shabd-logo

15. ஹர்பா சங்க்லா!

17 January 2024

2 பார்த்தது 2

மலை அரசியால் மன்னிக்கப்பட்டு ஜோடாகிருக்குச் செல்லும்படி பணிக்கப்பட்ட ஜகத்சிம்மன் உடனடியாகத் திரும்பவில்லை தனது புரவியை நோக்கி நின்ற இடத்திலேயே அசைவற்று நின்றான் பல விநாடிகள். பிறகு சட்டென்று வேகமாக நடந்து, ஜோடாவின் காலால் உதைக்கப்பட்டு தூரத்தில் கிடந்த தனது வாளை நோக்கிச் சென்று அதைக் கையில் எடுத்துக்கொண்டான். அந்த வாளை இரு முறை திருப்பிப் பார்த்துவிட்டு வேகமாக வந்தான் மலை அரசி நின்றிருந்த குகை வாயிலுக்கு. அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை ஜோடாவோ மலை அரசியோ அறியுமுன்பு, மலை அரசியின் முன்பாக மண்டியிட்டுத் தலை வணங்கி தனது வாளை அவள் கமலப் பாதங்களில் வைத்தான். “மகாராணி! இந்த வாள் உங்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்படுகிறது. இன்று நான் தங்களைப்பற்றிக் குறை கூறிய பாவத்துக்கு என்றாவது ஒருநாள் இந்த வாள் பரிகாரம் அளிக்கும். எனக்கு மன்னிப்பு அளியுங்கள். என்னை உங்கள் பணியாளாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றான் துன்பம் தோய்ந்த குரலில்.
இந்த திடீர் காட்சியைக் கண்ட ஜோடா அசைவற்று திக்பிரமை பிடித்து நின்றான். மலை அரசியோ அவனை ஒரு தாய், மகனைப் பார்ப்பதுபோல் பார்த்தாள். அது மட்டுமின்றி, “ஜகத்சிம்மா! நான் சகோதரர்களுடன் பிறக்கவில்லை. அப்படி யாராவது சகோதரர்கள் இருந்தாலும் எனக்குத் தெரியாது. ஆகவே என் சகோதரனாயிரு. வாளை எடுத்துக்கொள். அது உன் நாட்டின் மீட்சிக்கும் வெற்றிக்கும் பயன்படட்டும்” என்றாள் கம்பீரமும் கருணையும் கலந்த குரலில்.
அதற்குப் பிறகும் ஜகத்சிம்மன் எழுந்தான் இல்லை.
“எழுந்திரு ஜகத்சிம்மா” என்றாள் மலை அரசி.
“என்னை மன்னித்ததாக ஒரு வார்த்தைகூட நீங்கள் சொல்லவில்லை” என்றான் ஜகத்சிம்மன்.
மலை அரசி பரிதாபம் நிரம்பிய கண்களுடன் படைத்தலைவனைப் பார்த்தாள். “மன்னித்துவிட்டேன் ஜகத்சிம்மா எழுந்திரு. ஜோடாகிருக்கு நீ மட்டும் போ” என்றாள்.
“வீரர்கள்?” என்று வினவினான் ஜகத்சிம்மன்.
“எங்களுடன் அழைத்துப் போகிறோம்” என்றாள் மலை அரசி.
எங்கு ஏதென்று முன்பு கேட்ட கேள்வியைக் கேட்கவில்லை ஜகத்சிம்மன். ஏதும் பேசாமல் எழுந்திருந்து, ஜோடாவுக்கும் மலை அரசிக்கும் தலை வணங்கிவிட்டு புரவியில் ஏறி மலைச்சரிவில் சென்றுவிட்டான்.
அவனுடன் வந்த நூற்று இருபத்து ஐந்து புரவி வீரர்கள் மட்டும் அப்படியே கூட்டமாக நின்றார்கள்.
“இவர்களை எதற்காக நிற்கச் சொன்னாய் மலை அரசி?” என்று கேட்டான் ராவ்ஜோடா.
மலை அரசி சிறிதும் சிந்திக்காமல் பதில் சொன்னாள். “இது உங்கள் அஸ்திவார சைன்னியம். இதைக்கொண்டுதான் நீங்கள் வெற்றியை அடைய வேண்டும். நூற்று இருபத்து ஐந்து உங்கள் அதிர்ஷ்ட எண்” என்று.
“எண்ணுக்கும் அதிர்ஷ்டத்துக்கும் என்ன தொடர்பு?” என்று வினவினான் ஜோடா.
“சித்தூரில் இருந்து உங்களுக்குப் பின்பு தப்பி வந்தவர் நூற்று இருபத்து ஐந்து பேருடன் போகப் போகிறோம். அங்கு புரியும் உங்களுடைய அதிர்ஷ்டம்” என்று சொன்னாள்.
“யாரை சந்திக்கப் போகிறோம்?” என்று கேட்டான் ஜோடா.
“அதற்குள் மறந்துவிட்டீர்களா? உங்கள் துணைவரை சந்திக்கப் போகிறோம்” என்று மலை அரசி குறிப்பிட்டாள். அத்துடன் வீரர்களை நோக்கி “இரவு இங்கேயே இளைப்பாறுங்கள். காலையில் புறப்படுவோம்” என்று கூறிவிட்டு குகைக்குள் சென்றாள்; ஜோடாவும் குகைக்குள் நுழைந்தான்.
குகைக்குள் மலை அரசி படுக்கவில்லை. பாறை சிருஷ்டித்த சுவரில் சாய்ந்து கொண்டு நின்றிருந்தாள். நின்ற நிலையில் குகையின் கூரையிலிருந்த துவாரத்தின் மூலம் கண்களை ஆகாயத்தில் செலுத்தி ஆராய்ந்து கொண்டிருந்தாள். பிறகு ஜோடாவை நோக்கி “ஜோடா! இன்னும் இரண்டு நாட்கள் இங்குதான் நாம் தங்க வேண்டும்” என்று சொன்னாள்.
“ஏன்?”
“இன்றுதான் புஷ்யம்.”
“புஷ்யம் என்றால்?”
“பூச நட்சத்திரம். அதோ பார்” என்று கூரையின் உச்சியைக் காட்டினாள்.
வானத்தைப் பார்த்த ஜோடாவுக்கு கொத்தாக நட்சத்திரங்கள் தெரிந்தன. ஆனால், அதில் எது புஷ்யம், முழுவதுமா, அவற்றில் ஏதாவதொன்றா என்று ஏதும் தெரியாததால் “நட்சத்திரங்கள் கொத்தாகத் தெரிகின்றன. அதனால் என்ன?” என்று கேட்டான்.
“மக நட்சத்திரம் அன்றுதான் சுத்தவிரதம்” என்றாள் மலை அரசி.
அப்பொழுதுதான் ஜோடாவுக்கு தான் வனப்பிரஸ்த ஜோகியின் குகையில் சந்தித்த ராட்சசனைப்பற்றி நினைவுக்கு வந்தது. அவன் பிரம்மச்சாரியான ஹர்பாசங்க்லா என்பதை ஜோகி தெரிவித்ததும், அவனைத் தனக்குத் துணைவனாக நியமித்ததும் மெள்ள மெள்ள சிந்தையில் உலாவலாயிற்று. அவன் தன்னை சுத்த விரதத்தன்று வந்து சந்திக்கும்படி சொல்லிச் சென்றதும் மனதில் உதயமாகவே “மறந்துவிட்டேன் மலை அரசி! இப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது” என்றான்.
“ஹர்பாசங்க்லா சுத்த விரதம் கொண்டாடும்போது அங்கு இருந்தால் நமது வேலை முடிந்தது” என்று உற்சாகத்துடன் கூறினாள் மலை அரசி.
“ஹர்பாசங்க்லா பெரிய வீரன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கோபிஷ்டர் என்றும் கேள்வி” என்றான் ஜோடா சிறிது சந்தேகத்துடன்.
மலை அரசி ஜோடாவை நெருங்கி பின்புறமாக அவன் மார்புமீது சாய்ந்துகொண்டாள். “கோபமிருக்கும் இடத்தில்தான் குணமிருக்கும்” என்று கூறினாள். அதைக் கூறியபடியே மார்பின்மீது மல்லாந்த நிலையில் ஜோடாவை ஏறிட்டு நோக்கினாள்.
ஜோடா இரு கைகளாலும் அவளை அணைத்தான். “மலை அரசி! எனக்கு ஹர்பாசங்க்லாவின் துணை வேண்டாம்” என்று கூறினான்.
“ஏன் ஜோடா?”
“எனக்கு அரசு வேண்டாம்.”
“ஏன் வேண்டாம்?”
“சாம்ராஜ்ஜியத்தை அடைந்துவிட்டவனுக்கு உலகச் சிறு அரசுகள் எதற்கு?”
“எந்த சாம்ராஜ்ஜியத்தை?” என்று கேட்டாள் மலை அரசி மெல்லிய குரலில்.
“இந்த சாம்ராஜ்ஜியத்தை” என்ற ராவ்ஜோடா தனது கைகளால் அவளை இறுக்கினான். அத்துடன் அவள் காதுக்கு அருகில் குனிந்து “மலை அரசி! நீ எனக்கு சாம்ராஜ்ஜியம். நீ இருக்கும் இடம் அரண்மனை. உன் சமீபம் சொர்க்கம்” என்று சொல்லிவிட்டு அவள் கன்னத்தில் இதழ்களைப் புதைத்தான்.
இத்தனையிலும் மலை அரசி, சிறிதும் நெகிழ்ச்சி அடையவில்லை. “ஜோடா! கிணற்று நீரை வெள்ளம் கொண்டு போகாது. நமது அனுபவத்துக்குக் காலம் இருக்கிறது. அதற்கு முன்பு அரசனான உனக்கு மக்கள் பால், உன் வம்சத்தின்பால் கடமையிருக்கிறது” என்றாள். “நாளை கழித்து மறுநாள் ஹர்பா சங்கலாவின் காட்டுக்குப் புறப்படுகிறோம். சுத்த விரதத்தன்று அவரை யாசிப்போம்.”
இதைக் கேட்ட ஜோடா சிறிதே வெகுண்டான். “யாசிப்பதா?” என்றும் வினவினான்.
“ஆம்.” மலை அரசி உணர்ச்சி ஏதுமின்றி சொன்னாள்.
“மார்வார் வம்சத்தவன் எவனும் யாசித்ததில்லை” என்றான் ஜோடா.
“கடவுளே யாசித்திருக்கிறார் வாமன மூர்த்தியாக. மனிதர்கள் அவரைவிட உயர்ந்தவர்கள் இல்லை” என்ற மலை அரசி, “ஜோடா! நீ யாசிக்கப் போகும் மனிதன் சாதாரணமானவன் அல்ல. மகாவீரன். அவன் சுத்த விரதத்தன்று வருஷம் முழுவதும் சம்பாதித்த பொருள்கள் அனைத்தையும் தானம் செய்துவிடுகிறான். யார் எதைக் கேட்டாலும் மறுப்பதில்லை. ஆகையால்தான் உன்னை அன்று வரச் சொன்னார். அவர் அனுஷ்டானத்தை அன்று பார். மன்னனான உனக்கே பிரமிப்பாயிருக்கும்” என்று கூறினாள்.
ஜோடாவின் முகத்தில் அப்பொழுதும் திருப்தியில்லை. “நான் யாசித்துத்தான் அவர் உதவ வேண்டுமா?” என்று கேட்டான் மிகுந்த அதிருப்தியுடன்.
“இல்லை. ஆனால் நீ பாவம் செய்தவன் என்று அவர் கருதுகிறார். ஆனால் சுத்த விரதத்தன்று அவர் யார், எவர் என்பதைக் கவனிப்பதில்லை. அன்று யார் கேட்டாலும் கொடுப்பார். ஆகையால்தான் மறுக்காதிருக்கும் பொருட்டு அந்த விரத தினத்தில் வரச் சொல்லியிருக்கிறார். நீயே பார்க்கப் போகிறாய் ஜோடா, அவர் விரத மகிமையை” என்ற மலை அரசி மார்வார் மன்னன் கைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள்.
அடுத்த நாள் மிக ரம்மியமாகக் கழிந்தது மலை அரசிக்கும் மார்வார் மன்னனுக்கும். காட்டில் உலாவியும் பேசியும் காலங்கழித்தார்கள். மூன்றாவது நாள் இருவரும் மற்ற வீரர்களையும் அழைத்துக்கொண்டு ஹர்பாசங்கலாவின் இருப்பிடத்துக்குச் சென்றார்கள்.
அங்கு ஜோடா கண்ட காட்சி அவனைத் திகிலுறச் செய்தது. ஹர்பாசங்கலா தன்னந்தனியாக உட்கார்ந்திருந்தார். மலை அரசியையும் ஜோடாவையும் பார்த்தவுடன் முகத்தில் துன்பத்தைப் படரவிட்டுக் கொண்டார். “காலம் கடந்து வந்திருக்கிறாய்” என்று ஜோடாவை நோக்கிக் கூறினார்.

சாண்டில்யன் மூலம் மேலும் புத்தகங்கள்

40
கட்டுரைகள்
மலை அரசி
0.0
மாலை அரசி தமிழ் மொழியில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான வரலாற்று நாவல். பிரபல தமிழ் எழுத்தாளர் சாண்டில்யன் இந்த மனதை மயக்கும் புத்தகத்தை எழுதியுள்ளார். சாண்டில்யன் வரலாற்றுப் புனைகதைகளுக்காகப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார், மேலும் அவர் தனது வரலாற்று, காதல் மற்றும் சாகச நாவல்களுக்காக நன்கு அறியப்பட்டவர், இது பெரும்பாலும் சோழ மற்றும் பாண்டிய பேரரசுகளின் காலங்களில் அமைக்கப்பட்டது.
1

1. சுடர்க்கொடி

15 January 2024
0
0
0

சரித்திரம், பூமி, வாழ்க்கையின் கர்ம பலன்கள் ஆகிய சகலத்திலும் ஒரு சுழற்சியும் தொடர்ச்சியும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுவதில் எத்தனை உண்மையிருக்கிறதென்பதை, சுற்றிலும் தன்னை எரித்துக்கொண்டிருந்த மணற்பரப்

2

2. விளக்கில் விரிந்த கதை

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் மலைக்குகை வாயிலில், மரங்கள் அடர்த்தியாயிருந்ததால் இருள் கடுமையாக இருந்த அந்தப் பிராந்தியத்தில், பந்தத்தை கையில் ஏந்தி அதன் சுடர் முகத்தில் வீச சுடர்க்கொடியென்ற காரணப் பெயருக்கு முற

3

3. துணைவன்!

15 January 2024
0
0
0

விரிந்து படர்ந்து எரிந்த விளக்கின் சுடரை விந்தைக் கண்களுடன் நோக்கிய ராவ்ஜோடா. அதில் விரிந்த கதையைக் கண்டதும் மெய்சிலிர்த்துப் போனான். முதலில் அந்தச் சுடரில் ஏதும் தெரியாததால் புரியாமல் விழித்த மார்வ

4

4. இரு விந்தைகள்

15 January 2024
0
0
0

மலை அரசியின் மதுர இதழ்களில் இருந்து உதிர்ந்த அந்தக் கொடுமையான சொற்களைக் கேட்டதும், வியப்பும் அச்சமும் கலந்த உணர்ச்சிகள் ராவ்ஜோடாவின் இதயத்தை மளடுருவிச் சென்றன. அப்படி அவன் நடுங்கியதை பக்கத்தில் உட்கார

5

5. நான் வருவேன்

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் குகையைவிட்டு வெளியேறிய மலை அரசி, வேகமாக மலையின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடந்து சென்றதும், விளைவித்த இரண்டு விந்தைகளும் மகாவீரனான மார்வார் இளவரசனை திகில் கொள்ளச் செய்தன என்றால்,

6

6. பெண் துணை!

15 January 2024
0
0
0

பெண்ணின் லாவண்யத்தால் ஆண்மகன் அறிவு அழிந்துவிடுகிறது. கவர்ச்சியான கன்னியின் முன்பாக எந்த ஆண்மகனும் சுயபுத்தியை இழந்துவிடுகிறான். இந்தப் பழைய நிகழ்ச்சிகளுக்கு அத்தாட்சியாக நின்றான் ராவ்ஜோடா. “உனது வீ

7

7. சாகுந்தலம்

16 January 2024
1
0
0

பந்தத்தையும் அணைத்துவிட்டு இருண்ட குகைக்குள் தன்னை வா வா என்று அழைத்த அந்த பருவப் பாவையின் துணிவை நினைத்து ஜோடா திகிலுக்கு இலக்காகி நின்ற நேரத்தில், மலைஅரசியே குகை வாயிலைவிட்டு அவனை அணுகி, அவன் கையைப்

8

8. காட்டு மலர்

16 January 2024
1
0
0

பாவின் வாலிப முரட்டு முகம் அவள் வழவழத்த கழுத்தில் திடீரென அழுந்திப் புரண்டபோது, மலை அரசியின் இதயமும் அந்த வாலிபன் உள்ளத்தைப்போலவே உணர்ச்சி அலைகளில் உருண்டது. அத்தனை உணர்ச்சி எழுச்சியிலும் அரசகுமாரன்

9

9. நிலையற்ற அரசு

16 January 2024
1
0
0

மலை அரசியை “காட்டு மலர்” என்று குறிப்பிட்டதோடு தனது பேச்சை ஜோடா நிறுத்திக்கொண்டு இருந்தால் ஜகத்சிம்மனின் கோபம் தலைக்கு ஏறியிருக்காது. “இவள் மார்வார் ராணி” என்றும் சொல்லவே ஜகத்சிம்மனுக்கு கோபத்துடன் தி

10

10. பறந்த கிளி! தொடர்ந்த துன்பம்!

16 January 2024
1
0
0

மலை அரசியின் சொற்களோ உத்தரவுகளோ மந்திராலோசனை சபையில் இருந்தவர்களுக்குக் கட்டோடு பிடிக்காதிருந்தாலும் அவள் சொன்னதற்கு எல்லாம் ஜோடா தலையை ஆட்டியதால், அவள் கட்டளைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் எல்லோருமே முன

11

11. மண்டோர் ரணகளம்

16 January 2024
1
0
0

மண்டோரின் பெரும் கதவுகள் சாத்தப்பட்டதாலும் போர்முரசு பலமாக ஒலித்ததாலும் வருவது என்னவென்பதை அறிந்த புது மகாராஜாவான ராவ்ஜோடா, புரவியின் கடிவாளத்தை பிடித்த நிலையிலேயே திகைத்து அமர்ந்துவிட்ட சமயத்தில் மலை

12

12. குகையில்...!

16 January 2024
1
0
0

பெற்றோர் புரிந்த பாவம் சிலரைப் பிடித்து வாட்டுகிறது. உற்றார் செய்த பாவமும் சிலரை விடுவதில்லை. பெற்றோரும் உற்றாரும் விளைவித்த பாவங்களுக்கு எப்பாவமும் அறியாத ஜோடா இலக்கானான். பேரனான மோகுல சிம்மனை சீராட்

13

13. அவள் கனவு!

16 January 2024
1
0
0

மலை அரசியைப் பார்த்து மார்வார் இளவரசனாயிருந்து அரசனாகி, நாட்டையும் பறிகொடுத்த ராவ்ஜோடா, அத்தகைய ஒரு கேள்வியைக் கேட்டான் என்றால், அதற்கு மூலகாரணம் அவளுடைய விபரீதமான பதில்தான். “நாம் தனித்திருப்பது உனக்

14

14. தண்டனை!

17 January 2024
1
0
0

மலை அரசியை தரையில் கிடத்திவிட்டு குகையின் வாயிலுக்கு வந்த ராவ்ஜோடாவின் செவிகளில் ஜகத்சிம்மனும் மற்ற வீரர்களும் ஏறிவந்த புரவியின் குளம்படி ஒலிகள் கூடக் கேட்கவில்லை. குகைக்கு உள்ளே மலை அரசியின் அருகாமைய

15

15. ஹர்பா சங்க்லா!

17 January 2024
0
0
0

மலை அரசியால் மன்னிக்கப்பட்டு ஜோடாகிருக்குச் செல்லும்படி பணிக்கப்பட்ட ஜகத்சிம்மன் உடனடியாகத் திரும்பவில்லை தனது புரவியை நோக்கி நின்ற இடத்திலேயே அசைவற்று நின்றான் பல விநாடிகள். பிறகு சட்டென்று வேகமாக நட

16

16. அந்தி வானம்

17 January 2024
0
0
0

அதிர்ஷ்டம் என்பது ஒரு மனிதனைப் பிடித்துக்கொண்டால் அவனை அது லேசில் விடுவது இல்லை. கூடியவரையில் விடாமல் தொடர்கிறது. துரதிர்ஷ்டக்காரனுக்கு புத்தி பேதலிக்கிறது. காலம் கைகொடுப்பது இல்லை. எதையும் காலங்கடந்த

17

17. வாளின் கதை!

17 January 2024
0
0
0

ஜோடாவைப்பற்றி விசாரித்ததும் மலை அரசியின் மதிமுகம் அந்திவானம் போல் சிவந்துவிட்டதைக் கண்டதுமே நைஷ்டிக பிருமச்சாரியும், எந்தப் பெண்ணையும் கண்ணெடுத்துப் பார்க்காதவரும், பிருமச்சாரி விரதம் கெடக்கூடாது என்ப

18

18. தேடி வந்த அதிர்ஷ்டம்!

17 January 2024
0
0
0

மார்வார் மன்னனையும் மலைக்க வைத்த அந்த விசித்திரக் கதையைச் சொல்லுமுன்பு பிருமச்சாரி அந்தச் சிறு வீட்டின் முற்றத்தை வளைத்திருந்த சுற்றுக் கட்டடத்தின்மீது உட்கார்ந்து கீழ் இருந்த முற்றத்தில் தமது கால்களை

19

19. பாலைவனக் கூடாரம்

17 January 2024
0
0
0

இரவு தந்த இருளில், மலைக்காடு வீசிய இதமான காற்றில், சாளரத்துக்கு அருகில் இருந்த மகிழ மரம் பரவவிட்ட சுகந்தத்தின் சூழ்நிலையில், மலை அரசியை சூழ்ந்து நெருக்கிய ஜோடாவின் கரங்கள் நெருக்கியதோடு நில்லாமல் இன்ப

20

20. கரிய புரவி! கழுத்தில் ஈட்டி!

18 January 2024
0
0
0

ஜோடாவின் பரம விரோதியான சந்தசிம்மனின் மூத்த மகன் காந்தாஜி தன் வாளை உருவிக்கொண்டு ராவ் ஜோடாவை அணுகுவதற்கு முன்பே ஜோடா பிருமச்சாரியளித்த தனது பெரிய வாளை உருவி எதிரியைத் தடுத்தான். அவனைச் சேர்ந்த பத்து பத

21

21. மலைச்சாரல் ஓசை

18 January 2024
0
0
0

கழுத்தில் பதித்திருந்த ஈட்டி சற்றும் அசையாமல் இருந்தாலும் அதில் ஒரு திடமும், ஈட்டியைப் பிடித்திருந்தவன் கையில் ஈவு இரக்கமற்ற ஓர் உறுதியும் இருந்ததைக் கவனித்த ராவ்ஜோடா, தான் சிறிது அசைந்தாலும் அந்த ஈட்

22

22. பரீட்சை

18 January 2024
0
0
0

பாபுஜியின் நூறு புரவிகள் ஏதோ பெரும் புயலைப் போல் மலைச்சரிவில் வந்ததாலும், அவை கண்ணிமைக்கும் நேரத்தில் தனது புரவியில் இருந்து தன்னை வீழ்த்திவிட்டதாலும் மலைப்பாறையில் புரண்ட ஜோடா வெகு துரிதமாகப் பாறையில

23

23. அடவியில் ஒரு காட்சி!

18 January 2024
0
0
0

நீண்டநாள் பிரிந்த மகனை ஆர்வத்துடன் தழுவும் தந்தை போல ஜோடாவை பல விநாடி தழுவி நின்ற பாபுஜி, கடைசியில் அவனுக்குத் தமது கைகளில் இருந்து விடுதலை அளித்தபோது அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் இரண்டு தே

24

24. காதல் பாபமா?

18 January 2024
0
0
0

அடர்ந்த அந்த அடவிக்குள் நாலைந்து பங்கஜங்களை நீர்மட்டத்துக்குமேல் காட்டிக்கொண்டிருந்த சிறு வாவியின் கரையில் மலை அரசியும் ஜோடாவும் உட்கார்ந்திருந்த நிலையைக் கண்டதும் இரண்டு பிருமச்சாரிகளும் தங்கள் பிரும

25

25. ஜோடாவின் துணிவு!

18 January 2024
0
0
0

பாபுஜியும், பிருமச்சாரியும் விழிப்பதைப் பார்த்த ஜோடா, “உங்கள் இருவருக்கும் வரவர சுயநம்பிக்கை போய்விட்டது” என்று ஓர் அம்பை வீசினான். அதுவரை தாங்கள் கண்ட காட்சியால் குழப்பத்தில் இருந்த இரு பிருமச்சாரி

26

26. சாவுகாரைப் பிடித்த சனியன்!

18 January 2024
0
0
0

மண்டோர் அரசின் முதலமைச்சராயிருந்து, சந்தசிம்மன் ஆக்கிரமிப்புக்குப் பின்பு அந்தப் பதவியில் இருந்து விலகி, அரண்மனையில் தமக்கு முன்னாள் மன்னனால் அளிக்கப்பட்டு இருந்த இடத்தையும் சந்தசிம்மனிடம் ஒப்புடைத்து

27

27. அடைத்த கதவு!

18 January 2024
0
0
0

காந்தோஜியின் குறுவாள் அழுந்தியதாலும், எச்சரிக்கையாலும், அவன் பின்னால் நின்றிருந்த மஞ்சாஜியின் உதடுகளில் துளிர்த்திருந்த குரூரப் புன்முறுவலாலும், சாவுகார் அஞ்சி நடுநடுங்கிவிடுவார் என்றோ, முன்னே நடந்துவ

28

28. வேடர் குடிசை மர்மம்!

18 January 2024
0
0
0

கோட்டைக் காவலன் சொன்ன செய்தியால் மலைத்த இருவரில் சாவுகாரே முதலில் திகைப்பை உதறிக்கொண்ட தன்றி சமயாசந்தர்ப்பம் தெரியாமல் கோப்தையும் காட்டினார். “காவலனே! வணிகர்களைத் தடை செய்யும் வழக்கம் மார்வாரில் கிடைய

29

29. உள்ளே ஒரு பெண் குரல்!

18 January 2024
0
0
0

அன்று பகல் முழுவதும் மார்வார் படைத்தலைவனான ஜகத்சிம்மனுக்கும் மண்டோர் கோட்டை காவலனுக்கும் உணவு முதலிய விஷயங்களில் ராஜோபசாரம் நடந்தாலும், அவ்விருவரும் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் எந்த வேடனும் நேரடியாக ப

30

30. ஜோடாவின் துன்மார்க்கம்!

19 January 2024
1
0
0

மூன்று குணங்களை மனிதன் தவிர்ப்பது நல்லது. தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் அக்கறை காட்டுவது, ஒன்று. ஒட்டுக் கேட்பது, இரண்டு. காலதாமதம் செய்வது, மூன்று. இந்த மூன்றில் ஏதாவது ஒரு குணமே யாரையும் இக்கட்ட

31

31. மணக்கோலம்!

19 January 2024
1
0
0

வீரனாகப் படைகளை இயக்கி, இழந்த அரசை மீட்பதில் சித்தத்தை செலுத்த வேண்டிய மார்வார் மன்னன், கேவலம், பெண் மோகம் கொண்டவனாகக் குடிசையில் மறைந்து கொண்டு காலத்தை ஓட்டுவதை நினைத்த ஜகத்சிம்மன் வேடவர் குடிசைக் கூ

32

32. சந்திர முகம்

19 January 2024
1
0
0

மண்டோர் படைத்தலைவனான ஜகத்சிம்மன் தனது மன்னனின் திருமணத்தையே நிறுத்த முயன்றதும், அதற்காகக் கூச்சலிட்டதும் பலருக்கு கோபத்தையும் சிலருக்கு வியப்பையும் உண்டாக்கினாலும், பிருமச்சாரி ஹர்பாசங்க்லாவோ, திருமணப

33

33. இழந்த சொர்க்கம்

19 January 2024
1
0
0

ராவ்ஜோடாவின் அணைப்பில் இருந்த அழகியின் சந்திர வதனத்தைக் கண்டதும் ஜகத்சிம்மன் திகைப்பும் அதிர்ச்சியும் ஒருங்கே அடைந்தான் என்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. அந்த முகம் மலை அரசியின் முகம்! முகத்

34

34. பதவி இறக்கம்!

19 January 2024
1
0
0

மலை அரசியின் மறுபிம்பம் போன்ற மின்னிடையாளுடன், ஜோடா கலந்து விளையாட இருந்த சமயத்தில் பிருமச்சாரி ஹர்பாசங்கலா அங்கு தோன்றியதும் கதவைத் தட்டியதும் பரமானந்தமாயிருந்தது, மண்டோர் படைத்தலைவன் ஜகத்சிம்மனுக்கு

35

35. மீண்டும் வந்தாள்!

19 January 2024
1
0
0

மண்டோரின் படைத்தலைவனாக இருந்த தன்னை திடீரென உபதளபதியாக்கிவிட்ட மன்னன் செயலைக் கண்டு மனம் துடித்த ஜகத்சிம்மன் அந்த அவமானத்தில் இருந்து எப்படி மீளலாம் என்று சிந்தித்தான். அது தவிர இந்த திடீர் பதவி இறக்க

36

36. மண்டோர் சமர்

19 January 2024
1
0
0

கேவலம், ஒரு பெண், புரவியில் இருந்து இறங்க, அவள் காலுக்குப் படியாக தனது இரு கைகளையும் கோத்து நீட்டிய பிருமச்சாரியிடம் பெரிதும் வெறுப்புக் கொண்டான், ஜகத்சிம்மன். பிருமச்சாரி உண்மையில் பெரும் போலி பிருமச

37

37. மணலில் தோய்ந்த ரத்தம்

19 January 2024
1
0
0

மண்டோர் போரில் மாவீரர்களான சந்தசிம்மன் புதல்வர்கள் அடைந்த தோல்விக்குக் காரணம் தாங்கள் போரிடும் எதிரிகளின் திறனை அவர்கள் தவறாக எடைபோட்டதுதான் என்று கர்னல் ஜேம்ஸ்டாட் தமது ராஜபுதன வரலாற்று நூலில் தெளிவா

38

38. துரோகி!

19 January 2024
1
0
0

மலை அரசி தனது வளையல் கரங்களை நீட்டி தன்னைக் கைது செய்யும்படிக் கேட்டுக்கொண்டதும் காந்தோஜி தனது தம்பியின் மரணத்தையும் மறந்து வியப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே அடைந்தான். அப்பொழுதும் மலை அரசி வேட்டுவர

39

39. வேகம்! தாகம்!

19 January 2024
1
0
0

மேவாரின் தலைநகரான சித்தூரில் இருந்து தப்பி ஓடிவந்து லூனி ஆற்றின் உப்பு நீரில் தந்தையின் மரணத்துக்கு நீராடிய அதே துறையில், கிட்டத்தட்ட அதே இடத்தில் தங்கள் வம்ச துர்ப்பாக்கியத்துக்கும் அவப் பெயருக்கும்

40

40. அரசி ஆன, மலை அரசி!

19 January 2024
1
0
0

மலை அடிவாரப் புதரில் மலை அரசி மல்லாந்து கிடந்த கோலம் மண்டோர் மன்னனின் வெறியைக் கிளறிவிடவே, அவன் உலகத்தையே மறந்து, அதுவரை நேர்ந்த நிகழ்ச்சிகளால் மனம் ஏற்படுத்திய கட்டுப்பாடுகளையும் தடைகளையும் உதறி அவள்

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்