத்தில் தனது புரவியில் இருந்து தன்னை வீழ்த்திவிட்டதாலும் மலைப்பாறையில் புரண்ட ஜோடா வெகு துரிதமாகப் பாறையில

23

23. அடவியில் ஒரு காட்சி!

18 January 2024
0
0
0

நீண்டநாள் பிரிந்த மகனை ஆர்வத்துடன் தழுவும் தந்தை போல ஜோடாவை பல விநாடி தழுவி நின்ற பாபுஜி, கடைசியில் அவனுக்குத் தமது கைகளில் இருந்து விடுதலை அளித்தபோது அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் இரண்டு தே

24

24. காதல் பாபமா?

18 January 2024
0
0
0

அடர்ந்த அந்த அடவிக்குள் நாலைந்து பங்கஜங்களை நீர்மட்டத்துக்குமேல் காட்டிக்கொண்டிருந்த சிறு வாவியின் கரையில் மலை அரசியும் ஜோடாவும் உட்கார்ந்திருந்த நிலையைக் கண்டதும் இரண்டு பிருமச்சாரிகளும் தங்கள் பிரும

25

25. ஜோடாவின் துணிவு!

18 January 2024
0
0
0

பாபுஜியும், பிருமச்சாரியும் விழிப்பதைப் பார்த்த ஜோடா, “உங்கள் இருவருக்கும் வரவர சுயநம்பிக்கை போய்விட்டது” என்று ஓர் அம்பை வீசினான். அதுவரை தாங்கள் கண்ட காட்சியால் குழப்பத்தில் இருந்த இரு பிருமச்சாரி

26

26. சாவுகாரைப் பிடித்த சனியன்!

18 January 2024
0
0
0

மண்டோர் அரசின் முதலமைச்சராயிருந்து, சந்தசிம்மன் ஆக்கிரமிப்புக்குப் பின்பு அந்தப் பதவியில் இருந்து விலகி, அரண்மனையில் தமக்கு முன்னாள் மன்னனால் அளிக்கப்பட்டு இருந்த இடத்தையும் சந்தசிம்மனிடம் ஒப்புடைத்து

27

27. அடைத்த கதவு!

18 January 2024
0
0
0

காந்தோஜியின் குறுவாள் அழுந்தியதாலும், எச்சரிக்கையாலும், அவன் பின்னால் நின்றிருந்த மஞ்சாஜியின் உதடுகளில் துளிர்த்திருந்த குரூரப் புன்முறுவலாலும், சாவுகார் அஞ்சி நடுநடுங்கிவிடுவார் என்றோ, முன்னே நடந்துவ

28

28. வேடர் குடிசை மர்மம்!

18 January 2024
0
0
0

கோட்டைக் காவலன் சொன்ன செய்தியால் மலைத்த இருவரில் சாவுகாரே முதலில் திகைப்பை உதறிக்கொண்ட தன்றி சமயாசந்தர்ப்பம் தெரியாமல் கோப்தையும் காட்டினார். “காவலனே! வணிகர்களைத் தடை செய்யும் வழக்கம் மார்வாரில் கிடைய

29

29. உள்ளே ஒரு பெண் குரல்!

18 January 2024
0
0
0

அன்று பகல் முழுவதும் மார்வார் படைத்தலைவனான ஜகத்சிம்மனுக்கும் மண்டோர் கோட்டை காவலனுக்கும் உணவு முதலிய விஷயங்களில் ராஜோபசாரம் நடந்தாலும், அவ்விருவரும் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் எந்த வேடனும் நேரடியாக ப

30

30. ஜோடாவின் துன்மார்க்கம்!

19 January 2024
1
0
0

மூன்று குணங்களை மனிதன் தவிர்ப்பது நல்லது. தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் அக்கறை காட்டுவது, ஒன்று. ஒட்டுக் கேட்பது, இரண்டு. காலதாமதம் செய்வது, மூன்று. இந்த மூன்றில் ஏதாவது ஒரு குணமே யாரையும் இக்கட்ட

31

31. மணக்கோலம்!

19 January 2024
1
0
0

வீரனாகப் படைகளை இயக்கி, இழந்த அரசை மீட்பதில் சித்தத்தை செலுத்த வேண்டிய மார்வார் மன்னன், கேவலம், பெண் மோகம் கொண்டவனாகக் குடிசையில் மறைந்து கொண்டு காலத்தை ஓட்டுவதை நினைத்த ஜகத்சிம்மன் வேடவர் குடிசைக் கூ

32

32. சந்திர முகம்

19 January 2024
1
0
0

மண்டோர் படைத்தலைவனான ஜகத்சிம்மன் தனது மன்னனின் திருமணத்தையே நிறுத்த முயன்றதும், அதற்காகக் கூச்சலிட்டதும் பலருக்கு கோபத்தையும் சிலருக்கு வியப்பையும் உண்டாக்கினாலும், பிருமச்சாரி ஹர்பாசங்க்லாவோ, திருமணப

33

33. இழந்த சொர்க்கம்

19 January 2024
1
0
0

ராவ்ஜோடாவின் அணைப்பில் இருந்த அழகியின் சந்திர வதனத்தைக் கண்டதும் ஜகத்சிம்மன் திகைப்பும் அதிர்ச்சியும் ஒருங்கே அடைந்தான் என்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. அந்த முகம் மலை அரசியின் முகம்! முகத்

34

34. பதவி இறக்கம்!

19 January 2024
1
0
0

மலை அரசியின் மறுபிம்பம் போன்ற மின்னிடையாளுடன், ஜோடா கலந்து விளையாட இருந்த சமயத்தில் பிருமச்சாரி ஹர்பாசங்கலா அங்கு தோன்றியதும் கதவைத் தட்டியதும் பரமானந்தமாயிருந்தது, மண்டோர் படைத்தலைவன் ஜகத்சிம்மனுக்கு

35

35. மீண்டும் வந்தாள்!

19 January 2024
1
0
0

மண்டோரின் படைத்தலைவனாக இருந்த தன்னை திடீரென உபதளபதியாக்கிவிட்ட மன்னன் செயலைக் கண்டு மனம் துடித்த ஜகத்சிம்மன் அந்த அவமானத்தில் இருந்து எப்படி மீளலாம் என்று சிந்தித்தான். அது தவிர இந்த திடீர் பதவி இறக்க

36

36. மண்டோர் சமர்

19 January 2024
1
0
0

கேவலம், ஒரு பெண், புரவியில் இருந்து இறங்க, அவள் காலுக்குப் படியாக தனது இரு கைகளையும் கோத்து நீட்டிய பிருமச்சாரியிடம் பெரிதும் வெறுப்புக் கொண்டான், ஜகத்சிம்மன். பிருமச்சாரி உண்மையில் பெரும் போலி பிருமச

37

37. மணலில் தோய்ந்த ரத்தம்

19 January 2024
1
0
0

மண்டோர் போரில் மாவீரர்களான சந்தசிம்மன் புதல்வர்கள் அடைந்த தோல்விக்குக் காரணம் தாங்கள் போரிடும் எதிரிகளின் திறனை அவர்கள் தவறாக எடைபோட்டதுதான் என்று கர்னல் ஜேம்ஸ்டாட் தமது ராஜபுதன வரலாற்று நூலில் தெளிவா

38

38. துரோகி!

19 January 2024
1
0
0

மலை அரசி தனது வளையல் கரங்களை நீட்டி தன்னைக் கைது செய்யும்படிக் கேட்டுக்கொண்டதும் காந்தோஜி தனது தம்பியின் மரணத்தையும் மறந்து வியப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே அடைந்தான். அப்பொழுதும் மலை அரசி வேட்டுவர

39

39. வேகம்! தாகம்!

19 January 2024
1
0
0

மேவாரின் தலைநகரான சித்தூரில் இருந்து தப்பி ஓடிவந்து லூனி ஆற்றின் உப்பு நீரில் தந்தையின் மரணத்துக்கு நீராடிய அதே துறையில், கிட்டத்தட்ட அதே இடத்தில் தங்கள் வம்ச துர்ப்பாக்கியத்துக்கும் அவப் பெயருக்கும்

40

40. அரசி ஆன, மலை அரசி!

19 January 2024
1
0
0

மலை அடிவாரப் புதரில் மலை அரசி மல்லாந்து கிடந்த கோலம் மண்டோர் மன்னனின் வெறியைக் கிளறிவிடவே, அவன் உலகத்தையே மறந்து, அதுவரை நேர்ந்த நிகழ்ச்சிகளால் மனம் ஏற்படுத்திய கட்டுப்பாடுகளையும் தடைகளையும் உதறி அவள்

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்