shabd-logo

34. பதவி இறக்கம்!

19 January 2024

2 பார்த்தது 2

மலை அரசியின் மறுபிம்பம் போன்ற மின்னிடையாளுடன், ஜோடா கலந்து விளையாட இருந்த சமயத்தில் பிருமச்சாரி ஹர்பாசங்கலா அங்கு தோன்றியதும் கதவைத் தட்டியதும் பரமானந்தமாயிருந்தது, மண்டோர் படைத்தலைவன் ஜகத்சிம்மனுக்கு. ஜோடாவின் திருட்டுக் காதல் களியாட்டம் இன்றுடன் முடிந்துவிட்டது என்றும், அவனுக்கு பிருமச்சாரி உதவுவதுகூட சந்தேகம் என்றும் நினைத்த படைத்தலைவன், அடுத்த நிகழ்ச்சியை நேரில் பார்க்க முடியாவிட்டாலும் நடப்பதைக் கேட்க காதுகளை நன்றாகத் தீட்டிக்கொண்டான்.
பிருமச்சாரி அடுத்த அறையை பலமாகத் தட்டியதோடு நில்லாமல் “திற, கதவை சீக்கிரம்” என்று அதட்டியது ஜகத்சிம்மன் காதில் தெளிவாக விழுந்தது.
பிருமச்சாரியின் கேள்விக்கோ அதட்டலுக்கோ அடுத்த அறையில் இருந்து எந்த பதிலும் வராததையும் படைத்தலைவன் கவனித்தான். “கதவைத் திறக்கிறாயா? உடைக்கட்டுமா?” என்று மீண்டும் எழுந்தது பிருமச்சாரியின் குரல்.
“யார் இப்படி அநாகரிகமாக கதவை உடைப்பது?” என்ற கேள்வி எழுந்தது அடுத்த அறையில் இருந்து. அது ஜோடாவின் குரல் என்பதைப் புரிந்து கொண்ட ஜகத்சிம்மன் அதில் ஒலித்த அதிகாரத்தைக் கண்டு பிரமித்தான்.
“மன உரம் அதிகந்தான்” என்று தன்னுள் சொல்லியும் கொண்டான் பிரமிப்பு ஒலித்த குரலில்.
பிருமச்சாரியின் குரல் முன்னைவிட பலமாக ஒலித்தது. “நான்தான் ஹர்பாசங்க்லா” என்று.
“இந்த நேரத்தில் என்னை ஏன் எழுப்புகிறீர்?” என்றான் ஜோடா.
“காரணம் இருக்கிறது” என்று சீறினார் பிருமச்சாரி.
“என்ன காரணம்?”
“மன்னர் படுக்க வேண்டிய இடம் இது அல்ல.”
“எந்த இடத்தில் படுக்கவேண்டும் என்பதற்கு நிபந்தனை உண்டா?”
“இன்று உண்டு. மணநாளில் படுக்க வேண்டிய இடம் - வேறு.”
இதற்குப் பிறகு சிறிது மௌன நிலை. “சரி போங்கள். நான் வருகிறேன் விடுதிக்கு, சிறிதுநேரம் கழித்து” என்றான் ஜோடா.
“எதற்காக சிறிது நேரம் கழிக்க வேண்டும்?” என்று கேட்டார் பிருமச்சாரி தமது முரட்டுக் குரலில்.
“இங்கு சிறிது வேலை இருக்கிறது” என்றான் ஜோடா.
இதைக் கேட்டதும் குமுறினான் ஜகத்சிம்மன், “என்ன துணிவு! என்ன அயோக்கியத்தனம்!” என்று வியந்தான் படைத்தலைவன்.
ஆனால், அடுத்த விநாடி எழுந்த ஹர்பாசங்க்லாவின், சொற்கள், அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தன.
“உடனே கதவைத் திறக்காவிட்டால் கதவை உடைப்பேன் ஒரே உதையில்” என்று சீற்றம் மிகுந்த சொற்களை இடியெனக் கொட்டினார் பிருமச்சாரி.
சிறிதுநேரத்திற்கு எல்லாம் பக்கத்து அறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. தனது அறைக்கதவைத் திறந்துகொண்டு வெளியே போய் மன்னன் நாடகத்தின் முடிவுப் பகுதியைக் காணலாமா என்று எண்ணிய ஜகத்சிம்மன், அதில் ஆபத்து இருப்பதைப் புரிந்துகொண்டதால் தனது அறையின் கதவோரத்துக்கு வந்து உற்றுக் கேட்டான்.
அடுத்த நிகழ்ச்சிகள் அவன் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. பக்கத்து அறை திறந்ததும் பெரிதாக நகைத்தார் பிருமச்சாரி. “மகாராஜா! நீர் பெரிய பேர்வழி. இதை ஏன் எனக்கு முன்னமே சொல்லவில்லை?” என்று கேட்டார் நகைப்பின் ஊடே.
அவருடன் சேர்ந்து நகைத்தான் ஜோடா. “சொன்னால் சுவாரசியம் கெட்டுவிடும்” என்று கூறி, மீண்டும் நகைத்தான்.
“இப்பொழுது?” விஷமமாகக் கேட்டார் பிருமச்சாரி...
“சுவாரசியம் அதிகமாகும்” என்று ஜோடா கூறினான்.
“ஆம் ஆம் அதிகமாகும்” என்று பிருமச்சாரி குதூகலித்தார்.
பிருமச்சாரியான ஹர்பாசங்க்லா இந்த மாதிரி விரசமான உரையாடலில் இறங்கியது விசித்திரமாக இருந்தது ஜகத்சிம்மனுக்கு. ஒருவேளை அவரது பிருமச்சாரி ஆசிரமம் வெளிவேடமோ என்று நினைத்தான்.
அவன் நினைப்புப்படி ஒரு கேள்வியை ஜோடா கேட்டான், “இவளை நான் தனித்து அழைத்து வந்ததில் தவறு ஏதுமில்லையே?” என்று.
“ஒரு தவறுமில்லை. தவிர, இது உங்கள் கடமையுங்கூட” என்றார் பிருமச்சாரி.
“பார்ப்பவர்கள் ஏதாவது தவறாக நினைத்தால்?” என்று ஜோடா கேட்டான்.
“நினைத்துவிட்டுப் போகட்டுமே!” பிருமச்சாரியின் குரலில் அலட்சியம் இருந்தது.
“ஏதாவது பேசினால்?” ஜோடாவின் குரலில் கவலை தெரிந்தது.
“அவன் நாக்கை வெட்டிவிடுவேன்” என்று உறுதி கூறினார் பிருமச்சாரி.
பிருமச்சாரியின் போக்கு பரம விசித்திரமாக இருந்தது ஜகத்சிம்மனுக்கு. வேறொரு பெண்ணுடன் மண நாளன்று சரசமாட முற்பட்ட மன்னனுடன் அவர் எப்படி உறவாட முடியும் என்று எண்ணியும் ஏதும் புரியவில்லை அவனுக்கு.
அந்தச் சமயத்தில் பிருமச்சாரி அந்தப் பெண்ணைப் பார்த்து சொன்னார், “மன்னனை கைக்குள் ஒரே நாளில் போட்டுக் கொண்டுவிட்டாய்” என்று.
“இல்லை. நீண்டநாள் ஆயிற்று” என்று வெட்கம் இல்லாமல் அந்தப் பெண் பேசினாள்.
அதையும் ஆட்சேபிக்கவில்லை பிருமச்சாரி, “அம்மா! நீ உள்ளே போ. நானும் இவரும் சிறிது பேசவேண்டும்” என்று கூற, பக்கத்து கதவு மீண்டும் மூடப்பட்டது. ஆனால் இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று மட்டும் தெரியவில்லை ஜகத்சிம்மனுக்கு. திடீரென்று அவன் மனதில் பெரிய சந்தேகம் ஒன்று உதித்தது. உடனே அவன் சற்று இரைந்தே சொல்லிக் கொண்டான், “இருக்காது. ஒருகாலும் இருக்காது” என்று.
அது, வெளியே இரகசியம் பேசிக்கொண்டு இருந்த இருவர் காதிலும் விழுந்திருக்க வேண்டும். இருவர் இரகசியப் பேச்சும் சட்டென்று நின்றது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“நன்றாக வலை விரித்தீர்கள் மகாராஜா” என்று சொல்லி புன்முறுவல் பூத்தார் பிருமச்சாரி.
“வலை இருந்தால்தான் பறவைகள் விழுகின்றன” என்றான் ஜோடா, சட்டென்று சமாளித்துக்கொண்டு.
“இப்பொழுது விழுந்திருக்கும் பட்சி எப்படி?” என்று கேட்டான்.
“அழகான பட்சி” என்று பாராட்டினார் பிருமச்சாரி.
அத்துடன் பிருமச்சாரி நடந்து செல்லும் சத்தம் கேட்டது. சிறிதுநேரம் கழித்து ஜகத்சிம்மன் வெளியே வந்தான். அப்படியும் இப்படியும் பார்த்தான். தாழ்வரையில் இருந்த ஒரே விளக்கு சிறிது மங்கலாகவே எரிந்து கொண்டிருந்தது. பக்கத்து அறையில் சிரிப்பு ஒலி சற்று நேரத்திற்கு ஒருமுறை வந்துகொண்டு இருந்தது. அதை ஒரு விநாடி நின்று கேட்ட ஜகத்சிம்மன் வாயிலை நோக்கி நடந்தான்.
வாயிலில் அவனை எதிர்பார்த்ததுபோல் நின்றிருந்தார் பிருமச்சாரி. அவன் காலடி ஓசை கேட்டதும் திரும்பினார். “யார் படைத்தலைவரா? இன்னும் ஏன் உறங்கவில்லை?” என்று கேட்டார்.
“உறக்கம் வரவில்லை” என்றான் படைத்தலைவன்.
பிருமச்சாரி படைத்தலைவனை அனுதாபத்துடன் பார்த்தார். “ஆம் ஆம், எப்படி வரும்?” என்று சொன்னார் அனுதாபம் குரலிலும் ஊடுருவ.
“பிருமச்சாரி!” என்று சற்றுக் கடுமையான குரலில் அழைத்தான் ஜகத்சிம்மன்.
“என்ன படைத்தலைவரே?” என்று பிருமச்சாரி வினவினார்.
“நீங்கள்...” இழுத்தான் ஜகத்சிம்மன்.
“உம்.”
“தர்மம் தெரிந்தவர்.”
“மகிழ்ச்சி.”
“அப்படிப்பட்டவர் அதர்மத்துக்குக் கைகொடுக்கக் கூடாது.”
“நியாயம்.”
“நீர் நியாயமாக நடக்கவில்லை.”
“அப்படியா?”
“ஆமாம். சற்று முன்பு நீங்களும் மன்னரும் பேசியதைக் கேட்டுக்கொண்டு இருந்தேன்.”
“ஒட்டுக் கேட்டீரா?”
“இல்லை. அதற்கு அவசியம் இல்லை. உங்கள் இருவர் குரலும் பலமாக இருந்தது.”
பிருமச்சாரி படைத்தலைவனை உற்று நோக்கினார். “எங்கள் உரையாடலில் இருந்து என்ன தெரிந்துகொண்டீர்?” என்று வினவினார்.
“ஏதும் தெரியவில்லை.”
“அதர்மம் ஏதும் நடக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டீர் அல்லவா?”
“இல்லை.”
“என்ன இல்லை?”
“பிருமச்சாரி!”
“சொல்லும்.”
“என் மூளை குழம்பி இருக்கிறது.”
“இரண்டு மூன்று நாட்களாக நீர் நடக்கும் முறையில் இருந்து அது தெளிவாகத் தெரிகிறது” என்ற பிருமச்சாரி, படைத்தலைவனை நோக்கி “படைத்தலைவரே! வீணாக மனதை அலட்டிக்கொள்ள வேண்டாம். மனதில் உள்ள மாசுகளைக் களைந்துவிடும். அது உமக்கும் நல்லது” என்று உபதேசம் செய்தார்.
அத்துடன் அவனை விட்டுச் சென்றார். உளைந்த மனதுடன் ஜகத்சிம்மன் வாயிலிலேயே நீண்டநேரம் நின்றான். ஆகாயத்தில் இருந்த வெண்மதியை நோக்கினான். “போருக்கு அதிகநாள் இல்லை” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். நீண்டநேரம் வாயிலில் உலாவிக்கொண்டு இருந்துவிட்டு படுக்கச் சென்றான். பழையபடி நேரம் ஓடிவிட்டதால் அவனையும் அறியாமல் கண்கள் மூடின. நித்திராதேவி அவனை ஆட்கொண்டாள்.
நீண்டநேரம் கழித்தே எழுந்திருந்த ஜகத்சிம்மன் காதில் வெளியே வீரர்கள் அணிவகுத்து நடமாடும் சத்தம் கேட்டது. வெளியே வேகமாக வந்தான் படைத்தலைவன். அங்கு அவன் கண்ட காட்சி அவனைத் திகைகக்க வைத்தது.
சுமார் ஐந்நூறு வீரர்கள் பூர்ண ஆயுதங்களுடன் புரவிகளில் ஏறி இருந்தார்கள். புரவிகள் அணிவகுப்புக்கு நடை போட்டன. அவற்றை இஷ்டப்படி திருப்பியும் நேராக நடக்கச் சொல்லியும் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார் பிருமச்சாரி.
வெளியே வந்த ஜகத்சிம்மனை அருகில் அழைத்த ஜோடா “நமக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது” என்று கூவினான்.
“என்ன அதிர்ஷ்டம் மகாராஜா?” என்று வினவினான் ஜகத்சிம்மன்.
“நமது படைகளுக்குத் தலைவராயிருக்க பிருமச்சாரி சம்மதித்துவிட்டார்” என்று கூவினான் உற்சாகத்துடன்.
“அப்படியானால் நான்?” என்ற ஜகத்சிம்மன் கேள்வியில் அதிர்ச்சி தெரிந்தது.
“பிருமச்சாரிக்கு அடுத்தபடி உபதளபதி” என்றான் ஜோடா.
தனது பதவி இறக்கத்தைப் புரிந்துகொண்ட ஜகத்சிம்மன் சிலையென நின்றான்.

சாண்டில்யன் மூலம் மேலும் புத்தகங்கள்

40
கட்டுரைகள்
மலை அரசி
0.0
மாலை அரசி தமிழ் மொழியில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான வரலாற்று நாவல். பிரபல தமிழ் எழுத்தாளர் சாண்டில்யன் இந்த மனதை மயக்கும் புத்தகத்தை எழுதியுள்ளார். சாண்டில்யன் வரலாற்றுப் புனைகதைகளுக்காகப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார், மேலும் அவர் தனது வரலாற்று, காதல் மற்றும் சாகச நாவல்களுக்காக நன்கு அறியப்பட்டவர், இது பெரும்பாலும் சோழ மற்றும் பாண்டிய பேரரசுகளின் காலங்களில் அமைக்கப்பட்டது.
1

1. சுடர்க்கொடி

15 January 2024
0
0
0

சரித்திரம், பூமி, வாழ்க்கையின் கர்ம பலன்கள் ஆகிய சகலத்திலும் ஒரு சுழற்சியும் தொடர்ச்சியும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுவதில் எத்தனை உண்மையிருக்கிறதென்பதை, சுற்றிலும் தன்னை எரித்துக்கொண்டிருந்த மணற்பரப்

2

2. விளக்கில் விரிந்த கதை

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் மலைக்குகை வாயிலில், மரங்கள் அடர்த்தியாயிருந்ததால் இருள் கடுமையாக இருந்த அந்தப் பிராந்தியத்தில், பந்தத்தை கையில் ஏந்தி அதன் சுடர் முகத்தில் வீச சுடர்க்கொடியென்ற காரணப் பெயருக்கு முற

3

3. துணைவன்!

15 January 2024
0
0
0

விரிந்து படர்ந்து எரிந்த விளக்கின் சுடரை விந்தைக் கண்களுடன் நோக்கிய ராவ்ஜோடா. அதில் விரிந்த கதையைக் கண்டதும் மெய்சிலிர்த்துப் போனான். முதலில் அந்தச் சுடரில் ஏதும் தெரியாததால் புரியாமல் விழித்த மார்வ

4

4. இரு விந்தைகள்

15 January 2024
0
0
0

மலை அரசியின் மதுர இதழ்களில் இருந்து உதிர்ந்த அந்தக் கொடுமையான சொற்களைக் கேட்டதும், வியப்பும் அச்சமும் கலந்த உணர்ச்சிகள் ராவ்ஜோடாவின் இதயத்தை மளடுருவிச் சென்றன. அப்படி அவன் நடுங்கியதை பக்கத்தில் உட்கார

5

5. நான் வருவேன்

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் குகையைவிட்டு வெளியேறிய மலை அரசி, வேகமாக மலையின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடந்து சென்றதும், விளைவித்த இரண்டு விந்தைகளும் மகாவீரனான மார்வார் இளவரசனை திகில் கொள்ளச் செய்தன என்றால்,

6

6. பெண் துணை!

15 January 2024
0
0
0

பெண்ணின் லாவண்யத்தால் ஆண்மகன் அறிவு அழிந்துவிடுகிறது. கவர்ச்சியான கன்னியின் முன்பாக எந்த ஆண்மகனும் சுயபுத்தியை இழந்துவிடுகிறான். இந்தப் பழைய நிகழ்ச்சிகளுக்கு அத்தாட்சியாக நின்றான் ராவ்ஜோடா. “உனது வீ

7

7. சாகுந்தலம்

16 January 2024
1
0
0

பந்தத்தையும் அணைத்துவிட்டு இருண்ட குகைக்குள் தன்னை வா வா என்று அழைத்த அந்த பருவப் பாவையின் துணிவை நினைத்து ஜோடா திகிலுக்கு இலக்காகி நின்ற நேரத்தில், மலைஅரசியே குகை வாயிலைவிட்டு அவனை அணுகி, அவன் கையைப்

8

8. காட்டு மலர்

16 January 2024
1
0
0

பாவின் வாலிப முரட்டு முகம் அவள் வழவழத்த கழுத்தில் திடீரென அழுந்திப் புரண்டபோது, மலை அரசியின் இதயமும் அந்த வாலிபன் உள்ளத்தைப்போலவே உணர்ச்சி அலைகளில் உருண்டது. அத்தனை உணர்ச்சி எழுச்சியிலும் அரசகுமாரன்

9

9. நிலையற்ற அரசு

16 January 2024
1
0
0

மலை அரசியை “காட்டு மலர்” என்று குறிப்பிட்டதோடு தனது பேச்சை ஜோடா நிறுத்திக்கொண்டு இருந்தால் ஜகத்சிம்மனின் கோபம் தலைக்கு ஏறியிருக்காது. “இவள் மார்வார் ராணி” என்றும் சொல்லவே ஜகத்சிம்மனுக்கு கோபத்துடன் தி

10

10. பறந்த கிளி! தொடர்ந்த துன்பம்!

16 January 2024
1
0
0

மலை அரசியின் சொற்களோ உத்தரவுகளோ மந்திராலோசனை சபையில் இருந்தவர்களுக்குக் கட்டோடு பிடிக்காதிருந்தாலும் அவள் சொன்னதற்கு எல்லாம் ஜோடா தலையை ஆட்டியதால், அவள் கட்டளைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் எல்லோருமே முன

11

11. மண்டோர் ரணகளம்

16 January 2024
1
0
0

மண்டோரின் பெரும் கதவுகள் சாத்தப்பட்டதாலும் போர்முரசு பலமாக ஒலித்ததாலும் வருவது என்னவென்பதை அறிந்த புது மகாராஜாவான ராவ்ஜோடா, புரவியின் கடிவாளத்தை பிடித்த நிலையிலேயே திகைத்து அமர்ந்துவிட்ட சமயத்தில் மலை

12

12. குகையில்...!

16 January 2024
1
0
0

பெற்றோர் புரிந்த பாவம் சிலரைப் பிடித்து வாட்டுகிறது. உற்றார் செய்த பாவமும் சிலரை விடுவதில்லை. பெற்றோரும் உற்றாரும் விளைவித்த பாவங்களுக்கு எப்பாவமும் அறியாத ஜோடா இலக்கானான். பேரனான மோகுல சிம்மனை சீராட்

13

13. அவள் கனவு!

16 January 2024
1
0
0

மலை அரசியைப் பார்த்து மார்வார் இளவரசனாயிருந்து அரசனாகி, நாட்டையும் பறிகொடுத்த ராவ்ஜோடா, அத்தகைய ஒரு கேள்வியைக் கேட்டான் என்றால், அதற்கு மூலகாரணம் அவளுடைய விபரீதமான பதில்தான். “நாம் தனித்திருப்பது உனக்

14

14. தண்டனை!

17 January 2024
1
0
0

மலை அரசியை தரையில் கிடத்திவிட்டு குகையின் வாயிலுக்கு வந்த ராவ்ஜோடாவின் செவிகளில் ஜகத்சிம்மனும் மற்ற வீரர்களும் ஏறிவந்த புரவியின் குளம்படி ஒலிகள் கூடக் கேட்கவில்லை. குகைக்கு உள்ளே மலை அரசியின் அருகாமைய

15

15. ஹர்பா சங்க்லா!

17 January 2024
0
0
0

மலை அரசியால் மன்னிக்கப்பட்டு ஜோடாகிருக்குச் செல்லும்படி பணிக்கப்பட்ட ஜகத்சிம்மன் உடனடியாகத் திரும்பவில்லை தனது புரவியை நோக்கி நின்ற இடத்திலேயே அசைவற்று நின்றான் பல விநாடிகள். பிறகு சட்டென்று வேகமாக நட

16

16. அந்தி வானம்

17 January 2024
0
0
0

அதிர்ஷ்டம் என்பது ஒரு மனிதனைப் பிடித்துக்கொண்டால் அவனை அது லேசில் விடுவது இல்லை. கூடியவரையில் விடாமல் தொடர்கிறது. துரதிர்ஷ்டக்காரனுக்கு புத்தி பேதலிக்கிறது. காலம் கைகொடுப்பது இல்லை. எதையும் காலங்கடந்த

17

17. வாளின் கதை!

17 January 2024
0
0
0

ஜோடாவைப்பற்றி விசாரித்ததும் மலை அரசியின் மதிமுகம் அந்திவானம் போல் சிவந்துவிட்டதைக் கண்டதுமே நைஷ்டிக பிருமச்சாரியும், எந்தப் பெண்ணையும் கண்ணெடுத்துப் பார்க்காதவரும், பிருமச்சாரி விரதம் கெடக்கூடாது என்ப

18

18. தேடி வந்த அதிர்ஷ்டம்!

17 January 2024
0
0
0

மார்வார் மன்னனையும் மலைக்க வைத்த அந்த விசித்திரக் கதையைச் சொல்லுமுன்பு பிருமச்சாரி அந்தச் சிறு வீட்டின் முற்றத்தை வளைத்திருந்த சுற்றுக் கட்டடத்தின்மீது உட்கார்ந்து கீழ் இருந்த முற்றத்தில் தமது கால்களை

19

19. பாலைவனக் கூடாரம்

17 January 2024
0
0
0

இரவு தந்த இருளில், மலைக்காடு வீசிய இதமான காற்றில், சாளரத்துக்கு அருகில் இருந்த மகிழ மரம் பரவவிட்ட சுகந்தத்தின் சூழ்நிலையில், மலை அரசியை சூழ்ந்து நெருக்கிய ஜோடாவின் கரங்கள் நெருக்கியதோடு நில்லாமல் இன்ப

20

20. கரிய புரவி! கழுத்தில் ஈட்டி!

18 January 2024
0
0
0

ஜோடாவின் பரம விரோதியான சந்தசிம்மனின் மூத்த மகன் காந்தாஜி தன் வாளை உருவிக்கொண்டு ராவ் ஜோடாவை அணுகுவதற்கு முன்பே ஜோடா பிருமச்சாரியளித்த தனது பெரிய வாளை உருவி எதிரியைத் தடுத்தான். அவனைச் சேர்ந்த பத்து பத

21

21. மலைச்சாரல் ஓசை

18 January 2024
0
0
0

கழுத்தில் பதித்திருந்த ஈட்டி சற்றும் அசையாமல் இருந்தாலும் அதில் ஒரு திடமும், ஈட்டியைப் பிடித்திருந்தவன் கையில் ஈவு இரக்கமற்ற ஓர் உறுதியும் இருந்ததைக் கவனித்த ராவ்ஜோடா, தான் சிறிது அசைந்தாலும் அந்த ஈட்

22

22. பரீட்சை

18 January 2024
0
0
0

பாபுஜியின் நூறு புரவிகள் ஏதோ பெரும் புயலைப் போல் மலைச்சரிவில் வந்ததாலும், அவை கண்ணிமைக்கும் நேரத்தில் தனது புரவியில் இருந்து தன்னை வீழ்த்திவிட்டதாலும் மலைப்பாறையில் புரண்ட ஜோடா வெகு துரிதமாகப் பாறையில

23

23. அடவியில் ஒரு காட்சி!

18 January 2024
0
0
0

நீண்டநாள் பிரிந்த மகனை ஆர்வத்துடன் தழுவும் தந்தை போல ஜோடாவை பல விநாடி தழுவி நின்ற பாபுஜி, கடைசியில் அவனுக்குத் தமது கைகளில் இருந்து விடுதலை அளித்தபோது அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் இரண்டு தே

24

24. காதல் பாபமா?

18 January 2024
0
0
0

அடர்ந்த அந்த அடவிக்குள் நாலைந்து பங்கஜங்களை நீர்மட்டத்துக்குமேல் காட்டிக்கொண்டிருந்த சிறு வாவியின் கரையில் மலை அரசியும் ஜோடாவும் உட்கார்ந்திருந்த நிலையைக் கண்டதும் இரண்டு பிருமச்சாரிகளும் தங்கள் பிரும

25

25. ஜோடாவின் துணிவு!

18 January 2024
0
0
0

பாபுஜியும், பிருமச்சாரியும் விழிப்பதைப் பார்த்த ஜோடா, “உங்கள் இருவருக்கும் வரவர சுயநம்பிக்கை போய்விட்டது” என்று ஓர் அம்பை வீசினான். அதுவரை தாங்கள் கண்ட காட்சியால் குழப்பத்தில் இருந்த இரு பிருமச்சாரி

26

26. சாவுகாரைப் பிடித்த சனியன்!

18 January 2024
0
0
0

மண்டோர் அரசின் முதலமைச்சராயிருந்து, சந்தசிம்மன் ஆக்கிரமிப்புக்குப் பின்பு அந்தப் பதவியில் இருந்து விலகி, அரண்மனையில் தமக்கு முன்னாள் மன்னனால் அளிக்கப்பட்டு இருந்த இடத்தையும் சந்தசிம்மனிடம் ஒப்புடைத்து

27

27. அடைத்த கதவு!

18 January 2024
0
0
0

காந்தோஜியின் குறுவாள் அழுந்தியதாலும், எச்சரிக்கையாலும், அவன் பின்னால் நின்றிருந்த மஞ்சாஜியின் உதடுகளில் துளிர்த்திருந்த குரூரப் புன்முறுவலாலும், சாவுகார் அஞ்சி நடுநடுங்கிவிடுவார் என்றோ, முன்னே நடந்துவ

28

28. வேடர் குடிசை மர்மம்!

18 January 2024
0
0
0

கோட்டைக் காவலன் சொன்ன செய்தியால் மலைத்த இருவரில் சாவுகாரே முதலில் திகைப்பை உதறிக்கொண்ட தன்றி சமயாசந்தர்ப்பம் தெரியாமல் கோப்தையும் காட்டினார். “காவலனே! வணிகர்களைத் தடை செய்யும் வழக்கம் மார்வாரில் கிடைய

29

29. உள்ளே ஒரு பெண் குரல்!

18 January 2024
0
0
0

அன்று பகல் முழுவதும் மார்வார் படைத்தலைவனான ஜகத்சிம்மனுக்கும் மண்டோர் கோட்டை காவலனுக்கும் உணவு முதலிய விஷயங்களில் ராஜோபசாரம் நடந்தாலும், அவ்விருவரும் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் எந்த வேடனும் நேரடியாக ப

30

30. ஜோடாவின் துன்மார்க்கம்!

19 January 2024
1
0
0

மூன்று குணங்களை மனிதன் தவிர்ப்பது நல்லது. தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் அக்கறை காட்டுவது, ஒன்று. ஒட்டுக் கேட்பது, இரண்டு. காலதாமதம் செய்வது, மூன்று. இந்த மூன்றில் ஏதாவது ஒரு குணமே யாரையும் இக்கட்ட

31

31. மணக்கோலம்!

19 January 2024
1
0
0

வீரனாகப் படைகளை இயக்கி, இழந்த அரசை மீட்பதில் சித்தத்தை செலுத்த வேண்டிய மார்வார் மன்னன், கேவலம், பெண் மோகம் கொண்டவனாகக் குடிசையில் மறைந்து கொண்டு காலத்தை ஓட்டுவதை நினைத்த ஜகத்சிம்மன் வேடவர் குடிசைக் கூ

32

32. சந்திர முகம்

19 January 2024
1
0
0

மண்டோர் படைத்தலைவனான ஜகத்சிம்மன் தனது மன்னனின் திருமணத்தையே நிறுத்த முயன்றதும், அதற்காகக் கூச்சலிட்டதும் பலருக்கு கோபத்தையும் சிலருக்கு வியப்பையும் உண்டாக்கினாலும், பிருமச்சாரி ஹர்பாசங்க்லாவோ, திருமணப

33

33. இழந்த சொர்க்கம்

19 January 2024
1
0
0

ராவ்ஜோடாவின் அணைப்பில் இருந்த அழகியின் சந்திர வதனத்தைக் கண்டதும் ஜகத்சிம்மன் திகைப்பும் அதிர்ச்சியும் ஒருங்கே அடைந்தான் என்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. அந்த முகம் மலை அரசியின் முகம்! முகத்

34

34. பதவி இறக்கம்!

19 January 2024
1
0
0

மலை அரசியின் மறுபிம்பம் போன்ற மின்னிடையாளுடன், ஜோடா கலந்து விளையாட இருந்த சமயத்தில் பிருமச்சாரி ஹர்பாசங்கலா அங்கு தோன்றியதும் கதவைத் தட்டியதும் பரமானந்தமாயிருந்தது, மண்டோர் படைத்தலைவன் ஜகத்சிம்மனுக்கு

35

35. மீண்டும் வந்தாள்!

19 January 2024
1
0
0

மண்டோரின் படைத்தலைவனாக இருந்த தன்னை திடீரென உபதளபதியாக்கிவிட்ட மன்னன் செயலைக் கண்டு மனம் துடித்த ஜகத்சிம்மன் அந்த அவமானத்தில் இருந்து எப்படி மீளலாம் என்று சிந்தித்தான். அது தவிர இந்த திடீர் பதவி இறக்க

36

36. மண்டோர் சமர்

19 January 2024
1
0
0

கேவலம், ஒரு பெண், புரவியில் இருந்து இறங்க, அவள் காலுக்குப் படியாக தனது இரு கைகளையும் கோத்து நீட்டிய பிருமச்சாரியிடம் பெரிதும் வெறுப்புக் கொண்டான், ஜகத்சிம்மன். பிருமச்சாரி உண்மையில் பெரும் போலி பிருமச

37

37. மணலில் தோய்ந்த ரத்தம்

19 January 2024
1
0
0

மண்டோர் போரில் மாவீரர்களான சந்தசிம்மன் புதல்வர்கள் அடைந்த தோல்விக்குக் காரணம் தாங்கள் போரிடும் எதிரிகளின் திறனை அவர்கள் தவறாக எடைபோட்டதுதான் என்று கர்னல் ஜேம்ஸ்டாட் தமது ராஜபுதன வரலாற்று நூலில் தெளிவா

38

38. துரோகி!

19 January 2024
1
0
0

மலை அரசி தனது வளையல் கரங்களை நீட்டி தன்னைக் கைது செய்யும்படிக் கேட்டுக்கொண்டதும் காந்தோஜி தனது தம்பியின் மரணத்தையும் மறந்து வியப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே அடைந்தான். அப்பொழுதும் மலை அரசி வேட்டுவர

39

39. வேகம்! தாகம்!

19 January 2024
1
0
0

மேவாரின் தலைநகரான சித்தூரில் இருந்து தப்பி ஓடிவந்து லூனி ஆற்றின் உப்பு நீரில் தந்தையின் மரணத்துக்கு நீராடிய அதே துறையில், கிட்டத்தட்ட அதே இடத்தில் தங்கள் வம்ச துர்ப்பாக்கியத்துக்கும் அவப் பெயருக்கும்

40

40. அரசி ஆன, மலை அரசி!

19 January 2024
1
0
0

மலை அடிவாரப் புதரில் மலை அரசி மல்லாந்து கிடந்த கோலம் மண்டோர் மன்னனின் வெறியைக் கிளறிவிடவே, அவன் உலகத்தையே மறந்து, அதுவரை நேர்ந்த நிகழ்ச்சிகளால் மனம் ஏற்படுத்திய கட்டுப்பாடுகளையும் தடைகளையும் உதறி அவள்

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்