shabd-logo

31. மணக்கோலம்!

19 January 2024

3 பார்த்தது 3

வீரனாகப் படைகளை இயக்கி, இழந்த அரசை மீட்பதில் சித்தத்தை செலுத்த வேண்டிய மார்வார் மன்னன், கேவலம், பெண் மோகம் கொண்டவனாகக் குடிசையில் மறைந்து கொண்டு காலத்தை ஓட்டுவதை நினைத்த ஜகத்சிம்மன் வேடவர் குடிசைக் கூட்டத்தில் இருந்து வெளியே வரும்வரை தனது ஓட்டத்தை நிறுத்தவில்லை. ராவ்ஜோடாவின் இந்த விபரீத வாழ்க்கையை பிரும்மச்சாரி ஹர்பாசங்க்லாவிடம் சொல்துவது எத்தனை அவசியம் என்பதை உணர்ந்த ஜகத்சிம்மன், தன்னுடன் வந்த காவலன் நின்றிருந்த இடத்தை அடைந்தவுடன் “மண்டோர் கோட்டைக் காவலரே! தாமதிப்பதற்கு நேரமில்லை; உடனே புறப்படும்” என்று அவனையும் துரிதப்படுத்தி மலைச்சரிவில் அவனுக்கு முன்பாகவே இறங்கலானான்.
படைத்தலைவன் துரிதத்துக்குக் காரணம் தெரியாத காவலனும் படைத்தலைவனைப் பின்பற்றி இறங்கிக்கொண்டே வினவினான், “ஏன் இத்தனை அவசரம்? எதிரி சோதனைப் படையினர் விலகினால் நாம் பயணம் செய்வது சவுகரியமாகயிருக்கும். ஆகவே இன்னும் ஒரு நாள் தாமதித்தால் என்ன?” என்று.
ஜதத்சிம்மன் காவலனைக் திரும்பியும் பார்க்கமால் இறங்கிக்கொண்டே “ஒரு நாளா! ஒரு நிமிடம் கூட இங்கு நாம் தாமதிக்க முடியாது” என்று கூறினான் கடுப்புடன்.
“நம்மைப் பிடிக்க சதா சுற்றிக்கொண்டிருக்கும் மேவார் வீரர்கள் வசம் அகப்பட அத்தனை அவசரமாக்கும் உங்களுக்கு?” என்று விஷமமாகப் பேசினான், மண்டோர் கோட்டைக் காவலன்.
படைத்தலைவன் அந்த ஏளனப் பேச்சில் கலந்து கொள்ளவுமில்லை, உடனடியாகப் பதில் சொல்லவுமில்லை. பதில் சொன்ன போது பேச்சு மிகத் திட்டமாயிருந்தது. “கடமை அழைக்கும்போது நாம் துரிதத்தைக் காட்டுவது விவேகம்” என்று கூறினான் ஜகத்சிம்மன்.
காவலன் மேலும் தன் விஷமத்தைக் காட்டினான். “உங்கள் துரிதம் ஏற்கனவே பலன் அளித்திருக்கிறது. அரசரின் உத்தரவுக்கு விரோதமாக நீங்கள் சந்தசிம்மனை இரவில் தாக்கியிராவிட்டால் மகாராஜா ஊர் சிரிக்க, ஊரை விட்டு ஓட அவசியம் இருந்திருக்காது” என்று பழைய கதையைச் சுட்டிக் காட்டினான் காவலன். பாஜகத்சிம்மன் தனது வேகத்தை சிறிது தளர்த்தித் திரும்பி காவலனை நோக்கி “மகாராஜாவைப் பார்த்து ஊர் சிரிக்க நமது முயற்சி எதுவும் இனிமேல் தேவையில்லை” என்று கூறினான்.
“ஏன்?” காவலன் கேள்வியில் வியப்பு இருந்தது.
“அவரே அதற்கு ஏற்பாடு செய்து கொள்கிறார்” என்றான் ஜகத்சிம்மன்.
“எதற்கு?”
“ஊர் சிரிப்பதற்கு.”
“நீங்கள் சொல்வது புரியவில்லை எனக்கு.”
“பிருமச்சாரியிடம் போனதும் புரியும்.”
“அதற்கு முன்பு நீங்கள் சொல்லமாட்டீர்களாக்கும்?”
“மாட்டேன்.”
“ஏன்?”
“நானும் மார்வார் ராஜவம்சத்தைச் சேர்ந்தவன். இந்த மகாராஜா இல்லாவிட்டால்...” என்ற ஜகத்சிம்மன் சொற்களை முடிக்கவில்லை.
காவலன் நன்றாகப் புரிந்துகொண்டான், மார்வார் அரியணைமீது ஜகத்சிம்மன் ஒரு கண் வைத்து இருக்கிறான் என்பதையும், இந்த துர் எண்ணம் அவனுக்கு நீண்ட நாளாக இருந்து இருக்க வேண்டும் என்பதையும், சந்தசிம்மனை இரவில் தாக்கியது, ஜோடாவை ஓடவைத்தது, இப்பொழுது மீண்டும் ஜோடாவின் மதிப்பை ஏதோ கட்டுக்கதை சொல்லி கீழே இழுக்கப் பார்ப்பது ஆகிய அனைத்தும் மார்வார் அரியணைக்காகத் திட்டமிட்டுச் செய்யப்படும் சதி என்பதைப் புரிந்துகொண்ட காவலன் மேலும் அவனைத் தன் வலையில் இழுக்கப் பார்த்து “படைத்தலைவரைப் போன்ற ஒரு மகாவீரர் இருக்கும்வரை மார்வார் மக்களுக்கு என்ன குறை இருக்க முடியும்.” என்று அவனுக்குச் சாதகமாகவும், மேல் பூச்சாகவும் பேசினான் காவலன்.
ஜகத்சிம்மன் காவலனைத் தனது பக்கத்தில் நடந்து வரும்படி சைகை செய்தான். வந்ததும் அவனிடம் கேட்டான், “உன் பேச்சு இதயத்தில் இருந்து வருகிறதா?” என்று.
காவலன் மீண்டும் ஜகத்சிம்மனின் ஆசை நெருப்பைத் தூண்டினான். “என் இதயத்தில் மட்டும் அல்ல, மார்வார் மக்கள் இதயத்திலும் இதுதான் இருக்கிறது” என்று.
“எது?”
“தங்கள் வீரதீர பராக்கிரமம், நன்னடத்தை.”
“கடைசியாகச் சொன்னதைத் திரும்பச் சொல்.”
“நன்னடத்தை.”
“மன்னனுக்கு அது வேண்டும் அல்லவா?”
“அவசியம் வேண்டும்.” இதைச் சற்று அழுத்தியே காவலன் சொன்னான்.
ஜகத்சிம்மன் போலிப் பெருமூச்செறிந்தான். “அதுதான் நமது மன்னனிடம் இல்லை” என்றும் கூறினான், பெரு மூச்சின் ஊடே துன்பச் சாயலைப் படரவிட்டு.
காவலன் சட்டென்று நடையை நிறுத்தினான், “யார் சொன்னது?” என்று போலி சீற்றத்துடன் வினவினான்.
“யாரும் சொல்லத் தேவையில்லை. என் காதார நானே கேட்டேன்” என்றான் ஜகத்சிம்மன் துன்பக்குரலில்.
காவலன் முகத்தில் விவரிக்க இயலாத வியப்பு விரிந்தது. “என்ன கேட்டீர்கள்?” என்று வினவினான், வியப்பு குரலிலும் ஒலிக்க.
“சரச மொழிகள்.”
“என்ன?”
“ஆமாம். நமது மன்னர் யாரோ ஒரு பெண்ணிடம் வேடவர் குடியில் சரசமாடிக்கொண்டிருக்கிறார்.”
“மன்னரைப் பார்த்தீர்களா?”
“பார்த்தேன் பேசினேன். புதுத்தலைவர் என்று வேடவர்கள் சொன்னார்களே அது வேறு யாரும் அல்லர். நமது மன்னர்தான்.”
“போர் மூள இருக்கும் சமயத்தில் இங்கு என்ன செய்கிறார் மன்னர்?”
“அதைத்தான் ஏற்கெனவே சொன்னேனே.”
“நீங்கள் சொல்வதை நான் நம்பவில்லை. நமது மன்னர் குணம் எல்லோருக்கும் தெரியும்.”
“உலகத்தில் எத்தனையோ பெரிய மனிதர்கள் உள்ளொரு வாழ்க்கையும், புறமொரு வாழ்க்கையும் நடத்தி உலகை ஏமாற்றுகிறார்கள். வா சீக்கிரம். நமது மன்னன் சாயத்தை வெளுக்கிறேன்” என்ற ஜகத்சிம்மன் மீண்டும் நடையில் வேகத்தைக் காட்டினான். காவலனும் மேற்கொண்டு பேசாமல் அவனைப் பின்தொடர்ந்தான்.
ஜகத்சிம்மன் எத்தனை வேகத்தைக் காட்டினாலும் காந்தோஜியின் வீரர்கள் பாலைவனப் புறங்களையும் மலையடிவாரங்களையும் சல்லடை போட்டு சலித்துக்கொண்டிருந்த படியால் துரிதமாகப் பயணம் செய்ய முடியவில்லை.
பொழுது விடிந்த சமயத்திலும் பாதி தூரத்தை அவன் கடக்க முடியவில்லை. மலைக் குகைகளில் பதுங்கியும், மரக் கூட்டங்களில் மறைந்தும் பயணம் செய்தான் ஜகத்சிம்மன். சில சமயங்களில் மேவார் வீரர்கள் ஜகத்சிம்மனும் காவலனும் பதுங்கியிருந்த இடத்தைக்கூட அணுகிவிட்டார்கள். அப்படியும் குகை வாயிலில் பாறையொன்றை சாமர்த்தியமாக ஜகத்சிம்மன் நகர்த்தி அடைத்திருந்ததால் வீரர்கள் திரும்பிச் சென்றார்கள். அந்த மலைக்குகையில் அன்று மாலை வரை கழித்த ஜகத்சிம்மன் சற்று இருட்டியதும் வெளியில் வந்து காவலனுடன் பயணம் செய்தான்.
ஒருநாள் முழுவதும் பட்டினியிருந்ததாலும், கரடுமுரடான மலைப்பாதையிலேயே முக்கால்வாசிப் பயணத்தை முடிக்க வேண்டியிருந்ததாலும் ஜகத்சிம்மன் மன்னனைப் பார்த்த மறுநாளைக்கு மறுநாள் காலை மிகுந்த ஆயாசத்துடன் ஹர்பா சங்கலாவின் இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தான். அங்கு இருந்த நிலை கண்டு பிரமிப்படைந்தான்.
ஹர்பாசங்க்லாவின் விடுதியெங்கும் மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. வாயிலில் நீர் தெளித்து வண்ணக் கோலங்கள் போடப்பட்டு இருந்தன. ராஜபுதன இசை வாத்தியங்கள் விடுதிக்குள் பலமாக முழங்கிக் கொண்டிருந்தன. “பிருமச்சாரி! இங்கு என்ன விசேஷம்? சுத்த விரதம் இனிமேல் அடுத்த வருடம்தானே?” என்று வினவினான் ஜகத்சிம்மன், காவலன் ஏதும் புரியாமல் வாயைப் பிளந்து கொண்டு நின்றான்.
ஹர்பாசங்கலா ஜகத்சிம்மன் முதுகில் தட்டிக் கொடுத்தார். ஏதோ பேய் அறைவதுபோல் விழுந்த அந்த அடியால் முகம் சுளித்த ஜகத்சிம்மனைப் பார்த்து “படைத்தலைவரே! நமது ஆயுத விடுதியில் உங்கள் இருவருக்கும் புது துணிமணிகள் இருக்கின்றன. அருவியில் நீராடி சீக்கிரம் புத்தாடை அணிந்து வாருங்கள்” என்றார்.
“என்ன விசேஷம், நாங்கள் புத்தாடை புனைய?” என்று வினவினான் ஜகத்சிம்மன்.
“போய் சீக்கிரம் வாரும். நேரம் அதிகம் இல்லை” என்று துரிதப்படுத்தினார் ஹர்பாசங்கலா.
அதற்குமேல் அவரை ஏதாவது கேட்டால் முதுகில் இன்னொரு தட்டுக் கிடைக்கும் என்ற அச்சத்தால் ஜகத்சிம்மன் காவலனுடன் சென்று அருவியில் நீராடி ஆயுத விடுதிக்கு வந்தான். அங்கிருந்த இரு வீரர்கள் அவனுக்கும் காவலனுக்கும் விலை உயர்ந்த உடைகளைக் கொடுத்து “இவற்றை அணிந்து வாருங்கள். இங்கேயே சிற்றுண்டி அருந்தலாம். பிறகு போகலாம் பக்க விடுதிக்கு” என்று உபசாரம் செய்தார்கள்.
ஜகத்சிம்மன் பேசாமல் புத்தாடை புனைந்தான். காவலனும் உடைமாற்றிக் கொண்டான். சிற்றுண்டி பேருண்டியாகவே இருந்தது. பலவகைப் பலகாரங்கள் இருவருக்கும் அளிக்கப்பட்டும்கூட ஜகத்சிம்மனால் சரிவர உண்ண முடியவில்லை.சீக்கிரம் ஆகாரத்தை முடித்துக்கொண்டு பெரிய விடுதிக்குக் கிளம்பினான் காவலனுடன். அங்கு வாயிலில் அவனுக்கு பன்னீர் தெளிக்கப்பட்டது. கையில் புஷ்பமும் சந்தனமும் அளிக்கப்பட்டன. ஜகத்சிம்மனைக் கண்டதும் மங்கள வாத்தியங்கள் சிறிது அதிகமாகவே முழங்கன.
அதற்குமேல் பொறுக்க முடியாத படைத்தலைவன் ஹர்பாசங்க்லாவை நோக்கி, “தங்களுடன் ஒருசில வார்த்தைகள் பேச வேண்டும்” என்றான்.
“பிறகு பேசலாம், முதலில் உள்ளே போவோம்” என்றார் பிருமசாரி.
“விஷயம் மிக முக்கியம். அவசரம்” என்றான் படைத் தலைவன்.
“எதைப் பற்றி?”
“யாரைப் பற்றி என்று கேளுங்கள் பிருமச்சாரி.”
“சரி, யாரைப் பற்றி?”
“மன்னரைப் பற்றி.”
“எந்த மன்னரைப் பற்றி.”
“மண்டோருக்கு இரண்டு மன்னர்கள் உண்டா?”
“உண்டு. மண்டோரை விட்டவர் ஒருவர், பிடித்தவர் ஒருவர்.”
ஜகத்சிம்மன் சீற்றம் மிகுதியால் “விட்டவரைப் பற்றித்தான்” என்று கூறினான் குரலில் உஷ்ணத்தைக் காட்டி.
“யார்? ராவ்ஜோடாவைப் பற்றியா?” என்று கேட்டார் பிருமச்சாரி.
“ஆம்” என்றான் ஜகத்சிம்மன்.
“சரி, உள்ளே வாரும். அங்கேயே ஒருபுறமாய் உட்கார்ந்து பேசுவோம்” என்ற பிருமச்சாரி, அவனை வலுக்கட்டாயமாய் உள்ளே இழுத்துச் சென்றார். காவலனும் பின்தொடர்ந்தான் குழப்பமும் வியப்பும் கலந்த சிந்தையுடன்.
உள்ளே கூடத்துக்கு வந்ததும் ஜகத்சிம்மன் வாயடைத்து நின்றான். காவலன் வியப்பினால் வாயைப் பெரியதாகப் பிளந்தான். கூடத்தில் ராவ்ஜோடாவும் மலை அரசியும் திருமணக்கோலத்தில் காட்சியளித்தார்கள். அவன் வந்த சமயம் ராவ்ஜோடா மலை அரசிக்கு மங்கலக் கங்கணத்தைக் கட்ட முற்பட்டான். வாத்தியங்கள் பெரிதாக முழங்கின. அதைவிடப் பெரிதாக எழுந்தது ஜகத்சிம்மன் குரல்.
“நிறுத்துங்கள். இந்த விவாகம் நடக்கக்கூடாது” என்று கூறினான் படைத்தலைவன்.
சுடும் கண்கள் பல அவனை நோக்கித் திரும்பின. இரு வீரர்கள் அவனை அங்கேயே வெட்டிப்போட வாளையும் உருவினார்கள்.

சாண்டில்யன் மூலம் மேலும் புத்தகங்கள்

40
கட்டுரைகள்
மலை அரசி
0.0
மாலை அரசி தமிழ் மொழியில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான வரலாற்று நாவல். பிரபல தமிழ் எழுத்தாளர் சாண்டில்யன் இந்த மனதை மயக்கும் புத்தகத்தை எழுதியுள்ளார். சாண்டில்யன் வரலாற்றுப் புனைகதைகளுக்காகப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார், மேலும் அவர் தனது வரலாற்று, காதல் மற்றும் சாகச நாவல்களுக்காக நன்கு அறியப்பட்டவர், இது பெரும்பாலும் சோழ மற்றும் பாண்டிய பேரரசுகளின் காலங்களில் அமைக்கப்பட்டது.
1

1. சுடர்க்கொடி

15 January 2024
0
0
0

சரித்திரம், பூமி, வாழ்க்கையின் கர்ம பலன்கள் ஆகிய சகலத்திலும் ஒரு சுழற்சியும் தொடர்ச்சியும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுவதில் எத்தனை உண்மையிருக்கிறதென்பதை, சுற்றிலும் தன்னை எரித்துக்கொண்டிருந்த மணற்பரப்

2

2. விளக்கில் விரிந்த கதை

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் மலைக்குகை வாயிலில், மரங்கள் அடர்த்தியாயிருந்ததால் இருள் கடுமையாக இருந்த அந்தப் பிராந்தியத்தில், பந்தத்தை கையில் ஏந்தி அதன் சுடர் முகத்தில் வீச சுடர்க்கொடியென்ற காரணப் பெயருக்கு முற

3

3. துணைவன்!

15 January 2024
0
0
0

விரிந்து படர்ந்து எரிந்த விளக்கின் சுடரை விந்தைக் கண்களுடன் நோக்கிய ராவ்ஜோடா. அதில் விரிந்த கதையைக் கண்டதும் மெய்சிலிர்த்துப் போனான். முதலில் அந்தச் சுடரில் ஏதும் தெரியாததால் புரியாமல் விழித்த மார்வ

4

4. இரு விந்தைகள்

15 January 2024
0
0
0

மலை அரசியின் மதுர இதழ்களில் இருந்து உதிர்ந்த அந்தக் கொடுமையான சொற்களைக் கேட்டதும், வியப்பும் அச்சமும் கலந்த உணர்ச்சிகள் ராவ்ஜோடாவின் இதயத்தை மளடுருவிச் சென்றன. அப்படி அவன் நடுங்கியதை பக்கத்தில் உட்கார

5

5. நான் வருவேன்

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் குகையைவிட்டு வெளியேறிய மலை அரசி, வேகமாக மலையின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடந்து சென்றதும், விளைவித்த இரண்டு விந்தைகளும் மகாவீரனான மார்வார் இளவரசனை திகில் கொள்ளச் செய்தன என்றால்,

6

6. பெண் துணை!

15 January 2024
0
0
0

பெண்ணின் லாவண்யத்தால் ஆண்மகன் அறிவு அழிந்துவிடுகிறது. கவர்ச்சியான கன்னியின் முன்பாக எந்த ஆண்மகனும் சுயபுத்தியை இழந்துவிடுகிறான். இந்தப் பழைய நிகழ்ச்சிகளுக்கு அத்தாட்சியாக நின்றான் ராவ்ஜோடா. “உனது வீ

7

7. சாகுந்தலம்

16 January 2024
1
0
0

பந்தத்தையும் அணைத்துவிட்டு இருண்ட குகைக்குள் தன்னை வா வா என்று அழைத்த அந்த பருவப் பாவையின் துணிவை நினைத்து ஜோடா திகிலுக்கு இலக்காகி நின்ற நேரத்தில், மலைஅரசியே குகை வாயிலைவிட்டு அவனை அணுகி, அவன் கையைப்

8

8. காட்டு மலர்

16 January 2024
1
0
0

பாவின் வாலிப முரட்டு முகம் அவள் வழவழத்த கழுத்தில் திடீரென அழுந்திப் புரண்டபோது, மலை அரசியின் இதயமும் அந்த வாலிபன் உள்ளத்தைப்போலவே உணர்ச்சி அலைகளில் உருண்டது. அத்தனை உணர்ச்சி எழுச்சியிலும் அரசகுமாரன்

9

9. நிலையற்ற அரசு

16 January 2024
1
0
0

மலை அரசியை “காட்டு மலர்” என்று குறிப்பிட்டதோடு தனது பேச்சை ஜோடா நிறுத்திக்கொண்டு இருந்தால் ஜகத்சிம்மனின் கோபம் தலைக்கு ஏறியிருக்காது. “இவள் மார்வார் ராணி” என்றும் சொல்லவே ஜகத்சிம்மனுக்கு கோபத்துடன் தி

10

10. பறந்த கிளி! தொடர்ந்த துன்பம்!

16 January 2024
1
0
0

மலை அரசியின் சொற்களோ உத்தரவுகளோ மந்திராலோசனை சபையில் இருந்தவர்களுக்குக் கட்டோடு பிடிக்காதிருந்தாலும் அவள் சொன்னதற்கு எல்லாம் ஜோடா தலையை ஆட்டியதால், அவள் கட்டளைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் எல்லோருமே முன

11

11. மண்டோர் ரணகளம்

16 January 2024
1
0
0

மண்டோரின் பெரும் கதவுகள் சாத்தப்பட்டதாலும் போர்முரசு பலமாக ஒலித்ததாலும் வருவது என்னவென்பதை அறிந்த புது மகாராஜாவான ராவ்ஜோடா, புரவியின் கடிவாளத்தை பிடித்த நிலையிலேயே திகைத்து அமர்ந்துவிட்ட சமயத்தில் மலை

12

12. குகையில்...!

16 January 2024
1
0
0

பெற்றோர் புரிந்த பாவம் சிலரைப் பிடித்து வாட்டுகிறது. உற்றார் செய்த பாவமும் சிலரை விடுவதில்லை. பெற்றோரும் உற்றாரும் விளைவித்த பாவங்களுக்கு எப்பாவமும் அறியாத ஜோடா இலக்கானான். பேரனான மோகுல சிம்மனை சீராட்

13

13. அவள் கனவு!

16 January 2024
1
0
0

மலை அரசியைப் பார்த்து மார்வார் இளவரசனாயிருந்து அரசனாகி, நாட்டையும் பறிகொடுத்த ராவ்ஜோடா, அத்தகைய ஒரு கேள்வியைக் கேட்டான் என்றால், அதற்கு மூலகாரணம் அவளுடைய விபரீதமான பதில்தான். “நாம் தனித்திருப்பது உனக்

14

14. தண்டனை!

17 January 2024
1
0
0

மலை அரசியை தரையில் கிடத்திவிட்டு குகையின் வாயிலுக்கு வந்த ராவ்ஜோடாவின் செவிகளில் ஜகத்சிம்மனும் மற்ற வீரர்களும் ஏறிவந்த புரவியின் குளம்படி ஒலிகள் கூடக் கேட்கவில்லை. குகைக்கு உள்ளே மலை அரசியின் அருகாமைய

15

15. ஹர்பா சங்க்லா!

17 January 2024
0
0
0

மலை அரசியால் மன்னிக்கப்பட்டு ஜோடாகிருக்குச் செல்லும்படி பணிக்கப்பட்ட ஜகத்சிம்மன் உடனடியாகத் திரும்பவில்லை தனது புரவியை நோக்கி நின்ற இடத்திலேயே அசைவற்று நின்றான் பல விநாடிகள். பிறகு சட்டென்று வேகமாக நட

16

16. அந்தி வானம்

17 January 2024
0
0
0

அதிர்ஷ்டம் என்பது ஒரு மனிதனைப் பிடித்துக்கொண்டால் அவனை அது லேசில் விடுவது இல்லை. கூடியவரையில் விடாமல் தொடர்கிறது. துரதிர்ஷ்டக்காரனுக்கு புத்தி பேதலிக்கிறது. காலம் கைகொடுப்பது இல்லை. எதையும் காலங்கடந்த

17

17. வாளின் கதை!

17 January 2024
0
0
0

ஜோடாவைப்பற்றி விசாரித்ததும் மலை அரசியின் மதிமுகம் அந்திவானம் போல் சிவந்துவிட்டதைக் கண்டதுமே நைஷ்டிக பிருமச்சாரியும், எந்தப் பெண்ணையும் கண்ணெடுத்துப் பார்க்காதவரும், பிருமச்சாரி விரதம் கெடக்கூடாது என்ப

18

18. தேடி வந்த அதிர்ஷ்டம்!

17 January 2024
0
0
0

மார்வார் மன்னனையும் மலைக்க வைத்த அந்த விசித்திரக் கதையைச் சொல்லுமுன்பு பிருமச்சாரி அந்தச் சிறு வீட்டின் முற்றத்தை வளைத்திருந்த சுற்றுக் கட்டடத்தின்மீது உட்கார்ந்து கீழ் இருந்த முற்றத்தில் தமது கால்களை

19

19. பாலைவனக் கூடாரம்

17 January 2024
0
0
0

இரவு தந்த இருளில், மலைக்காடு வீசிய இதமான காற்றில், சாளரத்துக்கு அருகில் இருந்த மகிழ மரம் பரவவிட்ட சுகந்தத்தின் சூழ்நிலையில், மலை அரசியை சூழ்ந்து நெருக்கிய ஜோடாவின் கரங்கள் நெருக்கியதோடு நில்லாமல் இன்ப

20

20. கரிய புரவி! கழுத்தில் ஈட்டி!

18 January 2024
0
0
0

ஜோடாவின் பரம விரோதியான சந்தசிம்மனின் மூத்த மகன் காந்தாஜி தன் வாளை உருவிக்கொண்டு ராவ் ஜோடாவை அணுகுவதற்கு முன்பே ஜோடா பிருமச்சாரியளித்த தனது பெரிய வாளை உருவி எதிரியைத் தடுத்தான். அவனைச் சேர்ந்த பத்து பத

21

21. மலைச்சாரல் ஓசை

18 January 2024
0
0
0

கழுத்தில் பதித்திருந்த ஈட்டி சற்றும் அசையாமல் இருந்தாலும் அதில் ஒரு திடமும், ஈட்டியைப் பிடித்திருந்தவன் கையில் ஈவு இரக்கமற்ற ஓர் உறுதியும் இருந்ததைக் கவனித்த ராவ்ஜோடா, தான் சிறிது அசைந்தாலும் அந்த ஈட்

22

22. பரீட்சை

18 January 2024
0
0
0

பாபுஜியின் நூறு புரவிகள் ஏதோ பெரும் புயலைப் போல் மலைச்சரிவில் வந்ததாலும், அவை கண்ணிமைக்கும் நேரத்தில் தனது புரவியில் இருந்து தன்னை வீழ்த்திவிட்டதாலும் மலைப்பாறையில் புரண்ட ஜோடா வெகு துரிதமாகப் பாறையில

23

23. அடவியில் ஒரு காட்சி!

18 January 2024
0
0
0

நீண்டநாள் பிரிந்த மகனை ஆர்வத்துடன் தழுவும் தந்தை போல ஜோடாவை பல விநாடி தழுவி நின்ற பாபுஜி, கடைசியில் அவனுக்குத் தமது கைகளில் இருந்து விடுதலை அளித்தபோது அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் இரண்டு தே

24

24. காதல் பாபமா?

18 January 2024
0
0
0

அடர்ந்த அந்த அடவிக்குள் நாலைந்து பங்கஜங்களை நீர்மட்டத்துக்குமேல் காட்டிக்கொண்டிருந்த சிறு வாவியின் கரையில் மலை அரசியும் ஜோடாவும் உட்கார்ந்திருந்த நிலையைக் கண்டதும் இரண்டு பிருமச்சாரிகளும் தங்கள் பிரும

25

25. ஜோடாவின் துணிவு!

18 January 2024
0
0
0

பாபுஜியும், பிருமச்சாரியும் விழிப்பதைப் பார்த்த ஜோடா, “உங்கள் இருவருக்கும் வரவர சுயநம்பிக்கை போய்விட்டது” என்று ஓர் அம்பை வீசினான். அதுவரை தாங்கள் கண்ட காட்சியால் குழப்பத்தில் இருந்த இரு பிருமச்சாரி

26

26. சாவுகாரைப் பிடித்த சனியன்!

18 January 2024
0
0
0

மண்டோர் அரசின் முதலமைச்சராயிருந்து, சந்தசிம்மன் ஆக்கிரமிப்புக்குப் பின்பு அந்தப் பதவியில் இருந்து விலகி, அரண்மனையில் தமக்கு முன்னாள் மன்னனால் அளிக்கப்பட்டு இருந்த இடத்தையும் சந்தசிம்மனிடம் ஒப்புடைத்து

27

27. அடைத்த கதவு!

18 January 2024
0
0
0

காந்தோஜியின் குறுவாள் அழுந்தியதாலும், எச்சரிக்கையாலும், அவன் பின்னால் நின்றிருந்த மஞ்சாஜியின் உதடுகளில் துளிர்த்திருந்த குரூரப் புன்முறுவலாலும், சாவுகார் அஞ்சி நடுநடுங்கிவிடுவார் என்றோ, முன்னே நடந்துவ

28

28. வேடர் குடிசை மர்மம்!

18 January 2024
0
0
0

கோட்டைக் காவலன் சொன்ன செய்தியால் மலைத்த இருவரில் சாவுகாரே முதலில் திகைப்பை உதறிக்கொண்ட தன்றி சமயாசந்தர்ப்பம் தெரியாமல் கோப்தையும் காட்டினார். “காவலனே! வணிகர்களைத் தடை செய்யும் வழக்கம் மார்வாரில் கிடைய

29

29. உள்ளே ஒரு பெண் குரல்!

18 January 2024
0
0
0

அன்று பகல் முழுவதும் மார்வார் படைத்தலைவனான ஜகத்சிம்மனுக்கும் மண்டோர் கோட்டை காவலனுக்கும் உணவு முதலிய விஷயங்களில் ராஜோபசாரம் நடந்தாலும், அவ்விருவரும் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் எந்த வேடனும் நேரடியாக ப

30

30. ஜோடாவின் துன்மார்க்கம்!

19 January 2024
1
0
0

மூன்று குணங்களை மனிதன் தவிர்ப்பது நல்லது. தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் அக்கறை காட்டுவது, ஒன்று. ஒட்டுக் கேட்பது, இரண்டு. காலதாமதம் செய்வது, மூன்று. இந்த மூன்றில் ஏதாவது ஒரு குணமே யாரையும் இக்கட்ட

31

31. மணக்கோலம்!

19 January 2024
1
0
0

வீரனாகப் படைகளை இயக்கி, இழந்த அரசை மீட்பதில் சித்தத்தை செலுத்த வேண்டிய மார்வார் மன்னன், கேவலம், பெண் மோகம் கொண்டவனாகக் குடிசையில் மறைந்து கொண்டு காலத்தை ஓட்டுவதை நினைத்த ஜகத்சிம்மன் வேடவர் குடிசைக் கூ

32

32. சந்திர முகம்

19 January 2024
1
0
0

மண்டோர் படைத்தலைவனான ஜகத்சிம்மன் தனது மன்னனின் திருமணத்தையே நிறுத்த முயன்றதும், அதற்காகக் கூச்சலிட்டதும் பலருக்கு கோபத்தையும் சிலருக்கு வியப்பையும் உண்டாக்கினாலும், பிருமச்சாரி ஹர்பாசங்க்லாவோ, திருமணப

33

33. இழந்த சொர்க்கம்

19 January 2024
1
0
0

ராவ்ஜோடாவின் அணைப்பில் இருந்த அழகியின் சந்திர வதனத்தைக் கண்டதும் ஜகத்சிம்மன் திகைப்பும் அதிர்ச்சியும் ஒருங்கே அடைந்தான் என்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. அந்த முகம் மலை அரசியின் முகம்! முகத்

34

34. பதவி இறக்கம்!

19 January 2024
1
0
0

மலை அரசியின் மறுபிம்பம் போன்ற மின்னிடையாளுடன், ஜோடா கலந்து விளையாட இருந்த சமயத்தில் பிருமச்சாரி ஹர்பாசங்கலா அங்கு தோன்றியதும் கதவைத் தட்டியதும் பரமானந்தமாயிருந்தது, மண்டோர் படைத்தலைவன் ஜகத்சிம்மனுக்கு

35

35. மீண்டும் வந்தாள்!

19 January 2024
1
0
0

மண்டோரின் படைத்தலைவனாக இருந்த தன்னை திடீரென உபதளபதியாக்கிவிட்ட மன்னன் செயலைக் கண்டு மனம் துடித்த ஜகத்சிம்மன் அந்த அவமானத்தில் இருந்து எப்படி மீளலாம் என்று சிந்தித்தான். அது தவிர இந்த திடீர் பதவி இறக்க

36

36. மண்டோர் சமர்

19 January 2024
1
0
0

கேவலம், ஒரு பெண், புரவியில் இருந்து இறங்க, அவள் காலுக்குப் படியாக தனது இரு கைகளையும் கோத்து நீட்டிய பிருமச்சாரியிடம் பெரிதும் வெறுப்புக் கொண்டான், ஜகத்சிம்மன். பிருமச்சாரி உண்மையில் பெரும் போலி பிருமச

37

37. மணலில் தோய்ந்த ரத்தம்

19 January 2024
1
0
0

மண்டோர் போரில் மாவீரர்களான சந்தசிம்மன் புதல்வர்கள் அடைந்த தோல்விக்குக் காரணம் தாங்கள் போரிடும் எதிரிகளின் திறனை அவர்கள் தவறாக எடைபோட்டதுதான் என்று கர்னல் ஜேம்ஸ்டாட் தமது ராஜபுதன வரலாற்று நூலில் தெளிவா

38

38. துரோகி!

19 January 2024
1
0
0

மலை அரசி தனது வளையல் கரங்களை நீட்டி தன்னைக் கைது செய்யும்படிக் கேட்டுக்கொண்டதும் காந்தோஜி தனது தம்பியின் மரணத்தையும் மறந்து வியப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே அடைந்தான். அப்பொழுதும் மலை அரசி வேட்டுவர

39

39. வேகம்! தாகம்!

19 January 2024
1
0
0

மேவாரின் தலைநகரான சித்தூரில் இருந்து தப்பி ஓடிவந்து லூனி ஆற்றின் உப்பு நீரில் தந்தையின் மரணத்துக்கு நீராடிய அதே துறையில், கிட்டத்தட்ட அதே இடத்தில் தங்கள் வம்ச துர்ப்பாக்கியத்துக்கும் அவப் பெயருக்கும்

40

40. அரசி ஆன, மலை அரசி!

19 January 2024
1
0
0

மலை அடிவாரப் புதரில் மலை அரசி மல்லாந்து கிடந்த கோலம் மண்டோர் மன்னனின் வெறியைக் கிளறிவிடவே, அவன் உலகத்தையே மறந்து, அதுவரை நேர்ந்த நிகழ்ச்சிகளால் மனம் ஏற்படுத்திய கட்டுப்பாடுகளையும் தடைகளையும் உதறி அவள்

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்