shabd-logo

13. அவள் கனவு!

16 January 2024

2 பார்த்தது 2

மலை அரசியைப் பார்த்து மார்வார் இளவரசனாயிருந்து அரசனாகி, நாட்டையும் பறிகொடுத்த ராவ்ஜோடா, அத்தகைய ஒரு கேள்வியைக் கேட்டான் என்றால், அதற்கு மூலகாரணம் அவளுடைய விபரீதமான பதில்தான். “நாம் தனித்திருப்பது உனக்கு நல்லதுதானே. இஷ்டப்பட்டால் என்னை இப்பொழுதே ராணியாக்கிக்கொள்” என்று சொல்லி குகையின் தரையில் படுத்துக்கொள்ளவும் செய்தாள் மலை அரசி.
அப்பொழுது இருள் நன்றாகக் கவிந்துவிட்டதாலும், மதியும் வான வீதியில் பவனிவரத் தொடங்கிவிட்டதாலும் அவன் கிரணங்களில் சில அந்தக் குகைக்குள் நன்றாகப் பாய்ந்திருந்ததாலும் அரைகுறை வெளிச்சம் குகையை ஆட்கொண்டது. அந்த வெளிச்சத்தில் மல்லாந்து கிடந்த மலை அரசியின் மோகனாகரமான உருவம், ஜோடாவின் மதிக்கு மயக்கத்தை ஊட்டியது. அதுவரை காயத்தின் கடுமையால் படுத்துக்கிடந்த ஜோடா, எழுந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்து அவளை நோக்கினான்.
அவள் இதழ்களில் புன்முறுவல் படர்ந்து கிடந்தது. அரைகுறையாக மூடியிருந்த கண்கள் அவனை விஷமமாகப் பார்த்தன. விரிந்த புன்முறுவல் கன்னங்களின் புஷ்டிச் சதைகளில் இரண்டு குழிகைகளையும் சிருஷ்டித்திருந்தன.
அவையும் சேர்ந்து நான்கு கண்கள் தன்னை அழைப்பது போன்ற பிரமை ஏற்பட்டது ஜோடாவுக்கு.
அவள் மல்லாந்து கிடந்த காரணத்தால், அவளின் திண்மையான மார்புகள் இரண்டும் மண்டோர் மலைத் தொடரின் இரு உச்சிகளைப் போலக் காட்சியளித்தன. ஜோடா அவற்றை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் என்றாலும், என்ன காரணத்தாலோ அவற்றைத் தீண்ட அவனுக்குத் துணிவு வரவில்லை. ஆகவே, மார்புக்கும் இடைக்கும் இடையே வெளேரெனத் தெரிந்த அவள் வயிற்றை லேசாக வலக்கையால் தொட்டான். அதைத் தொடும் பாவனையில் மேலேயும் சிறிது கையைக் கொண்டுபோய் மிதமிஞ்சிய அதைரியத்தால் மீண்டும் கையை வயிற்றுக்குக் கொண்டுவந்து வழவழத்த இடைப் பகுதியில் தவழவிட்டான். அடுத்து சொர்க்கம் காத்து இருப்பது அவனுக்குப் புரிந்தது. இருப்பினும் ஜோடாவின் கண்ணியமான இதயமும் உணர்ச்சிகளும் அவனை அதிக சரசத்துக்குத் தூண்டவில்லை.
அழகை எல்லாம் அள்ளிக் கொட்டிக்கொண்டு காட்டு மலர்போல் செழித்துத் தன் அருகில் கிடந்த அந்தப் பெண்ணின் தனிமையையும் உணர்ச்சிப் பெருக்கையும் பயன்படுத்திக்கொள்ள அவன் விரும்பவில்லை. ஆகவே, மெள்ள இரு கைகளாலும் அவள் கால் இரண்டையும் பிடித்தான். கால்களை வருடிக்கொண்டே வந்தவன், தொடைகளிடம் வந்ததும் அவற்றின் பருமனைக் கண்டு வியந்தான். இயற்கை வேண்டுமென்றே பெண்களுக்கு பருமனையும் இளைப்பையும் மாறி மாறி உடலில் அமைத்திருக்கிறது என்று இயற்கைமீது குற்றம் சாட்டினான்.
அவன் வயிற்றைத் தொட்டபோதும் மார்புக்கு அருகில் கையை உயர்த்திய போதும், பிறகு இரு கால்களையும் பிடித்த போதும் மரக்கட்டையாகக் கிடந்த மலை அரசி, அவன் கைகள் தனது இரு பருத்த தொடைகளில் அழுந்தியதும் அடியோடு நிலைகுலைந்து போனாள். அவள் உடல் திடீரென உணர்ச்சி அலைகளில் சிக்குண்டு லேசாகத் துடித்தது.
அந்தச் சமயத்தில் அவள் தொடைகளின் இணைப்பில் ஜோடா முகத்தைப் புதைத்துக்கொண்டது, அக்கினி அலைகளை அவள் உடலெங்கும் பரவவிட்டது. சரேலென அவள் ஜோடாவின் முடியை இரு கைகளாலும் கோதினாள். “பாவம்! குழந்தை!” என்றும் முணுமுணுத்தாள். தலையில் புரண்ட அவள் கமலக் கைகள் அடுத்து அவன் கழுத்தையும் தடவின.
ராவ்ஜோடா இந்த உலகை மறந்தான். தனது இடுப்பின் காயத்தை மறந்தான். மலை அரசியின் மகோன்னதமான காயத்தையே நினைத்தான். அதனால் தலையைத் தூக்கி வேகமாக நகர்ந்து அவள் கழுத்தில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, “மலை அரசி! மலை அரசி!” என்று முனகினான். அவன் முகம் அவள் அழகிய கழுத்தின் பல பகுதிகளில் முத்திரைகளை வேகமாகப் பதித்தது.
“ஜோடா!” என்று மலை அரசியும் அந்தச் சமயத்தில் உணர்ச்சிப் பெருக்கால் முனகினாள்.
ஜோடா கழுத்தில் இருந்த முகத்தை நிமிர்த்தி அவள் கண்களைச் சந்தித்தான். “ஏன் மலை அரசி?” என்று வெகு இரகசியமாகக் காதுக்கு அருகில் கேட்டான். பிறகு கன்னத்தில் தனது முரட்டு இதழ்களைப் பதித்தான்.
மலை அரசி எரிமலையாயிருந்தாள். அவள் சொற்கள் தழுதழுத்து வந்தன. அவன் அழைப்புக்கு “உம்” என்ற ஒலியை மட்டும் வெளியிட்டாள்.
“நீ...” ஜோடா திணறினான் பேச முடியாமல்.
“உம்.”
“சொர்க்கம்.”
பிறகு இருவரும் பேச்சை இழந்தார்கள். மலை அரசி. புரண்டு ஒருக்களித்தாள். அவள் கைகள் இரண்டும் அவன் கழுத்தை வளைத்தன. அவன் கைகள் அவள் உடலைச் சுற்றி வளைத்து இறுக்கின, தூக்கின. மெள்ள அவளை மடியில் கிடத்திக்கொண்டு உற்றுப் பார்த்தான், ஜோடா. “மலை மலரே!” என்று மெதுவாக அழைத்தான் அந்த நிலையில்.
அவள் கண்கள் மூடியிருந்ததால் பார்க்கவில்லை. இதழ்கள் மூடியிருந்ததால் பேசவில்லை. அந்தக் கண்களை அவன் உதடுகள் திறந்தன. இதழ்களைத் திறக்கவில்லை, நன்றாக மூடிவிட்டன. அந்தச் சமயத்தில் அசைந்த அவள் இதழ்கள் சொர்க்கத்தில் அவனுக்கு இடம் கிடைத்துவிட்டதை நிரூபித்தன.
ஜோடா இத்தனை உணர்ச்சிப் பிரவாகத்திலும் அவளை எடுத்தாள் இஷ்டப்படவில்லை. அவன் அவளது பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்வது முறையல்ல என்று நினைத்ததால், அவள் இதழ்களுக்கு விடுதலையளித்தான்.
“மலை அரசி!” இம்முறை அவன் குரல் தடித்திருந்தது.
“உம்.” அவள் குரல் குழைந்து கிடந்தது.
“இது சரியல்ல” என்றான் ஜோடா, அவள் உடல் முழுவதையும் ஒருமுறை தடவிக் கொடுத்து.
அந்தத் தடவலில் வித்தியாசம் இருந்ததை உணர்ந்தாள் மலை அரசி. ஒரு குழந்தையைத் தடவும் ஆதரவு அதில் இருந்தது. வெறிபிடித்த ஆண்மகனின் தடவல் அல்ல அது என்பதை அறிந்த மலை அரசி லேசாகப் புன்முறுவல் கோட்டினாள்.
மலை அரசி அவன் மடியில் கிடந்தபடி சொன்னாள். “நேற்று மகாராணியாக்கத் துடித்தாயே, ஜோடா?” என்று விடுதலை அடைந்துவிட்ட அவன் கையில் ஒன்றை எடுத்து தனது உடலுக்குக் குறுக்கே போட்டுக்கொள்ளவும் செய்தாள்.
“ஒன்று புரியவில்லை எனக்கு” என்று தொடங்கினான் ஜோடா.
“என்ன அது?”
“என்னை எப்பொழுதும் ஜோடா என்று அழைக்கிறாய்.”
“ஆம்.”
“மரியாதையே காட்டவில்லை.”
உடனடியாக இதற்கு பதில் சொல்லவில்லை மலை அரசி. சிறிது மவுனத்திற்குப் பிறகு அவன் கண்களைச் சந்திக்காமலே சொன்னாள். “ஜோடா! உன்னைப் பார்த்த முதல் நாளே உன்னிடம் என் மனத்தைப் பறிகொடுத்தேன்” என்று.
“அதனால் மரியாதை இல்லாமல் பேச வேண்டுமா?” என்று வினவினான் ஜோடா.
“சதிபதிகள் தனித்து இருக்கும்போது காதல் மிகைப்படுகிறது. மரியாதை அகன்றுவிடுகிறது. இது புரியவில்லையா, உனக்கு?” என்று சொன்னாள் மலை அரசி.
ஜோடா சிந்தனை வசப்பட்டான். “இருக்கலாம். மற்றவர் முன்பும் அப்படித்தானே அழைத்திருக்கிறாய்?” என்று கேட்டான் முடிவில்.
“ஜோடா...” சிறிது தாமதித்தாள் மலை அரசி.
“சொல், மலை அரசி” என்றான் ஜோடா.
“மற்றவர் இருக்கும்போதும், உன்னோடு தனிமையில் இருப்பது போன்ற பிரமை ஏற்படுகிறது எனக்கு. உன்னைப் பார்க்கும் போதெல்லாம் மற்றவர் இருக்கும் நினைப்பு ஏற்படுவது இல்லை எனக்கு. சூழ்நிலைகூட மறந்துவிடுகிறது. இது என்னிடம் உள்ள குறை. ஆனால் ஜோடா! நான் திருந்திடுவேன். நான் காட்டில் இருந்தவள் அல்லவா? - நாட்டுப் பழக்கம் துரிதத்தில் வருமா?” என்றாள்.
இதற்குப் பிறகு இருவரும் பேசவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு ஜோடா சொன்னான், “மலை அரசி! நான் நிரந்தரமாக நாடு இழந்து இருக்கப்போவது இல்லை...” என்று.
“ஆம், அது தெரியும் எனக்கு” என்றாள் மலை அரசி.
“என்ன தெரியும்?”
“நீ மண்டோரை வெற்றி கொள்ள நாளாகும். அதற்குள் புதுநகரை சிருஷ்டிப்பாய். அங்கு நான் உன் ராணியாக அரசு புரிவேன்.”
“ஏதேதோ சொல்கிறாயே, மலை அரசி.”
“நடக்கப் போவதை சொல்கிறேன். அந்த நகரும் சீக்கிரம் சிருஷ்டிக்கப்படும். அது மாரூஸ்தலியின் சிகரமாயிருக்கும். அந்த நகரில் இருந்து உன் எதிரிகளின் இருப்பிடங்கள் எல்லாம் தெரியும். அந்த நகரின் அரண்மனையில் உன் ராணியாக நான் வீற்றிருப்பேன்” என்று பேசிய மலை அரசியின் கண்களில் கனவு தெரிந்தது.
ராவ்ஜோடாவும் அவள் கனவில் ஈடுபட்டான். அவளை மெள்ளத் தரையில் கிடத்தி வெளியே சென்றான்.
மலையில் ஏறி வந்துகொண்டிருந்தான், ஜகத்சிம்மன். அவன் தனியாக வரவில்லை. நூற்று இருபத்தைந்து வீரர்களும் உடன் வந்தார்கள்.

சாண்டில்யன் மூலம் மேலும் புத்தகங்கள்

40
கட்டுரைகள்
மலை அரசி
0.0
மாலை அரசி தமிழ் மொழியில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான வரலாற்று நாவல். பிரபல தமிழ் எழுத்தாளர் சாண்டில்யன் இந்த மனதை மயக்கும் புத்தகத்தை எழுதியுள்ளார். சாண்டில்யன் வரலாற்றுப் புனைகதைகளுக்காகப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார், மேலும் அவர் தனது வரலாற்று, காதல் மற்றும் சாகச நாவல்களுக்காக நன்கு அறியப்பட்டவர், இது பெரும்பாலும் சோழ மற்றும் பாண்டிய பேரரசுகளின் காலங்களில் அமைக்கப்பட்டது.
1

1. சுடர்க்கொடி

15 January 2024
0
0
0

சரித்திரம், பூமி, வாழ்க்கையின் கர்ம பலன்கள் ஆகிய சகலத்திலும் ஒரு சுழற்சியும் தொடர்ச்சியும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுவதில் எத்தனை உண்மையிருக்கிறதென்பதை, சுற்றிலும் தன்னை எரித்துக்கொண்டிருந்த மணற்பரப்

2

2. விளக்கில் விரிந்த கதை

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் மலைக்குகை வாயிலில், மரங்கள் அடர்த்தியாயிருந்ததால் இருள் கடுமையாக இருந்த அந்தப் பிராந்தியத்தில், பந்தத்தை கையில் ஏந்தி அதன் சுடர் முகத்தில் வீச சுடர்க்கொடியென்ற காரணப் பெயருக்கு முற

3

3. துணைவன்!

15 January 2024
0
0
0

விரிந்து படர்ந்து எரிந்த விளக்கின் சுடரை விந்தைக் கண்களுடன் நோக்கிய ராவ்ஜோடா. அதில் விரிந்த கதையைக் கண்டதும் மெய்சிலிர்த்துப் போனான். முதலில் அந்தச் சுடரில் ஏதும் தெரியாததால் புரியாமல் விழித்த மார்வ

4

4. இரு விந்தைகள்

15 January 2024
0
0
0

மலை அரசியின் மதுர இதழ்களில் இருந்து உதிர்ந்த அந்தக் கொடுமையான சொற்களைக் கேட்டதும், வியப்பும் அச்சமும் கலந்த உணர்ச்சிகள் ராவ்ஜோடாவின் இதயத்தை மளடுருவிச் சென்றன. அப்படி அவன் நடுங்கியதை பக்கத்தில் உட்கார

5

5. நான் வருவேன்

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் குகையைவிட்டு வெளியேறிய மலை அரசி, வேகமாக மலையின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடந்து சென்றதும், விளைவித்த இரண்டு விந்தைகளும் மகாவீரனான மார்வார் இளவரசனை திகில் கொள்ளச் செய்தன என்றால்,

6

6. பெண் துணை!

15 January 2024
0
0
0

பெண்ணின் லாவண்யத்தால் ஆண்மகன் அறிவு அழிந்துவிடுகிறது. கவர்ச்சியான கன்னியின் முன்பாக எந்த ஆண்மகனும் சுயபுத்தியை இழந்துவிடுகிறான். இந்தப் பழைய நிகழ்ச்சிகளுக்கு அத்தாட்சியாக நின்றான் ராவ்ஜோடா. “உனது வீ

7

7. சாகுந்தலம்

16 January 2024
1
0
0

பந்தத்தையும் அணைத்துவிட்டு இருண்ட குகைக்குள் தன்னை வா வா என்று அழைத்த அந்த பருவப் பாவையின் துணிவை நினைத்து ஜோடா திகிலுக்கு இலக்காகி நின்ற நேரத்தில், மலைஅரசியே குகை வாயிலைவிட்டு அவனை அணுகி, அவன் கையைப்

8

8. காட்டு மலர்

16 January 2024
1
0
0

பாவின் வாலிப முரட்டு முகம் அவள் வழவழத்த கழுத்தில் திடீரென அழுந்திப் புரண்டபோது, மலை அரசியின் இதயமும் அந்த வாலிபன் உள்ளத்தைப்போலவே உணர்ச்சி அலைகளில் உருண்டது. அத்தனை உணர்ச்சி எழுச்சியிலும் அரசகுமாரன்

9

9. நிலையற்ற அரசு

16 January 2024
1
0
0

மலை அரசியை “காட்டு மலர்” என்று குறிப்பிட்டதோடு தனது பேச்சை ஜோடா நிறுத்திக்கொண்டு இருந்தால் ஜகத்சிம்மனின் கோபம் தலைக்கு ஏறியிருக்காது. “இவள் மார்வார் ராணி” என்றும் சொல்லவே ஜகத்சிம்மனுக்கு கோபத்துடன் தி

10

10. பறந்த கிளி! தொடர்ந்த துன்பம்!

16 January 2024
1
0
0

மலை அரசியின் சொற்களோ உத்தரவுகளோ மந்திராலோசனை சபையில் இருந்தவர்களுக்குக் கட்டோடு பிடிக்காதிருந்தாலும் அவள் சொன்னதற்கு எல்லாம் ஜோடா தலையை ஆட்டியதால், அவள் கட்டளைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் எல்லோருமே முன

11

11. மண்டோர் ரணகளம்

16 January 2024
1
0
0

மண்டோரின் பெரும் கதவுகள் சாத்தப்பட்டதாலும் போர்முரசு பலமாக ஒலித்ததாலும் வருவது என்னவென்பதை அறிந்த புது மகாராஜாவான ராவ்ஜோடா, புரவியின் கடிவாளத்தை பிடித்த நிலையிலேயே திகைத்து அமர்ந்துவிட்ட சமயத்தில் மலை

12

12. குகையில்...!

16 January 2024
1
0
0

பெற்றோர் புரிந்த பாவம் சிலரைப் பிடித்து வாட்டுகிறது. உற்றார் செய்த பாவமும் சிலரை விடுவதில்லை. பெற்றோரும் உற்றாரும் விளைவித்த பாவங்களுக்கு எப்பாவமும் அறியாத ஜோடா இலக்கானான். பேரனான மோகுல சிம்மனை சீராட்

13

13. அவள் கனவு!

16 January 2024
1
0
0

மலை அரசியைப் பார்த்து மார்வார் இளவரசனாயிருந்து அரசனாகி, நாட்டையும் பறிகொடுத்த ராவ்ஜோடா, அத்தகைய ஒரு கேள்வியைக் கேட்டான் என்றால், அதற்கு மூலகாரணம் அவளுடைய விபரீதமான பதில்தான். “நாம் தனித்திருப்பது உனக்

14

14. தண்டனை!

17 January 2024
1
0
0

மலை அரசியை தரையில் கிடத்திவிட்டு குகையின் வாயிலுக்கு வந்த ராவ்ஜோடாவின் செவிகளில் ஜகத்சிம்மனும் மற்ற வீரர்களும் ஏறிவந்த புரவியின் குளம்படி ஒலிகள் கூடக் கேட்கவில்லை. குகைக்கு உள்ளே மலை அரசியின் அருகாமைய

15

15. ஹர்பா சங்க்லா!

17 January 2024
0
0
0

மலை அரசியால் மன்னிக்கப்பட்டு ஜோடாகிருக்குச் செல்லும்படி பணிக்கப்பட்ட ஜகத்சிம்மன் உடனடியாகத் திரும்பவில்லை தனது புரவியை நோக்கி நின்ற இடத்திலேயே அசைவற்று நின்றான் பல விநாடிகள். பிறகு சட்டென்று வேகமாக நட

16

16. அந்தி வானம்

17 January 2024
0
0
0

அதிர்ஷ்டம் என்பது ஒரு மனிதனைப் பிடித்துக்கொண்டால் அவனை அது லேசில் விடுவது இல்லை. கூடியவரையில் விடாமல் தொடர்கிறது. துரதிர்ஷ்டக்காரனுக்கு புத்தி பேதலிக்கிறது. காலம் கைகொடுப்பது இல்லை. எதையும் காலங்கடந்த

17

17. வாளின் கதை!

17 January 2024
0
0
0

ஜோடாவைப்பற்றி விசாரித்ததும் மலை அரசியின் மதிமுகம் அந்திவானம் போல் சிவந்துவிட்டதைக் கண்டதுமே நைஷ்டிக பிருமச்சாரியும், எந்தப் பெண்ணையும் கண்ணெடுத்துப் பார்க்காதவரும், பிருமச்சாரி விரதம் கெடக்கூடாது என்ப

18

18. தேடி வந்த அதிர்ஷ்டம்!

17 January 2024
0
0
0

மார்வார் மன்னனையும் மலைக்க வைத்த அந்த விசித்திரக் கதையைச் சொல்லுமுன்பு பிருமச்சாரி அந்தச் சிறு வீட்டின் முற்றத்தை வளைத்திருந்த சுற்றுக் கட்டடத்தின்மீது உட்கார்ந்து கீழ் இருந்த முற்றத்தில் தமது கால்களை

19

19. பாலைவனக் கூடாரம்

17 January 2024
0
0
0

இரவு தந்த இருளில், மலைக்காடு வீசிய இதமான காற்றில், சாளரத்துக்கு அருகில் இருந்த மகிழ மரம் பரவவிட்ட சுகந்தத்தின் சூழ்நிலையில், மலை அரசியை சூழ்ந்து நெருக்கிய ஜோடாவின் கரங்கள் நெருக்கியதோடு நில்லாமல் இன்ப

20

20. கரிய புரவி! கழுத்தில் ஈட்டி!

18 January 2024
0
0
0

ஜோடாவின் பரம விரோதியான சந்தசிம்மனின் மூத்த மகன் காந்தாஜி தன் வாளை உருவிக்கொண்டு ராவ் ஜோடாவை அணுகுவதற்கு முன்பே ஜோடா பிருமச்சாரியளித்த தனது பெரிய வாளை உருவி எதிரியைத் தடுத்தான். அவனைச் சேர்ந்த பத்து பத

21

21. மலைச்சாரல் ஓசை

18 January 2024
0
0
0

கழுத்தில் பதித்திருந்த ஈட்டி சற்றும் அசையாமல் இருந்தாலும் அதில் ஒரு திடமும், ஈட்டியைப் பிடித்திருந்தவன் கையில் ஈவு இரக்கமற்ற ஓர் உறுதியும் இருந்ததைக் கவனித்த ராவ்ஜோடா, தான் சிறிது அசைந்தாலும் அந்த ஈட்

22

22. பரீட்சை

18 January 2024
0
0
0

பாபுஜியின் நூறு புரவிகள் ஏதோ பெரும் புயலைப் போல் மலைச்சரிவில் வந்ததாலும், அவை கண்ணிமைக்கும் நேரத்தில் தனது புரவியில் இருந்து தன்னை வீழ்த்திவிட்டதாலும் மலைப்பாறையில் புரண்ட ஜோடா வெகு துரிதமாகப் பாறையில

23

23. அடவியில் ஒரு காட்சி!

18 January 2024
0
0
0

நீண்டநாள் பிரிந்த மகனை ஆர்வத்துடன் தழுவும் தந்தை போல ஜோடாவை பல விநாடி தழுவி நின்ற பாபுஜி, கடைசியில் அவனுக்குத் தமது கைகளில் இருந்து விடுதலை அளித்தபோது அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் இரண்டு தே

24

24. காதல் பாபமா?

18 January 2024
0
0
0

அடர்ந்த அந்த அடவிக்குள் நாலைந்து பங்கஜங்களை நீர்மட்டத்துக்குமேல் காட்டிக்கொண்டிருந்த சிறு வாவியின் கரையில் மலை அரசியும் ஜோடாவும் உட்கார்ந்திருந்த நிலையைக் கண்டதும் இரண்டு பிருமச்சாரிகளும் தங்கள் பிரும

25

25. ஜோடாவின் துணிவு!

18 January 2024
0
0
0

பாபுஜியும், பிருமச்சாரியும் விழிப்பதைப் பார்த்த ஜோடா, “உங்கள் இருவருக்கும் வரவர சுயநம்பிக்கை போய்விட்டது” என்று ஓர் அம்பை வீசினான். அதுவரை தாங்கள் கண்ட காட்சியால் குழப்பத்தில் இருந்த இரு பிருமச்சாரி

26

26. சாவுகாரைப் பிடித்த சனியன்!

18 January 2024
0
0
0

மண்டோர் அரசின் முதலமைச்சராயிருந்து, சந்தசிம்மன் ஆக்கிரமிப்புக்குப் பின்பு அந்தப் பதவியில் இருந்து விலகி, அரண்மனையில் தமக்கு முன்னாள் மன்னனால் அளிக்கப்பட்டு இருந்த இடத்தையும் சந்தசிம்மனிடம் ஒப்புடைத்து

27

27. அடைத்த கதவு!

18 January 2024
0
0
0

காந்தோஜியின் குறுவாள் அழுந்தியதாலும், எச்சரிக்கையாலும், அவன் பின்னால் நின்றிருந்த மஞ்சாஜியின் உதடுகளில் துளிர்த்திருந்த குரூரப் புன்முறுவலாலும், சாவுகார் அஞ்சி நடுநடுங்கிவிடுவார் என்றோ, முன்னே நடந்துவ

28

28. வேடர் குடிசை மர்மம்!

18 January 2024
0
0
0

கோட்டைக் காவலன் சொன்ன செய்தியால் மலைத்த இருவரில் சாவுகாரே முதலில் திகைப்பை உதறிக்கொண்ட தன்றி சமயாசந்தர்ப்பம் தெரியாமல் கோப்தையும் காட்டினார். “காவலனே! வணிகர்களைத் தடை செய்யும் வழக்கம் மார்வாரில் கிடைய

29

29. உள்ளே ஒரு பெண் குரல்!

18 January 2024
0
0
0

அன்று பகல் முழுவதும் மார்வார் படைத்தலைவனான ஜகத்சிம்மனுக்கும் மண்டோர் கோட்டை காவலனுக்கும் உணவு முதலிய விஷயங்களில் ராஜோபசாரம் நடந்தாலும், அவ்விருவரும் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் எந்த வேடனும் நேரடியாக ப

30

30. ஜோடாவின் துன்மார்க்கம்!

19 January 2024
1
0
0

மூன்று குணங்களை மனிதன் தவிர்ப்பது நல்லது. தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் அக்கறை காட்டுவது, ஒன்று. ஒட்டுக் கேட்பது, இரண்டு. காலதாமதம் செய்வது, மூன்று. இந்த மூன்றில் ஏதாவது ஒரு குணமே யாரையும் இக்கட்ட

31

31. மணக்கோலம்!

19 January 2024
1
0
0

வீரனாகப் படைகளை இயக்கி, இழந்த அரசை மீட்பதில் சித்தத்தை செலுத்த வேண்டிய மார்வார் மன்னன், கேவலம், பெண் மோகம் கொண்டவனாகக் குடிசையில் மறைந்து கொண்டு காலத்தை ஓட்டுவதை நினைத்த ஜகத்சிம்மன் வேடவர் குடிசைக் கூ

32

32. சந்திர முகம்

19 January 2024
1
0
0

மண்டோர் படைத்தலைவனான ஜகத்சிம்மன் தனது மன்னனின் திருமணத்தையே நிறுத்த முயன்றதும், அதற்காகக் கூச்சலிட்டதும் பலருக்கு கோபத்தையும் சிலருக்கு வியப்பையும் உண்டாக்கினாலும், பிருமச்சாரி ஹர்பாசங்க்லாவோ, திருமணப

33

33. இழந்த சொர்க்கம்

19 January 2024
1
0
0

ராவ்ஜோடாவின் அணைப்பில் இருந்த அழகியின் சந்திர வதனத்தைக் கண்டதும் ஜகத்சிம்மன் திகைப்பும் அதிர்ச்சியும் ஒருங்கே அடைந்தான் என்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. அந்த முகம் மலை அரசியின் முகம்! முகத்

34

34. பதவி இறக்கம்!

19 January 2024
1
0
0

மலை அரசியின் மறுபிம்பம் போன்ற மின்னிடையாளுடன், ஜோடா கலந்து விளையாட இருந்த சமயத்தில் பிருமச்சாரி ஹர்பாசங்கலா அங்கு தோன்றியதும் கதவைத் தட்டியதும் பரமானந்தமாயிருந்தது, மண்டோர் படைத்தலைவன் ஜகத்சிம்மனுக்கு

35

35. மீண்டும் வந்தாள்!

19 January 2024
1
0
0

மண்டோரின் படைத்தலைவனாக இருந்த தன்னை திடீரென உபதளபதியாக்கிவிட்ட மன்னன் செயலைக் கண்டு மனம் துடித்த ஜகத்சிம்மன் அந்த அவமானத்தில் இருந்து எப்படி மீளலாம் என்று சிந்தித்தான். அது தவிர இந்த திடீர் பதவி இறக்க

36

36. மண்டோர் சமர்

19 January 2024
1
0
0

கேவலம், ஒரு பெண், புரவியில் இருந்து இறங்க, அவள் காலுக்குப் படியாக தனது இரு கைகளையும் கோத்து நீட்டிய பிருமச்சாரியிடம் பெரிதும் வெறுப்புக் கொண்டான், ஜகத்சிம்மன். பிருமச்சாரி உண்மையில் பெரும் போலி பிருமச

37

37. மணலில் தோய்ந்த ரத்தம்

19 January 2024
1
0
0

மண்டோர் போரில் மாவீரர்களான சந்தசிம்மன் புதல்வர்கள் அடைந்த தோல்விக்குக் காரணம் தாங்கள் போரிடும் எதிரிகளின் திறனை அவர்கள் தவறாக எடைபோட்டதுதான் என்று கர்னல் ஜேம்ஸ்டாட் தமது ராஜபுதன வரலாற்று நூலில் தெளிவா

38

38. துரோகி!

19 January 2024
1
0
0

மலை அரசி தனது வளையல் கரங்களை நீட்டி தன்னைக் கைது செய்யும்படிக் கேட்டுக்கொண்டதும் காந்தோஜி தனது தம்பியின் மரணத்தையும் மறந்து வியப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே அடைந்தான். அப்பொழுதும் மலை அரசி வேட்டுவர

39

39. வேகம்! தாகம்!

19 January 2024
1
0
0

மேவாரின் தலைநகரான சித்தூரில் இருந்து தப்பி ஓடிவந்து லூனி ஆற்றின் உப்பு நீரில் தந்தையின் மரணத்துக்கு நீராடிய அதே துறையில், கிட்டத்தட்ட அதே இடத்தில் தங்கள் வம்ச துர்ப்பாக்கியத்துக்கும் அவப் பெயருக்கும்

40

40. அரசி ஆன, மலை அரசி!

19 January 2024
1
0
0

மலை அடிவாரப் புதரில் மலை அரசி மல்லாந்து கிடந்த கோலம் மண்டோர் மன்னனின் வெறியைக் கிளறிவிடவே, அவன் உலகத்தையே மறந்து, அதுவரை நேர்ந்த நிகழ்ச்சிகளால் மனம் ஏற்படுத்திய கட்டுப்பாடுகளையும் தடைகளையும் உதறி அவள்

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்