shabd-logo

38. துரோகி!

19 January 2024

2 பார்த்தது 2

மலை அரசி தனது வளையல் கரங்களை நீட்டி தன்னைக் கைது செய்யும்படிக் கேட்டுக்கொண்டதும் காந்தோஜி தனது தம்பியின் மரணத்தையும் மறந்து வியப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே அடைந்தான். அப்பொழுதும் மலை அரசி வேட்டுவர் உடையையே அணிந்திருந்ததால், காந்தோஜி அவள் கையில் காட்சியளித்த மங்கல கங்கணத்தை மட்டுமின்றி, கழுத்தில் துலங்கிய மங்கல சூத்திரத்தையும் பார்க்க முடிந்தது.
அவற்றில் இருந்து மலை அரசி ராவ்ஜோடாவுக்கு மாலையிட்ட மனைவி என்பதை உணர்ந்த காந்தோஜி மலை அரசியை உற்று நோக்கி, “மகாராணி! மேவார் அரச குமாரர்கள் இன்னும் பெண்களைச் சிறை செய்யும் அளவுக்குத் தாழ்ந்து விடவில்லை. ஆனால், பின்வாங்கிச் செல்லும் படைமீது விழுந்து அழிக்க முயலும் ராஜபுத்திரனை, அதாவது மண்டோர் மன்னனை நாங்கள் விட்டுச் செல்ல முடியாது” என்று கூறினான்.
இதைக் கேட்ட மலை அரசியின் கண்களில் துன்பச் சாயைக்குப் பதில் அனுதாபத்தின் சாயையே விரிந்தது.
“காந்தோஜி! மன்னர், பிருமச்சாரியுடன் உங்களைத் தனியாக அணுகியிருக்கிறார் என்பதில் இருந்து ஏதும் புரியவில்லையா உங்களுக்கு?” என்று வினவினாள் மலை அரசி.
“என்ன புரிய வேண்டும்?” என்று சற்று கோபத்துடன் வினவிய காந்தோஜி மணலில் இருந்து பிருமச்சாரியால் தூக்கப்பட்ட தம்பியின் சடலத்தின் மீது தனது கண்களை ஓட்டினான்.
இதற்கு மலை அரசி பதில் சொல்லுமுன்பு பிருமச்சாரியே முந்திக்கொண்டார்.
“காந்தோஜி! இந்தப் போர் மூள்வதற்கு முன்பே, நீங்கள் பின்வாங்கும் பட்சத்தில் உங்களை துரத்தக் கூடாது என்றும், மண்டோர் மண்ணில் மேவார் ரத்தம் எதுவும் சிந்தக்கூடாது என்றும் மண்டோர் மன்னர் திட்டவட்டமாக உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். அதையும் மீறி வந்தான் ஜகத்சிம்மன். அதற்குக் காரணமும் இருக்கிறது. அவன் மேவாருக்கும் துரோகி; மண்டோருக்கும் துரோகி. ராஜபுதனத்தை அழிக்க வந்த கோடரிக்காம்பு அவன். அவன் மீது குறுவாளை வீசியது ராவ்ஜோடாதான். இதோ என் கையில் இருக்கும் உன் தம்பியின் சடலத்தின்மீது ஆணையாகச் சொல்கிறேன்” என்றார் பிருமச்சாரி. அத்துடன் மஞ்சாஜியை மேவார் வீரர்களிடம் ஒப்படைத்துவிட்டு மண்ணில் பொய் மயக்கம் கொண்டு கிடந்த ஜகத்சிம்மனைத் தூக்கி நிற்க வைத்தார்.
“இவன் காயம் அற்பமானது. இவனை விசாரணைக்குக் கொண்டுவர வேண்டும் என்றே ஜோடா தமது குறுவாளை இவன் இடைக்குக் குறி வைத்தார்” என்று கூறி அந்தக் குறுவாளைப் பிடுங்கி மன்னனிடம் கொடுத்து ஜகத்சிம்மன் காயத்துக்குக் கட்டும் கட்டினார்.
சுற்றிலும் தனது வீரர்களும் மேவார் வீரர்களும் நிற்க, பிருமச்சாரியால் பலவந்தமாகத் தூக்கி நிறுத்தப்பட்ட ஜகத்சிம்மன் மிரள மிரள விழித்தான் ஒரு விநாடி. பிறகு தைரியமாகக் கேட்டான், “நான் செய்ததில் தவறு என்ன?” என்று.
“பின்வாங்கிய எதிரிகளைத் துரத்தியது; மன்னர் உத்தரவுக்கு எதிராக நடந்து கொண்டது” என்றாள் மலை அரசி.
“இதில் தவறு என்ன? முன்பு ராவ்ஜோடா சித்தூரில் இருந்து தப்பி ஓடி வந்தபோது மேவார் வீரர்கள் அவரைத் துரத்தி வரவில்லையா? அவர்களைத் தலைமை வகித்து நடத்தி வந்ததும் சந்தசிம்மன் புதல்வர்கள்தானே?” என்று கேள்வியை வீசினான் ஜகத்சிம்மன்.
காந்தோஜியின் கண்கள் குறுகின ஒரு விநாடி. பிறகு, “ராவ்ஜோடா தப்பி ஓடியதைச் சொல்லி துரத்தச் சொன்னது நீதானே?” என்று கேட்டான் ஜகத்சிம்மனை நோக்கி காந்தோஜி.
“கதை நன்றாகத் தொடர்கிறது” என்றான் ராவ்ஜோடா.
“என்ன கதை ஜோடா” பிருமச்சாரி வினவினார் சிறிது சந்தேகத்துடன்.
ஜோடா, ஜகத்சிம்மனைக் கூர்ந்து நோக்கினான்.
“என் தந்தை வெட்டப்பட்டதை அறிவித்து சித்தூரைவிட்டு என்னை ஓடச் சொன்னவனும் ஜகத்சிம்மன்தான்” என்ற ராவ்ஜோடா, மேலும் சொன்னான், “அதுமட்டுமல்ல! என்மீது பிருமச்சாரிக்குப் பகை உண்டாக்க முயன்றவனும் இவன்தான். எனக்கும் இன்னொரு பெண்ணுக்கும் உறவு உண்டு என்று சொல்லி எங்கள் திருமணத்தையும் நிறுத்தப் பார்த்தான் இவன்” என்று சொல்லி மலை அரசியை நோக்கினான்.
“ஆம். இவன் மகா துரோகி” என்றாள் மலை அரசி.
அந்தக் குரலைக் கேட்ட ஜகத்சிம்மன் தேள் கொட்டியவன்போல் துள்ளினான். “இவள் மலை அரசி அல்ல, இவள்தான் அந்த வேட்டுவச்சி” என்று கூவினான்.
அப்பொழுதும் மலை அரசி மசிந்தாள் இல்லை.
“இவன் மகா துரோகி” என்று இரண்டாம் முறை சொன்னாள்.
இம்முறை பேயறைந்தவன்போல் நின்றான். “இவள் மலை அரசிதான்; சந்தேகமில்லை. இந்தக் குரல் மலை அரசியுடையதுதான். இவள் அவள் அல்ல” என்று உளறினான்.
“எவள் எவளல்ல?” என்று சீறினான் காந்தோஜி.
“ஆம். சொல் ஜகத்சிம்மா?” என்று மரியாதையை விட்டுப் பேசினாள் மலை அரசி.
இதைக் கேட்டதும் திகைத்தான் ஜகத்சிம்மன்.
“இந்தக் குரல் வேட்டுவப் பெண்ணுடையது....” என்று கூறிய மண்டோர் படைத் தலைவன் “அடி மோசக்காரி! நீயே இரண்டு குரலில் பேசி என்னை மோசம் செய்தாயா?” என்று அவள்மீது பாயப் போனான்.
அவன் ஊட்டியை காந்தோஜியின் வாள் தடவி நின்றது.
“நில் அப்படியே. இல்லையேல் பிணமாகிவிடுவாய்” என்று காந்தோஜியின் குரலும் கடுமையாக ஒலித்தது. அதனால் நின்ற இடத்தில் ஜகத்சிம்மன் நின்றுவிடவே காந்தோஜி வினவினான், “ராவ் ஜோடா! மலை அரசி எதற்காக இரு குரலில் பேசுகிறாள்?” என்று.
“ஜகத்சிம்மன் துரோகி என்பதை நான் அறியுமுன்பே இவள் அறிந்து இருந்தாள். என்னிடமும் சொன்னாள். நான் நம்பவில்லை. என்னை நம்பவைக்க இரட்டைப் பிறவியாக நடித்தாள், பேசினாள். அது புதிதும் அல்ல. இவளுக்கு ஜோகியின் குகைக்கு அருகே உள்ள காடுகளில் பறவைகளுடனும் மிருகங்களுடனும் பழகியிருக்கிறாள். அந்தப் பறவைகளின் மொழி இவளுக்குப் பழக்கம். ஆகையால் குரலை மாற்றிப் பேசுவது இவளுக்கு ஒரு கஷ்டமல்ல” என்ற ராவ்ஜோடா, “ஜகத்சிம்மன் முதலில் என்னை ஓடவைத்தான் சித்தூரில் இருந்து. என்னைக் கோழையென பறைசாற்றினான். பிறகு எனக்காக வேவு பார்ப்பதாகச் சொல்லி மண்டோர் நகரிலும் வசித்தான். ஆனால் அங்கு எனக்கு எதிராகப் பிரசாரம் செய்துகொண்டு இருந்தான். இவன் அறிவிக்காவிட்டால் நான் மாளிகையில் இருந்தது மேவார் வீரர்களுக்குத் தெரிய நியாயமில்லை. பலவித நாடகங்கள் ஆடினான், சதி செய்தான், மலை அரசியையும் என்னையும் பிரிக்க முயன்றான்” என்று விளக்கினான்.
“பொய்! பொய்! முழுவதும் கட்டுக்கதை” என்று கூவினான் ஜகத்சிம்மன். ஆனால் அவன் முகம் அவன் சொல்வது பொய் என்பதைத் தெளிவாகக் காட்டியது. மண்டோர் படைத்தலைவன் முகத்தில் அச்சமும் விவரிக்க இயலாத வெறுப்பும் கலந்து தாண்டவமாடின.
“இந்த ஜோடா ஒரு கோழை, இவன் ஓடியதற்கு நான் பொறுப்பாளி அல்ல” என்றும் பதற்றத்துடன் பேசினான் ஜகத்சிம்மன்.
மன்னனிடம் அடியோடு மரியாதையைக் கைவிட்டு ஜகத்சிம்மன் பேசியதை அனைவரும் கவனித்தனர். ஆனால் வேறு யாரும் அவனுடன் பேசவில்லை. காந்தோஜியே கேட்டான், “எதற்காக நீ மண்டோரின் துரோகியாக மாறினாய்?” என்று.
“காரணம் நான் சொல்கிறேன்” என்ற ஜோடாவின் குரல் பயங்கரமாக ஒலித்தது.
“சொல் ஜோடா. இத்தனை நாள் நீ அடக்கி வைத்திருந்த உண்மை வெளிவரட்டும்” என்று ஊக்கினார் பிருமச்சாரி.
ஜோடா சிறிது தயங்கினான். பிறகு மெதுவாகச் சொன்னான், “மண்டோர் அரியணைக்கு எனக்கு அடுத்த வாரிசு ஜகத்சிம்மன்” என்று.
ஜோடா சொன்னது உண்மை என்பதற்கு சாட்சியம் தேவையில்லாமல் இருந்தது. ஜகத்சிம்மன் முகத்தில் சாட்சியம் எழுதி ஒட்டியிருந்தது. காந்தோஜி அந்த சமயத்தில் கேட்டான் கோபத்துடன், “என் வாளை இவன் கழுத்தில் இப்படியே அழுத்திக் கொன்றுவிடட்டுமா?” என்று.
“வேண்டாம்” என்றான் ஜோடா.
“ஏன்?” காந்தோஜியின் குரலில் வியப்பும் இருந்தது, வெறுப்பும் இருந்தது.
ஜோடா சொன்னான்: “முதலில் வீரனான மஞ்சாஜியின் ரத்தம் சிந்திய இடத்தில் இந்த துரோகியின் ரத்தம் சிந்தக்கூடாது. இந்த இடத்தில் மஞ்சாஜியின் நினைவுச் சின்னமாக நான் பெரிய வெற்றித்தூணைக் கட்டப்போகிறேன். தவிர இவன் மாளவேண்டியது என் கையால்.”
அத்துடன் ஜோடா தனது வாளை உருவிக்கொண்டான்.
“பிருமச்சாரி! இந்தத் துரோகியை நான் செல்லும் இடத்திற்கு அழைத்து வாருங்கள். எங்கள் சண்டையை லூனி ஆற்றங்கரையிலேயே தீர்த்துக்கொள்கிறோம்” என்று கூறி நதியின் கரையோரமாக நடந்து சென்றான்.
அவன் தீர்மானித்த இடத்தில் நின்றதும் ஜகத்சிம்மன் கையில் அவன் வாளும் கொடுக்கப்பட்டது.
ஜகத்சிம்மன், ஜோடா தயார் ஆகுமுன்பே அவன்மீது பாய்ந்தான் தனது வாளை உருவிக்கொண்டு. அதை அனாயாசமாகத் தடுத்த ஜோடா அந்த இரவில் பயங்கரமாக நகைத்தான்.
“உன்னிடம் நான் எதிர்பார்த்தேன் இதை” என்றும் கூறினான் நகைப்பின் ஊடே. பிறகு இருவருக்கும் மிகப் பயங்கரமாக சண்டை தொடர்ந்தது.
ஜகத்சிம்மன் பாய்ந்தும் முரட்டுத்தனமாகவும் போரிட்டான். அதனால் பலமுறை ஜோடாவின் வாள் முனையின் எல்லைக்குள் வந்தான். ஆனால், ஜோடா அவனைக் கொல்ல மறுத்தான். முதலில் ஜோடாவின் வாளின் நுனி ஜகத்சிம்மனின் ஒரு கண்ணில் பாய்ந்தது. பிறகு இந்திரஜாலம்போல் சுழன்று ஒரு காதை அறுத்து எறிந்தது. பிறகு மூக்கின் நுனியை மட்டும் சீவித் தள்ளியது. அடுத்து எதிரியின் உதடுகள் நடுவில் வெட்டப்பட்டன. கன்னத்தில் ஆழமான ஒரு காயம். அடுத்து ஜகத்சிம்மன் வாள் ஆகாயத்தில் பறந்தது. இத்துடன் போரை முடித்த ஜோடா “உன் உயிரைக் கொடுத்துவிட்டேன். போ” என்று வெறுப்புடன் கூறினான்.
அடுத்து நடந்தது யாரும் எதிர்பாராதது. ஜகத்சிம்மன் தனது குறுவாளைக் கச்சையில் இருந்து எடுத்து தனது வயிற்றில் புதைத்துக்கொண்டான். பிறகு, தள்ளாடி நடந்து லூனியின் உப்பு நீரில் விழுந்தான். அவன் குருதி உப்பு நீரில் கலந்து அதை செந்நீர் ஆக்கியது. விதியின் விந்தையை நினைத்து வியந்தான் ராவ் ஜோடா. மேவாரில் இருந்து வந்த போது அதே இடத்தில்தான் அவன் முதன் முதலாக இறங்கினான்.

சாண்டில்யன் மூலம் மேலும் புத்தகங்கள்

40
கட்டுரைகள்
மலை அரசி
0.0
மாலை அரசி தமிழ் மொழியில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான வரலாற்று நாவல். பிரபல தமிழ் எழுத்தாளர் சாண்டில்யன் இந்த மனதை மயக்கும் புத்தகத்தை எழுதியுள்ளார். சாண்டில்யன் வரலாற்றுப் புனைகதைகளுக்காகப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார், மேலும் அவர் தனது வரலாற்று, காதல் மற்றும் சாகச நாவல்களுக்காக நன்கு அறியப்பட்டவர், இது பெரும்பாலும் சோழ மற்றும் பாண்டிய பேரரசுகளின் காலங்களில் அமைக்கப்பட்டது.
1

1. சுடர்க்கொடி

15 January 2024
0
0
0

சரித்திரம், பூமி, வாழ்க்கையின் கர்ம பலன்கள் ஆகிய சகலத்திலும் ஒரு சுழற்சியும் தொடர்ச்சியும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுவதில் எத்தனை உண்மையிருக்கிறதென்பதை, சுற்றிலும் தன்னை எரித்துக்கொண்டிருந்த மணற்பரப்

2

2. விளக்கில் விரிந்த கதை

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் மலைக்குகை வாயிலில், மரங்கள் அடர்த்தியாயிருந்ததால் இருள் கடுமையாக இருந்த அந்தப் பிராந்தியத்தில், பந்தத்தை கையில் ஏந்தி அதன் சுடர் முகத்தில் வீச சுடர்க்கொடியென்ற காரணப் பெயருக்கு முற

3

3. துணைவன்!

15 January 2024
0
0
0

விரிந்து படர்ந்து எரிந்த விளக்கின் சுடரை விந்தைக் கண்களுடன் நோக்கிய ராவ்ஜோடா. அதில் விரிந்த கதையைக் கண்டதும் மெய்சிலிர்த்துப் போனான். முதலில் அந்தச் சுடரில் ஏதும் தெரியாததால் புரியாமல் விழித்த மார்வ

4

4. இரு விந்தைகள்

15 January 2024
0
0
0

மலை அரசியின் மதுர இதழ்களில் இருந்து உதிர்ந்த அந்தக் கொடுமையான சொற்களைக் கேட்டதும், வியப்பும் அச்சமும் கலந்த உணர்ச்சிகள் ராவ்ஜோடாவின் இதயத்தை மளடுருவிச் சென்றன. அப்படி அவன் நடுங்கியதை பக்கத்தில் உட்கார

5

5. நான் வருவேன்

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் குகையைவிட்டு வெளியேறிய மலை அரசி, வேகமாக மலையின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடந்து சென்றதும், விளைவித்த இரண்டு விந்தைகளும் மகாவீரனான மார்வார் இளவரசனை திகில் கொள்ளச் செய்தன என்றால்,

6

6. பெண் துணை!

15 January 2024
0
0
0

பெண்ணின் லாவண்யத்தால் ஆண்மகன் அறிவு அழிந்துவிடுகிறது. கவர்ச்சியான கன்னியின் முன்பாக எந்த ஆண்மகனும் சுயபுத்தியை இழந்துவிடுகிறான். இந்தப் பழைய நிகழ்ச்சிகளுக்கு அத்தாட்சியாக நின்றான் ராவ்ஜோடா. “உனது வீ

7

7. சாகுந்தலம்

16 January 2024
1
0
0

பந்தத்தையும் அணைத்துவிட்டு இருண்ட குகைக்குள் தன்னை வா வா என்று அழைத்த அந்த பருவப் பாவையின் துணிவை நினைத்து ஜோடா திகிலுக்கு இலக்காகி நின்ற நேரத்தில், மலைஅரசியே குகை வாயிலைவிட்டு அவனை அணுகி, அவன் கையைப்

8

8. காட்டு மலர்

16 January 2024
1
0
0

பாவின் வாலிப முரட்டு முகம் அவள் வழவழத்த கழுத்தில் திடீரென அழுந்திப் புரண்டபோது, மலை அரசியின் இதயமும் அந்த வாலிபன் உள்ளத்தைப்போலவே உணர்ச்சி அலைகளில் உருண்டது. அத்தனை உணர்ச்சி எழுச்சியிலும் அரசகுமாரன்

9

9. நிலையற்ற அரசு

16 January 2024
1
0
0

மலை அரசியை “காட்டு மலர்” என்று குறிப்பிட்டதோடு தனது பேச்சை ஜோடா நிறுத்திக்கொண்டு இருந்தால் ஜகத்சிம்மனின் கோபம் தலைக்கு ஏறியிருக்காது. “இவள் மார்வார் ராணி” என்றும் சொல்லவே ஜகத்சிம்மனுக்கு கோபத்துடன் தி

10

10. பறந்த கிளி! தொடர்ந்த துன்பம்!

16 January 2024
1
0
0

மலை அரசியின் சொற்களோ உத்தரவுகளோ மந்திராலோசனை சபையில் இருந்தவர்களுக்குக் கட்டோடு பிடிக்காதிருந்தாலும் அவள் சொன்னதற்கு எல்லாம் ஜோடா தலையை ஆட்டியதால், அவள் கட்டளைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் எல்லோருமே முன

11

11. மண்டோர் ரணகளம்

16 January 2024
1
0
0

மண்டோரின் பெரும் கதவுகள் சாத்தப்பட்டதாலும் போர்முரசு பலமாக ஒலித்ததாலும் வருவது என்னவென்பதை அறிந்த புது மகாராஜாவான ராவ்ஜோடா, புரவியின் கடிவாளத்தை பிடித்த நிலையிலேயே திகைத்து அமர்ந்துவிட்ட சமயத்தில் மலை

12

12. குகையில்...!

16 January 2024
1
0
0

பெற்றோர் புரிந்த பாவம் சிலரைப் பிடித்து வாட்டுகிறது. உற்றார் செய்த பாவமும் சிலரை விடுவதில்லை. பெற்றோரும் உற்றாரும் விளைவித்த பாவங்களுக்கு எப்பாவமும் அறியாத ஜோடா இலக்கானான். பேரனான மோகுல சிம்மனை சீராட்

13

13. அவள் கனவு!

16 January 2024
1
0
0

மலை அரசியைப் பார்த்து மார்வார் இளவரசனாயிருந்து அரசனாகி, நாட்டையும் பறிகொடுத்த ராவ்ஜோடா, அத்தகைய ஒரு கேள்வியைக் கேட்டான் என்றால், அதற்கு மூலகாரணம் அவளுடைய விபரீதமான பதில்தான். “நாம் தனித்திருப்பது உனக்

14

14. தண்டனை!

17 January 2024
1
0
0

மலை அரசியை தரையில் கிடத்திவிட்டு குகையின் வாயிலுக்கு வந்த ராவ்ஜோடாவின் செவிகளில் ஜகத்சிம்மனும் மற்ற வீரர்களும் ஏறிவந்த புரவியின் குளம்படி ஒலிகள் கூடக் கேட்கவில்லை. குகைக்கு உள்ளே மலை அரசியின் அருகாமைய

15

15. ஹர்பா சங்க்லா!

17 January 2024
0
0
0

மலை அரசியால் மன்னிக்கப்பட்டு ஜோடாகிருக்குச் செல்லும்படி பணிக்கப்பட்ட ஜகத்சிம்மன் உடனடியாகத் திரும்பவில்லை தனது புரவியை நோக்கி நின்ற இடத்திலேயே அசைவற்று நின்றான் பல விநாடிகள். பிறகு சட்டென்று வேகமாக நட

16

16. அந்தி வானம்

17 January 2024
0
0
0

அதிர்ஷ்டம் என்பது ஒரு மனிதனைப் பிடித்துக்கொண்டால் அவனை அது லேசில் விடுவது இல்லை. கூடியவரையில் விடாமல் தொடர்கிறது. துரதிர்ஷ்டக்காரனுக்கு புத்தி பேதலிக்கிறது. காலம் கைகொடுப்பது இல்லை. எதையும் காலங்கடந்த

17

17. வாளின் கதை!

17 January 2024
0
0
0

ஜோடாவைப்பற்றி விசாரித்ததும் மலை அரசியின் மதிமுகம் அந்திவானம் போல் சிவந்துவிட்டதைக் கண்டதுமே நைஷ்டிக பிருமச்சாரியும், எந்தப் பெண்ணையும் கண்ணெடுத்துப் பார்க்காதவரும், பிருமச்சாரி விரதம் கெடக்கூடாது என்ப

18

18. தேடி வந்த அதிர்ஷ்டம்!

17 January 2024
0
0
0

மார்வார் மன்னனையும் மலைக்க வைத்த அந்த விசித்திரக் கதையைச் சொல்லுமுன்பு பிருமச்சாரி அந்தச் சிறு வீட்டின் முற்றத்தை வளைத்திருந்த சுற்றுக் கட்டடத்தின்மீது உட்கார்ந்து கீழ் இருந்த முற்றத்தில் தமது கால்களை

19

19. பாலைவனக் கூடாரம்

17 January 2024
0
0
0

இரவு தந்த இருளில், மலைக்காடு வீசிய இதமான காற்றில், சாளரத்துக்கு அருகில் இருந்த மகிழ மரம் பரவவிட்ட சுகந்தத்தின் சூழ்நிலையில், மலை அரசியை சூழ்ந்து நெருக்கிய ஜோடாவின் கரங்கள் நெருக்கியதோடு நில்லாமல் இன்ப

20

20. கரிய புரவி! கழுத்தில் ஈட்டி!

18 January 2024
0
0
0

ஜோடாவின் பரம விரோதியான சந்தசிம்மனின் மூத்த மகன் காந்தாஜி தன் வாளை உருவிக்கொண்டு ராவ் ஜோடாவை அணுகுவதற்கு முன்பே ஜோடா பிருமச்சாரியளித்த தனது பெரிய வாளை உருவி எதிரியைத் தடுத்தான். அவனைச் சேர்ந்த பத்து பத

21

21. மலைச்சாரல் ஓசை

18 January 2024
0
0
0

கழுத்தில் பதித்திருந்த ஈட்டி சற்றும் அசையாமல் இருந்தாலும் அதில் ஒரு திடமும், ஈட்டியைப் பிடித்திருந்தவன் கையில் ஈவு இரக்கமற்ற ஓர் உறுதியும் இருந்ததைக் கவனித்த ராவ்ஜோடா, தான் சிறிது அசைந்தாலும் அந்த ஈட்

22

22. பரீட்சை

18 January 2024
0
0
0

பாபுஜியின் நூறு புரவிகள் ஏதோ பெரும் புயலைப் போல் மலைச்சரிவில் வந்ததாலும், அவை கண்ணிமைக்கும் நேரத்தில் தனது புரவியில் இருந்து தன்னை வீழ்த்திவிட்டதாலும் மலைப்பாறையில் புரண்ட ஜோடா வெகு துரிதமாகப் பாறையில

23

23. அடவியில் ஒரு காட்சி!

18 January 2024
0
0
0

நீண்டநாள் பிரிந்த மகனை ஆர்வத்துடன் தழுவும் தந்தை போல ஜோடாவை பல விநாடி தழுவி நின்ற பாபுஜி, கடைசியில் அவனுக்குத் தமது கைகளில் இருந்து விடுதலை அளித்தபோது அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் இரண்டு தே

24

24. காதல் பாபமா?

18 January 2024
0
0
0

அடர்ந்த அந்த அடவிக்குள் நாலைந்து பங்கஜங்களை நீர்மட்டத்துக்குமேல் காட்டிக்கொண்டிருந்த சிறு வாவியின் கரையில் மலை அரசியும் ஜோடாவும் உட்கார்ந்திருந்த நிலையைக் கண்டதும் இரண்டு பிருமச்சாரிகளும் தங்கள் பிரும

25

25. ஜோடாவின் துணிவு!

18 January 2024
0
0
0

பாபுஜியும், பிருமச்சாரியும் விழிப்பதைப் பார்த்த ஜோடா, “உங்கள் இருவருக்கும் வரவர சுயநம்பிக்கை போய்விட்டது” என்று ஓர் அம்பை வீசினான். அதுவரை தாங்கள் கண்ட காட்சியால் குழப்பத்தில் இருந்த இரு பிருமச்சாரி

26

26. சாவுகாரைப் பிடித்த சனியன்!

18 January 2024
0
0
0

மண்டோர் அரசின் முதலமைச்சராயிருந்து, சந்தசிம்மன் ஆக்கிரமிப்புக்குப் பின்பு அந்தப் பதவியில் இருந்து விலகி, அரண்மனையில் தமக்கு முன்னாள் மன்னனால் அளிக்கப்பட்டு இருந்த இடத்தையும் சந்தசிம்மனிடம் ஒப்புடைத்து

27

27. அடைத்த கதவு!

18 January 2024
0
0
0

காந்தோஜியின் குறுவாள் அழுந்தியதாலும், எச்சரிக்கையாலும், அவன் பின்னால் நின்றிருந்த மஞ்சாஜியின் உதடுகளில் துளிர்த்திருந்த குரூரப் புன்முறுவலாலும், சாவுகார் அஞ்சி நடுநடுங்கிவிடுவார் என்றோ, முன்னே நடந்துவ

28

28. வேடர் குடிசை மர்மம்!

18 January 2024
0
0
0

கோட்டைக் காவலன் சொன்ன செய்தியால் மலைத்த இருவரில் சாவுகாரே முதலில் திகைப்பை உதறிக்கொண்ட தன்றி சமயாசந்தர்ப்பம் தெரியாமல் கோப்தையும் காட்டினார். “காவலனே! வணிகர்களைத் தடை செய்யும் வழக்கம் மார்வாரில் கிடைய

29

29. உள்ளே ஒரு பெண் குரல்!

18 January 2024
0
0
0

அன்று பகல் முழுவதும் மார்வார் படைத்தலைவனான ஜகத்சிம்மனுக்கும் மண்டோர் கோட்டை காவலனுக்கும் உணவு முதலிய விஷயங்களில் ராஜோபசாரம் நடந்தாலும், அவ்விருவரும் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் எந்த வேடனும் நேரடியாக ப

30

30. ஜோடாவின் துன்மார்க்கம்!

19 January 2024
1
0
0

மூன்று குணங்களை மனிதன் தவிர்ப்பது நல்லது. தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் அக்கறை காட்டுவது, ஒன்று. ஒட்டுக் கேட்பது, இரண்டு. காலதாமதம் செய்வது, மூன்று. இந்த மூன்றில் ஏதாவது ஒரு குணமே யாரையும் இக்கட்ட

31

31. மணக்கோலம்!

19 January 2024
1
0
0

வீரனாகப் படைகளை இயக்கி, இழந்த அரசை மீட்பதில் சித்தத்தை செலுத்த வேண்டிய மார்வார் மன்னன், கேவலம், பெண் மோகம் கொண்டவனாகக் குடிசையில் மறைந்து கொண்டு காலத்தை ஓட்டுவதை நினைத்த ஜகத்சிம்மன் வேடவர் குடிசைக் கூ

32

32. சந்திர முகம்

19 January 2024
1
0
0

மண்டோர் படைத்தலைவனான ஜகத்சிம்மன் தனது மன்னனின் திருமணத்தையே நிறுத்த முயன்றதும், அதற்காகக் கூச்சலிட்டதும் பலருக்கு கோபத்தையும் சிலருக்கு வியப்பையும் உண்டாக்கினாலும், பிருமச்சாரி ஹர்பாசங்க்லாவோ, திருமணப

33

33. இழந்த சொர்க்கம்

19 January 2024
1
0
0

ராவ்ஜோடாவின் அணைப்பில் இருந்த அழகியின் சந்திர வதனத்தைக் கண்டதும் ஜகத்சிம்மன் திகைப்பும் அதிர்ச்சியும் ஒருங்கே அடைந்தான் என்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. அந்த முகம் மலை அரசியின் முகம்! முகத்

34

34. பதவி இறக்கம்!

19 January 2024
1
0
0

மலை அரசியின் மறுபிம்பம் போன்ற மின்னிடையாளுடன், ஜோடா கலந்து விளையாட இருந்த சமயத்தில் பிருமச்சாரி ஹர்பாசங்கலா அங்கு தோன்றியதும் கதவைத் தட்டியதும் பரமானந்தமாயிருந்தது, மண்டோர் படைத்தலைவன் ஜகத்சிம்மனுக்கு

35

35. மீண்டும் வந்தாள்!

19 January 2024
1
0
0

மண்டோரின் படைத்தலைவனாக இருந்த தன்னை திடீரென உபதளபதியாக்கிவிட்ட மன்னன் செயலைக் கண்டு மனம் துடித்த ஜகத்சிம்மன் அந்த அவமானத்தில் இருந்து எப்படி மீளலாம் என்று சிந்தித்தான். அது தவிர இந்த திடீர் பதவி இறக்க

36

36. மண்டோர் சமர்

19 January 2024
1
0
0

கேவலம், ஒரு பெண், புரவியில் இருந்து இறங்க, அவள் காலுக்குப் படியாக தனது இரு கைகளையும் கோத்து நீட்டிய பிருமச்சாரியிடம் பெரிதும் வெறுப்புக் கொண்டான், ஜகத்சிம்மன். பிருமச்சாரி உண்மையில் பெரும் போலி பிருமச

37

37. மணலில் தோய்ந்த ரத்தம்

19 January 2024
1
0
0

மண்டோர் போரில் மாவீரர்களான சந்தசிம்மன் புதல்வர்கள் அடைந்த தோல்விக்குக் காரணம் தாங்கள் போரிடும் எதிரிகளின் திறனை அவர்கள் தவறாக எடைபோட்டதுதான் என்று கர்னல் ஜேம்ஸ்டாட் தமது ராஜபுதன வரலாற்று நூலில் தெளிவா

38

38. துரோகி!

19 January 2024
1
0
0

மலை அரசி தனது வளையல் கரங்களை நீட்டி தன்னைக் கைது செய்யும்படிக் கேட்டுக்கொண்டதும் காந்தோஜி தனது தம்பியின் மரணத்தையும் மறந்து வியப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே அடைந்தான். அப்பொழுதும் மலை அரசி வேட்டுவர

39

39. வேகம்! தாகம்!

19 January 2024
1
0
0

மேவாரின் தலைநகரான சித்தூரில் இருந்து தப்பி ஓடிவந்து லூனி ஆற்றின் உப்பு நீரில் தந்தையின் மரணத்துக்கு நீராடிய அதே துறையில், கிட்டத்தட்ட அதே இடத்தில் தங்கள் வம்ச துர்ப்பாக்கியத்துக்கும் அவப் பெயருக்கும்

40

40. அரசி ஆன, மலை அரசி!

19 January 2024
1
0
0

மலை அடிவாரப் புதரில் மலை அரசி மல்லாந்து கிடந்த கோலம் மண்டோர் மன்னனின் வெறியைக் கிளறிவிடவே, அவன் உலகத்தையே மறந்து, அதுவரை நேர்ந்த நிகழ்ச்சிகளால் மனம் ஏற்படுத்திய கட்டுப்பாடுகளையும் தடைகளையும் உதறி அவள்

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்