shabd-logo

8. காட்டு மலர்

16 January 2024

2 பார்த்தது 2

பாவின் வாலிப முரட்டு முகம் அவள் வழவழத்த கழுத்தில் திடீரென அழுந்திப் புரண்டபோது, மலை அரசியின் இதயமும் அந்த வாலிபன் உள்ளத்தைப்போலவே உணர்ச்சி அலைகளில் உருண்டது.
அத்தனை உணர்ச்சி எழுச்சியிலும் அரசகுமாரன் தன் உடலை அடியோடு தூக்கி அணைத்துக்கொள்ளாமல், அவன் முகம் கழுத்தில் புரண்டும் இதழ்கள் விரிந்து விரிந்து கழுத்தில் பல இடங்களில் மாறி மாறிப் புதைந்த போதிலும், தனது உடலுக்குக் குறுக்கே பாய்ந்திருந்த அவனது வலக்கை திடமாக ஊன்றி அவனது உடலை சிறிது தூக்கியே வைத்து தனது கவர்ச்சிப் பிரதேசங்களுக்கும் வலிய அவன் மார்புக்கும் இடைவெளி கொடுத்தே இருந்ததையும் உணர்ந்த அந்த காட்டு ராணி, பண்பில் ஊறியிருந்த ஒரு மகாவீரனிடம் தான் சிக்கியிருப்பதைப் புரிந்து கொண்டாள். அதனால் பெருமை கலந்த உணர்ச்சி மிகுந்த பெருமூச்சொன்றையும் வெளியிட்டாள்.
அந்தப் பெருமூச்சின் விளைவாகவும், மீண்டும் பெரிதாக உள்ளே இழுத்து நிறுத்தப்பட்ட சுவாசத்தின் விளைவாகவும் விம்மிய அவள் மார்பகம், அப்படியே நின்றுவிட்டதால் அந்தப் பகுதி ஜோடாவின் மார்புமீது லேசாக உராயவே செய்தது என்றாலும், அதையும் அதன் அழைப்பையும் ஜோடா உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஏதோ பெரும் மயக்கத்தில் சிக்கியவன் போல் ஜோடா அவள் கழுத்தில் பதிந்து புரண்ட முகத்தைக்கூட ஒரே இடத்தில் நிறுத்தினான். பிறகு அந்த இடத்தில் இருந்து முகத்தை எழுப்பி அவள் கண்களுடன் தன் கண்களை உறவாடச் செய்ய முயன்றான்.
ஆனால், மலை அரசியின் மான்விழிகள் மூடியே இருந்ததால் அவன் எண்ணம் நிறைவேறவில்லை என்றாலும் மூடிய நிலையிலும் அந்த முகம் இருந்த வசீகர எழிலைப் பருகவே செய்தான். மூடியிருந்த கண்கள் முத்துச்சிப்பிகளைப் போலக் காட்சியளித்தன. அவற்றின் மேலே கறுத்து வளைந்து இருந்த இரு விற்கள் அந்தச் சிப்பிகளைப் பாதுகாக்கவே ஏற்பட்டனபோல் தெரிந்தன, ஜோடாவின் விழிகளுக்கு.
அவன் விசால முகம், அவளுடைய முன்னுச்சி முடிகளின் விளையாடும் நிலமாகவும், குறுக்கே படுக்க வைக்கப்பட்ட அகன்ற தாமரை இதழ் போலும் இருந்ததை கவனித்த மார்வார் ராஜபுத்திரன், தனது வலக்கையை தரையில் இருந்து எடுத்து அவள் நுதலைத் தடவவும் செய்தான். அவள் கண்களை அணைத்து நின்ற கன்னங்களின் செழுமை அவனை வாவென்று அழைத்துங்கூட அவன் அவற்றை இதழ் கொண்டு நெருங்காமல் வலக் கையால் மெல்ல வருடினான். ஒருமுறை லேசாக்கி கிள்ளியும் பார்த்தான்.
அந்த கிள்ளல் அவள் இதயத்தில் ஏதோ ஒரு வாசலைத் திறந்திருக்க வேண்டும். அவள் அழகிய தேன் சொட்டும் அதர இதழ்கள் மெள்ள விரிந்து சேர்ந்தன ஒரு விநாடி. அப்படி விரிந்து சேர்ந்ததில் ஒரு துடிப்பும் இருந்ததை கவனித்தான் ஜோடா. ‘துடிப்பு ஏன்? மலை அரசியும் பயந்துவிட்டாளா? அல்லது சகுந்தலையும் துஷ்யந்தன் சமீபத்தில் இப்படித்தான் துடித்திருப்பாளா?’ என்று தன்னுள் வினவிக் கொண்டான், அந்த வாலிபன்.
அந்தத் துடிப்பு தனது இதழ்களுக்கு அழைப்பு என்பதை அந்த ஆண் மகன் புரிந்துகொள்ளவில்லை. அந்தச் சமயத்தில் அது காமத்தின் துடிப்பு, அச்சத்தின் துடிப்பு அல்ல என்பதை அவன் உணரவில்லை. அப்பொழுது அவள் உடலும் அசைந்ததையும், பருத்த அவள் தொடைகள் கூட லேசாக அசைந்து கூடிக் கொண்டதையும் பார்த்த ஜோடா, முதலில் துணிந்த மலை அரசியின் கற்பின் வலிமை அவளைக் காப்பாற்ற முன்வந்துவிட்டதாக எண்ணினான்.
இப்படி அவள் ஒவ்வோர் அசைவையும் தர்மக் கண்கொண்டு பார்த்த மார்வார் ராஜபுத்திரனுக்கு, உண்மைக்கு மாறுபட்ட அர்த்தங்களே புத்தியில் தொனிக்கவே அவளை சமாதானப்படுத்த முயன்றான் அவன். அவளுக்கு துணிவைக் கொடுப்பது தனது கடமை என்று எண்ணிய ஜோடா, மடமை என்பது பெண்களின் தனிச் சொத்தல்ல என்பதை நிரூபிக்கத் தொடங்கினான். “பெண்ணே!” என்று அவள் காதுக்கு அருகில் குனிந்து மெள்ள அழைத்தான்.
அவளிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை.
அவனே மீண்டும் சொன்னான், “உன்னைக் காக்க மார்வார் இளவரசன் இருக்கும் வரை நீ அஞ்சுவதற்கு ஏதுமில்லை” என்று.
மௌனம் எழுப்பிய உணர்ச்சிகளில் அனாவசியமான பேச்சு குறுக்கிடவே சட்டென்று சுயநிலை எய்திவிட்ட மலை அரசி மிக மதுரமாக மெல்ல நகைத்தாள்.
ராவ்ஜோடா நன்றாக நிமிர்ந்து தரையில் உட்கார்ந்து இரு கைகளையும் அவள் உடலுக்குக் குறுக்கே கொடுத்துத் தூக்கி முகத்தை தனது முகத்துக்கு அருகில் கொண்டு வந்தான். அந்த நிலையில் கேட்டான், “மலை அரசி ஏன் சிரிக்கிறாய்?” என்று.
அப்பொழுதும் அவள் கண்களை விழிக்கவில்லை. அவள் தலை பூமியை நோக்கி சாய்ந்து, முடிந்த குழல் அவிழ்ந்து தொங்கி தரையில் புரண்டு கொண்டு இருந்தது. தலை அப்படி சாய்ந்து இருந்ததால், முன்பு அவனது முகம் புரண்ட கழுத்து நன்றாக நீண்டு அவன் கண் எதிரில் காட்சியளித்ததால், அதன் மோகனகாரத்தில் அவன் இரண்டாம் முறையாக மூழ்கினான். இதழ்களை அந்தக் கழுத்தில் அழுத்தினான். கழுத்து செய்த பாக்கியத்தைத் தாங்கள் செய்யவில்லையே என்ற எரிச்சலால் இரட்டை எழில் பகுதிகள் அந்த வாலிபனை நோக்கி முறைத்தன. மார்பின் எரிச்சலை நோக்கியதாலோ என்னவோ அவள் அழகிய இடை வெட்கத்தால், அதர்மத்தைக் காணும் நல்ல மனிதர்களைப் போல, மிகவும் குறுகியது. குன்றிவிட்ட மனிதர்களின் இடங்களை ஆக்கிரமித்துக் கொள்ளும் தீயவர்களைப் போல கீழ்ப்பரிமாணங்கள் அகன்று இடத்தைப் பிடித்து, அது இருந்த இடத்தைத் தெரியாமல் அடித்துவிட்டன.
ராவ்ஜோடா மீண்டும் தனது முகத்தை அவள் கழுத்தில் இருந்து எடுத்தான். அவள் உடலை நன்றாகத் தூக்கி தனது மார்பில் அவள் தலையை சாய்த்துக்கொண்டான். “மலைஅரசி! அடி காட்டு மலரே!” என்று இன்பமாக அழைத்தான்.
மலை அரசி மெள்ள கண்களை விழித்தாள். “காட்டு மலரா?” என்று மெதுவாக வினவினாள்.
“ஆம். நாட்டில் மலர்கள் இத்தனை செழிப்பதில்லை” என்றான் ஜோடா. அவள் உடலின் பின்புறத்தில் கண்களை ஓட விட்டு.
“காட்டில் மட்டும் செழிக்கிறதா? உண்மையாகவா?” என்று வினவினாள், மலை அரசி மெதுவாக.
“ஆம்.” ஜோடாவின் கண்களில் கனவு விரிந்து, கனவுக் கண்கள் அவள் வசீகரத்தைப் பருகின.
“ஏனோ?” அவள் முணுமுணுத்தாள்.
“நாடு நாகரிகத்தில் திளைக்கிறது. செயற்கையை வளர்க்கிறது. இயற்கை வாழ்விலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்கிறது. அதனால்தான்.”
“காட்டில்?”
“கட்டுப்பாடு இல்லை. கேட்பார் இல்லை. இயற்கை கொடுக்கிறது உரம். சுதந்திரம் அளிக்கிறது சூழ்நிலை. கவலையற்று வளர்கிறது காட்டுச் செடி. அதன் மலர்களுக்கு, மனிதன் பறித்துவிடுவானே என்ற அச்சமில்லை. அதனால் செழித்து வளர்ந்து மலர்ந்து காற்றில் விளையாடுகிறது.”
“உங்களுக்கு நாடு பிடிக்கவில்லையா?”
“உன்னை பார்த்ததில் இருந்து பிடிக்கவில்லை.”
“நீங்கள் கவிஞரா?”
“உன்னைப் பார்த்தபின் அப்படியானேன்.”
“நான் இல்லாமல் நீங்கள் ஊர் சென்றால்?”
“இன்பக் கவி துன்பக் கவியாவான். கவி மனம் ஒரு முறை ஊற்றெடுத்து விட்டால் வரண்டு போவதில்லை.”
மீண்டும் மலை அரசி நகைத்தாள். “வாலிபரே!” என்று அழைத்தாள் கண்களை அகல விரித்து, அவன் கண்களுடன் உறவாடவிட்டு.
“மலரே! ஏன்?” கவிதையிலேயே பேசினான். அரசமகன்.
“மன்னனே...!” என்று தொடங்கினாள் மலை அரசி.
“என்ன மலரே?” இன்ப முறுவல் கூட்டினான். இளவரசன்.
“மன்னன் கையில் மலர் கிடக்கிறது.”
“உம்.”
“காட்டு மலரை அவன் பறித்தது தவறு.”
“பறித்தது அவன் அல்ல. அது இடறியது” என்று சொல்லியிருக்கலாம் அவன். ஆனால். சொல்லவில்லை. அதை நெருங்கினான், முகர்ந்தான்.
“அது?”
“தவறல்ல, இயற்கை நியதி. ஆனால்...”
“ஆனால்?”
“முகந்ததுடன் நின்றுவிட்டான். அது அதர்மம். இன்னொருவன் அதை முகர முடியாது.”
“அதனால்?”
“நுகருவது தர்மம். சாஸ்திரம் அனுமதிக்கிறது.”
“எதை?”
“எதை துஷ்யந்தன் ஏற்றான்?”
“காந்தருவத்தை.”
“அது க்ஷத்திரிய தர்மம் அல்லவா?”
ஜோடா தீர்க்கசிந்தனையில் இறங்கினான். பிறகு மெதுவாகச் சொன்னான் : “நீயும் க்ஷத்திரியப் பெண்ணாயிருந்தால் அது தர்மம். இல்லையேல்...” என்று.
அவன் வாசகத்தை முடிக்கவில்லை. “என்னை நீங்கள் தொட்டதே பாவம். பிறகு செய்வதெல்லாம் அழிக்க முடியாத அதர்மம். இப்பொழுது - மலரைத் தாங்கியிருக்கிறீர்கள். மீளா நரகத்திற்குச் செல்ல இதுதான் வழி” என்று அவன் வாசகத்தை வெட்டிய மலை அரசி, “உங்களுக்கு மனச்சாட்சியில்லை. துஷ்யந்தன் தனது மனம் சகுந்தலையிடம் சென்றதும் சிறிது சிந்தித்தான். பிறகு தர்மவானான அவனே சொல்லிக் கொண்டான், ‘நல்ல மனிதர்கள் மனம் தவறான வழியில் செல்லாது’ என்று. பிறகு அவன் கடமையைச் செய்யத் தவறவில்லை. உங்கள் மனத்தில் தெளிவில்லை, திடமில்லை” என்ற மலை அரசி சட்டென்று அவன் கைகளை உதறி எழுந்து நின்றான்.
ஜோடாவும் எழுந்தான்.
எழுந்து அவள் நின்றபோது மேலேயிருந்து வந்த கிரணங்கள் அவள் உடலை நிலவில் குளிப்பாட்டின. விரிந்த கருங்குழலை அவள் எடுத்து முடித்துக்கொண்டு ஜோடாவை நோக்கி, “ராஜபுத்திரனே! இரவு கண்களை மூடிவிட்டது. உதயம் கண்ணை விழிக்கப் போகிறது. அருவிக்குச் சென்று காலைக் கடனை முடித்து புரவியைத் தயார் செய்துகொள். அருணோதயத்தில் நாம் புறப்படுகிறோம்” என்று உத்தரவிட்டாள்.
ராவ்ஜோடா ஏதும் பேசாமல் குகைக்கு வெளியே சென்றான். அதுவரை அவன் பட்ட உஷ்ணத்துக்கு அருவி நீர் அமுதமாயிருந்தது. அவன் அதில் மூழ்கினான். அருணன் கிழக்கே மெல்லத் தலை காட்டினான். சந்தியாவந்தனத்தை முடித்த ராஜபுத்திரன் கரைக்கு வந்து தனது உடைகளைப் புனைந்தான். பிறகு எட்ட இருந்த தனது புரவிக்கு சேணமிட்டான்.
அந்தச் சமயத்தில் மலை அரசி புது மரவுரியை இடையில் தரித்து, ஒரு புலித்தோலை தாவணியாகப் போட்டுக்கொண்டு குகையில் இருந்து வெளியே வந்து நேராக புரவி இருக்குமிடம் சென்று அதன்மீது தாவி அனாயாசமாக ஏறினாள். “ஜோடா! நீயும் ஏறிக்கொள்” என்றாள் மலை அரசி.
அவள் சொற்படி அவனும் ஏறியதும் புரவி மலைச்சரிவில் வேகமாக இறங்கிச் சென்று, பாலைவனப் பகுதியை அடைந்தது. இப்படிப் பயணம் செய்த இரண்டாவது நாள் இருவரும் மார்வார் தலைநகரத்துக்கு எதிரில் தோன்றினார்கள். அவர்களைக் கண்டதும் மண்டோரின் கோட்டைக் கதவுகள் திறக்கவே, ராவ்ஜோடா புரவியில் இருந்து இறங்கி கடிவாளத்தைக் கைகளில் ஏந்தி தலைநகரில் நுழைந்தான்.
அவனை ஜகத்சிம்மன் கோட்டை வாயிலிலேயே எதிர் கொண்டான். “உங்களுக்குத் துன்பச் செய்தி வைத்திருக்கிறேன்” என்று சொன்னான் ஜகத்சிம்மன், மலை அரசியை வெறுப்புடன் பார்த்து.
“அது என்ன என்பது எனக்குத் தெரியும்” என்ற மலை அரசி, “சந்தசிம்மன் வருவதைப் பற்றிக் கவலைப்படாதே” என்றும் சொன்னான்.
இதைக் கேட்ட மார்வார் படைத்தலைவனை ஜகத்சிம்மன் பிரமை பிடித்து கல்லாய் சமைந்து நின்றான். பிறகு கோபம் தலைக்கு ஏற, “நீ ஒரு...” என்று ஏதோ தொடங்கினான்.
“காட்டுமலர்” என்று அதட்டலான குரலில் அவன் வாசகத்தை வெட்டிய இளவரசன், வேறொன்றும் சொன்னான். அதை மலை அரசிகூட எதிர்பார்க்கவில்லை.

சாண்டில்யன் மூலம் மேலும் புத்தகங்கள்

40
கட்டுரைகள்
மலை அரசி
0.0
மாலை அரசி தமிழ் மொழியில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான வரலாற்று நாவல். பிரபல தமிழ் எழுத்தாளர் சாண்டில்யன் இந்த மனதை மயக்கும் புத்தகத்தை எழுதியுள்ளார். சாண்டில்யன் வரலாற்றுப் புனைகதைகளுக்காகப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார், மேலும் அவர் தனது வரலாற்று, காதல் மற்றும் சாகச நாவல்களுக்காக நன்கு அறியப்பட்டவர், இது பெரும்பாலும் சோழ மற்றும் பாண்டிய பேரரசுகளின் காலங்களில் அமைக்கப்பட்டது.
1

1. சுடர்க்கொடி

15 January 2024
0
0
0

சரித்திரம், பூமி, வாழ்க்கையின் கர்ம பலன்கள் ஆகிய சகலத்திலும் ஒரு சுழற்சியும் தொடர்ச்சியும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுவதில் எத்தனை உண்மையிருக்கிறதென்பதை, சுற்றிலும் தன்னை எரித்துக்கொண்டிருந்த மணற்பரப்

2

2. விளக்கில் விரிந்த கதை

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் மலைக்குகை வாயிலில், மரங்கள் அடர்த்தியாயிருந்ததால் இருள் கடுமையாக இருந்த அந்தப் பிராந்தியத்தில், பந்தத்தை கையில் ஏந்தி அதன் சுடர் முகத்தில் வீச சுடர்க்கொடியென்ற காரணப் பெயருக்கு முற

3

3. துணைவன்!

15 January 2024
0
0
0

விரிந்து படர்ந்து எரிந்த விளக்கின் சுடரை விந்தைக் கண்களுடன் நோக்கிய ராவ்ஜோடா. அதில் விரிந்த கதையைக் கண்டதும் மெய்சிலிர்த்துப் போனான். முதலில் அந்தச் சுடரில் ஏதும் தெரியாததால் புரியாமல் விழித்த மார்வ

4

4. இரு விந்தைகள்

15 January 2024
0
0
0

மலை அரசியின் மதுர இதழ்களில் இருந்து உதிர்ந்த அந்தக் கொடுமையான சொற்களைக் கேட்டதும், வியப்பும் அச்சமும் கலந்த உணர்ச்சிகள் ராவ்ஜோடாவின் இதயத்தை மளடுருவிச் சென்றன. அப்படி அவன் நடுங்கியதை பக்கத்தில் உட்கார

5

5. நான் வருவேன்

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் குகையைவிட்டு வெளியேறிய மலை அரசி, வேகமாக மலையின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடந்து சென்றதும், விளைவித்த இரண்டு விந்தைகளும் மகாவீரனான மார்வார் இளவரசனை திகில் கொள்ளச் செய்தன என்றால்,

6

6. பெண் துணை!

15 January 2024
0
0
0

பெண்ணின் லாவண்யத்தால் ஆண்மகன் அறிவு அழிந்துவிடுகிறது. கவர்ச்சியான கன்னியின் முன்பாக எந்த ஆண்மகனும் சுயபுத்தியை இழந்துவிடுகிறான். இந்தப் பழைய நிகழ்ச்சிகளுக்கு அத்தாட்சியாக நின்றான் ராவ்ஜோடா. “உனது வீ

7

7. சாகுந்தலம்

16 January 2024
1
0
0

பந்தத்தையும் அணைத்துவிட்டு இருண்ட குகைக்குள் தன்னை வா வா என்று அழைத்த அந்த பருவப் பாவையின் துணிவை நினைத்து ஜோடா திகிலுக்கு இலக்காகி நின்ற நேரத்தில், மலைஅரசியே குகை வாயிலைவிட்டு அவனை அணுகி, அவன் கையைப்

8

8. காட்டு மலர்

16 January 2024
1
0
0

பாவின் வாலிப முரட்டு முகம் அவள் வழவழத்த கழுத்தில் திடீரென அழுந்திப் புரண்டபோது, மலை அரசியின் இதயமும் அந்த வாலிபன் உள்ளத்தைப்போலவே உணர்ச்சி அலைகளில் உருண்டது. அத்தனை உணர்ச்சி எழுச்சியிலும் அரசகுமாரன்

9

9. நிலையற்ற அரசு

16 January 2024
1
0
0

மலை அரசியை “காட்டு மலர்” என்று குறிப்பிட்டதோடு தனது பேச்சை ஜோடா நிறுத்திக்கொண்டு இருந்தால் ஜகத்சிம்மனின் கோபம் தலைக்கு ஏறியிருக்காது. “இவள் மார்வார் ராணி” என்றும் சொல்லவே ஜகத்சிம்மனுக்கு கோபத்துடன் தி

10

10. பறந்த கிளி! தொடர்ந்த துன்பம்!

16 January 2024
1
0
0

மலை அரசியின் சொற்களோ உத்தரவுகளோ மந்திராலோசனை சபையில் இருந்தவர்களுக்குக் கட்டோடு பிடிக்காதிருந்தாலும் அவள் சொன்னதற்கு எல்லாம் ஜோடா தலையை ஆட்டியதால், அவள் கட்டளைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் எல்லோருமே முன

11

11. மண்டோர் ரணகளம்

16 January 2024
1
0
0

மண்டோரின் பெரும் கதவுகள் சாத்தப்பட்டதாலும் போர்முரசு பலமாக ஒலித்ததாலும் வருவது என்னவென்பதை அறிந்த புது மகாராஜாவான ராவ்ஜோடா, புரவியின் கடிவாளத்தை பிடித்த நிலையிலேயே திகைத்து அமர்ந்துவிட்ட சமயத்தில் மலை

12

12. குகையில்...!

16 January 2024
1
0
0

பெற்றோர் புரிந்த பாவம் சிலரைப் பிடித்து வாட்டுகிறது. உற்றார் செய்த பாவமும் சிலரை விடுவதில்லை. பெற்றோரும் உற்றாரும் விளைவித்த பாவங்களுக்கு எப்பாவமும் அறியாத ஜோடா இலக்கானான். பேரனான மோகுல சிம்மனை சீராட்

13

13. அவள் கனவு!

16 January 2024
1
0
0

மலை அரசியைப் பார்த்து மார்வார் இளவரசனாயிருந்து அரசனாகி, நாட்டையும் பறிகொடுத்த ராவ்ஜோடா, அத்தகைய ஒரு கேள்வியைக் கேட்டான் என்றால், அதற்கு மூலகாரணம் அவளுடைய விபரீதமான பதில்தான். “நாம் தனித்திருப்பது உனக்

14

14. தண்டனை!

17 January 2024
1
0
0

மலை அரசியை தரையில் கிடத்திவிட்டு குகையின் வாயிலுக்கு வந்த ராவ்ஜோடாவின் செவிகளில் ஜகத்சிம்மனும் மற்ற வீரர்களும் ஏறிவந்த புரவியின் குளம்படி ஒலிகள் கூடக் கேட்கவில்லை. குகைக்கு உள்ளே மலை அரசியின் அருகாமைய

15

15. ஹர்பா சங்க்லா!

17 January 2024
0
0
0

மலை அரசியால் மன்னிக்கப்பட்டு ஜோடாகிருக்குச் செல்லும்படி பணிக்கப்பட்ட ஜகத்சிம்மன் உடனடியாகத் திரும்பவில்லை தனது புரவியை நோக்கி நின்ற இடத்திலேயே அசைவற்று நின்றான் பல விநாடிகள். பிறகு சட்டென்று வேகமாக நட

16

16. அந்தி வானம்

17 January 2024
0
0
0

அதிர்ஷ்டம் என்பது ஒரு மனிதனைப் பிடித்துக்கொண்டால் அவனை அது லேசில் விடுவது இல்லை. கூடியவரையில் விடாமல் தொடர்கிறது. துரதிர்ஷ்டக்காரனுக்கு புத்தி பேதலிக்கிறது. காலம் கைகொடுப்பது இல்லை. எதையும் காலங்கடந்த

17

17. வாளின் கதை!

17 January 2024
0
0
0

ஜோடாவைப்பற்றி விசாரித்ததும் மலை அரசியின் மதிமுகம் அந்திவானம் போல் சிவந்துவிட்டதைக் கண்டதுமே நைஷ்டிக பிருமச்சாரியும், எந்தப் பெண்ணையும் கண்ணெடுத்துப் பார்க்காதவரும், பிருமச்சாரி விரதம் கெடக்கூடாது என்ப

18

18. தேடி வந்த அதிர்ஷ்டம்!

17 January 2024
0
0
0

மார்வார் மன்னனையும் மலைக்க வைத்த அந்த விசித்திரக் கதையைச் சொல்லுமுன்பு பிருமச்சாரி அந்தச் சிறு வீட்டின் முற்றத்தை வளைத்திருந்த சுற்றுக் கட்டடத்தின்மீது உட்கார்ந்து கீழ் இருந்த முற்றத்தில் தமது கால்களை

19

19. பாலைவனக் கூடாரம்

17 January 2024
0
0
0

இரவு தந்த இருளில், மலைக்காடு வீசிய இதமான காற்றில், சாளரத்துக்கு அருகில் இருந்த மகிழ மரம் பரவவிட்ட சுகந்தத்தின் சூழ்நிலையில், மலை அரசியை சூழ்ந்து நெருக்கிய ஜோடாவின் கரங்கள் நெருக்கியதோடு நில்லாமல் இன்ப

20

20. கரிய புரவி! கழுத்தில் ஈட்டி!

18 January 2024
0
0
0

ஜோடாவின் பரம விரோதியான சந்தசிம்மனின் மூத்த மகன் காந்தாஜி தன் வாளை உருவிக்கொண்டு ராவ் ஜோடாவை அணுகுவதற்கு முன்பே ஜோடா பிருமச்சாரியளித்த தனது பெரிய வாளை உருவி எதிரியைத் தடுத்தான். அவனைச் சேர்ந்த பத்து பத

21

21. மலைச்சாரல் ஓசை

18 January 2024
0
0
0

கழுத்தில் பதித்திருந்த ஈட்டி சற்றும் அசையாமல் இருந்தாலும் அதில் ஒரு திடமும், ஈட்டியைப் பிடித்திருந்தவன் கையில் ஈவு இரக்கமற்ற ஓர் உறுதியும் இருந்ததைக் கவனித்த ராவ்ஜோடா, தான் சிறிது அசைந்தாலும் அந்த ஈட்

22

22. பரீட்சை

18 January 2024
0
0
0

பாபுஜியின் நூறு புரவிகள் ஏதோ பெரும் புயலைப் போல் மலைச்சரிவில் வந்ததாலும், அவை கண்ணிமைக்கும் நேரத்தில் தனது புரவியில் இருந்து தன்னை வீழ்த்திவிட்டதாலும் மலைப்பாறையில் புரண்ட ஜோடா வெகு துரிதமாகப் பாறையில

23

23. அடவியில் ஒரு காட்சி!

18 January 2024
0
0
0

நீண்டநாள் பிரிந்த மகனை ஆர்வத்துடன் தழுவும் தந்தை போல ஜோடாவை பல விநாடி தழுவி நின்ற பாபுஜி, கடைசியில் அவனுக்குத் தமது கைகளில் இருந்து விடுதலை அளித்தபோது அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் இரண்டு தே

24

24. காதல் பாபமா?

18 January 2024
0
0
0

அடர்ந்த அந்த அடவிக்குள் நாலைந்து பங்கஜங்களை நீர்மட்டத்துக்குமேல் காட்டிக்கொண்டிருந்த சிறு வாவியின் கரையில் மலை அரசியும் ஜோடாவும் உட்கார்ந்திருந்த நிலையைக் கண்டதும் இரண்டு பிருமச்சாரிகளும் தங்கள் பிரும

25

25. ஜோடாவின் துணிவு!

18 January 2024
0
0
0

பாபுஜியும், பிருமச்சாரியும் விழிப்பதைப் பார்த்த ஜோடா, “உங்கள் இருவருக்கும் வரவர சுயநம்பிக்கை போய்விட்டது” என்று ஓர் அம்பை வீசினான். அதுவரை தாங்கள் கண்ட காட்சியால் குழப்பத்தில் இருந்த இரு பிருமச்சாரி

26

26. சாவுகாரைப் பிடித்த சனியன்!

18 January 2024
0
0
0

மண்டோர் அரசின் முதலமைச்சராயிருந்து, சந்தசிம்மன் ஆக்கிரமிப்புக்குப் பின்பு அந்தப் பதவியில் இருந்து விலகி, அரண்மனையில் தமக்கு முன்னாள் மன்னனால் அளிக்கப்பட்டு இருந்த இடத்தையும் சந்தசிம்மனிடம் ஒப்புடைத்து

27

27. அடைத்த கதவு!

18 January 2024
0
0
0

காந்தோஜியின் குறுவாள் அழுந்தியதாலும், எச்சரிக்கையாலும், அவன் பின்னால் நின்றிருந்த மஞ்சாஜியின் உதடுகளில் துளிர்த்திருந்த குரூரப் புன்முறுவலாலும், சாவுகார் அஞ்சி நடுநடுங்கிவிடுவார் என்றோ, முன்னே நடந்துவ

28

28. வேடர் குடிசை மர்மம்!

18 January 2024
0
0
0

கோட்டைக் காவலன் சொன்ன செய்தியால் மலைத்த இருவரில் சாவுகாரே முதலில் திகைப்பை உதறிக்கொண்ட தன்றி சமயாசந்தர்ப்பம் தெரியாமல் கோப்தையும் காட்டினார். “காவலனே! வணிகர்களைத் தடை செய்யும் வழக்கம் மார்வாரில் கிடைய

29

29. உள்ளே ஒரு பெண் குரல்!

18 January 2024
0
0
0

அன்று பகல் முழுவதும் மார்வார் படைத்தலைவனான ஜகத்சிம்மனுக்கும் மண்டோர் கோட்டை காவலனுக்கும் உணவு முதலிய விஷயங்களில் ராஜோபசாரம் நடந்தாலும், அவ்விருவரும் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் எந்த வேடனும் நேரடியாக ப

30

30. ஜோடாவின் துன்மார்க்கம்!

19 January 2024
1
0
0

மூன்று குணங்களை மனிதன் தவிர்ப்பது நல்லது. தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் அக்கறை காட்டுவது, ஒன்று. ஒட்டுக் கேட்பது, இரண்டு. காலதாமதம் செய்வது, மூன்று. இந்த மூன்றில் ஏதாவது ஒரு குணமே யாரையும் இக்கட்ட

31

31. மணக்கோலம்!

19 January 2024
1
0
0

வீரனாகப் படைகளை இயக்கி, இழந்த அரசை மீட்பதில் சித்தத்தை செலுத்த வேண்டிய மார்வார் மன்னன், கேவலம், பெண் மோகம் கொண்டவனாகக் குடிசையில் மறைந்து கொண்டு காலத்தை ஓட்டுவதை நினைத்த ஜகத்சிம்மன் வேடவர் குடிசைக் கூ

32

32. சந்திர முகம்

19 January 2024
1
0
0

மண்டோர் படைத்தலைவனான ஜகத்சிம்மன் தனது மன்னனின் திருமணத்தையே நிறுத்த முயன்றதும், அதற்காகக் கூச்சலிட்டதும் பலருக்கு கோபத்தையும் சிலருக்கு வியப்பையும் உண்டாக்கினாலும், பிருமச்சாரி ஹர்பாசங்க்லாவோ, திருமணப

33

33. இழந்த சொர்க்கம்

19 January 2024
1
0
0

ராவ்ஜோடாவின் அணைப்பில் இருந்த அழகியின் சந்திர வதனத்தைக் கண்டதும் ஜகத்சிம்மன் திகைப்பும் அதிர்ச்சியும் ஒருங்கே அடைந்தான் என்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. அந்த முகம் மலை அரசியின் முகம்! முகத்

34

34. பதவி இறக்கம்!

19 January 2024
1
0
0

மலை அரசியின் மறுபிம்பம் போன்ற மின்னிடையாளுடன், ஜோடா கலந்து விளையாட இருந்த சமயத்தில் பிருமச்சாரி ஹர்பாசங்கலா அங்கு தோன்றியதும் கதவைத் தட்டியதும் பரமானந்தமாயிருந்தது, மண்டோர் படைத்தலைவன் ஜகத்சிம்மனுக்கு

35

35. மீண்டும் வந்தாள்!

19 January 2024
1
0
0

மண்டோரின் படைத்தலைவனாக இருந்த தன்னை திடீரென உபதளபதியாக்கிவிட்ட மன்னன் செயலைக் கண்டு மனம் துடித்த ஜகத்சிம்மன் அந்த அவமானத்தில் இருந்து எப்படி மீளலாம் என்று சிந்தித்தான். அது தவிர இந்த திடீர் பதவி இறக்க

36

36. மண்டோர் சமர்

19 January 2024
1
0
0

கேவலம், ஒரு பெண், புரவியில் இருந்து இறங்க, அவள் காலுக்குப் படியாக தனது இரு கைகளையும் கோத்து நீட்டிய பிருமச்சாரியிடம் பெரிதும் வெறுப்புக் கொண்டான், ஜகத்சிம்மன். பிருமச்சாரி உண்மையில் பெரும் போலி பிருமச

37

37. மணலில் தோய்ந்த ரத்தம்

19 January 2024
1
0
0

மண்டோர் போரில் மாவீரர்களான சந்தசிம்மன் புதல்வர்கள் அடைந்த தோல்விக்குக் காரணம் தாங்கள் போரிடும் எதிரிகளின் திறனை அவர்கள் தவறாக எடைபோட்டதுதான் என்று கர்னல் ஜேம்ஸ்டாட் தமது ராஜபுதன வரலாற்று நூலில் தெளிவா

38

38. துரோகி!

19 January 2024
1
0
0

மலை அரசி தனது வளையல் கரங்களை நீட்டி தன்னைக் கைது செய்யும்படிக் கேட்டுக்கொண்டதும் காந்தோஜி தனது தம்பியின் மரணத்தையும் மறந்து வியப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே அடைந்தான். அப்பொழுதும் மலை அரசி வேட்டுவர

39

39. வேகம்! தாகம்!

19 January 2024
1
0
0

மேவாரின் தலைநகரான சித்தூரில் இருந்து தப்பி ஓடிவந்து லூனி ஆற்றின் உப்பு நீரில் தந்தையின் மரணத்துக்கு நீராடிய அதே துறையில், கிட்டத்தட்ட அதே இடத்தில் தங்கள் வம்ச துர்ப்பாக்கியத்துக்கும் அவப் பெயருக்கும்

40

40. அரசி ஆன, மலை அரசி!

19 January 2024
1
0
0

மலை அடிவாரப் புதரில் மலை அரசி மல்லாந்து கிடந்த கோலம் மண்டோர் மன்னனின் வெறியைக் கிளறிவிடவே, அவன் உலகத்தையே மறந்து, அதுவரை நேர்ந்த நிகழ்ச்சிகளால் மனம் ஏற்படுத்திய கட்டுப்பாடுகளையும் தடைகளையும் உதறி அவள்

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்