shabd-logo

2. விளக்கில் விரிந்த கதை

15 January 2024

0 பார்த்தது 0

வனப்பிரஸ்த ஜோகியின் மலைக்குகை வாயிலில், மரங்கள் அடர்த்தியாயிருந்ததால் இருள் கடுமையாக இருந்த அந்தப் பிராந்தியத்தில், பந்தத்தை கையில் ஏந்தி அதன் சுடர் முகத்தில் வீச சுடர்க்கொடியென்ற காரணப் பெயருக்கு முற்றும் பொருத்தமாய் விளங்கிய அந்த அழகு பிம்பத்தை திரும்பி நோக்கிய ராவ்ஜோடா அசைவற்று நின்றான் பல விநாடிகள். பந்தத்தின் ஜோதியில் பளபளத்த அவள் சந்திரபிம்ப முகத்தில் நக்ஷத்திரங்கள் போல் ஜொலித்த இரு கருவிழிகளையும் கண்ட மார்வார் ராஜபுத்திரன் நக்ஷத்திரங்களிலும் சில கறுப்பு நக்ஷத்திரங்கள் இருக்க வேண்டும் என்று நினைத்தான். அப்படி இருப்பதால்தான் அமுதத்தைக் சொட்ட வேண்டிய விழிகள் வெறுப்பு எனும் விஷத்தைத் தன்னை நோக்கி கக்குவதாக நினைத்தான். அவள் விசால வதனத்தின் சந்திரனையொத்த பொலிவு சற்றே சினத்தின் விளைவாக சிவந்து அவள் நெற்றியில் தீட்டியிருந்த குங்குமத்தின் சிவப்பை அர்த்தமற்றதாக செய்துவிட்டதையும், அவள் நுதலின் கீழே வளைந்து கிடந்த கருத்த புருவங்களிலும் எழுச்சியோ வேறெவ்வித அசைவுகளோ இல்லாததால் அவை தொடுக்க வேண்டிய மாரன் கணைகளுக்குப் பதில் அக்னிக் கணைகளை தொடுக்கத் தயாராயிருந்ததையும், அவள் முதலில் பேசியபோது சற்றே தெரிந்த முத்துப்பற்கள் உள்ளே நன்றாகக் கடிக்கப்பட்டதால் புடைத்திருந்த செழுமையான காட்டு மலர்போல் வழவழப்பு மண்டிய அழகிய சிவந்த கன்னங்கள் எத்தனையோ அழைப்புகளை விடுத்தாலும், எட்டா மலர்களைப்போல எச்சரிக்கைகளையும் விடுத்திருந்ததையும் கவனித்தான் ராவ்ஜோடா. அந்த சுந்தர முகத்துக்குத் தனி அரக்கு முத்திரை வைத்தது போலும், அரக்கு உருகும் சமயத்தில் லேசாக இளகும் பக்குவத்துடன் நீரோட்டம் கலந்தும், ஏதோ சிறிய தனி மலரொன்றை பங்கஜத்தை இயற்கை வேண்டுமென்றே பொருத்திவிட்டது போலும், தெரிந்த அமுதச்சுனை உதடுகள், அளவுக்கு மீறிய மயக்கத்தை உண்டு பண்ணியதையும், அதேசமயத்தில் அச்சத்தையும் வெளியிடுவதையும் பார்த்த மார்வார் இளவரசன் தனது உள்ளத்தில் சற்று ஏக்கமும் அடைந்தான்.
அவள் வெண்மைக் கழுத்தும் அதற்குக் கீழே புலப்பட்ட மேல் மார்பும், வர வர அது புடைத்து இரண்டாகப் பிரிந்து அவள் வாழ்ந்த மலையைப்போல திண்மையையும் அதன் உச்சியைப் போன்ற உச்சிகளையும் கொண்டு, மலையைப் பாதுகாக்கும் மரங்கள் அவற்றுக்கு தங்கள் பட்டையால் செய்த உடையைக் கொடுத்து காக்க முற்பட்டும் முடியாமல் திணறியதை அரசகுமாரன் கண்டான். அப்படி மறைக்க முடியாததால் மேலேயும் அடியிலும் சற்றே தெரிந்த இரட்டை இந்திரஜாலத்தின் மோகன விளிம்புகள் மரவுரியின் அந்த இடத்துக்குத் தனி மகிமையைக் கொடுத்திருப்பதையும், மார்புக்குக் கீழே உடையால் மறைக்கப்படாமல் தெரிந்த ஆலிலை வயிறும் சரேலென்று குறுகி பிறகு விரிந்து பாயும் புண்ணிய நதிகளைப் போலக் காட்சியளித்த இடையும், காட்சியளிக்காத பின்னழகுகளும், முன்புறத்தில் உறுதியாக நின்ற கால்களும், கண்ணுக்குப் புலனான ஆடுசதைகளின் திடமும் அந்த ராஜகுமாரனின் இதயத்தில் வெறியை ஊட்டினாலும், புலனாகாத இடங்களையும் சாமுத்திரிகா லட்சண சாஸ்திரம் புலப்படுத்திவிட்டதன் விளைவாக அவன் புத்தி பெருமயக்கம் கொண்டது. இத்தனையையும் பறக்க அடித்தது பல அர்த்தங்களை அள்ளிக் கொட்டிய அவள் புன்சிரிப்பு. அந்த புன்சிரிப்பில் கலந்த இகழ்ச்சியால் லேசாக வலதுபுறம் இழுபட்ட இதழ்களுக்கு மேலிருந்த கன்னத்தில், அவள் அழகிய நாசியின் வலது பக்கத்திலிருந்த நத்தின் வைரங்கள் சுடரொளியால் பலவித வண்ண ஜாலங்களைப் புள்ளி புள்ளியாகக் கன்னத்தில் இழைத்திருந்ததால் இயற்கை அவளுக்குப் புது நகை செய்து போட்டிருந்த பிரமையை அளித்தது. இதனால் கண்களில் வெறி வீச அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தான் மார்வார் இளவரசன்.
அந்த சமயத்தில் அவள் லேசாக நகைத்தாள். நகைப்பில் இன்பமும் இருந்தது; விஷமும் இருந்தது. அதனால் ராவ் ஜோடாவின் பொறுமையும் எல்லை மீறவே, “ஏன் நகைக்கிறாய்?” என்று வினவினான் சினத்துடன்.
அவள் விநாடி நேரந்தான் நிதானித்தாள். “உன் கண்களில் வெறி இருக்கிறது” என்று சொற்களை அச்சமின்றி உதிர்த்தாள்.
“அறிவு இருக்கிறது எனக்கு” என்று சீறினான் மார்வார் இளவரசன்.
“அதுதான் உபத்திரவம்” என்றாள் அந்தப் பெண். அப்படிச் சொல்லி சற்று நிமிர்ந்து நின்றாள்.
அப்படி நிமிர்ந்ததில் அரச தோரணை தெரிந்தது.
“இந்த மலைக்கு இவள் அரசியாயிருக்கத் தகுந்தவள்” என்று உள்ளூர சொல்லிக்கொண்ட ராவ்ஜோடா “நீ சொல்வது புரியவில்லை” என்றான் வெளிப்படையாக.
“உனக்கு அறிவு இருப்பதாகச் சொன்னாய். உன் கண்களில் நான் வெறியைப் பார்க்கிறேன். அறிவுடன் வெறி கலக்கும்போது நெறி புரண்டுவிடுகிறது. இல்லாவிட்டால் மலையில் தனியாக வாழும் ஒரு பெண்ணை இப்படி அலசிப் பார்த்திருக்கமாட்டாய் நீ” என்ற அந்த அழகி மீண்டும் நகைத்தாள்.
மேலும் நகைத்தான் ராவ்ஜோடா. “நீ யார்?” என்று வினவினான் இறுதியில் அவளை நோக்கி.
“குருஜீ சொல்லுவார். சீக்கிரம் கைகளைக் கழுவிவிட்டு வா” என்றாள் அவள். தூரத்திலிருந்த சுனையைத் தலையின் ஒரு அசைப்பினால் சுட்டிக் காட்டவும் செய்தாள்.
அதற்குமேல் ஏதும் பேசாமல் அருவியை நோக்கி நடந்தான் ஜோடா. அவன் புரவியும் அவனைத் தொடர்ந்து அவன் சுனையில் இறங்கியதும் கரையில் நின்றது, சுனை நீரை உற்று நோக்கிக்கொண்டு. அப்படி அருகில் வந்து நின்ற புரவியைத் திரும்பிப் பார்த்த ராவ்ஜோடா, “என்ன பார்க்கிறாய்? இதில் அவள் அழகு பிம்பம் தெரியாது. தெரிந்தாலும் பார்க்காதே. மேற்கொண்டு பாவத்தைச் சுட்டிக்கொள்ளாதே” என்று கூறிய அந்த மார்வார் வாலிபன், தனது கால் சராயைச் சுருட்டி விட்டுக்கொண்டு சுனையின் முனையில் இறங்கி தன் கை கால்களை நீரில் நன்றாகக் கழுவினான். முகத்திலும் நீரை வாரி அடித்துக்கொண்டு தன் அங்கியால் துடைத்துக்கொண்டான்.
அடுத்து ஒருமுறை குகை வாயிலில் நின்றிருந்த மோகினியை நோக்கினான். பிறகு புரவியின் கடிவாளத்தைப் பிடித்து அதை சுனையில் இறக்கி, நீரை வாரி இறைத்து அதன் நான்கு கால்களையும் முதுகையும் தேய்த்து நன்றாகக் கழுவினான். அவன் செய்கையால் குகை வாயிலில் நின்ற காரிகையின் முகத்தில் சினம் தெரிந்தது. பந்தத்துடன் நடந்து சுனையருகே வந்து, “இது புரவி குளிப்பாட்டும் இடமல்ல” என்றாள் சீற்றத்துடன்.
“அப்படியா!”
“ஆம்.”
“புரவி குளிப்பாட்ட?”
“வேறு இடமிருக்கிறது. இது....” அவள் சொற்களை முடிக்கவில்லை.
“இது?” என்று அவன் வினவினான்.
“நான் நீராடும் இடம்” என்றாள் அவள். அதுவரை உறுதியாயிருந்த அவள் குரலில் சிறிது தயக்கம் காணப்பட்டது.
ராவ்ஜோடா அவளை நோக்கினான் வியப்புடன். பிறகு சொன்னான், “புரவியை முழுதும் குளிப்பாட்டவில்லை. கால்களைத்தான் கழுவினேன்” என்று.
“அதன் கால்களைக் கழுவ இப்பொழுது என்ன அவசரம்?” என்று அவள் வினாவினாள் எரிச்சலுடன்.
“அதுவும் பாவி” என்றான் ராவ் ஜோடா.
“புரவியா?”
“ஆம். பாவியான என்னைத் தூக்கி வந்திருக்கிறது. குற்றவாளிக்கு உதவுகிறவர்களும் குற்றவாளிகள்தான்” என்ற ஜோடா புன்முறுவல் கொண்டான்.
அவன் தன்னைப் பார்த்து நகைக்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட அந்த மலைமகள் “சத்தியம் பேசுகிறாய். வா குகைக்கு” என்று சொல்லிவிட்டு திரும்பி நடந்தாள் குகையை நோக்கி. அப்படி நடந்தபோதும் அவள் பந்தத்தை இடக்கையில் செங்குத்தாகப் பிடித்திருந்ததால் அவள் பின்னழகு நன்றாகத் தெரிந்தது. எடுத்து முடிந்த குழல் மிக அடர்த்தியாயும் பருமனாயும் இருந்தது. மரவுரியால் சரியாக மறைக்கப்படாத முதுகு யவனர்களின் முக்கோணமான நீளக்கவசம் போலும், மறைக்கப்பட்டாலும் தெரிந்த பின்னெழுச்சிகள் அவள் வசித்த திண்மையான மலைப் பகுதிகள் போலும் அவள் சரீரத்தின் மேற்பகுதியையும் கீழ்ப்பகுதியையும் பிரித்த சிற்றிடை இரு பெரிய சுமைகளை இழுத்துப்போட்ட இரும்புக் கவசம் போலும் தெரிந்தது. அவற்றை எப்படி அந்த மலர்ப்பாதங்கள் தாங்கிச் செல்ல முடிந்தது? அதுவும் இயற்கையின் தனி சக்திதான், தனி விந்தைதான் என்று தீர்மானித்தான் மார்வார் இளவரசன்.
முன்னால் நடந்த அவள், சில அடி தூரம் நடந்ததும் பின்னால் கலவரம் ஏதும் கேட்காததால் தலையை மட்டும் திருப்பி அவனை நோக்கி “ரசனையின் பொருள், இடம், காலம், இவற்றைப் பிரித்துப் பார்ப்பதற்கு பகுத்தறிவு என்று பெயர். நாகரிகம் என்று சொல்வதுண்டு” என்று கூறினாள். அப்படியும் அவன் நகராதத்தால் “பாவத்தை வளர்த்துக் கொள்ளாதே. ஏற்கனவே செய்துள்ளது இன்னும் இரண்டு தலைமுறைகளுக்குப் போதும்” என்று சீறிவிட்டு வேகமாக நடந்துவிட்டாள். பிறகு அவனுக்காகக் காத்திராமல் குகைக்குள் நுழைந்து சென்றாள்.
அவள் உள்ளே சென்றுவிட்டதால் பந்தம் மறைந்துவிட்டதன் விளைவாக இருளின் முழு கருமை ஜோடாவையும் அவன் புரவியையும் வளைத்துக் கொண்டது. சில விநாடிகள் கழித்து குகைக்குள்ளிருந்து சின்னஞ்சிறு தீப வெளிச்சம் தெரியவே அதை அடையாளம் கொண்டு, புரவியை சுனைக்கரையிலேயே நிறுத்திவிட்டு, குகையை நோக்கி விரைந்தான் அந்த வாலிபன். குகையை அடைந்ததும் உள்ளே எட்டிப்பார்த்தான். வெளிச்சத்தைத் தவிர ஏதும் தெரியாததால் வியப்புடன் உள்ளே நடந்தான். குகையின் உட்புறம் மிகவும் குறுகலாயிருந்ததால் ஆஜானுபாகுவான ராவ் ஜோடா பெரிதும் வளைந்த கூனன் போல நடந்தான். பத்தடி தூரம் இம்சைப்பட்டு நடந்ததும் குகை சற்று இடது புறம் திரும்பியது. அந்த இடது புற மூலையில் மனிதன் என்று சொல்லக்கூடிய ஒரு எலும்புக்கூடு தெரிந்தது. அதைப் பெரிய தலைச்சடைகள் மூடியிருந்தன. அந்த உருவத்தின் எதிரில் ஒரு அகல் விளக்கு வைக்கப்பட்டிருந்தது. அந்த உருவத்தின் எதிரே ஒருபுறமாக குகையின் பாதையொன்றில் சாய்ந்து நின்றிருந்தாள் அந்த அழகி. ராவ் ஜோடாவின் வருகையைக் கண்டதும் அருகில் வரும்படி சைகை செய்தாள். பிறகு குனிந்து அந்த உருவத்தின் காதில் ஏதோ சொன்னாள். அதைக் கேட்டதும் மெல்ல நகைத்த அந்த உருவம், தனது தலையை உயர்த்தி சடைகளை பின்னுக்குத் தள்ளவே ஈட்டி போன்ற இரு கண்கள் ஆராய்ந்தன ராவ்ஜோடாவை. அவன் உட்காரலாமென்பற்கு அடையாளமாக மெல்லிய பளபளத்த கையொன்று அசைந்தது.
ஜோகியின் கண்களின் ஜொலிப்பையும், காயக்கிலே சத்தினால் தூய்மையான ரத்தம் சிவப்பாக ஓடியதால் சுருங்கியிருந்தாலும் பளபளத்த பொன்னிற தேகத்தையும் கண்ட ராவ்ஜோடா குகையின் தரையில், கடுமையான மலைப் பாறையில் நெடுஞ்சாண் கட்டையாக விழுந்து வணங்கினான். ஜோகி ஏதும் பேசவில்லை. அவர் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை.
“எழுந்திருக்கலாம். விளக்கின் எதிரே உட்காரலாம்” என்று அந்த பெண்ணே ஆணையிட்டாள்.
பதிலேதும் பேசாமல் எழுந்து விளக்குக்கு எதிரே உட்கார்ந்தான் ராவ்ஜோடா. அப்பொழுதுதான் ஜோகி சிறிது அசைந்து தனது வலது கையை நீட்டி, ஆள்காட்டி விரலால் அகலின் திரியைத் தூண்டினார். பக்கத்தில் கிடந்த பல இலைகளில் பச்சையாய் ஒன்றை எடுத்துக் கிள்ளி அதை எண்ணெயில் போட்டார். பச்சிலையும் விளக்குக்கு ஏதோ சக்தியை அளித்திருக்க வேண்டும். விளக்கு பெரிதாக சுடர்விட்டு எரிந்தது. அந்தச் சுடர் மெள்ள பட்டையாக விரிந்தது. அதில் விரிந்தது பெருங்கதை.

சாண்டில்யன் மூலம் மேலும் புத்தகங்கள்

40
கட்டுரைகள்
மலை அரசி
0.0
மாலை அரசி தமிழ் மொழியில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான வரலாற்று நாவல். பிரபல தமிழ் எழுத்தாளர் சாண்டில்யன் இந்த மனதை மயக்கும் புத்தகத்தை எழுதியுள்ளார். சாண்டில்யன் வரலாற்றுப் புனைகதைகளுக்காகப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார், மேலும் அவர் தனது வரலாற்று, காதல் மற்றும் சாகச நாவல்களுக்காக நன்கு அறியப்பட்டவர், இது பெரும்பாலும் சோழ மற்றும் பாண்டிய பேரரசுகளின் காலங்களில் அமைக்கப்பட்டது.
1

1. சுடர்க்கொடி

15 January 2024
0
0
0

சரித்திரம், பூமி, வாழ்க்கையின் கர்ம பலன்கள் ஆகிய சகலத்திலும் ஒரு சுழற்சியும் தொடர்ச்சியும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுவதில் எத்தனை உண்மையிருக்கிறதென்பதை, சுற்றிலும் தன்னை எரித்துக்கொண்டிருந்த மணற்பரப்

2

2. விளக்கில் விரிந்த கதை

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் மலைக்குகை வாயிலில், மரங்கள் அடர்த்தியாயிருந்ததால் இருள் கடுமையாக இருந்த அந்தப் பிராந்தியத்தில், பந்தத்தை கையில் ஏந்தி அதன் சுடர் முகத்தில் வீச சுடர்க்கொடியென்ற காரணப் பெயருக்கு முற

3

3. துணைவன்!

15 January 2024
0
0
0

விரிந்து படர்ந்து எரிந்த விளக்கின் சுடரை விந்தைக் கண்களுடன் நோக்கிய ராவ்ஜோடா. அதில் விரிந்த கதையைக் கண்டதும் மெய்சிலிர்த்துப் போனான். முதலில் அந்தச் சுடரில் ஏதும் தெரியாததால் புரியாமல் விழித்த மார்வ

4

4. இரு விந்தைகள்

15 January 2024
0
0
0

மலை அரசியின் மதுர இதழ்களில் இருந்து உதிர்ந்த அந்தக் கொடுமையான சொற்களைக் கேட்டதும், வியப்பும் அச்சமும் கலந்த உணர்ச்சிகள் ராவ்ஜோடாவின் இதயத்தை மளடுருவிச் சென்றன. அப்படி அவன் நடுங்கியதை பக்கத்தில் உட்கார

5

5. நான் வருவேன்

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் குகையைவிட்டு வெளியேறிய மலை அரசி, வேகமாக மலையின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடந்து சென்றதும், விளைவித்த இரண்டு விந்தைகளும் மகாவீரனான மார்வார் இளவரசனை திகில் கொள்ளச் செய்தன என்றால்,

6

6. பெண் துணை!

15 January 2024
0
0
0

பெண்ணின் லாவண்யத்தால் ஆண்மகன் அறிவு அழிந்துவிடுகிறது. கவர்ச்சியான கன்னியின் முன்பாக எந்த ஆண்மகனும் சுயபுத்தியை இழந்துவிடுகிறான். இந்தப் பழைய நிகழ்ச்சிகளுக்கு அத்தாட்சியாக நின்றான் ராவ்ஜோடா. “உனது வீ

7

7. சாகுந்தலம்

16 January 2024
1
0
0

பந்தத்தையும் அணைத்துவிட்டு இருண்ட குகைக்குள் தன்னை வா வா என்று அழைத்த அந்த பருவப் பாவையின் துணிவை நினைத்து ஜோடா திகிலுக்கு இலக்காகி நின்ற நேரத்தில், மலைஅரசியே குகை வாயிலைவிட்டு அவனை அணுகி, அவன் கையைப்

8

8. காட்டு மலர்

16 January 2024
1
0
0

பாவின் வாலிப முரட்டு முகம் அவள் வழவழத்த கழுத்தில் திடீரென அழுந்திப் புரண்டபோது, மலை அரசியின் இதயமும் அந்த வாலிபன் உள்ளத்தைப்போலவே உணர்ச்சி அலைகளில் உருண்டது. அத்தனை உணர்ச்சி எழுச்சியிலும் அரசகுமாரன்

9

9. நிலையற்ற அரசு

16 January 2024
1
0
0

மலை அரசியை “காட்டு மலர்” என்று குறிப்பிட்டதோடு தனது பேச்சை ஜோடா நிறுத்திக்கொண்டு இருந்தால் ஜகத்சிம்மனின் கோபம் தலைக்கு ஏறியிருக்காது. “இவள் மார்வார் ராணி” என்றும் சொல்லவே ஜகத்சிம்மனுக்கு கோபத்துடன் தி

10

10. பறந்த கிளி! தொடர்ந்த துன்பம்!

16 January 2024
1
0
0

மலை அரசியின் சொற்களோ உத்தரவுகளோ மந்திராலோசனை சபையில் இருந்தவர்களுக்குக் கட்டோடு பிடிக்காதிருந்தாலும் அவள் சொன்னதற்கு எல்லாம் ஜோடா தலையை ஆட்டியதால், அவள் கட்டளைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் எல்லோருமே முன

11

11. மண்டோர் ரணகளம்

16 January 2024
1
0
0

மண்டோரின் பெரும் கதவுகள் சாத்தப்பட்டதாலும் போர்முரசு பலமாக ஒலித்ததாலும் வருவது என்னவென்பதை அறிந்த புது மகாராஜாவான ராவ்ஜோடா, புரவியின் கடிவாளத்தை பிடித்த நிலையிலேயே திகைத்து அமர்ந்துவிட்ட சமயத்தில் மலை

12

12. குகையில்...!

16 January 2024
1
0
0

பெற்றோர் புரிந்த பாவம் சிலரைப் பிடித்து வாட்டுகிறது. உற்றார் செய்த பாவமும் சிலரை விடுவதில்லை. பெற்றோரும் உற்றாரும் விளைவித்த பாவங்களுக்கு எப்பாவமும் அறியாத ஜோடா இலக்கானான். பேரனான மோகுல சிம்மனை சீராட்

13

13. அவள் கனவு!

16 January 2024
1
0
0

மலை அரசியைப் பார்த்து மார்வார் இளவரசனாயிருந்து அரசனாகி, நாட்டையும் பறிகொடுத்த ராவ்ஜோடா, அத்தகைய ஒரு கேள்வியைக் கேட்டான் என்றால், அதற்கு மூலகாரணம் அவளுடைய விபரீதமான பதில்தான். “நாம் தனித்திருப்பது உனக்

14

14. தண்டனை!

17 January 2024
1
0
0

மலை அரசியை தரையில் கிடத்திவிட்டு குகையின் வாயிலுக்கு வந்த ராவ்ஜோடாவின் செவிகளில் ஜகத்சிம்மனும் மற்ற வீரர்களும் ஏறிவந்த புரவியின் குளம்படி ஒலிகள் கூடக் கேட்கவில்லை. குகைக்கு உள்ளே மலை அரசியின் அருகாமைய

15

15. ஹர்பா சங்க்லா!

17 January 2024
0
0
0

மலை அரசியால் மன்னிக்கப்பட்டு ஜோடாகிருக்குச் செல்லும்படி பணிக்கப்பட்ட ஜகத்சிம்மன் உடனடியாகத் திரும்பவில்லை தனது புரவியை நோக்கி நின்ற இடத்திலேயே அசைவற்று நின்றான் பல விநாடிகள். பிறகு சட்டென்று வேகமாக நட

16

16. அந்தி வானம்

17 January 2024
0
0
0

அதிர்ஷ்டம் என்பது ஒரு மனிதனைப் பிடித்துக்கொண்டால் அவனை அது லேசில் விடுவது இல்லை. கூடியவரையில் விடாமல் தொடர்கிறது. துரதிர்ஷ்டக்காரனுக்கு புத்தி பேதலிக்கிறது. காலம் கைகொடுப்பது இல்லை. எதையும் காலங்கடந்த

17

17. வாளின் கதை!

17 January 2024
0
0
0

ஜோடாவைப்பற்றி விசாரித்ததும் மலை அரசியின் மதிமுகம் அந்திவானம் போல் சிவந்துவிட்டதைக் கண்டதுமே நைஷ்டிக பிருமச்சாரியும், எந்தப் பெண்ணையும் கண்ணெடுத்துப் பார்க்காதவரும், பிருமச்சாரி விரதம் கெடக்கூடாது என்ப

18

18. தேடி வந்த அதிர்ஷ்டம்!

17 January 2024
0
0
0

மார்வார் மன்னனையும் மலைக்க வைத்த அந்த விசித்திரக் கதையைச் சொல்லுமுன்பு பிருமச்சாரி அந்தச் சிறு வீட்டின் முற்றத்தை வளைத்திருந்த சுற்றுக் கட்டடத்தின்மீது உட்கார்ந்து கீழ் இருந்த முற்றத்தில் தமது கால்களை

19

19. பாலைவனக் கூடாரம்

17 January 2024
0
0
0

இரவு தந்த இருளில், மலைக்காடு வீசிய இதமான காற்றில், சாளரத்துக்கு அருகில் இருந்த மகிழ மரம் பரவவிட்ட சுகந்தத்தின் சூழ்நிலையில், மலை அரசியை சூழ்ந்து நெருக்கிய ஜோடாவின் கரங்கள் நெருக்கியதோடு நில்லாமல் இன்ப

20

20. கரிய புரவி! கழுத்தில் ஈட்டி!

18 January 2024
0
0
0

ஜோடாவின் பரம விரோதியான சந்தசிம்மனின் மூத்த மகன் காந்தாஜி தன் வாளை உருவிக்கொண்டு ராவ் ஜோடாவை அணுகுவதற்கு முன்பே ஜோடா பிருமச்சாரியளித்த தனது பெரிய வாளை உருவி எதிரியைத் தடுத்தான். அவனைச் சேர்ந்த பத்து பத

21

21. மலைச்சாரல் ஓசை

18 January 2024
0
0
0

கழுத்தில் பதித்திருந்த ஈட்டி சற்றும் அசையாமல் இருந்தாலும் அதில் ஒரு திடமும், ஈட்டியைப் பிடித்திருந்தவன் கையில் ஈவு இரக்கமற்ற ஓர் உறுதியும் இருந்ததைக் கவனித்த ராவ்ஜோடா, தான் சிறிது அசைந்தாலும் அந்த ஈட்

22

22. பரீட்சை

18 January 2024
0
0
0

பாபுஜியின் நூறு புரவிகள் ஏதோ பெரும் புயலைப் போல் மலைச்சரிவில் வந்ததாலும், அவை கண்ணிமைக்கும் நேரத்தில் தனது புரவியில் இருந்து தன்னை வீழ்த்திவிட்டதாலும் மலைப்பாறையில் புரண்ட ஜோடா வெகு துரிதமாகப் பாறையில

23

23. அடவியில் ஒரு காட்சி!

18 January 2024
0
0
0

நீண்டநாள் பிரிந்த மகனை ஆர்வத்துடன் தழுவும் தந்தை போல ஜோடாவை பல விநாடி தழுவி நின்ற பாபுஜி, கடைசியில் அவனுக்குத் தமது கைகளில் இருந்து விடுதலை அளித்தபோது அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் இரண்டு தே

24

24. காதல் பாபமா?

18 January 2024
0
0
0

அடர்ந்த அந்த அடவிக்குள் நாலைந்து பங்கஜங்களை நீர்மட்டத்துக்குமேல் காட்டிக்கொண்டிருந்த சிறு வாவியின் கரையில் மலை அரசியும் ஜோடாவும் உட்கார்ந்திருந்த நிலையைக் கண்டதும் இரண்டு பிருமச்சாரிகளும் தங்கள் பிரும

25

25. ஜோடாவின் துணிவு!

18 January 2024
0
0
0

பாபுஜியும், பிருமச்சாரியும் விழிப்பதைப் பார்த்த ஜோடா, “உங்கள் இருவருக்கும் வரவர சுயநம்பிக்கை போய்விட்டது” என்று ஓர் அம்பை வீசினான். அதுவரை தாங்கள் கண்ட காட்சியால் குழப்பத்தில் இருந்த இரு பிருமச்சாரி

26

26. சாவுகாரைப் பிடித்த சனியன்!

18 January 2024
0
0
0

மண்டோர் அரசின் முதலமைச்சராயிருந்து, சந்தசிம்மன் ஆக்கிரமிப்புக்குப் பின்பு அந்தப் பதவியில் இருந்து விலகி, அரண்மனையில் தமக்கு முன்னாள் மன்னனால் அளிக்கப்பட்டு இருந்த இடத்தையும் சந்தசிம்மனிடம் ஒப்புடைத்து

27

27. அடைத்த கதவு!

18 January 2024
0
0
0

காந்தோஜியின் குறுவாள் அழுந்தியதாலும், எச்சரிக்கையாலும், அவன் பின்னால் நின்றிருந்த மஞ்சாஜியின் உதடுகளில் துளிர்த்திருந்த குரூரப் புன்முறுவலாலும், சாவுகார் அஞ்சி நடுநடுங்கிவிடுவார் என்றோ, முன்னே நடந்துவ

28

28. வேடர் குடிசை மர்மம்!

18 January 2024
0
0
0

கோட்டைக் காவலன் சொன்ன செய்தியால் மலைத்த இருவரில் சாவுகாரே முதலில் திகைப்பை உதறிக்கொண்ட தன்றி சமயாசந்தர்ப்பம் தெரியாமல் கோப்தையும் காட்டினார். “காவலனே! வணிகர்களைத் தடை செய்யும் வழக்கம் மார்வாரில் கிடைய

29

29. உள்ளே ஒரு பெண் குரல்!

18 January 2024
0
0
0

அன்று பகல் முழுவதும் மார்வார் படைத்தலைவனான ஜகத்சிம்மனுக்கும் மண்டோர் கோட்டை காவலனுக்கும் உணவு முதலிய விஷயங்களில் ராஜோபசாரம் நடந்தாலும், அவ்விருவரும் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் எந்த வேடனும் நேரடியாக ப

30

30. ஜோடாவின் துன்மார்க்கம்!

19 January 2024
1
0
0

மூன்று குணங்களை மனிதன் தவிர்ப்பது நல்லது. தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் அக்கறை காட்டுவது, ஒன்று. ஒட்டுக் கேட்பது, இரண்டு. காலதாமதம் செய்வது, மூன்று. இந்த மூன்றில் ஏதாவது ஒரு குணமே யாரையும் இக்கட்ட

31

31. மணக்கோலம்!

19 January 2024
1
0
0

வீரனாகப் படைகளை இயக்கி, இழந்த அரசை மீட்பதில் சித்தத்தை செலுத்த வேண்டிய மார்வார் மன்னன், கேவலம், பெண் மோகம் கொண்டவனாகக் குடிசையில் மறைந்து கொண்டு காலத்தை ஓட்டுவதை நினைத்த ஜகத்சிம்மன் வேடவர் குடிசைக் கூ

32

32. சந்திர முகம்

19 January 2024
1
0
0

மண்டோர் படைத்தலைவனான ஜகத்சிம்மன் தனது மன்னனின் திருமணத்தையே நிறுத்த முயன்றதும், அதற்காகக் கூச்சலிட்டதும் பலருக்கு கோபத்தையும் சிலருக்கு வியப்பையும் உண்டாக்கினாலும், பிருமச்சாரி ஹர்பாசங்க்லாவோ, திருமணப

33

33. இழந்த சொர்க்கம்

19 January 2024
1
0
0

ராவ்ஜோடாவின் அணைப்பில் இருந்த அழகியின் சந்திர வதனத்தைக் கண்டதும் ஜகத்சிம்மன் திகைப்பும் அதிர்ச்சியும் ஒருங்கே அடைந்தான் என்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. அந்த முகம் மலை அரசியின் முகம்! முகத்

34

34. பதவி இறக்கம்!

19 January 2024
1
0
0

மலை அரசியின் மறுபிம்பம் போன்ற மின்னிடையாளுடன், ஜோடா கலந்து விளையாட இருந்த சமயத்தில் பிருமச்சாரி ஹர்பாசங்கலா அங்கு தோன்றியதும் கதவைத் தட்டியதும் பரமானந்தமாயிருந்தது, மண்டோர் படைத்தலைவன் ஜகத்சிம்மனுக்கு

35

35. மீண்டும் வந்தாள்!

19 January 2024
1
0
0

மண்டோரின் படைத்தலைவனாக இருந்த தன்னை திடீரென உபதளபதியாக்கிவிட்ட மன்னன் செயலைக் கண்டு மனம் துடித்த ஜகத்சிம்மன் அந்த அவமானத்தில் இருந்து எப்படி மீளலாம் என்று சிந்தித்தான். அது தவிர இந்த திடீர் பதவி இறக்க

36

36. மண்டோர் சமர்

19 January 2024
1
0
0

கேவலம், ஒரு பெண், புரவியில் இருந்து இறங்க, அவள் காலுக்குப் படியாக தனது இரு கைகளையும் கோத்து நீட்டிய பிருமச்சாரியிடம் பெரிதும் வெறுப்புக் கொண்டான், ஜகத்சிம்மன். பிருமச்சாரி உண்மையில் பெரும் போலி பிருமச

37

37. மணலில் தோய்ந்த ரத்தம்

19 January 2024
1
0
0

மண்டோர் போரில் மாவீரர்களான சந்தசிம்மன் புதல்வர்கள் அடைந்த தோல்விக்குக் காரணம் தாங்கள் போரிடும் எதிரிகளின் திறனை அவர்கள் தவறாக எடைபோட்டதுதான் என்று கர்னல் ஜேம்ஸ்டாட் தமது ராஜபுதன வரலாற்று நூலில் தெளிவா

38

38. துரோகி!

19 January 2024
1
0
0

மலை அரசி தனது வளையல் கரங்களை நீட்டி தன்னைக் கைது செய்யும்படிக் கேட்டுக்கொண்டதும் காந்தோஜி தனது தம்பியின் மரணத்தையும் மறந்து வியப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே அடைந்தான். அப்பொழுதும் மலை அரசி வேட்டுவர

39

39. வேகம்! தாகம்!

19 January 2024
1
0
0

மேவாரின் தலைநகரான சித்தூரில் இருந்து தப்பி ஓடிவந்து லூனி ஆற்றின் உப்பு நீரில் தந்தையின் மரணத்துக்கு நீராடிய அதே துறையில், கிட்டத்தட்ட அதே இடத்தில் தங்கள் வம்ச துர்ப்பாக்கியத்துக்கும் அவப் பெயருக்கும்

40

40. அரசி ஆன, மலை அரசி!

19 January 2024
1
0
0

மலை அடிவாரப் புதரில் மலை அரசி மல்லாந்து கிடந்த கோலம் மண்டோர் மன்னனின் வெறியைக் கிளறிவிடவே, அவன் உலகத்தையே மறந்து, அதுவரை நேர்ந்த நிகழ்ச்சிகளால் மனம் ஏற்படுத்திய கட்டுப்பாடுகளையும் தடைகளையும் உதறி அவள்

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்