shabd-logo

37. மணலில் தோய்ந்த ரத்தம்

19 January 2024

2 பார்த்தது 2

மண்டோர் போரில் மாவீரர்களான சந்தசிம்மன் புதல்வர்கள் அடைந்த தோல்விக்குக் காரணம் தாங்கள் போரிடும் எதிரிகளின் திறனை அவர்கள் தவறாக எடைபோட்டதுதான் என்று கர்னல் ஜேம்ஸ்டாட் தமது ராஜபுதன வரலாற்று நூலில் தெளிவாக எழுதியிருக்கிறார்.
சந்தசிம்மன் புதல்வர்களுக்கு போர் புதிதல்ல என்றாலும், அவர்கள் சமரிடும் திறமையும் அற்ப சொற்பமில்லை என்றாலும், எதிரியின் எண்ணிக்கைக் குறைவையும் பிருமச்சாரியின் தளபதிப் பதவியையும் நினைத்து அவர்கள் ஏமாந்தார்கள் என்று சரித்திரம் சொல்கிறது.
பிருமச்சாரி ஹர்பாசங்கலா பெரிய வாள் வீரர் என்பது ராஜபுதனத்தில் பிரசித்தம். ஆனால் எங்கும் எந்தப் போரிலும் தளபதியாக இருந்து பணியாற்றியதாகவோ படைகளை அணிவகுத்ததாகவோ யாரும் கேள்விப்பட்டது இல்லை. ஆகையால் அனுபவம் இல்லாத ஒரு சிறு படையுடன், அனுபவம் இல்லாத ஒரு தளபதியுடன் ஜோடா தங்களை எதிர்க்க வந்தது சுத்த முட்டாள்தனம் என்றே சந்தசிம்மன் புதல்வர்கள் எண்ணினார்கள். அது மட்டுமல்ல, கோட்டைக் கதவுகளை எதிரி பெரும் மரம் கொண்டு உடைக்கத் தொடங்கியதும் தாங்களாகவே கதவுகளைத் திறந்துகொண்டு போர் முறைப்படி இரண்டு பிரிவுகளாக அணிவகுக்கப்பட்ட நாலாயிரம் புரவி வீரர்களுடன் சகோதரர் இருவரும் கோட்டைக்கு வெளியே வந்ததும் பிரமித்துப் போனார்கள்.
சுமார் எழுநூறுக்கு மேற்படாத ஒரு சிறு படை அவர்கள் கண் முன்பு தெரிந்தது. அதுவும் அவர்கள் வந்ததும் நூறு. நூறு பேராகப் பிரிந்தது. அந்தப் பிரிவுகளில் ஒன்றுக்குத் தலைமை வகித்தவளோ ஒரு வேட்டுவச்சி. புரவிமீது அலட்சியமாக அமர்ந்து, கையில் இருந்த வில்லை வளைத்து நாணில் அம்பை அமைத்து அதை இழுத்துப் பிடித்திருந்தாள் போருக்குத் தயாராக.
பிருமச்சாரி ஹர்பாசங்க்லாவும் ஜோடாவும் மற்றும் இரு சிறு பிரிவுகளுக்கு தலைமை வகித்து நின்றார்கள். இத்தனைக்கும் போரை அவர்கள் துவங்கவில்லை. அதனால் சற்று நிதானித்த சந்தசிம்மன் புதல்வர்களை நோக்கி போரை துவங்கலாம் என்பதற்கு அறிகுறியாகத் தமது பெரிய கோடரியை எடுத்துத் தலைமேல் ஆட்டி சைகை செய்தார் பிருமச்சாரி. அதற்குமேல் தாமதிக்காத காந்தோஜியும் மஞ்சாஜியும் தங்கள் பெரும் படையை எதிரிகளை நோக்கி நகர்த்தினார்கள்.
சுமார் நாலாயிரம் புரவி வீரர்களால் வேகமாகத் தாக்கப்பட்ட ஜோடாவின் படை ஒருமுறை சிறிது அசைந்து கொடுத்தது. ஆனால், பிருமச்சாரி பயங்கரமாக நகைத்து வெண் சங்கு ஒன்றை எடுத்து பலமாக ஊதவே சிறு சிறு பிரிவுகளாக நூறு நூறு வீரர்களைக் கொண்ட ஏழு பிரிவுகளும் எதிரி படைகளை பல இடங்களில் ஊடுருவியது. அதனால், ஏக காலத்தில் பல இடங்களில் ஊசிகளால் குத்தப்பட்ட சரீரத்தைப்போல் மேவார் படை சிறிது தெளிந்தது. அந்தத் தெளியலால் கிடைத்த இடங்களில் பல அம்புகள் போல் பிருமச்சாரியின் படை நுழைந்துவிட்டது. பிருமச்சாரியின் புரவி வீரர்கள் ஏதோ வெறி பிடித்தவர்கள் போல் எதிரிகளை நாசம் செய்யத் தொடங்கினார்கள்.
சம்பிரதாயத்துக்கு நேர்விரோதமான இந்தப் போரைக் கண்டு இரு சகோதரர்களும் பிரமித்தனர். பிரமித்ததும் அன்றி தங்கள் படைப்பிரிவுகளால் எதிரிகளைச் சூழ்ந்து அழித்து விடவும் தீர்மானித்து வாட்களை உயரத் தூக்கி ஆட்டினார்கள். அவர்கள் பெரும்படையும் எழுநூறு பேரை நொறுக்கி நசித்துவிட முயன்றது. அந்தச் சமயத்தில்தான் பாபுஜியின் வாயுவேகப் புரவிப்படை திடீர் எனத் தோன்றி அவர்கள் மீது விழுந்தது. நிதானமற்ற புரவிகள் பயங்கரமாக சந்தசிம்மன் புதல்வர் படையை ஏதோ சூறாவளிபோல் தாக்கவே நாலாயிரம் எண்ணிக்கை திடீரென அர்த்தமற்றது ஆயிற்று. பாபுஜி புரவிகளைப் பழக்குபவர், விற்பவர் என்பது காந்தோஜிக்கும், மஞ்சாஜிக்கும் தெரிந்தாலும், அந்தப் புரவிகளை வீரர்கள் நடத்தி வருவார்கள் என்றும், போருக்கும் அவருக்கும் சம்பந்தம் உண்டு என்றும் அவர்கள் அறியாததால் வியப்பை எய்தி மும்முரமாகப் போரிட்டார்கள்.
பாபுஜியின் வாயுவேகப் புரவிப் படையால் வலப் பக்கத்திலும், பிருமச்சாரியின் நூறு நூறாகப் பிரிக்கப்பட்ட சின்னஞ்சிறு படைப் பிரிவுகள் நடுமத்தியிலும் ஊடுருவிவிட்டதன் விளைவாக மேவார் படை சிறிது நேரத்திற்கெல்லாம் கட்டுக் குலைந்தது. அதே சமயத்தில் கடோத்கஜனே போருக்கு வந்துவிட்டதுபோல் கோடரியை உயர்த்தியும் திடீரென இறக்கியும் பிருமச்சாரி எதிரிகளை வீழ்த்திக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் போதாக் குறைக்கு திடீரென பக்கத்து மலைப்பகுதியில் தோன்றிய இரு நூறு வேடர்களின் விஷ அம்புகள் பறந்து வந்தன மேவார் படையை நோக்கி.
இப்படி திடீர் திடீரென ஏற்பட்ட தொடர் போரால் கட்டுக் குலைந்து மேவார் படை பெரும் நாசத்திற்கு உள்ளானதால் சினம் மிகப்பெற்ற காந்தோஜியை ஜோடா தாக்கினான். காந்தோஜியின் வாளை அவன் தட்டிவிட்டபடியாலும், பாபுஜியின் புரவிகளின் மோதலால் மஞ்சாஜி புரவியில் இருந்து தூக்கி எறியப்பட்டதாலும் காந்தோஜியின் சைகையைக் கண்டு அவன் படை பாலைவனத்துக்குள் விரைந்து பின்வாங்கியது. பின்வாங்கிய சமயத்தில் காந்தோஜி தான் சிறிது காலம் ஆண்ட மண்டோரை நோக்கினான். பந்தங்களை ஏந்திய மக்கள் ஜெய முழக்கங்களுடன் கண்ட ஆயுதங்களுடன் வெளிவந்தார்கள் தங்கள் மன்னனை வரவேற்க.
அப்பொழுது சொன்னான் காந்தோஜி, பக்கத்தில் ஒரு புதுப் புரவியில் உட்கார்ந்து இருந்த தனது தம்பியை நோக்கி, “தம்பி! பார்த்தாயா! மண்டோர் மக்கள் தங்கள் மன்னனை எத்தனை நேசிக்கிறார்கள். இந்த மக்கள் பலத்துக்கு முன்பு நமது படைபலம் என்ன செய்ய முடியும்?” என்று கூறினான்.
“அது மட்டுமல்ல அண்ணா! பிருமச்சாரியையும் பாபுஜியையும் நாம் தவறாக எடைபோட்டோம். என்ன புதுவிதமான அணிவகுப்பு! புரவிகள் வேகம் என்ன! இந்த விந்தையாலும் நாம் ஏமாந்தோம்” என்றான் மஞ்சாஜி.
“ஆம் தம்பி! எண்ணிக்கை மட்டும் வெற்றியை அளிப்பதில்லை என்று கூறிய காந்தோஜி தனது புரவியை நடத்தினான் மேவார் இருந்த திசை நோக்கி. அவன் படை கிட்டத்தட்ட மார்வாருக்கும் மேவாருக்கும் இடையில் உள்ள லூனி ஆற்றை அடைந்த சமயத்தில் மண்டோர் திசையில் பெரும் தூள் கிளம்பியது.
“இதென்ன அண்ணா?” என்று வினவினான் மஞ்சாஜி.
“ஜோடா தன் கேவலத்தை நிரூபிக்கிறான். பின்வாங்கிய படையை அழிப்பது ராஜபுதன தர்மம் அல்ல” என்றான் காந்தோஜி.
“இருப்பினும் மேவார் சந்ததி கோழையல்ல என்பதை நிரூபிப்போம்” என்ற காந்தோஜி யுத்தத்தில் சிறுத்துவிட்ட படையை நிறுத்தித் திருப்பினான். அந்தப் படையின்மீது வேகமாக விழுந்தான் ஜகத்சிம்மன், சுமார் இருநூறு வீரர்களுடன். இரண்டு படைகளும் கை கலக்கு முன்பே ஜகத்சிம்மன் எறிந்த குறுவாள் ஒன்று மஞ்சாஜியின் மார்பில் பாய்ந்தது. மஞ்சாஜி புரவியில் இருந்து சரிந்து பாலைவன மணலில் புரண்டான். அவன் இதயத்தில் இருந்து குபுகுபுவென்று கிளம்பிய இரத்தம் பாலைவன மணலை நனைத்தது.
தனது படைகளை ஜகத்சிம்மன் மீது ஏவ காந்தோஜி முயன்ற சமயத்தில் ஜகத்சிம்மன் புரவியில் இருந்து சரிந்து விழுந்தான் மணலில். அவன் இடையிலும் ஒரு குறுவாள் பாய்ந்திருந்தது. அடுத்த விநாடி வேகமாக வந்த இரு புரவிகள் மஞ்சாஜி விழுந்திருந்த இடத்தை அணுகின. அதில் இருந்து ராவ்ஜோடாவும் பிருமச்சாரியும் குதித்து மஞ்சாஜியின் உடலைப் புரட்டிப் பார்த்தார்கள். பிருமச்சாரி குறுவாளை மெள்ள மஞ்சாஜியின் இதயத்தில் இருந்து எடுத்து, பக்கத்தில் இருந்த ஜோடாவின் அங்கியைச் சிறிது கிழித்து காயத்தில் அடைத்து இரத்தத்தை நிறுத்தினார். மஞ்சாஜி மெள்ள கண் விழித்தான். ஆனால் அவன் சுவாசம் பெரிதாக வந்துகொண்டு இருந்தது. அவனைச் சுற்றி நின்ற ஜோடாவும், காந்தோஜியும் இதர வீரர்களும் அவன் உயிர் அதிக நேரம் நிலைக்காது என்பதைப் புரிந்துகொண்டதால் அனைவர் முகத்திலும் சோகக்களை அபரிமிதமாக விரிந்தது. தம்பியை நோக்கிக் கண்ணீர் உதிர்க்கவில்லை காந்தோஜி. அவன் கண்களில் நீருக்கு பதில் நெருப்பு நிரம்பி நின்றது.
“தம்பி! அஞ்சாதே. உன்னைக் கொன்றவனைப் பழி வாங்குகிறேன். அத்துடன்....” என்று மேலும் ஏதோ சொல்லப் போனான்.
அப்பொழுது பிருமச்சாரி காந்தோஜியைப் பார்த்தார் சினத்துடன். “காந்தோஜி! சபதம் எதையும் செய்யாதே. மார்வாரும் மேவாரும் சிந்திய ரத்தம் போதும். இந்த இரண்டு வம்சங்களின் போர்களில் ராஜபுதனப் பூண்டே அடியோடு அழிந்துவிடும்” என்றார். அத்துடன் மணலில் மற்றொருபுறம் கிடந்த ஜகத்சிம்மனை சுட்டிக்காட்டி, “இந்தத் துரோகிதான் இத்தனைக்கும் காரணம். அவனை அழைத்துச்செல். தூக்கிலிடு, வெட்டு, எதை வேண்டுமானாலும் செய்” என்றார்.
“அவனை வெட்டினால் என் தம்பியின் உயிர் வருமா?” என்று வினவினான், காந்தோஜி.
“யார் போனாலும் உயிர் வராது. அதைத் திரும்ப வரவழைப்பவன் மனித வரலாற்றில் இதுவரை யாரும் கிடையாது” என்றார்.
“ஜகத்சிம்மன் எனக்குத் தேவையில்லை” என்றான் காந்தோஜி.
“வேறு யார் தேவை?”
“உங்கள் மன்னன் ஜோடா” என்றான் காந்தோஜி.
ராவ்ஜோடா இதற்கு பதிலேதும் சொல்லவில்லை. மஞ்சாஜிக்கு அருகில் மண்டியிட்ட நிலையில் இருந்து எழுந்தான்.
“இதோ என் வாள்! எடுத்துக்கொள். உன்னுடன் வருகிறேன்” என்றான் மண்டோர் மன்னன்.
காந்தோஜியின் கண்களில் வியப்பு துலங்கியது. அந்த வியப்பை நூறு மடங்காக்க இன்னொரு சம்பவமும் நிகழ்ந்தது.
“அரசன்தான் வேண்டுமா? அல்லது அரசி வரலாமா உங்களுடன் கைதியாக” என்ற குரல் வந்தது. அதைத் தொடர்ந்து அந்த வேட்டுவப் பெண் சுற்றியிருந்த வீரர்களை விலக்கிக்கொண்டு முன்னே வந்தாள்.
“நீயா! அரசியா!” என்று வியப்புக் குரலில் துலங்க வினவினான் காந்தோஜி.
“ஆம்.”
“எந்த ஊருக்கு அரசி?”
“முன்பு மலை அரசி. இப்பொழுது மண்டோரின் அரசி” என்ற அவள் கம்பீரமாக நடந்து தனது இரு கைகளையும் நீட்டினாள் காந்தோஜி முன்பு. “உம், கட்டுங்கள் என் கைகளை.” என்றும் கேட்டுக் கொண்டாள்.

சாண்டில்யன் மூலம் மேலும் புத்தகங்கள்

40
கட்டுரைகள்
மலை அரசி
0.0
மாலை அரசி தமிழ் மொழியில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான வரலாற்று நாவல். பிரபல தமிழ் எழுத்தாளர் சாண்டில்யன் இந்த மனதை மயக்கும் புத்தகத்தை எழுதியுள்ளார். சாண்டில்யன் வரலாற்றுப் புனைகதைகளுக்காகப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார், மேலும் அவர் தனது வரலாற்று, காதல் மற்றும் சாகச நாவல்களுக்காக நன்கு அறியப்பட்டவர், இது பெரும்பாலும் சோழ மற்றும் பாண்டிய பேரரசுகளின் காலங்களில் அமைக்கப்பட்டது.
1

1. சுடர்க்கொடி

15 January 2024
0
0
0

சரித்திரம், பூமி, வாழ்க்கையின் கர்ம பலன்கள் ஆகிய சகலத்திலும் ஒரு சுழற்சியும் தொடர்ச்சியும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுவதில் எத்தனை உண்மையிருக்கிறதென்பதை, சுற்றிலும் தன்னை எரித்துக்கொண்டிருந்த மணற்பரப்

2

2. விளக்கில் விரிந்த கதை

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் மலைக்குகை வாயிலில், மரங்கள் அடர்த்தியாயிருந்ததால் இருள் கடுமையாக இருந்த அந்தப் பிராந்தியத்தில், பந்தத்தை கையில் ஏந்தி அதன் சுடர் முகத்தில் வீச சுடர்க்கொடியென்ற காரணப் பெயருக்கு முற

3

3. துணைவன்!

15 January 2024
0
0
0

விரிந்து படர்ந்து எரிந்த விளக்கின் சுடரை விந்தைக் கண்களுடன் நோக்கிய ராவ்ஜோடா. அதில் விரிந்த கதையைக் கண்டதும் மெய்சிலிர்த்துப் போனான். முதலில் அந்தச் சுடரில் ஏதும் தெரியாததால் புரியாமல் விழித்த மார்வ

4

4. இரு விந்தைகள்

15 January 2024
0
0
0

மலை அரசியின் மதுர இதழ்களில் இருந்து உதிர்ந்த அந்தக் கொடுமையான சொற்களைக் கேட்டதும், வியப்பும் அச்சமும் கலந்த உணர்ச்சிகள் ராவ்ஜோடாவின் இதயத்தை மளடுருவிச் சென்றன. அப்படி அவன் நடுங்கியதை பக்கத்தில் உட்கார

5

5. நான் வருவேன்

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் குகையைவிட்டு வெளியேறிய மலை அரசி, வேகமாக மலையின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடந்து சென்றதும், விளைவித்த இரண்டு விந்தைகளும் மகாவீரனான மார்வார் இளவரசனை திகில் கொள்ளச் செய்தன என்றால்,

6

6. பெண் துணை!

15 January 2024
0
0
0

பெண்ணின் லாவண்யத்தால் ஆண்மகன் அறிவு அழிந்துவிடுகிறது. கவர்ச்சியான கன்னியின் முன்பாக எந்த ஆண்மகனும் சுயபுத்தியை இழந்துவிடுகிறான். இந்தப் பழைய நிகழ்ச்சிகளுக்கு அத்தாட்சியாக நின்றான் ராவ்ஜோடா. “உனது வீ

7

7. சாகுந்தலம்

16 January 2024
1
0
0

பந்தத்தையும் அணைத்துவிட்டு இருண்ட குகைக்குள் தன்னை வா வா என்று அழைத்த அந்த பருவப் பாவையின் துணிவை நினைத்து ஜோடா திகிலுக்கு இலக்காகி நின்ற நேரத்தில், மலைஅரசியே குகை வாயிலைவிட்டு அவனை அணுகி, அவன் கையைப்

8

8. காட்டு மலர்

16 January 2024
1
0
0

பாவின் வாலிப முரட்டு முகம் அவள் வழவழத்த கழுத்தில் திடீரென அழுந்திப் புரண்டபோது, மலை அரசியின் இதயமும் அந்த வாலிபன் உள்ளத்தைப்போலவே உணர்ச்சி அலைகளில் உருண்டது. அத்தனை உணர்ச்சி எழுச்சியிலும் அரசகுமாரன்

9

9. நிலையற்ற அரசு

16 January 2024
1
0
0

மலை அரசியை “காட்டு மலர்” என்று குறிப்பிட்டதோடு தனது பேச்சை ஜோடா நிறுத்திக்கொண்டு இருந்தால் ஜகத்சிம்மனின் கோபம் தலைக்கு ஏறியிருக்காது. “இவள் மார்வார் ராணி” என்றும் சொல்லவே ஜகத்சிம்மனுக்கு கோபத்துடன் தி

10

10. பறந்த கிளி! தொடர்ந்த துன்பம்!

16 January 2024
1
0
0

மலை அரசியின் சொற்களோ உத்தரவுகளோ மந்திராலோசனை சபையில் இருந்தவர்களுக்குக் கட்டோடு பிடிக்காதிருந்தாலும் அவள் சொன்னதற்கு எல்லாம் ஜோடா தலையை ஆட்டியதால், அவள் கட்டளைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் எல்லோருமே முன

11

11. மண்டோர் ரணகளம்

16 January 2024
1
0
0

மண்டோரின் பெரும் கதவுகள் சாத்தப்பட்டதாலும் போர்முரசு பலமாக ஒலித்ததாலும் வருவது என்னவென்பதை அறிந்த புது மகாராஜாவான ராவ்ஜோடா, புரவியின் கடிவாளத்தை பிடித்த நிலையிலேயே திகைத்து அமர்ந்துவிட்ட சமயத்தில் மலை

12

12. குகையில்...!

16 January 2024
1
0
0

பெற்றோர் புரிந்த பாவம் சிலரைப் பிடித்து வாட்டுகிறது. உற்றார் செய்த பாவமும் சிலரை விடுவதில்லை. பெற்றோரும் உற்றாரும் விளைவித்த பாவங்களுக்கு எப்பாவமும் அறியாத ஜோடா இலக்கானான். பேரனான மோகுல சிம்மனை சீராட்

13

13. அவள் கனவு!

16 January 2024
1
0
0

மலை அரசியைப் பார்த்து மார்வார் இளவரசனாயிருந்து அரசனாகி, நாட்டையும் பறிகொடுத்த ராவ்ஜோடா, அத்தகைய ஒரு கேள்வியைக் கேட்டான் என்றால், அதற்கு மூலகாரணம் அவளுடைய விபரீதமான பதில்தான். “நாம் தனித்திருப்பது உனக்

14

14. தண்டனை!

17 January 2024
1
0
0

மலை அரசியை தரையில் கிடத்திவிட்டு குகையின் வாயிலுக்கு வந்த ராவ்ஜோடாவின் செவிகளில் ஜகத்சிம்மனும் மற்ற வீரர்களும் ஏறிவந்த புரவியின் குளம்படி ஒலிகள் கூடக் கேட்கவில்லை. குகைக்கு உள்ளே மலை அரசியின் அருகாமைய

15

15. ஹர்பா சங்க்லா!

17 January 2024
0
0
0

மலை அரசியால் மன்னிக்கப்பட்டு ஜோடாகிருக்குச் செல்லும்படி பணிக்கப்பட்ட ஜகத்சிம்மன் உடனடியாகத் திரும்பவில்லை தனது புரவியை நோக்கி நின்ற இடத்திலேயே அசைவற்று நின்றான் பல விநாடிகள். பிறகு சட்டென்று வேகமாக நட

16

16. அந்தி வானம்

17 January 2024
0
0
0

அதிர்ஷ்டம் என்பது ஒரு மனிதனைப் பிடித்துக்கொண்டால் அவனை அது லேசில் விடுவது இல்லை. கூடியவரையில் விடாமல் தொடர்கிறது. துரதிர்ஷ்டக்காரனுக்கு புத்தி பேதலிக்கிறது. காலம் கைகொடுப்பது இல்லை. எதையும் காலங்கடந்த

17

17. வாளின் கதை!

17 January 2024
0
0
0

ஜோடாவைப்பற்றி விசாரித்ததும் மலை அரசியின் மதிமுகம் அந்திவானம் போல் சிவந்துவிட்டதைக் கண்டதுமே நைஷ்டிக பிருமச்சாரியும், எந்தப் பெண்ணையும் கண்ணெடுத்துப் பார்க்காதவரும், பிருமச்சாரி விரதம் கெடக்கூடாது என்ப

18

18. தேடி வந்த அதிர்ஷ்டம்!

17 January 2024
0
0
0

மார்வார் மன்னனையும் மலைக்க வைத்த அந்த விசித்திரக் கதையைச் சொல்லுமுன்பு பிருமச்சாரி அந்தச் சிறு வீட்டின் முற்றத்தை வளைத்திருந்த சுற்றுக் கட்டடத்தின்மீது உட்கார்ந்து கீழ் இருந்த முற்றத்தில் தமது கால்களை

19

19. பாலைவனக் கூடாரம்

17 January 2024
0
0
0

இரவு தந்த இருளில், மலைக்காடு வீசிய இதமான காற்றில், சாளரத்துக்கு அருகில் இருந்த மகிழ மரம் பரவவிட்ட சுகந்தத்தின் சூழ்நிலையில், மலை அரசியை சூழ்ந்து நெருக்கிய ஜோடாவின் கரங்கள் நெருக்கியதோடு நில்லாமல் இன்ப

20

20. கரிய புரவி! கழுத்தில் ஈட்டி!

18 January 2024
0
0
0

ஜோடாவின் பரம விரோதியான சந்தசிம்மனின் மூத்த மகன் காந்தாஜி தன் வாளை உருவிக்கொண்டு ராவ் ஜோடாவை அணுகுவதற்கு முன்பே ஜோடா பிருமச்சாரியளித்த தனது பெரிய வாளை உருவி எதிரியைத் தடுத்தான். அவனைச் சேர்ந்த பத்து பத

21

21. மலைச்சாரல் ஓசை

18 January 2024
0
0
0

கழுத்தில் பதித்திருந்த ஈட்டி சற்றும் அசையாமல் இருந்தாலும் அதில் ஒரு திடமும், ஈட்டியைப் பிடித்திருந்தவன் கையில் ஈவு இரக்கமற்ற ஓர் உறுதியும் இருந்ததைக் கவனித்த ராவ்ஜோடா, தான் சிறிது அசைந்தாலும் அந்த ஈட்

22

22. பரீட்சை

18 January 2024
0
0
0

பாபுஜியின் நூறு புரவிகள் ஏதோ பெரும் புயலைப் போல் மலைச்சரிவில் வந்ததாலும், அவை கண்ணிமைக்கும் நேரத்தில் தனது புரவியில் இருந்து தன்னை வீழ்த்திவிட்டதாலும் மலைப்பாறையில் புரண்ட ஜோடா வெகு துரிதமாகப் பாறையில

23

23. அடவியில் ஒரு காட்சி!

18 January 2024
0
0
0

நீண்டநாள் பிரிந்த மகனை ஆர்வத்துடன் தழுவும் தந்தை போல ஜோடாவை பல விநாடி தழுவி நின்ற பாபுஜி, கடைசியில் அவனுக்குத் தமது கைகளில் இருந்து விடுதலை அளித்தபோது அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் இரண்டு தே

24

24. காதல் பாபமா?

18 January 2024
0
0
0

அடர்ந்த அந்த அடவிக்குள் நாலைந்து பங்கஜங்களை நீர்மட்டத்துக்குமேல் காட்டிக்கொண்டிருந்த சிறு வாவியின் கரையில் மலை அரசியும் ஜோடாவும் உட்கார்ந்திருந்த நிலையைக் கண்டதும் இரண்டு பிருமச்சாரிகளும் தங்கள் பிரும

25

25. ஜோடாவின் துணிவு!

18 January 2024
0
0
0

பாபுஜியும், பிருமச்சாரியும் விழிப்பதைப் பார்த்த ஜோடா, “உங்கள் இருவருக்கும் வரவர சுயநம்பிக்கை போய்விட்டது” என்று ஓர் அம்பை வீசினான். அதுவரை தாங்கள் கண்ட காட்சியால் குழப்பத்தில் இருந்த இரு பிருமச்சாரி

26

26. சாவுகாரைப் பிடித்த சனியன்!

18 January 2024
0
0
0

மண்டோர் அரசின் முதலமைச்சராயிருந்து, சந்தசிம்மன் ஆக்கிரமிப்புக்குப் பின்பு அந்தப் பதவியில் இருந்து விலகி, அரண்மனையில் தமக்கு முன்னாள் மன்னனால் அளிக்கப்பட்டு இருந்த இடத்தையும் சந்தசிம்மனிடம் ஒப்புடைத்து

27

27. அடைத்த கதவு!

18 January 2024
0
0
0

காந்தோஜியின் குறுவாள் அழுந்தியதாலும், எச்சரிக்கையாலும், அவன் பின்னால் நின்றிருந்த மஞ்சாஜியின் உதடுகளில் துளிர்த்திருந்த குரூரப் புன்முறுவலாலும், சாவுகார் அஞ்சி நடுநடுங்கிவிடுவார் என்றோ, முன்னே நடந்துவ

28

28. வேடர் குடிசை மர்மம்!

18 January 2024
0
0
0

கோட்டைக் காவலன் சொன்ன செய்தியால் மலைத்த இருவரில் சாவுகாரே முதலில் திகைப்பை உதறிக்கொண்ட தன்றி சமயாசந்தர்ப்பம் தெரியாமல் கோப்தையும் காட்டினார். “காவலனே! வணிகர்களைத் தடை செய்யும் வழக்கம் மார்வாரில் கிடைய

29

29. உள்ளே ஒரு பெண் குரல்!

18 January 2024
0
0
0

அன்று பகல் முழுவதும் மார்வார் படைத்தலைவனான ஜகத்சிம்மனுக்கும் மண்டோர் கோட்டை காவலனுக்கும் உணவு முதலிய விஷயங்களில் ராஜோபசாரம் நடந்தாலும், அவ்விருவரும் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் எந்த வேடனும் நேரடியாக ப

30

30. ஜோடாவின் துன்மார்க்கம்!

19 January 2024
1
0
0

மூன்று குணங்களை மனிதன் தவிர்ப்பது நல்லது. தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் அக்கறை காட்டுவது, ஒன்று. ஒட்டுக் கேட்பது, இரண்டு. காலதாமதம் செய்வது, மூன்று. இந்த மூன்றில் ஏதாவது ஒரு குணமே யாரையும் இக்கட்ட

31

31. மணக்கோலம்!

19 January 2024
1
0
0

வீரனாகப் படைகளை இயக்கி, இழந்த அரசை மீட்பதில் சித்தத்தை செலுத்த வேண்டிய மார்வார் மன்னன், கேவலம், பெண் மோகம் கொண்டவனாகக் குடிசையில் மறைந்து கொண்டு காலத்தை ஓட்டுவதை நினைத்த ஜகத்சிம்மன் வேடவர் குடிசைக் கூ

32

32. சந்திர முகம்

19 January 2024
1
0
0

மண்டோர் படைத்தலைவனான ஜகத்சிம்மன் தனது மன்னனின் திருமணத்தையே நிறுத்த முயன்றதும், அதற்காகக் கூச்சலிட்டதும் பலருக்கு கோபத்தையும் சிலருக்கு வியப்பையும் உண்டாக்கினாலும், பிருமச்சாரி ஹர்பாசங்க்லாவோ, திருமணப

33

33. இழந்த சொர்க்கம்

19 January 2024
1
0
0

ராவ்ஜோடாவின் அணைப்பில் இருந்த அழகியின் சந்திர வதனத்தைக் கண்டதும் ஜகத்சிம்மன் திகைப்பும் அதிர்ச்சியும் ஒருங்கே அடைந்தான் என்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. அந்த முகம் மலை அரசியின் முகம்! முகத்

34

34. பதவி இறக்கம்!

19 January 2024
1
0
0

மலை அரசியின் மறுபிம்பம் போன்ற மின்னிடையாளுடன், ஜோடா கலந்து விளையாட இருந்த சமயத்தில் பிருமச்சாரி ஹர்பாசங்கலா அங்கு தோன்றியதும் கதவைத் தட்டியதும் பரமானந்தமாயிருந்தது, மண்டோர் படைத்தலைவன் ஜகத்சிம்மனுக்கு

35

35. மீண்டும் வந்தாள்!

19 January 2024
1
0
0

மண்டோரின் படைத்தலைவனாக இருந்த தன்னை திடீரென உபதளபதியாக்கிவிட்ட மன்னன் செயலைக் கண்டு மனம் துடித்த ஜகத்சிம்மன் அந்த அவமானத்தில் இருந்து எப்படி மீளலாம் என்று சிந்தித்தான். அது தவிர இந்த திடீர் பதவி இறக்க

36

36. மண்டோர் சமர்

19 January 2024
1
0
0

கேவலம், ஒரு பெண், புரவியில் இருந்து இறங்க, அவள் காலுக்குப் படியாக தனது இரு கைகளையும் கோத்து நீட்டிய பிருமச்சாரியிடம் பெரிதும் வெறுப்புக் கொண்டான், ஜகத்சிம்மன். பிருமச்சாரி உண்மையில் பெரும் போலி பிருமச

37

37. மணலில் தோய்ந்த ரத்தம்

19 January 2024
1
0
0

மண்டோர் போரில் மாவீரர்களான சந்தசிம்மன் புதல்வர்கள் அடைந்த தோல்விக்குக் காரணம் தாங்கள் போரிடும் எதிரிகளின் திறனை அவர்கள் தவறாக எடைபோட்டதுதான் என்று கர்னல் ஜேம்ஸ்டாட் தமது ராஜபுதன வரலாற்று நூலில் தெளிவா

38

38. துரோகி!

19 January 2024
1
0
0

மலை அரசி தனது வளையல் கரங்களை நீட்டி தன்னைக் கைது செய்யும்படிக் கேட்டுக்கொண்டதும் காந்தோஜி தனது தம்பியின் மரணத்தையும் மறந்து வியப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே அடைந்தான். அப்பொழுதும் மலை அரசி வேட்டுவர

39

39. வேகம்! தாகம்!

19 January 2024
1
0
0

மேவாரின் தலைநகரான சித்தூரில் இருந்து தப்பி ஓடிவந்து லூனி ஆற்றின் உப்பு நீரில் தந்தையின் மரணத்துக்கு நீராடிய அதே துறையில், கிட்டத்தட்ட அதே இடத்தில் தங்கள் வம்ச துர்ப்பாக்கியத்துக்கும் அவப் பெயருக்கும்

40

40. அரசி ஆன, மலை அரசி!

19 January 2024
1
0
0

மலை அடிவாரப் புதரில் மலை அரசி மல்லாந்து கிடந்த கோலம் மண்டோர் மன்னனின் வெறியைக் கிளறிவிடவே, அவன் உலகத்தையே மறந்து, அதுவரை நேர்ந்த நிகழ்ச்சிகளால் மனம் ஏற்படுத்திய கட்டுப்பாடுகளையும் தடைகளையும் உதறி அவள்

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்