shabd-logo

9. நிலையற்ற அரசு

16 January 2024

2 பார்த்தது 2

மலை அரசியை “காட்டு மலர்” என்று குறிப்பிட்டதோடு தனது பேச்சை ஜோடா நிறுத்திக்கொண்டு இருந்தால் ஜகத்சிம்மனின் கோபம் தலைக்கு ஏறியிருக்காது. “இவள் மார்வார் ராணி” என்றும் சொல்லவே ஜகத்சிம்மனுக்கு கோபத்துடன் திக்பிரமையும் சித்தத்தைச் சூழ்ந்து கொண்டதால், அவன் பேச நா எழாமல் நின்றான் பல விநாடிகள். பிறகு பேசியபோதும் பேச்சில் அச்சமும் குழப்பமும் கலந்து கிடந்தன. “இவளா! மார்வார் ராணியா!” என்று மார்வார் படைத் தலைவன் கேட்டபோது, ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டது போன்ற ஒலி அதில் பரவிக் கிடந்தது.
புரவியின் கடிவாளத்தை ஏந்திக்கொண்டு தரையில் நின்ற ஜோடா தனது படைத் தலைவனை சிறிது சினத்துடன் நோக்கினான். “ஜகத்சிம்மன்! உனக்கு மார்வார் ராணியைப் பற்றிப் பேசும் முறையே தெரியவில்லை. ‘இவளா’ என்று கேட்பது பெரும் குற்றம்” என்று சுட்டிக் காட்டவும் செய்தான் ராவ்ஜோடா.
ஜகத்சிம்மன் இதழ்களில் இகழ்ச்சிப் புன்முறுவல் அரும்பிற்று. மலை அரசிக்குத் தலைவணங்கிவிட்டு ஜோடாவை நோக்கித் திரும்பி “இவர்கள் உடனடியாக ராணி ஆக முடியாது” என்றான்.
“ஏன்?” ஜோடாவின் குரலில் சீற்றம் இருந்தது.
“தாங்கள் இன்னும் மகாராஜா ஆகவில்லை. நாளைக்கு மறுநாளைக்கு மறுநாள் அதற்கு நாள் வைத்திருக்கிறார் புரோகிதர். அதற்குப் பின்புதான் தாங்கள் மகாராஜா. மகாராஜாவுக்குத்தான் மகாராணி உண்டு. ராஜபுதனத்து சம்பிரதாயம் தாங்கள் அறியாதது அல்ல” என்று விளக்கினான் ஜகத்சிம்மன்.
“புரோகிதர் குறிப்பிட்ட நாளில் முடிசூட்டு நடக்காது. அதை நாளைக்கே நடத்திவிடுங்கள்” என்று குறுக்கிட்டுப் பேசிய மலை அரசி, “சேனாதிபதி! மீதி விஷயங்களை நாம் அரண்மனையில் பேசலாம்” என்றும் சொன்னாள் கட்டளையிடும் தோரணையில் சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல் புரவியை நகர்த்தவும் செய்தாள், தனது கால்களை அதன் வயிற்றில் உதைத்து.
அதற்குமேல் நிற்கவோ பேசவோ சந்தர்ப்பம் கிடைக்காததால் ஜோடா புரவிக்கு முன்பு கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு மார்வார் தலைநகரத்தின் ராஜவீதியில் நடந்தான். படைத்தலைவனும் இளவரசனைப் பின்பற்றிச் சென்றான்.
அரண்மனையின் முதல் கட்டுக்கு வந்ததுமே பத்து பணிப்பெண்கள் மலை அரசியை சூழ்ந்துகொண்டனர். “தாங்கள் இளவரசருடன் செல்ல முடியாது. இப்படி வரவேண்டும்” என்று மற்றொரு புறமாக வழிகாட்டினார்கள்.
பெண்கள் மலை அரசியைச் சூழ்ந்ததும் ஜோடா சிறிது விலகி நின்றான். “மகாராணி! சீக்கிரம் உங்களை சந்திக்கிறேன்” என்று கூறி வேறுபுறம் திரும்பிச் சென்றான். பெண்கள் மலை அரசியை பெரிய அரசி இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.
ஜோடாவின் தந்தை மேவார் தலைநகரில் கொல்லப்பட்ட செய்தியை முன்னதாகக் கேள்விப்பட்டு இருந்ததால் முகத்தை நன்றாக மறைத்துக்கொண்டு துக்கக் கோலத்தில் தனியாக பஞ்சணையில் அமர்ந்திருந்தாள் மார்வார் மகாராணி. அவளுக்குப் பணிவதைவிட்டு நேராக அவள் இருந்த பஞ்சணையை அடைந்த மலை அரசி அவள் அருகில் உட்கார்ந்து அவளை இறுக அணைத்துக் கொண்டாள். “மகாராணி! இந்த உலகம் இன்பமும் துன்பமும் கலந்தது. கிரமமும் அக்கிரமமும் கலந்தது. ஆயைால் கவலையை விடுங்கள். உங்கள் புதல்வர் மார்வாருக்கு ஜெயத்தையும் மங்களத்தையும் அளிப்பார்” என்று தைரியமும் தத்துவமும் கலந்த சொற்களை உதிர்த்தாள்.
அந்த அணைப்பில், அந்த சொற்களில், சிறிது ஆறுதலைப் பெற்ற மகாராணி, “பெண்ணே! நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டாள்.
“ஜோட்கிர்ரில் இருந்து வருகிறேன். வனப்பிரஸ்த ஜோகியின் மகள் நான்” என்று சொன்னாள், மலை அரசி.
மகாராணி சற்று மலை அரசியின் அணைப்பில் இருந்து விலகி “ஜோட்கிர்ரா? அப்படி எதுவும் இந்தப் பகுதியில் கிடையாதே” என்றாள்.
“பெயர் இப்பொழுது மாறிவிட்டது. முன்பு பாகுர்ச்சிரா என்று பெயர்” என்று சொன்னாள் மலை அரசி.
மகாராணியின் கண்களில் வியப்பு தெரிந்தது. “ஏன் அப்படி மாறியது? யாரால் மாற்றப்பட்டது?” என்று வினவினாள் குரலிலும் வியப்பு பெரிதும் ஒலிக்க.
“வனப்பிரஸ்த ஜோகியால் மாற்றப்பட்டது. இனி அந்த மலை போர்களைத் தூண்டும் என்பதால் மாற்றினார். அதற்குக் காரணம் உங்கள் புதல்வர். அவர் அங்கு அடி எடுத்து வைத்த அன்றே ராஜஸ்தானம் போர்க்களமாக வித்து விதைக்கப்பட்டது” என்றாள் மலை அரசி.
மகாராணி திக்பிரமை அடைந்தாள். “ஆம், ஆம், உண்மைதான். சந்தசிம்மன் படையெடுத்து வருகிறானாம் மாண்டோர் மீது” என்று சொன்னாள், துன்பம் தோய்ந்த குரலில்.
“அஞ்சாதீர்கள் மகாராணி, அந்தப் படையெடுப்பால் மண்டோருக்கோ உங்கள் மகனுக்கோ எந்தத் தீங்கும் இல்லை” என்ற மலை அரசியை அச்சத்துடன் நோக்கினாள் மகாராணி.
“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்” என்றும் கேட்டாள்.
சிறிது சிந்தித்தாள் மலை அரசி. “சாதாரண மனிதர்களின் கண்ணுக்கோ புத்திக்கோ எட்டாத பல விஷயங்கள் என் வளர்ப்புத் தந்தைக்குத் தெரியும். அவர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். இந்த ராஜாபுதனத்தின் பிற்காலத்தைப் பற்றி. இந்த மண்டோர் சில காலம் கை மாறலாம். ஆனால், மார்வார் கைமாறாது. உங்கள் கணவர் மேவாரை ஆக்கிரமிக்க முயன்றதால் ஏற்பட்ட விளைவுகளை உங்கள் மகனின் நிதானமும் நேர்மையும் சரிப்படுத்தும். இந்த நாட்டில் இரத்தப் பூசல்கள் இன்னும் தீரவில்லை. உங்கள் மகன் அப்பூசல்களுக்கு முடிவு கட்டுவார். இந்த மார்வார் இவர் காலத்தில் பெரிதும் விரியும், அமைதி நிலவும். மேவாருக்கும் மார்வாருக்கும் இடையில்” என்று சொல்லிவிட்டு, “நான் நீராடிவிட்டு வருகிறேன்” என்று பணிப்பெண்களுடன் சென்றுவிட்டாள்.
மகாராணி அவள் செல்வதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். “என் மகனுக்கு ஏற்ற அழகிதான்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
அறையை விட்டுக் கிளம்பிய மலை அரசியை தனி அறைக்கு அழைத்துச் சென்ற பணிப்பெண்களில் ஒருத்தி அவள் மரவுரியைக் களையச் சொல்ல, மற்றவர் வேறோர் ஆடையளித்தார்கள் நீராட்டத்திற்காக. பிறகு குளியல் அறையில் மங்களஸ்நானமும் செய்வித்தார்கள். அடுத்து அவளுக்கு என்று ஒதுக்கிவிடப்பட்ட தனி அறை காட்டப்பட்டது. அந்த அறைக்குள் அவர்களால் அளிக்கப்பட்ட பட்டாடையை தாறுமாறாகச் சுற்றிக்கொண்டாள். மலை அரசி மற்றவர்களை ஆடையை அணிந்து விடவும் அனுமதிக்கவில்லை. அவள் குழலைக்கூட யாரையும் சீவ அனுமதிக்காமல் தானே கோதி முடிந்துகொண்டாள். நெற்றியில் பளிச்சென்று குங்குமம் அணிந்து, அவர்கள் கொண்டுவந்த மலர்ச்சரத்தைத் தன் குழலின் பெருமுடிப்பில் அணிந்து கொண்டாள்.
இந்த அலங்காரத்துக்குப் பிறகு அவளைப் பார்த்த பணிப்பெண்கள் பிரமித்தார்கள். தாறுமாறாக உடலை மூடி சுற்றப்பட்ட ஆடையும், குழலில் அனாயாசமாக சுற்றப்பட்ட மலர்ச்சரமும் அவளுக்குப் பேரழகைக் கொடுத்திருந்ததைக் கண்ட பெண்கள், “மகாராணி! இந்த மார்வார் சிம்மாசனத்தில் என்றைக்கு அமரப்போகிறீர்கள்?” என்று கேட்டார்கள் பயபக்தியுடன்.
மலை அரசி அவர்களை அன்புடன் நோக்கி முறுவல் செய்தாள். “அதற்கு இன்னும் காலம் இருக்கிறது” என்றாள்.
“ஏன் மகாராணி?” என்று கேட்டாள் ஒரு பணிப்பெண்.
“இளவரசருக்கு அரசு இன்னும் நிலைக்கவில்லை. அதற்கு காலம் இருக்கிறது” என்ற மலை அரசி, அவர்களை அதற்கு மேல் பேசவிடாமல் ஒரு பெண்ணை நோக்கி, “இளவரசர் காலைக்கடன்களை முடித்து உணவு அருந்தியதும் மந்திராலோசனை சபையைக் கூட்டச் சொல்” என்று கூறினாள்.
பணிப்பெண் பிரமித்தாள். “அம்மணி! இது அரசாங்க விஷயம்” என்றாள்.
“ஆம்” என்றாள் மலை அரசி.
“அதில் தாங்கள் தலையிடுவது... இளவரசருக்கு ஆணையிடுவது...”
“நியாயம்.”
“நியாயமா?”
“நியாயந்தான். அவசியமுங்கூட” என்றாள் மலை அரசி.
அதற்குமேல் பேசவில்லை, பணிப்பெண் பறந்தாள் அந்த அறையில் இருந்து. ஆனால் பணிப்பெண்களுக்கு அடுத்த நிகழ்ச்சிகள் வியப்பாயிருந்தன. மலை அரசியின் உத்தரவை மேற்கொண்டான் இளவரசன் ஜோடா. காலையில் பத்து நாழிகைக்கெல்லாம் அவசரமாக மந்திராலோசனை சபையைக் கூட்டினான். அதில் கலந்துகொள்ள அவனே வந்து மலை அரசியை அழைத்துப்போனான்.
மந்திராலோசனை தொடங்கியது. இளவரசரை நோக்கி முதலமைச்சர் வினவினார். “தங்கள் மகுடாபிஷேகத்தை என்று வைத்துக் கொள்ளலாம்?” என்று
இதற்கு இளவரசன் பதில் சொல்லவில்லை.
“நாளைக்கு” என்றாள் மலை அரசி.
“நாளைக்கு மறுநாளைக்கு மறுநாள் புரோகிதர் நாள் வைத்திருக்கிறார்” என்றார் முதலமைச்சர்.
“அன்று மகுடாபிஷேகம் நடக்காது” என்று திட்டமாகச் சொன்னாள் மலை அரசி.
முதலைமச்சர் வெகுண்டு எழுந்தார்.
“ஏன் நடக்காது? யார் தடுக்க முடியும்?” என்று சீறினார்.
மலை அரசி சபையை உற்று நோக்கினாள், அமர்ந்த வண்ணம். “சந்தசிம்மன்” என்றாள் திடமாக.
“சந்தசிம்மனா! இந்த மண்டோருக்குள் ஆயிரம் சந்தசிம்மனாலும் நுழைய முடியாது” என்றான் ஜகத்சிம்மன்.
மலை அரசியின் கண்களில் இகழ்ச்சி தாண்டவம் ஆடியது.
“இன்று உங்கள் இளவரசர் அமர்ந்திருக்கும் இடத்தில் இன்றில் இருந்து நான்காவது நாள் சந்தசிம்மன் அமர்ந்திருப்பான்” என்றாள் மலை அரசி, உறுதி நிரம்பிய குரலில்.
“நீங்கள் பேசுவது ராஜத் துரோகம்” என்றார் முதலமைச்சர்.
“பெண்களை மந்திராலோசனைக்கு அழைப்பதால் ஏற்பட்ட தவறு” என்று சீறினான் ஜகத்சிம்மன்.
இன்னும் சில அமைச்சர்களும் படைத்தலைவர்களும் பல படி கேள்விகளைக் கேட்டார்கள்.
இத்தனையிலும் ஜோடா தலையிடவில்லை. மலை அரசியே தொடர்ந்து பேசினாள். அவள் கண்களில் சீரிய ஒளி ஒன்று புலப்பட்டது. “உங்களை எச்சரிக்கிறேன். மீண்டும் ரத்தத்தை இந்த மாரூஸ்தலியில் சிந்தாதீர்கள். மேவாரில் சிந்தப்பட்ட ரத்தம் போதும். போருக்கு சன்னத்தம் செய்யாதீர்கள். நாளைக்கு இளவரசருக்கு மகுடம் சூட்டுங்கள்” என்றாள் மலர் போன்ற உதடுகளைத் திறந்து.
“நாளைக்கு நாள்...” முதலமைச்சர் தடுமாறினார்.
“நல்ல நாள், இளவரசரை மார்வாரின் நிரந்தர மன்னன் ஆக்கும் நாள். ஐந்து கிரகங்கள் நாளைக்கு உச்சத்துக்கு வருகின்றன.” இதைத் தீர்மானமாகச் சொன்னாள் மலை அரசி. பிறகு ஜோடாவை நோக்கித் திரும்பி. “ஜோடா! இத்தனையும் உன் நன்மைக்காகவே செய்கிறேன்” என்று சொன்னாள்.
இளவரசரை அவள் ஏகவசனத்தில் பேசியது வெறுப்பாயிருந்தது மற்றவர்களுக்கு. ஆனால் ஜோடா அதைப் பாராட்டவில்லை. “மகுடாபிஷேகத்தின் போது நீயும் என் பக்கத்தில் மகாராணியாக அமருவாய் அல்லவா?” என்று வினவினான்.
“அதற்கு இன்னும் காலம் இருக்கிறது” என்றாள் மலை அரசி. “நான் உட்காரும்போது இந்த சிம்மாசனம் உறுதியாயிருக்கும். இப்போது இது நிலையற்ற அரசு” என்று அதிகாரத் தோரணையில் கூறினாள்.
“இப்பொழுது உறுதியில்லையா?” என்று வினவினான் ஜோடா.
அதற்குப் பதிலாக ஓர் அதிர்வெடியை எடுத்து வீசினாள் மலை அரசி.

சாண்டில்யன் மூலம் மேலும் புத்தகங்கள்

40
கட்டுரைகள்
மலை அரசி
0.0
மாலை அரசி தமிழ் மொழியில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான வரலாற்று நாவல். பிரபல தமிழ் எழுத்தாளர் சாண்டில்யன் இந்த மனதை மயக்கும் புத்தகத்தை எழுதியுள்ளார். சாண்டில்யன் வரலாற்றுப் புனைகதைகளுக்காகப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார், மேலும் அவர் தனது வரலாற்று, காதல் மற்றும் சாகச நாவல்களுக்காக நன்கு அறியப்பட்டவர், இது பெரும்பாலும் சோழ மற்றும் பாண்டிய பேரரசுகளின் காலங்களில் அமைக்கப்பட்டது.
1

1. சுடர்க்கொடி

15 January 2024
0
0
0

சரித்திரம், பூமி, வாழ்க்கையின் கர்ம பலன்கள் ஆகிய சகலத்திலும் ஒரு சுழற்சியும் தொடர்ச்சியும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுவதில் எத்தனை உண்மையிருக்கிறதென்பதை, சுற்றிலும் தன்னை எரித்துக்கொண்டிருந்த மணற்பரப்

2

2. விளக்கில் விரிந்த கதை

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் மலைக்குகை வாயிலில், மரங்கள் அடர்த்தியாயிருந்ததால் இருள் கடுமையாக இருந்த அந்தப் பிராந்தியத்தில், பந்தத்தை கையில் ஏந்தி அதன் சுடர் முகத்தில் வீச சுடர்க்கொடியென்ற காரணப் பெயருக்கு முற

3

3. துணைவன்!

15 January 2024
0
0
0

விரிந்து படர்ந்து எரிந்த விளக்கின் சுடரை விந்தைக் கண்களுடன் நோக்கிய ராவ்ஜோடா. அதில் விரிந்த கதையைக் கண்டதும் மெய்சிலிர்த்துப் போனான். முதலில் அந்தச் சுடரில் ஏதும் தெரியாததால் புரியாமல் விழித்த மார்வ

4

4. இரு விந்தைகள்

15 January 2024
0
0
0

மலை அரசியின் மதுர இதழ்களில் இருந்து உதிர்ந்த அந்தக் கொடுமையான சொற்களைக் கேட்டதும், வியப்பும் அச்சமும் கலந்த உணர்ச்சிகள் ராவ்ஜோடாவின் இதயத்தை மளடுருவிச் சென்றன. அப்படி அவன் நடுங்கியதை பக்கத்தில் உட்கார

5

5. நான் வருவேன்

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் குகையைவிட்டு வெளியேறிய மலை அரசி, வேகமாக மலையின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடந்து சென்றதும், விளைவித்த இரண்டு விந்தைகளும் மகாவீரனான மார்வார் இளவரசனை திகில் கொள்ளச் செய்தன என்றால்,

6

6. பெண் துணை!

15 January 2024
0
0
0

பெண்ணின் லாவண்யத்தால் ஆண்மகன் அறிவு அழிந்துவிடுகிறது. கவர்ச்சியான கன்னியின் முன்பாக எந்த ஆண்மகனும் சுயபுத்தியை இழந்துவிடுகிறான். இந்தப் பழைய நிகழ்ச்சிகளுக்கு அத்தாட்சியாக நின்றான் ராவ்ஜோடா. “உனது வீ

7

7. சாகுந்தலம்

16 January 2024
1
0
0

பந்தத்தையும் அணைத்துவிட்டு இருண்ட குகைக்குள் தன்னை வா வா என்று அழைத்த அந்த பருவப் பாவையின் துணிவை நினைத்து ஜோடா திகிலுக்கு இலக்காகி நின்ற நேரத்தில், மலைஅரசியே குகை வாயிலைவிட்டு அவனை அணுகி, அவன் கையைப்

8

8. காட்டு மலர்

16 January 2024
1
0
0

பாவின் வாலிப முரட்டு முகம் அவள் வழவழத்த கழுத்தில் திடீரென அழுந்திப் புரண்டபோது, மலை அரசியின் இதயமும் அந்த வாலிபன் உள்ளத்தைப்போலவே உணர்ச்சி அலைகளில் உருண்டது. அத்தனை உணர்ச்சி எழுச்சியிலும் அரசகுமாரன்

9

9. நிலையற்ற அரசு

16 January 2024
1
0
0

மலை அரசியை “காட்டு மலர்” என்று குறிப்பிட்டதோடு தனது பேச்சை ஜோடா நிறுத்திக்கொண்டு இருந்தால் ஜகத்சிம்மனின் கோபம் தலைக்கு ஏறியிருக்காது. “இவள் மார்வார் ராணி” என்றும் சொல்லவே ஜகத்சிம்மனுக்கு கோபத்துடன் தி

10

10. பறந்த கிளி! தொடர்ந்த துன்பம்!

16 January 2024
1
0
0

மலை அரசியின் சொற்களோ உத்தரவுகளோ மந்திராலோசனை சபையில் இருந்தவர்களுக்குக் கட்டோடு பிடிக்காதிருந்தாலும் அவள் சொன்னதற்கு எல்லாம் ஜோடா தலையை ஆட்டியதால், அவள் கட்டளைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் எல்லோருமே முன

11

11. மண்டோர் ரணகளம்

16 January 2024
1
0
0

மண்டோரின் பெரும் கதவுகள் சாத்தப்பட்டதாலும் போர்முரசு பலமாக ஒலித்ததாலும் வருவது என்னவென்பதை அறிந்த புது மகாராஜாவான ராவ்ஜோடா, புரவியின் கடிவாளத்தை பிடித்த நிலையிலேயே திகைத்து அமர்ந்துவிட்ட சமயத்தில் மலை

12

12. குகையில்...!

16 January 2024
1
0
0

பெற்றோர் புரிந்த பாவம் சிலரைப் பிடித்து வாட்டுகிறது. உற்றார் செய்த பாவமும் சிலரை விடுவதில்லை. பெற்றோரும் உற்றாரும் விளைவித்த பாவங்களுக்கு எப்பாவமும் அறியாத ஜோடா இலக்கானான். பேரனான மோகுல சிம்மனை சீராட்

13

13. அவள் கனவு!

16 January 2024
1
0
0

மலை அரசியைப் பார்த்து மார்வார் இளவரசனாயிருந்து அரசனாகி, நாட்டையும் பறிகொடுத்த ராவ்ஜோடா, அத்தகைய ஒரு கேள்வியைக் கேட்டான் என்றால், அதற்கு மூலகாரணம் அவளுடைய விபரீதமான பதில்தான். “நாம் தனித்திருப்பது உனக்

14

14. தண்டனை!

17 January 2024
1
0
0

மலை அரசியை தரையில் கிடத்திவிட்டு குகையின் வாயிலுக்கு வந்த ராவ்ஜோடாவின் செவிகளில் ஜகத்சிம்மனும் மற்ற வீரர்களும் ஏறிவந்த புரவியின் குளம்படி ஒலிகள் கூடக் கேட்கவில்லை. குகைக்கு உள்ளே மலை அரசியின் அருகாமைய

15

15. ஹர்பா சங்க்லா!

17 January 2024
0
0
0

மலை அரசியால் மன்னிக்கப்பட்டு ஜோடாகிருக்குச் செல்லும்படி பணிக்கப்பட்ட ஜகத்சிம்மன் உடனடியாகத் திரும்பவில்லை தனது புரவியை நோக்கி நின்ற இடத்திலேயே அசைவற்று நின்றான் பல விநாடிகள். பிறகு சட்டென்று வேகமாக நட

16

16. அந்தி வானம்

17 January 2024
0
0
0

அதிர்ஷ்டம் என்பது ஒரு மனிதனைப் பிடித்துக்கொண்டால் அவனை அது லேசில் விடுவது இல்லை. கூடியவரையில் விடாமல் தொடர்கிறது. துரதிர்ஷ்டக்காரனுக்கு புத்தி பேதலிக்கிறது. காலம் கைகொடுப்பது இல்லை. எதையும் காலங்கடந்த

17

17. வாளின் கதை!

17 January 2024
0
0
0

ஜோடாவைப்பற்றி விசாரித்ததும் மலை அரசியின் மதிமுகம் அந்திவானம் போல் சிவந்துவிட்டதைக் கண்டதுமே நைஷ்டிக பிருமச்சாரியும், எந்தப் பெண்ணையும் கண்ணெடுத்துப் பார்க்காதவரும், பிருமச்சாரி விரதம் கெடக்கூடாது என்ப

18

18. தேடி வந்த அதிர்ஷ்டம்!

17 January 2024
0
0
0

மார்வார் மன்னனையும் மலைக்க வைத்த அந்த விசித்திரக் கதையைச் சொல்லுமுன்பு பிருமச்சாரி அந்தச் சிறு வீட்டின் முற்றத்தை வளைத்திருந்த சுற்றுக் கட்டடத்தின்மீது உட்கார்ந்து கீழ் இருந்த முற்றத்தில் தமது கால்களை

19

19. பாலைவனக் கூடாரம்

17 January 2024
0
0
0

இரவு தந்த இருளில், மலைக்காடு வீசிய இதமான காற்றில், சாளரத்துக்கு அருகில் இருந்த மகிழ மரம் பரவவிட்ட சுகந்தத்தின் சூழ்நிலையில், மலை அரசியை சூழ்ந்து நெருக்கிய ஜோடாவின் கரங்கள் நெருக்கியதோடு நில்லாமல் இன்ப

20

20. கரிய புரவி! கழுத்தில் ஈட்டி!

18 January 2024
0
0
0

ஜோடாவின் பரம விரோதியான சந்தசிம்மனின் மூத்த மகன் காந்தாஜி தன் வாளை உருவிக்கொண்டு ராவ் ஜோடாவை அணுகுவதற்கு முன்பே ஜோடா பிருமச்சாரியளித்த தனது பெரிய வாளை உருவி எதிரியைத் தடுத்தான். அவனைச் சேர்ந்த பத்து பத

21

21. மலைச்சாரல் ஓசை

18 January 2024
0
0
0

கழுத்தில் பதித்திருந்த ஈட்டி சற்றும் அசையாமல் இருந்தாலும் அதில் ஒரு திடமும், ஈட்டியைப் பிடித்திருந்தவன் கையில் ஈவு இரக்கமற்ற ஓர் உறுதியும் இருந்ததைக் கவனித்த ராவ்ஜோடா, தான் சிறிது அசைந்தாலும் அந்த ஈட்

22

22. பரீட்சை

18 January 2024
0
0
0

பாபுஜியின் நூறு புரவிகள் ஏதோ பெரும் புயலைப் போல் மலைச்சரிவில் வந்ததாலும், அவை கண்ணிமைக்கும் நேரத்தில் தனது புரவியில் இருந்து தன்னை வீழ்த்திவிட்டதாலும் மலைப்பாறையில் புரண்ட ஜோடா வெகு துரிதமாகப் பாறையில

23

23. அடவியில் ஒரு காட்சி!

18 January 2024
0
0
0

நீண்டநாள் பிரிந்த மகனை ஆர்வத்துடன் தழுவும் தந்தை போல ஜோடாவை பல விநாடி தழுவி நின்ற பாபுஜி, கடைசியில் அவனுக்குத் தமது கைகளில் இருந்து விடுதலை அளித்தபோது அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் இரண்டு தே

24

24. காதல் பாபமா?

18 January 2024
0
0
0

அடர்ந்த அந்த அடவிக்குள் நாலைந்து பங்கஜங்களை நீர்மட்டத்துக்குமேல் காட்டிக்கொண்டிருந்த சிறு வாவியின் கரையில் மலை அரசியும் ஜோடாவும் உட்கார்ந்திருந்த நிலையைக் கண்டதும் இரண்டு பிருமச்சாரிகளும் தங்கள் பிரும

25

25. ஜோடாவின் துணிவு!

18 January 2024
0
0
0

பாபுஜியும், பிருமச்சாரியும் விழிப்பதைப் பார்த்த ஜோடா, “உங்கள் இருவருக்கும் வரவர சுயநம்பிக்கை போய்விட்டது” என்று ஓர் அம்பை வீசினான். அதுவரை தாங்கள் கண்ட காட்சியால் குழப்பத்தில் இருந்த இரு பிருமச்சாரி

26

26. சாவுகாரைப் பிடித்த சனியன்!

18 January 2024
0
0
0

மண்டோர் அரசின் முதலமைச்சராயிருந்து, சந்தசிம்மன் ஆக்கிரமிப்புக்குப் பின்பு அந்தப் பதவியில் இருந்து விலகி, அரண்மனையில் தமக்கு முன்னாள் மன்னனால் அளிக்கப்பட்டு இருந்த இடத்தையும் சந்தசிம்மனிடம் ஒப்புடைத்து

27

27. அடைத்த கதவு!

18 January 2024
0
0
0

காந்தோஜியின் குறுவாள் அழுந்தியதாலும், எச்சரிக்கையாலும், அவன் பின்னால் நின்றிருந்த மஞ்சாஜியின் உதடுகளில் துளிர்த்திருந்த குரூரப் புன்முறுவலாலும், சாவுகார் அஞ்சி நடுநடுங்கிவிடுவார் என்றோ, முன்னே நடந்துவ

28

28. வேடர் குடிசை மர்மம்!

18 January 2024
0
0
0

கோட்டைக் காவலன் சொன்ன செய்தியால் மலைத்த இருவரில் சாவுகாரே முதலில் திகைப்பை உதறிக்கொண்ட தன்றி சமயாசந்தர்ப்பம் தெரியாமல் கோப்தையும் காட்டினார். “காவலனே! வணிகர்களைத் தடை செய்யும் வழக்கம் மார்வாரில் கிடைய

29

29. உள்ளே ஒரு பெண் குரல்!

18 January 2024
0
0
0

அன்று பகல் முழுவதும் மார்வார் படைத்தலைவனான ஜகத்சிம்மனுக்கும் மண்டோர் கோட்டை காவலனுக்கும் உணவு முதலிய விஷயங்களில் ராஜோபசாரம் நடந்தாலும், அவ்விருவரும் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் எந்த வேடனும் நேரடியாக ப

30

30. ஜோடாவின் துன்மார்க்கம்!

19 January 2024
1
0
0

மூன்று குணங்களை மனிதன் தவிர்ப்பது நல்லது. தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் அக்கறை காட்டுவது, ஒன்று. ஒட்டுக் கேட்பது, இரண்டு. காலதாமதம் செய்வது, மூன்று. இந்த மூன்றில் ஏதாவது ஒரு குணமே யாரையும் இக்கட்ட

31

31. மணக்கோலம்!

19 January 2024
1
0
0

வீரனாகப் படைகளை இயக்கி, இழந்த அரசை மீட்பதில் சித்தத்தை செலுத்த வேண்டிய மார்வார் மன்னன், கேவலம், பெண் மோகம் கொண்டவனாகக் குடிசையில் மறைந்து கொண்டு காலத்தை ஓட்டுவதை நினைத்த ஜகத்சிம்மன் வேடவர் குடிசைக் கூ

32

32. சந்திர முகம்

19 January 2024
1
0
0

மண்டோர் படைத்தலைவனான ஜகத்சிம்மன் தனது மன்னனின் திருமணத்தையே நிறுத்த முயன்றதும், அதற்காகக் கூச்சலிட்டதும் பலருக்கு கோபத்தையும் சிலருக்கு வியப்பையும் உண்டாக்கினாலும், பிருமச்சாரி ஹர்பாசங்க்லாவோ, திருமணப

33

33. இழந்த சொர்க்கம்

19 January 2024
1
0
0

ராவ்ஜோடாவின் அணைப்பில் இருந்த அழகியின் சந்திர வதனத்தைக் கண்டதும் ஜகத்சிம்மன் திகைப்பும் அதிர்ச்சியும் ஒருங்கே அடைந்தான் என்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. அந்த முகம் மலை அரசியின் முகம்! முகத்

34

34. பதவி இறக்கம்!

19 January 2024
1
0
0

மலை அரசியின் மறுபிம்பம் போன்ற மின்னிடையாளுடன், ஜோடா கலந்து விளையாட இருந்த சமயத்தில் பிருமச்சாரி ஹர்பாசங்கலா அங்கு தோன்றியதும் கதவைத் தட்டியதும் பரமானந்தமாயிருந்தது, மண்டோர் படைத்தலைவன் ஜகத்சிம்மனுக்கு

35

35. மீண்டும் வந்தாள்!

19 January 2024
1
0
0

மண்டோரின் படைத்தலைவனாக இருந்த தன்னை திடீரென உபதளபதியாக்கிவிட்ட மன்னன் செயலைக் கண்டு மனம் துடித்த ஜகத்சிம்மன் அந்த அவமானத்தில் இருந்து எப்படி மீளலாம் என்று சிந்தித்தான். அது தவிர இந்த திடீர் பதவி இறக்க

36

36. மண்டோர் சமர்

19 January 2024
1
0
0

கேவலம், ஒரு பெண், புரவியில் இருந்து இறங்க, அவள் காலுக்குப் படியாக தனது இரு கைகளையும் கோத்து நீட்டிய பிருமச்சாரியிடம் பெரிதும் வெறுப்புக் கொண்டான், ஜகத்சிம்மன். பிருமச்சாரி உண்மையில் பெரும் போலி பிருமச

37

37. மணலில் தோய்ந்த ரத்தம்

19 January 2024
1
0
0

மண்டோர் போரில் மாவீரர்களான சந்தசிம்மன் புதல்வர்கள் அடைந்த தோல்விக்குக் காரணம் தாங்கள் போரிடும் எதிரிகளின் திறனை அவர்கள் தவறாக எடைபோட்டதுதான் என்று கர்னல் ஜேம்ஸ்டாட் தமது ராஜபுதன வரலாற்று நூலில் தெளிவா

38

38. துரோகி!

19 January 2024
1
0
0

மலை அரசி தனது வளையல் கரங்களை நீட்டி தன்னைக் கைது செய்யும்படிக் கேட்டுக்கொண்டதும் காந்தோஜி தனது தம்பியின் மரணத்தையும் மறந்து வியப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே அடைந்தான். அப்பொழுதும் மலை அரசி வேட்டுவர

39

39. வேகம்! தாகம்!

19 January 2024
1
0
0

மேவாரின் தலைநகரான சித்தூரில் இருந்து தப்பி ஓடிவந்து லூனி ஆற்றின் உப்பு நீரில் தந்தையின் மரணத்துக்கு நீராடிய அதே துறையில், கிட்டத்தட்ட அதே இடத்தில் தங்கள் வம்ச துர்ப்பாக்கியத்துக்கும் அவப் பெயருக்கும்

40

40. அரசி ஆன, மலை அரசி!

19 January 2024
1
0
0

மலை அடிவாரப் புதரில் மலை அரசி மல்லாந்து கிடந்த கோலம் மண்டோர் மன்னனின் வெறியைக் கிளறிவிடவே, அவன் உலகத்தையே மறந்து, அதுவரை நேர்ந்த நிகழ்ச்சிகளால் மனம் ஏற்படுத்திய கட்டுப்பாடுகளையும் தடைகளையும் உதறி அவள்

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்